
நன்றாகத் தான் இருந்தார்… இப்போது கேன்சர் வந்துவிட்டது…! என்றால் ஏன்…?
இன்றைய உலகம் எங்கே சென்று கொண்டிருக்கின்றது…? காற்று மண்டலம் நஞ்சாக மாறிவிட்டது…! நஞ்சுகள் வளர்ந்து கொண்டே இருக்கின்றது… விஞ்ஞானிகள் கண்டுபிடித்த நிலைகளால் உலகம் மாசுபடும் நிலைகளுக்கே சென்றுவிட்டது.
1.தொழிற்சாலைகளில் வரும் கழிவுகளை எவ்வளவு குழியைத் தோண்டி அதில் புதைத்து வைத்தாலும்
2.அல்லது நீரிலே கலக்கப்பட்டு வடிக்கப்பட்டாலும்
3.அந்த உணர்வுகள் ஆவிகளாக மாறும் பொழுது காற்று மண்டலத்தில் தான் கலக்கின்றது.
பூமிக்குள் செல்வதைத் தடுக்க வேண்டும் என்று விரும்புகின்றனர் ஆனால் மேலே செல்லப்படும் பொழுது தாவர இனங்களிலே இது படர்ந்து விடுகின்றது அதனால்… கேன்சர் நோய் இன்று அதிகமாக வருகின்றது.
1.இவர்கள் கழிக்கும் நஞ்சுகள் அதிகரிக்கும் நிலையில்
2.எங்கே பார்த்தாலும் கேன்சர் கேன்சர் என்ற நோய்கள் வந்து கொண்டு இருக்கின்றது
3.நன்றாகத் தான் இருப்பார்கள்… திடீரென்று இந்த நோய் வந்துவிடும்.
இதைப் போன்ற கடுமையான நஞ்சின் நிலைகள் வரப்படும் பொழுது உடலில் மூட்டுகளிலும் இந்த விஷத்தன்மைகள் ஊடுருவுகின்றது.
எந்த வலுவின் தன்மை ஏற்கின்றோமோ நரம்பு மண்டலங்களுக்குள் இந்த விஷத்தன்மைகள் செல்லப்படும் பொழுது
1.அங்கே தேங்கி விட்டால் வலு கொண்டு செயல்படுத்தும் நிலைகள் முடியாது போய்விடுகின்றது.
2.நாம் சுவாசித்த உணர்வுகள் இந்த நிலை பெறுகின்றது.
3.இது போன்ற நிலையில் இருந்து மனிதன் மீள வேண்டும்.
இந்த உணர்வுகள் எல்லாம் எப்படி இயங்குகின்றது…? என்ற நிலைகளை குருநாதர் 20 வருடம் அனுபவபூர்வமாக தெளியச் செய்தார். தெளிந்து உணர்ந்த பின் தான் உங்களுக்கு இதை எடுத்துச் சொல்கின்றேன் (ஞானகுரு).
எம்மிடம்…
1.ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதி என்றார்
2.அவன் அமைத்த உடல் அந்த ஆலயம் என்று நீ கருது
3.மனிதனை உருவாக்கிய ஒவ்வொரு உயர்ந்த குணங்களையும் சீர்படும்படி உனக்குள் எண்ணி அதை வளர்த்துக் கொள்.
பிறருடன் பழகிய உணர்வு… அதே உணர்வு வளர்ந்து இருந்தால்
1.அவர்கள் உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று நீ எண்ணினால்
2.உனக்குள் அவர் உணர்வு பதிவாகி இருந்தால்… உன்னை உயர்த்தும் நிலையாக உனக்குள் அது சீர்படுகின்றது.
இது அல்லாது வேறு யாரிடத்திலும் காசைக் கொடுத்து யாகத்தைச் செய்து பாவத்தைப் போக்கிவிடலாம் என்றால் பாவத்தைத் தான் நீ சேர்க்கின்றாய் எந்த மந்திரத்தைச் சொல்லி யாகத்தைச் செயல்படுத்துகின்றார்களோ பாவத்திற்கு நம்பர் ஒன்றாகின்றாய்…!
இந்த உடலை விட்டுச் சென்ற பின் எந்த உணர்வுகளை நீ பதிவு செய்து கொண்டாயோ இறந்த பின் மந்திரம் தெரிந்தவன் அதைப் பதிவு செய்தான் என்றால் பாவச் செயலுக்கு உன்னைப் பயன்படுத்துவான் என்றார்.
இதிலிருந்து எவரும் தப்ப முடியாது. மனிதன் மீண்டும் புழு பூச்சியாகத்தான் செல்ல முடியும் இதை எல்லாம் தெளிவாகக் கூறுகின்றார் குருநாதர்.
ஆகவே உங்களை நம்புங்கள்…! நீங்கள் எண்ணுவதைத் தான் உயிர் உருவாக்குகின்றது. எதை எண்ணிச் சேர்க்க வேண்டும்…? என்று உணர்ந்து கொள்ளுங்கள்.
மகரிஷிகளின் அருள் உணர்வுகளை உடலில் வளர்த்துக் கொள்ளப் பழகிக் கொள்ளுங்கள். வளர்க்க வேண்டும் என்றால் அந்த அருள் ஞானிகளின் உணர்வுகளைப் பதிவாக்குங்கள். அதை வலுவாக்கத் தியானித்துக் கொள்ளுங்கள்.
எப்பொழுதெல்லாம் துன்பங்கள் வருகின்றதோ அதை மறந்து விட்டு
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெறுவேன் என்று அதை உறுதிப்படுத்துங்கள்.
2.எதனால் துன்பங்கள் வந்ததோ என் பார்வை அதைச் சீராக்க வேண்டும்…
3.நான் சிந்தித்துச் செயல்படும் சக்தி பெற வேண்டும்
4.பொறுப்புடன் செயல்பட வேண்டும்… அந்தச் சக்தி எனக்குள் வளர வேண்டும்
5.என் பார்வை அனைத்தையும் நல்லதாக வேண்டும்
6.என் பேச்சைக் கேட்பார் வாழ்வில் நலமும் நலமும் அவர்கள் பெற வேண்டும் என்று இப்படி எண்ணிப் பழகுங்கள்.
இப்படி நீங்கள் எண்ணுவது நலம் பெறும் சக்தியாக உங்களை மாற்றும்…!
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.