கோப குணத்தின் வளர்ச்சி நம்மை எப்படிப் பாதிக்கும்…? என்று அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்

கோப குணத்தின் வளர்ச்சி நம்மை எப்படிப் பாதிக்கும்…? என்று அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்

 

அன்றாட வாழ்க்கையில் நம்மை அறியாது எத்தனையோ சந்தர்ப்பங்களில் கோபப்படும் நிலைகள் வருகின்றது. இது எல்லோருக்கும் தெரிந்தது தான். இருந்தாலும்…
1.அத்தகைய கோப உணர்வுகளை… அந்தக் கார உணர்ச்சிகளை…
2.நாம் அவ்வப்பொழுது மாற்றியமைக்கத் தவறினால்
3.அந்தக் கோபம் நமக்குள் விளையாதபடி தடுக்கத் தவறினால்
4.இந்த கார உணர்ச்சிகள் நம் இரத்தத்தில் “இயங்கத் தொடங்கி விடுகின்றது…”

நம் உயிர் எப்படி இயங்குகின்றதோ… இயக்குகின்றதோ… இதைப் போல அந்தக் கார உணர்ச்சிகள் “உயிரைப் போன்றே அணுவாக மாறுகின்றது…” இது அதிகமாக விளையத் தொடங்கினால் நம் உடலுக்குள் கார உணர்ச்சிகளைத் தூண்டும் அணுக்கள் அதிகமாகப் பெருகுகின்றது.

ஓரு நாற்பத்தி எட்டு நாட்கள் ஆனால்…
1.ஒரு கோழி எப்படி முட்டைகளை இடுகின்றதோ…
2.அதைப் போல் கார உணர்ச்சிகளால் உருவான அணுக்கள்
3.நம் உடலில் தன் இனத்தைப் பெருக்கிக் கொண்டே இருக்கும்.

இப்படி உருவான அந்த அணுக்கள் இரத்தத்தின் வழி செல்லப்படும் பொழுது நம் உறுப்புகளில் நுரையீரலோ கல்லீரலோ மண்ணீரலிலோ கிட்னியிலோ இருதயத்திலோ ஒட்டிவிட்டால் அங்கே அது அணுவாக உருவாகி அந்தந்த உறுப்புகளைப் பாழ்படுத்தத் தொடங்கி விடுகிறது.

காரணம்… நாம் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த கார (கோப) உணர்வுகள் இரத்தத்தில் கலந்து கொண்ட பின்.. அந்த இரத்தம் உடல் முழுவதும் படர்கின்றது.

மிளகாயை வாயிலே போட்டால் எப்படி ஆ… என்று அலறுகின்றோமோ… அது போல் கார உணர்ச்சிகள் உடல் முழுவதற்கும் சென்று உறுப்புகளிலே பரவப்படும் பொழுது பார்க்கலாம்…! இரத்த நாளங்கள் விடைத்திருக்கும்.

கோபம் வரும் போதும் சரி… அல்லது ஒரு இரத்தக் கொதிப்பு உள்ளோர் உடலைப் பார்த்தாலும்… நாம் அதைத் தெரிந்து கொள்ளலாம்.

நாம் மிளகாயைத் தணித்துச் சாப்பிட்டால் ஆ…! என்று அலறச் செய்வது போன்று எல்லா உறுப்புகளை உருவாக்கிய அணுக்களையும் இந்த உணர்ச்சிகள் அலறச் செய்கிறது.

அந்தக் கோப உணர்ச்சிகள் சிறுநீரகத்திற்குச் செல்லப்படும் பொழுது அங்கே எரிச்சல் வரும். காரத்தைச் சுத்திகரிக்கும் நிலையை அது இழந்து விடுகின்றது.

பின் அந்த இரத்தம் நம் இருதயத்திற்கு வருகிறது… இருதயத்திற்கு வந்தபின் அங்கேயும் ஒரு விதமான எரிச்சல் வருகின்றது. எரிச்சலான உணர்வுகளை இருதயம் நம் மூளைக்கு அனுப்புகின்றது. மூளைக்குச் சென்ற பின்…
1.அந்த இரத்தங்களை மூளை பாகங்கள் இரசாயணங்களாக மாற்றி
2.ஒவ்வொரு நரம்பு மண்டலங்களுக்கும் அதை அனுப்புகின்றது.
3.இப்படிப் பரவப்படும் பொழுது கண்கள் சிவந்து விடுகிறது (கோப்படுவோரைப் பார்த்தால் கண்கள் சிவந்து இருக்கும்)

நல்ல உணர்வுகள் நாம் சுவாசித்தோம் என்றால் மூளை நல்ல உணர்வுகளாக நரம்புகளில் அனுப்புகிறது. கண்களிலே ஒரு குளிர்ச்சியும்… ஒரு மகிழ்ச்சியூட்டக்கூடிய உணர்வாகவும் அப்போது வருகிறது.

ஆனால் கார உணர்ச்சிகள் இயக்கமாக்கப்படும் பொழுது நரம்புகள் விடைத்து விடுகின்றது. இரத்தக் கொதிப்பு வந்தவரைப் பார்த்தாலே இனம் புரியாதபடி அவருடைய கண்ணின் பார்வையும் அவர் உடல் சிவப்பாக இருப்பதையும் பார்க்கலாம்

ஆனால் தவறு யார் செய்தது…?

1.கோபப்படுவோரை நாம் பார்க்காமல் இருக்க முடியாது…
2.கோபப்படுகிறார்…! என்றும் தெரியாமல் இருக்க முடியாது.
3.ஆனால் தெரிந்து கொண்ட பின் அதைத் தடுத்து நிறுத்தும் சக்தி நமக்கு உண்டு….
4.இருந்தாலும் நாம் அதைத் தடுக்கின்றோமா…?

ஆனால் மற்ற உயிரினங்களோ இது போன்ற நிலைகளைச் சந்தித்தால் அதிலிருந்து தப்பி ஓடும் சந்தர்ப்பங்கள் தான் உண்டு. ஆனால் மனிதனோ அதை நுகரும் நிலைகளில் தான் இருக்கின்றான்.

உதாரணமாக… ஒருவன் நமக்குக் கடுமையான தீமைகளைச் செய்கிறான் என்றால் “அவனைத் தாக்க வேண்டும்…” என்ற உணர்வு நமக்கு வருகின்றது. ஆனால் கொடூரமானவன்… அவன் நம்மைத் தாக்கி விடுவான் என்றால் “தப்பி ஓடும் உணர்வுகளே…” நமக்கு வருகின்றது.

நம்முடைய கண்கள் அவனுடைய கொடூரமான செயல்களிலிருந்து தப்புவிக்கும் வழியையும் காட்டுகின்றது. ஆனால் நுகர்ந்த உணர்வுகள் உயிரிலே பட்டு அந்த உணர்ச்சிகள் உமிழ் நீராக மாறி விடுகின்றது.

உமிழ் நீராக மாறியது ஆகாரத்துடன் கலந்து காரமான உணர்ச்சிகளைத் தூண்டும் இரத்தமாக மாற்றி விடுகின்றது. ஆனால் நாம் தவறு செய்தோமா…? இல்லை.

இப்படி நம் உடலில் கார உணர்ச்சிகள் அதிகமாகி விட்டால்…
1.நம்முடைய மூளைப் பகுதிகளில் இருக்கக்கூடிய சிறு நுண்ணிய நரம்புகளில்
2.கார உணர்ச்சிகள் தாங்காது இரத்த நரம்புகள் விடைத்துவிடுகிறது.

அதே உணர்ச்சிகள் இரத்த நாளங்களில் ஊடுருவும் பொழுது மூளைகளில் ஏதாவது ஒரு பாகத்தில் இதனுடைய அழுத்தம் அதிகமானால் அது வெடித்து விடும்… உடலில் இரத்தக் கசிவாகி விடும்.

சிலருக்கு இரத்தம் கசிவானது என்று பார்க்கலாம் மூக்கு வழியாக இரத்தம் வந்தது… இறந்து விட்டார்…! என்று சொல்வார்கள். இது எல்லாம் இரத்தக் கொதிப்பால் மரணமடையக் கூடிய நிலைகள்.

ஆனால் அதே சமயத்தில் நம் இருதயத்தில் இதே கார உணர்ச்சிகள் தூண்டப்பட்டால் இருதயத்திற்குள் இயக்கும் அந்த நுண்ணிய பாகங்கள் தெறித்து விட்டால் “இரத்த இரத்தமாகக் கக்குவதைப் பார்க்கலாம்…” ஆனால் அவரும் இறந்து விடுகின்றார்.

இதைப் போன்று இந்தக் கார உணர்வுகளால் வரக்கூடியது நம்மை அறியாமலே உடலுக்குள் சேர்ந்து அந்த உணர்ச்சிகளை ஊட்டுகின்றது. ஆனால் நாம் தவறு செய்யவில்லை.

1.கோபப்படுவதைப் பார்த்தால் சாந்தப்படுத்தத் தான் நாம் செல்கின்றோம்.
2.அவன் உணர்வை நாம் கேட்டு அறிகின்றோம்… அதன் உணர்வு நம் உடலுக்குள் அணுக்களாக மாறுகின்றது.
3.நாம் என்ன சொல்லியும் அவன் கேட்கவில்லையே…! என்று அவனுடைய அதே உணர்ச்சிகள் நமக்குள் வந்து விடுகிறது.
4.நாம் தீங்கு செய்தோமா என்றால் இல்லை.
5.கோபப்படுபவனுக்கும் அதே நிலை… கோபப்படுவதைப் பார்த்தவருக்கும் இந்த நிலை
6.அதே சமயத்தில் அந்த கோபப்பட்டதைக் கேட்ட உடனே அதே கோப உணர்வு தான் வருகின்றது.

இப்படி மனித வாழ்க்கையில் வருவதை நாம் நீக்க கற்றுக் கொள்ள வேண்டும்.

பல கோடிச் சரீரங்களில் தீமைகளை நீக்கி… நீக்கி மனிதனாக நாம் வளர்ச்சி அடைந்து வந்த நிலையில் நன்மை… தீமை… என்று அதை நுகர்ந்து அறிந்தாலும்…
1.அறிந்து கொண்ட அந்தத் தீமையின் உணர்வுகள் நமக்குள் வளர்ந்திடாது தடுக்கத் தவறினால்
2.நம் உடலில் அதனுடைய அழுத்தம் அதிகமாகிவிடும்

அதைத் தூய்மைப்படுத்த வேண்டும் அல்லவா…!

கோபப்படுபவனை உற்றுப் பார்த்து அவன் உணர்வை நாம் பதிவாக்கி விட்டால்… நம் சந்தர்ப்பம்… ஒரு காரியம் நடக்கவில்லை என்றால் நமக்குக் கோபம் வரும்.

ஒரு காரியத்தைச் செய்ய முயற்சிக்கிறோம்.
1.அப்போது நாம் போகும் பாதையில் இடையில் யாராவது குறுக்கே வந்தால் அல்லது நம்மை சந்திக்க வந்தால்
2.நான் போகின்றேன் இவன் சனியன் மாதிரி வந்து விட்டான்…! இந்தக் கோபம் வரும்.
3.கோபத்தை இப்படி அந்த உணர்வுகள் வளர்த்துக் கொண்டே வரும்.

பெண்களுக்கு இத்தகைய கோப உணர்ச்சிகள் தூண்டப்பட்டால் கார உணர்ச்சிகள் ஈர்க்கப்படும் பொழுது குழம்பு வைத்தால் மிளகாயை அதிகமாகப் போட்டு விடுவார்கள். குழம்பு காரம் ஆகிவிடும்

ஏனென்றால் நாம் நுகர்ந்த உணர்வுகள் எதுவோ… அதற்குத் தக்கவாறு இப்படி எல்லாம் இயக்குகின்றது. இதை எல்லாம் நாம் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

Leave a Reply