“தியானம் எடுத்துக் கொண்டே வந்தாலும்” வேதனையும் கோபமும் வருகிறது… ஏன்…?

“தியானம் எடுத்துக் கொண்டே வந்தாலும்” வேதனையும் கோபமும் வருகிறது… ஏன்…?

 

ஒரு ரைஸ் மில்லில் நெல்லைப் போடும் பொழுது
1.அளவுக்கு மீறிப் போட்டால் அது நெல்லின் தோலைப் பிரிக்கும் சக்தி இழந்து விடுகின்றது
2.அல்லது அந்த இயந்திரத்தை இயக்க விடாதபடி தடைப்படுத்தி விடுகின்றது.

இதைப் போன்று தான் மனிதனின் சுவாசத்திலும் தீமைகளை எதிர்க்கும் சக்தி இருந்தும் அதைக் காக்க முடியாத நிலை ஆகப்படும் பொழுது…
1.தீமையின் உணர்வுகளை நாம் அடிக்கடி கேட்டுணர்ந்து இரத்தத்தில் கலந்து விட்டால்
2.அதே உணர்வுகள் நம் உடலில் தீமைகளைக் கவரும் சக்தியாக மாறிவிடுகிறது.

காரணம் இந்தத் தீமை என்ற உணர்வுகளைக் கண்ணிலே பார்த்தபின் கருவிழி நம் உடலில் முன் பாகத்தில் (நெஞ்சில்) எலும்புக்குள் ஊன் உண்டு. அதிலே பதிவாக்கி விடுகின்றது.

ஆக நாம் எதைக் கலந்தாலும் கவர்ந்தாலும் முன்னாடி குவித்து இதனின் உணர்வுகள் எதுவோ அதற்குத் தக்கவாறு இருக்கின்றது. இதில் எது அதிகமோ அந்த உணர்வின் தன்மை நமக்குள் அந்த வாழ்க்கையின் அமைப்பாக நாம் மாறி விடுகின்றோம்.
1.அதற்குத் தக்க உணர்வின் தன்மை நம் இரத்தங்களிலே மாறுகிறது
2.அது மாற்றப்படும் போது நம் உறுப்புகளும் மாற்றப்படுகின்றது.
3.தீமைகள் அதிகமான பின் கடுமையான நோய்களைச் சந்திக்கும் நிலை வருகின்றது.
4.உடலுக்குப் பின் வேதனை கொண்ட உணர்வுடனே உயிரான்மா பிரிகின்றது.
5.பின் நாம் எங்கே செல்கின்றோம்…? சற்று சிந்தித்துப் பாருங்கள்.

நமது வாழ்க்கையில் எத்தனையோ கோடி உடல்களைக் கடந்து வளர்ச்சியில் மனிதனாக வந்தோம். இதற்குப் பின் மீண்டும் கீழான நிலைகளுக்குச் செல்லலாமா…!

ஒரு நாயை அடிக்கிறோம்… துன்புறுத்துகிறோம்… இம்சிக்கிறோம்… என்று வைத்துக் கொள்வோம். ஆனால் அந்த உயிர் வெளி வரப்படும் பொழுது மனிதன் அடித்தால் மனித உடலுக்குள்ளே தான் வருகின்றது.

ஆனால் வலு கொண்ட வேறு ஒரு மிருகம் உதாரணமாக ஒரு புலி அடித்தால் நாயின் உயிரான்மா புலிக்குள் செல்கிறது.

மனிதனால் தாக்கப்பட்ட நாயின் உயிர் மனித உடலில் ஈர்க்கப்பட்டு மனித உணர்வை எடுத்து மனிதனாக உருவாக்கும் சந்தர்ப்பம் வந்துவிடுகிறது.
1.ஆகவே இந்த உயிரை நாம் மதித்தல் வேண்டும்
2.காரணம் “எல்லாமே சந்தர்ப்பத்தால் உருவாக்கப்பட்ட நிலைகள் தான்…!”

அன்றாட வாழ்க்கையில் நமக்குக் கோபம் வரலாம்… வெறுப்பு வரலாம்… வேதனை வரலாம்… சலிப்பு வரலாம்… சங்கடம் வரலாம்…! இது எல்லாம் நாம் சந்திக்கும் சந்தர்ப்பத்தால் வரக்கூடியது தான். இதையெல்லாம் நாம் தடுத்துப் பழகுதல் வேண்டும்.

அப்படித் தடுத்துப் பழகுவதற்குத் தான் ஒவ்வொரு நிமிடமும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து “ஆத்ம சுத்தி செய்யுங்கள்…” என்று சொல்கிறோம்.

அந்தச் சக்திகள் உங்களுக்குக் கிடைக்க வேண்டும்… தீமைகள் புகாது தடுக்கும் அருள் சக்தி கிடைக்க வேண்டும்… உங்களுக்கு அருள் ஞானம் கிடைக்க வேண்டும்… துருவ நட்சத்திரத்தின் பேரருள் உங்களுக்குக் கிடைக்க வேண்டும்…! என்று வேறு எந்தச் சிந்தனையும் இல்லாதபடி நான் (ஞானகுரு) தவமிருந்து கொண்டிருக்கின்றேன்.

அவ்வாறு உங்களுக்கு அந்த அருள் சக்திகள் கிடைக்க வேண்டும் என்று செயல்படுத்திக் பிரார்த்தித்துக் கொண்டிருக்கும் பொழுது நீங்களும்…
1.எப்போது… எத்தகைய குறைகள் வந்தாலும் அதை மறந்து ஈஸ்வரா என்று உயிரை எண்ணி
2.அந்த்த் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்
3.எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று எல்லா உறுப்புகளுக்குள்ளும் செலுத்துங்கள்.

எங்கள் உடலில் இருக்கும் ஊனுக்குள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெற வேண்டும் ஊனை உருவாக்கிக் கொண்டிருக்கும் அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இணைத்து விட்டால் இதனுடன் அது அருகில் வரப்படும் பொழுது இது வலுவாகிறது. துருவ நட்சத்திரத்தின் வலு கூடுகிறது.

இதை எல்லாம் ஏன் திரும்பத் திரும்பச் சொல்கிறேன் என்றால் இன்று எல்லாமே நச்சுத்தன்மையாக இருக்கும்… கடினமாக இருக்கும் தீமைகளிலிருந்து நீங்கள் தப்ப வேண்டும். அதற்குத் தான் பதிவு செய்கின்றேன்.

நீங்கள் தியானம் எடுத்துக் கொண்டே வந்தாலும்…
1.சந்தர்ப்பத்தால் தான் எண்ணியது நடக்கவில்லை என்றால் “வேதனை…”
2.இல்லையென்றால் “கோபம்…” இதைப் போன்ற உணர்வு வந்தே விடுகின்றது.
3.நாம் தவறு செய்யவில்லை… ஆனால் இந்த உணர்வுகள் இயக்கி விடுகின்றது அல்லவா…!

காரணம்… ஏற்கனவே பதிவான நிலைகள்… அது வலிமை பெற்றது. அதனின் இயக்கங்களை இயக்கத் தான் செய்யும். அதை தடைப்படுத்த உங்களுக்குச் சக்தி தேவை.

இப்போது கொடுக்கும் சக்தியை நீங்கள் பயன்படுத்தி உங்கள் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அனைத்திற்கும்
1.நான் சொல்லும் நிலைகள் கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை வலுவாக்கிக் கொள்ளுங்கள்
2.தீமைகள் புகாது தடுத்துக் கொள்ளுங்கள்…
3.உங்கள் பேச்சால் மூச்சால் மற்றவரையும் காக்கும் சக்தியாக வலுப் பெறுங்கள்.

Leave a Reply