குருநாதரின் உயிராத்மா ஒளியாக மாறியதையும் அதிலிருந்து பளீர்… பளீர்… என்று ஒளிக்கற்றைகள் பரவுவதையும் காட்டினார்

குருநாதரின் உயிராத்மா ஒளியாக மாறியதையும் அதிலிருந்து பளீர்… பளீர்… என்று ஒளிக்கற்றைகள் பரவுவதையும் காட்டினார்

 

நம் குருநாதர் வைகுண்ட ஏகாதசி அன்று தான் உடலை விட்டுப் பிரிந்து தன் உயிராத்மாவை ஒளியாக மாற்றி விண் சென்றார்.

1.அதாவது இந்த உடலிலிருந்தே உயிராத்மா எப்படி ஒளியாக மாறி வெளியிலே செல்கிறது…?
2.வெளியிலே சென்ற பின் மற்ற மனிதர்களின் உணர்வுகள் எப்படி எல்லாம் கவர்கிறது…?
3.அப்படிக் கவரும் போது குருநாதரின் உயிராத்மா சுழற்சியின் நிலைகள் என்ன செய்கிறது…?
4.தன்னை அணுக விடாதபடி எப்படி விலகிச் செல்கிறது…? என்று அதை எனக்குக் (ஞானகுரு) காட்டி உணர்த்தவும் செய்தார்.

வெறும் துண்டு தான் குருநாதர் கட்டி இருப்பார். பெரும்பகுதி டிச்சிலேயே (DITCH) தான் படுத்திருப்பார். குளிர் காலம் என்று நல்ல ஒரு வேஷ்டியை எடுத்துக் கொடுத்தோம் என்றால் அதைக் கிழித்துக் காலிலேயும் கையிலேயும் கட்டிக் கொண்டு பாருடா… எவனோ கிழித்து விட்டான்…! என்பார்.

என்ன சாமி இப்படிச் சொல்கிறீர்கள்…! என்று கேட்டால் கிழித்து விட்டுப் போய்விட்டான் நான் என்ன செய்வது…? என்பார். படுத்திருந்தேன் கிழித்து விட்டான்…! என்பார்.

அவர் அசூசையைப் பற்றி நினைக்கவில்லை. இந்த உடலுக்குள் இருக்கக்கூடிய மெய் ஒளியைப் பற்றித் தான் சிந்தித்தார்.

பைத்தியம் போன்ற அவரின் செயல்களைக் காணும் போதெல்லாம் ஐயோ.. இவரிடம் சிக்கிக் கொண்டோமே… பெரிய தொல்லையாக இருக்கின்றதே…! என்று தான் எண்ணினேன்.

1.உடலை விட்டுப் போன பிற்பாடு பளீர்… பளீர்… என்று ஒளியின் தன்மை கொண்டு
2.மற்றதைத் தள்ளிக் கொண்டு அவருடைய ஆன்மா விண்ணுக்குப் போகிறது.
3.அப்படிப் போனாலும் இந்தப் பூமியின் பிடிப்பலைகளில் இந்த உயிராத்மா என்ன செய்கிறது பார்…? என்று
4,எல்லாவற்றையுமே எனக்கு முதலில் சொல்லிக் கொடுத்துவிட்டார்.

அன்றைக்கு ஞானிகளும் மகரிஷிகளும் எந்தெந்த நிலைகளில் செயல்பட்டார்கள்…? என்று அதையும் காட்டினார் குருநாதர்.

அதாவது உயிராத்மா வெளியிலே போனாலும்… தன் வலுவின் தன்மை கொண்டு பூமியின் ஈர்ப்புக்குள் வராது தடுத்தாலும்… அந்த உணர்வுக்கொத்த விழுதாக இருந்து பூமியிலிருந்து உயிராத்மாவை உந்தித் தள்ள வேண்டும்.
1.அதற்காக வேண்டித் தான் அவ்வளவு பெரிய ஆற்றல் பெற்றாலும்
2.சாதாரண மனிதரைத் தேடி ஞானிகள் வருகின்றனர்.

அவனுக்குள் வரும் இருளான துன்பத்தை நீக்கி விட்டு உடலிலே மகிழ்ச்சியை ஊட்டி… அவனிடமிருந்து வரும் நல்ல மூச்சைத் தனக்குள் சேர்த்துக் கொள்கின்றனர்.

ஒருவர் துன்பப்படுகின்றார் என்றால் இவன் (ஞானி) கஷ்டப்பட்டு பச்சிலைகளையும் மூலிகைகளையும் எடுத்து அவனுக்குக் கொடுத்து நோய்களை நீக்கி அவன் சந்தோஷப்பட வேண்டும் என்று செய்தார்கள்.

அன்று இதற்கெல்லாம் காசும் வாங்கவில்லை… ஒன்றும் வாங்கவில்லை.

ஒருவன் துன்பப்படுகின்றான் என்றால்
1.உடனே அவனுக்குள் நிவராணமாகும் அந்த உயர்ந்த சக்தியைப் பாய்ச்சி
2.அந்தத் துன்பமான உணர்வுகளை நீக்கி விட்டு மெய் ஒளியின் சுடராகப் பெருக்கச் செய்து
3.அவனுக்குள் மகிழ்ச்சியான எண்ணங்களைத் தோற்றுவிக்கச் செய்து
4.மருந்தைக் கொடுத்து நோயை நீக்கி அன்று சந்தோஷப்படுத்தினார்கள்.

இந்த மகான் நல்லது செய்தார் என்ற எண்ணத்தை ஏங்க வைத்து அதை ரசித்துத் தனக்குள் எடுத்து விண் சென்றார்கள்.

இன்று சகஜ வாழ்க்கையில் துன்பப்பட்டவரைப் பார்த்தோம் என்றால்
1.நாம் பாசத்தால் எடுத்துக் கொண்ட உணர்வுகள் நமக்குள் வேதனையின் தன்மை இங்கே வருகிறது.
2.ஒரு அசுரத்தனமான உணர்வு கொண்டு “அவன் கிடக்கட்டும்…” என்று எண்ணினால் அந்த உணர்வுகள் இவனுக்குள் விளைந்து அதே முரட்டுத் தனமான நிலைகள் கொண்டு சிக்கி அடிபடுகின்றான்.

ஆனால் அந்த மெய் ஞானியோ துன்பப்பட்டவனுக்குள் இருக்கும் விஷத்தின் தன்மையை நீக்கி… மகிழ்ச்சி ஊட்டும் உணர்வின் தன்மை அவனுக்குள் விளைய வைத்து… அந்த உணர்வின் ஆற்றலைத் தனக்குள் பெருக்கி… அந்த உணர்வின் நிலையாகத் தனக்குள் வளர்த்துக் கொண்டவன்.

ஏனென்றால் எந்த விஷமாக இருந்தாலும் அதைத் தனக்குள் அடக்கி ஒளியின் தன்மையாக மாற்றும் ஆற்றல் பெற்றவர்கள் தான் ஞானிகள்.
1.அவர்கள் தங்களுக்குள் விளைய வைத்த அந்த அரும் பெரும் சக்திகளைத் தான்
2.இங்கே உங்களுக்குக் குருநாதர் காட்டிய அருள் வழிப்படி கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

Leave a Reply