“வேதனையிலிருந்து விடுபட வேண்டும்…” என்ற எண்ணத்துடனே ஞானிகளின் சக்தியை எடுக்க வேண்டும்

spiritual-bodies

“வேதனையிலிருந்து விடுபட வேண்டும்…” என்ற எண்ணத்துடனே ஞானிகளின் சக்தியை எடுக்க வேண்டும்

எனக்குக் (ஞானகுரு) கல்வி அறிவு இல்லை என்றாலும் அந்த மகா ஞானியின் உணர்வலைகளை குருநாதர் பதிவு செய்ததை நினைவு கொண்டு அந்த ஆற்றல் மிக்க சக்தியை நுகர்கின்றேன்.

அவ்வாறு நுகர்ந்தறிந்து என் உயிருக்குள் மோதச் செய்யும் போது அந்த ஞானியின் ஆற்றல்மிக்க உணர்வுகளே ஞானமாக என்னைப் பேசச் செய்வதும் இதை நீங்கள் நுகர்ந்தறியும் போது உங்களுக்குள்ளும் அது ஊழ்வினையாகப் பதிவாகின்றது.

பதிவான உணர்வின் சக்தியை நாம் அனைவரும் ஒன்றாக எண்ணி ஏங்கி ஈர்க்கும் நிலைகள் வரும் போது காற்றிலே மறைந்துள்ள மாமகரிஷிகளின் அருள் ஆற்றலை நாம் கூடியுள்ள இப்பகுதிக்கு ஈர்க்கும் தன்மை வருகின்றது.

1.அந்த மகா ஞானிகள் பிறவி அற்ற நிலைகள் கொண்டு
2.எந்த மனிதன் ஈர்ப்புக்குள்ளும் சிக்காது
3.தன் உணர்வின் தன்மை ஒளியாக மாற்றிக் கொண்டவர்கள்.
4.இருள் சூழ்ந்த நிலைகளை மாய்த்திடும் சக்தி வாய்ந்தவர்கள்.

நம் வாழ்க்கையில் வரும் வேதனை கலந்த உணர்வு கொண்டு
1.வேனையான எண்ணத்துடன் நாம் கவர நினைத்தால்
2.அந்த ஞானியின் உணர்வலைகள் நஞ்சு கலந்த உணர்வின் அருகில் வராது
3.இதனுடைய சக்தியை இழக்கச் செய்துவிடும்.
4.ஞானியின் உணர்வைப் பெறும் தகுதியை இழந்துவிடுவோம்.

அந்த மாதிரி ஆகாதபடி ஞானியின் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்து கொண்டிருக்கின்றோம்.

நல்ல வினைகளாக ஞான வித்துக்களாக உங்களுக்குள் உருவாக்கும் வண்ணம் தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய வழியில் உபதேசிக்கின்றோம்.

உதாரணமாக மனிதனின் வாழ்க்கையில் குடும்பத்திலும் சரி தொழிலிலும் சரி பொறுப்பற்ற நிலைகளில் செயல்படுபவர்களை நாம் கண் கொண்டு பார்க்கப்படும் பொழுதெல்லாம் எரிச்சலும் கோபமும் ஆத்திரமும் வேதனைகளும் வருகின்றது.

அதைப் போன்ற உணர்வுகள் நம் உடலுக்குள் சேர்ந்து நம் ஆறாவது அறிவைச் செயலற்றதாக்கும் தன்மையிலிருந்து நாம் நம்மை மீட்டிக் கொள்ள வேண்டும். ஏனென்றால்
1.பொறுப்புடன் செயல்படும் நல்ல உணர்வுக்குள்
2.பொறுப்பற்ற உணர்வுகள் கலந்து
3.பொறுப்பான உணர்வைத் தாழச் செய்துவிடுகின்றது.
4.அதிலிருந்து மீள மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் சேர்க்க வேண்டும்.

தங்கத்திலே திரவகத்தை ஊற்றிச் செம்பையும் வெள்ளியையும் ஆவியாக மாற்றியது போல அந்த அருள் ஞானியின் உணர்வை நம் உடலுக்குள் செலுத்தும் போது நல்ல உணர்வுடன் இரண்டறக் கலந்த தீய வினைகள அது செயலிழக்கச் செய்துவிடும்.

ஆகவே வாழ்க்கையில் வேதனை வேதனை என்று வேதனைகளையே எண்ணாதீர்கள்.
1.மகரிஷிகளின் அருள் ஒளியைப் பெறுவேன்
2.என்னை அறியாது வந்த வேதனையிலிருந்து விடுபடுவேன் என்று எண்ணி ஏங்கி எடுத்துப் பாருங்கள்.

அந்த அருள் சக்தி உங்களுக்குள் இணைந்த பின் “மன வலிமையும்… ஒரு புது உணர்ச்சியும்…” ஏற்படும். தொடர்ந்து அந்த மகரிஷிகளின் உணர்வுகளை எடுக்க எடுக்க
1.வேதனைகள் அகன்று நல்ல சிந்தனைகள் தோன்றும்.
2.மனதில் அமைதியும் உற்சாகமும் ஏற்படும்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply