நாம் சுவாசிப்பது எது…? நாம் சுவாசிக்க வேண்டியது எது…?

நாம் சுவாசிப்பது எது…? நாம் சுவாசிக்க வேண்டியது எது…?

 

பல கோடித் தாவர இனங்கள் வளர்ச்சிக்குப் பின் பல கோடி உயிரினங்கள் உருவாகி… உணர்வுக்கொப்ப உடல் பெற்று அதிலிருந்து உணர்வின் எண்ணங்கள் இன்றும் ஏராளமாக உண்டு.

1.மற்ற உயிரினங்கள் நுகர்ந்தது ஒரு உடலுக்குள் ஒரு உடல் ஐக்கியமாகி விடுகின்றது
2.ஆனால் மனித உடலுக்குள் உருவான உணர்வுகள் மிகவும் சக்தி வாய்ந்தது.

அதை எல்லாம் சூரியனின் ஒளிக்கதிர்கள் அந்தந்த உணர்வைத் தாங்கி இன்றும் அலைகளாக மாற்றிக் கொண்டே உள்ளது “சூரியனின் இயக்கச் சக்தியாக…”

சூரியனைப் போல் தான் நாம் உயிரின் தன்மையும்…!

நாம் எதை எல்லாம் நுகர்கின்றோமோ இந்த உயிரின் துடிப்பால் அதை இயக்கிக் கொண்டே உள்ளது… அணுவாக மாற்றிக் கொண்டே உள்ளது.
1.உடலை விட்டு உயிர் வெளியே சென்றாலும்
2.இந்த உடலின் தன்மை கரைந்தாலும்
3.உயிருடன் இந்த உணர்வுகள் நிலைத்தே இருக்கும்.

அதாவது… இந்த உயிருடன் நிலைத்து இருந்தாலும் இந்த உணர்வுக்கொப்ப உடல் இல்லை என்றாலும் உடலில் வேதனைப்பட்ட உணர்வுகள் அதிலே நிச்சயம் உண்டு.

ஒரு மனிதன் உடலுக்குள் இது சென்றால் அந்த உணர்ச்சியின் தன்மை கொண்டு அங்கேயும் அதே உணர்வாக இயக்கும்.

ஒரு இயந்திரத்தில் நாம் ஒரு நாடாவில் பதிவு செய்து கொள்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம்.

அதையே நீங்கள் எடுத்து மற்ற எந்திரங்களில் போடும் போது அந்த ஒலி அதிர்வுகளை எடுத்து ட்ரான்சாக்ஸன் கொடுத்து ஒலி/ஒளிப்பதிவைப் பதிவாக்கவும் ஒலி அலைகளைப் பெருக்குவதும் உணர்ச்சிகளைத் தூண்டுவதும் என்று பல செயல்களைச் செயல்படுத்துகின்றோம்.

ஒரு மைக்கின் (MIC) வழி கூடி நாம் சொல்வது போல…
1.இயந்திரமான இந்த உடலுக்குள் ஒரு மனிதனுக்குள் விளைந்த உணர்வை நுகரப்படும் போது
2.உயிரான காந்த ஊசியில் இந்த உணர்வலைகள் படர்ந்து அதன் மூலமாக
3.அந்த எண்ணங்களை அந்த உணர்ச்சிகளையும் நாம் அறிகின்றோம்.
4.அறிந்தாலும் இதை உயிர் உடலுக்குள் ஜீவ அணுக்களாக மாற்றி விடுகின்றது.

இந்த இயற்கை நிலைகளை எல்லாம் அறிந்தவன் அகஸ்தியன் அவனில் வெளிப்பட்ட உணர்வுகள் இங்கே உண்டு.

மனிதனாக வளர்ந்தவர்கள் தீமைகளை விளைய வைத்தாலும் சரி தீமையினுடைய உணர்வுகள் அவர்கள் உடலிலிருந்து வந்தாலும் சரி அடுத்தவர்கள் உடலுக்குள்ளும் ஊடுருவி… அங்கும் அது விளைந்து அதன் உணர்வுகள் இவ்வாறு பரவிக் கொண்டே தான் இருக்கின்றது… அழிவதில்லை…!

ஒரு மனிதன் தற்கொலை செய்து கொண்டான் என்றால் அந்த தற்கொலை செய்து கொண்ட உணர்வின் அலைகள் வெளிப்படும்போது
1.ஒரு மனிதன் பாசத்தால் அந்த உணர்வைக் கவர்ந்து கொண்டால்
2.அதே தற்கொலை செய்யும் உணர்வுகள் இங்கே தூண்டப்பட்டு
3.இவனையும் தற்கொலை செய்யும் நிலைக்கே அழைத்துச் செல்கிறது.

தற்கொலை செய்யும்போது… அவன் உடலை எப்படிச் சிதையச் செய்ததோ இதே உணர்வுகள் வெளி வந்தபின் இதே சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது.

எப்போது… எந்த மனிதன் சோர்வடைந்து… என்ன வாழ்க்கை…? என்று வெறுப்பு அடைகின்றானோ அப்பொழுது இந்த உணர்வுகள் ஊடுருவுகின்றது.

அதே உணர்வுகள்… அதே உணர்ச்சிகள் அவனை இயக்கி… அவனையும் தற்கொலை செய்யும்படி செய்கின்றது. அவனாக அதைச் செய்வதில்லை. (உள் புகுந்த அலைகள் தான் இயக்குகிறது)

இந்த உணர்வுக்கொப்ப அந்த உணர்வின் எண்ணங்கள் செயலாக்கி அவனை அறியாமலே அந்த உடலை தற்கொலை செய்ய இயக்குகின்றது.

அதைப் போலவே… தீமைகள் வரும்போதெல்லாம்
1.நாம் உயர்ந்த நிலைகள் பெற வேண்டுமென்று எண்ணி
2.அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் எடுத்தால்
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் நம் நினைவைச் செலுத்தி அதன் உணர்வை நாம் கவர்ந்தால்
4.நமக்குள் தீமையை அகற்றும் உணர்வின் வலுகூடும்.

ஏனென்றால் வலிமை கொண்ட உணர்வுகள் கொண்டு அதை அடக்கி விட்டால் நமக்குள் தீமையை அடக்கும் சக்தியாக மாறி… அந்த உணர்வின் ஞானமாக நமக்குள் இயக்குவதும்… நம் வாழ்க்கையைச் சீர்படுத்தவும் இது உதவும்.

நமது குருநாதர் இத்தகைய உண்மையின் உணர்வை அறிவதற்காக மலைக் காடெல்லாம் எம்மை (ஞானகுரு) அழைத்துச் சென்றார்.

1.மலைப்பகுதியில் அகஸ்தியன் பாதங்கள் பட்ட இடங்களில்
2.அவன் உணர்வுகளை அங்கே புவியில் ஈர்க்கப்படுவதும்
3.அவனின் உணர்வின் எண்ண அலைகள் அங்கே பரவியிருப்பதையும்
4.எந்தெந்த இடத்தில் எவ்வாறு அவன் செயல்படுத்தினானோ
5.அதன் நிலையெல்லாம் உணரும்படி செய்கின்றார்… உணர்த்தி வருகின்றார்

அந்த அலைகள் உலகம் எங்கிலும் கலந்துள்ளது. அதை நீங்களும் பெற வேண்டும்… பெறச் செய்ய வேண்டும் என்பதற்கே இந்த உபதேசம்.

Leave a Reply