நாம் செய்யக்கூடிய தியானத்தைச் சாதாரணமாக நினைக்காதீர்கள்…!

நாம் செய்யக்கூடிய தியானத்தைச் சாதாரணமாக நினைக்காதீர்கள்…!

 

1,துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் பெருக்கி
2.இந்த உணர்வின் தன்மையை நாம் உலகமெங்கும் பரவச் செய்யும் பொழுது
3.இந்தப் பூமியில் இருக்கக்கூடிய நச்சுத் தன்மைகளை நீக்க முடியும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைப் பெற்று அதை உங்களுக்குள் விளைய வைக்கும் சந்தர்ப்பத்தைத் தான் இந்த உபதேச வாயிலாக ஏற்படுத்திக் கொடுக்கின்றோம் (ஞானகுரு).

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைப் பெருக்கப் பெருக்க சூரியனுடைய காந்த சக்தி இதைக் கவரப்படும் போது சிறுகச் சிறுக ஒரு அடர்த்தியின் தன்மையாக வரும்.

அதன் மூலம் விஞ்ஞான அறிவால் வரும் விஷத் தன்மைகளோ மற்ற எதிர்ப்பு நிலைகளோ வந்தால் தடுக்க முடியும்.

1.சூறாவளி போன்ற கடுமையான காற்றுகள் வரும் பொழுது நம் பக்கம் அது வராதபடி அதனின் திசைகளை மாற்ற முடியும்.
2.நாம் எடுக்கும் தியானத்தினால் இது முடியும்… உங்கள் அனுபவத்தில் நீங்கள் பார்க்கலாம்
3.யாம் (ஞானகுரு) சொன்ன முறைப்படி எண்ணிப் பாருங்கள்… அது திசை மாறிப் போகும்.

அதே போல் அந்த மகரிஷியின் அருள் உணர்வுகள் மேகங்களில் படர்ந்து மேகங்கள் கூடி நல்ல மழை பெய்ய வேண்டும் என்ற உணர்வைப் பாய்ச்சினோம் என்றால் நம்முடைய எண்ணமும் அந்தப் பார்வையும் அதில் சேர்கின்றது.

மேகங்களில் அருள் உணர்வுகளைச் சேர்க்கப்படும் பொழுது அங்கே பெய்யும் அந்த மழை நீரால் தீமைகளை அகற்றிடும் சந்தர்ப்பம் உருவாகின்றது.

எந்தெந்த உணர்வுடன் மக்கள் ஆங்காங்கு இருக்கின்றார்களோ அதற்குத்தக்க தான் அங்கே மழை பெய்வதும் இருக்கும். ஊரில் உள்ள மக்கள் நல்ல உணர்வுடன் ஒன்றுபட்டு வாழ்ந்தால் அங்கே சீராக மழை பெய்யும்.

உதாரணமாக அந்த ஊர் மக்கள் வெறுப்பும் சண்டையும் சச்சரவும் குரோதமும் கொண்டிருந்தால் அங்கே மழை பெய்வது அரிதாகின்றது.
1.காரணம் அவர்கள் வெளிப்படுத்தும் உணர்வுகள் மோதல் ஏற்படும் பொழுது
2.மற்ற பக்கம் பெய்யும் ஆனால் இங்கே மழையை விலக்கித் தள்ளிக் கொண்டு போய்விடும்.

ஒவ்வொரு நிமிடமும் அன்பு கலந்து அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகள் நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானித்து மேகங்கள் கூடி நல்ல மழை பெய்ய வேண்டும் என்ற உணர்வை வானிலே பரவச் செய்தால் அந்தப் பகுதிகளில் நிச்சயம் நல்ல மழை பெய்ய வைக்கலாம்.
1.உங்களை நம்புங்கள்…
2.மனிதனுக்கு அவ்வளவு பெரிய சக்தி உண்டு…!

ஒரு பாடலை இனிமையாகப் பாடி அந்த இந்த உணர்வின் ஒலி கொண்டு அதை வைத்து அக்காலங்களில் மழை பெய்ய வைத்திருக்கின்றார்கள்.

மழை இல்லாது ஒரு வறட்சி என்று வந்து விட்டால் பெண்கள் எல்லோரும் கூடி குடங்களை எடுத்துக் கொண்டு ஒரு காட்டுப் பக்கம் செல்வார்கள்.

அங்கே இருக்கக்கூடிய கல்லுக்கோ மற்றதுக்கோ அந்த நீரை ஊற்றிய பின் சிறிது நேரத்தில் மேகங்கள் கூடும், மழையை இங்கே அழைத்துக் கொண்டு வருவார்கள்.

இது எல்லாம் அக்காலங்களில் செயல்படுத்தினார்கள். இன்றும் சில இடங்களில் இது போன்று உண்டு.

முன்னோர்களாகிய நம் ஞானிகள் காட்டிய அருள் வழியில் வழி நடந்தால் இனி வரும் எத்தகைய தீமைகளிலிருந்தும் தப்ப முடியும் என்பதற்கே இதைச் சொல்கிறோம்.

Leave a Reply