அருள் ஞானம் பெற வேண்டும் என்ற ஏக்கத்தில் வருவோருக்கு ஞானிகளின் உரச்சத்தை ஏற்றிக் கொடுக்கின்றேன்

அருள் ஞானம் பெற வேண்டும் என்ற ஏக்கத்தில் வருவோருக்கு ஞானிகளின் உரச்சத்தை ஏற்றிக் கொடுக்கின்றேன்

 

ஆரம்பத்தில் குருநாதர் காட்டிய வழியில் பாதரசத்தையும் பச்சிலை மூலிகைகளையும் வைத்துச் சில மணிகளைத் தயார் செய்தேன் (ஞானகுரு). அதை வைத்துச் சில சக்திகளை எடுக்கும்படியும் சொல்லியிருந்தேன்.

ஏனென்றால்… அந்த அருள் சக்திகளை எடுத்து உடலிலே ஒவ்வொரு மணியாக எடுத்து இறுக்கிக் கொண்டு வரவேண்டும்.
1.அப்படி வளர்த்துக் கொண்டால் நட்சத்திரமாக முழுமையடையும்.
2.ஆண் பெண் என்ற நிலையில் (கணவன் மனைவி) அருள் உணர்வுகளைச் சேர்க்க வேண்டும்.

இதை எல்லாம் தெளிவாக அறிவதற்குத் தான் காடுகளுக்கு அழைத்துச் சென்றார் குருநாதர்.

தாவரங்களின் இலைகளைப் பார்த்தோமென்றால் ஒரே செடியாகத் தான் தெரியும். ஆனாலும் அதிலே ஆண் செடி பெண் செடி என்று இருக்கும்
1.அதிலிருந்து ரசத்தை எடுக்க வேண்டும்… அதைச் சேர்த்தால்தான் இணையும்
2.இல்லாமல் போனால் அதைச் சேர்க்க முடியாது.
3.மருந்து வகைகளை எடுத்துக் கொண்டால் ஆண் செடி பெண் செடி என்று சேர்த்தால் தான் அந்தக் கரு உருவாகும்.
4.அப்படி உருவானால் தான் அது மருந்துக்கு (மருத்துவத்திற்கு) உதவும்.

அதைத்தான் சித்தர்கள் காப்பு கட்டி வைத்திருக்கிறார்கள் என்று சொல்வார்கள்… பல பொய்களைச் சொல்லி வைத்திருப்பார்.

மூகாம்பிகையில் நான் இருக்கும் பொழுது சில மணிகளைச் செய்து அங்கே கொடுத்துவிட்டு வந்தேன். இது எல்லாம் சூட்சும நிலைகள் கொண்டு அன்று செயல்படுத்தியது.

பல இடங்களுக்கும் சென்று குருநாதர் கொடுத்த சக்தியைச் சரியா… தவறா…? என்று அவர் சொன்ன முறைப்படுத்தித்தான் செயல்படுத்தியது.
1.இந்த உண்மைகளை எல்லாம் நீ தெரிந்து கொள்ள வேண்டும்.
2.இதைத் தெரிந்து கொள்ளாதபடி எங்கேயும் வெளி விடாதே…! என்று சொல்லி விட்டார்.

அதை எடுத்து எல்லா இடங்களும் சுற்றி அறிந்த பிற்பாடு அந்த ஞானிகளின் சக்திகளை ஒவ்வொருவருக்கும் எப்படிக் கிடைக்கச் செய்ய வேண்டும்…? என்று தெரிந்து கொண்டு அதன் வழிகளிலே இப்போது கொடுத்துக் கொண்டு வருகின்றேன்.

என்னை மற்றவர்கள் போற்ற வேண்டும் என்றால் நான் எதை வேண்டுமானாலும் செய்யலாம். பார்த்தீர்கள் என்றால் அடேயப்பா… சாமி எவ்வளவு பெரியவர்…! என்று கூட்டங்கள் அதிகமாக வரும்.

ஆனால் அந்தக் கூட்டம் எதற்கு வரும்…?

இப்பொழுதும் சில கூட்டங்கள் வரத்தான் செய்கிறது அந்த கூட்டங்களை நான் கழித்துக் கொண்டுதான் இருக்கின்றேன்.
1.உண்மையான நிலைகள் ஞானத்தின் வழித்தொடரைப் பெற வேண்டும் என்ற ஏக்கத்தில் வருபவர்கள் தங்கியிருப்பார்கள்
2.இந்த உடல் இச்சைக்கு என்று கேட்டு வருபவர்கள் கொஞ்சம் குறைத்தே தான் இருக்கும்

ஆனால் இந்த அருள் ஞான வழியில் வருபவர்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக அந்த ஞானிகளின் உரச்சத்தை ஏற்றி வளர்த்துக் கொண்டே இருப்பேன்

முழுமையாக உடலுக்கு வேண்டும் என்றும் இந்த வாழ்க்கைக்குத் தான் வேண்டும் என்று வருபவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக நான் கழித்து விடுவேன்.

ஆனால் உடலை வைத்துத் தான் நாம் அந்த அருள் சக்திகளை எடுக்க வேண்டும். அருள் ஞானத்தைப் பெற வேண்டும்.

நீங்கள் வளர்ந்தீர்கள் என்றால் மற்றவர்களும் அதைப் பெறக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கின்றது நீங்கள் வளர்ந்தால் தானே…!
1.நான் ஒருவன் வளர்ந்து என்ன செய்ய முடியும்…?
2.என் ஒருவனால் ஒன்றும் செய்ய முடியாது…!

நான் நினைக்கலாம் யானையைச் செய்வேன்… பூனையைச் செய்வேன்… என்று. அப்படி எல்லாம் சொன்னால் அது வெறும் திமிர் தான். அப்படி ஒன்றும் செய்ய முடியாது.

ஒரு நெல்லை எடுத்து விதைத்துப் பல நெல்களாக உருவாக்கி அந்த அருள் உணர்வின் தன்மையை எடுத்துச் சமப்படுத்த வேண்டும். அந்த உணர்வின் வலுவைக் கொடுத்து எல்லோரையும் பெறச் செய்ய முடியும்.
1.குரு கொடுத்து அது தான்…!
2.அதைத்தான் உங்களையும் செய்யச் சொல்கின்றேன்.

நான் அதைச் செய்தேன்… என்ற எண்ணத்திற்கு வந்துவிட்டால் பிறகு நானும் அந்த வளர்ச்சிக்குப் போக முடியாது… தீர்ந்துவிடும். ஆகையினால் நான் வளர வேண்டும் என்றால் நீங்கள் வளர வேண்டும் என்று நான் நினைக்க வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் எல்லோரும் பெற வேண்டும்… உங்கள் பார்வை அனைவரையும் நல்லதாக்க வேண்டும்… என்ற இந்த எண்ணம் என்றைக்கு நான் கொள்கின்றேனோ
நீங்களும் வளர்கிறீர்கள்…
நானும் வளர்கின்றேன்…
உலகத்தையும் வளர்க்க முடிகின்றது…
நானும் அந்த வளர்ச்சிக்குச் செல்ல முடிகின்றது.

Leave a Reply