மந்திர நிலைகளை விடுத்து விட்டு மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும்

மந்திர நிலைகளை விடுத்து விட்டு மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும்

 

கோவிலில் இந்தத் தெய்வத்திற்கு இந்த மந்திரம் என்று சிருஷ்டித்துக் கொண்டால் அடுத்து இதே மந்திரத்தைத் திரும்பத் திரும்ப மற்றவர்கள் ஜெபித்தால் அங்கே முருகனாகக் காட்சி தருவேன்.

நான் நல்லது செய்ய வேண்டும் என்று எதையெல்லாம் எண்ணினேனோ அந்த உணர்வுடன் சுவாசிக்கப்படும் பொழுது மந்திரத்தைச் சொன்னவுடன் உடலுக்குள் போய் இரண்டு மடங்காகச் சேர்ந்து கொள்ளும்
1.மற்றவர் உடலில் இருக்கக்கூடிய நோய்களைக் கவரும்.
2.ஆனால் மற்றவர்களுக்கு நோய் தீரும்.

காரணம் அவருடைய வலு கொண்டு தான் மந்திரம் சொல்லி இறந்த ஆன்மா அங்கே சென்றது. மந்திரத்தைச் சொல்லி நோயை இழுத்துக் கொள்வார் உள்ளே சென்ற பின் அந்த நோயெல்லாம் அங்கு இயக்க ஆரம்பிக்கும்.

முருகனின் அருள் பெறப் போகின்றேன் என்று தவமிருந்தேன்
1.அதற்காக மந்திரத்தைச் சொன்னேன் என்ற நிலையில்
2.அடுத்த உடலுக்குள் சென்று அவரையும் வளர விடாதபடி… தானும் வளராதபடி ஆகிவிடும்.

அந்த மெய் ஞானிகளின் அருள் சக்திகளைப் பெற்றுத் தான் இருளை நீக்க வேண்டும்.

ஒளி கொண்டு உணர்வின் தன்மை இருளை நீக்கினான் நரசிம்மா…! தீமைகள் நீக்கி ஒளியைத் தனக்குள் பெற்றான்… “சப்தரிஷி…!”

அந்த மகரிஷிகளின் அருள் ஒளி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்ற எண்ணத்தைத் தனக்குள் செலுத்திடல் வேண்டும்.

சந்தர்ப்பத்தில் “ஒரு இருளான நிலையைப் பார்க்கின்றோம்… அறிகின்றோம்…” அதை அறிந்த பின் அதற்குண்டான காரியங்களை நாம் செய்கின்றோம்.

ஆனால் நாம் பார்த்த அந்த இருளை மாற்றுவதற்கு அந்த மகரிஷிகளின் அருள் ஒளி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் எங்கள் ஜீவான்மாக்கள் பெற வேண்டும் குறைந்தபட்சம் ஒரு நிமிடமாவது எடுத்து உடலுக்குள் செலுத்தி அதை வலுவாக்க வேண்டும்.
1.ஏனென்றால் பிறிதொரு ஆன்மா அறியாது உடலுக்குள் வந்து இயக்கினாலும் இயக்கிவிடும்.
2.அதை நாம் தடைப்படுத்த வேண்டும்.

நாங்கள் பார்ப்பதெல்லாம் நலம் பெற வேண்டும் நாங்கள் பார்ப்போரெல்லாம் நலமும் வளமும் பெற வேண்டும் நாங்கள் வியாபாரம் செய்யும் இடத்திலே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்.

எங்கள் குழந்தைகள் கல்வியிலே சிறந்த ஞானம் பெற வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று நல்ல ஞாபக சக்தி பெற வேண்டும். அவர்கள் எதிர்காலம் நலமாக இருக்க வேண்டும்.

குழந்தை வேண்டும் என்ற ஏக்கத்தில் இருந்தால் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். “புத்திர பாக்கியம் பெறக்கூடிய சக்தி வேண்டும்…” என்று இப்படித்தான் நாம் எண்ணி வளர்த்துக் கொள்ள வேண்டும்.

மேலே சொன்னபடி…
1.அந்தச் சக்தி பெற வேண்டும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று எண்ணி வளர்த்துக் கொண்டால்
2.அதுவே ஜெபம் ஆகின்றது… எடுத்துக் கொண்ட உணர்வின் சக்தியே நமக்குள் வருகின்றது.

சந்தர்ப்பத்தில் குறையான உணர்வுகளை நாம் எடுத்து விட்டால் அந்தக் குறையே இங்கே வளர்ந்து விடுகின்றது. கணங்களுக்கு அதிபதி கணபதியாக அது மாறி விடுகின்றது.

ஏனென்றால் இந்த உடலிலே எதை அதிகமாகச் சேர்க்கின்றமோ அதுவே அதிபதியாக ஆகின்றது…!

இன்றைய செயல் நாளைய சரீரம். இந்தப் பிள்ளை யார்…? நீ சிந்தித்துப் பார்…! என்று கேள்விக்குறியைப் போட்டு முச்சந்தியில் வைத்து நம்மைச் சிந்திக்கும்படிச் செய்கின்றார்கள்.
1.விநாயகர் தத்துவமே “நான் யார் தான் யார்…?” என்பது தான்.
2.உயிரின் தன்மை கொண்டு எண்ணி இயக்கப்படும் பொழுது நான் ஆகின்றது
3.அந்த உணர்வின் சக்தி உடலுக்குள் செல்லும் பொழுது தானாகின்றது… உயிரும் உடலும் தானாகின்றது.
4.உடலில் விளைந்து உயிருடன் சேர்க்கப்படும் பொழுது எண்ணமாக வரும் பொழுது நானாகின்றது.
5.அந்த நானின் தன்மை அடையப்படும் பொழுது எதன் உணர்வோ அதுவாகின்றது.

கீதையிலே நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய். ஆக கண்களிலே எதைக் கூர்மையாக உற்று நோக்கி எண்ணி எடுக்கின்றோமோ அதையே பெறுகின்றோம்.

ஆகையினால் இந்த உடலில் வரக்கூடிய வினைகள் “நாம் செய்தது அல்ல…”

நல்ல எண்ணங்கள் கொண்டு நாம் செயல்பட்டுக் கொண்டிருந்தாலும் பிறர் துன்பப்படும் உணர்வுகள் நமக்குள் அது கவரப்பட்டு தீய வினைகளாக விளைந்து நம் நல்ல குணங்களை அது அமிழ்த்திவிடுகிறது.

அதை நீக்குவதற்குத் தான் நரசிம்ம அவதாரம்… தியானம் என்பது. யாம் உபதேசித்த உணவின் துணை கொண்டு
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும்
3.எங்கள் ஜீவான்மா பெற வேண்டும் ஜீவணுக்கள் பெற வேண்டும்
4.நாங்கள் பார்க்கும் அனைவரும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று இப்படி நாம் தூய்மைப்படுத்த வேண்டும்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply