
கடவுள் எங்கே எப்படி இருக்கின்றன்…? என்பதைச் சாஸ்திரங்கள் நமக்குத் தெளிவாகக் காட்டுகின்றது
சூரியன் அல்ட்ரா வயலட் என்ற நஞ்சினை நீக்கிவிட்டு வெப்பம் காந்தம் என்று ஒளியாகப் (வெயில்) பரப்பும் போது… அது எதன் எதனுடன் கலந்து வெளி வருகின்றதோ அதை எல்லாமே இயக்குகின்றது.
1.காந்தம் வெப்பம் விஷம் இந்த மூன்றும் எந்தப் பொருளைக் கவர்கின்றதோ
2.அது உள் நின்று தான் கவர்ந்து கொண்ட மணத்தை இயக்குகின்றது – கடவுள்…!
பிரகலாதன் கதையிலே கடவுள் எங்கே இருக்கின்றான்…? என்ற வினா வரும் போது
1.உன்னிலும் இருக்கின்றான்… என்னிலும் இருக்கின்றான்…
2.தூணிலும் இருக்கின்றான்… துரும்பிலும் இருக்கின்றான்… என்று சொல்வதாகக் காட்டியிருப்பார்கள் ஞானிகள்.
எத்தகைய துரும்பாக இருந்தாலும் வெப்பம் காந்தம் விஷம் என்று அந்த மூன்று நிலைகளில்… தான் கவர்ந்து கொண்ட நிலைகள் கொண்டு அது இயங்குகின்றது என்பதைத் தெளிவுபடுத்தி காரண காரியப் பெயரை வைத்து நமக்குத் தெளிவாக எடுத்துரைத்திருக்கின்றார்கள் ஞானிகள்.
1.இதையெல்லாம் தெளிந்து கொள்வது… தெரிந்து கொள்வது…!
2.தெரிந்து கொண்டால்… தெளிந்து கொள்வதற்கு உதவியாக இருக்கும்
விஞ்ஞான நிலைகளில் பாட நிலைகளைப் புகட்டி மனித வாழ்க்கையைச் சுகமாக வாழ்வதற்காக வேண்டி இயந்திரங்களையும் மற்ற பொருட்களையும் நாம் உருவாக்கி நமது வசதிகளுக்காகச் செய்து வைத்திருக்கின்றோம்.
அதைப் போல் மெய் ஞானியின் உணர்வினை நமக்குள் செலுத்தி நஞ்சினை அகற்றி ஆறாவது அறிவின் தன்மை கொண்டு மகிழச் செய்து நம் சொல்லால் கேட்போர் உணர்வுகளையும் மகிழச் செய்ய முடியும். அது தான் மகிழ்வாகனா (மயிலை வாகனமாக முருகனுக்குக் காட்டியிருப்பார்கள்).
1.பிறரிடத்திலிருந்து தீமைகள் வந்தாலும்
2.நம் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு ஞானியின் உணர்வைத் தனக்குள் ஒளியின் சுடராக மாற்றி
3.அந்தத் தீமையை அகற்றிடும் செயல் பெற்றவன் மனிதன்.
ஆறாவது அறிவின் தன்மை கொண்டு டாக்டருக்குப் படிக்கின்றோம் என்றால் “ஒரு நோயின் தன்மை வந்தால் அதை எப்படி அகற்ற வேண்டும்…? என்ற பாட நிலையைப் புகட்டுகின்றார்கள்.
அதனை ஆழமாகப் பதிவு செய்தால் இந்த அறிவின் தன்மை கொண்டு பிறருடைய நோயைப் போக்கும் நிலையும் வருகின்றது.
அதே போல் ஒரு தச்சு வேலை செய்கிறார்கள் என்றால் சீராக இல்லாதவற்றைச் சீர்படுத்தி அழகாகப் பல பொருள்களை உருவாக்குகின்றார்கள்.
1.சீர்படுத்தும் இத்தகைய ஆறாவது அறிவின் தன்மையைத் தான் “முருகு…” என்ற காரணப் பெயரை வைத்து
2.ஒரு சொல்லுக்குள் பல உணர்வின் தன்மையைக் காட்டி
3.மனிதன் என்ற நிலையில் தன் நிலை அடையச் செய்யும் நிலையாகத் தெளிவாகத் தெரிந்து
4.தெளிந்திடும் நிலை கொண்டு தெரிந்து… தெளிந்திடும் நிலைக்குக் காட்டினார்கள் ஞானிகள்.
சிவ தத்துவத்தில் வரப்படும் பொழுது பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன் என்று “படைக்கும் சக்தி பெற்றவன் மனிதன்…” என்று காட்டுகின்றார்கள்
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.