ஜீவான்மாவைத் தூய்மையாக்கும் வழி
வேதனை கோபம் ஆத்திரம் என்ற அணுக்கள் நம் உடலுக்குள் அதிகமான வளர்ச்சி அடைந்தால் கடுமையான நோய்கள் வரும்.
தேடிய செல்வம் எது இருப்பினும் வைத்தியத்திற்குச் செலவழித்து உடலைப் பாதுகாத்தாலும்
1.உங்கள் உடலில் அந்தக் கடைசி நிமிடம் எது உணர்வோ
2.அதன் வழி இந்த உயிர் அழைத்துச் சென்று வேறொரு உடலை அதாவது கீழான பிறவியாக மாற்றிவிடும்.
ஆகவே இந்த உடலில் இருக்கும் பொழுதே துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை வளர்த்து வளர்த்துப் பிறவியில்லா நிலை அடைவதே நம்முடைய கடைசி எல்லையாக இருக்க வேண்டும்.
ஒவ்வொரு நாளும் வாழ்க்கையில் வரும் கஷ்டங்களையோ நஷ்டங்களையோ எண்ணி வளர்க்கக் கூடாது.
1.பிள்ளை சொன்னபடி கேட்கவில்லை என்று வேதனைப்படுவதோ
2.தொழிலில் சிறிது குறைபாடுகள் இருந்தாலோ
3.குடும்பத்தில் ஒற்றுமை இல்லாதிருந்தாலோ
4.அதைப் போன்ற மற்ற உணர்வுகளை நுகர நேர்ந்தாலோ உடனே அதை எல்லாம் மாற்றிப் பழக வேண்டும்.
5.எதை வைத்து…? – நம் ஆறாவது அறிவை வைத்து.
ஆறாவது அறிவு “கார்த்திகேயா…!” என்றாலும் அது சேனாதிபதி. இந்த ஆறாவது அறிவின் துணை கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நுகர வேண்டும்.
1.புருவ மத்தியில் உயிரின் நிலைகளில்
2.அதை இணைக்கப் பழகிக் கொள்ள வேண்டும்
வாழ்க்கையில் வரும் மற்ற உணர்வுகளைக் கண் வழி கவர்ந்தாலும்
1.கண்ணின் நினைவை உயிரிலே இணைக்கப்படும் பொழுது
2.உயிர் வழி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஈர்க்கும் திறன் வரப்படும் பொழுது
3.மூக்கு வழி செல்லும் (சுவாசத்தின் மூலம்) தீமையான உணர்வுகளைத் தடைப்படுத்துகின்றது.
பின் நம்முடைய நினைவாற்றலை உடலுக்குள் செலுத்தி துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எல்லா அணுக்களுக்கும் செலுத்தப்படும் பொழுது அதுவும் வலுப் பெற்றுவிடுகின்றது.
1.நம் உடலுக்கு முன் முகப்பில் உள்ள விஷத் தன்மைகளைத் தூர ஒதுங்கிச் செல்லும்படித் தள்ளிவிடுகின்றது.
2.நம் ஆன்மா தூய்மையாகி விடுகின்றது.
அதே சமயத்தில் நம் உடலுக்குள் இருக்கும் ஜீவ அணுக்கள் ஒவ்வொன்றுக்கும்
1.ஒரு ஆன்மா உண்டு.
2.ஒரு வட்டம் உண்டு
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வால் அப்பொழுது அந்த ஜீவான்மாக்களும் சுத்தமாகின்றது.
4.அந்த அணுக்கள் எல்லாம் உயிரைப் போலவே ஒளியின் அறிவாக ஒளியான அணுக்களாக வளர்ச்சி பெறும் சக்தி பெறுகின்றது.
அப்பொழுது அந்த உணர்வுகள் முழுவதும் ஒளியாக்கப்படும் பொழுது உயிருடன் இணைந்து பேரொளியாக மாறுகின்றது.
இப்படி நம் உடலில் இருக்கும் எள்லா அணுக்களையும் சிறுகச் சிறுக மாற்றி இந்த உடலுக்குப் பின் நாம் ஒளியின் உடலாக மாறுவதே கடைசி நிலை.
நாம் எந்தத் துருவத்தின் வழி துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்தோமோ அதன் ஈர்ப்புக்கே நம்மை அழைத்துச் செல்லும் நம் உயிர்.