
இருதய அடைப்பு… சிறுநீரகம் பழுதடைதல்… இன்று அதிகமாக வருவதற்குக் காரணம் என்ன…?
வான் வீதியிலே முதலில் உருவானது உயிரணு. மனிதர்கள் நாம் எந்தெந்தக் குணங்களை எண்ணுகின்றோமோ அது அணுவாக மாற்றுகின்றது நம்முடன் சேர்ந்து நம் உடலில் அதனுடைய இனத்தைப் பெருக்கும் பொழுது அது ஜீவ அணுவாக மாறுகின்றது.
வான் வீதியில் இருந்து வரப்படும் பொழுது
1.மற்ற கோள்களின் சத்தைச் சூரியனுடைய காந்த சக்தி எடுத்துக் கொண்டால் அது வெறும் அணு
2.அந்த அணுவை உயிரணுக்கள் (உயிரினங்கள்) சுவாசித்து நுகர்ந்தால் ஜீவ அணுவாக மாறுகின்றது… ஜீவ அணு அடுத்து ஜீவான்மா.
ஒருவன் நோய்வாய்ப்பட்டிருக்கின்றான் என்றால் அந்த உணர்வுகள் அந்த உடலில் அது ஆன்மாவாக மாறுகின்றது. அந்த உடலிலே விளைந்ததை கூர்மையாக உற்றுப் பார்த்து நாம் நுகர்ந்தால் அந்த விஷத்தன்மை நம் உடலில் எடுத்துக் கொள்ளும்
நோய்வாய்ப்பட்ட மனிதன் உடலை விட்டுப் பிரிந்தான் என்றால்
1.அவன் உடலில் விளைந்த சக்தி நமக்குள் இருப்பதால்
2.அதன் வலிமை கொண்டு அந்த ஆன்மா நமக்குள் வந்து விடும்.
3.நம் உடலில் வந்த பின் ஜீவான்மாவாக மாறும்… நமக்குள் வட்டமிடும்
ஜீவான்மா எங்கே இருக்கிறது என்றால் இரத்தத்திற்குள் தான் இருக்கும். சில ஆவி பிடித்தவர்களை நீங்கள் பார்த்தீர்கள் என்றால் அதனுடைய வேகத் துடிப்புகள் இருக்கும் பொழுது… இரத்த ஓட்டங்களில் சுற்றிக் கொண்டு வருவதைக் காணலாம்.
மூளை பாகம் அந்த ஆன்மா வரப்படும் பொழுது தன் எண்ணங்களைஅது இயக்கும். மறுபடி நகர்ந்து ரிட்டன் ஆகும். வெளியே வந்த பின் சாந்தமாகிவிடும்
1.தன் உணர்வின் எண்ணங்களை அது எதை எதை எடுத்து இருக்கின்றதோ அதை எல்லாம் அங்கே பேசும்.
2.அந்த உணர்வுக்குத் தக்கவாறு வேண்டாததை எல்லாம் கேட்கும்… வேண்டாததை எல்லாம் பேசும்.
இரத்த நாளங்களில் உள்ள ஜீவான்மா என்பது இது தான்.
நமக்குள் வந்து அதற்கு வேண்டிய உற்பத்திகளை செய்து சாப்பிட்டுக் கொண்டே இருக்கும். அதனுடைய எண்ணங்கள் தோன்றப்படும் பொழுது நாம் சுவாசிக்கின்றோம்… உடலுடன் சேர்கின்றது… உணர்வின் அணுக்களாகிறது.
ஜீவணுக்கள் என்பது தசைகளில் போய்ச் சேர்ந்து கொள்கின்றது. எந்தெந்த குணங்களை எடுத்தோமோ வெளியில் இருந்து அந்த உணர்வுகளை எடுத்து விளையும்.
செடியிலே வித்து விளைகின்றது அதே போன்றுதான் ஒரு மனித உடலில் எண்ணங்கள் உருவாகி ஊழ் வினை என்று வித்துக்களாக உருவாகின்றது. பின் உடலில் இருந்து அலைகளாகப் பாய்கின்றது.
நான் பேசுகிறேன் என்றால் சூரியனின் காந்த சக்தி அதை அணுக்களாகக் கவர்கின்றது. சுவாசித்து அந்த உணர்வு உடலுக்குள் வரும் பொழுது ஜீவணுக்கள்.
நான் இறந்து விட்டால் அந்த உணர்வை நுகர்ந்தால் ஜீவாத்மாவாக வருகின்றது இரத்தத்திலே தான் இருக்கும் இரத்தத்திலே சில மாற்றங்களை எடுத்து… உணவை எடுத்து வாழும்.
பேய் பிடித்தது… ஆவி பிடித்தது… ராட்சச உணர்வு வருகிறது என்றெல்லாம் சொல்வார்கள். பல் நீட்டிக் கொண்டிருப்பது போன்று எந்தெந்தக் கொடூரமான சிலைகளை உருவாக்கினார்களோ அதையே வணங்கி அந்த உணர்வினை எடுத்து அந்த அலைகள் பதிவான பிற்பாடு இறந்து விட்டார்கள் என்றால் அதே உருவமும் இயக்கமும் வரும்.
1.அது எப்படி அடக்கி ஆட்சி புரியும் தன்மை வந்ததோ
2.உடலுக்குள் வந்த பின் வாய் பேச விடாது.
(ஆவி பிடித்தவர்கள் பேசாத நிலைகள் எத்தனையோ உண்டு).
அது நம் இரத்தத்திற்குள் தான் இருக்கும். இந்த அணுக்கள் உடலுடன் ஒட்டி வரும். தீமையின் உணர்வு வரப்படும் பொழுது அணுக்களாக மாற்றாது.
இரத்தத்தில் தான் அணுக்கள் பெருகும். இந்த அணுக்கள் பரப்பப்படும் பொழுதுதான்
1.சில சமயம் இருதயத்திற்கு அந்த ஆன்மா வரப்படும் பொழுது இருதயத்தின் துடிப்புகள் குறையும்… அதை அடைக்கும் (ஹார்ட் அட்டாக்)
2.இரத்தத்துடன் கழிவுகளாக வரும் பொழுது கிட்னிக்குள் வந்தால் கிட்னி ரிப்பேர் ஆகும்
3.அதை வடிகட்டும் தன்மை இழக்கப்படும் பொழுது விஷத்தன்மை பாய்ந்து சிறுநீரகங்கள் பழுதடைந்து விடும்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.