ஊசி மருந்து மூலம் மனிதனை ஆயிரம் வருடம் வாழ வைக்கலாம் என்று விஞ்ஞானம் சொல்கிறது…

life cycle

ஊசி மருந்து மூலம் மனிதனை ஆயிரம் வருடம் வாழ வைக்கலாம் என்று விஞ்ஞானம் சொல்கிறது…

மற்ற உயிரினங்களின் செல்களை எடுத்து மாற்றி மாற்றி 1500 ஆண்டுகள் வாழக்கூடிய மனிதனை உருவாக்க முடியும் என்று முயற்சிக்கின்றார்கள்.

1500 ஆண்டுகள் வாழ்ந்தாலும்…! தனது குழந்தைகள் மற்ற உறவினர்கள் மீது பாசம் இல்லாமல் இருக்க முடியுமா?

வாலிபராக ரோட்டில் நடந்து செல்லலாம். விபத்து ஒன்றை நேரிடையாகவே காண்கிறோம். அல்லது இன்று டி.வி. இன்டெர்னெட்டில் நேரிடையாகவே விபத்தின் கொடுமைகளைக் காட்டுகின்றார்கள்.

விபத்து ஒன்றைக் காணும் பொழுது “அதிர்ச்சி…” என்ற உணர்வை உடலில் பரவச் செய்கின்றது.

ஒரு பக்கம் இழுத்தால் ஒரு பக்கம் வளர்கின்றது. மற்றொன்றின் நிலைகள் வரப்படும் பொழுது “போராடுகின்றது”. அதன் பிறகு
1.1500 வருடமும் போராடிப்… போராடி…!
2.ஊசி மருந்தைச் செலுத்திச் செலுத்தி….! வாழ்க்கைக் காலத்தை ஓட்டலாம்.

வாலிபத்தைப் பெருக்க இறந்த குழந்தையின் மூளையிலிருந்து திசுக்களை எடுக்கின்றனர். இன்னொரு உடலில் சேர்த்து முதுமையாக இருக்கும் மனிதனை இளமையானவனாக மாற்றுகின்றார்கள்.

“இவ்வளவும் செய்து…” உடலுக்காக வாழ்ந்தாலும் உடலை விட்டுப் பிரிந்தால் எங்கே செல்ல முடியும்?

கெமிக்கல் கலந்த உணர்வுகள் நம் உயிராத்மாவில் பெருகி மீண்டும் மனித உடல் பெறாத நிலைகள் விஷத் தன்மை கொண்ட உயிரினங்களாகப் பிறக்கச் செய்துவிடும் உயிர்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் மனிதர்கள் நாம் மீள
1.நம் உயிரில் நஞ்சு கலக்காதபடி பாதுகாக்கும் நிலைக்குத்தான்
2.நஞ்சை வென்று உணர்வை ஒளியாக மாற்றிய
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகரும்படிச் செய்கின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியால் நான் உடல் நலம் பெறவேண்டும் நோய் நீக்கிடும் ஆற்றல் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

மருந்து மாத்திரை உட்கொள்ளும் பொழுது துருவ நட்சத்திரத்தின் உணர்வை எண்ணிவிட்டு எடுத்துக் கொண்டால் அந்தக் கெமிக்கல் கலந்த நஞ்சு நம் உயிராத்மாவில் சேராதபடி தடுத்துக் கொள்ள முடியும்.

ஆகவே உடல் நலமும் பெறுகின்றோம். நஞ்சு நமக்குள் சேராதபடியும் தடுத்துக் கொள்கின்றோம்.

எவ்வளவு பணம் செலவழித்தாலும் இந்த உடலை நம்மால் காக்க முடியாது. உடலை விட்டு ஒரு நாள் போய்த்தான் ஆக வேண்டும்.

ஆனால் அந்தக் குறுகிய காலத்தில் அருள் உணர்வுகளை நமக்குள் விளைய வைத்துக் கொண்டால் அத்தகைய சந்தர்ப்பமாக மாற்றிக் கொண்டால் நம் உயிராத்மா அழியா ஒளியின் சரீரம் பெறும்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply