தியானத்தின் மூலம் நாம் வளர வேண்டிய முறை

வாழ்க்கையே தியானம்.

தியானத்தின் மூலம் நாம் வளர வேண்டிய முறை

உயிரே கடவுள் என்று நாம் சொன்னால் கடவுள் தான் உயிர் என்று எழுதி  வைத்து விடுகின்றார்கள்.

இந்த காப்பி அடித்து அந்த உண்மைப் பொருளை தெரிவதற்கு இல்லை. ஆனால் அதை உயிரே கடவுள் என்றால் கடவுள் தான் உயிர் என்ற நிலைக்கும் மாற்றி சில நிலைகளை வெளிப்படும் நிலைகள் தான் அது.

ஆனால் பொருள் கண்டு தனக்குள் அறிந்தோ தன் உணர்வின் தன்மையை அந்தக் குரு மூலமாகவோ அறிந்தோ சொல்வதில்லை.

ஆக இதைப் போல அதை
1.முதலில் தனக்குள் படித்துப் பார்க்க வேண்டும்.
2.அதனின் இயக்கத்தை அறிந்து கொள்ள வேண்டும்.
3.அது சொல்லாக வர வேண்டும்.

ஆக இதை எல்லாம் பனிரெண்டு வருடங்கள் அனுபவித்தபின்தான் பின் புறநிலைகள் எழுப்புவதும் அக நிலைகளுக்குள் எப்படி இயக்குகின்றது என்று இந்த உடலுக்குள்

எப்படி விளைகின்றது எப்படி மாற்ற வேண்டும் என்று எமது குருநாதர் உணர்த்தினார். இந்த நான் சும்மாஇருக்கிறது, இந்த மாதிரி ஜாலியா நான் சுற்றிக் கொண்டு இருந்தவன்தான்.

அப்போது இதைஎடுத்து கஷ்டப்படச் செய்து இது எல்லாம் தெரிந்து கொண்ட பிற்பாடு தான் இது விளைந்ததை இப்போது நான் உங்களிடம் சொல்வது.

ஆகவே இதை எல்லாம் பெற வேண்டும் என்று எண்ணினால்தான் எனக்கே சத்து  என்று குருநாதர் சொல்லி விட்டார்.

எதை? நீங்கள் எல்லாம் அந்த ஞானிகள் பெற்றது போல உங்கள் வாழ்க்கையில் உங்களை அறியாத இருள்கள் நீங்கி மெய் ஒளிகள் பெற வேண்டும் என்று
1.அவர்களை எண்ணிப் பிரார்த்தனை செய்
2.அவர்களுக்குப் பெற வேண்டும் என்று எண்ணு
3.அப்போது அந்த உணர்வு தான் உனக்குள் விளையும் என்று சொன்னார்.

அதையேதான் உங்களிடம் சொல்வது. இதை
1.நீங்கள் இதே மாதிரி சொல்லிக் கொண்டு வாருங்கள்
2.சொல்லிக்கொண்டே வரப்போகும் போது நிச்சயம் நீங்களே விளைகின்றீர்கள்.
3.நாமும் அங்கே போய்ச் சேர்கின்றோம்.

ஆக நமக்குள் நாம் நாம் இடக்கூடிய நம் மூச்சலைகள் இங்கே படரும்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply