உடல் பெறும் உணர்வுகளைக் கரைப்பது என்றால் அதனின் உப்பொருள் என்ன…?

உடல் பெறும் உணர்வுகளைக் கரைப்பது என்றால் அதனின் உப்பொருள் என்ன…?

 

கூட்டுத் தியானங்களில் அருளுணர்வைப் பெற்று அதன் வழியில் சார்புடாயோர் நிலைகள் கொண்டு நாம் முன்னோர்களை விண் செலுத்துகின்றோம்.

ஏனென்றால் இதற்கு முன் நம்மிடம் இந்தப் பழக்கங்கள் இல்லாததால் இப்போது நம் குரு காட்டிய அருள் வழியில் அந்தந்தக் குடும்பத்தார் உடலை விட்டு பிரிந்து சென்ற ஆன்மாக்களை காலை துருவ தியான நேரங்களில் அந்த வலுவை ஏற்றுக் கொண்டு எளிதில் விண்ணுக்கு அனுப்ப முடியும்.

உடல் பெறும் உணர்வுகள் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழும் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்த பின் இந்த உணர்வுகள் பட்டபின் உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்து விடுகின்றது.
1.காரணம் உடல் பெறும் உணர்வுகளைSAP அவர்கள் கரைத்தவர்கள்.
2.அங்கே கரைத்து வெளிவருவது என்றால் அடுத்து காலை சூரிய உதயம் வருகின்றது
3.அடுத்து வரப்படும் பொழுது இந்த உடலில் இருந்து பிரிந்து சென்ற இந்த உணர்வுகளை விஷத்தை அது கவர்ந்து செல்கின்றது
4.ஏனென்றால் அது பிரித்தது

உதாரணமாக கருணைக்கிழங்கை நாம் வேக வைக்கின்றோம். இந்த விஷத்தின் தன்மை பிரிந்து சென்ற பின் சூரியனின் காந்த சக்தி அதைக் கவர்ந்து வைத்துக் கொள்கின்றது. இயற்கையில் விளைந்த உணர்வு தான்.

ஆனால் நாம் வேகவைத்து நீக்கினாலும் எதன் கலவையுடன் கலந்து இந்த உணர்வுகளை வெளிப்படுத்துகின்றோமோ இந்த உணர்வலைகள் வெளிப்படுத்தி நாம் அதை உணவாக உட்கொண்டால் அந்த உணர்வின் தன்மை எடுத்து வைத்திருப்பதை உணவின் அணுக்கள் ஆக்கப்படும் பொழுது இந்த உணர்வுகள் இதிலிருந்து வெளிப்பட்ட உணர்வை ஈர்த்து அதை நமக்குள் வளர்க்கின்றது.

எந்தப் பொருளானாலும் நாம் உணவாக உட்கொள்ளும் பொழுது இந்த உணர்வின் தன்மை கொண்டு அணுக்களாக்கப்படும் பொழுது அதை நமக்குள் உருவாக்கி
1.அந்த அணுக்களில் எந்த உயர்ந்த குணத்தை பதிவு செய்கின்றோமா அந்த பதிவின் நிலை கொண்டு அந்த அணுக்கள் மாற்றம் அடைகின்றது.
2.இதை நாம் செயல்படுத்த வேண்டும்.

இதைப் போல ஒவ்வொன்றும் நாம் எடுத்த உணர்வைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து வைத்துக் கொள்கின்றது

ஆனால் பூமியின் ஈர்ப்பைக் கடந்து வெளியே செலுத்தப்படும் பொழுது காலை சூரிய உதயம் வரப்படும் பொழுது மேலே கொண்டு செல்கிறது. அங்கே ஓசோன் திரை என்பது விஷத்தின் அடர்த்தியாகி தன்னுடன் விஷத்தை இணைத்துக் கொள்ளும் நிலை பெற்றது.

அதாவது சூரியானிலிருந்து மற்ற பிரபஞ்சங்களுலிருந்து வரக்கூடியதை நம் பூமியின் சுழற்சி வட்டத்திற்குள் இந்த அடர்த்தியான ஒசான் தான் விஷத்தை உள்ளே போகாது தடுக்கின்றது.

சூரியனிலிருந்து வரக்கூடியது அல்ட்ரா வயலட். விஷத்தின் தன்மை கொண்டது அது அடித்துப் பிசைந்து வெளிவரப்படும் பொழுது அதனுடைய ஒளிக் கதிர்கள் வெகு தூரத்தில் நெருப்பின் தன்மையாக மாற்றுகின்றது. நெருப்பின் தன்மையாக மாறினாலும் விஷத்தன்மைகள் பிரிகின்றது.

ஆனால் இந்த மோதலில் வெப்ப மின் அணு போன்று ஆகும் பொழுது ஈர்த்துத் தனக்குள் அந்த விஷத்த்தின் தன்மை கொண்டு ஒரு அணுவின் தன்மை அடைகின்றது

ஆகவே இந்த இயற்கை நிலைகளில் இவ்வாறு நிகழ்ந்து வருவது பூமிக்கு இத்தகைய விஷத்தின் தன்மை அடர்த்தியான பின் (ஒசான்) பூமிக்குள் ஜீவணுக்கள் மற்ற உயிரினங்கள் வாழும் தகுதி பெறுகின்றது. நஞ்சினை அது கவர்ந்து கொள்ளும் நிலையில் நமக்குள் அடக்கச் சக்தியாகக் கொண்டு வரும் நிலையும் வருகின்றது.

இதைப் போன்று தான்
1.நாம் உயிரான்மாக்களை விண் செலுத்தும் போது பிரபஞ்சத்தை விட்டு வெளியே சென்ற பின்
2.அந்த விஷத்தின் உணர்வுகள் ஓசான் திரையுடன் அதன்  அடர்த்தியில் கலந்து விடுகின்றது.
3.மனித உடலில் விளைந்தது அங்கே செல்லவில்லை என்றால் மீண்டும் இந்த உயிரின் தன்மை இதன் உணர்வின் தொடர் கொண்ட உடலைத்தான் உருவாக்கும்.
4.இந்த உடலில் எத்தகைய உணர்வு எடுத்துக் கொண்டதோ அந்த உணர்வுக்கொப்பத் தான் உடலைத் தேடிச் சென்று இந்த உணர்வின் தன்மை உடல் ஆக்கும்.

ஆகவே உயிருடன் ஒன்றி ஒளியாக்கும் நிலைகளை ஆக்க அங்கே உடல் பெறும் உணர்வுகளைக் கரைக்க “காலை துருவ தியானத்தில் எவர் ஒருவர் அந்த அரும்பெரும் சக்தி எடுத்துச் செயல்படுத்துகின்றார்களோ… அவருடைய சார்புடையவரை எளிதில் விண் செலுத்த முடியும்…”


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply