நம் உயிரையும்… ஈஸ்வரபட்டரையும்… “நேரடியாக இணைக்கும் பாடல்…!”
யாரெல்லாம் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் உணர்வுகளை ஞானகுரு மூலம் உபதேச வாயிலாகப் பதிவு செய்துள்ளார்களோ இன்றும் பதிவு செய்து கொண்டுள்ளார்களோ அவர்களுக்கு இந்தப் பாடல் மிகப் பெரிய வரப்பிராசதம்.
என்னுள் நிறைந்திருந்து…
என்னை ஆள்பவனே குருதேவா… குருதேவா…!
என்னுள் ஆத்ம பேரொளி கண்டிடவே…
எனக்கருள் செய்வாய் குருவே…!
எனக்கருள் செய்வாய் குருவே… குருவே…!
எனக்கருள் செய்வாய் குருவே… குருவே…!
என்னுள் அனைத்து அணுவும் குருவே
என்னுள் அனைத்து அணுவும் குருவே…!
நின்னருள் பெறவே எனக்கருள் செய்வாய் குருவே…! குருவே…….!
தினம் தினம் உன்னை மறவாதிருக்க…
தினம் தினம் உன்னை மறவாதிருக்க…
எனக்கருள் செய்வாய் குருதேவா…! குருதேவா…!
நின்னருள் என்றும் எனக்குள் நிலைத்திருக்க…
அருள்வாய் குருவே…! அருள்வாய் குருவே…! அருள்வாய் குருவே…!
உடல் உள்ளவரை… உனை மறந்திடாதிருக்க அருள்வாய் குருவே…
உனை மறந்திடாதிருக்க அருள்வாய் குருவே… குருவே…!
கோள்கள் மாறினாலும்…
கோள்கள் மாறினாலும்…
என் உணர்வுகள் அனைத்தும் உன்னை மறவாதிருக்க…
அருள்வாய் குருதேவா… குருதேவா…! குருதேவா…!
புருவ மத்தியிலிருக்கும் நம் உயிரையும் விண்ணிலே சப்தரிஷி மண்டலத்தில் ஒளியின் சரீரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரையும் நம்மிடம் நேரடியாக இணைக்கச் செய்யும் பாடல் இது.
நம் எல்லோருடைய உயிரிலும் விண் சென்ற அந்த மாமகரிஷியின் அருள் உணர்வுகள் இணைய வேண்டும் என்பதற்குத்தான் ஞானகுரு இந்தப் பாடலைப் பாடுகிறார்.
பெரும் பகுதி இந்தப் பாடலை அவருடன் (AUDIO) சேர்ந்து பாடும் பொழுது என் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் வருவதைப் பல தடவை அனுபவித்திருக்கின்றேன்.
அப்பொழுது மனதிற்குள் இருக்கும் அனைத்தும் இறுக்கமான உணர்வுகளும் அகன்று
1.“நான் உன்னுடன் என்றும் இருக்கின்றேன்…” என்று
2.உயிருடன் கலந்த உணர்வாக குருவின் உணர்வுகள்
3.மன பலம் ஊட்டியதைப் பல முறை அனுபவித்திருக்கின்றேன்.
இது என்னுடைய அனுபவம்
கீழ்க்கண்ட இணைப்பை (LINK) உபயோகித்து ஞானகுரு பாடிய பாடலைக் கேட்கலாம். பதிவிறக்கமும் (DOWNLOAD) செய்து கொள்ளலாம்.
https://app.box.com/s/pesao7meu6y6en5bs7q1