
எம்முடைய உபதேசத்தின் சாரம்
இப்பொழுது யாம் உபதேசிக்கும் உணர்வெல்லாம்
1.துருவ நட்சத்திரத்துடன் உங்களைத் தொடர்பு கொள்ளச் செய்து
2.இந்த உணர்வினை நீங்கள் நுகரப்படும் பொழுது அந்த உணர்வின் கருவாக உங்களுக்குள் உருவாக்க வேண்டும் என்பது.
3.இதை நீங்கள் ஏங்கி சுவாசித்தாலே போதுமானது
4.ஓம் நமச்சிவாய என்று உங்கள் உடலாக மாற்றிக் கொண்டே இருக்கும்.
நமது வாழ்க்கையில் தவறு செய்தவரையும் தீமை செய்பவரையும் உற்று நோக்கி… அவர்கள் பேசும் உணர்வைச் செவிகளிலே கேட்கப்படும் பொழுது அதே உணர்வு கொண்டு “இப்படிப் பேசுகின்றார்கள்” என்று நுகர்ந்தால் அதுவும் தியானம்தான்.
இந்த உணர்வுகள் நம் உடலுக்குள் தீமை செய்யும் நிலையாக அந்த உணர்வுகளை நம் உடலுக்குள் அணுவாக மாற்றிவிடும்.
ஆனால் இந்த உபதேச வாயிலாக உங்களைத் துருவ நட்சத்திரத்துடன் இணைத்து அந்த மகரிஷிகள் பெற்ற உணர்வினைச் சொல்லாகச் சொல்லும் பொழுது
1.செவிகளில் இந்த உணர்ச்சிகள் உந்தப்பட்டு கண் வழி அதைக் கவர்ந்து
2.கண்ணின் காந்தப் புலனறிவு கொண்டு அதை நம் ஆன்மாவாக மாற்றி உயிரான ஈசனிடம் கொடுக்கப்படும் பொழுது
3.இந்த உணர்வின் தன்மை அதாவது பரமாத்மா ஆத்மா ஜீவாத்மா ஆக நமக்குள் மாறி அதன் உணர்வு கொண்டு நம் உடலாகிறது.
இதனின் உணர்வை வளர்த்துக் கொண்டால் உயிரான்மாவுடன் சேர்த்து அருள் மகரிஷிகள் பெற்ற உணர்வின் தன்மை பேரருள் என்ற உணர்வின் ஆன்மாவாக அந்த உணர்வின் அணுத் தன்மை அடைகின்றது.
அவ்வாறு அடையச் செய்யத்தான் இந்த உபதேசத்தை உங்களுக்குள் பதிவு செய்கிறேன்.
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு எப்படிக் காட்டினாரோ… அதே வழிப்படிதான் உங்களுக்குள் அது பெருகவும் அதே உணர்வினைச் செவி வழி உணர்ச்சிகளை உந்தும்படி செய்து கண் வழி அருள் மகரிஷிகளின் உணர்வை நுகரச்செய்து ஜீவான்மாவாக மாற்றி அதன் உணவுக்காக அதே உணர்வுகள் தூண்டப்படும் பொழுது அதை ஏங்கி வாழ்க்கையில் வரும் இருளை நீக்கி நஞ்சினை வென்று பேரருள் பெற வேண்டும் என்பதற்காக குருநாதர் காட்டிய அருள் வழியில் அருள் உணர்வாகச் சொல்கின்றேன்.
செவி வழி உணர்ச்சிகள் உந்தப்பட்டு கண் வழி அந்த அரும்பெரும் சக்தி அதை நீங்கள் நுகர்ந்து பேரானந்த நிலை பெறும் அந்த ஆற்றல் பெற வேண்டும் என்று தான் உபதேசிக்கின்றேன்.
1.கருத்தினைக் கூர்ந்து கவனித்து அந்த உணர்வுகளை நுகர்ந்தறிந்து அறிவதோடு மட்டுமல்லாதபடி
2.அறியச் செய்யும் மகரிஷிகளின் பேராற்றல் மிக்க உணர்வினை உங்களுக்குள் உருவாக்கவே இந்த உபதேசம்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.