என்னை அழைத்துச் செல்… உன்னுடன் வருகின்றேன்

என்னை அழைத்துச் செல்… உன்னுடன் வருகின்றேன்

 

எங்கே வெளியில் செல்வதாக இருந்தாலும் சரி… எந்தக் காரியம் செய்வதாக இருந்தாலும் சரி… புருவ மத்தியில் ஈஸ்வரா…! என்று எண்ணி ஒரு நிமிடம் ஏங்கி என்னை அழைத்தால்
1.உன்னுடனே நான் வருவேன்.
2.உன்னுள் இருக்கும் என்னை நீ பார்..!
3.உன்னையே நீ பார்…!

எந்தக் காரியம் துவங்குவதாக இருந்தாலும் அல்லது எந்தச் சிக்கலாக இருந்தாலும் எத்தகைய கடுமையான நிலையைச் சந்தித்தாலும் அடுத்த கணம் புருவ மத்தியில் ஈசனை எண்ணும் பழக்கம் வந்துவிட்டால் எல்லாமே நல்லதாகத்தான் முடியும்.

ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில்…
1.நம் எண்ணத்தை… நம் மனதை… புருவ மத்தியில் இருக்கும் ஈசனிடம் திருப்பும் பழக்கம் வந்து விட்டால்
2.நம் வாழ்க்கை என்றுமே சீராக இருக்கும்.

Leave a Reply