
நன்மைகள் செய்யத் துணிவோம்
இயற்கையின் நியதிகளில் நம்மை அறியாது தீமைகள் எப்படி ஆட்டிப் படைக்கின்றது என்ற நிலையும் பல கோடிச் சரீரங்கள் எடுத்து இன்று மனிதனான பின் நமது எல்லை அந்தச் சப்தரிஷி மண்டலம் தான்…! என்ற நிலையும் பல முறை உபதேசித்திருக்கின்றோம் (ஞானகுரு).
இதன் வழிகளில் ஒவ்வொரு குடும்பத்திலேயும் நாம் அமைதி கொண்டு வாழ்வதும் நம் குழந்தைகளை எப்படி நல்வழிப்படுத்த வேண்டும் என்ற உணர்வினையும் எடுக்க வேண்டும்.
1.“நாம் அனைவரும் ஒரு குடும்பம்…” என்ற நிலைகளில் உயர்ந்த பண்புகளை வளர்த்து ஒருவரை ஒருவர் மதித்து நடந்து
2.குரு வழியில் நாம் வழி நடத்திச் செல்லவும் வேண்டும்.
ஒவ்வொரு குடும்பமும் உயர்ந்து வரவும் அதற்காக வேண்டித் தியானித்து அந்தக் குடும்பங்கள் நலம் பெறுவதைக் கண்டு நாம் மகிழ்ச்சி பெறும் அந்தச் சக்தியும் பெற வேண்டும்.
1.நமது குருநாதர் ஈஸ்வரபட்டர் நமக்கு எவ்வளவோ புதையலைக் கொடுத்திருக்கின்றார்.
2.நாம் அந்த அருள் உணர்வை எடுத்து வளர்த்துப் பிறவியில்லா நிலை அடைய வேண்டும்.
அந்தச் சக்தியை பெறுவதற்குண்டான நிலையைத்தான் குரு வழியிலும் உங்களுக்குள் பதியச் செய்து கொண்டேயிருக்கின்றோம்.
1.மனிதனின் வாழ்க்கையில் நாம் எப்படி வாழ வேண்டும்…?
2.நமக்குள் எதை எதை எல்லாம் செயல்படுத்த வேண்டும்..?
3.நம் குழந்தைகளை எப்படி வளர்த்தல் வேண்டும்..?
4.நமது எல்லை எது…? என்ற நிலையையும் ஒருவருக்கொருவர் சொல்லி
5.நம்மைச் சார்புடையோர் புதிதாக வருவோர்க்கும் இதை எடுத்துச் சொல்லி ஒவ்வொரு குடும்பத்திலேயும் இதைத் தெளிவாக்கி
6.மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெற்று அவர்கள் குடும்பங்கள் எல்லாம் நலம் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
7.உங்கள் உயிரைக் கடவுளாக்கி
8.நல்ல உணர்வைத் தெய்வமாக்கி அதையே குருவாக்கி
9.உங்கள் வாழ்க்கையில் பேரின்பப் பெருவாழ்வு வாழும் நிலையைப் பெறுங்கள்.
நாம் எந்த இடங்களுக்குச் (மற்ற ஊர்களுக்கு) சென்றாலும் அங்கு வாழ்பவர்களுக்கும் ஒருவருக்கொருவர் நாம் வளர்ந்த நிலைகளை எடுத்துச் சொல்லி அவர்களையும் அருள் வழியில் வளர்க்க வேண்டும்.
இதை நாம் முறைப்படுத்தி வந்தால் திருந்தக்கூடிய நிலைகளை நாம் அடைகின்றோம். உங்களப் பார்க்கும்போது அந்த உயர்ந்த மரியாதை கொடுக்கும் நிலைக்கு வளர்ந்திடவேண்டும். அதை நாம் வளர்த்தல் வேண்டும்.
1.சிலர் இதற்குள் வந்து தவறுகள் நிகழ்த்தாது பாதுகாத்தல் வேண்டும்.
2.ஏனென்றால் இன்று நல்லைதை வளர்ப்பதைக் காட்டிலும்
3.தீமைகள் நம்மை அழித்திடாதபடி பாதுகாப்பதே மிகவும் முக்கியமாக இருக்கின்றது.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.