
உடலிலுள்ள இரத்தத்தைப் பரிசுத்தப்படுத்தும் தியானம் (DIALYSIS)
மனிதனின் வாழ்க்கையில் பிறரின் செயல்களைப் பார்க்க நேர்கின்றது.
1.கோபப்படுவோரை
2.நோய்வாய்ப்படுவோரை
3.வேதனைப்படுவோரை
4.வேதனைப்படுத்துவோரைப் பார்க்கும் பொழுதெல்லாம் நம் உடலில் “ஊழ்வினை என்ற வித்தாகிவிடுகின்றது”.
எந்தந்த குணத்திற்குத்தக்க உணர்வுகள் நம் இரத்தநாளங்களில் கலக்க ஆரம்பித்துவிடுகின்றது.
அப்பொழுது நம் உறுப்புகளில் இருக்கும் நுரையீரல் கல்லீரல் கிட்னி போன்ற உறுப்புகளில் இரத்தம் சுழன்று வரும் பொழுது மற்ற ஈரல்களில் அந்த உறுப்புகளில் உள்ள நல்ல அணுக்கள் விஷத்தின் தன்மையால் சோர்வின் தன்மை அடைகின்றது. அதனின் இயக்கங்களும் குறைகின்றது.
ஏனென்றால், “இரத்தத்தில் அதற்கு வேண்டிய உணர்வு (உணவு)” கிடைப்பதில்லை. அது உடனே வாடிவிடுகின்றது அல்லது மடிய வைத்துவிடுகின்றது.
மடிந்துவிட்டால் அந்த உறுப்புகள் சீர்கெட்டுவிடுகின்றது. நாம் தவறு செய்யவில்லை.
ஆகவே நம் இரத்தத்தை அவசியம் பரிசுத்தப்படுத்த வேண்டும். இந்தத் தியானத்தைச் செய்யுங்கள் உங்களுக்குப் பூரண குணம் கிடைக்கும். டயாலிசிஸ் (DIALYSIS) செய்தது போல் ஆகிவிடும்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.