
உருவம்… அருவம்… உருவம்…!
ஒரு கம்ப்யூட்டரில் ரெக்கார்ட் செய்வது போல் தான் உங்களிடம் ஞானிகளின் அருள் ஆற்றலைப் பதிவு செய்கின்றேன் (ஞானகுரு).
1.யாம் உபதேசம் கொடுத்ததை ஒவ்வொரு நிமிடமும் நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்தால்
2.வாழ்கையில் வரக்கூடிய தீமைகள் அனைத்தையும் நீக்கி
3.வல்லமை கொண்ட அந்த மகரிஷிகளின் உணர்வு கொண்டு உங்களுக்குள் சந்தோஷத்தை ஊட்ட முடியும்.
4.தீமைகள் உள்ளே புகாதபடி தடுக்க முடியும்.
அந்தச் சக்திகளைப் (அருவம்) பெறச் செய்வதற்குத் தான் ஆலயம்.
ஆலயத்திலே தெய்வங்களை உருவங்களாகக் காட்டி… சிலையாகத் தான் வைத்துக் காட்டுகின்றார்கள். அதாவது
1.உருவத்தைக் காட்டி அருவத்தைத் தெரிந்து கொள்ளும்படி தான் வைத்திருக்கிறார்கள்.
2.அருவ நிலை கொண்டு உருவத்தை நமக்குள் நாம் மாற்றலாம்.
3.இந்த இரண்டு வேலையும் இருக்கின்றது.
சொல்வது அர்த்தமாகிறதா…?
ஆனால் ஆலயத்தில் இவ்வாறு யார் செய்கின்றார்கள்…?
ஆலயத்தில் இது துவைதம். அந்தத் தெய்வீகக் குணங்களை நுகர்ந்து அறியும் பொழுது விசிஷ்டாத்வைதம். நுகர்ந்த உணர்வின் தன்மை உடலாகும் போது துவைதம்.
எதனின் இயக்கமாக நமக்குள் மாறுகின்றதோ…
1.இந்தத் தெய்வம் நல்லதைச் செய்யும்…! என்று நாம் எண்ணும் பொழுது அந்த உணர்வுகள் அத்வைதம்.
2.நுகர்ந்து அது உள்ளே வரப்படும்பொழுது விசிஷ்டாத்வைதம்… நமக்குள் அந்த உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.
3.உணர்வின் தன்மை உடலாக உறையும் பொழுது துவைதம் (ஓளிச் சரீரம்)
இது தான் உருவ அமைப்பு. (உருவம்… அருவம்… உருவம்…)
சாதாரண மனிதனும் உருவத்தைப் பார்த்து உயர்ந்த உணர்வை எடுப்பதற்கும்… அந்தத் தெய்வமாக நாம் ஆவதற்கும் ஆலயத்தை உருவாக்கிக் கொடுத்தார்கள் ஞானிகள்.
அந்த ஆலயத்தின் பண்பின் பிரகாரம் உயர்ந்த உணர்வுகளை எடுத்து அதன் இயக்கமாக நம்மை நாம் மாற்ற வேண்டும். எல்லோருக்கும் அதைக் கிடைக்கச் செய்ய வேண்டும்.
ஏனென்றால்…
1.இந்த மனிதப் பிறவி என்பது கடைசி நிலை.
2.இனி உடல் என்ற நிலை இல்லாதபடி ஒளி என்ற நிலையாக மாறிப் பழகுதல் வேண்டும்.
ஆகவே உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நேரத்தையும் சீராகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.