கோலமாமகரிஷியால் ஆட்கொள்ளப்பட்ட ஆதிசங்கரரின் அருளாற்றலை எடுத்து வழி நடந்தால் ஆவி உலகத் தொடர்பிலிருந்து பூரணமாக மீளலாம் – ஈஸ்வரபட்டர்

adi shankaracharya

கோலமாமகரிஷியால் ஆட்கொள்ளப்பட்ட ஆதிசங்கரரின் அருளாற்றலை எடுத்து வழி நடந்தால் ஆவி உலகத் தொடர்பிலிருந்து பூரணமாக மீளலாம் – ஈஸ்வரபட்டர்

 

அன்றாட வாழ்க்கையில் ஆவியின் தொடர்பில்லாமல் வாழ்வது மிகவும் கடினமான நிலை. தன் எண்ணத்தைச் செயல்படுத்திட எந்த ரூபத்திலும் அவ்வாவி செயல்படுத்திடும்.

அவ்வாவியின் எண்ணமெல்லாம்…
1.தான் முன் ஜென்மத்தில் விட்டு வந்த குறையை
2.எந்தெந்த நிலையில் யார் யார் மேல் அன்பு பாசம் ஆசை குரோதம் வெறுப்பு விருப்பு கொண்டு வளர்ந்ததோ
3.இவை எல்லாவற்றையுமே எந்த ரூபத்திலும் அந்த எண்ணத்திற்குகந்தவர்கள் கிடைத்தவுடன்
4.அவர்களின் உடலில் எப்பாகத்திலும் ஏறி அவர்கள் எண்ணத்துடனே கலந்து தன் நிலையைச் செயல்படுத்திக் கொள்ளும்.

நம் குடும்பத்தில் இருந்து பிரிந்து சென்ற ஆவிகள் மட்டும் நம்மை வந்து காத்துச் செயல்படுத்தும் என்பதல்ல. இவ்வுலகில் சுற்றியுள்ள எந்த ஆவியும் தன் எண்ணத்தைச் செயல்படுத்திடத் தனக்குகந்த உடலை எடுத்துக் கொள்கின்றது.

ஆவியின் நிலை இந்நிலையில் உள்ளதினால் இதை உணர்ந்த ஜெபம் கண்ட நம் முன்னோர் பலர் இந்நிலையிலிருந்து மக்களை மீட்கத்தான் பல வழிகளை நமக்கு உணர்த்தினார்கள்.

இவ்வுலகம் முழுவதுமே ஆண்டவன் என்றால் யார் என்று சொல்கிறார்கள்…?

ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு நிலைப்படுத்தித் தான் வணங்கும் பக்தியைக் கொண்டே அவர்களுக்கு உகந்த நிலையை ஆண்டவனாக்கி வணங்குகின்றார்கள்.

அனைத்து உலகிலுமே இவ் ஆவி என்னும் பயந்த கிலி நிலை பரவித்தான் உள்ளது. பலரின் கண்களுக்கு ஆவியின் நிலை புலப்படுவதையும் கேட்டிருப்பீர்.

சில நிலைகளில் ஆவியின் நிலையையே ஆண்டவனாக வணங்குகின்றார்கள். சக்தி நிலையறிந்து சக்தியான அவ்வாண்டவனைக் கண்டவர்கள் யார் உள்ளார்கள்…?

நம் ரிஷிகள் எல்லாரும் நம்மை இவ்வாவியின் நிலையில் இருந்து தப்ப பல ஜெப வழிகளை நமக்குணர்த்தி அச்சக்தியிலிருந்து தான் பெற்ற பல நல் உணர்வுகளை நமக்கு ஊட்டினார்கள்.

அந்த நிலையில்தான் கோலமாமகரிஷி அவர்கள்…
1.தன் ஜெபத்தை… தான் பெற்ற அருள் செல்வத்தை…
2.அனைவரும் உணர்ந்து நல் வழிக்கு மக்களைச் சீர்படுத்த ஆதிசங்கரரின் உடலில் அவர் நிலையை ஏற்றி
3.ஆதி சங்கரரையே அனைவரும் தெய்வமாகக் காணும் நிலைக்கு
4.அவர் உடலில் இவர் இருந்து பல செயல்களைச் செய்து வந்தார் ஆதிசங்கரரின் ரூபத்திலேயே.

அவர் சொல்லி வந்த உபதேசங்களை வழி நடத்திட பல இடங்களில் பல மடாலயங்கள் அமைத்தார்கள். அந்நிலையையே வழி வழியாய் இன்று மக்களுக்கு உணர்த்துவதற்காக சங்கராச்சாரியார்கள் என்று மத வழியை அவ்வழியில் புகட்டி வழி நடத்தி வருகின்றார்கள்.

நல்வழியில் வந்த நிலைதான் ஆதிசங்கரரின் நிலை. ஆனால் அனைவரையும் ஒன்று போல் எண்ணும் நிலைக்கு இல்லாமல் மாறியதின் நிலை இன்றுள்ள நிலை.

1.பக்தி மணம் உள்ளது
2.பக்தி மணத்தில் எல்லா மணமும் ஒன்றே என்னும் ஒரே மணத்தைப் பரப்பிவிடாமல்
3.அம்மணத்துடன் சிறு விஷமான மணமும் கலக்கவிட்டு விட்டார்கள்.

இந்நிலையில் சிறிதளவு மாற்றும் தன்மை இன்று வந்தாலும் அவர்கள் வழியிலேயே உலகத்தையே தெய்வ மணமாக்கிடலாம்.

இவ் ஈஸ்வரபட்டனாகிய நான் இக்கலியின் ஆரம்பத்தில் ஓர் உடலை ஏற்று இப்பக்தி மணத்தைப் பரப்பியதுவும் ஜாதி நிலையில் இருந்துதான். ஜாதியின் மதத்தின் நாமத்தைச் செப்பிட விரும்பாததினால் இந்நிலையில் செப்பவில்லை நான்.

வழி வழியாய் வந்த வினைதான் இவ்வினை. நாமாக ஏற்ற நிலையல்ல. நாமாக மீளும் நிலையைத்தான் இனி அனைவரும் எண்ணத்தில் கொண்டு செயல்படுத்திட வேண்டும்.

ஆதி சங்கரராய் வணங்கிடும் கோலமாமகரிஷி அவர்கள் இன்றும் உள்ளார். என்றும் இருப்பார்…!

இன்று அவர் நடத்திச் சென்ற வழியில் வந்த சங்கரர் வழியில் இருந்திடும் பல ஜெபங்கள் செய்து பூஜிப்பவர்கள் அவருடன் தொடர்பு கொள்ள வேண்டுமென்றால்…
1.அவரிடத்திலுள்ள சிறு கறையையும் நிறைவாக்கி ஜெபம் பெறும் பொழுது
2.அந்த ரிஷிகளின் தொடர்பு பெற்று… இன்று மகான் என்ற இன்றுள்ள மனிதர்களால் நாமம் பெற்றவர்கள்
3.சப்த ரிஷிகளின் சொல் நாமத்தை ஏற்றிடலாம்.

மாமகான் என்ற நாமத்துடனே பல ரிஷிகளுடனும் கலந்திடலாம் இப்பாக்கியத்தை எண்ணி வழியமைத்து வந்திட்டாலே…!

Leave a Reply