
வால் நட்சத்திரம்
இரண்டாயிரம் சூரியக் குடும்பங்களில் ஒதுங்கிய (கழிவு) தூசி மண்டலங்களை “வால் நட்சத்திரம்…” (COMET) என்று சொல்வார்கள். வால் நட்சத்திரம் என்பது கடும் விஷத் தன்மை கொண்டது.
அது போகும் பாதைக்கு நேராக எந்தச் சூரியக் குடும்பம் வருகின்றதோ அதற்குள் அது கவரப்படுகின்றது. சூரியன் அதைக் கவர்ந்தால் பரிசுத்தப்படுத்தி பிரபஞ்சத்திற்குக் கொடுக்கின்றது.
ஆனால் பிரபஞ்சத்தில் அதைப் பரிசுத்தப்படுத்துவதற்கு முன் கோள்கள் ஊடுருவினால் பூமிக்குள் வந்து விடுகின்றது.
மற்ற கோள்களில் ஊடுருவினால் அந்தக் கோள்களில் திசை மாற்றம் ஆகின்றது. கோள்களுக்குள்ளும் மாற்றங்கள் ஆகின்றது. விஷத் தன்மைகள் பரவி விட்டால் அதன் ஓட்டத்தின் திசையும் மாறுகின்றது.
உதாரணமாக செவ்வாய்க் கோள் நாதகாரகன் என்றால் அதிலே இந்த விஷத் தன்மைகள் கவரப்பட்டால் அதே விஷத் தன்மைகளை அதுவும் கலந்து வெளிப்படுத்துகின்றது.
செவ்வாய்க் கோளிலிருந்து வருவதைச் சூரியன் கவர்ந்து பிரபஞ்சத்திற்குள் அனுப்பப்டும் பொழுது அதனின் உணர்வு நம் பூமியின் ஈர்ப்பிற்குள்ளும் வருகிறது.
1.செவ்வாய்க் கோளில் உருவான விஷத்தன்மை கலந்த அந்த நாதம் நம் பூமிக்குள் கவரப்படும் பொழுது
2.தீமையின் உணர்ச்சிகளைத் தூண்டும் நிலையாகப் பரவுகிறது.
3.செவ்வாய்க் கோளில் மாற்றம் ஆவதைத் தாவர இனங்கள் எடுத்துக் கொண்ட பின் எதிர் நிலையான உணர்வின் நாதங்களாக மாறி
4.தாவர இனங்கள் கடும் நோயாகி அது விளையும் தன்மையும் மாறுகிறது.
இதையெல்லாம் குருநாதர் தெளிவாகக் காட்டுகின்றார். சாப்பாடு ஞாபகத்திற்குப் போகாதபடி இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தை முழுமையாக யாம் தெரிந்து கொள்ளும் வரையில் பட்டினியாக இருக்கச் செய்தார்.
எதை…?
பட்டினி என்றால்
1.இந்த உடலில் இருக்கக்கூடிய மனித உணர்வு கொண்ட நிலைகளைப் பட்டினியாகப் போட்டு
2.அந்த அருள் ஞானி அகஸ்தியன் கண்ட உணர்வினை நீ பெறு என்றார்.
3.அகஸ்தியன் தெரிந்து கொண்ட உணர்வினை நீ உணவாக உட்கொண்டால்
4.இருளை நீக்கும் அந்த அருள் சக்தி கிடைக்கும் என்ற நிலையை இப்படிக் கொண்டு வந்தார்.
சிவன் இராத்திரி என்று விரதம் இருக்கிறீர்கள் என்றால் நீங்கள் “நல்ல அணுக்களுக்குச் சாப்பாடு கொடுப்பதில்லை…!”
கஷ்டம் துன்பம் துயரம் என்ற தீமையான உணர்வுகளை உனக்குள் எடுக்காதபடி அந்த ஞானி கண்ட அருள் உணர்வை உனக்குள் எடுத்து வளர்த்துக் கொள்…! என்று குருநாதர் தெளிவாக்கினார்.
ஒரு கம்ப்யூட்டரை எலக்ட்ரிக் வைத்து இயக்கப்படும் போது உணர்வின் அதிர்வுகளை வைத்து நமக்கு வேண்டியதை எல்லாம் அதிலே பதிவாக்கித் தெரிந்து கொள்கிறோம்.
அதே போல நமது உயிரும் எலக்ட்ரிக்கை உருவாக்கிக் கொண்டுள்ளது.
1.இங்கே யாம் உபதேசிக்கும் போது கூர்ந்து கவனித்தால் உங்கள் கண்…
2.எலும்புக்குள் உள்ள ஊன்களில் அதைப் பதிவாக்கி அதன் உணர்வை இணைத்துக் கொண்டே உள்ளது.
உங்கள் கவனங்கள் யாம் உபதேசிப்பதைப் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வுடன் இருந்தால் அது பதிவாகின்றது. மீண்டும் நீங்கள் நினைவாக்கப்படும் பொழுது அந்த மாமகரிஷி அகஸ்தியன் கண்டறிந்த உண்மையின் உணர்வுகளை… காற்றிலிருப்பதைக் கவரும் சக்தியாக உங்களுக்குள் வரும்.
எமது குருநாதர் எனக்கு (ஞானகுரு) எப்படிப் பதிவு செய்தாரோ அதைப் போல உங்களுக்குள்ளும் பதிவாக்குகின்றேன். மீண்டும் நினைவுக்குக் கொண்டு வரும் போது நீங்கள் எளிதில் அதைப் பெற முடியும்… நிச்சயம் பெறுவீர்கள்.
இன்று… இந்தக் காற்று மண்டலத்தில் நச்சுத் தன்மைகள் பரவி மனிதனின் சிந்தனை இழந்து… மனிதனுக்கு மனிதனே கொன்று குவித்து அதை ரசிக்கும் தன்மையாக வந்து விட்டது.
1.ஆனால்… நாம் அனைவருமே ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டவர்கள் தான்
2.உலகில் படர்ந்து கொண்டிருக்கும் அந்தச் சிந்தனை இழந்த உணர்வுகள்
3.நம்மைத் தாக்காது இருக்க வேண்டும் என்பதற்குத் தான் இதைச் சொல்வது.

மனிதனுடைய கதியை நிர்ணயிப்பது எது…? – ஈஸ்வரபட்டர்
காட்சி:
ஒரு கடிகாரம் தெரிகின்றது. கடிகாரத்தின் முட்கள் நகர்வதுவும் தெரிகின்றது.
விளக்கம்:
நேரத்தைக் குறிப்பிடுகின்ற கடிகாரத்தின் முள் ஒன்று பெரியதாகவும் ஒன்று சிறியதாகவும் உள்ளது. சிறிய முள் மணியையும் பெரிய முள் நிமிடங்களையும் காட்டுகின்றன.
பெரிய முள் ஓர் சுற்றுச் சுற்றிவர சிறிய முள் அடுத்த எண்ணுக்கு நகருகின்றது. அதைப் போன்று உணர்வின் எண்ணத்தின் வேகம் கடிகாரத்தின் பெரிய முள்ளைப் போன்று இச்சரீர ஒலியால் சுழலுகின்றது.
1.ஆத்மாவின் பதிவானது பெரிய முள்ளின் சுழற்சி வேகத்தைப் போன்றும்
2.உணர்வின் எண்ணத்தின் வேகம் ஆத்மாவின் செயல் பதிப்புகளானபின்
3.அது விளைந்து… இச்சரீரத்தின் வாசனையாக “இச்சரீரம் அடுத்து அடையும் கதியை…” சிறிய முள்ளின் குறிப்பு உணர்த்துகின்றது.
மனித உணர்வின் எண்ண ஓட்டத்திற்கு ஓப்ப செயலாக்கும் விந்தையின் விளைவுதான் “மனிதனின் கதி…”
1.மனிதனின் கதியில் செயலாக்கும் உயிரே “ஆண்டவனாய்…”
2.ஆண்டவனின் இயக்க ஆத்மாவில் எது பதிவாகின்றதோ அதுவே இறைவனாய் உள்ள நிலையில்
3.மனிதனின் மெய் ஞானம் தன் உணர்வின் எண்ணத்தின் வேகத்தை எக்கதி கொண்டு எடுக்கின்றானோ
4.அக்கதியின் ஈர்ப்பிற்குத்தான் சரீரத்தின் செயல் செயலாகும்.
இயற்கையின் கதியில்… பூமி சுழன்று ஓடும் பொழுது பூமியின் வட்டத்தில் அதன் ஓட்ட கதியில் எது எதையெல்லாம் சந்திக்கின்றதோ அச்சந்திப்பின் அமிலத்தைத் தன் வளர்ச்சியின் வித்தாக்கி… இயற்கையின் கதியாய் பூமி வளர்க்கும் வளர்ப்புகளும்… பூமியின் கால நிலையில் காற்றும் மழையும் உஷ்ணமும்… சுழற்சியின் கதியின் ஓட்டத்திற்கொப்ப பூமியின் செயல் வளர்ச்சி சுழலுகின்றது.
பூமியில் வளரக்கூடிய தாவரங்களின் வளர்ச்சியில் மரங்களையோ கொடிகளையோ வெட்டும் பொழுது… மீண்டும் அடிமரத்தின் தண்டு
1.”ஒரே கதியின் உணர்வில்” தாவரங்கள் இயற்கையின் அமிலத்தை எடுத்து ஒன்றின் தொடர்பில் வளர்வதினால்
2.வெட்டிய பிறகும்… துளிர் விட்டு மீண்டும் அம்மரங்கள் வளர்கின்றன.
ஆனால் உணர்வின் எண்ணத்தைக் கொண்டு… அதற்கடுத்த நிலை கொண்ட ஜீவ அணு வளர்ச்சி கொண்ட ஜீவ ஜெந்துக்களின் நிலையில் அதனுடைய உறுப்புக்கள் வெட்டுப்பட்டதென்றால் மீண்டும் வளர்வதில்லை.
அதே சமயத்தில் மனிதனின் நிலையில் பல உணர்வுகளை அறியக்கூடிய செயல் தன்மை எண்ணத்தின் உணர்வின் வேகம் கொண்ட செயல்பாட்டுத் திறமை உள்ளது.
ஆகையினால் மனிதன் தன் எண்ணத்தைக் கொண்டே தனக்கொத்ததைப் படைக்கவல்ல ஆற்றல் திறன் கொண்டவன் ஆகின்றான். மேலும்…
1.செயல் தன்மையின் உருவக நிலைக்கு
2.மனிதனின் நிலைதான் இப்பூமியின் வளர்ச்சியின் கடைசி நிலை. (உயர்ந்த படைப்பு)
தாவரங்களின் நிலையில் தனக்கொத்ததை ஈர்த்து ஒரே செயலில் வளரும் நிலையினால் அவைகளுக்கு எண்ணத்தின் ஓட்டமில்லை. மற்ற ஜீவ ராசிகளின் நிலையில் மனிதனை ஒத்த செயல் தன்மையில்லை.
1.எல்லா நிலையும் உணரக்கூடிய மனிதன்
2.தன் உணர்வின் எண்ணத்தில் எதை எடுக்க வேண்டும்..? என்பதனை
3.மனிதனின் ஞானத்தால் அறிதல் வேண்டும்.
ஆகவே… இப்பூமியில் பல நிலைகளுடன் ஒன்றிய வாழ்க்கையில் நாம் எதை எண்ணுகின்றோமோ அவ்வெண்ணத்தின் பல நிலைகள் வளர்ந்தாலும்
1.தனக்கொத்ததைப் பண்படுத்தி தன் ஜீவிதத்தை வளர்க்கும் மனிதன்
2.தனக்கொத்த நற்குணத்தின் நல் ஒலியை
3.தன் ஆத்மாவின் கதியில் பதிவாக்க வேண்டும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
வியாழன் கோளுக்குப் பெயர் “குரு” என்று சொல்கிறோம்? குரு என்று ஞானிகள் ஏன் சொன்னார்கள் என்று அறிந்திருக்கின்றோமா…!
இந்தப் பூமியே சீக்கிரம் அழியப் போகின்றது. ஏனென்றால் இன்றைக்கு இருக்கக்கூடிய விஞ்ஞான உலகில் அணுக் கதிரியக்கங்கள் அதிகமாகப் பரவிவிட்டது.
அவைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து விட்டது. இந்தப் பூமியின் நடு விட்டத்திற்குள் அணுக்கதிரியக்கங்கள் ஊடுருவிப் போய்விட்டது.
அந்த அணுக் கதிரியக்கங்கள் சூரியனின் வெப்ப காந்தங்களுடன் கலந்தவுடனே
1.இந்த உணர்வுகள் அதில் இருக்கக்கூடிய காந்தமும்
2.பூமியில் இருக்கக்கூடிய காந்தமும்
3.ஒரு உலோகத்திற்குள் இருக்கக்கூடிய காந்தங்களுக்குள் மோதியவுடனே
4.புயல் அடித்த மாதிரி இரும்பே உருகுகின்றது.
5.அந்தக் கதிரியக்கங்கள் மீண்டும் அது வளர்ச்சி அடைகின்றது.
அது ஓங்கிய நிலைகள் கொண்டு சுழிக் காற்று போன்று எல்லாவற்றையும் பிளந்து அதனின் வீரிய சக்தி அடங்குகின்ற வரையிலும் இங்கிருக்கக்கூடிய செடி கொடி கல் மரம் கட்டிடங்கள் எல்லாவற்றையும் அழித்து விட்டுப் போய்க்கொண்டே இருக்கும்.
ஏனென்றால் இந்தப் பூமியில் இருக்கக்கூடிய இந்த அணுவின் விஷத்தை எடுத்துப் பிளந்து (NUCLEAR REACTION) அது செய்து கொண்ட நிலை இது.
வேறு வேறு வேலைகளுக்குக் கரண்ட் உற்பத்தி செய்வதற்காக அதைச் செய்கிறோம் என்று விஞ்ஞானிகள் சொல்லலாம். ஆனாலும் இதனுடைய தணிந்த உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றிக் கொண்டே இருக்கின்றது.
பூமிக்குள் அணுவைப் பிளந்தால் விபத்து என்று தெரிந்த பின் பூமியைக் கடந்து வான வீதியிலே இந்த அணுக்களைப் பரீசீலனை செய்து வெடிக்கச் செய்தார்கள்.
வான்வீதியிலும் இந்த அணுக்களுடைய தன்மை படர்ந்து விட்டது. மற்ற கோள்களுக்குள்ளும் சூரியனுக்குள்ளும் அது சென்று விட்டது.
அதே சமயத்தில் வான்வீதியில் படர்ந்த அந்த அலைகள் பூமியின் ஈர்ப்புக்குள் வந்து நமக்குப் பாதுகாப்பாக இருக்கக்கூடிய திரையையும் (OZONE LAYER) பிளந்து மீண்டும் இந்த விஷத்தின் தன்மை பூமியின் ஈர்ப்பு வட்டத்திற்குள் தான் வந்து கொண்டு இருக்கின்றது.
1.இவை அனைத்தும் பூமியின் நடு விட்டம் அடைந்து விட்டது.
2.வெப்பத்தின் தணல் கூடிவிட்டது… பனிப் பாறைகள் உருகத் தொடங்கிவிட்டது.
3.உருகிய நீர்கள் பூமியில் இருக்கக்கூடிய நிலத்தை ஒடுக்கச் செய்து கொண்டிருக்கின்றது.
மீண்டும் மீண்டும் வெப்பத்தினால் பனிப்பாறைகள் கரைய அந்த நீரின் தன்மை அதிகமாகப் படரும் தன்மை வரப்போகும் போது சூரியனை விட்டு பூமி நகர்ந்து சென்று விடுகின்றது.
விலகிச் சென்று மீண்டும் இது குறைந்தவுடனே (பூமி) பனிப்பாறையாக உறைந்துவிடும். நம் உயிர் எல்லாம் அந்த பனிப் பாறைக்குள் சிக்கிவிடும்.
இன்று கோழி முட்டைகளை ஐஸ் பெட்டியில் வைத்துவிட்டு அடுத்துத் தேவைப்படும் பொழுது மிஷினில் சூடு செய்து குஞ்சு பொரிப்பார்கள்.
இதே மாதிரி முந்தி வியாழன் கோளில் நம் உயிர் எல்லாம் சிக்கப்பட்டு மீண்டும் அதிலிருந்து தெறிக்கப்பட்டு வான வீதிக்கு வந்து இந்தப் பூமிக்குள் வந்து தான் நாம் மனிதனாகப் பிறந்திருக்கின்றோம்.
அதனால் தான் வியாழன் கோளை… “குரு…” என்று சொல்வது.
அதிலே மனிதர்கள் வாழ்ந்து அதிலேயும் விஞ்ஞான வளர்ச்சியாகி இத்தகைய தவறு செய்து பயன்படுத்திய அந்த ஆயுதங்கள் இன்னும் இருக்கின்றது.
அதே உணர்வு வளரப்படும்போது அது வளர வளர இந்தப் பூமியும் குறையப் போகின்றது.
பூமியில் இங்கிருக்கும் விஞ்ஞானிகள் செய்து வைத்திருக்கின்ற ஆயுதங்களைக் காட்டிலும் பன் மடங்கு சக்தி வாய்ந்த நுட்பமான ஆயுதங்கள் எல்லாம் அங்கே வியாழன் கோளில் புதைந்து கிடகின்றது.
இதைக் குருநாதர் காட்டியிருக்கின்றார்.
வியாழன் முழுவதும் பனிப்பாறைகளாகி அதற்குள் சிக்கிய உயிர்கள் அதிலே வந்த அந்த ஒவ்வொரு உயிரணுவினுடைய தன்மையினுடைய நிலைகள்தான் மீண்டும் இது ஜீவன் பெற்றுப் பல நிலைகள் வந்தது.


மனிதன் பித்துப் பிடித்தவன் போல ஆகி… சிந்தனை இழந்து தவிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை…
விஞ்ஞான அறிவு கொண்டு அணுவைப் பிளந்து அணுகுண்டைத் தயார் செய்து இங்கே பூமி முழுவதும் கலக்கச் செய்து விட்டார்கள். அது படர்ந்த இடங்களில் எல்லாம் துரித நிலைகள் கொண்டு விஷ அணுக்கள் உருவாகின்றது.
அதுவே மனிதனுக்குள் கடும் நோயாக… டி.பி. போன்ற நிலைகளும் இதனின் உணர்வின் அதிர்வுகள் அதிகமான பின் கேன்சர் போன்ற கடும் நோய்களும் உருவாகிக் கொண்டுள்ளது.
1.அணுக் கதிரியக்கப் பொறிகளால் ஏற்பட்ட விளைவுகளால்
2.”இன்ன நோய் தான்…” என்று காண முடியாத நிலைகளில் ஏராளமாக வந்து கொண்டுள்ளது.
இருப்பினும் வான் வீதியில் வீசப்பட்ட கதிரியக்கங்கள் அதனுடைய நிலைகள் சிதறப்பட்டு நம் பிரபஞ்சத்திளும் பரவியது. ஒவ்வொரு கோளும் அதை நுகர்ந்து மற்ற கலவையுடன் சேர்த்து சூரியனுக்குள்ளும் புகும் தருணம் வந்துவிட்டது.
சூரியனுக்குள் இயற்கையாக உருவாகும் ஆற்றலும் மனிதனால் பரப்பட்ட விஷக் கதிரியக்கமும் இது இரண்டும் மோதும் நிலைகள் அதிகமாகி விட்டது.
எலக்ட்ரிக்கில் மின்சாரம் செல்லும் இரண்டு வயரை ஒன்றாகச் சேர்த்தால்
1.எப்படிக் கரண்ட் அதிகமாகி அனைத்தும் ஃபீஸ் ஆகுமோ அது போன்று தான்
2.இந்த எலெக்ட்ரானிக்கால் இயக்கப்படும் அனைத்துக் கம்ப்யூட்டர்களும் செயலிழக்கப் போகின்றது.
உலகெங்க்லும் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்று சீராகப் பயன்படுத்தும் நிலைகள் கொண்டு எத்தனையோ ஆயுதங்களைத் தயார் செய்துள்ளார்கள்.
அந்த ஆயுதங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கக்கூடிய இடத்தில் மின்னலோ மற்றதோ தாக்கி விடாதபடி திசை திருப்பும் நிலைகள் கொண்ட கம்ப்யூட்டர்களை வைத்துள்ளார்கள். பாதுகாப்பாக இருப்பினும் அந்தக் கம்ப்யூட்டர்கள் செயலிழக்கப் போகின்றது.
தன் நாட்டைக் காக்க என்று சொன்னாலும் இராக்கெட்டுகளை ஏவி மற்ற நாட்டை அழிக்க வேண்டும் என்ற நிலையில் பொருதி வைத்திருக்கின்றார்கள்.
வேறு நாட்டில் இருந்து ஆயுதங்களை இங்கே எப்போது ஏவினாலும்…
1.அடுத்த கணமே அந்த ஏவலின் ஒலி அதிர்வைக் கண்ட பின்
2.இங்கிருந்து அந்த கம்ப்யூட்டர் உடனே இயக்கி சீறிப்பாயும் அலையாக
3.இதனுடைய ஆணைகள் இடப்பட்டு எதிர்த்துத் தாக்கி வானிலேயே அதைச் சிதறடிக்கும்படியாக
4.இராக்கெட்டுகளை வைத்துள்ளார்கள் விஞ்ஞான அறிவு கொண்டு.
கம்ப்யூட்டர் மூலமாகத் தான் அதை வைத்துள்ளார்கள். அணு விசைகளின் தன்மைகளையும் வைத்துள்ளார்கள்.
அக்காலத்தில் நடந்த போர் முறைகள் வேறாக இருந்தது. ஆனால் இன்று கதிரியக்கப் பொறிகளை அதிக இயக்கமாக வைத்துள்ளார்கள். சமீபத்தில் நடந்த போர்களில் இதைப் பார்த்திருப்போம்.
இராக்கெட்டை வைத்து வான் வீதியிலே மோதும் பல நிலைகளை அது எப்படியெல்லாம் உருவாகிறது…? என்ற நிலையை அறிந்து கொண்டோம்.
இந்த வான் வீதியிலே பரவிக் கொண்டிருக்கும் இந்த உணர்வுகள் அனைத்தும் விஷத்தன்மையாகப் பாய்ச்சப்பட்டு சூரியனுக்குள் வரப்படும் பொழுது அதனுடைய இயக்கம் எதிர்மறையாகி “அதிகமான எலக்ட்ரிக்கை உருவாக்கப் போகின்றது…!”
1.நம் உயிரும் எலக்ட்ரிக்கைத் தான் உருவாக்கிக் கொண்டுள்ளது.
2.சூரியனுக்குள் மாறப் போகும் தன்மை கொண்டு நம் உயிரின் துடிப்பு அதிகமாகி விட்டால்
3.நம் உடலில் உள்ள அணு செல்கள் இயக்கம் அதிகமாகிவிடும்.
4.மனிதன் பித்துப் பிடித்தவன் போல ஆகப் போகின்றான்.
5.சிந்தனை இழந்து தவிக்கும் நேரம் வெகு தூரத்தில் இல்லை… குறுகிய காலத்திற்குள்ளேயே உண்டு.
இதனுடைய அடர்த்தி அதிகமான நிலைகள் கொண்டு பாதுகாப்பாக இருக்கக்கூடிய ஓசோன் திரையும் கிழிந்து விட்டது. துருவப் பகுதி வழியாக கதிரியக்கங்கள் அதிகமாக வரப்படும் பொழுது துருவப் பகுதியில் பனிகள் கரைந்து கடல்களும் பெருகுகின்றது.
கடல் நீருடன் கலந்த அந்தக் கதிரியக்கப் பொறிகள் விஷத்தன்மையான உணர்ச்சிகளை ஊட்டும் நிலைகளை உருவாக்கிக் கொண்டுள்ளது. இந்தப் பூமியையே… மனிதன் அழிக்கும் தருணத்திற்குக் கொண்டு வந்துவிட்டான்.
இதையெல்லாம் வென்ற அருள் மகரிஷிகள் உணர்வை நாம் சேமித்தால் தீமைகள் புகாது நம்மைக் காக்க முடியும். அதனால்தான் விழித்திரு…! என்று சொல்வது.
ஒவ்வொரு நொடியிலேயும் உலகில் நடக்கும் அதிர்ச்சிகளைக் கேட்டுணர்ந்தால்
1.அடுத்த கணமே நாம் விழித்திருந்து “ஈஸ்வரா…” என்று உயிரிடம் வேண்டி
2.அந்த அருள் மகரிஷிகளின் சக்திகளை நமக்குள் சேர்ப்பிக்க வேண்டும்.
3.விஞ்ஞானப் பேரழிவிலிருந்து நாம் தப்பித்து விண் செல்ல வேண்டும்.

நுண்ணிய நிலைகளை நுகரும் ஆற்றல் பெற்றால் தான் மெய் ஞானத்தை வளர்க்க முடியும் – ஈஸ்வரபட்டர்
காட்சி:
ஒருவர் காப்பியை ஆற்றிப் பருகுவதைப் போன்று தெரிகின்றது.
விளக்கம்:
நீரைக் கொதிக்க வைத்து… அதில் காப்பித் தூளைப் போட்டு பாலைத் தனியாகக் கொதிக்க வைத்து… காப்பியில் எடுத்த நீரையும் பாலையும் சேர்த்து அதற்குகந்த பக்குவத்தில் வேண்டிய அளவு சர்க்கரை சேர்த்து… “நம் உடல் ஏற்றுக் கொள்ளக்கூடிய சூட்டிற்கு” அதை நாம் பருகுகின்றோம்.
பாலையும் நீரையும் காப்பித் தூளையும் சர்க்கரையையும் அதற்குகந்த உஷ்ணத்தைக் கொடுத்து காய்ச்சிச் சுவைப்படுத்திப் பிறகு அந்தச் சுவைக்குகந்த உஷ்ணத்தில்…
1.நம் உடல் ஏற்கக்கூடிய பக்குவத்திற்குக் காப்பியை ஆற்றிய பிறகுதான்
2.நாம் அதனைப் பருக முடிகின்றது.
அதைப் போன்று நம் உணர்வின் எண்ணமுடன் பல விதமான செயலுக்குகந்த எண்ண ஓட்டங்கள் கலக்கப் பெறும் பொழுது… உணர்வின் சமைப்பாய் உயிர் சமைக்கும் உஷ்ணத்தைக் கொண்டு… ஆத்மாவினைச் சுவைப்படுத்தி… ஆத்மாவின் சுவையை மீண்டும் செயலாக்க…
1.உணர்விலிருந்து வெளிப்படும் “நம் சொல்லின் ஒலி”
2.பக்குவப்படுத்தப்பட்ட பருகக்கூடிய தன்மைக்கு
3.ஆற்றிய காப்பியைப் போல் வெளிவரல் வேண்டும்.
பலவற்றையும் நாம் சமைக்கும் பொழுது… அதற்குகந்த உஷ்ணத்தைத் தந்து சமைத்த பிறகுதான் பிறிதொரு பக்குவத்திற்குச் செயல் கொள்ள முடியும்.
ஆரம்ப நிலை இயற்கையின் தொடர்பில்… வளர்ச்சியின் செயல் யாவையுமே விஷத் தன்மை கொண்ட வளர்ப்புத்தான்.
ஜீவ ஜெந்துக்கள் அதனுடைய சுவையின் உணர்விற்கொப்ப அதனதன் உடல் நிலைக்குகந்த உணவை மட்டும்தான் உட்கொள்ளும். மாற்று நிலை… சமைப்பு நிலை… ஏற்படுத்திக் கொள்ளாநிலை தான் ஜீவஜெந்துக்களின் நிலை.
இப்பூமியின் தொடர்பில் இப்பூமி எடுக்கும் அமிலத்தின் தொடர்பில் நாம் வாழ்ந்தாலும்…
1.நாம் உண்ணக்கூடிய உணவு எது…? எது மனிதனுக்கு ஏற்றது…? என்பதை
2.நம் முன்னோர்கள் நமக்கு தொடர்புப்படுத்திய உணவு முறையைப் பக்குவப்படுத்தி நாம் உண்ணுகின்றோம்.
மிருகங்களைக் காட்டிலும் வளர்ச்சியுற்ற மனித நிலையில் இயற்கையில் வளர்ந்துள்ள பல நிலைத் தாவரங்களை வழிப்படுத்திய நிலைத் தொடரில்தான் நாம் சமைத்து உண்டு வாழ்கின்றோம்.
நம்மைக் காட்டிலும் அறிவில்… செயல் திறனில் ‘செயலற்ற மிருகங்கள்…” நம்மைக் காட்டிலும் மேம்பட்ட நிலையில் “தன் உணர்வின் சுவாசத்தால்” பல உண்மைகளை முன் கூட்டி அறியக்கூடிய நிலைக்குச் செயலாக்கும் பொழுது அறிவில் உயர்ந்த மனித ஞானம் ஏன் உயர்வில் செயலாக்க முடியாது…?
உருவத்தில் சிறிய எறும்பு… மழைக் காலத்தில் தன் ஆகாரத்தை உண்ணுவதற்காக மழை வருவதற்கு முதலிலேயே அறிந்து சேமித்துக் கொள்கின்றது.
நாம் பாத்திரங்களில் சேமித்து வைத்துள்ள பொருளைத் தனக்கு ஒத்த உணவு என்று முன் கூட்டி அறிந்து தன் இனத்தின் கூட்டில் தனக்குகந்த உணர்வின் சுவாசத்தால் எறும்பு எடுத்து விடுகின்றது.
ஆனால்… மனிதன்
1.மூடி வைத்துள்ள பாத்திரத்திலுள்ள பொருளை அதன் மூடியை எடுத்தால் தான்
2.உள்ளே என்ன இருக்கின்றது…? என்பதை அறிய முடிகின்றது.
நம்மைக் காட்டிலும் சிறு எறும்பு அதை அறியும் பொழுது “மனித ஞானம் எங்குள்ளதப்பா இன்று…?”
மழை வருவதற்கு முன்னும்… எதிரி தன்னைத் தாக்க வருவதற்கு முன்னும்.. பல மைல்களுக்கு அப்பாலுள்ள நீர் நிலைகளைத் தன் சுவாசத்திலேயே அறியும் நிலையும் மிருக ஜெந்துக்களினால் அறிய முடிகின்றது.
இதனை எல்லாம் நாம் அதனுடைய இயற்கையின் செயல் என்கின்றோம்.
ஒவ்வொரு உருவக நிலையும்… அது அது எடுத்த சூரிய ஒளியில் உதித்த உயிரணுக்களின்… மண்டல ஈர்ப்பின் சுவைக்கொப்ப உருவாகும் உருவகத் தொடர் தன்மையில்… பூமியின் சமைப்பின் தொடர் உருவக உரு பெற்றிருந்தாலும்…
1.உருப்பெற்ற தன்மையின் உடல் அமைப்பின் செயல் நிலையை
2.மிருக ஜெந்துக்களினால் மாற்றி அமைத்துக் கொள்ள முடியாது.
மனித நிலையில் உணர்வின் எண்ணத்தைக் கொண்டு இயற்கையின் உண்மையை உணர்ந்து எண்ணத்தின் மெய் ஞானத்தால் எதனையும் மாற்றி அமைக்கக் கூடிய செயல் தன்மைக்கு “மனிதனால் தான் முடியும்…”
மெய் ஞானத்தின் உண்மையை இயற்கையின் தொடர்பு கொண்டு வானக்கோள்களின் நட்சத்திர ஒளியை இச்சரீர உணர்வுடன் எண்ணத்தைச் செலுத்தி எடுக்கும் அமிலத்தின் ஒலியை உணர்வின் எண்ணத்தைக் கொண்டு சமைக்கப்படும் நிலையே ஆத்மாவின் பதிவு ஆகிறது.
இதே தொடரில் இப்பூமியின் தொடர்பு கொண்ட நட்சத்திரக்கோள்கள் நவக்கோள்கள் ஒவ்வொன்றையும் எண்ணி நாம் தியானிக்கும்பொழுது எண்ணத்தின் உணர்வில் அக்கோளின் அமிலத்தின் அலையை இச்சரீரம் சமைத்து ஆத்மாவில் பதிவாக்கிக் கொள்கின்றது.
இப்பூமியின் பிடிப்பிலிருந்து மனித நிலை உயர வேண்டும் என்றால்…
1.இப்பூமிக்கு வளர்ச்சி கொடுக்கும் செயலாய் சுழலும் பிற கோள்கள் நட்சத்திரங்களின் தொடர்பில்
2.நம் எண்ணத்தின் உணர்வைச் செலுத்தி நாம் எடுக்கும்
3.அந்த அமிலத்தின் அலையைக் கொண்டுதான்
4.மனித நிலைக்கு அடுத்த நிலையான “ஆத்ம ஜோதி” என்ற ஒளியான வளர்ச்சி நிலை வலுக்கொள்ளும்.
இப்பூமியின் தொடர்பில் இருந்து… விஞ்ஞானி பல ஒலி ஆண்டுகளையும்… ஒளி ஆண்டுகளையும் கணக்கெடுத்து வான்கோளிலுள்ள உண்மைகளை எல்லாம் அறிந்தாலும்… அப்படி அறியக்கூடிய விஞ்ஞானியின் வாழ்க்கைக் காலம் “சரீரம் உள்ள வரைதான்…!”
1.ஆனால் மெய் ஞானத்தில் அறியக்கூடிய காலம் என்பது
2.வழி வழியாய் வளரக்கூடிய காலமப்பா…!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
இயற்கையின் உண்மை நிலைகளை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்குக் (ஞானகுரு) காட்டினார். இந்த உண்மை நிலைகளை நான் எளிதில் தெரிந்து கொள்ளவில்லை.
பட்டினியாக இருந்து மிகவும் கஷ்டப்பட்டுத் தான் தெரிந்து கொண்டேன். பல வகைகளிலும் இன்னல்படச் செய்து பல அனுபவங்களைப் பெறச் செய்தார்… அனுபவங்களைக் கொடுத்தார்.
தீமைகளினுடைய உணர்வுகளை எப்படி அகற்ற வேண்டும்…? அதை ஒளியாக எப்படி மாற்ற வேண்டும்…? என்று குருநாதர் காட்டிய வழியில் இதைப் போதிக்கும் பொழுது அதையெல்லாம் உங்கள் அனுபவத்தின் மூலமாகத் தெரிந்து கொள்ள முடியும்.
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உங்கள் வாழ்க்கையில் உங்களுடைய அனுபவம் பேசும்.
மற்றவர்கள் தவறுகள் செய்து கொண்டேயிருக்கின்றார்கள் என்று உணர்ச்சி வசப்படாமல் அந்த உணர்வுகளை எப்படித் திருத்த வேண்டும் என்ற அனுபவம் வரும்.
1.தீமைகள் நமக்குள் புகாது தடுக்கும்
2.அத்தகைய அனுபவங்கள் பெற வேண்டும்.
நான் கஷ்டப்பட்டுத் தெரிந்து கொண்ட சக்தியை உங்களிடம் கொடுக்கின்றேன். உங்களை மீட்டிக் கொள்ள அரும் பெரும் சக்தியைக் கொடுக்கின்றேன்.
மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நீங்கள் தியானத்தால் எடுத்துப் பெற்றுக் கொள்ள முடியும்.
1.உங்களுக்கு நீங்கள் தான் காக்க முடியுமே தவிர…
2.“நான் வந்து காப்பேன்…” என்று சொன்னால்
3.எனக்குக் கீழ் நீங்கள் அடிமையாகத் தான் இருக்கின்றீர்கள் என்று அர்த்தம்.
ஏனென்றால்
1.நீங்கள் எண்ணியதை உங்கள் உயிர் தான் இயக்குகின்றது
2.அந்த உணர்வுப்படி உங்கள் உயிர் தான் உங்களைக் காக்கின்றது;
3.உங்களை வளர்க்கின்றது.. அதன் வழி உங்களை இயக்குகின்றது.
4.இதை நீங்கள் மறந்திடாமல் செயல்படுத்துங்கள்.
என்னைச் சாமி தான் காப்பாற்றினார்… அவர் தான் காரணம்…! என்று என்னை எண்ணக் கூடாது. “சாமி செய்தார்…” என்று என்னை எண்ணினீர்கள் என்றால் என்னிடம் எத்தனையோ ஆசைகள் இருந்தது.
1.அப்போது சாமியினுடைய ஆசைகள் உங்களுக்குக்குள் வர வேண்டுமா..?
2.இதையெல்லாம் வென்றவனின் அந்த அருள் ஆசைகள் வேண்டுமா…?
அருள் ஞானிகள் பெற்ற நஞ்சினை வென்ற உணர்வுகளைச் சொன்னால் அதை நான் பெறுகின்றேன். எனக்குள் இருக்கக்கூடிய அந்த இருளை நீக்கக் கூடிய பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று நினைக்கின்றேன்.
குருநாதர் எனக்குக் கொடுத்தார். இதே மாதிரி நீங்கள் இதைப் பெறுங்கள். இந்த உண்மையெல்லாம் உங்களுக்குத் தெரியும். நீங்கள் அதைப் பற்றுங்கள்.
சாமி என்னை அப்படிக் காப்பாற்றினார்.. இப்படிக் காப்பாற்றினார்.. என்று சொல்ல வேண்டியதில்லை. நீங்கள் உங்களுடைய எண்ணத்தால் தான் உங்களைக் காப்பாற்றிக் கொண்டீர்கள்.
உதாரணமாக… கடையில் சரக்குகளை வைத்திருக்கின்றார்கள் என்றால் அதிலே இருப்பது நல்ல சரக்குதானா…! என்று பார்க்கின்றோம். அதில் சரக்கைத் தேர்ந்தெடுத்துச் சமைத்துச் சாப்பிடும்போது அதில் ருசி வருகின்றது… இல்லையா…?
அப்படியானால்,
1.அப்பொழுது அந்தக்கடைக்காரர் உங்களைக் காப்பாற்றினாரா…?
2.இல்லை… ருசியைக் கொடுத்தாரா…?
கடையில் பல பொருள்களை வைத்திருக்கின்றர்கள். அதை வாங்கி ருசியாகச் சமைப்பது உங்களிடம் தான் இருக்கின்றது.
அதனால் தான் இந்த உண்மையின் இயக்கங்களை உணர்ந்து நான் உயர்ந்த சொற்களைச் சொல்கின்றேன்.
1.இதை நீங்கள் கவர்ந்து கொண்டால் வசிஷ்டர்.
2.அந்த உணர்வின் தன்மையை அறிந்தால் பிரம்மகுரு
3.அது அருந்ததி… அதன் நிலைகள் அந்த உணர்வின் சக்தியாக அது உங்களை இயக்கும் என்பதை
4.உணர்வின் இயக்கங்களைப் பற்றி இராமயாணத்திலே இவ்வளவு தெளிவாகக் கொடுத்திருக்கின்றார்கள்.
நாம் இதை அறிந்து கொண்டோமா…?
சில பேர் என்ன சொல்வார்கள்…? “ஒரு மந்திரத்தைச் சொல்லி… தொட்டுக் கொடுத்து விடுகின்றேன்…!” என்று சொல்கின்றார்கள். அவர்கள் எண்ணம் தான் உங்களுக்குள் பதிவாகும்.
குருநாதர் அப்படிச் சொல்லச் சொல்லவில்லை.
சாமி உபதேசித்த வழியில் நீங்கள் இதைப் பெற வேண்டும் என்ற இந்த உணர்வினை எடுத்து உங்களுக்குள் பதிவாக்கினீர்கள் என்றால் இதை நுகரப்படும் போது இந்த நிலை வரும்.
சாமி சொன்னார்…! என்று ”சாமியிடம் இருந்து இந்தச் சக்திகள் பெற வேண்டும்” என்று சொல்லிவிட்டு என்னைத் தியானம் செய்தால் நிச்சயம் நான் சிறு வயதில் எத்தனையோ குறும்புத்தனம் செய்திருப்பேன்… எத்தனையோ செய்திருப்பேன். இந்த உணர்வு கலந்து வந்தால் உங்களுக்குள் எது வரும்…? இந்த மனிதனின் உணர்வு தான் அங்கே வரும். இதையெல்லாம் முதலில் மாற்றியமைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
ஏனென்றால் இன்று யாரோ செய்வார்…! எவரோ செய்வார்…! என்று இந்த நிலையில் தான் நாம் இருக்கின்றோமே தவிர
1.உங்களை நீங்கள் நம்ப மறுக்கின்றீர்கள்.
2.உங்களை நீங்கள் நம்புங்கள்.
3.நம் உயிர் நாம் எண்ணியதை உருவாக்குகின்றது.
எதனையும் வெல்லக் கூடிய வல்லமை இந்த மனித உடலிலே உண்டு. அதே சமயத்தில் நமக்குள் பதிவாக்கும் சக்தியும் உண்டு. ஆகவே தான்
1.அருள் ஒளியை ஞான வித்தாக உங்களுக்குள் பதிவாக்குகின்றேன்.
2.இதை நீங்கள் கவர்ந்து கொள்ளுங்கள்.
3.அந்த அருளை மீண்டும் மீண்டும் நினையுங்கள்.
4.அந்த அரும் சக்தியை உங்களுக்குள் உருவாக்குங்கள்.
ஒருவன் நம்மைத் திட்டினால் திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது அதே உணர்வுகள் நமக்குள் பகைமையை வளர்க்கின்றது. இதே போலத்தான் பல நிலைகள் வருகின்றது.
அருள் ஞானத்தை உங்களுக்குள் வளர்க்கப்படும் பொழுது அந்தப் பேரின்பப் பெரு வாழ்வு என்று ஞானிகள் அடைந்த அந்த உணர்வுகள் உங்களுக்குள் பேரின்பம் பெறக்கூடிய வாழ்க்கையாக அமையும்.
உடலை விட்டு வெளியே வரும் பொழுது மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணையலாம்.


பல இலட்சம் ஆண்டுக்கு முன் அகஸ்தியன் உடலிலிருந்து வெளிப்பட்ட அருள் மணங்கள்
காட்டிலே வாழும் மிருகங்கள் உணவுக்காகத் தன்னுடைய எண்ணத்தைப் பாய்ச்சி எங்கே உணவு இருக்கிறது…? என்று அறிய எண்ணுகிறது.
மனிதன் இருக்கிறான் என்றால் அந்தத் தசைகள் இருக்கிறது என்றால் உணவாக உட்கொள்ளும் மணத்தால் அதை அறிந்து கொள்கிறது. உடலிலிருந்து வெளி வரும் மணத்தை அறிந்து மனிதன் இருக்கும் பக்கம் அந்த உடலை அழைத்து வருகிறது.
இதைத் தடைப்படுத்த அதற்கு எதிர் நிலையான மணங்கள் கொண்ட பச்சிலைகளையும் மூலிகைளையும் தான் படுத்திருக்கும் குகைப் பக்கம் பரப்பிக் கொள்கிறார்கள் அன்று வாழ்ந்த மக்கள்.
தன் உணவுக்காக வரும் மிருகங்களோ விஷ ஜெந்துக்களோ
1.இத்தகைய மூலிகை மணங்களை நுகர்ந்து கொண்ட பின் அதனுடைய விஷத்தின் வலிமை குறைகிறது
2.அதனால் இவர்கள் இருக்கும் திசைப் பக்கமே வருவதில்லை.
பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்… மனிதன் சந்தர்ப்பத்தால் அறிந்த அறிவால் அவன் கண்ட உண்மையால் இப்படிப்பட்ட பச்சிலை மூலிகைகளின் துணை கொண்டு அக்கால முதியவர்கள் முன் வாழ்ந்தார்கள்.
ஆனாலும் அந்தக் காலத்தில் வாழ்ந்த கணவன் மனைவி கருவிலே விளைந்த குழந்தைக்கு… இவர்கள் பரப்பி வைத்த அந்தப் பச்சிலை மூலிகைகளின் மணங்கள் கிடைக்கிறது.
1.தாயின் இரத்தத்தின் வழி வரும் மணங்களை அந்தச் சிசு நுகரப்படும் பொழுது
2.விஷத்தை அடக்கும் ஆற்றல் கருவில் வளரும் குழந்தைக்கு வருகின்றது
3.அப்படி உருவானவன் தான் அகஸ்தியன்.
பிறந்த பின் அவன் உடலிலிருந்து வெளி வரக்கூடிய மணத்தை விஷம் கொண்ட ஜந்துக்கள் நுகர்ந்தால் அவைகள் ஒடுங்கி விடுகின்றது. குழந்தைப் பருவமாக அவன் இருப்பினும் அவனைத் தாக்குவதில்லை.
இப்பொழுது நாம் படுத்தால் கொசு நம்மைக் கடிக்கின்றது. ஆனால் கருவிலே விஷத்தை முறிக்கும் தன்மை பெற்ற அந்தக் குழந்தையை எந்தக் கொசுவும் தாக்குவதில்லை… விஷ ஜந்துக்களும் தாக்குவதில்லை.
தாய் கருவிலே இருக்கும் போது பெற்ற அந்தச் சக்திகள் தான்
1.அவன் உடல் உறுப்புகள் அனைத்தையும் விஷத்தின் ஓட்டத்தை தணிக்கக்கூடிய வல்லமையாகின்றது.
2.உலகில் எத்தகைய விஷம் இருப்பினும் இவன் மணத்தை நுகர்ந்த பின் அவை அனைத்தும் ஒடுங்கி விடுகின்றது
3.இவன் (அகஸ்தியன்) அச்சமின்றி வாழ்க்கை வாழும் தன்மை வருகின்றது.
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் அகஸ்தியன் பெற்ற அந்த அரும் பெரும் சக்திகளை நீங்கள் பெறுவதற்குத் தான் இதைப் பதிவாக்குகின்றேன் (ஞானகுரு).

“அறிந்து விட்டோம்…” என்ற எண்ணத்தை விட்டு விட்டு அறிய வேண்டிய எண்ணம் கொண்டு செலுத்துவதே உத்தமம் – ஈஸ்வரபட்டர்
நட்சத்திரமாய் உயர்ந்த வளர் சக்தி கொண்ட கோள்களாய்… பல கோடி உயர்ந்த உருளக் கூடிய மண்டலக் கோள்கள் இருந்தாலும்… உணர்வின் உண்மை அறியும் “ஞான மனித நிலை” எல்லாக் கோள்களிலும் இல்லை.
உணர்வின் எண்ணத்தில்… அறியும் ஆற்றல் செயல் தன்மை செயலாகும்…
1.இயற்கையின் ஒளி சூட்சுமத்தை வளர்க்கும் வலிமை கொண்ட தொடர்நிலை வளர்ந்தால்தான்
2.இயற்கையின் சுழற்சி ஓட்டத்திலிருந்து சமைக்கும் குண தத்துவத்தைச் செயலாக்க முடியும்.
ஆகவே பல கோடி நிலைகள் செயல்படும் அண்டக் கோள்களில் அறிவின் ஆற்றலும் அறியும் திறனும் மனிதனுக்குத்தான் உண்டு.
தனக்கொத்ததை மனிதனின் எண்ணம் ஏற்படுத்திக் கொள்ளும் ஏற்றத்தில்…
1.மனித உணர்வின் செயல் வீரியம்… “தான்…!” என்ற முதிர்வு நிலை ஏற்படுத்திக் கொண்டால்
2.தன் அடுத்த வளர்ச்சி நிலை இயற்கையின் தொடர்பு ஒலியை எடுக்க முடியா தேக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளும்.
இந்த உண்மைகளை எல்லாம் அறிந்த சித்தன் “தனக்கு மேல் ஒருவன் உண்டு…” என்ற தெய்வத்தின் குணங்களை மனிதர்களுக்குச் சுட்டிக் காட்டத் தான் கோவில்களையும் சிலைகளையும் தத்துவ ஞானத்தில் ஸ்தாபித்தான்.
மனிதனின் உணர்வின் வேகம் “தான் உயர்ந்து விட்டேன்…!” என்ற எண்ணத்தைக் கூட்டிக் கொள்ளும் பொழுது தன்னை ஒத்த ஜீவாத்மாக்களை உயர்த்தக் கூடிய உணர்வுகள் மங்கிவிடுகின்றன.
1.தனக்கு மேல் ஒருவன்…
2.“தன்னை உயர்த்தச் செயல்படுகின்றான்…” என்ற எண்ணத்தின் வேகம் செலுத்தும் பக்தியினால் தான்
3.மனிதர்களின் உணர்வில் “தான்…” என்ற எண்ணத்தை அகற்ற முடியும்.
இதை உணர்த்திய பக்குவம் நம் ஞான பூமியில் பல உண்டு.
மனிதன் தெய்வத்தின்பால் செலுத்தப்பட்ட எண்ணத்தின் வேகம் கோயில்களில் தீ மிதித்து விரதங்கள் அனுஷ்டித்து பல செயல்கள் பக்தியில் செயல்படுவதை எல்லாம் பார்க்கின்றோம்.
பக்தியின் உந்தலின் வேகம் அவ் உணர்வின் வீரியத்திற்கொப்ப “அவன் எடுக்கும் சுவாசத்தின் வேகத்தால்” இன்றும் தீக்குண்டங்கள் நடப்பதைக் காண்கின்றோம்.
மனிதனின் உணர்வின் எண்ண வேகம் “எதனையும் ஈர்க்கவல்ல செயல் குணத் தன்மை கொண்டது…” இதனை…
1.தான் அறிந்து விட்டோம்… என்ற எண்ணத்தை விட்டு விட்டு
2.அறிய வேண்டிய எண்ணம் கொண்டு செலுத்துவதே உத்தமம்.
மனித உணர்வில் சலிப்பு சோர்வு வெறுப்பு கோபம் என்ற நிலைகளைக் கூட்டிக் கொள்ளாமல்… நற்குணத்தின் நறுமணமாய் இச்சரீர உணர்வின் ஒலி சுவாசமெடுத்து…. சம குணத்தின் ஒலியால் இயற்கையின் ஆதிசக்தியின் ஜீவ சக்தியின் ஒளியால்… நட்சத்திர மண்டலங்களின் ஒலி அலைகளையும் ஜீவ உணர்வுடன் இழுக்கும் பொழுது… இஜ்ஜீவ உணர்வின் எண்ணத்தில் மோதும் பொழுது… ஒளியாக… மின்காந்த ஒளியாக ஆத்மா ஒளிர்கின்றது.
ஆத்மாவின் ஒளிகள் மண்டலக் கோள்களின் எண்ண உணர்வுடன் ஈர்க்கும் பொழுது எப்படி இன்று நீரைக் கொண்டு இக்காற்றலையில் இருக்கும் மின் காந்த ஒளி சக்தியை மின்சாரமாக விஞ்ஞானத்தில் காண்பதைப் போன்று…
1.இச்சரீர எண்ணத்தின் உணர்வின் வேகத்தால்
2.நட்சத்திரங்களில் இருந்து வருவதையும் சூரியன் சந்திரன் மற்றக் கோள்களிலிருந்து வரும் சக்திகளையும்
3.நாம் எண்ணி எடுக்கும் ஒலி அலையில் அவ்வொலியின் உணர்வுடன் எண்ணத்தை எக்கோளுடன் செலுத்துகின்றோமோ
4.அந்த மண்டலங்களிலிருந்து வெளிப்பட்ட அமிலம் இச்சரீர உணர்வின் எண்ணமுடன் மோதும் பொழுது
5.உடலில் உள்ள உயிர் அணுக்கள் யாவும் ஒளி நிலையைப் பெறும் தன்மையை இச்சரீர ஆத்மா வளர்த்துக் கொள்ளும்.
இப்பூமியின் உணர்வுடன் சுழலும் வாழ்க்கை நிலையில்… மீண்டும் மீண்டும் இப்பூமி சமைத்து வெளிப்படுத்திய உணர்வின் ஒளியைத் தான் ஆத்மா வளர்த்துக் கொள்கிறது.
அத்தகைய தொடரில் நம் ஆத்மா இப்பூமிப் பிடிப்பில் சிக்கிவிடும் தன்மையை ஒவ்வொருவரும் உணர்ந்து கொண்டு
1.உயிரின் உயர்வை உய்யும் செயலாய்
2.ஒவ்வொரு நொடிப் பொழுதும் காலத்தை விரயப்படுத்தாமல்
3.உயரும் தன்மையில் நாம் அனைவரும் உய்வோமாக..!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
மற்றவர்களை ஞானிகளாக வளர்த்தால் தான் “நாம் ஞானியாக” முடியும்
குருநாதர் காட்டிய அருள் வழியில் “உயிரே கடவுள்…” என்று நாம் சொன்னால் “கடவுள் தான்… உயிர்..” என்று எழுதி வைத்து விடுகின்றார்கள்.
காப்பி அடித்தாலும் உயிரே கடவுள் என்றால் அந்த உண்மைப் பொருளைத் தெரிவதற்கு இல்லை. ஆனால் “கடவுள் தான் உயிர்…” என்ற நிலைக்கு மாற்றிச் சில நிலைகளை வெளிப்படுத்துகின்றார்கள்.
உட்பொருளைக் கண்டு தனக்குள் அறிந்தோ தன் உணர்வின் தன்மையை அந்தக் குரு மூலமாகவோ அறிந்தோ அதைச் சொல்வதில்லை.
ஏனென்றால அதை
1.முதலில் தனக்குள் படைத்துப் பார்க்க வேண்டும்.
2.அதனின் இயக்கத்தை அறிந்து கொள்ள வேண்டும்.
3.பின் அது சொல்லாக வர வேண்டும்.
இதையேல்லாம் பனிரெண்டு வருடங்கள் யாம் அனுபவித்தபின் தான்
1.புற நிலைகள் இருப்பது அக நிலைகளுக்குள் எப்படி இயக்குகின்றது என்றும்
2.இந்த உடலுக்குள் எப்படி விளைகின்றது என்றும்
3.அதை எப்படி மாற்ற வேண்டும் என்றும் குருநாதர் உணர்த்தினார்.
ஆரம்பத்தில் நானும் (ஞானகுரு) உங்களை மாதிரி நன்றாகச் சாப்பிட்டு நண்பர்களுடன் மகிழ்ச்சியாகச் சுற்றிக் கொண்டு இருந்தவன் தான்.
பின்னாடி இதை எடுத்துக் கஷ்டப்படச் செய்து எல்லாம் தெரிந்து கொண்ட பிற்பாடு தான் எனக்குள் விளைந்த அந்த மெய் உணர்வுகளை இப்போது நான் உங்களிடம் சொல்வது.
அதே சமயத்தில்
1,இதை எல்லாம் பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணினால்தான்
2.”எனக்கே சத்து…!” என்று குருநாதர் சொல்லி விட்டார்.
எதை…?
நீங்கள் எல்லாம் அந்த மெய் ஞானிகள் பெற்றது போல ஆற்றல்கள் பெற்றால் தான் “எனக்குச் சத்து…” என்றார் குருநாதர்.
உன்னைச் சந்திப்போர் அனைவரும் அவர்கள் வாழ்க்கையில் அறியாத இருள்கள் நீங்கி மெய் ஒளிகள் பெற வேண்டும் என்று
1.இதை நீ ஜெபித்துக் கொண்டிரு – அவர்களைப் பிரார்த்தனை செய்
2.அவர்களுக்குப் பெற வேண்டும் என்று எண்ணு
3.அப்போது “அந்த உணர்வு தான்… உனக்குள் விளையும்…!” என்று குருநாதர் சொன்னார்.
அதையே தான் யாம் உங்களிடமும் சொல்வது.


விண் செல்ல வேண்டும் என்றால் உயிரான்மாவின் முகப்பில் வைக்க வேண்டிய சக்தி எது…?
ஞானிகள் காட்டிய வழியில் நாம் விழித்திருக்க வேண்டும். அப்போது தான் மனிதனான நிலயில் பத்தாவது நிலையான கல்கி என்ற ஒளி நிலையை அடைய முடியும். உயிரணு தோன்றி மனிதனாக ஆனபின் தான் பத்தாவது நிலை அடைய முடியும்.
ஆதியில் ஒரு வெப்பத்தின் தன்மை அடைந்து கோளாகி நட்சத்திரமாகி சூரியனாகும் போது இது ஒன்பதாவது நிலைதான் வருகிறது.
1.இந்தப் பிரபஞ்சத்தைச் சூரியன் இயக்கலாம்
2.ஆனாலும் அது அழியக் கூடிய தன்மை பெற்றது.
ஆனால் இதிலே உருவான மனிதன் தான் இன்று மின்னலையும் அடக்குகின்றான்… மின்னலைக் காட்டிலும் மின்னணு தாக்கும் நிலைகளையும் விஞ்ஞான அறிவால் ஊடுருவுகின்றான்.
மண்ணிற்குள் படிந்துள்ள பொருளைக் கண்களால் காண முடியவில்லை என்றாலும்
1.இயந்திரத்தின் துணை கொண்டு உணர்வின் அதிர்வுகளைக் கூட்டி
2.இங்கே தங்கம் உள்ளது… இங்கே வெள்ளி உள்ளது… இங்கே நீர் உள்ளது… இங்கே எண்ணை உள்ளது… என்று
3.மேலே பறக்கும் நிலையிலிருந்தே பல ஆயிரம் அடிகளுக்கு அப்பால் ராக்கெட்டுகளைச் செலுத்தி
4.பூமியின் சுழற்சியில் பூமிக்குள் இருக்கும் நிலைகளை இங்கிருந்து காணுகின்றான் விஞ்ஞானி.
காந்தப் புலனறிவு கொண்ட (POWERFUL TELESCOPE) கண்ணாடிகளைக் கொண்டு… ஒவ்வொரு கோளும் எதை எதை உருவாக்குகின்றது…? அதனின் உணர்வுகள் எவ்வாறு வெளியில் பரவுகிறது…? என்றும் காணுகின்றனர்.
எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்று மாற்றும் உணர்வின் அறிவு கொண்டு கண்ணாடிகளில் எடுத்த அந்தப் பதிவின் துணை கொண்டு இவன் ஏவும் இராக்கெட் அந்தக் கோளின் திசையை நோக்கிச் சரியான நிலையில் சென்றடைகிறது.
இராக்கெட் அங்கே செல்வதற்குண்டான அளவுகோலை அறிந்து கொள்ள தரையிலிருந்தே காந்தப் புலனறிவு கொண்ட கண்ணாடியை வைத்து வெகு தூரத்தில் இருப்பதையும் தனக்குள் இழுத்து உணர்த்தும் நிலைகளை உருவாக்குகின்றான் மனிதன்.
கம்ப்யூட்டர் மூலமாக அதைப் பதிவாக்கி அதிலிருந்து அழுத்தத்தை ஆயிரம் மடங்கு பெருக்கி நுண்ணிய நிலைகளில் ஒளியின் அதிர்வுகளைப் பெருக்கி இந்த உணர்வின் ஆற்றலை அதிகமாகச் சேர்த்து உந்து விசையாகச் செல்லும் இராக்கெட்டின் முகப்பில் அதை வைக்கின்றார்கள்.
பிரபஞ்சத்தில் கோள்கள் உமிழ்த்தும் உணர்வுகளைச் சூரியன் கவர்ந்து சென்றாலும்
1.அதில் வரும் நுண்ணிய அதிர்வின் வலு கொண்டு தன் இனத்துடன் அது மோதி
2.அந்தக் கோள் எங்கே இருக்கிறதோ அங்கே இந்த இராக்கெட்டை அழைத்துச் செல்கின்றது.
இதைப் போன்றுதான் இந்த மனிதனின் வாழ்க்கையில் துருவ நட்சத்திரத்தையும் சப்தரிஷி மண்டலத்தையும் நாம் எண்ணி எடுக்கும் பொழுது அது நமக்குள் முதலிலே பதிவாகிறது.
பதிந்தது வளர்ச்சி அடைந்து அதை வலுவாக்கிக் கொண்ட பின் மனித உடலை விட்டுச் செல்லும் போது
1.எந்தத் துருவ நட்சத்திரத்தையும் சப்தரிஷி மண்டலத்தையும் எண்ணி எடுத்தானோ
2.அந்த நட்சத்திரத்திலிருந்து வரும் நிலைகள் புவியின் ஈர்ப்பைக் கடந்து அங்கே அழைத்துச் செல்கிறது.
3.அங்கே உடல் பெரும் உணர்வினைக் கரைத்து விடுகின்றது.
4.உயிரான்மா ஒளியாக மாறுகிறது.
இதை ஒரு பழக்கமாக வைத்துக் குடும்பத் தியானங்கள் மூலம் உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களை துருவ நட்சத்திரத்தின் சக்தி வெளிப்படும் காலங்களில் உந்திச் செலுத்தினால் (இராக்கெட் போன்று) அதன் ஈர்ப்பு வட்டத்தில் இருக்கும் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்யும்.
உடல் பெறும் உணர்வைக் கரைத்துப் பிறவியில்லா நிலையை அடையச் செய்யும். இது மனிதன் செயல்படுத்த வேண்டிய நிலைகள்.

மனிதனின் ஞானம் விஞ்ஞானத்திற்கு அடிமை ஆகிவிட்டது – ஈஸ்வரபட்டர்
ஆத்திச்சூடியில் ஔவையாரின் அரிச்சுவடியில் “இளமையில் கல்” என்பதன் பொருள் யாது…?
வளரக்கூடிய எண்ண உணர்வில் எதனை அறிவின் வளர்ச்சிக்குப் போதனையாக எதை வளர்க்கின்றோமோ அவ்வினையின் செயலே விதியாகும்.
நற்கதியைப் போதிக்கும் சுருக்கத்தை முன்னோர்கள் ஆறில் வளையாதது அறுபதில் வளையுமா…? என்று பல உண்மைதனை நமக்குப் போதித்தனர்.
காலையிலிருந்து இரவு வரை உணர்வின் எண்ணத்தின் வேகத்தை மனிதனின் செயல் அவரவர்களின் நிலைக்கொப்ப தொழிலாளர்களும் வியாபாரிகளும் மருத்துவம் விஞ்ஞானம் பலதரப்பட்ட செயல் முறை ஒவ்வொன்றிலுமே ஒன்றில் பழக்கப்பட்ட உணர்வின் எண்ண ஓட்ட செயல் முறையின் செயல் வளர்ச்சியே வலுவாக்கும் தன்மையாக உள்ளது.
அந்தந்தத் தொழிலின் வினைகளின் செயல் விதி என்ற தொடரில்தான் வாழ்க்கை அமைப்பின் ஆத்மாவாகி அவ்வாத்மாவின் மணமே செயலாகும் கதியில் மனித நிலை செயல் கொள்கின்றது.
இச்செயலின் நிலை யாவையுமே மனிதன் இன்று வரை
1.தன் விதியின் செயலைத் தெய்வத்தின் செயலாக
2.தனக்குத் தெய்வம் விதித்த விதி என்று தான் வாழுகின்றானே அன்றி
3.தான் எடுக்கும் எண்ணத்தின் வினைதான் விதியாக அமைகிறது என்றும்
4.எடுத்துக் கொண்டதற்கொப்ப அந்த விதியின் கதியே
5.நற்கதியாகவும் துர்கதியாகவும் வாழும் நிலை அமைகிறது என்பதனை உணரல் வேண்டும்.
இளமைக்கால அறிவின் வளர்ச்சியில் எண்ணத்தின் வினையை எவ்வினையின் செயலுக்குப் பக்குவப்படுத்தி… நம் குழந்தைகளை எப்படி வளர்க்கின்றோமோ அந்த விதியின் கதியின் தொடரில் தான் உணர்வெடுக்கும் எண்ணப்படி செயலாக்கும் முறையையும் வலுவாக்குகின்றோம்.
ஒவ்வொரு சிசுவின் ஆரம்பக்கால ஆத்மத் தொடர் முந்தைய ஜென்மத்தில் அவ்வுயிராத்மா எத்தொடரின் வலுக்கொண்ட ஆத்ம உயிரில் இருந்திருந்தாலும்
1.தாய் கர்ப்பத்தில் ஜீவிதம் கொள்ளும் காலத்தில்
2.உடல் கூறின் அமைப்பு பெறும் வளர்ச்சி நிலையில்
3.தாய் உணர்வின் எண்ண கதியின் ஜீவ ஓட்டத் தொடரில் ஜீவகாந்த சரீர ஒலி எடுக்கும் பொழுது
4.முந்தைய ஜென்ம நிலை யாவும் மறக்கும் நிலை ஆகின்றது.
தாய் எடுக்கும் உணர்வின் ஒலித்தொடர்பின் பிறப்பால்… பிறப்பின் செயலுக்கு எண்ணத்தின் உணர்வின் ஒலியின் அறிவை வளர்க்கும் பக்குவத்தால்… இஜ்ஜென்மத்தின் கதி மாறுகின்றது.
1.தெய்வத்தின் தொடர்பால் தொடர்பட்ட விதியல்ல மனிதனின் நிலை
2.தன் உணர்வின் எண்ணத்தால் ஏற்படுத்திக் கொண்ட செயலின் கதியின் ஓட்டம் தான்
3.இது நாள் வரை நாம் வாழும் வாழ்க்கை நிலை.
இவ்விதியை மதி கொண்ட நற்கதியில் சப்தரிஷிகளின் எண்ணமுடன் கலக்கும் நிலையாக நம் உணர்வின் எண்ண ஜீவகாந்த ஒளி கொண்டு உணர்ந்து பெறும் தொடர்பால் பல உண்மைகளை அறியலாம்… உணரலாம்.
அத்தகைய ஒளி கொண்ட உயர் சக்திகளின் செயலுடன் நம் செயலின் எண்ண ஓட்டம் அமைந்தால் விதியின் கதியே நற்கதியாய் நல் ஒளி பெறும் தன்மையாக அமையும்.
இதைப் பெறவல்ல நிலை… எண்ணத்தின் உணர்வு கொண்ட மனிதச் செயலுக்குத்தான் உண்டு.
அதே போல் மண்டலக் கோள்களையும் தாவரங்களையும் ஜீவராசிகளையும் எதனையுமே…
1.தன் உணர்வின் எண்ணத்தில் எடுக்கும் ஒலி அலையின் முலாமின் தொடர்
2.இவ்வாத்மாவில் பதிவாக்கிக் கொள்ளும் செயல் மனிதனுக்கு மட்டும்தான் உண்டு.
ஆனால் மனிதச் செயலின் வீரிய உண்மை விஞ்ஞானத்திற்கு இன்று அடிமை ஆகிவிட்டது.
1.மெய் ஞானத்தின் வீரியத்தின் தன்மையோ…
2.அதைச் செயலாக்கும் மாமகரிஷிகளின் வளர்ச்சியால்
3.நாம் ஒவ்வொருவரும் செழுமை அடையலாம்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
உலகெங்க்லும் எத்தனையோ தீமையான உணர்வுகள் பரவிக் கொண்டு வருகிறது. இந்தக் காற்று மண்டலமும் நச்சுத் தன்மையாக ஆகிக் கொண்டே வருகிறது. இதிலிருந்து நாம் மீள வேண்டுமல்லவா…?
எப்படி மீட்பது..?
ஆயிரம் தான் யாம் சொன்னாலும் கேட்கும் போது…, சாமி (ஞானகுரு) நன்றாகச் சொல்கிறார் என்கிறார்கள். நன்றாக இருந்தது என்று தான் சொல்கிறார்கள்.
அடுத்தாற் போல் வாழ்க்கையில் சந்திக்கும் போது யாராவது வெறுப்பாகப் பேசினால் போதும்.
1.பார்… சாமி நல்லதைச் சொல்கிறார்… ஆனால் இவனைப் பார்..!
2.நான் ஒன்றுமே செய்யவில்லை…! என்னை எப்படித் திட்டுகிறான்…! என்று
3.நல்லதை விட்டு விட்டு அதைப் பிடித்துக் கொள்வார்கள்.
கடையில் கடனுக்காகச் சரக்கைக் கேட்பார். அவர் கொடுக்கவில்லை என்றால் உடனே அவர் அந்தச் சரக்கெல்லாம் “மோசம்…” என்பார்…!
“கடன் இல்லை…” என்று சொன்னதற்காக இப்படி எல்லாம் நடக்கிறது.
இதைப் போன்று எத்தனையோ நடக்கின்றது. பிறர் செய்யும் தீமையை நுகரும் போது தீமையான நினைவுகளே நமக்குள் வருகிறது.
1.எந்தச் சாமியைப் பார்த்து… நாம் என்ன செய்வது…?
2.என்ன தியானம் பண்ணி… என்ன செய்வது…?
3.எந்தக் கடவுளைப் பார்த்து… என்ன பண்ணுவது…? என்று சொல்ல ஆரம்பித்து விடுகின்றார்கள்.
அதனால் தான் கோவிலில் (மனித உடலைப் போல்) சிலைகளை வைத்து அந்தத் தெய்வத்திற்கு…
1.பாலாபிஷேகம் செய்கிறார்கள்
2.தேனாபிஷேகம் செய்கிறார்கள்
3.சந்தன அபிஷேகம் செய்கிறார்கள்
4.நன்னீர் விட்டுச் சுத்தப்படுத்துகிறார்கள்
5.பன்னீரை விட்டுச் சுத்தப்படுத்துகிறார்கள்
எதற்காக அந்தச் சிலைக்கு இதையெல்லாம் செய்கிறார்கள்…?
பாலாபிஷேகம் செய்கிறர்கள். நாம் அதை வேடிக்கை பார்க்கிறோம் அவ்வளவுதான். ஏன்… ஏதற்கு…! என்று எண்ணுவதில்லை.
பாலபிஷேகம் தேனாபிஷேகம் செய்து நல்ல ஒழுக்கத்தை நமக்குள் சுவாசிக்கச் செய்வதற்காக அவ்வாறு வைத்துள்ளார்கள் ஞானிகள். கோவிலுக்குச் சென்றால் இவ்வாறு நாம் நினைக்கிறோமா…?
நம்மைப் பண்படுத்துவதற்குச் சிலையை வைத்துள்ளார்கள். இது “துவைதம்…” அங்கு ஊற்றும் பாலைப் பார்க்கும் போது அதிலிருந்து வரும் மணம் “அத்வைதம்…”
நாம் நுகர்ந்தறியப் போகும்போது உயிரிலே பட்டபின் அந்த உணர்ச்சிகளை எண்ணி ஏங்கும்போது அது வருகின்றது. அந்த உணர்ச்சியின் தன்மை வரும் போது விசிஷ்டாத்வைதம்.
அந்த உணர்ச்சிகள் நம்மை இயக்குகிறது. அந்த உணர்வின் தன்மை உடலாகும் போது
1.தீமைகளை நீக்கி நல்ல மணமுள்ள அணுக்களை
2.நீ உன் உடலில் உருவாக்கக் கற்றுக் கொள் என்று தெளிவாகக் காட்டியுள்ளார்கள்.
ஏனென்றால் அது கல் சிலை தான். அதிலே ஊற்றிய உணர்வின் தன்மையை மனிதனான நாம் நுகரப்படும் போது
1.தீமைகளை நீக்கும் உணர்வுகளை நமக்குள் எப்படி வளர்க்க வேண்டும்…? என்று
3.அதைக் கண்டுணர்ந்த ஞானிகள் இதைச் செய்திருக்கிறார்கள்.


எம்முடைய (ஞானகுரு) நோக்கம் என்ன…?
எம்முடைய (ஞானகுரு) உபதேசத்தைப் புதிதாகக் கேட்பவர்கள் சிலருக்கு வித்தியாசமாக இருக்கும்.
ஆனால் முன்ன்னாடி உபதேசத்தைக் கேட்டவர்களுக்கு அல்லது பல முறை உபதேசத்தைக் கேட்டவர்களுக்கு
1.அந்த உபதேசத்தின் வாயிலாக உடலிலே உருவான அணுக்களுக்கு
2.இப்பொழுது கொடுக்கும் உபதேச உணர்வுகள் மூலம் அருள் மகரிஷிகளின் உணர்வுகள் உணவாகக் கிடைக்கும்.
பல முறைகளில் பல கோணங்களில் அந்த உணர்வின் சத்தை உங்கள் உடலில் விளைந்த அணுக்களுக்கு ஆகாரமாகக் கொடுப்பதற்குத் தான் இந்த உபதேசங்களைத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.
ஆனால் புதிதாகக் கேட்பவர்களுக்கு அருள் ஞான வித்தாக உருவாக்கப்படுகின்றது. வித்தாக ஊன்றிய பின்
1.இதை நீங்கள் மீண்டும் தொடர்ந்து எண்ணத்தில் கொண்டு வந்தால்
2.அது கருவாகி உருவாகி அந்த அருள் ஞானத்தைப் பெறும் தகுதியைப் பெறுகின்றீர்கள்.
சிலர் எண்ணலாம்… ஒன்றும் அர்த்தம் ஆகவில்லையே என்று. உங்களுக்கு அர்த்தமாகாது…!
1.ஆனால் பேசிய உணர்வு பின்னர் கருவாகும்… பின் அது உருவாகும்.
2.பின் அதனின் உணர்வுகள் உங்களுக்குள் தெளிவாகும்
அதனால் தான்
கருவாய்…
உருவாய்…
வருவாய்…
முருகா…
குருவாய்…! என்று
1.எதனை நாம் எண்ணுகின்றோமோ அந்த உணர்வின் தன்மை கருவாகி உருவாகி உங்களுக்குள் குருவாக வரும்.
2.ஆறாவது அறிவின் தன்மை கொண்டு நமக்குள் அது தெளிவாக உருவாக்கும் என்பது அது தான்.
நாடாக்களில் படமோ பாடலோ பதிவு செய்துவிட்டால் திருப்பி அதைப் போட்டுப் பார்க்கும் பொழுது மீண்டும் அந்தப் பாடலைக் கேட்க முடிகின்றது.
1..இதைப் போல் தான் உபதேசித்த உணர்வுகள் உங்களுக்குள் பதிவாகிவிடும்
2.உடலில் அணுவாகவும் உருவாகிவிடும்.
அந்த அணுக்களுக்குச் சிறிது காலம் உணவைக் கொடுத்தால் அது மீண்டும் வளர்ச்சியாகித் “தன்னிச்சையாக…” அதனின் உணவை எடுத்துக் கொள்ள அந்த வளர்ச்சிகள் பெறும்.
முந்திய நிலையில் உபதேசங்களைக் கேட்டவர்களுக்கு… உடலில் விளைந்த அணுக்களுக்கு உயர்ந்த ஞான உணவாக இப்பொழுது கொடுக்கப்படுகிறது. அவர்கள் வளர்ச்சி பெற இது உதவும்.
அதே சமயத்தில் புதிதாகக் கேட்பவர்களுக்கு ஊழ்வினை என்ற வித்தாக உருவாக்கப்படுகிறது. ஊன்றிய வித்து உருவாகிக் கருவாக வேண்டுமென்றால்
1.உங்கள் நினைவினைக் கூட்டினால் அது உருவாகும்
2.அந்த உணர்வின் தன்மை அது உருவாகும் பொழுது குருவாகும்
3.நல்வழியையும் காட்டும்…. அதே உணர்வை உணவாக ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் வரும்.
4.இந்த உணர்வை ஏற்றுக் கொள்ளும் பருவம் வரும் பொழுது அருள் ஞானம் தன்னிச்சையாக வளரும்.
அதனால் தான் சாமி சொல்வது எனக்குப் புரியவில்லையே என்று எண்ண வேண்டாம் என்று திரும்பத் திரும்பச் சொல்வது.
குருநாதர் எனக்குள் எப்படி ஆழமாகப் பதிவு செய்து… அந்த உணர்வின் அணுக்களைப் பெருக்கச் செய்து… இந்தக் காற்று மண்டலத்தில் உள்ள அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நுகரச் செய்தாரோ… உங்களிடம் அதைப் பெறச் செய்து… உங்களை அறியாது வரும் தீமைகளிலிருந்து நீங்கள் விடுபடும் நிலைக்கே இது உருவாக்கப்படுகின்றது.
அந்த உணர்வின் ஆற்றலை நீங்கள் வலுப்பெற… உணவாகக் கிடைக்கச் செய்வதற்கே தியானப் பயிற்சியைக் கொடுக்கின்றோம்.
பொதுவாக உபதேசம் சொல்லும் போது
1.முதலிலே மெதுவாக சொல்ல முற்பட்டேன்
2.இரண்டாவது சிறிது வேகமாகச் சொன்னேன்
3.மூன்றாவது அதை காட்டிலும் வேகமாகச் சொல்லும் நிலை வந்தது.
4.(எம்முடைய உபதேச ஒலிகளைக் கேட்டவர்களுக்கு இது தெரியும்)
காரணம்… இந்த உணர்வின் ஈர்ப்புகள் உங்களுக்குள் பதிய வேண்டும் என்பதற்குத் தான்.
அந்த உணர்வின் ஆற்றல் ஆழமாகப் பதிந்தால்…
1.அப்போதுதான் சாமி என்ன சொன்னார்…? என்று ஏக்கமாக இருப்பீர்கள்.
2.அப்போது ஆழமாகப் பதிந்து விடுகின்றது.
3
பின் அதனுடைய நிலைகள் உருவாக இந்த உணர்வுகள் உங்களுக்கு உதவும். – இது புதிதாக வந்தவர்களுக்கு.
ஏற்கனவே கேட்டவர்களுக்கு அந்த அருள் உணர்வின் சக்தி உணவாகக் கிடைத்துக் கொண்டே இருக்கும்.
1.அருள் ஞானம் பெருகிக் கொண்டே இருக்கும்
2.மகரிஷிகளின் ஆற்றல்களைப் பெறும் வலிமையும் பெருகிக் கொண்டே வரும்.

உணர்வுகளை ஒளியாக மாற்றும் முறை – ஈஸ்வரபட்டர்
கடிகாரத்தை (MECHANICAL WATCH) நாம் சாவி கொடுக்கும் பொழுது எந்த அளவிற்குச் சுற்றுகின்றோமோ… அதற்கொத்த அமைப்பு முறை கொண்டு அதனுடைய ஓட்ட முறை செயல்பாடு உள்ளது. செயல்படுத்தும் பொருள் நிலை செயலாக்கப்பட்ட நிலை கடிகாரத்தின் நிலை.
அதைப் போன்றே மனித வாழ்க்கையில் நாம் எடுக்கும் எண்ண உணர்வின் செயல்…
1.காலையிலிருந்து இரவு வரை நம்முடைய செயல்பாடு அனைத்தும் நம் புலன் அடங்கி உறங்கும் வரை
2.நம் எண்ணத்தில் எடுத்த உணர்வலைகள் யாவும் வினையாகச் சரீர உணர்வில் செயல்படுகின்றது
3.செயலடங்கிப் புலன் அமைதியுற்று உறங்கும் பொழுது நம் ஊனுடன் பதிவாகி விடுகின்றது.
இதே தொடரின் அலையை ஒன்றின் தொடரில் ஆவேச உணர்வில் எந்த அலையின் வீரியத்தைச் செலுத்துகின்றோமோ… பயத்துடனோ கோபத்துடனோ அச்சத்துடனோ குரோதம் வஞ்சனை என்ற எவ்வுணர்வின் வேகத்தையாவது அதிகமாக எடுத்தால்
1.அதே உணர்வின் அலையை திரும்பத் திரும்ப எண்ணி எடுக்கும் வேகத்தால் அதுவே வினையாகி
2.வினையின் பயன் எலும்புக்குள் இருக்கும் ஊனில் பதிவாகி
3.அதன் தொடர் அலையைச் சில காலங்கள் எண்ணி எடுக்கும் தொடரில்
4.நாற்பத்தி எட்டு நாட்களுக்குள் “விதியாகி” விடுகின்றது.
அவ்வாறு உருவாகும் விதியின் தொடரை எப்படி மாற்றி அமைக்க வேண்டும் என்று தெரியாத செயலுடன் தான் நாம் வாழுகின்றோம்.
ஏனென்றால் வாழ்நாளில் ஒவ்வொரு நொடிப் பொழுதும் உணர்வின் வேகம் பல ரூபத்தில் நமக்கு நடந்து கொண்டுதான் இருக்கும். அத்தொடரின் ஈர்ப்புகளை எல்லாம் வினையாக நமக்குள் பதிவு செய்து கொள்ளாமல் நம் உயிரின் வலுவின் ஆத்ம ஒளியைக் கூட்ட வேண்டும்.
உயிரான நெருப்பில் நாம் அதில் செலுத்தும் எண்ணத்தின் உணர்வின் வாசனையைத் தான் அது சமைக்கும். அதுவாகத் தான் நம்மை மாற்றும்.
நம் பூமியின் சுவைத் தன்மை எப்படி ஆறு குணங்களைக் கொண்டு ஆறு சுவைகளை வளர்த்துக் கொண்டதோ அதைப் போன்றுதான்
1.உணர்வில் சலிப்பை வளர்க்கும் பொழுது புளிப்பும்
2,உணர்வில் கோபத்தை வளர்க்கும் பொழுது காரமும்
3.உணர்வில் இனிமையை வளர்க்கும்பொழுது இனிப்பும்
4.உணர்வில் விரக்தியை வளர்க்கும் பொழுது துவர்ப்பும்
5.உணர்வில் வெறுப்பை வளர்க்கும் பொழுது கசப்பும்
5.இப்படியாக குணத்திற்கொப்பச் சுவையில் நம்முடைய உயிர் காந்த ஜீவ சரீரம் பதிவு கொண்டு விடுகின்றது.
இத்தகைய வினையின் செயல் விதியாகும் வளர்ச்சியை நாம் மேல் நோக்கி எடுக்கக்கூடிய உணர்வின் தியானத்தால் நற்குண ஒலி கொண்டு உயர் மின் காந்த அலையை அதிகாலையிலிருந்தே நாம் எடுக்கும் பக்குவ முறையினால்
1.அந்தந்த வினையின் செயலுக்கு அடிமையாகாமல்
2.நற்குண ஒலியின் செயல்பாட்டில்
3.எண்ணத்தின் வேகத்தை எதிர்கொள்ளும் எதுவாகிலும் (தீய நிலைகள்) சுட்டுப் பொசுக்கும் ஆயுதமாக
4.நம் உயிராத்மாவின் சமைப்பில் உயர் ஞானிகளின் மகரிஷிகளின் மணங்களை எடுத்துத் தியானிக்க வேண்டும்.
இதன் வழி செய்தால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் நமக்குள் விதைக்கும் வளர்ப்பாக உயிராத்மாவின் வீரிய ஒளித் தன்மையின் செயலை நாம் பெற முடியும்.
ஆகவே ஒளியான எண்ணத்தின் உணர்வை உயிராக்குங்கள்…!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
மனிதனின் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தில் ஆத்திரம் தாங்காமலோ பிறருடைய கடும் சொல்லை ஏற்க முடியாமலோ கடுமையான சூழலில் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விஷத்தைக் குடிக்கின்றனர்…. சிலர் தூக்குப் போட்டு இறக்கின்றனர்.
அப்பொழுது மனிதனின் எண்ணங்கள் மறைந்து (மறந்து) போய்விடுகின்றது… உடலை அழித்து விடுகின்றது.
விஷத்தைக் குடிப்பவர்கள் உயிரை விட்டுப் பிரிந்த உயிரான்மாக்கள் எங்கே செல்லும் தெரியுமா…?
எந்த விஷத்தைக் குடித்தார்களோ அதன் நிலை கொண்டு பாம்பாகவோ தேளாகவோ இதைப் போன்ற விஷம் கொண்ட சரீரமாகத்தான் அடுத்து பிறப்பார்கள்.
வேறு எங்கும் போகமாட்டார்கள்.
இந்த மனித உடலை விட்டுப் போன பின்
1.வேறு உடலுக்குள் போனாலும்
2.அவர்களையும் இதே போன்று விஷத்தைக் குடித்துச் சாக வைப்பார்கள்.
இதில் விளைந்த விஷம் அந்த உயிருடன் – அவனுடன் ஒன்றிக் கொண்டே தான் இருக்கும். வேறு எங்கும் போகாது. நாம் இந்த உடலில் இம்சைப்பட்டிருந்தால் அடுத்த உடலில் அதுவும் அதே இம்சையைத்தான் படும்.
1.விஷத்தைச் சாப்பிட்டுவிட்டு எத்தனை துடி துடித்தாரோ
2.அது உயிரிலே கலந்து கொண்டு
3.அதே துடிப்பு நிலையிலேயே இருந்து கொண்டிருக்கும்.
இந்தத் துடிப்பான உணர்வுகள் உடலுக்குள் போனவுடனே அது வேலை செய்யத் தொடங்கி விடுகின்றது.
சில பேர் தற்கொலை செய்து கொண்டு… “இந்த உலகத்தை விட்டே நான் போய் விடுகிறேன் என்பார்கள்..!
எங்கே போவது…?
அவனிடமிருந்து (உயிரிடமிருந்து) தப்பிக்கவே முடியாது.
1.தப்பு செய்தால் தப்பு தான்.
2.சரியாகச் செய்தால் சரி தான்.
3.மார்க் (மதிப்பெண்) போட்டுக் கொண்டே இருக்கும் நமது உயிர்.
சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் கீதையிலே வியாசகர் சொன்னது “நீ எதை எண்ணுகிறாயோ.. நீ அதுவாகின்றாய்…!
ஒருவரைக் கோபத்துடன் சண்டையிட்டு நான் உன்னைச் சுட்டுப் பொசுக்கி விடுவேன்… பார்…! என்று நினைக்கலாம்.
1.சுட்டுப் பொசுக்கும் எண்ணம் முதலில் என்னிடம் தான் வருகின்றது எனக்குள் வளர்கின்றது.
2.சுடப்பட்ட பின் அவன் துடித்த உணர்வு அதே எண்ணத்தை நாம் எண்ணிக் கொண்டிருந்தால் நேராக என்னிடம் வந்துடுவான்.
என் உடலுக்குள் வந்த பின்னாடி
1.நான் சுட்டுப் பொசுக்கிய உணர்வின் தன்மை என்ன செய்யும்…?
2.என்னைச் சுட்டு பொசுக்கிக் கொண்டேயிருக்கும்.
3.இந்த உயிருடன் ஒன்றி அந்த இம்சைப் படுத்திக்கொண்டே இருக்கச் செய்யும்.
உயிரிடம் இருந்து யாரும் தப்ப முடியாது.
உயிரோடு ஒன்றிய அந்த நிலைகள் நீ தவறு செய்தாய்… அதனால் வேதனைப்படு…! என்று இந்த உயிர் செய்யும். ஏனென்றால் அவன் கடவுள்.
ஆகவே… வாழ்க்கையில் கடுமையான இன்னல்கள் ஏற்படும் பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்…?
ஓ…ம் ஈஸ்வரா…” என்று புருவ மத்தியில் எண்ணத்தைச் செலுத்தி.
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உயிருடன் தொடர்பு கொள்ள வேண்டும்.
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று உடலுக்குள் நினைவைச் செலுத்த வேண்டும்
3.என்னை அறியாது வந்த தீமைகள் அனைத்தும் அகன்றிட அருள்வாய் ஈஸ்வரா என்று
4.அந்த மெய் உணர்வுகளை நம் உயிர் வழியாகச் சுவாசிக்க வேண்டும். அதை நம் உடலாக ஆக்க வேண்டும்
5.இதை நாம் சிருஷ்டித்தால் மெய் உணர்வைத்தான் உயிர் நமக்குள் கொடுக்கும்.
அடுத்து உடலைவிட்டு போய் விட்டால் உயிர் நம்மை எதுவாகப் படைக்கும்…? நம்மை அந்த மெய் ஞானியாகப் படைத்துவிடும். ஏனென்றால் முழு முதற் கடவுள் – நாம் சிருஷ்டிக்கும் உடல் பெற்றவர்கள்.
ஆனால் இந்த மனிதப் பிறவியில் இதை இழந்து விட்டால் அடுத்து மீண்டும் தேய் பிறை என்ற நிலைக்கே நம்மை உயிர் அழைத்துச் செல்லும்.
ஆகவே
1.விஜயதசமி – பத்தாவது நிலை பெறும் அந்தப் பாதையிலே
2.ஞானிகள் சென்ற பாதையிலேயே நாம் செல்வோம்.
3.நம்மை அறியாது வந்த எத்தகைய இருளையும் போக்குவோம்.
4.”கல்கி…” என்ற அழியா ஒளியின் சரீரம் பெறுவோம்.


நஞ்சு என்று தெரிந்தாலே… அதனால் வீரியம் பெறுபவன் தான் முதல் மனிதனான அகஸ்தியன்
அகஸ்தியனுக்குள் நஞ்சினை வென்றிடும் உணர்வுகள் இளம் பருவத்தில் விளைந்த பின்
1.ஒவ்வொன்றும் அறிந்திடும் நிலையாகவும்
2.மிகவும் வலுக் கொண்ட உணர்வாகவும் வருகின்றது.
எந்த மிருகத்தின் அருகில் இவன் சென்றாலும் இவனைக் கண்டு அது அஞ்சி ஒடுங்குகின்றது.
தாவர இனங்களில் இருக்கும் சத்துகளை இவன் உணவாக உட்கொண்ட நிலையில் அதனின் உணர்வின் தன்மை வரும் போது
1.அந்தத் தாவர இனங்கள் ஒடுங்குவதையும் காண்கின்றான்
2.அதன் இயக்கத்தையும் அவன் இளமைப் பருவத்திலேயே உணர்கின்றான்.
நாம் பார்க்கிறோம்… ஒரு குளவி கூட்டினைக் கட்டி அதற்குள் புழுவைக் கொண்டு வந்து அடைத்து வைக்கிறது. சிறிது நாள்களில் அந்தப் புழுவே குளவியாக மாறுகிறது.
மாறிய பின் அதுவும் தாய்க் குளவி எதைச் செய்ததோ அதே போல் ஒரு கூட்டினைக் கட்டிப் புழுவைக் கொண்டு வந்து அடைத்துத் தன் இனத்தைப் பெருக்கத் தொடங்குகின்றது.
ஆக… எப்படி குளவி சொல்லிக் கொடுக்காத நிலையில் புழு குளவியாக மாறிய பின் செயல்பட்டதோ அதே போல் அகஸ்தியனுக்குள் நஞ்சினை வென்றிடும் அந்த இயக்கங்கள் ஆன பின் “அவன் அறியாமலேயே…” சில செயல்களைச் செயல்படுத்துகின்றான்.
விஷத்தை ஒடுக்கும் தன்மை வரும் பொழுது
1.விஷத்தை நுகர்ந்தாலே மற்றவர்களுக்கு (நமக்கு) மயக்கம் வருகின்றது
2.ஆனால் விஷச் செடியின் அருகில் சென்றால் அகஸ்தியன் மீண்டும் வீரியம் அடைகின்றான்… வலுவடைகிறான்.
காரணம்…
1.விஷத்தின் தன்மை ஒடுக்கும் வல்லமை கொண்டதனால்
2.அவன் தெளிந்த மனமும் வலுவான உணர்வு கொண்டவனாகவும் மாறுகின்றான்.
ஐந்தாவது வயது வரப்படும் பொழுது புவியின் ஈர்ப்பின் தன்மைகளை அறிகின்றான். நமது பூமி தனக்குள் ஆகாரம் எப்படி எடுக்கிறது…? என்பதை உற்று நோக்கினான்.
வான இயலை இளம் பருவத்திலேயே கண்டுணர்கின்றான். இந்தப் பிரபஞ்சத்திலிருந்து பூமி துருவப் பகுதி வழியாக எப்படி விண்ணின் ஆற்றலைக் கவர்கிறது…? என்பதை உணர்கிறான்.
உணர்ந்தாலும் “விஷத்தின் தன்மையே…” விண்ணிலிருந்து வருகின்றது… தாவரங்களும் இந்த விஷத்தின் உணர்வின் செயலாகவே வளர்கின்றது…! என்றும் அறிகிறான்.
இருப்பினும்…
1.தாவர இனங்களுக்குச் செல்லும் சக்திகளை நேரடியாக அகஸ்தியன் உட்கொள்கின்றான்
2.தன் உணர்வினை ஒளியின் அணுக்களாக மாற்றும் திறனும் பெறுகின்றான்.
துருவத்தை உற்று நோக்கும் பொழுது பிரபஞ்சத்தின் இயக்கத்தையும் அண்டத்தின் இயக்கத்தையும் அறிகின்றான். அவன் ஆதியிலே கூறியது தான்… இருண்ட நிலையிலிருந்து அகண்ட அண்டங்கள் எப்படி உருவானத் என்ற உண்மைகள் அனைத்துமே…!
விஷத்தின் ஆற்றல் உருவாகும்போது விஷத்தின் அளவுகோலையும் அந்த விஷம் எப்படி உருவாகிறது…? என்ற நிலையையும் முதல் மனிதன் உடலில் இவன் உணர்கின்றான்.
இதை வைத்துத்தான் அகண்ட அண்டம் எப்படி இருந்தது…? அதனின் நிலைகள் கொண்டு எப்படி வளர்ந்தது…? என்று துருவத்தை உற்று நோக்கும் போது இவனுக்குள் கண்டறிகிறான்.
விளைந்த உணர்வுகள் இவனின்று வெளிப்படுவதை சூரிய காந்தப் புலனறிவு கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது. அதன் வழி சென்ற… பின் வந்த மக்கள் இதை அறிவாக அறிகின்றனர். அறிவின் வளர்ச்சியாகத் தெளிந்த நிலை பெறுகின்றனர்.
இருளை வெல்லும் திறன் பெற்ற முதல் மனிதன் அகஸ்தியனே…! அவனுடைய ஆற்றலைத் தான் குருநாதர் காட்டிய வழியில் இங்கே உணர்த்தி அதனைப் பெறும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றோம் (ஞானகுரு).

விண்ணுலக ஆற்றலைப் பெற்றால் தான் வளர்ச்சி – ஈஸ்வரபட்டர்
மனிதனின் செயலில் பல விநோத உண்மைகளை வளர்த்துக் கொண்டுள்ளான். “மனித விஞ்ஞானம்” பல உண்மை நிலைகளைச் செயல்படுத்தும் நிலையில்… இன்று நாம் பல நிலைகளைக் காண்கின்றோம்.
தனக்கு மேல் வீரியத் தன்மை கொண்ட பல உண்மைகளை அதற்குகந்த பாதுகாப்பு செயல் திறமையுடன்… இன்றைய மனிதனின் விஞ்ஞானம் எப்படி முன்னேற்றம் கண்டுள்ளது…?
வீரிய சக்தி கொண்ட மின்சாரத்தைத் தன் செயலுக்கு மனிதன் உபயோகப்படுத்துகின்றான். அதைச் செயல்படுத்துவதற்கு அதற்குகந்த பாதுகாப்பு நிலையில்
1.எது எதில் அந்த மின்சாரம் பாயும் தன்மை கொண்டுள்ளது என்று கண்டறிந்து…
2.அதனுடைய வீரியத் தன்மையைத் தன்னுடைய செயல் தன்மைக்கு
3.அதையே பக்குவப்படுத்திப் பலன் காணுகின்றான்.
இது எல்லாமே இவ்வுடலின் வாழ்நாளைக் கருதி வளர்த்துக் கொண்ட வழிமுறைகள் தாம்.
மனித உணர்வின்… எண்ண வீரியத்தின் ஒலியை இன்றைய மனிதன் உணர்ந்தானானால்… தன் உணர்வின் ஒலி கொண்டு ஒளிரும் நிலையைத் தன் வலுவில் வளர்க்கும் வளர்ச்சியை வளர்த்துக் கொள்ள முடியும்.
நம் பூமியின் ஓட்டத்தில் பல கோடி மைல்களுக்கு அப்பாலுள்ள சூரியனின் ஒளியை நம் பூமி “தன்னுடைய சுழற்சியின் ஜீவ ஓட்ட ஈர்ப்பின் ஒளியால்” ஒளி பெறுகின்றது.
அதைப் போன்றே தன் ஓட்ட கதியில் நட்சத்திர ஒளிகளையும் சந்திரனின் ஒளி அலையையும் தன் ஓட்டத்தில் தொடர்பு கொள்ளும் மற்றக் கோள்களின் சந்திப்பில் அந்தந்தக் காலங்களில் அவ்வொளியின் ஒலியை நம் பூமி சந்தித்துக் கொண்டே ஓடுகின்றதல்லவா…?
நாம் இன்று காணும் நட்சத்திரங்களின் ஒளியையும் சூரியனின் ஒளியையும் சந்திரனின் ஒளியையும் பூமி தன் ஜீவகாந்த ஒளியின் சுழற்சியில் ஒளி பெற்று தன்னுடைய சுழற்சியின் ஈர்ப்பில் சந்திக்கும் அவைகளின் தொடர்பலையின் அமிலத்தின் ஒளித் தன்மையில் ஒன்றின் தொடர் கொண்டு ஒன்று பெற்று வளர்கிறது.
மனிதப் பிறப்பிற்கு ஜாதகத்தில் நட்சத்திர ராசிகளை அந்தந்த நேரத்திற்கொப்ப பிறக்கும் குழந்தைகளுக்கு எப்படிக் கணிக்கின்றார்களோ அதைப் போன்றுதான் இன்று நம் பூமியில் பல நிலைகள் (அது சந்திக்கும் நிலையில்) வளர்ந்துள்ள வளர்ச்சியின் தன்மையும்.
ஆனால் இதை எல்லாமே பூமியின் சுழற்சி ஓட்ட கதியில் சந்திப்பின் தொடரில் வளர்ந்த “இயற்கையின் வளர்ச்சி” என்கின்றோம். ஆனாலும் அதே இயற்கையை… மனிதன் தன் செயலுக்குப் பல நிலைகளை வகுத்துக் கொள்கின்றான்.
ஆகவே பூமியில் ஜெனித்த மனிதன் இயற்கையைத் தன் செயலின் தொடரில் செயலாக்கும் “விந்தைதனை” தன் உணர்வின் எண்ணத்தால் “மெய்ஞானத் தொடர் கொண்டு வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்…”
ஏனென்றால் இப்பூமியின் ஜெனிப்புத் தொடர் அலை ஈர்ப்பு… இப்பூமியில் வாழும் காலத்திற்குத்தான் பயன்படும். உடலை விட்டுப் பிரிந்தால் மீண்டும் தேய் பிறை தான்.
உணர்வின் எண்ணத்தின் ஓட்டத்தை மற்றக் கோள்களின் தொடர்புடன் எண்ணி எடுக்கும் ஒலி அலையால்… இஜ்ஜீவ காந்த சரீர ஓட்டத்தில் எண்ணி எடுக்கும் அலையின் தொடர் அமில குணத்தை…
1.இச்சரீர உணர்வின் தொடரில் வளரும் உயிர் காந்த ஒளி அலையின் தொடர்பால்
2.இச்சரீரத்தை இயக்கும் ஆத்ம ஒளி ஒளிரும் தன்மையை
3.இவ்வெண்ணத்தில் எடுக்கும் தொடர்புபடுத்தி வலுப்படுத்திக் கொள்ளலாம்.
நம் பூமியின் ஓட்டத்தினால்தான் சூரியனின் ஒளியையும் மற்றக் கோள்களின் ஒளியையும் பூமி பெறுகின்றது.
அதைப் போன்று ஜீவகாந்த சரீர உயிர் எண்ண ஓட்டத்தால்… நாம் எண்ணி எடுக்கும் எக்கோள்களின் ஒளி அமிலத்தையும்… இச்சரீர உணர்வில் பதிவாக்கும் வலுவினால்…
1.இது வரை ஆத்மாவின் ஒளி வட்டம் வளர்ந்த நிலையை வலுவாக்கும் வழிமுறையில்
2.தியானம் கொள்ளும் வலுவால் இச்சரீரத்தின் ஆத்ம உயிர் வலுவாகும் ஒளியை நாம் காணலாம்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
வியாசக பகவான் கொடுத்த “வராக அவதாரத்தின் முக்கியத்துவத்தை…” அறிந்து கொள்ள வேண்டும். வராகன் என்றால் “மிகவும் வலிமையானது…” என்று பொருள்
பன்றி தன் உடலின் வலிமை கொண்டு சாக்கடைக்குள் இருக்கும் நாற்றத்தைப் பிளக்கிறது. சாக்கடைக்குள் இருக்கும் நல்ல மணத்தைப் பிரித்து (அதில் மறைந்துள்ள உணவு பொருளை) எடுத்துச் சந்தோஷமாகச் சாப்பிடுகிறது.
சாக்கடையில் ஒரு பருப்பைப் போட்டு விட்டு நீங்கள் முகர்ந்து பாருங்கள். என்ன வாசனை வருகிறது…? அந்த நல்ல பருப்பின் வாசனை வருகிறதா…? அல்லது மேலே இருக்கும் வாசனை வருகிறதா…?
“நல்ல வாசனையைப் பிரிக்க முடியுமோ…? பிரிக்க முடியாது…” அதைக் காட்டுகிறார் குருநாதர்.
பல உடல்களிலே தீமைகளை நீக்கும் உணர்வுகளைப் பெற்று பன்றியான உடல் அமைப்பைப் பெற்றது.
குருநாதர் சொல்கிறார்… நீ (ஞானகுரு) முதலில் பன்றியாகவும் இருந்தாய்.
இதைக் காட்டுவதற்காக சாக்கடைப் பக்கத்தில் என்னைக் கூட்டிக் கொண்டு போனார். சாக்கடையிலிருந்த குப்பையெல்லாம் அள்ளிப் போட்டு வைத்துள்ளார்கள்.
FLUSH OUT – கழிப்பறைகள் இல்லாத காலம் அது. கழிப்பிடமாக மக்கள் பயன்படுத்தும் சாக்கடை அது. சாக்கடையில் எல்லாம் வந்து கொண்டிருக்கிறது.
பழனியில் என் வீட்டிற்கு அருகில் தான் இது நடக்கிறது.
நான் தெலுங்கு பேசுவதால் “வாடா தெலுங்கு இராஜ்ஜியம்…!” என்று குருநாதர் என்னைக் கூப்பிடுகிறார்.
திருப்பதி வெங்கடாஜலபதி மிகப் பெரிய செல்வந்தர். நீ வெங்கடாஜலபதியை தோஸ்து (நண்பனாக்கி) பண்ணிக் கொள்…! என்பார்.
இல்லை நான் முருகனைத் தான் வணங்குகிறேன்…! என்பேன்.
டேய்… நீ தெலுங்கு இராஜ்ஜியம்டா, அங்கே போடா..! என்றெல்லாம் சொல்வார்.
சாக்கடைப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு “காப்பி வாங்கிக் கொண்டு வாடா…” என்றார். எனக்குக் காப்பி.. அவருக்கு டீ.. அவர் வாங்கி வரச் சொன்னார். வாங்கி வந்தேன்.
நான் வாங்கி வந்த டீயில் சாக்கடையில் இருந்து அள்ளிப் போட்டிருந்த குப்பைகள் இரண்டைப் போட்டார். என் காப்பியிலும் இரண்டைப் போட்டு சர்…ர்ர். என்று ஆற்றிவிட்டுச் “சாப்பிடுடா…!” என்றார்.
சாக்கடையை அள்ளிப் போட்டுவிட்டுக் காப்பியைச் சாப்பிடு என்றால்… “எப்படி இருக்கும்…?”
நைனாவிற்கு ரொம்பப் (எனக்கு) பைத்தியம் பிடித்து விட்டது…! என்று எல்லோரும் வேடிக்கை பார்க்கிறார்கள்.
இங்கேயும் அங்கேயும் நான் பார்க்கிறேன். சாமி…! இதைப் பார்த்தாலே எனக்கு வாந்தி வருகிறது…! என்கிறேன்.
“நான் சொல்வதைச் செய்கிறேன்… என்று சொன்னாய் அல்லவா…! நீ செய்டா…” என்கிறார். “நான் சாப்பிடுகிறேன் பார்…” என்று சொல்லி அவர் சாப்பிடுகிறார்.
அவர் சாப்பிடுவதைப் பார்த்தாலே “எனக்கு” வாந்தி வருகிறது
அப்பொழுது கடவுளின் அவதாரத்தில்… “வராக அவதாரத்தைப்” பற்றி அந்த இடத்தில் காட்டுகிறார்.
என்னால் காபி சாப்பிட முடியவில்லை. காபியைக் கொட்டி விட்டு வட்டைக் கப்பைக் கொண்டு போய் டீ கடையில் திரும்பக் கொடுக்கிறேன்.
என் வீட்டுப் பக்கத்தில் டீக்கடை வைத்திருக்கும் “பாய்” அவர் அந்த வட்டக்கப்பை வாங்க மறுக்கிறார்.
“நைனா…! இந்த வட்டைக்கப்பை உங்கள் வீட்டில் வைத்துச் சாப்பிடுங்கள்… சாக்கடையில் இருப்பதைப் போட்டதால் இதில் யாரும் காப்பி சாப்பிட மாட்டார்கள். அதனால் இதை உங்கள் வீட்டிற்கே கொண்டு போங்கள் என்கிறார்.
வேறு வழியில்லாமல் அதற்கான காசைக் கொடுத்தேன்.
வட்டகப்பை கடை வாசல் முன்னாடி கூட வைக்க வேண்டாம் என்கிறார்.
பக்கத்தில் இப்ராஹிம் சைக்கிள் கடை வைத்துள்ளார். அங்கே வைத்தேன். “கொஞ்ச நேரம் கழித்து எடுத்துக் கொள்கிறேன்…” என்று சொன்னால் கூட அவர் ஒத்துக் கொள்ள மாட்டேன் என்கிறார்.
உங்கள் வீட்டுக்கு எடுத்துக் கொண்டு போங்கள். பன்றி முகர்ந்து பார்த்துள்ளது. யாராவது பார்த்தால் நானும் அதைச் சாப்பிடுகிறேன் என்று நினைத்துக் கொள்வார்கள் என்கிறார்.
பன்றி முகர்ந்து பார்த்துள்ளது என்று அங்கு வைக்கக்கூட விட மாட்டேன் என்கிறார். நான் என் வீட்டிற்கே கொண்டு போய் வாசற்படி அருகில் வைத்துவிட்டேன்.
முறுக்கு நிலக் கடலை பொட்டுக் கடலை… வாங்கிக் கொண்டு வாடா என்றார் குருநாதர். ஒரு குச்சி எடுத்து வாடா… என்றார். சாக்கடைக்குள் மூன்று கோடுகளைப் போடச் சொன்னார்.
போட்டேன்.
நிலக் கடலைப் பருப்பை முதலிலும் அடுத்து பொட்டுக் கடலையையும் அதற்குப் பிறகு முறுக்கையும் போடச் சொன்னார்.
பன்றி அந்தப் பக்கம் மேய்ந்து கொண்டு வருகிறது. கடலைப் பருப்பின் வாசனை… எண்ணையில் பொறித்தெடுத்த முறுக்கின் வாசனை.. வருகிறது.
1.நேராக கடலைப் பருப்பை முகர்ந்து எடுக்கிறது.
2.அடுத்து முறுக்கை எடுத்துச் சாப்பிடுகிறது.
3.மூன்றாவதாக பொட்டுக் கடலையைச் சாப்பிடுகிறது.
“பார்த்தாயாடா., பன்றி எப்படி எடுக்கிறது என்று…?” அந்த இடத்தில் காட்டுகிறார். நீயும் இதற்கு முன்னால் பன்றியாக இருந்தவன் தான்டா. இந்த உயிர் தான் பன்றியாகவும் ஆக்கியது என்கிறார்.
தீமைகளை நீக்கும் உணர்வுகளைப் பன்றி உடலிலிருந்து பெற்ற பிறகு மனிதனாக்கிக் கொண்டு வந்தது இதே உயிர் தான் என்று காட்டுகிறார். இங்கே விளக்கம் கொடுக்கிறார் குருநாதர்.
பன்றி எவ்வாறு பல உடல்களிலிருந்து தீமையை நீக்கி… நீக்கி… வந்தது. பன்று உடலில் வலுவானதால் அதற்குத்தகுந்த உறுப்பாகி நாற்றத்தைப் பிளந்து அதில் உள்ள நல்ல மணத்தைப் பிரித்து எடுத்துச் சாப்பிடுகிறது என்று நிதர்சனமாய்க் காட்டுகிறார்.
எனக்கு ஒரு பக்கம் பயம் இருந்தது. முறுக்கையும் கடலைப் பருப்பையும் இதில் துவட்டி எடுத்து சாப்பிடச் சொல்லப் போகிறார் என்று.
1.பல உடல்களில் தீமையை நீக்கி
2.அதற்குத் தக்க உடல்கள் மாறி மாறி
3.இதே உயிர் தான் பன்றியாக உருவாக்கியது.
தீமைகளையெல்லாம் நீக்கும் உடல் உறுப்புகளைப் பன்றி பெற்றதனால் சாக்கடையில் வரக் கூடிய நாற்றத்தை எண்ணாது அதிலுள்ள நல்லதை நுகர்கிறது என்று குருநாதர் விளக்கம் சென்ன பிறகு மனது தெளிவாகி விட்டது.
நாற்றத்தைப் பிளந்து நல்லதை எடுக்கும் வலு வளர்ச்சியான பின் பன்றி மனிதனாகப் பிறக்கின்றது.
மனிதனான பின் நஞ்சைப் பிரித்து விட்டு நல்ல உடலாக உன்னை மாற்றுகிறது. எது ஆனதோ எல்லாமே சந்தர்ப்பம் தான்.
சாக்கடை என்று எண்ணுகிறாய்.
1.நீ சுவாசிக்கும் நாற்றம் வலுவாகிறது
2.இதைச் சுவாசித்து உயிரில் பட்டபின் நாற்றமாகிறது
3.உன்னால் நல்லதைப் பிரிக்க முடியவில்லை என்கிறார்.
4.எண்ணியவுடனே நாற்றம் வந்தது.
5.எண்ணாமல் இருந்தால் நாற்றம் வந்ததா…? என்று கேட்டார்.
வீட்டுக்கு முன்னாடி தான் சாக்கடை இருக்கிறது. ஆனால் நாற்றம் தெரிகிறதா…? அந்த வீட்டுக்காரருக்கு நாற்றம் தெரிவதில்லை.
ஆனால் நாம் போனால் உடனே “அச்சச்சோ….” என்று மூக்கைப் பிடிக்கிறோம்.
ஒரு சமயம் திடீரென்று குருநாதர் வருகிறார். இங்கே வாடா… என்று என்னைக் கூப்பிட்டுக் கொண்டு போகிறார். கொஞ்ச நேரம் பேசிக் கொண்டு இருக்கிறோம்.
சிறிது நேரத்திற்குப் பிறகு எனக்கு நாற்றம் வருகிறது. என்ன…? என்று பார்க்கிறேன். பார்த்த பின்.. சாமி…! இங்கே அசூசை இருக்கிறது பாருங்கள்… என்றேன்.
கூப்பிட்டு வரும் பொழுது முதலிலே நினைத்தாயா…? நினைக்கவிலை, அதனால் வாசனை வரவில்லை. ஆனால் கண்ணில் பார்த்தவுடன் அசூசை இருக்கிறது தெரிகிறது. வாந்தி வருகிறது.
எதனால் இப்படி வருகிறது…?
1.“நம் எண்ணத்தில் எண்ணுவதால் தான் அது வருகிறது…” என்று
2.இவ்வளவு தெளிவாகக் கொடுக்கிறார்.
உடலாக இருப்பதெல்லாம் சிவம் தான். எடுத்துக் கொண்ட உணர்வு எதுவோ அதற்குத்தக்க உடலை உருவாக்குகிறது.
நம் உயிரணு பூமிக்குள் வரும் போது
1.எந்தச் சத்தை முதலில் நுகர்ந்ததோ அதற்குத்தக்க உடலாகிறது.
2.உடலான பின் மூஷிக வாகனா – அந்த மணத்தைச் சுவாசித்து
3.அதற்குத்தக்க வாழ்க்கை ஆகின்றது என்று
4.சாக்கடைக்கு அருகில் என்னை அமர வைத்து வியாசக பகவான் கண்டுணர்ந்த பிரபஞ்சத்தின் உண்மைகளை உணர்த்தினார் குருநாதர்.
இன்று இந்தக் காற்று மண்டலம் நச்சாக இருந்தாலும் அதில் மறைந்துள்ள மெய் ஞானிகளின் உணர்வை நாம் நுகரப் பழகிக் கொள்ள வேண்டும்.


துருவ நட்சத்திரத்துடன் ஒட்டிக் கொள்ள நாம் வளர்த்துக் கொள்ள வேண்டிய தகுதி
உதாரணமாக நாகன் (பாம்பு) தன் விஷத்தை மற்ற உயிரினங்கள் மீது பாய்ச்சுகின்றது. விஷத்தைப் பாய்ச்சி மயங்கச் செய்த பின் அதை உணவாக எடுத்து உட்கொள்கின்றது.
ஒவ்வொரு உடலுக்கும் ஒவ்வொரு விதமான விஷங்கள் உண்டு. எதனின் விஷமோ இதனில் கலந்து அதற்குள் இணைந்த பின்
1.பாம்பின் விஷம் அதை மடியச் செய்கின்றது… அந்த விஷத்தின் வலுவைக் குறைக்கின்றது
2.குறைத்த பின் அதன் உடலின் தன்மை உணவாக உட்கொள்கின்றது.
3.உட்கொண்ட பின் அந்த விஷத்தை ஒடுக்கித் தனக்குள் எடுத்துக் கொள்ளும் போது
4.இப்படிப் பல உணர்வுகள் சேர்ந்து இந்த விஷத்தின் தன்மை அடைந்த பின்
5.அதுவே ஒளியின் தன்மையாக நாகரத்தினமாக விளைகின்றது.
இதைப் போன்று தான் ஆதியிலே அகஸ்தியன் துருவனாகும் போது உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றியவன்.
வேதனைப்படுவோரை அடிக்கடி நாம் எண்ணினால் நம் இரத்த நாளங்களில் அந்த வேதனை கலந்து மனித உடலை உருவாக்கிய நல்ல அணுக்களுக்குள் தாக்கிய பின் அது சோர்வடைகிறது.
வேதனை என்பது விஷம். அந்த வீரிய உணர்வு கொண்டு அனைத்தையுமே மாற்றுகின்றது.
ஆனால் இதை எல்லாம் வென்றவன் அகஸ்தியன். அந்த அருள் மகரிஷியின் உணர்வை நாம் நுகரப்படும் போது நம் இரத்தத்தில் கலக்கின்றது. இதை அதிகமாக உடலுக்குள் செலுத்திய பின் இரத்தங்கள் மூலம் எல்லா உறுப்புகளுக்குள்ளும் சுழன்று வருகிறது.
நாம் நுகர்ந்த வேதனை என்ற நஞ்சினை வென்றிடும் ஆற்றல் உருவாகிறது. நஞ்சினை வென்றிடும் அந்த உணர்வின் ஆற்றல் நமக்குள் பெருகும் பொழுது அந்த நஞ்சினை மாற்றிவிடுகிறது… விஷம் பிரிந்து செல்கின்றது.
இது போன்று இப்படிப் பெருகிய உணர்வுகள் தான்
1.அணுவின் துடிப்பால் ஏற்பட்ட உணர்வுகள் அகஸ்தியனுக்குள் “மின் அணுவின் தன்மையாக” உருவானது.
2.அந்த அகஸ்தியனுக்குள் விஷம் ஒடுங்கி எப்படி மின் (பேரொளி) அணுவாக உருவானதோ
3.அதே போல நம் உடலில் இருக்கக்கூடிய உணர்வுகளை ஒளியாக மாற்றும் திறன் பெறுகின்றோம்.
இதை எல்லாம் சற்றுக் கவனமாகக் கேட்க வேண்டும். இதை ஆழமாகப் பதிவாக்கிக் கொண்டால் உங்கள் நினைவுகள் அந்தப் பேரருளைப் பெற்ற அருள் ஞானிகளின் அருகிலேயே அழைத்துச் செல்லும்.
தீமை செய்கிறான் என்று எண்ணினால் நம்முடைய நினைவுகள் தீமை செய்பவனிடமே அழைத்துச் செல்கின்றது… அங்கேயும் இயக்குகின்றது.
அதைப் போல் நண்பன் எனக்கு உதவி செய்தான் என்று எண்ணினால் நினைவலைகள் அங்கே சென்று விக்கலாக நல்ல உணர்ச்சியை ஊட்டுகின்றது.
இதைப் போன்றுதான் அருள் ஒளியின் உணர்வுகளைப் பதிவு செய்யும் பொழுது அந்த ஞானியின் வட்டத்திற்குள் நாம் செல்கிறோம்.
1.மகரிஷிகள் தங்களுக்குள் கண்டுணர்ந்த உணர்வின் ஆற்றல்கள் வெளிப்பட்டதை குரு எனக்குக் (ஞானகுரு) கொடுத்தார்.
2.அந்த உணர்வின் வித்தினை வளர்த்தேன்
3.அந்த அருள் ஞான வித்தினை உங்களுக்குள்ளும் விளைய வைக்கின்றேன்.
4.இதன் தொடர் கொண்டு நீங்கள் எண்ணினால் அந்தத் துருவ நட்சத்திரத்துடன் நீங்கள் ஓட்டலாம்.
அதன் உணர்வின் தன்மையை நீங்களும் உங்கள் இரத்த நாளங்களில் கலக்கச் செய்யலாம். உங்களில் தீமை செய்யும் உணர்வுகளுக்கு இந்த அருள் உணர்வினை இணைத்து அதைக் குறைக்கலாம்.
இது சிறுகச் சிறுக வளர்ச்சியாக நஞ்சின் தன்மையும் குறையும். உணர்வின் மணமும் குறையும்.
1.உங்கள் உணர்வின நினைவும் விண்ணிலே செல்லும்
2.பிறவி இல்லை என்ற அழியா ஒளி நிலை பெறலாம்.

நாத விந்துவின் நாராயணா… நானும் அது தான் நாராயணா…! – ஈஸ்வரபட்டர்
காட்சி:
நாராயணன் உருவமும் அவர் வீணையை வாசித்துக் கொண்டு நடப்பதுவும் தெரிகின்றது.
விளக்கம்:
மனித உணர்வில் மோதக்கூடிய எண்ணத்திற்கு இரண்டு விதமான “சரியா… தவறா…” என்ற குணம் ஓடுகின்றது. அதைப் பகுத்தறியக் கூடிய ஒலியைத்தான் நாராயணனாய் நமக்குச் சுட்டிக் காட்டிய தத்துவமே….!
தன் உணர்வின் பொக்கிஷமாய் எடுக்கும் ஒலி மனித ஞானத்திற்குத்தான் உண்டு.
சூரியனும் மற்றக் கோள்களும் செயல்படும் ஓட்டமெல்லாம்… அது அது ஓடக்கூடிய ஓட்டப் பாதையில் எக்கோள்களை எத்தொடரில் சந்திக்கின்றதோ… அதன் இயக்கத் தொடரில் தான் சூரியனானாலும் சந்திரனானாலும் வளர்ந்த எக்கோள்களும் அதனதன் இயற்கை நியதிக்கொப்பச் செயல் கொள்ள முடியும்.
ஆனால் மனித ஞானத்தின் பகுத்தறிவின் எண்ணம் தான்
1.எல்லாவற்றிற்கும் மேல் எண்ணத்தைச் செலுத்தும்
2.பல உணர்வைப் பெறத்தக்க எண்ண ஓட்டச் செயல் கொண்டது.
மனித குணத்தின் உணர்வின் செயலை… ஜீவகாந்த ஒளியை வலுவாக்கும் வளர்ச்சி… மனித உணர்விற்குத்தான் உண்டு.
மனித உணர்வின் எண்ண ஓட்டத்தில்… எண்ணும் வலுத்தன்மை கொண்ட நாம்
1.எண்ணத்தின் வலு பகுத்தறிவை எதில் செலுத்துகின்றோமோ…
2.அதற்கொத்த ஆத்ம வலுவைத்தான் இன்று நாம் பெறும் நியதி.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
மகரிஷிகளின் அருள் சக்தி உலக மக்கள் அனைவரும் பெற்று ஒளியின் சரீரம் பெறக்கூடிய தகுதி பெறவேண்டும்.
1.எல்லாரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணும்போது
2.நம்மிடம் ஒளியான உணர்வுகள் வளர்கின்றது.
3.நாமும் ஒளியாகின்றோம்.
4.அப்பொழுது மற்றவர்கள் செய்கின்ற தவறு நமக்குள் வராது.
ஆனால் தவறு செய்பவர்களையும் குற்றம் செய்பவர்களையும் திரும்பத் திரும்பப் பதிவாக்கினோம் என்றால் “இரு நான் பார்க்கின்றேன்.. உதைக்கின்றேன் உன்னை..” என்ற இந்த எண்ணங்கள் தான் வரும்.
அந்த உணர்வு இரு நான் பார்க்கின்றேன் என்ற நிலையில் நமக்குள் வந்து என்ன செய்யும்…? நம்மிடம் உள்ள நல்ல குணங்களை இருளச் செய்யும்.
இதைத் தெளிவுபடுத்துவதற்குத்தான் அன்று விஜயதசமி வைத்தார்களே தவிர சுண்டலையும் பருப்பையும் கொடுத்துவிட்டு… இவ்வளவு செலவு செய்தேன்…! அவ்வளவு செலவு சேய்தேன்…! என்ற நிலைக்கு அல்ல.
ஏன் என்று கேட்டால் கடையில் எடை போடும் தராசு நிறையச் சம்பாதித்துக் கொடுத்தது அதற்காக வேண்டி அந்தத் தராசுக்கு ஒரு பூஜை.
கணக்குப் போட்டதை எல்லாம் திருத்தி எழுதினேன். அரசாங்கத்தை ஏமாற்றினேன்… மற்றவர்களையும் ஏமாற்றினேன்… அதனால் பணம் வருமானம் நிறைய வந்தது என்பதற்காகக் கணக்குப் புத்தகங்கள் பணம் எல்லாவற்றையும் வைத்து இலட்சுமிக்கு பூஜை.
அதனால் உன்னை நான் வணங்குகிறேன் என்று இப்படித்தான் நாம் வணங்குகின்றோம் எப்படியென்றாலும் சரி… பணம் தேவை. ஆகையினால் உனக்குப் பணத்தை வைத்து இலட்சுமி பூஜை செய்கின்றேன்.
இலட்சுமிக்குப் பணத்தை வைப்பது; படைக்கிற சக்திக்குப் பொங்கலை வைப்பது; ஞானத்தைக் கொடுக்கும் சரஸ்வதிக்கு ஆயுதங்களை வைப்பது – இப்படித்தான் நாம் பூஜை செய்கிறோம்.
ஏனென்றால் நான் சொல்லக்கூடிய இந்த மெய் ஞானம் தான் ஆயுதமாக உங்களைத் தாக்குகின்றது.
ஆயுத பூஜை என்பது இந்த சரஸ்வதி பூஜை தான். நாம் எந்தெந்த குணங்களை எண்ணி எடுக்கின்றோமோ அது தான் ஆயுதமாக வந்து உங்களைப் பேச வைக்கின்றது.
நான் பேசுவது என் உடலை இயக்குகின்றது. நான் சொல்லக் கூடியதை நீங்கள் கேட்கின்றீர்கள். அது உங்களை இயக்குகின்றது. இது தான் ஆயுத பூஜை.
1.உணர்வு..
2.மணம்…
இது தான் அந்த ஆயுதங்கள்.
நாம் எதை ஆயுதமாக எடுக்க வேண்டும்…?
ஒரு பென்சிலை எடுத்துச் சீவினால் எழுதுவதற்கு உதவும். அந்தப் பென்சிலைச் சீவுவதற்குப் பதில் கையைச் சீவினால் அல்லது விரலைச் சீவினால் எழுதுவதற்கு உதவுமோ…?
இதைப் போல
1அருள் ஞானத்தை நாம் எடுத்து
2.எதைக் கொண்டு… எதைச் சீவ வேண்டும்…? என்ற நிலை இருக்கின்றது.
3.அது தான் ஆயுத பூஜை.
அதை நாம் பக்குவப்படுத்துவதற்காக வேண்டி அன்றைக்கு ஞானிகள் நம் உணர்வுகளில் கலக்கும் அழுக்கை எப்படித் துடைக்க வேண்டும்…? என்று ஆயுத பூஜையாகக் காட்டினார்கள்.
உணர்வுகளைத் தூய்மைப்படுத்தும் அந்த அருள் ஞானங்களை எடுக்கும் பொழுது அந்த உணர்வின் எண்ணங்கள் எனக்குள் சுத்தப்படுத்தும் நிலையாக வருகின்றது.
வீடு கடையை மட்டும் சுத்தப்படுத்தினால் பத்தாது. இதைச் சுத்தப்படுத்தும் போது ஆன்மாவைச் சுத்தப்படுத்தும் எண்ணம் வருகின்றது.
வியாபாரம் செய்யும்போது எப்படி எண்ண வேண்டும்…?
மகரிஷிகளின் அருள் ஒளி நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் உடலிலுள்ள ஜீவாத்மா பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.
எந்தெந்த நிலைகளில் எந்தெந்தத் தெய்வங்கள் நல்லது செய்கின்றது என்று எண்ணுகின்றோமோ
1.அந்தத் தெய்வ குணங்கள் எல்லாம் நாங்கள் பெற வேண்டும்.
2.நாங்கள் பார்ப்பதெல்லாம் நலம் பெற வேண்டும்.
3.எங்கள் உடலில் நல்ல நறுமணங்கள் வர வேண்டும்.
4.எங்களைப் பார்ப்பவர்களுக்கு நல்ல மணங்கள் தோன்ற வேண்டும்.
5.நறுமணங்கள் அவர்களுக்கு வளர வேண்டும்.
6.எங்கள் வாடிக்கையாளர் நலம் பெற வேண்டும்.
7.எங்கள் சொல்லிற்குள் இனிமை பெற வேண்டும்.
8.நாங்கள் பார்ப்பது எல்லாம் நலம் பெற வேண்டும் என்று எல்லாரும் ஏகோபித்துச் சொன்னால் எப்படி இருக்கும்…?
அனைவரும் இதைப் போல சொல்லும் போது மகிழ்ச்சி பெறும் உணர்வுகளை நாமும் பெறுகின்றோம் மற்றவர்களையும் பெறச் செய்கிறோம்.
இதற்காகத்தான் ஒவ்வொரு மாதமும் விழாக்களை வைத்தார்கள் ஞானிகள்.


எனக்கு அது தேவை… இது தேவை… என்று உயிரிடம் கேட்கக் கூடாது…!
மனிதனுடைய வாழ்க்கையில் பலருடைய எண்ணங்களையும் இன்று நாம் அறிந்து கொள்கின்றோம்… பலராமன்…! அதே சமயத்தில் தீமையின் நிலைகளை மாற்றி அமைக்கும் சக்தி நாக்கு இருப்பதனால் நரசிம்மா…!
1.எதனையும் உட்புகாதபடி வாசல்படி (சுவாசம் உட்புகும் இடம்) மீது அமர்ந்து…
2.தீமைகள் வராதபடி ஒவ்வொன்றையும் தீமையை இங்கேயே பிளந்து விடுகின்றான்…
3.உள்ளுக்குள் சென்றால் தானே தீமையின் நிலைகள் வரும்.
ஆகவே அந்த மகரிஷியின் அருள் சக்தியைத் தனக்குள் ஒவ்வொரு நிமிடமும் நாம் செலுத்தப் பழகிக் கொள்ள வேண்டும்.
ஒருவன் தீமை செய்கிறான் என்று தெரிந்து கொள்கின்றோம். ஆனால் தீமை செய்வான் என்று முதலிலேயே பதிவு செய்து கொண்டால்
1.அந்த தீமையை அடக்க மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.என் பார்வை எல்லோரையும் நல்லவராக்க வேண்டும்.
3.என்னைப் பார்க்கும் பொழுது அவர்களுக்கு நல்ல எண்ணம் வர வேண்டும் என்ற உணர்வினை
4.நமக்குள் நாம் ஆழமாகப் பதித்து விட்டால்…
5.அவர்கள் தீமை செய்தாலும் இங்கே நமக்குள் பதிவாகாது… அதை ஈர்க்கும் தன்மையும் வராது.
காரணம்… ஞானிகளின் உணர்வுகளைத் தனக்குள் வலுப் பெறச் செய்யும் பொழுது அந்தத் தீமை நம்மை இயக்காது. நம்மைப் பார்க்கும்போது பிறருடடைய தீமையின் உணர்வுகளை இது அடக்கும்.
இதைத்தான் “நீ விழித்திரு…” என்று சொல்வது.
1.எந்த நேரத்திலும்… எதனின் நிலைகள் கொண்டாலும்… நாம் ஒவ்வொரு நிமிடமும்
2.நம்மை ஆண்டு கொண்டிருக்கும் ஆண்டவனான உயிரிடம்
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இங்கே வேண்ட வேண்டும்.
4.இந்த உணர்வு உடல் முழுவதும் படர வேண்டும் என்று பரப்ப வேண்டும்.
“அப்பொழுது அவன் (உயிரான ஈசன்) பார்த்துக் கொள்வான்…!”
அதை விடுத்துவிட்டு…
1.எனக்கு இது தேவை… அது தேவை…! என்றும்
2.இன்னாருக்கு நல்லதைச் செய்தேன். அவன் எனக்குத் தீமைதான் செய்கிறான் என்று எண்ணினால்
3.நம்மை இருள் சூழ்ந்த நிலைகளுக்கே அழைத்துச் செல்லும்.
ஆகையினால் நாம் எந்த நல்லதைச் செய்கின்றோமோ அந்த நல்ல உணர்வுகள் அங்கே விளைதல் வேண்டும். அப்படி நல்லது விளைய வேண்டும் என்றால் “அந்த மகரிஷிகள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…!” என்ற இந்த உணர்வினை வலு சேர்த்துக் கொண்டால் நமக்குள் தீமை விளையாது.
நம்மைப் பார்க்கும் பொழுதே அந்தத் தீமை விளைவிக்கும் உணர்வுகள் அங்கே ஒடுங்கும். இது தான் நரசிம்மா…!
வாசல்படி மீது. நமக்குள் நுகரும் சக்தி இங்கே வராதபடி இதைத் தள்ளிவிட்டால்
1.அந்தத் தீமை விளைவிக்கும் எண்ணங்கள் வராது
2.தீமையை விளைவிக்கும் அருள் வித்து இங்கே உருவாகாது
3.அந்த வினையாக வராது… வினைக்கு நாயகனாக இயக்காது…!
அது தான் கோதண்டத்தை முறித்தபின் “சீதா…” என்ற மகிழ்ச்சியைத் திருமணம் செய்து கொண்டான் கல்யாணராமா…!
தீமைகளை அடக்கிடும் அந்த மெய் ஞானியின் உணர்வைத் தனக்குள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
1.அந்த அரவணைக்கும் சக்தியை நுகர்ந்து… அருள் ஞானிகளுடன் சேர்ந்து…
2.என்றுமே மனிதன் என்ற நிலைகள் முழுமை அடைந்து… மெய் ஞானிகளுடன் ஒன்றி
3.பிறவியில்லாப் பெரு நிலையை நாம் அடைய முடியும்.

நிதானத்தைக் கடைப்பிடித்தால் தான் நல்லதைக் காக்க முடியும் – ஈஸ்வரபட்டர்
இன்றைய மனித வாழ்க்கையில் நாம் பலதரப்பட்டோருடன் ஜீவிதம் நடத்த உறவாட வேண்டியுள்ளது. அப்படிப் பழகுபவர்களின் குணங்களில் தீயகுணம் நற்குணம் என்ற நிலையை அறியக் கூடிய தன்மையை நாம் எப்படிப் பெற முடியும்…?
சாதாரண நிலையில் எல்லாத் தீய குணங்களையும் தீய பழக்கங்களையும் கொண்ட கயவனின் உணர்வின் எண்ணம்
1.தன்னுடைய அதிகப்படியான சிந்தனையின் செயலை
2.எண்ணத்தில் தீயதிற்கு செயல்படுத்தியவனின்
3.சரீர உணர்வின் ஆரோக்கியத்தில் கூட அதிக பாதிப்பு இருக்காது.
ஒரு பித்தளைப் பாத்திரம் அது எப்படி உறுதி கொண்டதாக உள்ளதோ அதைப் போன்று திருடனின் குணத்தில் அவன் வளர்த்துக் கொண்ட உணர்வின் சக்தி கொண்டு அவன் செயல் உறுதி கொண்டதாக இருக்கின்றது.
ஆனால் சமுதாயத்தில் அவன் நல்லவனாகக் காட்டிட
1.அவனுடைய செயல் எல்லாவற்றையும் அவன் பூசிக் கொள்ளும் முலாமாக
2.எதனையும் தன்னுள் கலக்கச் செய்யும் செயலாக
3.அந்தத் தீயவனின் நிலை தான் வாழ்க்கையில் வெற்றி கொள்ளும் நிலையாக
4.இன்றைய கலியின் உணர்வு நிலை செயலாகின்றது.
உதாரணமாக… மண் பாண்டத்தில் எதனையும் எந்த முலாமும் பூசாமல் அதிலே சமைத்துச் சாப்பிட முடியும்.
1.எந்தத் தீயநிலையும் மண்பாண்டத்திற்கு இருப்பதில்லை
2.ஆனால் சிறிது கவனப் பிசகு ஏற்பட்டாலும் உடைந்துவிடும் அந்த மண்பாண்டம்.
அதே போல் தான்..
1.நல்லவர்களைத் தீயவர்கள் ஏமாற்றுவது மிகவும் சுலபம்
2.தீயவனை நல்லவனாக்கவோ நல்வழிப்படுத்தவோ மிக மிகக் கடினம்.
சமுதாயத்தில் நல் உணர்வு கொண்டோர் தன் உணர்வுக்கொப்பத் தான் ஒவ்வொருவரும் இருக்கின்றார்கள் என்ற எண்ணத்தைச் செலுத்தி எல்லோரிடமும் நற்பெயர் எடுக்க வேண்டுமென்ற உணர்வில் அவர்களின் செயல் செல்கிறது.
இருந்தாலும்…
1.தீய நிலைகள் மோதும் பொழுது அவர்களுடைய உணர்வெடுக்கும் அலையால்
2.பதட்டத்தின் சிதறல் மண்பாண்டத்தைப் போன்று உடைந்து விடுகின்றது.
ஆனால் நயவஞ்சகத்திலேயே எண்ணத்தை உறுதிப்படுத்திக் கொண்டுள்ள தீயவர்களின் குணம் எந்த நிலைகள் வந்து மோதினாலும் உடைவதில்லை. அவரின் உணர்வின் அலை பித்தளைப் பாத்திரத்தைப் போன்று…!
இதைப் போன்ற நிலையில் இருந்தெல்லாம் மனித ஆத்மாக்கள் எப்படி மீள முடியும்…?
நல் உணர்வு பெறும் பொழுதும் மீண்டும் மீண்டும் எண்ணத்தின் சிதறல்கள் வாழ்க்கையில் மோதும் பொழுதும் எல்லாவற்றையும் துறந்து சந்நியாசம் வாங்கியவர்கள் இந்தப் பூமியில் பலருண்டு.
இந்த நிலையில் மீளும் நிலைதான் சிந்தனையில் சீர்படுத்தும் சிகரமான ஆத்ம ஒளி பெறும் நிலை. அதாவது…
1.பதட்டமான காலங்களில் உணர்வின் எண்ணத்தை அவசர வேகத்தில் சொல் ஆற்றலை வெளிப்படுத்தாமல்
2.ஒவ்வொரு கால தருணத்திலும் எண்ணத்தின் சிந்தனையை நிதானப்படுத்தி
3.அத்தருணத்தில் மோதக்கூடிய எந்தச் செயலாக இருந்தாலும்
4.ஒரு நிமிட சிந்தனையால் உண்மையை அறியக்கூடிய நிதானத்தால்
5.மண்பானையை உபயோகிப்பதைப் போன்று உணர்வின் வேகத்தைப் பாதுகாத்தல் அவசியம்.
ஆகவே… நல்நிலையில் “ஏமாற்றும் தன்மையை..” சிந்தனையில் உணர்ந்துவிட்டோம் என்றால்
1.உணர்வை வேகமாகச் செலுத்தி தீய உணர்வலையுடன் நல்லதை மோதவிடாமல்
2.சிந்தனையில் நிதானப்படுத்தும் சொல் செயலால்
3.நல்வளர்ப்பின் நல் ஆத்மாவுடன் தீயதிலிருந்து விடுபட்டு
4.தன் ஆத்மா சிகரத்திற்கு செல்லும் சீர்படும் சிந்தனையால் ஒவ்வொருவருமே சித்தனாகலாம்…!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
குருநாதர் கொடுத்த ஞான வித்து எங்களுக்குள் நல்ல முறையில் விளைந்திருக்கின்றது என்று நீங்கள் சொல்ல வேண்டும்
நீங்கள் கோவிலுக்குச் சென்று அபிஷேகம் செய்கின்றீர்கள் ஆராதனை செய்கின்றீர்கள். பழம் கனிகளை வைத்துச் செய்கின்றீர்கள்.
இதே போன்று தான் குரு காட்டிய அருள் வழியில் உங்கள் உயிரான ஈசனுக்கு அருள் ஞானிகள் கொடுத்த அந்த ஞானக் கனியை அபிஷேகம் செய்கின்றோம்.
மனிதர்களில் சுவை மிக்கதாக வாழ்ந்து உணர்வை ஒளியின் சிகரமாக மாற்றிக் கனியின் தன்மை அடைந்தவர்கள் மெய் ஞானிகள். அவர்கள் உணர்வுகள் தான் அந்த ஞானக் கனி.
வாழை மா பலா சேர்ந்து முக்கனி… அருள் கனி என்றெல்லாம் சொல்வார்கள். முக்கனியின் சுவை என்று சொல்வார்கள். அதைப் போல
1.ஆறாவது அறிவின் துணை கொண்டு சுவையின் தன்மையாகப்
2.பஞ்சமிர்தம் என்ற நிலையில் ஐந்து புலன் அறிவு கொண்டு
3.மகிழ்ந்திடும் உணர்வாகச் சமைத்த அருள் ஞானியின் உணர்வின் தன்மையை
4.நம்மில் நாம் வளர்த்திட முடியும்.
ஆறாவது அறிவால் தெளிந்திட்ட அந்த அருள் ஞானியின் உணர்வுகள் அவருக்குள் பல கோடிக் குணங்கள் (பல கோடிக் கனிகள் போன்று) இருப்பினும்
1.இனிமை கொண்டு மகிழ்ந்திடும் உணர்வாக
2.தனக்குள் ஒருக்கிணைந்த உணர்வின் ஒளியாக இருக்கும் அந்தக் கனியை
3.ஐந்து புலனால் கேட்டுணர்ந்து உங்களுக்குள் விளையச் செய்ய முடியும்.
அத்தகைய அருள் ஞான வித்தை உங்களில் பதிவு செய்து இந்தக் கனியை அறுவடை செய்து உங்கள் குடும்பத்தில் அனைவரும் மகிழ வேண்டும்.
நண்பராக என்று இருந்தாலும் சிறிது பிழைகள் ஏற்பட்டால் அவரை நினைத்தால் கொதித்தெழும் நிலைகளும் நமக்குள் தீமை விளைவிக்கும் நிலைகளும் வரும்.
இதைப் போல நம்மை அறியாதபடி நமது வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் பேதங்கள் உருவாகிவிடுகின்றது.
அந்தப் பேத உணர்வுகளை நமக்குள் பதிவு செய்து விட்டால் அந்த நண்பரை உற்று நோக்கும் போதெல்லாம் நம்மை அறியாது பேத உணர்வுகள் வந்து நமக்குள் நல்ல உணர்வுகளை மறைத்துக் கொண்டே போகின்றது.
நாம் எப்படி ஒரு குழம்பில் காரம் புளிப்பு இனிப்பு உப்பு இவை அனைத்தும் சேர்த்துச் சுவை மிக்கதாக உருவாக்குகின்றோமோ இதைப்போல நம் வாழ்க்கையில் தீமைகள் வந்தாலும் அதைக் கேட்டுணர்ந்தாலும் அருள் ஞானி உணர்வை நமக்குள் நுகர்ந்து அதைச் சமப்படுத்தி மகிழ்ந்த நிலையாக ஆக்க வேண்டும்.
எத்தகைய தீமையின் நிலைகளைக் கேட்டறிந்தாலும் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு அருள் ஞானி உணர்வுகளை உயிருடன் கலந்து சுவை மிக்கதாகப் படைத்திட முடியும்.
1.பாம்பினம் எவ்வாறு அது நஞ்சினைத் தனக்குள் உணவாக எடுத்து மகிழ்கின்றதோ
2.சூரியன் நஞ்சால் அது உருவாகி நெருப்பானாலும் நெருப்பின் தன்மை கொண்டு நஞ்சினை நீக்கி ஒளியின் சுடராக மாறுகின்றதோ
3.நஞ்சினைத் தன்னுடன் இணைத்து வைரம் எவ்வாறு ஜொலித்திடுகின்றதோ
4.நஞ்சின் இயக்கமாக நம் உயிரின் துடிப்பு இருப்பினும்
5.ஒவ்வொரு நஞ்சான உணர்வலைகள் நம்மை இயக்கினாலும்
6.உயிருடன் ஒன்றிய உணர்வுகளை ஒளியாக மாற்றிப் பளிச்சிடும் நிலைகள் கொண்டு
7.நஞ்சே நஞ்சற்ற நிலையாகத் தனக்குள் ஒளியின் சிகரமாக ஆகி
8.எத்தகைய நஞ்சு மோதினாலும் நம் உணர்வுகள் பேரொளியாக மாறும்.
ஏனென்றால் நஞ்சின் தாக்குதல் தாங்காதுதான் சூரியன் ஒளியின் தன்மை அடைகின்றது. ஒரு அணுவின் தன்மை தனக்குள் நஞ்சின் தன்மை தாக்கும்போது தான் அமைதி கொண்ட உணர்வின் தன்மை – நெருப்பாக மாறியது.
நெருப்பின் தன்மை அதிகமான பின் நஞ்சின் தன்மை அங்கே ஒடுங்குகின்றது. இதைப் போலத் தான்
1.நஞ்சால் உருவான நிலைகள் கொண்டு
2.நஞ்சினை அடக்கி ஒளியின் சிகரமாக மாற்றுகின்றது.
அதைப் போன்றுதான் நஞ்சினை ஒடுக்கிடும் உணர்வின் தன்மை நமது ஆறாவது அறிவிற்கு உண்டு. நஞ்சினை ஒளியாக மாற்றிடும் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன் என்ற நிலையில் தீமைகள் நம்மை அணுகாது காத்திட வேண்டும்.
ஒளியின் சிகரமாக வாழ்ந்திடும் அந்த மகரிஷியின் அருள் வட்டத்தில் நாமும் இணைந்து வாழ்ந்திடல் வேண்டும்.


யாம் உங்களுக்குக் கொடுக்கும் சக்தி வாய்ந்த… “ஆண்டெனா பவர்”
விஞ்ஞான அறிவால் பரீட்சாந்திரமாகப் பிற ஆன்மாக்கள் மீது நஞ்சு கொண்ட விஷமான உணர்வுகளைப் பாய்ச்சும் பொழுது அந்த ஆன்மாக்கள் எவ்வாறு பதை பதைக்கின்றது…?
எதை அழிக்க நஞ்சான உணர்வாகச் செலுத்தி விஞ்ஞானத்தில் கண்டு கொண்டானோ அதனால் வெளி வந்த அந்த விஞ்ஞான அறிவு கொண்டு செயல்பட்ட உயிரான்மாக்கள் அனைத்தும் உலகில் சுழன்று கொண்டுள்ளது.
1.துன்புறுத்தும் நஞ்சு கொண்ட உணர்வின் ஆன்மாக்களாக எவ்வாறு படர்ந்து கொண்டிருக்கின்றது.
2.அதனுடைய விளைவுகள் என்ன…? என்ற நிலையை அறிந்து கொள்வதற்கு
3.குருநாதர் உலகம் முழுவதும் என்னைச் சுற்றுப் பயணம் செல்லச் செய்தார்கள்.
4.பன்னிரண்டு வருடம் இதையெல்லாம் அனுபவித்த பின் தான் உங்களுக்குச் சொல்லுகின்றேன்.
விஞ்ஞான அறிவால் தன் ஆராய்ச்சியின் நிமித்தமாகப் பல கடுமையான விஷம் கொண்ட இதைப் போன்ற நிலைகள் இந்தக் காற்றிலே சுழன்று கொண்டுள்ளது.
இதிலிருந்து தப்பும் மார்க்கம் என்ன…?
ஒரு உணர்வைப் பிளந்து உடல் பெறும் தன்மையை மறைத்து தன் உணர்வுகளை ஒளியாக மாற்றி விண் சென்ற முதல் மனிதன் அந்த அகஸ்தியன்.
அகஸ்தியனின் உணர்வுகளைப் பின்பற்றிச் சென்றவர்கள் ஆறாவது அறிவால் ஏழாவது நிலையாக இன்றும் சப்தரிஷி மண்டலங்களாகச் சுழன்று கொண்டிருக்கின்றார்கள்.
துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வலைகளை எடுத்துச் சுவாசித்துத் தன் உணர்வுகளை ஒளியாக்கி விண் சென்றவர்கள் மெய் ஞானிகள்.
சூரியனின் ஈர்ப்பு வட்டத்தில் நமது பூமி சுழன்று கொண்டிருக்கின்றது.
அதே போல இந்தப் பூமிக்குள் உயிரணுவாகத் தோன்றி ஒளியின் சரீரமான அந்த அகஸ்தியனின் உணர்வைக் கண்டுணர்ந்து அதை நுகர்ந்து ஒளியாக மாற்றிச் சென்ற மனிதர்கள் அனைவரும் சப்தரிஷி மண்டலங்களாகத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.
1.“முப்பது முக்கோடி தேவாதி தேவர்கள்…” என்று சொல்வார்கள்.
2.சப்தரிஷி மண்டலங்களாக நமது பூமியின் சுழல் வட்டத்தில் இருந்து கொண்டிருக்கின்றார்கள்.
அதிலிருந்து வெளிப்படும் ஆற்றல் மிக்க சக்திகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து நமது பூமியில் படரச் செய்கின்றது.
இன்று வெகு தொலைவில் இருந்து ஒலி/ஒளிபரப்பு செய்தாலும் சக்தி வாய்ந்த ஆண்டென்னாவை வைத்து தொலைக் காட்சியின் மூலமாக நாம் தெளிவாக அறிந்து கொள்கின்றோம்.
செயற்கைக் கோள்களை ஏவி விண்ணிலிருந்து ஒளி பரப்பச் செய்யும் விண்ணின் ஆற்றல்களையும் அந்த அலைகள் வெளியில் படர்ந்திருந்தாலும் அதற்குத் தகுந்த ஆண்டெனா பவரை வைத்து தரையிலிருந்து இங்கே கவர்கின்றார்கள்.
அதை விஞ்ஞானத்தின் மூலம் திரைகளிலும் டி.வி.யிலும் அந்தப் படங்களைத் தெளிவாகப் பார்க்கவும் முடிகிறது. இதைப் போல
1.மெய் ஞானிகள் கண்ட விண்ணின் ஆற்றல்களையும்
2.நாம் பார்க்க முடியும்… நுகர முடியும்… அறிய முடியும்.
அந்த மெய் ஞானியின் ஆற்றல் மிக்க சக்தியை நீங்கள் பெறும் வண்ணம் யாம் உபதேசிக்கும் போது
1.எந்த அளவிற்கு நினைவு கொண்டு கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கின்றீர்களோ
2.உங்கள் கண் இதை ஈர்த்து உடலுக்குள் ஊழ் வினையாகப் பதிவு செய்கின்றது.
3.சாதாரணமாக உங்கள் கண் ஈர்க்கும் நிலைகளைக் காட்டிலும் சக்தி வாய்ந்த ஆண்டெனா போன்று
4.உங்கள் கண்களுக்கு ஈர்க்கும் சக்தியைக் கூட்டும் நிலைகளுக்கே இதை உபதேசிக்கின்றோம்.
எமது குருநாதர் எமக்கு உபதேசிக்கும் பொழுது நான் (ஞானகுரு) கூர்ந்து அவர் சொல்லும் உணர்வைக் கேட்டு என் நினைவைச் செலுத்தி அவர் உணர்வின் ஆற்றலை நான் நுகர்ந்தேன்.
அதனின் நினைவு கொண்டு என் கண்ணின் புலனறிவுகள் ஆற்றல் மிக்கதாக மாறியது. அவர் உபதேசித்த உணர்வுகள் அனைத்தும் எனக்குள் ஊழ்வினையாகப் பதிவானது.
அதை நான் மீண்டும் நினைவு கொள்ளும் பொழுது அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் தகுதியை குருநாதர் ஏற்படுத்தினார். நீங்களும் அவ்வாறு பெற வேண்டும் என்ற நிலைக்குத்தான் சொல்கின்றோம்.
1.இந்த உபதேசங்களை யாரெல்லாம் கூர்ந்து கவனித்துக் கேட்கின்றனரோ
2.அவர்கள் கண்ணுக்கு (உரம் ஊட்டுவது போல) ஆற்றல் மிக்க சக்தியாக அந்த ஆண்டெனா பவர் கூடுகின்றது.
சாதாரண ஆண்டெனாவை வைத்து டி.வி.யைத் திருப்பி வைத்தால் அது பக்கத்தில் வரக்கூடிய ஸ்டேசன்களை இயக்கிக் காட்டுகின்றது.
இராக்கெட்டை விண்ணிலே ஏவி வெகு தொலைவில் இருக்கும் கோள்களின் செய்திகளை அறிய சக்தி வாய்ந்த ஆண்டெனாவைத் தரையிலே வைத்துக் கவரும் பொழுது அது நமக்குத் தெளிவாகத் தெரிகின்றது.
அதைப் போலத்தான் விண்ணிலே மிதந்து கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வெளிப்படும் உணர்வுகளை நுகரும் ஆற்றலை உங்களைப் பெறச் செய்கிறோம்.
உங்கள் கண்ணின் ஈர்ப்பு சக்தியை அந்த ஆண்டெனா பவரைக் கூட்டுவதற்குத்தான் இதை உங்களுக்கு உபதேசிக்கின்றோம்.
1.கண்களுக்குக் கொடுக்கும் அதீத ஈர்க்கும் சக்தியை வைத்து
2.நீங்கள் விண்ணை நோக்கி எண்ணி ஏங்கும் பொழுது
3.சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வரும் உணர்வலைகளை எளிதில் பெற முடியும்.
அதை உங்கள் உடலில் வினையாகச் சேர்த்து அறியாது வந்த தீமைகளைத் துடைப்பதற்காக இதைச் சொல்கின்றோம் (ஞானகுரு).

ஆத்மாவின் உண்மை உயர்வை உணர்ந்து… ஆத்மாவை வளர்க்கக்கூடிய உயர் சக்தியைப் பெற வேண்டும் – ஈஸ்வரபட்டர்
நம் சூரியக் குடும்பத்தின் மனித உணர்வின் எண்ணத்தால் எடுக்கும் ஜீவகாந்த ஒளித் தன்மையின் ரிஷி சக்தியைக் கொண்டு மண்டலக் கோள்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு பெற்று ஓடுகின்றது.
நாற்பத்தி எட்டுக் கோள்களும் சூரியனை மையமாக வைத்துச் சுழன்று… ஒன்றொன்றின் சுழற்சி வளர்ப்பின் தொடர்பலையில் செயலின் சக்தியைச் செயலாக்கும் தன்மையில்தான் ரிஷி சக்திகளின் செயலே… செயல் கொள்கின்றது.
அந்த ரிஷி சக்திகளின் செயல்… சக்தி பெற மனித உணர்வின் எண்ண ஜீவ அலைத்தொடர் பிம்பமுடன் செயல்பட்டால்தான்… உணர்வின் எண்ணத்தைச் செலுத்தக்கூடிய… அந்த ஜீவகாந்த ஒளியைத் தன் செயலுக்கு உணவாகப் பெற்று இயங்கிட முடியும்.
நம் சூரியக் குடும்பத் தொடரைப் போன்றே பல ஆயிரம் சூரியக் குடும்பங்களும் “எண்ணத்தின் உணர்வைக் கொண்டுதான்” செயல் கொள்கின்றன.
பூமியில் உயிரணுக்களாய் ஜீவன் கொண்ட மனிதனல்லாத உயிரினங்கள் பல வளர்ந்து மடிந்தாலும் எல்லாமே பூமியில் வளர்ந்த இயற்கையில் தன் உணவை… உள்ளதை உண்டு மடிகின்றன.
தன் தேவைக்கொத்த உணவுகளைத் தானே உற்பத்தி செய்து உண்ணக் கூடிய நிலை மனிதனைத் தவிர மற்றெந்த ஜீவராசிகளுக்கும் இல்லை. தன் உடல் அமைப்புக்கு ஒத்த பாதுகாப்புடன் பிறவியில் வளர்ந்த நிலைதொட்டு அத்தொடரின் சுழற்சியுடனே இறந்து விடுகின்றது.
ஆனால் மனிதன் தன் உணர்வின் எண்ணத்தில் உடல் உபாதையை மாற்றி அமைக்கப் பல செயல்களுக்கு பக்குவத்தைச் செயல்படுத்திக் கொள்கின்றான்.
மனிதச் செயலின் ஞானத்தைக் கொண்டு… இவ் உடல் தேவையின் இன்பத்தைப் பெறப் பல நிலைகளை அறிந்து… அதன் தொடரில் செயலின் வழித் தொடரைச் செயற்கையில் செய்விக்கும் நிலை… “மனிதனுக்கு மட்டும் தான் உண்டு…”
தெய்வ சக்தியை உணரும் பக்குவமும்… செயலும் கொண்டு… அன்றைய சித்தர்கள் தன் ஞானத்தை இயற்கையின் சக்தியில் பல உண்மைகளை இந்த மனிதச் சரீரத்தில் எடுக்கக்கூடிய உயர் ஞானமாகப் பெற்று வளர்த்தார்க்ள்.
உடல் தேவையின் ஒன்றை மட்டும் குறிக்கோளாக வாழும் வழித் தொடரை…
1.ஆத்மாவின் உண்மை உயர்வை உணர்ந்து
2.ஆத்மாவை வளர்க்கக்கூடிய உயர் சக்தியைப் பெற வேண்டும்.
அதைப் பெற்றால் இவ் உடல் வாழ்க்கையில் பெறக்கூடிய இன்பத்தைக் காட்டிலும் நம் உயிர் ஆத்மாவின் உண்மைச் செயலை நாம் அறியக்கூடிய தன்மையில் ஆத்மாவில் பெறப்படும் இன்பத்தின் சூட்சுமத்தை உணரலாம்.
ஆகவே நம் எண்ணத்தை ரிஷிகளின் தொடர்புடன் செயல்படும் செயல் கொள்ளும் பக்குவத்திற்கு நம் உணர்வின் எண்ணத்தைச் செலுத்த வேண்டும்.
ஆனால் இன்றைய சமுதாய உணர்வு… செயற்கையின் பிடியில் உண்மை நிலையை அறியாத நிலையில் உள்ளதனால்
1.ஜீவனுடன் கூடிய பல ஆத்மாக்கள் பல இடங்களில் உடலுடன் சமாதி நிலை கொண்டு
2.மகரிஷிகளின் தொடர்புக்காகத் தன் உணர்வின் ஜீவனை அழியா நிலை கொண்டு செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள்.
மனிதனுக்குள் உள்ள பகுத்தறியக்கூடிய உணர்வின் எண்ண ஞானத்தை உடலின் செயற்கை வாழ்க்கை இன்பத்திற்கு மட்டும் செயல்படாமல்
1.உயிராத்மாவின் உண்மை அறிந்து சகல மாமகரிஷிகளின் சக்தியை உணர்ந்து
2.இஜ்ஜீவ காந்த சரீரத்திலிருந்தே ஒளிகாந்த நிலையைப் பெறக்கூடிய பக்குவத்திற்கு
3.மெய் ஞானத்தின் சக்தி நிலையை உணர்ந்து செயல்படல் வேண்டும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
ஆண்டவன் என்ற நிலையில் “அவன் நம்மைக் காப்பான்…” என்று தான் எண்ணுகின்றோமே தவிர நமக்குள் இருக்கும் “உயிர்… அவன் தான் காப்பான்…” என்ற நிலையை மறந்து விட்டோம்.
1.நாம் எண்ணியதை இயக்குவதும் உயிரே.
2.எண்ணியதை உருவாக்குவதும் உயிரே.
3.நமது நினைவாற்றலை இயக்குவதும் உயிரே.
இவையெல்லாம் நம் உயிரான ஈசனின் வேலை தான்.
இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து வாழ்க்கையில் நாம் எப்படி வாழ வேண்டும்…? என்பதை உணர்தல் வேண்டும்.
நம்மை அறியாது வரும் தீமைகளை அகற்ற வேண்டும். தீமைகளை அகற்றும் பழக்கம் (பயிற்சி) வரவேண்டும்.
இன்று ஒவ்வொரு இயந்திரங்களுக்குள்ளும்/சாதனங்களுக்குள்ளும் அதற்குள் உள்ள உறுப்புகளின் இயக்கங்கள் (TECHNICAL) எவ்வாறு இயங்குகின்றது…? என்பதை விஞ்ஞான அறிவை வைத்து இஞ்சினியர் கண்டு கொள்கின்றார்.
“விஞ்ஞானி…” புதிதாக ஒன்றைக் கண்டுபிடிக்கும் போது அதைச் செயலுக்குக் கொண்டு வருவதற்கு ஒரு கருவியோ அல்லது இயந்திரமோ தேவைப்படுகிறது.
அப்பொழுது அதற்குத் தகுந்த (DESIGN AND FABRICATION) பொருள்களை உருவாக்கிக் கொடுப்பதும் அதைப் பிரிப்பதும் இயந்திரத்தை முழுமையாக உருவாக்குவதும் இன்ஜினியரின் வேலை.
1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அந்த இன்ஜினியரின் நிலை போன்று
2.மெய் ஞானிகள் கண்ட வானுலகின் உணர்வின் தன்மையைப் பதிவு செய்தார்
3.தான் கண்டுணர்ந்த மெய் உணர்வின் தன்மை கொண்டு
4.உங்கள் உடலான உறுப்புகளுக்குள் அவரவர்களுக்குத் தக்க
5.மெய் ஞானியின் உணர்வின் தன்மையை உங்களுக்குள் சீர்படுத்தச் செய்து
6.உடல் உறுப்புகளில் வரும் நோய்களை அகற்றிடும் உணர்வின் தன்மையை நீங்கள் பெறும்படி செய்தார்.
விஞ்ஞானி கண்டுபிடித்த உணர்வின் தன்மைக்கொப்ப இஞ்சினியரால் உருவாக்கப்பட்ட இயந்திரத்தின் உறுப்புகள் சரியாக இருந்தால் தான் அது செயலாக்கும்.
1.அப்பொழுது தான் விஞ்ஞானி கண்டுபிடிப்பும் செயலுக்கு வரும்…
2.அது வேலையும் செய்யும்.
அதே போல மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் காட்டிய அருள் வழியில் தீமையை அகற்றிடும் உணர்வின் தன்மை கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நுகரும் பொழுது உங்கள் உடல் உறுப்புகள் சீராக இயங்கத் தொடங்கும்.
இயந்திரம் சீராக இருந்தால் தான் மற்ற உறுப்புகளும் சீராக இயக்க முடிகின்றது.
உங்கள் உடலில் நோய் இருந்தாலும் எந்த இடத்தில் வலி வருகின்றதோ ஒவ்வொரு நிமிடமும் அந்த அருள் ஞானியின் உணர்வுகளை நுகரும்படி செய்கின்றோம்.
உங்களுக்குள் அதைப் பதிவாக்குகின்றோம். இந்தப் பதிவை நினைவாக்கினால் காற்றுக்குள் இருக்கும் மகரிஷிகளின் உணர்வை நீங்கள் எளிதில் நுகர முடிகின்றது.
உடலில் எந்த உறுப்புகளில் வேதனை வருகின்றதோ “ஓ…ம் ஈஸ்வரா…” என்று உயிருடன் ஒன்றி அருள் மகரிஷிகளின் அருள் ஒளியை நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடலில் படர வேண்டும். அது எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் என்று உடல் முழுவதும் சுழலச் செய்ய வேண்டும்.
மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் உறுப்புகளான – சிறு குடல் பெரும் குடல்; கணையங்கள்; கல்லீரல் மண்ணீரல்; நுரையீரல்; இருதயம்; கண்களில் உள்ள கருமணிகள்; நரம்பு மண்டலம்; எலும்பு மண்டலம்; விலா எலும்பு; குறுத்தெலும்பு; எலும்புகளுக்குள் உறைந்துள்ள் ஊன்கள்; தசை மண்டலம்; தோல் மண்டலம் அனைத்திலும் படர வேண்டும் என்று தலையிலிருந்து கால் வரை படரச் செய்ய வேண்டும்.
1.மகரிஷிகளின் உணர்வலைகள் உடல் உறுப்புகளில் சுழன்று வரும் சமயம்
2.நோயாக இருக்கும் இடங்களில் எண்ணத்தைச் செலுத்தும் பொழுது
3.இந்த உணர்வின் தன்மை சீக்கிரம் இழுத்து
4.நோயான அணுக்களை அது தணியச் செய்கின்றது
5.உறுப்புகளைச் சீராக இயக்கச் செய்கின்றது
ஏனென்றால் விஞ்ஞான அறிவுப்படி உங்களுக்குள் மெய் ஞானத்தின் உணர்வை ஊட்டி உடலுக்குள் செலுத்தும்படிப் பழக்கப்படுத்துகின்றோம்.
விஞ்ஞான வாழ்க்கையில் அஞ்ஞான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் இந்த அஞ்ஞான வாழ்க்கையிலிருந்து விடுபட்டு அருள் வாழ்க்கை வாழ முடியும்.
ஏனென்றால் மெய் ஞானிகள் கண்ட மெய் ஞானத்தின் உணர்வின் தன்மை கொண்டு வரப்படும் பொழுது “உயிர்..” நமக்கு மெய் ஒளியைக் காட்டுகின்றது.
அந்த மெய் வழி கண்டு உயிருடன் ஒன்றும் அனைத்து உணர்வுகளையும் ஒளியாக்கி விட்டால் ஞானிகளைப் போன்று ஒளியின் சரீரமாகும் தகுதியை நாம் பெறுகின்றோம்.
1.உடலை விட்டு எப்பொழுது நாம் பிரிந்தாலும்
2.அந்தச் சப்தரிஷி மண்டலத்தில் இணைந்து வாழ்வோம்.


தனித்திருந்து… “விழித்திருத்தல் வேண்டும்…”
விழித்திரு… விழித்திரு… விழித்திரு… “தனித்திரு…!” என்ற நிலைகளைச் சொல்வார்கள். ஆனால் “விழித்திரு… தனித்திரு…” என்றால் எப்போதுமே
1.பிறிதொரு தீமையின் உணர்வுகள் நமக்குள் கலக்காது
2.பிறருடைய உணர்வுகள் நமக்குள் கலந்துவிடாது
3.தனித்த அந்த ஞானியின் உணர்வை நமக்குள் சேர்க்கப்படும் பொழுது
4.அந்த மகரிஷிகள் உணர்வுடன் ஒன்றி நாம் தனித்து வாழ முடியும்.
இல்லை என்றால் பிறருடைய தீமை செய்யும் உணர்வுகள் நம்மை இயக்கிவிடும். அதனால்தான் நீ விழித்திரு… நீ தனித்திரு… என்று காரணங்களைச் சொல்லி ஞானிகள் ஒவ்வொரு நிலைகளிலும் கூறுகின்றார்கள்.
அந்த அருள் ஞானிகளின் உணர்வுகளை நாம் விழித்திருந்து அந்த உணர்வின் தன்மையை தனக்குள் வளர்த்துக் கொண்டால் பிறிதொரு தீமை செய்வோருடைய உணர்வுகள் நம்மை இயக்காது.
இந்த உணர்வின் தன்மையை நாம் வளர்த்துக் கொண்டால் நாம் தனித்தே… தனித்தன்மையில் வாழ்கின்றோம்.
துருவ நட்சத்திரம் ஒளியின் சுடராக மற்றொன்று இதை இயக்கிடாது அது தனக்குள் இயக்கப்பட்டு ஒளியின் தன்மையாக “தனித்தன்மையாக…” வளர்கின்றது.
இந்த மனித வாழ்க்கையில் எவரொருவர் விழித்திருந்து… தீமை தனக்குள் வளராது அது தனித்துத் தன் ஒளியின் சுடராக மாற்றினார்களோ…
1.அவர்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் ஒளியின் சுடராக ஆகி
2.அவரவர்கள் நிலைகளுக்கேற்ப தனித்தே வாழ்கின்றார்கள் “தனித்தன்மை கொண்டு…”
ஆகவே நாம் இந்த மனிதனின் வாழ்க்கையில் நாம் எதனின் தன்மை கொண்டு நாம் நுகர்கின்றோமோ அடுத்தவருடைய தொடர்பு கொண்டு தான் நாம் வாழுகின்றோம். ஒருவருக்கொருவர் இணை சேர்த்து ஒருவருக்கொருவர் ஒன்றி வாழ்கின்றோம்.
கோள்களும் அதே போன்று தான் அதனதன் நிலையில் வளர்ந்து அதனதன் தனித்தன்மையில் வளர்ந்தாலும் அதனில் விஷத்தன்மைகள் வளர்கின்றது. ஆனாலும்
1.சூரியன் “தனித்தன்மை கொண்டு…” வரும் நஞ்சினைப் பிரித்துவிட்டு ஒளியின் சுடராக அது மாற்றுகின்றது
2.இதைப் போன்றுதான் நாம் தனித்திருந்து விழித்திருத்தல் வேண்டும்.
சூரியன் எப்படி நஞ்சினைப் பிரித்து அதனுடைய தனித்தன்மையைக் காட்டுகின்றதோ… தனித்த நிலைகள் அதனுடைய ஒளியின் தன்மையாக அது செயல்படுகின்றதோ… இதைப் போன்றுதான் தீமையின் உணர்வுகள் ஒவ்வொரு நொடியிலும் நமக்குள் சேராது நமக்குள் தனித்திருத்தல் வேண்டும்… அதே போல விழித்திருத்தல் வேண்டும்…!
ஒவ்வொரு நொடியிலும் ஒவ்வொரு நல்லவருடைய உணர்வுகளையும் அறிந்தாலும் அதிலே அவர்களுடைய உணர்வுகளில் சிக்கி…
1.அவருடைய உணர்வுகளுக்கு அடிமையாகி விடாது “தனித்திருப்பது நல்லது…”
2.தனித்திருப்பது என்றால் நாம் விழித்திருப்பது நல்லது.
தீமைகள் எப்பொழுதும் நமக்குள் ஊடுருவாது அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நாம் நுகர்ந்து… அந்த உணர்வின் ஆற்றலை நமக்குள் பெருக்கித் தீமைகள் தன்னை நாடாது தனித்தன்மையாக நமது உணர்வுகள் பிறருடைய தீமைகளிலிருந்து அகன்று… நாம் தீமையற்றவர்களாக வாழும் நிலை பெற வேண்டும்.
1.மகரிஷிகள் தனித்திருந்து… அவர்கள் விழித்திருந்ததனால் தனித்திருக்கும் நிலை பெற்றார்கள்
2.அதனின் உணர்வை நாம் நுகர்ந்தோம் என்றால்
3.நமது வாழ்க்கையில் விழித்திருக்கும் உணர்வும்
4.நமது வாழ்க்கையில் தனித்து வாழும் நிலைகளும் .
5.நமது வாழ்க்கையில் தீமையற்ற நிலைகளும் வளர்ந்திடும் நிலைகள் பெறுகின்றோம்.
இதை நினைவுபடுத்தும் நன்னாள் தான் சிவன்இராத்திரி.

சித்தம் தெளிவானால் வெற்றி நிச்சயம் – ஈஸ்வரபட்டர்
காட்சி:
அழகான தடாகத்தில் அன்னப்பட்சி நீரில் நீந்துவதைப் போன்றும்… படகில் மனிதர்கள் அமர்ந்து செல்வதைப் போன்றும் தெரிகின்றது.
விளக்கம்:
மனிதனுடைய ஞானம் “ஒன்றைப் பார்த்தவுடன்…” அதனைத் தன்னுடைய செயலுக்கு வளர்த்துக் கொள்ள வேண்டுமென்று சிந்தனையில் அதைச் செயலாக்குகின்றான்.
நீரில் மிதக்கக்கூடிய அன்னப்பட்சியின் நிலையைப் பார்த்துத் தானும் அதைப் போன்று செயல்படுத்திக் கொள்ளும் அமைப்பாக (படகை) உருவாக்குகின்றான்.
1.இப்படிப்பட்ட சிந்தனையின் செயலுக்கு வலுப்படுத்தும் மனிதர்கள்
2.வாழ்க்கைத் தொடரில் வெற்றி பெறுகின்றார்கள்.
ஆனால் கற்பனையில் எண்ணக்கூடிய மனிதர்களின் வாழ்க்கை
1.சஞ்சலம்… சோர்வு… பிணி… என்று
2.தன் ஞானத்தின் வலுவைத் தான் எண்ணிய கற்பனை உணர்வுடன்
3.வாழ்க்கையை ஒப்பிடும் சிந்தனையற்ற செயலாக்கம் இல்லாத நிலையினால் அவ்வாறு ஏற்பட்டு விடுகின்றது.
கற்பனையின் உணர்வில் தான் எண்ணியதை… கவுரவத்தின் உணர்வாகச் செயலாக்குபவன் வாழ்க்கையில் தான் முன்னேறுவதில்லை.
ஆக்கத்தின் ஆக்கமாய் உணர்வின் எண்ணத்தைச் சிந்தனையில் சீர்படுத்தும் மனிதனின் குணம்… வாழ்க்கையின் செயல்பாட்டில் வெற்றி காணும் நிலை ஏற்படுகிறது
ஒவ்வொரு பொருளிலுமே அப்பொருளின் மாற்றம் எப்படி ஏற்படுகின்றது…? அதனுடைய “உஷ்ண அலையின் மாறுபாடு நிலை… சமைப்பு நிலை… ஏற்படும் தன்மை கொண்டுதான்…” ஒவ்வொரு கருவின் உருவும் வளர்கின்றது.
வளர்ச்சியில் வெளி கக்கும் கழிவு நிலை கொண்டு தான்… அதனின் சத்து நிலையை ஒவ்வொரு செயலிலும் அச்செயல் நிலையின் “உன்னத நிலை” உருவாகின்றது.
பூமியின் ஈர்ப்பில்… உயர்ந்த ஒவ்வொரு கனி வளங்களும் வளரக்கூடிய நிலையில் அவ்வளர்ச்சியின் உயர்ந்த தன்மையான உலோகங்களை நாம் பிரித்து எடுக்கின்றோம்
சாதாரணமாகத் தங்கப் படிவங்கள் வளர்ந்துள்ள மண்ணில் உள்ள தங்கப் பாளங்களை வெட்டி எடுத்து… அதைப் புடம் போட்டுத் தங்கமாக்குகின்றோம். இதைப் போன்றே பூமியில் உள்ள கனி வளங்களை நமக்கு வேண்டிய பக்குவத்திற்கு பல நிலைகளைச் செய்வித்துச் செயல்படுத்துகின்றோம்.
இதைப்போன்று இச்சரீரத்தின் உண்மை நிலையையும் நாம் உணரல் வேண்டும்.
நாம் எடுக்கக் கூடிய எண்ணத்தின் உணர்வின் உஷ்ண ஓட்டத்தால் நாசி எடுக்கும் சுவாசம் கொண்டு
1.நாசியில் (மூக்கில்) சளியும்
2.பார்க்கும் பார்வையின் ஒளி ஈர்ப்பைக் கொண்டு கண்ணெடுக்கும் ஒளி ஈர்ப்பால் கண்ணின் பீழையும்
3.செவி கேட்கும் ஒலி ஈர்ப்பால் காதில் அழுக்கும்
4.வாய் பேசும் ஒலி அலையால் வாயில் உமிழ் நீரும்
5;உண்ணும் உணவால் மலமும் சிறு நீரும்
6.பால் உணர்வின் உஷ்ண அலையின் தொடர்பால் பெண்ணிற்கு மாதவிடாயும் ஆணிற்கு விந்து நிலையும்
7.உடல் உறுப்பின் செயலில் வேர்வையும்
8.அந்தந்த உறுப்பின் அவயவங்களின் செயலுக்கொப்ப வெளிப்படும் கழிவுகள் நம் உடல் உறுப்பிலேயே செயல் கொள்கின்றதல்லவா…!
அதைப் போன்றே மனித வாழ்க்கையில் எண்ணத்தின் உணர்வில் மோதப் பெறும்… நடந்தது… நடக்க வேண்டியது… நடப்பது எதுவாகிலும்… உணர்வின் ஜீவித எண்ணமுடன் ஓடக் கூடிய எல்லாமே இவ்வுயிர் ஆத்மாவின் சரீர வாழ்க்கையில் எலும்பில் ஊனாகப் பதிந்து விடுகின்றது.
ஊன் நிலைக்கொப்பத்தான் ஒவ்வொரு மனிதனின் உணர்வுகளும்… இருக்கும்.
1.எதை அதிகமாக எடுத்து மனித உணர்வின் எண்ணம் பேசிச் செயல்படுகின்றதோ
2.அந்த நிலைக்கொப்ப ஊனின் பதிவு வினையாக வாழ்க்கையில் வெளிப்படுகின்றது.
கண் பார்த்துப் பொருளறியும் நிலையால் கண்ணில் எப்படிப் பீழை ஏற்படுகின்றதோ அதைப் போன்று
1.உணர்வெடுத்து நாம் பேசியது.. பேசப் போவது என்ற எண்ண உணர்வே ஊனாகி…
2.ஊனே வினையாகி… வினையே வாழ்க்கையாக… அந்த வாழும் நிலையை மாற்றுவது என்றால்
3.இச்சரீர உணர்வின் விதியால் மதி கொண்ட உயர் ஞானத்தால் மெய் ஞானம் பெறும் ஏழாம் நிலையில்
4.இது நாள் வரை இங்கே சொன்ன வழி முறைக்கொப்ப விண்ணிலிருந்து பெறும் மின் காந்த ஒளி சக்தியைக் கவர்ந்து
5.சரீர உணர்வுடன் இவ் ஊனில் பதிவாகி உள்ள பதிவு நிலையை மாற்றக்கூடிய அந்தச் செயல் தன்மைக்கு
6.ஐம்புலனின் செயலின் வீரியத்தைக் கண் காது மூக்கு வாய் உணர்வு என்ற
7.ஐம்புலனின் செயலையும் ஒரு நிலையாக்கி… மதி கொண்டு மெய் ஞானம் பெற வேண்டும்.
மெய் உணரும் உண்மையால் பரந்து கிடக்கின்ற இயற்கையில் உண்மையின் உணர்வைச் சித்தத்தின் செயலாகச் சீர்படுத்துதல் வேண்டும்.
கற்பனைக் கோலம்… கலங்கிடும் காலம்…
அனுபவ ஆற்றல்… ஆக்கத்தின் ஆக்கம்…!
சஞ்சலத்தில் சச்சரவை… சங்கடத்தில் சிக்கலின்றி… சிந்தனையில் சீர்தூக்கினால்…
சிந்தைதனில் சீர்படுத்த… சிந்தையின் செயலே… சீர்படும் சிகரமாகுமே…!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
கார்த்திகை மாதம் கார்த்திகை ஜோதி என்று காட்டுவார்கள்.
துவைதம் – உருவ வழியில் காட்டப்படும் போது முருகனுக்கு எப்படிக் காட்டுகின்றனர்…? (துவைதம் என்றால் கண்ணுக்குப் புலப்படக்கூடியது)
1.பல தீபங்களாகிய எல்லாவற்றையும் ஒன்றாக்கி
2.ஒரு சுடராகக் காட்டுகின்றனர்.
அதே சமயத்தில் சிவனுக்கு எப்படிக் காட்டுகின்றனர்..?
1.ஒரு ஒளி சுடராகி
2.மறுபடியும் வளர்த்து வளர்த்து ஒன்றாகி வருவதை…
3.பல தீபங்களைக் காட்டுகின்றனர்.
மனிதன் நாம் எந்தெந்த உணர்வுகளை எல்லாம் எடுத்தோமோ பல தீமைகளிலிருந்து அறிந்திடும் அறிவாக நாம் உடலாகச் சிவமாக அமைக்கின்றோம்.
ஆனால் சிவத்திற்குள் “கார்த்திகேயா…” என்று காட்டுகின்றார்கள்.
தீமைகளை நீக்கிடும் உணர்வை ஆறாவது அறிவு கொண்டு செலுத்தி
1.எல்லாவற்றையும் ஒன்றாக இணைத்து
2.ஒரு சுடராக ஒளியின் உணர்வாக ஒன்றாக்க வேண்டும் என்று தான்
3.துவைத வழிப்படி ஆலய வழிகளில் இப்படிக் காட்டுகின்றனர்.
சிவன் ஆலயத்தில் என்ன காட்டுகின்றனர்…? பல தீபங்கள் இருக்கிறது. சிறுகச் சிறுகச் சிறுகச் சிறுகச் சொல்லி அதை இங்கே இலட்ச தீபத்தைக் காட்டி
1.அது ஒவ்வொன்றாகக் கூட்டிச்
2.சிவன் ஆலயத்தில் பெரிதாகக் காட்டுவார்கள்.
முருகன் ஆலயத்தில் அது எல்லாவற்றையும் காட்டி
1.ஒவ்வொன்றாகக் குறைத்து
2.ஒரு ஒளியின் சுடராகக் காட்டுவார்கள்.
சாதாரண மனிதனும் இதில் உள்ள சூட்சமங்களைப் புரிந்து கொள்வதற்குக் காட்டுகின்றனர்.
இன்று அங்கே பூஜை செய்யும் பூசாரியிடம் ஏன் அங்கே இப்படிக் காட்டுகிறார்…? என்று கேட்டால் தெரியாது.
சிவனுக்கு இப்படித் தான் காட்ட வேண்டும்… முருகனுக்கு இப்படித் தான் காட்ட வேண்டும்… என்று சொல்வார்கள்.
இது தத்துவ ஞானிகள் காட்டிய பேருண்மைகள் காலத்தால் மறைந்துவிட்டது.
சிவமாகும்போது ஒவ்வொன்றாக ஒவ்வொரு அறிவாகச் சேர்த்து இந்த உணர்வின் தன்மை மனித உடலானது. இது சிவமானது.
எல்லாவற்றையும் அறிந்திடும் தன்மை பெற்றது கார்த்திகேயா. ஆறாவது அறிவைக் கொண்டு வருகின்றார்கள். தெளிந்திடும் தெளிவான அறிவு கொண்டு வருகின்றனர்.
தெளிந்து கொண்டபின் ஒவ்வொரு நிலைகளிலேயும் அது மாற்றி ஒளியின் சுடராக ஒன்றாகி ஒரு ஒளியின் நிலை அடைகின்றது.


நான்…! என்று இல்லாது “நாம்…” என்ற கூட்டமைப்பாகச் செயல்பட வேண்டும் என்று குருநாதர் எச்சரிக்கை செய்தார்
மெய் ஞானிகள் அனைவரும் இயற்கையின் பேருண்மைகளைக் கண்டுணர்ந்தவர்கள். தங்கள் உடலில் வந்த தீமைகளை அகற்றி மெய் உணர்வுகளை அவர்களுக்குள் ஒளியாக மாற்றி விண்ணுலகம் சென்றவர்கள்.
அவர்களின் நினைவுகளைத் தான் எனக்குள் (ஞானகுரு) பதியச் செய்து எமக்கு உபதேசித்து அருளினார் மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர்.
1.மனித வாழ்க்கையில் தன்னை அறியாது வந்த சோர்வடைந்த உணர்வுக்குள்
2.அந்த மெய்ஞானிகளின் உணர்வை இணைத்து அவர்களின் நினைவு கொண்டு நீ கவர்ந்தாயானால்
3.அந்த மெய் உணர்வைப் பெறும் தகுதியை நீ பெறுகிறாய்.
அதனின் உணர்வு உனக்குள் விளைய… விளைய… உன்னிடமிருந்து வெளிப்படும் எண்ணத்தின் சொல் கேட்டுணர்வோர் உணர்வுகளில் ஓ… என்று ஜீவன் பெற்று ம்… இன்று அவர் உடலுக்குள் பிரம்மமாகின்றது.
இவ்வாறு நீ எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை… நீ பிறர் நலமாக இருக்க வேண்டும் என்றும்… அவர்கள் மெய் ஞானிகளின் அருள் ஆற்றல் பெற வேண்டும் என்றும்… ஏக்க உணர்வுடன் வரும் பொழுது அனைத்து உணர்வின் சத்தைப் பெற்று நீ வலுப்பெற்றவன் ஆகிறாய்.
1.அந்த உயர்ந்த சக்தி எத்தனை பேருக்குக் கிடைக்க வேண்டும் என்று நீ எண்ணுகிறாயோ
2.அத்தனை பேருடைய எண்ணம் உனக்குள் வலுவாகக் கிடைக்கின்றது.
மெய் உணர்வுகள் அவர்களுக்குள் விளைய வேண்டும் என்று நீ எண்ணும் பொழுது… இந்த உணர்வுகள் அவர்கள் உடலுடன் இரண்டறக் கலந்து… சக்தி வாய்ந்த நிலைகளாக அங்கேயும் விளைகின்றது.
விளைந்த உணர்வுகள் வெளிப்படும் பொழுது “அவர்கள் எவ்வாறு மகிழ்ச்சி பெறுகின்றார்கள்…?” என்று நீ எண்ணிப் பார்க்கும் பொழுது இந்த உணர்வின் சக்தியை உனக்குள் ஒளியாக மாற்றும் திறன் பெறுகின்றாய் என்று தெளிவாக உணர்த்தினார் குருநாதர்.
“நாம்…” என்ற நிலையை அடைந்தால் நாம் அனைவரும் ஒன்றாகச் சேர்த்து வலு கொண்ட நிலையாக அடைகின்றோம்.
1.நான்…! என்ற நிலையில் சென்றோம் என்றால்
2.அது தனித்து நின்று மற்றவரின் உணர்வின் வலு இழக்கப்படுகின்றது… வலு கிடைக்காது.
3.நமக்கு நாமே தண்டனை கொடுக்கும் நிலை வருகின்றது.
குரு என்னிடம் இதை எச்சரித்தார்.
மகரிஷிகளும் ஞானிகளும் உயர்ந்த ஆற்றலை எப்படி வளர்த்துக் கொண்டார்களோ… எப்படிக் கலந்து உறவாடினார்களோ அந்த உணர்வின் சக்தியை நீ பெற வேண்டும் என்று தான் உனக்குள் அதை இணைக்கின்றேன் (ஈஸ்வரபட்டர்).
1.நீ பெற வேண்டும் என்று நான் எண்ணும் பொழுது
2.உன்னுடன் இணைத்தே நான் ஆகின்றேன்… ஆக “நாம்… ஆகின்றேன்…”
இதைப்போல அனைவருக்கும் அந்த உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும் என்று எண்ணும் பொழுது
1.அவர்களுடன் இணைந்த நீயும்… அவர்கள் ஆகின்றாய்.
2.அவர்களும் உன்னுடன் இணைந்து… அவர்கள் ஆகின்றார்கள்
இதைப் போன்றுதான் “நாம்…” என்ற நிலைகளில் அந்த அருள் ஞானிகளின் சக்திகளைப் பெற நாம் பழகிக் கொள்ள வேண்டும்.
விண்ணிலிருந்து பல பல தீமைகள் (நஞ்சுகள்) வந்தாலும் அந்தப் பலவும் ஒன்றாக இணைந்து சூரியன் ஒளியின் சுடராக மாற்றி இந்தப் பிரபஞ்சத்தையே ஒளிமயமாக இயக்குகிறது.
அதைப் போல நீயும் மெய் ஞானிகளின் உணர்வைப் பருக வேண்டும். அதைப் பருகிடும் சக்தியைப் பெற வேண்டும் என்றால் அனைவருக்கும் நீ அதைப் பெறச் செய்ய வேண்டும்.
அதனின்றுதான் நீ அதைப் பெறுகின்றாய்…! என்ற நிலையைக் குரு தெளிவாக எனக்கு வழிகாட்டினார். அவர் எனக்குக் காட்டிய அதே அருள் வழியைத் தான் உங்களுக்கும் உணர்த்திக் கொண்டு வருகின்றேன்.
1.குருநாதர் காட்டிய வழியில் நாம் சென்று
2.ஒளியின் சரீரமாக அனைவரும் ஆக முடியும்…! என்ற நிலைக்குத் தான் இந்த உபதேசம்…!

மனிதன் இன்பமாக இருக்க…வேண்டும் என்றால்… அதை மெய் ஞானத்தால் தான் பெற முடியும் – ஈஸ்வரபட்டர்
இங்கே உணர்த்தப்படும் உண்மை மெய் ஞானத்தை… மனிதன் பெற வேண்டிய உண்மைச் சக்தியின் வளர்ச்சி நிலையை… ஒவ்வொருவரும் பெறல் வேண்டும்.
பூமியின் சுழற்சியும் பூமியின் வளர்ச்சியும் பூமியின் பல கோடி வளர்ப்பு நிலையில் ஜீவ பிம்பம் நிலை பெற்ற உணர்வுகளில் மனிதனுக்குக் காட்டப் பெற்ற உயர்வு சித்தம் என்பது அன்றிருந்த மனிதர்கள் சைவ சித்தாந்தத்தை மனிதர்களுக்கு உணர்த்தியது தான்…!
இயற்கையின் உண்மைகளை அறிய மனிதர்கள் உணர்வின் ஒட்டத்தில் ஜீவ வாழ்க்கைக்கு ஆறறிவின் முதிர்வை மெய் ஞானம் கொண்டு சித்தத்தை அறிய… சைவ சித்தாந்தத்தில் உண்மைகள் வடிக்கப் பெற்றது.
1.உயிரணுவின் உணர்வை உயர்த்தக்கூடிய ஒலி ஒளி நீரைக் கொண்டு
2.எடுக்கும் எண்ணத்திற்கு எண்ணம்தான் உணர்வாகி… உணர்வு தான் ஆத்மாவின் வலு என்பதனை உணர்ந்து
3.தெய்வ குணங்களை வணங்கும் எண்ணத்தை வழிகாட்டிய முறை நான்கு வேதங்களாய் பிரிக்கப்பட்டு
4.மந்திர ஒலிகள் ஜெபிக்கப்பட்டு மந்திர ஒலிகளுக்கு வலுவாக்க வேள்விகளை நடத்தி
5.அதிலிருந்தே மனிதனை மனிதனே உயர்த்தி… தாழ்த்தி… வழி வந்ததின் வழியினை
6.நாம் இன்று நம் சிந்தனையில் உணர்ந்திடல் வேண்டும்.
இன்றைய விஞ்ஞானத்தில் வளர்த்துக் கொண்ட முறைகள் எல்லாமே மனிதனுடைய தேவையின் அடிப்படையில் “உடலின் சுகத்திற்கே” முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கின்றது.
இந்த விஞ்ஞானத்தின் கதியால் மனித உணர்வு உயர்வு எங்கிருக்கின்றது…? என்பதை மனிதன் மெய் ஞானத்தில் உணரவில்லை.
அணு ஆயுதங்களும் இன்று விஞ்ஞானத்தில் சுகம் கொள்ளும் ஒலி ஒளி யாவையுமே இவ்வுடலின் தேவைக்குத்தான் உள்ளது. மனித விஞ்ஞானம்… மருத்துவம்… யாவையுமே உண்ண… உடுக்க… இருக்க… உடலின் தேவைக்கு சுகம் பெற வேண்டியதாகத் தான் உள்ளது.
1.ஆனால் மனித ஜீவ வாழ்க்கையில் மலர வேண்டிய…
2.மெய் ஞானத்தால் மனிதன் பெறக்கூடிய உண்மையை உணர்ந்தோமா…?
இந்த உடலுக்கு என்று சுகம் காண… மனித ஞானம் எல்லாமே விஞ்ஞானம் கண்டு… அதனால் விபரீத சுகமாக அல்லவா… இன்று நடக்கும் கலியில் சுகம் காணும் நிலை…!
உடல் வாழ்க்கை உள்ள வரைக்கும்… இன்ப வாழ்க்கை இனிது நடக்க… மனித உணர்வின் தேவை என்பது “செயற்கையிலேயே ஒன்றி விட்டது…” இயற்கையின் வித்தாக இருந்த உலகத்தை மாற்றும் வழியாகவே மாறி விட்டது இன்றைய நிலை.
எந்தச் சுகத்தைப் பெற மனித உணர்வின் வேகம் விஞ்ஞானத்தில் சென்றதோ… அவை எல்லாம் செயற்கையின் குறுகிய கால சுகம் தான்..!
1.மனித வாழ்க்கையில் உணர்வின் குணத்தைச் சமம் கொண்டு
2.மெய் ஞானத்தை உணரும் ஆத்ம பலம் பெறும் சுகம் ஒன்றே
3.ஏகாந்தத்தில் உணரும் ஏகாந்த சுகம்.
உயிர் பெற்ற ஜீவ ஆத்மாவின் முதிர்வு கொண்ட மனித உயர்வை… மெய் ஞானத்தால் மனிதனுக்கடுத்த தெய்வ குணங்களால்… தெய்வச் செயலைத் தன் சித்தத்தின் சித்தாக்கிக் கொண்டால் பிறப்பின் முதிர்வுக்கு அடுத்த நிலையான… “பறக்கும் நிலையை” மனிதன் என்றோ பெற்றிருக்கலாம்..!
மனிதனின் உணர்வில் இனிமையை ரசிக்க… இன்பமாய் இருக்க…வேண்டும் என்றால் அது… மெய் ஞானத்தின் சித்தத்தால் தான் பெற முடியும்.
1.இன்று செயற்கையில் காணும் நிலை யாவையுமே குறுகிய கால நிலை தான்
2.வழியறிந்து வளரும் நிலை “உண்மையின் சக்தி நிலை” பெறுவது ஆகும்…!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
ரோட்டிலே இரண்டு பேர் கடுமையாகச் சண்டை போடுகிறார்கள். ஒருவருக்கொருவர் சாபமிட்டுக் கடுமையாகப் பேசுகின்றார்கள்.
இந்த மாதிரிச் சாபம் விடுவதைக் கர்ப்பமான தாய் மூன்று மாதத்திற்குள்ளே பார்த்து விட்டார்கள் என்றால் பார்த்த உணர்வுகள் கருவிலே ஆழமாகப் பதிந்து விடும்.
மூன்று மாதங்களுக்கு மேலே போனால் உருவமாகிவிடும்.
ஆனால் கருவுற்றது உரு பெறும் நிலைகளாக இந்த மூன்று மாதங்களுக்குள் இது பதிவு செய்து கொள்ளும்.
இந்த மூன்று மாதத்திற்குள் எதையெல்லாம் அந்தத் தாய் கூர்மையாகப் பதிவாக்குகின்றதோ அது குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக அமைந்துவிடும்.
இன்று புதிதாக ஒரு செடியை எப்படி உருவாக்குகின்றார்கள்?
1.ஒரு செடியின் வித்துக்களை வைத்து முளை வரும் போது
2.மற்ற செடியுடன் இரண்டறச் சேர்த்து இழுக்க வைத்து
3.ஒரு புதிய செடியாக – இரண்டு செடியின் சத்தும் சேர்ந்ததாக உருவாக்குகின்றார்கள்
இதே மாதிரி ஒருவன் சாபமிடுகின்றான் என்றால் போதும்.
அந்தச் சாப வினைகள் கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்கு என்ன செய்கின்றது என்று சொன்னால்
1.தாய் கண்ணுற்றுப் பார்க்கின்றது.
2.அந்த உணர்வின் தன்மை நுகருகின்றது.
சாபமிடுபவர்களைப் பார்த்து “இப்படிப் பேசுகின்றார்களே…! என்று அந்தத் தாய் தனக்குத் தெரிந்த நியாயத்திற்குப் பேசுகிறது. ஆனால் இது நல்ல குணங்களுக்கு எதிர் மாறானது.
அப்போது அதைப் பார்த்தவுடனே தாய் என்ன செய்கிறது…? இப்படிப் பேசுகிறார்களே… என்று ஏங்குகின்றது. இந்த உணர்வின் தன்மை கேட்கும் பொழுது “ஸ்..ஸ்ஸ்…, அப்பா…! என்று களைப்பு வருகிறது.
ஏனென்றால் கர்ப்பமாக இருக்கப்படும்போது அந்த ஆரம்பக் காலங்களில் உமட்டலாக அந்தச் சோர்வான நிலைகள் இருக்கும். அப்போது இதைத் தாங்காதபடி… “அப்பா…!” என்று எண்ணும்போது
1.இந்தச் சாபமிட்ட உணர்வுகள் நேராகக் குழந்தைக்குள் இணைந்து
2.நல்ல உணர்வைக் கொன்று
3.இந்த வித்தாக அது இணைத்து விடும்.
உனக்கு கண் தெரியாது… உன் கால் முடமாகும்… உன் குடும்பம் நாசமாகப் போகும்…! என்று சொல்லிச் சாபமிடுவார்கள்.
இதைக் கேட்டவுடனே இந்த உணர்வு அதில் விளைந்த வித்து இந்தக் குழந்தையுடன் இணைந்து விடுகின்றது.
குழந்தையுடன் விளைந்த பிற்பாடு என்னவாகின்றது…?
குழந்தை பிறக்கப் போகும் போது இவர்கள் தன்னை அறியாமலே உலகம் கெட்டுப் போய்விட்டது….! அங்கே இப்படிப் போய்விட்டது…! என்றெல்லாம் சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.
சாபமிட்டவர்கள் “உனக்குக் கண் தெரியாது…!” என்று ஒரு நான்கு தரம் பேசியிருந்தால் அந்தத் தாய் அதை நுகர்ந்திருந்தால் கருவில் உருவாகிக் கொண்டிருக்கும் அந்தக் குழந்தையின்
1.கருவிழிக்கு வரும் நல்ல உணர்வின் தன்மையை இது தடுக்கும்.
2.குழந்தை பிறந்த பின்னாடி பார்த்தோம் என்றால் குழந்தைக்கு “மாறு கண்ணாக…” இருக்கும்.
சாபமிட்டவர்கள் “உன் குடும்பம் தொலைந்து போகும்…!” என்று பேசியிருந்தார்கள் என்றால் கருவில் பதிவாகி அந்தக் குழந்தை பிறந்ததிலிருந்து “இப்படி ஆகிப் போய்விட்டதே… இப்படி ஆகிப் போய்விட்டதே…” என்று நினைத்தார்கள் என்றால்
1.இந்தச் சோர்வின் தன்மையால் தொழில் கெடும்
2.சோர்வடையும் போது வீட்டில் சண்டை வரும்.
3.சம்பாதித்து வைத்த காசு இது தன்னாலே ஓடும்.
4.சாபத்தை – சும்மா வேடிக்கையாகப் பார்த்த கர்ப்பிணிக்கு இத்தனை நிலை ஆகிறது.
இதுவெல்லாம் நாம் தவறு செய்யவில்லை. ஆனால் சந்தர்ப்பத்தால் இப்படிப் பதிவாகி நமக்குள் விளைந்துவிடுகிறது.
இதை எல்லாம் நாம் எப்படித் துடைப்பது…? நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அன்றைய ஞானிகள் எதைச் சொன்னார்கள்…?
1.நமக்குள் கெட்டது எப்படிச் சூழுகின்றது…?
2.அறியாமலே தீமை நமக்குள் எப்படி விளைகிறது…?
3.தீமைகளை எப்படி விலக்குவது…? என்பதைக் காட்டுவதற்காகத்தான் ஆலயங்களை அமைத்துக் காட்டினார்கள் ஞானிகள்.
ஒரு ஊர் இருந்தாலும் ஒரு கிராமம் இருந்தாலும் பத்து வீடு இருந்தாலும் கோவில் கட்டி வைத்திருக்கின்றோம். விநாயகரைப் பார்க்கிறோம். தினசரி எல்லாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றோம்.
தேங்காய் பழம் வைத்து வணங்குகிறோம். பிள்ளையாரைச் சுற்றி வந்தால் பிள்ளை வரம் வேண்டும் என்று கேட்டால் கிடைக்கும் என்று சொல்லிவிட்டு அர்ச்சனை செய்து அந்தக் கோவிலைச் சுற்றுகின்றோம்.
ஆனால் நம் வாழ்க்கையில் எதை வினையாகச் சேர்க்க வேண்டும் என்று அறிந்திருக்கின்றோமா…! ஞானிகள் சொன்ன அந்த நிலையைப் பற்றி ஏதாவது நினைக்கின்றோமா…?
ஞானிகள் சொன்ன நிலையை நாம் உணர்வால் எண்ணத்தால் எடுத்துத் தீமையை நீக்க வேண்டும். ஞானிகளின் அருள் உணர்வை நமக்குள் வினையாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தீய வினைகள் அகற்றிடும் சக்தியாக… தீமைகளைச் சரணமடையச் செய்யக்கூடிய சக்தியாக “சரஹணபவா.. குகா..”
1.ஆறாவது அறிவின் துணை கொண்டு தீமைகளை அகற்றி
2.உயிருடன் ஒன்றி ஒளியாக மாற்றி அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக விண்ணிலே இருக்கின்றான்.
துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளை நுகர்ந்தால் வாழ்க்கையில் வரும் தீய வினைகள் சாப வினைகள் அனைத்தையும் அகற்ற முடியும். கருவிலிருக்கும் குழந்தைக்கு அந்த அகஸ்தியனின் சக்தி கிடைக்க வேண்டும் என்று எண்ணினால் அவன் கருவிலேயே ஞானியாவான்.
நம்மை அறியாமல் வரும் தீய வினைகளை அகற்றி நல் வினைகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் விநாயகரை எங்கே பார்த்தாலும் வைத்திருக்கின்றார்கள்.
ஒரு நல்ல வித்தின் தன்மையை நாம் மாற்றி விட்டால் கனியின் தன்மை பலன் கொடுக்குமோ…? கொடுக்காது.
ஆகவே நம் நல்ல குணங்களை மறைத்துக் கொண்டிருக்கும்
1.தீமைகளிலிருந்து மனிதர்கள் அகல வேண்டும் என்பதற்காகத் தான்
2.குருநாதர் சொன்ன அருள் வழிகளை இங்கே உணர்த்துகின்றோம்.


நோய் உருவாகாதபடி நாம் விழித்திருக்க வேண்டியதன் அவசியம்
இந்த மனித வாழ்க்கையில் அடிக்கடி நாம் வேதனைப்படும் உணர்வுகளை எடுப்போம் என்றால்
1.நம் உடலில் உள்ள பித்த சுரப்பிகளில் அது சுரக்கும் உணர்வுகள் அதிகமாக அதிகமாக
2.வேதனை உணர்வுகள் உறையப்பட்டு அது மோதப்பட்டு அதனின் உணர்வுகள் கற்களாக உருபெறுகிறது.
அவ்வாறு உருப்பெற்று விட்டால் இந்தப் பித்தத்தையே விஷம் கொண்ட கற்களாக அது மாற்றிவிடுகின்றது.
இதைப் போன்று சிறுநீர்ப் பைகளிலும்… இரத்தத்தைச் சுத்திகரிக்கும் கிட்னியில் மணலைப் போன்று அது தேங்கி விட்டால் அந்த விஷத் தன்மைகள் உறைந்து உறைந்து விஷத்தையே தனக்குள் எடுத்து இரத்தத்தில் வரும் மாசுகளைச் சுத்திகரிக்கும் தன்மை இழந்துவிடுகிறது
கிட்னி பழுதடைந்து விடுகின்றது. அதனின் உணர்வின் தன்மை உடல் முழுவதும் தீமையை உருவாக்கும் நிலையாக உருவாகி விடுகின்றது.
பின் உடல் முழுவதும் விஷத் தன்மைகள் பரவி அடுத்து மாற்று உறுப்புகளை மாற்றித்தான் விஞ்ஞான அறிவு கொண்டு வாழ வேண்டி உள்ளது. அப்படிச் செயல்பட்டாலும் அதிலிருந்து முழுமையாக மீள்வது என்பது மிகவும் கடினமாகி விடுகிறது.
இதைப் போன்றுதான் நாம் சுத்திகரிக்கும் உறுப்பான கல்லீரல் போன்ற உறுப்புகளில் விஷத்தின் தன்மை ஆற்றல் அதிகரித்து விட்டால் அங்கே உணர்வின் தன்மை வளர்ச்சி பெறப்படும் போது அதுவும் பாழடைகிறது.
ஏனென்றால்…
1.சில கடுமையான நிலைகளை உருமாற்றும் அல்லது கரைத்திடும் திறன் கொண்ட
2.அமிலத்தை உருவாக்கும் திறனை நம் கல்லீரல் இழந்து விட்டால்
3.மற்ற கடின பொருள்களைக் கரைக்கச் செய்யும் தன்மையும் அது செயல் இழந்துவிடுகிறது.
இதைப் போன்று வாழ்க்கையில் நாம் எடுக்கும் விஷத் தன்மையான உணர்வுகளால் நஞ்சான அணுக்கள் விளையத் தொடங்கி விட்டால் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் பாழடையும் தன்மையே அடைகிறது.
இயற்கையிலே ஒவ்வொரு இனப் பறவைகளும் தன் தன் குஞ்சுகளுக்கு என்று அது உணவைத் தேடிச் சென்று அதை வாயிலே ஊட்டுகின்றது.
எப்போது…?
அந்தக் குஞ்சுகள் இரைக்காக ஏங்கி இருக்கும் பொழுது அதனதன் இனம் அதனதன் வழியில் உணவாகக் கொடுத்து அதை வளர்க்கின்றது. இதைப் போன்றுதான்
1.நம் உடலில் உள்ள அனைத்து குணங்களுக்கும் நம் உயிரே தாயாகின்றது.
2.அதனால் உருவாக்கப்பட்ட அணுக்களுக்கு அது எதனின் வழியில் வேதனையின் நிலைகள் உருவானதோ
3.அந்த வேதனையான உணர்வு தான் அதற்கு உணவாகத் தேவை.
4.அதே வேதனை உணர்வைத்தான் உயிர் உணவாகக் கொடுக்கும்.
5.வேதனையால் உருவான அணுக்கள் தன் உணர்ச்சிகளைத் தூண்டி ஏங்கப்படும் போது
6.உயிர் (தாய்) காற்றிலிருந்து கவர்ந்து அந்த வேதனையான அணுக்களுக்கு உணவைக் கொடுத்துக் காப்பாற்றுகின்றது.
நல்ல குணங்கள் கொண்டும் நாம் வாழ்ந்திருப்பினும் வேதனை என்ற குணங்கள் வரும் பொழுது அதனின் ஆற்றல் பெருகி விடுகின்றது. அதனின் மலங்கள் உடலில் அதிகரிக்கப்படும் பொழுது நல்ல குணங்களுக்குக் கிடைக்கும் உணவு தடையாகி… அதனின் வலு இழக்கப்படுகின்றது.
1.சரியான வளர்ச்சி பெறுவதில்லை
2.நாம் நல்லதை எண்ணினாலும் நம்மால் முடியாது போகிறது.
அது காலத்தால் தடைப்படும் போது அந்த விஷத்தை உருவாக்கும் விஷ அணுக்களின் உணர்வுகள் நமக்குள் அதிகமாகப் பெருகி விடுகின்றது. இதைப் போன்ற நிலைகள் இருந்து நாம் விழித்திருத்தல் வேண்டும்.
1.ஒரு புளியங்கொட்டை அது மண்ணில் செடியாக முளைக்கும் போதே
2.அதைக் கிள்ளி எறிந்து விட்டால் ஒன்றும் சிரமமில்லை
3.அதைப் பிடுங்க கோடாரியோ மற்ற ஆயுதமோ தேவையில்லை.
ஆனால் பெரிய மரமாக வளர்ந்த பின் அதை வெட்டக் கோடாரி அவசியம் தேவை. ஏனென்றால் மரங்களைக் கோடாரி போன்ற போன்ற ஆயுதத்தை வைத்துத் தான் வெட்ட முடியும்.
ஆனால் செடி சிறியதாக இருக்கும் பொழுது தெரிந்து கொண்டால் எளிதாக நீக்க முடியும். அதனால் தான் விழித்திரு…! என்று சொல்வது
மரம் பெரிதாக வளர்ந்த பின் அதனுடைய விழுதுகளைப் பாய்ச்சி விட்டால் கட்டிடத்தையே பலவீனமாக்கிவிடும்… நடந்து போகும் பாதையும் தடுத்துவிடும்.
ஆரம்பத்திலேயே கிள்ளி எறிந்து விட்டால் பாதையும் மறைக்காது… கட்டிடத்தையும் இடிக்காது. ஆகவேதான் நாம் விழித்திருத்தல் வேண்டும்.
1.நமது வாழ்க்கையில் எந்த வழியில் தீமை என்ற உணர்வை நாம் நுகர்ந்தாலும்
2.அடுத்த கணம் அது நம் உடலுக்குள் வளராது விழித்திருத்தல் வேண்டும்.
தீமைகளைக் கேட்டுணர்ந்த பின்… அல்லது பார்த்துணர்ந்த பின்… அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் ஈஸ்வரா…! என்று எண்ணி அந்தச் சக்திகளை வலுவாக்கிக் கொள்ள வேண்டும்.
அந்த வேதனையை உருவாக்கிய உணர்வுக்குள் மகரிஷிகளின் உணர்வை இவ்வாறு பாய்ச்சப்படும் போது அதை அடக்கி அதன் தன்மையை மாற்றிவிடும்.

தெய்வ குணத்தை வளர்ப்பதே “சைவ சித்தாந்தம்…” ஈஸ்வரபட்டர்
ஜீவன் பெற்ற அனைத்து ஜீவன்களுக்குமே ஞானம் உண்டு. ஞானத்தை எதில் செலுத்துகின்றோமோ அச்செயல்தான் நடக்கின்றது.
1.ஞானத்தை மெய்யாக ஆக்கும் உயர் ஞானத்தை உணரும் சித்தத்தால்
2.உண்மையை வளர்க்கும் சைவ சித்தமாக்க வேண்டும்.
உணர்வில் வளர்க்கப்படும் எண்ணங்கள் “பிறிதொன்றை வளர்க்கவல்ல…” உயர் குணமுடன் தெய்வ குணங்களைப் பெறுவது சைவத்தின் சித்தம்.
ஆனால் அசுர குணங்களை அரக்க குணமாக எண்ணக்கூடிய உணர்வு அசைவமாகின்றது. அதனுடைய தொடர் அலையில் வளர்ப்பின் நிலை யாவையுமே வளர்வற்ற சிதறும் நிலை ஏற்பட்டு விடுகின்றது.
இன்று இப்பூமியில் காற்றலையில் கலந்துள்ள அமிலத் தன்மை திடமாகி அத்திடத்தை நாம் நுகரும் பொழுது அதனுடைய வாசனை அதிகமாக வீசுகின்றது.
1.அதனையே சமைக்கும் பொழுது
2.திடத்தைக் காட்டிலும் வேகமாக அதனை நுகர முடிகின்றது.
சமைப்பின் பொருள் அனைத்தும் காற்றலையில் இருந்துதான் திடப்பட்டு செயலுக்கு வருகின்றது.
செயல்படும் பொருளைப் பார்க்கும் பொழுது (கண்களால்) அது “உறுதிப்படுத்தப்பட்ட உண்மை…” என்று அறிகின்றோம். உண்மை எதிலிருந்து வருகின்றது…?
இக்காற்றலையில் எவை எவையெல்லாம் கலக்கப் பெற்றுள்ளனவோ அவை தான் திடமாகிச் செயலாகின்றது. அதைப் போன்று…
1.வாழ்க்கையில் நம்மைச் சுற்றியுள்ள திடப் பொருளை நம்பி
2.அதைத்தான் உண்மை…! என்று நாம் உணர்ந்து
3.இந்த உடலுக்கு மட்டும் வாழுகின்றோம்.
உணர்வலையாக எண்ணுவதை… காற்றலையில் கலந்துள்ள உயர்ந்த நிலையை… தனக்கொத்த உணர்வலையின் எண்ணமுடன் “வலுப்படுத்தக் கூடிய வளர்ச்சிக்குத் தன் சித்தத்தைச் சைவமாக்க வேண்டும்…”
திடத்தின் உடல் வாழ்க்கையில் வாழக் கூடிய வழித் தொடர் யாவையும் அசைவம் தான்.
சித்தத்தால் எடுக்கும் மெய் ஞானத்தைத் தன் ஞானமாக்கும் உயர் ஞானி… தன் ஆத்மாவை அழிவில்லா ஒளித் தன்மையாக… என்றுமே அழியா நிலை கொண்டு ஏகாந்தத் தன்மை பெறுகின்றான்.
1.ஏகாந்த நிலைக்கும்…
2.இவ்வுடலின் உணர்வின் எண்ணத்தைச் சைவமாக்கும் தெய்வ குணத்திற்கும்… தொடர்புண்டு.
ஏனென்றால் இஜ்ஜீவ வாழ்க்கையில் சரீர உணர்வின் எண்ணம்.. சங்கடத்துடன்… சலிப்புடன்… மோதப்படும் உணர்வால் மனிதன் தன்னையே அசைவமாக்கிக் கொள்கின்றான்.
தெய்வ குணத்தைத் தன்னுள் வளர்த்து… மெய் உணரும் வழியை அறிய… தெய்வ குணங்களைப் பெற ஒவ்வொருவரும் அதை உரமாகத் தான் எடுத்து வளர்தல் வேண்டும்.
ஒவ்வொரு ஆத்மாவையுமே தெய்வ குணங்களை வளர்க்கும் சைவத்தின் சித்தாகத் தன் உணர்வின் செயல் அமையும் பொழுது தன் வலுவின் வளர்ச்சியால் மெய் ஞானி சித்தனாகின்றான்.
சித்து நிலையின் அஷ்டமாசித்தினால் அகிலத்தையும் அறியக்கூடிய வளர்ச்சி நிலையின் வளர்ப்பால் ரிஷியாக முடியும்.
இரு மனத்தின் திருமணமே
இல்லறத்தின் நறு மணமே
இறையுணர்வின் வழியறிந்தே
இவ்வுலகின் காவியத்தில்
இருளகற்றும் ஒளிச்சுடராய்
இனியதொரு வாழ்வமைப்போம்
இடும்பனான குணமகற்றி
இறையருளின் நற்குணத்தில்
ஈன்றெடுக்கும் கனியமுதே
ஈசனருள் பொக்கிஷமே…!
இல்லத்தில் இனிய வித்திட்டு
இனிய குண வளர்ப்பாக
இல்லறத்தில் நீர் ஊற்றி
இன்பத்தின் இனிமை பெற்றிடவே
ஈசன் அருளில் உதித்த நாம்
ஈன்றெடுத்த தெய்வமாய்
ஈன்றெடுத்த அன்னை தந்தையை
ஈசனாக்கி வணங்கிடுவோம்
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
விஞ்ஞான அறிவால் பரீட்சாந்திரமாகப் பிற ஆன்மாக்கள் மீது நஞ்சு கொண்ட விஷமான உணர்வுகளைப் பாய்ச்சும் பொழுது அந்த ஆன்மாக்கள் எவ்வாறு பதை பதைக்கின்றது…?
எதை அழிக்க நஞ்சான உணர்வாகச் செலுத்தி விஞ்ஞானத்தில் கண்டு கொண்டானோ அதனால் வெளி வந்த அந்த விஞ்ஞான அறிவு கொண்டு செயல்பட்ட உயிரான்மாக்கள் அனைத்தும் உலகில் சுழன்று கொண்டுள்ளது.
1.துன்புறுத்தும் நஞ்சு கொண்ட உணர்வின் ஆன்மாக்களாக எவ்வாறு படர்ந்து கொண்டிருக்கின்றது.
2.அதனுடைய விளைவுகள் என்ன…? என்ற நிலையை அறிந்து கொள்வதற்கு
3.குருநாதர் உலகம் முழுவதும் என்னைச் சுற்றுப் பயணம் செல்லச் செய்தார்கள்.
4.பன்னிரண்டு வருடம் இதையெல்லாம் அனுபவித்த பின் தான் உங்களுக்குச் சொல்லுகின்றேன்.
விஞ்ஞான அறிவால் தன் ஆராய்ச்சியின் நிமித்தமாகப் பல கடுமையான விஷம் கொண்ட இதைப் போன்ற நிலைகள் இந்தக் காற்றிலே சுழன்று கொண்டுள்ளது.
இதிலிருந்து தப்பும் மார்க்கம் என்ன…?
ஒரு உணர்வைப் பிளந்து உடல் பெறும் தன்மையை மறைத்து தன் உணர்வுகளை ஒளியாக மாற்றி விண் சென்ற முதல் மனிதன் அந்த அகஸ்தியன்.
அகஸ்தியனின் உணர்வுகளைப் பின்பற்றிச் சென்றவர்கள் ஆறாவது அறிவால் ஏழாவது நிலையாக இன்றும் சப்தரிஷி மண்டலங்களாகச் சுழன்று கொண்டிருக்கின்றார்கள்.
துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வலைகளை எடுத்துச் சுவாசித்துத் தன் உணர்வுகளை ஒளியாக்கி விண் சென்றவர்கள் மெய் ஞானிகள்.
சூரியனின் ஈர்ப்பு வட்டத்தில் நமது பூமி சுழன்று கொண்டிருக்கின்றது.
அதே போல இந்தப் பூமிக்குள் உயிரணுவாகத் தோன்றி ஒளியின் சரீரமான அந்த அகஸ்தியனின் உணர்வைக் கண்டுணர்ந்து அதை நுகர்ந்து ஒளியாக மாற்றிச் சென்ற மனிதர்கள் அனைவரும் சப்தரிஷி மண்டலங்களாகத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.
1.“முப்பது முக்கோடி தேவாதி தேவர்கள்…” என்று சொல்வார்கள்.
2.சப்தரிஷி மண்டலங்களாக நமது பூமியின் சுழல் வட்டத்தில் இருந்து கொண்டிருக்கின்றார்கள்.
அதிலிருந்து வெளிப்படும் ஆற்றல் மிக்க சக்திகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து நமது பூமியில் படரச் செய்கின்றது.
இன்று வெகு தொலைவில் இருந்து ஒலி/ஒளிபரப்பு செய்தாலும் சக்தி வாய்ந்த ஆண்டென்னாவை வைத்து தொலைக் காட்சியின் மூலமாக நாம் தெளிவாக அறிந்து கொள்கின்றோம்.
செயற்கைக் கோள்களை ஏவி விண்ணிலிருந்து ஒளி பரப்பச் செய்யும் விண்ணின் ஆற்றல்களையும் அந்த அலைகள் வெளியில் படர்ந்திருந்தாலும் அதற்குத் தகுந்த ஆண்டெனா பவரை வைத்து தரையிலிருந்து இங்கே கவர்கின்றார்கள்.
அதை விஞ்ஞானத்தின் மூலம் திரைகளிலும் டி.வி.யிலும் அந்தப் படங்களைத் தெளிவாகப் பார்க்கவும் முடிகிறது.
இதைப் போல மெய் ஞானிகள் கண்ட விண்ணின் ஆற்றல்களையும் நாம் பார்க்க முடியும்… நுகர முடியும்… அறிய முடியும்.
அந்த மெய் ஞானியின் ஆற்றல் மிக்க சக்தியை நீங்கள் பெறும் வண்ணம் யாம் உபதேசிக்கும் போது
1.எந்த அளவிற்கு நினைவு கொண்டு கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கின்றீர்களோ
2.உங்கள் கண் இதை ஈர்த்து உடலுக்குள் ஊழ் வினையாகப் பதிவு செய்கின்றது.
சாதாரணமாக உங்கள் கண் ஈர்க்கும் நிலைகளைக் காட்டிலும் சக்தி வாய்ந்த ஆண்டெனா போன்று
1.உங்கள் கண்களுக்கு ஈர்க்கும் சக்தியைக் கூட்டும் நிலைகளுக்கே
2.இதை உபதேசிக்கின்றோம்.
எமது குருநாதர் எமக்கு உபதேசிக்கும் பொழுது நான் (ஞானகுரு) கூர்ந்து அவர் சொல்லும் உணர்வைக் கேட்டு என் நினைவைச் செலுத்தி அவர் உணர்வின் ஆற்றலை நான் நுகர்ந்தேன்.
அதனின் நினைவு கொண்டு என் கண்ணின் புலனறிவுகள் ஆற்றல் மிக்கதாக மாறியது. அவர் உபதேசித்த உணர்வுகள் அனைத்தும் எனக்குள் ஊழ்வினையாகப் பதிவானது.
அதை நான் மீண்டும் நினைவு கொள்ளும் பொழுது அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் தகுதியை குருநாதர் ஏற்படுத்தினார்.
நீங்களும் அவ்வாறு பெற வேண்டும் என்ற நிலைக்குத்தான் சொல்கின்றோம். இந்த உபதேசங்களை யாரெல்லாம் கூர்ந்து கவனித்துக் கேட்கின்றனரோ அவர்கள் கண்ணுக்கு (உரம் ஊட்டுவது போல) ஆற்றல் மிக்க சக்தியாக அந்த ஆண்டெனா பவர் கூடுகின்றது.
சாதாரண ஆண்டெனாவை வைத்து டி.வி.யைத் திருப்பி வைத்தால் அது பக்கத்தில் வரக்கூடிய ஸ்டேசன்களை இயக்கிக் காட்டுகின்றது.
இராக்கெட்டை விண்ணிலே ஏவி வெகு தொலைவில் இருக்கும் கோள்களின் செய்திகளை அறிய சக்தி வாய்ந்த ஆண்டெனாவைத் தரையிலே வைத்துக் கவரும் பொழுது அது நமக்குத் தெளிவாகத் தெரிகின்றது.
அதைப் போலத்தான் விண்ணிலே மிதந்து கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வெளிப்படும் உணர்வுகளை நுகரும் ஆற்றலை உங்களைப் பெறச் செய்கிறோம்.
உங்கள் கண்ணின் ஈர்ப்பு சக்தியை அந்த ஆண்டெனா பவரைக் கூட்டுவதற்குத்தான் இதை உங்களுக்கு உபதேசிக்கின்றோம்.
கண்களுக்குக் கொடுக்கும் அதீத ஈர்க்கும் சக்தியை வைத்து நீங்கள் விண்ணை நோக்கி எண்ணி ஏங்கும் பொழுது சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வரும் உணர்வலைகளை எளிதில் பெற முடியும்.
அதை உங்கள் உடலில் வினையாகச் சேர்த்து அறியாது வந்த தீமைகளைத் துடைப்பதற்காக இதைச் சொல்கின்றோம்.
மனிதர்களுக்குள் நாம் பழகிய நிலைகள் கொண்டு பத்திரிகை வாயிலாக எங்கோ ஆக்ஸிடன்ட் ஆன நிலைகளைப் படிக்கும் பொழுது எண்ணத்தைக் கூர்ந்து செலுத்தி விட்டால் அதிர்ச்சி வேதனை பயம் போன்ற தீமைகளை நமக்குள் விளைவிக்கின்றது.
நாம் தவறு செய்யவில்லை. உலகத்தை அறிந்து கொள்ள நாம் படித்தாலும் இந்த உணர்வுகள் நமக்குள் வந்து இயக்கி விடுகின்றது.
பத்திரிக்கை வாயிலாக நாம் படித்துணர்ந்த அந்த எண்ண அலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து நமக்கு முன் சுழன்று கொண்டிருக்கின்றது.
அதை மீண்டும் எண்ணும் பொழுது பதிவான அதே எண்ண அலைகளைக் குவித்து நம்மை உணரச் செய்கின்றது. அதன் இயக்கமாக நம்மைச் செயல்படுத்துகின்றது.
1.எப்படியெல்லாம் அவர்கள் வேதனைப்பட்டார்களோ
2.அதே வேதனை நமக்குள் விளையும் தருணமும் வந்து விடுகின்றது.
இதே போன்ற நிலைகளிலிருந்து நம்மை மீட்டுக் கொள்ள வேண்டும் என்றால் மெய் ஞானிகளின் உணர்வுகளை எடுத்துத் தான் தடுத்து நிறுத்த முடியும்.
சலிப்பு சோர்வு கோபம் வேதனை வெறுப்பு ஆத்திரம் இத்தகைய உணர்வுகள் எல்லாம் சாதாரண ஆண்டெனாவில் கவருவது போல நமக்குள் வந்து விடுகின்றது.
அவைகளிலிருந்து விடுபட வேண்டும் என்றால் சக்தி வாய்ந்த மெய் ஞானிகளின் உணர்வு தேவை. அதைக் கவர நமக்கு அந்த அதீத ஈர்க்கும் சக்தியும் தேவை.
சக்தி பெறும் நிலைக்குத் தான் குருநாதர் ஒவ்வொரு நிமிடத்திலும் துன்புறுத்தும் உணர்வுகளை செயற்கையாக எனக்குள் பாய்ச்சி
1.அந்தத் துன்பப்படுத்தும் உணர்வுகளை நீக்குவதற்காக
2.விண்ணின் ஆற்றலை நீ எவ்வாறு பருகப் போகின்றாய் என்று கேள்வி எழுப்பினார்.
பின் அந்த விண்ணின் ஆற்றலை எனக்குள் எடுக்க வேண்டிய முறைகளை உபதேசித்து செய்து அதனின் அனுபவபூர்வமான செயல்களை அவர் ஊட்டினார். அவர் ஊட்டிய பக்குவ நிலைகளை நான் எடுத்துக் கொண்டேன்.
மூன்று இலட்சம் பேரைச் சந்திக்கச் செய்து அவர்கள் உணர்வுகள் எவ்வாறு இயங்குகின்றது என்று இருபது வருட காலம் அனுபவ ரீதியாக உணர்ந்தேன்.
குருநாதர் எவ்வளவு பெரிய சக்தியை உணர்த்தினாரோ அதனின் உணர்வின் ஆற்றலை நான் பருகினேன். அவரைக் கூர்ந்து நான் கவனிக்கும் பொழுது அதனின் தன்மை ஊழ்வினையாகப் பதிவாகியது.
மீண்டும் நினைவு கொள்ளும் பொழுது சப்தரிஷி மண்டலங்களின் சக்தியை நுகர்ந்து எனக்குள் பெருக்கி அறியாது சேர்ந்த தீமைகளையும் துன்பங்களையும் நீக்கினேன்.
குருநாதர் காட்டிய வழியில் அதைக் கடைப்பிடித்தேன். தீமைகளை நீக்கிய அந்த அருள் உணர்வுகளைச் சொல்லால் சொல்லி உங்களுக்குள் இப்பொழுது ஆழமாகப் பதிய வைக்கின்றேன்.
இதை மீண்டும் நினைவு கூர்ந்து எண்ணிணீர்கள் என்றால் அந்த மெய் ஞான உணர்வுகள் உங்களுக்குள் விளைந்து உங்கள் துன்பங்களையும் துயரங்களையும் நீக்கச் செய்யும்.


மற்றவருடன் பேச்சுத் தொடரானாலும்… நம் நினைவுகள் உயிருடன் ஒன்றும் ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்
இராமன் எப்பொழுது கல்யாணராமன் ஆகின்றான்…?
தீமைகளை விளைவிக்கும் வில்லை… அந்த அம்பினை ஒடித்து விடுகின்றான். தீமைகள் செய்யாத உணர்வினை எப்பொழுது தனக்குள் விளைவிக்கின்றானோ அப்போதுதான் மற்றவரை அரவணைக்கும் தன்மை வருகிறது… சீதாவை அரவணைத்துக் கொள்கிறான்… கல்யாணராமா.
அரவணைக்கும் உணர்வைத் தனக்குள் சேர்த்து… பேரன்பு கொண்ட உணர்வினை வளர்த்து ஒன்றிய நிலைகள் கொண்டு இயக்கப்பட வேண்டும் என்பதற்குத் தான் “கல்யாணராமா…!” என்று காவிய காப்பியங்களில் தெளிவாக்கப்பட்டுள்ளது.
எத்தகைய தீமையின் உணர்வுகள் வந்தாலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று அதை எண்ணி தீமை நமக்குள் விளைந்து விடாது அதை ஒழித்தல் வேண்டும்.
ஒருவன் தீமை செய்கிறான் என்று உற்றுப் பார்த்து நுகர்ந்து விட்டால் தீமை செய்யும் உணர்வே நமக்குள்ளும் வரும். நமக்குள் இருக்கும் நல்ல குணங்களை அழித்திடும் எண்ணங்களையே அது உருவாக்கும்.
வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்திலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று என்ற உணர்வினை நமக்குள் இணைத்தால்
1.அந்தத் தீமைகள் நமக்குள் விளையாதபடி
2.அருள் உணர்வின் தன்மையை அரவணைப்பதாகக் கல்யாணராமனாக மாற முடியும்.
நம் உடலில் இதனின் வலிமை ஆகிவிட்டால்
1.யார் நமக்குத் தீமை செய்தனரோ அதை அடக்கும் நிலைகள் வரப்படும் பொழுது
2.இதே உணர்வின் எண்ணங்கள் நம்மைப் பார்க்கும் பொழுது அவர்கள் உணர்வுகளை அடக்கும் தன்மை வருகின்றது.
3.அவருடைய செயலாக்கங்கள் அவர்களையே ஒடுக்கிவிடும்
4.யார் ஒருவர் தீமை எண்ணுகின்றனரோ அவருள்ளே நின்று அவர் அதற்குள்ளேயே மடிவர்.
ஆகவே அருள் ஞானிகளின் உணர்வை நாம் நுகர்ந்தால் நமக்குள் விளையும் தீமையை அடக்கி வலிமை மிக்கதாக மாற்றிக் கொள்ளலாம்.
இதைத்தான் விழித்திரு…! என்ற நிலைகளில் மகா சிவன்ராத்திரி என்று காட்டுகின்றார்கள்.
இந்த உலகில் ஒவ்வொரு நாளும் எத்தகைய தீமைகளைக் கேட்டுணர்ந்தாலும் பார்த்தாலும் அந்தத் தீமை நமக்குள் விளையாதபடி ஒவ்வொரு நொடியிலும் நாம் விழித்திருத்தல் வேண்டும்.
பத்திரிகையைப் பார்த்துப் படித்தபின் அல்லது டி.வியைப் பார்த்தபின் அவர்கள் இப்படிப் பேசினார்கள்… இவர்கள் இப்படிப் பேசினார்கள்… இவர்கள் இதைச் செய்தார்கள்… கெடுதல் செய்தார்கள்…! என்று
1.மற்றவர்கள் பார்த்தவர்கள் பதிவு செய்ததை எண்ணத்தால் எண்ணி நாம் பேசும் பொழுது
2.அதே உணர்வு நமக்குள் பதிவாகி எந்த நிலையை அவர்கள் செய்தார்களோ அதையே நுகர்ந்து
3.மோசமான ஆள்…! என்று நாமும் அந்தக் கெடுதலையே பேசத் தொடங்குவோம்.
அப்போது அவர்கள் எத்தகைய மோசம் செய்தார்களோ அதே மோசத்தின் தன்மை நமக்குள்ளும் விளைகின்றது இதைப் போன்ற நிலைகள் வரும் பொழுதெல்லாம் உடனடியாக மாற்றுதல் வேண்டும்.
இதற்குத் தான் நீ விழித்திரு என்று சொல்வது…! ஏனென்றால் இதை ஒவ்வொரு செயலிலும் ஒவ்வொரு சமயத்திலும் உங்களுக்கு மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்துகின்றோம் (ஞானகுரு).
நாம் மறந்து இருந்தாலும்… அடுத்த கணமே…
1.மற்றவருடன் பேச்சுத் தொடரான பின் நம் நினைவின் ஆற்றலை உயிருடன் புருவ மத்தியில் ஒன்ற வேண்டும்
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
3.எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவன்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும்.
4.நாங்கள் பார்ப்போர் எல்லாம் நலம் பெற வேண்டும்
5.எங்களைப் பார்ப்போருக்கு எல்லாம் நல்ல எண்ணம் வர வேண்டும்
6.நாங்கள் பார்ப்போருக்கு எல்லாம் நல்ல எண்ணம் வர வேண்டும் என்று இந்த உணர்வுகளை இணைத்தல் வேண்டும்.
பகைமையான உணர்வுகளை நமக்குள் வளர்த்து விட்டால் அதே உணர்வுக்கு அது இரை தேடும்… அதற்கு உணவு கொடுத்தாக வேண்டும். ஆனால் அதற்குப் பதிலாக
1.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுடன் இணைத்து
2.அந்தத் தீமைகளை நமக்குச் சாதகமாக்கிக் கொள்ள வேண்டும்.

சிந்தனைச் சிலையைச் சீர்படுத்தத் தான் தெய்வச்சிலையை வைத்தார்கள் ஞானிகள் – ஈஸ்வரபட்டர்
நம் முன்னோர்கள் ஒலியின் நாதம் கொண்டு ஒளித் தன்மை வளரும் உண்மையைத் தன் சித்தத்தில் அறிந்து கொண்டனர்.
சூரியனும் சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்களுக்கும்… பூமியின் தொடர்பு பெற்ற இருபத்தி ஏழு நட்சத்திரங்களுக்கும்… சனிக் கோளில் உருவாகிக் கரையும் பன்னிரண்டு கோள்களுக்கும் தொடர்பு கொண்டு… பன்னிரண்டு மாதங்களின் நாமகரணத்தை ஒலியின் ஒளியால் சூட்டினார்கள்.
இயற்கையின் தொடர்களை…
1.கோள்களின் ஈர்ப்பில் விகித கணிதத்தை வான சாஸ்திரத்தில் அறிந்த தொடரில்
2.ஒவ்வொரு ஜீவ உயிரின் வீரியமுமே… மூன்று நட்சத்திர ஒலி ஒளி பெற்ற பின் தான்
3.ஜீவ உயிரணு உயிர் பெறுகின்றது.
மனித நிலை பெற்ற பின் அடுத்த நிலை பெற மனித உணர்வின் எண்ண அலையின் ஜீவகாந்த ஈர்ப்பு வலுப் பெறுவதினால்… வலுவின் தொடர் இப்பூமி இழுக்கும் ஒலி அலைகளைக் காட்டிலும் மனித ஜீவ உணர்வின் வீரியம் பெற்று விடுகின்றது.
பூமியின் தொடரிலேயே… நடைமுறை வழக்கத்திற்கொப்ப மனிதன் வாழ்ந்தான் என்றால்
1.இப்பூமி எதன் தொடரில் சக்தி பெற்று… சமைத்து பூமியின் வளர்ப்பின் வளர்ச்சி சுழற்சி வளர்கின்றதோ
2.அதன் அதன் ஈர்ப்புப் பிடிப்பில் தான் இப்பூமியில் பிறந்த நாம்
3.இப்பூமியின் ஈர்ப்பு சுழற்சியுடன் சுழன்று கொண்டிருக்க முடியும்.
ஜீவகாந்த பகுத்தறியும் எண்ண உணர்வைக் கோள்களின் தொடர்புடன் மனிதன் வளர்க்க வேண்டும் என்பதற்குத்தான் மனிதனின் உண்மை நிலையை சிவரூபத்தில் உணர்த்தினார்கள் நம் முன்னோர்களாகிய அன்றைய ரிஷிகள்.
சிக்கலைத் தீர்க்க சிலை வைத்தான்
சிந்தனைச் சிலையை (மனித உடல்) உணர்ந்தானா…?
சிறுமையின் உருவாய் சிலையென்று
சந்தியில் நிற்கும் நிலையென்ன…?
சஞ்சலத்தில் சச்சரவை
சங்கடத்தில் சிக்கலின்றி
சிந்தனையில் சீர்தூக்கி
சிந்தைதனில் சீர்படுத்து…!
(சிவன் படமும் விளக்கமும்)
இதன் தொடரை மனிதன் பெற்றால் மனித நிலை தெய்வ நிலை பெறக்கூடிய தொடர்பிற்கு வளர முடியும். ஒளி கொண்டு ஒளி பெறும் ஆத்ம பலத்தின் தொடர்பைப் பெறலாம். ஆகவே இயற்கையின் தொடர்புடன் உயரும் நிலை தான் தெய்வ நிலை.
இப்புவியின் ஈர்ப்பில் வளரும் கனிவளங்களும் மற்றத் தாவரங்களும் சத்தெடுத்து அதனதன் மாற்றுத் தன்மை சிலவற்றில் வீரியமாக இருப்பது போன்று
1.இயற்கையின் ஒலித்தன்மையில் மனித ஜீவாத்மாவில் சிலருக்கு
2.சரீர உணர்வின் ஜீவ நிலையே ஒளித் தன்மை கூடியிருக்கும்.
அத்தொடரில் இயற்கையை ஒன்றி… கோள்களின் தொடர்புடன் எண்ணத்தில் ஒளிரும் ஆத்மா… நட்சத்திர நிலை போன்று என்றுமே மாறாத நிலையில்… இப்பால்வெளி மண்டலத்திலுள்ள எண்ணிலடங்கா அமிலத்தின் சமைப்பை எடுக்கவல்ல “ஜோதி நிலை பெற்று… வளர்ச்சியின் வளரும் நிலை பெறலாம்…”
ஆனால்… மனித நிலையிலேயே பிற ஆத்மாவின் ஈர்ப்பின் ஒலி அலைகள் சாடும் நிலைக்குத் தன் ஆத்மாவை அடகு வைக்கும் நிலை தான் “மந்திர தந்திர மாய நிலை…!”
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
குடும்பத்தில் நான்கு பையன்கள் இருப்பார்கள். திருமணம் எல்லாம் ஆன பிற்பாடு அதில் ஒருவர் மிகவும் செல்வச் செழிப்பாக இருப்பார். வசதியாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.
அதே சமயம் இன்னொரு பையன் குடும்பத்தில் கொஞ்சம் சிரமமாக இருக்கும். தொழில் மற்றவைகளில் சிரமப்பட்டுக் கொண்டிருப்பார்.
வசதியாக இருப்பவரிடம் சென்று பண உதவி கேட்கும் பொழுதெல்லாம் அவரும் உதவி செய்கின்றார். பணம் வாங்கினாலும் சிரமப்படுபவரோ அதிலிருந்து மீள முடியவில்லை.
பண உதவி செய்தவர் எடுக்கும் எண்ணம் எப்படி வருகின்றது…?
நாம் எத்தனையோ தடவை உதவி செய்தோம்…! ஆக அவர்களுக்குப் பணத்தைக் கொடுத்துக் கொடுத்துத் தவித்துப் போய்விட்டது என்று வேதனைப்படுவார்கள்.
வேதனைப்பட்டாலும்… எப்படியோ அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் சரி… என்று மீண்டும் பணம் கொடுப்பார்கள்.
அந்தப் பணத்தை வாங்கும் பொழுது “ஊ..ஹ்ம்..,” இவர்களிடம் எவ்வளவு பணம் இருக்கிறது…! ஏன்…? எனக்குக் கொஞ்சம் கூடப் பணம் கொடுக்கக் கூடாதா…! என்று இந்த வேதனையை எடுத்து பண உதவி செய்பவர்களைச் சாடுவார்கள்.
உதவி செய்யும் நோக்கத்தில் பணம் கொடுத்தாலும் பின்னாடியே இந்தச் சாபமும் வருகிறது.
1.நன்மை செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றார்கள்.
2.மனிதன் ஆறாவது அறிவு மற்றவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று செய்தாலும்
3.அது் சித்திரை – சிறு திரையாக அந்தத் தீமைகள் மறைக்கின்றது.
சிரமப்படுவோர் குடும்பத்திலே அவர் அறியாது சேர்த்த நஞ்சின் தன்மையால் வாழ்வில் கஷ்டப்படுகின்றார்கள்.
பாலில் பாதாமைப் போட்டாலும் நஞ்சு விழுந்து விட்டால் அதைக் குடித்தால் எப்படி இருக்கும்…? நம்மை மயக்கப்படச் செய்யும்.
இதைப் போல மனிதனின் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் ஏற்படுத்தப்பட்ட இந்த நஞ்சு அவர்களை அறியாது அவ்வாறு செயல்படுத்தி விடுகின்றது. என்ன செய்வார்கள்…?
1.அதிலிருந்து மீள முடியாது.
2.சிந்திக்க முடியாது. மறைத்து விட்டது… இது சித்திரை.
இதைப் போன்று வரும் தீமைகளை நீக்க வேண்டுமல்லவா…?
ஒருவருடைய தீமையினுடைய நிலைகளை அகற்ற இரக்கம் கொண்டு பாவம் கஷ்டப்படுகின்றார் என்று எண்ணி அவர் தெளிந்த வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காக “இந்தாப்பா… என்று ஒரு ஐம்பது அல்லது நூறு ரூபாயைக் கொடுக்கின்றோம்.
நூறு ரூபாய் கொடுத்ததும் அவர் என்ன நினைப்பார்…? இந்த நூறு ரூபாய் எந்த மூலைக்குக் காணும். பத்தவே பத்தாது…!
இவ்வளவு வசதி படைத்தவர் ஒரு ஆயிரம் ரூபாய் கொடுக்கக் கூடாதா? வசதியாக இருக்கின்றவர் வெறும் நூறு ரூபாய் கொடுக்கிறார். ஏன்…., ஆயிரம் ரூபாய் கொடுக்கக் கூடாதா…! என்று இந்த எண்ணம் வரும்.
1.ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும்
2.இவருடைய நிலைக்கு எந்த வியாபாரமும் சரியாக வராது.
ஆனால் ஆயிரம் ரூபாய் கொடுத்தால் வியாபாரத்தைச் சரி செய்து விடலாம் என்பது ”பணம் வாங்க வேண்டும்…” என்று விரும்புபவருடைய எண்ணம்.
1.மனம் சீர்படவில்லை என்றால்
2.இந்த ஆயிரம் ரூபாயும் கரையத்தான் செய்யும்… வளர முடியாது.
3.மனம் சோர்வடைந்து விட்டாலும் வேதனைப்பட்டாலும் இந்த ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும்
4.இந்த உணர்வு… தன்னுடைய மனமே தனக்கு எதிரியாகி விடும்.
என் குடும்பம் இப்படி இருக்கின்றதே என்று வேதனை எடுக்கும் போது அந்தக் கஷ்டமான நேரத்தில் என்னென்ன எண்ணங்கள் வரும்…?
1.அவன் அப்படிப் பேசுகின்றான்.. இவன் இப்படிப் பேசுகின்றான்…
2.என்னை ரொம்பக் கேவலமாகப் பேசுகின்றான்
3.காசு இருந்தால் தான் என்னை மதிக்கின்றார்கள்
4.என்னை யாருமே இப்போது மதிக்கவில்லை என்ற இந்த உணர்வுகள் தான் வரும்.
இதை இப்படி எடுத்துக் கொண்டபின் இது அடுத்துப் பேசும் போது சொல்களும் அதுவாகத் தான் வரும்.
சில பேர் என்ன செய்வார்கள்…? மிகவும் கஷ்டமாக இருக்கும் போது அவர்களிடம் ஒரு நூறு ரூபாய் கேட்டுப் பாருங்கள். அவர்கள் விடும் “பெரு மூச்சையும்… பார்வையையும்… அந்தச் சொல்லையும்… பாருங்கள்.
1.அவர்கள் நல்லதாகத் தான் சொல்ல வேண்டும் என்று நினைக்கின்றார்கள்.
2.ஆனால் அந்த உணர்வு விடவில்லை.
இசைக் கருவியில் உதாரணமாக வீணையில் ஒரு நரம்பு சுருதி தளர்ந்து விட்டால் என்ன செய்யும்…? நாதங்கள் மாறி விடும்.
ஏழு சுருதி இருக்கின்றது. அந்த நரம்புகள் இறுக்கமாகச் சரியான முறையில் பொருத்தப்பட்டிருந்தால் சுருதி சமமாக இருக்கும். வெளிப்படும் நாதங்கள் இனிமையாக வரும்.
அந்த நரம்புகள் கொஞ்சம் தளர்ந்து விட்டால்
1.எப்படி நாதங்கள் மாறுகின்றதோ இதைப்போல
2.மனிதனின் உணர்வுகள் மாறும் பொழுது
3.வெளிப்படும் நாதங்கள் அந்தச் சொல்கள் மாறும்.
அவனுக்குள் இயக்கும் நிலைகள் அப்பொழுது அந்த இனிமை வராது. சொல்லில் இனிமை வராது. தன்னுடைய மனமே ஆன்மாவே எதிரியாகும்.
இதை போன்ற நிலைகளிலிருந்து நம்மைத் தூய்மையாக்குவது எப்படி…?
நமக்குள் தீமையான உணர்வுகள் வித்தாகி வளர்ந்து பின் விளைந்து அது கனியாக விடாதபடி தடுக்க வேண்டும்.
நுகர்ந்த உணர்வின் தன்மை அந்தக் குணத்தை இயக்குவது ஒலி. ஒலி ஒன்று தான். அந்த ஒலியின் தன்மை கொண்டு உள்ளிருந்து ஒளியாக அந்த மணத்தை நம் மனதை மாற்றுகின்றது.
ஒலி ஒளி என்று இருந்தாலும் அந்த உணர்வின் தன்மை நமக்குள் எடுக்கும் பொழுது
1.உயிரின் தன்மையால் தான் அது இயக்குகின்றது.
2.உயிரால் அறியும் ஆற்றல் வரும் போது
3.மெய் ஞானிகளின் உணர்வுகளைத் தனக்குள் எடுத்தால்
4.அந்த அறிவின் தன்மை கொண்டு நம் வாழ்க்கையில் வரும்
5.சிறு சிறு திரைகளாக – தீமைகள் மறைப்பதை மாற்றிட முடியும்.
6.ஒளியின் தன்மை நமக்குள் பெருகும்.
ஆக நம் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு மகரிஷிகளின் உணர்வுகளைப் பெற வேண்டும் என்று அதை எடுத்துத் துடைக்க வேண்டும்.


எந்த மகரிஷியின் உணர்வை வலுப்படுத்துகிறோமோ அவருடன் நாம் இணைய முடியும்
ஒரு வேதனைப்படுவர் உணர்வை நாம் நுகரப்படும் பொழுது அது வாலி ஆகி… நம் நல்ல குணங்களைச் செயலற்றதாக மாற்றிவிடுகின்றது. நம் வலிமை இழககப்படுகின்றது
இதனை மாற்றுவதற்குத் தான் வாலியை இராமன் “மறைந்திருந்து தாக்கினான்..” இந்த நிலைகளைக் காட்டுகின்றார்கள்.
மறைந்திருந்து என்றால் இத்தகைய தீமைகளை வென்றவன் மகரிஷி. அந்த மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் எடுத்துக் கொண்டால் அந்த உணர்வின் வலிமை நமக்குள் கவரப்படும் பொழுது வாலி என்ற அந்த நஞ்சினை ஒடுக்க முடியும்…!
அதுதான் பரசுராம். அதனுடைய வலிமை எதுவாக இருப்பினும் தனக்குள் அடக்கித் தன் செயலாக மாற்றிக் கொள்ளும். அந்த நஞ்சினை இயக்குவதற்குப் பதில் தனக்குள் வலிமை கொண்டதாக மாற்றிவிடும்.
உதாரணமாக… விஞ்ஞான அறிவுப்படி செய்தாலும் சரி மெய்ஞான அறிவுப்படி செய்தாலும்
1.ஒரு நல்ல மருந்திற்குள் விஷத்தைச் சிறிதளவு கலந்து விட்டால்
2.அந்த மருந்திற்கு வீரிய சக்தி உண்டாகின்றது.
இந்த விஷத்தின் துடிப்பின் வேகத்தால் நல்ல மருந்து உடலுக்குள் ஊடுருவிச் செல்கிறது. நல்ல மருந்திற்குள் இந்த விஷத்தின் தன்மை சேர்த்தபின் உடலுக்குள் ஊடுருவி
1.வேதனைப்படும் இடங்களில் நல்லவைகளைக் கொண்டு குவிக்கின்றது.
2.நல்லவைகளை அங்கு அதிகமாக குவிக்கப்படும் போது
3.வேதனையை (நோய்) உருவாக்கும் அணுக்களுக்கு இரை இல்லாது தடைப்படுத்தி அந்த அணுக்களை மடியச் செய்கின்றது.
4.பின் அந்த நல்ல உணர்வின் சத்தை நல்லவைகளாக மாற்றி நோய்களை அகற்றுகின்றது.
வேதனையான உணர்வுகளை நாம் சுவாசிக்கும் பொழுது வேதனையின் அணுக்கள் உருவாகி நல்ல அணுக்களைக் கொன்று புசிக்கத் தொடங்கி விடுகின்றது. நல்ல அணுக்களால் உருவான உடலின் தன்மை நலியத் தொடங்கிவிடுகிறது.
ஆகவே… நாம் எப்போதெல்லாம் தீமைகளை பார்க்கிறோமோ அப்போதெல்லாம்
1.இந்தத் தீமைகளை வென்றிடும்… வென்றிட்ட… அருள் ஞானிகளின் உணர்வுகளை
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்ற எண்ணத்தை
3.அதனுடன் இணைத்துப் பழகினால்… தீமை நமக்குள் வளராது அதை அடக்கித் தனக்குச் சாதகமாக்கிவிடும்.
ஒரு விஷத்தின் தன்மை… தீமை என்று இருப்பினும் நல்ல மருந்துடன் அது இணைக்கப்படும் பொழுது அதை நல்லவையாக மாற்றிவிடுகின்றது.
இதைப் போன்றுதான் அருள் ஞானிகளின் உணர்வுகளை இந்த வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் தீமைகளை பார்க்கிறோமோ அப்போதெல்லாம் அந்த துருவ மகரிஷிகளின் உணர்வை நுகர்ந்து பழகுதல் வேண்டும்.
நாம் நுகர்வது எதுவாக இருந்தாலும் முதலில் நம் உயிரிலே பட்டுத் தான் உணர்வுகள் கலக்கின்றது. அத்தகைய கலக்கும் இடத்தில்…
1.எப்போது தீமையைப் பார்த்தோமோ தீமையைக் கேட்டோமோ அந்த நேரங்களில் எல்லாம்
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இணைத்தல் வேண்டும்.
அப்போது இரண்டும் இணைக்கப்படும் பொழுது தீமையை விளைவிக்கும் அணுக்கள் விளையாது தடுக்கப்படுகின்றது.
ஆனால் மகரிஷிகளின் உணர்வுகள் நமக்குள் விளையும். இது சமப்படுத்தும் உணர்வாக நம் உடலில் உருவாகி
1.எந்த ஞானியின் உணர்வை நாம் வலுப்பெறுகின்றோமோ
2.அங்கே அவனிடம் நம்மை அழைத்துச் செல்லும்.

நீங்கள் மகானாக முடியும் – ஈஸ்வரபட்டர்
மனிதன் தான் மகானாக முடியும்… மாமகரிஷியாக முடியும்… மண்டலமாக முடியும்… மனித குணங்களை உருவாக்க முடியும்…! மதி கொண்ட உயர் ஞானத்தால் மனித உணர்வின் எண்ணத்தைப் பக்குவப்படுத்திக் கொண்ட மனித உணர்வில்… மனிதன் முதலில் வாழ்க்கையில் “எளிமையைக் கடைப்பிடித்தல் வேண்டும்…”
வாழ்க்கையில் எளிமையும்… ஆத்மாவில் சுகத்தையும்… அனுபவிக்கும் எண்ணத்தின் குணத்தைப் பெறும் மார்க்கமே மனிதன் மனிதனாக்கும் முதல் நிலை.
இம்முதல் நிலையில் மனிதனால் எடுக்கப்படும் அறிவின் பகுத்தறிவு… உயர் ஞானத்தின் மெய் ஞானத்தில் கண்டறியும் உண்மையின் சக்தியை… மனிதருக்குள் மனிதராய் விதைக்கப்படும் ஒலி அலைகள் ஒளி பெறும்.
1.ஆகவே மனிதனைப் பக்குவப்படுத்தும் நிலைதான் மகானாகக்கூடிய நிலை என்பது.
2.“உயர்ந்து விட்டோம்…” என்பதை விட்டு
3.“உயர்ந்திடுவோம்…” என்ற எண்ணம் வர வேண்டும்.
பிற ஆத்மாக்கள் மனிதனின் (தன்) உயர்வைக் கண்டு… நாடி வந்து வணங்க வேண்டும்… என்ற எண்ணத்தில் இருளைக் கூட்டிக் கொள்ளும் பொழுது “எம்மனிதனும் மகானாக முடியாது…”
தன் உயர்வை உயர்த்திக் காண வேண்டும் என்றால்…
1.பிறரை உயர்த்தும் பொழுதுதான் தான் உயர முடியும்
2.தன் உயர்வை நாடி எல்லாம் வர வேண்டும் என்று எண்ணுவதல்ல உயரும் நிலை…!
சூரியன் எப்படி மற்றக் கோள்களின் அலையைத் தான் பெற்று… தன்னில் அதைச் சமைத்து மீண்டும் ஒளியைத் தந்து உருளுகின்ற உண்மையில்… சூரியத் தொடர்பில் சுழலக் கூடிய கோள்கள் தானும் ஓர் நாள் வளர்ந்து… தன்னுடைய ஈர்ப்பின் சுழற்சியில் குடும்பம் அமைத்து… அதுவும் சூரியனாக வளர்ச்சி அடையக்கூடிய நிலையை அது அது பெறுகிறது.
அண்ட கோள்களில் உருள்பவை யாவும்… மண்டலக் கோள்களின் ஈர்ப்பில் மோதப் பெறும் சமைப்பு நிலையால்தான் “மறு நிலை… உரு நிலை…” பெறுகின்றது.
இத்தொடரின் சூட்சுமமே ஜீவகாந்த ஒளித் தன்மை உயிர்ப்பு நிலை வந்த பிறகு தான். ஜீவ ஆதி நிலை கொண்டு
1.ஆரம்ப நிலை – புழு நிலை
2.முதிர்வு நிலை ஜீவனின் தொடர் – மனித நிலை
3.மனித நிலையில் மகானாகி – ஒளி பெறும் நிலை
4.என்றென்றும் வளரும் நிலை – வளர்ச்சியின் ஒளி நிலை.
5.மனிதனின் நிலை தான் – தெய்வமாகும் நிலை.
இதை அறிந்து… மனிதனிடம் இருக்கும் “எண்ணத்தின் பகுத்தறிவு தான் உண்மையான சொத்து…” என்பதை உணர்ந்து
1.ஒவ்வொரு மனிதனுக்கும் நல்லுணர்வைத் தந்து
2.நல்லொழுக்கத்தை ஆத்ம பலத்தில் வளர்க்கும் உரமிடுபவன் நிச்சயம் மகானாக முடியும்.
“மனிதருக்குள் தெய்வம்” என்று மகான்களைக் சொல்வதைப் போல்… தன் உணர்வின் எண்ணத்தில் சுகத்தைக் காணும் “ஆத்ம பலத்தின் ஒளித் தன்மை பெற” சரீர வாழ்க்கையில் எளிமையைக் காணுங்கள்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
மருந்தே இல்லாத நோய்களையும் கூட நீக்கக்கூடிய மிக மிக எளிதான பயிற்சி – மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டியது
மகரிஷியின் அருள் சக்தியால் எங்கள் உடல் நலம் பெற அருள்வாய் ஈஸ்வரா. மகரிஷியின் அருள் சக்தியால் ஆஸ்த்மா நோய் நீங்கி உடல் நலம் பெற வேண்டும் ஈஸ்வரா… என்று சொல்லி ஒரு ஐம்பது தரமாவது எண்ணிச் சுவாசியுங்கள்.
இதே போல் கேன்சரோ மற்ற எந்த நோயாக இருந்தாலும் சரி… மகரிஷியின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து உடலில் கேன்சர் நோய் நீங்கிட அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணுங்கள்.
மகரிஷியின் அருள் சக்தியால் உடல் நலம் பெற வேண்டும் என்று முந்நூறு தரமாவது முதலில் சொன்ன மாதிரிச் சுவாசித்து அந்த உணர்வுகளை உங்கள் உடலுக்குள் செலுத்துங்கள்.
1.இந்த நோய் தன்னாலேயே போய்விடும்.
2.நீங்கள் எந்த மருந்தைச் சாப்பிட்டாலும் சரி இந்த மாதிரிச் செய்யுங்கள்.
3.மருந்து சாப்பிடுவதற்கு முன்பும் இதே மாதிரிச் செய்யுங்கள்.
ஏனென்றால் இன்றைய வேகமான விஞ்ஞான உலகில் மருந்து சாப்பிட்டுப் பழக்கமாகிப் போய்விட்டது. அதைச் சாப்பிடும் போது மகரிஷிகளின் உணர்வை எண்ணிக் கொண்டு நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்.
இந்தச் கேன்சருக்கெல்லாம் இன்று மருந்தே இல்லை என்று கூடச் சொல்லலாம். இந்தத் தியானத்தின் மூலம் அதை நீக்க முடியும். நீங்கள் எண்ணும் எண்ணங்கள் உங்கள் உடலுக்குள் சென்று அந்தக் கேன்சரை நீக்கி விடும்.
இதைப் பழக்கப்படுத்தினால் உங்கள் எண்ணங்களுக்கு மிக மிக வலிமையான ஆற்றல்கள் கூடும். அத்தகைய நிலை பெறச் செய்வதற்கே இந்தத் தியானப் பயிற்சி.
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழிப்படி இதைக் கடைப்பிடிக்க… நோய் நீக்கும் சக்தி உங்களுக்குக் கிடைக்கும்.
இதைப் போல நீங்கள் தியானித்து உங்கள் நோய்களைப் போக்கி அதனால் மகிழ்ந்திடும் நிலை வரும் போதுதான் என் குருவை உங்களில் நான் காண்கிறேன்.
சாதாரணமாகச் சொல்கின்றேன்…! என்று எண்ண வேண்டாம். உங்களுக்குள் அந்தச் சக்தி பெருகவே எமது குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களுக்கு இதை வாக்கின் மூலம் பதிவாக்குகின்றேன்.
ஒவ்வொரு மனிதனும் தன் மூச்சால் பேச்சால் பார்வையால் பிறருடைய தீமைகளையும் போக்க முடியும்.
நண்பனுக்கு ஒரு நோய் வந்தாலும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று சுவாசித்து விட்டு
1.உன் நோய் நீங்கி விடும்
2.நலமாக இருப்பாய் என்று சொல்லுங்கள்.
3.இந்த வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.
அவர் நோயால் அவதிப்படுகிறார் என்பதைக் கேட்டுணர்ந்தாலும் சோர்வடையாது மீண்டும் நூறு தரம்
1.மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
2.எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.
3.எங்கள் ஜீவான்மா பெற வேண்டும் என்று எண்ணிச் சுவாசியுங்கள்
4.மகரிஷியின் அருள் சக்தி அவர் உடல் முழுவதும் படர வேண்டும்.
5.அவர் உடலிலுள்ள நோய்கள் நீங்க வேண்டும்.
6.அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும் என்று நீங்கள் எண்ண வேண்டும்.
நீங்கள் இந்த உணர்வை எண்ணினால் கீதையிலே சொன்னது போல் நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய்.
1.மற்றவர்கள் நலமாக வாழ வேண்டும் என்று நாம் எண்ணும்பொழுது
2.நலமடையும் சக்தியை நாம் முதலில் பெறுகின்றோம்.
தீமைகளை அகற்றும் ஞானியின் உணர்வை நமக்குள் வளர்க்கப்படும்போது தீமையை அகற்றிடும் சக்திகள் நமக்குள் விளைகின்றது.
அந்தத் தீமையை அகற்றும் ஆற்றல்களை நாம் பெற்றால் தான் இந்த உடலை விட்டு நாம் அகன்றால் பிறிதொரு உடலின் ஈர்ப்புக்குச் செல்லாதபடி மகரிஷியின் அருள் வட்டத்திற்குள் செல்ல முடியும்.
அங்கே சென்று உடல் பெறும் நிலையைக் கருக்கிவிட்டு உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக நிச்சயம் பெற முடியும்.
ஏதோ… எளிதில் சொல்கின்றேன். எளிதில் கிடைக்கச் செய்கிறேன் என்று அலட்சியப்படுத்தி விடாதீர்கள்.
நீங்கள் பெற வேண்டும் என்று நான் சதா தியானிக்கின்றேன். எனது குரு அருள் உங்களுக்குக் கிடைக்கவேண்டும் என்று எண்ணுகிறேன்.
குரு அருளால் உங்களை அறியாது சேர்ந்த தீமைகள் தீய வினைகள் நீங்க வேண்டும் என்றும் உங்களை அறியாது சேர்ந்த பாவ வினைகள் சாப வினைகள் அனைத்தும் நீங்க வேண்டும் என்று தியானிக்கின்றேன்.
மகரிஷிகள் அருள் சக்திகளை நீங்கள் பெற்று உங்களை அறியாது சேர்ந்த தீமைகளை நோய்களை நீங்களே நீக்க முடியும் என்ற இந்தத் தன்னம்பிக்கையில் செயல்படுங்கள்.
உணவை உட்கொள்ளும் போதும் உணவில் கை வைத்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணிவிட்டு பின் உட்கொள்ளுங்கள்.
அந்த அலைகள் அந்த உணவுக்குள் பாயும். சிறிது நேரம் ஆகாரத்தில் கையை வைத்து விட்டு
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
2.எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.
3.எங்கள் ஜீவாத்மா பெற வேண்டும் என்று குறைந்த பட்சம் பத்து தரமாவது எண்ணுங்கள்.
நான் உணவாக உட்கொள்ளும் இந்த உணவு அனைத்தும்
1.என் உடலுக்குள் நலம் பெறும் சக்தியாக வளர வேண்டும்.
2.மன பலம் மன வளம் பெறும் சக்தியாக மலர வேண்டும் என்று எண்ணி மகிழ்ச்சியுடன் உணவை உட்கொள்ளுங்கள்.
3.இந்த உணர்வின் உமிழ் நீர் சுரக்க சுரக்க
4.இந்த உணர்வுகள் சத்துள்ளதாகக் கூடி
5.உங்களுக்குள் நல்ல சக்தியாக நலம் பெறச் செய்யும் சக்தியாக வளர இது உதவும்.
இதை நீங்கள் பயிற்சியாகச் செய்து உங்கள் அனுபவத்தில் நல்ல முன்னேற்றங்களைப் பார்க்கலாம்.


எவ்வளவு தைரியசாலியாக உடல் வலுவுள்ளவராக இருந்தாலும்… சோர்வு வந்து விட்டால் எந்தக் காரியத்தையும் செய்ய விடாது
இன்று ஒன்றுமே செய்ய வேண்டாம்…! பத்திரிக்கையைப் படித்தாலே போதும்… அல்லது டி.வி.யைப் பார்த்துக் கொண்டிருந்தால் போதும்.
இந்த வீட்டில் கொள்ளை அடித்தார்கள்… அந்த வீட்டில் திருடினார்கள்… இப்படி ஏமாற்றினார்கள்… பல கொடுமைகள் நடக்கிறது… என்ற செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. நமக்குள் அது எல்லாம் பதிவாகிக் கொண்டே வரும்.
இன்றைய உலகில் வலு உள்ளவன் என்ன செய்கிறான்…?
காட்டில் உள்ள மிருகங்கள் தன் வலுவைக் கொண்டு தான் மற்றதை அடித்துப் புசிக்கின்றது. அதைப் போன்றுதான் இன்று பத்து நூறு பேர் சேர்ந்து வலுவாகி விட்டால் அவர்கள் தான் ராஜா.
அடுத்தவர்களிடம் ஒரு இடத்தை நான் கேட்கிறேன் கொடு…! என்பார்கள். கொடுக்கவில்லை என்றால்… “பார்க்கலாம்…!” என்பார்கள்.
பின் தன்னுடைய அதிகாரத்தில் அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்துவிட்டு “எனக்குத் தான் அது சொந்தம்…” என்பான். எந்த வகையில் நீ வருவாய்…? பார்ப்போம்…! என்பார்கள்.
இன்று இந்த அளவிற்கு மனிதனுடைய ஆக்கிரமிப்பு உணர்வுகள் அதிகமாகி விட்டது. நாம் தவறு செய்யவில்லை விஞ்ஞான அறிவால் இதையெல்லாம் இன்று பத்திரிகையிலே பார்க்கின்றோம்… படிக்கின்றோம்.
இப்படி எல்லாம் நடந்தது…! என்று உடனுக்குடன் நாம் அறிகின்றோம் ஆனால் அதை என்ன… ஏது…? என்று எண்ணும் போது இந்த அறிவின் தன்மை நமக்குள் பதிவாகி அங்கே உருவான உணர்வின் ஒலியை நாம் நுகர்ந்து அதையே உடலில் அணுவாக உருவாக்கி விடுகின்றது நம் உயிர்.
1.முதலில் படிக்கும் போது ஒன்றும் தெரியாது
2.அணுக்கள் விளைந்து விட்டால் அடிக்கடி இந்த நினைவு வரும்.
பத்திரிக்கையைப் படித்தோம் டி.வியில் பார்த்தோம் என்று அடுத்தவரிடம் பேசுகிறோம் அல்லவா.
1.இங்கே இப்படி நடந்தது அங்கே இப்படி நடந்தது என்று (இரண்டாவது தரம்) சொல்லும் பொழுது
2.இந்த உணர்வுகள் உடலில் உருவான அணுவிற்கு மீண்டும் சாப்பாடாகப் போய்க் கொண்டே இருக்கின்றது.
3.தன் இனத்தை அது பெருக்க ஆரம்பித்து விடுகின்றது.
நம் உடலில் நல்ல உணர்வுகளைப் பெருக்குவதற்கு… நல்லதைக் கொஞ்ச நேரமாவது பேசுகிறோமா என்றால் இல்லை. பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்க மாட்டேன் என்கிறது.
1.என்னதான் நல்லது செய்தாலும்
2.இப்படி ஆகிவிட்டதே…! என்ற நிலையில் தான் இருக்கின்றோம்.
இதைத்தான் “விழித்திரு…” என்ற நிலைகளில் அந்தத் தீமை வரப்படும் போதெல்லாம் அதை இடைமறித்தல் வேண்டும்… விழித்தல் வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் சப்தரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் ஜீவான்மா பெற வேண்டும் எங்கள் ஜீவ அணுக்கள் பெற வேண்டும்… என்ற உணர்வினை எடுத்துவிட்டு
1.எந்தக் காரியம் நடைபெற வேண்டுமோ…
2.என் பார்வை அவர்களை நல்லவராக்க வேண்டும்
3.என்னை நினைக்கும் போதெல்லாம் அவர் நல்லவராகும் நிலைகள் வர வேண்டும் என்று
4.இந்த உணர்வினைக் கலந்து வெளிப்படுத்த வேண்டும்.
இத்தகைய நிலைகளை இந்த வாழ்க்கையில் நாம் அதை விழித்திருந்து செயல்படுதல் வேண்டும்.
தொழிலில் முதலில் லாபம் வரும் பொழுது… எல்லாம் சந்தோசமாக இருப்போம். சிறிதளவு நஷ்டம் ஆகி விட்டால் போதும். அங்கே கொடுத்தேன் காசு வரவில்லை… இங்கே கொடுத்தேன் காசு வரவில்லை… இப்படி ஏமாந்து போய்விட்டேன்…! என்று என்ற எண்ணங்கள் தான் வரும்.
அத்தகைய எண்ணங்கள் உருவாகி விட்டால் அதனால் உருவான அணுக்கள் அதே நினைவினைச் சுவாசிக்கும்போது பலவீனமான எண்ணங்களை நமக்குள் உருவாக்கிக் கொண்டுதான் இருக்கும்.
அதே உணர்வுகள் இதற்கு உணவாகப்படும் பொழுது இந்த நல்ல உடலில் அந்தத் தீமையின் செயலாக நம்மைச் சோர்வடையச் செய்துவிடும். சோர்வான எண்ணங்கள் அது உணவாக ஆனபின் என்ன ஆகும்…?
நாம் எவ்வளவு தைரியசாலியாக இருந்தாலும் கூட…
1.உடல் வலுவாக இருக்கும்
2.சோர்வின் தன்மை வரும் பொழுது எந்த வேலையையும் செய்ய முடியாது
3.சிந்திக்கும் தன்மையைyum இழக்கச் செய்கின்றது.
இதைப் போன்ற நிலையில் இருந்து நாம் விடுபட வேண்டும் என்றால் நீ விழித்திரு…!
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா பெற வேண்டும் எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று ஒவ்வொரு நிமிடமும் நம் ஆன்மாவில் தீமை புகாது தடுக்க வேண்டும்.
நாம் சுவாசிக்கும் உணர்வுகள் எதன் அடிப்படைக் காரணமாக வருகின்றதோ… உடனடியாக விழித்து… அதைத் தனக்குள் அடக்க வேண்டும்
ஆகவே…
1.தீமையின் உணர்வுகள் உருவாக்கப்படும்போதெல்லாம்
2.அருள் ஞானியின் உணர்வை நாம் எடுத்து உடலுக்குள் இணைத்து
3.அந்தத் தீமைகளை அடக்குதல் வேண்டும்.

ஆறைக் கடந்தால்… நிலை ஏழு… “சப்தரிஷி” – ஈஸ்வரபட்டர்
1.அறுசுவையின் முதிர்வு உணரும் நிலை ஏழு…
2.வண்ணத்தில் ஏழும்… இப்பூமியின் சுழற்சியில் இப்பூமிக்கு ஏழு நாட்களின் வாரத் தொடர்பும்…
3.“சப்தரிஷிகளின்…” ஏழு நிலையின் உண்மைத் தத்துவ நிலையும் தான் இப்பூமியின் உண்மை நிலை.
ஐம்புலனைப் பகுத்தறியக் கூடிய நிலை கொண்டது தான் “ஆறறிவு பெற்ற மனித நிலை…” மிருகங்கள் ஐந்து நிலையைப் பெற்றிருந்தாலும் இயற்கையின் தொடர்புடன் புல்லையும் பூண்டையும் நீரையும் இயற்கையுடன் ஒட்டித்தான் அதனுடைய ஜீவ வாழ்க்கை வளருகின்றது… வாழுகின்றது.
உண்ணவும் உடுக்கவும் இருக்கவும்… தன் ஆறாம் அறிவை மனித ஞானம் பயன்படுத்திக் கொண்டது.
ஏழாம் நிலையான உயர் ஞானத்தால் இச்சரீர உணர்வின் அறுகுணத்தின் அறியும் நிலை கொண்டு அடையும் நிலையை மாற்றி… ஞானத்தால் உணரும் மெய் ஞானம் கொள்ளும்… “ஏழான நிலையை” மனிதன் பெற வேண்டும்.
அதைப் பெறச் செய்வதற்குத்தான்… இப்பூமியின் சுழற்சியின் மூல அமில ஒலியின் சப்தரிஷி ஒளி செயலினால்… ஏழு தன்மையின் வளர்ப்பின் செயல் சக்தி ரிஷித் தொடர்பினால்… இப்பூமியில் வளரக் கூடிய மூலத்தின் கருவின் வித்தில் வளர்ந்த பலன்கள் தான் அறு குணம் பெற்ற நிலை.
1.இந்தப் பூமியின் முதிர்வு நிலை மனித நிலை ஆறறிவு நிலை…! அதற்கு அடுத்த நிலை மெய் ஞான நிலை
2.மெய் ஞானம் பெற்ற மனித நிலையும் இந்தப் பூமியின் சுழற்சியில் முதிர்வு நிலை
3.இவ் ஏழைக் கடக்கும் மெய் ஞானி தன் சித்தத்தை உணர்ந்த சித்தனாகி விட்டால்
4.அது எட்டாம் நிலையான அஷ்டமாசித்து நிலையை அடையும் நிலை.
இயற்கையின் மெய் உணர்ந்து மெய் ஞானத்தால் ஒளி பெற்றுத் தன் சித்தத்தின் வலுவாகும் சித்து நிலையே ரிஷியாகும் வழி நிலை.
இப்பூமியின் உணர்வுடன் இப்பூமியின் சுழற்சியில் எடுக்கக்கூடிய ஒலி அலைகள் யாவையும்… தன் ஒளியாய் எடுத்து இவ்வாத்மாவின் ஒளி ஒளிரக் கூடிய தன்மை ஒவ்வொரு ஆத்மாவிற்கும் அந்தத் தகுதி உண்டு.
வளர்ச்சியின் தொடர் வளர… மனித உணர்வில் தன் சரீர உணர்வால் மனிதன் பெறக்கூடிய கண்டு… கேட்டு… நுகர்ந்து… சுவைத்து… உணரும்.. இந்த ஐந்து நிலையும் அடையும் நிலை மனிதனுக்கே உண்டு.
இந்த ஐந்து நிலையில் இனிமை நிலை கூட்டுவது… மனித நிலையில் இரு நிலையான ஒவ்வொரு இயற்கை நிலையிலும் தன்னுடன் மோதக்கூடிய
1.ஜீவ நிலையான பெண்மை நிலை… வளர்ச்சி நிலை…
2.அறுநிலை கொண்ட முதிர்வு நிலை… சிவசக்தி நிலை…
3.பெண் சக்தியின் வளர்ச்சியின் தொடர் கொண்டு வளரக்கூடிய நிலைக்குத்தான்
4.சப்தரிஷியின் சக்தித் தொடர்பை உணர்ந்த ரிஷிகள்… சக்தியைப் பெண்ணாகக் காட்டினார்கள்.
மனித உணர்வில் அடையக் கூடிய இவ் அறு நிலைக்கும் முதிர்வு நிலையான… மெய் ஞானத்தை உணரும் ஜீவ நிலையை ஒவ்வொரு மனிதனும் அடைய வேண்டும்.
ஏழான ஜீவ நிலையுடன் எட்டாகும் சித்தனால் ஒவ்வொரு கோள்களாய் உருவாகும் தன்மை எடுக்கும் இவ்வுணர்வின் எண்ணம் கொண்டு தான் உயர முடியும்.
பிற ஒலி அலைகளை இச்சரீர உணர்வுடன் எடுக்கும் சித்து என்பது..
1.இப்பூமியின் சுழற்சியுடனே…
2.இவ்வுடலை விட்டு ஆத்மா பிரிந்தவுடன் (ஆவிகள்)
3.எந்தெந்த ஒலியெல்லாம் எடுத்து இச்சரீரத்தைச் சித்தாக்கி வளர்த்துக் கொள்கின்றோமோ
4.அதன் ஈர்ப்புப் பிடிப்பினால் ஆத்மாவைச் சிதற அடிக்கும் நிலைதான் சித்து விளையாட்டு நிலை. (இதிலே நாம் சிக்கக் கூடாது)
மனிதன் எத்தாய் தந்தை தந்த இஜ்ஜீவ உடலைப் பெற்றானோ அதைப் போன்றே தாய் தந்தையென்ற ஆத்மாவில் மனித ஜீவனை மனிதன் பெற்ற தொடரைப் போன்று இரண்டு ஆத்மாவின் ஒரு நிலையான எண்ணத்தின் ஒற்றுமையால்
1.உணர்வின் இன்பம் (உடலின் இன்பமல்ல) உணர்வின் இனிமையை… ஆத்மாவின் இனிமையாய்…
2.ஆத்மாவின் ஜீவ இனிமை நிலையை மனித உணர்வுடன் உள்ள பொழுதே
3.குணத்தின் அன்பால் உணரக்கூடிய சம குணமுடன்
4.விண்ணிலிருந்து வரும் மின் காந்த ஒலியை இருபாலரும் எடுத்து ஒளியாக மாற்றிட வேண்டும்.
ஆகவே இச்சரீர வாழ்க்கையில்… மனிதனென்ற வித்தின் மூலத்தைத் திருமூலமாக்கும் மந்திரம் தான் இது..! இரு குணத்தை ஒரு குணமாக்கி அன்பென்னும் ஆலயத்தைச் சிவசக்தியாக்கச் செய்யும் ஒவ்வொருவரையும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
“ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…” என்று உங்கள் உயிரை எண்ண வேண்டும்.
1.ஓ…ம் ஈஸ்வரா… என்றால்
2.எனக்குள் “ஜீவனாக இருந்து…” உருவாக்கிக் கொண்டிருக்கின்றாய்… என்று பொருள்.
ஓம் ஈஸ்வரா என்று எண்ணும் போது உயிரைப் புருவ மத்தியில் எண்ண வேண்டும். குருதேவா என்கின்ற போது உடலுக்குள் இருக்கும் அனைத்து குணத்திற்கும் நம் உயிரே “குரு…” என்ற நிலைகளில் மதித்துப் பழக வேண்டும்.
ஆகவே… ஈசன் என்றாலே உங்கள் உயிரைத்தான் நினைவில் கொள்ள வேண்டும் என்று ஆழமாகப் பதிவு செய்து கொள்ளுங்கள். ஈசன் எங்கேயோ இருந்து நம்மை இயக்குகின்றான் என்று வெளியிலே தேட வேண்டியதில்லை.
குரு என்றால் உங்கள் உடலில் உள்ள அனைத்திற்கும் குருவே அவன் தான். அந்தக் குருவை மதிக்க வேண்டும்.
ஏனென்றால் உயிர் ஒளியாகப் பெற்றவன். குரு ஒளியாக இருக்கின்றான். அந்த ஒளியின் நிலை பெற வேண்டும் என்ற ஆறாவது அறிவின் தன்மை கொண்டு எண்ணினால் தான் குருவை மதிக்கின்றோம் என்று பொருள்.
குருவாக… நம் உயிரை நினைக்கும் போது
1.அது ஒளியாக நின்று நமக்குள் எவ்வாறு தெளிவுபடுத்துகின்றதோ
2.அதைப் போல நாம் அந்த குருவை மதித்துப் பழக வேண்டும்.
3.உயிரை ஈசனாக மதித்துப் பழக வேண்டும்.
இல்லை என்றால் மனிதன் என்ற நிலைகள் ஆறாவது அறிவு படைத்தும் நாம் பரிணாம வளர்ச்சியின் நிலைகள் தேய்பிறையாக இருக்க முடியுமே தவிர வளர்பிறை என்ற நிலைகளில் உயிரின் உணர்வின் தன்மை கொண்டு நிலை கொண்ட சரீரமான அருள் ஞானி உணர்வைப் பெற வேண்டும் என்றால்
1.நாம் உயிரை மதித்துப் பழக வேண்டும்.
2.ஞானிகள் உணர்த்திய அதை நாம் பின்பற்ற வேண்டும்.


ஆயிரம் நன்மைகள் செய்திருந்தாலும்… ஒருவன் நம்மை அவமதிக்கின்றான் என்றால் அதிலிருந்து விலகத் தெரிய வேண்டும்
விண்ணிலே உருவான உயிரணு பூமியின் ஈர்ப்புக்குள் வருகிறது. வந்த பின்… ஆரம்பத்திலே (உதாரணமாக) அந்த உயிர் ஒரு பருத்திச் செடியின் மீது விழுகிறது என்று வைத்துக் கொள்வோம்.
1.அந்த உணர்வை நுகரும் பொழுது அது ஊழ்… ஆகி அது வினைக்கு நாயகனாக இயக்கத் தொடங்கி விடுகின்றது… புழுவாக உருப்பெறுகிறது
2.உயிருடன் அது முதலிலே ஒன்றுகின்றது… அந்த உணர்வின் சத்தை நுகர்கின்றது
3.நகர்ந்து சென்று மீண்டும் அது தன் இரையைத் தேடுகின்றது.
முதலில் பரிணாம வளர்ச்சியில் வரும் பொழுது இந்த நிலை…!
பல கோடிச் சரீரங்களில் பரிணாம வளர்ச்சி ஆகி இன்று மனிதனாக வளர்ந்தபின் ஒருவர் நம்மைக் கோபிக்கின்றார்… தன் வாழ்க்கைக்காக பல தவறுகளைச் செய்து நாம் தவறு செய்யாமலேயே நம் மீது அபாண்டமான நிலைகளில் பொய்யைச் சொல்கிறார்… வேதனைப்படும் செயலைச் செயல்படுத்துகின்றார்.
1.நமது கண் அந்த மனிதனைப் படம் எடுக்கின்றது…
2.எலும்புக்குள் ஊனாகப் பதிவாக்கி விடுகின்றது. அதுதான் ஊழ்வினை என்பது.
பின் அவன் எத்தகைய தீமைகளை நமக்குச் செய்தானோ அந்த மனித உடலில் இருந்து வந்த உணர்வின் அலையை நம் கண்ணுடன் சேர்ந்த காந்தப் புலனறிவு கவர்ந்து நம் ஆன்மாவாக முதலில் மாற்றுகின்றது.
உயிர் அவ்வாறு தன் ஆன்மாவாக மாறியதை இழுத்து நம் உயிருடன் ஒன்றி நமக்குள் உணரச் செய்கின்றது. உணர்ந்தாலும் அது ஓ… என்று ஜீவ அணுவாக மாற்றி நம் உடலாக மாற்றி விடுகின்றது.
1.முதலில் நாம் எதை எண்ணுகின்றோமோ… அது ஊழ்வினை என்ற வித்தாக ஆன பின்
2.அந்த உணர்வின் சத்து கருவாகி உடலுக்குள் உருவாகத் தொடங்கி விடுகின்றது.
அவன் எத்தகைய வேதனையை உருவாக்கினானோ அந்த உணர்வின் தன்மையை நமக்குள் அணுவாக உருவாக்கி விட்டால் அது தான் அதற்கு உணவு.
காரணம்… அணுவாக உருவாகிய பின் அது மீண்டும் தன் உணவுக்காக உணர்ச்சிகளைத் தூண்டும். இதை உருவாக்கியது யார்…?
உயிர்.
அந்த உயிரின் தன்மை கொண்டு நாம் நுகர்ந்தபின்… அது தாயல்லவா…!
1.எந்த மனிதன் நம்மை வேதனைப்படும்படி சொன்னானோ அந்த உணர்வினை நுகரப்படும் பொழுது
2.அவனின் நினைவாற்றல் நமக்குள் மீண்டும் மீண்டும் வருகிறது.
3.நம்மை கெட்டுப் போக வேண்டும் என்று எண்ணிய அந்த உணர்வலைகளை அனுப்புகின்றான்.
4.அதே உணர்வின் சத்தை நம் உடலில் உருவான அணுக்கள் உணவாக எடுத்துக் கொள்கிறது.
இதை நன்றாகக் கவனமாகத் தெரிந்து கொள்ளுங்கள்…!
நாம் ஆயிரம் நன்மைகள் செய்தாலும் ஒருவன் நம்மை கெட்டுப் போக வேண்டும் என்று உறுதியாகச் சொன்னான் என்றால் ஆழமாக அதை பதிவு செய்து விட்டால் அந்த எண்ணம் அந்த எண்ணம் உங்களைக் கெட்டுப் போகவே வைக்கும்.
அதிலிருந்து தப்புவதற்கு வழி வேண்டும் அல்லவா… அதுதான் விழித்திரு…!
1.“விழித்திரு…” என்றால் ஒருவர் நமக்குத் தீமை செய்கிறார் என்று உற்று நோக்கினால்
2.அந்த உணர்வுகள் தனக்குள் வராதபடித் தடுத்து நிறுத்த… அப்பொழுதே நாம் விழித்திருத்தல் வேண்டும்.
தாய் தந்தையரை எண்ணி ஓ…ம் ஈஸ்வரா… என்று உயிரான ஈசனிடம் கண்ணின் நினைவைக் கொண்டு செல்தல் வேண்டும்.
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று அந்த உணர்வுகளை ஏங்கிப் பெறுதல் வேண்டும்.
நம் உடலை உருவாக்கிய அணுக்களுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உணவாகக் கொடுத்துப் பழக வேண்டும்.
அடுத்து… நாங்கள் பார்ப்பவர்கள் அனைவரும் நலம் பெற வேண்டும். யார் யாரையெல்லாம் சந்தித்தோமோ அவர்கள் குடும்பங்களில் எல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும்… மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தி அவர்கள் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
1.மெய் ஞானிகளால் நமக்குக் காட்டப் பெற்ற அந்த அரும் பெரும் சக்திகளை எடுத்து…
2.நம்மைக் காத்திடும் உணர்வாக என்றும் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.
அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை உணர்வை நம் நல்ல குணங்களுடனும்… சோர்வடைந்த மற்ற உணர்வுகளுடனும் இணைத்து அதை நாம் தியானித்து வருவோம் என்றால் நம்மிடமிருக்கும் இருள்கள் அகல்கின்றது.
1.பொருளறிந்து செயல்படும் உணர்வாக
2.அந்த மெய் ஞானிகளின் உணர்வுகள் நம்மிடத்தில் இயக்கம் பெறுகின்றன.
நாம் மகிழ்ந்து வாழும் அருள் சக்தி பெறுகிறோம்.

நாம் பெறும் உயர் ஞானம் மற்றவருக்குப் பயனுள்ளதாக இருக்க வேண்டும் – ஈஸ்வரபட்டர்
பசு மடியில் சுரக்கும் பால்… தன் கன்று குடித்து அதன் பின் மீண்டும் பலரும் பருக அது பயன்படுகின்றது.
1.அந்தப் பசு மடி சுரக்கும் பால் போல்
2.நாமெடுக்கும் உயர் ஞானத்தின் தன்மை
3.பலருக்கும் பயன்படக் கூடியதாக இருக்க வேண்டும்.
நாமெடுக்கும் உயர் ஞானம் நம் உயிரானது… நம் உயிராத்மா கன்று போல் பருகி… பலரும் பருகக்கூடிய பலனாய் ஞானியின் சக்தியாகச் செயல்படல் வேண்டும்.
ஒவ்வொருவருக்குமே… தன் உணர்வில்… தன் எண்ணத்தால்… தன் ஆத்மாவில் பதியப்பட்டது தான் நியாயமாகவும்… உண்மை என்றும்… புலப்படும். ஆகவே
1.தன் உண்மைக்கு ஒத்த கருத்துக்கள் கொண்டு உறவாடுவதை தனக்கு உகந்ததாயும்
2.மாறுபட்ட எண்ணங்கள் யாவையுமே எதிர்ப்பு உணர்வைத் தோற்றுவிக்கும் எதிர் நிலைகளைத்தான் உண்டு பண்ணும்.
இந்த உண்மைகளை எல்லாம் அறியக்கூடிய உயர் தன்மைக்காகத்தான் அன்றைய மாமகரிஷிகள் மனிதனுக்குள் இறைத் தன்மையை வளர்க்கும் நிலையை நெறிப்படுத்தினார்கள்.
மனிதனுக்கு மேல்… மேல் நிலையாக தெய்வ குணங்களையும்… தெய்வச் சிலைகளையும்… ஆலயங்களையும்… நல்லொழுக்க நடைமுறைக்குக் கொண்டு வந்து… உண்மையின் சித்தத்தை மனிதன் அறியச் சீரிய வழிகளையும் வழிப்படுத்திச் சென்றனர்.
இதை உணர்ந்து…
1.நாம் ஒவ்வொருவருமே தெய்வ குணங்களைப் பெற்று
2.தெய்வ சக்தியை வளர்த்துத் தெய்வங்களாகும் தன்மை பெறல் வேண்டும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவர் தமக்குள் மெய் ஞானத்தை விளைய வைத்தார். அவருக்குள் விளைவித்ததை எமக்குள் பதியச் செய்தார்.
பதியச் செய்த ஞான வித்தை எனக்குள் (ஞானகுரு) வளர்த்துக் கொண்டேன். அவர் காட்டிய அதே அருள் நெறி கொண்டு அந்த ஞான வித்தை உங்களுக்குள் திரும்பத் திரும்பப் பதியச் செய்கின்றோம்.
அந்த ஞான வித்தை வளரச் செய்வதற்குக் கூட்டுத் தியானப் பயிற்சியையும் கொடுத்துள்ளோம்.
ஒருவர் தீமையை விளைவிக்கும் உணர்வைக் கேட்டறிந்த பின் அதே தீமையைச் செயல்படுத்தும் உணர்வாக நம்மையும் அது இயக்குகின்றது.
இதைப் போன்று தான் இந்த அருள் ஞான உபதேசங்களைக் கேட்டுணர்ந்த உணர்வின் தன்மையை
1.உங்கள் உயிர் ஜீவனாக்குகின்றது.
2.உங்கள் உடலுக்குள் உள்ள எலும்புக்குள்
3.ஊழ் வினை என்ற வித்தாகப் பதிவு செய்கிறது.
அதை மீண்டும் நினைவு கூறும்போது வினைக்கு நாயகனாக அதனுடைய இயக்கமாக உங்களைச் செயல்படுத்தும்.
மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர்
1.அவர் விண்ணின் ஆற்றலைக் கண்டுணர்ந்த உணர்வின் சத்தை
2.அதை “வித்தாக உருவாக்கி…” என்னில் அதைப் பதியச் செய்தார்
3.அந்த வித்தினைப் பலவாறாக.. “நீ பெருக்கு…” என்றார்.
தீமையை அகற்றிடும் அருள் ஞான வித்தாக உங்களுக்குள் பதியச் செய்கின்றோம். உங்கள் எண்ணத்தால்
1.இதைப் படித்துனர்ந்தாலும் கேட்டுணர்ந்தாலும்
2.அந்த மகரிஷிகளின் உணர்வுகளை ஈர்க்கும் நிலைக்கு வர வேண்டும்
3.பதிவாக்கியதை நுகர்ந்து… கவர்ந்து… சுவாசித்து… இழுத்து… உங்கள் உடலுக்குள் சேர்க்க வேண்டும். (இது மிகவும் முக்கியம்)
ஆறாவது அறிவின் தன்மை கொண்டு ஏழாவது நிலைகள் பெற்று இன்று சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் மகரிஷிகள் அவர்கள் வாழ்ந்த காலத்தில் இன்னொரு மனிதனின் ஈர்ப்புக்குள் சிக்காது உணர்வை ஒளியாக மாற்றி விண்ணுலகம் சென்றவர்கள்.
அத்தகைய எண்ணத்தை நாம் கவர வேண்டுமானால் அதற்குச் சமமான வலு நமக்குள் வேண்டும். ஒரு நூலை வைத்து எடை கூடிய பொருளைத் தூக்கினால் அந்த நூல் அறுந்துவிடும். ஆனால் பல நூல்களை இணைத்துக் கயிறாக்கித் திரித்துத் தூக்கினால் எடை கூடிய பொருளை எளிதில் தூக்க முடியும்.
பல பேர் சேர்ந்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று கூட்டமைப்பாக எண்ணும்போது அந்த மெய் ஞானிகளின் அருளை எளிதில் பெற முடியும்.
இப்போது கேட்டுணர்ந்தோம்… இது சிறு துளி தான். சிறு துளி பெரு வெள்ளமாகப் பெருக வேண்டும்.
மழை காலங்களில் சிறு துளியானாலும் பெரு வெள்ளமாக எப்படித் திரண்டு ஓடுகின்றதோ
1.அவ்வாறு ஆயிரக்கணக்கானோர் இதை எண்ணி
2.மகரிஷிகளை உணர்வின் எண்ணத்தால் எண்ணும் போது,
3.அவருக்குச் சமமாக இந்த எண்ணம் வலுப் பெறுகிறது.
4.அப்பொழுது இலகுவில் அதைப் பருகும் தன்மை வருகிறது.
அதைப் பருகிய பின் அந்த அருள் ஞானத்தை ஊழ் வினையாக உங்களுக்குள் விளையச் செய்து அதை வினைக்கு நாயகனாக ஆக்கும்போது அதன் நாயகனாக இயக்கி
1.உங்கள் வாழ்க்கையில் தீமைகளை அகற்றி,
2..தீமைகளை அகற்றும் சக்தியாக விளைந்து,
3.அருள் ஞானி உணர்வுடன் ஒன்றி
4.என்றும் பிறவா நிலை என்னும் பெருநிலையை நீங்கள் அனைவரும் அடைய முடியும்.
பெற்ற சக்திகளின் துணை கொண்டு இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளை நீங்களாகத் தான் நீக்க வேண்டுமே தவிர சாமியார் செய்வார்… சாமி செய்யும்… ஜோசியம் செய்யும்… ஜாதகம் செய்யும்… மந்திரம் செய்யும் என்று எண்ண வேண்டாம்.
உங்களை நீங்கள் நம்புங்கள்… உங்களால் முடியும்.


உத்தராயணம் என்பதன் முக்கியத்துவம்
மகா சிவன் ராத்திரி என்ற நிலைகளில் விநாயகர் தத்துவத்தைப் பார்க்கப்படும் போது… விண்ணுலகில் விளைந்த அனைத்தும் மண்ணுலகில் விளைந்துள்ளது. அந்த உணர்வின் தன்மை ஒவ்வொரு தாவர இனங்களில் மணமும் குணமும் அறிவும் ஞானமுமாக இணைந்துள்ளது.
அதிலிருந்து வந்த அந்த உணர்வுகளைத் தான்
1.முன் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு ஒப்ப உடல்களுக்குள் அதை வினையாகச் சேர்த்து
2.மகா என்ற நிலைகள் அடைந்து.. மகா சிவன்… மகா சிவமாக… இந்த மனித உடலை உருவாக்கியுள்ளது… மகா சிவன் இராத்திரி.
அன்றைய தினம் இதை எல்லாம் முழுமையாக அறிந்துணர்ந்த மகரிஷிகளின் உணர்வை உற்று நோக்கி… விண்ணை நோக்கி ஏக வேண்டும். காரணம்… “இருளான இந்தச் சரீரத்தைக் கடந்து… வெளியே சென்று…” உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றியவர்கள் அந்த மகரிஷிகள்.
“முருகு…” மாற்றியமைக்கும் ஆறாவது அறிவின் துணை கொண்டு இன்றும் விண்ணுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் ஒளி எங்களுக்குள் படர வேண்டும்… அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று விழித்திருக்க வேண்டும்…!
இதை எல்லாம் ஏன் சொல்கிறோம் என்றால்
1.உணர்வுக்குள் இருக்கும் உயிரை உடல் மறைத்தது…
2.அதே சமயத்தில் உணர்வின் நல்ல எண்ணங்களை வேதனை என்ற நஞ்சின் தன்மை மறைக்கின்றது.
3.கோபம் என்ற கார உணர்ச்சிகள் நல்ல உணர்வுகளை அது மறைக்கின்றது
இதைப் போன்று
1.இருளுக்குள் இருளாக மறையச் செய்யும் இந்த உணர்வின் தன்மையை
2.இருளுக்குள் ஒளியாக மாற்றிய அருள் ஞானியின் உணர்வை நுகர்ந்து நம் உடலுக்குள் இணைத்து
3.நல்ல உணர்வின் ஞானத்தை மறைத்திடும் அந்த இருளைப் போக்கி அந்த ஞானிகளின் உணர்வுடன் ஒன்றி
4.வாழ்க்கையில் தெளிந்திடும் நிலைகள் கொண்டு அந்த ஞானியின் உணர்வுகளை நமக்குள் பொங்கச் செய்து
5.நம்மையும் மகிழச் செய்து.. நம்மைப் பார்ப்போர் நிலைகளையும் மகிழச் செய்ய வேண்டும்… மகிழ்வாகனா…!
ஆகவே வாழ்க்கையில் இது வரையிலும் வந்த தீமைகளை நீக்கிவிட்டு மெய் ஞானியின் உணர்வை நமக்குள் பொங்கச் செய்து
1.ஆறாவது அறிவால் “உத்தராயணம்” என்று ஞானிகள் பால் திசை மாற்றி
2.மெய் ஞானியுடன் நம் வாழ்க்கையை இணைத்து
3.எத்தகைய இருள் ஆனாலும் அதைப் பிளந்திடும் நிலை பெற வேண்டும் கார்த்திகேயா…!
4.ஒளி பட்டபின் அங்கிருக்கும் பொருள்களை எல்லாம் காணுவது போல நாம் ஒளியாக மாற வேண்டும்.
வாழ்க்கையில் கண்டுணர்ந்த தீமைகள் உங்களை இயக்கினாலும் அந்தத் தீமையை இயக்கும் தன்மையைப் பிளந்து… மெய் ஞானிகளின் உணர்வை நுகர்ந்து… மெய்யுணர்வின் தன்மையை உங்களுக்குள் வளர்த்து… ஒளியின் சரீரமாக ஆன அந்த மகரிஷிகளின் உணர்வின் சக்தியாக நீங்கள் மலர வேண்டும் என்பதற்குத் தான் மகா சிவன் இராத்திரி என்று இதை உபதேசிப்பது (ஞானகுரு).
காரணம் நாம் பல கோடிச் சரீரங்களிலும் எடுத்துக் கொண்ட உணர்வெல்லாம் நமக்குள் மகா சிவனாக நம் உடலின் தன்மை அமைந்துள்ளது.
அந்த இருளுக்குள்… (நம் உடலுக்குள்)
1.உயிருடன் ஒன்றிய உணர்வின் செயலாக நமக்குள் உணர்த்திக் கொண்டு
2.உணர்வின் இயக்கமாக அறிந்து கொண்டு அதனின் அறிவாக நமக்குள் தெளிந்திடும் நிலையாக
3.புற நிலையைக் கண்டுணரச் செய்யும் ஆறாவது அறிவாக நமக்கு முன் இருப்பதை
4.தீமைகளை விலக்கி மெய்ப்பொருளைக் காணும் உணர்வின் ஆற்றலாகப் பெற்றால் “அது தான் கார்த்திகேயா…!”
ஆறாவது அறிவால் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் என்பது போல மெய் ஞானிகளின் உணர்வை நமக்குள் கவர்ந்து நமக்குள் இருள் சூழ்ந்திருக்கும் உணர்வின் குணங்களைப் பிளந்து மெய் ஞானியின் உணர்வைத் தனக்குள் இணைத்து மெய்ப்பொருள் கண்டுணர்ந்த உயிருடன் ஒன்றுவோம்.
1.மெய்ப்பொருள் என்பது உயிரே மெய்ப்பொருள்
2.உயிரின் இயக்கமாக உணர்வின் தன்மைதான் அதனுடன் இணைந்த பொருள். (உயிர் என்பது மெய்… நுகரும் போது உணர்வு… பொருள்)
ஆகவே ஒவ்வொரு நொடியிலும் நமக்குள் உணர்ந்திடும் உணர்வை ஒளியின் சரீரமாக மெய்ப்பொருளாக… மெய்யுடன் மெய்யாக… என்றும் ஒளியின் சிகரமாக அடைந்திட முடியும் என்ற இந்தத் தன்னம்பிக்கையில் இதை உபதேசிக்கின்றேன்.
உத்தராயணம்…! நாம் திசை மாற்றி மெய் ஞானியின் உணர்வை நாம் பெற்றிடுவோம்.
1.உடல் பெறும் உணர்வை மாற்றிவிட்டு
2.மீண்டும் மீண்டும் உடல் பெறும் அந்தத் திசையை மாற்றிவிட்டு
3.உயிருடன் ஒன்றிய அழியா ஒளியின் சரீரமாக மாற்றுவோம்.

கனவு வாழ்க்கை வாழாமல் நிலையாக வாழும் மகரிஷிகளுடன் சங்கமமாக வேண்டும் – ஈஸ்வரபட்டர்
பஞ்சு மிட்டாய் செய்யும் பொழுது… வேகக்கூடிய உஷ்ணமும்… அவ் இயந்திரம் ஓடக்கூடிய ஓட்டத்திலும்… “ஒரே பக்குவ நிலையில் ஓடும் பொழுது தான்…” ஒன்று போல அம்மிட்டாய்களைச் செய்ய முடிகின்றது. சிறிது பக்குவம் மாறினாலும் அமைப்பின் தன்மை மாறி விடுகின்றது.
அதைப் போன்றே… இயந்திரங்களில் நூற்பாலைகளில் பஞ்சின் தரத்தில் நூற்கப்படும் நூல்கள் ஓட்டத்தின் சமத்தைக் கொண்டு ஒரே போல் தரமுடன் நூல் நூற்கப்படுகின்றது. இயந்திர விசையின் வேகமோ… செயலாக்கும் திறமையில் மாற்றமோ ஏற்படும் பொழுது… நூலின் தரம் மாறுபடுகிறது இது செயற்கை.
ஓர் மரத்தில் காய்க்கும் காய்கள் அனைத்தும் ஒன்று போல் உருவத்தில் இருப்பதில்லை. பெரிதாகவும் சிறிதாகவும் கரடு தட்டியும் பூச்சி புழுக்கள் அரித்தும்… பூக்களானாலும் சரி… காய் கனிகளானாலும் சரி… ஒரே மரத்தின் கனியிலேயே மாறுபாடுகள் அந்தந்தக் கிளைகளில் எடுக்கப்படும் சத்தின் ஈர்ப்பைக் கொண்டு கனியின் வளர்ச்சி பிரிக்கப்படுவதை நாம் காண்கின்றோம்.
அதைப் போன்று ஒரு தாயின் குழந்தைகள் உணர்வின் தன்மைக்கொப்ப குணங்கள் மாறுபடுகின்றது. ஆனால் ஒரே சூலில் பிறக்கும் இரட்டைக் குழந்தைகள் பிறந்து… தன் எண்ணத்தின் உணர்வு கொண்டு தானாய் வளரும் தருணம் வரை… இரண்டு குழந்தைகளின் உணர்வுகள் ஏறக்குறைய ஒன்று போல் இருக்கின்றன.
சூரியனின் ஒளி ஈர்ப்பில் பூமியின் எந்த நட்சத்திர ஒளிகளின் அலைத் தன்மை அதிகப்படுகின்றதோ அத்தருணத்தில் உருவாகக்கூடிய குணத்திற்கொப்ப… பிறப்பின் நிலை… ஜீவ அணுக்களின் வளர்ச்சி வலுக் கொள்கின்றது.
அந்தந்தத் தருணத்திற்கொப்ப நொடிக்கு நொடி மாறிக் கொண்டுள்ள சுழற்சி ஓட்டத்தில்… உணர்வின் எண்ணத்தில் மெய் அறியக்கூடிய பக்குவத்தை வளர்க்கும் மெய் ஞானியின் தன்மையும்… ஒன்றை ஒத்து ஒன்று இருக்காமல்.. மாறு கொண்ட நிலை இயற்கையின் உணர்வில் வளர்கின்றது.
செயற்கையின் தன்மையில் இயந்திர விசையின் ஓட்டத்தில் ஒன்றைப் போன்ற செயலைத் தரத்தில் செயலாக்க முடிகின்றது.
எப்படி மனிதனின் எண்ண உணர்வு செயற்கையின் விஞ்ஞானத்தில் பல செயல் திறமைகளை வளர்க்க முடிகின்றதோ… அதைப் போன்று இயற்கையில் மெய் உணரும் பக்குவ வழிமுறையை…
1.உணர்வின் எண்ணத்தில் எடுக்கக்கூடிய ஞானத்தை
2.நாம் ஒன்றை எண்ணும் பொழுது… மீண்டும் மீண்டும் அதையே எண்ணிக் கொண்டுள்ள தருணத்தில்
3.அவ்எண்ணத்திற்கு ஜீவித வலுவை ஆத்மாவின் பதிவாகச் செயல்படுத்தி விடுகின்றோம்.
எப்படி தோசையை சுட்டுப் போடும் பொழுது முதலில் சுட்ட தோசைக்கும் மேல் மேலும் அதற்கு மேலேயே சுட்டுப் போடும் பொழுது மேலிருக்கக்கூடிய உஷ்ணத்தை எடுத்து கீழிருக்கக்கூடிய தோசையும் சூடாகவே இருக்கின்றது அல்லவா…!
அதைப் போன்று…
1.நல்ல வழியோ தீயவையோ ஒன்றின் தொடரை எண்ணி எண்ணி
2.அதே தொடரில் எண்ணத்தை ஓட்டும்பொழுது
3.அதன் வலுவின் தன்மைதான் ஆத்மாவின் பதிவு.
ஜீவ ஆத்மாவின் உயிர் காந்தத்திற்கு… உண்மையான நல் உணர்வின் ஒளித் தன்மையை நம்மில் பெறுவதற்கு…
1.உயர் ஞானிகளின் எண்ணத்தை
2.சரீர ஓட்டத்தின் வாழ்க்கைத் தொடர் “கனவில்” அதிகமாக எண்ணத்தைச் செலுத்தாமல்
3.ரிஷிகளின் எண்ணத்தில் நம் எண்ணம் செல்லும் பொழுது
4.அவர்கள் பெற்ற ஒளித் தன்மையின் வலுவின் வட்டத்தில் நம் உயிர் ஜீவ அலைகள் பதிவாகி
5.நம் ஒளி வட்டமே உண்மைத் தன்மையை அறியக்கூடிய மெய் ஞானத் தன்மை பெற்று விடுகின்றது.
உணர்வில் மோதப்படும் வாழ்க்கையின் விருப்பு வெறுப்பற்ற வழித் தொடர் அடைய… நம் ஒளியின் தன்மை வளர்ச்சியின் வலுவினால்…
1.சலிப்பு சோர்வு என்ற வேண்டாத நிலைகள்… தீயவை எதுவாகிலும்…
2.அதை எல்லாம் சுட்டுப் பொசுக்கக்கூடிய ஒளித் தன்மையாக
3.ஆத்மாவில் மோதப்படும் எதுவாகிலும் அதை நம் இச்சைக்கு கட்டுப்படக் கூடிய செயலுக்கு
4.உணர்வின் எண்ணத்தை நாம் செலுத்தி எடுக்கக்கூடிய ஞானத்தின் தன்மை தான் “மெய் உணரும் தியான முறை…!”
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
சாலையில் போகும் போது குளித்துச் சுத்தமாக வெண்மையான உடையைப் போட்டுக் கொண்டு போகிறோம் என்று வைத்துக் கொள்வோம்.
அந்த நேரம் நாம் போகும் பாதையில் பன்றியோ அல்லது மாடோ எதுவோ சாக்கடையில் இருக்கிறது. அது தன் வாலை வீசுகின்றது. அந்தச் சேறு ஒரு துளி நம் மீது பட்டுவிடுகிறது.
எறும்பு கடிக்கிறது என்றோ அல்லது ஈ வந்து உட்காருகிறது என்றோ அல்லது கொசு கடிக்கிறது என்றோ தன் வாலை வீசியது. கொசுக் கடி தாங்காதபடி அதனுடைய அறிவிற்குத் தக்கவாறு அது இயங்குகிறது.
பன்றிக்குக் கொழுப்புச் சத்து ஜாஸ்தி. அதிகமான வெப்பங்கள் வரும் போது வெப்பம் தாக்கினால் கொழுப்பு உருகும் நிலை வரும்.
பன்றிக்கு வலு இருந்தாலும் இந்த வெயிலின் தன்மை வரப்போகும் போது அதனுடைய ஞானம் சாக்கடையில் போட்டுச் சகதியில் போட்டு தன் உடலைப் பிரண்டு வைத்துக் கொள்கின்றது. அதனால் வெப்பம் உடலில் தாக்குவது இல்லை.
எருமைக்கும் வலு அதிகமாக இருந்தாலும் இந்த வெயில் அடிக்கும் போது அதைத் தாங்கும் உணர்வு வலு இல்லை. அதுவும் சாக்கடையிலோ சகதியிலோ தன் உடலைப் பிரண்டு தான் வரும்.
சகதிக்குள் பிரண்டு வந்த பிற்பாடு என்ன செய்கிறது…? அது தன் வாலை வீசுகின்றது. அதனின் சந்தர்ப்பம் அது.
நாம் சுத்தமாகத்தான் போகின்றோம். அப்பொழுது நம் மேலே பட்டு விடுகிறது? பட்டவுடனே “ஐய்ய..ய்ய…, சே…” அந்தச் சகதி பட்டுவிட்டது…!” என்று நம்மை அறியாமலே சொல்வோம். அதைத் துடைக்கப் போகிறோம்.
அடுத்து அந்த மாட்டையோ ஏச ஆரம்பித்து விடுகின்றோம்.
வெறுப்புடன் “சீ… சனியன்…! எவன் வளர்த்தானோ…!” நடு ரோட்டில் போகும் போது இந்த மாதிரிச் செய்துவிட்டது என்று சப்தம் போடுகின்றோம்.
நாம் தவறு செய்யவில்லை. ஆனால் அந்த உணர்வை நாம் நுகர்ந்து அறிகின்றோம்.
1.இந்தத் தீய வினைகள் சித்திரை – சிறு திரைகளாக
2.நம்முடைய அறிவின் தன்மையை மறைக்கின்றது.
அது மாடு. அதற்கு அறிவு இல்லை. அது வாலை வீசியது. சரி… சேறு நம் மீது பட்டுவிட்டது. அதைத் துடைத்துக் கொள்வோம் என்று போனால் பரவாயில்லை.
ஆனால் அந்த மாட்டை வளர்த்தவர்களைத் திட்டுவோம். அல்லது மாட்டைப் பேசுவோம். இயற்கையிலே நம் உணர்வுகள் இப்படித்தான் செயல்படுகிறது.
நான் இதைச் சொல்கிறேன் என்றால் எனக்கும் அந்தப் புத்தி தான் வரும். சாலையில் போகும் போது பன்றியோ மாடோ இப்படிச் செய்தால்.. “சீ… கிரகம்..,” என்று இப்படித் தான் சொல்வோம்.
பார்…! மாட்டைச் சாலையில் விட்டு விட்டு இப்படி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றான். அந்த மாடு இப்படிச் செய்து கொண்டிருக்கின்றது என்று அந்த உணர்வுகள் இயக்கி நம்மை அப்படிப் பேச வைக்கத்தான் செய்யும்.
ஆனாலும் இந்த உணர்வுகள் நமக்குள் நல்ல அறிவை மறைக்கிறது. இதைத் துடைக்க வழி வேண்டுமா… இல்லையா…?
ஏனென்றால் இது இயற்கை. இது போன்ற நிலைகள் வந்தாலும் நம்மை அறியாமலே நம் நல்ல குணங்களை அந்தச் சந்தர்ப்பத்தில் மறைத்து விடுகின்றது.
மறைத்தபின் நாம் நல்ல செயல் இழந்து கோபம் வெறுப்பு வேதனை அந்த மூன்றையும் நாம் எடுக்கப்படும் போது வேதனைப்படுவோம்.
1.வேலைக்குப் போவதற்கு நேரமாகிப் போனதே…!
2.நான் கடைக்குப் போக வேண்டும் என்று நினைத்தேன்…!
3.இதோடு நான் எப்படிப் போவது…? என்ற இந்த வேதனை வருகின்றது.
வேதனை என்பது விஷம். ஆனால் நாம் தவறு செய்யவில்லை. இந்த உணர்வுகள் எனக்குள் பட்டுவிட்டது. இது சந்தர்ப்பம்.
சந்தர்ப்பத்தால் ஏற்படும் வேதனை நிலைகளிலிருந்து அது நமக்குள் தீமை எப்படி ஏற்படுகின்றது…? என்பதைக் காட்டுவதற்காத்தான்
1.ஞானிகள் கருப்பண சாமியைப் போட்டுக் காண்பித்திருப்பார்கள்.
2.அருகிலே மோப்ப நாயையும் காண்பித்திருப்பார்கள்.
ஏனென்றால் அன்றைய தினம் நடந்த இந்தச் செயல் தீமையானதாக நமக்குள் மோப்பமாகப் போகும் போது இருள் சூழ்ந்து விடுகின்றது.
இந்த நிலையைப் பார்த்து இதே வெறுப்பான நிலையுடன் அடுத்து நீங்கள் அலுவலகத்தில் போய் உட்கார்ந்து பாருங்கள்.
அங்கே இருப்பவர்கள் யாராக இருந்தாலும் சரி…
1.கொஞ்சம் மெதுவாக வேலை செய்தாலோ அல்லது நடந்து போனாலோ
2.என்ன…! எருமை மாடு மாதிரி இருக்கின்றான்…?
3.நம்மை அறியாமலே “இந்த வார்த்தை” வரும்.
தவறு நாம் செய்யவில்லை. நாம் எடுத்துக் கொண்ட அந்த உணர்வின் வேகத்தின் தன்மை நமக்குள் சித்திரையாகி (சிறு திரையாக) நம் நல்ல குணத்தை மறைத்து விடுகின்றது.
அவ்வாறு மறைக்கும் தீமைகளை அகற்ற மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சேர்த்து மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்திகளை ஒவ்வொருவரும் பெறுவதற்காக ஆலயங்களை அமைத்து தெய்வத்திற்கு அபிஷேகம் செய்வதையும் காட்டினார்கள்.
அருள் மணங்களை நம் உயிருக்குள் அபிஷேகம் செய்து நம்மை அறியாது இயக்கும் தீமைகளிலிருந்து விடுபட்டு தெய்வச் செயலாக நாம் செயல்பட வேண்டும் என்பதற்காக அந்தத் தெய்வச் சிலைகளை வைத்து தெய்வ குணங்களைக் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.
அந்தத் தெய்வ குணத்தை நாம் பெறுவோம். தெய்வ சக்தியை வளர்ப்போம். அறியாது வரும் தீமைகளிலிருந்து விடுபடுவோம்.


பெருமாள்… பெருமான்… முருகப் பெருமான்…!
நம் உயிரின் தன்மை இயக்கும்…
1.அந்த உயிரான குணத்தை நமக்குள் சேர்க்கும் போது
2.தீமையை விளைவிக்கும் உணர்வின் தன்மையை அது அடக்கி
3.அதிபதியாக நின்று செயல்படுகிறது “பெருமாள்…!”
அதனின் (உயிரின்) உணர்வின் தன்மை கொண்டு பல கோடிச் சரீரங்களிலிருந்து மனிதனாக உருவாக்கி… அறிந்திடும் ஆற்றல் கொண்ட அதிபதியாக… ஆறாவது அறிவின் தன்மையை வினையாகச் சேர்த்துக் கொண்டது.
ஆக.. தீமையை அகற்றிடும் மகிழ்வாகனா…! தீமைகளை அகற்றி மகிழ்ந்திடும் வாகனமாக நமக்குள் அதிபதியாக வீற்றிருப்பது அந்த ஆறாவது ஆறறிவு – முருகப் பெருமானே..!
1.நமக்குள் ஆண்டிடும் உயிர் பெருமாளாக இருப்பினும்
2.எல்லாவற்றிற்கும் “ஆறாவது அறிவின் தன்மை – முருகப் பெருமான்…”
3.மாற்றியமைத்திடும் பெருமானாக அமைகின்றான்.
பெருமாள் கோவிலுக்குப் போகிறோம் என்று சொல்கிறோம்
1.அந்தப் பெருமாள் யார்…? நம் உயிர் தான்
2.முருகப் பெருமான் யார்…? நம் ஆறாவது அறிவு.
நம் உடலுக்குள் இருக்கும் அனைத்து உணர்வுகளுக்கும் பெருமாளாக இருப்பது உயிரே. ஆனால் இந்த ஆறாவது அறிவின் தன்மை வரப்படும் பொழுது
1.முருகு…! மாற்றி அமைக்கும் அந்தச் சக்தி கொண்டு
2.எல்லாவற்றையும் சீர்படுத்தும் நிலைகளாக முருகப் பெருமான்…!
3.மாற்றிடும் பெருமாளாக நமக்குள் ஆன்மாவாக அமைந்துள்ளது.
மகா சிவன்ராத்திரி என்றாலும்…
1.உடலுக்குள் அடைபட்டுக் கிடக்கும் இந்த உணர்வின் குணங்களை…
2.சீர்படுத்தும் அந்த உணர்வின் தன்மைகளை எல்லாம் சிலையாக வடித்து..
3.நற்குணத்தின் செயல்களை எல்லாம் காவியமாகத் தீட்டி
4.ஞானிகள் வெளிப்படுத்திக் காட்டினார்கள் ஆலயங்களிலே…!
நம் வாழ்க்கையில் தீமையான உணர்வுகள் வந்தாலும் முருகப் பெருமான்… ஆறாவது அறிவின் தன்மை கொண்டு அந்தத் தீமைகளைப் பிளந்து நீக்கிவிட்டு நம்மை ஆளும் ஆண்டவனான பெருமாளுக்கு அது எவ்வாறு…? என்று ஞாபகப்படுத்துவது.
இதைப் பிரித்து அவன் ஆளும் ஆட்சியாக சீரான உணர்வின் தன்மை நமக்குள் வரும் பொழுது ஆட்சிபுரியும் நல்ல குணங்களை…
1அது தடையின்றி நமக்குள் நல்லொழுக்கத்தையும்
2.நல் செயலையும் நமக்குள் நயம்படும் உணர்வின் உறுப்புகளையும் அது உருவாக்கும் தன்மையாக
3.உடலிலே நல்ல நிலைகள் வருவது அது தான் மகிழ்வாகனா…!
மகிழச் செய்யும் வாகனமாக இருந்து… முருகு…! மாற்றியமைக்கும் பெருமானாக அது நமக்குள் அமைந்து அவனின் உணர்வை நினைவு கொண்டு மகிழச் செய்யும் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் இணைத்திடல் வேண்டும்.
மாற்றி அமைத்திடும் அந்த உணர்வின் தன்மை கொண்டு நம்மை ஆண்டிடும் பெருமானாக அந்த உயிருடன் ஒன்றி நமக்குள் மனிதனாக உருவாக்கிய நல்ல குணங்களை நாம் காத்திடல் வேண்டும்.
ஆலயங்களுக்குச் செல்லும் போதெல்லாம் அங்கே காட்டப்பட்டுள்ள தெய்வ குணத்தைப் பெற வேண்டும்… மலரின் மணம் பெற வேண்டும்… மகிழ்ந்து வாழ்ந்திடும் அந்த அருள் சக்தி பெற வேண்டும்.. மகரிஷிகளின் அருள் வட்டத்திலே இணைந்து வாழ வேண்டும் என்று ஒவ்வொரு நிமிடமும் அருள் சக்திகளை எடுத்துப் பழக வேண்டும்.

வேண்டாத எண்ணங்களை வளர்க்காமல் ஒளியாகும் எண்ணங்களை வளர்க்கக் கற்றுக் கொள்ள வேண்டும் – ஈஸ்வரபட்டர்
காட்சி:
பெரிய குரங்கு ஒன்று மரத்தில் அமர்ந்து எதையோ ஒரு பொருளை விடாப்பிடியாகப் பிடித்து ஆட்டுவது தெரிகின்றது.
மற்றொரு காட்சியில் ஒருவருக்குக் காலில் முள் குத்துவதைப் போன்றும்… முள்ளைக் காலிலிருந்து எடுத்துத் தூர எறிவதைப் போன்றும் தெரிகின்றது.
விளக்கம்:
குரங்கு ஒன்றைப் பிடித்ததென்றால் ”குரங்குப்பிடி…” என்பதைப் போன்று
1.மதியைக் கொண்டு மெய்யுணரும் பக்குவமற்ற ஜீவனால்
2.எத்தொடரில் எதைப் பிடித்ததோ… அதன் தொடரில் தான் அதனுடைய எண்ணமிருக்கும்.
ஆனால் மெய் என்ற மதியைக் கொண்டு பகுத்தறியக் கூடிய மனிதன் “தான்…” என்ற அகந்தையின் பிடியில் வலுப்படுத்தினால் தன் வளர்ச்சியின் வலுவை இழக்கும் நிலைதான் மனித உணர்வின் ஒளிக்குச் செயல்படும்.
இச்சரீரத்தில் உணர்வுகளினால் வளரும் உயிரணுக்கள் யாவையுமே ஜீவகாந்த மின் அலைச் சக்தியை வளர்க்கவல்லவை.
அவ்வளர்ப்பின் தொடருக்குத் தன்னில் உயர்ந்த ஒளி சக்தி பெற்றிருந்தாலும்…
1.மனித உணர்வின் தொடர்பில் பாசப் பிணைப்புடன்
2.அன்பு பரிவு என்ற அறுகுணத்தின் நற்குணத்தைச் செலுத்தி மெய் உணர்வின் அறத்தை
3.இச்சரீரத்தையே மெய்யுணர்வின் தொடர்பில் செலுத்தும் பொழுது
4.இச்சரீரம் ஆண் பெண் என்ற நிலை மாறித் தாயான ஜீவ சரீரமாக
5.பலவற்றையும் வளர்க்கும் ஆதிசக்தியின் ஜீவ சக்தியின் வித்துக்களாய்
6.ஒவ்வொரு ஒளித் தன்மை கொண்ட ஜீவாத்ம உயிரும் வளர்ச்சி பெறும்.
இன்றெப்படி சூரியன் பல கோள்களின் ஜீவனை வளர்க்கின்றது…? பூமி எப்படி பல ஜீவன்களை வளர்க்கின்றது…?
அதைப் போன்று ஒளி சக்தி பெற்ற ஒவ்வொன்றும் ஒளியின் உருவப் படைப்பாய்… உருவில் பலவற்றையும் படைத்துப் படைக்கவல்ல தன்மைக்கு… இச்சரீர உணர்வில் எடுக்கும் மெய் உணர்வின் ஒளித் தன்மையைக் கொண்டுதான் அந்த “ஆதிசக்தியின் சூட்சுமமே அடங்கி உள்ளது…”
மனித உணர்வில் வேண்டாத எண்ணங்கள் நம்மைத் தாக்குபவையாக சந்தர்ப்பத்தில் வந்து மோதினாலும்
1.காலிலே முள் ஏறியவுடன் அதைப் பிடுங்கி எறிவதைப் போன்று
2.எண்ணத்திலிருந்து அதை எல்லாம் அப்புறப்படுத்திடும் செயலுக்கு வரவேண்டும்.
முள்ளின் வேதனையை… எடுக்க முடியாமல் காலில் தைத்து விட்டால் அந்த முள் புரையேறி… காலையே எடுக்கவும் ஏன்… சரீர ஜீவனுக்கே கூட ஆபத்து ஏற்பட்டு விடுகிறது…!
அதைப் போன்று… நம் உணர்வில் மோதும் எதிர் நிலை எண்ணத்தை ஒளி கொண்ட தெய்வ குணங்களில் எண்ணத்தைச் செலுத்தி… வேண்டாத எண்ணங்களை வளர்க்காமல்..
1.மெய் உணர்வின்… மெய் ஞானியாகக் கூடிய வழியறியும் பக்குவத்தால்
2.வான மண்டலத்தில் எண்ணிலடங்கா நட்சத்திரங்கள் கோள்கள் வளர்ந்து ஓடுவது போன்று
3.மனித உணர்வின் எண்ணம் கொண்ட ஒவ்வொருவருமே
4.ஒளி சக்தி கொண்ட உயர் தன்மை பெற முடியும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
ஒருவர் தீங்கு செய்கிறார் தீங்கு செய்கிறார் என்று திரும்பத் திரும்ப எண்ணினால் அந்த உணர்வை அதிகமாகச் சேர்த்தால் நமக்குள் தீங்கு செய்யும் உணர்வுகள் வந்து நம்மையும் தீமை செய்ய வைத்துவிடும். ஆகவே
1.தீமைகளை நுகர்ந்தால் தீமை செய்யத்தான் முடியுமே தவிர
2.நன்மை பயக்க முடியுமா…? என்று சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.
நன்மை பயக்க வேண்டும் என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நீங்கள் பெறுங்கள். அந்த உணர்வின் தன்மை கொண்டு தீமையான உணர்வு நுகர்ந்ததைத் தூய்மையாக்கிக் கொள்ளுங்கள். உங்கள் ஆன்மாவைத் தூய்மையாக்கிக் கொள்ளுங்கள்.
1.ஒருவன் தீமை செய்தான் என்று தெரிந்து கொண்டாலும்
2.மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெற்று
3.அந்தத் தீமையில் இருந்து அவர்கள் விடுபடவேண்டும் ஈஸ்வரா… என்று
4.உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டுங்கள்.
5.மற்றவர்களைப் பாதுகாக்கும் உணர்வுடன் செயல்படுத்துங்கள்.
6.அப்போது அது நமக்கும் பாதுகாப்பாகின்றது.
இப்படிச் செய்தால் நீங்கள் ஆலயங்களிலே போய் அங்கிருக்கும் தெய்வத்திற்கு அபிஷேகம் ஆராதனைகள் செய்வது போன்று உங்கள் உடலுக்குள் மகிழ்ச்சி ஊட்டும் உணர்வுகளை அபிஷேகிக்கின்றீர்கள்.
அப்பொழுது உடலை உருவாக்கிய அணுக்களுக்கு நல்ல அமுது கிடைக்கின்றது என்பதனை ஒவ்வொரு நொடியிலும் தெளிவாக்குகின்றார் நமது குருநாதர்.
குருநாதர் யாருடைய ஈர்ப்பிலும் சிக்காது அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் ஆறாவது அறிவை ஏழாவது ஒளியான சப்தரிஷி மண்டலங்களுடன் ஒன்றி ஏகாதசி ஏகாந்தமாக வாழுகின்றார்.
வைகுண்ட ஏகாதசி அன்றுதான் நமது குருநாதர் ஒளியின் சரீரம் ஆனார். நமது குரு காட்டிய அருள் வழிகளைத்தான் உங்களுக்கு உணர்த்துகின்றோம்.
தீமைகளிலிருந்து விடுபடும் நிலையாக அருள் ஒளியை எப்படிப் பெற வேண்டும்…? பெற முடியும்…? என்று உணர்த்திய உணர்வு கொண்டு
1.அந்தத் துருவ நட்சத்திரத்தைத் தான் எனக்குக் காட்டினார்
2.துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளியினை எடுத்து நீ பெற்றுக் கொள்.
3.இருளை அகற்ற அது உதவும்.
4.மெய்ப் பொருளைக் காணவும் உதவும்.
5.உன்னை அறியாது சேர்ந்த தீங்கை அகற்றிடவும் உதவும் என்று கூறினார்.
துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் குருநாதர் ஒளியின் சரீரமாக ஆனபின் அதிலே “நீயும்… ஆயுள் கால மெம்பராகு…” என்று என்னை அதிலே இணைத்தார்.
அதே போல உங்களையும் ஆயுள் மெம்பராக அங்கே இணைத்துக் கொண்டிருக்கின்றோம்.
ஏனென்றால் நான் எத்தனையோ மோசமானவன்தான்…! சிகரெட் நிறையக் குடிப்பேன்… என்னென்னவோ எல்லாம் குடிப்பேன். உதவி செய்யும் தன்மை வந்தாலும் சொன்னபடி கேட்கவில்லை என்றால் உதைக்கும் பண்புள்ளவன்.
ஆனால் குருநாதர் என்னைத் துருவ நட்சத்திரத்துடன் இணைத்தார்.
ஏனென்றால் ஆரம்பத்தில் உடற் பயிற்சி எல்லாம் செய்து அப்பொழுது “கொஞ்சம் பயில்வான்…!” என்ற நிலையில் செயல்பட்டுக் கொண்டிருந்தேன். உதவி செய்ய முடியவில்லை… சொல்வதைக் கேட்கவில்லை… என்றால் இரண்டு தட்டுத் தட்டுவது. இப்படிப்பட்ட உணர்வுகள் எனக்குள் உண்டு.
அப்போது அந்த உதைக்கின்ற உணர்வு வந்தால் கெட்ட உணர்வு தான் உனக்குள் வரும் என்று தெளிவாக உணர்த்தினார் குருநாதர்.
ஏனென்றால் எனது வாழ்க்கையில் ஒவ்வொரு நேரத்திலேயும் கஷ்டங்களையும் சிரமங்களையும் பட்டு அதன் மூலமாகக் குருநாதர் காட்டிய அருள் வழியில் பல அனுபவங்களைப் பெற்ற பின் தான் உங்களுக்கு இதைச் சொல்கின்றோம்
சில நேரங்களில் ரோடுகளில் நான் நடந்து போனேன் என்றால் நாய்கள் என்னைத் துரத்தி வரும்.
நாய்கள் துரத்தி வந்தால் குருநாதர் என்ன செய்வார்..? விரலை இப்படிக் காட்டுவார். விரலைக் காட்டியவுடனே குரைக்காமல் நின்று போய்விடும்.
ஆனால் அவரை மாதிரியே நான் செய்யப் போனேன்.
நீ இந்த மாதிரி உணர்வு வரப்போகும் போது அது புத்தியை மாற்ற வேண்டுமே தவிர அதனுடைய வலிமையைக் குறைக்கக் கூடாது என்று அதிலேயும் அனுபவங்களைக் கொடுக்கின்றார்.
1.மற்றவர்களை வீழ்த்திடும் சக்திகளை எடுப்பதற்குப் பதில்
2.அவர்களைத் தெளிவாக்கும் நிலையாக அருள் உணர்வுகளை அவர்களுக்குள் பாய்ச்சி
3.அவர்கள் தீமை செய்யும் நிலைகள மாற்றியமைத்து
4.அவர்களை நல் வழியில் உயர்த்த வேண்டும் என்று உணர்த்துகின்றார்.
இருளைப் போக்கி எல்லோரையும் காத்திடும் செயலாக “நம்முடைய செயல்… என்றுமே இருந்திடல் வேண்டும்…” என்று காட்டுகின்றார் குருநாதர்.


விண்ணுலகம் அடையச் செய்யும் இரகசியம்
உயிரின் (கதிரியக்கம்) துடிப்பு ஒலிகள் விண்ணிலே தோன்றியது தான். இதை முதலில் உணர்தல் வேண்டும்.
அதே சமயத்தில் மற்ற அணுக்களும் விண்ணிலே தோன்றியதுதான். ஆனாலும் பூமிக்குள் வந்தபின் பூமிக்குள் மண்ணாக மறைந்து மற்றதுடன் கலந்து விடுகிறது.
இதிலே உருவாகும் உணர்வின் ஆவியின் நிலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அதனின் நிலைகளுக்கொப்ப அணுக்களாக மாறுகிறது.
அத்தகைய அணுக்களின் துணை கொண்டு தாவர இனங்களாக உருவாக்கினாலும்
1.அதிலே தோன்றிய உயிரினமும் அதை உணவாக உட்கொண்டால் இந்த புவியின் ஈர்ப்பிலேயே நிலைத்திருக்கும்.
2.இதனின்று கடந்து செல்ல வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?
ஆதியிலே
1.பேராற்றல் மிக்க பேரண்டங்களிலிருந்து அவை உமிழ்த்தும் துகள்களை
2.பிரபஞ்சத்தில் உள்ள இருபத்தியேழு நட்சத்திரங்கள் வீழ்த்தி இந்தப் பிரபஞ்சத்திற்கு ஏற்றவாறு சக்திகளாக மாற்றி.. கோள்களாக உருவாக்கி
3.கோள்களில் இருந்து வருவதை வடித்து அந்த நஞ்சினைப் பிரித்து உணர்வினை ஒளியாக மாற்றி ஒளியின் சிகரமாகத் திகழ்ந்ததோ
4.அதைப் போன்று விண்ணின் நிலைகளைக் கொண்டு
5.ஒரு நட்சத்திரத்தின் மின் கதிரியக்கப் பொறி மற்றொரு கதிரியக்கப் பொறியுடன் மோதும் பொழுது
6.அதனால் துடிப்பின் நிலைகள் ஏற்பட்டு தன் அருகில் இருக்கக்கூடிய கோளின் சக்தியைக் கவர்ந்து
7.அப்படிக் கவர்ந்த நிலைகள் கொண்டு தான் ஒரு உயிரணுவின் தோற்றம் (மின்னிக் கொண்டிருக்கும் நிலை) உருவாகிறது.
உயிரின் முன்னணி எதுவோ அதனின் நிலைகள் கொண்டு மற்ற நட்சத்திரங்களின் பொறிகளால் உருவாக்கப்பட்ட அணுவின் தன்மை எதிர் நிலையாகும் போதுதான் ஒரு இயக்கச் சக்தியாக மாறுகிறது.
அதன் வழியில் உடலின் உறுப்புகள் உருமாறி… உணர்வின் சத்து தசைகளாக மாறி… உணர்வுக்கொப்ப ரூபங்கள் மாறி மாறி வந்தது தான் இயக்கச் சக்தி. பல சரீரங்களைக் கடந்து இதன் வழியில் தான் மனிதனாக இன்று நாம் வந்திருக்கின்றோம்.
இதை எல்லாம் தெளிந்து தெரிந்து முழுமையாக உணர்ந்தவர்கள் மாமகரிஷிகள்.
1.தனது உயிரணு எந்த நட்சத்திரத்தின நிலைகள் கொண்டதோ
2.அந்த நட்சத்திரத்தின் உணர்வின் மின் அணுவின் சக்தியைத் தனக்குள் இணைத்து இணைத்துப் பேரொளியாக மாற்றிக் கொண்டார்கள்.
நான் (ஞானகுரு) படிக்காதவன் இத்தனையும் பேசுகின்றேன். காரணம்… குருநாதர் இதையெல்லாம் எனக்குள் பதிவு செய்து இயக்கச் சக்தியாகக் கொண்டு வந்திருக்கின்றார்.
சாமி சொல்வது அர்த்தம் புரியவில்லையே… ஏதோ ஒரு உலகத்தில் பெரிதாகச் சொல்கிறார்…! என்று விட்டுவிட்டால் அதைத் தள்ளி விட்டுவிடும்.
உதாரணமாக… திட்டுபவர்களையோ கேலி செய்பவர்களையோ உற்றுப் பார்த்து என்னை மோசம் பண்ணினார்… கேவலமாகப் பேசினார்…! என்று பதிவு செய்தால் அந்த உணர்வுகள் நமக்குள் வேகமாக விளையத் தொடங்குகிறது அல்லவா…! அதைப் போல்
1.சாமி சொல்லும் சக்தியை நான் பெற வேண்டும் என்று
2.இறுக்கிப் பிடித்துக் கொண்டால் இதை வளர்க்க முடியும்.
ஆதியிலே உருவான அகஸ்தியனுக்கு அவன் தன் தாய் கருவிலிருக்கும் போது பெற்ற விண்ணின் ஆற்றல் கொண்ட நஞ்சின் இயக்கமான உணர்வுகள் “பூர்வ புண்ணியமாக” அமைந்தது.
இந்த உணர்வின் சத்து கொண்டு அவன் விண்ணை நோக்கி ஏகும் போது…
1.அவனின் உயிரின் ஆற்றல் எதனின் தன்மை கொண்டு அந்த நட்சத்திரத்தின் இயக்கங்கள் இயக்கியதோ
2.அதையே நுகர்ந்து… நுகர்ந்து… நுகர்ந்து… அதனின் உணர்வின் தன்மையை அந்த விண்ணின் ஆற்றலை ஒளியாக மாற்றி
3.தன் உடலுக்குள் இருக்கும் உணர்வுகள் அனைத்தையும் தனக்கென்ற நிலைகளைப் பிரித்துப் பிரித்து
4.உணர்வின் சத்தை ஒளியாக மாற்றி இன்றும் விண்ணுலகில் துருவ நட்சத்திரமாக வாழ்ந்து கொண்டுள்ளான்.
துருவப் பகுதியிலிருந்து நம் பூமி கவரும் உணர்வின் சத்தை…
1.அங்கே துருவத்திலே நிலைகொண்டு அந்த உணர்வின் சத்தைத் தனக்குள் கவர்ந்து
2.நஞ்சினைப் பிரித்து விட்டு தன் உயிரான ஒளியின் சிகரத்தை அடைந்து
3.எந்த நட்சத்திரத்தில் பிறந்தானோ அதனின் இனத்தின் தன்மையை உணவாக எடுத்துக் கொண்டு
4.இன்றும் மின்னிக் கொண்டு உள்ளான்… துருவ நட்சத்திரமாக…!
அதைப் போன்றே நம் உயிரணுவின் தோற்றம் அது எந்த நட்சத்திரத்தின் கதிரியக்கத்தால் உருவானதோ அந்த உணர்வின் சத்து கொண்டு
1.சிவன் இராத்திரி… உடலான இருளுக்குள் இருப்பதை அந்த மறைந்த நிலையை
2.தன் உணர்வின் நிலையால் (உயிரின் நட்சத்திர ஆற்றல்)… ஒலி அலைகளாக எண்ணங்களாக எப்படி மாற்றியதோ
3.அகஸ்தியனின் உணர்வினை நம் உயிரான இயக்கத்திற்குள் இணைத்து இணைத்து
4.இந்த வாழ்க்கையில் வரும் எத்தனையோ எதிர் நிலையான இயக்கங்கள் இருப்பினும்
5. ஒருக்கிணைந்த இயக்கமாக நாமும் அகஸ்தியனைப் போன்று ஒளியாக மாற்ற முடியும்.
ஆக… உடலான இருளுக்குள் இருந்து தான் அந்த இருளைப் பிளந்து உணர்வை ஒளியாக மாற்றும் நிலை பெற வேண்டும்.

அறம் எது…? பொருள் எது..? இன்பம் எது…? – ஈஸ்வரபட்டர்
பருத்தி என்றால் அதிலிருந்து பஞ்சை எடுத்து ஆடைகளை நெய்வதும் பருப்பைப் பதப்படுத்தி உண்ணவும் அதனதன் வளர்ச்சிக்கொப்ப… “இன்னதை இன்னதிற்குப் பயன்படுத்தலாம்…” என்பது மனித ஞானம் அறிந்த உண்மை.
மேலும்… இன்று மனிதன் இயற்கையில் வளரும் தாவரங்களுக்குச் செயற்கையில் உரமிட்டு இயற்கைத் தன்மையின் வளர்ச்சியை மாறுபடச் செய்து அதை வளரச் செய்யக்கூடிய பக்குவத்தை வளர்ப்பவனும் இதே மனிதன் தான்.
ஆனால் அதே மனிதன் தான்…
1.தன் உயிராத்மாவின் ஜீவித வாழ்க்கையை
2.தன் உணர்வின் எண்ணத்தைக் கொண்டு
3.தன்னைத் தானே தான் உணர்ந்து உயர் நிலை பெறுவோம் என்ற வழியறியாது
4.தன் வாழ்க்கையில் நடப்பவை யாவும் ஊழ்வினை – “விதி” என்ற
5.வினைப் பயனை விதைத்துக் கொள்கின்றான் தன் எண்ணத்தில்.
இயற்கையையும் செயற்கையாக்கி விஞ்ஞானத்தில் பல உண்மைகளை மனிதச் செயல்தான் வளர்த்தது. அதே மனிதன் ஜீவாத்மாவின் உண்மையின் உண்மையை உணர்ந்து தன்னைத்தான் ஆள வேண்டும்.
அறம்… பொருள்… இன்பம்…
1.அறம் – நல்லொழுக்கத்தைச் சத்தியம் என்ற நேர் கோட்டில் உணரவும்
2.பொருள் – அறத்தைச் செயலாக்கி சத்தியத்தை வளர்த்து
3.இன்பம் – என்ற பிறவா ஒளி நிலை ஆனந்த உணர்வை இவ்வாத்மா அடைவதற்காக
4.முந்தைய பல ஆண்டுகளாக ஞானிகள் மகரிஷிகள் உயர் தத்துவத்தை உணர்த்தியுள்ளனர்.
இக்கலியிலும் புறநானூறு அகநானூறு திருக்குறள் நல்லொழுக்கம் ஆத்திச்சூடி போன்ற பல நூல்களில் வந்துள்ள தத்துவங்கள் யாவும்… மனித உணர்வின் எண்ணம் “நல்லொழுக்கம் பெற்று… அகத்தின் பொருளறிந்து… அகிலத்தின் பொருளாகும் உண்மையைத் தான் வழிகாட்டின…”
ஆகவே நம் உயிராத்மாவின் உயர் நிலை பெற ஊழ் வினை என்ற வினைப்பயனை எண்ணத்தில் எண்ணாமல்… எண்ணத்தில் நற்குணத்தை ஒவ்வொருவரும் பெற்று… விதியை மதி கொண்டு… ஞானம் கொண்டு செயல்பட வேண்டும்.
1.முதலில்… தன் சரீர உணர்வில் வெளிப்படக்கூடிய இச்சைகளை
2.தன் எண்ணத்தின் சிந்தனை கொண்டு
3.இச்சரீர ஏக்கத்தின் இச்சைகளை அடக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.
சரீர ஏக்கத்தின் இச்சை என்பது விருப்பு வெறுப்பு பசி தூக்கம் கோபம் ஆசை இன்பம் துன்பம் காமம் இவை யாவையுமே தன்னில்தான் தன் உணர்வில் தோன்றக்கூடிய உந்தல்கள் தான்.
அதன் இச்சையின் செயலுக்கு நம் உணர்வின் எண்ணம் செல்லும் பொழுது உடல் உபாதையினால் உணர்வின் எண்ணம் பாதிக்கப்பட்டுத் தன்னைத் தானே வலுவிழக்கச் செய்து வினைப் பயன் என்ற முத்திரையை… “தானே குத்திக் கொள்ளும் நிலைதான்…”
உடல் உபாதையையும்… உடல் உணர்வுகளினால் எண்ணத்தின் வலுவைக் கொண்டு… இச்சரீரத்தின் எச்செயலையும் தன்னுள் உள்ள “இறை உயிரைக் கொண்டு” நல்லதாக மாற்றிட முடியும்.
இச்சரீரம் எத்தனை கோடி ஆண்டுத் தொடரில் புழுவாய் பூச்சியாய் மனிதனாய் பல உணர்வுகளில் பல உருவில் உருப்பெற்று உயிர் ஜீவனில் இன்றுள்ள நிலைக்கு வினைப்பயனின் வித்தாய் வளர்ந்து வந்துள்ளது.
எவ்விதை ஊன்றப் பெற்றதோ… அச்செடியாக அது வளர்ந்தாலும்…
1.அதை மாற்றி அமைக்கக்கூடிய மெய் ஞானம் என்ற மதி கொண்டு
2.மனித எண்ணத்தின் உயர் ஞானத்தால்
3.அறம் பொருள் இன்பம் என்ற இனிய நிலையை ஒவ்வொருவரும் பெற முடியும்.
அதைப் பெறக்கூடிய பக்குவத்தைத்தான் இங்கே தொடர்ந்து போதனையாக வழங்குகின்றோம்.
இச்சரீரம் உறங்கும் பொழுது “உறக்கம்” என்றும்… செயல்படும் பொழுது “விழிப்பு” என்றும் சொல்கின்றோம். ஆனால்..
1.ஆத்மாவின் செயலில் இச்சரீரத்தை இயக்கக்கூடிய தன்மை பெற்றல்
2.உண்மைத் தன்மை விழிப்பு நிலை பெறுகின்றது.
வாழ்க்கை நடைமுறையில் இச்சரீர உணர்வுக்கொப்ப எண்ணுபவை யாவும் ஆத்மாவில் பதிவு பெறுகின்றது. அதே தொடரின் வாசனைதான் உணர்வு பெற்று இஜ்ஜீவித இயக்கத்தில் காந்த மின் அலையான இச்சரீர இயக்க ஓட்ட ஆத்மாவில் பதிவாகி விடுகின்றது.
எப்பதிவை எண்ணத்தின் உணர்வு கொண்டு நாம் பேசி மகிழ்ந்து வாழ்கின்றோமோ அவ்வலையைத்தான் ஆத்மா பெறுகின்றது.
அவ்வலையைத்தான் நம் உணர்வின் எண்ணமும் பெற்று நம்மையறியாமல் பேசவும் செயல்படுத்தவும் செய்கின்றது. நம்மைச் செயலாக்கும் நிலையும் அதுவேதான். ஆக.. அந்நிலை இச்சரீர ஆத்மாவை இப்பூமியின் பிடிப்பில் உறங்க வைத்த நிலை.
இப்பூமியின் பிடிப்பிலிருந்து விழிக்கும் நிலை என்பது…
1.தன்னைத்தானே தான் உணர்ந்து…
2.இச்சரீர உணர்வின் வாசனையை… இவ்வாத்மாவில் பதிய வைத்து வளர்த்துக் கொண்ட நிலையை…
3.உயர்ஞானத்தைக் கொண்டு தன்னை இயக்கும் ஆத்மாவின் உண்மையை உணர்ந்து
4.ஆத்மாவிற்கு நல் ஒலிகளை… நற்குணமுடன் கொண்ட உயர் தன்மையை…
5.அறம் பொருள் இன்பம் என்று பெரியவர்கள் நமக்குக் காட்டிய உயர் குணத்தின் சத்தியத்தை வளர்க்க
6.மாறிப்போகக் கூடிய இச்சரீரத்தில் உயர் குண சத்தியத்தைக் கொண்டு
7.இஜ்ஜீவ உயிராத்மா – உயர் காந்த மின் சக்தியினால்
8.இச்சரீரத்தில் வாழக்கூடிய வாழ்நாளில் – விழிப்பு நிலை நாம் முதலில் பெற வேண்டும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
இந்த வாழ்க்கையிலே நாம் தவறு செய்யவில்லை என்றாலும் தவறு செய்பவர்கள் நிறையப் பேரைப் பார்க்கின்றோம். அவர்கள் சந்தர்ப்பத்தால் தவறுகள் செய்தாலும்
1.அவர்களைப் பார்க்கக்கூடிய சந்தர்ப்பம் நமக்கு வந்து
2.நம் நல்ல குணத்தை மறைத்து விடுகிறது.
3.நமக்குள் சாப வினைகள் சாடுகிறது.
ஆனால் அதே சமயத்தில் நமக்குள் இருக்கும் பாவ வினைகள் என்ன செய்யும்…?
1.ஒவ்வொருவரையும் சாபமிடச் செய்யும்.
2.பாவங்கள் செய்யச் சொல்லும்.
3.நம் குழந்தையைக் கூட இரக்கமற்றுக் கொடூரமாகத் தாக்கச் செய்யும்.
பிறர் நன்றாக வளர்ந்து கொண்டு இருப்பார்கள். “அவர்கள் மட்டும் நன்றாக இருக்கின்றார்களே…!” என்பதைப் பார்த்ததும் பொறாமையில் என்ன செய்வோம்…?
அது… அவன் இப்படிச் செய்கிறான்… அப்படிச் செய்கின்றான்… என்ற நிலையில் பாவ வினைகளைச் சேர்த்துக் கொண்டேயிருப்போம். தன்னை அறியாமலே அது செய்ய வைக்கும்.
நமக்கும் அவர்களுக்கும் ஒன்றுமே சம்பந்தமே இருக்காது. இருந்தாலும் நம் உணர்வின் தன்மை மாறுபடப் போகும் போது…
1.பார்…! அவர்களெல்லாம் என்னத்தைப் பெரிதாகச் செய்தார்கள்…? என்று
2.இது போன்ற பாவ வினைகளைச் சேர்க்கச் செய்கிறது.
ஏதாவது ஒரு வழியில் அவர்களுக்கு இடையூறு செய்யக்கூடிய நிலையும் அவர்களை வேதனைப்படச் செய்து அதைக் கண்டு ரசிக்கும் நிலையாகத்தான் வரும்.
ஆனால் நாம் தவறு செய்யவில்லை.
நம் உயிருடைய வேலை என்ன…? அதை நாம் தெரிந்து வைத்திருக்கின்றோமா…!
நாம் எதை எண்ணினாலும் “ஓ..” என்று ஜீவனாக்கி “ம்…” என்று நம் உடலாக ஆக்கும். பார்த்தது கேட்டது நுகர்ந்தது அனைத்தையும்
1.ஓ..ம் நமச்சிவாய… சிவாய நம ஓ…ம் என்று
2.நம் உயிர் இயக்கி உடலாக ஆக்கி விடுகின்றது
உயிரின் வேலை அது.
நெருப்பில் பாத்திரத்தை வைத்து அதிலே பல பொருள்களை இட்டால் எதைச் செய்யுமோ அதைப் போல் நம் உயிரான நெருப்பில் போடும் உணர்வுகளை அதற்குத்தக்க இயக்கி அதனுடைய வேலைகளைச் செய்யும்.
நாம் எந்தக் குணத்தை எடுக்கின்றோமோ அதனின் மணத்தின் தன்மை கொண்டு அறிவாகவும் அதனுடைய இயற்கையின் தன்மை (அந்த மணத்தின் இயல்பாக) கொண்டு உணர்வாகும்.
உயிர் நம்மை… “உணர்வால் தான்” இயக்குகின்றது.
நாம் அடுத்தவர்களிடம்
1.உனக்கு உணர்ச்சி இருக்கின்றதா..? என்று கேட்கின்றோம்.
2.கொஞ்சமாவது அறிவு இருக்கின்றதா…! என்று கேட்கிறோம்.
(அறியக்கூடிய திறன் இருக்கின்றதா.. என்கிறோம்)
ஒன்றைச் சொல்லப்படும் போது தான் உணர்ச்சிகள் வருகிறது. நான் கோபமாகச் சொல்கின்றேன். அப்பொழுது அந்த உணர்வுகள் என்ன செய்கின்றது…?
உங்கள் உணர்ச்சிகளைத் தூண்டும். நீ இப்படிச் சொல்லி விட்டாயா…? இரு… நான் பார்க்கிறேன் என்போம்.
எனக்குள் கோபமான உணர்வின் தன்மை விளைகின்றது. அந்தக் கோப உணர்வின் சொல் கேட்போர் உணர்ச்சியைத் தூண்டுகின்றது.
1.இயற்கையின் நிலைகள் எவ்வாறு வருகிறது…?
2.அது நம்மை எப்படி இயக்குகிறது…? என்ற நிலையை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
இதைப் போன்ற தீமைகள் நம்மை அணுகாது பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் மாமகரிஷி ஈஸ்வரப்பட்டாய குருதேவர் மூன்று இலட்சம் பேரைச் சந்திக்கச் செய்து பல பல அனுபவங்களைக் கொடுத்தார்.
இருபது வருட காலம் பல இடங்களைச் சுற்றினேன். ஒவ்வொருவரும் அவர்கள் தவறு செய்யாமலே
1.அவருக்குள் துயர நிலைகள் எப்படி விளைகின்றது…?
2.அவர்களைத் தவறுள்ளவர்களாக எப்படி மாற்றுகின்றது…?
3.பாவ வினைகளாக எப்படிச் செய்கின்றனர்…?
4.சாப வினைகளாக எப்படி வெளியிடுகின்றனர்…?
5.தீய வினைகளாக எப்படி உருவாக்குகின்றனர்…?
6.அவர்களை அதிலிருந்து விடுபடச் செய்ய நீ என்ன செய்யப் போகின்றாய்…?
இது தான் குருநாதர் எம்மிடம் கேட்ட கேள்வி. அதன் வழியில் விடைகளாகp பல அனுபவங்களைப் பெறச் செய்தார்.
அவருடைய கேள்விக்குத் தான் மெய் ஞானிகள் காட்டிய உண்மையின் இயக்கங்கள் எவ்வாறு இருக்கிறது என்ற நிலையை எனக்குள் உபதேசித்து அதை அறியும் ஆற்றலாக என்னைப் பெறச் செய்தார்.
குருநாதர் எனக்கு உபதேசித்ததை அவர் பெற்ற மெய் ஞானத்தை உங்களுக்குள் பதிவு செய்வதற்கே இந்த உபதேசம். பதிவு செய்ததை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தால் அறியாது வரும் தீமைகளை நீங்களே அகற்ற முடியும்.
தீமைகளை அகற்ற வேண்டும் என்ற வலுவான எண்ணம் கொண்டு வரும் போது
1.குரு வழியில் உங்கள் உயிரை இயக்க முடியும்.
2.மெய் ஞானிகளின் உணர்வுகளை ஜீவனாக்க முடியும்.
3.அந்த ஞானிகளின் சக்திகளை உங்கள் உடலாக ஆக்க முடியும்.
குருநாதர் எமக்குக் காட்டிய நிலைகளைத்தான் உங்களுக்குள் பதிவு செய்கின்றேன். காரணம் குருவை உங்களிடம் நான் பார்க்க வேண்டும் என்று விரும்புகின்றேன்.
ஒவ்வொருவரையும் அவர்களை அறியாது தீமைகள் சாடுகின்றன. அந்தத் தீமைகளிலிருந்து ஒவ்வொருவரும் அகல வேண்டும் என்ற எண்ணத்தை “நீ அங்கே பாய்ச்சு…” என்றார் குருநாதர்.
நான் எனக்குள் விளைய வைத்த ஞான வித்தினை உனக்குள் விளைய வைக்கின்றேன். அதை நீ உனக்குள் விளையச் செய்.
இந்த உணர்வின் வித்தினை யார் யார் விரும்புகின்றனரோ… தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்று யாரெல்லாம் ஏங்கி இருக்கின்றார்களோ… அவர்களுக்குள் அதைப் பதியச் செய்.
1.அங்கே விளைந்து வரும் நிலைகளில்
2.அதில்.. “என்னை நீ அங்கே காண்பாய்…” என்றார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.


ஈஸ்வரபட்டர் கொடுக்கும் “ரிமோட் கண்ட்ரோல் சக்தி”
குருநாதர் எம்மைச் (ஞானகுரு) சாக்கடை அருகே அமர வைத்து உபதேசமாகக் கொடுத்தார். பன்றி சாக்கடையின் நாற்றத்தை நுகராது அதற்குள் இருக்கும் நல்ல உணர்வினைத் தனக்குள் நுகர்ந்து அதனின் உணர்வின் வளர்ச்சியில் பரிணாம வளர்ச்சியாகி மனிதனாக வளர்ந்து வந்தது.
நாற்றமான உணர்வுகளை நீக்கப்பட்டு நாற்றத்தை நீக்கிடும் உணர்வின் எண்ணங்களாக மனிதனாக எப்படி வளர்ந்து வந்துள்ளோம்…? என்பதை உணர்த்தவே அங்கே உபதேசித்தார் குருநாதர்.
சாக்கடையில் இருக்கும் நாற்றத்தை நீ நுகராதே. சாக்கடையற்ற நிலையாக
1.நாற்றத்தை நீக்கிய அந்த அருள் ஞானியின் உணர்வை நீ இங்கிருந்து பெறு.
2.அந்த அருள் ஞானியின் உணர்வுகளை நீ பெற்றால் அந்த நாற்றத்தை நுகரவிடாது
3.அதை அறியத் தான் உதவும்… அந்தத் தீமை உனக்குள் விளையாது.
அதைப் போன்று இந்தச் சாக்கடையான வாழ்க்கையில் இருக்கும் அந்த உணர்வினை நீக்கி மெய்ப்பொருளைக் கண்டுணரும் அந்த சக்தியைப் பெறச் செய்வதற்குத் தான் உன்னை இங்கே அழைத்தேன்.
காரணம் இன்று இந்தக் காற்று மண்டலமே சாக்கடையாக இருக்கின்றது. இதை நுகர்ந்து நுகர்ந்து உடலுக்குள் அந்தச் சாக்கடையான சத்தையே நுகரும் தன்மையைத் தான் அடைந்துள்ளோம்.
விருப்பு வெறுப்பு வேதனை என்று
1.பிறரைக் குறை கூறும் உணர்வுகளைத் தான் நாம் அதிகமாக வளர்த்திருக்கின்றோமே தவிர
2.குறைகளை நீக்கும் உணர்வுகளை நமக்குள் வளர்க்கவில்லை.
ஆகவே நாற்றத்தைப் பிளந்த பன்றியைப் போன்று குறைகளை நீக்கி நல்லதை நுகரும் ஆற்றல் பெற வேண்டும்.
பிறருடைய குறைகளைக் கண்டுணர்ந்தாலும் அவர்கள் குறைகள் அகல வேண்டும்… தெளிந்துணர்ந்து செயல்படும் தன்மை நமக்குள் பெற வேண்டும் என்று எண்ணி எடுக்க வேண்டும்.
அவ்வாறு எண்ணி எடுக்கும் பொழுது இந்த உணர்வுகள் நமக்குள் விளைந்து நம் சொல்லின் உணர்வுகளை அங்கே செலுத்தப்படும் பொழுது குறைகளை நீக்கும் சக்திகளாக அங்கே தோன்றுகின்றது.
தீமைகளை அகற்றிடும் நிலையையும் தீமைகள் உனக்குள் புகாத நிலையையும் பெற வேண்டும் என்பதற்குத்தான் இங்கே சாக்கடை அருகே உன்னை அமரச் செய்து உனக்கு உணர்த்தியது.
ஆனால் சாக்கடையை நுகர்ந்து அய்யய்யே… என்று எண்ணினால் அதை நினைக்கும் பொழுதெல்லாம் உனக்குள் சாக்கடையை நுகரும் உணர்வே அதிகமாக வருகின்றது.
அந்தச் சாக்கடை நீக்க வேண்டும்… அதைத் தடுக்க வேண்டும் என்று எண்ணும் பொழுது அந்தச் சாக்கடையை நீக்கும் எண்ணங்களாக உனக்குள் வருகின்றது.
அதைப் போன்று தான்…
1.நீ யாரைக் கண்டாலும்… எவரைக் கண்டாலும்… அங்கே காணும் குறைகள் எதுவாக இருப்பினும்
2.அந்த மகரிஷியின் அருள் ஒளி பெற வேண்டும் என்ற உணர்வினை உனக்குள் ஏற்றுக் கொண்டு
3.அந்த மகரிஷியின் அருள் உணர்வுகள் அவர்கள் பெற வேண்டும் அவர்களை அறியாத இருள் நீங்க வேண்டும்
4.மெய்ப்பொருள் கண்டுணர்ந்து செயல்படும் சக்தி பெற வேண்டும் என்று நீ இதை எண்ணுவாய் என்றால்
5.உனக்குள் அறிவித்த இந்த உணர்வுகள் மெய்ப்பொருள் காணும் நிலையாக உனக்குள் வள்ரும்.
இந்த மனித வாழ்க்கையில் பிறருடைய குறைகளைக் காணாமல் இருக்க முடியாது. இருந்தாலும் குறை என்று அது அறிவிக்கச் செய்கின்றது.
1.அறிவிக்க மட்டும் தான் அதைப் பயன்படுத்த வேண்டும்
2.அதற்கடுத்து அதைப் பயன்படுத்தக்கூடாது.
ஆனால் அறிவிக்கச் செய்யும் நிலையையே திரும்பத் திரும்ப எண்ணி
1.இப்படிச் செய்தான்… அப்படிச் செய்தான்… இப்படியே செய்தால் நான் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பதா…?
2.அவனை விடக்கூடாது…! என்று எண்ணும் பொழுது
3.நமக்குள் அறிவித்த அந்த நிலை… நமக்குள் எது தவறு…? என்று காட்டியதோ
4.அந்தத் தவறை நமக்குள் விளைய வைத்து நம்மையும் தவறு செய்பவனாகவே வளர்த்துவிடும்.
ஆக தவறை நீக்கும் நிலைகளைத் தான் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
மனித வாழ்க்கையில் குறை இல்லாது நடந்தவர் யாருமில்லை. ஒரு மனிதனுடைய சந்தர்ப்பம் குறையான உணர்வு வரும் பொழுது குறையான உணர்வாக அதை ஈர்க்கப்படும் பொழுது…
1.அதிலிருந்து நாம் எவ்வாறு விலகிச் செல்ல வேண்டும்…?
2.,குறைகளை எப்படி நீக்க வேண்டும்…? என்று நாம் எண்ண வேண்டும்.
அது தான் முக்கியம்.
அந்தக் குறைகளை நீக்க அருள் ஞானியின் உணர்வை நமக்குள் வலுவாக ஏற்றுக் கொண்டால்… நாம் எடுத்துக் கொண்ட அந்த ரிமோட் கண்ட்ரோல் சக்தி யாருடன் பழகினாலும்… பேசினாலும்… அவர்களை அறியாது இயக்கும் தீமைகளை நீக்கிடும் சக்தியாகவும்… அறிந்துணர்ந்து செயல்படும் சக்தியாகவும் அங்கே இயக்கச் செய்யும்.
இதை நாம் செய்து பழக வேண்டும்.
இன்று நாம் உபயோகப்படுத்தும் டி.வி. மற்ற எலெக்ட்ரானிக் சாதனகளில் மூடி மறைத்து இருப்பதை “ரிமோட் கண்ட்ரோல்…” என்ற அந்த பட்டனைப் போடும் பொழுது சீராக இயக்குகிறது.. படமோ பாடலோ அல்லது எந்த இயக்கமாக இருந்தாலும் இருந்த இடத்திலிருந்தே அதைக் கவர்ந்து இயக்க முடிகின்றது
இதைப் போன்றுதான் மெய் ஞானிகளின் ஆற்றலை நாம் எடுத்து
1.அந்தச் சக்தி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் நமக்குள் வளரும் பொழுது
2.மெய்ப் பொருளைக் கண்டுணரும் நிலையாக ரிமோட் கண்ட்ரோல் (REMOTE CONTROL) ஆக
3.நம்மை அந்த ஞானிகள் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்லும்.
நம் சொல்லைக் கேட்போர் உணர்வுகளில் அங்கிருக்கக்கூடிய தீமைகளை மாற்றி அமைக்க இது உதவும். நமக்குள்ளும் அது வராதபடி நல்ல உணர்வுகளைத் தெளிந்து கொள்ளும் நிலையாக வரும்.
இதைத்தான் மகா சிவராத்திரி என்று இருளுக்குள் மறைந்த பொருளைக் கண்டுணர்ந்த அருள் ஞானிகள் காட்டிய வழிகளை நாம் பெறும் நிலையாக மகா…! அனைத்தும் நமக்குள் உண்டு என்று காட்டியுள்ளார்கள்.
ஆகவே அந்த அருள் ஞானிகள் காட்டிய அருள் வழியில் நாம் தெரிந்திடும் நிலையாக சிவன்ராத்திரி என்று விழித்திருப்போம்.
1.இருளை நீக்கிப் பொருள் காணும் நிலையாக
2.விழித்திருக்கும் அந்த உணர்வின் சக்தியை நாம் அனைவரும் பெறுவோம்.

மந்திர ஒலியில் நாம் சிக்கிவிடக்கூடாது – ஈஸ்வரபட்டர்
விஞ்ஞானத்தால் இன்றைய மனிதன் தன் ஞானத்தால் வெகு வேகமாகச் செயல்படுத்தும் இத்தருணத்தில்…
1.மந்திர ஒலியின் யாகத்தால் தன் ஆத்மாவை
2.இப்பூமியின் பிடிப்பலையிலுள்ள ஆவி ஆத்மாக்களின் ஈர்ப்பு சுழற்சியில் சிக்க விட்டுவிடக் கூடாது.
ஆலயத்தில் ஆண்டவனை வணங்கும் வழிமுறையறிந்து வணங்க வேண்டும். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தெய்வமுண்டு…!
1.யாகத்தின் தொடர்பில் மந்திர ஒலியை ஒலிக்கக் கூடிய ஆலய வழிபாட்டின் உண்மை நிலை என்ன…?
2.தெய்வத்திற்கு ஓதப்படும் மந்திர ஒலியினால் மனிதன் வணங்கும் தெய்வத்திற்கு என்ன பலன்…?
3.மந்திர ஒலியை ஒலிக்கக் கூடிய ஆத்மாக்கள் அதனுடைய உண்மைத் தொடர்பை அறிந்து ஒலிக்கின்றார்களா…?
ஒலியின் நாதம் கொண்டு தான் தன்னுடைய இயக்கத்தின் தொடர்புக்கு ஜீவன் பெற வருகின்றது.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முதலில்..
1.மனிதன் தான் வணங்கும் தெய்வ நிலைக்கு ஜீவன் ஏற்படுத்தக்கூடிய தருணத்தில்
2.மனிதனின் முதல் நிலையான “புகழ்…” என்ற
3.பேராசைக் குணம் ஏற்பட்ட காலத்தில் வளர்ந்ததுதான் மந்திரமும் யாகமும்.
இயற்கையின் தொடர்பில் ஜீவ சரீரத்திற்கு வலு ஏற்படுத்திக் கொள்ள இம்மனிதனின் உடலிலுள்ள மின் காந்த ஒலி அலைக்கு மீண்டும் வலுத் தன்மை கூட்டிக் கொள்ளக் கூடிய வளர்ச்சிக்காக மந்திர தந்திரங்களை வடித்துக் கொண்டார்கள் அரசர்கள்.
மாய உருக்களைக் கொண்டு… தன் ஈர்ப்பு வட்டத்திற்கு இவ் ஒலியையும் ஒளியையும்… ஜீவனற்ற ஆத்ம உயிர் அலைகளைத் தன் சரீர ஆத்ம அலையுடன் ஈர்ப்புப்படுத்தி… மந்திரத்தால் அரசர்கள் மாய வித்தைகள் நடத்தினர்.
அத்தகைய சூட்சுமத்தின் முதல் வித்து தான்… யாகங்களை நடத்தி யாகங்களில் பலியிடும் நிலைகள்…!
யாகத் தீயிலே பலியிடக் கூடிய உயிர் ஜீவனின் ஆத்ம ஒலியைத் தன் சரீரத்தின் ஈர்ப்பு வட்டத்துடன் வளர்த்துக் கொண்ட வழித் தொடரில்தான் யாகங்களும் மந்திர ஜெபங்களும் அரசர்கள் ஆண்ட காலம் தொட்டு வளர்ந்து வந்தது.
அரசன் அதற்கென்று குருமார்களை நியமித்த பின்…
1.குருவிற்கு அரசன் அடிமையா…?
2.அரசனுக்குக் குரு அடிமையா..! என்ற தொடரில்
3.இயற்கையின் உண்மைத் தத்துவத்தை ஆரம்பத்தில் சித்தர்கள் காட்டிய இயற்கைத் தொடரில் வளர்க்காமல்
4.இறைவன் என்ற உருவத்தைக் காட்டி…!
5.மனிதன் தன்னைத் தானே அடகு வைத்திடும் நிலைதான்
6.மந்திரமும் தந்திரமும் யாகங்களும் வேள்விகளும் ஆசார அனுஷ்டானங்களும்.
எவ்வொலியின் ஈர்ப்பில் உணர்வின் எண்ணம் செல்கின்றதோ அதற்கொத்துத் தான் ஆத்ம உயிர் ஜீவன் பெறுகின்றது. அவ்வொலியின் தொடர்பு கொண்டுதான் ஈர்ப்பின் தொடர் வலுக் கொள்கின்றது.
இறைத் தன்மை என்பது எங்குள்ளது..? இறைவன் யார்…? மனிதன் யார்…?
1.மனிதனுக்குள் உள்ள உயிர்த் தெய்வம் பிரிந்ததென்றால் இவ்வுடல் அழியக் கூடியதுதான்…!
2.இந்தத் தத்துவத்தைத் தன்னுள் அறிந்த மனிதன் “தான் யார்…?” என்பதை உணராமல்…
3.கலியின் செயலில் தெய்வமென்ற உணர்வில் ஆத்மாவை அடகு வைக்கும் வழித்தொடரிலேயே
4.மனிதனின் அறியக் கூடிய உயர் ஞானத்தை வளர்க்கவிடாது இன்று உலகம் செல்கின்றதப்பா…!
ஆனால்…
1.மெய் ஞானத்தின் உண்மையின் தத்துவத்தை உணரக்கூடிய பக்குவம்
2.இஜ்ஜீவ சரீரத்தில் இவ் உயிராத்மா இயங்கக்கூடிய காலம்தான் என்பதை உணர்ந்து
3.ஒவ்வொரு மனிதனும் தன்னைத்தானே உணர்ந்திடல் வேண்டும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
ஒரு எலெக்ட்ரிக் லைட்டை மனிதன் தான் உருவாக்குகின்றான்.
இருளான இடங்களில் ஸ்விட்சைத் தட்டிய பின் அந்த விளக்கு வெளிச்சத்தை உமிழ்ந்து இருளை விலக்குகின்றது. விளக்கின் வெளிச்சத்தால் அங்கிருக்கும் பொருள்களைக் காணும் நிலை வருகின்றது.
இதைப்போல தான் அந்த மெய்ஞானிகள் தனக்குள் உணர்வின் தன்மையை ஆற்றல் மிக்கதாக மாற்றி இருள் சூழ்ந்த நஞ்சினை ஒளியாக மாற்றியவர்கள்.
நஞ்சின் தன்மை அதிகமாகும் பொழுது இருள் சூழும் நிலைகளுக்குக் கொண்டு வந்துவிடுகின்றது. ஆனாலும்
1.நஞ்சு ஒரு பொருளுக்குள் தாக்கிய பின் வெப்பமாகின்றது.
2.வெப்பம் அதிகமாகும் பொழுது நெருப்பாகி ஒளியாக மாறுகின்றது.
3.மனிதனின் ஆறாவது அறிவு இத்தன்மை கொண்டதே.
இருளின் தன்மை வரும் பொழுது ஒளியைப் பாய்ச்சி அந்த இருளை மாய்த்து இருளுக்குள் ஒளியாக மாற்றும் ஆற்றல் கொண்டது மனிதனின் ஆறாவது அறிவு.
ஆதியிலே எல்லையே இல்லாத பேரண்டத்தில் நஞ்சின் தன்மையே பரவி எங்கும் இருண்ட நிலையாக இருந்தது. எல்லை என்றால் இதைப் போன்ற கோள்களோ நட்சத்திரங்களோ சூரியனோ இல்லாது சூனியப் பிரதேசமாக இருந்தது.
சூனியப் பிரதேசத்தில் ஆவியாகப் படர்ந்து இருக்கும் அக்காலத்தில் ஆவிகளிலே மிகவும் சக்தி வாய்ந்தது அந்த விஷம் தான்.
ஆதியிலே அந்த விஷத்தின் தன்மை மற்ற அமைதி கொண்ட நிலைகளைத் தாக்கும்போது தான் வெப்பம் உருவாகின்றது. வெப்பத்தின் தன்மை பெருகி ஒளியாக அதாவது வெளிச்சமாகின்றது.
வெப்பத்தினால் வெளிச்சத்தின் நிலைகள் வரப்போகும் போது
1.ஈர்க்கும் நிலை உருவாகி… “காந்தம்”
2.தன்னுடன் அணைத்துக் கொண்டு வளரும் தன்மையாக
3.மீண்டும் மீண்டும் ஜீவனாக்கும் சக்தியாக அது விளைகின்றது.
எதனுடன் சேர்த்து ஒரு அணுவின் தன்மை விளைந்ததோ இந்த நஞ்சு “உலகை ஒளியாக்கும் நிலை…” வருகின்றது.
அது கடந்து வரப்படும் போது ஒவ்வொரு நிலைகள் பெற்று இவ்வாறு தான் “பிரபஞ்சம் இயக்கச் சக்தியாக…” மாறியது.
இயக்கச் சக்தி மாறினாலும் மீண்டும் நஞ்சின் தன்மை மற்றொன்றுடன் மோதி மோதி நெருப்பாகின்றது. பின் அந்த நெருப்பிலே நஞ்சைப் போட்ட பின் அந்த நஞ்சினுடைய சக்தி இழக்கப்படுகின்றது.
நஞ்சால்தான் வெப்பம் உருவாகின்றது. ஆனால் அந்த வெப்பத்தால் நஞ்சை அடக்க முடிகின்றது. இவ்வாறு உருவாகும் உணர்வின் சக்தியை அந்தப் பேருண்மைகளை மெய்ஞானிகள் தனக்குள் கண்டுணர்ந்தனர்.
பேரண்டத்தின் இயல்பின் நிலைகளயும் மனிதனான பின் ஆறாவது அறிவின் தன்மை எப்படிச் செயல்படுகிறது…? என்ற நிலைகளையும் அறிந்துணர்ந்தவர்கள் மகரிஷிகள்.
நெருப்பில் நஞ்சினைப் போட்டால் அந்த நெருப்பின் தன்மை நஞ்சினை எப்படி வீழ்த்தி விடுகின்றதோ இதைப் போல நஞ்சினை ஒடுக்கி ஒளியின் சிகரமாக மாற்றிடும் நிலைகள் பெற்றது “மனிதனின் ஆறாவது அறிவு” என்றும் காட்டினார்கள் ஞானிகள்.
ஆறாவது அறிவின் துணை கொண்டு நஞ்சினை வென்று
1.ஏழாவது நிலையாக ஒளியாக மாறுவதைத்தான் சப்தரிஷி என்று சொல்வது.
2.அந்த நிலை பெற்றவர்கள் சப்தரிஷி மண்டலமாக இன்றும் உள்ளார்கள்.
இதைச் சீராகச் செயல்படுத்தவில்லை என்றால் உயிருடன் ஒன்றிய நிலை அற்று மனித உரு இல்லாது நஞ்சு கொண்ட உடல்களைத்தான் பெற முடியும்.
உதாரணமாக நாம் மாட்டிற்கு ஆகாரம் போடுகிறோம் என்றால் கடும் நஞ்சாக இருக்கும் நாற்றமாக இருக்கும் அந்த நீரை ஊற்றுகின்றோம்.
மாடு அதை உணவாக உட்கொண்டு அதிலே கலந்த நஞ்சினைத் தன் உடலாக மாற்றிக் கொண்டு அந்த நஞ்சின் வலிமை கொண்டு ஒரு இயக்கச் சக்தியாக மாற்றி உடலின் வலிமையை அது பெறுகின்றது.
1.அதாவது நஞ்சைத் தன் உடலாக மாற்றிவிட்டு
2.அதனுடைய மலத்தை நஞ்சற்றதாக மாற்றுகின்றது.
மனிதனான நாமோ உணவாக உட்கொள்ளும் அதற்குள் இருக்கும் நஞ்சினை நீக்கிவிட்டு நமது உடலை நல்லதாக (அதாவது) ஆறாவது அறிவாக அடைகின்றது.
நஞ்சினை மலமாக மாற்றி நல்ல உணர்வின் தன்மை உடலிலிருந்து வரக்கூடிய அந்த மணத்தைத்தான் ஆறாவது அறிவாக உணர்த்துகின்றனர்.
எதையும் சரணமடையச் செய்யும் சக்தியான நம் ஆறாவது அறிவைத்தான் கார்த்திகேயா என்று காரணப் பெயர் வைத்தனர் ஞானிகள்.
அகண்ட அண்டத்தில் வரும் எத்தகைய நஞ்சாக இருந்தாலும் அதை அடக்கி இருளை நீக்கிப் மெய்ப் பொருளைக் கண்டுணர்ந்தவன் அகஸ்தியன்.
மனிதனின் நிலைகள் முழுமை அடைந்து விண் சென்ற முதல் மனிதன் அகஸ்தியன்.
1.தான் நுகரும் உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக்கி
2.தனி மண்டலமாக துருவ நட்சத்திரமாக இருக்கின்றான்.
அந்த அகஸ்தியன் உமிழ்த்திய உணர்வின் தன்மையை எவரெவர் கவர்ந்தனரோ அவர்கள் ஆறாவது அறிவின் தன்மையை ஏழாவது நிலையாக ஒளியாக மாற்றிச் சப்தரிஷி மண்டலங்களாக இன்றும் வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.
துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற்றவர்கள் அனைவருக்குமே
1.தீமைகளை அகற்றிடும் நிலையும்
2.நஞ்சினைத் தனக்குள் அடக்கிடும் ஆற்றலும்
3.உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியின் சிகரமாக மாற்றும் நிலைகள் வருகின்றது.
பேரண்டத்தின் உண்மைகளை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு உணர்த்தியைத்தான் உங்களுக்குச் சொல்லி வருகின்றோம். அகஸ்தியன் உணர்வைக் கவர்ந்து தான் நானும் இதைக் கண்டேன் என்று குருநாதர் எமக்கு (ஞானகுரு) உணர்த்தினார்.


பித்துப் பிள்ளையான (பித்துக்குளி) ஈஸ்வரபட்டர்
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் பித்தனைப் போன்று தான் இருந்தார். புற உலகிற்கு அவரைப் பார்க்கும் பொழுது ஒன்றுமறியாத பித்தன் என்றே எண்ணினோம். ஆனால்
1.பித்தான உடலுக்குள் நின்று
2.ஒளியான சத்தை தனக்குள் வளர்த்து உலகின் தன்மை அறிந்துணர்ந்து
3.அறிந்திட்ட உணர்வின் சத்தைத் தனக்குள் ஒளியாக மாற்றி விண்ணுலகம் சென்றார்.
மாமரத்தில் உருவாகும் காய் முதலில் புளிப்பின் தன்மை அடைந்தாலும் முதிர்வில் கனியாகி மற்றவர்கள் ரசித்து உணவாக உட்கொள்ளும் நிலை வருகிறது.
அதைப் போன்று நம் குருநாதர் இந்த மனித வாழ்க்கையில் வந்த
1.நஞ்சினை நுகராது இனித்த வாழ்க்கை என்ற நிலையைத் தனக்குள் எடுத்து
2.நஞ்சினை வெறுத்து மெய் உணர்வினைத் தனக்குள் வளர்த்து
3.”தன்னிச்சையாக…” மகிழ்ந்திடும் உணர்வுடன் செயல்பட்டார்.
4.அப்படி இருக்கும் நிலையை… அவரைப் பார்ப்போருக்கு பித்தனைப் போன்று காணப்பட்டார்.
பிற்காலங்களில் அவர் உணர்த்திய உணர்வின் ஒலிகள் கொண்டு தான் அதை அறிய முடிந்தது.
இந்தப் பூமியில் வாழ்ந்த உடல் பற்றை அவர் அகற்றிவிட்டு அந்த மெய் ஞானிகள் மீது பற்று கொண்டு அந்த அருள் உணர்வுகளை அவர் வளர்த்துக் கொண்டு ஒளியின் தன்மை பெற்றார்.
நமக்குள் எதைப் பற்ற வேண்டும் எதைப் பற்றற்றதாக மாற்ற வேண்டும் என்று எமக்குத் (ஞானகுரு) தெளிவாக உணர்த்தினார்.
வெறுப்பு வேதனை கோபம் குரோதம் என்ற நிலையும் பிறரை வெறுத்திடும் நிலையும் பிறரை அழித்திடும் உணர்வுகளையும் நமக்குள் இணையவிடாது அதை வெறுத்து அந்தத் தீமைகளைப் பற்றிடாது அருள் ஞானியுடன் பற்று கொண்ட உணர்வுகளை வளர்த்து அதைக் காத்திடும் நிலையாக நீ எவ்வாறு இருக்க வேண்டும்…? என்றும் உணர்த்தினார்.
என்னைப் பிறர் காணும் பொழுது நான் பித்தனாக இருக்கின்றேன். காரணம்
1.இந்தப் புவியின் ஆசை கொண்ட நிலையில் அவர்கள் என்னைப் பார்க்கும் பொழுது
2.என்னைப் பித்தன் என்று அவர்கள் எண்ணுகின்றார்கள்
3.ஆனால் ஆசையின் நிலைகள் கொண்டு அவர்கள் தான் பித்தராக இருக்கிறார்கள் என்று அவர்கள் உணரவில்லை.
பித்தனாகி… இந்த உடலின் தன்மைக்கோ பித்தைப் போன்ற உடலின் உணர்ச்சிகளுக்கோ… நான் அடிமையாவதில்லை. உணர்ச்சிகளை அடக்கி
1.அந்த மெய் ஞானிகளின் உணர்வை நான் பெற வேண்டும் என்று
2.அந்தப் பித்துப் பிள்ளையாகத்தான் (பித்துக்குளி) நான் இருக்கிறேனே தவிர
3.இவர்களைப் போன்று உடலின் பித்துப் பிள்ளையாக நான் இல்லை…! என்று எம்மைத் தெளிவாக்கினார் குருதேவர்.

மனித வித்தின் பலன் உயர் ஞானம் தான் – ஈஸ்வரபட்டர்
இயற்கையில் அமிலத்தின் ஒளி பெற்று மண்டலக் கோள்களின் ஈர்ப்பு வட்டத்தில் பூமியின் நட்சத்திரக் கோள்களின் அமில வளர்ச்சியால் உருவானது தான் இவ்வுயிர் ஆத்மாக்கள்.
அவை வளர்க்கக்கூடிய வளர்ச்சியும்… உருவான அந்தத் தொடர் நிலையின் வழித் தொடரில்தான் வளர்த்துக் கொள்ள முடியுமேயன்றி
1.வளர்ச்சித் தொடருக்கு எதிர்ப்பு நிலை ஏற்படும் பொழுது
2.வளர்ச்சியின் உருமாறக்கூடிய தன்மை தான் வளர்ப்பில் காண முடியும்.
நம் பூமியின் இயற்கைத் தன்மையின் ஜீவ வித்தின் பலன் நிலையே… மனிதனின் உயர் ஞான ஒளி சக்தி பெறக்கூடிய… “தெய்வ நிலை தான்…”
எந்த வித்தின் தொடரிலும்…
1.ஒரு பயிர் வளர்ந்து அதனின் பலன் தந்தாலும்…
2.அந்தத் தொடரின் மகசூல் பலவாகப் பெருகும் பக்குவத்தில்தான் பலவும் நடைபெறுகின்றன.
அத்தொடரின் தொடரில் தான்… ஆதி மனிதனின் உணர்வில் மனித உரு எண்ண வளர்ச்சி ஞானம் கொள்ளும் உயர்வு நிலை…. மனித வித்தின் உணர்வின் உயர் மண்டலமாம் பூமி மண்டலத்தில் உருவான மனிதச் செயல்.
இருந்தாலும் இதிலே மனிதன் வளர்ச்சி கொண்டு வாழும் காலம் மிகக் குறுகியதுதான்.
ஓர் விதையை நாம் விதைத்து… அந்த விதை வளர்ந்து செடியாகி.. மரமாகி… பக்குவம் பெற்றுப் பலனாய் அதனுடைய மகசூல் திரும்பிப் பெறக்கூடிய காலம் நீண்ட நாட்களாகி விடுகின்றது.
அதைப் போன்று தான் இப்பூமியும் வளர்ந்து வந்தது.
அதனுடைய வளர்ச்சியின் பக்குவ முதிர்வு நிலைக்குப் பிறகு… வளர்ச்சியின் பயனாய் மனித உணர்வின் உயர் ஞானம் கொண்டு செயல்பட்ட காலம்தான்… பூமி வித்தின் பலன் கண்ட காலம்…!
கண்ட பலனை… மீண்டும் பயிராக்கினால்தான் பலனின் தொடர் வளர்ந்து கொண்டே இருக்கும்.
ஓர் மரம் பலன் தரும் காலங்கள் முடிந்து… அம்மரத்தின் வளர்ச்சியை ஒத்து… மரத்தின் முதிர்வைக் கொண்டு பட்டுப் போன பிறகு… அம்மரத்தின் விதைகள் பல கோடியாய் வளர வைக்கக் கூடிய பயனை அம்மரம் தருகின்றது.
அப்படித் தந்ததை விரயமாக்காமல் வளர்க்கும் வளர்த் தொடர்ச்சியைப் போன்று தான்
1.இப்பூமியின் வித்தின் தொடரில் விதையான நம் ஆத்மாவும்
2.மீண்டும் பல வித்துக்களை வளர்க்கக்கூடிய விதையாகும் பக்குவத் தொடரில் வளர வேண்டும்.
மனிதனுடைய எண்ணத் தொடர் தன்னைத் தானே தான் உணர்ந்து… இயற்கையின் ஒலி ஒளித் தொடர் கொண்டு உயர் ஞானத்தை அறியும் உண்மைத் தத்துவ ஞானியாய் உயர்ந்திட வேண்டும்.
தன் ஆத்ம உயிரின் ஜீவ காந்த மின் தொடருக்கு…
1.இக்காற்றலையில் கலந்துள்ள மகரிஷிகளின் ஒளி அலைகளை
2.தன் உயர்வின் எண்ணத்தால் நுகர்ந்தெடுக்கும் தியான வழி கொண்டு
3.இஜ்ஜீவ ஒளியின் ஒளி நாதத்தால் மனிதன் தெய்வ நிலை பெற வேண்டும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
பழனியில் முருகன் சிலைக்குப் பக்கத்தில் போகர் சமாதி வைத்திருக்கின்றார்கள்.
முருகனுக்கு அபிஷேகம் ஆராதனை எல்லாம் செய்து விட்டுப் போகர் சமாதிக்கு வந்து “உனக்கு ஒரு கும்பிடு..! என்று கும்பிட்ட பின் காணிக்கையும் கொடுத்து விட்டுத் தன் பிள்ளைகளுக்கு ஏதாவது அர்ச்சனை செய்து கொண்டால் போதும் என்று அதைத்தானே நாம் செய்கிறோம்.
முருகன் கோயிலில் போகரை சமாதியாக வைத்திருக்கின்றார்கள். ஆனால் “அவர் யார்…?” என்பது தெரியாது.
முருகனைப் பார்த்த பின்… இந்தத் தெய்வ குணத்தை உணர்த்திய அந்தப் போகமாமகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று இப்படி எண்ண வேண்டும்
முருகன் சிலையைச் சிருஷ்டித்துக் கொடுத்தவன் போகன். சிலையை ஏன் அமைத்தான்…? எப்படி அமைத்தான்…? என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆறாவது அறிவின் தன்மையாக இந்தப் பிரபஞ்சம் மனிதனாக எப்படி உருவாக்கியது…? என்பதை அறிந்து கொண்டவர் போகர்.
1.பிரபஞ்சத்தில் விளைந்தவை நவக்கோள் அது தான் “நவபாஷாணம்…”
2.இருபத்தேழு நட்சத்திரங்கள் இது “வைரம்…”
3.இருபத்தேழு நட்சத்திரங்களின் சத்தை இணைத்து சூரியனிலிருந்து உமிழ்த்தும் காந்தப்புலன் அறிவு “பாதரசம்…”
கோள்களின் சத்தையும் நட்சத்திரங்களின் ஆற்றல்களையும் சூரியன் தனக்குள் எதைக் கவர்ந்து கொண்டதோ அதனின் உணர்வின் செயலாக உலகை மாற்றுகின்றது என்ற நிலையை அவன் உணர்ந்து அதைப் போன்றே உணர்வின் செயலாக முருகன் சிலையை உருவாக்கினான்.
எந்தக் கோள் உமிழ்த்துகிறதோ அது பூமிக்குள் பரவி வந்தாலும் தன் இனத்தைக் கவர்ந்து அது பாஷாணமாக உருவாக்கும்.
இதே போல் இருபத்தேழு நட்சத்திரம் அது ஒவ்வொரு நட்சத்திரத்திலிருந்து உமிழ்த்தும் உணர்வுகள் புவிக்குள் பரவி ஒவ்வொரு வைரமும் ஒவ்வொரு கலராக இருக்கும்.
நட்சத்திரத்திலிருந்து வரும் மின் அணுக்கள் புவியின் ஈர்ப்புக்குள் வந்து தனித்து எதிலும் சிக்காது வீரிய உணர்வு கொண்டு சந்தர்ப்பவசத்தால் பூமியிலே பதிந்து விடுகின்றது.
அப்படிப் பதிந்து விட்டால்
1.எந்த நட்சத்திரம்… எந்தக் கல்… எந்த மண்… எந்தச் செடியிலே…
2.இது அதிகமாகக் கலந்து இருக்கின்றதோ அதனின் சத்து வந்த பின்
3.இதன் ஈர்ப்பு வட்டத்திற்குள் மண்ணிற்குள் மறைந்து கருவாகி
4.தன் சத்தை மட்டும் அது உறிஞ்சி
5.ஒளியின் சிகரமாக அந்த வைரம் விளைகின்றது.
இதை எல்லாம் போகன் கண்டுணர்ந்தான்.
இந்தச் சத்துகள் எல்லாத் தாவர இனங்களிலும் எல்லா மண்ணுகளிலும் கலந்து இந்த உணர்வின் இயக்கமாகச் சூரியன் எவ்வாறு ஒளிச் சுடராக இருக்கின்றதோ இதைப் போல ஒளியின் சிகரமாக அறிந்திடும் அறிவின் ஆற்றல் பெற்றவன் மனிதன் என்று போகன் கண்டுணர்ந்தான்.
அவ்வாறு தான் அறிந்துணர்ந்த நிலைகள் கொண்டு இந்தப் பிரபஞ்சம் உருவானதையே மனித உரு போல அந்த உருவத்தை உருவாக்கினான் போகன். அது தான் முருகன் சிலை.
மனிதனுக்கு வேண்டிய ஜீவாதாரமான அறிவின் தன்மையும் தீமைகளை அகற்றும் உணர்வையும் கொடுக்கும் தாவர இனங்கள் அது எவ்வாறு உருவானதென்ற நிலையையும் அறிந்து கொண்டான் போகன்.
சிலையை உருவாக்கும் பொழுது மனிதனுக்கு ஜீவாதாரமாகவும் தீமைகள் அகற்றிடும் உணர்வின் தன்மை எண்ணங்கள் வடித்த அந்தத் தாவரங்களின் உணர்வுகளை அவன் கவர்ந்து அதைச் சாரணையாகக் கொடுக்கின்றான்.
உயிரணுவாகத் தோன்றியதிலிருந்து மனிதனாக வரும்போது பல வகையான தாவர இனங்களை உணவாக உட்கொண்டது.
அந்தச் தாவர இனச் சத்தின் மூலமாக வளர்ந்து தன்னைக் காத்திட அந்த ஞானத்தின் நிலைகள் எப்படிச் செயல்பட்டதோ அந்தத் தாவர இனச் சத்தை எல்லாம் இந்தச் சிலைக்குள் சாரணையாகக் கொடுக்கின்றான்.
மனிதனான நாம் உணவாக உட்கொள்ளும் உணவிற்குள் மறைந்த நஞ்சினை மலமாக மாற்றிவிட்டு நல்லதை நம் உடலாக்கிக் கொள்கின்றோம்.
இதைப்போல இதற்கு நேர் எதிரிடையாக இந்த மனிதனின் சிலையை உருவாக்கித் தன்னை அறியாது வந்த தீமைகளை அகற்றும் நிலையாக ஆறாவது அறிவை முருகா என்று காட்டினார் அந்தப் போகர்.
மண்ணுலகில் தன்னுடன் வாழ்ந்த மக்கள்…
1.அவர்களுக்குள் அறியாது வந்த நஞ்சை நீக்கி மகிழ்ந்திடும் உணர்வின் தன்மையைப் பெருக்க வேண்டும்…
2.விண்ணுலக ஆற்றல் பெற வேண்டும் என்ற அந்த ஆசையுடன் தான் முருகன் சிலையைப் படைத்தார் போகர்.
3.முருகன் சிலையைப் பார்க்கும் மனிதர்கள் தனக்குள் வரும் இருளை நீக்கி
4.மெய் ஒளி காணும் உணர்வுகளைப் பெறச் செய்தார் போகர்.
அப்பொழுது அவர்கள் மகிழ்ச்சியான உணர்வுகளை வெளிப்படுத்தும் பொழுது அந்த மகிழ்ச்சியான உணர்வின் அலைகளைத் தனக்குள் கவர்ந்து ஒளியின் சுடராக மாற்றிச் சென்றவன் போகன்.
இதைத் தெளிவாக மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
அன்றைய நிலைகளில் இந்தச் சிலையைப் போகர் உருவாக்கி அதன் மீது நீரைச் சொட்டச் செய்தார். நீரின் நிலைகள் படும் போது வெப்பத்தால் சிலையிலிருந்து ஆவியாக அலைகளாகப் படர்கின்றது.
சிலையை உற்றுப் பார்க்கும்போது அதிலிருந்து வரும் அலைகளை அனைவரும் நுகர வேண்டும் என்பதற்கே அவ்வாறு வைத்தார் போகர்.
சிலையைப் பார்க்கும் பொழுது நாம் எதை எண்ண வேண்டும்…? எதை நுகர வேண்டும்…?
1.முருக குணத்தைக் காட்டிய அந்தப் போக மாமகரிஷியின் அருள்சக்தி நாங்கள் பெற வேண்டும்.
2.மனிதனான ஆறாவது அறிவின் தன்மை முழுமை பெற வேண்டும்.
3.எங்களை அறியாத இருள்கள் நீங்க வேண்டும்.
4.மெய்ப் பொருள் காணும் திறன் நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கி அந்தச் சிலையைப் பார்த்து நுகர வேண்டும்
அதிலிருந்து வெளி வரும் மணத்தை நுகர்ந்தால் நம் வாழ்க்கையில் நம்மை அறியாது வரும் தீமைகளை மாற்றி நன்மையின் சக்தியாக அந்த ஒளியான நிலையை நாம் பெற முடியும்.
இன்று அந்தப் போகமாமகரிஷியை யாராவது எண்ணுகின்றனரா…? அவர் காட்டிய அந்த அருள் ஒளி பெற வேண்டும் என்று எண்ணுகின்றனரா…?
உனக்கு நான் அர்ச்சனை செய்தேன்… அதனால் என்னை நீ காப்பாற்று…! என்ற நிலைகளில்தான் செல்லுகின்றோம்.
அந்தப் போக மாமகரிஷி
1.மெய் உணர்வின் தன்மையை அறிந்தான்
2.தன் இன மக்கள் மகிழ்ந்திட வேண்டும் என்று எண்ணினான்
3.மகிழ்ந்த உணர்வின் அலைகளாகப் பரப்பும் நிலையைச் செய்தான்
4.மனிதர் அனைவரின் உயிரைக் கடவுளாக மதித்தான்.
5.அனைவரும் தெளிந்த நிலைகள் கவர வேண்டும் என்று ஏங்கினான்.
முருகன் கோயிலுக்குப் போனால் அர்ச்சனையும் இரண்டு பழத்தைப் படைத்து விட்டு “என்னை நீ பார்த்துக் கொள்…” இதைத்தான் சொல்கின்றோம்.
மனிதனின் ஆறாவது அறிவைக் காத்திடும் நிலையாக அவன் தெளிந்த உணர்வு கொண்டு விண்ணுலகம் சென்றான் போகன். ஒளியின் சுடராக இருக்கின்றான்.
மனித வாழ்க்கையில் வந்த நஞ்சினை அடக்கினான். நஞ்சினை அடக்கிடும் உணர்வை மனித உடலிலே பெற்றான் அந்தப் போகமாமகரிஷி.
அந்தப் போகமாமகரிஷியை நாம் யாரும் நினைக்கின்றோமா…!


ஜீவன்களை ஜீவிக்கச் செய்யும் சக்திகள் பூமியில் எப்படி வருகிறது…?
பாறைக்குள் இருந்து மலை மீது சில இடங்களில் உச்சியில் நீர் வடிவதைப் பார்க்கலாம். காரணம்…
1.அங்கே அந்தப் பாறை ஆவதற்கு முன் மேகங்களைக் கவர்ந்து அது தன்னிச்சையாக நீரைப் பருகி
2.அதன் அடியில் எந்த மலை இருக்கின்றதோ அதற்குள் ஊடுருவிச் செல்லும் திறன் பெற்றது.
இப்படிப்பட்ட சில பகுதிகள் மலைகளில் உண்டு…!
மேகங்கள் மேலே பறந்து சென்றாலும் உச்சிமலையாக இருப்பது தனது காந்தப் புலனால் மேகங்களைக் கவர்ந்து நீராகச் சுரக்கச் செய்கின்றது. மலை உச்சிகளில் நாம் பார்க்கும் நீர்கள் எல்லாம் இப்படித்தான்.
இவைகள் எல்லாம் அந்தப் பாறைக்குள் இருக்கக்கூடிய காந்தப்புலனும் அதனுள் கவர்ந்து கொண்ட அந்த உணர்வின் சத்தின் துணை கொண்டுதான் அந்தப் பாறையே அதை வளர்க்கின்றது.
1.இந்தப் பாறைகளிலிருந்து வெளிப்படும் ஆவியின் தன்மையும்
2.அந்தப் பாறைக்குள் நீராகக் கலந்து அதனின் தன்மை ஆவியாகப் படர்ந்து வரப்படும் பொழுது
3.அதிலே உருப் பெற்ற பல செடிகளின் சத்துக்களும் இது எல்லாம் ஒருக்கிணைந்து
4.அதனின் தன்மை ஒரு செடியாக ஒரு வித்தாக… கருவாக உருவானால்
5.அத்தகைய செடியையோ அல்லது மரத்தையோ வேறு எங்காவது நாம் ஊன்றினோம் என்றால்
6.அந்த மரத்திலிருந்து வரக்கூடிய காந்தப்புலன்
7.விண்ணிலிருந்து நுண் அணுக்களாகத் துருவப் பகுதியில் கலந்து கொண்டிருப்பதையோ
8.அல்லது கடல் நீரிலிருந்து வெளிப்படும் ஆவியின் சக்தியைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்திருந்தால் அதனின் சக்தியையோ
9.அந்தத் தாவர இனம் தனக்குள் குவித்து… மேகங்களாகக் கூடச் செய்து நீராக வடியச் செய்கிறது
10.அந்த நீரின் சத்தை அது வளர்த்துக் கொள்கின்றது.
இப்படியும் பல நிலைகள் உண்டு…! இது எல்லாம் இயற்கையில் உள்ள சில நிலைகள்.
பல பல செடிகள் தனக்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் இயல்பால் புதுப் புது தாவர இனங்களாகப் பூமியிலே விரிவடைந்து வளர்ந்திருந்தாலும் அவை அனைத்தும் வெளிப்படுத்தும் உணர்வுகள் காற்றிலே கலந்துள்ளது.
அவ்வாறு கலந்தவைகளில் உதாரணமாக ஒரு கடலைச் செடியிலே ஒரு உயிரணு விழுந்தால் அந்தச் சத்தினை அது கவர்ந்து உடல் பெற்று சிவமாக மாறுகின்றது.
சிவமாகும் பொழுது அந்தக் கடலைச் செடியின் சத்தை இந்த உயிரணு சுவாசித்து அதிலிருந்து வெளியிடும் நிலைகள் புழுக்களாகத் தோன்றுகிறது. இப்படி எண்ணிலடங்காத செடிகளிலிருந்து வெளி வருகிறது.
1.அவை இடும் மூச்சலைகளிலிருந்து வருவதுதான்
2.மனிதனாக உருப் பெறுவதற்குத் தேவையான ஜீவனுள்ள “பிராணவாயு…” என்று சொல்வார்கள்.
3.தனக்குள் மற்ற நஞ்சின் தன்மையை (கரியமில வாயுவை) மாற்றி இயற்கையின் ஜீவித சக்தியை வளர்க்கும் சக்தி அங்கே பெறுகின்றது.
ஏனென்றால் ஆரம்ப நிலையில் தோன்றிய செடிகள் வேறு. இப்பொழுது உருவாகும் செடிகளின் இனங்கள் வேறு.
அத்தகைய செடியின் சத்தைத் தான் நுகர்ந்து இந்த உணர்வின் துணை கொண்டு அது விளைந்த இது இடும் மூச்சலைகள் சூரியனுடைய காந்த சக்தியால் கவர்ந்து அலைகளாகப் படர்கிறது.
ஆகவே ஜீவணுக்கள் உயிரணுக்களில் இருந்து வரக்கூடிய உணர்வினைச் சுவாசித்து அந்த உணர்வின் தன்மை ஒரு உடலுக்குள் ஜீவிக்கும் தன்மையாக… பிராணவாயுவாகக் கிடைக்கின்றது.
இது எல்லாம் மெய்ஞானப் பாடம்…!

ஆத்ம உயிரை ஆண்டவனாக்கத் தான் உபதேசிக்கின்றேன் – ஈஸ்வரபட்டர்
மனித உணர்வின் சூட்சுமத்தை… “மனிதனே அறியக்கூடிய ஒளி சக்தி வளரும் சுயநலச் செயலினால்தான்…” பொதுநலனின் பரிமாணத்தை விரிவுபடுத்த முடியும்.
மனிதனுக்குகந்த வீரிய மின் காந்த ஒளி சக்தி மிருகத் தன்மையின் சரீர இயக்கத்தில் அதிகப்பட்டிருந்தாலும் உணர்வின் செயலைப் பக்குவப்படுத்தக்கூடிய தன்மை அவைகளுக்குக் குறைவு.
ஆகவே “மனித எண்ணத்திற்குத்தான்” பகுத்தறிவின் சூட்சும ஒளியை வளர்க்கும் தன்மை… இப்பூமியின் சூட்சுமமுடன் வளர்ந்த “ரிஷிகளின் செயலினால் செயல்படுகின்றது…!” ஒன்றின் வளர்ச்சியில் ஒன்றின் பக்குவத்தால்.
மிருகங்களுக்குப் பிரித்துப் பார்க்கும் தன்மை மனிதனை ஒத்து இருப்பதில்லை. ஆனால் மிருகங்களும் இப்பூமியின் ரிஷிகளின் சூட்சுமத்தில் வளர்க்கப்பட்ட இறை சக்தி தான்.
அவைகளுக்குக் கழிவும் உணவும்… ஒரே இடத்தில் ஒன்றாக இருந்தாலும் மனிதனை ஒத்து அருவருப்பு… நாணம்… முதலியன மிருகங்களுக்கு இருப்பதில்லை.
மனிதனின் பகுத்தறிவால் தனக்குகந்ததை உயர்ந்ததாய்ப் பெற்று மகிழக் கூடிய பக்குவம் கொண்ட செயல் வளர்ச்சி வீரியம் பெற்ற ஜீவ இறையருளின் உன்னதத் தன்மை கொண்டவன்.
தாவரங்களும் மிருகங்களும் மனிதனும் இப்பூமியின் இறை சக்திகள் தான்.
1.இறை சக்தியே இறையுணர்வு பெற்று
2.இறைத் தன்மையில் பக்குவப்படுத்தக்கூடிய குணம் தான் தெய்வ குணம்.
இப்பூமியில் ஆரம்ப மனிதன் வாழ்ந்த வாழ்க்கைக்கும் இன்றைய மனித வாழ்க்கைக்கும் நிறைய மாற்றங்கள் உண்டு. மனிதத் தேவைக்குகந்த உணவு… உடை… இருப்பிடம்… ஒவ்வொன்றிலும் தன் ஞானத்தால் மனித வாழ்க்கையின் வசதிக்குகந்த பக்குவத்தை மனிதன் இன்று பல வகையிலும் வளர்த்துக் கொண்டுள்ளான்.
அதைப் போன்று… இச்சரீர சுகத்தின் தேவையில் வளர்ச்சியுற்ற மனிதன் ஆத்ம தேவையின் பக்குவத்தை… இறை குணத்தின் வளர்ச்சியை வலுக்கூட்டும் தெய்வத் தன்மையால்… இக்கலியின் மாற்றத்தில் கல்கியில்…
1.இன்றைய மனிதனைக் காட்டிலும்
2.மனித எண்ணத்தின் வீரியத்தின் தெய்வத் தன்மையால்
3.மனிதன் “பறக்கும் நிலை” கொண்ட உயர்ந்த செயல் நிலைக்கு வர முடியும்.
ஒன்றைப் பக்குவப்படுத்தி அப்பக்குவத்தின் பொருளை எப்படி நமக்குகந்ததாக ஏற்படுத்தி சரீர வாழ்க்கையில் இன்பத்தைக் காண்கின்றோமோ அதைப் போன்று… ஆத்மாவின் பக்குவத்தில் அகிலத்திலும் கலந்துள்ள ஆதி சக்தியின் செயல் சக்தியில் “உயர்ந்த தன்மையான சூட்சும ஒளியால் ரிஷி சக்தியை மனிதன் பெற முடியும்…”
மனிதனின் ரிஷி சக்தியைக் கொண்டுதான்…
1.மூவுலக சக்தியான “ஆக்கல்… காத்தல்… மாற்றல்…” என்ற வழித் தன்மையில்…
2.வளர்ச்சியில் வளரும் அண்டக் கோள்களில்… பால்வெளி மண்டலத்தில்
3.எண்ணிலடங்கா இறை சக்தியில் இறையுணர்வாகும் தெய்வ சக்தியில்…
4.ஆண்டவன் என்ற படைப்பின் தன்மைக்குச் செயல் கொள்ளும் ரிஷித்தன்மையால்…
5.அந்தந்த அமிலத்தின் உருத்தன்மையில் உருவாகும் உயிர்த் தன்மையில் பக்குவம் கொள்ளும் படைப்பின் ஒளித் தன்மையை…
6.ரிஷித்தன்மையின் ஒளித் தன்மையால் தனக்கொத்த செயலுக்கு மண்டலங்களை உருவாக்கி…
7.உருவின் உருக்களை உணரும் வளர்ச்சியைத் தன் வலுவாக்கி…
8.அண்டக் கோள்களையும் படைக்கும் ரிஷிகளால்…
9.படைப்பின் பலனாய்ப் பக்குவப்படுத்தப்பட்ட உணர்வின் தெய்வ குணத்தின் “ஆண்டவனாக்கும்” வழிச் செயல்தான்…
10.“அண்டத்தின் சூட்சுமத்தில் ஆதி சக்தியின் உண்மைச் சக்தி – உருப்பெறும் நிலை…!”
இச்சரீரத்தின் உணர்வை… “மின் காந்த ஒளி சக்தியை” இப்பூமியின் பிடிப்பில் இச்சரீர வாழ்க்கையில் அடையும் சுகத்தால் உணர்வின் எண்ணம் ஆத்மாவை வளர்க்க உதவாது.
இச்சரீரத்தை இப்பூமியின் பிடிப்பிற்கு அடகு வைக்கும் மனித உணர்வினால் அடையப் போகும் நன்மை எதுவுமில்லை…!
ரிஷிகளின் சக்தியால் பல கோடி ஆண்டுகளாய் பலவற்றில் வளர்ந்து வலுவாகி உள்ள இவ்வுயிராத்மாவை… ஆத்ம உயிரின் வீரியத்தின் உண்மையை உணரும் எண்ணத்தில்.. மனிதன் தன்னைத் தானே உணரும் பக்குவத்தால்… ஆத்ம உயிரின் சுயநலத்தைக் கொண்டு பொது நலத்தை வளர்க்கும் சூட்சுமத்தை உணர முடியும்.
தான் உண்ணும் உணவிற்கு…
1.நெல்லை எடுத்து அதிலுள்ள உமியை ஊதிப் பிரித்து விட்டு
2.மணியை (அரிசி) எடுத்துப் பக்குவப்படுத்தி உண்ணும் மனிதன்
3.தான் எடுக்கும் எண்ணத்தின் உணர்வைப் பக்குவமாக்கி
4.ஆத்மாவின் ஒளியை வளர்க்கும் தன்மை ஏன் பெற முடியாது…?
தன்னில் உள்ள இறைத் தன்மையை… தெய்வமாக்கும் நற்குணம் கொண்ட பக்குவத்தால்
1.ஆத்ம உயிரை ஆண்டவனாக்கும் வழிமுறைதான்
2.இங்கே உணர்த்தப்படுவதன் சக்தி நிலையின் உண்மை நிலை.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
பேட்டரியைச் சார்ஜ் செய்து அதன் மூலம் மற்ற கருவிகளைத் தொடர்ந்து இயக்குவது போல “துருவ நட்சத்திரத்தின் உணர்வை வலுவேற்றிக் கொண்டு… மற்ற எல்லா உணர்வுகளையும் இயக்குங்கள்”
நமக்குள் தெளிந்த சக்தியான நல்ல குணங்கள் இருப்பினும் நமது வாழ்க்கையில் பிறர் வேதனைப்படும் உணர்வை நுகர்ந்து விட்டால் என்ன ஆகின்றது…?
பாலில் பாதாமைப் போட்டு வைத்திருந்தாலும் அதில் ஒரு துளி விஷம் பட்டால் அந்தப் பாதாமிற்கே சக்தி இழந்தது போல வேதனையை நுகர்ந்து விட்டால் நமக்குள் இருக்கும் நல்ல குணங்கள் அனைத்தும் சக்தி இழந்து விடுகின்றது.
ஒரு விஷம் பட்டால் எப்படி நம் தலை சுற்றுகின்றதோ விஷம் பட்டால் நம் சிந்திக்கும் தன்மை இழக்கப்படுகின்றதோ அதைப் போல
1.எதை எடுத்தாலும் பெரும் பாரம் போலத் தோன்றும்.
2.நம் காரியத்தைச் செய்ய முடியவில்லை என்றால் “கோபம்…” என்ற உணர்ச்சிகள் வரும்.
3.நம்மை அறியாமலேயே தவறு செய்யும் நிலைகள் உருவாகும்.
4.நமக்கு நாமே தண்டனை கொடுக்கும் நிலையும் வருகின்றது.
இதைப் போன்ற நிலைகளில் எல்லாம் இருந்து விடுபடுவதற்கு அதிகாலையில் துருவ தியானத்தை எடுத்து “வாழ்க்கையே தியானம்…” என்ற நிலைகள் கொண்டு வாருங்கள்.
எப்பொழுதும் உங்கள் நினைவு அந்தத் துருவ நட்சத்திரத்துடன் ஒன்றியே இருக்கட்டும். உங்கள் மனதைத் தூய்மைப்படுத்திக் கொள்ள யாம் உபதேச வாயிலாகப் பதிவு செய்ததை எண்ணினால் இந்தக் காற்றில் உள்ளதை அருள் சக்திகளைக் கவர்ந்து உங்கள் தீமைகளை நீக்கச் செய்யும்.
சிந்திக்கும் ஆற்றல் உங்களுக்குள் பெருகி வாழ்க்கையை நல் வழியில் வழி நடத்தும் உணர்வுகள் உங்களுக்குள் இயக்கும்.
உங்கள் உடலில் உள்ள உறுப்புகள் உருவாக்கிய அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் உணர்வை பெறச் செய்வதே நமது குரு காட்டிய அருள் வழியில் இந்தத் தியானம்
உதாரணமாக ஒரு பேட்டரியை எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு நொடியிலேயும் அது இயங்கி கொண்டே உள்ளது.
அதில் சார்ஜ் குறைவாகி விட்டால் மறுபடியும் பேட்டரியைச் சார்ஜ் செய்ய வேண்டும். சார்ஜ் செய்யவில்லை என்றால் அதிலுள்ள மற்ற செல்கள் எதுவும் இயங்காது. இதைப் போல
1.உயிரிலும்
2.உயிர் வழியாக உடலில் உள்ள எல்லா அணுக்களுக்கும்
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வின் வீரியத்தை ஊட்டினால்
4.சிந்திக்கும் வலிமையான ஆற்றல்கள் கிடைக்கும்.
இவ்வாறு செய்து வந்தால் உங்கள் வாழ்க்கையே…. “தியானம்” ஆகும்.
உங்கள் வாழ்க்கையில் அந்தத் துருவ நட்சத்திர உணர்வைப் பற்றுடன் பற்றுங்கள். தீமைகளைப் பற்றற்றதாக்கிக் கொள்ளுங்கள்.
நம் நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெற வேண்டும் என்று அவர்களையும் அதைப் பற்றச் செய்யுங்கள்.
அவர்கள் உடலில் உள்ள தீமைகளை அகற்றும் உணர்வை ஊட்டினால்,
1.நண்பர்களும் நலமாவார்கள்
2.நாமும் நலமாவோம்
3.நம் உடலும் நலமாகும்
4.நம் வாழ்க்கையும் நலமாகும்
5.நம் தொழிலும் நலமாகும்
இந்த முறையில் ஒவ்வொரு குடும்பத்திலும் செய்து அருள் வாழ்க்கை வாழ்ந்திடுங்கள்.


உங்கள் வாழ்க்கையில் எதிர்படும் சந்தேகங்களைப் போக்குவதற்குத்தான் மீண்டும் மீண்டும் உபதேசிக்கின்றேன்
எம்முடைய (ஞானகுரு) உபதேசத்தை நீங்கள் கேட்டு அதைக் கடைப்பிடித்து வழி நடந்து கொண்டிருந்தாலும் உங்கள் உடலுக்குள் எத்தனையோ குணங்கள் எதிர்ப்பு உணர்வுகளைக் காட்டும்.
1.உங்களுக்குள் அவ்வாறு எழும் நிலைகளை மாற்றி
2.அந்தச் சந்தேக உணர்வுகளை நீக்கும் நிலைக்காகத்தான்
3.திரும்பத் திரும்ப யாம் உபதேசிப்பது.
அந்தக் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக அந்த மெய் ஞானிகள் பெற்ற உணர்வுகளை மீண்டும் மீண்டும் ஆழமாகப் பதிவு செய்யும் பொழுது
1.இதுவே உங்களுக்கு வழிகாட்டியாக அமையும்.
2.உங்களுக்குள் இருக்கக்கூடிய உள் பொருளைக் காண முடியும்.
3.உங்களுக்குள் நல்லதைப் பெற முடியும்.
அந்த நம்பிக்கையில்தான் இதை உபதேசிக்கின்றேன்.
குருநாதர் எமக்குக் காட்டிய அருள் வழிப்படி “என்னை விழித்திருக்கச் செய்த அந்த நிலையை…” நீங்களும் என்றும் விழித்திருந்து… தீமைகள் உங்களுக்குள் புகாது தடுத்துப் பழக வேண்டும்.
காரணம்… உங்களுக்குள் தீமைகளை அறிவிக்கச் செய்யும் நிலையில் “தீமை இது தான்…” என்று அது காட்டினாலும் அந்தத் தீமைகள் உங்களுக்குள் விளையாது நல்ல உணர்வின் தன்மையை வளர்த்து தீமைகளை அகற்றிடும் சக்தியாக உங்களுக்குள் விளைய வேண்டும்.
ஆகவே… தீமையை அகற்றிட்ட இருளைப் போக்கிட்ட அந்த அருள் ஞானிகளின் உணர்வுகள் பொருள் கண்டுணர்ந்திடும் அந்த ஆற்றல் மிகுந்த சக்தியாக உங்களுக்குள் வளர வேண்டும் என்றுதான் எமது குரு அருளாசிப்படி
1.நீங்கள் அனைவரும் அதை அவசியம் பெற வேண்டும்…
2.நீங்கள் நிச்சயம் பெறுவீர்கள் என்ற தன்னம்பிக்கையில்
3.காலமானாலும்… கால நேரம் பார்க்காது உயர்ந்த சக்தியை நீங்கள் பெற வேண்டும் என்ற ஏக்கத்துடன்
4.உங்கள் நல்ல உணர்வுடன் அருள் ஞானிகளின் உணர்வை இணைத்து இணைத்து
5.ஈஸ்வரப்பட்டர் அருள் ஆசைப்படி உங்களுக்கு இதை உபதேசிக்கின்றேன்.

உடலைச் சக்கையாக்கி… “உயிரை மணியாக்கும்” பக்குவத்திற்கு நாம் வளர வேண்டும்
1.என்னுள்ளே நான்… என்ற நிலைக்கொப்ப
2.தன்னுள் உள்ள தன் உயிராத்மாவை
3.தன்னை இயக்கும் எல்லாமில் எல்லாமாய்ப் படர்ந்துள்ள இறை உயிரை
4.தன்னுள்ளுள்ள உயிர்த் தெய்வத்தைத் தான் வளர்க்க
5.இச்சரீரத்தைப் பதராக்கி… உயிரை மணியாக்க…
6.ஜீவ வளர்ச்சி ஓட்டத்தில் வளரும் காலத்தில்
7.வளர்ச்சியின் முதிர்வு நிலை முற்றிய பிறகு மணியைப் பிரித்து
8.”என்னுள்ளே நான்…” என்ற இறை தெய்வமான உயிர்த் தெய்வத்தை ஒளிர வைக்க முடியும்.
ஜீவ உணர்வின் எண்ண சரீரம் ஆத்ம உயிருக்கு உயர்வு நிலையின் எல்லாவற்றையும் கடந்து ஒளி சக்தியின் தெய்வநிலை பெறத்தக்க வழிக்கு வளர்க்கும் செயல் சரீர உருநிலை.
நெற் பயிர் வளர்ந்து முதிர்ந்து மணியை வெளிப்படுத்துவதைப் போன்று இவ்வுயிராத்மா உடலில் இயங்கும் பொழுதே… “இவ்வுடலைச் சக்கையாக்கி உயிரை மணியாக்கி வளரும் பக்குவத்திற்கு” நாம் வருதல் வேண்டும்.
மனிதனுக்குக் கிடைத்துள்ள எண்ணத்தின் ஞானத்தை ஒன்றை அறியக் கூடிய வளர்ச்சியை உயர்ந்த எண்ணத்தில்
இப்பூமி பிற கோள்களின் துணை கொண்டு சுழன்று கொண்டே ஓடிக் கொண்டே உள்ள ஓட்டத்தில் பிற கோள்களின் தொடர்பு கொண்டு தான் வளர்ந்து வளரக்கூடிய நிலை பெற்றது.
இந்தப் பூமியின் மண்டல ஓட்டத்திற்கொப்ப…
1.இப்பூமியில் வளரக்கூடிய நம் உயிராத்மாவையும் ஓர் மண்டலமாக உருவாக்கக் கூடிய தன்மைக்கு
2.எதையும் வளர்க்கவல்ல எண்ணத்தின் சைவ சித்தம் மனிதனின் உணர்வில் இருக்க வேண்டும்.
“மனிதனின் எண்ணம் தான்” வீரியம் கொண்டு இப்பூமியின் பிடிப்பு வாழ்க்கையில் ஒன்றை வளர்க்கவும் அழிக்கவும் செயல் கொள்கின்றது. எதையும் சாதிக்கவல்ல சக்தி மனித ஆற்றல் திறமைக்கு உண்டு.
மனிதன் தெய்வமாகக் கூடிய வழி முறைக்கு எண்ணத்தைச் செலுத்தி இப்பூமிப் பிடிப்பின் இறுக்கத்திலிருந்து இப்பூமியின் சுழற்சியிலிருந்து விடுபடலாம்.
விஞ்ஞானிகள் இன்று தன் ஞானத்தால் கண்டுபிடிக்கும் விஞ்ஞானக் கருவிகளினால் வான மண்டலத்தில் உள்ள இரகசியங்களையும் ஒவ்வொரு கோள்களில் உள்ள உண்மைகளையும் அறிந்து பூமியில் மனித ஆத்மாக்களுக்கு வேண்டிய வளர்ச்சிக்கு மனித அறிவின் ஆற்றலை விஞ்ஞானத்தில் பெருக்க முயற்சிக்கின்றார்கள் அல்லவா..!
அந்தத் திறனைப் போன்று மனிதனும் தன் உயிராத்மாவைப் பிற கோள்களில் எண்ணத்தைச் செலுத்தி
1.அவ் எண்ணத்தின் தொடர்பை இச்சரீர உணர்வுடன் எடுக்க எடுக்க
2.இச்சரீரத்திலுள்ள உயிரணுக்கள் யாவையுமே எவ் அமிலத்தை இச்சரீர உணர்வுடன் அதிகமாக எடுக்கப் பழகிக் கொள்கின்றதோ
3.அத்தொடரின் வலுத் தன்மையால் இச்சரீரம் சக்கையாகி
4.ஆத்ம உயிர் தனித்துச் செயல்படக் கூடிய வளர்ச்சியால் இச்சரீரம் ஒளிச் சரீரமாகி
5.மற்ற ஈர்ப்பின் பிடிப்பில் இவ்வுயிராத்மா சிக்காமல் ஒளி நிலை பெறுகின்றது.
எவ்வித்து வளர்ந்தாலும் அவ்வித்தின் தொடர் அதனதன் ஜீவ வளர்ச்சியில் பலவாகப் பலன் தருகின்றது. மனித சரீரத்தின் வித்தின் உண்மைப் பலன் தன் பிறப்பில் பிறக்கக்கூடிய ஜீவ குழந்தைகள் மட்டுமல்ல… மனித சரீரத்தில் இம்மனிதனாய் ஆத்ம உயிர் ஜீவன் கொண்டு வளர… “பல கோடி கோடி ஜீவ அணுக்கள்” இச்சரீரத்தில் வளர்கின்றன.
ஓர் நெல் செடியாகி அதனின் பலனில் பல நெல்களைத் தருகின்றது. அதைப் போன்று
1.இச்சரீரத்தை இயக்கும்… “உயிராத்மாவை வித்தாக்கி”
2.உயிரணுக்கள் ஒவ்வொன்றையுமே வித்தின் பலன்களாக
3.உயிரின் பருமனை ஒளியாக்கக் கூடிய உயர் காந்த வளர்ச்சிக்குப் பக்குவப்படுத்துவதுதான்…!
தியானத்தின் மூலம் எடுக்கக்கூடிய உயர் ஞானத்தின் மனோ வேகத்தை
1.மகரிஷிகள் காட்டிய சைவத்தின் சித்த குணமான நற்குணத்தைச் சம உணர்வுடன் கூடிய எண்ணத்தில் பக்குவப்படுத்தி
2.மின் காந்த சக்தியை இச்சரீரம் எடுக்கும் வழிமுறையில்
3.இவ்வுயிராத்மா இவ்வுடலிலுள்ள ஒவ்வொரு உயிரணுக்களையும் பலனாக எடுத்து
4.தன் வளர்ச்சியின் வீரியம் பெற முடியும்.
தனக்குள் உள்ள உணர்வின் எண்ணத்தில் இருந்துதான் மனிதன் சக்தியைக் கூட்டி உயர்வு நிலைக்குச் செல்ல முடியும். இதனை உணர்ந்து பக்குவ முறையில் ஒவ்வொருவரும் பலன் பெறலாம்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
சிவன் ஆலயத்தில் நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை என்று ஏன் வைத்திருக்கின்றார்கள்…? அதனின் உட்பொருளை அறிந்துள்ளோமா…?
கோயிலில் போய் நம் கஷ்டத்தை எல்லாம் சொல்லிவிட்டால் அந்தத் தெய்வம் நிவர்த்தி செய்து தரும்…! என்று தான் நாம் நினைக்கின்றோம்.
வாழ்க்கையில் கஷ்டம் வேதனை என் தொழில் நடக்கவில்லை… அது நடக்கவில்லை… இது நடக்கவில்லை… என்று வேதனையை எடுத்துக் கொள்கின்றோம்.
பிறருடைய கஷ்டங்களை நாம் கேட்கின்றோம்… அறிகின்றோம்.. நுகர்கின்றோம்… பின் உதவி செய்கின்றோம்.
பிறருடைய உடலில் இரத்தக் கொதிப்பு இருக்கின்றது. பிறருடைய உடலில் கோபம் இருக்கின்றது. பிறருடைய உடலில் வேதனை இருக்கின்றது.
இதையெல்லாம் நாம் பார்த்து “பாவம்… அவர்கள் குழந்தை குட்டிகளை வைத்துக் கொண்டு மிகவும் கஷ்டப்படுகின்றார்கள்.
நல்லவர்களாக இருக்கின்றார்கள். சந்தர்ப்பத்தில் அவர்கள் குழந்தை தான் அத்தனை அட்டகாசம் செய்கின்றான். அவனைப் பார்த்தால் அவர்களுக்குத் தொல்லையாகின்றது என்று நாம் அதையெல்லாம் அறிந்து கொள்கிறோம்.
பிறர் சிரமப்படுவதைப் பார்க்கின்றோம்.. உணர்கின்றோம்.. அவன் திருந்தி வாழவேண்டும் என்றும் நினைக்கின்றோம். ஆனால் அதையெல்லாம் கூர்ந்து கவனித்து நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் நமக்குள் வந்தவுடனே
1.பிறருடைய அந்தத் தோஷம்
2.”தோஷமாக…” நமக்குள் வந்து விடுகின்றது.
எது…?
பிறருடைய கஷ்டம் நஷ்டம் எல்லாம் நமக்குள் வருகின்றது. இது தான் பிரதோஷம். சிவன் கோயில்களில் இதைத்தான் “பிரதோஷம்…” என்று தெளிவாகக் கொடுக்கின்றார்கள்.
பிறருடைய கஷ்டம் நஷ்டம் எல்லாம் நமக்குள் வந்தவுடனே நாமும் புலம்பத் தொடங்குவோம்.
காசு கொடுத்தவன் கொடுக்கவில்லை… என் பையன் சொன்னபடி கேட்கவில்லை… என்றால் நம் வீட்டிலும் “அந்தத் தோஷம்” இங்கே வந்து விடுகின்றது
நம் வீட்டில் இருப்பவர்கள் நன்றாக உயர்வாக இருந்தாலும் உடலில் நோய் வந்து விட்டது என்றால் உற்றுப் பார்க்கின்றோம். “அவர்கள் உடலில் விளைந்த தோஷம்” நம்மிடம் வந்து விடுகின்றது.
நான்கு பேர் நண்பர்களுடன் நாம் பழகுகின்றோம். அவர்கள் உடலில் சந்தர்ப்பவசத்தால் நோய்கள் வருகின்றது. அதை நாம் கேட்டறிகின்றோம். “நண்பருடைய தோஷம்…” நமக்குள் வந்து விடுகின்றது.
1.இந்த வாழ்க்கையில் நாம் தவறு செய்யவில்லை.
2.வாழ்க்கையில் பிறருடைய கஷ்டங்களை எல்லாம் நாம் கேட்டறிந்து
3.இதை எல்லாம் நமக்குள் சேர்த்ததும்
4.நமக்குள்ளும் தோஷமாகின்றது.
நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை என்று ஞானிகள் காட்டியுள்ளார்கள். நாம் எந்தெந்தக் குணங்களை அதிகமாக நேசித்தோமோ இந்தக் கணக்கின் பிரகாரம் நம் உடலுக்குள் மாற்றங்களாகின்றது.
கோபம்… கோபம்… என்று ஆத்திரப்பட்டால் இரத்தக் கொதிப்பு வருகின்றது.
கோபமும் வேதனையும் சலிப்பும், சஞ்சலம் வந்து சரவாங்கி நோயாகிக் கை கால் எல்லாம் முடக்குகின்றது. கோபம் வந்தால் “பளீர்..” என்று வந்து வெட்டி “வெடுக்…”கென்று இழுத்துக் கொள்கின்றது.
விஷம் என்ற நிலைகள் வந்துவிட்டால் பாம்பு போல “தொளக்..” என்று போட்டு விடுகிறது. விஷம் பாய்ந்தவுடனே என்ன செய்யும்…? கை இல்லாமல் போகும்.
நம் வாழ்க்கையில் நாம் எந்தெந்தக் குணங்களை அதிகமாகச் சுவாசித்தோமோ அந்தக் கணக்கின் பிரகாரம் இந்த உடலில் அதற்குத்தக்க மாற்றம் வருகின்றது.
1.நாம் சுவாசித்த நந்தி… “ஈஸ்வரர்”
2.நாம் சுவாசித்த உணர்வுகள் உயிரான ஈஸ்வரனிடம் படுகின்றது.
3.நாம் சுவாசித்தது நம் உடலுக்குள் போய்
4.எந்தக் குணமோ உயிரைப் போலவே ஜீவ அணுவாக உருவாகி
5.அந்தக் கணக்குகள் நமக்குக் கூடும்.
உயிரைப் போலவே ஜீவனாகின்றது. உயிருக்குள் ஏற்படும் வெப்பம் விஷ்ணு. ஆக…
1.விஷ்ணுவின் மறு அவதாரம் சீதாராமன்.
2.எதன் சுவையோ அந்த உணர்வுக்கொப்ப எண்ணங்கள் வரும்.
3.வேதனை என்ற சுவை இருந்தால் வேதனை என்ற உணர்ச்சி வரும்.
அது தான் உயிரைப் போலவே அந்த அணுக்கள் அந்த உடலில் உருவாகும் – விஷ்ணுவின் மறு அவதாரம் சீதாராமன்.
எவ்வளவு அழகாகக் கொடுக்கின்றார்கள்…? நாம் எந்தக் குணத்தை அதிமாக எடுத்தோமோ அதன் ரூபமாக நம்மை மாற்றும்.
நந்தீஸ்வரன் – நாம் சுவாசித்த உணர்வெல்லாம் உடலில் சிவமாக மாறிவிடுகின்றது.
ஓ…ம் நமச்சிவாய… ஓ…ம் நமச்சிவாய… என்றால் அது எப்படி…?
நாம் வேதனைப்படுவோரைப் பார்த்தவுடனே பார்வதி பஜே அரஹரா சம்போ மகாதேவா.
1.பார்வையில் பார்க்கின்றோம் – பார்வதி பஜே
2.வேதனைப்படுபவரின் உணர்வுகள் நமக்குள் வந்து நம்மை இயக்கி – அரஹரா
3.சந்தித்த சந்தர்ப்பம் இணைந்து – சம்போ
4.நம் உயிர் மகாதேவன் அதை உருவாக்கி விடுகின்றான் – மகாதேவா
கோபப்படுபவர்களைப் பார்த்தாலே பார்வதி பஜே… அந்தப் பார்வையில் படுகின்றது நுகர்கின்றோம். பார்வதி பஜே ஹரஹரா சம்போ மகாதேவா… கோபமான உணர்ச்சிகள் நமக்குள் வந்துவிடுகின்றது.
அதாவது… பிறருடைய தோஷங்களை நாம் அறிந்து உதவி செய்தாலும் இந்தத் தோஷங்களைச் சந்தித்த சந்தர்ப்பம் நமக்குள் என்ன நடக்கின்றது…? எந்தக் கணக்கு கூடுகின்றது…?
“சம்போ மஹாதேவா…” – நான் சந்தித்ததை உருவாக்கிக் கொண்டே இருக்கின்றான். மஹா தேவனாக இருக்கின்றான்,
யார்…?
நம் உயிர்…!
நமக்கு இவ்வளவு தெளிவாகக் கொடுத்திருக்கின்றார்களே…! நாம் யாராவது நினைக்கின்றோமா…?
பிரதோஷம் அன்றைக்கு முழுவதும் பட்டினியாக இருந்து நல்ல குணங்களுக்குச் சாப்பாடு கொடுக்காமல் “நீ இரு…” என்று இருக்கச் செய்து விடுகிறோம்.
நான்கு மணி வரையிலும் பட்டினியாக இருந்துவிட்டுச் சிவனுக்கு அபிஷேகம் செய்கின்றோம். விளக்கைக் கொண்டு போய் வைக்கின்றோம் – இது கார்த்திகேயா.
கார்த்திகை என்றால் விளக்கை முன்னாடி வைத்துக் காட்டுகின்றார்கள். ஆறாவது அறிவு முன்னாடி இருக்கிறது,
விளக்கில் எல்லாப் பொருளும் தெரிகின்றது.
ஆறாவது அறிவால் இதைத் தெரிந்து கொள்…! என்று விளக்கை வைத்துக் காட்டுகின்றான். அந்த விளக்கு எது…?
துருவ நட்சத்திரத்தின் விளக்கு. துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து இப்படித் தூய்மைப்படுத்து. தன்னுடைய மனதை விளக்கு…! என்று தான் ஞானிகள் கொடுத்துள்ளார்கள்.
இதற்குப் பதில் புறத்தீயின் நிலைகளை வைத்து தீபத்தை வைத்துக் காண்பிக்கின்றனர்.
ஆக… சாப்பிடவில்லை என்றால் நல்ல அணுக்கள் கெட்டுப் போகும். இந்த ஆறாவது அறிவால் தெரிந்தும் கூட பட்டினியாக இருந்து விரதம் இருக்கின்றோம்.
ஆனால் எது விரதம்…?
வேதனை, வெறுப்பு, சஞ்சலம் அவன் அப்படிச் செய்கின்றான் என் பையன் என்னை எதிர்க்கின்றான் – இதைப் போன்ற உணர்வுகள் எல்லாம் சந்தர்ப்பத்தில் வரும் போது அந்தத் தீமைகள் நமக்குள்ளே போகாமல் தடுக்க வேண்டும்.
அது தான் உண்மையான விரதம்.
நல்ல அணுக்களுக்குச் சாப்பாடு கொடுத்தால் வீரியமாகும். அதற்குச் சாப்பாடு கொடுக்கவில்லை என்றால் சோர்வடையும். சோர்வோடு இருக்கும் போது எப்படி இருப்போம்?
இன்றைக்கு விரதம் என்றால் உற்சாகமாகவா இருக்கின்றீர்கள்…! முகம் அப்படியே வாடிப்போகும்… இல்லையா…! அந்த முகம் மாறினவுடனே என்ன செய்கின்றது,
சிவனுக்கு அபிஷேகம் செய்து அந்தப் பிரசாதத்தை எடுத்து நந்தீஸ்வரனுக்குக் கொண்டு வந்து முன்னாடி கொடுத்து “இந்தாப்பா சாப்பாடு….! என்று கொடுக்கின்றோம்.
1.என் பையன் சொன்னபடி கேட்க மாட்டேன் என்கிறான்.
2.என் மாமியார் திட்டிக்கொண்டே இருக்கின்றார்கள்.
3.என் மாமனார் சொல்வதைக் கேட்டுக் கொண்டு என் வீட்டுக்காரர் திட்டிக்கொண்டே இருக்கின்றார்.
4.கடன் கொடுத்தது அவன் திரும்பக் கொடுக்க மாட்டேன் என்கின்றான்.
5.சாப்பாட்டைக் கொடுத்து இதையெல்லாம் நந்தீஸ்வரன் காதில் மிகவும் வேதனையோடு சொல்வார்கள்.
அதே சமயத்தில்
1.என் வீட்டுக்காரர் மாமனார் சொன்னதைக் கேட்டுக் கொண்டு இருக்கின்றார்.
2.மாமனார் சொல்வது மாமியார் கேட்டுக் கொண்டு இருக்கிறது.
3.இவர்கள் பேச்சைகளைத்தான் என் பிள்ளைகள் கேட்கிறது.
4.எங்கள் வீட்டிலேயும் அவர்கள் பேச்சைத்தான் கேட்கிறார்கள்
5.இந்தக் குறைகளை நீ போய் ஈஸ்வரனிடம் சொல்லப்பா என்று தோஷங்களை நீக்குவதற்குப் பதில் சேர்த்துக் கொண்டிருக்கின்றோம்.
ஏனென்றால் இதெல்லாம் குருநாதர் சொன்ன பிற்பாடு தான் பிரதோஷம் என்றால் என்ன…? என்று எனக்குத் (ஞானகுரு) தெரியும். இல்லை என்றால் எனக்கும் தெரியாது.
பிரதோஷம் அன்றைக்கு முழுவதும் பட்டினியாக இருப்பார்கள். அன்றைக்கு நமக்கும் கொஞ்சம் பசி எடுக்கும். நாம் சாப்பாடு வேண்டும் என்று கேட்டால் “இப்போது என்ன அவசரம்…?” என்று சொல்லிக் கொண்டு இருப்பார்கள்,
நீங்கள் விரதம் இருக்கிறீர்கள். எனக்குச் சாப்பாடு கொடு என்று கேட்டால் “சாமிக்குக் கொடுத்த பின் தான் சாப்பிட வேண்டும்..” என்று அவர்களுக்குக் கோபம் வரும்.
விரதம் இருக்கும் அன்றைக்கு இது போல நீங்கள் சொல்லுங்கள். அவர்களுக்கு எப்படிக் கோபம் வரும் என்று பாருங்கள்…! பிறருடைய தோஷங்களை இன்னும் கொஞ்சம் வளர்த்துக் கொள்கின்றோம்.
ஆனால் சங்கடம், சலிப்பு, சஞ்சலம், வேதனை, வெறுப்பு இதைப் போன்ற தீமையான உணர்வுகளைச் சுவாசிக்காமல் இருப்பதற்காகவும் தீமைகளை நாம் நினைக்கக்கூடாது என்பதைத்தான் விரதம் என்றார்கள் ஞானிகள்.


ஒளியைத் தான் நாம் உருவாக்க வேண்டுமே தவிர இருளை அல்ல…!
விஷம் எதிலுமே ஊடுருவி இயக்கும் சக்தி பெற்றது. எதனையுமே இயக்கக் கூடியது. விஷத்திற்குள் அடங்கி விட்டால் இருள் சூழ்ந்த நிலையே கடைசியில் வருகின்றது.
விஷத்தை நீக்கிடும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நமக்குள் சேர்த்தால் ஒளியின் தன்மை அடைகின்றோம்.
ஆனால் மனித உடலில் விஷம் அதிகரித்தால் கலி… மீண்டும் பாம்பினங்களுக்குச் செல்லும் நிலையாகின்றது.
சூரியன் பாதரசத்தால் இருளை நீக்கி ஒளி என்ற உணர்வை எப்படிப் பெற்றதோ அது போல் ஆறாவது அறிவின் தன்மை கொண்ட மனிதன் ஏழாவது நிலையாக உருவாக்கப்படும் போது
1.உயிருடன் ஒன்றி உணர்வுகள் ஒளியாக மாறுகின்றது
2.அதன் வழி நாம் கல்கி ஆகின்றோம்… பிறவியில்லா நிலை அடைகின்றோம்.
சூரியன் ஒரு காலம் மடியலாம். ஆனால் அதே சமயத்தில் உயிரணுவாகத் தோன்றி மனிதனாக நாம் வளர்ச்சி அடைந்து வந்த நிலையில் என்றும் ஒளியின் சுடராகப் பொங்கச் செய்து கொண்டே இருக்க வேண்டும்.
1.எல்லோரையும் மகிழச் செய்யும் அந்த உயர்ந்த நிலையை மனித உடலில் இருந்து தான் பெற முடியும்
2.ஆறாவது அறிவால் தான் அதை உருவாக்க முடியும்.
3.அதைச் சீராகப் பயன்படுத்தினால் நாம் இந்த உடலுக்குப்பின் ஏகாதசி…!
4.எதிர்ப்பே இல்லாத நிலையாக பத்தாவது நிலையான ஒளிச் சரீரம் பெறுகின்றோம்.
அதை அடையத் தான் ஒவ்வொரு ஞானிகளும் முயற்சித்தனர்.
இப்பொழுது இங்கே உபதேச வாயிலாகக் கொடுக்கும் இந்த உணர்வினை நீங்கள் நுகரும்போது
1.ஞானத்தை உங்களுக்குள் உருவாக்கி… அருள் உணர்வைக் கருவாக்கி
2.கலி என்ற நிலையை மாற்றி… கல்கியைப் பொங்கச் செய்ய வேண்டும்.
குரு காட்டிய அருள் வழியில் உங்கள் வாழ்க்கையை அமைத்து இருளை மாற்றி இந்த உடலுக்குப்பின் கல்கி என்ற நிலைக்கு வர வேண்டும். ஒளி உடலாக உருவாக்க வேண்டும் ஒளி உடலாக மாற்ற வேண்டும்.
இன்று மனிதனாக இருக்கின்றோம் வேதனை என்ற உணர்வானால் மனிதனல்லாத உருவாகின்றது… கலி. கலியுகத்தில் தான் வாழ்கின்றோம். நாம் கல்கியுகத்திற்குச் செல்ல வேண்டும்.
கலியில் தான்…
1.ஒன்றை நல்லதாகவும் உருவாக்க முடியும்
2.தீமையையும் உருவாக்க முடிகின்றது.
3.கலி கெட்டதும் அல்ல…!
நாம் பல வகைகளில் உருவாக்கினாலும் இந்தக் கலியில் நல்லதை உருவாக்கப்படும் போது கல்கி ஆகின்றோம். ஆகவே உருவாக்குவது என்ற நிலையானால் கல்கியைத் தான் உருவாக்க வேண்டுமே தவிர கலியை அல்ல…!
ஒன்பதாவது நிலையில் இருக்கும் நாம் தீமை புக விடாது தடுப்பது தான் கடவுளின் அவதாரம் “நரசிம்ம அவதாரம்…” அந்த நிலையை நாம் ஒவ்வொருவரும் பெறுவோம்.

உடலைப் பயன்படுத்தி உயிராத்மாவின் தரத்தை உயர்த்த வேண்டும் – ஈஸ்வரபட்டர்
காட்சி:
நெல் குவியல் தெரிவதைப் போன்றும் அக்குவியலில் உள்ள நெல்லை ஒருவர் எடுத்துக் கையில் வைத்துத் தேய்த்துப் பதரை நீக்கி அரிசியான மணியை வாயில் போடுவதைப் போன்றும் தெரிகின்றது.
விளக்கம்
நெல்லைப் பதம் பார்த்து நெல் காய்ந்து விட்டதா… அதை அரைத்துச் செயலுக்குக் கொண்டு வரலாமா…? என்பதற்காகவும் பதம் பார்த்திருக்கலாம். அல்லது நெல்லிலுள்ள பதரை நீக்கி அரிசியைச் சுவைக்கவும் பார்த்திருக்கலாம்.
முதலில் சொன்னது போல் நெல்லில் உள்ள மணியைப் பிரிக்க வேண்டும் என்றால் அந்த நெல் காய்ந்து பக்குவப்பட்டிருந்தால் தான் அதைச் செயலுக்குக் கொண்டுவர முடியும்.
அதைப் போன்று இவ்வுடலான நெல் பக்குவப்பட்டிருந்தால் தான் இவ்வுடலின் உயிராத்மா செயலுக்குக் கொண்டு வர முடியும்.
காய்ந்த நெல்லில் உள்ள உமியை நீக்கி அரிசியைப் பயன்படுத்துகின்றோம்.
1.மணியான அரிசி உள்ளே இருக்கும் வரை நெல் என்று சொல்கிறோம்
2.நெல்லிலிருந்து அரிசி விடுபட்டவுடன் பதர் என்று அந்த உமியை ஒதுக்கி விடுகின்றோம்
அதே போல் தான்
1.உயிராத்மாவானது (உயிர்) இச்சரீரத்தில் இயங்கும் வரை மனிதன் என்ற நாமகரணத்துடன் செயல் கொள்கிறது.
2.உடலை விட்டு உயிராத்மா பிரிந்தவுடன் பதரைப் போன்று உடல் கழிக்கப்படுகின்றது.
உடலில் இருக்கும் உயிராத்மாவின் உண்மையின் ஒளி சக்தியின் செயலை… ஆத்ம உணர்வை அறியாமல்… எண்ணத்தின் ஓட்டம் ஒவ்வொருவருக்கும் தன் தேவையின் செயலுக்காகத்தான் தெய்வங்களை வணங்குவது என்ற நிலையில் இன்று உள்ளார்கள்.
தனக்கு மேல் உயர்ந்த ஞானிகளையும் ரிஷிகளையும் சந்தித்தால் கூடத் தன் உணர்வின் தேவைக்காக மட்டும் தான் அந்தச் சந்திக்கும் நிலையையும் பயன்படுத்த எண்ணுகின்றார்கள்.
அதே சமயத்தில் தனக்கு மேல் உயர்ந்தவர்களுக்கு ஓர் இன்னல் ஏற்பட்டால்…
1.இவர்களுக்கே இந்த நிலை…
2.நாம் எல்லாம் சாதாரணமானவர்கள்… நாம் என்ன செய்ய முடியும்…! என்ற எண்ணத்தில்
3.தன்னையே ஒதுக்கிக் கொண்டு… மீண்டும் பிறிதொரு ஈர்ப்புக்கே தன் எண்ணத்தைச் செலுத்தி
4.உடலே பிரதானம் என்று “தான்… தனது…” என்ற செயலுக்குத்தான்
5.மனித உணர்வின் தத்துவம் செயல் கொள்கின்றது இந்தக் கலியில்.
நம் பிரபஞ்சத்தில் உள்ள சூரியன் மற்ற கோள்களின் தொடர்பு கொண்டு… பல விதமான குண அமிலத்தைத் தனக்குள் எடுத்து… அதைத் தன் சக்திக்குகந்தாக்கி… மீண்டும் வெளிக்கக்கித் தன் வளர்ச்சியை வளர்த்து ஓடிக் கொண்டே உள்ளது.
அதைப் போன்று மனிதனின் உணர்வின் எண்ணம் சூரியனைப் போன்று…
1.தன் உணர்வுடன் மோதக்கூடிய எந்த எண்ணத்திற்கும் தான் அடிமையாகாமல் தனக்குள் அதைச் சேர்க்கும் பொழுது
2.தன்னிலிருந்து வெளிப்படும் அலையானது மாற்று எண்ணங்களைத் தனக்குள் பஸ்பமாக்கி
3.தன்னிலிருந்து வெளியாகும் உணர்வின் எண்ணம் சாந்தம் என்ற ஒளியுடன் சமைக்கப்படும் பொழுது
4.மனிதன் தெய்வ நிலை கொண்ட செயலுக்கு வந்துவிடுகின்றான்.
நெல்லில் மணி இருக்கும் வரை தான் நெல்லிற்குத் தரமுண்டு. அதைப் போன்று இவ்வுடலில் உயிராத்மா இருக்கும் வரைதான் உடலுக்குத் தரமுண்டு. ஆகவே
1.இவ்வுடலில் இருந்து உயிராத்மாவை ஒளி கொண்ட முத்தாகப் பக்குவப்படுத்தக் கூடிய வழி முறையை
2.நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து செயல் கொள்ள வேண்டும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
உதாரணமாக… தொழிலில் நஷ்டம் ஆகின்றது என்று வைத்துக் கொள்வோம்.
அப்போது மனச் சோர்வு அல்லது வேதனை இரண்டும் நமக்கு வரப்போகும் போது
1.இந்த உணர்வுகள் உமிழ் நீராக மாறி
2.நம் உடலில் உள்ள அனைத்து அணுக்களுக்கும் விஷத்தின் தன்மை ஊட்டி விடுகின்றது.
3.சோர்வடைந்து விட்டால் சிந்திக்கும் தன்மை குறைகின்றது.
4.தொழில் செய்யும் திறனும் குறைந்து விடுகின்றது.
5.கடைசியில் நோயும் வந்து விடுகின்றது.
இதனால் குடும்பத்தில் உள்ள மற்றவரும் அந்த வேதனையை நுகரப்படும்போது அவர்கள் உடலுக்குள்ளும் அவருக்குத் தக்கவாறு சில நோய்கள் வரத் தொடங்கி விடுகின்றது.
நாம் வேதனை வேதனை என்று எண்ணும் போது அந்த உணர்வுகளை நுகர்ந்தறிந்தால் நம் உடல் உறுப்புகளிலுள்ள அனைத்து அணுக்களும் விஷத்தின் தன்மை பெற்று விடுகின்றது.
விஷத்தின் தன்மை பெற்றால் நம் உடலில் உள்ள எல்லா உறுப்புகளிலும் கலந்து எந்த உறுப்புகளில் விஷத்தன்மை அதிகமாகின்றதோ அந்த உறுப்புகளில் விஷத்தன்மை கொண்ட அணுக்கள் உருவாகி நோயாகின்றது.
விஷத்தின் தன்மைகளை முறித்து ஒளியின் உடல் பெற்றது அகஸ்தியன் துருவனாகி துருவ நட்சத்திரம் ஆன நிலைகள்.
துருவ நட்சத்திரத்திலிருந்து வரக்கூடிய உணர்வினைச் சூரியன் கவர்வதனால் அதைப் பெற வேண்டும் என்று ஏங்கி நம் இரத்தத்தில் கலந்து எல்லா உறுப்புகளுக்கும் கண்ணின் நினைவு கொண்டு செலுத்துதல் வேண்டும்.
அப்பொழுது நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களும் துருவ நட்சத்திரத்தின் பேராற்றலைப் பெற்று அதன் வலிமை பெறுகின்றது.
இப்படி நாம் தினமும் அதைச் சேர்த்துக் கொண்டு வந்தால்
1.நம் உடலிலுள்ள பிணிகளையும் மன வேதனைகளையும் சங்கடங்களையும் சலிப்புகளையும் மாற்றும்.
2.சிந்தித்துச் செயல்படும் சக்தி கிடைக்கும்.
நம் இருதயத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை இணைத்தால்
1.இருதய வால்வுகள் சீராக இயங்கி
2.இருதயத்தை இயக்கும் அணுக்கள் வீரியமடைந்து
3.நாம் மன உறுதி பெற்று மன பல கொண்டு
4.சிந்தித்துச் செயல்படும் சக்தியும் வருகின்றது.
5.அமைதியும் சாந்தமும் கொண்டு இந்த வாழ்க்கை வாழ முடியும்.
இவ்வாறு வேதனை என்ற நிலையை நீக்கிச் சிந்திக்கும் வலிமை பெறும்போது
1.ஒவ்வொரு செயலையும் நாம் எப்படிச் செய்யலாம்…? என்ற உறுதியான எண்ணமும்
2.பிறரிடத்தில் உதவியோ அல்லது நல்ல சொல்களைச் சொல்லப்படும் போது
3.அதனால் மற்றவர்கள் நமக்கு உதவி செய்யக்கூடிய பக்குவமும் வரும்.
4.அமைதியும் சாந்தமும் கொண்டு பண்பும் பரிவும் கொண்டு வாழ இது உதவும்.
5.குடும்பத்திற்குள் பெரு மகிழ்ச்சி ஏற்படும்.
ஆகையினால் தினசரி அதிகாலையில் நீங்கள் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எடுத்து அந்தச் சக்தியை உங்களுக்குள் வலு ஏற்றிக் கொள்ளுங்கள்.


புது வைரஸ்கள் (MUTATED) உருவாகிறதா…? அல்லது உருவாக்கப்படுகிறதா…! என்று தெரிந்து கொள்ளுங்கள்
இயற்கையின் உண்மையின் உணர்வின் தன்மையை அகஸ்தியன் தனக்குள் வளர்த்துக் கொண்டவன். நஞ்சைத் தனக்குள் ஒளியாக மாற்றிக் கொண்டவன்.
அவன் கண்ட உண்மையின் உணர்வை நமக்குள் பெற்று “கல்கி…” என்ற நிலையில் ஒரு தெளிவான உணர்வை உருவாக்கத் தான் மீண்டும் மீண்டும் உபதேசிப்பது (ஞானகுரு).
ஒருவன் நமக்குச் செய்யக்கூடிய தவறை நாம் கூர்ந்து கவனிக்கின்றோம். பார்த்துப் பதிவான பின் “அவனை விடுவேனா பார்…!” என்ற அசுர உணர்வு வருகிறது.
ஆனால் அவன் நம்மைத் தாக்கவில்லை.. இருந்தாலும் தாக்கும் உணர்ச்சிகளைத் தூண்டுகின்றான்… என்று வைத்துக் கொள்வோம்.
1.செவி வழி கேட்கின்றோம்
2.மூக்கு வழியாக நுகர்கின்றோம்
3.உயிரிலே பட்டதும் உணர்ச்சிகள் தூண்டுகின்றது
4.அந்த உணர்ச்சிகள் உடல் முழுவதும் படருகின்றது.
அப்பொழுது தீமையை உருவாக்கக் கூடியதாக மாறி விடுகின்றது. அதாவது நம் உடலில் உள்ள நல்ல குணங்களைக் கொல்லக்கூடிய சக்தியாக மாறுகின்றது. அதுவே “கலி…” என்ற நிலையாக வந்துவிடுகின்றது.
ஆனால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் பெற வேண்டும் என்று எண்ணி எடுக்கப்படும் போது
1.அது அந்த நஞ்சினை அடக்குகின்றது
2.உணர்வின் அறிவாக மாற்றுகின்றது… உணர்வின் தன்மை ஒளியாக மாறிக் கல்கி ஆகின்றது.
ஆகவே…
1.உயிருடன் ஒன்றி உணர்வின் தன்மை ஒளியாகி நாம் கல்கி ஆக மாறுவதா…?
2.அல்லது கலி என்ற நிலைகளில் தீமைகளை உருவாக்கி தீமையாக மாற்றுவதா…? என்று சற்று சிந்தியுங்கள்.
விஞ்ஞான உலகில் இன்று எத்தனையோ வகையான புது மிருக இனங்களை (கண்டுபிடிப்பு) உருவாக்குகின்றார்கள். ஆனாலும் அந்த மிருகங்களை உருவாக்க
1.எத்தனையோ உயிரணுக்களைக் கொல்கின்றார்கள்
2.பல விஷத்தின் தன்மைகளைக் கலக்கின்றார்கள்
3.புது உணர்வின் அணுக்களாக உருவாக்குகின்றார்கள்.
அத்தகைய அணுக்களின் சத்தை எல்லாம் சூரியன் கவர்கின்றது. விஞ்ஞான அறிவால் செயற்கை முறையில் மாற்றப்பட்ட உணர்வின் அணுக்கள் சூரியனால் கவரப்படும் பொழுது காற்றுடன் காற்றாக அவை கலந்து
1.மனித உடலில் பட்டால் கடும் நோயாக மாறிவிடுகிறது
2.மனிதன் உணவாக உட்கொள்ளும் தாவர இனங்களில் புது விதமான விஷக் கிருமிகளாக (VIRUS) உருவாகின்றது
தாவர இனங்களை உட்கொண்டு மடிந்தால் மீண்டும் மனிதனுக்குள்ளே வருகின்றது. மனித உடலிலே புதிய வியாதிகளாகத் தோன்றுகிறது.
தீமைகளை நீக்க… பூச்சியைக் கொல்ல மனிதன் கலியாகவே மாறி விடுகின்றான். அதைக் கொன்ற பின் அந்த விஷத்தின் தன்மை (MUTATION) உணவு வகைகளில் நமக்குள் வருகின்றது… கலி…!
தீமைகளை வளர்க்கும் தன்மையே வருகின்றது. நாளுக்கு நாள் கலி என்ற நிலையையே உருவாக்கும் நிலைக்கு மனிதன் வருகின்றான். மனிதனை மனிதன் அழித்திடும் உணர்வு வருகின்றது.
விஷத்தின் தன்மை அதிகரிக்கும் பொழுது சிந்தனை இழக்கப்படுகின்றது.
1.மனிதனை உருக்குலைக்கும் உணர்வுகள் வருகின்றது
2.மனிதனை உருக்குலைத்தாலும்… உணர்வை உருக்குலையச் செய்யும் கலி என்ற தன்மைகள் வருகின்றது.
இதிலிருந்து மீள்வதற்குத் தான் மீண்டும் மீண்டும் இங்கே ஞாபகப்படுத்துகின்றோம். சூரியன் விஷத்தை நீக்கி இந்தப் பிரபஞ்சத்தை ஒளிமயமாக ஆக்குவது போல
1.அதிலே உயிரணு தோன்றி இத்தனையும் வடிகட்டியதோ
2.வடிகட்டிய உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றி துருவ நட்சத்திரமானதோ
3.அதனின்று வரும் உணர்வினை நாம் நுகர்ந்தால் கல்கி ஆகலாம்
ஆனால் அதை மறுத்தால் நாம் கலி ஆகலாம்…!
ஆகவே இதில் எதைப் பெற வேண்டும்…? என்ற நிலையை ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ளுங்கள். அருளைப் பெருக்கினால் இருளைப் போக்கலாம்.

உயர் ஞான ஜோதிகளாக நாம் ஆக வேண்டும் – ஈஸ்வரபட்டர்
ஒவ்வொரு மனிதனுக்கும்…
1.தன் தன் உடல் தேவைக்குகந்த எண்ண ஓட்டம் தான் ஓடிக் கொண்டே உள்ளதேயன்றி
2.தன் ஆத்மாவின் உயர்வை… உண்மையான சேவையில் உணரும் பக்குவம் இக்கலியில் வளரவில்லை.
இந்தப் பூமியின் சக்திக்கு வலு கூட்டக்கூடிய வலுத் தன்மைக்கு… இன்றைய இக்கலியின் உணர்வில் மனித ஆத்மாவின் சேவை உணர்வு செயல்படல் வேண்டும்.
சேவை என்பது… தான் பெற்ற உயர் ஞானத்தில் அறியும் உண்மை ஒளி சக்தியைக் கொண்டு ஒன்றை உருவாக்கி வளர்க்கக் கூடிய வளர்ச்சியின் சேவையை மனிதன் பெற வேண்டும்.
உடலின் சுகத்திற்குச் சேவையும்… புகழின் பேராசைக்குச் செல்லக்கூடிய சேவையும் உண்மையின் வளர்ச்சியின் சேவையல்ல…!
மனிதனின் உணர்வின் எண்ணத்தை ஒளியாக்கக் கூடிய ஆத்ம பலம் பெற வேண்டும்.
1.எந்த மனிதனின் உணர்வையும்… பாதிக்கக்கூடிய எண்ணத்தையும்
2.அழிவின் குரோதத்தையும் எடுக்காமல்
3.தன் சரீரத்தையே சம குணம் கொண்ட நற்குணத்தின் சாந்தத்தைப் பெறவல்ல தன்மை பெற வேண்டும்.
இப்படிப்பட்ட செயல் வழியில் இவ்வாத்மாவை வளர்த்திடும் பக்குவத்தில் எந்த ஒரு ஈர்ப்பலைக்கும் ஆத்மா சிக்காமல் “ஒளி சரீரமாகக் கூடிய முதிர்வு நிலையை…” ஒவ்வொருவரும் பெற வேண்டும்.
இப்பூமியில் வளரக் கூடிய தாவரங்களிலும் மற்ற கனி வளம் ஒவ்வொன்றிலுமே முதிர்வு நிலைக்குச் சேருவது மீண்டும் ஆவியாகக் கூடிய திரவக எண்ணை வித்து நிலை.
1.இப்பூமியையே சத்தாக்கி
2.அச்சத்தின் வளர்ச்சியின் முதிர்வு நிலைதான்
3.இப்பூமியில் இருந்து நாம் எடுக்கும் எண்ணை வித்துக்கள் யாவையும்.
4.இப்பூமியின் உலோகங்களான உலோகச் சத்தையும் வளர்ச்சியின் முதிர்வில் எடுத்து வளர்ந்தது தான் அந்த எண்ணை வித்து.
ஆவியாகி… குளிர்ந்து நீராகி… நீரின் தொடர்பு கொண்டு… தான் எடுக்கும் அமிலத்தில் ஓர் செடி வளர்ந்ததென்றால் அந்தச் சத்தை வித்தாக்குகின்றது.
சாதாரணமாக நீரை எடுத்து உறிஞ்சித்தான் கடலைச் செடியே வளர்கின்றது. அதன் வித்தான நிலக்கடலையிலிருந்து எண்ணைச் சத்தைப் பிரித்தெடுத்த பிறகு அந்த எண்ணை நீருடன் ஒட்டுவதில்லை.
மேலும் அந்த எண்ணையில் ஊன்றிக் கவனித்தோமென்றால்
1.நீரின் மேல் சிறிது அந்த எண்ணெயை விட்டால்
2.வானவில்லில் காணக்கூடிய ஏழு நிறங்களையும் இவ் எண்ணையிலும் காணுகின்றோம்.
அதாவது… நீரிலிருந்து உருவான தாவரங்களின் முதிர்வு வளர்ச்சியே
1.மீண்டும் நீருடன் ஒட்டாமல் எண்ணையாகி
2.எரி நிலையில் ஆவியாகக் கூடிய வலுப் பெற்று விடுகின்றது.
அதைப் போன்று தான் மனிதனின் உணர்வின் எண்ணத்தால்
1.விண்ணிலிருந்து வரும் மின் காந்த சக்தியைச் சம குணமுடன் எடுத்து ஆத்ம பலத்தை வளர்த்து
2.இவ்வாத்மாவையே ஒளியாக்கக்கூடிய உயர் ஞானத்தின் ஒளி ஆத்மாக்களாக ஆக முடியும்
3.ஒளியாகும் பருவம் பெற்றது தான் (மனிதர்கள்) இப்பூமியின் வித்துக்களப்பா…!
இதை அறிந்து நீங்கள் ஒவ்வொருவரும் உயர் ஞான ஜோதிகளாக உருவாகுங்கள்…!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
குருநாதர் என்னைக் (ஞானகுரு) காட்டிற்குள் அழைத்துக் கொண்டு போகின்றார். அப்போது என் கையில் ஒரு வேரைக் கொடுக்கின்றார். அந்த வேரைக் கொடுத்துக் கையில் கட்டிக் கொள்ளச் சொல்கின்றார்.
கட்டிக் கொண்டேன்.
ஒரு இடத்தைக் காண்பித்து அங்கே ஒரு பெரிய “புதையல்…” இருக்கின்றது. அதை எடுத்துக் கொண்டு வாடா… என்கின்றார்.
என்ன புதையல் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் “நீ போ…!” என்றார்.
பார்த்தால் ஒரு மலைப் பாம்பைப் போலக் கரு நாகம் – ஒரு காளிங்கராயன் பாம்பு அங்கே அது படுத்திருக்கின்றது.
பார்த்தவுடனே… … …! எனக்குப் பயமாகி விட்டது.
எனக்குப் பயம் வந்தாலும் என்னைக் கண்டவுடனே அந்தப் பாம்பு ஒன்றும் சீறவில்லை. ஏன்…!
குருநாதர் என்னிடம் கொடுத்த வேர் என்ன செய்கின்றது…?
அந்தப் அப்படியே பதும்பச் செய்கின்றது. அங்கே போனவுடனே குருநாதர் அதைத் தூக்கிக் கொண்டு வாடா…! என்று என்னிடம் சொல்கிறார்.
எனக்குப் பயமாக இருக்கின்றது. ஆனால் தூக்கினால் அது வரவில்லை. அந்தப் பாம்பைத் தூக்கிச் சுமக்க நான்கு பேர் வேண்டும் போல் இருந்தது.
என் ஒருவனால் தூக்க முடியவில்லை. சரி விட்டு விட்டு… வாடா… என்றார்.
இது எதனால் அந்தப் பாம்பு பதும்புகிறது…?
இயற்கையில் விளைந்த உணர்வுகள் இந்த விஷத்தின் தன்மையாக்கப்படும் போது அதனுடைய செயலாக்கங்கள் எப்படி இருக்கின்றது…? என்று
1.விஷத்தை ஒடுக்கும் சக்தி அந்த வேரிலே இருப்பதால்
2.அந்தப் பாம்பு அமைதியாக இருக்கின்றது…! என்று காட்டுகின்றார்
3.காட்டிற்குள் அனுபவரீதியிலே கொண்டு வருகின்றார் குருநாதர்.
காட்டிற்குள் இன்னொரு இடத்திற்கு அழைத்துச் செல்லுகின்றார்.
அங்கே பார்த்தால் ஒரு புலி செத்துக் கிடக்கின்றது. உயிர் போனவுடனே புலியினுடைய உடல் அழுகிக் கிடக்கின்றது. புழுக்களாக அரிந்து கொண்டிருக்கின்றது.
அழுகிய அந்தப் புலியின் உடலுக்குப் பக்கத்திலே போய் “உட்காருடா…! என்றார். நாற்றமோ சகிக்க முடியவில்லை.
சாமி… ஒரே நாற்றமாக இருக்கின்றது…! என்று சொன்னேன்.
நான் சொல்வதைச் செய்கிறேன் என்று சொன்னாய் அல்லவா…! அதனாலே “உட்கார்ந்து பார்…!” என்று சொல்கிறார்.
உட்கார்ந்து பார்த்துக் கொண்டே இருந்தேன். எத்தனை நாள்…? ஒரு நாளா… இரண்டு நாட்களா…! ஒரு பத்துப் பதினைந்து நாட்கள் உட்கார்ந்து பார்த்தேன்.
பத்து பதினைந்து நாட்கள் வேறு எதுவும் சாப்பிடவே முடியவில்லை. இரண்டு பச்சிலையைக் கொடுத்தார். அதை மென்று சாப்பிட்டுக் கொள் என்றார்.
அதையெல்லாம் எனக்கு விபரமாகக் கணக்குச் சொல்ல வேண்டும் என்கிறார். நான் எந்தக் கணக்கைச் சொல்லட்டும்….?
புலியின் உடலில் உள்ள புழுக்கள் அந்த உடல் முழுவதையும் சாப்பிட்டு விடுகின்றது. கடைசியில் எலும்பும் தோலாகவும் தான் இருக்கிறது.
புலி உயிருடன் இருக்கும்போது எத்தனை வகையான உயிரினங்களைக் கொன்றதோ அந்த உணர்வெல்லாம் உடலுக்குள் அணுக்களாக இது புலியாக உருவாகின்றது.
இந்தப் புலியின் உடலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் முதலில் ஜீவ அணுக்களாக இருந்தது. புலியின் உயிர் வெளியே சென்ற பின் ஜீவஅணுக்கள் உயிரணுக்களாக மாறுகின்றது. புழுக்களாக ஆகின்றது.
புழுக்களாக இருந்ததெல்லாம் புலி உடலைத் தின்றவுடன் அடுத்து ஆகாரம் இல்லை என்றால் மடிந்து விடுகின்றது. அந்தப் புழுக்களின் உயிர்களும் வெளி வருகின்றது.
புலி தன் பசிக்காக மாட்டையோ மற்ற எதை எதை அடித்துச் சாப்பிட்டதோ அதன் உடலுக்குள் இந்தப் புழுவின் உயிர்கள் உயிரணுக்களாக விளைகின்றது.
அதாவது உயிரணுக்கள் என்றால் புலியின் உடலில் முதலில் ஜீவ அணுக்களாக இருக்கின்றது. பின் உயிரணுக்களாக மாறுகின்றது.
உயிரணுக்களாக மாறியவுடனே மாடு ஆடு மற்ற உயிரினங்களில் பட்டபின் “உன்னி… ஈ…” போன்ற நிலைகளில் உருவாக்கி அந்த உடலிலுள்ள இரத்தத்தை உறிஞ்சி வாழும் தன்மை வருகின்றது.
இரத்தத்தை உறிஞ்சி உடல் வளர்த்த அந்தப் புலியின் உணர்வுகள் உயிர் சென்ற பின் அதே அணுக்கள் உயிரணுவாக மாறி மீண்டும் மற்ற உடல்களில் என்னென்ன செய்கின்றது…? என்பதனை உற்றுப் பார்க்கச் சொல்கின்றார்.
புலியின் ஒரு உயிர் போனது. உயிர் போனபின் அந்த உடலில் பல உயிர்களின் தன்மை வளர்க்கப்பட்டு ஆடு மாடுகளில் உன்னியாகவும் ஈ ஆகவும் செல்லுகின்றது.
அதே சமயத்தில் புலி ஒரு உயிரினத்தைக் கடித்துக் குதறும் போது இரத்தங்கள் சிந்துகின்றது. இரத்தங்கள் சிந்தியபின் இரத்தத்திலே மின்னல்கள் தாக்கப்படும் போது இதில் ஜீவக்கருக்கள் உருவாகி அதன் நிலைகள் “அட்டைகளாக…” வளர்கின்றது.
நாம் நடந்து போனால் போதும். அந்த அட்டை தவ்வி நம் உடலிலே அமர்ந்து நம் இரத்தத்தைக் குடிக்கின்றது.
இதைப்போல ஒரு உடலிலிருந்து எத்தனை வகையான நிலைகள் அது உருவாகிறதென்று குருநாதர் காட்டுகின்றார்.
அந்தப் புலியின் உடலிலிருந்து வெளிப்படும் அழுகிய ஆவிகள் காற்றிலே போகின்றது. இதைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்துக் கொள்ளுகின்றது. அது அலைகளாக மாறுகின்றது.
அதே சமயத்தில் விஷச் செடியில் இருந்தும் பல மற்ற தாவர இனங்களில் வரக்கூடிய சத்தையும் சூரியன் கவர்ந்து அலைகளாக மாற்றிப் பரமாத்வில் சுற்றிக் கொண்டிருக்கின்றது.
அழுகிய புலியின் உணர்வைக் கவர்ந்த அலைகளைக் கண்ட பின் மற்ற செடி கொடிகளின் சத்துக்களை கவர்ந்து கொண்ட அலைகள் ஓடுகின்றது.
இவ்வாறு அது ஓடும் பாதையில் இன்னொரு பக்கம் பிற விஷச் செடியில் இருந்து உமிழ்த்தும் உணர்வுகள் மோதிய பின் “கிறு..கிறு..” என்று சுற்றுகின்றது.
அது சுற்றி ஒன்றோடொன்று மோதி அந்த மோதலில் ஆவியின் தன்மை மேலே செல்கின்றது. மூன்றும் இரண்டறக் கலந்த உணர்வுகள் பூமியில் படர்கின்றது.
1.புலி ரிக். அழுகிய புலி உடலில் இருந்து வரக்கூடிய மணம் சாம இசை. இந்த நாற்றம் நமக்கு வருகின்றது.
2.செடி கொடி ரிக். அதில் இருந்து வரக்கூடிய மணம் சாம இசை.
3.ஒரு விஷச் செடி ரிக். அதில் இருந்து வரக்கூடிய மணங்கள் சாம இசை.
4.இது மூன்றும் ஒன்றுக்கொன்று மோதல் ஏற்பட்ட பின் மோதலில் ஒன்றாகக் கலக்கப்படும் போது அதர்வண.
5.ஒன்றோடொன்று மோதி அதன் உணர்வுகள் ஒன்றாக இணைந்த பின் யஜூர். ஒரு வித்தாகி விடுகின்றது.
பல விதமான உணர்வுகளைச் சேர்த்து நாம் ஒரு பலகாரத்தை வேக வைத்தால் அது ஒன்றாகி சுவையாக மாறுகின்றது.
இதைப் போல பல உணர்வுகள் ஒன்றுடன் ஒன்று மோதி அது ஒன்றாக அமைகின்றது. மோதியதால் ஏற்படும் ஆவியாக மேலே செல்லுகின்றது.
இரண்டறக் கலந்தது தரையிலே படுகின்றது. தரையிலே பட்டபின் எதிர் நிலையான நட்சத்திரங்களிலிருந்து துகள்கள் நம் பூமிக்குள் மின்னலாகத் தாக்கப்படும் போது
1.இதில் கலந்த நிலைக்கு எதிர் நிலையாக வரும் போது
2.அதிலே தாக்கப்பட்டு இழுக்கும் சக்தியாக வருகின்றது
3.அப்போது அது செடியாக வளர்கின்றது.
4.அவ்வாறு அது செடியாக வெளியில் வரையிலும் என்னைக் குருநாதர் அங்கே உட்கார வைத்துக்கொண்டு இருந்தார்.
பக்கத்திலேயே இருக்கச் சொல்கிறார். வெளியில் போய்ச் சாப்பிடக் கூட விடவில்லை. பட்டினியாகத்தான் உட்கார வேண்டும். பச்சிலையை மெல்ல வேண்டியது அதைச் சாப்பிட வேண்டியது புலியைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டியது.
இந்த இயற்கை எப்படி மாறுபடுகின்றது என்பதனைத் தெரியச் செய்கின்றார். பின் அந்தச் செடி முளைத்து வந்தது. அந்தச் செடியின் அருகில் அடையாளம் தெரிவதற்காகக் கோடு போடச் சொல்கின்றார்.
அந்த இடத்தை விட்டுப் போய் விட்டு ஒரு இரண்டு மாதம் கழித்து வருகிறோம். அந்தச் செடி கொடியாக வளர்ந்திருக்கிறது.
கையில் நீ் கத்தியை எடுத்துக் கொண்டு போடா என்றார்.
கத்தி எதற்கு சாமி…? என்றேன்.
கத்தியைக் கொண்டு போ என்றார்.
அங்கே ஒரு மரம் அருகில் அந்தக் கொடி விளைந்திருக்கிறது. அத்ற்கு எதிரிலே உட்கார் என்றார். நான் உட்கார்ந்தவுடனே என்னை நோக்கி அந்தக் கொடி நைசாக நகர்ந்து வருகின்றது.
அந்தக் கொடி நகர்ந்து வந்து உன்னைத் தொட்டுவிட்டது என்றால் எப்படிக் கரண்ட் பாய்கின்றதோ அதே மாதிரி பாய்ந்து புத்தியில்லாமல் போய்விடும். உன் இரத்தத்தை உறிஞ்சிவிடும் என்றார் குருநாதர்.
கொடி உன்னைத் தொடும் பொழுது “சுரீர்…” என்று வரும். உடனே கத்தியால் அதை “வெட்டுடா…” என்றார்.
நான்கைந்து தரம் வெட்டிய பிற்பாடு அப்புறமும் நீண்டு வருகிறது. வெட்டியபின் அது எட்டாத நிலை ஆகும் போது அடுத்து ஒன்றும் செய்யவில்லை.
பார்த்தயா…! அன்றைக்கு அந்தப் புலி எந்தெந்த உயிரினங்களின் இரத்தத்தை உறிஞ்சியதோ அதனின் உணர்வு செடியுடன் கலந்தது. கொடியாக விளைந்தது.
இப்பொழுது மனிதனின் இரத்தத்தை உறிஞ்சும் தன்மை அந்தக் கொடிக்கு வந்துவிட்டது என்று காட்டுகிறார்.
நம் மனித வாழ்க்கையில் வேதனை வேதனை என்ற உணர்வுகள் எடுத்துக் கொண்ட பின் உடலில் விஷமான அணுக்கள் பெருகியபின் நல்ல அணுக்களைக் கொன்றுவிடும்.
விஷமான அந்த அணுக்கள் பெருகி விட்டால் அதைத்தான் கேன்சர் நோய் என்று சொல்கிறோம். மற்ற அணுக்களுக்குள் இருக்கும் இயக்கச் சக்தியையும் அது கவர்ந்து கொள்ளும்.
உடலிலுள்ள நல்ல அணுக்கள் இயங்காது. இந்தக் கேன்சர் என்ற நிலை வந்துவிட்டால் எதுவுமே செயல்படுத்த முடியாது போய்விடும்.
அதைக் கொல்ல வேண்டும் என்றால் இதற்கு மருந்து இல்லை.
ஏனெனில் அதைக் கொல்ல வேண்டும் என்றால் வீரியத் தன்மை மருந்தை ஊட்ட வேண்டும்.
வீரியமான மருந்தை ஊட்டினால் நம் உடலிலுள்ள சாந்தமாக இருக்கக்கூடிய அணுக்களெல்லாம் மடிந்துவிடும். மருந்து கொடுத்தும் பயன் இல்லை.
கேன்சர் போன்ற நிலைகளுக்கு இந்தக் கொடியை எடுத்து அதில் வேறு சில பச்சிலைகளை இணைத்துப் பக்குவப்படுத்திக் கொடுத்தால் அந்தக் கேன்சர் விஷத்தின் தன்மையை இது உறிஞ்சிவிடும்.
கேன்சர் நோயை இந்தக் கொடியை வைத்து நீக்கி விடலாம் என்று காட்டுகிறார் குருநாதர்.
காடுகளில் உயிரினங்கள் ஒவ்வொன்றும் தன்னிச்சையாக மடிந்த பின் மடிந்த உடலிலிருந்து வரக்கூடிய ஆவிகளும் மற்ற தாவர இனத்தில் ஒன்றோடொன்று மோதும் போதும் புதுப் புது செடிகள் எப்படி உருவாகின்றது…?
செடிகளைத் தின்று ஒன்று வளர்ந்தாலும் அந்த உயிரினங்களைக் கொன்று வாழ்ந்த இந்த உடல்கள் அது மடிந்து விட்டால் அந்த உணர்வுகள் எப்படிச் சேர்கின்றது…?
மீண்டும் ஜீவ அணுக்களாக மாற்றி அது மனிதனுக்கு மருந்தாக உபயோகப்படுத்தும் தன்மை எப்படி வருகின்றது…?
ஏனென்றால் பல உயிரினங்களின் தன்மையானால் இதே மருந்தைச் சேர்க்கப்படும்போது
1.நம் உடலில் உள்ள விஷத்தின் தன்மைகளை அது மாற்றி
2.நம் உடலை எப்படி நலமாக்குகின்றது…? என்பதனைக் குருநாதர் அங்கே காட்டுகின்றார்.


துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் கவரப் பழகிக் கொண்டால் சுகக் கேடுகளை மாற்ற முடியும்
இந்த மனித வாழ்க்கையின் சந்தர்ப்பங்களில் நாம் வெறுப்படையும் போது மகிழ்ச்சி இழக்கப்படுகின்றது. அதே சமயத்தில் வேதனைப்படுவோரைப் பார்த்தால் அந்த வேதனை உணர்வுகள் நமக்கு மகிழ்ச்சி கொடுப்பதில்லை.
அது போல் எத்தனையோ பேர் எத்தனையோ விதமான ரண வேதனைகளைப் படுகின்றனர்.. அதனை நாம் நுகரும் பொழுது நம்மால் தாங்க முடிவதில்லை.
1.ஆனால் நுகர்ந்து… அதை எல்லாம் அறிந்து கொண்டாலும் நம் இரத்தத்தில் கலந்து விடுகின்றது.
2.இது எல்லாம் உடலில் சுகக் கேடான விளைவுகளாகின்றது.
ஆகவே நமது சுகங்களைக் கேடாக்கும் இத்தகைய தீய உணர்வின் தன்மைகளை நாம் மாற்றிப் பழகுதல் வேண்டும். அந்தச் சுகக் கேடுகளை மாற்றுவதற்கு அருள் உணர்வினைப் பெற்றால் ஒளியின் உணர்வாக மாற்ற முடியும்… அறியாது வந்த நோயிலிருந்து விடுபட முடியும்.
1.மனித உடலிலிருந்து சுகக் கேடுகளை மாற்றியவன் தான் அகஸ்தியன்
2.அவன் பேச்சை மற்றவர் கேட்டாலும் அல்லது அவன் பார்வை மற்றவர் மீது பட்டாலும்
3.அவர்களின் சுகக் கேடுகளை மாற்றி… அறிவின் தெளிவாக மாற்றிடும் திறனாக வருகிறது.
அவன் வாழ்ந்த காலத்தில் இத்தகைய சுகக் கேடுகளை மாற்றிய உணர்வுகள் அனைத்தும் அவன் உடலிலிருந்து வெளிப்பட்டுள்ளது. அதைச் சூரியன் கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்துள்ளது.
1.நமக்கு முன் இங்கே அது பரவிக் கொண்டும் இருக்கின்றது.
2.அதை நீங்கள் பெறுவதற்குத் தான் இப்போது பதிவு செய்கின்றேன் (ஞானகுரு).
சுகக் கேடு என்பது மனிதனுக்கு இருள் சூழும் நிலையே. வேதனையோ வெறுப்போ கோபமோ குரோதமோ இதைப் போன்ற உணர்வுகள் வந்தால் இருள் சூழும் நிலையாகிச் சிந்திக்கும் தன்மை இழந்து விடுகின்றது.
செயல் குன்றி… வலிமை இழந்து… நல்லதைப் பெற முடியாத நிலையிலும்… மகிழ முடியாத நிலையிலும் வந்து விடுகின்றது.
இதிலிருந்து விடுபடும் ஆற்றலை நாம் பெறுவதற்கே ஞானிகள் “தை பிறந்தால் வழி பிறக்கும்…” என்று தெளிவாக்கியுள்ளார்கள். சூரியனால் வளர்க்கப்பட்டதை எடுத்து அதைச் சுவையாகப் (சமைத்து) படைத்து சூரியனுக்கு அர்ப்பணிப்பதாகக் காட்டினார்கள்.
சூரியனுக்குப் படைக்கச் சொன்னதன் காரணம் என்ன…?
சூரியனின் வெப்ப காந்தங்கள் தனக்குள் கவர்ந்து கொண்ட உணர்வு எதுவோ… அதனின் உணர்வு வலு கொண்டு அவை அவை கவர்ந்து அதைக் கொண்டு தான் தாவர இனங்கள் எல்லாமே உருவாகின்றது.
அதைப் போன்று…
1.மனிதனான பின் நாம் பலவற்றையும் சேர்த்து சுவைமிக்க உணர்வை… உணவை (பொங்கலை) உருவாக்குகிறோம்
2.அதை ஆவியாக… கலவைகளாக அனுப்பப்படும் பொழுது அதைச் சூரியன் கவர்ந்து அலைகளாக மாற்றுகிறது.
3.ஆனாலும் அதில் உள்ள சத்தை நாம் உணவாக உட்கொள்கிறோம்… மகிழ்ச்சி தோன்றுகிறது.
பலசரக்குகளைப் போட்டுச் சமையல் செய்யும் பொழுது வெளிப்படும் நல்ல மணங்களை.. அனைத்தும் கலந்த அந்தச் சக்தியின் தன்மைகளச் சூரியன் கவர்ந்து வைத்துக் கொள்கின்றது.
இது மனிதனால் உருவாக்கப்பட்ட நிலை தான்… இருந்தாலும் சூரியன் கவர்ந்து கொள்கிறது. நாம் உணவாகச் சமைத்து நமக்கு வேண்டிய சுவையாக்கி நல்ல உணவாக உட்கொள்ளும் பொழுது அந்தச் சுவையின் உணர்ச்சி (மகிழ்ச்சி) வெளி வருகிறது… சூரியன் அதையும் கவர்கிறது.
1.சூரியன் கவர்ந்த அந்த மகிழ்ச்சியான உணர்வை மீண்டும் நமது ஆன்மாவாக மாற்றி
2.நாம் சுவாசித்து உயிரிலே படும் பொழுது மகிழ்ந்து வாழ்ந்திடும் உணர்ச்சிகளை ஊட்டி
3.எல்லோருக்கும் அந்தச் சந்தோசத்தை ஊட்டுகின்றது.
அத்தகைய மகிழ்ச்சியைப் பெறுவதற்குத் தான் சூரியனுக்குப் படைக்கச் சொன்னார்கள் ஞானிகள்.

மகரிஷிகளின் வம்சமாக நாம் உருவாக வேண்டும் – ஈஸ்வரபட்டர்
காட்சி:
ஓர் மனிதன் முயற்சியால் செயற்கையில் “பல இயந்திர உறுப்புகளைக் கொண்டு ஓர் வாகனத்தை உருவாக்கி…” பின் அதை ஓட்டுவதைப் போன்று தெரிகின்றது.
இன்னொரு மனிதன் “தன் உடலையே” இயந்திரத்தின் நிலைக்கொப்ப சர்க்கஸ் விளையாடுவதைப் போன்று உடலைப் பல கோணங்களில் வளைத்து வித்தைகள் செய்யும் காட்சி தெரிகின்றது.
சூரியனும்… சூரியக் குடும்பத்தின் நாற்பத்தி ஏழு மண்டலங்களும்… சனிக் குடும்பத்தின் பன்னிரண்டும்… பூமியைச் சுற்றியுள்ள இருபத்தியேழு நட்சத்திர மண்டலங்களும்… பூமியின் அதி தொடர்பு கொண்ட அருகிலுள்ள சில மண்டலங்களின் காட்சிகளும்… பூமியும்… பூமியின் வளர்ச்சியும்… பூமியின் எண்ணத்தின் உணர்வின் எண்ணம் கொண்ட மனிதச் செயலும் காட்சியாகத் தெரிகின்றன.
விளக்கம்:
(முதலில் தெரிந்த) வாகனத்தின் நிலை… மனிதனால் ஜடப் பொருள்களைக் கொண்டு மனிதனின் செயலின் தேவைக்கொப்ப உருவாக்கியது.
மனிதன் தன் எண்ணத்தைச் செலுத்தி எண்ணத்தின் உணர்வைக் கொண்டு தனக்கு இசைவுபட்ட வாகனத்தை உருவாக்க… ஜடப்பொருளைத் தன் எண்ணத்திற்கொப்ப உருவாக்கிச் செயலுக்குக் கொண்டு வருகின்றான்.
தன் தேவையின் உணர்வுக்கொப்ப எண்ணத்தைச் செலுத்தும் பொழுது தன் ஞானத்தை வளர்ச்சிப்படுத்தி தனக்குகந்த உருவாக்கும் செயல் தான் அது.
1.அத்தகைய வளர்ச்சியின் செயல் திறமை கொண்டு
2.சரீர உணர்வில் உடலில் ஓடக்கூடிய உயிர் அணுக்கள் ஒவ்வொன்றையுமே தன்னிச்சைக்குச் செயல்படுத்தி
3.ஓர் காரியத்தைக் கூர்மையாகத் தன் ஞானத்தின் வலுவில் பழக்கப்படுத்தும் செயல்படுத்தும் வழிமுறையினால்
4.மனிதனுடைய ஆத்மா குறுகிய நிலைக்கோ வலுவிழந்த தன்மைக்கோ செல்வதில்லை.
(இரண்டாது) அதே சமயம் மனிதனுடைய உடலையே வித்தையாக்கித் தன் உடலைப் பல நிலைகளில் அவ்வுறுப்புக்களைச் செயல்படுத்தும் பொழுது மனிதனுடைய உடலிலும் இயந்திர நிலைக்கொப்பத்தான் அந்தச் செயல் நிலை செல்கின்றது.
ஆகவே…
1.பிறிதொரு பொருளை உருவாக்குகின்ற இயந்திர நிலைக்கும்
2.உடலை இயந்திரம் போன்று சாகசம் புரிந்து… வித்தை காட்டும் வழி முறைக்கும் மாறுபாடு ஏதுமில்லை.
ஆனால் மனிதனின் உணர்வின் எண்ண ஓட்டமானது… இச்சரீர உயிராத்மா ஜீவன் பெற… இப்பூமியின் உணர்வின் எண்ணத்தில் செயல் புரிகிறது என்றால் அச்செயலுக்கு மூலத்தின் வழி முறை சூரியனும் சந்திரனும் சூரியக் குடும்பத்தின் நட்சத்திரக் கோள்களும் தான்…!
அப்படிப்பட்ட வழித் தொடரில்… பல உணர்வின் அமில வழி ஒளி சக்தியின் தொடர்பு கொண்டு இச்சரீரத்தின் உணர்வின் எண்ண ஓட்டம் எப்படிக் கிடைத்தது…? என்பதை மனிதன் தன்னைத் தானே உணர்ந்து… சிந்தனையில் உணரல் வேண்டும்.
ராகு கேது சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் வியாழன் சுக்கிரன் சனி என்ற நவக் கோள்களை எல்லாம் நவக்கிரகமாக அன்றே சித்தன் பூமிக்கும் நவக்கோள்களுக்கும் இருபத்தி ஏழு நட்சத்திரங்களுக்கும் தொடர்பு ஏற்படுத்திக் காட்டினான்.
பூமியின் சுழற்சியில் பூமிக்கு அருகிலுள்ள சந்திரனின் தொடர்பைக் கொண்டு அமாவாசைக்கும் பௌர்ணமிக்கும் பூமியில் ஏற்படக் கூடிய தொடர் போன்றே நவக்கோள்களின் தொடர்பில் இருபத்தியேழு நட்சத்திரத்தின் தொடர்பு கொண்டு நவக்கோளையும் அதனின் இயக்கங்களையும் காட்டினான்.
1.அதே சமயத்தில் நட்சத்திர மண்டலத்தின் ஈர்ப்பில் வரும் அமிலத் தன்மைகளையும்
2.அதனால் இப்பூமியின் தொடர்புடன் சுழலுகின்ற காந்த ஒளி அலையில் உருவாகக்கூடிய உயர் சக்திகளின் குண நிலையையும்
3.மனிதப் பிறப்பும் தாவரங்களின் குணம் மணம் சுவை ஜீவன் யாவையுமே உருவாகக்கூடிய தன்மையையும்
4.ஒன்றின் தொடர் கொண்டு ஒன்று ஈர்ப்பு கொண்டு சுழலக்கூடிய கால மாற்றத்தில் வளரக்கூடிய உண்மைகளை
5.பல ஆயிரம் காலங்களுக்கு முதலிலேயே மகரிஷிகளினால் பூமியின் ஜாதகங்கள் குறிக்கப்பட்டன.
அந்தந்தக் கோள்களின் ஈர்ப்பின் தொடர்புக்கு ஒத்த கால மாற்றங்களினால் நம் பூமியின் செயலில் செயல்படும் வழி முறைதனை “இந்த நாளில்… இந்த நேரத்தில் மழை வரும்…! என்பதையும் சூரிய கிரகணம் சந்திர கிரகணம் போன்ற கிரகணங்களின் சந்திப்பின் காலத்தையும்…” குறித்தனர்.
அன்றைய மகரிஷிகளால் வானசாஸ்திர உண்மை ஞானத்தில் அறியப்பட்ட வழித் தொடரைத்தான் இன்றைய விஞ்ஞானமும் பேசுகின்றது. ஆனால்… மெய் வழி அறிந்து வந்த அந்த வளர்ச்சி விஞ்ஞான சாஸ்திரத்தால் “தன் ஞானம்” இன்று மறைக்கப்பட்டு விட்டது.
1.உணர்வின் எண்ண ஓட்டத்துடன் கூடிய தன் ஞானத்தின் உயர் ஞானத்தை
2.இப்பூமியில் உணர்வின் எண்ணத்தில் மனித ஆத்மாக்கள் வாழ்ந்த விதத்தை வளர்த்த
3.ரிஷிகளின் வம்சத்தின் தொடரின் ஜீவ நிலை வளரும் சக்தி நிலை வளர்ந்தால்தான்
4.மீண்டும் உணர்வின் எண்ணத்தின் செயல் வளர்ச்சி மனிதச் செயலின்
5.உயர் ஞானம் வளரக்கூடிய ஜீவ உருக்களை உருவாக்க முடியும்.
மனிதன் உருவாக்கிய இயந்திரங்களோ மற்ற தாவரங்களோ எல்லாமே தன் தன் தேவைக்குகந்த… தன் தேவையினால் அழியக் கூடியவை தான். அதனால் இப்பூமியின் சக்திக்கு வலுகூட்டக் கூடிய பலனோ பயனோ இல்லை.
இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்…!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
அகஸ்தியன் துருவனாகி அவன் திருமணமாகி கணவனும் மனைவியும் ஒன்றாக இணைந்து
1.இரு உயிரும் ஒன்றாக இணைந்து
2,இரு மனமும் ஒரு மனமாகி
3.இரு உணர்வுகளும் ஒன்றாக இணைந்து துருவ மகரிஷியாகத் தனக்குள் சிருஷ்டித்து
4.இருளினை அகற்றி ஒளி என்ற உணர்வில் ஒன்றி வாழ்ந்து கொன்டுள்ளார்கள்.
ஒளியின் சரீரமானபின் எந்தத் துருவத்தை எண்ணி ஏங்கினார்களோ அதையே எல்லையாக்கிப் பிறவியில்லா நிலைகள் கொண்டு இன்றும் துருவ நட்சத்திரமாக வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.
அதிலிருந்து வெளிப்படும் உணர்வலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வருகின்றது. பிரபஞ்சத்தில் பரவச் செய்கின்றது.
நமது பூமி அதைத் துருவத்தின் வழியாகக் கவர்ந்து நம் காற்று மண்டலத்தில் பரவச் செய்கின்றது.
அதிகாலை 4.30 – 6.00 மணிக்குள் அந்த உணர்வலைகள் அதிக வேகமாக நம் பூமிக்குள் வருவதனால்
1.அந்த நேரத்தில் நம் எண்ணங்களைத் துருவத்தை நோக்கிச் செலுத்தி
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று
3.நம் உயிருடன் ஒன்றி ஏங்கினால் எளிதில் நாம் நுகர முடிகின்றது.
4.உடலில் அது பரவுகின்றது… நல்ல உணர்வாக நம் உடலில் உள்ள அணுக்களில் சேர்கின்றது.
அடிக்கடி இந்த உணர்வுகளைச் சேர்த்தோம் என்றால் சிறுகச் சிறுக நல்ல அணுக்களை நமக்குள் பெருக்கிக் கொண்டே இருக்கும். ஆக தீய அணுக்களைத் தணித்து நல்ல அணுக்களின் தன்மைகளை நமக்குள் உருவாக்குகின்றது.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.
1.ஈஸ்வரா என்று சொல்லும் பொழுது
2.புருவ மத்தியில் உள்ள உயிரை நினைவு கொள்ளுங்கள்.
3.ஈஸ்வரா என்றாலே உங்கள் உயிர் தான்.
உங்கள் உயிரிடம் வேண்டி நினைவினைத் துருவ நட்சத்திரத்துடன் செலுத்துங்கள். அதிலிருந்து வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று திரும்பத் திரும்ப எண்ணி ஏங்கித் தியானிக்க வேண்டும்.
இப்படி அதை நுகரும் பொழுது உங்கள் புருவ மத்தி (உயிர்) வழி தான் உங்கள் உடலுக்குள் செல்லுகின்றது.
1.உங்கள் புருவ மத்தியில் அந்த அலைகள் வந்து மோதும் போது குறு குறுப்பு ஏற்படும்.
2.ஒளியும் நல்ல உணர்ச்சிகளும் தெரியும்.
குறு.. குறு… என்று இருக்கும் பொழுது சிலருக்குச் சிறிது வலியும் இருக்கும். காரணம்…
1.நம் உடலில் உள்ள தீய அணுக்களைக் கொன்றிடும்
2.அந்த அரும் பெரும் சக்தி அங்கே சுழன்று வரும் பொழுது
3.தீய அணுக்களுக்குச் செல்லும் உணர்வினை அது மாற்றுகின்றது.
உங்கள் நினைவுகள் அனைத்தையும் துருவ நட்சத்திரத்தின் மீது செலுத்தி அந்தப் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று ஏங்கித் தியானிக்க வேண்டும்.
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…..
2.உங்கள் நினைவுகள் துருவ நட்சத்திரத்துடன் இணைந்திருக்க வேண்டும்.
3.அதிலிருந்து வரும் பேரருளையும் பேரொளியையும் பெற வேண்டும் என்ற ஏக்கம் இருக்க வேண்டும்.
4.நீங்கள் ஏங்கும் பொழுது தான் அதை நீங்கள் சுவாசிக்கின்றீர்கள்.
5.புருவ மத்தி வழிதான் நமது உணர்வுகள் நுகர்ந்து செல்லும் பாதை.
இரண்டு கண்களுக்கு இடையில் தான் புருவ மத்தியில் உயிரின் இயக்கம் உள்ளது. அதன் வழியாக உயிரின் துணை கொண்டு துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வினை உடலில் உள்ள அணுக்களுக்கு உயர்ந்த சக்தியை ஊட்டுகின்றோம்.
நமது இரத்த நாளங்களில் பெருக்குகின்றோம்.
உங்கள் உடலில் உள்ள ஜீவணுக்களும் ஜீவான்மாக்களும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.


பொங்கும் மங்கலம் பெறுவீர்கள்…!
கலி…! நாம் தீமையின் உணர்வை வளர்த்தால் தீமையின் செயலாகவே நம்மை மாற்றும். ஒளியின் உடலாகப் பெற்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் சேர்த்தால் தீமையை நீக்கி ஒளி என்று உருவாக்கும் பொழுது கல்கி…!
1.உயிர் ஒளியாக இருக்கின்றது…
2.உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றிடும் அருள் சக்தியை நாம் பெறுகின்றோம்.
நான் (ஞானகுரு) படிக்காதவனாக இருந்தாலும் குருநாதர் ஒவ்வொரு சமயத்திலும் அருள் உணர்வை இணைத்து அதனுடைய செயலாக்கங்கள் உடலில் எப்படி உருமாறுகிறது…? என்பதை அனுபவரீதியாக எனக்குக் கொடுத்தார்.
1.நுகர்ந்த உணர்வு உயிரிலே பட்டபின் உடலுக்குள் செல்லும் பொழுது அந்த உணர்ச்சிகள் வேறு
2.அதே சமயத்தில் உடலில் உள்ள எதிர் அணுக்கள் மாற்றப்படும் போது அது எப்படி ஆகின்றது
3.அப்படி அது தன்னுடைய வலுவாக இயக்கினாலும் அதைக் குறைக்க…
4.நான் (ஈஸ்வரபட்டர்) கொடுக்கும் வலுவான உணர்வுகளை நீ அதிகமாகச் சுவாசிக்கும் பொழுது அது எப்படி அடங்குகின்றது
5.ஆக… சுவாசிக்கும் பொழுது முதலில் எதிர்க்கின்றது. அதிகமாகி விட்டால் ஒடுங்கி விடுகின்றது என்று தெளிவாக்கினார்.
உதாரணமாக… தண்ணீரில் ஒரு நிறத்தைக் கலந்து விட்டால் அந்த நிறமே முழுமையாக ஆகிறது.
1.அதில் சிறிதளவு நல்ல நீரை விட்டால் அதுவும் அதே நிறமாகத் தான் தெரியும்.
2.ஆனால் நல்ல நீரை ஊற்ற… ஊற்ற… ஊற்ற… அந்த நிறம் மாறத் தொடங்குகிறது.
அதே போல் அழுக்குத் தண்ணீர் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்
1.அதில் நன்னீரை விட… விட… அழுக்குத் தண்ணீர் பொங்கி வெளியே வருகின்றது
2.நல்ல நீர் சேரச் சேரச் சேர அழுக்கின் தன்மை குறைந்து நன்மையின் உணர்வுகள் வருகின்றது
இதைப் போன்று தான் இந்த மனித வாழ்க்கையில் நாம் பொங்கச் செய்ய வேண்டியது எது…? என்ற நிலையில் அருளைப் பொங்கச் செய்து இருளைத் தணியச் செய்ய வேண்டும்… அது தான் தைப் பொங்கல்…!
ஆகவே… பொருளைக் காணும் உணர்வின் அறிவைக் கூட்டுங்கள். வெகு தொலைவிலிருந்து வரும் இருளை நீக்கிடும் அருள் சக்தி பெறுவீர்கள். துருவ நட்சத்திரம் அதைத்தான் செய்கின்றது.
அகஸ்தியன் துருவனாகித் துருவ நட்சத்திரமாக ஆனது. வெகு தொலைவிலிருந்து வரும் எத்தகைய உணர்வையும் அது பலவீனப்படுத்தி ஒளியாக மாற்றிக் கொண்டேயுள்ளது.
துருவ நட்சத்திரத்தை எண்ணி… பேரருள் பேரொளியாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் அந்த உணர்வினை நாம் அதிகாலையில் கவரப் பழக வேண்டும்.
1.பொங்கும் மங்கலமாக அதை நினைவுபடுத்தி
2.உங்கள் எல்லோருக்கும் அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று
3.நானும் (ஞானகுரு) பிரார்த்தனை செய்கின்றேன்.
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெற வேண்டும் என்று தினமும் அதிகாலையில் நீங்கள் விரும்பினால் “அந்த நறுமணங்கள்…” நிச்சயம் உங்களுக்குள் வரும். பேரானந்த நிலை பெறுவீர்கள்.

ஒரு ஆடு முன்னாடி போனால் பின்னாடியே மற்ற ஆடுகள் செல்வது போல் தான் இன்றைய அறிவின் ஞானம் சென்று கொண்டுள்ளது – ஈஸ்வரபட்டர்
இப்பூமியின் காற்று மண்டலமே விஷமாகிக் கொண்டுள்ள இக்கலியின் கடைசியில் மனிதனின் உணர்வுகளெல்லாம்…
1.மனிதன் உண்ணக் கூடிய உணவு முறையாலும்
2.வாழ்க்கை நெறியில் நாகரீகத்தின் வளர்ச்சியாலும்
3.மிருகங்களின் நிலையில் எப்படி ஆடு மாடுகள் ஒன்றைப் போன்றே பிறிதொன்றும் செய்கின்றதுவோ (ஒரு ஆடு போனால் அதற்குப் பின்னாடி எல்லா ஆடுகளுமே செல்வது போல்)
4.அதைப் போன்று மனிதனின் வீரியத் தன்மை தன்னைத்தானே தான் உணராமல்
5.மிருகத்தின் நிலைக்கொப்பத் தான் மனித அறிவின் ஞானம் சென்று கொண்டுள்ளது.
அந்தந்தச் சரீரத்திற்குகந்த அமிலத்தின் வீரிய குணத்தைக் கொண்டு அறிவின் ஞானத்தை உயர் ஞானமாக்கித் “தன் அறிவால் உயர் தன்மை பெறக்கூடிய சக்தி மனிதனுக்கு உண்டு…!” என்பதை அறியவில்லை… உணரவும் இல்லை.
இப்பூமியின் தொடர்பு கொண்ட நட்சத்திரங்களின் தொடர்பில் உயிர் பெற்ற ஜீவ ஆத்மாக்கள் அனைத்துமே ஒன்று போல இருப்பதில்லை.
எந்தெந்த நட்சத்திரத்தின் வலுவுடன் எந்த நட்சத்திரத்தின் ஈர்ப்பு நிலையுடன் தொடர்பு கொண்டு இப்பூமி சுழல்கின்றதோ அத்தருணத்தில் உயிர் பெற்ற ஜீவாத்மாக்கள்
குணங்களிலும்…
செயல்களிலும்…
உருவ மாற்றத்திலும்…
வண்ணத்திலும்…
ஒருவரை ஒத்து ஒருவரில்லாமல் தான் இருக்கும்.
இதை முதலில் உணர்ந்து கொண்டு… மனிதனுக்குண்டான “உயிர்த் தன்மையின் உயர்வு நிலையை…” உணர்ந்து செயல்படுதல் வேண்டும்.
சூரியன் எப்படி நாற்பத்தி ஏழு கோள்களின் தொடர்புடன் தன்னையும் வளர்த்து… தன் குடும்பக் கோள்களின் தொடர்பிலும் வளர்ச்சி பெற்றுச் சுழலும் செயல் நடக்கின்றதோ… அதைப் போன்றே ஒவ்வொரு மண்டலத்துக்கும் அதனதன் ஈர்ப்பின் சுழற்சி தொடர் நட்சத்திர மண்டலங்கள் உண்டு.
நம் பூமியின் தொடர் நட்சத்திரம் இருபத்தி ஏழும் பூமியுடன் இருபத்து எட்டாகச் சுழலும் தொடர்ச்சியில் பூமியின் ஈர்ப்பு வளர்ச்சிக்குத் துணைக் கோள்களாக இந்நட்சத்திரங்களின் வலுவைக் கொண்டுதான் “ஜீவ ஞான சரீரங்கள் (மனிதர்கள்)” இந்தப் பூமியில் மட்டுமே உருப்பெற்று உள்ளது.
அதாவது ஜீவ அலையின் ஞான ஒளி உணர்வின் எண்ணத்தின் மையக் கருவின் செயல் வலுப் பெற்று வாழக்கூடிய தகுதி நாற்பத்தி எட்டுக் கோள்களில் இப்பூமிக்கு மட்டும் உண்டு என்றால் இப்பூமியைச் சுற்றியுள்ள வலுக் கொண்ட இவ் இருபத்தி ஏழு நட்சத்திரங்களும் “ஜீவன் கொடுக்கும் ஜீவ நட்சத்திரங்கள் தான்…!”
ஜீவனை வளர்க்கவல்ல அத்தகைய ஜீவ நட்சத்திரங்களும் நட்சத்திரங்களிலேயே பல மாற்றுச் செயலை நிலைக்கத்தக்க பல கோடி தன்மைகள் கொண்ட நட்சத்திரங்களும் உண்டு.
இப்பூமியின் வடிவ நிலையையும் இப்பூமியின் தன்மையையும் ஆதிகாலத்தில் ஒலி ஒளி தொடர்பு நிலை விஞ்ஞான ரீதியில் பெறாத காலத்தில்…
1.வான சாஸ்திரத்தின் பல உண்மைகளையும்
2.பூமியின் இயற்கை மாற்றத்தின் நிலைகளையும்
3.இப்பூமிக்கும் மற்றக் கோள்களின் சந்திப்பு நிலைகளையும்
4.இவ் இருபத்தி ஏழு நட்சத்திரத்தின் தொடர்பு கொண்டுதான் மனிதன்
5.விஞ்ஞானம் வளராத காலத்தில் தன் ஞானத்தால் அன்றே அறிந்தான்.
பல ஆயிரம் ஆண்டு காலங்களுக்கு முன்பு ஆழ்கடலில் பயணம் செய்தவர்களெல்லாம்
1.துருவ நட்சத்திரத்தையும் விடிவெள்ளி போன்ற சில நட்சத்திரங்களையும்
2.இப்பூமியின் ஈர்ப்புத் தொடர்பில் பூமியின் ஈர்ப்புடனே சுழலக்கூடிய நிலையை அறிந்த ஞானத்தால்
3.இயற்கை நிலைகளை மனிதர்கள் அன்றே அறிந்தார்கள்.
அவர்கள் அறிந்த வழியிலேயே நம் அறிவின் ஞானத்தை உயர் ஞானமாக்க வேண்டும் என்பதனை உணர்ந்து அந்த ஞானிகள் காட்டிய வழியில் செயல்பட வேண்டும்.
ஏனென்றால் மனிதனுடைய உணர்வின் எண்ண ஜீவ சரீரத்தில் இயங்கும் உயிராத்மாவின் ஒளியை “எந்நிலை கொண்டு அதிலே வீரியத் தன்மையைப் பெற வேண்டும்…?” என்ற பக்குவத்தைத்தான் பல வழிகளில் இது நாள் வரை போதித்துள்ளோம்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
சில குடும்பங்களில் பெண் குழந்தைகள் பிறக்கின்றது. பெண் குழந்தைகள் பிறந்த பிற்பாடு இன்றைக்கு இருக்கின்ற காலத்தில் தாய் தகப்பனுக்கு நிம்மதி இல்லை.
தாய் தகப்பனுக்கு நாம் என்ன கடமை செய்ய வேண்டும்…? அது தெரியவில்லை. தாயினுடைய உண்மையை உணர முடியவில்லை.
இன்றைக்குப் பெண்கள் பிறந்த குடும்பங்கள் எல்லாம் மிகவும் அல்லல்படுகின்றார்கள்.
கடவுளாக இருந்து நம்மை உருவாக்கிய தாய் நம் மீது எவ்வளவு பாசம் வைத்திருக்கின்றார்கள்…? நாம் அதை மதிக்கின்றோமா…!
அவர் நம் மீது அந்தப் பாசத்திற்குத் தகுந்தபடி
1.நாம் எண்ணியது நமக்குள் நடக்க வேண்டும்
2.நம் தாய் எண்ணியது எனக்குள் நடக்க வேண்டும் என்று சொன்னால்
3.அந்த சக்தி நமக்குள் உருவாகும்.
நாம் யாராவது இப்படி எண்ணுகின்றோமா…?
தான் எடுத்துக் கொண்ட உணர்வுக்கொப்ப “நான்… வாழ வேண்டும்” என்று
1.தாயை அதன் வழியே கொண்டு வர வேண்டும் என்று
2.நினைத்தோம் என்றால் அது தவறான வழி ஆகும்.
3.இப்படி நிறையப் பேர் உண்டு (மகனும் சரி மகளும் சரி)
தன் உணர்வின் ஆசைக்கு அந்த இணக்கத்திற்குக் கொண்டு வரவேண்டும் என்பதற்காக
1.நம்மை ஈன்று மனிதனாக உருவாக்கிய அந்தக் கடவுளையே
2.நம்மைக் காப்பாற்றிய அந்தத் தெய்வத்தையே
3.நமக்கு நல்லது சொன்ன குருவையே
4.மனதை நோகும்படிச் செய்கின்றோம்.
இதையெல்லாம் சற்றுச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இன்றைய உலகில் ஒவ்வொரு வீட்டிலும் அமைதி இருக்கின்றதா…? சந்தோஷமாக வாழ்கிறேன் என்று சொல்ல முடிகிறதா…!
ஆகவே இப்படிப் பல வகைகளிலும் வரும் தோஷங்களெல்லாம் நமக்குள் சேர்ந்த பிற்பாடு உடலில் நோய் வந்துவிடுகின்றது, நம் நல்ல அணுக்களை எல்லாம் அது கொன்று சாப்பிடுகின்றது.
இதை யார் மாற்றுவது…? நன்றாக யோசனை செய்து பாருங்கள்.
அதே சமயத்தில் பெண் பிள்ளைகளைத் திருமணம் செய்து கொடுத்து முடிப்பதற்கு முன்னால் அந்தத் தாய் படுகின்ற அவஸ்தையோ
1.வயதாகிப் போகின்றதே… வயதாகிப் போகின்றதே… என்று எண்ணுவார்கள்
2.இன்ன வயதாகிப் போனால் அந்த வயதிற்குத் தகுந்த மாப்பிள்ளை கிடைப்பது கஷ்டமே…! என்று
3.தாய் எண்ணி எண்ணி எண்ணிப் பிள்ளைகளை நினைத்து நினைத்து வேதனைப்படுகிறது,
பிள்ளையைப் பார்க்கும் போதேல்லாம் இந்த வேதனை உண்டாகின்றது.
ஆனால் அவர்களுக்கு நல்ல மாப்பிள்ளை வர வேண்டும். நல்லது வர வேண்டும் என்று நினைக்கின்றதா…? என்றால் தாய் நினைக்கவில்லை.
ஆசை இருக்கிறது…
1.ஆனால் வேதனையை எடுத்து அதைத் தனக்குள் எடுத்து வேதனையான உணர்ச்சியைச் சொல்லி
2.அந்தக் குழந்தையைப் பார்க்கும் போதெல்லாம் இந்த வேதனை வருகின்றது.
இவ்வாறு அந்த வேதனை விஷம் என்ற நிலைகள் பட்டால் நினைவென்ற நிலைகள் இழக்கப்பட்டு
1.தாயை நினைத்து அந்த வேதனையை எடுக்கின்றோம்
2.அது அறியாமையாக வந்து இயங்கிக் கொண்டு தான் இருக்கின்றது.
குழந்தையை மட்டும் சொல்வதற்கு இல்லை.
தாயின் ஆசைகள்… “இப்படி நடக்கின்றதே… நாளைக்கு என்ன ஆகப் போகின்றதோ…!” என்ற இந்த வேதனையைச் சுவாசிக்கின்றது,
குழந்தையை எண்ணி வேதனையை உருவாக்குகின்றது. இந்த உள் உணர்வின் தன்மை சொல்லாகப் போகும் போது என்ன செய்கின்றது…?
ஏனென்றால் ஒரு நெருப்பில் பாத்திரத்தை வைத்து பதார்த்தத்தைப் போடுகின்றோம். பல பொருட்களைச் சேர்த்து வேக வைக்கின்றோம். நாம் போடுகின்ற பொருளுக்குத் தக்கவாறு தான் அதிலே ருசி வருகின்றது.
ஏனென்றால் நம் உயிர் ஒரு நெருப்பு. நம் குழந்தை மேலே ஆசையாக இருக்கின்றோம். ஆனால் “சீக்கிரம் திருமணம் ஆகவில்லையே…” என்கிறபோது அது வேதனை.
அதில் கொஞ்சம் கொஞ்சமாகச் சரக்குகளைச் சேர்த்து இந்த வேதனை உணர்வை உருவாக்கி இந்த உணர்வின் தன்மை உமிழ் நீராக்கி நம் உடலுக்குள் வளர்த்து இந்த உணர்வைச் சொல்லாக்கி வெளியில் சொல்லப் போகும் போது என்ன செய்கின்றது…?
இந்தப் பிள்ளையைப் பார்க்கும் பொழுது எல்லாம் அந்த வெறுப்பு வருகிறது. “இப்படி ஆகின்றதே….” அந்த வேதனை வருகின்றது. வேதனையான உணர்வு வரப்போகும் பொழுது குழந்தைகளுக்கு என்னவாகும்…?
தாய் பார்க்கும் பொழுது இந்த மாதிரி இருக்கின்றதே என்று அவர்கள் வாயிலேயே தன் பிள்ளையிடம் சொல்லுகின்றது. அதை வாங்கி அவர்கள் வளர்த்துக் கொள்கிறார்கள்.
இன்னும் கொஞ்சம் மோசமாகின்றது.
நமது அறியாத நிலைகள் நமக்குள் எந்த நிலையைச் செய்கின்றது? “இதெல்லாம் ஒரு தோஷம் தான்”.
இந்தத் தோஷங்களை நீக்கும் வழி என்ன…? என்பதைத்தான் சிவன் ஆலயத்தில் தெளிவாகக் காட்டுகின்றனர். சிவன் ஆலயத்தில் சிவனுக்கு முன்பு நந்தியை வைத்துக் காட்டியுள்ளார்கள்.
நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை. வாழ்க்கையில் பிறருடைய உணர்வுகள் நம்மை இயக்கும் பொழுதெல்லாம் குருநாதர் காட்டிய அருள் வழியில் மகரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும் என்ற “இந்தக் கணக்கைக் கூட்டிக் கொண்டே வர வேண்டும்”.


சூரியனுக்கும்… உயிருக்கும்… துருவ நட்சத்திரத்திற்கும் உண்டான தனித் தனி செயலாக்கங்கள்
சூரியன் இந்தப் பிரபஞ்சத்தையே பொங்கச் செய்கின்றது அதனதன் வாழ்விற்கு அதனதன் நிலையைக் கொடுக்கின்றது. ஆனால் மனிதன் அருள் ஞானத்தின் உணர்வைத் தனக்குள் செலுத்தி வாழ்க்கையில் வரும் இருளை நீக்குதல் வேண்டும்.
1.சூரியன் இந்தப் பிரபஞ்சத்தை ஒளிமயமாக ஆக்குகின்றது
2.நமது உயிரோ மற்ற அணுக்களின் தன்மையை அறிவாக இயக்கச் செய்கின்றது
3.துருவ நட்சத்திரமோ இருளை வென்று ஒளியின் உணர்வாக உருவாக்கிக் கொண்டிருக்கின்றது.
நம் உடலில் தெரிந்தோ தெரியாமலோ தீமையான அணுக்கள் உருவானால் அந்த அணுக்களுக்குத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைச் செலுத்தி அதனின் வீரிய உணர்வு பெற வேண்டும் என்று செலுத்தினால் அது ஒளியின் தன்மை பெறும்.
உதாரணமாக விஞ்ஞான அறிவு கொண்டு நல்ல மருந்தினை உருவாக்கி நோயுற்ற உடலில் செலுத்தப்படும் பொழுது அது இரத்த நாளங்களில் கலந்து மற்றவையுடன் சேர்த்து நல்ல அணுக்களாக உருவாக்குகின்றது.
இதைப் போன்றுதான் நாம் நுகரும் உணர்வுகள் நம் சிரசு பாகம் இருக்கும் உயிருடன் கலந்தால் அது ஈஸ்வரலோகம். உயர்ந்த குணத்தை உருவாக்கி அந்த அணுவின் கருவாக நம் இரத்த நாளங்களில் சேர்க்கின்றது… இந்திரலோகமாக மாறுகிறது.
அந்த உணர்வின் தன்மை உடலுக்குள் சென்று இரத்த நாளங்களில் கலந்து உடல் உறுப்புகளில் இணையப்படும் போது பிரம்மலோகமாக மாறுகிறது. எக்குணத்தின் தன்மை பெற்றோமோ இந்த உணர்வின் இயக்கமாக அது இயக்கத் தொடங்கி விடுகின்றது.
ஆகவே அதன் வழி கொண்டு நமது வாழ்க்கையில் தெளிந்த மனதையும் உயர்ந்த உணர்வுகளையும் உருவாக்கி பேரின்பப்பெரு வாழ்வு வாழச் செய்யும் அருள் உணர்வுகளை நாம் உருவாக்குதல் வேண்டும்.
1.உலகில் உள்ளோர் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.அவர் குடும்பங்கள் நலம் பெற வேண்டும்
3.அவர்கள் வாழ்க்கையில் செல்வச் செழிப்புடன் வாழ வேண்டும்
4.வாழ்க்கையில் வரும் இருளை அகற்றி நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றும் அருள் சக்தி பெற வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.
காரணம் உலக மக்கள் உணர்வுகள் நமக்குள்ளும் உண்டு.
எல்லோருடைய உணர்வுகள் நமக்குள் இருந்தாலும்… கீதையிலே நீ எதை எண்ணுகிறாயோ அதுவாகின்றாய் என்பது போல்
1.எல்லோரும் நலம் பெற வேண்டும் என்றும்
2.அருளொளி நமக்குள் பெற வேண்டும் என்றும் நாம் எண்ணும் பொழுது
3.நமக்குள் இருக்கும் உணர்வுகளை அது ஒளியாக மாற்றுகின்றது.
அரிசியையும் பருப்பையும் சர்க்கரையும் பாதாமையும் முந்திரியையும் போட்டுச் சுவையாகப் பொங்கலை உருவாக்குவது போன்று நமக்குள் பல சரக்குகள் இருந்தாலும்
1.அருள் ஞானிகள் உணர்வு கொண்டு எல்லோரும் மகிழ்ச்சி பெறும் உணர்வுகளைப் பெற வேண்டும் என்று நுகர்ந்தால்
2.அதுவே நமக்குள் சுவையாக உருவாகின்றது… பொங்கல்…!
3.இது தான் தை… “இணைத்தல்” என்று நமக்குள் சேர்க்கின்றது.
ஆகவே… எந்த உணர்வின் தன்மையை இணைக்கின்றோமோ அதன் உணர்வுக்கொப்ப நம்மை இயக்குகிறது என்ற உண்மையை நாம் அறிந்து கொண்ட நிலையில்… உலக மக்கள் அருள் ஞானம் பெற்று அவர்கள் வாழ்க்கையில் அறியாது வந்த இருளை நீக்கி மலரைப் போன்ற மணம் பெற்று மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும் என்று நாம் பிரார்த்திப்போம்.
1.துருவ மகரிஷிகளின் அருள் சக்தி பெற தியானிப்போம்… நம் உடலுக்குள் அதை உருவாக்குவோம்
2.அருள் ஞானத்தைப் பெருக்குவோம்… மகிழ்ந்து வாழும் சக்தியை நம் உடலில் உருவாக்குவோம்
3.நம் சொல்லும் செயலும் பிறரை மகிழச் செய்யும் நிலையாக நமக்குள் உருவாக்குவோம்.
4.உலக மக்கள் அனைவரும் தெளிந்த மனம் கொண்டு வளர “குரு அருளை” நமக்குள் பெருக்குவோம்
5.குரு அருளைத் துணை கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறுவோம்
6.உலக மக்கள் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறத் தியானிப்போம்… தவம் இருப்போம்.
7.அந்தத் தவத்தின் பலனாக அனைத்து மக்களும் உடல் நலம் பெற… நம் உடலில் உள்ள அணுக்களும் நலம் பெற
8.நம் சொல் கேட்போர் உணர்வுகளை நலம் பெறச் செய்யக்கூடிய சக்தியாக ஒவ்வொரு நாளும் நாம் செயல்படுத்துவோம்.
ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…!

கருகும் நிலையில் உள்ள கலியை மாற்றிடவே மகரிஷிகளின் செயல்கள் நடைபெற்றுக் கொண்டுள்ளது – ஈஸ்வரபட்டர்
அன்றைய மெய் ஞானிகளின் செயலால்… மனித ஞானத்தை உயர் ஞானத்தில் மெய் ஞானப்படுத்தச் செயல்படுத்திய சக்தியின் தொடர் இப்பூமியில் உள்ளதனால்தான் மனித அறிவே வளரக் கூடிய வளர்ச்சியாக இன்றும் உள்ளது.
இருந்தாலும் இன்று… இப்பூமியில் உள்ள பல கோடி ஆத்மாக்களின் உணர்வின் எண்ண சுவாச அலையின் வீரியத் தன்மை…
1.விஞ்ஞான வளர்ச்சித் தொடரில் செயல்படச் செயல்பட
2.மனித உணர்வின் வீரிய காந்த சுவாச அலையின் தொடர் அதிகப்பட
3.அதற்குகந்த உணவான தாவர இன வளர்ச்சி நிலை குறைவுபட்டு விட்டது.
4.அதனால் மெய் ஞானிகளின் செயல் தன்மைக்கு வேண்டிய ஞான வளர்ச்சிக்கு
5.அந்த ஞானிகள் செயல் நிலை யாவும் இப்பூமியின் அடுத்த பிரளயத்தில் கல்கியின் செயலுக்குச் செயலாகப் போகின்றது.
பொருளைச் சமைக்கவல்ல பக்குவமான உஷ்ணத்தைத் தந்தால் அந்தப் பக்குவப்பட்ட பதத்தில் அதைச் சமைத்து உணவாக உட்கொள்ளலாம்.
ஆனால் அதி உஷ்ணம் ஏறும் பொழுது எல்லாமே கருகும் நிலை ஏற்பட்டுவிடும். அப்படிப்பட்ட உஷ்ணத்தைப் பக்குவப்படுத்தக் கூடிய காலமாகத் தான் இன்றைய “கலியின் மாற்று நிலை…!”
ஏனென்றால் விஞ்ஞானத்தின் வளர்ச்சியால்
1.மனித ஜீவாத்மாக்களின் காந்த உணர்வின் ஒளியின் வலுவிற்கு வலுக்கூட்டும் தாவர இனங்களின் வளர்ச்சி குறைந்து விட்டது.
2.இப்பூமிக்குள் இருக்கும் கனி வளங்களையும் செயற்கைக்காக மனிதன் பிரித்தெடுத்து விட்டான்.. அதனுடைய வளர்ச்சியும் குறைந்து விட்டது
3.அதே சமயத்தில் செயற்கை மின் காந்த ஒலி/ஒளி சக்திகளையும் இக்காற்றலையில் அதிகமாக கலக்க விட்டுள்ளனர்
இத்தனை விபரீத பாதிப்புகளால்… மனித எண்ண உணர்வுகள் தன் ஞானத்தை உயர் ஞானமாக்கி… மெய் ஞானத்தால் மனித சக்தியின் வளர்ச்சி நிலை வளரும்… அறிவின் உருவில் உயரும் நிலையைக் காட்டிலும்… குறுகிய நிலை கொண்டு மனிதனின் வீரியத் தன்மை விஷம் கொண்ட நிலைக்கே சென்று கொண்டுள்ளது.
இத்தகைய தருணத்தில்…
1.யாம் சொன்ன தியான முறையால் இக்கலியின் மாற்றத்திற்குள்..
2.தன்னைத்தானே மனிதன் உணரும் பக்குவச் செயலில் பதமாக வேண்டும்.
நற்குணத்தை வளர்க்கும் அந்தத் தியானத்தையும் சகல மாமகரிஷிகளின் தொடர்பு எண்ணத்தையும் தியானத்தால் கூட்டிக் கொள்ளும் வழிக்கு வர வேண்டும்.
இந்தச் சரீரத்தில் இருக்கக்கூடிய காலத்திலேயே இச்சரீரத்தையே மெய் ஞான உணர்வு பெறக்கூடிய ஒளித் தன்மையைச் செயல்படுத்திக் கொண்டோமானால் இச்சரீரத்தையே ஒளிச் சரீரமாக ஒளிரும் நிலையை நாம் நடைமுறையில் காண முடியும்.
1.உணர்வில் முன் கூட்டி அறியக் கூடிய சூட்சுமத்தைப் பெறக் கூடிய செயலினால்
2.ரிஷி சக்திகளின் தொடர்பை இச்சரீரமே ஏற்கும் செயலுக்கு
3.இச்சரீரமே ஆத்மாவின் ஒளியை ஒளிர வைக்கும் இயந்திரமாகவும் செயலாக்க முடியும்.
இந்த உடலுடன் வாழும் நிலையில்… உயர் காந்த மெய் ஞான உணர்வுடன் நாம் எடுக்கக் கூடிய மூச்சலையின் சுவாசக் காற்று இப்பூமியில் பதியும் பொழுது
1.ரிஷிகளுடன் தொடர்பு கொண்டு…
2.ரிஷி சக்தியின் செயலுக்காக இச்சரீர உணர்வின் மெய் ஞான மூச்சலையைப் பரவச் செய்தால்
3.இப்பூமி எத்தனை ஆண்டு காலங்கள் செயல்பட்டாலும் ஜீவ உடலுடன் எடுக்கக் கூடிய மூச்சலையில்
4.அந்த மெய் ஞானிகளின் மூச்சலைகள்… அது என்றுமே வளர்க்கக் கூடிய வளர்ச்சியின் வித்தாக
5.ஜீவித உணர்வுகளுக்கு ஜீவ உணர்வு செயலாய்ச் செயல்பட்டுக் கொண்டே இருக்கும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
கஷ்டம் என்ற நிலைகளிலிருந்து அது நமக்குள் புகாமல் “விழித்திருந்து…” துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற வேண்டும் என்று நாம் “பசித்திருந்து…” போது தீமைகள் நம்மைப் பற்றிடாது “தனித்திருக்க…” வேண்டும்.
இதைத்தான் ஞானிகள் விழித்திரு பசித்திரு தனித்திரு என்றார்கள்,
ஞானிகள் சொன்ன அந்த நிலையை நம் எல்லோராலும் பெற முடியும்.
தனித்திரு… என்றால் சில சாமியார்கள் என்ன செய்வார்கள்…?
“குடும்பம்… பெண்டு பிள்ளைகள்… இதெல்லாம் வேண்டாம்…” என்று நினைத்துக் கொண்டு “தனித்து” இருப்பார்கள். இதெல்லாம் அறியாமை.
நாம் நம்மை அறிந்து இந்த உயிரின் உணர்வை அறிந்து நாம் இனிப் பிறவியில்லா நிலை அடையும் நிலையில் விழித்திருந்து தீமைகள் புகாது நமக்குள் உயிரைப் போலவே உணர்வை ஒளியாக்கிட வேண்டும்… “கார்த்திகேயா”. கார்த்தி என்றால் வெளிச்சம்.
சிவன் ராத்திரி அன்று இதை எடுத்துக் கொண்டோம். பன்னிரண்டு இராசிகளில் இது ஒரு இராசி. அடுத்த மாதம் வரப்படும் போது இதையே மாற்றி வரப்படும் போது சித்திரை.
சித்திரை என்பது நமக்குள் எடுத்துக் கொண்ட சிறு திரைகளை மாற்றி அமைக்கின்றோம்.
வைகாசி – தனக்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மையை அந்த துருவ நட்சத்திரத்தின் ஒளியைக் கொண்டு “தனக்குள் தெளிவாக்கு…” என்பது.
ஒவ்வொரு மாதமும் இப்படித் தெரிந்து தெளிந்து கொள்வதற்காகத்தான் பன்னிரெண்டு மாதங்களிலும் விழாக்களை அமைத்தார்கள் ஞானிகள், “விநாயகர் சதுர்த்தி…” இப்படி ஒவ்வொரு நிலைகளுக்கும் காரணப் பெயர் வைத்தார்கள்.
பன்னிரண்டு இராசிகளையும் ஒவ்வொன்றாகத் தாண்டிப் போகும் போது இந்த இராசியைச் சுத்தப்படுத்தி விட்டு அடுத்த இராசிக்குச் செல்லும் பொழுது மீண்டும் குறைகள் வந்தால் அந்த இராசியைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இப்படிப் பன்னிரண்டு மாதங்களிலேயும்
1.ஒவ்வொன்றையும் சுத்தப்படுத்தி
2.நம் ஆன்மாவைத் தூய்மையாக்கிப்
3.பேரொளியாக மாற்றிக் கொண்டு வரவேண்டும். அதற்காகத்தான் இதை அறிந்துக் கொள்ளச் சொன்னார்கள்.
ஆனால் நாம் இப்பொழுது என்ன செய்கின்றோம்…?
ஜோசியம் பார்த்து இந்த மாதத்தில் திருமணம் செய்யக் கூடாது என்பதும் இந்த மாதத்தில் நல்ல காரியங்கள் எதுவும் செய்யச் கூடாது என்றும் ஞானிகள் சொன்ன நிலைகளை மாற்றி ஆசைக்கு வகுத்துக் கொண்ட நிலைகள் தான்.
ஞானிகள் நமக்கு உணர்த்திய அந்த மெய் வழிப்படி நடந்தால் அவைகளை நம் வாழ்க்கையில் கடைப்பிடித்தால் அவர்கள் அடைந்த எல்லையை அடைவது சுலபம்.
பேரின்பப் பெருவாழ்வு வாழலாம்.

Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.