சூரியனின் அழிவு எப்படி ஏற்படுகிறது…? அழியக் காரணம் என்ன..?

New planets

சூரியனின் அழிவு எப்படி ஏற்படுகிறது…? அழியக் காரணம் என்ன..?

 

நமது சூரியக் குடும்பத்தில் உள்ள 27 நட்சத்திரங்களில் கார்த்திகை நட்சத்திரம் ரேவதி நட்சத்திரம் என்றூ இப்படி ஒரு நான்கு நட்சத்திரங்கள்
1.நம் சூரியன் எபப்டித் தனக்கென்று கோள்களை வளர்த்து நட்சத்திரங்களை வளர்த்து தனித்தன்மை ஆனதோ
2.இதைப் போல் இதிலே வளர்ச்சி அடைந்த இந்த நட்சத்திரங்கள் அனைத்தும்
3.இந்தச் சூரியனைப் போல ஒரு பிரபஞ்சத்தை உருவாக்கி நகர்ந்து போய்க் கொண்டிருக்கின்றது.

நம் குடும்பத்தில் பெரியவர்கள் வளர்ந்தோம் என்றால் கல்யாணம் ஆகிப் போய்விட்டால் அப்பா அம்மா தாத்தா பாட்டி எல்லாம் காணாமல் போய்விடுகின்றார்கள்.
1.கொள்ளுப் பேரன் ஆன பிற்பாடு தாத்தாவையோ பாட்டியையோ நாம் உயிருடன் பார்க்க முடிகின்றதா…?
2.அப்படியே பார்த்தாலும் கவனிப்பதும் இல்லை.

இதே மாதிரி இந்த நட்சத்திரங்கள் தனக்கென்று அந்தப் பிரபஞ்சத்தை உருவாக்கி விட்டால் இந்தச் சூரியனைக் கவனிப்பதில்லை. அது தன் வளர்ச்சியிலே பெருக ஆரம்பித்துவிடுகின்றது.

27 நட்சத்திரங்களும் அது சூரியனாக மாறும் பொழுது ஏற்கனவே இருந்த சூரியனுக்கு உணவு கிடைக்கவில்லை என்றால் அது அழிகிறது.

நம்முடைய உடல் அழிந்த பின் உடலைப் புதைத்தாலும் சரி உடலை உருவாக்கிய அணுக்கள் இந்த உடலையே உணவாக உட்கொண்டு வெளியே வந்துவிடுகின்றது.

1.முதலில் அணுக்களாக இருந்தது
2.அது உயிரணுக்களாக மாறும் தன்மை வருகின்றது
3.பின் அதனதன் உணர்வுகளை இரைகளைத் தேடி அதனின் வளர்ச்சிகள் பெறுகிறது.

மனித வாழ்க்கையில் இறந்த பின் எப்படி உடலை உருவாக்கிய அந்த அணுக்கள் மற்றதுடன் சேர்த்து அதை உணவாக எடுத்து வளரும் தன்மை வருகின்றதோ இதைப் போல் தான் அந்த நட்சத்திரங்கள் தனியாகப் பிரப்ஞ்சமாக ஆன பின்
1.இந்தச் சூரியன் அழிந்த சக்தி
2.ஒரு புயல் போல் இருக்கும்.

அதிலே ஏதாவது ஒரு கோளோ மற்றது பாறையாக உள்ளது அதற்குள் சிக்கினால் மீண்டும் ஆவியாக மாற்றி அதைத் தனது நிலைகள் பரப்பும். இந்தப் பிரபஞ்சங்கள் ஒவ்வொன்றும் தனது ஈர்ப்பு வட்டத்தில் அதை வளர்த்து இதே போல் நட்சத்திரங்கள் அது கவர்ந்து அந்தந்தப் பிரபஞ்சத்திற்கு அது உணவாக ஊட்டுகின்றது.

இதை எல்லாம் பார்த்துத் தான் சொல்கிறேன்.

1.குருநாதர் அவர் பார்த்த உண்மைகளை
2.அந்த அகண்ட அண்டத்தை உன்னாலும் நுகர முடியும்..! பார்க்க முடியும்..! என்றார்.
3.அதை எல்லாம் நீங்களும் பார்க்க முடியும்.

எண்ணத்தின் வலு கொண்டு உணர்வின் தன்மை உங்களுக்குள் பதிவாக்கப்படும் பொழுது இதிலே நீங்கள் வளர்ச்சி அடைய அடைய நம் பிரபஞ்சமும்… நம் பிரபஞ்சத்திற்கு மற்ற பிரபஞ்சத்திலிருந்து உணவு எப்படிக் கிடைக்கிறது…? என்ற நிலை “எல்லாமே” நீங்கள் அறிய முடியும்.

கல்வி அறிவில்லாதவன் நான் (ஞானகுரு) இத்தனையும் பேசுகிறேன் என்றால் படித்தவர்கள் நீங்கள் பதிவு செய்து குறித்து வைத்துக் கொண்டு எளிதில் எடுக்கலாம்.
1.எனக்குக் குறித்து வைக்கக்கூட நேரமில்லை.
2.மனதில் பதிய வைத்ததைத்தான் சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

வாழ்க்கையில் வருவது எனக்கு நினைவில்லை. ஆனால் குருநாதர் கொடுத்த அந்தப் பேரருள் தான் இங்கே பதிவான பின் நினைவு கொண்டு அந்த உணர்வை எல்லாம் நான் அறிய முடிகின்றது.

இந்த உணர்வின் தன்மை வெளிப்படும் பொழுது செவி கொண்டு கேட்ட பின் நீங்கள் நுகர்ந்தறிந்து அந்த உணர்வின் கருவாக அது உங்களுக்குள் உருவாகின்றது.

1.நான் சொல்வதைக் கூர்ந்து கவனிக்கும் உணர்வுகள் ஊழ்வினை என்ற ஞான வித்தாக உங்களுக்குள் உருவாகின்றது.
2.நீங்கள் இதை வளர்த்துக் கொண்டால்
3.நான் எதை எல்லாம் பார்த்தேனோ அதை எல்லாம் நீங்கள் காட்சியாகக் காண முடியும்.

தீமைகளை அகற்றும் வல்லமையும் நீங்கள் பெற முடியும்…! அந்த அருள் உணர்வை உங்களுக்குள் பெருக்கி இனி பிறவி இல்லா நிலையும் அடைய முடியும்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply