
விஞ்ஞான உலகிலிருந்து தப்புவதற்காகவாவது இந்தச் சக்தியை எடுத்து வளர்த்துக் கொள்ளுங்கள்
விஞ்ஞான உலகில்… அவர்கள் கண்டுணர்ந்த விஷக் கதிரியக்கங்கள் வான்வீதியில் பரவி சூரியனின் ஈர்ப்புக்குள்ளும் சென்று விட்டது.
அதனால்… ஒரு நொடிக்குள் நிலநடுக்கம் வருவது போல விஷத்தின் தன்மை கொண்டு இரு மடங்கு மின் உற்பத்தி அதிகமானால்… நம் உயிரின் துடிப்பின் நிலைகள் கூடி காந்த உற்பத்தி இரு மடங்காகிவிடும். நம் எண்ணங்கள் அனைத்தும் செயலிழந்து விடும்.
1.இத்தகைய தீமைகளிலிருந்து தப்புவதற்காகவாவது அதிகாலையில் எழுந்து
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
2.என் கணவருக்குக் கிடைக்க வேண்டும்… மனைவிக்குக் கிடைக்க வேண்டும்
3.என் தாய் தந்தையருக்குக் கிடைக்க வேண்டும் குழந்தைகளுக்குக் கிடைக்க வேண்டும்
4.அனைவரும் அருள் ஞானம் பெற வேண்டும்… எல்லோரும் அந்த அருள் வழி வாழ வேண்டும் என்று எண்ணிப் பாருங்கள்.
உங்களுக்கு அது சீரான வழியைக் காட்டும். தீமைகள் புகாது தடுத்துக் காட்டும். சாந்த உணர்வைக் கொடுக்கும். வாழ்க்கையைச் சீராக வாழவும் வழிகாட்டும். மகிழ்ந்த நிலைகள் வரும். வாழ்க்கையில் நிறைவு கிடைக்கும். போதும் என்ற மனம் வரும்.
1.போதும் என்ற நிலை வரும் போது அருள் வழியில் வந்து கொண்டே இருக்கும்.
2.வேண்டாம் என்று சொன்னாலும் அந்த அருள் செல்வங்கள் வந்து கொண்டேயிருக்கும்.
உதாரணமாக ஒரு இடத்திலே பிரசாதம் கொடுக்கிறார்கள் என்றால் “இன்னும் கொஞ்சம் வேண்டும்…” என்று கேட்டால் “இல்லை போ” என்று சொல்லிவிடுவார்கள். ஆனால் கேட்காமல் இருப்பவருக்கு அதிகமாகக் கொடுக்கும் நிலை வரும்.
இதைப் போன்றுதான் உணர்வின் இயக்கங்கள் செயல்படும் தன்மைகள்.
ஆகவே நாம் எப்படி வாழ வேண்டும்…? என்பதை குரு வழியில் உணர்ந்து கொள்ளுங்கள். காரணம் இதை எல்லாம் நான் படிக்காதவன் தான் உபதேசிக்கின்றேன். நீங்கள் அனைவரும் படித்தவர்கள்.
வான்மீகி படிக்காதவன்… அண்டத்தில் உள்ளதை அறிந்தான். வியாசகரும் படிக்காதவர் தான் அவரும் அண்டத்தை அறிகின்றார். அகஸ்தியன் ஒன்றும் அறியாதவன். தாய் கருவிலே அவன் பெற்ற நஞ்சை வென்றிடும் உணர்வுகள் தான் அவனை அகண்ட அண்டத்திற்கே அழைத்துச் சென்றது. திருமூலரும் அதைப் போன்று பெற்றவர் தான்.
1.ஞானிகள் பெரும்பகுதி ஆனவர்கள் எல்லோருமே இப்படிச் சக்தி பெற்றவர்கள் தான்.
2.ஆகவே அந்த அருள் ஞானிகள் பெற்ற உணர்வை உங்களுக்கு உபதேச வாயிலாகப் பதிவு செய்கின்றேன்.
சிவன் ஆலயத்தில் நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை. எந்த குணத்தின் தன்மையை நமக்குள் அதிகரிக்கின்றோமோ அந்தக் கணக்கின் பிரகாரம் தான் நம்முடைய வாழ்க்கை… அடுத்த சரீரம்…!
1.அதை உருவாக்குவது உயிர்
2.உணர்வுக்கொப்ப உடலை அமைப்பதும் உணர்வுக்கொப்ப வாழ்க்கை அமைப்பதும் அனைத்துமே உயிர் தான்.
3.ஈசனாக இருந்து அவனே இயக்குகின்றான்.
4.உயிரை ஈசனாக மதிக்க வேண்டும்.
5.அவனால் மனிதனாக உருவாக்கியதைப் பாதுகாக்க வேண்டும்
6.அவனை நேசிக்க வேண்டும்… அருள் உணர்வுகளை அவனுக்கு அபிஷேக்க வேண்டும் ஆராதனை செய்ய வேண்டும்.
7.உடலை உருவாக்கிய அணுக்களுக்கு நல்ல அமுதைக் கொடுக்க வேண்டும்.
உயிரான ஈசனுக்கு மகரிஷிகளின் உணர்வலைகளைப் பரப்பப்படும் பொழுது மகிழ்ச்சியைக் கூட்டுகின்றது. அந்த உணர்வை இயக்கப்படும் பொழுது அரும்பெரும் சக்தியாக… தெய்வமாக நம்மை இயக்குகின்றது.
இதுதான் நமது காவியங்களிலும் சாஸ்திரங்களிலும் சொல்லப்பட்டுள்ளது.
நாம் அனைவரும் அதைப் பெறுவோம் அருள் ஞானம் பெறுவோம். விஞ்ஞான உலகில் வாழும் அஞ்ஞான வாழ்க்கையில் இருந்து விடுபடுவோம். மெய்ஞான வாழ்க்கை வாழ்வோம் பிறவியில்லா நிலை அடைவோம்.
அதுவே நமது எல்லை என்று சப்தரிஷி மண்டலத்தை அடைவோம்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.