சுவாசிக்கும் உணர்வுகளில் அதிர்வுகள் அதிகமானால் டிரான்சாக்ஷன் செய்யும் இடத்தில் ஏற்படும் தீமைகள்

சுவாசிக்கும் உணர்வுகளில் அதிர்வுகள் அதிகமானால் டிரான்சாக்ஷன் செய்யும் இடத்தில் ஏற்படும் தீமைகள்

 

ஒரு சிலருக்கு இந்தப் பேய்… பிசாசு…! என்ற பயந்த உணர்வாகி அதிர்ச்சியாகி விட்டால் அதனால் அடிபட்டுச் செத்தான் என்று சொல்வார்கள்.

ஒரு இலையோ ஏதோ தானாக ஆடி விட்டால் அந்த எண்ணத்திற்குத் தகுந்த மாதிரி அங்கு ரூபங்கள் தெரியும் ஐயோ…! பேய் வந்து விட்டது… பேய் வந்து விட்டது… பேய் வந்துவிட்டது…! என்பார்கள். இவன் எண்ணத்திற்குத் தகுந்த மாதிரியே அங்கே தெரியும்.

இந்த உணர்வின் தன்மை வந்து திடீரென்று ஒரு ஓலை காற்றடித்துக் கீழே விழுந்தது என்றால் ஆ… பேய் வந்து விட்டது என்று எண்ணினால் தீர்ந்தது.

இந்த உணர்வின் தன்மை தனக்குள் எடுத்த பின்
1.சிந்திக்கும் நரம்புகளில் இது சென்றால் அது கட்டாகி விடும் (அறுந்து).
2.மூக்கிலே வாயிலே எல்லாம் இரத்தம் வரும். ஆக இரத்த நாளங்கள் வெடித்து விடுகின்றது.

ஆனால் “பேய் அடித்து” இரத்த இரத்தமாகக் கக்கினான் என்று சொல்வார்கள். பேய் வந்து அடிப்பதில்லை.
1.அதிர்ச்சியான பின் அந்த உணர்வுகள் ட்ரான்சாக்ஷன் செய்யக்கூடிய இடத்தில்
2.அதிர்வுகள் அதிகமாகி விரிவடைந்து (பலூன் மாதிரி) அந்த இரத்த நாளங்கள் வெடித்து விடுகின்றது.

நம்முடைய எண்ணங்கள் நம்மை எப்படி எல்லாம் கொண்டு செல்கிறது என்ற நிலையை எல்லாம் அறிந்து கொண்டால் போதும். அந்த அதிர்வின் தன்மை எண்ணும்போது பயத்தில் துடுக்கு… துடுக்கு… துடுக்கு… என்று வந்து கொண்டே இருக்கும்.

உதாரணமாக… ரோட்டிலே சென்று கொண்டிருக்கின்றோம். காக்காய் வலிப்பு வந்து ஒருவன் கீழே விழுந்து விடுகின்றான். இரக்கப்பட்டுப் பார்த்தோம் என்றால்
1.ஓரு சிலருக்குப் பலவீனமான உணர்வுகள் ஆனால்
2.சிறு மூளைப் பாகத்திலே தாக்கி விட்டால் வெடுக்கு… வெடுக்கு… என்று சுண்டும்

இதற்கு முன் காக்காய் வலிப்பு இல்லை. ஆனால் இந்த மாதிரி அதிர்ச்சியான பின் அத்தகைய அணு இங்கே தேங்கி விட்டால் அதற்குப் பின் காக்காய் வலிப்பு வரும்.

சிறிய குழந்தையாக இருக்கும் பொழுது இல்லை என்று எண்ணுவார்கள். ஆக இந்த உணர்வின் அறிவு இப்படி வருகின்றது.

சாந்தம் குணம் கொண்டு பரிவான குணம் கொண்ட ஒரு மனிதன் எதிர்பாராத நிலைகள் ஆ… என்று இதைக் கேட்டு விட்டால் ட்ரான்சாக்ஷன் செய்யக்கூடிய உணர்வுகள் ஒலிபெருக்கியாகும் பொழுது விரிவடைந்து விடுகின்றது.

அதனால் மயக்கம் வருகின்றது… அதிர்ச்சியினால் உறுப்புகள் கை கால் அங்கங்கள் வராது கூடப் போய் விடுகின்றது. இது எல்லாம் நம்மை அறியாமலே நாம் நுகரும் உணர்வுகளால் நடக்கக்கூடிய செயல்கள்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் காக்கப்பட வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

நம் ஆறாவது அறிவைச் சீராக பயன்படுத்த வேண்டும்.
1.ஈஸ்வரா…! என்று உயிருடன் ஒன்ற வேண்டும்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா… என்று
3.இங்கே புருவ மத்தியில் நிலை நிறுத்தி அதன் வழி உள்ளே புகச் செய்து
4.அதிர்ச்சியால் ஏற்படும் செயலாக்கங்களைத் தடுத்துப் பழக வேண்டும்

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவன்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

எந்த மனிதனுக்கு அந்த நோய் இருந்ததோ… துருவ நட்சத்திரத்தின் பேரருளை அவன் பெற வேண்டும். அவன் காக்கப்பட வேண்டும். அவன் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும் அவன் உடலில் இருக்கக்கூடிய பிணிகள் நீங்க வேண்டும். அவன் தெளிந்த மனம் பெற வேண்டும்… தெளிவான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற உணர்வுகளை இப்படி நாம் எடுத்து நமக்குள் படைத்து விட்டால் நமக்குள் அந்த உயர்ந்த குணங்களை உருவாக்குகிறது…. பிறருடைய தீமைகளோ துன்பங்களோ நமக்குள் வருவதில்லை.

சந்தர்ப்பவசத்தல் வேதனை என்று நாம் நுகரப்படும் பொழுது… அது நமக்குள் பிரம்மம் ஆகின்றது… உடலில் அணுக்களாக உருவாகின்றது.

அதே சமயத்தில் ஆறாவது அறிவு கார்த்திகேயா… சேனாதிபதி..! இதையெல்லாம் பாதுகாக்கும் சக்தி பெற்றது… எல்லாம் அறிந்து கொள்ளக்கூடிய சக்தி பெற்றது.

தீமை என்ற உணர்வு வந்த பின்
1.அருள் ஒளி என்ற உணர்வைப் பெருக்கி… இதை இணைத்து… அதைச் சுவை மிக்க உணர்வாகப் படைத்துப் பழகுதல் வேண்டும்
2.அந்த அணுக்களை மாற்றிப் பழகுதல் வேண்டும்.

இது தான் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன் என்று சொல்வது.

Leave a Reply