
இன்றைய உலகில் நல்லவரைப் போல் நடிப்பவர்களிடமிருந்து அவசியம் தப்பியே ஆக வேண்டும்
1.குழந்தைகளைத் திருடிச் சென்று அதன் உடலுக்குள் இருக்கும் மூளையைக் கவர்ந்து
2.விஞ்ஞான அறிவு கொண்டு அதை ஆசிடாக (ACID) மாற்றி
3.முதுமையானவர்களை இளமையாக்குகின்றது இன்றைய விஞ்ஞானம்.
இளம் பிஞ்சு உள்ளத்தில் வளர்ச்சி பெறும் அந்த மூளையின் உணர்வை இவன் எடுத்து மனிதனுக்கு இன்ஜெக்சன் கொடுத்து கிழவனை இளமையாக்குகின்றனர். இது விஞ்ஞான அறிவு.
வளர்ந்து வாழ்ந்து எதிர்காலத்தில் சிறந்து இருக்கும் பிஞ்சு உள்ளங்களை அழிக்கின்றான். முதுமையடைந்து இறக்கப் போகும் ஒருவனுக்கு இளமையின் பருவத்தை ஊட்டுகின்றான்.
1.இன்றைய நிலைகளில் மனிதனுக்கு மனிதன் இரக்கமற்ற செயல்களைச் செய்து கொண்டிருக்கும்
2.இப்படி விஞ்ஞான அறிவு வளர்ந்து கொண்டிருக்கும் இந்த உலகில் தான்
3.நாம் வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கின்றோம்.
திருடன் இன்று பணத்தை மட்டும் திருடவில்லை.
பெரியவர்களாக இருந்தாலும் பொருள் இல்லையென்றால் அவருக்குக் கண்ணும் மற்ற உறுப்புகள் சரியாக இயங்குகின்றது என்று தெரிந்துவிட்டால் தனித்துச் சென்றால் கர்ச்சீப்பை முகத்தில் போட்டு மூடி அப்படியே “அபேஸ்” செய்து விடுகிறார்கள்.
காணாமல் போகும் பெரியவர்கள் இப்பொழுது அதிகமாக உள்ளனர். அவர்களைக் கப்பலிலே கடத்துகின்றான். அங்கே உறுப்புக்களை அறுத்து அகற்றுகின்றான்.
தனித்த இடங்களில் உறுப்புகளை எடுத்துக் கொண்டு அந்த உடலைக் கடலில் போட்டுவிடுகின்றனர்.
அந்த உறுப்புகளை சேமிப்புக் கிடங்குகளில் வைத்து விஞ்ஞான அறிவு கொண்டு ஒருவரைக் காப்பாற்றும் நிலைகளுக்குச் செயல்படுத்துகின்றனர். அது ஒரு பக்கம் இருந்தாலும்
1.தசைகளை அது பல பொருள்களை இட்டு
2.மனிதனுக்குச் சக்திவாய்ந்த சத்து என்று இதை டப்பாக்களில் மணங்களை மாற்றி
3.மனிதனுடைய மாமிசமே இன்று மாமிசமாக சத்துள்ளதாகவும்
4.அதை இப்படி மாற்றிக் கொண்டு வருகின்றது இன்றைய விஞ்ஞான உலகம்.
விஞ்ஞான உலகம் இன்று இவ்வளவு வளர்ச்சியான நிலையில் அமெரிக்காவில் இன்றும் பெரும்பகுதியான இடங்களில் “கையில் சிக்கினால் போதும்…” அவனிடத்தில் இருக்கக்கூடிய பொருளும் அவன் தசைகளை உணவாக உட்கொள்வது போன்ற வகையில் நடப்பதெல்லாம் இப்பொழுது வெளிவருகின்றது.
விஞ்ஞான உலகத்தின் முன்னேற்றத்தால் இன்று உலகப் போர் துரித நிலைகளில் வரும் நிலை வந்துவிட்டது. அமைதி கொண்டு இருக்கின்றது என்று எண்ணுகின்றோம்.
எதிரியே இல்லாது வாழ்ந்து கொண்டிருக்கும் அமெரிக்கா மற்ற நாட்டின் நிலைகளை வளரவிடாது தடுத்துக் கொண்டும் அவனுக்குள் அடிமைப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுகின்றது.
மற்ற நாடுகளை அடக்க எலக்ட்ரானிக் என்ற முறையில் லேசர் (LASER) போன்ற நுட்பமான ஆயுதங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். அங்கே அது மட்டுமல்ல கொடூர விளைவுகளை உண்டாக்கும் ஆயுதங்களையும் கொண்டுள்ளார்கள்.
எத்திசையில் எதுவானாலும் விஷக்கிருமிகள் உருவாகும் நிலையில் அவன் அடுத்தவன் கண்டுகொள்ளாதபடி எந்த நாடாக இருந்தாலும் அதனை பலவீனப்படுத்துவதற்கும் விவசாயம் வளர்ச்சி பெறாத நிலைகளையும் செய்கின்றனர்.
1.இதையெல்லாம் சோதனை முறையாக
2.நீக்ரோக்கள் வாழும் அப்பகுதிகளில் விவசாயத்தைக் குன்றச் செய்து
3.பசி பட்டினியையும் அங்கே உருவாக்கி
4.“உதவி செய்வது போல” உணவும் அனுப்புகிறார்கள்.
இதைப் போல, உலகம் சுருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் முன்பு மெய்ஞானிகள் மனிதனின் உணர்வலைகள் முழுமையாக அழிகின்றது.
2000க்கு மேல் மனிதனின் எண்ணங்கள் இருள் சூழ்ந்து மனிதனுக்கு மனிதன் உணவாக உட்கொள்ளும் நிலையும் சிந்தனையற்றுப் பித்தனைப் போல் திரியும் காலங்கள் வந்துவிடும் என்று மகரிஷிகள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவுற உணர்த்தியுள்ளார்கள்.
ஆகவே இன்று நாம் எவ்வாறு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்? இதை நீங்கள் தெளிவாகத் தெரிந்து உணர்ந்து கொண்டால் போதும்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.