கணவன் மனைவி இணைந்த நிலையில் இரண்டாயிரம் சூரியக் குடும்பங்களின் ஓட்டத்தையும் காணலாம் – ஈஸ்வரபட்டர்

கணவன் மனைவி இணைந்த நிலையில் இரண்டாயிரம் சூரியக் குடும்பங்களின் ஓட்டத்தையும் காணலாம் – ஈஸ்வரபட்டர்

 

உருக்கொண்ட உயிரணு வளர்ச்சி யாவையுமே… அவை அவை எடுத்த சுவை கொண்டு வளர்ச்சி பெற்ற வலுவின் செயல் கொண்டு… செயல் வழி குண நிலை தொடர் கொண்டு வளருகின்ற தொடர் வளர்ப்பில்… சரீர எண்ண குண வாழ்க்கையில்… சுவையும் காம இச்சையும் கொண்ட தொடர் வாழ்க்கையில் மனித எண்ண வழித் தொடர் கொண்ட வாழ்க்கை அமைந்துள்ளது

இச்சரீர ஈர்ப்பில்… சரீர உணர்வில் வளர்த்துக் கொண்ட குண நிலையை… உணர்வின் உந்தலை… எவ்விச்சையையும் “ஆவேச உணர்வு ஈர்ப்பில் செலுத்தாமல்… சமம் கொண்ட சாந்த குண ஈர்ப்பினாலேயே” செலுத்த வேண்டும்.

இவ்வுடலில் காந்த மின் அணு வலுவைக் கூட்டிய ஆத்ம பலத்தை
1.ஆண் பெண் என்ற தாம்பத்ய இணைப்பு ரிஷித் தொடர்பில்
2.இரண்டு ஆத்மாவும் ஒரு நிலை கொண்டு
3.ஓர் ஆத்மாவாக ஈருயிர் ஓர் ஆத்மாவாக வலுக் கொண்ட தொடரில் சென்றால்
4.ரிஷி சக்தி (சிவ சக்தி) கொண்ட வலுக் கூடும்.

அதன் மூலம் வளர்ச்சி கொண்ட ஜீவ வளர்ச்சி வளரத்தக்க வழித் தொடர்பிற்கு… சிவ சக்தி நிலை கொண்ட ஆத்ம ஜெபம் பெற்ற இந்த ஆத்மாக்கள் இரண்டாயிரம் சூரியக் குடும்ப இயக்க ஓட்டத்தில் எம்மண்டலத்தையும் தம் மண்டலமாக்கிட முடியும்.

மண்டல வளர்ப்பிற்கு… மனித அலை உயர் தெய்வ குண எண்ண பகுத்தறியும் ஆற்றல் கொண்ட வித்துத் தொடரை சிவ சக்தியின் செயல் கொண்டு தான் வளர்க்க முடியும்.

வளர்க்க வேண்டிய வளர் சக்தி கொண்ட “தெய்வ நிலை” மனித எண்ணத்திற்கு மட்டும் தான் உண்டு.

ஆகவே…
1.உண்டு கழித்து உறங்கும் இயந்திர பூமியின் பிடிப்பில் சுழலும் மனித ஆத்மாக்களே…
2.உங்களுக்குகந்த அறிவு ஞானத்தை இவ்வுடல் ஒன்று பெற
3.இம்மனிதச் செயல் செயல் கொள்ள
4.இரண்டாயிரம் சூரியக் குடும்பங்களின் தொடர்புடன் பல காலமாக வளர்ச்சி கொண்டு
5.வார்ப்புப்படுத்தி வார்ப்புப்படுத்தி வளர்ச்சி பெற்ற இம்மனித உயர் ஞான எண்ண உணர்வு கொண்ட இச்சரீரத்தை
6.மீண்டும் இச்சரீரக் கோளத்தின் சத்தையே எடுத்து எடுத்து
7.தன் ஆத்மாவின் வித்தை – தன்னைத் தான் உணராத நிலையில் விரயப்படுத்தி உழலும் இத்தொடரை விடுத்து விட்டு
8.உயரும் வழித் தொடரின் வழியறிந்தே நீங்கள் செல்லுங்கள்.

Leave a Reply