மனித உடலாக நாம் வளர்ச்சிக்கு வந்த நிலை

மனித உடலாக நாம் வளர்ச்சிக்கு வந்த நிலை

 

குளவிக்கு உமிழ் நீர் ஊறுகின்றது அந்த உமிழ் நீரைக் கொட்டி மண்ணைப் பிசைகின்றது “ஹொய்ங்… ஹொய்ங்… டுன்… டுன்…” என்று அது எப்படி இரைகின்றதோ அந்த இறக்கைகளில் நாதங்கள் வருவது போன்று தன் உணர்வின் இரைச்சலை அந்த மண்ணிலே கொடுக்கின்றது.

இறக்கையாலும் நாதத்தைக் கொடுக்கிறது உணர்வின் ஒலிகளையும் கொடுக்கின்றது மண்ணை உருண்டையாக உருட்டுகின்றது.
1.மண்ணிற்குள் கலந்திருக்கக் கூடிய காந்த ஈர்ப்புக்குள் அது ஈர்க்கப்படுகிறது.
2.ஏனென்றால் மண்ணும் அது ஒன்றுடன் ஒன்று இணைந்து தான் வளர்ச்சியின் தன்மை பெற்றது.

குளவி தன் உமிழ் நீரை அதற்குள் கொட்டி அதைப் பிசைந்து நாதங்களைச் செருகுகின்றது. செருகிய நிலைகள் கொண்டு குளவி கூட்டைக் கட்டுகின்றது. கூட்டைக் கட்டிய பின் புழுவைத் தேடிச் செல்கின்றது. தேடிச் சென்று புழுவைத் தூக்குகின்றது.

கூட்டுக்குள் கொண்டு வந்து வைத்தவுடன் லேசாகக் கொட்டுகின்றது. கொட்டும் போது குளவியின் பால் புழுவின் நினைவு திரும்புகிறது. உயிரின் துடிப்பின் வேகம் அதிகமாகக் கூடுகின்றது.

தேள் கொட்டியுடன் நாம் துடிக்கின்றோம் அல்லவா… குளவியே கொட்டினாலும் துடிக்கின்றோம். இதைப் போல அந்தப் புழுவைக் குளவி கொட்டியபின் உணர்வுகள் தூண்டி எழுந்து உற்சாகத்துடன் வரும் பொழுது வேகத்தின் நிலைகள் அதிகமாகின்றது.

1.கொட்டிய விஷத்தின் தன்மைகள் புழுவின் தோலைச் சீக்கிரம் கருகச் செய்கின்றது… கருகிய பின் சருகு போல் ஆகிறது.
2.சருகு போல் ஆகும் தன்மை வரும் பொழுது இரண்டாவது தரம் கொட்டியவுடன் துடிப்பு அதிகமாகின்றது.
3.சருகு போல் ஆனபின் கொட்டிய வேகத்தில் கோழி முட்டைக்கு எப்படி ஓடு உருவாகின்றதோ
4.அதைப் போல புழுவின் தசைகள் அனைத்தும் அழுகி சருகு போல ஒரு கருவாக உருவாகின்றது.

ஆனால் புழுவை உருவாக்கிய அந்த அணுக்கள் அனைத்தும் துடிக்கும் நிலை பெறுகின்றது. மண்ணை வைத்து அந்தக் கூட்டைக் குளவி மூடிவிடுகிறது.

அந்தக் கூட்டிற்குள் அடங்கிய புழுவினைக் குளவி கொட்டியதால்
1.உயிரின் வேகத் துடிப்பு அதிகமாகி அந்த இயக்கத்தின் நிலைகள் கொண்டு காந்தம் அதிகமாகி
2.விஷத்தின் தன்மை உமிழ்ந்து அதனால் கட்டப்பட்டக் கூட்டின் மூலம்
3.வெளியிலிருக்கும் காந்த அலைகளைத் தனக்குள் ஈர்க்கும் நிலை வருகின்றது.
4.அவ்வாறு ஈர்க்கப்படும் பொழுது இந்த உயிரின் துடிப்பு வேகும் பொழுது காந்தப் புலன்கள் அதிகமாகிச் சூடாகி
5.உடலுக்குள் இருக்கக்கூடிய அழுகிய புழுவின் தசையை ஆவியாக மாற்றி உயிரின் துடிப்புக்குள் கொண்டு வருகின்றது.
6.ஒரு மத்தாப்பை நெருப்பை வைத்துக் கொளுத்தினால் அது பல ரூபங்கள் ஆவது போல
7.குளவியின் நிலைகள் உயிரிலே கொஞ்சம் கொஞ்சமாக ஆடைகளாகச் சேர்த்து அந்தப் புழுவே குளவியாக மாறுகின்றது.

குளவியாக மாறி குளவி உருப்பெற்ற பின் அதற்கும் உமிழ் நீர் ஊறுகின்றது. கூட்டிற்குள் உமிழ் நீரைக் கொட்டுகின்றது. ஈரமான பின் துவாரமிட்டுத் தன்னிச்சையாக வெளி வருகின்றது.

கூட்டைக் கட்டிய குளவி போய் அதைத் திறப்பதில்லை. புழு குளவியாக ஆன பின் உமிழ் நீர் சுரந்து உமிழ் நீரைக் கொட்டித்தான் குளவி வெளி வருகின்றது.

அப்படி வெளியே வந்த பின் முதல் குளவி எதைச் செய்ததோ புழு குளவியான பின் அதே நிலையைச் செய்கின்றது. ஏனென்றால் அந்த உணர்வுக்கொப்ப வேலையைச் செய்கின்றது.

இதைப் போல் தான் ஒரு மாங்கனி தனக்குள் வித்தாக ஆனபின் அதை மண்ணிலே நடப்படும் பொழுது தன் உணர்வின் ஆற்றலைப் பெருக்கி இந்த உணர்வின் தன்மை ஈர்க்கப்பட்டு “அந்த மரத்தின் இலையைப் போன்று ரூபங்களை உருவாக்குகின்றது…”

இவ்வாறு எடுத்துக் கொண்ட உணர்வுகள் பல அணுக்களாகச் சேர்த்து வெளியிலே வந்த பல அணுக்கள் கலக்கப்படும் பொழுது “வேறு ஒரு புது வித்தாக…” மாறுகின்றது.

1.புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் இப்படித்தான் அத்தனை சக்திகளும் நமக்குள் விளைந்து
2.இன்று மனிதனாக உருப் பெற்று இருக்கிறோம் என்பதை நாம் அறிய வேண்டும்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply