[1/28, 11:43 PM] Bhakya: அருள் ஞானம் பெறுவதை உணரும் வழி

மனிதனாக உருவாக்கிய எத்தனையோ கோடி சரீரங்களைப்பெற்ற பின் இந்த உணர்வுகள் மனிதனை எப்படி அழிக்கின்றது?

இந்த நினைவாற்றலை மாற்றுகின்றது?

மீண்டும் பரிணாம வளர்ச்சி தேய்பிறையாக எப்படி செல்லுகின்றோம்?
இதிலிருந்து அந்த தேய்பிறையான நிலைகளை நிறுத்தல் வேண்டும்.

அருள்ஞானியின் உணர்வை உங்களுக்குள் விளைய வைக்க வேண்டும்.

இன்று விநாயகர் சதுர்த்தி.
தீமையின் நிலைகளுக்கு அழைத்துச் செல்லாது அருள்ஞானியின் உணர்வை ஒளியாக மாற்றி என்றும் பேரின்ப பெருவாழ்வு என்ற நிலைகளுக்கு உங்களை அழைத்துச்செல்ல வேண்டும். உங்களுடைய உணர்வுகள் அந்த எண்ணத்தில் நினைவு ஆற்றல் பெருக்க வேண்டும்.

இது உங்கள் உடலுக்குள் ஊடுருவப்போகும் போது தீமையின் நிலைகளை அது கரைத்து, நீங்கள்நான் வெறும் சொல்லாக சொல்வதாக நீங்கள் எண்ணலாம்.

நான் என் குருநாதர் சொல்லும்போது இப்படித்தான் எண்ணினேன்.
அவர் சொல்லுகின்றார்,
நான் எதைப்பெற முடியும் என்று.
காட்டுகின்றார்,
எதைப்பெற முடியும் என்று.

அவர் முதலில் சொன்னதை சொல்லப்படும் போது பின் நிலைகளை இந்தக்காட்சிகளாக நான் காண முடிகின்றது. பின்அந்த அறிவின்தன்மை எப்படி என்ற உலகம் ஒவ்வொரு உயிராலும் உணர்வுகள் எப்படி விளைகின்றது என்ற நிலையை பின்தான் நான் உணர முடிகின்றது.

ஆகவே அதைப்போல இன்றைய நிலைகள் உங்களுக்குள் இந்த வாழ்க்கையில் அறியாது வந்த தீமையின் நிலைகளை அது நிறுத்தி அதை கரைத்து அதன் அருள் ஒளிகளை
அதைப்பெருக்கச்செய்ய வேண்டும்.

இதைப்போல இன்று நீங்கள் கேட்கும் உணர்வுகள் அதிகரிக்கும் போது உங்கள் ஆன்மாவின் நிலைகள் முன்நின்று தீமைகளை அகற்றும் நிலை பெறுகின்றது.

இதவே நாம் கூட்டமைப்பாக நாம் கூடிஇந்த உணர்வின்தன்மை நாம் அனைவரும் அந்த உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்ற உணர்வுகள் அந்த மகரிஷிகளின் உணர்வை நமக்குள் எடுத்து வளர்த்து இந்த எண்ண அலைகளைப்பரப்பப்படும் போது பூமியில் அந்த தீமைகளை விளைவிக்கும் இந்த உணர்வின் அணுக்கள் விலகுகின்றது.
[1/29, 12:20 AM] Bhakya: உடலிலுள்ள அணுக்களின் இயக்கமும், ஆன்மாவின் செயல்களும்

உங்கள் உடலுக்குள் இருக்கும் எண்ணில் அடங்காத ஆன்மாக்கள் உண்டு. அதன் எதனெதன் நிலைகள் விளைந்ததோ அதனின் உணர்வின்தன்மை ஈர்க்கப்படும் போது நம் உடலுக்குள் பரவிவரும் உணர்வுகளை அது கவர்ந்து இழுத்து தன் ஆன்மாவாகி தன் உணர்வின்தன்மை எடுத்து ஒரு அணுவின் கருவாக மாற்றிக்கொண்டு இருக்கும்.

இப்போது தீயவர்களை பார்க்கப்படும் போது தீய உணர்வின் அணுக்களாக நம் உயிர், உணர்ச்சியால் நம்மை அறியச்செய்தாலும் உணர்வின் அணுவாக மாற்றி விடுகின்றது.
அணுவின்தன்மை மலமாக மாற்றி உடலாக மாற்றுகின்றது.

அதற்குள் அது தேங்கி நின்று தன் உணர்வை எடுப்பதற்கு அந்த உணர்ச்சியைதூண்டும்.
இதே உணர்ச்சி களை தூண்டும் போது நமக்குள் இருக்கக்கூடிய காந்தப்புலன் அறிவோ நாம் எதில் இருந்து தீமைகளை உருவாக்கியதோ அதைக்கவர்ந்து நமது
ஆன்மாவாக மாற்றி நாம்சுவாசித்து உயிரிலே பட்டு,அந்த உணர்வின் இயக்கங்களை நம் உடலுக்குள் பரப்பச்செய்து அதன் நிலைகள் கொண்டு தனக்குள் சேமித்து வைத்துக்
கொள்ளும்.

இன்று நாம் எப்படி உணவாக உட்கொள்வதை நாம் எடுத்து உடலுக்குள் அது சேர்த்துஅது சிறுகச்சிறுக கலந்து அதுஇரத்தமாகவும்,
உணர்வின் அணுக்களாகவும் நாம் மாற்றி கொண்டு உள்ளோமோ,இதைப்போல தான் தனது சேமிப்பாக அது எடுத்து அந்த உணர்வின்தன்மை வளர்க்கும்.

அதில் கொஞ்சம் குறைகின்றது என்றால் உடனே உணர்ச்சிகளைத் தூண்டும்.அந்த உணர்ச்சிகளைத் தூண்டும் போது அதை எதனின் உணர்வின்தன்மை பட்டதோ அதே காந்தப்புலன் அருகில் இருக்கும் இந்த உணர்ச்சியின் வேகம் அதிகமாகும் போது இன்னொரு மனிதன் உடலில் தீமைகள் விளைந்த உணர்வை இது கவரநேரும்.
அவ்வாறு கவர்ந்தால் நமது ஆன்மாவாக இங்கே சேருகின்றது.

நாம் சுவாசித்து உயிர் வழி கொண்டு தனக்குள் அதை எடுத்துக்கொள்கின்றது. இந்த இயற்கையின் நியதிகளே இது தான்.

ஆகவே அது எடுக்கப்படும் போது, தன் ஆன்மாவில் சேமித்துக்கொள்ளும்.

இப்போது எப்படி நாம் சாப்பாடு சாப்பிட்டு
நிறைந்தவுடனே, நாம் தூங்குகின்றமோ அதேபோல அந்த எந்தெந்த அணுக்களின்
தன்மை வருகின்றதோ அது வந்து சேர்த்து விடும்.

அப்போது அது உறங்கச்செல்லும். ஆனால் அதேசமயத்தில் அந்த விஷத்தன்மையான அணுக்கள் வரப்படும் போது தன்னை அறியாமலே துடிப்பின் வேகம் அதிகமாகும். அப்போது நமக்குள் வேதனையின் தன்மைகளும் உருவாகும்.

இது இயற்கை யின் சில நியதிகளில் நிலையானது.

இந்த துருவதியானத்தை ஒவ்வொரு நொடியிலும் கடைப்பிடிக்க அந்தந்த குடும்பத்தில் முயற்சி எடுங்கள். குழந்தைகளும் அந்த நேரத்தில் நாம் 5மணிக்கு எழுந்தால் போதும். நீங்கள் ரொம்ப நேரம் எழ வேண்டாம். ஐந்தரை மணிக்கு எழுந்தாலும் போதும்.

காலையில் ஆறரை மணிக்கு அந்த சூரியனின் ஒளிக்கதிர்கள் துருவ நட்சத்திரத்தின் ஒளிகளைத் தாங்கி வருகின்றது. ஆகவே அது பெரும்பாக்கியமாகத்தான் உங்களில் பதிவாக்கி உள்ளது. இப்போதைக்கு வேண்டும் என்பதில்லை. உங்களது ஆன்மாவைப் பிடிக்கின்றீர்கள். எது…? இப்போது உடலை விட்டுப் பிடிக்க இந்த நீரைப் போடுகின்றோம்.

இப்பொழுது நமக்குள் ஆன்மாவைப் பிடிக்க அருள்ஞானிகளின் உணர்வைப் போடுகின்றோம். அதை வைத்துத்தான் தூய்மையாக்க வேண்டும். ஆகவே இதை ஒவ்வொரு குடும்பத்திலும் தவறாது இதைச் செய்து பழகுங்கள்.

நேரமில்லை என்று விட்டு விடாதீர்கள்.

முடியவில்லை என்று விட்டு விடாதீர்கள்.

ஏனென்றால் நீங்கள் பெற வேண்டுமென்று அந்த மகரிஷிகளின் ஆற்றல் நாம் பெற வேண்டுமென்று எண்ணுகின்றேன்.

குருவினுடைய உணர்வின் அலைகளை உங்களுக்குள் பதிவு செய்து இருக்கின்றேன்.

நீங்கள் எளிதில் பெறுவதற்கு உங்களை நான் நினைக்கின்றேன்.

என்னைச் சந்திப்போருக்கெல்லாம் அந்த மகரிஷிகளின் உணர்வு பெற வேண்டுமென்று சதா தவமிருக்கின்றேன்.

நீங்கள் வளர்ந்தால் தான் அந்த அலைகள் குவியும்.

ஏனென்றால் இந்த உணர்வின் சத்து குருவின் அருள் இங்கே படர்ந்துள்ளது.

ஒரு நெல் செடியின் உணர்வின் சத்து இணைந்தபின் அது பரவிஇருப்பதை ஒரு நெல்லை ஊன்றும் போது அந்த நெல் எந்த நிலையிலிருந்து அந்தச் செடியிலிருந்து விளைந்ததோ அந்த சத்தினை அது கவர்ந்து தன் இனத்தைப் பெருக்குகின்றது.

இதைப்போல குருப்பெற்ற அந்த உயர்ந்த சக்தி நமக்கு அனைவரிலும் இது பெருக்கப்பட்டு இந்த உணர்வின் தன்மை உலகிலே பரப்பப்பட்டால் தான் இந்த தீமை கொண்ட உலகிலிருந்து மக்களை மீட்க முடியும்.

ஆகவே நாம் அவர்களுடைய அருளை நமக்குள் வளர்த்து அனைவரும் பெற வேண்டுமென்று இந்தக் காலை துருவதியானத்தை ஆரம்பியுங்கள். ஏனென்றால் நஞ்சு கொண்ட உலகிலிருந்து மக்களை நம்மை மீட்டுவோம் என்ற உணர்வை நம்முள் வளர்க்க வேண்டும். அவரைப் பகைமை கொண்டு பார்த்தார்கள்; பகைமை உள்ளவர் என்று எண்ணாதீர்கள்; தீமை கொண்ட உணர்வுகள் உள்ளவர் என்று எண்ணாதீர்கள்.

தீமை கொண்ட கருணைக்கிழங்கையும் நாம் வேக வைத்து அதனுடன் புளியும் காரமும் உப்பும் போட்டு சுவை கொண்டதாக மாற்றுகின்றோம். இதைப் போன்றுதான் எவரின் நிலைகள் கொண்டு தீமை என்ற நிலைகள் மாற்றி அவர்கள் தீமையற்றவர்களாக வாழ வேண்டும் என்று உங்களுடைய எண்ணத்தை உயர்த்திக் கொள்ளுங்கள். தீமையற்றவர்களாக வாழ்வதற்காக அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகள் அவர்கள் பெற வேண்டுமென்று தவம் இருங்கள். அருள்ஞானிகளின் உணர்வை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள். கணவனும் மனைவியும் ஒன்றி இருங்கள்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply