
உடலைக் காக்க முற்படும் விஞ்ஞானத்தால் உடல் நோய் குறைந்தாலும் நஞ்சு அதிகரிக்கின்றது..!
நாம் காளானைச் சாப்பிடுகின்றோம். ஆனால் மருத்துவத்திற்காக என்று பல விதமான கெமிக்கலைக் கலந்து காளானை உற்பத்தி செய்கின்றார்கள்.
அதை ஊறலில் போட்டபின் அணுக்கள் உருவாகின்றது. எல்லாவற்றையும் உட்கொண்ட பின் அணுக்கள் கூட்டமாகின்றது. அப்படிப்பட்ட அணுக்கள் ஆனபின் அதை வடிகட்டி பெனிசிலின் மருந்தாக மாற்றுகின்றனர்.
அது கடுமையான விஷம் கொண்டது.
அந்த மருந்தை இரத்தத்தில் செலுத்திய பின் அந்த வீரிய உணர்வு உள்ளே சென்று ஒரு கடுமையான ஜுரமாகவோ அது நம்மைப் பாதிக்கக்கூடிய நிலை இருப்பதை இது ஊடுருவி அதை உணவாக உட்கொள்கிறது.
இவர்கள் கண்டுபிடித்த நிலையில் அந்த ஜுரம் அதிகமாக இருக்கிறது என்று மருந்தினைக் கொடுத்தாலும்…
1.நோயாளியின் உடலில் வேறு ஒரு மாற்று அணுவின் தன்மை வரும் போது மோதலில் இந்தக் காய்ச்சலும் விடாது இருக்கும்.
2.அதற்கு இந்தப் பெனிசிலின் என்ற மருந்தைச் செலுத்தினால் இது அதைக் (கிருமியை) கொல்வதற்கு மாறாக
3.நல்ல அணுக்களைப் புசிக்கும் தன்மையாகி அலர்ஜியாகின்றது.
சிலர் உடலில் எல்லாம் இந்த மருந்தைச் செலுத்திய பின் கொப்புளித்து விடும்.
விஞ்ஞான அறிவு கொண்டு குணப்படுத்த இவ்வாறு செய்தாலும் அதிலே ஒரு பங்கு அதிகமாகி விட்டால் மற்ற நல்ல வீரியத் தன்மைகளைக் கொன்று விடுகின்றது.
இதை எல்லாம் நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்குத்தான் வெளிப்படுத்துகின்றேன்.
துவாராக யுகத்தில் தீமையின் நிலைகளைத் தெரிந்து கொள்ளப்படும் போது இது போன்ற தீமையின் உணர்வை வென்ற அருள் உணர்வைப் பெற வேண்டும் என்பதற்காகவே உணர்த்துகின்றேன்.
ஏனென்றால் வாழ்க்கையில் வந்த சர்வ தீமைகளையும் வென்ற அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளான்.
அதிலிருந்து வரும் சக்திகளை நீங்கள் கவரும் வழிக்கு உபதேசித்து…
1.இதையும் சொல்லி அதையும் சொல்லும் போது
2.உங்கள் உடலுக்குள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கலவையாக்கி வரும் போது
3.நீங்களும் அந்த அகஸ்தியன் நீக்கிய நஞ்சை நீக்க முடியும்.
எத்தகைய நோயிலிருந்தும் நீங்கள் விடுபட முடியும்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.