தன் குழந்தைகளையே சிலர் “இவனெல்லாம் எங்கே உருப்படப் போகிறான்..!” என்று சாபமிடுவார்கள் ஏன்…? அதனின் விளைவுகள் என்ன ஆகும்…?
குழந்தைகளைப் படிக்க வைக்கின்றோம். சரியாகப் படிக்கவில்லை என்றால் என்ன ஆகின்றது? நாம் என்ன நினைக்கின்றோம்?
எப்படியோ நல்ல முறையில் படிக்க வைத்து உயர்ந்த நிலைக்கு அனுப்பலாம் என்று நினைத்தேன். ஆனால் சரியாக வரவில்லை என்று கவலைப்படுகின்றோம்.
“இப்படி ஆகி விட்டதே…” என்று பல கவலைகளை எடுத்துக் குழந்தைகளிடம் பேசப்படும்போது அதன் மனதில் கவலையான உணர்வுகள் நினைவுக்கு வருகின்றது.
அப்பொழுது நாம் அந்தக் குழந்தைக்கு எதைச் சமைத்துக் கொடுக்கின்றோம். நல்ல உணர்வுகளைக் கொடுக்கின்றோமா..?
ஏனென்றால் நாம் நண்பனுக்குள் ஒருவருக்கொருவர் நன்மை செய்தால் “விக்கலாகின்றது”. காரியங்கள் நல்லதாகின்றது. துரோகம் செய்தான் பாவி என்றால் புரையோடுகின்றது. காரியங்கள் எல்லாமே தடையாகிவிடுகின்றது.
அப்பொழுது பாசத்தால் தன் குழந்தை படிக்க வேண்டும் என்ற ஆசைப்பட்டாலும் படிக்கவில்லை என்கிற பொழுது “இப்படிச் செய்கின்றானே.., அப்படிச் செய்கின்றானே…! இவன் எங்கே உருப்படப் போகின்றான்…,?” என்ற கோபப்பட்டு அந்த உணர்வுடன் சொல்கின்றோம்.
ஒவ்வொரு நாளும் நமக்குள் இதை எண்ணி இப்படிப்பட்ட உணர்வுகளைச் சமைத்து என்ன செய்கின்றோம்?
மீண்டும் அவனை எண்ணும்பொழுதெல்லாம் வீட்டுக்கு வருபவர்களிடம் எல்லாம் சொல்வோம்.
எல்லோரும் நன்றாகப் படிக்கிறார்கள். ஆனால் இவனைப் பார்த்தால் இப்பொழுது சுட்டித்தனம் ஜாஸ்தி ஆகிவிட்டது. வெளியிலே சுற்றப் போகிறான் என்று சொல்வார்கள்.
1.இப்படி நினைத்து
2.மற்றவர்களிடம் தான் சொல்கிறோம் என்று நினைக்கிறோம்.
3.ஆனால், அவனை நினைத்து நாம் சொல்லும் உணர்வுதான்
4.அங்கு குழந்தைக்குள் சென்று பாய்கின்றது என்பதை யாரும் நினைப்பதில்லை.
5.அந்த உணர்ச்சிகள் அவனைத் தூண்டி இன்னும் கொஞ்சம் விளையாட்டுக்கு தான் போகச் சொல்லும்.
6.அப்போது நம்முடைய உணர்வுகள் தான் அவனை இயக்குகின்றது.
எப்படித் தீமை செய்த உணர்வுகளை எண்ணும்போது “எனக்குத் துரோகம் செய்தான் பாவி..,” என்றால் நமக்கு வெகு தொலைவில்… இருந்தாலும் அந்த உடலை இயக்குகின்றது.
அதே சமயத்தில் நன்மை செய்தார்கள் என்று எண்ணினால் வெகு தொலைவில் இருந்தாலும் விக்கலாக வருகின்றது. இப்படி ஒருவருக்கொருவர் தொடர்பு இருக்கின்றது.
தொடர்பு இல்லாது எவரும் இல்லை.
இதைப் போன்ற நிலைகளை எல்லாம் மாற்ற நாம் என்ன செய்ய வேண்டும்?
1.குழந்தை அவன் அறியாமல் இயக்கும் அந்த இருளைப் போக்கும் நிலையை
2.நாம் இங்கு நமக்குள் சமைத்து அந்த உணர்வுகளைப் பாய்ச்சி
3.அதை இணைத்துச் சொல்லாக அவனிடம் சொன்னால்
4.குழந்தை உடலில் நல்ல உணர்வுகளாகப் படர்கின்றது.
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நங்கள் பெறவேண்டும். எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் உடல்களில் உள்ள ஜீவாத்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும்.
எங்கள் குழந்தை அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும். அவன் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும். அவனுக்குக் கல்வியில் நாட்டம் வர வேண்டும். கல்வியில் உயர்ந்த ஞானம் பெற வேண்டும். அவன் தெளிவான நிலையில் வாழ வேண்டும் என்ற உணர்வுகளைப் பாய்ச்சிடல் வேண்டும்.
“இப்படி யாராவது நாம் சொல்கின்றோமா? செய்கின்றோமா…!”
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.