
ஞானப் பாதையில் மெய் ஞானிகளைப் பற்ற (பிடித்துக் கொள்ள) வேண்டிய முறை
மேலை நாட்டில் இது நடந்த நிகழ்ச்சி. ஒரு சிறுவன் பாலத்தில் இருந்து தவறிக் கீழே விழுந்து விட்டான். கீழே விழுகும் பொழுது ஒரு கம்பியைப் பிடித்து அனாதையாக மூன்று நாள் தொங்கிக் கொண்டே இருக்கின்றான்.
அதை விட்டு விட்டால் கடலில் தான் விழுக வேண்டும். ஆனால் விழுகாதபடி தொங்கிக் கொண்டே இருக்கின்றான். அவன் தொங்கிக் கொண்டிருக்கக்கூடிய இடத்திற்குப் போக முடியாத நிலை. ஏனென்றால் அது ஒரு மலை உச்சி.
அவனைக் காப்பாற்ற நான்கு நாள் ஆனது.
1.அது வரையிலும் அவன் மன உறுதி கொண்டு இறுக்கிப் பிடித்திருக்கின்றான்.
2.இப்படி எல்லாம் இயற்கையின் நியதிகள்… தன் மன வலுவால் தன்னைக் காக்கும் நிலை அவனுக்கு வருகிறது.
இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால் ஞானிகள் காட்டிய அருள் வழியில் நம்முடைய மன வலிமை எதிலே… எப்படி இருக்க வேண்டும்…?
அந்த அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்ற மன வலிமை எந்த நேரத்திலும் நமக்கு இருக்க வேண்டும். அப்படிப்பட்ட மன உறுதி இருந்தால்
1.சிந்தித்துச் செயல்படும் தன்மையையாக அது இயக்கச் செய்யும்
2.நம்மைக் காத்துக் கொள்ளும் அருள் உணர்வுகள் வளரும்.
அதற்குத்தான் தொடர்ந்து உங்களுக்கு உபதேசித்துக் கொண்டே இருக்கின்றேன் (ஞானகுரு). இந்த அருள் உணர்வுகளைப் பதிவாக்கிய பின் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து அந்தச் சிந்தித்துச் செயல்படும் ஞானத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
1.ஆக.. உங்களைக் காக்க உங்கள் நினைவு தான் வர வேண்டுமே தவிர
2.நான் (ஞானகுரு) காப்பாற்றுவேன்…! என்ற இந்த எண்ணத்தில் இருந்தால்
3.தான் எடுக்கக்கூடிய சக்தியை இழந்து விடுகின்றோம் என்று தான் பொருள்.
இன்றைய உலகில் விஞ்ஞான அறிவால் கடுமையான விளைவுகள் வருகின்றது. அதிலிருந்து நாம் தப்ப வேண்டும்.
இந்த உபதேசத்தின் வாயிலாக அருளைப் பெருக்கும் நிலையை உங்களுக்குள் உருவாக்குகின்றேன். அதைப் பெருக்கும் அருள் ஞானம் உங்களுக்குள் வளரட்டும்.
அந்த ஞானம் உங்களுக்குள் வளர வேண்டும் என்பதற்குத்தான் இந்தத் தூண்டுதலைக் கொடுத்து அதன் மூலம் ஞானிகளின் உணர்வை உங்களைச் சுவாசிக்கச் செய்கிறோம்.
ஞானிகளின் உணர்வுகளைச் சுவாசிக்கும் போது உங்கள் இரத்தங்களில் ஒரு புது விதமான ஓட்டங்கள் இருக்கும். அந்த உணர்வின் தன்மை பல நிலைகள் பல கலவைகள் ஆகின்றது.
சிந்திக்கும் ஆற்றலைப் பெருக்கும் அந்தக் கருத்தன்மை (அணுவாக மாறும் தன்மை) உங்களிலே உருவாகின்றது. அதை வளர்த்துக் கொண்டால் அருள் ஞானத்தைக் கொண்டு வாழ்க்கையைச் சீரபடுத்த “உங்கள் எண்ணம் உங்களுக்கு உதவும்…!”
காரணம்… அத்தகைய அணுக்கள் உருவாகி விட்டால் அந்த உணர்வின் தன்மை நுகரும் போது
1.உங்கள் உயிரிலே படுகின்றது. சிந்திக்கும் ஆற்றல் வருகிறது.
2.நல்ல உணர்வை நுகரச் செய்கிறது.. நல்ல அணுக்கள் உடலில் விளைகிறது… அருளைப் பெருக்குகிறது.
3.இந்த உடலுக்குப் பின் ஞானிகளின் அருள் வட்டத்தில் நாம் செல்கிறோம்.
4.எந்த ஞானி இருளை நீக்கி ஒளியாக மாற்றினானோ அவன் ஈர்ப்பு வட்டத்திற்கே நாம் செல்ல முடியும்.
ஆகவே… துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தைச் சென்றடைவதே மனிதனின் கடைசி எல்லை…!
உயிர் ஒளியானது… எத்தனையோ கோடிச் சரீரங்களிலிருந்து தப்பிடும் உணர்வு பெற்றுத் தான் இந்த மனித உடலை அமைத்தது நம் உயிர்.
எல்லாத் தீமைகளையும் வென்று உணர்வின் தன்மை ஒளியாக ஆனவன் துருவ நட்சத்திரம். அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை எப்படியும் நீங்கள் பெறவேண்டும் என்பதற்குத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் உங்களுக்கு இதை உபதேசிக்கின்றேன்.
குருநாதர் எனக்குப் பல அனுபவங்களைக் கொடுத்தார். அதன் வழியிலேயே தான் உங்களுக்குள் பதிவாக்குகிறேன். இதை மீண்டும் நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்தால் அந்த அருள் ஞானம் உங்களைக் காக்கும் சக்தியாக வருகின்றது.
1.அந்த ஞானத்தின் வழி கொண்டு தான்
2.அருள் ஞானத்தை வைத்து இருளை நீக்கிடும் அந்த மெய் ஞானிகளாக நீங்கள் மாற முடியும்.

இந்தப் பிறவியே கடைசியாக இருக்கட்டும்… அடுத்து இன்னொரு உடலுக்குள் செல்ல வேண்டாம் – ஈஸ்வரபட்டர்
இந்த உலகில் மனிதர்கள் மிருகங்கள் மட்டும் வாழவில்லை. நம்மைச் சுற்றிப் பல கோடி ஆத்மாக்கள் உடலில்லாமல் ஆத்மாவுடன் (ஆவிகள்) இந்தக் காற்று மண்டலத்தில் உள்ளது.
1.உலகில் நடக்கும் நிலைகளை எல்லாம் தெரிந்து கொண்டு தன் நிலைகளுக்கு ஏற்ப உடல்களையும்
2.தன் ஆத்மா வந்து (தான்) பிறந்து வாழ்ந்திடும் நிலைக்காகவும்
3.எந்த உடலில் ஏறினால் அந்த உடலின் மூலமாகத் தான் விட்டுச் சென்ற
4.தன் எண்ணத்தை – நன்மையையோ துவேஷத்தையோ பூர்த்தி செய்து கொள்ள முடியும் என்ற நிலை கொண்டும்
5.இப்படித் தன் நிலையை ஈடேற்றிக் கொள்ள இன்று உடலுடன் வாழும் மனிதர்களை
6.உடலில்லா ஆத்மாக்கள் பல கோடி கோடியாகத் தன் எண்ணத்தை ஈடேற்றிக் கொள்ளச் சுற்றிக் கொண்டேயுள்ளன.
நாம் நினைக்கின்றோம்…!
நம் எண்ணம்…
நம் உடல்…
நம் ஆன்மா என்று…!
ஆனால் நம் உடலில் நாம் மட்டும் வாழவில்லையப்பா. (நாம் எண்ணுவதைப் போல் நாம் மட்டும் வாழவில்லை – இது மிகவும் முக்கியமானது)
அன்றாட வாழ்க்கையில் நம் மன நிலை எந்தெந்த நிலை கொண்டு மாறுகின்றதோ
1.அந்தந்த நிலை கொண்ட ஆவி அணுக்கள் நம் உடலில் வந்து எந்தத் திசையிலும் ஏறிக் கொண்டு
2.நம்மையே ஆட்டிப் படைத்து நம்மை ஆண்டு வாழ்ந்து
3.தன் எண்ணத்தை ஈடேற்றிக் கொள்ள நம் உடலை ஒரு கூண்டாக
4.தான் குடியிருக்கும் கூண்டாக வைத்து ஆண்டு வாழ்கிறது.
உடலில் ஆவிகள் இல்லாத மனிதரே இல்லை… என்று சொல்லலாம்…!
நம் நிலையைக் கொஞ்சம் போல மாற்றிக் கொண்டாலே (உணர்ச்சி வசப்பட்டாலே) நம் நிலையில் இருந்து வாழ்ந்திடப் பல அணுக்கள் நம்மைச் சுற்றிக் கொண்டுதான் உள்ளன…! என்பதை இப்பொழுதாவது ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ளுங்கள்.
இதிலிருந்தெல்லாம் தப்ப வேண்டும் என்றால் நம்முள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி ஒன்றைத்தான் ஈர்த்து வாழ்ந்திட முடியும் என்ற உண்மையை உணர்ந்து பல ஆவி உலக ஆன்மாக்களுக்கு நாம் அடிமையாகாமல் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.
இது வரை இந்த உலக வாழ்க்கையில் பெற்ற சந்தர்ப்பங்கள் (பல பிறவிகள்) எல்லாவற்றையுமே நழுவ விட்டு விட்டோம்.
1,இந்தக் கடைசி நிலை கொண்ட இந்த மனித உடலிலிருந்தாவது
2.நம் உயிரணுவைச் சமமாக நிலை நிறுத்தி
3.அந்த மகரிஷிகளிடம் ஐக்கியப்படுத்துங்களப்பா…!

என் கடைசி எல்லை பிறவி இல்லா நிலை தான்..! என்ற உறுதி கொள்ளுங்கள்
சொர்க்கத்தை அடையும் தகுதி பெற்ற இந்த மனித உடலில் பிறருடைய குறை உணர்வுகளை நாம் நுகர்ந்து விட்டால் என்ன ஆகும்…?
1.நம் காரியங்கள் அனைத்தும் செயலற்றதாக ஆகிவிடுகிறது.
2.நமக்குள் குழப்ப நிலைகளை உருவாக்கி சிந்தித்துச் செயல்படுத்தும் சக்தியையும் இழக்கின்றோம்
3,நாம் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறும் தகுதியையும் இழந்து விடுகின்றோம்.
இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் நாம் விடுபட வேண்டும்.
அரும் பெரும் சக்தியை உங்களுக்குள் பதிவு செய்கிறேன் (ஞானகுரு) ஞான வித்தை உங்களுக்குள் உருவாக்குகிறேன். குரு காட்டிய அருள் வழியில் அந்த வித்தினை உங்களுக்குள் பெருக்க வேண்டும்.
1.இந்த வாழ்க்கையில் இனிப் பிறவி இல்லா நிலைகள் அடைவேன்.
2.அரும் பெரும் சக்தியான மகரிஷிகளின் அருள் சக்திகளை எனக்குள் சேர்ப்பேன்…
3.அருள் வழியில் இந்த வாழ்க்கையை வாழ்வேன்…
4.என் கடைசி எல்லை பிறவி இல்லா நிலை தான்..! என்ற
5.இந்த உறுதி கொண்ட உணர்வுடன் வாழ்ந்து பழகுங்கள்.
6.உங்கள் எண்ணம் உங்களைக் காக்கும்.
ஆனால் மற்ற எந்த ஆசை கொண்டு எண்ணி எடுத்தாலும் அத்தகைய ஆசைகளால் செல்வங்கள் நிலைப்பதில்லை.
செல்வம் இருப்பினும் இந்த உடல் உபாதையான காலங்களில் கூட அது செலவழிக்கப் போதுமானதாக இருப்பதில்லை. பணம் அதிகமாக இருப்பினும் உடல் நலிவுற்ற நேரங்களில் நல்ல உணவையும் உட்கொள்ள முடிவதில்லை.
இது போன்ற நிலைகளில் விடுபட்டு இந்தப் பிறவி நிலை என்ற கடனைக் கடந்து பிறவி இல்லா நிலை அடையும் நிலையைச் செயல்படுத்துதல் வேண்டும்.
கீதை சொல்வது… நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய்.
1.நமது வாழ்க்கையில் அருள் ஒளியைப் பெற வேண்டும் என்று நினைத்தால்
2.அருள் ஒளியின் சக்திகளை வளர்க்கின்றோம்… அதுவாக ஒளியாகின்றோம்.
அது இல்லாது இவன் அப்படி… அவன் அப்படி… அவன் அப்படி… அவன் அப்படி…! என்ற நிலைகளில்
1.பார்க்கும் அனைவருக்குள் இருக்கும் குறைகளையும் கண்டு… அதையே கூறிக் கொண்டிருந்தால்
2.குறையின் உணர்வுகள் வளர்ச்சியாகி நோயின் தன்மையாகி இது நமக்குள் அதுவாகவே ஆகின்றது.
நமக்குள் சீர்படும் செயலை இழந்து செயலற்ற நிலைகள் படும் போது நம் தொழிலே குந்தகமாகின்றது. இது போன்ற எதிர்க்கும் உணர்வை வளர்த்து வளர்த்து… நமக்குள்ளேயே எதிரியை உருவாக்கி.. அடுத்து மனிதனல்லாத உருவை உருவாக்கும் தன்மை வந்துவிடுகின்றது. இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் விடுபடுதல் வேண்டும்.
1.அருள் ஒளி பெற அனு தினமும் மறவாது இருத்தல் வேண்டும்.
2.அருள் ஞானம் பெற மறவாது இருக்க வேண்டும்.
அதற்குத் தகுதியான நேரம் இந்த அதிகால துருவ தியான நேரமே…! நான்கிலிருந்து ஆறுக்குள் விழித்த நேரத்தில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை எடுக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
உங்கள் உடலில் உள்ள பல கோடி ஜீவ அணுக்களுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறச் தவறிவிடாதீர்கள்.
1.அருள் ஒளியைப் பரப்புங்கள்… அருள் வழியில் வாழ்க்கை வாழுங்கள்.
2.அருள் சொல்களையே சொல்லிப் பழகுங்கள்…. உங்கள் சொல்லைக் கேட்போரின் தீமைகள் அகலட்டும்.
ஆகவே… அருள் ஞான வழியில் நாம் வாழ்வோம்… வளர்வோம்…! நம் பார்வையில் அனைவரது தீமைகளையும் அகற்றுவோம். நம்மைப் பார்க்கும் அனைவரது தீமைகளும் அகலட்டும்.
அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்திலேயே என்றென்றும் மகிழ்ந்து மகிழ்ந்து வாழ்வோம்.

உண்மையான சீடர்கள் கிடைப்பது அரிதிலும் அரிது…! – ஈஸ்வரபட்டர்
குரு என்பவர் “தியானம் என்ற நற்பாதைகளைக் காட்டி அதன் வழியில் தெளிவு நிலை பெறுவதற்காகச் “சீடர்களைச் சோதனைக்கும் ஆட்படுத்துவதுண்டு…!”
தன்னிடம் வரும் சீடர்களுக்குப் போதனையுடன் தன் செயலை நிறுத்திக் கொள்வதுமில்லை. “தனக்கு மேல்…!” சிஷ்யன் சக்தி பெறச் செய்யும் செயலுக்கு… மருத்துவம் மனோதத்துவம் மனோவசியம் வீரக்கலைகளுக்கும் போதனைப்படுத்தி அந்த ஒவ்வொரு சீடரின் செயலையும் கண்காணித்து அவரவர் வழித் தொடர்புக்கும் வளர்ச்சிக்கும் செயல்களை நிகழ்த்தி அந்த வழியின் ஊக்கத்தையும் மேன்மைப்படுத்துவார் அந்தக் குரு.
அனைத்திலும் சூட்சமம் கொண்டே அன்றைய சித்தர்கள் புவியியல் உயிரியல் வானியல் என்ற செயலுக்கும் செயற்பட அந்தக் கலைகளையே மூலதனமாகப் புகட்டி ஆரம்ப வழி வகைகளை ஆராயப் புகத் தனது சீடர்களைத் தயார்படுத்தினார்கள்
காரணம்… உண்மையான சீடர்கள் கிடைக்க மாட்டார்கள்…!
குரு எனப்படுபவர் ஆயிரம் ஆயிரம் உருவாகலாம்…! நாற்பத்தி எட்டாயிரம் மகரிஷிகள் என்று கூறும் பொழுதே ஞானிகள் சித்தர்கள் மகரிஷிகள் என எண்ணிலடங்கா தொகையில் தொடர்ந்தாலும் “ஆரம்பச் சித்து நிலை பெற வரும் சீடர்கள்… மிகவும் குறைவே…!”
உண்மையான சீடர்களைக் காண்பது “அரிதிலும் அரிது…!” என்ற உண்மையின் சூட்சமம் அன்று கண்டு கொண்ட அன்றையச் சித்தர்களும்
1.தங்களுக்கு ஏற்பட்ட அனுபவ முறைகளினாலும் அதை உணர்ந்தே
2.தனக்கு உண்மையான சீடரைத் தேர்ந்தெடுக்கப் பல செயல் முறைகளைச் செய்வித்தனர்.
மருத்துவம் படிப்போர் அரைகுறை வைத்திய ஞானம் பெற்று விட்டால் “தன் வாழ்விற்கு வழி ஏற்பட்டு விட்டது…!” என்ற உலக ஆசைக்குத் தங்களை உட்படுத்தி அதன் வழி ஓடி விடும் சீடர்களூம் உண்டு.
மனோதத்துவ சாஸ்திர கலைகளில் நாட்டம் கொண்ட சீடனும் சொல்லாமல் கொள்ளாமல் நழுவிவிடுவார். அடுத்துப் பெறும் யாக நிலைகளில் மாந்திரீக ஏவல் செயலுக்கு நாட்டம் கொள்வோர் அந்த வழியில் சென்றுவிடுவர்.
இதில் எல்லாம் தெளிந்தவர்கள்…
1.நாம் குருவிடம் அறிந்து கொள்ள வந்தது இது அல்ல….!
2.உலக ஆசை நிலைப்படுத்தும் நிலைகள் தான் அவைகள் என்று உணர்ந்து
3.”உண்மைப் பொருளை நாடும் உண்மையான சீடர்கள் தான்…!” நிலையாகத் தங்கிச் செயல் கொள்வர்.
அவர்களே உண்மை ஞானம் உணரும் குருவிற்கு ஏற்ற உண்மையுள்ள சீடர்கள். அவர்களைத் தேர்ந்தெடுக்க குருவிற்கும் ஒரு சூட்சமம் உள்ளது…!
தன் நிலைக்குத் தன் சீடனை உயர்த்திவிடும் குருவிற்கு ஏற்படும் சில குறை நிலைகளை அந்தச் சீடர்களால் ஏற்படும் சில சக்தி குறைவுகளிலிருந்து குரு மீண்டெழ அந்தச் சீடர்களால் குரு பாதுகாக்கப்படுகின்றார்.
1.தனக்குச் சக்தி வேண்டியே…! தன் வழித் தோன்றல்களாகிய சிஷ்யர்களைக் குரு தேர்ந்தெடுக்கின்றார்.
2.தன் நிலையைத் தான் உயர்த்திக் கொள்ளவே “குருவைத் தேடி அலைகிறான் சீடனுமே…!”
2.அப்படிப்பட்ட ஆத்மார்த்த குருவும் உண்மைச் சீடனும் என்றுமே மாசுபடப் போவதில்லை.
அத்தகைய சீடர்களுக்குக் குரு போதிக்கும் போதனைகளைத் தங்களை உணர வேண்டிதற்காகக் குரு அளிக்கும் சந்தர்ப்பங்களில்
1.வெறும் சங்கட அலைகளைச் சிஷ்யர்கள் மனதில் பதிய வைத்துக் கொண்டால்
2.அதுவே மரமாக மீண்டும் வெட்டப்பட வேண்டிய செயலுக்குக் கொண்டு போய்விட்டுவிடும்.
சீடர்களைப் பாதுகாப்பது குருவின் தலையாயக் கடமையாகிவிடுகின்றது.
வாழ்க்கைச் சூழலில் சங்கட அலைகளில் அறியாமல் அகப்பட்டுக் கொள்ளும் குருவையும்… அறிந்தே அகப்பட்டுக் கொள்ளும் குருவையும்… காப்பது “உண்மையான சீடர்களின் பொறுப்பும் ஆகிவிடுகின்றது…!”
உண்மை உணரும் ஞானச் சீடர்களும் குரு காட்டிய வழியில் தன் சக்திகளை வலுக் கூட்டிக் கொள்ளத் தான் எண்ணி எடுக்கும் தியானத்தின் மூலம் ஒளி நிலையைக் கண்டாலும்
1.நாம் தேடிக் கொண்டிருப்பது இது அல்ல…!
2.இதற்கும் அடுத்த உயரிய நிலை எது…? என்று கண்ட காட்சிகளை எல்லாம் அறிந்துணர்ந்து
3.பின் விலக்கி விலக்கி… எந்த உண்மை ஜோதி தத்துவத்தில் மூழ்க நினைத்தானோ
4.தன் நல்லாக்கத்திற்குப் பயன்படும்படியாக ஊக்கம் கொண்டு மேலும் செயல்படச் செயல்பட
5.எந்த ஜோதித் தத்துவத்தை நாடிக் கலக்க மனம் கொண்டனோ அதையே ஈர்த்து ஈர்த்து…
6.தன் ஈர்ப்பினால் தானே ஜோதியாகி அந்த ஜோதி தத்துவத்தில் கலந்து விடுகின்றான்.
ஆகவே குரு சிஷ்ய மனோபாவனை என்பது மிகவும் உயரியது. அதை வெறும் உலக ஆசை நிலைகளுக்கு யாரும் அடகு வைத்துவிடக் கூடாது.
1.குருவும் உணர வேண்டும்…
2.அதே நேரத்தில் சீடர்களும் உண்மையை உணர்ந்து செயல்பட வேண்டும்.

சங்கடத்துடன் செய்யும் எந்தக் காரியமும் நிறைவு பெறாது – ஈஸ்வரபட்டர்
வான்மீகி ஆச்சா மரத்தை வாலியின் தொடர்பில் பதம் பார்த்த பொழுது “ஆத்ம சக்தி பெறும்…” சக்தி அலைத் தொடர்பில் குறைவுபட்டது.
1.அந்தக் காரணத்தை அறிந்து அதைச் செயல்படுத்தி
2.எண்ணத் தடையாகும் இராமபாணத்தை மீண்டும் எய்ததின் தொடரே வான்மீகி பெற்ற ஜடாக்கினி அனுபவ ஞானம்,
எடையிடும் பொருளே எடை காட்டும் கல்லாக ஆனதில் எடையிடும் எண்ண அளவீட்டில் தராசின் முனை முள் அளவீடு காட்டுவதைப் போல் தன்னுடைய அனுபவ ஞானம் நிறைவு காண (மீண்டும்) சபரியிடம் பதம் பார்த்தான் வான்மீகி.
மனைவியைப் பிரிந்த இராமன் சபரிக்கு மோட்சத்தை அளித்திட இயலவில்லை என்ற கதையின் தொடர்பிற்குச் “சூட்சம விளக்கம் உள்ளது…!”
இராம ஜெப ஏக்கமாக ஜெபத்தில் ஏங்கினாள் சபரி. அந்த ஏக்கத்தைப் பூர்த்தி செய்ய
1.சங்கடத்தின் அலைகளை ஈர்த்துக் கொண்ட வழி காட்டும் குருவானவர்
2.பூரணத்துவம் நிறைவு பெறாத தொடர் நிலையில் தன்னை உணர்ந்து மீண்டும் அதற்குண்டான வழியமைத்தான்.
மகரிஷிகளுடன் தொடர்பு கொண்டு அவர்களிடமிருந்து பெறும் உயர்ந்த சக்திகளைத் தன் ஈர்ப்பிற்குக் கொண்டு வர வேண்டும் என்றால் சங்கடமில்லாத சமமான பாவனையில் இருத்தல் வேண்டும்.
அந்த நிலை இல்லாத போது
1.உண்மைச் சீடர்களின் ஏக்கம் குருவிற்கே எற்பட்டு…
2.உண்மையை உணர்ந்து… தான் தெளிந்து..
3.சூரிய குலம் என்று குறிப்பிடும் வீரிய அமில முலாம் ஈர்ப்பின் தொடர்புகளில் தொடர்பு கொண்டு…
4.உயர்ந்த உணர்வுகளை மீண்டும் ஈர்க்கும் வலுக் கொண்டால் இராமபாணம் பாயும்… தன் இலட்சியத்தையும் எய்தும்.
அதாவது
1.இராமபாணம் எய்தால் மீண்டும் அது எய்தியவரிடமே திரும்ப வருவதைப் போல் செயல் கொண்டிடும் இந்தச் சக்தி
2.நாம் எடுக்கும் எண்ண ஈர்ப்பின் வலுவால் “வலுத்து…”
3.அதன் மூலம் தன் சக்தியை மீண்டும் வலுக் கூட்டிக் கொள்ள முடியும்.
“சபரி மோட்சம்…!” என்று சொல்கின்ற சூட்சமத்தில் சபரி பெற்ற சக்தியின் வலு ஐயப்ப மாமுனியின் தொடர்பால் தன் எண்ண இலட்சியத்தை அடைந்தது.
இந்தச் சக்தியின் தொடர்பால் அந்த ஐயப்ப மகான் தன் சக்தியின் குறைவுபடாத் தன்மையில் அந்தச் சபரியின் மூலத்தையே தாய் சக்தியாக ஆக்கிக் கொண்டார்.
ஐயப்பன் தன் அனுபவத்தில் பெற்றுக் கொண்ட எத்தனையோ சக்தித் தொடரில் சபரி சக்தியும் ஒன்று…!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
இரண்டு பேர் சண்டை போடுபவர்களைப் பார்க்கிறீர்கள். ஆனால் அந்த இரண்டு பேரும் உங்கள் நண்பர்கள் தான் என்று பார்த்தவுடனே “இப்படிச் சண்டை போடுகிறார்களே…!’ என்று அந்த உணர்ச்சிகள் உங்களுக்குள் வரும். அப்போது வெறுப்பும் வேதனையும் தோன்றும்.
அப்போது நீங்கள் நுகர்ந்த உணர்வை ஆட்சி புரிவது யார்…? உங்கள் உயிர் தான். இந்த உணர்வின் தன்மை அதிகமான நிலைகளில் வேதனை வேதனை என்று வெறுப்பும் வேதனையும் தனக்குள் உருவாகும் போது
1.இது விஷ உணர்வாக மாற்றப்பட்டு நமக்குள் எதிரியான நிலைகள் வருகிறது.
2.அடுத்து இந்த உணர்ச்சிகள் இரத்தத்தில் கலக்கப்பட்டு இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் கிட்னிக்குப் பாயும்.
3.அதிகமான உணர்ச்சிகளாகும் பொழுது இரத்தத்தைப் பரிசுத்தப்படுத்தும் நிலை இல்லாதபடி
4.கிட்னி அப்படியே திறந்து விட்டு விடும். அசுத்தம் உள்ளுக்குள் போகிறது.
5.அப்போது இதயம் படக்… படக்… படக்…! என்று அடிக்கும்.
சண்டை போடுபவர்களைக் கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்தால் அந்த உணர்வின் தன்மைகள் தனக்குள் வந்த பின் எதிர்பாராது
1.எனக்குப் படக்… படக்… என்று அடிக்கிறது.
2.எனக்கு அப்படியே பட… பட… என்று வருகிறது.
3.வெட… வெட,,, என்று உடல் ஆடிவிட்டது…! என்றெல்லாம் சொல்வார்கள்.
4.இவையெல்லாம் நமக்குள் உள் புகுந்து போகும் நிலை தான்.
நண்பன் சண்டை போடுவதைப் பார்த்திருப்போம். இந்த உணர்வு இதயத்தின் பக்கம் வரும் போதெல்லாம் அந்தப் பட படப்பு வரும். ஆனால் என்ன என்றே தெரியவில்லை…! என்பார்கள்.
அதே மாதிரி நாம் சந்தோஷமாக இருப்போம். நமக்குச் சம்பந்தமில்லாதபடி இரண்டு பேர் சண்டை போடுவார்கள். வெறுப்பும் வேதனையும் கொண்ட நிலைகளில் பேசுவார்கள்.
அதை நாம் பார்க்க நேர்ந்ததும் நம்மை அறியாமலேயே நம் உணர்வின் இயக்கம் மாறும். நமக்குள் பய உணர்வை ஏற்படுத்தும். எனக்குப் பயமாக உள்ளதே…! ஏன் என்று தெரியவில்லையே…! இதயம் பலவீனமாக இருக்கிறது என்பார்கள். இது உலக இயல்போடு வரும்.
உதாரணமாக ஒரு பேட்டரியை இயக்குவதற்கு அதற்குள் சில விஷப் பொருள்களைச் சேர்க்கிறார்கள். அந்த பேட்டரியில் இருக்கக்கூடிய அந்த விஷங்களைக் கொண்டு நெகட்டிவ் பாசிட்டிவ் என்ற உணர்வின் தன்மையை இயக்கக்கூடிய நிலையில் கரண்டை உற்பத்தி செய்கின்றார்கள்.
மின்சாரத்தை அந்தப் பேட்டரிக்குள் (SOLAR CELLS AND BATTERY) முதலில் சேமித்து வைக்கின்றார்கள். எப்படி…? சூரியன் ஒளிக்கற்றையால் எடுக்கிறது. அதிலிருந்து வரக்கூடிய ஒளிக்கற்றையை இதில் இயக்கப்படும் போது இதிலே சேமிப்பு என்ற நிலைகள் வருகிறது.
ஒவ்வொரு அறையிலும் வைத்திருக்கக்கூடிய நிலைகளில் வடிகட்டி அதிலே அழுத்தத்தை அதிகமாகக் கூட்டி ஒரு இயக்கச் சக்தியின் நிலைகளுக்குக் கொண்டு வருகிறார்கள்.
அதிலே உள்ள செல்களில் நெகட்டிவ் பாசிடிவ் என்ற நிலைகளை வைத்து இயந்திரங்களையே ஓட்டச் செய்கிறார்கள். ஆனால் எதிலிருந்து உற்பத்தி ஆகிறது…?
1.இதிலிருக்கக்கூடிய ஆசிட் மற்றவைகளுக்கு எதிரியாகும் போது
2.பொறி கிளம்புகிறது… கரண்ட் உற்பத்தியாகிறது…!
இதைப் போல தான் முதலில் சொன்ன மாதிரி நம்முடைய சகஜ வாழ்க்கையில் எதிர் நிலையான உணர்வுகளைச் சந்தர்ப்பத்தால் நம் உடலிலே எடுக்கப்படும் போது அது உடலிலே வீரிய உணர்வுகளாக மோதப்படும் போது உணர்ச்சியின் வேகங்களைக் கூட்டுகிறது.
அதாவது பேட்டரியில் பாசிடிவ் நெகடிவ் என்ற் மோதலாகும் பொழுது அந்த உணர்வின் அழுத்தத்தால் அந்த ஆற்றல் மின்சாரமாக (இயக்கச் சக்தியாக) தோன்றுவது போலத் தான் நமக்குள்ளும் தோன்றுகிறது.
ஆகவே நம் உடலில் அத்தகைய எதிர்ப்பு நிலைகளை உருவாக்கும் சக்தி வரும் பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்…?
இதை அடக்க வேண்டும் என்று சொன்னால் நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எடுத்துப் பழக வேண்டும். துருவ நட்சத்திரத்தைப் பற்றிப் பல முறை உபதேச வாயிலாக உங்களிடம் பதிவு செய்திருக்கின்றோம்.
“ஈஸ்வரா…!” என்று கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வந்து உயிருடன் ஒன்றி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று எண்ணும் பொழுது இது முக்கண் ஆகிறது. இதன் வழி இழுத்துப் பழக வேண்டும்.
ஏனென்றால் புறக்கண்ணால் நாம் கவருவது நம் ஆன்மாவாக மாறுகிறது. சுவாசித்தவுடன் உயிரிலே படுகின்றது. சுவாசித்ததை உயிர் அகக்கண்ணாக இருந்து உணர்த்துகிறது.
1.அந்த உணர்ச்சியின் தன்மை தான் நம்மை இயக்குகின்றது.
2.அந்த உணர்ச்சிகொப்பத் தான் எண்ணங்கள் வருகிறது.
3.அந்த உணர்ச்சிகொப்பத் தான் நம்முடைய செயலும் வருகிறது.
ஆகவே மற்றவர்கள் செய்யும் தீமையின் உணர்ச்சிகள் நம் உடலில் சேரும் பொழுது
1.உடனே அந்த உணர்வின் வேகத்தைக் கூட்டாது
2.”ஈஸ்வரா…!” என்று நாம் கண்ணின் நினைவை உயிருடன் (புருவ மத்தியில்) இணைத்து முதலில் நிறுத்திப் பழக வேண்டும்.
(ஏனென்றால் உணர்வின் வேகத்தைக் கூட்டும் பொழுது தான் நமக்குப் பட படப்பும் இதயம் படக் படக் என்று அடிப்பதும் மற்ற உணர்ச்சி வசப்படும் நிலைகள் எல்லாமே வருகிறது – இது முக்கியம்)
அப்பொழுது அந்த அழுத்தம் வரும்போது துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று இதனுடன் இணைத்து இதன் வழி கவருதல் வேண்டும்.
ஏனென்றால் இந்த உணர்ச்சியின் உணர்வுகளை புருவ மத்தியில் செலுத்தும் போது அதன் வலு கூடும். வலு கூடிய பின் தீமைகள் தடுக்கப்படுகின்றது.
தீமைகள் உள் புகாது தடைப்படுத்திய பின் நாம் என்ன செய்ய வேண்டும்…?
யார் தவறு செய்கிறார்களோ அவர்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும். உண்மையின் உணர்வை அறியும் திறன் அவர்கள் பெற வேண்டும். அவர்கள் செயலெல்லாம் நல்ல நிலை பெற வேண்டும் என்று இவ்வாறு ஒவ்வொரு குணங்களுக்குத் தக்கவாறு நாம் தியானிக்க வேண்டும்.


தீய சக்திகளுடன் நேரடியாக நாம் மோதவே கூடாது -ஈஸ்வரபட்டர்
வாலியின் வீரிய குணத்தின் தன்மை எப்படிப்பட்டது என்றால்
1.ஆணவம் கொண்ட நிலையில்
2.எந்த எதிர் மோதல்களையும் தன் வசமாக்கித்
3.தன் சக்தியுடன் ஒன்றச் செய்யும் சூட்சமம் பெற்றது.
அதிலே நல்வினைப் பயனை எண்ணியிருந்தால் ஆச்சா மரம் வெட்டப்படத் தேவை இருந்திடாது. அது தான் மனித குல மனத்தின் வீரிய சக்தி…!
வாலி வதம் என்ற சம்பவம் சபரிமலைத் தொடர் அருகே ஒதுக்குப்புற வட பகுதியில் வாழ்ந்த ஓர் இன மக்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவம்.
தவத்தின் சக்தி பெற்றவன் பிற ஆன்மத் தொடருக்கு அனைவரும் அந்தச் சக்தி பெறவேண்டும் என்ற எண்ணம் கொண்டு ஜடாக்கினியின் செயல் இருந்திருந்தால் அவன் நிலை உயர்ந்திருக்கும்.
1.ஆனால் வான்மீகி பதம் பார்த்தான்… அந்த ஆச்சா மரம் வீழ்ந்தது.
2.ஜடாக்கினி மன திறத்தால் மற்றவர்கள் பெறும் சக்தித் தொடருக்கு
3.எண்ணத் தடை ஏற்படுத்தித் தீவினையால் விளையாடி விட்டான்.
4.அதன் பயன் இராமபாணம் வான்மீகியால் பாய்ச்சப்பட்டது.
ஜடாக்கினி உயர் எண்ண வீரிய சக்தி தீவினைப் பயனை விளைவிக்கும் மந்திர சக்தியுடன் மோதுண்ட பொழுது எந்தப் பிரம்மாஸ்திரம் வென்றிருக்கும் என்பதனை விளக்கிடவும் வேண்டுமோ…?
இராமன் மறைந்திருந்து அம்பெய்தான் என்பதன் சூட்சமம் என்ன…? அதிலே நீங்கள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய காரியம் ஒன்றுண்டு.
தியானத்தின் மூலம் ஞானச் செல்வங்கள் (மனிதர்கள்) இன்று பெற்றுக் கொண்டிருக்கும் உன்னத நிலைகளும் மற்ற செயல்களும் எதைக் காட்டும்…?
நீங்கள் பெற்றுக் கொண்டிருக்கும் ஞான சக்திகளை
1.பலர் பல எண்ணம் கொண்டு நோக்கிடும் செயலுக்கு உங்களை உற்றுப் பார்க்க ஆரம்பித்தால்
2.அவர்களின் பார்வை அலையை உங்களின் பார்வை அலையை நேர் கொண்டு மோதிடாமல் தவிர்த்திடவும் வேண்டும்.
மற்றவர்கள் மத்தியிலே உலக வாழ்க்கையைப் பற்றிப் பேச வேண்டிய நிலையில்
1.பிறரின் பார்வையைக் கூடுதலான நேரம் நம் பார்வையோடு சந்திக்காமல்
2.சிறிது தவிர்த்திடவும் வேண்டும்.
“தன் தவ சக்தியைக் குறைத்துக் கொண்டு…” வாலியின் தொடர் மீண்டும் பிறருக்குத் தீங்கிழைக்காதவண்ணம் தடுத்து ஆட்கொண்ட செயல் தான் வான்மீகியார் பெற்ற “அனுபவ நிலை” என்பது
அந்தக் காப்பிய ரிஷி மீண்டும் தன் ஈர்ப்பின் தொடரில் வெகு வேகமாகச் சக்தியைக் கூட்டிக் கொள்ளும் செயலில் பற்பல ரிஷிகளுடன் தொடர்பு கொண்டார். அதில் பரசுராமர் தொடரும் உண்டு.
ஜடாக்கினி அனுபவ ஞானம் என்பதே உயர் சக்தி வலுக்கூடும் வலுவின் வலுவாகும்,
1.தன்னுடைய அனுபவமே போதனையாகி
2.உயர் சக்தியை ஆட்கொள்ளும் நாத வித்தின் மூலம் பரிமளிக்கும் செயல் நிலைக்கு
3.மீண்டும் எண்ண வலுவின் திட வைராக்கிய சிந்தனையால்
4.எந்த மண்டலமோ அந்த மண்டலத்தின் சூட்சமும்
5.எந்தெந்த நட்சத்திரங்களோ அவைகளின் அமில குண ஈர்ப்பின் சேமிப்புமாக
6.இந்தச் சரீரத்தை வைத்து ஈர்க்கும் காந்த அமிலத் தொடர்பும்
7.பேரொளியாகச் சுடர்விட்டுப் பிரகாசித்திடும் நிலையாக
8.தன் உயிர் அமில மூல முலாமைத் தெளிந்து
9.அந்தச் சக்தியின் தொடரில் எண்ண வலுவை உயர்வாக்கிப் பெறும் ஜடாக்கினி ஒளி சக்தி கொண்டு
10.குறைவுபடா சேமிப்பாக்கிச் செயல் கொள்வதே பக்குவமான செயல் ஆகும்.
காப்பிய ரிஷி வான்மீகி ஆச்சா மரத்தை வாலியின் தொடர்பில் பதம் பார்த்து ஆத்ம சக்தி பெறும் சக்தி அலைத் தொடர்பில் குறைவுபடும் காரண மூலம் ஜடாக்கினி மந்திர விழி பிதுங்கும் செயல்படுத்தி எண்ணத் தடையாகும் இராமபாணத்தை எய்ததின் தொடர் தான் “ஜடாக்கினி அனுபவ ஞானம்,..!”

உபதேச வாயிலாகக் கொடுக்கும் சக்திகளை நீங்கள் பதிவாக்கியே ஆக வேண்டும்
நமது குருநாதர் கண்ட உண்மையின் உணர்வுகள் அது எப்படி உணர்வுகள் ஒளியாக ஆனது அதன் அறிவாக ஆனது என்ற அந்த உணர்வை உங்களுக்குள் பதிவாக்குகின்றேன் (ஞானகுரு).
நஞ்சு கொண்ட உணர்வினை அந்த அகஸ்தியன் எப்படி வென்றான் என்ற நிலையில் உங்கள் வாழ்க்கையில் கஷ்டம் வரும் பொழுது அந்தக் கஷ்டத்தை எண்ணாதபடி… அந்த அகஸ்திய மாமகரிஷியின் அருளைப் பெற வேண்டும் என்ற நினைவை நீங்கள் கூட்டினால் அவன் கண்ட உண்மை உங்களுக்குள் கிடைக்கும்.
மற்றவர்கள் சொல்லும் துயரத்தையும் வேதனைகளையும் உங்களுக்குள் வராதபடி தடுத்து நிறுத்தி
1.அந்த அகஸ்தியன் அருள் அவர்களுக்குக் கிடைக்கட்டும்
2.பிணிகளில் இருந்து விடுபடும் சக்தி அவர்களுக்குக் கிடைக்கட்டும் என்று நீங்கள் சொல்லலாம்.
இது தான் நல்லது…!
ஏனென்றால் இப்படிச் செய்யும் போது உங்களை நீங்கள் காத்துக் கொள்கிறீர்கள். பிறரையும் காக்கும் சக்தியாகச் செயல்படுத்துகின்றீர்கள். இந்த இரண்டும் அவசியம் வேண்டும்.
ஆனால் பொதுவாக மற்றவர்களைக் காக்க வேண்டும் என்ற எண்ணம் தான் எல்லோருக்குமே வருகிறது. இந்த உணர்வு வேகம் வந்தவுடன் கொஞ்ச நாளைக்கு உதவி செய்கிறீர்கள். பின்னாடி நிலைமை இங்கே தடுமாறும் போது…
1.எல்லாருக்கும் நான் உதவி செய்தேன்… ஆண்டவன் என்னைச் சோதிக்கின்றான்…
2.தெய்வம் சோதிக்கிறது…! என்று அந்த வேதனையைத் தான் வளர்த்துக் கொள்கின்றீர்கள்.
மற்றவர்களுக்கு உதவி செய்தாலும் அவர்கள் பட்ட துன்பம் உங்களில் வராது தடுக்க வேண்டுமல்லவா…!
ஆகவே இது போன்று நல்லது என்று செய்தாலும் அதற்குள் மறைந்து வரும் தீமைகள் என்ன செய்யும்…? என்று நாம் அறிந்து கொண்டபின் அதை நீக்கப் பழகிக் கொள்ள வேண்டும். அந்த ஞானம் வேண்டும்.
விஞ்ஞான அறிவுப்படி ஒரு உலோகத்தை வைத்து இயந்திரத்தை உருவாக்குகின்றனர். ஆனால் இயந்திரம் ஓடும் போது ஒரு குறிப்பிட்ட இடத்தில் அழுத்தம் ஜாஸ்தியாக இருக்கிறதது என்று அது தாங்கவில்லை என்றால் என்ன செய்கிறார்கள்…?
1,அந்த இடத்தில் வரும் அதிகமான அழுத்தத்தையும் உராய்வையும் தாங்கக்கூடிய சக்தி கொண்ட
2.இன்னொரு உலோகத்தைச் சேர்த்தால் சரியாக வரும் என்று விஞ்ஞானி அதைக் கூட்டிக் கொள்கின்றான்.
3.அந்த உலோகத்தை மாற்றிய பின் இயந்திரம் சீராக இயங்குகிறது.
அதே மாதிரித் தான் மெய் ஞானிகள் கண்ட ஆற்றல்மிக்க சக்திகளை உங்களுக்குள் குருநாதர் காட்டிய வழிப்படி இந்த உபதேச வாயிலாகப் பதிவு செய்கிறோம்.
உங்கள் வாழ்க்கையில் கடினமான சூழ்நிலைகள் வரும் பொழுது அந்த ஞானிகளின் சக்திகளை எடுத்துப் பயன்படுத்திக் கொண்டால் அதை மாற்றிடும் சக்தியாக உங்களுக்குள் வரும்.
சில குடும்பங்களில் பார்த்தோம் என்றால் எப்பொழுது பார்த்தாலும் வீட்டில் சண்டை… சச்சரவு… வேதனை… என்றே சொல்வார்கள். நான் எத்தனையோ பேருக்கு உதவி செய்தேன். அவர்களை எல்லாம் எனக்கு எதிராக இப்பொழுது திருப்பி விடுகிறார்கள்… தொழிலையே செய்யவிடாது என்னைத் தடுக்கிறார்கள்…! என்றெல்லாம் சொல்வார்கள்.
ஆக… இத்தகைய தவறான உணர்வுகள் நம்மை இயக்காது நல்லதாக மாற்றிடும் வலுவான சக்திகளை நாம் கொண்டு வர வேண்டுமா… இல்லையா…! அதற்கெல்லாம் இந்தப் பதிவு (உபதேச உணர்வுகள்) இருந்தால் தான் உங்களுக்கு அந்த உதவி கிடைக்கும்.
யாம் உபதேசிப்பதை மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தால் இந்த காற்றில் இருக்கும் மகரிஷிகளின் உணர்வுகளை எடுத்து நீங்கள் உங்களைக் காக்கலாம்.
பிறரைக் காத்தாலும் அவர்கள் கஷ்டம் உங்களைத் தாக்காது இருக்க ஒரு வலு உங்களுக்கு வேண்டுமா இல்லையா…! ஏனென்றால் எல்லோரும் நல்லவர்கள் தான் யாரும் கெட்டவர்கள் இல்லை…!
நல்லதை எண்ணிச் செய்து… செய்து அவர்கள் கஷ்டத்தை எல்லாம் கேட்டுக் கேட்டு இந்த உணர்வு உடலில் வரப்போகும் போது அது வளர்ந்து விடுகின்றது. நம் நல்ல குணம் மறைந்து விடுகின்றது.
அதை மாற்றுவதற்குத்தான் அகஸ்தியன் பெற்ற ஆற்றல்களை உங்களுக்குள் பதிவாக்குகின்றேன் (ஞானகுரு). அதை வளர்த்துக் கொண்டு வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றிக் கொள்ளுங்கள். மகிழ்ந்து வாழும் சக்தி பெறுங்கள்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
படிக்காதவன்தான் நான் (ஞானகுரு) இதைச் சொல்கின்றேன். இயற்கையின் உண்மையின் உணர்வுகளை அறியும் ஆற்றலையும் ஞானிகள் மகரிஷிகள் பெற்ற ஆற்றலையும் பெறும் தகுதியை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்குக் கொடுத்தார்.
நீங்கள் படித்திருந்தாலும் படிக்கவில்லை என்றாலும் யாம் சொல்லும் உணர்வின் தன்மையை ஆழமாகப் பதிவாக்கும்போது
1.உங்கள் நினைவாற்றல் “அண்டத்தையும் அளந்தறிந்த… அகஸ்தியன் பால் செல்லும்…!”
2.அந்த அகஸ்தியர் பெற்ற உணர்வை நீங்கள் பெற்று உங்களுக்குள் கருவாக உருவாக்க முடியும்
3.இருளை அகற்றி ஒளியாக மாற்றும் திறன் உங்களால் பெற முடியும் என்ற நம்பிக்கையில் தான் இதைச் சொல்கிறேன்.
மகரிஷிகள் பெற்ற சக்தியைப் பெறுவதற்காகவும் உலக அனுபவம் பெறுவதற்காகவும் ஈஸ்வரபட்டர் இட்ட கட்டளைப்படி காடு மேடெல்லாம் நான் அலைந்தேன்… தெரிந்தேன்.. அறிந்தேன்… துன்புறுத்தப்பட்டேன்…!
அந்தத் துன்பத்தில் இருந்து விடுபடும் உணர்வுகளை குருநாதர் உணர்த்தினார். அந்த உணர்வின் ஆற்றலைக் கவர்ந்தேன்.
துன்பத்தை அகற்றிடும் ஆற்றலை வளர்த்து அதன் வழியில் பெற்ற ஞானத்தைத் தான் இங்கே போதிக்கின்றேன். போதிக்கும் உணர்வுகளைப் பதிவாக்கி மீண்டும் நினைவு கொண்டு வளர்த்தால் உங்களை அறியாத இருளை போக்க முடியும்.
இந்த உடலில் நாம் நீடித்த நாள் இருப்பதில்லை, உடலில் இருக்கும் போது அந்த அருள் ஒளியை வளர்த்துக் கொள்ளுங்கள். அருளைப் பெருக்கி அதை அனைவரும் பெற வேண்டும்.. எல்லோரும் நலம் பெற வேண்டும் என்ற உணர்வை வளர்த்திட்டால் மற்றவர்களையும் நலம் பெறச் செய்ய முடியும்.
ஆகவே நீங்கள் அனைவரும் நலம் பெற வேண்டும் என்ற ஆசையில் தான் அருள் ஞானத்தைப் போதிக்கின்றேன்.
1.அருள் ஒளியின் உணர்வை நுகருங்கள்.
2.அருள் ஞான அணுக்களை உங்கள் உடலுக்குள் உருவாக்கும்.
நமது எல்லை எது…? என்று அறிந்து அதை அடைந்திட வேண்டும். அதை மையமாக வைத்து வாழ வேண்டும்.
1.இந்த மனித உடலுக்குப் பின் நாம் பிறவி இல்லா நிலை அடைய வேண்டும்
2.ஒளியின் சரீரமாக ஆவதே மனிதனுடைய கடைசி நிலை.
3.ஒளியாகி விட்டால் அகண்ட அண்டத்திலே நாம் என்றுமே ஜோதிச் சுடராக என்றும் பதினாறு என்ற நிலை அடையலாம்.
மனித உடல் பெற்ற நிலையில் ஆறாவது அறிவை (கார்த்திகேயா) வைத்து உயிரின் துணை கொண்டு அந்த நிலையை அடைய முடியும். ஏனென்றால் நம் உயிர் தான் எல்லாவற்றையும் (பார்ப்பது கேட்பது நுகர்வது) உருவாக்குகின்றது.
உயிர் அது எப்படி அறிவாக நமக்குத் தெளிவாக்குகின்றதோ அதே போல் நாம் நுகரும் உணர்வை எல்லாம் உயிருடன் ஒன்றச் செய்து ஒளியாக மாற்றும் திறன் ஆறாவது அறிவிற்கு உண்டு.
ஆனால் “என்னமோ போகட்டும்… நாளைக்கு நடப்பதை யார் அறிவார்…?” என்று எண்ணினால் இதற்குப் பின் நாம் நரகலோகம் தான்.


ஞானத்தை வளர்க்க உதவாத… நம் ஆத்ம பலத்தை வீரியப்படுத்த உதவாத எந்தச் செயலையும் செய்யக் கூடாது – ஈஸ்வரபட்டர்
“ஜடாக்கினி மன திறன்…!” என்னும் மூலச் சக்தி நாத விந்துவாக… மனிதனுக்குள் இரசமணியாகச் செயல்படும் அந்த வீரிய குண அமிலமே “இராமபாணம்…” என்று காட்டப்பட்டது.
இந்த மனிதப் பிறவியை எடுத்ததன் பலனாக… “எந்த இலட்சியம் தன் கருத்தோ” அந்த இலட்சியத்தை எய்தும் பாக்கிய நிலையைப் பெறுவது அதுவே தான்…! ஆனால் அந்தப் பாக்கிய நிலை பெற்று விட்டால் மட்டும் போதாது. அதை வளர்க்கவும் வேண்டும்.
இராமபாணத்தை எய்தினால் அது அப்படியே திரும்பி வரும்…! என்பதன் பொருள் என்ன…?
1.எண்ணம் கொண்டு செலுத்தப்படும் ஜடாக்கினி மூல சக்தியை
2.விண்ணை இலக்காகக் கொண்டு செலுத்தப்பட்டால்
3.அதையே நம் வாழ்வின் இலட்சியமாகக் கொண்டால்
4.அந்தச் சக்தி குறைவுபடாது மேன்மேலும் வளரும்…! என்பதே
5.இராமபாணம் திரும்ப வரும்…! என்று சொன்னதன் தொடர்.
ஜடாக்கினி அனுபவத்தில் வான்மீகி மாமகரிஷி மாத்திரம் தப்பித்துக் கொண்டாரா…? அவர் பெற்ற அனுபவப் பாட நிலை என்ன…?
1.ஜடாக்கினி செயல் சக்தியைச் செலுத்திக் கண்ட “ஓர் அனுபவமாக..”
2.வாலி வதம்…! என்ற பாங்கில்
3.இராமன் தலை குனிந்தான்…! (மறைந்திருந்து தாக்கியது) என்பதன் பொருள் என்ன…?
ஆச்சா மரத்தை வெட்டுபவனுக்கு அந்த வலுவான மரத்தை முறித்திட வலுவான சக்தி மாத்திரம் போதாது. அந்த ஆயுதம் கூர்படத் தீட்டப்பட்டிருக்க வேண்டும்.
“தான் பெற்ற தவ சக்தியை” வான்மீகி கூர்பார்த்த விதம்… ஆச்சா மரத்தை வெட்டும் செயல் போல் அவர் செயல் நிலை இருந்தாலும் சபரி அன்று அவரைக் கேட்டாள் “என்னையும் வானத்தில் இருத்த முடியுமா…? என்று…!”
அங்கே அந்த உபதேசத் தத்துவம் மழுங்கி விட்ட ஆயுதத்தால் ஆச்சா மரத்தை வெட்ட முடியுமா…?
உலக இயல் என்னும் பிடிப்பில் (உலகப் பற்று) “ஆச்சா மரம்…” என்பதெல்லாம் சொல் நாமம் பெயர் விளக்கத்திற்காகச் சூட்சமமாகக் கொடுக்கப்பட்டது தான்.
ஏனென்றால் நம் கவனம் ஞானத்தை வளர்த்திடும் எண்ணத்தில் நிலை பெற்றிருக்க வேண்டும்.
இது சொல் ஈர்க்கும் செயல் மாத்திரமல்ல…! இதிலே வலியுறுத்தும் காரியார்த்தம் (நுட்பம்) எது என்றால் “ஊசி முனைத் துவாரத்தில் நீர் குறைந்துவிடும்…” என்ற பொருளின் விளக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.
அதைப் புரிந்து கொண்டால் ஞானத்தை வளர்க்க உதவாத… நம் ஆத்ம பலத்தை வீரியப்படுத்த உதவாத எந்தச் செயலையும்…
1.உற்றுக் கேட்கவும் வேண்டாம்…!
2.அதிசயித்துப் பார்க்கவும் வேண்டாம்…!.
3.”பெருமாள் படியளந்தான்…” என்பது போல் இருக்க வேண்டுமே தவிர
4.நாம் எடுக்கும் வீரிய சக்தி நம்முடைய உயிராத்மாவிற்கு அழியாச் சொத்தாக இருக்க வேண்டும்.

மின்னலைப் பாருடா… என்றார் குருநாதர்
அகஸ்தியன் தாய் கருவில் சிசுவாக இருக்கப்படும் பொழுது அவனின் தாய் தந்தையர்கள் விஷத்தன்மை கொண்ட மிருகங்களிடமிருந்தும் மற்ற விஷ ஜெந்துக்களிடமிருந்தும் தப்பிக் கொள்ளவும் மின்னல்களில் இருந்து தப்பிக் கொள்ளவும் பல பல பச்சிலைகளையும் மூலிகைகளையும் உபயோகப்படுத்தினார்கள்.
குருநாதர் ஒரு சமயம் என்ன செய்தார்…? அவர் கையிலே பச்சிலையை வைத்து இருக்கின்றார். அது எனக்குத் (ஞானகுரு) தெரியாது.
நீ மின்னலைப் பார்…! என்று என்னிடம் சொன்னனார். அந்தச் சமயத்தில் அவருக்கும் எனக்கும் சண்டை வந்துவிட்டது. அவர் கையில் பச்சிலை வைத்திருந்தது எனக்குத் தெரியாது.
ஆனால் என் கையைத் தொடுகிறார். மின்னலைப் பாருடா…! என்று கட்டாயப்படுத்துகின்றார்.
சாமி…! நான் பிள்ளை குட்டிக்காரன். நீங்கள் கூப்பிட்டீர்கள் என்று உங்களுடன் வந்துவிட்டேன். மின்னலைப் பார்த்து என் கண்கள் இல்லாமல் போய் விட்டால் நான் என்ன செய்வது…? என்று சொல்கிறேன்.
நான் (ஈஸ்வரபட்டர்) சொல்வதைக் கேட்கிறேன் என்று சொல்லி வந்தாய் அல்லவா. “சரி” என்று சொல்லித் தானே வந்தாய். உன் மனைவியை உடல் நலம் பெறச் செய்தேன். அதன்படி நான் சொல்வதைக் கேட்கிறேன் என்று சொல்லி வந்தாய். அப்படியானால் நான் சொல்வதைக் கேட்க வேண்டுமா… இல்லையா…? என்று இப்படிக் கேட்கிறார்.
நான் என்ன செய்யட்டும்…? எனக்கு வேறு வழி இல்லை…!
குருநாதர் பச்சிலையை கையில் வைத்துக் கொண்டு என்னைத் தொடுகின்றார். மின்னல் தாக்கப்படும் பொழுது மின்னலைப் பார் என்று சொல்கின்றார்.
விண்ணிலே விஷத் தன்மைகள் தாக்கும் பொழுது தான் மோதலாகின்றது. அப்பொழுது பளீர்… என்று மின்னலாகப் பாய்கின்றது.
1.விஷம் தாக்கப்பட்டுத் தான் வெப்பம் ஆகின்றது…
2.விஷத்தின் தாக்குதலால் தான் நம் உயிரிலும் வெப்பம் உருவாகிறது… அதனுடைய இயக்கமும் ஆகின்றது
3.ஆனால் அதீத விஷம் தாக்கப்படும்போது இருளாகின்றது.
சாதாரணமாக நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு அவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விஷம் தேவை. விஷம் அதிகம் ஆனால் நம் செயலையே மறக்கச் செய்து விடுகின்றது.
உப்புப் போட்டால் ருசியாகத் தான் இருக்கின்றது. அதிகமாகப் போட்டால் ஓ…ய்ய்….! என்று வாந்தி வருகின்றது. சாப்பிட முடியாது..!
அளவை அறிந்து போட்டால் தான் சாப்பிட முடியும். ஆகவே அதன் உணர்வுக்கொப்ப மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்காக இதை எல்லாம் குருநாதர் அனுபவபூர்வமாகக் காட்டுகின்றார்.
அவர் இதை எல்லாம் விளக்கமாகச் சொன்ன பின்…
1.அவர் சொன்னபடி மின்னலைப் பார்த்தவுடன் மிகவும் ஆனந்தமாக இருந்தது
2.அறிவின் தன்மை எனக்குள் வருகின்றது,…
3.அறிந்து கொள்ளக் கூடிய உணர்வுகள் அந்த மின் கதிர்கள் என்னென்ன ஆகின்றதோ அது எல்லாம் தெரிகிறது
4.வான மண்டலத்தில் உள்ளதை எல்லாம் அறியும்படி செய்தார் குருநாதர்.
மின்னல் வரும் பொழுது அது எங்கெங்கெல்லாம் ஊடுருவுகிறது என்று அதையெல்லாம் அறியக்கூடிய சக்தி வந்தது. அதை அப்பொழுது தெரியப்படுத்துகின்றார்.
முதலில் அவர் பச்சிலையைக் காண்பிக்கவில்லை. கையில் வைத்துக் கொண்டு என்னைத் தொடுகின்றார். நான் மின்னலை பார்க்க மாட்டேன் என்று சொல்கின்றேன். பின் தான் விளக்கம் சொல்கிறார்.
ஏனென்றால்
1.உனக்குச் சக்தி கொடுக்கத்தான் நான் இதைச் செய்தேன்
2.இந்த பச்சிலைகளால் தான் அகஸ்தியன் அந்த ஆற்றலைப் பெற்றான்
3.அதன் உணர்வின் துணை கொண்டு தான் ஒளியாக மாறினான்
அதே பச்சிலையின் உணர்வுகளை எடுக்கப்படும்போது அவன் பெற்ற உணர்வை நீயும் பெறும் பொழுது உனக்குள்ளும் தீமைகள் வராது அந்த விஷத்தை முறிக்கும் சக்தி கிடைக்கின்றது என்று அங்கே தெளிவாக்குகிறார் குருநாதர்.
குருநாதர் பார்ப்பது போல நானும் மின்னலைப் பார்த்து அந்த மின்னல்களின் ஒளிக்கற்றைகளை நான் நுகரப்படும் பொழுது அது என்னுடைய இரத்தத்தில் கலக்கின்றது.
இரத்தத்தின் வழி உடலுக்குள் இருக்கும் எல்லா அணுக்களுக்கும் அந்தச் சக்தி கிடைக்கின்றது எல்லா அணுக்களுக்கும் கிடைக்கும் பொழுது ஒளியின் அணுக்களாக மாறுகின்றது.
இன்று எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்று உபயோகப்படுத்தி எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இறந்த டைனோசர் (DINOSAUR) என்ற உயிரினங்கள் வாழ்ந்த இடங்களையும் அதன் உடல் புதைந்த இடங்களையும் விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கின்றனர்.
அதைப் போன்று தான்
1.அகண்ட அண்டமும் அந்த உணர்வும் எப்படி விளைந்தது…? என்று அகஸ்தியன் ஆதியிலே கண்டான்
2.அவனைப் போல் நீயும் உனக்குள் அதை எல்லாம் அறிய வேண்டாமா…? என்று வினா எழுப்புகிறார்
3.அதற்காக வேண்டித்தான் உன்னை மின்னலைப் பார்க்கச் சொன்னேன் என்றார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.
அவர் சொன்ன வழிப்படி அறிந்து கொண்ட பின் அந்த உணர்வு வருகின்றது. என்னுடைய எண்ணங்களில் அதைப் பதிவு செய்யப்படும் பொழுது
1.இந்த காற்றில் இருக்கும் அகஸ்தியரின் உணர்வை எடுத்து நானும் அறிய முடிகின்றது
2.அதன் உணர்வை வைத்து நானும் பேச முடிகின்றது
3.பேசும் உணர்வை செவி வழி நீங்கள் கேட்டீர்கள் என்றால்…
4.அகஸ்தியன் கண்ட உண்மைகளை எல்லாம் பெற வேண்டுமென்று ஆசைப்பட்டால்…
5.இந்த உணர்வின் தன்மை உயிரிலே பட்டபின் உங்களுக்குள் பிரம்மமாகி
6.அகஸ்தியன் கண்ட அந்த உண்மைகளை நீங்களும் நிச்சயம் அறிய முடியும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
யாகத்தைச் செய்து மந்திரங்களைச் சொல்லி பொருள்களையும் சோமபானத்தையும் தீயில் போட்டு அந்த உணர்வை எல்லாம் ஏற்றினால் தீமைகள் போய்விடும்… நோய் போய்விடும்…! என்று சொன்னால் எப்படிப் போகும்…?
இன்னும் கொஞ்சம் தீமையைச் சேர்த்துக் கொள்கின்றமே தவிர தீமை போகாது.
அந்த மந்திரத்தைச் சொல்லும் பொழுது இன்னொரு மனித உடலிலிருந்து விளைந்த உணர்வுகள் தான் நமக்குள் பதிவாகும். ஒரு ஆவியின் தொடர்பை நாம் வளர்த்துக் கொள்கின்றோம்.
மந்திரம் சொல்லி ஜெபித்து நோய் போய்விடும் என்று சொன்னால் கொஞ்ச நேரத்திற்கு வெயிலுக்குக் குடை பிடித்த மாதிரி தான் அந்த நிலை. அதனால் நமக்கு நல்ல பலன் இல்லை.
நோயை நீக்க வேண்டும் என்று மருத்துவரிடம் போகின்றோம். அவர் கொடுக்கும் (இங்கிலீஷ்) மருந்தைச் சாப்பிட்டுக் கொண்டே இருந்தால் நன்றாக இருக்கும். ஆனால் மருந்து அதிகமாக அதிகமாக என்ன செய்கின்றது…?
நோயை நீக்கினாலும்… அதையே மடக்கிப் போட்டு அது முன்னாடி வந்துவிடுகிறது. பிறகு இது அதிகமாகிப் போனதென்றால் இதை மாற்றுவதற்கு வேறோரு மருந்தைச் சாப்பிட வேண்டும்.
எப்பொழுதுமே இந்த உடலை விட்டு போகத்தான் போகிறது நம் உயிர். ஆனால் இந்த உடலில் இருக்கும் போது தான் அந்த மகரிஷிகளின் சக்தியைப் பெறுகின்றோம் என்பதற்காக வேண்டித் தற்காலிகமாகச் சில மருந்துகளைச் சாப்பிடுவதனால் தவறில்லை.
நம்மால் எண்ணத்தால் எண்ண முடியவில்லை. அந்த நேரத்தில் சில மருந்துகளைச் சாப்பிட்டுக் கொஞ்சம் வலு கூட்டி நம் எண்ணத்தை மீண்டும் வலு கூட்டி அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெருக்கிப் பழக வேண்டும்.
வாய்க்காலில் தண்ணீர் போகிறது. திடீரென ஒரு பக்கம் உடைப்பு எடுத்தால் என்ன செய்ய முடியும்…? மறுபடியும் மண்ணைப் போட்டீர்கள் என்றால் நிற்குமா…? மண்ணைப் போடப் போட மண்ணைக் கரைத்து கொண்டே போகும்.
அப்போது மண்ணை மூட்டையாகக் கட்டி அந்த மூட்டையுடன் ஒன்றோடு ஒன்று இணைத்துப் போட்டு விட்டோம் என்றால் நின்று விடுகிறது. பிறகு மண்ணைக் கொட்டிச் சீராக்க முடியும். அடைப்பை முழுவதும் நிறுத்த முடியும்.
ஆகவே நம் உயிரை ஈசன் என்ற நிலையில் மதிக்க வேண்டும். ஈசன் வீற்றிருக்கக்கூடிய ஆலயம் உடல் பரிசுத்தமாக வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும். அதாவது
1.“உயிரால் தான் உருவாக்கப்பட்டது…!” என்று
2.அவனை முதன்மையாக் கருதி நாம் மதித்துப் பழக வேண்டும்.
3.நம் உடலையும் கோவிலாக மதிக்க வேண்டும்.
4.மனிதனாக உருவாக்கிய நல்ல குணங்களை நாம் காக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.


மாய ஒலி கேட்டு அறிவினை இழக்காமல் இருக்க மெய் ஒலியை நாம் அவசியம் பெற வேண்டும் – ஈஸ்வரபட்டர்
ஒரு விலங்கினம் நீர் குடிக்கும் ஓசையைக் கேட்டே அம்பெய்து அதைக் கொல்லக்கூடியவன் தான் தசரதன். அப்படிப்பட்ட செயலாகத் தான் ஒரு சந்தர்ப்பத்தில் சிரவணனைத் தசரதன் கொல்ல நேர்கிறது.
அந்தச் செயலை வான்மீகியார் சுட்டிக் காட்டிய நிலைகளில் ஒரு “சூட்சமப் பொருள் உள்ளது…!” அது என்ன..?
கண் பார்வை இல்லாத பெற்றோரைச் சுமந்து செல்பவன் தான் சிரவணன். ஒரு சமயம் அவனுடைய தாய் தந்தையர் “தாகம்…” என்று தண்ணீர் கேட்டதும் அதற்காக நீரைத் தேடி அலைந்தான்.
ஆனாலும்
1.நீர் கிடைக்கும் வரை அவன் எடுத்த எண்ணம் என்ன…?
2.கடமை என்ற சொல்லும் உண்டு.
3.கடமையின் பால் தன் உணர்வுதனை மாற்றிக் கொண்ட செயலும் உண்டு.
விலங்கினங்கள் நீர் அருந்தும் ஓசையைக் கொண்டே அந்த மிருகங்களைப் பார்க்காமலேயே மறைந்திருந்து குறி தவறாது அம்பெய்யும் ஆற்றல் பெற்றவன் தான் தசரதன்.
1.அதை வீரத்தில் சேர்ப்பதா…?
2.கற்ற வித்தையின் ஞானத்தில் சேர்ப்பதா…?
3.அல்லது உணர்வுகள் கூட்டிக் கொண்ட மோகம் அறிவுக் கண்ணை மறைத்ததாகச் சொல்வதா..?
ஏனென்றால் தசரதன் அவன் இளமையின் ஆற்றலால் கற்றுக் கொண்டதுதான் அந்தக் கலை. அவனுடைய செவிப் புலன் அறிவாக ஓசையைக் கொண்டு குறிப்பறியும் ஆற்றலைக் காட்டியது ஞானம் தான்.
ஆகவே வான்மீகியார் கூற வந்த தெளிந்த பொருள் என்ன…?
காமத்தின் விளைவால் மோகத்தில் கிளர்ந்தெழுந்த உணர்வுகளின் செயல்பாடு… சரீர உணர்வின் இயக்கத்தால்… “கருத்தறிய முடியாத அலட்சிய மனோபாவனையக் காட்டியது தான்…” தசரதனின் அந்தச் செயல்.
தண்ணீருக்காகத் தேடிய சிரவணன் அவன் எடுத்த சஞ்சல உணர்வலைகள் பாசத்தின் அடியாக பதைபதைப்பாக அவன் அறிவின் பொறி கலக்கமுற்றது.
அதனால் குறிப்பறியாத ஈர்க்கும் செயலில்… எதிர் மோதல் குணங்கள் உணர்வுகளின் உந்துதலால்… குறிப்பறியாச் செயலுக்கு அறிவின் மயக்கமே ஒன்றை ஒன்று பற்றிக் கொண்டு… “வினைச் செயலின் விளையாட்டாக சிரவணன் நீர் மொள்ளும் சப்தம் அமைந்தது…!”
1.அப்படிப்பட்ட “சிரவணனின் அறிவின் மயக்கமும்”
2.ஒலி கொண்டு அறியும் ஆற்றலின் அலட்சியத்தால் விளைந்த “தசரதனின் அறிவின் மயக்கமும்”
3.சந்தர்ப்பத்தால் சந்தித்த சந்திப்பு…
4.அம்பாகச் சிரவணன் உடலில் பட்டுத் தைத்து அவன் உயிரைக் குடிக்க முனைந்தது.
ஆனால் ஞான வழிச் செயல் ஆக்கத்திற்குத் தனித் தன்மையான பொருளும் உண்டு.
எப்படி…?
செவிப்புலனால் ஒலி ஈர்க்கும் அறிவு செயல்படும் அந்த நேரத்தில்
1.ஒளி கொண்ட ஒலி நாதத்தைத் தனக்குள் நிறைத்துக் கொண்டால்
2.புற உலகின்கண் எழும் சப்தங்களை உணர்ந்திட முடியாத செயலுக்கு
3.நமக்குள் சேர்க்கும் மெய் ஒலியின் அந்த ஓங்கார நாதமே… அதிர்வுகளாக ஓசையைப் பெருக்கச் செய்து
4.அதே தொடரில் ஆத்ம வலுவைக் வலுக் கூட்டிக் கொள்ளும் உயிர் கலப்பால்
5.மெய்யை அறியும் உயர் ஞானமாக அது அமைந்து
6.தெளிவான ஆக்கபூர்வமான செயல்களைச் செய்விக்கச் செய்யும்.
ஆகவே…
1.ஒலி கொண்டு புலன்களால் அறிந்தாலும்
2.ஒளி கொண்டு ஒலியை ஊர்ஜிதப்படுத்திடும் மெய் ஞானம் பெற்றால் தான்
3.நம் செயல்கள் என்றுமே வளர்ப்பின் வளர்ப்பை வளர்க்கும் செயலாக நன்மை பயக்கும்.

இந்தப் பிரபஞ்சத்தின் உண்மைகளை நீங்களும் முழுமையாகக் காண முடியும்
1.இருபத்தியேழு நட்சத்திரங்கள் உமிழ்த்தக் கூடிய கதிரியக்கச் சக்திகள் அவை ஒவ்வொன்றும் கலவையாகும் போது எப்படி மாறுகின்றது…?”
2.அதிலிருந்து வரும் ஒளிக் கதிர்கள் தங்கமாக எப்படி மாறுகிறது..?
3.செவ்வாய்க் கோளை எடுத்துக் கொண்டால் அதிலே சிவப்பு நிறமான நிலைகள் எப்படி இருக்கின்றது…?
4.புதன் கோளை எடுத்துக் கொண்டால் மஞ்சள் நிறமாக எப்படி வருகின்றது…?
5.பல நட்சத்திரங்களின் கலவைகள் இதனுடன் (புதன்) கலக்கப்படும் பொழுது எத்தனையோ வகையான உலோகத் தன்மைகளாக அது எப்படி மாறிக் கொண்டிருக்கின்றது…?
6.வியாழன் கோள் அந்த 27 நட்சத்திரத்தின் சக்திகளை எடுக்கும் போது அந்தக் கதிர்வீச்சின் தன்மையைத் தனக்குள் அடக்கி ஒரு பொருளுக்குள் ஊடுருவி “அதை இணைக்கும் சக்தியாக” எப்படிக் கொடுக்கின்றது…?
7.இதிலிருந்து பிரிந்து செல்லும் ஆவித் தன்மையைச் சனிக்கோள் எடுத்து நீராக எப்படி மாற்றுகின்றது…? என்று நமது குருநாதர் இது அனைத்தையும் தெளிவாகக் கூறுகின்றார்
அதே சமயத்தில் ஒவ்வொரு கோளும் அது தனக்கென்று பல உபகோள்களை வளர்க்கின்றது. ஒவ்வொரு கோளுக்கும் எட்டு பத்து பனிரெண்டு என்ற எண்ணிக்கையில் உபகோள்கள் உண்டு. அது ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான சக்திகளை எடுத்துச் சுழன்று வருகிறது.
வியாழன் கோளுக்கோ 27 உபகோள்கள் உண்டு. இந்த இருபத்தி ஏழும் 27 நட்சத்திரங்களுக்கு உண்டான நிலைகளை இது கவர்ந்து தனக்குள் எடுத்துப் பல கலவைகளாகச் சேர்க்கின்றது.
1.அதில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித்தியாசமாகச் சுழன்று வரும்.
2.அதிலே ஒன்று ஒரு பக்கம் சுற்றி வரும் மற்றோன்று எதிர் பக்கமாகச் சுழன்று வரும்.
இன்றைக்கும் விஞ்ஞானிகள் இதைக் கண்டு கொள்வதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். அது மாறி வரும் பொழுது வேறு ஒரு திசையில் வருகின்றதா… அது என்ன…? என்கிற வகையில் இன்னும் ஆராய்ச்சி செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.
ஆனால் அந்த இருபத்தி ஏழு கோள்களும் அது சுழன்று கொண்டு இருக்கின்றது. 27 நட்சத்திரங்களின் சக்திகளை அது கவர்ந்து அதற்குள் ஒரு கலவையாக்கி இந்த உணர்வின் தன்மை ஒரு புதுவிதமான கதிரியக்கமாக மாற்றுகின்றது.
சனிக்கோள் எப்படித் தான் கவர்ந்ததை உறை பனியாக மாற்றுகின்றதோ இதைப் போல வியாழன் கோளிலும் உறையும் பனியாக மாற்றும் சக்தி அங்கு நடந்து கொண்டுதான் இருக்கின்றது.
இதையெல்லாம் உங்களிடம் ஏன் சொல்கிறேன் என்றால் நாளை எதிர்காலத்தில் இந்த உண்மைகளையெல்லாம் நீங்கள் அறிய வேண்டும் என்பதற்குத்தான்…!
1.நான் மட்டுமல்ல… உங்களாலும் அதைக் காண முடியும்.
2.இந்தப் பிரபஞ்சத்தின் உண்மைகளைக் கண்டுணர்ந்து நீங்களும் தெளிந்து
3.இந்த உலகில் வரும் இருளை மாய்க்க கூடிய சக்தியாக வரவேண்டும்.
ஏனென்றால் நீங்கள் அனைவரும் பேரின்பப் பெருவாழ்வு வாழ வேண்டும் என்பதற்காக குருநாதர் காட்டிய அருள் வழியில் இதை உணர்த்துகின்றோம் (ஞானகுரு).
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
சாதாரணமாக மனிதர் பாம்பினைக் கண்டால் அஞ்சுகின்றார்.
ஆனால் பாம்பு பிடிப்பதில் தெளிந்த மனிதன் ஒருவன் ஒரு பாம்பைப் பிடிக்கச் சென்றால் பாம்பு “அவனைக் கண்டு” அஞ்சுகின்றது.
அவன் கையில் ஒரு குச்சி மட்டுமே இருக்கும். பாம்பைக் கண்டு நாம் பயப்பட்டோம் என்றால் பாம்பு இந்த உணர்வை நுகர்ந்து…, “சிர்…ர்ர்…” என்று சீறித் தாக்கும் “பயந்த மனிதன் தாக்குகின்றான்” என்று உணர்கின்றது.
தெளிந்த மனிதன் வலிமை கண்டு “இவன் நம்மைத் தாக்கிவிடுவான்” என்று பாம்பு அஞ்சி ஓடுகின்றது. ஆனால் பயந்தவன் தாக்கும் பொழுது பாம்பும் அஞ்சி இவனைத் தாக்குகின்றது.
வலிமையுள்ளதை நுகர்ந்துணரும் சக்தி பிற உயிரினங்களுக்கு உண்டு. மனிதருக்கும் இந்த அறிவு இருப்பினும் இந்த அறிவை சீராகப் பயன்படுத்துவதில்லை. ஆதலால் நாம் அறியும் தன்மை இழந்திருக்கின்றோம்.
பாம்பு பிடிப்பதில் தெளிந்த மனிதன் இந்தப் புற்றுக்குள் பாம்பு இருக்கிறது என்று அறிகின்றான். இவனின் மணத்தை நுகரும் பாம்பு புற்றுக்குள் அஞ்சி ஒடுங்குகின்றது.
இவன் தூண்டும்போது வெளிவரும் பாம்பு இவனைத் தாக்குவதில்லை. அஞ்சி ஓடுகின்றது. ஆனால் இவன் பாம்பை எளிதில் பிடித்து கவட்டையில் போட்டுப் பாம்பு உயிருடன் இருக்கும் பொழுதே பாம்பின் தோலை உரிக்கின்றான்.
இத்தகைய உணர்வுகள் பாம்பு பிடிப்பவனிடத்தில் இருப்பதால் “அவனிடமிருந்து வெளிப்படும் மணத்தை” பாம்பினம் காண்கிறது.
ஆகவே அவனைக் கண்டு அஞ்சி ஓடுகின்றது. சாதாரண மனிதனைக் கண்டால் சீறித் தாக்குகின்றது எதிர்த்து நிற்கின்றது.
இதைப் போன்றுதான் வாழ்க்கையில் பகைமை என்ற உணர்வுகள் எத்தனையோ நம்மிடத்தில் வருகின்றது.
நாம் அன்பும் பண்பும் பரிவும் கொண்டு பிறருடைய கஷ்டங்களை நோய்களைக் கேட்டறிந்து உபகாரம் செய்தாலும் நாம் கேட்டறிந்த உணர்வுகள் “ஓ…ம் நமசிவாய…” என்று நம் உடலாக மாற்றுகின்றது.
அதுவே வினையாகின்றது, வினைக்கு நாயகனாக அதன் வலுவைக் காண்பிக்கத் தொடங்கிவிடுகின்றது. இது போன்ற தீமைகளிலிருந்து எங்ஙனம் நாம் விடுபட வேண்டும்…? என்பதைச் சிந்திக்க வேண்டும்.
ஒரு இயந்திரத்தை உருவாக்கும் இஞ்சினியர்
1.அந்த இயந்திரத்தில் எங்கெங்கே “அழுத்தம்” அதிகமாக இருக்கும்?
2.எங்கெங்கே “வலிமை” தேவை? என்பதைக் கணக்கிட்டு
3.உலோகத் தன்மையின் வலிமையையும் இயந்திரத்தில் ஏற்படும் உராய்வையும் கணக்கிட்டு
4.ஒரு இயந்திரத்தை உருவாக்குகின்றார்.
ஆனால் இயந்திரத்தைச் சோதித்துப் பார்க்கும் பொழுது உலோகக் கலவையில் வலு சிறிது குறைவாக இருக்கும் பொழுது இயந்திரம் நொறுங்கி விடுகின்றது.
பின் “எதனால்… இப்படி நேர்ந்தது…?” என்று சிந்திக்கின்றார். “சிந்தித்து…” இயந்திரத்திற்குண்டான வலிமையைக் கூட்டுகின்றார் இதனைத் தொடர்ந்து சரியான ஒரு இயந்திரத்தை உருவாக்குகின்றார்.
இதைப் போன்று தான் ஞானத்தின் நிலைகள்.
1.தீமை என்று ஒன்று வரும் பொழுது
2.நாம் அருள் ஞானிகளின் உணர்வை நம்முள் பதிவாக்கினால்
3.உடனே சிந்தனை தூண்டப்பட்டு
4.தீமைகளை அகற்றும் தன்மை நம்மிடத்தில் உருவாகின்றது.
5.அருள் ஞானிகளின் உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது அது நம்முள் விஷத்தின் தன்மையை அடக்கி
6.நம்மிடத்தில் சிந்திக்கக்கூடிய மன வலிமையைக் கூட்டுகின்றது.


மகரிஷிகளால் சொல்லப்பட்ட முக்கியமான கலையைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது
சமமான நிலை நிலைக்கச் சாந்த நிலை தந்திடுவாய் ஈஸ்வரா…! என்று தியானத்தில் வேண்டுகிறோம். அதனின் உண்மைப் பொருள் என்ன..?
சாந்த குணம் பெற வேண்டும் என்ற எண்ணம் கொள்கிறோம். முயற்சியும் செய்கிறோம்… ஆனால் நம் முயற்சி செயலுக்கு வரும் பொழுது
1.நமக்குள் வந்து மோதும் உணர்வுகளின் மோதல்களை
2.தன் எண்ணம் கொண்டு தனக்குத் தானே சமப்படுத்தும் செயலுக்கு
3.அதை யார் எப்படிச் செயலாக்கம் செய்வது…?
இதன் பொருள் புரிந்ததா,.?
1.ஒரு சுரக்குடுவை நீரில் அமிழ்த்தப்பட்டால் “பொட…பொட…!” என்று சப்தமிட்டுத் தான் நீரை நிறைத்துக் கொள்கிறது.
2.ஆனால் அதே குடுவைக்குள் நீர் மொள்ளும் பொழுது “சப்தமே வராமல்…!” பக்குவமாக நிறைத்துக் கொள்ளும் முறையும் உண்டு.
3.இந்த இரண்டு செயல்களுக்கும் பொதுவானதே – நமக்குள் வந்து மோதும் உணர்வுகள்.
உதாரணமாக ஒரு சஞ்சலமான உணர்வை ஊட்டி விட்டால் பரபரப்பாகின்றோம்.. பதட்டமாகின்றோம்…! அதன் பின் உணர்ச்சிவசப்பட்ட இயக்கமாகத் தான் வரும்.
அப்பொழுது அந்தச் செயலால் சாந்த குணத்தைக் கூட்ட முடியுமா…?
ஒரு ஞானவான் சுரக் குடுவைக்குள் (சப்தமில்லாது) பக்குவமாக நீரை நிறைத்துக் கொள்வது போல் சமமான உணர்வுகள் கொண்டு செயல்படும் செயலில் “நிதானம் என்ற பொறுமை குணம்…” நமக்கு அவசியம் தேவை.
உணர்வுகளை மாற்றிட நாம் முயலும் பொழுது
1.அந்த மாற்று அலைத் தாக்குதலால் நாம் எடுத்த உணர்வுகளின் ஈர்ப்பில்
2.வேகம் கொண்டு தாக்கிடும் செயலில்… நாம் “ஆத்ம சுத்தி” பாதிக்கப்படுவது நிச்சயம்.
அப்படியானால் பரபரப்பான இந்த உலக வாழ்க்கை நடை முறையில் வாழும் மனிதர்கள் ஒவ்வொரு நிமிடமும் தான் எடுக்கும் உணர்வுகள் கொண்டு
1.அந்த உணர்வுகளுக்கு ஒத்த தீமையான அணுக்கள் தன் ஈர்ப்பில் ஒட்டிக் கொள்ளும் பொழுது
2.அதை நல்லதாக்கிச் செயல்படுத்த வேண்டிய நடை முறைச் செயல் என்ன…?
நாம் எடுக்கும் உயரிய ஜெப எண்ணத்தில்
1.அவ்வப்பொழுது வந்து மோதும் மாற்று அலைகளைத் தவிர்த்து
2.தான் இருக்கும் வழியிலேயே தன்னைத் தான் தற்காத்துக் கொள்ளவே “ஆத்ம சுத்தி என்ற ஆயுதம்…!”
ஆத்மாவைப் புனிதப்படுத்திக் கொள்வது என்பது என்ன…? எப்படி…?
நம் வாழ்க்கை நடை முறையில் எதிர் நிலையான உணர்வுகள் நமக்குள் வந்து மோதும் சமயத்தில் எல்லாம்… அதனால் கிளர்ந்தெழும் செயலைத் தவிர்த்து
1.ஓ…ம் ஈஸ்வரா…! என்ற ஒலி நாதத்தைக் கூட்டி (ஒரு பிரேக்)
2.அவ்வாறு சொல்லும் பொழுதெல்லாம் புருவ மத்தியில் உயிரைப் பரிபூரணமாக எண்ணி
3.அந்த ஒலி நாத உள் நிறைவால்
4.தன் ஆத்மாவிற்குப் பாதுகாப்பான வளையமிட்டுக் கொள்வதே ஆத்ம சுத்தியின் சூட்சமம்.
தீமையான உணர்வுகள் வரும் பொழுது இப்படி ஆத்ம சுத்தி செய்து அதன் மூலமாக உயர்ந்த உணர்வுகளைக் கூட்டிக் கொள்ளும் செயலினால் மனித ஞானம் அடையப் பெறும் நிலை என்ன…?
இன்றைய மனித வாழ்க்கையில் விஞ்ஞானம் கண்டுபிடித்துள்ள வாகனங்கள் இயந்திரங்கள் உண்டாக்கிடும் ஓசைகளினாலும் இன்றுள்ள இசையின் சுவைக்கொப்ப மனதில் கூட்டிக் கொள்ளும் விகாரங்களினாலும் எழுந்திடும் ஓசைகளைத்தான் நாம் ஒவ்வொரு நாளும் கேட்கின்றோம்.
அவை எல்லாம் நம் செவிப்புலனில் பட்டு நமக்குள் எத்தனையோ மாற்றங்களை ஏற்படுத்துகிறது.
விநாயகன் உருவத்திற்கு “அகண்ட காதுகளையும்..” ஓ…ம் என்று போட்டு விநாயகரைப் “பிரணவத்திற்கு உரியவன்…!” என்றும் ஞானிகள் காட்டியுள்ளார்கள்.
1.ஓங்கார ஒலி நாதத்தைச் செவிமடுத்திடும் சூட்சமத்தைப் புரிந்து
2.அதன் வழியில் அருள் உணர்வுகளை நமக்குள் கூட்டிக் கொண்டே வந்தால்
3.அருள் உணர்வுகள் நமக்குள் ஜீவன் பெற்று அந்த நல்வினைகளாக நமக்குள் சேரும்.
இதனால் நடைமுறை வாழ்க்கையில் பரபரப்பான பதட்டமடையச் செய்யும் ஓசைகள் எத்தனை எத்தனையோ வந்து நம் மீது மோதினாலும் அதனை ஈர்க்காது மெய் ஒலியைக் கூட்டி மெய் ஒளியாக மாற்றிடும் செயலாக அமைந்துவிடும்.
1.இவை எல்லாம் மகரிஷிகளால் “கலைகள்…” என்று காட்டப்பட்ட
2.ஒளியான “உயிரணுக்களின் சங்கமம்” உணர்ந்து கொள்ள வேண்டும்.
ஆகவே சமமான நிலை நிலைக்க வேண்டும் என்று சொன்னபடி நாம் செயலில் செயல்பட வேண்டிய முறை இது தான்…!

செயற்கையாக உருவாக்கப்பட்ட அறிவுத் திறனைப் பற்றி (ARTIFICIAL INTELLIGENCE) அறிந்து கொள்ளுங்கள்
கடந்த கால மனிதர்கள் (பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்) அவர்கள் நம்மைப் போன்று வேலை செய்வதில்லை. மிருகங்களைப் போலத்தான் தன் உணவுக்காகத் தேடி அலைவதும்… உணவு உட்கொள்ளும் நிலையும் இருந்து வந்தது.
அவர்கள் சேமித்து வைத்திருக்கும் உணவும் சிறிதளவு தான் இருக்கும். ஆனால் அதுவும் சிறிது காலத்தில் இருக்காது… சேமித்து வைத்தால் நிற்காது (கெட்டுவிடும்) என்று அக்கால மனிதர்கள் சேமித்து வைப்பது இல்லை. “கெட்டுப் போய் விட்டது…” என்று விட்டு விட்டுச் சென்று விடுவார்கள்.
1.உயிரினங்களைப் போலத் தான் அன்றைய மனிதர்கள் இருந்தார்கள்
2.ஆனாலும் இயற்கையின் நிலைகளைத் தன் எண்ணத்தால் நுகர்ந்து அறியும் சக்தி பெற்றவர்கள்.
அவர்கள் எண்ணங்கள் அப்படி இருந்தாலும் இன்று இருக்கும் விஞ்ஞான அறிவு எப்படி வருகின்றது…?
முந்தி எல்லாம் பள்ளிக்கூடங்களில் “மாகாணி வாய்ப்பாடு” சொல்வார்கள். அந்த வாய்ப்பாடுகளைச் சொல்லப் போகும் போது பேசிக் கொண்டிருக்கும்போதே இத்தனைக்கு இத்தனை என்ன…? என்று கேட்டால் உடனே சொல்லிவிடுவார்கள்.
இப்பொழுது விஞ்ஞான அறிவில் வந்த மாணவர்களை எடுத்துக் கொண்டால் கால்குலேட்டர் வேண்டும். அதை வைத்துத் தட்டிப் பார்த்துத் தான் சொல்வார்கள். கால்குலேட்டர் இல்லாமல் அவர்களால் சொல்ல முடியாது.
1.மனிதனுடைய மூளை வளர்ச்சி அங்கே தான் (இயந்திரத்திற்கு) போகிறது
2.இன்னொன்றை நாடும் போது சுயமாக சிந்திக்கும் நிலை இழக்கப்படுகின்றது.
3.எந்த இயந்திரத்தால் மனிதன் செயல்பட்டானோ அந்த இயந்திரத்தின் துணை வேண்டித்தான் அவன் எண்ணம் செல்கின்றது.
இயந்திரத்தின் நிலையை வடிவமைத்த… அது எந்த இன்ஜினியரோ அல்லது விஞ்ஞானியோ… அவன் உணர்வுதான் தான் வருகின்றது. இந்த உடலின் இச்சைக்குத் தான் இது நடக்கின்றது
இதைப்போல செயற்கையில் செய்யப்பட்ட கெமிக்கல் கலந்த உணர்வு இயக்கப்பட்டு… எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலையில் இவனால் உருவாக்கப்பட்ட நிலைகள் அந்த அதிர்வுகளைக் கொடுக்கும் பொழுது அதன் செயலாக்கம் நடக்கின்றது.
கம்ப்யூட்டர் அல்லது டிவி.. ஃபோன் இதை எல்லாம் பார்த்தோம் என்றால் படமாகத் தெரிகிறது. அதை ஒவ்வொரு நாளும் பார்த்துப் பார்த்துப் பழகி விட்டால் அதே உணர்வின் சிந்தனை தான் நமக்குள் வரும். அதையே தான் பார்த்துக் கொண்டிருப்போம்.
உதாரணமாக ஒரு கம்ப்யூட்டர் இயக்கக்கூடியவர்கள் அதிலேயே உட்கார்ந்திருந்தால்…
1.ஒரு பிரமை பிடித்த மாதிரித் தான் இருப்பார்கள்.
2.சகஜ வாழ்க்கையில் அதற்கு மேற்கொண்டு என்ன செய்வது…? ஏது செய்வது…? என்று தெரிவதில்லை.
3.இயல்பான அறிவின் ஞானம் இல்லாது போகிறது.
4.மனிதனால் இயக்கப்பட்ட அந்தக் கெமிக்கல் தான் இவன் உணர்வுக்குள் வளர்க்கப்பட்டுக் கொண்டு வருகிறது.
மனிதனால் செயற்கையில் இயக்கப்பட்டு எந்த விஷத்தன்மை கொண்ட அதிர்வின் ஒலி/ஒளிகளைக் காணுகின்றானோ அதே உணர்வுதான் இன்று மனிதனுக்குள் வளர்ந்து கொண்டே வருகின்றது.
இப்படி அந்த விஷத்தின் அலைகளைத் தனக்குள் வளர்த்துக் கொண்டு சிந்தனை இழக்கும் தன்மையாகத் தான் மனிதன் மாறுகின்றானே தவிர மெய் ஞான வழிக்கு வர முற்படவில்லை.
இவன் உடலில் விளைந்த செயற்கை அலைகள் வெளிப்படுவதை சூரியன் கவர்ந்து காற்றிலே பரவச் செய்கிறது.
1.அந்த எலெக்ட்ரானிக் சாதனங்களை மீண்டும் மீண்டும் உபயோகப்படுத்தும் போது
2.அதே உணர்வு தான் வரும் அதே உணர்வின் இயக்கமாகத் தான் வரும் (ARTIFICIAL INTELLIGENCE).
மனிதனுக்கு அடுத்த நிலையான உயர் ஞான வழிக்குச் செல்லும் நிலை தடைப்படுகின்றது..!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
நல்லதைப் பெறவேண்டும் என்று ஒருவர் ரொம்பவும் பிரியப்படுவார். நல்லதைச் செய்பவர் வேதனைப்படுக் கஷ்டப்பட்டவருக்கு ரொம்பவும் உதவி செய்கின்றார்.
ஆனால், இவர் உதவி செய்து கொண்டிருக்கும் பொழுது எல்லா உதவியும் வாங்கிக் கொண்ட அந்த ஆன்மா உடலில் பட்ட நோயின் தன்மை கொண்டு இறந்துவிட்டால் உடலை விட்டுப் பிரிந்து சென்றபின் எவர் உதவி செய்தாரோ அவர் உடலுக்குள் வரும்.
இவர் பக்தி கொண்ட ஆன்மாவாக இருப்பார். இருப்பினும் இந்த (உதவி செய்த) மனிதனை மட்டும் பக்தி கொண்டு இருப்பார். தெய்வத்தை எல்லாம் வேண்டினேன். எல்லாத் தெய்வமும் என்னைக் கைவிட்டது. தெய்வத்தின் மேல் அந்த நல்ல ஒழுக்கத்தின் மேல் வெறுப்பு உணர்வு இருக்கும்.
ஆனால், இவர் நல்லவர் எல்லோருக்கும் உதவி செய்திருப்பார். ஆனால், அந்த உதவியின் தன்மை கொண்டு பிறரிடம் நல்ல பேரும் புகழும் வாங்கியிருப்பார்.
கோவில்களுக்கு வேண்டிய நிலைகளை ஓடி ஓடியும் செய்திருப்பார். கோவிலில் காட்டிய பக்தியின் நிலைகள் கொண்டு ஒரு மனிதருக்கு ஓடிப் போய்.., அடடா.., முருகா இப்படிக் காப்பாற்ற வேண்டும் என்று சொல்லிச் சொல்லி உதவி செய்வார்.
அவர் (உதவி பெற்றவர்) இந்த நல்லவர் செய்த உதவியை மட்டும் தான் எண்ணுவார். முருகனை இவர் சொல்லும் பொழுதெல்லாம் அவர் வெறுப்பார்.
1.அந்த முருகன் என்னைக் கைவிட்டுவிட்டான்
2.நீ தானப்பா என்னைக் காப்பாற்றுகின்றாய் என்பார்.
அப்பொழுது இந்த உணர்வுகளை அதிகமாக விளைய வைத்து இவர் மேல் எண்ணமாகி அவர் இறந்தால் இவர் நினைவாகவே யார் உதவி செய்தாரோ செய்த நன்றிக்கு அவரை எண்ணி இந்த ஆன்மா உதவி செய்தவர் உடலுக்குள் வந்து சேர்ந்து விடும்.
எல்லாக் கோவிலுக்கும் பக்தியாகப் போய்ச் செய்து கொண்டிருந்தவர் இதற்கப்புறம் என்ன செய்வார் தெரியுமா…? கோவிலைக் கண்டாலே வெறுப்பு வரும்.
ஏனென்றால், “நோய்வாய்ப்பட்ட அந்த ஆன்மா.., இவருக்குள் வந்துவிட்டது அல்லவா…!” அவருக்குள் அது வெறுக்கச் செய்யும். இங்கே நல்ல உபதேசம் கேட்டுக் கொண்டிருந்தால் கூட உட்கார விடாமல் எழுப்பி வெளியில் இழுத்துக் கொண்டு போய்விடும்.
இது தான் பக்தி மார்க்கங்களில் நாம் செய்த நன்றியை நாம் பெற முடியாத நிலைகளில் நாம் செய்த நன்றியின் உணர்வுகள் அந்த எண்ண வலு எது பெற்றதோ அதன் உணர்வின் துணை கொண்டு நமக்குள் வந்துவிட்டால் இந்த மாதிரி ஆகிவிடுகின்றது.
நாம் அதற்கு நன்மை செய்தோம். ஆனால், யார் மீது அந்த வெறுப்புப்பட்டதோ அந்த வெறுக்கும் உணர்வு நமக்குள் வரும் பொழுது நல்ல ஒழுக்கத்தை இதுவே தடைப்படுத்தும்.
என்ன நல்லது செய்து… என்ன பிரயோஜணம்…? என் உடலில் நோயாகிவிட்டது…? அந்த உணர்வு கொண்ட ஆன்மா இவர் உடலுக்குள் வந்து விட்டால் இந்த வேலையைத்தான் செய்யும்.
நேற்றெல்லாம் கோவிலுக்கு ஓடி ஓடி எல்லாம் செய்தார். இன்று நல்லது சொன்னாலும் நிற்க மாட்டேன் என்கிறார். இப்பொழுது சதா வேதனையைப் பற்றியே சொல்லிக் கொண்டிருக்கின்றார் என்பார்கள்.
காரணம்… அவர் நல்லவர் தான். அவர் அறியாது வந்த தீமைகளிலிருந்து தான் துடைக்கும் மார்க்கத்தைத் தவறியதனால் அந்த உணர்வுகள் வந்து அந்த ஆன்மா நமக்குள் குடிகொள்கின்றது.
ஒரு மான் புலியின் நிலைகளைக் கண்டு கண்டு அது தன்னை இம்சிக்கும் என்ற உணர்வு கொண்டு அதனிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்ற நிலைகள் கொண்டு அந்த ஆன்மா வெளியில் சென்ற பின் புலியின் உணர்வை நுகர்ந்து புலியின் ஈர்ப்புக்குக்குள் சென்று மானின் உயிராத்மா புலியாக மாறுகின்றது.
இதைப் போன்று தான் இவர்கள் நல்ல உணர்வைக் கொண்டாலும் இந்த நஞ்சு கொண்ட உணர்வு வந்தபின் பாலுக்குள் நஞ்சைப் போட்டால் பாதாமிற்குள் நஞ்சைப் போட்டால் கொன்றுவிடுவது போல் இவர் பட்ட வேதனை இவர் உடலுக்குள் சென்று அந்த நல்லதைச் “செயலற்றதாக மாற்றிவிடும்…”
இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இதையெல்லாம் வென்றவன் மகரிஷி அவன் உணர்வின் வலுக் கொண்டு இதை அடக்கினோம் என்றால் நம்முடைய எண்ணம் அங்கே போய் அடங்கும்.


காற்றிலிருந்து ஆகாரம் எடுக்கும் சித்தர்கள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது
சுவையில் பொதுவாக இரண்டு வகை உள்ளது.
1.நாவினால் உணர்ந்து சரீரத்திற்குத் தேவையான ஆகார நியமனங்களின் மூலமாக ஊட்டப் பெறும் நிலை “அறுசுவை…!” ஒன்று.
2.மற்றொன்று எண்ணத்தால் சுவைக்கும் தனித் தன்மையான “பேரின்பச் சுவை…!”
ஆனால் இரண்டுமே பொது நிலைகளில் “எண்ணத்தின் வழி தான்…” கிடைக்கின்றது.
எண்ணத்தின் வழியாக இருந்தாலும் அனுபவ அணுகு முறைச் செயல்களின் மாறுபாட்டை உணரப் பெறும் பொழுது… “தான் உணர்ந்து… அனுபவத் தன்மையால்… பதிவு செயல் நடைபெறுகிறது…!”
உலக வாழ்க்கையின் எண்ண நினைவோட்டங்களில் அந்த எண்ண ஓட்ட வலுவிற்கு வீரியச் சுவை ஊட்டிட
1.ஆகார வழிகளில் பெறப்படும் முறைகள் அத்தனையும்
2.எதன் எதன் சுவைகளில் இச்சைப்படுகின்றோமோ
3.நாவின் அதி சுவைக்கு அடிமையாகும் அத்தனை நிலையும்
4.நம்மை அறியாமல் இயக்கும் உணர்வுகளின் உந்துதல்களின் வேகத்திற்கு நம்மை நாமே அடகு வைத்து
5.மீள முடியாதபடி ஓர் கட்டுக்குள் அடங்கி விடுகின்றோம்.
காற்றில் இருக்கும் அமில குணத் தன்மைகளில் படர்ந்துள்ள ஆகார நிலைகளை (மணங்களை) நுகர்ந்து அதற்குகந்த திட உணவைப் பக்குவப்படுத்திச் சமைத்துப் புசிக்கும் பொழுது ஏற்படுத்தப்படும் ஜீரண சமைப்பு அதன் மற்ற காலங்களில் கிரியா ஊக்கியாகி (உணவைப் பார்த்ததும் உமிழ் நீர் ஊறுகிறது அல்லவா…!) மறை பொருளாக நிற்கும்.
பின் சரீரச் செயல் நிலைக்கு அதை மாற்றும் பொழுது உடல் உறுப்புகளுக்குள் சுரக்கும் அமிலங்களும் அதில் சரீரம் சக்தி பெறுவதாகவே இருந்தாலும்
1.காற்றில் கலந்துள்ள அமில குணங்களின் இயக்கமாகவே செயல்படும்..
2.“நம்மை அதன் வழியிலேயே இயக்கும்…!”
ஆனால் உயிர்த் தன்மையின் கட்டுக்குள் எண்ணமும் சரீரமும் செயல்படும் பொழுது
1.பேரின்ப நுகர்ச்சியை அனுபவிக்கும் ஆன்மா – தான் பெறும் நாவின் சுவையையே மாற்றி
2.நாசியின் வழி ஆகாரம் பெற்று
3.சரீர வளர்ப்புக்கும் உயிர்ச் சக்திக்கும் சக்தியூட்டி
4.புறக் கழிவுகளற்ற நியமனக் கட்டுப்பாடாக
5.மற்றொரு வழியை ஏற்படுத்திக் கொண்டு அனைத்துச் சக்தியையும் பெறும்.
இரகசியத் தன்மையாக ஒரே மரத்திற்கு இரு விதச் செயல் தன்மைகள் காட்டப்படுகிறது. அதாவது
1.உணர்வுகளின் உந்துதல் குணச் சுவை அமிலமே மரத்தின் மேல் நிலையும்
2.அது அடி மரமாகப் பக்குவமாக விளைந்த தன்மையே “மருந்தாவும்…” உபயோகப்படுத்தப்படும்.
ஒரு மரத்தின் அடி மரம் போன்ற விளைச்சலாக (மருந்தின் குணம் போல்) உள்ளடங்கி ஈர்க்கும் தியான முறைகளில் எல்லாம் எந்த எண்ணத்தை வழி நடத்துகின்றோமோ அந்த எண்ணத்திற்கொப்ப ஞான வளர்ச்சியின் வழி முறைக்கு அது வித்தாகும்.
ஆனால் அதுவே உணர்வின் உந்துதல் என்ற நிலையில் சரீரம் தொட்டு நீர்சக்தியாக அனுபோக முறைப்படுத்தப்படும் பொழுது எப்பொழுதோ உடலுக்குள் உணவு மூலமாக ஊட்டப்பட்ட நிலைகள் எல்லாம் தனக்குகந்த ஆகார நிலை அமிலம் (சுவாசத்தின் மூலம் உருவான உமிழ் நீர்) சூட்சமம் கிடைக்கப் பெற்றதும் நம் மனக் கட்டுப்பாட்டையும் மீறிச் செயல்கள் துரிதமாக நடைபெறுகின்றன.
சரீரத்திற்கு வலுக் கூட்டும் முறையாக சரீரத்திற்கு ஆகாரத்தை உட் கொண்டாலும்
1.காற்றின் வழி எடுக்கும் ஆகாரத்தையே (அந்தக் குணத்தையே)
2.முதன்மையாகக் கொடுத்துத் தன் ஞானத்தால் கூட்டிக் கொண்டான்
3.அன்றைய சித்தன் தனக்குகந்த வழித் தொடரில் எல்லாம்…!
சரீரத்திற்குக் கொடுக்கப்படும் திட உணவின் மூலம் உடலுக்குள் உருவாகும் அமிலங்களின் உணர்வின் உந்துதலை அடக்கிட காற்றிலிருந்து நேரடியாக ஆகாரத்தை எடுத்துத் தன் உயிரான்ம சக்தியை வலுப்படுத்திக் கொண்டார்கள் அன்றைய சித்தர்கள்…!

தனித்த நிலையில் நாம் இருந்தாலும் எல்லோரும் அருள் ஒளி பெற வேண்டும் என்ற உணர்விலும் செயலிலும் ஒன்றியே இருக்க வேண்டும்
மெய்யுடன் மெய்யாக நாம் வாழ வேண்டும். ஏனென்றால் உயிர் என்பது மெய்…! உணர்வுகள் அனைத்தும் மெய் ஆகி ஒளி என்ற உணர்வாகும் பொழுது உயிருடன் ஒன்றி வாழும் தன்மை வருகின்றது.
அதனால்தான் இங்கே இராமேஸ்வரத்தில் நேரமாகி விட்டது என்று உணர்வின் (மனதை) தன்மையைக் கூட்டி இராமன் பூஜிக்கத் தொடங்கினான்.
இதைப் போல நாமும்
1.நம் வாழ்க்கையில் சந்தித்தோர் அனைவரும் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும்
2.அவர்கள் வாழ்க்கையில் எல்லா நலமும் எல்லா வளமும் பெற வேண்டும்
3.பகைமை அற்ற வாழ்க்கை நாங்கள் வாழ வேண்டும் என்ற உணர்வை ஒன்று சேர்த்துக் கூட்டினால்
4.பேரருள் என்ற உணர்வுகள் பெருகி… பேரொளியாக மாற்றிடும் தன்மை வரும்.
ஆகவே அதைப் பெறுவதற்குத் தான் குருநாதர் காட்டிய அருள் வழியினை இங்கே உணர்த்துகின்றோம்.
உடல் என்று இருந்தாலும் அது நாளடைவில் கரையும் தன்மை தான் வளர்கின்றது.
1.உடல் கருகும்… ஆனால் உணர்வுகள் வளரும்
2.எதன் உணர்வை வளர்க்கின்றோமோ… அந்த அருள் ஒளியை வளர்த்தால் அது என்றும் வளர்ந்து கொண்டே இருக்கும்.
3.அந்த அருள் ஒளியைப் பெறுவதற்கே நாம் ஒவ்வொரு நிமிடமும் முயற்சிப்போம்.
உடல் வாழ்க்கையில் சேர்த்த எந்தச் செல்வமும்… இந்த உடலும் நம்முடன் வருவதில்லை.
ஆகவே அழியாச் செல்வமான அருள் உணர்வை நமக்குள் வளர்த்து அது வளர்த்திடும் பருவம் கொண்டு உயர்ந்த நிலையாக இருளை அகற்றி மெய்ப் பொருளைக் காணும் மெய் வழியாக நாம் செல்வோம்…! என்று வேண்டுகின்றேன் (ஞானகுரு).
ஒவ்வொரு குடும்பங்களிலும் இதைப் போலச் செயலாற்றிப் பழகுங்கள். பண்பட்டு வளரும் தன்மையாகக் குடும்பத்தில் ஒன்றுபட்டு வாழுங்கள்.
நாம் தனித்து இருந்தாலும்… அன்புடன் பண்புடன் தனித்திருக்கும் நிலை வர வேண்டும்… உணர்வுகள் ஒன்றி வாழ வேண்டும். அதாவது தனித் தனியாக என்ற நிலை இருந்தாலும் உணர்வுகள் ஒன்றி வாழலாம்.
நம் குரு காட்டிய அருள் வழியில் அன்புடன் அரவணைத்து வாழும் உணர்வுகளை உடலிலே வளர்த்து
1.உணர்வுகள் ஒன்றாக்கப்படும்போது செயல்கள் ஒன்றாக இணையும்.
2.செயல் ஒன்றானாலும் உடல் தனித்தனிதான்
3.உடல்கள்… உணர்வுகள்… தன் தன் நிலைகள் ஒன்றாக உருவாக்கும் பொழுது
4.பிறிதொரு உணர்வு நமக்குள் வந்தாலும் ஒன்றி வாழ்கின்றது… நமக்கு அது நன்மை பயக்கிறது.
ஆகவே ஒன்றி வாழும் உணர்வே என்றும் நிலையானதாக மாறுகின்றது. அந்த அருள் ஒளி எல்லோரும் பெற வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.
அருள் ஞானம் பெருக வேண்டும் இந்த உடலிலேயே பிறவியில்லா நிலையை அடைய வேண்டும்.
வாழ்க்கையில் மகிழ்ந்து வாழ மகரிஷியின் அருள் உணர்வை நீங்கள் பெற்று பொருளறிந்து செயல்படும் திறன் பெற்று உங்கள் வாழ்க்கையில் பேரின்பப் பெருவாழ்வு பெற எமது ஆசியும் குரு அருளும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.
அழியாச் செல்வமான பேரருளைப் பெற்று பேரின்பப் பெருவாழ்க்கை நீங்கள் வாழ வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன் (ஞானகுரு).
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
உயர்ந்த குணங்கள் கொண்டு வந்தாலும் “சொந்தம்..,” என்ற நிலைகள் வரும் பொழுது “பந்தம்..,” என்று ஆகி பாசத்தால் வந்தவுடன் குடும்பத்திலோ மற்ற நிலைகளிலோ சிக்கல்கள் வந்தால் செய்வதறியாது தவிப்போர் உண்டு.
“பாசத்தால்.., இப்படி ஆகிவிட்டதே..,” என்ற நிலைகள் கொண்டு கற்றுணர்ந்த உணர்வை அறிய முடியாது செயல்படுத்த முடியாது அதைத் தவற விடும் நிலை வந்துவிடுகின்றது.
“நேசத்தால்..,” உயர்ந்த நிலைகள் கொண்டு மகரிஷிகளின் உணர்வுகள் பெறவேண்டும் என்று எண்ணினால் அந்த நேசம் உயர்வைக் காட்டும். அனைவரையும் நாம் நேசிக்க வேண்டும்.
“எதைக் கொண்டு..,” நேசிக்க வேண்டும்…?
“அருள் மகரிஷிகளின் உணர்வுகள் அனைவரும் பெறவேண்டும்…” என்று அந்த நேசத்தைக் கூட்ட வேண்டும். ஆகவே குரு காட்டிய வழியில் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவோம்.
ஏனென்றால் உங்களுக்கு யாம் “படிப்படியாக… சிறுகச் சிறுகச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்”. எல்லாம் “பூரணமாகச் சொல்ல வேண்டும்..,” என்றால் காலம் இல்லை.
ஏனென்றால், குருநாதர் எனக்குள் பதிவு செய்த பேருண்மைகள் “எண்ணிலடங்காதது..,” இந்த மனித உடலுக்கு ஆயுள் பத்தாது.
அவ்வளவு பெரிய அண்டத்தின் (பிரம்மாண்டத்தின்) உணர்வுகள் பதிவு செய்ததை “எல்லோருக்கும் கிடைக்கச் செய்யவேண்டும்” என்று அவ்வப்பொழுது துணுக்குத் துணுக்காக எடுத்துக் கொடுக்கின்றோம்.
ஆக, அந்த நினைவைக் கூட்டும் பொழுது உணர்வை ஒளியாக்கி உணர்வின் தன்மை எண்ணமாக்கி அதனின் நிலைகளைத்தான் செயல்படுத்துகின்றோம்.
ஒவ்வொரு நிலைகளிலும் ஒவ்வொரு ரூபத்திலும் குருநாதர் காட்டிய அருள் வழியை அவர் பதிய வைத்த உணர்வின் ஏட்டை நினைவு கொள்ளும் பொழுது எனக்குள் உணர்த்தி அந்த உணர்வின் தன்மையை அவரே தான் இங்கே வழி நடத்துகின்றார்.
ஏனென்றால் என்னுள் அவர் இருந்து அல்ல.
“அவர் பதிவு செய்த நாடாவாக…” (MEMORY DISC) நான் எண்ணும் பொழுது உணர்வுகள் இயக்கப்பட்டு அது பெறப்பட்டு “நீங்கள் பெறவேண்டும்.., என்று அவர் செய்த உணர்வைத் தான்..,” நான் செய்கின்றேன்.
அவருடைய உணர்வுகள் தான் என்னைச் செய்ய வைக்கின்றது.
ஆகவே மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளை நாம் அனைவரும் பெறுவோம். குரு காட்டிய அருள் வழிகளில் நாம் செல்வோம்.
இந்த மனித வாழ்க்கையில் அருள் ஞானிகளின் உணர்வைப் பெறுவோம். மகிழ்ச்சி பெறும் நிலையை இந்த உடலுக்கு மகிழ்ச்சி பெறச் செய்வோம். நாம் பார்க்கும் அனைவரது உடல்களையும் மகிழச் செய்வோம்.
மகரிஷிகளின் அருள் உணர்வுடன் ஒன்றியே இந்த வாழ்க்கையை வாழ்வோம். என்றும் பேரானந்த நிலைகள் பெற்று பெரு வாழ்வாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளுடன் வாழும் நிலையை நாம் உருவாக்குவோம்.


நமது உயிருக்கும் அகஸ்தியன் உயிருக்கும் உண்டான இயக்க வித்தியாசம்
உயிரணு தோன்றி உலகின் நிலையில் பல பல பரிணாம வளர்ச்சி அடைந்திருந்தாலும் இருளை அகற்றி ஒளி என்ற உணர்வின் தன்மை மனிதனால் உருவாக்கப்பட்டது தான்.
அப்படி ஒளியாக உருவாக்கிய முதல் மனிதன் அகஸ்தியன் தான்…! அகஸ்தியன் இனமாகத் தான் நாமும் வளர்ந்து வந்துள்ளோம்.
மனிதனில் உயர்ந்தவன்… உயர்ந்த ஒளியின் உணர்வைப் பெற்றவன் அகஸ்தியன் துருவனாகித் துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக இன்றும் இருக்கின்றான்.
அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் அலைகளைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது. மாற்றிய அந்த உணர்வுகளைத்தான்
1.குருநாதர் எனக்குள் இணைத்து அதை வளர்க்கும்படி செய்தார்
2.ஒளியின் உணர்வாக நீ மாற வேண்டும் என்றும் சொன்னார்.
அதன் துணை கொண்டு இருளை அகற்றிடும் உணர்வைப் பெற வேண்டும். இந்த உணர்வினை எல்லோருக்கும் ஓது…! என்றார்.
நீ உபதேசிக்கும் போது அதை உற்றுக் கேட்போர் உணர்வுகளில் அது பதிவாகி அவர்களும் அதைக் கவரும் சந்தர்ப்பம் வரும்.
1.ஆகவே அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கவர்ந்து அவர்களும் அருள் வழி செல்லட்டும்…
2.அதைக் கவரும் உணர்ச்சியை நீ தூண்டு… அவர்களுக்குள்ளும் இதைப் பதியச் செய்.
3.அருள் வாழ்க்கை வாழச் செய்… இருளை அகற்றச் செய்…!
4.உயிர் என்ற நிலை வரும் பொழுது ஈசன் என்ற நிலை வருகின்றது… ஈசனால் உருவாக்கப்பட்ட உடல் என்று நீ கருது…! என்றார் குருநாதர்.
5.மனிதன் என்று உருவாக்கிய நல்ல உணர்வுகள் உயர வேண்டும் என்று எண்ணு.
பிறரைக் காக்கும் உணர்வு கொண்டு அந்த உணர்வுகள் உனக்குள் விளைந்தாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நீ பெற்று அதன் உணர்வுகளை அவர்களும் பெற வேண்டும் என்று ஏங்கு.
ஏனென்றால் அவரால் வளர்க்கப்பட்ட அவர் உடலில் உருவான நோயின் தன்மையை நீ கேட்டறிந்து அந்த உணர்வுகள் உனக்குள் பதிந்தாலும்… அருள் உணர்வு என்ற நிலையை வைத்து உனக்குள் இதை மாற்றி…
1.அவர்களும் அதை பெற வேண்டும் என்று இவ்வாறு நீ எண்ணினால் அவர்களும் நலம் பெறுகின்றனர்
2.அவருடைய தீமையின் உணர்வுகள் உனக்குள் வராது தடுக்கப்படுகின்றது.
ஆகவே இம்முறையைக் கடைப்பிடித்து உனது வாழ்க்கையில் பிறிதொருவரின் நோய்களையோ தீமைகளையோ பார்த்தாலும் ஓ…ம் நமச்சிவாய…! என்று உன் உடலாக ஆனாலும் உடலில் வரும் அந்த அழுக்கினை நீக்க
1.நஞ்சினை வென்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வினை நீ கவர்ந்து
2,அதனுடன் இணைத்து அந்த விஷத்தின் ஆற்றலை நீ பெருக்காது
3.அந்த அருள் என்ற உணர்வினை இணைத்து ஒளி என்ற உணர்வினை நுகரும் சக்தியாக
4.உன் உடலில் உள்ள அணுக்களை மாற்று… அதன் உணர்வு கொண்டு உயிருடன் ஒன்று…! என்றார் குருநாதர்.
வாழ் நாள் முழுவதும் இருளை அகற்றும் உணர்வுடன் வாழ்ந்தால் இது தான் விஷ்ணு தனுசு. ஆனால் பிறரின் நோயின் உணர்வை நுகர்ந்தால் அது சிவ தனுசு. அந்த உடலில் விளைந்த அதே நோய்கள் தான் வரும் எம்று எமக்குத் (ஞானகுரு) தெளிவாக்கினார் குருநாதர்.
மிருகத்தின் உணர்வுகளை நுகர்ந்து அதனால் தாக்கப்பட்டால் அதன் உணர்வின் தன்மை கொண்டு நாம் மிருகத்தின் நிலையை அடைகின்றோம்.
அப்படி அல்லாதபடி விஷ்ணு தனுசு என்ற நிலைகளில் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்து உயிருடன் ஒன்றினால் அழியா ஒளிச் சரீரம் பெற முடியும்.
ஏனென்றால் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் இருளை அகற்றிடும் சக்தியாக உலகெங்கிலும் இருளை அகற்றிடும் உணர்வுகள் பெற்றது.
1.நமது உயிரும் நுகர்ந்த உணர்வைத்தான் இயக்குகின்றது
2.ஆனால் அகஸ்தியனின் உயிரோ “இருளை அகற்றும் ஒளி என்ற உணர்வாக…” முழுமையான விஷ்ணுவாக மாறுகின்றது.
நாராயணனின் மறு அவதாரம் விஷ்ணு என்று உயிராக ஆனாலும் இருளை அகற்றி அந்த ஒளி கொடுக்கும் சூரியனைப் போன்று உயிர் ஒளியாக ஆகும் தகுதி பெற்றது. அப்படிச் சூரியனைப் போன்று ஆனது தான் துருவ நட்சத்திரம்…!
ஆகவே துருவ நட்சத்திரமாக ஆன அந்த உணர்வினை நாமும் பெற்றோம் என்றால் அந்த உணர்வின் தன்மை உண்டு பிறவியில்லா நிலையை அடைய முடியும்.
1.அந்தத் துருவ நட்சத்திரத்ததிந் உணர்வை நாம் நுகர்வோம்.
2.அருள் உணர்வை நமக்குள் பெருக்குவோம்
3.வாழ்க்கையில் வந்த இருளை அகற்றுவோம்
4.மெய்ப் பொருளைக் காண்போம் என்று நமது குரு காட்டிய அருள் வழியில் ஏங்கித் தியானிப்போம்.

“எல்லாம் என் தலை விதி” என்று சென்றால் பிறப்பின் பலனை யாரும் எடுக்க முடியாது…! – ஈஸ்வரபட்டர்
தந்தை சொல் தட்டாத தனயன் என்றும்… சகோதரப் பாசம் என்றும்… உலகுக்கு நீதியைப் பற்றியும் அநீதியைப் பற்றியும் போதனைகளை வலியுறுத்தி வாழ வழியைக் கூறும் இராமாயணக் காவியத்தை உலகினுக்குக் கொடுத்துள்ளார் வான்மீகி.
அதே சமயத்தில் பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்க்கை நெறிகளையும் கட்டுப்பாட்டையும் புலப்படுத்தி அந்தந்தச் செயல் வழிகளிலும் “ஒரு சூட்சமத்தை உள்ளடக்கி…” உயிரான்ம ஆன்மத் தத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.
“விதியின் பின் இராமன்…!” என்று காட்டுக்கு ஏகும் செயல் முறையை
1.ஆத்ம ஞானம் பெறக்கூடிய வழிகாட்டியாகவும் உணர்த்தினார்.
2.இராமன் என்ற உயிர்த் தத்துவமும் சீதை என்ற ஆன்ம தத்துவமும்
3.காட்டிற்குத் தவம் மேற்கொள்ளச் செல்லும் தன்மைகளில் ஆத்ம தத்துவப் படிப்பினையைக் காட்டுகிறார்.
இராமன் இருக்குமிடம் தான் அயோத்தி…! என்று குறிப்பிட்டுக் காட்டி நகர வாழ் மக்கள் எல்லோரும் இராமன் பின்னாடி செல்ல… விதி முன் செல்ல… இராமன் பின் செல்ல… பின் நகர மக்களும் உடன் சென்ற நிகழ்ச்சியாகவும் காட்டுகின்றார்.
அவ்வாறு காட்டியதன் உட்பொருள் என்ன…?
சரீர உயிரணுக்களின் செயலைத்தான் அவ்வாறு பொருள்படும்படியாகச் சூட்சமத்தில் காவியக் கதையாகத் தீட்டியுள்ளார் வான்மீகி.
உயிரான்மாவானது தனது எண்ண வழிச் செயல் முறைகளுக்கொப்ப விதி வழி செல்லும். விதி வழி செல்லும் பொழுது உயிரின் பின் செல்லும் சரீர உயிரணுக்கள் அடையும் துன்பத்தைக் காட்டுகின்றார்.
அதாவது…
1.உயிர் ஆன்மச் சக்தியானது சரீர உயிரணுக்களின் நற்கதிக்குச் செயல்படும் ஈர்ப்பின் நிலையை விட்டு விடும் பொழுது
2.இந்தச் சரீரத்தில் வாழும் அத்தனை உயிரணுக்களுமே துன்புறும் என்ற நிலையைத் தெளிவாக விளக்கியுள்ளார் வான்மீகி.
இராமன் என்றாலும் இராவணேஸ்வரன் என்றாலும் “இரா…” என்னும் சொல் இரண்டும் பொதுவாக உள்ளது. மாயை என்று பொருள்பட இராமன் என்றும் இராவணன் என்றால் மாயையை ஆடையாகப் போர்த்திக் கொண்டவன் என்றெல்லாம் சூட்சமப் பெயரிட்டுக் காட்டுகின்றார்.
உயிர் ஒன்று தான்…! அது இராமனானாலும் சரி… இராவணேஸ்வரன் ஆனாலும் சரி..!
1.அவைகள் செயல் கொள்ளும் எண்ணச் செயலில்
2.விதி என்று அழைக்கப் பெறும் விளைவைத் தானே உருவாக்கிக் கொள்கிறது.
தான் உண்டாக்கும் அந்த வினையின் பயனுக்குள் தானும் ஒடுங்கி… ஒன்றி… அந்த விதியின் செயல் நிகழ்த்தும் நிகழ்வுகளுக்குத் தான் உட்பட்டு விடுகின்றது.
ஒவ்வொரு உயிரும் தன் எண்ணச் செயலின் இராமனாக ஆகிறது. ஆனால் அதே உயிர் எண்ண நினைவிற்கொப்ப அந்த எண்ணமே செயல்பட்டு இராவணேஸ்வரன் ஆகித் தன் ஆத்ம சக்தியை இழக்கிறது.
அது மட்டுமல்ல…!
1.அதே உயிர்ச் சக்தி தன்னைத் தான் அழித்துக் கொள்வதோடு தன் குலத்தையும் அழிக்கும் என்பதையும்
2.தன் சரீரத்தில் உள்ள குணத்தின் வாசனைக்கொப்ப வந்து உருவாகும் அத்தனை உயிரணுக்களையும்
3.தன் விதி வழிச் செயலால் கீழான இழி நிலைக்குக் கொண்டு போய்விட்டு விடும்…! என்று தெளிவுபடுத்துகிறார் வான்மீகி.
தன் குலத்தையே அழிவு நிலைக்குக் கொண்டு சென்று அழியக் காரணமாக
1.“இராவணேஸ்வரன் கொண்ட காம அந்தகாரச் செயல்…! என்ற குணத் தன்மைக்கு
2.தானே – அவனே காரணம் ஆயினான்.
ஆகவே விதி வழி செல்வதா..? என்பதையும் மதி வழிச் செயல் எது…? என்பதையும் எண்ணி நீங்கள் ஒவ்வொருவரும் தெளிவு பெறுக…!

இந்த வாழ்க்கையில் வரும் துன்பத்தையும் துயரத்தையும் சொந்தமாக்க நாம் பிறவி எடுக்கவில்லை
நமது வாழ்க்கையில் இன்று இந்த உடல் பற்றுடன் தான் வாழ்கின்றோம்… எத்தனையோ ஆண்டுகள் வாழ்கிறோம் என்று…!
இந்த உடலுக்காகச் சேமித்து வைக்கும் சொத்தையும் நமது குடும்பத்தையும் பாதுகாக்கும் உணர்வே தான் வருகின்றது.
1.பாதுகாக்கும் உணர்வுகள் அது சிறிது தவறினால் வேதனை என்ற உணர்வுகளே வருகின்றது
2.வேதனை என்ற உணர்வுகள் வளர்ந்தால் தேடிய செல்வத்தையும் பாதுகாக்கும் தன்மை இழக்கப்படுகின்றது.
பாதுகாக்கும் தன்மைகள் இழந்து விட்டால் நம் உடலில் நோயின் தன்மை உருவாகின்றது
1.நோயின் தன்மை உருவானால்
2.இதுவே நாம் தேடிய செல்வம் ஆக மாறுகின்றது.
நோயின் உணர்வுகள் விளைந்தால்… “நம் உடலில் அந்தச் செல்வத்தின் வழியே…” உயிர் அடுத்த உடலை உருவாக்குகின்றது. ஆகவே தேடிய செல்வங்கள் நமக்கு சொந்தமல்ல… இந்த உடலும் நமக்குச் சொந்தமில்லை…!
நமக்குச் சொந்தமாக்க வேண்டியது எது…? என்று சிந்தியுங்கள்.
வேதனை வெறுப்பு என்பதைச் சொந்தமாக்கினால் அதன் உணர்வு கொண்டு அடுத்த உடலை உருவாக்குகின்றது உயிர். கோபம் குரோதம் என்ற நிலை ஆனால் அதன் வழி அடுத்த உடலைச் சொந்தமாக்கி அந்த உருவாக உயிர் மாற்றிவிடுகின்றது
ஒரு நிலம் சரியில்லை என்றால் அதனைப் பண்படுத்துகின்றோம். நிலத்தில் வீடு கட்டினால் சரியில்லை என்றால் மாற்று வீட்டை அதைக் காட்டிலும் நம் செல்வத்திற்குத் தக்க வீடுகளைக் கட்டுகிறோம்.
இதைப் போலத் தான் நாம் நுகர்ந்த உணர்வுக்கொப்ப அடுத்த உடலை உயிர் உருவாக்கி விடுகின்றது இதைப்போல அதிலே நரக வேதனையைத் தான் படுகின்றது
ஆகவே அத்தகைய வீடுகளை இந்த உடலில் மாற்றுவதற்கு மாறாக
1.உயிர் என்ற உணர்வின் தன்மை கொண்டு என்றும் நிலையான
2.பேரருள் பெறும் உணர்வினைச் சொந்தமாக்கி… பேரருள் என்ற உணர்வினை ஒளியாக்கி
3.இனி நாம் பிறவியில்லா நிலை அடைவதே கடைசி நிலை.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
செடியிலோ மரத்திலோ மலர் மலர்ந்து விட்டால் மீண்டும் மீண்டும் மலர்ந்து அதிலிருந்து அதனின் மணம் கமழ்கிறது.
மலராக உருவான பின்
1.அதில் மதுவான இனிமை கொண்ட மதுரத்தைத் தனக்குள் நுகர்ந்து
2.அந்தத் தேனினை இணைத்து அதற்குள் கருவுற்று
3.கருவுற்ற நிலைகள் கொண்டு தன் வித்தாக உருவாக்குகின்றது.
அதைப் போல நாம் எடுத்துக் கொண்ட மகரிஷிகளின் உணர்வின் தன்மை மலரின் மணம் போன்று அருள் மணமாகக் கமழ்கின்றது.
1.மகரிஷிகளின் மணத்தை நுகர்ந்தால் அது மதுரமாகி
2.மகிழ்ச்சியான அலைகளாக நம் ஆன்மாவாக மாறி
3.அந்த உணர்வின் தன்மையை நாம் சுவாசிக்கும்பொழுது
4.நமக்குள் வளர்ந்து அருள் ஞான ஒளியின் வித்தாக
5.முழுமை பெறும் தன்மையினை நாம் நிச்சயம் அடைய முடியும்.
ஆகவே என்னமோ ஏதோ என்ற நிலையில் யாம் உபதேசிக்கும் அருள் உணர்வுகளை அலட்சியப்படுத்தாது மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளை நீங்கள் பெற வேண்டும். குருவின் அருளால் நீங்கள் தெளிந்திடும் நிலை வேண்டும்.
அந்த மகரிஷிகளின் அருள் ஒளியை நீங்கள் பெற்று உங்களுக்குள் தெளிந்த மணம் பெற வேண்டும் என்று விரும்புகின்றேன். உங்களை நான் பார்க்கும் பொழுது எனது குருவின் அருளை உங்களிடம் பார்க்க விரும்புகின்றேன்.
உங்களை அறியாது வந்த இருள்களை நீங்கள் போக்கும் நிலை பெறவேண்டும். அப்பொழுது மகிழ்ந்திடும் பேரானந்த நிலையான அந்த மதுரம் உங்களுக்குள் வரும்.
அந்த உணர்வின் தன்மையை நான் நுகரும் போது எனக்குள்ளும் மதுரமாகின்றது. உயிரான ஒளியுடன் ஒன்றி என்றும் நிலையாக நிலைக்கும் நிலைகளை நாம் அனைவரும் பெறுகின்றோம்.
சூரியன் எவ்வாறு இந்தப் பிரபஞ்சத்தை இயக்கிக் கொண்டு தனக்குள் கலந்து வரும் நஞ்சினைப் பிரித்து விட்டு உணர்வின் ஒளியாக மாறுகின்றதோ இதே போல
1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் பேரொளியாக மாற்றினார்.
2.அவர் வழியில் நான் பெற முடிகின்றது.
3.அதன் வழி நீங்கள் அனைவரும் பெறமுடியும்.
4.இதில் கடினம் எதுவும் இல்லை.
அனைவரும் இந்த முறைப்படுத்தி வாருங்கள். பிறர் தீமையான நிலைகளில் செயல்பட்டாலும் அதை நீங்கள் கேட்டறிந்தாலும் அடுத்த கணம் ஒரு 50 முறையாவது மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்குங்கள்.
இந்த உணர்வின் தன்மை கொண்டு உங்களை அறியாது வரும் அவர்களுக்குள் (பிறரின் இருளான உணர்வுகள்) பட்ட இருள் உங்களை மறைத்திடாது தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் உணர்வை ஒளியாக மாற்றுங்கள்.
அந்த வலுவின் துணை கொண்டு
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெறுவீர்கள்.
2.உங்கள் பிணிகள் அகலும். உடல் நலம் பெறுவீர்கள்.
3.மகரிஷிகளின் அருள் ஒளியால் உங்கள் நோய்கள் நீங்கும்.
4.உங்கள் குடும்பம் நலமாக இருக்கும்.
5.உங்கள் தொழில்கள் வளரும்.
6.உங்கள் குடும்பங்களில் அனைவரும் ஒன்று சேர்ந்து இருப்பீர்கள் என்று
7.உங்கள் வாக்கை மற்றவர்களுக்குள் அருள் ஞான வித்தாகப் பதிவு செய்யுங்கள்.
இதன் வழி கொண்டு மெய் வழியில் தொடர்ந்து நீங்கள் செய்து வாருங்கள்.
1.தீமைகள் அகன்று தீமைகளை அகற்றும் உணர்வுகள் அனைவரது உடல்களிலும் விளைந்து
2.அந்த உணர்வலைகள் வெளி வரும்போது
3.சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு
4.இந்தப் பரமான பூமியில் பரமாத்மாவாகப் பரவச் செய்யும்.
5.இந்த அருள் உணர்வுகள் பரவப்படும் போது கடவுளாக – இந்தப் பரமாத்மாவுக்குள்
6.தீமையை அகற்றும் அலையின் தொடராக
7.யார் எண்ணி ஏங்கினாலும் அடுத்த கணம் அவர்கள் தீமைகளை அகற்றும்.
8.அந்தக் கடவுளாக மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் சிருஷ்டிக்கும் தன்மை வரும்.
ஆனால் இன்றைய மனித வாழ்க்கையில் நாம் எதை இந்தப் பரமாத்மாவில் கலந்து கொண்டிருக்கின்றோம்?
பஸ்சில் போனால் பயம்; வீட்டில் இருந்தால் பயம்; அதிகமான காசு கொண்டு போனால் பயம்; ஏதாவது வாய் திறந்து பேசினால் பயம் என்ற நிலையில் அஞ்சியே வாழ்ந்து கொண்டிருக்கும் உணர்வுகளை ஒவ்வொருவரும் வெளிப்படுத்துகின்றோம்.
இந்த உணர்வலைகள் படரப் படர அலைகளாக மலர மலர மகரிஷிகளின் அருள் ஒளியை அந்த மெய் ஒளியை இங்கே நாம் பெற முடியாது இருள் சூழும் நிலையே வருகின்றது.
அந்த இருளான உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்திகள் கவர்ந்து பரவச் செய்யும்போது அச்சுறுத்தும் உணர்வின் தன்மை கொண்ட கடவுளாக – அதைத்தான் பரமாத்மாவாக மாற்றுகின்றோம்.
அத்தகைய உணர்வுகளை நாம் நுகர்ந்தால் நமக்குள் வந்து அஞ்சி வாழும் நிலைகளைத்தான் நம்மை இயக்கச் செய்யும்.
இதைப் போன்ற நிலைகளை அகற்றுங்கள். உயர்ந்த நிலைகள் பெற அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நுகரப் பழகிக் கொள்ளுங்கள்.


“மதி வழி” கொண்டு நாம் முன்னாடி சென்றால்… ”விதி வழி” பின் செல்லும்…! – ஈஸ்வரபட்டர்
இராமன்… லட்சுமணன்… சீதை என்று அவர்களைச் சரீரமாக உருவமாகக் காட்டி வெளியிட்ட நிலையில் எல்லாம்
1.குணங்களாக நம் எண்ணங்கள் செயல்படும் விதத்தையும்
2.தன் ஆன்மாவின் செயலுக்குச் சக்தியூட்ட வேண்டிய காரியத்தை வலியுறுத்தியும்
3.போதனைகளாகக் கொடுத்துள்ளார் வான்மீகி மாமகரிஷி.
ஆனால் ஆசை என்ற உணர்வுகள் செயல்பாட்டிற்கு வரும்போது எந்த உணர்வுகள் அதைத் தூண்டியதோ அதே உணர்வுகளுக்கு வலுவூட்டிவிடும் அந்த ஆசை நிலையைச் சித்தரிப்பதே மாயமான்…!
அந்த மாயமான் மேல் சென்ற எண்ணமே வலுவாகி உயிர்ச் சக்தியான இராமனை அந்த மானைப் பிடித்துக் கொடுக்கச் செய்தது சீதையின் நிலை.
“ஆசை வழி உணர்வுகளின் உந்துதலின் செயல்” தான் அது.
உயிர் சக்தி (இராமன்) தடுத்தும் கேட்காமல் ஆன்மாவில் பதிவு செய்யப்பட்ட நிலை போல் திரும்பத் திரும்ப அதே எண்ண ஓட்டம் செயல் கொண்டு தனக்குகந்த வீரியத்தையே வலுக் கூட்டிக் கொள்வது போல் அந்த மானைப் பிடித்துத் தர வேண்டிக் கேட்டுக் கொண்டது. (சீதை)
ஆன்ம சக்தியின் மீதுள்ள பற்றுதலாலும் தடுக்கப்பட வேண்டிய நிலை மாறி ஆசை உணர்வுகளின் வேகம் அந்த மாயமானின் பால் ஈர்க்கப்படும் நிலைகளை “அந்த ஆன்ம விளக்கங்களை… சூட்சமமாக அங்கே பொருள்படுத்தியுள்ளார் வான்மீகி…!” எல்லாம் ஆன்மாக்களும் உணர்ந்து பெறுதலுக்கு ஒரு காரணமும்… வெளியிடக் கூடாத இரகசியமாக மற்றுமொரு காரணமும் ஆகும்…!.
1.ஆசை உணர்வுகளின் வழி ஏகிய உயிர்ச் சக்தி
2.இந்த உலக ஆசை என்ற மாயமானை இனம் கண்டு கொண்டதும்
3.எண்ணமாகிய இராமபாணத்தைச் செலுத்தி அதன் ஓட்ட வீரியத்தை வலுவிழக்கச் செய்தது.
ஆன்ம சக்திக்குத் துணையாக நிற்கும் தைரிய குணச் சக்தியையும் ஆன்மா இழந்து… பலம் குன்றுவதைக் காட்டவே… இலட்சுமணனை இராமர் பால் அனுப்பிய சீதையின் நிலையாகக் காட்டப்படுகிறது.
அதாவது மனித வாழ்க்கையில் மனக் குழப்பங்கள் ஏற்படுவதைக் காட்டி தெளிவற்ற நிலையில் உண்டாக்கப்படும் உணர்வுகள்
1.தன்னுடைய வீர குணத்தை அப்புறப்படுத்தி ஆன்மாவைச் சக்தி இழக்கச் செய்கின்றன.
2.உயிர்ச் சக்தியையும் ஆன்ம சக்தியையும் பிரித்து விடுகின்றன.
3.பிரிப்பதன் மூல காரணம் இந்த உலக வாழ்க்கையின் “அதி ஆசை நிலை…!”
இதற்கு மானைச் சுட்டிக் காட்டியது “சூட்சம நிலை…”
மீண்டும் உயிர்ச் சக்தி தன் சக்தியாக ஆன்ம சக்தியை அடைய வேண்டி “மாயமானாகிய அதி ஆசை நிலையைத்தான் தகர்க்கின்றது…!”
ஆன்மாவாகிய சக்தி நிலை ஏக்க உரு கொள்கிறது. அப்பொழுது தைரிய குண இலட்சுமணன் சாந்த குண இராமனை அணுகிச் சக்தி ஊட்டியதாகச் சொல்லப்படுகிறது.
எப்படி…?
1.உயர்ந்த சக்திகளை தைரிய குணத்தின் ஈர்ப்பில் சமைத்து
2.வீரமான அந்தக் குணத்தையே சாந்த குணத்திற்கு வலுவூட்டி
3.ஆன்மாவைச் சூழ்ந்துள்ள மாய இருளை அகற்றச் செய்கிறது.
ஆக இராவணன் என்ற அசுர குணத் தன்மைகளை சக்தி இழக்கச் செய்ய தன் எண்ணங்களான இராமபாணத்தைச் சக்தியாகச் செயல் கொண்டு போர் என்ற நிலையில்
1.எண்ணங்களின் எதிர் மோதல் போராட்டங்களாகவும்
2.குணச்சுவைகளுக்கொப்ப நிகழ்ந்த நிகழ்வுகளின் முடிவின் ஆக்கமே உயிராத்மாவுடன் கலந்த அல்லது கலக்கும் நிலை பெறுகின்றது.
அதாவது
1.உயிர் சக்தியினைப் பிரிந்தால் ஆன்மா தாக்கப் பெறும்..
2.அதுவே உயிருடன் கலக்கும் சிந்தனையாகக் காக்கப் பெறும்..! என்று வான்மீகியார் தெளிவாக்குகின்றார்.
அசுர குண எண்ணப் பிடிக்குள் சிக்கிக் கொள்ளும் ஆத்ம ஞானியையும் உலக ஆசை நிலையாகிய மாயமான் வடிவம் கொள்ளத் தூண்டுகின்றன…! ஏன்…?
காரணம் சரீரமும் அதற்குள் இருக்கும் சரீரத்தின் தனித்துவம் என்ற குணங்களும் தான்…!
அது மட்டுமல்ல…! பிற ஆன்மாக்களையும் அந்த ஆசை அலைக்குள் அகப்படுத்த போக்குக் காட்டி மயக்குகின்றன. அந்த மாய அலைக்குள் படும் உயிர்ச் சக்திகளையும் தன் வழிக்கே இழுக்க முயல்கிறது. (இது உலகில் ஒவ்வொருவருடைய அன்றாட வாழ்க்கையிலும் தினசரி நடந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சி…!)
உண்மைதனை உணர்ந்து கொண்ட உயிர்ச் சக்தியாகக் காவியத்தில் இராமனைக் காட்டுகின்றார். தன் ஆன்மாவைத் தன்னிடத்திலிருந்து (உயிர் சக்தியிடமிருந்து) பிரித்துவிட நடக்கும் நாடகத்தை வான்மீகியார் அங்கே சுட்டிக் காட்டுகிறார்.
மாரீசன் என்ற ஞானி (மாயமான்) அந்த ஆசைக்குத் துணை போக தானே அந்த ஆசை வலையில் பட்டு விட்டதையும் எண்ணமாகிய இராமபாணம் பட்ட பின் மாரீசன் மீண்டதாகவும் காட்டியுள்ளார்.
1.மனித உயிரான்மாக்கள் பெற வேண்டிய உயர் ஞான நிலைக்கு உயரிய வழி வகுத்து
2.”மதி வழி” கொண்டு நாம் முன்னாடி சென்றால்…
3.”விதி வழி” பின் செல்லும்… என்று தெளிவாக அருளியுள்ளார் வான்மீகி மாமகரிஷி…!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
அகஸ்தியன் தன் தாயின் கருவிலே சிசுவாக இருக்கும்போது பல பச்சிலைகளின் வாசனைகளையும் மூலிகைகளின் மணங்களையும் அவன் நுகர்ந்ததால் நஞ்சினை வென்றிடும் சக்தி பெற்றான்.
அவ்வாறு அவன் நுகர்ந்தறிந்த உணர்வின் அணுவாக விளைய வைத்த உணர்வலைகள் இந்தப் பூமியிலே உண்டு. அதை நாம் பெற முடியும்.
1,அகஸ்தியன் தாய் கருவிலிருக்கும் பொழுது அவனுக்குள் விளைந்த சக்திகளை
2.நம் உடலில் வளரும் அணுக்கருக்களின் கருவில் அருள் ஞானத்தை இப்பொழுது உருவாக்குவோம்.
அகஸ்தியன் பெற்ற மூலிகைகளின் வாசனைகளை எண்ணித் தியானிக்கும் பொழுது “எவர் எவருக்குக் கிடைக்கின்றதோ அவர்கள் அருள் ஒளியின் சக்தியைப் பெற்றவர்கள் ஆவார்கள்…”
கிடைக்கவில்லை என்றால் விரக்தி அடைய வேண்டாம்.
அகஸ்தியன் பெற்ற மூலிகைகளின் மணங்களைப் பெறவேண்டும் என்ற ஏக்கத்தை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள். நிச்சயம் அதைப் பெற்று வளர்த்துக் கொள்ள முடியும். அதை உருவாக்கிட முடியும்.
இப்பொழுது யாம் சொல்லக்கூடியதை எல்லாம் ஏங்கிப் பெற வேண்டும் என்ற அந்த ஈர்ப்புடன் தான் இருத்தல் வேண்டும்.
அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் உயிருடன் தொடர்பு கொண்டு ஏங்கித் தியானியுங்கள்.
பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் அவன் வாழ்ந்த காலங்களில் அவனின்றி வெளிப்பட்ட உணர்வுகளை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.
அகஸ்தியன் அவன் கருவில் வளரும் பொழுது நுகர்ந்ததும் பிறந்தபின் அவன் நுகர்ந்தறிந்த ஆற்றல்மிக்க சக்திகளும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.
இதையே திரும்பத் திரும்ப ஏங்கி அந்த உணர்வுகளை உங்கள் உடலுக்குள் பரப்புங்கள்.


நல்லது நடக்கவில்லை என்று எண்ணி “நல்லதைப் பெறும் முயற்சியை விட்டு விடக்கூடாது” – ஈஸ்வரபட்டர்
வாழ்க்கையில் எந்த ஒரு நல்லதையும் பெற வேண்டி ஆசைப்பட்டாலும் (ஆர்வம், விருப்பம்) நம் மனம் அதைப் பெற நல்ல நிலையாக எண்ணிச் செயல்படும் காலங்களில் நல்லதைப் பெறும் உத்வேகம் எப்படி இருக்க வேண்டும்…?
அதைத் தான் “முயற்சி செய்வது…” என்று சொல்வது…! இருந்தாலும் அந்த முயற்சி எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்…?
அதாவது
1.செயல்படுத்த வேண்டியது எந்தப் பொருளோ அதிலேயே கருத்தாகவும்
2.அந்தக் கருத்தின் கருப்பொருளையே வீரியமாக வளர்க்கவும்
3.அப்படிச் செயல்படுத்தும் முறை எதுவோ அதுவே “முயற்சி…!”
கடலில் உருவாகின்ற சிப்பி தனக்குள் முத்தை வளர்ப்பாக்க எடுக்கும் முயற்சி எப்படிப்பட்டதாக இருக்கிறது…?
சரியான காலமறிந்து அந்தக் காலத்தைப் பயன்படுத்தும் விதமாக
1.மழை நீர் தன்னுள் விழும் நேரத்தை அறிகிறது
2.அந்த நேரம் வாய் திறந்த நிலையில் அது எடுக்கும் உணர்வின் ஞானம்
3.தன்னுள் விழும் நிலையை அந்தக் கருத்தை அறிந்து உயிரணுவின் கருக்கொள்கிறது.
பின்… வாய் மூடி ஒரிடத்தே அமைத்துத் தன் கருவின் கருவையே முத்தாக்கும் செயல் நிலைக்குக் கொண்டு வருகிறது.
இருந்தாலும்… சில மாறுபாட்டின் தன்மையால் முத்து விளையாமலும் போகலாம்.
1.ஆனால் ஆக்கத்தின் ஆக்கம்… “ஊக்கம்” என்பது போல்
2.முயற்சி இருந்தால் நல்ல முத்தாக விளைவிக்கும்…
2.முத்தாக விளையவில்லை என்றால் என்ன செய்வது…? என்று
3.சிப்பி மழை நீரைக் கவர முயற்சிக்காமல் இருப்பதில்லை…!
(இது மிகவும் முக்கியம்..!)
அதைப் போல் தான் உயர் தெய்வீக உயிர்ச் சக்தி (நீல வண்ணராமன்) இந்த உலக… உடல் வாழ்க்கை மோதல்கள்… நடை பெறும் கால கட்டத்தில்… விதி என்ற எண்ணச் செயல் வழி முறை வலுப் பெற்று… வேறு வேறு திசைக்குத் தள்ளினாலும்… தன் உணர்வுகளின் செயல்பாட்டைத் தன் ஞானக் கட்டுக்குள் அடக்கும் முறைப்படுத்தினான். (முயற்சி செய்து தான்…!)
வெளி மோதல் எண்ணங்களின் செயலுக்கு… “தான் ஏகும் முறை என்பது…”
1.விதி முன்னாடி செல்ல இராமன் பின்ன்னாடியே சென்றான்…! என்ற சொற்றொடரில்
2.நடந்த நிகழ்ச்சிகளின் செயலே விதி வழி முறையானாலும்
3.தன் வாழ்க்கையில் அப்படி வந்த அந்த மோதல் காலங்களில்
4.தன் சூழலில் தனக்கு எந்த வித மாற்றத்தையும்.. உயிர்ச் சக்தியின் சக்திக்கு எந்தவிதப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை…! என்ற
5.சம நோக்குப் பெறும் நிலையை வான்மீகி மகரிஷி வற்புறுத்தி
6.பாசம் என்ற நிலையில் தனக்குள் வகுத்த சட்ட திட்டங்களுக்கும்… ஒழுங்கு வரை முறை நியமனங்களுக்கும் கட்டுப்பட்டே… உலக நியதி இயங்குகிறது…! என்று சொல்லி
7.இராமன் அதற்குக் கட்டுப்பட்டே அந்த “விதியின் வழி ஏகினான்…!” என்பதில்
8.உயர் சக்தி “மதியின் பால் இயங்க வேண்டிய அவசியத்தை… மாயமான் படலம்..!” மூலமாக வான்மீகியார் அருளியுள்ளார்.
ஆக வாழ்க்கையில் அன்றாடக் கடமைகளைச் செயல்படுத்திக் கொண்டு வந்தாலும்
1.விதி என்ற நிலையில் அது வீரியமாக இயக்கும் கால கட்டங்களில்
2.தன் உயிராத்மாவிற்குப் பாதிப்பு உண்டாக்கும் நிலைகளைத் தன் எண்ண வலு கொண்டு தவிர்த்த இராமன்
3.தியானம் செய்வதற்காகக் காட்டுக்குச் சென்றான்…! என்று காட்டும் நோக்கில் (சூட்சம உணர்வு)
4.உயிர் தன்மையின் உயர்வைக் காட்டுகின்றார் வான்மீகியார்.
உயிரின் உயர்வைக் காட்டும் வான்மீகி மாமகரிஷி “விதி வழி செல்லும்…” செயல் வாழ்க்கையில் அதிலே காட்டிலே பட்ட துன்பங்களாகவும் கூறவும் தவறவில்லை.
இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொண்டால் நாம் செல்லும் ஞானப் பாதையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் சலிப்போ சோர்வோ சங்கடமோ சஞ்சலமோ நம்மை அண்டாது…!
அதை எல்லாம் நாம் ஒரு பொருட்டாக எண்ணவே மாட்டோம்…!

தாயை நாம் மதித்து நடக்க வேண்டும்… அவர்களை மகிழச் செய்ய வேண்டும்
தாய் எத்தனையோ வேதனைப்பட்டுத் தன் குழந்தைகள் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்று எண்ணுகின்றது. அந்தத் தாய்க்கு நாம் உபகாரம் செய்யும் நிலை எது…?
உயர்ந்த உணர்வுகளை எடுத்துத் தாய் விரும்புவது போல் நாம் உயர்ந்தவராக வேண்டும்… நம் சொல்லிலே இனிமை பெற வேண்டும்… நம் செயல் அனைத்தையும் பிறர் மதிக்கும் தன்மையாக இருக்க வேண்டும்.
இப்படிப் பிறரை நாம் மகிழச் செய்யும் சக்தியாக நாம் மாறினால் அதைக் காணும் நம் தாய் பேரானந்த நிலை பெற்று நமக்காகப் பட்ட துயரத்தை எல்லாம் மாற்றலாம்… அகமகிழ்ந்து தன் துயரத்தை மாற்றிக் கொள்ளும் உணர்வும் தாய்க்கு வரும்.
ஆண்களானாலும் பெண்களானாலும் இதைப் போன்று தாயை மதித்தல் வேண்டும்.
1.நம்மை உருவாக்கிய கடவுள் என்று தாயை மதித்தல் வேண்டும்
2.தன்னைக் காத்த தெய்வம் என்று தாயை மதித்தல் வேண்டும்
3.நமக்கு நல் உணர்வு ஊட்டிய குரு என்று மதித்தல் வேண்டும்
சந்தர்ப்பத்தால் பல உணர்வுகளை நாம் பெற்றாலும் தாய் நமக்கு என்ன செய்தது…? என்று குறைப்பட்டுத் தாய் மனது புண்படும்படி எவரும் செய்யாதீர்கள். தாயைப் போற்றும் நிலையும் மகிழ்ந்து வாழும் செயலையும் தான் நாம் செயல்படுத்த வேண்டும்
நாம் எத்தனை குற்றத்தைச் செய்தாலும் தாய் தாங்கிக் கொள்ளும். ஆக… தன் பிள்ளைகள் உயர வேண்டும் என்று மனதைக் கூட்டுகின்றது. ஆகவே அதன் உணர்வின் தன்மை நம்மை மகிழச் செய்யும் சக்தியாகச் செயல்படுத்தும்.
ஆனால் அப்படி நம்மை மகிழ்ச் செய்யும் மனம் கொண்டு நம்மை வளர்ச்சியின் தன்மைக்குச் செயல்படுத்தும் தாய்க்கு நாம் வேதனைப்படும் செயலைச் செலுத்தினால் நாம் எங்கே செல்வோம்…? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.
இதைப் போன்ற உணர்வில் இருந்து விடுபடுங்கள். அருள் உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள்… அருள் ஞானத்தைப் பெருக்கிக் கொள்ளுங்கள்.
1.தாயன்பைப் பெற முயற்சி எடுங்கள்
2.தாயை மகிழச் செய்ய உங்கள் வாழ்க்கையின் செயல்களைப் புனிதமாக்குங்கள்
3.உங்கள் சொல்லை இனிமையாக்குங்கள்… செயலைப் புனிதம் பெறச் செய்யுங்கள்…!
தாய்க்கு செய்யும் சேவையும் கடமையும் அவர்களை நாம் மகிழச் செய்வது தான். எத்தனையோ இன்னல்களைக் கடந்து நம்மை மனிதனாக உருவாக்கியது. இந்த உண்மையின் உணர்ந்து செயல்பட்டுத் தாய் தந்தையரை மகிழச் செய்வோர் எவரோ அவரே சொர்க்கம் அடைகின்றார்…!
அத்த்கைய பண்புடன் தாயின் உணர்வுகள் அதிகரிக்கப்படும் பொழுது நாம் எண்ணிய உயர்ந்த உணர்வுகள் கவரப்பட்டு எத்தகைய இன்னல்கள் வந்தாலும் மாற்றி அமைக்கும் திறனை நாம் பெற முடியும்.
1.தாயின் உணர்வுகளை நாம் எடுக்கப்படும் பொழுது தான்
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் பெறும் தகுதியும் பெறுகின்றோம்
3.நம்மை அறியாது ஆட்டிப்படைக்கும் நிலைகளிலிருந்து விடுபடவும் முடியும்.
கணவனும் மனைவியும் வசிஷ்டரும் அருந்ததியும் போன்று நீங்கள் கவர்ந்து கொண்ட உணர்வுகள் ஒன்றென இணைந்து பகைமை உணர்வை மாற்றிடும் சக்தி பெறுங்கள்.
நளாயினியைப் போன்று கணவன் மனைவியை மதித்து மனைவி கணவனை மதித்து இரு உணர்வும் ஒன்றான பின் சாவித்திரி என்ற நிலையில் என்றுமே இணைந்து வாழும் சக்தியைப் பெற முயற்சி எடுங்கள்.
நாம் கவர்ந்து கொண்ட அந்த உணர்வுகள் தான் வசிஷ்டர் என்பது. அதாவது தசரதச் சக்கரவர்த்திக்கு வசிஷ்டர் பிரம்மகுரு என்பார்கள். பத்தாவது நிலையை அடைய கூடிய நாம் இந்த உயர்ந்த உணர்வினை நாம் நுகரப்படும் பொழுது அது வசிஷ்டர் ஆகின்றது.
1.கவர்ந்து கொண்ட பேரருள் உணர்வுகள் நம்முடன் இணைகின்றது.
2.இணைந்து கொண்ட உணர்வுகள் பிரம்மமாக உருவாகிறது
3.பிரம்மகுரு என்ற நிலையில் அந்த அருள் சக்தி நம் உடலுக்குள் உருவாகி அது இணைந்தே வாழும் அருந்ததியாக…!
ஆகவே நமது வாழ்க்கையில் நாம் எதை வெல்ல வேண்டும்…? எதை வளர்க்க வேண்டும்…? என்பதை உணர்தல் வேண்டும்.
அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கவர்ந்து அதை உடலுக்குள் ஆழமாகப் பதித்து அதன் உணர்வுகளை உங்களுக்குள் இந்த ஆறாவது அறிவு கொண்டு தீமையை நீக்கும் உணர்வாக வளர்த்துக் கொள்ளுங்கள்.
அதே வசிஸ்டர் நீங்கள் கவரும் உணர்வுகள் கவர்ந்து கொண்ட உணர்வுகள் நீங்கள் நுகர்ந்த உணர்வுகள் உடலிலே பிரம்மமாகின்றது. அருள் சக்தி கொண்ட இருளை நீக்கி அந்த உணர்வுதான் பத்தாவது நிலை அடைந்து நஞ்சினை வென்று ஒளியாக்கி இந்த உணர்வினை உங்கள் உடலில் இணைந்தால் அருந்ததி இருளை நீக்கும் அந்த உணர்வுகள் இணைந்து வாழும் என்ற நிலையில் உங்கள் வாழ்க்கையில் அதை பெற வேண்டுமென்று பிரார்த்திக்கின்றேன்,
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய வழியில்
1.உங்கள் உயிரைக் கடவுளாக எண்ணி… உங்கள் உயிரை ஈசனாக மதித்து… விஷ்ணுவாக வணங்குகின்றேன்.
2.உங்கள் உடலைச் சிவமாக மதித்து நீங்கள் உயர்ந்த உணர்வுகள் பெற வேண்டுமென்று ஆசைப்படுகின்றேன்.
3.அருள் உணர்வுகளை உங்களுக்குள் வினையாக்க வேண்டுமென்றும்
4.துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கணங்களுக்கு அதிபதி கணபதியாக்கி
5.தீமைகளை நீக்கும் உணர்வாக உங்கள் உடலைச் சிவமாக்கி
6.பேரொளி என்ற உணர்வாக உங்களில் வளர்க்கும் தன்மை பெற வேண்டும் என்று தான் குரு அருள் எனக்கு உபதேசித்தது…!
அதன் வழி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நீங்கள் பெற்றால் உங்களிலே இருள் சூழா நிலையும் அருள் ஒளி பெருகும் நிலையும் இந்த வாழ்க்கையில் மகிழ்ந்து வாழவும் முடியும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
மனிதர்களான நாம் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு தீமைகளை அகற்றும் வல்லமை பெற்றவர்கள். எதனையுமே நமக்குள் எளிதில் உருவாக்கக்கூடிய சக்தி பெற்றவர்கள்.
விஞ்ஞானி விண்ணிலே அண்டத்தின் நிலைகளையும் பூமிக்கடியில் உள்ள நிலைகளையும் ஊடுருவிப் பார்த்துப் பல பொருகளை அறிகின்றான். அதை எல்லாம் இணைத்து எத்தனையோ புதுப் புது இயந்திரங்களை உருவாக்குகின்றான்.
“ஒலி.., ஒளி..,” அலைகளைப் பெருக்கப்படும் பொழுது இந்த உணர்வின் தன்மை அங்கே விஞ்ஞானத்தின் நிலைகளில் இயக்குகின்றது.
கடந்த காலத்தில் ஞானிகள் இதைப் போன்று சப்தமிடுவதில்லை. மனதிற்குள் ஒடுக்கி வைத்துள்ளார்கள்.
“தான் பெற்ற ஆற்றல்கள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்” என்ற உணர்வுகளை உள் நின்று பாய்ச்சப்படும் பொழுது மற்றவர்கள் ஏங்கி நிற்கும் பொழுது அந்த உணர்வலைகளை நுகர நேர்கின்றது,
இவன் எண்ணி வெளிவிடும் உணர்வுகளை “மௌனமாக இருந்து..,” உணர்வினை நுகர்ந்து இந்த ஞானியின் உணர்வுகளை அவர்கள் சீடர்களும் உருவாக்கும் தன்மை பெற்றார்கள்.
இப்படித்தான், “அகஸ்தியன் தான் கண்டுணர்ந்த உணர்வுகளை..,” சொல் என்ற நிலைகள் வராதபடி.., “உணர்வென்ற நிலையில்” தான் நுகர்ந்த உணர்வுகளைத் தன் இன மக்கள் பெறவேண்டும் என்று உணர்வுகளை “மூச்சலைகளாக” வெளியிட்டுள்ளான்.
அதே மாதிரி அகஸ்தியனை உயர்ந்த நிலைகள் கொண்டு எண்ணும் பொழுது இந்த உணர்வுகள் அகஸ்தியனின் சகாக்களுக்குள்ளும் வளரப்பட்டு தீமைகளை அகற்றும் நிலை பெற்றார்கள்.
அருள் உணர்வை அவன் பெற்றது இந்த வழியில் தான். ஆகவே, நாம் ஒவ்வொருவரும் அருள் ஞானத்தில் வளர்ந்திட வேண்டும்,
விஞ்ஞான அறிவால் வரும் பேரழிவுகள்.., “சூறாவளி புயல்” போன்ற நிலைகள் வரும் பொழுதெல்லாம் இந்த உடலும் நமக்குச் சொந்தமல்ல.., நாம் தேடிய செல்வமும் நமக்குச் சொந்தமல்ல.., என்பதை நாம் உணர்தல் வேண்டும்.
நாம் சொந்தமாக்கப்பட வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான். ஒவ்வொரு மனிதனும் உயர்ந்த நிலைகளில் வாழவேண்டும்.., என்ற “இந்த உணர்வை” நமக்குள் சொந்தமாக்க வேண்டும்.
உயர்ந்த நிலைகளில் வாழ வேண்டும் என்றால் அந்த அருள் உணர்வைத் தான் பெற்று ஒவ்வொருவரும் தெளிந்த மனம் பெறவேண்டும் என்று எண்ணினால் அதனுடன் கலந்து நமக்குள் தெளிவான நிலையும் பெறுதல் வேண்டும்.
பேரன்பைப் பெருக்கிப் பழகுதல் வேண்டும்.
சிலர் தவறு செய்தாலும் அந்த உணர்வு நம்மை இயக்காத நிலையும் அருள் உணர்வை நமக்குள் பெருக்கி வாழ்தல் வேண்டும். ஏனென்றால், குறுகிய காலமே நாம் வாழ்கின்றோம்.
இனி எதிர்காலம் மிகவும் சிந்தனையற்ற காலமாகவே மனிதனின் செயல்கள் இருக்கும். மனிதன் மனிதனாகத்தான் இருப்பான்.
ஆனால், மனிதன் பல கொடூரமான செயல்கள் செய்வதும், கொள்ளையடிப்பதும், கொலை செய்வதும் ஏமாற்றும் நிலைகளில் செல்வம் வைத்திருந்தாலும் வீடு புகுந்து அடித்துக் கொன்று விட்டு பொருளை அபகரித்துச் செல்லும் நிலை வந்துவிடுகின்றது.
அப்பொழுது நாம் தேடிய செல்வம் எங்கே இருக்கின்றது…?
நாம் எடுக்கும் மூச்சின் அலைகள் கொண்டு எந்தத் தீமையான உணர்வுகளும் நமக்குள் புகாது பாதுகாத்தல் வேண்டும். இதைப் போன்ற நிலைகளில் நீங்கள் செயல்படுத்த வேண்டும் என்று தான் வேண்டுகின்றோம்.


மோகத்தை (சபல புத்தி) நல்லதாக மாற்றும் வழி முறை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது
காமத்தின் வழியில் பிறக்கும் “மோகம்…” என்பது சரீர உணர்வு அலைகளின் நாதத்தில் கலந்து தனக்குத் தேவையான ஆகார அமில குணத் தன்மைகளைத் தனதாக்கிக் கொள்ளும் தன்மை பெற்றது.
1.புலனறிவு கொண்டு ஈர்க்கப்படும் செயல் எண்ணத்திற்கும்
2.ஆகார நியமனங்கள் இல்லாது சரீரம் உணர்வு கொண்டு இயக்கப்படும் எண்ணத்திற்கும்
3.தனக்குத் தானே சில கட்டுப்பாடுகள் அமைத்துக் கொண்டு
4.மனோ தைரிய வீரிய குணத்தை… வீரமான செயல் தன்மை கொண்டு செயல்பட்டால்
5.சபலம் என்ற மோகம் அதன் வழியில் நம்மை இயக்காது மறைந்து விடும்.
இது போன்ற சபலத்தின் வழியில் சிக்காதபடி குரு தன் சிஷ்யனை உயர்த்தும் மார்க்கத்தில் பயிற்சி வழி முறைகளைக காட்டிப் பக்குவப்படுத்துவார். அந்தப் பக்குவத்தில் நற்குணங்களின் உயர் தன்மையின் வீரிய குணச் செயல்பாட்டையும் போதிப்பார்.
அப்படிப்பட்ட ஒரு உயர்வின் சிறப்பைக் குரு வழியாகக் காட்டும் இராமாயணக் காவியத்தில் “பூவினும் மெல்லிய மனம் கொண்ட பெண் கல்லானாள்…!” என்று அகலிகையைக் காட்டுகிறார்கள். அந்தக் கல்லே பின் “பெண்ணாக ஆனாள்…!” என்றும் காட்டுகிறார்கள்.
அதனின் உட்கருத்து என்ன…?
ரிஷித் தன்மை பெற வழி காட்டப் போதனைப்படுத்திய வான்மீகி மாமகரிஷி ரிஷிபத்தினியின் சக்தியும் பெற வேண்டும் என்ற சூட்சமத்தைக் காட்டுகிறார்.
விசுவாமித்திரர் பெற்ற உபதேசத்தில் அவர் பெற்ற சக்தியின் செயலையே கல்லான அகலிகை தன் நிலை உயர்த்தப் பெண் ஆனாள் என்று “அகலிகை சாப நீக்கப் படலத்தில்” காட்டுகின்றார்.
1.ஏனென்றால் காம குணத்தையே அடக்கி ஆட்சி செய்யப்படும் பொழுது அது “தெய்வீகம்…”
2.அதைக் “காமாட்சி…” என்று காட்டுவதும் ஈஸ்வரத் தத்துவமே…!
ஆனால் மோகத்தின் வேகத்தைக் காட்டினால் என்ன ஆகும்…?
அங்கே தெய்வீகத் தன்மைகள் மாறி சிருஷ்டி அல்லாத தன்மைக்கு அந்தக் குணங்கள் தனக்கொத்த வீரியம் கொள்ளும் பொழுது… காமம் அந்த மோகத்தின் சபலமாகி விடுகின்றது.
அந்த மோக மயக்கம் நீக்கும் தத்துவத்தைத் தான் “சாப நீக்குப் படலம்…” என்று செயல்படுத்திக் காட்டினார். ரிஷிபத்தினி சக்தியின் உயர்வைத் தன் காப்பியத்தில் பாசம் என்ற வழிச் செயலுக்கு ஆக்கம் தந்தார் அந்த வான்மீகி மாமகரிஷி.
கௌதம முனிவருக்குத் தன் நிலையை உயர்த்த ரிஷிபத்தினி வேண்டும். அந்தச் சக்தியின் தொடர் அகலிகையின் எண்ணத்தின் பால் செலுத்திப் பெற அகலிகையின் சிறு சலன சபலம் தடையாகிப் போனது.
1.கௌதம முனிவன் பெற்ற சஞ்சல சபல நிலை நிறைவேறாத எண்ணத்தால்
2.தனக்குள் எழுந்த கோபமும் அந்தக் கோபத்தின் பின் எழுந்த விரக்தியும்
3.விரக்தியின் பின் எழுந்த மனோதிடமும் வைராக்கியமும்
4.இந்தக் கூட்டு முறை வழித் தொடரில் மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு
5.தானும் தனித்த சுயப்பிரகாசத்தை எட்ட மண்டலமாவேன்…! என்ற சுய வீரிய குணத்தைக் காட்டவே “அகலிகை கல்லானாள்…!” என்று காட்டப்பட்டது.
சபல குணத்தின் தன்மையை உருவகப்படுத்திக் காட்டவே இந்திரன் என்ற பாத்திரப் படைப்பாக்கிக் காட்டினார் வான்மீகி.
சபல குண வலையில் விழுந்ததால்… தன் மனது சபல குணத்தின் பால் திருப்பிய குணத் தன்மையால்… இந்திரனால்… “அகலிகை தன் நிலையில் மாசு கொண்டாள்…” என்பது இது அந்த மோக குணத்தால் தான்…!
1.இந்திரன் என்ற சரீர உருவகத்தை யாரும் மனத்தினாலும் எண்ண வேண்டியதில்லை…!
2.இந்திரன் என்று மகரிஷி காட்டியது மோகத்தால் எழும் சபல குணத்தைத்தான்…!
அகலிகையின் சக்தி கௌதம முனிவனின் சக்தியுடன் ஒன்றும் பொழுதுதான் அது ரிஷிபத்தினி என்ற சிறப்பை அடைகிறது… அப்போது தான் அளவிடுவதற்கரிய சிறப்பைப் பெறும் என்று காட்டுகின்றனர்.
ஆக… சிவ சக்தி என்ற ஐக்கிய நிலையில் தான் வானஇயலில் மண்டலமாக வளரும் சக்திக்கு வலுக் கொள்ள முடியும் என்பதையும் நன்கு புலப்படுத்தி உலகிற்கு நீதியைப் போதனைப்படுத்தும் தன்மைக்கு அதை அருளியிருக்கின்றார்.
இதை விசுவாமித்திரர் வாயிலாகவே வான்மீகியார் காட்டி உபதேசிக்க வைக்கின்றார்.
அதாவது அகலிகை தன் நிலை உணர்ந்து.. தன் உயர்வைத் தான் தேடிக் கொண்டு… தன்னுடைய பதியான கௌதம முனிவனுக்குச் சக்தியை ஊட்டித் தானும் அந்த ரிஷியின் சக்தியுடன் ஒன்றினாள்…! அதாவது
1.பால்வெளிச் சூட்சமத்தில் கலக்கும் தொடர்பைக் காட்டி
2.ரிஷியின் சக்தியுடன் ரிஷிபத்தினிச் சக்தியையும் கலக்கும் ஆத்ம கலப்பே
3.ஆத்ம ஜோதிக் கலப்பாக முழுமை பெறும்…! என்று காட்டுகின்றார்.
இப்படிப்பட்ட பூரணத் தன்மையைப் புரிந்து கொள்ளக் கூடிய காவியத்தை.. சூட்சமமாகக் காட்டப்பட்ட அந்தத் தத்துவத்தையே… பலர் “சபல குணத்தை இந்திரன்…” என்று உருவகப்படுத்தி தங்களுக்குள் உள்ள அறிவின் ஞானத்தால் அறிந்தோ அறியாமலோ மாசுபடுத்தி விட்டார்கள்.
இராமன் கால் பட்டு அகலிகைக்கு விமோசனம் என்பதன் பொருள் என்ன…?
அகலிகைக்குக் குருவாகி உபதேசிக்கும் தன்மையில்
1.அவள் கல்லான மனத்தின் பால் நின்று
2.தியானம் என்ற வழி முறையை… எண்ணத்தால் அந்த உயர்வைப் பெறும் வழியை… (இராமன் என்றால் எண்ணம்)
3.விசுவாமித்திரர் புரிய வைத்தார் என்பதே அதன் பொருள்.

திருமணத்திற்குத் தேவை மனப் பொருத்தமே…!
அந்தந்த மனிதனுக்குகந்த அமைப்பின் நிலைகள் கொண்டு தான் இன்றைய “மணப் பொருத்தங்கள்” பார்க்கும் நிலைகள் இருக்கின்றது.
பெண் நல்ல குணமாக இருக்கும்… இவர் வெறுப்படையும் உணர்வு கொண்டு இருப்பார். ஆனால் இவருடைய நிலைக்கும் இந்த நல்ல மனம் கொண்\டவர்களைப் பொருந்தாது என்று சொல்வார்கள்…!
அப்படிச் சொன்னாலும் கூடப் பரவாயில்லை. வேதனைப்படுத்தும் உணர்வின் வலிமை பெற்றவரைப் “பொருந்தும்’…” என்று சொல்லிவிடுவார்கள். நல்ல குணம் கொண்ட பெண் இங்கே வந்தபின் இவருக்குள் அடங்கும்.
சில குடும்பங்களில் பார்க்கலாம்…! விஷத்தின் தன்மை ஒன்றை அடக்குவது போல் அத்தகைய ஆணின் தன்மை வரப்படும் பொழுது
1.எல்லாவற்றிலும் வல்லமை பெற்றவன் என்ற நிலையில்
2.நல்ல பெண்ணைத் திருமணம் செய்து கொடுத்தால் அதை அடக்கிச் சதா இம்சிப்பான்.
ஜாதகப் பொருத்தம் எல்லாம் பார்த்துச் சரி என்று திருமணம் செய்த சில குடும்பங்களில் பார்த்தோமென்றால் பெண்ணை உதைத்துக் கொண்டே இருப்பான்.
இதே போல் தான் நல்ல மாப்பிள்ளையாக வருவான். அந்த நல்ல மாப்பிள்ளைக்கு விஷம் கொண்ட நிலைக்கு அத்தகைய பெண் தான் பொருந்தும் என்று சொல்லிவிடுவார்கள்.
திருமணம் செய்து அந்தப் பெண் புகுந்த வீட்டிற்குச் சென்றால் எல்லோரையும் அடக்கி ஆட்சி புரியும்… பயமில்லாது வாழும்…! மாமனார் மாமியார் எல்லோரையும் அடக்கும்.
புருஷன் சொன்னபடி கேட்க வேண்டும் என்று இப்படித் தான் இவர்கள் பொருத்தம் பார்க்கின்றான்ர். இருந்தாலும் திருமணமான பின் வீட்டிற்குள் வந்த பின் பார்த்தால்… பெரிய ரகளையாகத் தான் இருக்கும்.
1.ஏதாவது ஒன்று சேர்ந்து வாழ்கின்றார்களா…?
2.ஜாதகம் பார்க்காது திருமணம் செய்கின்றோமோ…?
3.நேரம் பார்க்காது திருமணம் செய்கின்றோமா…?
4.நல்ல நேரம் பார்க்காது தொழில்கள் செய்கின்றோமா…?
சற்று சிந்தித்துப் பாருங்கள்…!
இயற்கையின் இயக்கத்தின் நிலைகளைத் தான் அன்று அது எப்படி உருவாகிறது என்று ஜாதகத்தின் உண்மைகள் என்று தெளிவாகக் காட்டினார்கள். ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படும் பொழுது இரண்டும் மாற்றம் அடைகிறது… இது அதர்வண…!
கணவன் உடல் வலிமை கொண்டு மனைவியை வேதனைப்படுத்தும் நிலையாக இருந்தால் அந்த விஷத்தின் உணர்வாக இயங்கி… பார்…! நான் தற்கொலை செய்து கொள்வேன்…! என்றால் கணவன் உடனே பயந்து கொள்வான்.
வீட்டில் மாமனாரோ மாமியாரோ அல்லது மற்ற உறவு முறை உள்ளவர்களோ ஏதாவது சொன்னால்…
1.என்னைக் கொடுமைப்படுத்துகின்றீர்கள்.. இம்சிக்கின்றீர்கள் என்று
2.போலீஸில் புகார் செய்வேன் என்று பெண் மிரட்டும்..! சொன்னால்
இப்படிச் சொன்னால் அவர்களும் பயந்து விடுவார்கள். பின் அந்தப் பெண் எப்படி இங்கே அடங்குவது…?
ஜாதகம் பார்த்துத் தான் எல்லாம் செய்தார்கள்… அதற்கு என்ன செய்வது..? இப்படிப்பட்ட பெண்களைத் தான் அங்கே பொருத்தமாகப் பார்ப்பார்கள்.
ஒரு சில குடும்பங்களில் பெண் மிகவும் அமைதி கொண்டதாக இருக்கும். ஆனால் கணவனிடமும் மற்றவர்களிடமும் நரக வேதனைப்பட்டுக் கொண்டிருப்பதையும் காணலாம்.
ஒவ்வொரு நாளும் நான் படும் இம்சை வெளியில் சொல்ல முடியாது… எனக்கு ஒரே மன உளைச்சலாக இருக்கிறது… நரக வேதனைப்படுகின்றேன்…! என்றெல்லாம் சில பெண்கள் சொல்வதைப் பார்க்கலாம்.
1.ஜாதகத்தைப் பார்த்து… பொருத்தமும் பார்த்துத்தான் எல்லாம் செய்கிறோம்
2.நல்ல முறையில் வாழ்வார்கள் என்று தான் நாமும் எண்ணுகின்றோம்.
ஆனால் அப்படி நடக்கின்றதா…? என்றால் இல்லை…! மனிதனுக்குகந்த அந்த ஆசையின் நிலைகள் கொண்டு இந்த ஜாதகக் கணிப்பை உருவாக்கிக் கொண்டுவிட்டார்கள்.
பொருத்தம் எப்படிப் பார்க்க வேண்டும்…?
1.குணச் சிறப்பின் தன்மையை நாம் உணர்ந்து
2.அவர்களுடைய பண்பையும் மனதையும் இரண்டையும் கலந்தபின்
3.திருமணம் செய்தால் அந்தக் கணவனும் மனைவியும் என்றுமே ஒத்து வாழ்வார்கள்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
இருபத்தேழு நட்சத்திரங்கள் ஒன்றுக்கொன்று மோதும் போது அந்த இயல்பால் மின் கதிர்களை அது விலக்கிச் செல்லும் உணர்வுகளைச்
1.சில தாவர இனங்கள் கவர்ந்து கொள்கின்றது,
2.இத்தகைய உணர்வுகள் விளைந்த செடிகளின் விழுதுகளைக் கையில் வைத்துக்கொண்டால்
3.மின்னலின் ஆக்கங்கள் அது நம்மைத் தாக்காது.
பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியன் தாய் தந்தையர் அத்தகைய செடிகளை அறிந்திருந்தார்கள்.
அகஸ்தியன் கருவில் இருக்கும் பொழுது அந்தத் தாய் அந்த மின்னலைத் தணிக்கும் அத்தகைய விழுதுகளின் மணங்களை நுகர்ந்தது. கர்ப்பிணி அதை நுகரப்படும் போது கருவிலிருக்கும் சிசுவுக்கும் (அகஸ்தியன்) அந்த விழுதுகளின் மணங்கள் இரத்தத்தின் வழி கிடைக்கின்றது.
1.மின்னல் பாயும் பொழுது
2.மின் கதிர்கள் எவ்வளவு தூரம் செல்லுகின்றதோ…
3.அந்த ஆற்றல்களைக் கருவிலிருக்கும் சிசு (அகஸ்தியன்) பெறுகின்றது.
4.ஒவ்வொரு தாவர இனங்களின் இயல்புகளையும்
5.வானஇயல் இயல்புகளையும் பூமி உருவான நிலையும்
6.பூமி உருவாவதற்கு முன் சூரியன் எப்படி உருவானது என்ற நிலையும்
7.வான்வீதி முதலில் எப்படி இருந்தது என்ற நிலையும்
8.கண்டறியக்கூடிய சக்தி அகஸ்தியன் பெற்றதற்குக் காரணமே
9.அவருடைய மூதாதையர் கண்டுணர்ந்த உணர்வுகள் அனைத்தும்
10.தாய் கருவிலேயே அவன் பெற்று வளர்ந்தது தான்.
அகஸ்தியனால் காட்டப்பட்ட உண்மையால் தான் மற்ற சூரியக் குடும்பங்களைப் பற்றியும் நம்முடைய சூரிய குடும்பத்தைப் பற்றியும் இப்படி “எத்தனையோ வகையான எண்ணிலடங்காத சூரிய குடும்பங்கள் இருக்கின்றது…!’ என்று விஞ்ஞான அறிவில் இன்று கண்டு கொண்டுள்ளார்கள்.
அந்த மெய்ஞானியான அகஸ்தியன் ஓர் சூரியன் உருவானதும் அந்த சூரியக் குடும்பத்திற்குள் 27 நட்சத்திரம் உருவானதையும் கண்டுணர்ந்தான்.
அதே சமயத்தில் அந்த 27 நட்சத்திரங்களும் ஒரு காலம் சூரியனாக மாறுகின்றது. அப்பொழுது முதலில் உருவான சூரியன் செயல் இழக்கின்றது என்பதையும் அகஸ்தியன் கண்டுணர்ந்தான்.
ஏனென்றால் 27 நட்சத்திரங்கள் பிற மண்டலத்தின் சக்திகளைக் கவரும் பொழுது தான் சூரியனும் சீராக இயங்க முடியும். பிற மண்டலங்களிலிருந்து வரவில்லை என்றால் சூரியனுக்கு உணவில்லை… மடிந்துவிடும்.
1.ஆக சூரியனுக்கு உபகாரமாக இருக்கும் 27 நட்சத்திரங்களும் 27 பிரபஞ்சங்களாக மாறுவதையும்
2.இதைப் போல பல பல சூரிய பிரபஞ்சங்களாக எப்படி மாறி வந்தது என்ற நிலையையும்
3.அகஸ்தியன் தெளிவாகக் கண்டுணர்ந்து வெளிப்படுத்தி இருக்கின்றான்.
4.அவனில் விளைந்த உணர்வுகள்… அவன் வெளிவிட்ட அந்த மூச்சலைகளை நீங்களும் நுகர முடியும்.
இன்று அவன் ஒளியின் உடலாகத் துருவ நட்சத்திரமாக இருக்கின்றான். அவன் மனிதனாக வாழ்ந்த காலத்தில் தாய் கருவிலிருக்கும் பொழுது பெற்ற உணர்வுகளும் நம் பூமியில் பரவிக் கிடக்கின்றது.
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்குள் இதைப் பதிவாக்கி அந்த அகஸ்தியன் மூச்சலைகளைக் கவரும் சந்தர்ப்பத்தை உருவாக்கினார்.
குருநாதர் எனக்குப் பதிவாக்கிய அதே உணர்வுப்படி தான் உங்களுக்கும் பதிவாக்கிக் கொண்டுள்ளேன். உங்கள் சந்தர்ப்பத்தால் அதை நீங்கள் கவரும் தகுதி பெறுகின்றீர்கள். அண்டத்தை அறியும் ஆற்றலும் பகைமை உணர்வுகளை அகற்றும் சக்தியும் நீங்கள் பெறுவீர்கள்.
1.நான் (ஞானகுரு) ஒருவன் கண்டேன் என்றால் அது பத்தாது.
2.என் ஒருவனால் ஒன்றும் செய்ய முடியாது.
3.நீங்கள் எல்லோரும் செயல்படுத்த வேண்டும்.


“சக்கர வியூகம்…” அமைத்துத் தீமைகளைத் தடுக்க வேண்டும் – ஈஸ்வரபட்டர்
இந்த மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் எந்த நிலையை எண்ணி அதை நமக்குள் அதைப் பதிவு செய்கின்றோமோ…
1.அதனால் ஈர்க்கப்படும் சுவாசத்தின் சமைப்பில்
2.தன் ஆன்மாவைச் சுற்றி ஓடும் அந்த சப்த நாத ஒளி வட்டத்தில் “எது வீரியமாக இருக்கின்றதோ…”
3.அதனின் தொடர் நிகழ்வாகத்தான் உடலுக்குள் அணுக்கள் உருவாகிக் கொண்டே உள்ளது… ஒவ்வொரு நாளுமே…!
பூமி ஈர்த்து வெளிப்படுத்தும் அலைத் தொடரில் நாம் சிக்காது உயர் ஞானத் தொடருக்கு நம் எண்ணம் செயல் கொண்டால் ஞானிகள் கண்ட மூலத்தை நாமும் காண முடியும்.
1.நம் உயிரான்மாவின் சக்தியை வலுக்கூட்டும் அத்தகைய பொக்கிஷத்தை
2.நன்னெறியில் நற்செயலுக்கு வினைப்பயனாக உருவாக்கி
3.பேரருள் பேரொளியாக மாற்றிடும் அந்த அரிய செயலுக்கு
4.தடைக் கல்லாக வரும் உலக உணர்வுகளின் எதிர் மோதல் தன்மைகளை
5.பக்குவமாக விலக்கிச் செல்லும் ஆற்றலை நாம் முதலில் பெறவேண்டும்.
வான இயலின் ஆற்றலைத் தன் வாழ்க்கைத் தொடரில் இருந்தே… இந்த உடலிலிருந்தே முழுமை பெற வேண்டும் என்றாலும்
1.தன் எண்ணங்களில் மோதும் மாறுபட்ட நிலைகளில்
2.”பிடர்தல்…” என்ற நுண்ணிய நிலைகள் கொண்டு பிரித்தாளும் நிலைகள் வரவில்லை என்றால்
3.அதனால் ஏற்படும் சங்கட அலைகளால் முதலில் தாக்கப்படுவது நம் சரீரம் தான்.
சங்கடமும் சலிப்பும் வேதனையும் அதிகமாகப் பட்டால் அந்த உணர்வின் சத்து (அமிலங்கள்) நம் சரீரத்தில் உறைந்து தங்கி விட்டால் அது சரீரத்தில் உள்ள அனைத்து அணுக்களுக்குள்ளும் எதிர் மோதலாகி நோயாக மாறிவிடும்…! என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
அதைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்றால் மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்துத்தான் நல்லதாக்க முடியும்.
1.எதிர் மோதலாக வரும் தீமையான உணர்வுகளை
2.அது உடலுக்குள் பதிவாகும் முன்பே நீக்கிட.. “சக்கர வியூகத்தை அமைத்து…”
3.பஞ்சேந்திரியங்களைக் காத்திடும் செயலுக்கு நாம் வர வேண்டும்.
“சக்கர வியூகம்…!” என்றால் நம் நினைவுகளைப் புருவ மத்திக்குக் கொண்டு வந்து அங்கே விழிப்பு நிலை ஏற்படுத்தி அதன் வழியாக விண்ணிலிருந்து வரும் மெய் ஞானிகளின் உணர்வை ஈர்க்கும் பழக்கம் வருதல் வேண்டும்.
அப்பொழுது புலனறிவால் ஈர்க்கப்படும் அனைத்தும் தன்னிச்சையாகச் செயல்படும் செயல் மாறி “புருவ மத்தியின் வழியாக…” ஈர்க்கும் பக்குவம் வருகின்றது.
இல்லறத்திலும் தொழிலிலும் மற்றும் உலகக் கடமைகள் அனைத்திலுமே இந்த விழிப்புணர்வு அவசியம் தேவை.
இத்தகைய விழிப்புணர்வைப் பழக்கப்படுத்திக் கொண்டால் “பேரின்ப இரகசியத்தை அறிந்திடும் தொடரில்…!” அணுவளவும் கால விரயம் ஆகாமல் நல் வினைப் பயனின் பலனை நிச்சயம் பெற முடியும்.

கோப உணர்வின் இயக்கங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்
இன்றைய சகஜ வாழ்க்கையில் கோபப்படாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த நேரத்தில் நமக்குள் உணர்வுகள் அழுத்தமாகி அதிகமான சப்தமும் போடுகின்றோம். ஏன்…?
நாம் நுகரும் உணர்வுகள் எல்லாம் நம் உயிரிலே மோதிய பின் அது டிரன்சாக்சன் செய்து நம் உடலுக்குள் பரவச் செய்கிறது.
விஞ்ஞான ரீதியாக மைக்கின் மூலமாக… ஒரு டிரான்ஸிஸ்டர் ஒலிகளைக் கவர்ந்து அந்த உணர்வுக்கொப்ப ஒலிக்கற்றைகளை ஒலி பெருக்கிக்கு அனுப்பி அதன் மூலம் தான் அந்தச் சப்தங்களை நாம் கேட்கின்றோம்.
1.இதைப் போல தான் எதிர்மறையான அலைகள் நம் மீது மோதும் போது
2.நாம் சுவாசித்த அந்தக் கார உணர்வின் ஒலிக்கற்றைகள் உடலுக்குள் பரப்பப்படும் பொழுது
3.அந்தக் கோபத்தின் உணர்ச்சிகளை நாமே அடக்க முடியாத நிலைகளாகி
4.ஓங்கிச் சப்தமிடுவது… சப்தமான பேச்சுக்களைப் பேசுவது… கொடூர உணர்ச்சிகளை தூண்டும் செயல்களைச் செய்வது…
5.இப்படித் தான் நாம் அந்த இடத்தில் செயல்படுகின்றோம்.
அந்தக் கொடூர செயலைச் செயல்படுத்தும்போது கேட்போர் உணர்வுகளிலும் அது பாய்ந்து நம்மைக் கண்ட பின் அவர்களும் வெறுக்கும் தன்மை வருகின்றது.
அந்த வெறுக்கும் தன்மை அதிகரிக்க அதிகரிக்க… நமக்குள் கோபத்தின் தன்மை அடுத்து எல்லை கடந்தே செல்லும்.
1.யார் மேல் கோபம் படுகின்றோமோ… யாரை வெறுக்கின்றோமோ…
2.அவர் உணர்வுகளை நினைத்து நினைத்துக் கோபத்தின் உணர்வுகள் எல்லை கடந்து செல்கின்றது.
அதனால் நமது உடலில் கடுமையான நோயாக இரத்தக் கொதிப்பாக உருவாகி விடுகின்றது. அப்படிப்பட்ட நிலைகள் வரும் பொழுது சிந்திக்கும் நிலைகள் அழுத்தம் அதிகமாகி விட்டால்… அதன் உணர்வு இரத்த அழுத்தம் (PRESSURE) அதிகமாகும்போது கண்ணிற்குக் கவரும் உணர்வுகள் அந்த இரத்தத்தின் வழி அந்த உணர்வின் தன்மையாக இயக்கும்.
ஆனால் கண்ணிலே இந்த இரத்தத்தின் தன்மை அதிகரித்து விட்டால் கண்கள் சிவந்து விடும். கண்கள் சிவந்து விட்டால் கொடூர உணர்வுடன் காட்சி தரும்.
சில பேர் கோபப்பட்டால் பார்க்கலாம்… வெளியில் தெரியவில்லை என்றாலும்… கோபத்தின் கனலை அவர்கள் கண்களிலே கண்டுவிடலாம். சிவப்பு நிறமாக அதன் உணர்வு இயக்கும்.
அந்த நேரத்தில் எதைப் படித்தாலும்… எதைப் பார்த்தாலும்… வெறுத்திடும் தன்மையே வரும். அனைத்தையும் அழிக்கும் உணர்வே வரும்.
1.கோபம் வந்து விட்டால் தன் பிள்ளையானாலும் அடித்துத் தாக்கும் உணர்ச்சி வந்துவிடும்
2.கோபம் வந்தால் நல்ல பொருட்களைக் கண்டாலும் தட்டி எறியச் செய்யும்
3.கோபம் வந்துவிட்டால் நல்ல பொருளைத் தூக்கி (கனமாக இருந்தாலும்) உடைக்கச் செய்யும்
4.புலி எப்படி இரக்கமற்று மற்றதைத் தாக்குகின்றதோ அத்தகைய உணர்ச்சி தான் இயக்கும்.
உதாரணமாக ஒரு நல்ல உணர்வுடன் ஏதாவது தென்பட்டாலோ அல்லது யாராவது அந்த நேரத்தில் மகிழ்ச்சியாகச் சிரித்தாலோ அவர்களைப் பார்க்கும் பொழுது வெறுக்கும் உணர்வுகளைத் தான் தோற்றுவிக்கும்.
இதற்கெல்லாம் காரணம் யார்…? நமது உயிரே…! நுகர்ந்த உணர்வுக்கொப்ப அதன் உணர்ச்சிகளாகத் தான் நம்மை இயக்குகின்றது.
ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அதிலே எப்பொருளைப் போடுகின்றோமோ… அது அந்த வெப்பத்தால் அதன் உணர்வின் மணங்களை வெளிப்படுத்துகின்றது. அந்த மணத்திற்கொப்ப நுகர்ந்தோர் உணர்வுகளையும் இயக்கச் செய்கின்றது.
இதைப் போலத் தான் இந்த உயிரின் இயக்கங்கள் என்பது அது நெருப்புக்கு ஒப்பானது தான்…!
1.நாம் எண்ணியதைத் தான்… நாம் நுகர்ந்ததைத்தான் அது இயக்கிக் காட்டுகின்றது.
2.அந்த உணர்வைத்தான் கண் கொண்டு பார்க்கவும் செய்கின்றோம்.
கோபம் வந்துவிட்டால் சிந்திக்கும் தன்மையும் இழக்கப்படுகின்றது. அதே சமயத்தில் நமது செயல்களும் சீராக இருப்பதில்லை.
ஒரு கணக்குப் பார்த்தால் சரியாகப் பார்க்க முடிவதில்லை. ஒரு பொருளைச் சீராக பார்த்து… அதனின் தரத்தைப் பார்த்துத் தேர்ந்தெடுக்கும் தன்மையும் இழந்து விடுகின்றது.
1.ஆனால் தரமாக சரக்காக இருப்பினும்
2.நம் உணர்வுடன் அந்த தரமிழந்த உணர்வுகள் இயக்கப்பட்டு நல்ல பொருளைப் பார்க்கும்போது வெறுப்பாகின்றது.
3.நல்லவைகளைத் தேர்ந்தெடுக்கும் தன்மையும் இழக்கப்படுகின்றது
4.வியாபாரத்தில் இத்தகைய நிலைகள் பெற்றால் வியாபாரம் மந்தமாகும்.
வியாபாரம் மந்தமாகும் பொழுது வேதனை என்ற உணர்வு கூடி கோபமும் வேதனையும் மீண்டும் அதிகமாக அதை நமக்குள் வளர்க்க வளர்க்கச் சிந்தனை குறைவாகி விஷத்தின் தன்மை ஆற்றல் அதிகமாகி இந்த உடலில் கடுமையான நோய்கள் உருவாகி விடுகின்றது.
பின் மனித உடலை உருவாக்கிய நல்ல அணுக்களின் செயலாக்கங்களை அது மாற்றி விடுகின்றது.
உதாரணமாக குளவி ஒரு புழுவைக் கொட்டிய பின் அந்த உணர்வுகள் கலந்து கொண்ட பின் புழுவின் உடலே குளவியாக மாற்றமடைகின்றது.
அதைப்போல் தான் நம் உடலிலும் அத்தகைய மாற்றம் ஆகும் பொழுது…
1.இந்த உடலை விட்டு உயிராத்மா சென்றபின்
2.எந்தக் காரமான உணர்வை இந்த உடலில் அதிகமாக எடுத்தோமோ
3.அதற்கொப்ப மற்றொரு உடலின் ஈர்ப்புக்குள் சென்று
4.அங்கே இதன் உணர்வை முழுமையாக்கி அந்த உடலையும் வீழ்த்திவிட்டு வெளி வரும்போது
5.அடுத்துப் புலியாகத் தான் நாம் பிறக்க முடியும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
நாம் எண்ணும் உணர்வுகள் அனைத்தையும் நம் உயிர் ஓ…ம் நமச்சிவாய.. ஓ…ம் நமச்சிவாய.. ஓ…ம் நமச்சிவாய.. என்று உடலாக மாற்றிக் கொண்டேயுள்ளது.
அதைத் தான் “பார்வதி பஜே… நமச்சிவாய” என்பது.
நாம் நுகர்ந்த உணர்வுகள் உயிரிலே பட்டு இந்த உணர்ச்சிகள் நம் இரத்தத்துடன் கலந்து நம் உடலாக உருவாக்கும் கருத்தன்மை அடைகின்றது.
இது தான் “ஓ…” பிரணவம் “ம்…” பிரம்மம் என்று நம் சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றது. அதன் வழியில்
1.நாம் எண்ணும் பார்க்கும் நுகர்ந்து அறியும் அனைத்தையும்
2.சதாசிவமாக ஆக்கிக் கொண்டேயுள்ளது நம் உயிர்.
3.அதாவது சதா நம் உடலாக மாற்றிக் கொண்டேயுள்ளது என்று பொருள்படும்படி நம் ஞானியர்கள் கூறியுள்ளார்கள்.
ஆகவே நாம் சதா சிவமாக்க வேண்டியது எது?
இருளை அகற்றி அருள் ஒளி பெறும் அருள் ஞானத்தை நாம் நுகர்ந்தறிந்து நம் உடலில் “இருளை அகற்றிடும் அருள் ஞானத்தைச் சதா சிவமாக்கிக் கொண்டேயிருத்தல்” வேண்டும்.
நமது உணர்வுகள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இணைந்து நம் வாழ்க்கையில் என்றும் ஏகாந்த நிலை என பேரருள் பேரொளி என ஆகி என்றும் பிறவியில்லா நிலை அடைய இது உதவும்.
அகஸ்தியன் துருவனாகி திருமணமாகி இரு மனமும் ஒன்றாகி அகண்ட அண்டத்தையும் அறிந்துணர்ந்து இருண்ட உலகை அகற்றிப் பேரருள் பேரொளி என ஆன அந்த அருள் சக்திகளைப் பெறவேண்டும் என்று நாம் ஏங்கித் தியானிப்போம்.
1.அகஸ்தியர் அவர் வாழ்ந்த காலங்களில் எதை எதையெல்லாம் நுகர்ந்தாரோ
2.அந்தத் தாவர இனங்களின் நறுமணங்களும்
3.தீமைகளை நீக்கிடும் பச்சிலைகளின் மணங்களும் இங்கே வரும்.
நீங்கள் தியானிக்கும் பொழுது பல விஷத் தன்மைகளும் விஷமான உணர்ச்சிகளையும் தீமைகளை நீக்கிடும் அல்லது அடக்கிடும் “அருள் மணங்கள்” உங்களுக்குள் வரும்.
இவை அனைத்தும் உங்கள் உடலுக்குள் சென்று தீமையை அடக்கி அருள் ஞானத்தைப் பெருக்க உதவி செய்யும்.
உங்கள் மனைதை அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான “அந்தப் பேரருளுடன் இணைத்து…” அந்தப் பேரருளைப் பெறவேண்டும் என்ற ஏக்கத்துடன் தியானியுங்கள்.
1.சர்வ பிணிகளையும் அகற்றிடும் அருள் சக்தியாக
2.அகஸ்தியன் கண்ட பல மூலிகைகளின் மணங்கள்
3.இப்பொழுது உங்களுக்குள் வரும்.
அதை ஏங்கிப் பெற்று நமக்குள் சர்வ பிணிகளையும் சர்வ தோஷங்களை அகற்றிடும் அருள் ஞான சக்தியைப் பெறவேண்டும் என்று ஏங்கித் தியானிப்போம்.
ஓ…ம் ஈஸ்வரா குருதேவா என்று நம் உயிரை வேண்டி கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து உங்கள் நினைவனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி அதனின்று வெளிப்படும் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.
அவ்வாறு துருவ நட்சத்திரத்தை எண்ணி ஏங்கித் தியானித்துப் பேரருளை உங்கள் உடலில் உருவாக்குங்கள். பேரருளைப் பெருக்குங்கள்.
அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் தாய் தந்தையர் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளை ஏங்கித் தியானித்து அன்னை தந்தையர் உடல் முழுவதும் படரச் செய்து நமக்காகப் பட்ட துயரினை அகற்றச் செய்து பேரருள் பெறவேண்டும் என்று அன்னை தந்தையரை ஏங்கித் தியானியுங்கள்.
உங்கள் அன்னை தந்தையர் உடல் முழுவதும் படர்ந்திட வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.
அகஸ்தியன் பெற்ற அற்புத சக்திகளைப் பெற நாம் தியானிக்க வேண்டிய முறை இது. தொடர்ந்து செய்து வந்தால் எத்தகையை தீமைகளையும் பிணிகளையும் போக்க முடியும்.
நம் பார்வையால் பேச்சால் மூச்சால் மற்றவர்கள் தீமைகளும் பிணிகளும் தோஷங்களும் அகலும். செய்து பாருங்கள்.


கஜலக்ஷ்மியின் சிறப்பு பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது
1.சுவாசத்தின் வீரியத்தைக் காட்ட நாசியாக யானைகளையும்
2.சுவாசத்தில் நறுமணத்தை எடுக்க வேண்டியதைக் காட்ட துதிக்கையில் அமுதக் கலசத்துடன் மலர்களையும்
3.மன எண்ண வீரியத்தின் தூய்மையைக் காட்ட ஏழு எண்ணங்கள் கலந்த (தூய்மையான எண்ணமாக) வெண்மையான யானையின் நிறத்தையும்
4.சுவாச நிலை முக்தி பெறும் தொடருக்கு ஆதி மூல நீர் சக்தியைக் காட்டி
5.நீரடி மூல வித்து நீர் மண் தொடர்பில் (மண் வளத்தில் வளரும் தாவரம் போல்) சித்தன் நிலை பெறும் சித்துக்கள் என்பதைக் காட்ட
6.நீரின் சுவாசத்தை ஈர்த்துச் சமைத்திடும் ஆகார நியதியைக் கொண்டு முளைத்து… நீர் மேல் கிளைத்தெழும் தாமரை இதழ்களைக் காட்டி
6.பரிபூரணத்தை ஒவ்வொருவரும் பெற்றிடும் வழியாக வண்ண மலரில் அமர்ந்துள்ளாள் “கஜலக்ஷ்மி…!” என்று அன்று உணர்த்தினார்கள் ரிஷிகள்.
மண்டலமாக உருக்கோலம் பூண்ட நம் பூமித் தாய் பெற்று வளர்த்திட்ட… இன்னும் வளர்ச்சியின் வலுக்கொள்ளும் ஈர்ப்பின் செயலில்… தன்னை மேன் மேலும் வளர்த்துக் கொள்கின்றது.
அதைப் போல் பூமித் தாயின் செல்வங்களான ஒவ்வொரு உயிரான்மாவும் ஆதிமூலச் சக்தியின் தொடர் கொண்டு தன்னை வளர்ச்சி நிலைப்படுத்த வேண்டிய தொடருக்கு “கஜலக்ஷ்மியாக அமர்ந்துள்ளாள் பூமித்தாய்…! என்று காட்டினார்கள் அன்றைய சித்தர்கள்.

மனிதனுக்கு ஜாதகம் இல்லை… எண்ணியதை உருவாக்கக் கற்றுக் கொண்டவன் தான் மனிதன்…!
எத்தகைய தீமை வந்தாலும் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகள் பெறவேண்டும் என்ற இந்த உணர்வினைக் காலை துருவ தியானத்தில் கணவனும் மனைவியும் எடுத்துக் கொண்டால்
1.அந்த அருள் ஒளி இங்கே இருளை மாய்க்கும்
2.உணர்வின் தன்மை இரண்டற இணைக்கும்… அருள் ஒளி பெருகும்.
திருமணம் ஆகும் போது மணமக்களை ஆசீர்வதிக்க வருபவர்கள் எப்படி வாழ்த்த வேண்டும்…?
அதாவது திருமணத்திற்கு வரும் அனைவரும் அந்த ஞானிகளையும் மகரிஷிகளையும் எண்ணித் தியானித்து அந்த உணர்வினைப் பெற்ற பின் தன் பார்வையும் செயலும் கொண்டு மணமக்கள் வசிஷ்டரும் அருந்ததியும் போல வாழ வேண்டும் என்று இந்த உணர்வின் ஒலிகளை எழுப்ப வேண்டும்.
1.திருமணமாகும் பொழுது எல்லோரும் சேர்ந்து மணமக்களுக்கு இத்தகைய வாழ்த்தினைப் பாய்ச்சப்படும் போது
2.திருமண நாளை அவர்கள் எண்ணும் பொழுதெல்லாம்
3.அவர்கள் வாழ்க்கையில் அது தீமையை அகற்றும் நாளாக வருகின்றது.
ஒவ்வொரு நாளும் காலை துருவ தியானத்தில் கணவனுக்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் மனைவிக்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று கணவன் மனவி இருவரும் எண்ணும் போது இரு மனமும் ஒன்றுகின்றது.
இருள் சூழாத நிலைகளும் பேரருளை இருவருக்குள்ளும் உருவாக்கும் கருவின் தன்மையும் உருவாகின்றது.
வெளியில் சென்று விட்டு வரும் கணவன்… எத்தகைய தீமைகளைப் பார்த்து அல்லது நுகர்ந்து வந்தாலும்… அந்தத் தீமையின் சொல்லை மனைவியும் கேட்க நேர்ந்தாலும்…
1.அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகள் பெற வேண்டுமென்று
2.இருவரும் ஒன்றாக எண்ணப்படும் பொழுது தீமைகள் வளரவிடாது தடுக்கும்…!
இதை உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.
இன்று ஜாதகம் பார்ப்போரும் சரி கேட்போரும் சரி எந்த நிலையில் இருக்கின்றனர்…?
குடும்பத்திலோ தொழிலோ கஷ்டம் என்று அங்கே சென்றால் காசுக்காக வேண்டி தோஷங்கள் இருக்கிறது… ஏழரை நாட்டான் சனி பிடித்திருக்கிறது… சனி இங்கே பார்க்கின்றது…! என்று சொல்லி அதற்குப் பரிகாரமாக இன்னென்ன உபசாந்திகளையும் சாங்கியங்களையும் செய்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்வார்கள்.
கணித்துச் சொல்லும் போழுது… கூட கொஞ்சம் இரண்டு எட்டு வைத்து அதை கூட்டிச் சொல்லி இருப்பான். ஜாதகம் தெரிந்தவர்களே வந்தாலும் கூட…
1.சனி வக்கிரமத்தில் இருக்கின்றது
2.இதனுடன் சேர்க்கப்படும் பொழுது இன்னென்ன முறிவுகளைச் செய்ய வேண்டும் என்று சொன்னால்
3.ஆமாம்… ஆமாம்… செய்தால்தான் சரியாக வரும்… நன்றாக இருக்கும்…! என்பார்கள்.
இவரும் ஜாதகம் பார்ப்பவர் அவரும் ஜாதகம் பார்ப்பவர்…! இவன் சொன்ன தவறை மறைப்பதற்கு காசு கொடுத்து மறைக்கச் செய்கின்றான்.
ஆனாலும் ஜாதகக்காரன் சொன்ன உணர்வு… இவருக்குள் பதிந்த அந்த விஷத்தின் தன்மை கொண்டு
1.கஷ்டம் என்று வரும் பொழுது… “அன்னைக்கு அந்த ஜோசியக்காரன் சொன்னான் அல்லவா…” என்ற எண்ணம் தான் வரும்
2.அந்த ஜாதகம் சொன்னபடிதான் நடக்கின்றது… அந்த விதிப்படிதானே நடக்கும்…! என்று சொல்வார்கள்.
விதிப்படிதான் நடக்கும் சென்று சொன்னாலும் ஏன் இந்த விதியை மதி கொண்டு வெல்லும் சக்தியை நாம் ஏன் பெற முடியாது…? என்று சிந்திப்பதில்லை.
பிறந்ததிலிருந்து ஜாதகத்தைப் பார்த்து நல்ல காலம் வரும் கெட்ட நேரம் வரும் என்று எல்லாம் செய்கிறார்கள். தொழிலையும் நல்ல நேரம் பார்த்துதான் வைக்கின்றார்கள்.
ஆனால் நஷ்டம் ஆகிவிட்டால்…
1.விதி…! இப்படி நடக்கின்றது என்ன செய்வது…? என்று
2.இதை அவர்கள் சமாதானப்படுத்திக் கொள்கின்றார்கள்.
ஜாதகம் ஜோதிடத்துடன் பார்த்து எல்லாம் செய்து… அடுத்து கோவிலுக்குச் சென்று அங்கே நஷ்டமானதையும் குடும்பத்தையும் எண்ணி வேதனைப் பட்டுக் கொண்டிருக்கும் பொழுது
1.என்னமோ தெய்வம் என்னைக் கைவிட்டுவிட்டது
2.என் விதி என்னிடம் விளையாடுகிறது…
3.என் விதியினால் தெய்வமே என்னை விட்டு விலகிச் சென்று விட்டது…! என்று இப்படித் தான் எண்ணுகின்றார்கள்.
மதி கொண்டு விதியை மாற்ற வேண்டும் என்ற நிலை இருக்கப்படும் பொழுது அதை மாற்றும் திறனைத் தான் நாம் கடைப்பிடிக்க வேண்டும். அதற்குத்தான் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும்படி உங்களுக்கு அடிக்கடி உபதேசிக்கின்றோம்.
அந்த மதி கொண்டு விதியை மாற்ற முடியும். ஆலயத்தின் பண்புகளும் அது தான். மனிதனுக்கு ஜாதகம் இல்லை…!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
குருநாதர் உங்கள் உயிரை எல்லாம் “கடவுளாக…” மதிக்கச் சொன்னார். உங்கள் உடலைக் கோயிலாக மதிக்கச் சொன்னார். உயர்ந்த சக்திகளை எடுத்து ஒவ்வொரு உயிருக்கும் “நீ அபிஷேகம் செய்…!” என்றார்.
கோயிலில் போய் பால் அபிஷேகம் தேன் அபிஷேகம் சந்தான அபிஷேகம் எல்லாம் நீங்கள் செய்கிறீர்கள் அல்லவா…?
அதே போல் அந்த மெய் ஞானிகளின் அருள் சக்தியை எடுத்து நான் (ஞானகுரு) உங்களிடம் உபதேசித்துக் கொண்டிருக்கின்றேன். அப்பொழுது “உம்…” கொடுத்துக் நீங்கள் கேட்கும் பொழுது உங்கள் ஈசனுக்கு அபிஷேகம் நடக்கின்றது.
அப்போது அந்த மகிழ்ச்சியான உணர்வுகளைத் தனக்குள் வடித்துப் பிரம்மமாக வடித்து வைக்கின்றது.
அவ்வாறு அந்தச் சக்தியாக வடித்ததை
1.இதையே உங்கள் உயிரை ஈசனாக நினைத்து
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணினீர்கள் என்றால்
3.அப்போது உங்கள் உயிரான ஈசனுக்கு நீங்கள் அபிஷேகம் செய்கிறீர்கள்.
அந்த உயர்வான சக்திகள் உங்கள் உடலுக்குள் உள்ள நல்ல குணங்களான தெய்வங்களுக்குக் கிடைக்கின்றது. உடலான சிவம் சந்தோஷமாகி நாம் என்னென்ன நினைக்கின்றோமோ அந்தந்த வேலையெல்லாம் செய்ய வைக்கும்.
அதே சமயத்தில் உங்கள் சொல்லுக்குள் மகரிஷிகள் உணர்வுகள் கலந்தவுடனே “சரஸ்வதி… ஞானம்…” சரஸ்வதி என்பது மணம்.
நீங்கள் பேசக்கூடிய உணர்வுகள் நாதம். மற்றவர்களுக்குச் சொல்லும் பொழுது அங்கே நமக்குத் தகுந்த மாதிரி இனிமையாகப் பேச வைத்து “நமக்கு உதவி செய்ய வைக்கும்.”
ஒரு அணு வேப்பமரத்தின் கசப்பை எடுத்துக் கொண்டால் அதை நாம் நுகரும் பொழுது “ஐய்யய்யோ…” என்று வாந்தி வரவழைக்கும்.
1.கசப்பின் தன்மை வரும் பொழுது உயிரான ஈசனுக்கு நெளிவாகின்றது.
2.உடலுக்குள்ளும் நெளிவாகச் செய்கின்றது.
3.நெளியும் உணர்வை அதிகமாகச் சுவாசித்தால்
4.நெளிந்து திரியும் உணர்வின் உடலாக (உயிரினமாக) அது மாற்றி விடுகின்றது.
ஆனால் ஒரு ரோஜாப்பூவின் சக்தியை அதே மாதிரி ஒரு அணு எடுத்து வந்தால் அதை நுகர்ந்தவுடன் “ஆஹாஹா…” என்று சொல்லுகின்றோம்.
இதே போல மகரிஷிகளின் அருள் மணத்தை நாம் எடுத்துச் சுவாசிக்கும் பொழுது எல்லாவற்றிலும் இனிமையான நிலையை உருவாக்கி விடுகின்றது.
ஆகவே நம் உயிரான அந்த ஈசனிடம் இந்த உணர்வுகள் படும் பொழுது அந்த நறுமணத்தைச் சுவாசிக்கும் பொழுது நம்மை மகிழச் செய்கின்றது.
நாம் சுவாசிப்பது அனைத்தையும் உயிர் பிரம்மமாக இருந்து நம் உடலாகச் சிருஷ்டித்துக் கொண்டே இருக்கின்றான்.
ஞானிகள் சொன்னது… “பிரம்மாவைச் சிறைப் பிடித்தான் முருகன்…!” சிருஷ்டிக்கும் ஆற்றல் நம் ஆறாவது அறிவுக்குள் உண்டு. நமக்குள் படைக்கும் சக்தி உண்டு. இதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.


வலம்புரிச் சங்கில் உள்ள விசேஷ குணம் என்ன…? – ஈஸ்வரபட்டர்
உயிரணுக்கள் தன் எண்ணச் செயலுக்கொப்ப வீரியம் கொள்ளும் நிலையே நீர் சக்தியில் (கடல் நீரில்) பல வித உயிர் சக்திகள் உருவாகும் செயலில் எல்லாம் தனித்துவம் ஒன்று உண்டு.
1.ஆயிரம் ஆண்டுகள் நீர் சக்தியின் தொடரில்
2.சுவாசத்தின் சக்தி கொண்டு பெறப்படும் அந்த அரிய அமில குணங்கள்
3.சூரிய சக்தியின் பலனையே ஈர்க்கும் “சங்காக…!” கடலிலே உருப்பெறுகின்றது.
“சங்கு சுட்டாலும் வெண்மை தரும்…!” என்பார்கள்.
அதி உஷ்ணத்திலும் அதி உஷ்ண அக்கினி ஜுவாலையிலும் தன் குணம் மாறாமல் (தன்னையே) தன் அமில குணத்தையே காத்துக் கொள்ளும் திட வீரிய அமில குண அணுக்களின் சேர்க்கை அத்தகைய சங்கிலே உண்டு.
அத்தகைய சங்கின் குணத்தைப் போல் நம்முடய குணம் இருக்க வேண்டும். நீரானாலும் சரி நெருப்பானாலும் சரி சங்கின் அமில குணம் மாற்றமடையாத சிறப்புடையது.
1.ஆயிரம் காலங்களுக்கு மேல் வாழும் பொக்கிஷமாம் அந்த உயிர்ச் சக்தி
2.தன் நிலையில் பரிபூரணத்துவம் பெற்று விட்டு வெளிக் கிளம்பும் சூட்சமத்தில்
3.அந்தச் சங்கு – நீர் மேல் மிதக்கும் முக்கியமான ஈர்ப்பின் செயலை அறிந்துணர வேண்டும்.
நக்கீரனைக் கேட்டால் சொல்வார்…!
சங்கறுக்கும் குலத்தில் பிறந்து வாழ்ந்து புலமை பெற்ற அவரது திட எண்ணம் வீரியத்தின் குணம் எங்கிருந்து வந்தது..? வலம்புரிச் சங்கின் நீரை அவர் அருந்தினார்.
வலம்புரிச் சங்கில் உள்ள விசேஷ குணம் என்ன…?
வாக்தேவி நட்சத்திரத்தின் அமில குணம் உயரிய நாதமாகி… ஓங்காரமாகச் சக்தியாக உயிர் சக்தியுடன் ஒன்றி… நாபிக் கமலம் தொட்டு ஓங்கி உயர் சக்தியாகப் பிசிரற்று வெளிப்பட… சங்கு நீர் அமிலக் குணம் நாம் விண்ணுலகம் செல்ல வழி காட்டும்…! சூட்சமப் பொருளை மனதில் கொள்க…!
1.நக்கீரனை எண்ணி சங்கின் குணத்தைப் பெற வேண்டும்.
2.அந்தச் சங்கு அமில குணத்துடன் ஒன்ற வேண்டும்.
3.நெற்றிப் பொட்டில் உயிர் இருக்கும் இடத்தில் குறுகுறுப்பை உண்டாக்கும்.

ஆலயத்தையும் கோபுரத்தையும் நிர்மாணித்த “ஸ்தபதியர்கள்”
1.ஒரு உணர்வின் தன்மை கொண்டு ஒரு கோளின் உணர்வை அதிகரித்து இந்த மனித உடலில் வாழ்ந்தால்
2.அந்தக் கோளுக்கு மாற்றாக நல்ல உணர்வின் தன்மையை இணைந்து வாழும் உணர்வின் கணக்கிற்கொப்ப
3.நட்சத்திரங்களின் திசை நோக்கி எந்தக் கோள்களுக்கும் சிக்காது அதனின் உணர்வின் நேர்பார்வையில்
4.சூரியனின் ஒளிக்கதிர்கள் துருவ நட்சத்திரத்துடன் இணைப்பு வரும் பகுதியை இணைத்து வைத்தார்கள்.
அந்த இணைப்பின் தன்மை கொண்டு… துருவ நட்சத்திரத்தின் இணைப்பும் மற்ற கோள்களின் இணைப்பும்… துருவப் பகுதியில் கவரும் அதற்கு நேராக ஆலயத்தை அமைத்து தெய்வீகப் பண்பை நாம் ஒவ்வொருவரும் பெறவேண்டும் என்று எண்ணும்படி அன்றைய ஞானியர்கள் செய்தார்கள்.
ஏனென்றால்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பையும்…
2.மற்ற வெள்ளிக் கோளின் உணர்வுகளையும் கார்த்திகை நட்சத்திரத்தின் உணர்வுகளையும் இரண்டாகச் சேர்க்கும் நிலை வரும்போது
3.இதன் உணர்வின் ஒளிக்கற்றைகள் அது பிரிவடைந்து
4.அந்த ஆலயத்தின் அமைப்பிற்குள் சூரியனுடைய ஒளி நேர் பார்வைக்கு வரும் பொழுது அதனை மாற்றி அமைத்து
5.அது எதனைக் கவர்கிறது என்பதை அளவுகோலிட்டுக் கால் மாகாணி என்று முந்தைய கணக்கிடும் தன்மைகள் வந்தது.
இன்று விஞ்ஞான அறிவு கொண்டு கால்குலேட்டர் போன்ற சாதனங்களை அமைத்து மனிதன் சிந்தித்து நுகரும் தன்மைக்கு இல்லாது கொண்டு வந்து விட்டனர்.
கால்குலேட்டர் என்ற உணர்வைப் பதிவு செய்து இதன் மேல் ஞாபகப்படுத்தும் நிலையில் அது எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற உணர்வின் கதிர் கொண்டு ஒன்று ஒன்றுடன் மோதும் பொழுது ஒன்றின் உணர்வுகள் எப்படிக் கணக்கிடுகிறது… என்ற நிலையில் இன்று கணக்கிடுகின்றார்கள்.
இந்த உணர்வின் தன்மை சென்றவன் அதிலேதான் நாட்டம் கொண்டு செல்கின்றானே தவிர மெய் ஞானிகள் உணர்வின் நிலையும் பிரபஞ்சத்தின் உணர்வின் ஆற்றலையோ கணக்கிடும் முறைப்படுத்தி அவன் உலகப் பிரபஞ்சத்துடன் இயக்கும் நிலை காலத்தால் மறைந்து விட்டது… விஞ்ஞான அறிவு ஓங்கி விட்டது…!
நம் உயிர் எலக்ட்ரிக்… சுவாசித்ததை நம் உடலுக்குள் எலக்ட்ரானிக்காக மாற்றுகிறது. மாற்றிய உணர்வின் தன்மை கொண்டு அதை நாம் மீண்டும் எண்ணுவோம் என்றால்
1.நமது உணர்வுக்கும் நுகர்ந்த உணர்வுக்கும் எதிர்நிலை வரப்படும் பொழுது
2.அதன் உணர்வின் அறிவைப் பிரித்துக் காட்டும் நிலைகள் வருகின்றது.
அதே சமயத்தில் கம்ப்யூட்டரில் எதிர் அலைகளைப் பதிவாக்கினால் அதனை உடனே மாற்றி அமைக்கும் சக்தி கொண்டு வருகின்றனர்… கணக்கை மாற்றி விடுகின்றனர் (COMPUTER PROTECTION).
அதே போலத் தான் நமது உயிரின் தன்மை எலெக்ட்ரிக் எலெக்ட்ரான் என்ற நிலை வரப்படும் பொழுது துருவ நட்சத்திரத்தின் உணர்வு கொண்டு அதை நாம் சீராக்கி நல்லதாக மாற்றிட முடியும்.
இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கங்கள் மாற்றம் ஆகும் பொழுது அதற்குத்தக்க ஒரு நல்ல குணத்தின் உணர்வுகள் பிறிதொரு எதிர் நிலையில் இருந்து உருவாக்கப்பட்ட நிலைகளை ஒரு தெய்வத்திற்குக் காரணப் பெயராக வைத்து… அந்தத் திசையை நோக்கி நாம் எண்ணும் பொழுது… வெள்ளி கோளின் உணர்வுகளும் கார்த்திகை நட்சத்திரத்தின் உணர்வுகளும் இதைப் போன்ற மற்ற கோள்களின் நிலைகளை இணைந்து அந்த அந்த உணர்வின் தன்மை மூன்றும் ஒன்றாகச் சேர்க்கும் அத்தகைய நல்ல உணர்வுகளாக உருவாகிப் பரவும் போது அந்தத் திசை வழியாக நம்மை நுகரும்படி வைப்பார்கள் அந்த ஆலயத்திலே.
1.அந்த உணர்வுகள் சூரியனால் கவரப்பட்டுப் பரவி வரும் திசையில் நாம் உற்று நோக்கும் பொழுது
2.அந்த உயர்ந்த குணத்தின் உணர்வுகளை நமக்குள் கிடைக்கும்படி வைத்தார்கள் ஞானிகள்.
இதுகள் எல்லாம் வானியல் சாஸ்திரம் என்ற நிலையில் கடந்த காலத்தில் இயற்கையின் உண்மைகளை அறிந்து அந்த உணர்வைத் தனக்குள் பதிவு செய்து கொண்டு மனக்கணக்காக வைத்துக் கணக்கிட்டனர்.
அந்த மனக்கணக்கு கொண்டு தெளிவாக்கி… தெளிந்த உணர்வு கொண்டு செயலாக்கி… அதன் வழி அந்த வான இயலின் உணர்வின் தன்மைக்கொப்ப ஆலயங்களையும் கோபுரங்களையும் அமைத்தனர்.
1.அவர்களை “ஸ்தபதியர்கள்…” என்று சொல்வார்கள்.
2.இப்படிக் கணக்கிட்டுச் செயல்படுத்திய உலக நிலைகளில் பெருங்கொண்ட மெய் ஞானிகளாக அன்று இருந்தனர்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
இன்று கல்விக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கிறோம். கல்வியை வளர்க்கின்றோம். கல்வியை வளர்த்துக் கொண்டாலும் இந்த உடல் இச்சைக்குச் செயல்படுவோர் சிலர் செய்யும் தவறோ ஏராளமானது..!
டாக்டர் படிப்போ மற்றதற்கோ மேற் படிப்புக்குச் செல்லும் போது கல்லூரி நுழை வாயிலிலேயே (கல்லூரிக்குள்) உள்ளே வந்த பிறகு கெட்ட வழியில் எப்படியெல்லாம் தவறு செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்கிறார்கள்
“RAGGING…” என்ற முறை கேடான நிலை நடக்கிறது.
அரசாங்கமும் பார்த்துக் கொண்டு தான் உள்ளது. அந்தப் பள்ளியோ.., கல்லூரியோ… அதை நடத்துபவர்களும் பார்த்துக் கொண்டு தான் உள்ளனர்.
உயர்ந்த படிப்புக்குச் செல்பவரையும் தவறு செய்யும் உணர்ச்சியை ஊட்டி அந்தத் தவறு செய்பவனாக மாற்றி நாட்டைக் காக்கும் நிலையில் இல்லாமல் தவறு செய்து வாழும் உணர்வாக முறை கேடான நிலைகள் நடந்து கொண்டிருக்கிறது.
கல்வி கற்றுத் தர வேண்டிய இடத்தில் தவறு செய்வதை உருவாக்கும் நிலையாக நடப்பதைப் பற்றிச் சிந்திப்பார் யாரும் இல்லை.
இந்த உணர்வின் தன்மை பெருகி வரும் இந்த காலத்தில் நாம் சிந்திப்பது எப்போது..? சிந்தனையுடன் தீமைகளை அகற்றுவது எப்போது…?
இப்படிப்பட்ட தீமையான உணர்வுகள் பரவிக் கொண்டு வருகிறது. இந்தக் காற்று மண்டலமும் நச்சுத் தன்மையாக ஆகிக் கொண்டே வருகிறது. இதிலிருந்து நாம் மீள வேண்டுமா… இல்லையா…?
எப்படி மீட்பது..?
ஆயிரம் தான் யாம் சொன்னாலும் கேட்கும் போது…, சாமி (ஞானகுரு) நன்றாகச் சொல்கிறார் என்கிறார்கள். நன்றாக இருந்தது என்று தான் சொல்கிறார்கள்.
அடுத்தாற் போல் வாழ்க்கையில் சந்திக்கும் போது யாராவது வெறுப்பாகப் பேசினால் போதும்.
1.பார்… சாமி நல்லதைச் சொல்கிறார்… ஆனால் இவனைப் பார்..!
2.நான் ஒன்றுமே செய்யவில்லை…! என்னை எப்படித் திட்டுகிறான்…! என்று
3.நல்லதை விட்டு விட்டு அதைப் பிடித்துக் கொள்வார்கள்.
கடையில் கடனுக்காகச் சரக்கைக் கேட்பார். அவர் கொடுக்கவில்லை என்றால் உடனே அவர் அந்தச் சரக்கெல்லாம் “மோசம்…” என்பார்…!
“கடன் இல்லை…” என்று சொன்னதற்காக இப்படி எல்லாம் நடக்கிறது.
இதைப் போன்று எத்தனையோ நடக்கின்றது. பிறர் செய்யும் தீமையை நுகரும் போது தீமையான நினைவுகளே நமக்குள் வருகிறது.
1.எந்தச் சாமியைப் பார்த்து… நாம் என்ன செய்வது…?
2.என்ன தியானம் பண்ணி… என்ன செய்வது…?
3.எந்தக் கடவுளைப் பார்த்து… என்ன பண்ணுவது…? என்று சொல்ல ஆரம்பித்து விடுகின்றார்கள்.
அதனால் தான் கோவிலில் மனித உடலைப் போல் சிலைகளை வைத்து அந்தத் தெய்வத்திற்குப்
1.பாலாபிஷேகம் செய்கிறார்கள்
2.தேனாபிஷேகம் செய்கிறார்கள்
3.சந்தன அபிஷேகம் செய்கிறார்கள்
4.நன்னீர் விட்டுச் சுத்தப்படுத்துகிறார்கள்
5.பன்னீரை விட்டுச் சுத்தப்படுத்துகிறார்கள்
எதற்காக அந்தச் சிலைக்கு இதையெல்லாம் செய்கிறார்கள்…?
பாலாபிஷேகம் செய்கிறர்கள். நாம் அதை வேடிக்கை பார்க்கிறோம் அவ்வளவுதான். ஏன்…? ஏதற்கு…! என்று எண்ணுவதில்லை.
பாலாபிஷேகம் தேனாபிஷேகம் செய்வதைக் கண்களால் பார்க்கும் போது எதை எண்ண வேண்டும்…? என்று ஞானிகள் காட்டியதை நாம் அறிய வேண்டும்.
1.பாலைப் போன்ற மணம் நாங்கள் பெற வேண்டும்.
2.மகிழந்து வாழும் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
3.தேனைப் போன்று சுவையான நிலைகள் பெற வேண்டும்.
4.கனியைப் போன்று சுவையான சொல்லும் செயலும் பெற வேண்டும்.
5.அந்த அருள் சக்திகள் எங்கள் உடலில் படர வேண்டும்,
6.எங்கள் குடும்பத்தில் படர வேண்டும்,
7.கோவிலுக்கு வரம் குடும்பமெல்லாம் அந்த நிலை பெற வேண்டும் என்று எண்ணி அந்த உணர்வுகளைச் சுவாசிக்க வேண்டும்
எத்தனை பேர் நாம் இப்படி நினைக்கிறோம்…?
பாலபிஷேகம் தேனாபிஷேகம் செய்து நல்ல ஒழுக்கத்தை நமக்குள் சுவாசிக்கச் செய்வதற்காக அவ்வாறு வைத்துள்ளார்கள் ஞானிகள். கோவிலுக்குச் சென்றால் இவ்வாறு நாம் நினைக்கிறோமா…?


எலும்புக்கூடு(ம்) ஔஷதம் – ஈஸ்வரபட்டர்
பெண்கள் அணியும் கால் சிலம்பு ஆடவர் கற்பு நெறி காக்கும் கவசம். பெண்கள் பூப்படையும் பிராயத்தில் கால் சிலம்பை அணிவித்துப் பெண்களின் கற்புக்குப் பாதுகாப்பு வளையமிட்ட செயல் எல்லாம் பண்டைய காலம் முதல் வழி வந்த நற் குண நிலைகள்.
ஆண்களின் கற்புக்குப் பாதுகாப்பு அரண் அது தான்..!
1.பூப்படைந்த பெண்மணிகள் வீதி வழி செல்லும் பொழுது – எதிர்படும் வீரமகன்
2.சிலம்பொலியைக் கேட்டதுமே விலகிடுவான்
3.அங்கே கற்பு நெறி காக்கின்றது.
ஆனால் வீரத்தில் விவேகத்தைக் கலந்து வாழ்ந்த மக்கள் மனம் இன்று அனைத்துமே மாறிவிட்டது.
திருமணம் முடிவுற்று நல்லறத்தின் நல்வழியில் கால் சிலம்பு கழன்றுவிடும். பூப்படைந்த பெண்கள் அணியும் நகை கணவனால் காவலனாகக் காக்கும் நிலை வந்துவிட்டால் விலக்கிடுவான் சிலம்பணிய.
கண்ணகின் வாழ்க்கையில் சிலம்பை அணிவித்தான் மாசாத்துவான். பெண்களுக்கு அணிவிப்பதோ பொன்.. வெள்ளி நகை தானே. காலத்தின் செயல் இன்று போல் இருந்திடுமோ…? என்றெல்லாம் எண்ணிட்ட மாசாத்துவான் மாணிக்கமாக அளித்துவிட்டான்.
இல்லறத்தில் இரு மனங்கள் கலக்கும் வைபோகமாகக் கோவலனும் கண்ணகியும் நறுமணங்கள் கலந்தது போல் வாழ்வாங்கு அங்கே வாழ்ந்து சிறப்பித்தனர்.
ஆனால் அதன் பின் ஊர் விட்டு ஊர் மாறிப் பெயர் மாற்றிச் செல்லும் பொழுது “தலை போகும்…!” என்றெல்லாம் மெய்யறிவு பெற்றிருந்தால் கோவலன் விதி வழி செல்வானா…?
உடல் வேறு தலை வேறு ஆன நிலையைக் கண்டதுமே எலும்புக்கூடு மூலிகை அகப்பட்டால் எலும்பின் குணம் கூடிவிடுமே. கண்ணகிதான் அதைப் பெற்றாளா..?
1.கண்ணகியின் கற்பு நிலை கொதித்தெழுந்த செயற்திறத்தால் எலும்புக்கூடு கிடைத்ததா…?
2.சூட்சமப் பொருள் பல உண்டு…!
கண்ணகியின் சாபமுண்டு எலும்புக்கூட்டு மூலிகைக்கு…! எலும்புக்கூட்டின் சாறுபட்டவுடன் அறுபட்ட உடல் கூடிவிடும். அந்த மூலிகை கிடைக்குமா…?
பாறை மேல் படர்ந்து வரும். நீரில்லாமல் உயிர் வாழும். தண்டு அதன் நிறம் சிவந்து கணுவிலோர் இலையும் பசுமை காட்டும். அந்த எலும்புக்கூடு (ஔஷதங்கள்) கிடைத்து விட்டால் எண்ணிடுவார்கள் பணம் காசை…!
1.எலும்புக்கூடு எதற்கு என்ற சூட்சமம் பின் சொல்கிறேன். (ஈஸ்வரபட்டர்)
2.எலும்புக்கூடு கிடைக்க வேண்டும் என்று மனதில் எண்ணிக் கொள்ளுங்கள்…!

ஆலயத்திற்குள் நுழைந்தாலே உயர்ந்த பண்புகளைப் பெறும் வண்ணம் தான் ஆலயங்களை நம் முன்னோர் அமைத்துள்ளனர்
மனிதனாக உருப்பெற்ற நிலையில் நாம் எத்தகைய தீமைகளையும் தடுத்து நிறுத்தும் சக்தி பெற்றவர்கள் என்பதை அக்கால ஞானிகள் காட்டிய அருள் வழியில்உணர்தல் வேண்டும்.
ஏனென்றால்… இந்த உயிர் இந்த உடலை வளர்த்த பின்
1.பல கோடித் தீமைகளிலிருந்து விடுபட்டுத் தீமையிலிருந்து விடுபடும் உணர்வுகளை வளர்த்து
2.அதற்கொப்ப உறுப்புகள் உருவாகி… உணர்வுகள் உருவாகி… உணர்ச்சிகள் உருவாகி… எண்ணங்கள் உருவாகி…
3.அதன் வழி நாம் நம்மைக் காக்கும் உணர்வுகள் ஆற்றல் பெற்றது.
ஆனாலும் இன்றைய காலகட்டத்தில் விஞ்ஞான அறிவால் நமது பிரபஞ்சத்தில் சிந்திக்கும் தன்மை இழக்கப்பட்டுக் கொண்டிருகின்றது. இதிலிருந்து தப்ப வேண்டும் என்பதற்குத்தான் இதை உணர்த்துகின்றோம் (ஞானகுரு).
முந்தைய நிலைகளில் வாழ்ந்த நம் முன்னோர்கள் இயற்கையின் உணர்வை நுகர்ந்து அதன் செயலாக்கங்கள் எவ்வாறு…? என்று உணர்ந்தவர்கள். அவர்கள் தான் பெருக்கல் வாய்ப்பாடு கழித்தல் வாய்ப்பாடு எல்லாம் கொண்டு வந்தனர்.
1.அந்தப் பதிவால்… தன் நினைவு கொண்டு
2.ஒரு நொடிக்குள் கூட கணக்குப் பார்க்கும் திறன் அவர்களிடம் இருந்தது.
ஆனால் இன்று எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலை கொண்டு ஒன்றை மாற்றி ஒன்றுடன் ஒன்று இணைத்து ஒரு நொடிக்குள் அதை அறிந்திடும் அறிவாகக் கம்ப்யூட்டர் என்றும் கால்குலேட்டர் என்றும் வருகின்றது.
முந்தைய கணக்கின் நிலைகளை எடுத்துக் கொண்டால் கால்… மாகாணி என்றெல்லாம் கொடுத்தார்கள் அத்தகைய மெய் ஞானிகள்
1.ஒரு கோயிலின் தன்மையையோ அல்லது ஒரு கோபுரத்தின் தன்மையையோ ஒரு கட்டிடத்தின் தன்மையோ அமைக்க வேண்டும் என்றால்
2.துரித நிலை கொண்டு அந்தக் கோபுர கட்டிட அமைப்பையும் (PLAN) அதன் உண்மையை அறிந்துணர்ந்து
3.அவருடைய மெய் ஞான அறிவு கொண்டு அழகாக வடிவமைத்து நிர்மாணித்தனர்.
வான இயல் சாஸ்திரத்தை உணர்ந்து சூரியனும் மற்ற கோள்களும் மற்ற மண்டலங்களும் எவ்வாறு வானிலே இயக்குகிறது…? என்றும் அதிலே சில கோள்களின் தீமைகள் இங்கே இவர்கள் அமைத்த அந்த ஆலயத்தில் புகாத வண்ணம் அமைத்து… உயர்ந்த குணங்களுக்குத் தக்க தெய்வ ஆலயங்களை அமைத்தனர்.
அந்த ஆலயத்தில்… நல்ல உணர்வுகளை எடுக்கும் நல்ல குணங்களின் தன்மையை தெய்வச் சிலைகளை வைத்து உருவகப்படுத்தினார்கள்
1.தீமையை நீக்கும் உணர்வு கொண்டு.. அந்த எண்ணத்துடன் நாம் அங்கே சென்றோம் என்றால்
2.தீமைகளை நுகராது அந்தத் தெய்வீக உணர்வை நுகர்ந்து நமக்குள் வளர்த்துக் கொள்ள முடியும்.
அதன் மூலம் பிறிதொரு கோளின் தன்மையோ மற்ற எதிர் நிலையான நட்சத்திரங்களின் உணர்வுகளையோ கவராத வண்ணம் அந்தத் திசையை நோக்கி ஆலய அமைப்பை (கோபுரம்) ஏற்படுத்தினார்கள். சூரியனின் ஒளிக்கதிர்கள் இதன் மேல் படும்படி செய்து (சந்துகள் விட்டிருப்பார்கள்) உயர்ந்த உணர்வின் தன்மையை நாம் எப்படிப் பெற வேண்டும் என்றும் காட்டினார்கள்.
1.27 நட்சத்திரங்களின் உணர்வையும் 12 ராசிகளாகப் பிரிக்கப்பட்டு
2.அந்த ராசியின் திசை கொண்டு மற்ற மூன்றின் தன்மை எந்தெந்தக் கோள்கள் சேர்கின்றதோ
3.அதன் வழி ஒரு குணத்தின் தன்மை – இணைந்து வாழும் தன்மையாக அந்த அமைப்பின் தன்மை கொண்டு தான்
4.அன்று மாகாணி என்று வைத்து அதிலே கூட்டல் கழித்தல் என்று கணக்கின் நிலைகள் கொண்டு
5.தெளிவாக எடுத்தனர் கணக்கிட்டனர்… அதன் வழி அமைத்தனர்.
அவர்கள் ஆலயங்களில் உணர்த்தப்பட்ட உயர்ந்த சக்திகளை நாம் நுகரப்படும் பொழுது நம் வாழ்க்கையில் வரும் தீமைகளை நீக்கிட முடியும்.
ஒவ்வொரு ஆலயங்களுக்கும் இந்த எண்ணத்தின் அடிப்படையில் நீங்கள் சென்றால் அந்த ஆலய அமைப்பில் சித்தரிக்கப்படுள்ள தெய்வ குணங்களை வளர்த்துப் பகைமை உணர்வுகளை அகற்ற முடியும்.
1.மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்த நிலையில்
2.மகிழ்ந்து வாழும் சக்திகளை அதன் மூலம் ஒவ்வொருவரும் பெற வேண்டும் பெற முடியும் என்ற
3.மெய் வழிகளை உணர்த்தினார்கள் அக்கால மெய் ஞானிகள்…!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
பால் இருக்கிறது என்றால் அதில் ஒரு துளி பட்டால் நஞ்சாக மாறுகின்றது. அந்தப் பாலில் ஆயிரம் குடம் பாலை விட்டால் நஞ்சின் தன்மை குறைந்து அந்தப் பாலுக்கே ஊட்டச் சக்தி கொடுக்கின்றது.
அருள் ஞானிகள் என்பவர்கள் பல ஆயிரம் குடம் பாலைச் (அந்த ஆற்றல்மிக்க சக்திகளை) சம்பாரித்தவர்கள். எத்தகைய கடுமையான நஞ்சினையும் நீக்கிடும் நிலை பெற்றவர்கள்.
எங்கே சென்றாலும் அங்கே மகரிஷிகளின் அருள் சக்தியால் எல்லாம் நலமாக இருக்க வேண்டும் என்று தியானியுங்கள். இதைத்தான் வாழ்க்கையே தியானம் என்பது.
இதை நீங்கள் கடைப்பிடித்தீர்கள் என்றால் எல்லாமே உங்களுக்கு நன்றாக இருக்கும்.
எந்தக் கோவிலுக்குச் சென்றாலும் இதே மாதிரி எண்ணிப் பழகுங்கள். விநாயகரைப் பார்த்தவுடன் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா பெறவேண்டும் என்று எண்ணுங்கள்.
மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் குடும்பம் முழுவதும் படரவேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் குடும்பம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். தொழில் வளம் பெருக வேண்டும் என்று எண்ணுங்கள்.
வெளியிலே ஏதாவது சலசலப்போ சங்கடமோ இருந்தாலும் யார் மீது வெறுப்பாக இருந்தாலும் மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெறவேண்டும் என்று எண்ணி எடுத்து அந்த உணர்வை அவர்களுக்குப் பாய்ச்சுங்கள்.
1.அவர்கள் அறியாத இருளிலிருந்து விடுபட வேண்டும்.
2.எங்களுக்குள் அந்தச் சகோதர ஒற்றுமை வளர வேண்டும் என்று எண்ணுங்கள்.
3.பகைமைகள் நீங்கும்.
4.நமக்குள் அந்தத் தீய வினை ரொம்ப நாளைக்கு நீடிக்காது.
5.பகைமை ஊட்டும் உணர்வுகள் நமக்குள் குறைந்து கொண்டே வரும்.
இதை உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.
பகைமை நீக்க வேண்டும் என்று அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைக் கூட்டும் பொழுது அந்த அருள் ஞானிகளின் மேல் பற்று அதிகமாகின்றது.
அருள் ஞானிகளின் மேல் நாம் பற்றை வளர்த்துக் கொண்டால் அதனின் ஆற்றலாக அந்த ஞானிகளின் வழிகளிலேயே நம்மை அழைத்துச் செல்லும்.
ஆனால் இந்த உலக வாழ்க்கையில் ஏற்படும் நிலைகளில் அவன் இப்படிச் செய்கிறான். இவன் எனக்குத் தொல்லை கொடுக்கின்றான். என் பையன் சொன்னபடியே கேட்க மாட்டேன் என்கிறான் என்று இந்தப் பற்றை நாம் எடுத்துக் கொண்டால் இங்கே இன்னொரு உடலுக்குள் தான் போக முடியும்.
அங்கே சென்று அவர்கள் படும் கஷ்டங்களையும் வேதனைகளை நாமும் எடுத்து அந்த உடலிலும் வேதனையை வளர்த்து அடுத்தாற்போல் ஆடாகவோ மாடாகவோ தான் பிறக்க நேரும்.
அதனால் இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபடுவதற்காக உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் அந்த அருள் ஞானிகளின் ஆற்றல்களைப் பெறவேண்டும் என்று தான் விநாயகர் தத்துவத்தில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.


மனிதர்கள் உயர்ந்த நிலை பெறவே காவியங்கள் படைக்கப்பட்டது – ஈஸ்வரபட்டர்
மனிதனின் வாழ்க்கையில் வரும் சங்கட குணங்களை விலக்கி மனப் பக்குவம் பெற அறிய வேண்டிய ஞானத்தின் செயல் திறத்தைத் தான் இராமாயணக் காவியத்தின் மூலம் வான்மீகி மாமகரிஷி காட்டினார்.
இதைக் கம்பனும் அறிந்தாலும் மூலத்தின் பொருள் விளக்கக் கம்பரசம் (கம்பராமாயணம்) செய்தாலும் அதிலே நவரசத்தின் பொருளைக் காட்டி நர்த்தனமாக விளையாடிய கவிச் சொல்லின் சிறப்பில் இன்றைய மனிதன் சுவைத்திட்ட சுவை என்ன..?
1.வெறும் சிருங்கார ரசத்தைத்தான் சுவைத்தான்…!
2.சிறப்பின் ரசம் அறிந்தானா…?
காரணத்தில் காரியத்தை அறிய வைத்த கம்பனும் அறியவொண்ணா மறை பொருள் உண்டு.
அனுபவம் என்ற பாதையிலே வான்மீகி மகரிஷி அறிந்து சொன்ன சொல் “ஒளி காந்தம்…” உருவாக்கிய காவியம் தான் அந்த இராமாயணம்.
மனிதனின் வாழ்க்கையில் எண்ணங்களின் எதிர் மோதல்களினால் ஏற்படும் துன்பத்திலிருந்து விடுபடும் பக்குவ மனப்பாங்கைப் பெறுவதற்காக நிகழப் பெற்ற “அனுபவ ஔஷத நெறியின் செயல் விளக்கம் தான் இராமாயணக் காவியம்…!”
1.மனிதன் பெறும் பெற வேண்டிய உயர் நிலை என்ன…? என்பது பற்றி
2.அவன் மனதில் தோன்றும் எண்ணங்களை எல்லாம் சலிக்கும் (அலசி எடுக்கும்) தன்மையாக
3.ஓர் சல்லடையை வைத்துச் சலிப்பது போல் – மனிதன் பெற வேண்டிய வழி வகைகளை அறிந்திடச் செய்யும் “சூட்சம காவியமே இராமாயணம்…!”
எண்ணங்களின் அலை ஈர்ப்புச் சமைப்பில் காந்தமாகிக் காத்திட்ட சக்தியில் வான்மீகி அதைக் கொடுத்ததிலும் ஓர் பக்குவம் உண்டு.
வானை நோக்கி ஏ(ங்)கி உயர்ந்த சக்திகளை எடுதத அந்த வான்மீகி மாமகரிஷி கண்டுணர்ந்த வான இயல் சூட்சமத்தின் தெளிவை நாமும் கண்டுணர்ந்து நம் மனம் தெளிதல் வேண்டும்.

உயிரின செல்களைக் கலந்து விஞ்ஞானி ரூபமாற்றம் செய்வது போல் மெய் ஞானியின் உணர்வை எடுத்து நாம் ஒளியின் ரூபமாக முடியும்
உதாரணமாக… ஒரு தீமையான உணர்வை நுகரும் பொழுது அதனால் வெறுப்பும் வேதனையும் படுகின்றோம். அத்தகைய உணர்வுகள் நமக்குள் அணுவின் தன்மையாக உடலுக்குள் உருவாகாது தடைப்படுத்த வேண்டும்.
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்ற உணர்வை நம் இரத்தங்களில் கலந்து விட்டால் அதைத் தடைப்படுத்த முடியும்.
1.சமையல் செய்யும் போது பல பொருள்களைச் சேர்த்து
2.நாம் எப்படிச் சுவைமிக்கதாக அதை உருவாக்குகின்றோமோ
3.அதைப் போல அருள் உணர்வைக் கலந்து சுவையாக ஆக்க முடியும்.
ஏனென்றால் ஒவ்வொரு நாளும் நம் வாழ்க்கையில் பலருடைய எண்ணங்களையும்… பலருடைய செயல்களையும்… பலருடைய வேதனைகளையும்… நோயாளிகளையும் மற்றவர்களையும்… சந்திக்க நேர்கின்றது. அந்த உணர்வுகளை எல்லாம் நுகர்ந்து தான் (சுவாசித்து) அறிகின்றோம்.
ஆனாலும் காரம் புளிப்பு உப்பு கசப்பு துவர்ப்பு என்று பல சுவைகளை ஒன்றாக்கிச் சுவைமிக்கதாக எப்படி உருவாக்குகின்றோமோ அதைப் போல வெறுப்படையும் நிலையோ சலிப்படையும் நிலையோ சங்கடப்படும் நிலையோ வேதனைப்படும் நிலையோ வந்தாலும்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று இதனை அதிகரித்து
2.அந்த வெறுப்படையும் உணர்வுகள் வளராது தடுத்து
3.சமப்படுத்தும் உணர்வாக மகிழ்ச்சியூட்டும் உணர்வாக ஒளியான அணுவாக நமக்குள் உருவாக்குதல் வேண்டும்.
விஞ்ஞான அறிவு கொண்டு இன்று பல உயிரினங்களின் ரூபங்களை மாற்றுகின்றார்கள். உயிரினங்களின் செல்களை எடுத்து அதை மற்றொன்றுடன் இணைத்துப் புதுவிதமாக உருமாற்றுகின்றார்கள்.
உதாரணமாக மூன்று விதமான ஆட்டினங்களை… அந்த மூன்று விதமான உணர்வின் செல்களை எடுத்துப் புது விதமான உருவின் தன்மை கொண்ட ஒரு ஆடாக உருவாக்குகின்றார்கள்.
இதைப் போல தான் ஒவ்வொரு மனிதனின் உடலில் விளையும் தீமையின் உணர்வுகளும்… அவர்கள் சொல்லால் வெளிப்படும் அந்த உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது அவரின் தீமையின் தன்மைகள் நமக்குள்ளும் உருவாகின்றது.
ஆனால் மகரிஷிகளோ தீமைகளை வென்று உணர்வினை ஒளியாகப் பெற்றவர்கள்.
முதலில் சொன்ன மாதிரி… பலருடைய எண்ணங்களையும் பல பல தீமை உருவாக்கும் உணர்வின் தன்மைகளை நாம் நுகர்ந்தறிந்தாலும் தீமையை வென்ற அருள் மகரிஷிகளின் உணர்வை அதனுடன் இணைத்தோம் என்றால் அதை எல்லாம் நல்லதாக மாற்றிக் கொள்ள முடியும்.
ஆகவே…
1.இந்த வாழ்க்கையின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நமக்குள் தீமைகள் வராது
2.அந்த அருள் மகரிஷி உணர்வை நம் உடலில் இணைத்து இணைத்து இணைத்து
3.அந்த ஒளியின் சரீரமாக மாற்றுதல் வேண்டும்.
பல விதமான உயிரினங்கள் அது இயற்கையில் விளைந்ததை விஞ்ஞானிகள் ஒன்றுடன் ஒன்று கலக்கப்பட்டுச் செயற்கையில் உருவாக்கச் செய்த எத்தனையோ நாய் வகைகளையும் மாடு வகைகளையும் இன்று பார்க்கின்றோம்.
நாய்களை எடுத்துக் கொண்டால் மனித உருக்கொண்ட நிலைகளாகக் கூட மாற்றுகின்றார்கள்.
மனிதனை உருவாக்கும் விந்தின் செல்களை எடுத்து மற்ற நாய்களின் செல்களுடன் சேர்த்து பல பல உணர்வுடன் இணைக்கப்படும் போது இதனின் அளவுகோல் வரப்படும் போது மனித முகத்தைப் போன்றே நாய்கள் வருகின்றது.
குரங்குகளின் அணு செல்களைப் பிரித்து எடுத்து அதை மற்ற நாய் இனங்களின் உணர்வுகளிலும் கலந்து… குரங்கு எப்படித் தன்னுடைய விடாப்பிடியாக அடம் பிடிக்கின்றதோ அது போன்ற உணர்வின் குணங்களைப் பெருக்கும் ரூபமாகவும் நாய்களை மாற்றும் தன்மையை மனிதன் செய்கின்றான் தன் ஆறாவது அறிவால்…!
ஆனால் அன்று வாழ்ந்த அகஸ்தியனோ விண்ணுலக ஆற்றலைத் தனக்குள் வலுப்படுத்தி வாழ்க்கையில் வரும் நஞ்சினை வென்றான். அந்த உணர்வினை அகஸ்தியனும் அவன் மனைவியும் இருவரும் எடுத்து ஒருவருக்கொருவர் அந்த உயர்ந்த மனதைப் பெற வேண்டும் என்று இணைத்து வாழ்ந்தனர்.
இவர் கண்ட உண்மையும் அவர் கண்ட உண்மையும் அங்கே இரு மனமும் ஒன்றாகி ஒன்றின் நிலைபெறும் போது
1.கணவன் உயர்ந்த நிலை பெறவேண்டும் என்றும்
2.மனைவி உயர்ந்த நிலை பெற வேண்டும் என்றும்
3.விண்ணின் ஆற்றலை நுகர்ந்து அந்த நஞ்சினை ஒடுக்கிடும் உணர்வுகளைப் பெற்று
4.இரு உணர்வும் ஒன்றென இணைந்து உடலில் ஒளியான அணுக்களைப் பெருக்கிப் பெருக்கி
5.எதனை உற்றுப் பார்த்தனரோ அந்த உணர்வின் தன்மையை வளர்த்து
6.உடலை விட்டுச் சென்றபின் பூமியின் துருவப் பகுதியில் இன்றும் அவர்கள் துருவ நட்சத்திரமாக
7.நமது பூமிக்குள் வரும் நஞ்சினை ஒடுக்கி ஒளிச் சுடராக மாற்றிக் கொண்டே வருகின்றனர்
8.அதனின்று வரும் நிலையை நாம் நுகர்ந்து பழக வேண்டும்…!
இந்த மனித வாழ்க்கையில் நஞ்சான செயல்களையும் வெறுக்கும் உணர்வுகளையும் வேதனைப்படும் உணர்வுகளையும் எப்பொழுது நுகர்ந்தாலும் அடுத்த கணம் அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை அதனுடன் இணைத்து மாற்றி அமைத்திட வேண்டும்…!
உங்களால் முடியும்… உங்களை நீங்கள் நம்புங்கள்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
ஆலயங்களில் தெய்வச் சிலைக்கு முன் படைத்திருக்கும் மலரோ மற்ற உணவாகப் படைத்திருக்கும் பொருள்களோ நல்ல நறுமணங்களைக் கமழச் செய்கின்றது
1.நறுமணமான நற்சுவையின் சத்துக்களை அங்கே படைத்து
2.அந்தத் தெய்வத்திற்கு அபிஷேகிக்கச் செய்து
3.அந்த உணர்வின் நிலைகளை அங்கே பொருதிக் காட்டி
4.அபிஷேகிக்கும் போது நம்மைக் கண்ணுற்றுப் பார்க்கச் செய்கின்றார்கள் ஞானிகள்.
சந்தனத்தை போன்ற மணம் பெறவேண்டும் என்று நாம் ஏங்கினால் அந்த மணத்தின் உணர்வலைகள் நம் உயிருக்குள் அபிஷேகம் ஆகின்றது.
மலரின் மணம் பெறவேண்டும் என்று எண்ணும் பொழுது இந்த உணர்வின் தன்மை நம் உயிருக்குள் அபிஷேகம் ஆகின்றது.
பன்னீரைப் போன்ற நறுமணம் பெறவேண்டும் என்று எண்ணும் பொழுது அந்த உணர்வுகள் உயிருக்குக் கிடைக்கின்றது.
கனியைப் பார்க்கும் பொழுது கனியைப் போன்ற சுவையான நிலைகள் பெறவேண்டும் என்று வேண்டினால் நற்சுவையின் சத்து நம் உயிருக்குக் கிடைக்கின்றது.
அங்கே காட்டும் பொருள்கள் அனைத்தையும் கண்ணுற்றுப் பார்க்கப்படும் பொழுது அது அனைத்தும் “துவைதம்”. பொருளுக்குள் மறைந்த உணர்வின் சத்துகள் அனைத்தும் “அத்வைதம்.”
அந்தச் சூட்சும நிலையில் இருந்து (கண்களுக்குப் புலப்படாத சக்திகளிலிருந்து தான்) தான் இந்த மனித உடலைப் பெற்றோம். சுவைத்துப் பார்க்கும் பொழுது அந்தச் சுவையை அறிகின்றோம். நுகர்ந்து பார்க்கும் பொழுது அந்த மணத்தை அறிகின்றோம்.
நல்ல மணத்தைச் சுவாசிக்கும் பொழுதும் சுவையான பதார்த்தத்தை உட்கொள்ளும் பொழுதும் அந்தச் சுவையான நிலைகளும் நறுமணங்களும் உடலான சிவனுக்குள் சேர்கின்றது. அந்த மணமும் சுவையும் உயிரான ஈசனுக்கும் சேர்கின்றது.
சூட்சும நிலைகள் கொண்டு உடலின் தன்மை பெற்றதைத் துவைதம் என்று காட்டினாலும் “அத்வைதம் தான் துவைதம்…!” என்று ஆதிசங்கரர் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.
சூட்சும நிலையில் உள்ள சக்திகளை உடலாக எவ்வாறு ஆக்கவேண்டும் என்ற நிலையைத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.
பாலாபிஷேகமும் தேன் அபிஷேகமும் கனி அபிஷேகமும் சிலைகளுக்குச் செய்தால் அது ஒரு பலனும் தராது.
1.அங்கே அபிஷேகமாகக் காட்டும் பொருளில் நீ பொருளைக் கண்டுணர்ந்து
2.எண்ணத்தால் (சூட்சுமம்) அந்த நறுமணங்களை நுகர்ந்து
3.உடலுக்குள் செலுத்தும் பொழுது உணர்வின் அலையாக உயிர் இயக்குகின்றது.
4.உயிரான ஈசனுக்கும் உடலான சிவனுக்கும் அப்பொழுது அபிஷேகம் ஆகின்றது.
அப்பொழுது அந்த உணர்வின் சத்துக்கள் அனைத்தும் உடலாகச் சிவமாக அமிர்தமாகச் சேர்கின்றது. நம் உடலுக்குள் மகிழ்ச்சியூட்டும் செயலாக அதை நாம் ஆக்கவேண்டும்.
இந்த மகிழ்ச்சி ஊட்டும் உணர்வு உடலாகும் பொழுது அந்த உணர்வின் எண்ணங்கள் நமக்குள் தோன்றி மகிழ்ச்சியூட்டும் செயலை நமக்குள் உருவாக்கும்.
ஒரு கனியை எடுத்துக் கொண்டால் அது நற் சுவையான மணங்களைக் கவர்ந்து… உறைந்து… அது இனிப்பான கனியாக உருவாகின்றது.
ஒரு மலரை எடுத்துக் கொண்டால் அது பல நறுமணங்களின் சத்தை நுகர்ந்து… உறைந்து… நற்பூவாக மலர்கின்றது.
பூக்களிலும் கனிகளிலும் வரும் உணர்வின் சத்தைத் தான் உயிரினங்கள் உணவாக எடுத்து அந்த மணத்தின் எண்ணத்தால் நறுமணத்தையே சுவாசிக்க வேண்டும் என்று எண்ணத்தைத் தனக்குள் வளர்த்து வளர்த்து அந்த உணர்வின் சத்துக்கள் தசையாகி உடலாக விளைகின்றது.
இப்படிப்பட்ட உணர்வின் சத்துக்களை வினையாகச் சேர்த்து வினைக்கு நாயகனாக மனிதனாக வந்துள்ளோம் என்ற நிலைகளை அறிவதற்குத் தான் எழுத்தறிவு இல்லாத அக்காலங்களில் மகா மகரிஷிகள் தான் கண்டுணர்ந்ததைக் காவியமாக வடித்து ஆலயங்களாக உருவாக்கினார்கள்.
1.உயர்ந்த குணங்களைக் கொண்டு நற்பணிகளைச் செய்யும் நிலையும்
2.கெட்டதை நீக்கி நல்லதை உருவாக்கும் நிலையும்
3.மனித உடலிலிருந்து வெளிப்படும் இந்த மணத்திற்குள்
4.(சூட்சுமத்தில்) அனைத்தும் அமைந்திருக்கின்றது என்று உரைத்தார்கள் ஞானிகள்.


காமதேனுவிடமிருந்து சக்தி பெறப் பழகிக் கொள்ள வேண்டும் – ஈஸ்வரபட்டர்
1.மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்றுத் தன் உயிராத்மாவின் சக்தியை வலுக் கூட்ட வேண்டும் என்றால்
2.அந்த வீரிய எண்ணச் செயல் வளர்வதற்கே
2.வளர்ப்பின் வளர்ச்சியின் ஆகார அமில குணம் தேவை..!
ஒருமித்த எண்ணம் கொண்டு நம் உயிருடன் அதை ஒன்றச் செய்து இந்தத் தியான முறை வலுவினால் வளர்ச்சிப்படுத்தப் பெற்றுக் கொள்ள வேண்டிய ஆகாரம்…
1.அதாவது காமதேனு என்று மகரிஷிகள் சூட்சமமாக உணர்த்திய
2.அந்த “ஆகார நியமனம்” பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.
சூரிய மண்டலத்தின் சமைப்பின் ஒளிக் கதிர்களை வானுலகில் வரும் ஆகாய உயிரணுக்கள் எடுத்து அந்தப் பரவெளி சூட்சமத்தில் தங்களை வளர்த்துக் கொள்ளும் நிலையில் அந்த வீரிய உயிரணுக்களின் சக்தியை நாம் எடுக்கும் தியானத்தின் மூலம் ஈர்த்துப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
ஏனென்றால் நம் உயிரான்மாவின் சக்தியை மேன்மேலும் வளர்ச்சி கொள்ள வேண்டும் என்றால் பரவெளியில் உலவிக் கொண்டிருக்கும் இந்த உயிரணுவாகிய காமதேனுவின் பாலை ஆகாரமாகப் பெற்றிட வேண்டும் என்று சூட்சமப்படுத்தினார்கள் அன்றைய மகரிஷிகள்.
1.அந்த அமில ஆகாரத்தைப் பரிபூரணமாகப் பெற்று விட்டால்
2.சிருஷ்டியின் இரகசியம் தெரிந்துவிடும்…! என்றும் காட்டினார்கள்.
இதையே தான் உலக வழக்கப்படி… நினைத்த மாத்திரத்தில் இந்தச் சரீர வளர்ப்பிற்குக் காமதேனு திட ஆகாரத்தைப் படைத்து அளித்தது…! என்று அன்று சித்தர்கள் காவியங்களில் மறைமுகமாகச் சொன்னார்கள்.
விசுவாமித்திர மாமகரிஷிக்கு
1.இரசமணி சக்தியின் மூல முலாமையும்
2.காமதேனு சக்தியையும் உணர்த்தி
3.அதை அவர் பெறும் பக்குவத்திற்கு உருவாக்கித் தந்தவர் வசிஷ்ட மாமகரிஷி.
தான் பெற்றது காமதேனுவின் குழந்தை நந்தினியின் சக்தி தான் என்றும் உணர்த்துகின்றார் வசிஷ்டர். ஆக இதெல்லாம் சூட்சமப்படுத்திக் காட்டப்பட்ட பேருண்மைகள்.
1.பரவெளியில் உலவிக் கொண்டிருக்கும் காமதேனு என்றிட்ட
2.(உயிரணுக்களின்) பசுக்களின் வீரிய ஆகாரத்தை ஒவ்வொருவரும் பெற்று விட்டால்
3.மண்டலங்களையே உருவாக்கிடும் சிருஷ்டியின் பரிபூரணத்துவத்தைப் பெற்றிடலாம்…! என்ற
4.ஞானிகளால் கொடுக்கப்பட்ட போதனை காட்டிய வழி முறையை அறிந்து கொள்ள வேண்டும்.
பரவெளியில் தோன்றிப் பல்கிப் பெருகி அந்தக் காமதேனு – நந்தினி என்ற உயிரணுக்கள் சிவ சக்தியின் கலப்பாகப் பிறிதொன்றைத் தன் சக்தியை உள் நிறைத்து உருவாக்கிடும் ஓர் பொருளே அந்த உயிரணுக்களின் முட்டைகள் எனச் சித்தர்களால் காட்டப்பட்டது.
சூரிய வெப்ப ஒளியில் அந்த முட்டைகள் உடைந்து பரவெளியில் சுழன்று ஓடும் பூமியின் ஈர்ப்பின் அருகாமையில் அந்த உயிரணுக்கள் வந்தாலும் பூமியின் ஈர்ப்பில் சிக்கிடாமல் உந்து விசையால் புறப்படும் பாணம் போல் அந்த உயிரணுக்கள் பரவெளியில் உலவிடும் சூட்சமத்தைச் செப்பிடத்தான் முடியுமோ…?
1.பூமியின் வட திசையில் விழிப்பார்வையை விண்ணிலே செலுத்தி
2.ஈஸ்வரா… என்று புருவ மத்தியில் எண்ணி ஏக்கத்துடன் அந்தப் பேரொளியை ஈர்த்துக் கொண்டால்
3.காமதேனு தன் ஆகாரத்தை நமக்கு ஊட்டிடுவாள்.
இதை நீ அறிவாய்… உணர்வாய்… தெளிவாய்…!

தொழில் செய்யும் இடத்தில் (டென்சன்) பகைமை வளராது இருக்க எப்படித் தியானிக்க வேண்டும்…?
ஒரு தொழிற்சாலையில் நாம் வேலை பார்க்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம். நம்முடைய மேலதிகாரி வேலைக்கு வரும் நேரத்தில்… அவர் குடும்பத்திலேயோ அல்லது வரும் பாதையிலேயோ அவருடைய சந்தர்ப்பம்… தவறான செயல்களை உற்றுப் பார்த்து விட்டால் அந்த உணர்வுகளை அவர் நுகர்கின்றார். அதனால் அவருக்குள் வெறுப்படையும் உணர்வுகள் வந்து விடுகின்றது.
அந்த வெறுப்பான உணர்வுடன் தொழிற்சாலைக்குள் வந்தால் அந்த வெறுப்பான உணர்வு கொண்டே அவர் பார்வைகள் வரும்.
1.இங்கே தொழில் செய்வோர் சீராகச் செய்தாலும்
2.அவருடைய உணர்வுகள் அந்த வெறுப்படையும் உணர்வுடன் இவர்களை உற்றுப் பார்க்கும் பொழுது
3.இவர்கள் செயலைக் கண்டு குறை கூறும் உணர்வுகளாக… அந்த உணர்ச்சிகளை அங்கே அவருக்குள் தூண்டும்.
அவர்கள் நல்லதைச் செய்தாலும் அவர் எடுத்துக் கொண்ட உணர்வால் அவர்களையும் வெறுக்கும் உணர்வைத்தான் உருவாக்கும். அவ்வாறு உருவாக்கி விட்டால் அந்த மேலதிகாரியின் சொல்லும் கடுமையாகும். (இதை எல்லாம் கண்கூடாகப் பார்க்கலாம்…!)
அப்படிப்பட்ட வெறுக்கும் உணர்வுடன் உற்றுப் பார்க்கப்படும் பொழுது அவர் சொல் (கடுமையான) நமக்குள் பதிவாகி விட்டால் அவர் மீது வெறுப்படையும் சக்தியும்… அதே நினைவும் நமக்குள் வருகின்றது.
1.அவரைப் பார்க்கும் போதெல்லாம் நமக்கு வெறுப்பும்
2.அவர் நம்மைப் பார்க்கும் பொழுது அவருக்கும் வெறுப்பு வருகின்றது.
ஆக… ஒரு தொழிற்சாலையில் ஒரு முறை இப்படித் தவறு என்ற உணர்வுகள் பதிவாகி விட்டால் இது வழி தொடர்ந்து இருவருடைய உணர்வுகளும் வெறுப்படையும் அணுக்கள் விளைந்து அவரவர்கள் உடலிலுள்ள நல்ல அணுக்களை வளரவிடாது தடுக்கும் நிலையே வருகின்றது.
1.இத்தகைய நிலைகள நமக்குள் வளர்க்கப்படும் பொழுது
2.தொழிற்சாலைக்குள் வந்தபின் மன நோய் போன்று உருப் பெறுகின்றது
3.சிந்தனை இழக்கச் செய்கின்றது… செயல்களைச் சீராக இயக்க முடியாத நிலைகள் இருவருக்குமே வருகின்றது.
இதைப் போன்ற உணர்வுகள் சந்தர்ப்பத்தால் ஏற்படும் நிலைகளைத் தடுக்க வேண்டுமென்றால் ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் இருக்கும் உயிரின் பால் நினைவைச் செலுத்த வேண்டும்.
அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும். அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் இரத்தநாளங்களில் கலக்க வேண்டும்… எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று சிறிது நேரம் ஏங்கித் தியானிக்க வேண்டும்.
அதற்கு அடுத்து…
1.நாங்கள் பார்ப்போர் அனைவரும் நலம் பெற வேண்டும்
2.எங்களைப் பார்ப்போருக்கு நல்ல எண்ணங்கள் வர வேண்டும்
3.எங்கள் செயல் அனைத்தும் புனிதம் பெறவேண்டும்
4.எங்கள் சொல் அனைவருக்கும் நன்மை பயக்க வேண்டும் என்று நமக்குள் வலுப்படுத்த வேண்டும்.
மேலதிகாரியை நினைக்க வேண்டியதில்லை…! உங்கள் உணர்வுகள் இவ்வாறு தான் வர வேண்டும் என்று எண்ணங்களைச் செலுத்திவிடுங்கள்.
ஏனென்றால் இந்த உணர்வின் வலு நமக்குள் ஏற்பட்டால்…
1.அவர் செய்த தீமையின் உணர்வுகளால் நமக்குள் விளைந்த அணுக்களுக்கு உணவு கிடைக்காது தடைப்படும்
2.அல்லது முதலில் பார்த்தபின் கருவின் தன்மை (வெறுப்பான அணு) அடைந்திருந்தால் அது மீண்டும் வளராது தடையாகிவிடும்.
விவசாயம் செய்கிறோம் என்றால் நிலத்தின் மேலே விதைகளைத் தூவும் பொழுது மண்ணுக்குள் பதிந்தால் அந்த விதை முளைத்து விடும் மண்ணை விட்டு வெளிப்பட்டால் அந்த வித்து முளைப்பதில்லை. ஆனால் அதை நாம் எல்லாச் சமயங்களில் கவனிப்பதும் இல்லை.
இதைப் போன்று தான்… ஒருவர் சொல்லும் உணர்வின் தன்மை நமக்குள் பதிவாகி விட்டால்… அந்தப் பதிவின் தன்மையை நமக்குள் மீண்டும் மீண்டும் நினைவு கொண்டால் அவர் செய்த தீமையின் உணர்வுகள் நமக்குள் நிச்சயம் வளரத் தொடங்கும்.
ஆனால் அது வளராது தடுக்க வேண்டுமென்றால்…
1.அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும்
2.எங்கள் உடல் முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்
3.எங்கள் பார்வை அனைவரையும் நலமாக்க வேண்டும்
4.என் மேலதிகாரி என்னைப் பார்க்கும் பொழுது அவருக்கு நல்ல எண்ணங்கள் வர வேண்டும் என்ற உணர்வினை நாம் செலுத்தி விட்டால்
5.நமக்குள் இருக்கும் அந்த வெறுப்பின் உணர்வால் வளர்ந்த அணுக்களுக்கு ஆகாரம் கிடைக்காது அது நசிந்துவிடும்.
ஒரு வித்திற்கு நாம் மீண்டும் மீண்டும் நீரை ஊற்றும் பொழுது தான் அது வளர்ச்சி அடைகின்றது. நீரை ஊற்றாது விட்டுவிட்டால் அதனின் வளர்ச்சி தடைப்படும்.
அதே போல் அந்த மேலதிகாரிக்கு நல்ல எண்ணங்களும் நல்ல உணர்வுகளும் வளர வேண்டும்… அவர் குடும்பம் நலம் பெற வேண்டும்… அவர் சொல்லிலே இனிமை பெற வேண்டும்… அவர் செயல் அனைத்தும் புனிதம் பெற வேண்டும்…! என்று இப்படி நீங்கள் எண்ணி மாற்றிவிடுங்கள்.
அவர் பெற்ற அந்தத் தீமையின் உணர்வுகள் அவர் உடலில் விளைந்தது தான்…
1.இருப்பினும் நமக்குள் அது வளராது தடுக்க இது உதவும்
2.மேலே சொன்ன முறைப்படி செய்தால் அவரைப் பார்க்கும் போது அந்த வெறுப்பின் தன்மை நமக்குள் வராது
3.தொழில் செய்யும் இடங்களில் பகைமைகள் நிச்சயம் மறையும்.
செய்து பாருங்கள்..!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் தியானத்தைக் கடைப்பிடிப்பவர்கள்
1.நாங்கள் அருள் ஞானம் பெற வேண்டும்
2.மெய்ப் பொருள் காணும் சக்தி நாங்கள் பெற வேண்டும்
3.எங்கள் பார்வை அனைவரையும் நலமாக்க வேண்டும் என்ற உணர்வுடன் இருத்தல் வேண்டும்.
4.தீமையான உணர்வுகளை மாற்றி அமைக்கும் பழக்கத்திற்குக் கொண்டு வருதல் வேண்டும்.
கூட்டுத் தியானங்கள் மூலம் அருள் ஞானத்தைப் பெருக்கி உங்கள் பார்வையால் பிறரின் நோய்களைப் போக்கும் தன்மையும் தீமைகளைப் போக்கும் நிலைகளையும் நீங்கள் வழிப்படுத்தி வருதல் வேண்டும்.
இது உங்கள் தலையாயக் கடமையாக இருத்தல் வேண்டும்.
அருள் வழியைப் பெற வேண்டும் என்று நீங்கள் ஏங்கிப் பெற்றுப் பிறருடைய தீமைகளைப் போக்கும் தன்மைக்கு வர வேண்டும். இருள் சூழ்ந்த நிலைகளை நீக்கிடும் அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும்.
சந்தர்ப்பத்தால் ஒரு சிலர் உடலில் ஆவி புகுந்துவிடும். ஆவியின் தன்மை ஒரு உடலுக்குள் வந்து விட்டால் அந்தக் குடும்பத்தில் உள்ளோருக்கும் அதனால் பல தொல்லைகள் வரும்.
அந்தத் தொல்லைகள் வரும் போது நீங்கள் அனைவரும் கூட்டுத் தியானம் இருந்து
1.மகரிஷிகளின் அருள் சக்தி அவர் உடல் முழுவதும் படர வேண்டும்,
2.அவர் உடலில் உள்ள அந்த ஆன்மா மகரிஷியின் அருள் சக்தி பெற்று
3.அது பிறவி இல்லா நிலை அடைய வேண்டும்,
4.அந்த உடலிலே நன்மை பெறும் சக்தியாக அதை மாற்றுதல் வேண்டும்.
5.அந்த உடலை வாட்டி வதைக்கும் தன்மையிலிருந்து அவர்களை மீட்கலாம்.
மாறாக “இப்படி இருக்கிறதே…!” என்று ஆவிகள் ஓட்டுவோரிடம் சென்றால் அதை ஓட்ட முடியாது.
விரட்ட வேண்டும் என்று அதிகாரத்தில் செயல்பட்டால் எதிர் மறைகள் அதிகமாகி எதன் வேகத்தில் அந்த அணுக்கள் இருக்கின்றதோ அது தான் பெருகும்.
ஆகவே தியானம் செய்பவர்கள் மகரிஷிகளின் அருள் சக்தியை அவருக்குள் பாய்ச்சி
1.உள்ளிருந்து அந்தத் தீவினையைத் தடுத்தல் வேண்டும்.
2.அருள் சக்தியை நமக்குள் கூட்டும் போது
3.அது இதை உணவாக உட் கொண்டு அதன் வீரியத்தைக் குறைக்கும்.
4.அதற்கும் நன்மையாகிறது நமக்கும் நன்மையாகிறது.


வாழ்க்கையில் நம் மீது வந்து மோதும் எத்தகைய நிலையையும் நறுமணமாக… அமுதமாக… பேரொளியாக மாற்ற முடியும்
பால்வெளி மண்டல சூட்சம சக்திகளைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
அதாவது ஆதிசக்தியின் “நீர் அமில ஒளி காந்த மூலம்…” உள்ளடங்கி ஓர் வண்ணமாக மூலத்திலிருந்து வெளிப்படும் ஏழு வண்ண அமில குணங்களாக வெளி வருகிறது.
1.நிறம்
2.குணம்
3.உள்மூல நீர் அமிலம் என்ற
4.மூன்று சக்திகளின் தொடரின் கலப்பில் பால்வெளியில் படர்ந்து கொண்டே உள்ளது.
வான இயலை உன்னிப்பாகப் பார்த்தால் பல விதமான வர்ணங்களையும்… எண்ணிலடங்கா வாயுக்களையும்… உருவாக்கும் ஜீவ சக்தியையும் காண முடியும்.
அதிலே தான் ஒன்றுடன் ஒன்று கலந்து பிறிதொன்றை உருவாக்கும் உயிரணுக்கள் தோன்றுகிறது.
அத்தகைய வினைச் செயலின் படைப்பில் அனைத்துச் சக்திகளையும் காத்திடும் பக்குவத்தில் உயிரணுவிலே முலாமாகும் வீரிய அமிலம் தன் வளர்ச்சியின் வளர்ப்பாக்க மற்ற அமில குணங்களைத் தன் வளர்ப்பிற்குத் துணை சக்திகளாக எடுத்துக் கொள்கிறது.
அவ்வாறு வளரும் பக்குவத்தில் கோடானு கோடி உயிரணுக்கள் பால்வெளியின் பரமாத்மாவின் தத்துவத்தில் ஒன்றுடன் ஒன்று ஈர்த்துப் பிறிதொரு சக்தியாகவும் வளர்ச்சி கொள்கிறது.
அந்த வளர்ச்சியில் எந்த அமில முலாம் வீரியமாக வளர்ச்சி நிலை பெற்றதோ அதுவே வினையின் கதியால் வினையின் செயலுக்குத் தொடர் நிகழ்வாக நடைபெற்றுக் கொண்டேயுள்ளது.
இந்தத் தொடர் “காலம் காலமாக…” நடக்கின்றது.
நீர் நிலையின் ஊடே பாய்கின்ற ஒளிக் கதிர் (வானவில் – RAINBOW) ஏழு வண்ணங்களைக் காட்டுவது எட்டாவது வண்ண மூலத்திலிருந்து தான்.
அந்த ஏழு வண்ணங்களின் அமிலங்களுக்குள் நீர் சக்தியின் மூலம் சக்திகள் பாய்ந்து அது செயல் கொண்டிட்ட விதங்களை சித்தர்கள் காட்டியுள்ளார்கள்.
நீர் சக்தியின் குளிர்விப்பால் தான் (உறையும் போது தான்) உயிரணுக்களின் இயக்கத் தொடர்பில் சரீரங்களாக… பிம்பங்களாக உருப்பெறுகின்றது. ஜீவனுள்ள உருவங்களாக ஆனதைத் தான் சீவலிங்கம் (சிவலிங்கம்) என்று சொல்வது.
சரீரம் என்ற குகைக்குள்…
1.உயிரணுவின் காந்த அமில ஈர்ப்பின் குணம்
2.சக்தியாகச் செயல் கொள்வது என்பது
3.சரீரத்தின் மூலம் பெறும் வளர்ச்சி பெறும் நிலை.
அதாவது “ஆன்மா வலு கொண்டிடும் தற்காப்புப் பணி…!” என்று விளங்கிக் கொள்ள வேண்டும். அந்த ஆன்மாவைச் சுற்றி ஓடும் ஒளி வட்டத்தின் ஊடே உயிர் சக்தி சூட்சமத்தில் செயல் கொள்கிறது என்பதையும் அறிந்திடல் வேண்டும்.
பால்வெளியில் பரந்துள்ள நீர் சக்தி அது வளர்ச்சி கொள்ளும் பக்குவத்தில்
1.மனக் குகையினூடே பாதுகாப்பு வளையமிட்டு
2.ஆத்ம லிங்கத்தைப் பூஜிக்கும் உயிர் சக்தி
3.மகரிஷிகளின் அருள் சக்தியின் துணை கொண்டு
4.தன் சுய சக்தியை வளர்ச்சிப்படுத்தும் செயல் நிகழ்வில் எழுவதே “உயர் ஞான ஜோதி மலர்…!”
தாமரை மலரை உவமை காட்டுவது எதற்கு…?
சூரியனின் தொடர்பு கொண்டு நீர் சக்தியின் மூலமாக உயிரணுக்கள் உடல் பெற்று உருவாகும் நிலையை உணர்த்துவதற்காகத்தான்.
ஏனென்றால் இரு வித சுவாசத்தின் அலைகளாக…
1.பூமி தனக்குள் ஈர்க்கும் அலையும்
2.பூமி அதை ஈர்த்துச் சமைத்து வெளிக்கக்கும் சுவாச அலையும்
3.பரவெளியில் மோதுண்ட நிலையில் அதை ஈர்த்து உருவாகும் மலரே “தாமரை மலர்…!”
தாமரை தான் ஈர்த்திடும் அமில குணத்தின் மூலம் அமுதத்தை மலரும் மலராக மலர்கிறது. தன்னுள் பாய்ந்திடும் விஷ அமில சக்தியைத் தன் இலைப்பரப்பில் பதிய வைத்துக் கொள்கிறது.
அந்த விஷ அமிலத்தையே இலையின் மூலம் தன் சக்தி குறைவு படாமல் ஏழு வண்ணத்தில் ஓர் வண்ணமாக மலராக மலர்ந்திட தனக்குகந்த ஆகாரத்தைச் சமைத்துச் சூரிய சக்தியின் தொடர்பில் தன்னை வளர்ச்சி நிலைப்படுத்துகின்றது.
இந்தத் தத்துவத்தைத் தெரிந்து கொண்டால்…
1.வாழ்க்கையில் நம் மீது வந்து மோதும் எத்தகைய நிலையையும்
2.நறுமணமாக அமுதமாக பேரொளியாக நாம் மாற்றிக் கொள்ள முடியும்.

உடலை விட்டுப் பிரிந்த உயிரான்மாக்களை விண் செலுத்தும் பழக்கம் வளர்ந்து விட்டால் “உந்துவிசை இல்லாமல் நாம் விண் செல்ல முடியும்…!”
தெளிந்த மனமும் தெளிந்திட்ட உணர்வும் கொண்டு…
1ஒளியின் சரீரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் அந்த மாமகரிஷிகள் கண்டுணர்ந்த உணர்வினைத் தான்
2.குருநாதர் காட்டிய அருள் வழியில் உபதேசித்துக் கொண்டு வருகின்றோம் (ஞானகுரு).
இந்த உபதேசத்தைப் படிக்கும் போதும் அல்லது கேட்கும் போதும் நீங்கள் நுகர்ந்த உணர்வுகள் உங்களுக்குள் ஊழ்வினை என்ற அருள் ஞான வித்தாக ஊன்றச் செய்து கொண்டிருக்கின்றோம்.
அதனை நீங்கள் மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தால் உங்கள் வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றிட முடியும். ஏனென்றால் அருள் ஒளிச் சுடராக உங்கள் உணர்வுகளை வளர்த்துப் பிறவியில்லா நிலை அடையச் செய்யும் நிலைக்குத் தான் இந்த உபதேசமே…!
அருள் ஞானியின் உணர்வுகளை வலுப் பெறச் செய்து அதன் துணை கொண்டு ஏங்கித் தியானித்து… நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்களின் உயிரான்மாக்களை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்த உணர்வின் வலுக் கொண்டு அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கச் செய்ய வேண்டும். உடல் பெறும் உணர்வுகளை அங்கே கரைக்க வேண்டும்.
உதாரணமாக ஒரு தேரை இழுக்க வேண்டும் என்றால் அது கடினமானது. பலரும் சேர்ந்து அந்தத் தேரை இழுத்தால் தான் அது எல்லைக்கு வரும்.
அதைப் போன்று தான்…
1.பலரும் நாம் ஒன்று கூடி மனிதனின் கடைசி எல்லையான
2.அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் உணர்வை நமக்குள் வலுப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
அந்த உணர்வின் துணை கொண்டு நாம் அனைவரும் கூடி நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற குலதெய்வங்களின் ஆன்மாக்களை சப்தரிஷி மண்டல எல்லையை அடையச் செய்தல் வேண்டும்.
உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைந்த பின்… அறிவின் தெளிவாக நம்முடன் வாழ்ந்த அந்த உணர்வின் ஒளியாக நிலைபெறச் செய்வதே… “நம் குருநாதர் காட்டிய உயிரான்மாக்களை விண் செலுத்தும் முறை…”
ஒவ்வொரு நாளும் காலை துருவ தியானத்தில் அந்தந்தக் குடும்பத்தில் உள்ளோர் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த மூதாதையர்களை மேலே சொன்ன முறைப்படி அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்யும் நிலை வரும் பொழுது அவருடைய எண்ணங்களும் அவர்களுடன் தொடர் கொள்கின்றது.
அதே சமயம் முன்னோர்கள் சப்தரிஷிகள் ஆன பின் அந்த மண்டலத்துடன் இணைந்த பின் “எண்ணும் பொழுதெல்லாம்” அங்கிருந்து எளிதில் அந்தச் சக்திகளைப் பெற முடிகின்றது.
அதன் மூலம்…
1.வாழ்க்கையில் வரும் சலிப்போ சங்கடமோ வெறுப்போ கோபமோ குரோதமோ போன்ற உணர்வுகளை அகற்றவும்
2.அறியாது உட்புகுந்து செயலாக்கும் தீமைகளை அகற்றவும்
3.தொழிலின் நிமித்தம் வரும் குறைகளை அகற்றவும்
4.சந்தர்ப்பத்தால் நம்மைப் பலவீனமடையச் செய்யும் இருளை அகற்றவும்
5.அந்த மாமகரிஷிகளின் அருள் உணர்வுகள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.
மகரிஷிகளின் அருள் சக்திகளை நுகர நுகர… உங்கள் எண்ணங்கள் வலு பெற்று மன பலம் பெறுவீர்கள். உங்கள் தொழிலும் முன்னேற்றம் அடையும். அருள் ஒளியின் உணர்வாகக் கார்த்திகேயா என்று அறிந்துணர்ந்து செயல்படும் சக்தியும் பெறத் தகுதி பெறுகின்றீர்கள்.
முன்னோர்கள் முன் செல்ல அவர்களின் உணர்வை நமக்குள் பின்பற்ற இங்கே அவ்வப்போது வரும் இருளை அகற்றி உணர்வின் ஒளியாக மாற்றிக் கொள்ள முடியும்.
1.இதன் வழியில் தொடர்ந்து சென்றோம் என்றால்…
2.நாம் விண் செல்ல உந்து விசை தேவையில்லை.
ஏனென்றால் அந்தச் சப்தரிஷி மண்டலத்தின் உணவின் தன்மை வலுவாக்கிக் கொண்டால்
1.கடைசி எண்ணம் நமக்குள் அது தான் வரும்…
2.சப்தரிஷி மண்டலத்தை நாம் எளிதில் அடைய முடியும்.
ஆனால் முந்தி வாழ்ந்தவர்களுக்கு அத்தகைய எண்ணங்கள் இல்லை. அதை வளர்க்கவும் இல்லை. அந்த வலுவும் இல்லை.
இன்று உடலுடன் இருக்கும் நாம் நமக்குள் சப்தரிஷி மண்டலங்களின் உணர்வை வலுப் பெறச் செய்து அந்த ஆன்மாக்களை விண்ணிலே உந்தித் தள்ளினால் உடல் பெறும் உணர்வுகள் கரைந்து ஒளியின் உணர்வாக வளர்ச்சியாகி சப்தரிஷி மண்டலங்களின் உருவாக ஆகிவிடுகிறார்கள்.
நம் வாழ்க்கையில் அறியாது சேரும் குறைகளையும் நோய்களையும் சலிப்பையும் நாம் மறக்க… அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நாங்கள் பெற வேண்டும் என்று அடிக்கடி எண்ணுதல் வேண்டும்.
1.மகரிஷிகளீன் அருள் சக்தியால் எங்கள் உடல் நலம் பெற வேண்டும்… மன நோய் நீங்க வேண்டும்
2.எங்கள் தொழில் வளம் பெருக வேண்டும்
3.எங்கள் செயல் அனைத்தும் வைரத்தைப் போல ஜொலிக்க வேண்டும்
4.எங்கள் வாழ்க்கை வைரத்தைப் போல் பிரகாசிக்க வேண்டும் என்று உணர்வினை எடுத்து வலுவாக்கிக் கொண்டால்
5.பிறவியில்லா நிலை அடைந்திட்ட அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்திற்குள்
6.நம்மை நிச்சயம் அழைத்துச் செல்லும் நமது உயிர்…!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
மற்றவர்களின் நோய்களை நீக்கும் கூட்டுத் தியானப் பயிற்சி:
நோய்களைப் போக்க வேண்டும் என்றால்
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
2.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.
3.எங்கள் உடலிலுள்ள அது எந்த நோயோ அது நீங்க வேண்டும் என்று
4.அதே எண்ணத்தில் தியானம் செய்ய வேண்டும்.
நோய் உள்ளவர்கள் கண்ணைத் திறந்து துருவ நட்சத்திரத்தை எண்ணி ஏங்கி அந்த அருள் சக்தி என் உடலில் படர வேண்டும். என் நோய் நீங்க வேண்டும் என்று எண்ணினால் உடல் நலமாகும்.
உதாரணமாக ஒருவரால் முடியவில்லை என்றால் பத்து பேர் சேர்ந்து கூட்டுத் தியானமிருந்து அவர் நோயைக் குணப்படுத்த முடியும்.
அவரை எழுந்து நிற்கச் சொல்லி மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என் உடலில் உள்ள நோய் நீங்க வேண்டும் என்று ஏங்கி இருக்கும்படி சொல்லுங்கள்.
மற்றவர்கள் தியானத்தில் இருந்து மகரிஷிகளின் அருள் அவர் உடலில் படர வேண்டும். அவர் உடலில் உள்ள நோய் நீங்க வேண்டும், அவர் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ வேண்டும், அவர் உடல் நலம் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.
அப்போது அவரின் உடலில் ஒரு விதமான கரண்ட் பாய்வது போல் இருக்கும். அப்போது அவர் உடலில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
1.அவரால் முடியாததை நீங்கள் எல்லோரும் சேர்ந்து சொல்லி
2அவரின் நோய்களை இவ்வாறு மாற்றிப் பழக வேண்டும்
3..இதில் பல அற்புதங்களைப் பார்க்கலாம்.
நீங்கள் இதைச் செய்து நல்லதாக்க வேண்டும்.
உங்கள் எண்ணத்தால் மற்றவர்களில் நோய்களைப் போக்கச் செய்து ஒருவருக்கொருவர் உதவும் நிலையாக இந்தப் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
ஒருவருக்கு நோய் இருக்கிறதென்றால் முதலில் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்ற வலுவை நமக்குள் ஏற்றிக் கொண்ட பிற்பாடு தான் நோயாளியின் உடலில் மகரிஷிகளின் அருள் சக்தி படர்ந்து நோய் நீங்கி உடல் நலமாக வேண்டும் என்று தியானிக்க வேண்டும்.
உடல் நலமாக வேண்டும் என்று முதலிலேயே தியானிக்கக் கூடாது. அருள் சக்தியை எடுத்துத் தியானித்து விட்டுத்தான் செய்ய வேண்டும்.
கடையில் வாங்கிய காய்கறிகளை அப்படியே நறுக்கிவிட்டுப் பறிமாறினால் ருசி வருமோ? வேகாத நிலையில் தான் இருக்கும்.
அதைச் சமைத்து ருசியாக ஆக்கிய பின் தான் மற்றவருக்குக் கொடுக்க முடியும். ஆகவே அருள் ஞானத்தை நமக்குள் படைத்து அந்த வலுவின் தன்மை கொண்டு மற்றவர்களுக்கு அந்தச் சக்திகள் கிடைக்க வேண்டும் என்று ஒரு மனதோடு ஏங்கி இணைக்க வேண்டும்.
மகரிஷிகளி அருளை அப்படி இணைக்கப் போகும் போது மற்றவர்களும் ஏங்கிப் பெற்றார்கள் என்றால் நாம் பாய்ச்சும் உணர்வுகள் அங்கே அவர்களின் நோயை நீக்க உதவும்.
ஆனால் சில நோய்களுக்கு உடனடியாக மருந்து கொடுக்க வேண்டியதிருக்கின்றது. மருத்துவர்களிடம் வாங்கிச் சாப்பிடுகிறார்கள் என்றால் மகரிஷிகளின் அருள் சக்தியால் மருந்து உங்களுக்கு வேலை செய்து நன்றாக ஆகும் என்று சொல்லலாம். விரைவில் நல்லதாக்கவும் உதவும்.


துன்பங்களால் அவதிப்படும் நேரத்தில்… நல்லதை (அந்தச் சந்தர்ப்பத்தில்) எப்படிக் கொண்டு வர முடியும்…? என்று தெரிந்து கொள்ளுங்கள்
உதாரணமாக உங்கள் காலில் அடிபட்டு வலியுடன் இருக்கும் பொழுது யாராவது உங்களிடம் வந்து “சந்தோஷமாக இருக்க வேண்டும்…” என்று சொல்லட்டும். உங்கள் வலி இன்னும் கொஞ்சம் அதிகமாகும்…!
அதே சமயத்தில் படுக்கையில் நோயுடன் இருக்கின்றீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த நேரத்தில் ஒருவர் வந்து உங்கள் பையன் இன்ன இடத்திற்குப் போனான்… அங்கே போய் வீரமான ஒரு செயலைச் செய்தான்…! என்று சொன்னால் போதும்.
அதைக் கேட்டவுடன் ஆஹா… என் பையைன் அப்படிச் செய்தானா..! என்று கேட்டவுடனே படுக்கையிலிருந்து எழவில்லை என்றாலும் தன் உடலில் உள்ள வலிகளை எல்லாம் மறந்து விடுவார்கள்.
அல்லது உங்கள் பையன் படிப்பில் நூற்றுக்கு நூறு மார்க் வாங்கி இருக்கின்றான். மிகவும் கெட்டிக்காரனாக இருக்கின்றான்…! என்று திடீரென்று உங்களிடம் யாராவது சொல்லட்டும்.
1.உங்கள் வலி எல்லாம் போய்விடும்
2.ஒரு இனம் புரியாத ஆனந்த நிலை வரும்
3.உற்சாகத்துடன் எழுந்து நிற்கச் சொல்லும்.
இதைப் போன்று தான் உங்கள் உணர்வின் தன்மை கொண்டு அருள் மகரிஷிகளின் சக்தி பெறவேண்டும் என்று எண்ணி விட்டு நீங்கள் பார்த்தோர் உணர்வுகளில் வைரத்தைப் போன்று வாழ்க்கை ஜொலிக்க வேண்டும் அவர்கள் சொல்லும் செயலும் ஜொலிக்க வேண்டும் நாங்கள் பார்க்கும் குடும்பங்கள் எல்லாம் வாழ்க்கை வைரத்தைப் போன்ற ஜொலிக்க வேண்டும் என்று எண்ணச் சொல்கிறோம்..
அந்தச் சமயத்தில் தீமை செய்யும் உணர்வுகளை நாம் நேரடியாக நுகர்வதில்லை. மாறாக நாம் உயர்ந்த உணர்வுகளைத் தான் (மறைமுகமாக) எடுக்கின்றோம். அப்பொழுது வாலி என்ற விஷத் தன்மையான உணர்வு நம்மை இயக்குவதில்லை.
ஆக… மனிதனின் வாழ்க்கையில் அறியாது வரும் இடையூறுகளிலிருந்து மீட்டிக் கொள்வதற்கு ஞானிகள் இந்தத் தத்துவத்தைக் கொடுத்துள்ளனர்.
ஆனால் படித்தவர்கள் என்ன செய்கிறார்கள்…?
ஞானிகள் கொடுத்த தத்துவங்களை வைத்து வாதிடும் திறமைகளைக் காட்டுகின்றார்களே தவிர ஞானிகள் கொடுத்த மூலக் கூறுகளை மக்களுக்கு எடுத்துக் கூறுவதில்லை.
இராமாயணத்தில் காட்டப்பட்ட குகன் என்பது நம் உடலில் உள்ள இரத்தநாளங்கள் தான்…!
வைரத்தைப் போல் வாழ்க்கை ஜொலிக்க வேண்டும் எங்கள் சொல் ஜொலிக்க வேண்டும் நாம் பார்ப்போர் வாழ்க்கை ஜொலிக்க வேண்டும் என்று எண்ணினால் நம் இரத்தங்களில் இது எல்லாம் கலக்கின்றது.
நம் இரத்தநாளங்களில் நாம் கவர்ந்த உணர்வுகள் உடல் முழுவதும் படரப்படும் போது ஒரு அமைதிப்படுத்தும் உணர்வாக… புதிய உணர்வாக அமைகின்றது.
இதைத் தான் காட்டிற்குள் செல்லும் போது இராமன் முதலில் குகனை நண்பனாக்கிக் கொண்டான் என்று காட்டுகின்றனர்.
காவியத்திலே குகனைக் காட்டும் பொழுது காடு மலை வனாந்திரம் அனைத்திலும் மிருகங்களிடமிருந்தும் காப்பாற்றும் நிலைகள் கொண்டு பாதுகாப்பாகச் செல்கிறான்… இராமனுக்கு உதவி செய்கின்றான்…! என்று காட்டுகின்றனர்.
1.அந்த அருள் மகரிஷிகளின் அருள் சக்தி உடலுக்குள் செல்லப்படும் போது இரத்தத்திலே கலந்து…
2.நம் உடல் முழுவதும் அந்த இரத்தங்கள் சுழன்று வரப்படும் போது
3.ஏற்கனவே இருக்கும் பகைமை கொண்ட அணுக்கள் இதை உட்கொண்டால்
4.அதனின் வீரியத் தன்மை அந்த வலுவை இழக்கின்றது.
ஆகவே நாம் எண்ணும் எண்ணங்கள் நமக்குள் (உடலுக்குள்) எந்த வழியில் செயல்படுகின்றது என்பதை இராமனைக் காட்டுக்குள் போகின்ற மாதிரி காவியங்களைப் படைத்துக் காட்டினார் வான்மீகி.
இராமன் காட்டுக்குள் சென்றாலும்…
1.பகைமைகளை எப்படி மாற்றுகின்றான் என்று குகனைக் காட்டி
2.அந்தக் குகனை வைத்து மற்றவர்களை இராமன் எப்படி நட்பாக்குகின்றான்..? என்ற நிலையில்
3.எண்ணங்களின் குவியலும்… இந்த எண்ணத்தின் செயலும்…
4.வாலி என்ற நிலைகள் எவ்வாறெல்லாம் இயக்குகின்றது என்ற நிலையையும்
5.உணர்வின் செயலாக்கங்களைத் தெளிவாக்குவதற்குக் காவியமாகப் படைத்து
6.மனிதன் வாழ்க்கைக்குத் தீமையான உணர்வின் செயலாக்கங்களிலிருந்து நாம் எப்படி விடுபட வேண்டும் என்ற நிலையும்
7.அதை அருள் ஒளிச் சுடராக மாற்றும் நிலை அது எவ்வாறு…? என்றும் இராமாயணத்தில் இது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
ஆகவே வான்மீகி காட்டிய அருள் வழியில் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை நம் இரத்தங்களில் கலக்கச் செய்வோம்… அருள் ஞானம் பெறுவோம்… மகிழ்ந்து வாழும் அருள் சக்தியைப் பெறுவோம்.

வராகிமிகி மகரிஷி பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது
வான இயலின் தத்துவத்தை “முத்தொழில்” (ஆக்கல் காத்தல் அழித்தல்) என்ற வகைகளை அறிந்து கொண்டவர் வராகிமிகிரர். பேரண்டங்களின் சூட்சமச் செயல் நிகழ்வாக ஒவ்வொரு சூரியக் குடும்பங்களின் வளர்ச்சியின் ஆக்கத்தையும் அவர் உணர்ந்தார்.
ஒவ்வொரு சூரியக் குடும்பமும் மற்ற குடும்பத்துடன் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டே வளர்ச்சியின் சக்திப் பிரவாகமாகச் சுழன்று கொண்டிருப்பது அனைத்தையும்
1.தன் உயிராத்ம வலு கொண்டு
2.ஞானதிருஷ்டி கொண்டு அறிந்து உணர்ந்து தெளிந்தவர் வராகிமிக மகரிஷி…!
நம் சூரியக் குடும்பத்தில் பூமித் தாய் ஈர்த்து அளித்திடும் சக்தியின் தொடருக்கு தன் வினையின் செயலுக்கு நாற்பத்தி எட்டு கோளங்களே முக்கிய காரணமாகின்றது.
அந்த ஆற்றல்களை ஒவ்வொரு உயிராத்மாவும் ஜீவ சரீரம் கொண்டு வலு பெற்று வளர்த்திடவும் நல் வினையின் ஆக்கம் அறிந்து தெளிவு பெற்றிடவும் “மண்டலம்…” என்ற வகைப்படுத்திக் கர்ம வினைச் செயலாகக் காட்டினார்.
1.சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த நவக் கோள்களும்
2.வியாழனைப் பிரகாசப்படுத்திடும் எட்டு உப சந்திரக் கோள்களும்
3.புதனைச் சுற்றி ஓடும் ஐந்து சந்திரக் கோள்களில் நான்கு ஜீவன் கோள்களும்
4.பூமித் தாய் ஈர்ப்பின் தொடர்பு கொண்ட மாமகரிஷிகளின் அருள் பார்வை கொண்ட இருபத்தியேழு ஜீவ நட்சத்திரத் தொகுதியும்
5.நாள் கணக்கு வைத்து 48 என்ற வகையே மண்டலம் என்ற வகைப்படுத்தினார்.
ஒவ்வொரு நாளும் பரவெளியில் நடக்கும் கோடிக்கணக்கான சூட்சமச் செயல்களில்… நிறம் மணம் குணம் என்ற அமிலக் கூறுகள் நீர் காந்த சக்தியுடன் கலந்து சிறப்புறும் அந்த விளையாடல் செயலை யாரும் எடுத்துரைக்க இயலுமோ..?
பொதுவான பால்வெளி மண்டலமாகிய சூட்சமப் பேரண்டத்திற்குள் இருளினுள் ஊடே உலவி இரண்டாயிரம் சூரியக் குடும்பங்களும் சுற்றிச் சுழன்று ஓடுகிறது.
இதைப் போல எத்தனையோ சூரியக் குடும்பங்கள் ஆயிரமாகவும் இரண்டாயிரமாகவும் ஒன்றை ஒன்று தழுவிய நிலையில் சுழன்று வருகிறது.
அப்படிப்பட்ட சுழல் கதியில் ஒவ்வொரு சூரியக் குடும்பமும் மற்ற சூரியக் குடும்பங்களைச் சுற்றி வரும் நிலையில் நீர் சக்தியின் தொடர் மூலம் காந்த சக்தியின் ஈர்ப்பால் உள் நிகழ்வுகள் எத்தனையோ நடைபெறுகிறது.
சூரியக் குடும்பத்தைக் கடந்து செல்லும் சுழல் ஓட்டக் கதியில் ஒரு சூரியன் மற்ற சூரியனைச் சந்திக்கும் பொழுது அந்தச் சந்திப்பினால் ஒளிக் கதிர்வீச்சு எதிர் மோதல்களும் ஏற்படுகின்றது.
அவ்வாறு நடைபெறும் காலகட்டத்தில் அந்தந்தச் சூரியனைச் சார்ந்த மண்டலங்கள் அந்தக் கதிர்வீச்சின் ஈர்ப்பில் இயற்கையாக ஈர்ப்பின் தொடரில்
1.தனக்குத் தானே சில மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டு
2.சுழன்று ஓடிக் கொண்டே இருக்கின்றன.
மூன்று சூரியக் குடும்பங்களின் சந்திப்பு நிகழ்வால் அதிலிருந்து வெளிப்படும் கழிவுகள் வால் நட்சத்திரமாக உருவாகின்றது. அதே போல பஞ்சமுக சந்திப்பு…! என்ற வட்டப்பகுதி ஏற்படும் கால நிகழ்வு ஒன்றும் உண்டு.
பஞ்சமுக சந்திப்பின் கதிர்வீச்சு ஏற்படும் கால கட்டத்தில்
1.சக்தி இழந்து வரும் கோளங்கள் அந்த வெப்பக் கதிர்வீச்சில் ஆவியாக மாறுவதும்
2.பிரளயம் ஆகிச் சக்தி குறைவுபட்ட மண்டலங்கள் மீண்டும் தன் சக்தியின் வலுவைக் கூட்டுவதும் போன்ற நிகழ்வுகள்
3.சூரிய மண்டலங்களின் தொடர்பில் நடைபெறும் செயல் வருகின்ற காலத் தொடரில் உண்டு.
நம் சூரியக் குடும்பத்தில் உள்ள கோளங்களில் சூரியன் முதற் கொண்டு அனைத்துக் கோளங்களும் தங்களைச் சுற்றி வளையமிட்டுக் காத்திடும் தொடர்களும் உண்டு.
இவ்வாறு மனித குல வளர்ச்சியின் மேம்பாட்டிற்கான தியான வழித் தொடரைக் காட்டி ஆதி சக்தியுடன் கலந்து வாழும் சூட்சமம் பற்றிக் கூறிய சூத்திரதாரியே வராகமிகி.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
வாழ்க்கையில் நாம் எதிர்பாராத நிலைகள் வரும் போதும் பத்திரிக்கைகளைப் பார்க்கும் போதும் மற்ற அரசியல் வாழ்க்கையில் கடும் தீமை என்ற நிலை வரும் போதும் மத பேதம் இன பேதம் என்ற போர்களில் பல நிலைகளைக் கேட்டறியும் போதும் நம் குருநாதர் காட்டிய அருள் வழியில்
1.ஒவ்வொரு உடலில் இருக்கும் உயிரை ஆண்டவனாக மதித்து
2.அந்த ஆண்டவன் வீற்றிருக்கும் ஆலயத்தில் அமைதி பெற வேண்டும்
3.ஒன்று சேர்ந்து வாழும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
4.அப்பொழுது பிறிதொரு தீமையான உணர்வு நம்மை ஆட்டிப் படைக்காது.
இன்றைய மனிதனின் வாழ்க்கையில் மதத்திற்குள் இனமென்று இனத்திற்குள் இனமென்று இனத்திற்குள் இனமென்று பிரிந்து ஒருவருக்கொருவர் போர் முறை கொண்டு தாக்கி வாழும் நிலைகள் தான் வருகிறது.
என் இனத்தைத் தாழ்த்திப் பேசுகிறான் என்ற உணர்வுகளால் பகைமை உணர்வுகளை வளர்த்து மனிதனை அழித்திடும் நிலையாக மாறி விடுகிறது. நம் நல்ல குணங்களை மறைத்திடும் இந்த நிலைகளை நாம் நீக்கிடல் வேண்டும்.
இந்தத் தியானங்களை எடுத்து கணவன் மனைவி ஒன்று சேர்த்து வாழக்கூடிய பக்குவத்தையும் குடும்பத்தில் ஒற்றுமையாக இருக்கக் கூடிய நிலைகளையும் குழந்தைகளை நாம் எப்படி வளர்க்க வேண்டும் என்ற நிலைகளையும் நீங்கள் அனைவருக்கும் எடுத்துச் சொல்லுதல் வேண்டும்.
ஆனால் கேட்காதவர்களுக்குச் சொன்னால் எதிர்ப்பு தான் வரும்.
உங்களை அணுகி வருபவர்களுக்குத் தான் சொல்லிப் பழக வேண்டுமே தவிர அணுகாதவர்களுக்குச் சொன்னால் அவர்கள் உங்களை அசுத்தமான நிலைகளில் பேசத் தொடங்கி விடுவர்.
அந்த மாதிரி இருந்தாலும் அவர்களும் அந்த நல்ல நிலைகளைப் பெற வேண்டும் என்று நாம் தியானித்து அவர்கள் பொருளறியும் சக்தி பெற வேண்டும் என்ற எண்ணத்தை நாம் வளர்த்துக் கொண்டால் நாளடைவில் வேறொரு சந்தர்ப்பத்தில் அவர் நம்மைத் தொடர்பு கொண்டால் அவர் திருந்தி வாழும் அல்லது சிந்திக்கும் தன்மை ஏற்படும்.
இதையெல்லாம் மனிதனின் வாழ்க்கையில் நாம் தெளிவாக்கிடல் வேண்டும். ஆகவே மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியைக் கடைப்பிடிப்பவர்கள் அனைவரும் எப்பொழுதுமே உங்கள் கஷ்டத்தைச் சொல்லிக் கேட்காதீர்கள்.
1.மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் வியாபாரம் பெருக வேண்டும்
3.மகரிஷிகளின் அருள் சக்தியால் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும்
4.நோயிலிருந்து விடுபட வேண்டும் என்று சொல்லிவிட்டு
5.மகரிஷிகளின் அருள் சக்தியால் குடும்பத்தில் எல்லோரும் நலம் பெற வேண்டும்.
6.எங்கள் குழந்தைகள் சிந்தித்துச் செயல்படும் தன்மை வேண்டும்
7.என் குடும்பம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று
8.இது ஒரு பழக்கமாக வைத்து நீங்கள் தியானிக்க வேண்டும்.
நீங்கள் கண்ணைத் திறந்தே இவ்வாறு தியானியுங்கள். கண்ணை மூடித் தியானிக்க வேண்டாம்.
1.நீங்கள் ஆயுட்கால மெம்பராகச் சேர்ந்து அங்கத்தினராக இருந்திடல் வேண்டும்.
2.நாம் வேறல்ல… நீங்கள் வேறல்ல என்ற நிலைகளும்
3.இந்த உலகம் நலம் பெற வேண்டும்
4.உலகம் இருட்டிலிருந்து அனைவரையும் மீட்டிடும் சக்தியாக நாம் கொண்டு வருதல் வேண்டும்.
5.குறைகள் நமக்குள் வராது பாதுகாத்தல் வேண்டும்.
உயர்ந்த மனிதர்களாக இருப்பார்கள். எல்லாருக்கும் உதவியும் செய்திருப்பார்கள். ஆனால் உதவி பெற்றவர் இறந்து விட்டால் “நான் உதவி செய்தேன்… அவர் இறந்துவிட்டாரே…!” என்று எண்ணுவார்கள்.


அன்று மக்கள் மகிழ்ச்சியாக வாழ ஏற்படுத்தப்பட்ட சமூக அமைப்பான மதம்… இன்று கடவுள் என்ற பேரால் போர் முறைக்கு வந்து விட்டது – ஈஸ்வரபட்டர்
“மதம்…” என்ற சொல்லோ முந்தைய நிலைகளில் மனித இனம் மகிழ்ச்சியாக வாழ ஏற்படுத்தப்பட்ட “சமூக அமைப்பு…!” ஆனால் இன்றோ மதம் என்ற சமூக அமைப்பே… “கடவுள்” என்ற பெயரால் ஒன்றுக்கொன்று ஏற்காது போர் முறையாகி ஆகிவிட்டது.
1.மனிதர்கள் உலக ஆசைப் பிடிப்பில் சிக்குண்டு
2.இந்த உடல் வாழ்க்கையையே பிரதானமாகக் கருதி
3.ஆன்மாவை உயர்த்தும் அறிவின் ஆற்றல் குறைவுபட்டு
4.மனிதனின் எண்ணமே மீளாப் பிடிக்குள் ஆட்பட்டு
5.மீளும் வழி அறியும் செயலையே அறிய முடியாத காலங்களில் எல்லாம்
6.மனித குலம் காக்கப்பட அவதார புருஷர்கள் அவதரித்த பூமி தான் நாம் வாழும் இந்தப் பூமி.
மனிதன் தன்னிலை உயர்த்துவதற்காக என்று… அன்று மகான்களால் காட்டப்பட்ட நெறி முறைகளையும் சுட்டிக் காட்டப்பட்ட அறிவின் ஆற்றல்களையும்… அந்த மகான்களுக்குப் பின் வழி வந்த சீடர்கள் மதம் என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு விட்டார்கள்.
1.நாபிமனு முதல் வர்த்தமான மகாவீரர் வரை என்று சொல்லும் வரைமுறைகள் (பாரம்பரியம்) எல்லாம் எதற்கப்பா..?
2.வரையறையின்றிக் காட்டுவதே மதங்களின் பிடியில் அகப்படச் செய்வதற்குத்தானா…?
3.அந்த வரைமுறையை இன்று காட்டுபவன் அன்றைய நிலையைச் சிந்தித்தானா..?
மனித வாழ்க்கை மேம்பட வேண்டும் என்று சிந்தித்த நாபிமனு அதைச் செயல்படுத்த முனைந்து…
1.ஞானப் பாதையை காட்டிய ரிஷப தேவர் (ஆதிநாதர்) வழியில் வந்த
2.தம் ஆன்மாவைப் பிறவிக் கடலிலிருந்து கரையேற்றிக் கொண்ட எத்தனையோ மகான்கள்…
3.ஜீவ காருண்யம் நல்லொழுக்கம் நற்செயல் என்று போதித்த வழி முறைகள் எல்லாம்
4.“மதம் கொண்ட…!” மதத்தினை வளர்க்கத்தானா…?
வர்த்தமானர் பெற்றதும் ஓர் நல் நிலை தான்…! அவர் தனக்குத் தானே ஏற்படுத்திக் கொண்ட கடமை.. விதி… சரீரம் தொட்டுச் செயல்படுத்த முனையும் வாய்ப்பு… இன்றைய பரபரப்பான உலகியல் வாழ்க்கை நெறியில் இல்லையப்பா…!
1.சன்னியாசிக்கு என்று ஒரு வழி முறையும்
2.சம்சாரிக்கு என்று ஒரு வழி முறையும் அன்று காட்டியவற்றில்
3.உணர்ந்து கொண்டார்களா அனைத்தையும்…? அவைகளிலும் மாற்றம் ஏற்பட்டு விட்டது.
வர்த்தமானன் கடவுளையா சொன்னான்..? இல்லயே…! மதம் என்ற பெயர்படுத்த மனித ஆத்மாவின் வளர்ச்சியை அல்லவோ கூறினான்.
நாம் சுட்டிக் காட்டும் இந்தத் தியானத்தின் வழி முறையில் காக்கப்பட வேண்டியது ஆன்மா தான் என்று கூறினாலும் காக்கப்பட வேண்டியது சரீரமும் தான்,
அன்று சமுதாய அமைப்பில் மனித இனத்தின் எண்ணிக்கை குறைவுபட்ட காலச் சூழலில்… மகான்கள் நடைமுறைக்குக் காட்டிய செயல்களைச் செயல் முறைக்குக் கொண்டு வரும் வழி வகைகள் இருந்தன.
ஆனால் இந்தக் கலியில் உடலை வருத்திடும் செயல்கள் தேவை தானா…?
உன் கண்ணிலிருந்து நீர் வழிகின்றது. மனம் வேதனைச் சூழலில் ஆட்படுகின்றது, மனம் சங்கட அலைகளில் சிக்குண்டிருக்கும் பொழுது ஆத்மா வேதனையுறாவிட்டால் உடல் வருந்திட நீர் வரக் காரணம் என்ன..? துக்கம் சந்தோஷம் அனைத்துமே ஆன்மாவில் பதிவு நிலைகள் தான்.
1.மனித மன நடை முறைச் செயலுக்கு
2.நல் வாழ்வு நற்கதிக்கு இதை விட வேறு ஆக்கமில்லை என்ற நிலையில்
3.இந்தத் தியான வழி கொண்டு உண்மையை உன்னுள்ளே ஊன்றிப் பார்.
வாழ்க்கையில் நேரும் சந்தர்ப்பங்களை எல்லாம் நல்லதற்காகப் பயன்படுத்தப்படும் பொழுது அதிலே நிறைவு காணும் மனம் பெற்று விட்டால் தன் ஆன்மாவை உயர்த்தும் மெய் வழியை நிச்சயம் ஒவ்வொருவரும் உணரலாம்.

உச்சியில் ஏற்றும் அண்ணாமலையார் தீபம்
என்னை வேதனப்படுத்தினான்… துன்பப்படுத்தினான்… என்று ஒரு புறம் நாம் மற்றவர்களை எண்ணினாலும் அன்புடன் பாசத்துடன் ஒருவருடன் பழக்கப்படும் பொழுது “அவர் நோயால் வேதனைப்படுகின்றார்…” என்றால் அந்த வேதனையை நாம் நுகர்ந்தால் வாலியாகி விடுகின்றது.
அந்தச் சமயத்தில் நமக்குள் இருள் தான் சூழ்கிறதே தவிர நல்லதை எண்ண முடியவில்லை. இந்த நஞ்சின் தன்மை நமக்குள் ஆன பின் உணர்வின் ஒளியின் (வெளிச்சத்தை) நிலையை நாம் காணும் நிலைகள் மறைக்கப்படுகின்றது.
1.இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் எதைப் பெற வேண்டும்…?
2.எந்த வழியில் நாம் வாழ வேண்டும்…?
3.எதன் வழிகளில் இந்த வாழ்க்கை வழி நடத்த வேண்டும்…? என்ற நிலையைத் தெளிவுபடுத்தும் நன்னாள் தான் திரு அண்ணாமலை தீபம்.
நாங்கள் பார்க்கும் அனைவரும் நலம் பெறவேண்டும் என்று நம் உயிரின் தன்மை கொண்டு வேண்டும் போதெல்லாம் மலையின் உச்சியில்… அதாவது உடலின் உச்சியில்… உயிரான அண்ணாமலையிடம் தான் வேண்டுகின்றோம். அவன் புருவ மத்தியில் தான் அமைந்துள்ளான்.
ஆகவே இந்த உணர்வின் தன்மை கொண்டு நாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்றும் நாம் பார்ப்போர் அனைவரும் அந்த நிலை பெற வேண்டும் என்றும்
1.நம் நினைவாற்றலை இங்கே கொடுக்கப்படும் போது
2.நமக்குள் பகைமையூட்டும் உணர்வின் தன்மைகளை அது மறைத்து விடுகின்றது… அதை அடக்கிவிடுகிறது.
3.இப்படித்தான் நமக்குள் ஒளியின் சுடராக… வளர்க்கும் ஜோதியாக… நாம் தீபமாக முடியும்.
ஆனால் அங்கே (உச்சியிலே) வெறும் ஜோதியைப் பார்த்து அருள் ஒளியாக நாம் மாற முடியாது…!
ஆகவே அனைவரது குடும்பங்களிலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்… அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும்… வைரத்தைப் போன்று அவர்கள் வாழ்க்கை ஜொலிக்க வேண்டும்… வைரத்தைப் போன்று அவர் செயல்கள் ஜொலிக்க வேண்டும்… வைரத்தைப் போன்று அவர்கள் எண்ணம் ஜொலிக்க வேண்டும்… அவர்கள் சொல்லில் இனிமை பெற வேண்டும்… என்று
1.அனைவருக்காகவும் நாம் இப்படி எண்ணும் போது
2.;அனைவரின் உணர்வுகளையும் நமக்குள் ஒன்றாக ஒளியாக இணைத்துக் கொள்கின்றோம்.
சாதாரணமாக காரம் உப்பு கசப்பு துவர்ப்பு இவை எல்லாமே ஒன்றுக்கொன்று மாறுபட்ட சுவைகள் தான் ஆனால் அதே சமயத்தில் சாதமோ ஒன்றாக வெண்மையாக இருக்கின்றது.
மாறுபட்ட சுவை கொண்ட பலசரக்குகளை ஒன்றாக இணைத்து அவைகளைச் சுவையின் உணர்ச்சியாகத் தூண்டி சப்… என்று இருக்கும் பொருளுடன் கலக்கப்படும் போது அது உணர்ச்சியின் தன்மை கொண்டு நாம் உணவாக ஏற்றுக் கொள்ளும் தன்மை வருகின்றது.
இதைப் போன்று தான்…
1.நம் வாழ்க்கையில் பிறருடைய தீமையின் உணர்வுகள் நமக்குள் வந்தாலும்
2.அந்த அருள் ஒளியின் சுடரைக் கொண்டு பகைமை உணர்வை மாற்றி
3.நமக்குள் சுவை கொண்ட உணர்வாக மாற்றியமைத்தல் வேண்டும்.
இவை அனைத்தும் ஒருங்கிணைந்து உணர்வின் தன்மை நம் உடலுக்குள் பரப்பப்படும் பொழுது… உடலில் உள்ள முந்திய நிலைகள் பகைமை உணர்ச்சிகளைத் தூண்டும் அந்த அணுக்களை… நமக்குள் நோயாக மாற்றி நல்ல அணுக்களைச் செயலற்றதாக ஆக்கும் அத்தகைய நிலைகளிலிருந்து மாற்றிட முடியும். அத்தகைய நன்னாள் தான் கார்த்திகை தீபம்.
ஏனென்றால் ஒருவருக்கொருவர் கலந்த நிலையில் அது பகைமை ஊட்டும் உணர்வின் அணுக்களாக விளைந்ததனால் தான் நமக்கும் நோய் வருகிறது.
இதை போன்று நீங்கள் ஒவ்வொருவரும் நாம் பார்த்த அனைவரும் அவர்கள் வாழ்க்கையில் வைரத்தைப் போன்று ஜொலிக்க வேண்டும் என்ற எண்ணங்களைச் சொன்னால் போதும்…!
1.அவர்கள் வாழ்க்கையில் வைரத்தைப் போல ஜொலிக்க வேண்டும்… அவர்கள் செயலும் ஜொலிக்க வேண்டும்…
2.மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் வாழ்க்கை ஜொலிக்க வேண்டும்
3.எங்கள் செயல் ஜொலிக்க வேண்டும் சொல் ஜொலிக்க வேண்டும்
4.எங்கள் சொல்லைக் கேட்போர் ஜொலிக்க வேண்டும் என்று இந்த உணர்வினைக் கலந்து பாருங்கள்..
வாலி என்ற வேதனைப்படுத்தும் இந்த விஷத் தன்மை கொண்ட உணர்வுகள் தான் உங்கள் உடலில் உள்ள நல்ல அணுக்களை அழிக்கின்றது… நல்ல செயலையும் ஓடுக்கின்றது.
ஆனால் மேலே சொன்னபடி அனைவரது வாழ்க்கையிலும் ஜொலிக்கும் தன்மை பெற வேண்டும் என்று எண்ணப்படும் பொழுது அந்த வாலியை நாம் நேரடியாகப் பார்ப்பதில்லை.
அருள் ஒளியின் உணர்வை நீங்கள் பெற வேண்டும் என்று எண்ணும் பொழுதும்… அனைவரும் ஜொலிப்பின் தன்மை பெற வேண்டும் என்று எண்ணும் பொழுதும்… அதே சமயத்தில் அவர்கள் உடலிலிருந்து வெளிப்படும் இதே உணர்வுகள் அவர்களும் இதைப் போல அருள் ஒளியின் சுடரை எண்ணும் போது நமக்குள் அறியாது வரும் நோயைத் துரித நிலைகள் கொண்டு மாற்றும்.
1.ஏனென்றால் தீமைகளை நாம் நேரடியாகப் பார்ப்பதில்லை
2.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுடன் எண்ணும் பொழுது எல்லாம் சரியாக இருக்கும்…!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
பிறருக்கு உதவி செய்பவர்களுக்கு வரும் சிக்கல்கள்:
உயர்ந்த மனிதர்களாக இருப்பார்கள். எல்லாருக்கும் உதவியும் செய்திருப்பார்கள். ஆனால் உதவி பெற்றவர் இறந்து விட்டால் “நான் உதவி செய்தேன்… அவர் இறந்துவிட்டாரே…!” என்று எண்ணுவார்கள்.
அதே சமயத்தில் உதவி பெற்றவரோ இறக்கும் பொழுது “மகராசன்…! தக்க சமயத்தில் எனக்கு உதவி செய்தார்… நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்…! என்ற எண்ணத்தில் ஆன்மா பிரிந்து விட்டால் உதவி செய்தவரின் உடலுக்குள்ளே நேராக வந்து விடுகிறது.
ஆனால் உதவி செய்தவர் தப்பு செய்யவில்லை. உதவி தான் செய்தார். அப்படி உதவிகள் செய்தாலும் பிறிதொரு ஆன்மா உடலுக்குள் வராது தடுக்க வேண்டும்.
வேதனை என்பது விஷம். அவர் வேதனையான உணர்வை நாம் எடுத்துக் கொண்டு உதவி செய்தோம் என்றால் அந்த நிலை ஆகிவிடும்.
ஆனால் அதை அடக்கியவன் மகரிஷி. அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி இதைச் சொல்லித் தான் அடுத்தவர்களுக்கு நாம் உதவி செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும்.
துருவ மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். அவர் உடலில் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். அவர் குடும்பங்கள் நலம் பெற வேண்டும். அவர் உடல் நலம் பெற வேண்டும் என்று சொல்லி மற்றவர்களுக்கு உதவி செய்தால் அவர்கள் உணர்வு நமக்குள் வராது.


துன்பங்களைப் பெரிதாக எண்ண வேண்டியதில்லை… சகலத்திற்கும் தீர்வு உண்டு – ஈஸ்வரபட்டர்
மனித குல மேன்மையின் சிறப்புக்கு வழி காட்டிய மகான்கள் பலரும் உண்டு.
மனிதர்கள் வாழும் வாழ்க்கை நெறி முறைக்கு அன்பின் வழியாக ஜீவகாருண்யத்தையும் இல்வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க நெறியும் நல் நடத்தையும் பல வகைகளிலும் எடுத்துக் காட்டியுள்ளார்கள்.
அதைச் செவ்வெனச் செய்யத் தியான முறைகளையும் அதன் மூலம் தெளிந்து கையாள வேண்டிய வழி வகைகள் இன்னென்னெது தான்…! என்று
1.தன்னைத் தான் உணரும் பக்குவத்திற்கு
2.இவைகளே ஏணியாக நின்று உயிரான்மாவின் சக்தியை உயர்த்தும் என்ற போதனா முறைகளையும் கொடுத்தார்கள்.
ஆனால் தன் வாழ்க்கையையே தியானமாக்கும் நிலைக்கு அந்த எண்ண வலுவை கூட்டிக் கொள்ளும் ஆத்மாக்கள் எத்தனை பேர்களப்பா…?
உலக வாழ்க்கை நடைமுறை இல்லற நெறிகளில் வாழ்ந்திடுபவர்கள் “தன்னைத் தாக்கிடும்…” எதிர் மோதல்களையே எண்ணி… தனக்குள்ளேயே குமைந்து கொண்டிருந்தால் வரும் துன்பங்கள் விலகிவிடுமாப்பா…?
1.வாழ்க்கைத் துன்பங்களிலிருந்து மீளவே “தியானம்…!” என்பதை உணர்ந்து கொண்டு
2.நன் நெறிகளைக் கடைப்பிடிப்போன் – வரும் துன்பங்களைப் பெரிதாக எண்ணிடாமல்
3.அவைகளை விலக்கித் தன் ஆத்மாவையும் காத்துக் கொண்டு
4.வாழ்க்கைச் சுவைதனைச் சுவைத்து வாழும் வாழ்க்கையில் முழுமையை (பேரானந்தத்தை) அடைகின்றான்.
அப்படி இல்லாது துன்பங்களை எண்ணிக் கலக்கமுறும் செயலால் உயிரையே மாய்த்திட வேண்டும் என்ற தற்கொலையின் எண்ணச் செயலில் எதை உன்னால் அளித்திட முடிந்திடும்…?
1.ஒன்றிலிருந்து ஒன்று இயற்கையின் வளர்ச்சியில்
2.ஒன்று தன் செயலில் மற்றொன்றாக உருவெடுக்குமே அல்லாது
3.எதை அழித்திட முடியும்…?
நீ எடுத்த துக்க அலைகள் உன் உடலுக்குள் வலுவாக வீரியமாகச் செயல் கொண்டு ஆவிகளின் பிடியில் (இறந்த மனிதர்கள்) சிக்குண்டு அல்லலுறும் நிலையே வேண்டாமப்பா…!
1.சகலத்திற்குமே தீர்வு உண்டு…!
2.வாழ்க்கைத் துன்பங்களிலிருந்து மீளவே இந்த முறைகளை உணர்த்துகின்றோம்.
மகான்கள் அளித்திட்ட நல் நிலையான அந்தப் பேறுகளைக் கடைப்பிடித்து ஒழுக்கத்தின் வழியில் நின்று அன்பு கொண்ட வாழ்க்கை வாழ வேண்டும் என்ற வைராக்கியமான சிந்தனையைக் கொண்டால் தான் ஆக்கம் அளிக்கும்.
மகாவீரர் காட்டிய உயிரின் பரி நிர்வாண நிலை என்ன…?
உலக பேராசைகள் என்ற மாயப் பிடிப்பில் இருந்து விடுபட்டு உயிராத்மாவின் சக்தியை வலுக்கூட்டி வைராக்கிய சிந்தனையை வலுக்கூட்டவும் ஜீவகாருண்ய வழியில் ஒழுகும் முறை ஏற்படுத்திக் கொண்டதும் “தன் உயிராத்மாவின் சக்தியை உயர்த்தவே…!”
1.மகாவீரர் பட்டினி கிடந்தது
2.தன் ஆத்மாவில் எத்தகைய தீதும் சேராது… எண்ணம் கடந்த செயல் நிலையே.
ஆனால் இந்தக் கலியில் புறச் செயல்களின் (வேலைப் பளு) ஆதிக்கம் மிகுந்துள்ள சூழலில் உடலை வருத்திடும் செயலில் (விரதம்… நேர்த்திக் கடன்) எண்ணம் கூடி விட்டால் நல் ஆக்கம் பெறுவதில் தேக்கம் தான்.
மனிதச் சரீர உடல் உறுப்புக்கள் இல்லற ஒழுக்க நெறியில் கடமைகளும் ஆற்றிடச் செயல் கொள்ளும் பொழுது
1.உடல் உழைப்பு கொள்ளும் பொழுது
2.அந்தச் சரீரத்தில் குறைவுபட்ட சக்தியின் சேமிப்பிற்கு ஆகாரமும் தேவைதான்.
3.நாவின் சுவைக்காக அல்ல…!
ஆகாரம் புசித்தலில் அதிக அளவும் விஷம் தான். ஆகவே ஆகாரத்தை அமுதமாக உட்கொண்டே நல் நிலை பெற்றிடுங்கள்.
“காற்றிலிருந்து ஆகாரம் பெற்றிடும் செயலுக்கு…” ஆத்ம வலு கூட்டிக் கொள்ளும் முறையும்… யாம் காட்டிடும் தியான வழியில் வழி உண்டு…!

தீமைகளை நேர்முகமாக எதிர்த்து மாற்ற முடியாது… மறைந்திருந்து தான் மாற்ற வேண்டும்
1.இந்த உலகில் எத்தனையோ பேரை நாம் சந்தித்திருந்தாலும்
2.அதன் வழி அவர்கள் உணர்வை நுகர்ந்தறிந்தாலும்
3.நுகர்ந்த உணர்வை நம் உயிர் அணுவாக மாற்றி நம் உடலுக்குள் இணைத்து விடுகின்றது.
4.அதிலே தீங்கு விளைவிக்கும் நிலையாக இருந்தால்
5.அந்தத் தீமை செய்யும் அணுக்களிலிருந்து நாம் விடுபட்டே ஆகவேண்டும்.
அதைத் தான் வாலி என்று சொல்வது.
இப்படி அனைவரின் உணர்வுகளும் நமக்குள் வரப்படும் போது நம்மை அறியாது விளையும் அந்த அணுக்களை அருள் மகரிஷிகளின் உணர்வக் கொண்டு அந்த இருளை அகற்றிடும் சக்தியாக அந்த வாலியை வென்றிடும் தன்மை பெற வேண்டும்.
ஏனென்றால் “ஒரு நோயாளியின் உணர்வை” மீண்டும் மீண்டும் பதிவாக்கிக் கொண்டால்… அல்லது “ஒருவன் எனக்குத் தீமை செய்தான்…” என்று அவனை அடிக்கடி நினைவு கொண்டால் அது வாலியாகின்றது…! நம் நல்ல உணர்வின் வலுவைச் சரி பகுதி அது எடுத்துக் கொள்கிறது. அதனால் வேதனப்படுகிறோம் அல்லது ஆத்திரப்படுகின்றோம்.
இந்த வகையில் பிறருடைய எண்ணங்களை நாம் நேரடியாக எண்ணப்படும் பொழுது அந்த உணர்வு வருகின்றது. தீமையோ கஷ்டமோ தொழிலில் நஷ்டமோ உடல் நோயோ நாம் எடுத்துக் கொண்ட நிலைகள் இப்படி எத்தனையோ வருகிறது.
இதை எல்லாம் மாற்றியமைக்க வேண்டும் என்றால் அடுத்த கணமே நம் நினைவினை வானை நோக்கிச் செலுத்தி… அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி… இருளை அகற்றிய அருள் ஒளியை நாம் நுகர்ந்து நம் உடலுக்குள் சேர்க்க வேண்டும்.
1.வாலியை இராமன் நேரடியாகப் பார்க்கவில்லை…
2.மறைந்திருந்தே வாலியைத் தாக்கினான் என்று இராமாயணத்தில் இதைக் காட்டுகின்றார்கள்.
மறைந்திருந்து என்றால் அருள் மகரிஷிகளின் ஒளியை நமக்குள் சேர்த்து அந்தத் தீமை செய்யும் உணர்வை… அந்த வாலியை நாம் வலுவிழக்கச் செய்ய வேண்டும்.
இராமன் என்றால் எண்ணம். நாம் எடுக்கும் எண்ணங்கள் அந்தச் சுவையின் உணர்வு எதுவோ உயிரிலே பட்ட பின் உணர்வின் ஒலியாக பல பல எண்ணங்கள் நமக்குள் வருவதும்… அதற்குத்தக்க இந்த உணர்ச்சிகள் நம் உடலை இயக்குவதும்… எந்தெந்த உணர்வை எடுக்கின்றோமோ அவை ஒன்றுடன் ஒன்று கலக்கப்படும் பொழுது நல்ல குணங்களை மாற்றுகின்றது.
சாயப் பட்டறைகளை எடுத்துக் கொண்டால் பல கலவைகளை (நிறங்கள்) உருவாக்கப்படும் பொழுது அதனதன் சக்திகளை இழக்கின்றது. எதனின் உணர்வு மாறுகின்றதோ அந்த நிறமாக மாறுகின்றது.
சமையல் செய்யும் போது சுவையாகச் செய்ய வேண்டும் என்றால் அதிலே பல சரக்குகளைப் போடுகின்றோம். அது ஒவ்வொன்றும் பல பல சுவை கொண்டது… தனியாகச் சாப்பிட்டால் பல உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது. இருந்தாலும் அந்த உணர்வுகளை எல்லாம் சமப்படுத்தித் தான் சுவை மிக்கதாக உருமாற்றுகின்றோம்.
இதைப் போல் தான்…
1.நமக்குள் பலருடைய எண்ணங்களும் குவிந்திருப்பினும்
2.அதனதன் எண்ணத்தை உருவாக்கும் அணுக்கள் நமக்குள் உருவாகி இருந்தாலும்
3.அருள் ஒளிச் சுடர் கொண்ட அருள் ஞானத்தின் நிலையை நமக்குள் எடுத்து
4.அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை அனைவரும் பெறவேண்டும் என்ற உணர்வைக் கலந்து விட்டால்
5.நமக்குள் தீமை செய்யும் உணர்வின் அணுக்கள் பலவீனம் அடைகின்றது.
அப்பொழுது அது வாலி என்ற நிலைகளை வீழ்த்துகின்றது. இதைத் தான் இராமன் மறைந்திருந்து வாலியை வீழ்த்தினான் என்று சொல்கிறார்கள்.
ஆனால் இராமாயணக் காவியங்களைப் பார்க்கப்படும் போது இராமன் கடவுள் என்றால்… அவன் ஏன் வாலியை மறைந்திருந்து தாக்க வேண்டும்…? என்று சில படித்த வர்க்கத்தினர் வாதம் செய்கிறார்கள்.
ஏனென்றால் தீமை செய்யும் உணர்வை நேரடியாகப் பார்க்கும் பொழுது அந்தத் தீமையின் உணர்ச்சிகள் தான் நமக்குள் தூண்டப்படுகின்றது.
ஆனால் அருள் ஒளி என்ற உணர்வை எடுக்கப்படும் பொழுது அதை மறைத்து விடுகின்றது. அதனின் செயலாக்கங்களைக் குறைத்துவிடுகின்றது.
ஆகவே
1.மனிதன் வாழ்க்கையில் எண்ணங்கள் எப்படி உருவாகின்றது…?
2.எது வலிமை பெறுகின்றது…? எதன் வலிமையில் மனிதன் இயங்குகின்றான்…?
3.மனிதன் என்ற நிலையில் எந்த வலிமை மனிதனை மாற்றுகின்றது…? என்பதை எல்லாம்
4.காவியத் தொகுப்பின் மூலம் தெளிவாக உணர்த்தியுள்ளனர் ஞானியர்.
குருநாதர் காட்டிய அருள் வழியில் நாம் பார்ப்போர் அனைவரும் என்னைப் பார்ப்போர் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று அந்தப் பேரானந்த நிலை பெற வேண்டும் என்ற உணர்வைத் துருவ தியானத்தில் அனுதினமும் எடுக்க வேண்டும். எடுத்தால் பிறரின் உணர்வுகள் நமக்குள் வாலியாக இயக்காது…!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
குருநாதர் எம்மைக் காட்டுக்குள் அழைத்துச் செல்லப்படும் பொழுது ஒரு கீரியும் நல்ல பாம்பும் போர் செய்து கொண்டிருக்கின்றது.
இது அதைத் தாக்க எண்ணுகின்றது. ஆனால், அது இதைத் தாக்க எண்ணுகின்றது.
பாம்பு சீறித் தாக்கினாலும் கீரி அதனிடம் சிக்குவதில்லை. கீரி தாவிச் சென்று அந்தப் பாம்பைத் தான் கவ்விப் பிடிக்க வேண்டும் என்று அதனின் விஷத்தன்மையைப் பாய்ச்சுகின்றது.
ஒரு மணி நேரம் போர் முறையாக இருக்கின்றது. நின்று பார்க்கும்படிச் சொல்கின்றார் குருநாதர். ஆனால், மனிதன் அருகே நிற்கின்றான்.., “தன்னைத் தாக்கிவிடுவான்” என்று இல்லை.
“எதிரியை வீழ்த்திவிட வேண்டும்..,” என்ற உணர்வுகளில் தான் இரண்டும் போர் செய்கின்றது.
அங்கே நின்று வேடிக்கை பார்க்கின்றேன். பாம்பு மனிதனைக் கண்டால் சீறித் தாக்கும் அல்லவா..,? இல்லை. எதனின் நிலைகளில் தன் எதிரியைத் தாக்க வேண்டும் என்று இருக்கின்றதோ அதிலேயே தான் இருக்கின்றது.
“அருகில் சென்று நில்..,” என்கிறார் குருநாதர். அதனுடைய போர் முறையில் தான் இருக்குமே தவிர உன்னைத் தாக்காது.., என்று அருகில் சென்றே பார்க்கும்படி செய்கின்றார் குருநாதர்.
போர் செய்யும் பொழுது தவறி அந்தப் பாம்பின் விஷத்தன்மை கீரியின் உடலில் தாக்கிவிடுகின்றது.
விஷத்தின் தன்மை ஆனபின்.., “கிறு..கிறு..,” என்று சுழல்கின்றது.
சுழன்று சுற்றி வரப்படும் பொழுது விஷத்திலிருந்து விடுபடும் அந்த மணத்தை எப்படி நுகர்கின்றது? என்று உணர்த்துகின்றார் குரு.
அந்த மணத்தை நுகரப்படும் பொழுது விஷத்தை முறிக்கும் தாவர இனங்கள் இருக்கும் பக்கம் இருக்கும் அந்தத் திசையை நோக்கிப் போகின்றது.
கீரியின் மேல் விஷம் தாக்கப்பட்ட பின்.., “முதலில் முடியாது” இருக்கின்றது. அந்த மணத்தை நுகர்ந்து.., “போகப் போக.., வேகம்..,” அதிகமாகின்றது.
அதைப் பின் தொடர்ந்து “போய்ப் பார்..,” என்று சொன்னார் குருநாதர்.
கீரியின் பின்னால் நான் சென்றேன்.
முதலில் மெதுவாகப் போனது. அந்தச் செடியின் அருகிலே செல்லும் பொழுது ரொம்பவும் வேகமாகப் போனது. போய் அந்தச் செடியின் மீது பிரள்கின்றது.
பிரன்டபின் அதற்குள் இருக்கும் நஞ்சின் உணர்வுகள் மாறுகின்றது. நான் கீரி எந்தச் செடியின் மீது பிரள்கின்றது என்று பார்ப்பதற்கு முன்னாடி “திருப்பி ஓடி வருகின்றது”.
ஓடி வந்த பின் மீண்டும் அந்தப் பாம்பைத் துரத்தி இரண்டும் சண்டையிடுகின்றது. பழி தீர்க்கும் உணர்வாக அது செயல்படுத்துகின்றது. பாம்பை இரண்டாகக் கத்திரித்து விட்டது.
பாம்பு சீறித் தாக்கினாலும் எப்படித் தன்னைப் பாதுகாத்து இந்த உயிரினங்கள் எப்படி உருவாகின்றது? அதிலிருந்து ஒவ்வொன்றும் எப்படி படிப்படியாகத் தன் வளர்ச்சியில் வருகின்றது? விஷத்தை முறிக்கும் அந்த ஞானம் எப்படி வந்தது? இதைக் காட்டுகின்றார் குருநாதர்.
அந்த விஷத்தின் தன்மை அதன் உணர்வுக்குள் பட்டபின் அதிலிருந்து தப்பிக்கும் அந்த உணர்வின் ஞானம் கீரிக்கு வருகின்றது.
இப்படித்தான் ஒவ்வொன்றிலும் ஒவ்வொன்றும் நுகர்ந்து கொண்ட பின் தீமைகளைப் போக்கி தீமைகளிலிருந்து விடுபடும் உணர்வுகள் வளர்ந்து வளர்ந்து “இன்று நம்மை மனிதனாக உருவாக்கியது..,” என்பதை அங்கே காட்டுகின்றார் குருநாதர்.
அதே சமயத்தில் இத்தகையை விஷத் தன்மை கொண்ட நிலைகளிலிருந்து மீட்டிடும் உணர்வுகள் அதனுடன் இணைந்து அத்தகைய “விஷத்தை முறித்திடும் தாவர இனங்கள்.., எப்படி உருவானது..,?” என்ற நிலையையும் காட்டுகின்றார்.
குருநாதர் அனுபவபூர்வமாகக் காட்டி இப்படி அறிந்து வந்த உண்மையைத்தான் உங்களுக்குள்ளும் இதை உருவாக்குகின்றோம்.
சந்தர்ப்பத்தில் நீங்கள் செல்லப்படும் பொழுது மணத்தால் நுகர்ந்து இந்தச் செடியின் தன்மையை அறியும் பருவம் உங்களுக்குள்ளும் வரும்.
இதைப் போல உணர்வுகளை நீங்கள் தெரிந்து கொள்ளும் ஆற்றல் உங்களுக்குள் பெருகும். நீங்கள் வைத்தியமாகவும் பார்க்கலாம்.
இப்பொழுது உபதேச வாயிலாக உங்களுக்குள் பதிவான பின் இந்த உணர்வின் தன்மையை நுகர்ந்து நீங்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை இணைத்துப் பெருக்கிக் கொள்ளுங்கள்.
பெருக்கிக் கொண்டால் ஒரு விஷத் தன்மை கொண்ட உணர்வுகளை “உங்கள் பார்வையால் அது போக வேண்டும்..,” என்றால் அந்த விஷத்தின் தன்மை இறங்குவதையும் பார்க்கலாம்.
அதே சமயத்தில் நீங்கள் நண்பர்களுக்குள் பழகுகின்றீர்கள். “வெகு தொலைவில்..,” இருந்தாலும் நண்பருக்கு நோய் என்று சொன்னால் அந்த நோய் நீங்க வேண்டும் என்று “உணர்வைச் செலுத்தினால்” அங்கே விஷத்தன்மைகள் குறைவதைப் பார்க்கலாம்.
இதைப் பரீட்சித்துப் பாருங்கள்.
உங்களுக்குள் இதனின் ஞானத்தின் வழி கொண்டு “தீமைகளை அடக்கிடும்.., தீமைகளைப் போக்கிடும்.., மெய்ப்பொருளை உணர்ந்திடும் அந்த ஆற்றலை..,” உங்களுக்குள் பெருக்க முடியும்.
உங்களை நம்புங்கள்.
சாமியை நம்புகின்றோம் சாமியாரை நம்புகின்றோம். ஜோசியத்தை நம்புகின்றோம் மந்திரத்தை நம்புகின்றோம் நல்ல நேரம் வருகின்றதா..,? கெட்ட நேரம் வருகின்றதா..,? ஜாதகம் பார்த்துத் திருப்பூடுகின்றோம்.
ஆக, ஜாதகம் பார்த்துத் திருமணம் செய்த எத்தனை பேர் ஒன்றி வாழ்கின்றனர்..,? எத்தனை பேர் மரணமடைகின்றனர்?
சாமிக்கு அபிஷேகமும் ஆராதனையும் அதே சமயத்தில் பாவத்தைப் போக்க எத்தனையோ யாகங்களைச் செய்கின்றார்கள். அவர்கள் எல்லாம் மடியாமல் இருக்கின்றார்களா..,?
துன்பங்கள் போய்விட்டதா.,? சற்றுச் சிந்தியுங்கள்.
ஆக, நம் எண்ணங்கள் எங்கெங்கோ செல்கின்றது? இந்த உடலில் இச்சைக்குத்தான் நாம் செயலாக்கிக் கொண்டுள்ளோம்.
துன்பம் வரும் பொழுதெல்லாம் உபதேச வாயிலாகக் கேட்டுணர்ந்த உணர்வுகள் கொண்டு உங்கள் எண்ணத்தை “விண்ணிலே செலுத்துங்கள்”.
அந்த மகரிஷிகளின் ஆற்றலை நுகருங்கள். துன்பங்கள் புகாது தடுத்துக் கொள்ளுங்கள். அதன் வலிமையைக் குறைக்கச் செய்யுங்கள்.
வலிமையைப் பேருக்கிய அந்த அணுவின் தன்மை வளரத் தொடங்கினால் நாளடைவில் தீமைகள் வந்தால் அந்த விஷத் தன்மைகளை வலுவிழக்கச் செய்யும்.
நம் உடல் எவ்வாறு உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்துள்ள நஞ்சினை மலமாக மாற்றுகின்றதோ அதைப் போல நஞ்சின் தன்மை மாற்றி உணர்வினை ஒளியாக மாற்றும் ஆற்றலை நீங்கள் பெறவேண்டும்.
அதை “எல்லோரும் பெறுவீர்கள்…” என்ற நம்பிக்கையில் தான் இதைப் பாய்ச்சுகின்றேன். குரு அருளைத் திரு அருளாக மாற்றி “அனைவரும் அருள் பெறும் மக்களாக” நீங்கள் உருவாக வேண்டும்.


உயிருடன் ஒன்றும் தியானமே உண்மையான சரணம் என்று உணர்த்தியவரே “காண்டீப முனிவர்…” என்ற ஐயப்பன் – ஈஸ்வரபட்டர்
விண்ணிலே தோன்றும் உயிர்த் தன்மை அணுக்களாகப் புவிக்குள் வந்து உடல் பெற்றாலும் இந்தச் சரீர வாழ்க்கையில் மெய்யை உணரத் தலைப்பட்டால்
1.தன்னுள்ளே ஒளி நாதத்தைக் கூட்டி ஒளியாகக் கலக்க
2.ஒலி நாத வித்துக்களே தேவை.
ஒலி நாத வித்துக்களைப் பெறும் வழியை அறிந்து… அதன் வழி நடந்து… அதற்குரிய இடம் சேரும் தன்மைகளில் வீரியத்தைக் கூட்டித்
1.தனக்குகந்த ஒலி நாதத்தைத் தானே ஈர்த்துத் தேடிக் கொள்ளும்
2.அந்த ஒலி நாதத்தைப் பெறும் அந்தந்த உயிர்த் தன்மை அணுக்களையும் தன் வழியில் வழி நடத்தி ஒலி நாத வித்துக்களாக மாற்றி
3.அதனதன் அமில குண நிலைக்கொப்ப வீரிய நிலை கொண்டு ஒளி நிலையாக
4.நட்சத்திரங்களாக கோளங்களாகப் படைக்கும் சக்தியை வளர்த்தால் அது ஆதி சக்தியின் சக்தியாக அந்தச் சக்தியில் தான் கலக்கும்.
இதன் உண்மை வழிதனில் செயல்பட்டுத் தனக்குகந்த அமில குண வழி வீரியம் கொண்டவரே “காண்டீப முனிவர் என்ற மகான்…!”
பௌருஷம் என்ற என்ற புருஷார்த்த தன்மை வீர குணமாகச் செயல் கொண்டாலும் கோப நிலையை வளர்த்துக் கொண்ட நிலையில் ஆத்மாவின் அமில முலாமாக வளர்த்த பிறகு அதன் வித்தியாசத்தை உணர்ந்து கொண்டார்.
கோபத்தை மாற்றிச் சமப்படுத்தும் “சாந்தமான வீர குணமே ஒளி நிலை பெறும் மார்க்கம்…!” என்றும் அந்த ரிஷிகளின் சக்தியில் தன்னைச் சேர்க்கும் என்றும் தெளிவாக உணர்ந்து கொண்டார் காண்டீபர்.
தாய் சக்தியின் கூட்டு அமில சக்தியோ அல்லது ரிஷி பத்தினி என்ற (மனைவி) சக்தியின் ஆத்ம கலப்போ தான் மாமகரிஷியாக நம்மை ஆக்கும் என்ற உண்மையை உணர்ந்தார்.
அதனின் உந்துதலாக மகரிஷி என்ற நிலையை அடைந்தே தீர வேண்டும் என்ற எண்ண உறுதியே பின் ஐயப்பனாக… ஐயப்ப முனிவராக…! வளர்ந்து அந்த ரிஷித் தன்மை அடையும் நிலை பெற்றுவிட்டார்.
அன்று காண்டீப முனிவராக இருந்து பெற்ற ஞானத்தின் தத்துவத்தில் தன் வளர்ப்பைத் தான் வளர்த்து அதற்காகக் கண்டு கொண்டதே சரணகோஷ நாதத்தின் ஒலி (சரணம் ஐயப்பா…!).
1.மனித உடலே ஒரு காண்டீபம்.
2.அதில் இயக்கும் சக்தியான உயிரே நான் (நாண்).
3.உயிர் இல்லை என்றால் உடல் ஏது..? இயக்கம் ஏது..? நான் ஏது..?
4.இந்தத் தத்துவத்தைக் காட்டி நான்(ண்) ஏற்றுதல் என்ற இணைப்புச் செயலில்
5.உயிருடன் ஆன்மாவைத் தொடர்புபடுத்தும் பக்குவத்தைக் காட்டினார் காண்டீப முனிவர்.
நான்.. நான்…! என்று எல்லோரும் சொல்கிறோம். அந்த நானே இந்த நாணிலிருந்து வந்தது தான். ஆனால் நான் என்று சொல்லி உள் நின்று இயக்கும் உயிரை மறந்த நிலையில் “உடலைத்தான் நான்…!” என்று நம்பி கடைசியில் உயிரையும் ஆன்மாவையும் அறியாது அதைக் காக்காது மீண்டும் மீண்டும் உடல் பெறும் நிலைக்கே இருளுக்குள் சென்று விடுகின்றோம்.
உயிரையும் ஆன்மாவையும் நெருங்கிச் சேர்த்து உயிரான்மாவை (தன்னை) மீட்டிடும் ஒலி நாத ஒளியாகக் காண்டீபம் என்ற கூட்டு இயக்கமாக வீரிய எண்ண உயர் நிலைக்குத் “தன்னைத் தயாராக்க வேண்டும்…” என்றார்.
1.உயிரினை மீட்டும் ஒலி நாதத்தையே “நாணின் ஒலி” என்றும்
2.அதையே உயிர் நாத கீதமாக்கி அந்த வழியின் தொடர்பில் தொடர்ந்து மீட்டும் பொழுது
3.எழும் ஒலி நாதம் “சரணம்…!” என்று உயிர்ப்பிப்பதாகக் கூறி
4.நம் உயிருடன் ஒன்றிடும் ஜெபத்தையே “சரணம்…” என்ற சரணாகதித் தத்துவத்தை வெளிக்காட்டினார் காண்டீப மகரிஷி.
ஐயப்பன் பெற்ற பேரின்ப இரகசியம் இந்த ஜோதித் தத்துவம் தான்.
அதாவது உடலில் உள்ள அத்தனை உயிரணுக்களையுமே ஒளி நிலைப்படுத்திச் சரீரத்தையே ஒளியாக்கி உயிர் ஆன்மக் கலப்பின் ஜோதி ஸ்வரூபமாக்கிக் கொண்டார் ஐயப்பன்.
தனக்குள் எப்படிப் பேரொளியாக மாற்றிக் கொண்டாரோ அந்த அத்தனை உயிரணுக்களையுமே
1.ஆத்ம பிம்ப ஒளிக் கதிர்களாகப் பிரித்து வானில் ஒன்றுபடுத்தி
2.தன் ஆத்ம ஜோதியை எல்லோருக்கும் காட்டினார் ஐயப்பன்
3.அந்த ஐயப்ப ஜோதியே நாம் காணும் “ஆகாய ஜோதி…!”

கண்ணன் கீதா உபதேசம் செய்கின்றான் என்று வியாசகர் சொன்னதன் மூலக் கருத்து என்ன…?
1.நம் கண்கள் எப்படி இயக்குகிறது…? என்ற நிலையும்
2.நாம் நுகர்ந்த உணர்வுகள் அணுக்களாக எப்படி உருவாகிறது…? என்றும்
3.உருவான அணு தன் உணர்ச்சிகளைத் தூண்டும் பொழுது உயிருக்கு எட்டி
4.உயிரின் தன்மை ஆணையிடும் போது சிறுமூளையின் பாகம் செல்லப்படும் பொழுது
5.உயிரிலே இந்த உணர்வின் ஒலிகளை எழுப்பி… கண்ணுக்கும் உடலுக்கும் செவிக்கும் நம் மனதிற்கும்
6.அதே உணர்வுகளை ஈர்த்து நமக்குள் எப்படி அறிவிக்கச் செய்கிறது…? என்ற நிலையை
7.வியாசகர் இதைத் தெளிவாக உணர்த்தி உள்ளார்.
மகாபாரதப் போர் என்றும் குருக்ஷேத்திரப் போர் என்றும் அந்த குருக்ஷேத்திரப் போரைக் கண்ணன் தான் வழி நடத்திச் செல்கின்றான் என்றும் காட்டியுள்ளார்.
ஒருவர் செய்யும் தீமையான உணர்வுகளை ஒரு தரம் நாம் உற்றுப் பார்த்து உணர்வின் தன்மையைப் பதிவாக்கி விட்டால் மீண்டும் அதனின் நினைவை எடுக்கப்படும் பொழுது… நம் உயிருடன் சேர்ந்து அந்த உணர்வுகள் சங்கநாதமாக அந்த ஒலிகளை எழுப்புகின்றது… குருக்ஷேத்திரப் போராகின்றது.
அதாவது கண்களால் அவர்களை நினைத்து நாம் சுவாசித்தபின்
1.உயிரிலே படும்பொழுது அந்த உணர்வுகளை இயக்குகின்றது.
2.ஒலி அலைகள் கிளம்பிய பின் நம்மைக் காத்திடும் உணர்வுகள் எழும்பி
3.நாம் எதை எண்ணினோமோ அந்த வலுவின் தன்மை கொண்டு எதிர்த்து உள்ளே போராடச் சென்று விடுகின்றது.
வேதனைப்படுத்தும் உணர்வுகளை நுகர்ந்து விட்டால் நம்மைப் பலவீனப்படுத்தச் செய்கின்றது. நம்முடைய செயல்களைச் சீராகச் செயல்படுத்த முடியாதபடி போகின்றது.
உதாரணமாக நம் பையன் மீது ஒரு கடுமையான வெறுப்பு வந்து விட்டால்… பையனுக்காக வேண்டி சேர்த்த சொத்தையும் அல்லது நாம் சேமித்து வைத்த சொத்தையும் கூட… அந்தப் பொருள்களை எல்லாம் எடுத்து அடித்து நொறுக்கும் உணர்வு தான் வரும்.
இந்த நொறுக்கும் உணர்வுகள் வரும் பொழுது நாம் எதை எண்ணினோமோ அதுவாகவே நாம் மாறுகிறோம். அதைத்தான் கீதையிலே கண்ணன் கூறுவது போன்று வியாசகர் அதைத் தெளிவாகச் சொல்கின்றார்.
வியாசகர் என்றால் அவன் மூடனாக இருக்கும் பொழுது
1.வியாபித்திருக்கும் உணர்வுகளை எல்லாம் தனக்குள் அந்த உணர்வின் தன்மையை அறிந்துணரும் சந்தர்ப்பம் பெற்றான்
2.அனைத்தையும் அறியும் நிலை வந்ததால் அவனுக்கு வியாசகன் என்று காரணப் பெயரை வைத்து அழைத்தார்கள் அக்காலங்களில்…!
பகவான்… தனக்குள் இருக்கும் எல்லாவற்றையும் அந்த உணர்வை நுகர்ந்தறிந்தான். அதைப் பரமாத்மா என்று ஒரு பெயரை வைத்தான் அதாவது தனக்கு முன் பரத்தில் (பரவி) இருக்கக்கூடிய ஆன்மாவைத் தனக்குள் எடுத்தான். அந்த உணர்வின் தன்மை வளர்த்தான் என்பதற்குத்தான் அவருக்கு வியாசக பகவான் என்று இப்படி ஒரு பெயரை வைத்தார்கள்.
1.இந்த மனித வாழ்க்கையில் நம்மையறியாமல் மறைமுகமாக எப்படித் தீங்குகள் விளைகின்றது…?
2.நம்மை அறியாது எப்படித் தீமைகளை விளைவிக்கச் செய்கின்றது…?
3.நம்மை அறியாமலே நமக்குள் உணர்ச்சிகள் எப்படி தோன்றுகின்றது…?
4.நம்மை அறியாமலே நமக்குள் ஏற்படும் இந்த உணர்ச்சிகள் நம் எதிரிக்கும் தூண்டப்பட்டு அந்த உணர்வுகள் என்ன செய்கிறது…? என்று உணர்த்தினார் வியாசகர்
உதாரணமாக ஒருவர் அடிக்கடி நமக்குத் தொந்தரவு செய்கிறார் என்று எண்ணினால் இந்த உணர்வுகள் நம் உடலுக்குள் அந்த உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது. அதே சமயத்தில் எதிரியினுடைய உடல்களிலும் இதே உணர்ச்சிகளைத் தூண்டுகிறது.
1.தொந்தரகாகும் போது நாம் வெறுக்கும் உணர்வுகளைத் தூண்டுகின்றோம்
2.அப்போது அந்த வெறுக்கும் உணர்ச்சிகளை அங்கேயும் தோற்றுவிக்கின்றது.
ஆக… நமக்குள் அந்த உணர்வு அது தன் உணவுக்கு அது போராடுகின்றது. அதே போல் அதனதன் உணவுக்கு அங்கேயும் (எதிரியிடமும்) போராடும்.
எதிரிகளை நமக்குள்ளும் வளர்க்கின்றோம்… அங்கேயும் எதிரிகளை வளர்க்கும் சக்தி வருகின்றது.
ஆனால் இதைத் தடைப்படுத்தும் உணர்வுகளை எடுத்து வளர்த்து… அந்தப் பகைமைகளை வென்றவன் துருவ மகரிஷி துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளான்.
துருவ நட்சத்திரமாக இருக்கும் அதிலிருந்து வெளிப்படும் உணர்வை சூரியனின் காந்த சக்தி கவர்ந்தது என்றால் நாரதன் என்று காரணப் பெயர் என்று வைக்கின்றார்கள்.
1.அந்த அலைகளை நாம் நுகர்வோம் என்றால் நமக்குள் அது நாரதனாக இயக்கத் தொடங்குகின்றது
2.நாரதராக நமக்குள் சென்றபின் நாம் எதைப் பிடிவாதமாக வைத்தோமோ அந்த உணர்வைத் தணிக்கச் செய்து விடுகின்றது.
நாம் யார் மேல் வெறுப்பு அடைந்தோமோ அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாம் பெற வேண்டும் என்ற உணர்வை வலுப்படுத்தி நம் கண்களை அங்கே செலுத்தப்படும் பொழுது
1.நமது கண்கள் நாரதனுக்குண்டான செயல்களை இங்கே (நமக்குள்ளும்) சொல்லி
2.இந்த உணர்வின் தன்மை கண் கொண்டு பாய்ச்சப்படும் பொழுது எதிரியின் உடலுக்குள்ளும் அந்த உணர்வின் தன்மை பாய்ந்து
3.அந்த நாரதன் வேலையைச் செய்வான்.
நம்முடைய உணர்வுகள் பகைமையாக்கும் உணர்வை மாற்றிடும் தன்மையாக இந்த அருள் ஞான உணர்வுகள் அங்கே ஊடுருவி… சற்று சிந்திக்கச் செய்யும் சக்தியாகவும் வருகின்றது.
அது தான் நாரதன் கண்ணனிடம் சென்றபின்…
1.இவர்கள் இரண்டு பேருடைய உணர்வுகளுக்கும்
2.இந்த கண்களுக்கும் நுகர்ந்த உணர்வுகளுக்கும் எவ்வாறு இயக்கச் செய்கிறது…? ஒன்று சேர்ந்து வாழச் செய்கிறது…? என்று
3.இவ்வளவு தெளிவாக வியாசகர் உணர்த்தி இருக்கிறார் என்ற நிலையை நாம் தெரிந்து கொண்டால் போதும்…!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
இன்றிருக்கக்கூடிய காற்று மண்டலத்தை..,
1.யார்.., எந்த நிலையில் நச்சுத் தன்மையாக ஆக்கியிருந்தாலும்..,
2.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் துணை கொண்டு துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் சேர்த்து
3.நம் உடலுக்குள் அருள் ஞானத்தை உருவாக்கும் சக்தி பெறுகின்றோம்.
4.அந்த நச்சுத் தன்மை நம்மைப் பாதிக்காது தப்ப முடியும்.
இந்தக் குறுகிய காலத்திற்குள் இந்த உடலில் இத்தகைய நிலையை உருவாக்கினால் என்றும் ஏகாந்த நிலை கல்கி ஒளியின் உடலாக மாற்றும்.
இதில் சிரமம் ஒன்றும் இல்லை. உங்களுக்குள் யாம் பதிவு செய்ததை எண்ணினால் காற்றிலிருந்து எளிதில் பெற முடியும்.
விஞ்ஞான அறிவு கொண்டு டி.வி க்களில் இன்னென்ன அலைவரிசை என்கிற பொழுது ஒவ்வொரு இடத்திலிருந்தும் வெளிப்படும் உணர்வைக் கவர்கின்றது.
இன்ன அலைவரிசை என்கிற பொழுது இந்த இடம்.., இந்த நாடு.., என்று அறிந்து அதை எடுத்துக் கொள்கிறோம்.
இதைப் போன்று தான் மக்கள் பேசும் தவறான உணர்வுகள் நமக்குள் பதிவு உண்டு அவர்களை எண்ணினால் அந்த அலை\வரிசைப்படி நமக்குள் கோபம் வரும்.., சங்கடம் வரும்.., வேதனை வரும்.
இத்தனையும் வருகின்றது.
ஆனால், “இத்தனை தீமைகளையும் நீக்கிய..,” உணர்வின் அறிவு கொண்ட அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நம் குருவின் துணை கொண்டு அதைக் கவர்ந்தால் “அந்த அலைவரிசை” நமக்குள் வந்து
1.தீமைகளை நீக்கும்.
2.சிந்தித்துச் செயல்படும்
3.நம் வாழ்க்கையை உயர்த்தும்.
இந்த உயர்ந்த உணர்வு வரும் பொழுது இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை என்ற நிலையை நாம் அனைவரும் அடைய முடியும்.
அருள் ஞானிகளாக நீங்கள் மாறி உங்கள் பார்வையில் சர்வ தோஷங்களும் நீங்க வேண்டும். உங்கள் பார்வை சர்வ பிணிகளையும் போக்க வேண்டும். உங்கள் பார்வை எல்லோரையும் ஞானியாக்க வேண்டும்.
இத்தகையை.., “கூட்டங்கள்” அமைந்தால் தான் பேதங்களை மாற்ற முடியும். குருவின் அருளை நிச்சயம் நீங்கள் பெறுகின்றீர்க்ள்.
இதைப் படிப்போர்.., உபதேசத்தைக் கேட்போர்.., அனைவரும் இதன்படி செய்தால்
1.பல ஆயிரம் பேராக மாற்றலாம்.
2.பல ஆயிரம் பேர் பல இலட்சக்கணக்கான பேரை மாற்றலாம்.
3.இந்தப் பூமியைப் பரிசுத்தப்படுத்தலாம்.
ஒரு வேப்ப மரத்திலிருந்து வெளிப்படும் கசப்பான உணர்வைக் கண்டதும் மற்ற உணர்வலைகள் “எப்படி ஓடுகின்றதோ..,” இதைப் போல அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் சேர்க்கப்படும் பொழுது பூமியில் படர்ந்துள்ள
1.“சர்வ தீமையான உணர்வலைகளையும்.., ஓடச் செய்யலாம்”.
2.அல்லது அந்த உணர்வுகள் இயங்காது தடைப்படுத்தலாம்.
ஏனென்றால் அன்றாட வாழ்க்கையில் நாம் எல்லோருடனும் பழகுகின்றோம். பார்க்க நேர்கின்றது, கேட்க நேர்கின்றது.
இப்படி நமக்குள் பலருடைய உணர்வுகளும் பதிவாகி இருப்பதால் அதை இழுக்கக்கூடிய சக்தி வருகின்றது. அதனால் நம் உடலில் கெட்ட அணுக்கள் வளரக் காரணமாகின்றது.
துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் ஏங்கி எடுத்து தீமைகள் புகாது தடுத்தால் “காலையில் ஆறு மணிக்கெல்லாம்.., நாம் இழுக்க மறுத்த அந்தத் தீமையான உணர்வுகளை” சூரியன் மேலே கவர்ந்து சென்றுவிடுகின்றது.
நம்முடைய ஆன்மா சுத்தமாகின்றது.


திருமூலர் உரைத்த திருமந்திரம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது
சிவகாமி என்ற பெண்மணி நடனக் கலையில் சிறந்து விளங்கினாள். இருந்தாலும் தன்னை யாராலும் வெல்ல முடியாத என்ற நிலையில் கர்வப்பட்டு ஆக்ரோஷ குணம் கொண்டு தன்னிடம் தோற்பவவர்களைத் தண்டிக்கும் குணம் படைத்த காளி போல் காட்சியாகின்றாள்.
பதஞ்சலியோ நடனக்கலையின் நுட்பத்தில் தான் உருவாக்கிய யோக சூத்திர மார்க்கத்தைப் புகுத்திக் கர்ண வித்தைகளை உருவாக்கி அவளுடன் போட்டியிடுகின்றார்.
1.அவர் காட்டும் அத்தனை கர்ண வித்தைகளையும் அம்மாது காட்டிக் கொண்டே வருகின்றாள்.
2.பதஞ்சலி வலது காலை ஆகாயத்தை நோக்கி உயர்த்தும் முத்திரையைக் காட்ட
3.அதைத் தான் காட்ட முடியாது என்ற நிலையில் பெண் குணத்தின் இயல்பான நாணம் வந்து தடுக்க
4.தான் தோற்றுவிட்டதாக ஒப்புக் கொண்டு சிவகாமி அடிபணிகின்றாள்… அவள் கர்வம் ஒடுக்கப்பட்டது.
பதஞ்சலியின் நடன ஞான மார்க்கம் மற்ற பக்தி நெறிக்கு இடையூறு விளைவிக்கின்றது என்ற கருத்தில் தில்லை அன்பர்கள் சிலர் பதஞ்சலியை மரணப்படுத்தும் காலத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.
அந்த நேரத்தில் தானாக வந்தமைந்த விதமே திருமூலர். மாடு மேய்க்கும் மூலன் இறந்தவுடன் மூலன் உடலில் கூடு விட்டுக் கூடு பாயும் தன்மையால் பதஞ்சலி உள்ளே நுழைகின்றார்.
சரியான தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்கள் பதஞ்சலியின் உடலை அப்புறப்படுத்தி எரித்து விட்டனர்.
எரித்த பின் அந்த எலும்புகளைக் கொண்டு சென்று அந்த எலும்புகளைப் பூஜித்தால் அவருடைய உயர்ந்த சக்திகளைத் தாங்கள் பெறலாம். அந்தப் பலனை நாம் பெறவேண்டும் என்று ஒருவருகொருவர் சத்தியமும் செய்து யாரும் வெளியிடாதபடி தாம் செய்த செயலை நியாயப்படுத்தினர்.
திருமூலர் உடலில் புகுந்த பதஞ்சலி திருமூலர் உடலுடன் வந்து தேடும் பொழுது
1.சாட்சாத் பரமேஸ்வரனே உங்கள் திரு உடலை மறைத்து அருளியுள்ளார்.
2.இந்தத் திருமூலரின் உடலுடன் இருப்பதே எம்பெருமான் சித்தம் என்று
3.பதஞ்சலியினால் தங்களுக்குத் தங்கள் பக்தி வழிக்கு எந்த இடையூறு ஏற்படாத வண்ணம் சாதுரியமாக மாற்றினார்கள்.
ஆனாலும் திருமூலர் திருமந்திரம் வெளிப்பட்டவுடன் மீண்டும் தங்களுக்கு வந்த இடையூற்றினை உணர்ந்து என்ன செய்தார்கள்…?
1.பதஞ்சலியால் இயற்றப்பட்ட திருமந்திரத்தில் “ஞான விளக்கமாகும் செயல் முறையும்”
2.தங்களின் “ஆச்சார அனுஷ்டானங்களை உடைக்கும் வைத்திய முறையும்” இருப்பதால்
3.அந்தத் திருமந்திரத்தை மறைத்தனர்… பல அழிக்கப்பட்டன… பல காலமாக…!
ஆனாலும் திருமூலர் வெளிப்படுத்திய மூச்சலைகள் இந்தக் காற்றிலே தான் நமக்கு முன்னாடி உண்டு. காற்றிலே ஓடும் அந்த நிலைகளைத் தன் ஈர்ப்பில் கொண்டு வந்து நிச்சயம் இந்த உலகுக்கு அளிக்க முடியும்… ஞானத்தை உணரும் ஞானிகளால்…!
திருமூலர் உடலும் ஜெபத்தின் பொழுது மண்ணிட்டுப் புதைக்கப்பட்டு ஓர் நன்னாளில் சிதம்பரம் கோவில் நிலையில் ஓரிடத்தில் ஜீவ சமாதி போல் மறைக்கப்பட்டுப் பூசி அடைக்கப்பட்டு விட்டது.
சிதம்பரம் கோவிலுக்குள் அவர் செயல் நிலை இன்றும் பதஞ்சலியாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

நம் எண்ணத்தைத் தான் நிறைவேற்றுகின்றோம்… ஆனால் கடைசியில் தெய்வம் சோதிக்கிறது என்று சொல்லி விடுகின்றோம்…!
வீட்டில் ஒரு நல்ல காரியமோ அல்லது திருமணமோ நடக்க வேண்டும் என்றால் சாமி மேல் மலரை வைத்து ஜோதிடம் கேட்கப் போவார்கள்.
சாமி வரம் கொடுத்தால் மனதுக்கு மகிழ்ச்சியாகும்…! என்று உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். இந்த உணர்வு என்ன செய்யும்..? இது தாக்கப்பட்டுச் சிவப்புப் பூ வந்தது என்றால் ஆகாது…!
பூ போட்டுக் கேட்கும் அந்த நேரத்தில் மாப்பிள்ளையைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பார்கள். மோசமான ஆளாக இருக்கின்றான்… என்று அவர்கள் சொன்னார்கள் இவர்கள் சொன்னார்கள்… என்ற மனதில் ஓடிக்கொண்டிருந்தால்
1.எனக்கு நீ சிவப்புப் பூவைக் கொடுத்துவிடு
2.நான் என் பெண்ணைக் கொடுக்கவில்லை என்று வேண்டிக் கொண்டிருப்பார்கள்.
ஆனால் முதலிலே ஜோதிடத்தையும் பார்ப்பார்கள்… ஜாதகத்தையும் பார்ப்பார்கள்.. கடைசியில் “சாமி மீது பூ போட்டுப் பார்க்கும்…” இந்த ஜோதிடத்தையும் பார்ப்பார்கள்.
ஜாதகம் பார்த்துச் செய்தால் தான் எல்லாம் நல்லது என்று சொல்வார்கள். இருந்தாலும் இங்கே பார்க்கும் போது பூ விழுந்து விட்டது என்றால் “நான் நினைத்தேன் நடந்து விட்டது…!” என்பார்கள்.
அதே போல் இந்த மாப்பிள்ளையை எப்படியும் முடிக்க வேண்டும்… வெண்மை நிறப் பூ விழுந்தால் மனதுக்கு நல்லது…! என்று நினைப்பார்கள்.
இவர்கள் மாப்பிள்ளையை நல்லவன் என்று கருதிக் கொண்டு போனால் இந்த உணர்ச்சிகளுக்குத் தக்கவாறு கண்ணிலிருந்து பாயும் அலைகள் கீழே விழுத்தாட்டும்.
இது தான் நாம் பார்க்கும் ஜோதிடங்கள். நாம் எல்லோரும் தான் இதை எல்லாம் செய்து பார்க்கின்றோம்.
வெள்ளைப் பூ விழுகின்றது.
ஆனால் மாப்பிள்ளையிடம் அழுக்கு இருக்கும். இருந்தாலும் அவர்கள் மீது பற்றிருக்கும். இந்த எண்ணத்துடன் வரும் போது கண்ணில் பார்க்கும் போது இந்தப் பூ தான் விழுக வேண்டும் என்று நினைபபார்கள். அதன்படி அங்கே இயக்குகிறது.
எல்லாம் ஒத்துக் கொண்டு இவர்கள் விருப்பத்திற்குத் தகுந்த மாதிரி திருமணம் ஆன பின் கடைசியில் என்ன ஆகிறது…?
என் பெண்ணைக் கட்டிக் கொடுத்ததிலிருந்து ஒரே தொல்லையாக இருக்கின்றது… சங்கடமாக இருக்கிறது… வேதனையாக இருக்கின்றது…! தெய்வம் வரம் கொடுத்த பின் கூட இந்த மாதிரிச் சோதிக்கின்றது என்பார்கள்.
1.ஆக மொத்தம் இவர்கள் எண்ணத்தைத் தான் அங்கே நிறைவேற்றிக் கொள்கிறார்கள்
2.இருந்தாலும் “சாமி சோதிக்கின்றது…” என்று சொல்லும் இந்த நிலை தான் வருகிறது.
மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் ஆலயத்தில் வழி நடந்து அதை மதித்து நாம் நடத்தல் வேண்டும்.
ஏனென்றால் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் அறியாது சேர்ந்த இருளைப் போக்கும் இடம் தான் அந்த ஆலயம். உயர்ந்த உணர்வுகளையும் தெய்வீகப் பண்புகளையும் பெறச் செய்வதற்குத்தான் ஆலயம்.
1.நாம் கண்ணுற்றுச் சிலையைப் பார்க்கும் போது துவைதம்…
2.அதில் காட்டிய தெய்வ குணத்தை எண்ணி எடுத்தால் அத்வைதம்…
3.தெய்வ குணத்தை நுகர்ந்தறிந்து தனக்குள் அது உருவாக வேண்டும் என்றால் விசிஷ்டாத்வைதம்…
4.அங்கே காட்டப்பட்ட தெய்வ குணங்கள் உடலுக்குள் உறைந்தால் துவைதம்
5.நாம் தெய்வமாகின்றோம்…!
அதைப் போல் அங்கே அபிஷேகம் செய்யும் பாலையும் கனிகளையும் சந்தனத்தையும் பார்க்கும் போதும் துவைதம். அந்த நறுமணங்களை எண்ணி எடுத்தால் அத்வைதம் நுகர்ந்து உயிரிலே படும் பொழுது விசிஷ்டாத்வைதம். உணர்வின் தன்மை உடலாகும் பொழுது துவைதம்.
உயர்ந்த குணங்களை உன் உடலில் நறுமணங்களாக்கும் சக்தியாக நற்குணங்களை உருவாக்கும் அந்த உணர்வை நீ பயன்படுத்து… என்று தான் ஞானிகள் ஆலயத்தை அமைத்தனர்.
மலரைப் போல் மணம் நாங்கள் பெறவேண்டும்… மகிழ்ந்து வாழும் அருள் சக்தி பெற வேண்டும்.. அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்.. இந்த ஆலயம் வருவோர் அனைவருக்கும் இந்த அருள் சக்தி கிடைத்து அவர்கள் நலமும் வளமும் பெற வேண்டும்…! என்று எண்ணினால் இது தான் உண்மையான பக்தி…!
ஆகவே அருள் உணர்வை நமக்குள் பெருக்கிப் பேரருளைக் கூட்டிக் கொள்ளும் பழக்கம் வர வேண்டும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
யாம் உபதேசித்த உணர்வின் எண்ணம் கொண்டு கண்களை மூடி “ஈஸ்வரா…” என்று புருவ மத்தியில் எண்ணித் தியானிக்கும் பொழுது அந்த மகரிஷிகளின் உணர்வின் ஈர்ப்பின் அலைகள் உங்களுக்குள் வரும்.
அந்த அலைகள் வரும் போது புருவ மத்தியில் “குறு…குறு….” அந்த உணர்ச்சிகள் தெரியும். சிலருக்கு ஒளி அலைகள் வருவதையும் பார்க்கலாம்.
தியானித்து முடிந்த பின் கண்களைத் திறந்து மகரிஷிகளின் அருள் சக்தி தியானத்தில் அமர்ந்துள்ள அனைவருக்கும் கிடைக்கவேண்டும் என்று எண்ண வேண்டும், எல்லோரும் சேர்ந்து சொல்ல வேண்டும்.
இந்த உணர்வின் தன்மை ஏகோபித்த நிலைகள் வரப்படும் பொழுது இந்த உணர்வுகள் சக்தி வாய்ந்ததாக மாறி “செவிப் புலனறிவில்…” தாக்கப்படுகின்றது.
1.அந்த உணர்வின் நிலைகள் உந்தப்பட்டு
2.உணர்வின் தன்மைகள் சுவாசிக்கப்பட்டு
3.சுவாசித்த உணர்வுகள் தன் ஊழ்வினையாகப் பதிவாகின்றது.
அந்தப் பதிந்த வலுவின் தன்மையைச் சேர்ப்பிக்கும் நிலை தான் “தியானம்” என்பது.
ஒரு நூல் அது எத்தகைய நூலாக இருந்தாலும் அது பலவும் ஒன்றாகச் சேர்த்து ஒன்றாகும் பொழுது வலுப்பெறுவது போல் அனைவரும் சேர்த்து உணர்வின் ஒலி அலைகளைப் பரப்பபடும் பொழுது ஆற்றல்மிக்க சக்தியாகின்றது.
பல (100) இசைக்கருவிகளை ஒன்றாக இணைத்து அது இசையாக வெளிப்படுத்தும் பொழுது… ஒரு காந்தப் புலன் அதற்குள் கவர்ந்து அனைவரும் சேர்ந்து அந்த அனைத்து வாத்தியங்களும் வாசித்த உணர்வுகள் ஒரு அணுவிற்குள் சிக்கி… அந்த அணுவின் தொடர் வரிசை செல்லும் பொழுது அந்த நாதத்தின் இனிமையை நாம் நுகர முடிகின்றது.
இதைப் போலத்தான் வலு கொண்ட உணர்வின் எண்ணத்தின் துணை கொண்டு
1.நாம் அனைவரும் அந்த ஞானிகளின் உணர்வைத் தனக்குள் ஏற்றி
2.அதனைப் பருக வேண்டும் என்று ஏங்கித் தியானிக்கும் பொழுது அதைக் கவரும் ஆற்றல் நாம் பெற்றாலும்
3.கவர்ந்த உணர்வுகள் நமக்குள் பங்கிட்ட நிலைகள் கொண்டு நமக்குள் வலுவாக ஏறுகின்றது.
ஆயிரக்கணக்கோர் கூடி உணர்வின் தன்மை இதைத் தூண்டச் செய்து கூட்டுத் தியானமாக அமைத்து அதனின் வலுவைச் சேர்க்கும் “அருள் ஞான வித்தாகப் பதியச் செய்கின்றோம்”.
1.அனைவருக்கும் மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும்
2.அவர்கள் வாழ்க்கையில் அறியாத இருள்கள் நீங்க வேண்டும்.
3.மகரிஷிகளின் அருள் சக்தியால் அவர்கள் வாழ்க்கையில் மன பலமும் மன வளமும் பெறவேண்டும்
4.தியானமிருக்கும் குடும்பங்களில் உள்ளோர் தொழில் வளமும் செல்வமும் செல்வாக்கும் பெற்று செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வளர்ந்திட வேண்டும் என்று ஒவ்வொருவருமே இதை எண்ண வேண்டும்.
ஒருவர் சொல்ல எல்லோரும் இதைச் சொல்ல வேண்டும்.


திருக்கோவில் இரகசியத்தை உணர்த்திய “சூத்திரதாரியான பதஞ்சலி…” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது
ஆகாயலிங்கம் என்பது ஆகாய உயிரணு… விண்ணுள் ஒடுங்கி விண்ணில் படைத்து விண்ணுள் வாழ்வது.
1.அதன் ஈர்ப்பு சுழற்சியின் சக்தியாக
2.தன்னுள் கலந்து வாழ்வாகும் (வாழ்க்கை) தன்மையின் செயல்பாடே “நடனம்…!”
அதன் ஒலி நாத அசைவுகளின் தன்மை முதற்கொண்டே வானியலின் உயிரணுக்கள் தான் காரண காரியங்களாகச் செயலாக்குகின்றன.
அதே சுழற்சித் தன்மைகள் தான் புவியியலிலும் உயிரணுக்கள் தன் தன் வளர்ச்சியின் செயல் கொண்டு அதே பரிணாம வளர்ச்சியின் முடிவில் மனிதன் வரையிலும் செயலுக்குக் கொண்டு வருகின்றது.
அத்தகைய தன்மையையே ஆனந்தக் களி நடனம் செய்வதாக.. அசைவதாகக் காட்டிய “உயிரியல் தத்துவ மகரிஷிகள்…” தன் செயல்பாட்டைக் கொண்டே மனித சரீரத்தில் சக்தி பெறச் செய்விக்கும் முறைகளை யோக மார்க்கமாகவும் தியான வழி மார்க்கமாகவும் வழிகாட்டினார்கள்.
யோக மார்க்கம் என்பது நாம் சுட்டிக் காட்டும் இந்தத் தியான நடை முறையில் உள்ளடங்கிச் செயல்படுவதையும் இந்தச் செயலின் தொடரினால்
1.விண்ணுக்குச் செல்லும் தத்துவ மூலகாரண அடவுகளை (மறைந்த பொருள் தன்மை)
2.முத்திரையாகக் (காரியார்த்த விளக்கத் தன்மை) கொண்டு சிவ நடனமாகக் காட்டினார்கள்.
நடனத்தின் ராஜா (நடராஜர்) என்று காட்டிய உயிரியல் தத்துவமே பதஞ்சலி யோக சூத்திர விளக்கமாகவும் அதைக் கண்டு கொண்டு தன் உயிராத்மா பெறும் ஞானத் தன்மைக்கு
1.சுவாசத்தினால் பெறும் சக்திள் அனைத்தையும் சுட்டிக் காட்டி
2.அவைகளை முத்திரைகளாகக் (யோக – நாட்டிய) காட்டினார் பதஞ்சலி.
சுவாசத்தில் வரும் உணர்வுகளின் அதி தீவிர முரண்பாட்டுத் தன்மைகளை முயலகனாகக் காட்டி அதை மிதித்துத் துவம்சம் செய்வதாகவும் காட்டுகின்றார்.
கிளர்ந்தெழும் உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் அந்தக் கட்டுப்பாட்டுத் தன்மைகளுக்கே முதலிடம் தந்து அதன் பிண்ணனியின் தத்துவத்தை விளக்கிக் காட்டும் சூத்திரதாரியே பதஞ்சலி முனிவர் ஆவார்.
பதஞ்சலி முனிவர் தன் அனுபவ ஞான வளர்ச்சியில் பெற்ற தனித் தன்மைத் தத்துவத்தை… விளக்கவொண்ணா அந்த அதி அற்புதமான உயிரியல் தத்துவத்தை… “நடராஜராக…” உருவகப்படுத்தியிருந்தாலும் அதை எல்லாம் மாற்றி விட்டார்கள்.
எந்த மெய் ஞானத்தின் தத்துவத்தை உலகிற்கு மகா மகான்கள் தந்தனரோ…
1.அதைக் கடைப்பிடிப்பதிலும் செயல்பாட்டிலும் சூனியத்தைக் கடைப்பிடித்து.. வியாபாரப்படுத்தி…
2.வெறும் வாயளவு மந்திரச் சொற்களைச் சொல்லிக் கொண்டு…
3.பக்தி என்ற வழிக்கு முதலிடம் தந்து இன்று செயல்படுவதுவும் “நடராஜரின் விந்தையே…!”
பதஞ்சலியால் உருவாக்கப்பட்ட நடராஜரின் உருவத்தைப் பார்த்தால்
1.ஆகாய கங்கை என்று தலையில் ஆதி சக்தியை உயிரியல் புவியியல் தத்துவமாகக் காட்டி அவைகளின் மூலத்தை “வெட்ட வெளியான ஆகாயமாகக் காட்டினார் – சிதம்பர இரகசியம்…!”
2.உயிரணுவிற்குள் இயங்கும் உயிர் என்பதை நாகமாகக் காட்டி அதன் விஷம் கண்டத்திலும் (கழுத்திலும்) அமுதமாகிய பிறைச் சந்திரன் நெற்றியிலும் காட்டி இருவிதத் தன்மைகளும் செயல்படும் என்று உட்பொருள் படுத்தியுள்ளார்.
3.உயர்த்திய கரத்தில் அக்கினி என்றும் ஜோதித் தத்துவம் என்றும்
4.அணுவின் சுழற்சியின் அசைவின் ஒலி நாதத்தைக் காட்ட உடுக்கையையும்
5.சரீர கதியில் செயல்படும் உயிரணுவின் செயல்பாடு பெறவேண்டிய குணம் சாந்தம் என்பதைக் காட்ட ஒரு கையில் மானையும்
6.சம்ஹரிக்க வேண்டிய துர்குணங்களை அதன் உணர்வுகளை அன்று காட்ட இன்னொரு கையில் மழுவாயுதத்தையும்
7.உடல் செருக்காகிய மதத்தை நீக்க வேண்டும் என்று யானைத் தோலைப் போட்டும்
8.துர்க் குணமான கோபத்தை நீக்க வேண்டும் என்று புலித் தோலையும் அணிந்தவன் என்று உருவகப்படுத்தினார் பதஞ்சலி.
அதே போல் உணர்வுகளின் (உணர்ச்சிகளின்) அதிவேகமான தன்மையை முயலகன் என்று காட்டி அதைத் தன் காலடியில் வைத்துத் துவம்சம் செய்யப்படுவதாகக் காட்டுகின்றார்.
இடக்கரம் யானையின் துதிக்கை போல் நீண்டு “ஹஸ்த முத்திரை” என்ற பாங்குபடுத்தி
1.சுவாசத்தால் தீமைகளை நீக்க வேண்டும்.. தியானத்தால் ஞானத்தைப் பெறவேண்டும் என்பதை ஹஸ்த முத்திரையின் மேல் அபய முத்திரையாகக் காட்டி
2.இடது காலைத் தூக்கி நாட்டியமாடும் பாவனைப்படுத்தி வலது நாசித் துவாரமாகிய “சூரிய கலை…” என்ற சுவாசம் பெறவேண்டிய ஓட்டகதியை நிச்சயப்படுத்திக் காட்டினார் பதஞ்சலி.
சுவாச அலையால் பெற வேண்டிய வீரியத்தையும் ஒருமித்த சுவாசத்தையும் சுட்டிக் காட்டிடவே ஹஸ்த முத்திரையாகக் காட்டி அதன் வழியில் சக்தி பெறும் உயிரான்மா “ஆனந்தக் களி நடனம் புரியும்… ஜோதியில் ஒடுங்கும்…!” என்று ஆகாய லிங்கமாகக் காட்டினார்.
சிதம்பரம் (சிற்றம்பலம்) என்ற சரீரத்தில் செயல்படும் அத்தனை உயிரணுக்களும் உயிரான்மாவின் சக்தியைப் பெற்று ஜோதிக்குள் கலக்கும்… சிவமாகிய சக்திக்குள் ஒடுங்கும் என்பதே “திருக்கோவில் ரகசியம்…!” (சரீர ரகசியம்).
இவ்வாறு
1.உயிரியலின் சூட்சம ரகசியத்தை அறியும் உயிராத்மா
2.”களி நடனம் கொண்டு சக்தி பெறும்…!” என்பதையே நடராஜர் நடனமாகக் காட்டினார்.

நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் ஒளிக்கற்றைகளை நுகர்ந்து நுகர்ந்து தான் அகஸ்தியன் சகலத்தையும் அறிந்துணர்ந்தான்
பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் மனிதனாகப் பிறந்த அகஸ்தியன் தாய் கருவிலிருக்கப்படும் போதே உயர்ந்த சக்திகளைப் பெற்றான்.
அகஸ்தியனின் தாய் மிருகங்களிடமிருந்தும் விஷ ஜெந்துக்களிடமிருந்தும் மின்னல்களிலிருந்தும் தப்ப வேண்டும் என்ற நிலையில் விஷத்தை முறிக்கும் பல பல பச்சிலை மணங்களை நுகர்ந்தது… உடலிலே பூசிக் கொண்டது.
நஞ்சினை வென்றிடும் தாவர இனத்தின் மணங்களை நுகரும்போது அது தாயின் இரத்தத்திலும் அது கலந்து கலந்து கருவிலிருக்கும் குழந்தைக்கும் (அகஸ்தியனுக்கும்) அதே விஷத்தின் தன்மை முறிக்கும் சக்தி கிடைக்கின்றது.
மின்னல்கள் தாக்கினாலும் அவைகளிலும் கடும் விஷம் உண்டு. அந்த விஷமான சக்தி மனிதன் மீது தாக்கினால் நல்ல அணுக்கள் மடியும் அல்லது மயக்கம் அடையும்.
1.ஆனால் அந்த விஷத்தை முறிக்கக்கூடிய பச்சிலைகளை அகஸ்தியன் தாய் நுகர்ந்ததனால்
2.அந்த மின்னலையும் அடக்கி இவனைக் காக்கும் உணர்வுகளை அந்த உணர்ச்சிகள் அங்கே தோற்றுவிக்கின்றது.
இப்படித் தாய் கருவிலே பெற்ற பூர்வ புண்ணியத்தால் அவன் பிறந்த பின் இவனைக் கண்டாலே விஷ ஜெந்துக்கள் அருகிலே வருவதில்லை. மின்னல் பாய்ந்தாலும் அந்த விஷங்கள் இவனைத் தாக்குவதில்லை.
நட்சத்திரங்களின் கதிரியக்கங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி மின்னலாக எப்படி உருவானது…? என்றும் அந்த மின்னல்கள் எவ்வளவு தூரத்திற்கு ஊடுருவிப் போகின்றது…? என்றும் அறியும் தன்மை அப்பொழுது அவன் பெறுகின்றான்.
1.அந்த மின்னலின் உணர்வுகளை வைத்து ஒரு செடியை இவன் உற்றுப் பார்க்கும் போது
2.அதனின் உணர்ச்சியின் மணங்களைப் பற்றியும்… உணர்வின் இயக்கங்களைப் பற்றியும் அறிகின்றான்.
3.இப்படி எல்லாம் கண்டுணர்ந்ததால் தான் அவனுக்கு அகஸ்தியன் என்று காரணப் பெயர் வந்தது.
ஏனென்றால் தாயின் கருவிலே பெற்ற உணர்வுகள் வளர்ச்சியாகி இந்தப் பிரபஞ்சத்தையே கண்டுணர்ந்து நஞ்சினை நீக்கக் கற்றுக் கொண்ட முதல் மனிதன் தான் அந்த அகஸ்தியன்.
வான இயலைப் பற்றித் தெரிந்து கொண்ட பின் திருமணமாகும் போது தான் பார்த்த உண்மைகளை எல்லாம் தன் மனைவிக்கும் எடுத்துச் சொல்கின்றான்.
மனைவியும் கணவன் சொன்னதை ஏற்றுக் கொண்டு அதை எல்லாம் தானும் பெறவேண்டும் என்று எண்ணி ஏங்குகின்றது. அப்பொழுது இரண்டு மனதும் ஒன்றாகின்றது.
1.ஒன்றான பின் கணவன் உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று மனைவியும்
2.மனைவி உயர வேண்டும் என்று கணவனும் இருவரும் எண்ணுகின்றனர்.
இப்படி இருவரும் ஒரு மனமாக எண்ணி எடுத்த உணர்வுகள் தான்
1.அந்தத் துருவத்தின் வழியாக வரக்கூடிய சக்தியை எடுத்து இரு உயிரும் ஒன்றாகி
2.உயிரைப் போல் உணர்வின் ஒளிக் கற்றைகளை உருவாக்கும் அணுக்களாக விளைந்து
3.இன்றும் துருவ நட்சத்திரமாக வாழ்கின்றனர்.
4.பிரபஞ்சத்தில் எது வந்தாலும் அதை ஒளியாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
மனிதனாக உருவான நிலையில் கணவன் மனைவி ஒன்று சேர்ந்தால் அந்தக் கருத் தன்மைகள் கொண்டு குழந்தையாக உருவாகின்றது.
குழந்தையை உருவாக்கினாலும் பிறந்த பின் தன் பிள்ளைக்கு உடல் நலம் இல்லை என்றால் வேதனைப்பட நேர்கின்றது. “பிள்ளை நோயால் அவதிப்படுகின்றானே…” என்ற அந்த உணர்வினை தாய் நுகர்ந்தால் அந்தப் பையனுக்குள்ளும் இதே உணர்வுகள் சேர்கின்றது.
அதே போல் குடும்பத்தில் யாராவது வேதனையை எடுத்து வளர்த்துக் கொண்டால் வேதனைப்பட்டே கடைசியில் இறந்தால் அவர்களுடன் பற்றுடன் வாழ்ந்த நிலையில் அதே உணர்வை நாம் எண்ணினால் அந்த இறந்தவரின் ஆன்மா நம் உடலுக்குள் வந்துவிடுகின்றது.
அதே போல் ஒரு நோயாளியாக இருப்பவனின் உடலிலிருந்து வரக்கூடிய உணர்வைச் சூரியன் கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது. அந்த நோயாளியின் உணர்வுகளைப் பதிவாக்கி விட்டால் அதே வேதனை மீண்டும் நமக்குள் வந்து அவனில் விளைந்த நோய் நமக்குள்ளும் விளைகிறது.
இதைப் போல் அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ நிகழ்ச்சிகள் நம்மை அறியாமல் நமக்குள் நடக்கின்றது.
இதிலிருந்தெல்லாம் மீண்டிட வேண்டும் என்பதற்குத்தான்…
1.அந்த அகஸ்தியன் தாய் கருவிலே பெற்ற நஞ்சினை வென்ற ஆற்றலையும்
3.துருவ நட்சத்திரமான ஆற்றலையும் உங்களுக்குள் ஆழமாகப் பதியச் செய்கின்றோம்.
அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரம் வெளிப்படுத்தும் உணர்வைச் சூரியன் கவர்ந்து பிரபஞ்சத்தில் பரவச் செய்கின்றது. துருவத்தின் வழி கவர்ந்து நம் பூமி நமக்கு முன் பரவச் செய்கின்றது.
அந்த நேரத்தில் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற்றுப் பழக வேண்டும். உடலில் உள்ள எல்லா அணுக்களுக்குள்ளும் அந்த அரும் பெரும் சக்திகளை இணைத்து வலுவாக்க வேண்டும்.
ஆகவே கஷ்டம் என்ற நிலை எப்பொழுது வருகின்றதோ அடுத்த கணமே அதைத் துடைக்க அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துப் பழக வேண்டும்.
இதை எல்லாம் மனிதன் ஒருவனால் தான் செய்ய முடியும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
வேதங்கள் என்று சொல்வது அன்று சாஸ்திரங்களில் தமிழ் சித்தாந்தம் வழி சைவ சித்தாந்தத்தின் தன்மை தான் அங்கே உருவாக்கப்பட்டது. பின் வேதங்கள் என்ற நிலைகள் உருமாற்றப்பட்டது.
1.ஏனென்றால் சைவ சித்தாந்தம் என்பது
2.அகஸ்தியனால் வெளியிடப்பட்டது.
அந்த உணர்வின் தன்மை வெளிப்பட்டதை இவர்கள் வேதங்களாக இதே தமிழ் மொழியைத்தான் வடிவமைக்கும் தன்மைகள் மாற்றி ஒலியின் தன்மையை மாற்றி வேறு ஒரு ரூபத்தில் அலைகளாக மாற்றினார்கள்,
இதைப் போன்ற நிலைகள் அகஸ்தியனால் வெளிப்படுத்தப்பட்ட சைவ சித்தாந்தத்தின் பேருண்மைகள் இன்றும் அழியாதவண்னம் நம் பூமியில் படர்ந்திருக்கின்றது… பிரபஞ்சத்திலும் படர்ந்துள்ளது.
அகஸ்திய மாமகரிஷி காட்டிய அருள் வழியில் நமக்குள் சேர்த்து நாம் அந்த விண்ணில் உருப்பெறும் உணர்வின் தன்மையை நமக்குள் கவர்ந்து ஒளிக் கதிராக மாற்றிடல் வேண்டும்.
1.சப்தரிஷி மண்டலங்களும் துருவ நட்சத்திரமும்
2.அகண்ட அண்டத்தில் வருவதை எப்படி ஒளியாக மாற்றிக் கொண்டுள்ளதோ
3.அதைப் போல அந்த உணர்வினை நமக்குள் இணைத்துவிட்டால்
4.ஒளியின் தன்மையாக நாம் உயிருடன் ஒன்றி
5.என்றும் பேரின்பப் பெரு வாழ்வாக வாழ முடியும்.
இதைச் சுருங்கச் சொல்கிறேன், விரிவாகச் சொன்னால் இன்னும் எத்தனையோ வகைகளில் சொல்லலாம். ஆனால் ஏதோ இது மிகவும் எளிதில் கிடைக்கிறது என்று யாரும் அலட்சியப்படுத்திவிட வேண்டாம்.
குருநாதர் எனக்குள் பதிவு செய்த உணர்வின் தன்மை அறியும் தன்மையாக 20 வருடங்கள் தனித்து அனுபவம் பெறும்படி செய்தார்.
ஞானிகள் கண்ட பேருண்மையை அறிவதற்காகக் குடும்பத்தைப் பிரிந்து காடு மேடெல்லாம் அலைந்து உண்மையை உணர்ந்து அதைப் பெறும் தகுதியைப் பெற்றேன்.
1.அதை அனைவரும் பெறச் செய்ய முடியும்
2.அனைவரும் பெற முடியும் என்ற இந்த உண்மையைக் குருநாதர் காட்டியதால்
3.உங்களுக்கும் இதைப் பெறச் செய்து கொண்டிருக்கின்றேன்.
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வேறு வேறு விதமாக நான் சொல்வேன். காரணம்…
1.அந்தச் சந்தர்ப்பத்தில் கிட்டும் அந்த மெய் உணர்வின் சக்தியை
2.உங்களுக்குள் எப்படியும் அதைப் பாய்ச்சிட வேண்டும்
3.அதை நீங்கள் பெறும் தகுதியை உருவாக்கிட வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்வது.


பசுக்களுக்காக வசுவா… வசுக்களுக்காகப் பசுவா…? – ஈஸ்வரபட்டர்
தன் உயிர் சக்தியை வலுக்கூட்ட… மனிதச் சரீரம் கிடைக்கப் பெற்ற இன்றைய கால கட்டத்தில் நாம் உண்மையை உணர்ந்து
1.“உலகோதய நான்…” என்ற நிலையை விடுத்து
2.“பரப்பிரம்மமாகிய நான்…!” என்ற நிலையைப் பெறும் வழி அறிந்திட வேண்டும்.
தன் உயிர் சக்திக்கு ஒத்த ஆகார நிலையை வழி அமைத்து சரீரத்தில் இருக்கும் அத்தனை உயிரணுக்களையுமே ஒளியான சக்திகளை பெறச் செய்யும் மார்க்கம் அறிய வேண்டும்.
அந்த மார்க்கத்தை அறிந்திடும் நிலையாக…
1.பசுக்களுக்காக வசுவா…? வசுவிற்காகப் பசுக்களா..? என்ற கேள்வி எழுந்து
2.அதன் மூலம் பெறப்பட்ட ஞான வழித் தொடர் தான்
3.“கோவர்த்தனகிரியைக் குடையாகப் பிடித்தான் கோபாலன்…!” என்ற தத்துவமே.
கண்ணன் என்ற உயிர் சக்தியின் வலுவைக் காட்டி வசுவாகிய ஒளிச் சக்தியை அதனுள்ளே காட்டிக் “கோபாலன்…!” என்ற பசுக்களைப் பராமரிக்கும் வித்தகனாக அதை உணர்த்தினார் வியாசகர்.
அதாவது…
1.தனது சரீரத்தையே அண்டமாகவும்
2.உடலில் உள்ள உயிரணுக்கள் எல்லாவற்றையும் பசுக்களாகவும்
3.கண்ணனாகிய உயிர் சரீர உயிரணுக்களுக்கும் தனக்கும் ஆகாரம் ஊட்டுவிக்கும் தன்மையில்
4.நாதத்தைக் காட்டக் கண்ணன் கையில் வேய்குழலும் (புல்லாங்குழல்)
5.“காற்றே தான் ஆகார சக்தி…!” என்பதை மறை பொருளாக வைத்து
6. தியான வழித் தொடர் மூலமாக அத்தகைய வலுப் பெற்றுவிட்டால்
7.தனக்குகந்த பக்குவத்திற்கு உயர்ந்த ஒளிக் காந்த சக்தியினை வலுக் கூட்டி
8.அதே தொடரில் கால மாற்றமாகிய இயற்கையின் சீற்றத்தையும் கலியில் காட்டி
9.இந்த உண்மைகளை எல்லாம் காவியமாக்கி… சொல்லாமல் சொல்லி
10.நம் உயிர் ஒளி சக்தியைப் பெற்று சரீரத்தின் மூலமாக அதை வளர்த்துக் கொள்ள வேண்டிய உயர்வைக் காட்டினார் மாமகரிஷி வியாசகர்…!”
ஆதார சுருதி நாதத்தில் செயல்பட்டு நம் தியானமாகிய அந்நாத ஜெபமே எண்ணத்தின் வலுவாகி உயிர் சக்தி அதன் மூலமாக வளரும் சக்தி பெற “கோவர்த்தனைகிரியைச் சுட்டு விரலால் தூக்கியதாகக் காட்டுகின்றார் வியாசகர்…!”
அதாவது…
1.கரத்தை ஆகாயத்தை நோக்கி உயர்த்தி
2.நம் உயிர் பெறவேண்டிய உயர்வைக் காட்டி
3.அதன் சக்தி வலுவை (கோவர்த்தன) மலையாகக் காட்டி
4.அதன் பாதுகாப்பில் உடலில் உள்ள (பசுக்களாகிய) உயிரணுக்கள் கூடிக் காக்கப் பெற்றன என்பதே அதன் தத்துவம்…!
தன் உயிர் சக்தியை உயர் மின் ஒளி காந்த சக்தியாக உயர்த்துவது மட்டுமல்லாமல்… முத்தொழில் தத்துவத்தில் காத்தல் என்பது சரீரத்தில் இருக்கும் அத்தனை உயிரணுக்களையுமே என்பது மறை பொருள்.
திட ஆகாரத்தின் மூலம் பெறப்படும் வீரியச் சுவை குணங்களில் எந்தச் சுவை வீரியக் கூட்டப்படுகின்றதோ அந்தக் குணங்களின் வழித் தன்மைக்கு ஒப்ப உணர்வுகளின் உந்துதல் ஏற்பட்டு அதே வழி தான் நம் வாழ்க்கையும் நடக்கின்றது.
அப்படி இல்லாதபடி உயர்ந்த எண்ணங்களின் வழியில்… தான் கட்டுக்குள் அடங்கிச் செயல்புரிய வேண்டிய உணர்வுகள் என்பது நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய செயல் முறை. ஞானம் என்பது அனைத்து உயிர்களுக்கும் பொது மறை.
உணர்வுகளின் வழிக்கெல்லாம் நம் புலன்கள் போவது என்பது உயிரின் ஆதார வித்தையே.
1.கொள்ளை கொண்டு போய்விடக்கூடிய செயலுக்கு உட்படாதபடி
2.உயரிய எண்ணத்தின் வழி எடுக்கப்படும் வீரிய உயர் ஞான சக்தி கொண்டு
3.தன் உயர்வைத் தானே தேடிக் கொள்ளும் சுயப் பரப்பிரம்மமாக நாம் வளர்தல் வேண்டும்… இதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
ஆகவே
1.உயிர் பெறும் அந்த ஒளி காந்த சக்தியுடன்
2.சரீரத்தில் உள்ள அத்தனை உயிரணுக்களையுமே ஒளி சக்தியான ஆகாரத்தை உண்ண வைத்து
3.ஒளி நாத தத்துவத்தில் அழியா ஒளிச் சரீரம் பெறும் வழி முறை செயலுக்கு நாம் ஒவ்வொருவரும் வரவேண்டும்.

ஒரு சிலரிடம் பேசினாலோ… அல்லது அவர்களை எண்ணினாலோ… நெஞ்சிலே படபடப்பும் இதயத் துடிப்பும் அதிகரிக்கின்றது… ஏன்…?
விஞ்ஞான அறிவு கொண்டு ரேடியோ நிலையங்களிலிருந்தும் டி.வி. நிலையங்களிலிருந்தும் ஒளி… ஒலிபரப்பு செய்கின்றனர்.
வீட்டிலிருக்கும் ஆண்டென்னா மூலம் அந்த அலைகளை நாம் கவர்ந்த பின் ரேடியோ பெட்டிக்குள் அல்லது டி.வி. பெட்டிக்குள் அது ஒவ்வொரு பாகங்களுக்கும் அது அனுப்பச் செய்கின்றது. ஒலி பெருக்கிக்கு வருகின்றது.
அங்கே அந்த அலைகள் வரும் போது அதிலே அதிகமான அழுத்தம் இருந்தல் கிர்….ர்ர்.. என்று சப்தத்துடன் இரைய ஆரம்பித்து விடுகின்றது. நாம் இதை எல்லாம் பார்த்திருக்கின்றோம்.
அதைப் போன்று தான் மெய் ஞானிகள் கண்டுணர்ந்த வழிப்படி பார்த்தோம் என்றால்…
1.உதாரணமாக ஒரு கோபப்படுவோரின் உணர்வுகளையோ
2.கோபத்தைத் தூண்டும் உணர்ச்சிகளை உண்டாக்குவோரை
3.நாம் வேடிக்கையாகப் பார்த்தாலும் அதை நாம் நுகராமல் இருக்க முடியாது.
4.நம் கண் கரு விழி அந்த மனிதனை நம் உடலில் பதிவாக்கி விடுகின்றது.
இதற்கு முன்னாடி அவன் சந்தோஷமாகப் பேசி இருந்தாலும் அவன் உடலிலிருந்து வரும் அந்த உணர்வினையும் உடலுக்குள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவு செய்துவிடுகின்றது.
ஆக நண்பன் கோபமான நிலையில் இருக்கும் போது நண்பன் என்று நெருங்கிப் பார்த்தால் அந்தக் கோபத்தின் உணர்ச்சிகளை நம் கண்ணில் உள்ள கரு விழி பதிவாக்குகின்றது.
அது பதிவான பின்பு தான் அந்தக் கோபப்படும் உணர்வுகளை கண்ணுடன் சேர்ந்த காந்தப் புலன் கவர்ந்து நம் ஆன்மாவாக மாற்றுகின்றது.
நம் ஆன்மாவாக மாற்றிய பின்… உயிரின் காந்தப்புலன் அதைக் கவர்ந்து உயிரிலே மோதச் செய்கின்றது. அப்பொழுது அவன் பட்ட கார உணர்ச்சிகள் நம் உயிரிலே பட்ட பின் அந்த உணர்ச்சிகள் உடல் முழுவதும் பரவத் தொடங்குகிறது.
1.ஏனென்றால் எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்ற நிலைகள் போன்று
2.இந்த உடலில் உணர்ச்சிகள் பட்ட பின் வாயு வேகத்தில் உடல் முழுவதும் பரவுகின்றது.
நெருப்பில் ஒரு மிளகாயைப் போட்ட பின் அந்தக் காரமான நெடி குறைந்தது 100 அடி வரையிலும் கூட காற்றிலே பரவும். இதே மாதிரித் தான் நம் உடலுக்குள் இந்த உணர்ச்சிகள் வேகமாகப் பரவத் தொடங்கும்.
அப்படிப் பரவும் போது நம் இரத்தத்தில் கலந்து உடல் முழுவதும் சுற்றப்படும் போது…
1.நம் உடலில் உள்ள நல்ல அணுக்கள் அந்தக் காரத்தை ஏற்றுக் கொள்ளாதபடி சில அணுக்கள் படபடக்கின்றது.
2.ஒரு சில அணுக்கள் மயக்கம் அடைகின்றது
அதைப் போன்ற அணுக்கள் எந்தெந்த உறுப்பில் இருக்கின்றதோ… நுரையீரலிலோ இதயத்திலோ உள்ள சாந்தத்தையும் நல்ல நிலையைக் கிரகிக்ககூடிய அணுக்களுக்கு… இந்தக் கார உணர்ச்சிகள் பட்ட பின் ஒரு படபடப்பும்… வேகமாகத் துடிக்கும் நிலைகளும் வருகின்றது.
நாம் துடிக்கின்றோமா…? நாம் நுகர்ந்த உணர்வுகள் இதயத்தைத் துடிக்கச் செய்கின்றதா…? என்று நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.
இப்படித் துடிக்கும் உணர்வுகள் இதயத்தில் ஏற்படும் போது நம் சிந்தனைகள் குறைகின்றது. நம்முடைய அன்றைய செயல்களும் தடைபடுகின்றது.
சிந்தனை குறைந்திருக்கும் சமயம் நம் குழந்தைகள் என்று பாசமாக இருந்தாலும் கூட அந்த நேரத்தில் நம்மிடம் வந்து ஏதாவது கேட்டால்… “கிரகம்… தொலைந்து போ…!” என்று வெறுத்துத் தள்ளும் நிலைகளே வருகின்றது.
இது எதனால் வருகின்றது…? நாம் கோபப்படுகின்றோமா…? நாம் நுகர்ந்த உணர்வு நம்மை இயக்குகின்றதா…? என்பதை இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு மனிதனும் அவன் நுகர்ந்த உணர்வுக்கொப்ப அந்தந்த உணர்வுகள் தான் அவனை இயக்குகின்றது.
1.இருந்தாலும் ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி நடந்து
2.அந்தத் துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலம் வெளிப்படுத்தும் பேரருள் பேரொளி உணர்வுகளை நுகர்ந்தால்
3.மனிதன் அதை இயக்க முடியும்… நல்லதாக்க முடியும் என்பதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நிலையிலும் தீமைகள் என்று எது வந்தாலும் அந்தத் தீமைகளை அகற்றக்கூடிய வாக்காக ஞானிகளின் உணர்வைப் பதிவு செய்கின்றோம்.
திரும்பத் திரும்ப ஞானிகளின் உணர்வுகளை உரமாகக் கொடுத்து அந்த வித்தை உங்களுக்குள் விளையச் செய்கின்றோம்.
அப்படி இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்வோர் எத்தனை பேர் இருக்கின்றார்கள்…!
1.உங்கள் நோய்கள் அகலும்
2.உங்கள் தொழில் சீராகும்
3.குடும்பத்தில் ஒற்றுமை ஏற்பட்டு மகிழ்ச்சி ஏற்படும்
4.எல்லா நலமும் வளமும் பெறுவீர்கள்
5.நீங்கள் நன்றாக இருப்பீர்கள் என்று தான்
6.யாம் (ஞானகுரு) வாக்கைக் கொடுக்கின்றோம்
இவ்வளவும் சொன்ன பிற்பாடு “எங்கெங்க…! குடும்பத்தில் அல்லது தொழிலில் ஒரே கஷ்டமாக இருக்கிறது…” என்று இதைத்தான் சொல்கிறார்கள்.
அதெல்லாம் நீங்கிப் போகும் நன்றாக இருப்பீர்கள் என்று மறுபடியும் யாம் சொன்னாலும்
1.நீங்கள் சொல்கிறீர்கள்…!
2.ஆனால் என் பையன் எப்போது பார்த்தாலும் என்னிடம் முரண்டு செய்து கொண்டே இருக்கின்றான்
3.வேலை பார்க்கும் இடத்தில் ஒரே பிரச்னையாக வந்து கொண்டே இருக்கின்றது என்று
4.யாம் கொடுக்கும் வாக்கின் வித்தை அப்பொழுதே ஜீவனற்றதாக மாற்றி விடுகின்றீர்கள்.
எத்தனையோ சிரமப்பட்டு தந்திரமாக உங்கள் உடலில் இதெல்லாம் பாய்ச்சி மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் அருள் ஞான வித்தை தங்க வைக்க வேண்டும் என்று யாம் முயற்சி எடுக்கின்றோம். ஆனால்
1.மண்ணிலே விதைத்த விதைகளை எறும்பு எடுத்துப் பொறுக்கிக் கொண்டு போய்
2.எப்படி முளைக்காது செய்து விடுகின்றதோ இதைப்போல
3.உங்கள் உடலில் ஏற்கனவே பதிவான சாப அலைகள்
4.யாம் பதிய வைக்கும் வித்தை உங்களுக்குள் ஆழப் பதியாமல்
5.அதை முளைக்கவிடாது மாற்றிவிடுகின்றது.
ஏனென்றால் இதை எல்லாம் அனுபவரீதியில் தான் குருநாதர் எமக்குக் கொடுத்தார். ஆகையினால் நான் உங்களைக் குறையாக எண்ணவில்லை…! குறையாகச் சொல்லவில்லை…!
முந்திய உணர்வுகள் உங்களுக்குள் விளைந்தது அது உங்களை அறியாது எப்படி இயக்குகின்றது, அதிலிருந்து எப்படியும் நீங்கள் மீள வேண்டும் என்பதற்காகத் தான் இதை விளக்கமாகக் கொடுத்துக் கொண்டு வருகின்றோம்.


மூலச்சக்கரத்தைப் பற்றி ஈஸ்வரபபட்டர் சொன்னது
மனித சரீரத்தின் பஞ்ச உறுப்புகளில் வாய்ப் பகுதியில் அடி நாக்குத் தொடங்கி ஓடுகின்ற நாடி… குய்யம் என்றிட்ட மூலாதார நாடியுடன் இணைந்து செயல் கொள்கிறது.
1.தீய எண்ணங்களின் குணங்களினாலும்
2.நினைவை மறக்கச் செய்யும் ஆத்திரமான செயல்களினாலும்
3.வாழ்க்கை நடைமுறையில் அந்த எண்ணமே தீவிரமாகச் செயல் கொள்ளும் காலத்தில்
4.மூலாதார உஷ்ணத்தினால் தாக்கப்படுவது அந்த நாடியே…!
எண்ண எதிர்பார்ப்பு அற்ற நிலையில் கூட அதிர்ச்சியால் ஏற்படும் அதி பய உணர்வே
1.இந்த நாடியின் செயலைச் செயல் நடத்திடும்
2.நாபிக் கமல நீர் சக்தி நாடி கலந்து செயல்படும் இடத்தில் தடை ஏற்பட்டு
3.ஒலி ஏற்படுத்திடும் செயல் தன்மைகளை மாற்றிவிடும்.
அது போன்ற தீய குணங்களின் செயலைக் கோலமாமகரிஷி மாற்றித் தாய் சக்தியின் அருளாசி பெற்று தன்னை வளர்ச்சிப்படுத்திக் கொண்டார்.
1.அந்த உயர் ஞான வளர்ப்பினை… மூகமாகச் செயல்படும் திறத்தை…
2.அந்த இரகசியத்தை
3.தாய் சக்தியாகப் பெற்ற பேராற்றல் ஞான வளர்ப்பை
4.”அவரது அனுமதியுடன்…!” அந்த வழி முறைகளாகச் சிறிது கோடி காட்டுகின்றோம்.
கோலமாமகரிஷி தன்னை உணர்ந்து கொண்ட அறிவின் தெளிவில்
1.உயிராத்மாவின் சக்தியைக் குழந்தையாகப் பாவனைப்படுத்தி
2.எண்ணத்தில் தன்னையே தாயாக்கிக் கொண்டு
3.உயிராத்ம சக்தியின் வளர்ப்பிற்கு அன்பு கொண்டு ஜெப ஆகாரம் ஊட்டினாரப்பா..!
இத்தகைய தனித்துவத் தன்மையை விளக்கிட்டாலும் உண்மையின் கருப்பொருளை அறிந்து கொள்வார் இல்லையப்பா…!
பூமியே சிவமாகவும் பூமியின் இயக்கமே சக்தியாகவும் உயர் ஞான சிந்தனையாகத் தெளிந்து… தன் சரீர கதியிலும் தொடர்பு கொண்டு… அதே நிலை தான் அங்கும் உள்ளது என்று உணர்ந்து கொண்டு… தாய் சக்தியின் ஆக்கம் தன் நிலை உயர்த்தக் கூட்டிக் கொண்டால் எல்லா உண்மை நிலைகளையும் உணர்ந்து கொண்டிடலாம்.
சமூக அமைப்பில் இந்தச் சக்திதனை நாடி வரும் அனைவரும் அதைப் பெற வேண்டும் என்ற அன்பு கொண்டு சூட்சம நிலையில் மூலச் சக்கரமாக உருவாக்கினார் ஆதிசங்கரர் உடலினின்று செயல்பட்ட கோலமாமகரிஷி.
அதாவது “சர்வக்ஞ பீடம் என்ற மூலச்சக்கரமாக…” ஆதிசங்கரரால் மூகாம்பிகை கோவில் அமையப் பெற்றிருக்கும் இடத்திலிருந்து நேர் கிழக்காக “குடசாஸ்திரி” என்று அழைக்கப்படும் மலையில் ஸ்தாபிதம் செய்யப்பட்டது.
பின் அரசர்களின் அதி ஆசை செயல்களுக்கு அகப்பட்டுவிடாமல் இருக்க அந்த மூலச்சக்கரம் மறைக்கப்பட்டது. அந்த மலையில் ஒரு புறத்தே அமையப் பெற்ற குகைக்குள் பேழை ஒன்றினுள் வைக்கப்பட்டுள்ளது.
மூகாம்பிகை அம்மன் சக்தியாலும் கோலமாமகரிஷியால் அருள் ஒளி பாய்ச்சிடும் செயலுக்கே ஆதிசங்கரரே அவருடன் செயல்படுகின்றாரப்பா…!
அந்தப் பகுதியில் அமைந்துள்ள மலைகள் அனைத்திலும் இரும்புக் கனி வளங்கள் நிறைந்துள்ளது. வனப் பகுதியின் மையத்தில் மலைகளால் சூழப்பட்டு யாரும் நெருங்கிடாவண்ணம் சரிவின் தாழ்வறையில் ஒரு “காந்தக் கிணறும்…” உண்டு.
மூலச் சக்கரம் வைக்கப்பட்டுள்ள குகைக்கும் மூகாம்பிகைக் கோவிலுக்கும் தொடர்பு கொண்ட ஒரு நீண்ட நெடிய குகை வழிப்பாதை உண்டு. சுயம்பு காந்தலிங்கம் இந்தக் குகையின் வழிப் பாதையில் நீண்டே செல்கின்றது.
லிங்கத்தின் உச்சியில் காணப்படும் தங்க ரேகை குகை வழிப்பாதையில் நீண்டு படர்ந்த வண்ணம் காணப்படுகின்றது.

ஆற்றல்மிக்க சக்திகளை உங்கள் கண்களுக்குக் கொடுக்கின்றோம்…!
இங்கே கொடுக்கப்படும் உபதேசத்தின் மூலம் மகரிஷிகள் கண்டுணர்ந்த மெய் உணர்வின் தன்மையை நீங்கள் கேட்டறிகின்றீர்கள். கூர்ந்து கவனித்தால் இது உங்களுக்குள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாகின்றது.
ஆக… விண்ணிலே மிதந்து கொண்டிருக்கும்…
1.அந்த மகரிஷிகளின் அருள் வட்டமான சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வெளிப்படும் உணர்வலைகளை
2.உங்கள் கண்கள் மூலம் நுகர்ந்தெடுக்கும் அந்த உணர்வின் சக்தியாக
3.உங்கள் கண்களை ஆற்றல்மிக்க உணர்வின் ஈர்ப்பு சக்தியாக வளர்க்கச் செய்வதற்குத்தான் இதை உபதேசிப்பது.
இந்த உபதேசத்தை நீங்கள் எந்த அளவுக்குக் கூர்ந்து கவனிக்கின்றீர்களோ பதிவாக்குகின்றீர்களோ… அதனின் ஆற்றல் உங்களுக்குள் பெருகுகின்றது.
அப்படிப் பெருகச் செய்து உங்கள் எண்ணத்தால் விண்ணை நோக்கி ஏகும் பொழுது… அந்தச் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வரும் அலைகள் நம் பூமியிலே படர்ந்து கொண்டிருப்பதை நீங்கள் எளிதில் சுவாசிக்க முடியும். அதன் மூலம் உங்களை அறியாது வந்த தீய வினைகளைத் துடைத்திட முடியும்.
மனிதர்களுக்குள் பழகிய நிலைகள் கொண்டு பத்திரிக்கை வாயிலாகப் படிக்கப்படும் போது ஒவ்வொரு நாளும் எங்கெங்கோ நடக்கும் அதிர்ச்சியான செய்திகளைக் கேட்டறிகின்றோம்.
நம் எண்ணத்தை அதிலே கூர்ந்து செலுத்தி விட்டால்…
1.எங்கோ விபத்தான நிலைகள் அதனின் உணர்வின் நிலைகளைப் படித்தறியப்படும் போது
2.அதிர்ச்சி… பயம்… வேதனை… இது போன்ற உணர்வுகள் உடலிலே விளைந்து விடுகின்றது.
ஆனால் நாம் தவறு செய்யவில்லை. உலகத்தை அறிந்து கொள்ள என்று நாம் படித்தாலும் இந்த உணர்வுகள் நமக்குள் இயங்கிவிடுகின்றது.
இதுகள் எல்லாம்…
1.சாதாரண ஆண்டென்னாவை உபயோகப்படுத்துவது போல் தான்
2.எதைப் பத்திரிக்கையில் படித்தோமோ… டி.வி.யில் பார்த்தோமோ அந்த உணர்வுகள் ஊழ்வினையாகப் பதிவாகி
3.அதை நாம் மீண்டும் எண்ணும் போது நம் எண்ணத்தால் படித்து நுகர்ந்து விடுகின்றோம்.
ஆனாலும் நாம் படித்த… பார்த்த அந்த உணர்வலைகளை எல்லாம் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து நமக்கு முன் சுழன்று கொண்டிருக்கின்றது.
1.மீண்டும் (தினசரி) எண்ணும் போது நமக்குள் பதிவான அதே அலைகள் காற்றிலிருந்து குவித்து நம்மை உணரச் செய்கின்றது
2.அதனின் இயக்கமாக நம்மைச் செயல்படுத்துகின்றது.
3.எந்த வேதனைப் பட்டோமோ… எப்படி ஆத்திரப்பட்டோமோ… அதுவே நமக்குள் விளையும் தருணம் வந்து விடுகின்றது
4.உடலில் விளைந்தால் கடும் நோயாக மாறும் சந்தர்ப்பமும் வருகின்றது.
இதைப் போன்ற நிலைகளிலிருந்து நம்மை மீட்டிக் கொள்வதற்குத் தான் அந்த மகா ஞானிகளுடைய உணர்வுகளை எடுத்து இதைத் துடைக்க வேண்டும் அல்லது நிறுத்த வேண்டும் என்று உபதேசிக்கின்றோம்.
1.குருநாதர் எனக்கு (ஞானகுரு) எவ்வளவு பெரிய சக்தியை உணர்த்தினாரோ அதனின் உணர்வின் ஆற்றலை எல்லாம் பருகினேன்.
2.அவரைக் கூர்ந்து கவனிக்கும் போது அதனின் உணர்வின் தன்மை ஊழ்வினை என்ற வித்தாக எனக்குள் பதிவானது.
3.அவரை நினைவு கொள்ளும் போதெல்லாம் அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் சக்தி வாய்ந்த உணர்வுகளை நுகர்ந்து
4.அதனின் ஆற்றலை எனக்குள் பெருக்கி வளர்த்துக் கொண்டேன்.
அப்படிப் பெருக்கிய ஆற்றலின் துணை கொண்டு தான் நீங்கள் துயரப்பட்டு வரும் போது “உங்கள் துன்பங்கள் நீங்கிப் போகும்…” என்று வாக்கால் சொல்லி உங்களுக்குள் ஆழமாகப் பதியச் செய்கின்றேன்.
அதை மீண்டும் நீங்கள் நினைவு கூறுவீர்கள் என்றால் உங்கள் துன்பங்கள் நீங்கி மெய் ஞானிகள் உணர்வுகள் உங்களுக்குள் விளையத் தொடங்கும்.
1.ஒவ்வொரு நிமிடமும் துன்புறும் உணர்வுகளை எனக்குள் பாய்ச்சி
2.அந்தத் துன்பப்படுத்தும் உணர்வின் தன்மையை நீக்குவதற்காக
3.விண்ணின் ஆற்றலை நீ எவ்வாறு பருக வேண்டும்…? என்று உபதேசித்து
4.அதனின் அனுபவபூர்வமான செயலைத் தான் குருநாதர் எனக்கு ஊட்டினார்.
அந்தப் பக்குவத்தின் தன்மை கொண்டு தான் இருபது வருட காலம் அனுபவரீதியாக உலகம் சுற்றி வந்து… மனிதர்கள் நல்லவராக இருக்கின்றனர் ஆனால் நல்லதைக் காக்க முடியாது சந்தர்ப்பத்தால் எவ்வாறு அவதிப்படுகின்றனர்…? என்று மூன்று இலட்சம் பேரைச் சந்திக்கச் செய்தார்.
அவர்கள் உணர்வுகள் எவ்வாறு இயங்குகிறது….? அந்த நல்லதை எப்படி மீட்டிட வேண்டும்…? என்று அதன் மூலம் அனுபவபூர்வமாகப் பெற்ற ஆற்றல் மிக்க உணர்வுகளைத் தான் உங்களையும் பெறச் செய்து கொண்டிருக்கின்றேன் (ஞானகுரு)… பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
அகஸ்தியன் தாய் கருவிலே பெற்ற பூர்வ புண்ணியத்தால் நஞ்சை வென்றிடும் சக்திகளை அவன் பெற்றான்.
அதன் வழில் நஞ்சை நீக்கும் ஆற்றல்கள் அவன் உடலுக்குள் வளர்கின்றது. அவன் ஒருவரிடம் வளர்ந்தது மட்டுமல்லாதபடி திருமணம் ஆனபின் தன் மனைவியிடமும் அதையெல்லாம் சொல்கின்றான்.
அவர்கள் இருவரும் அருள் உணர்வுகளை எடுக்கும் போது நஞ்சை வென்றிடும் உணர்வின் அணுக்கள் இருவர் உடலிலும் விளைகின்றது.
நஞ்சை வென்றிடும் உணர்வுகளை இருவரும் வளர்க்கப்படும் போது பேரண்டத்திலிருந்து வரும் எத்தகைய கடும் விஷமாக இருந்தாலும் அதை ஒடுக்கி ஒளியாக மாற்றும் தன்மையாக வருகின்றார்கள். ஒளியின் சரீரமாகத் துருவ நட்சத்திரமாக ஆகின்றார்கள்.
அகஸ்தியன் எப்படித் தன் வாழ் நாளில் நஞ்சினை ஒடுக்கி உணர்வினை ஒளியாக மாற்றினானோ இதைப்போல நாமும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் ஆழமாகப் பதிவாக்கிக் கொள்ள வேண்டும்.
நாம் நினைத்த மாத்திரத்தில் அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வினைக் கவரக் கற்றுக் கொள்ள வேண்டும்.
ஒருவர் சண்டை இடுகின்றார் என்றால் உணர்வின் வேகம் அந்த வலிமை வருகின்றது.
எனக்கு இப்படித் “துரோகம் செய்தான் பாவி…! என்றால் அமெரிக்காவில் இருந்தாலும் இந்த உணர்வுகள் புரையோடி உணவு உட்கொள்ளும் போது நிலையை மாற்றிவிடும். நுரையீரலுக்குள் போனால் மரணம் கூட சம்பவிக்கும்.
வாகனம் ஓட்டும் போதோ தொழில் செய்யும் போதோ “துரோகம் செய்தான்…” என்று எண்ணினால் இந்த உணர்வு சிந்திக்கும் தன்மையைச் செயலிழக்கச் செய்து அங்கே எதிர்பாராத சம்பவங்கள் நடக்கின்றது.
1.அப்போது அவர்களுக்கு அங்கே நஷ்டம்…
2.இங்கே நினைக்கும் பொழுது இவருக்கும் நஷ்டம்…!
அதே சமயத்தில் “நண்பன் எனக்கு நல்ல சமயத்தில் உதவி செய்தான்…!” என்று எண்ணினால் விக்கல் ஆகின்றது. இவனுக்கு அந்த மகிழ்ச்சி ஏற்படுகின்றது,
அங்கே விக்கல் ஆகும் போது “யாரோ நினைக்கின்றார்கள்…” என்று அங்கேயும் நல்ல செயலை உருவாக்குகின்றது.
நல்ல குழந்தை என்று மெச்சிக் கொண்டு இருக்கின்றோம். ஆனால் படிக்கப் போன இடத்தில் ஒரு மாதமாக நமக்குத் தகவல் வரவில்லை என்றால் “என்ன ஆகிவிட்டதோ…?” என்று இங்கே வேதனைப்படுகின்றோம்.
யாருடைய உணர்வு நம் உடலில் இருக்கின்றதோ வேதனைப்பட்டு மீண்டும் நினைவை அவர்கள் பால் பாய்ச்சப்படும் போது அந்த குழந்தையின் உடலிலே விஷத்தின் தன்மை பாய்ந்து அங்கே சிந்திக்கும் தன்மையை இழக்கச் செய்கின்றது.
தொழில் செய்து கொண்டிருந்தால் தவறிழைத்துக் குற்றவாளி ஆக்கிவிடும். வெளியிலே நடந்து செல்லும் போது சிந்தனை தவறி மேடு பள்ளம் தெரியாது இடறிக் கீழே விழுகச் செய்துவிடும்… ஆக்ஸிடென்டும் ஆகும்.
இதெல்லாம் எங்கிருந்து வருகின்றது…? இயற்கை எப்படி நம்மை மாற்றுகின்றது…? என்று அந்த இயக்கத்தின் உண்மைகளை உணர்ந்து கொண்டால் அதை நம்மால் மாற்றியமைக்க முடியும். பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன்.
சந்தர்ப்பத்தால் வேதனையான உணர்வு வரும் போது உயிர் அதைப் பிரம்மமாக்கி நமக்குள் சிருஷ்டிக்கின்றது.
ஆனால் ஆறாவது அறிவு கொண்டு வேதனையை நீக்கும் உணர்வைப் பெறவேண்டும் என்று இச்சைப்பட்டால் தீமைகளை அகற்றும் உணர்வுகள் நமக்குள் சிருஷ்டியாகும். இது சந்தர்ப்பம்…!
இதைப் போன்ற சந்தர்ப்பத்தை நாம் உருவாக்கத் தெரிந்து கொள்ள வேண்டும். அகஸ்தியன் துருவனாகித் துருவ நட்சத்திரமான அந்தப் பேரொளியான உணர்வுகளைக் கலந்து கலந்து அடிக்கடி உபதேசிக்கின்றோம்.
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறவேண்டும் என்று தியானித்துத் தன் மனைவிக்குக் கிடைக்க வேண்டும் கணவன் எண்ண வேண்டும். அதே போல தன் கணவனுக்குக் கிடைக்க வேண்டும் என்று மனைவியும் எண்ண வேண்டும்.
கணவன் மனைவி இரு உணர்வும் கருவாக்கி ஒளியின் அறிவாக மாற்றி நஞ்சை வென்றிடும் சக்தியை இப்படிக் கூட்டிக் கொள்ள முடியும்.
ஞானகுரு உபதேசித்த அருள் வழிப்படி துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற்றால் நம் தீமைகள் போக்க முடியும் என்ற தன்னம்பிக்கை வர வேண்டும்.
ஆனால்
1.குருநாதர் செய்வார்…
2.”அவர் தான் செய்து தர முடியும்…!” என்று எண்ணினால் இது பிழையாகும்.
ஒரு செடியின் தன்மையை உருவாக்கிக் கொடுத்து நீரை ஊற்றி அதை வளர்த்துக் கொள்ளுங்கள் என்று கொடுக்கின்றோம்.
1.குருநாதரே செடியையும் வளர்த்துக் கொடுப்பார் என்று சொன்னால்
2.அது எப்படி இருக்கும்…!
ஏனென்றால் குழந்தை மீது உள்ள பாசத்தால் “உணர்வுகள் ஒன்றாகும்போது…” நீங்கள் எண்ணி எடுக்கும் வேதனை உணர்வுகள் அது குழந்தையைத் தாக்கி அங்கே தீமையை உருவாக்குகின்றது.
இதைப் போன்று தான் உங்கள் உடலிலே துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளைப் பதிவு செய்கின்றேன். அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று சதா தவமிருக்கின்றேன்.


உடலை விட்டுப் பிரிந்தால் மீண்டும் மனிதனின் ஈர்ப்பு வட்டத்திற்குள் சிக்கிவிடக் கூடாது
நாம் கற்ற கல்வி இந்த உடலுக்கல்ல. நாம் எதைக் கற்றாலும் உலகை அறிந்து கொள்ள உதவும்… இந்த ஆறாவது அறிவு அல்ல…! மெய் ஞானத்தின் உணர்வு கொண்டு தான் கற்ற கல்வியையும் சீராக்க முடியும்.
1.கற்றுணர்ந்தோர் அனைவரும் கரையேறுவதில்லை
2.அவர்கள் வாழ்க்கையைச் சீர்படுத்தும் நிலையும் இல்லை.
3.கற்றவர்கள் பெரும்பகுதி மனக்குழப்பமும் சிந்தனை குறைந்தும் உள்ளனர்.
உடல் உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பொருள் தேடும் நிலைகளுக்குக் கற்ற கல்வியைப் பயன்படுத்துகின்றார்களே தவிர அந்தக் கல்வியின் நிலைகளில் வாழும் வாழ்க்கையைப் பண்படுத்த முடியவில்லை.
தேடிய செல்வம் சிறிதாக இருப்பினும் அதைப் பக்குவத்துடன் காத்து… பகைமை உணர்வு உடலுக்குள் சேராது அருள் ஞானிகளின் அருள் உணர்வுகளை வளர்க்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.
1.ஆக… வெறும் கல்வி என்பது ஏட்டுச் சுரைக்காய் தான்.
2.கல்வி கற்றாலும் இந்த மெய் ஞானத்துடன் ஒன்றி மனிதனின் வாழ்க்கையைச் சீர்படுத்தும் நிலை வேண்டும்.
மனித உடலை உருவாக்கியது உயிர் தான். மனிதான பின் ஆறாவது அறிவை உருவாக்கியதும் உயிர் தான். இந்த ஆறாவது அறிவின் தன்மையால் தான் உயிரைப் போல் உணர்வின் தன்மை ஒளியின் அறிவாக நாம் வளர்க்கும் நிலை பெற முடியும்.
ஆகவே இதை நாம் சீராகப் பயன்படுத்துவோம். அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறவேண்டும் என்று ஒவ்வொரு நிமிடமும் ஏங்கித் தியானியுங்கள்.
குடும்பத்தில் உள்ளோர் உடல் நலம் பெறவேண்டும்,.. குழந்தைகள் ஞானிகளாக வளர வேண்டும்… விவசாயம் செழிக்க வேண்டும்… வியாபாரம் பெருகி எங்கள் வாடிக்கையாளர்கள் அனைவரும் நலமும் வளமும் பெற வேண்டும்… அவர்கள் குடும்பம் நலம் பெறவேண்டும்…! என்று நீங்கள் இப்படித் தியானித்துப் பாருங்கள்.
1.அமர்ந்த இடத்தில் வீட்டிலிருந்தே இவ்வாறு தியானித்து
2.எல்லா இடங்களுக்கும் அந்த அருள் சக்திகளைப் பரவச் செய்ய முடியும்… அந்த அலைகள் அங்கே படரும்
3.அதை நுகரும் மற்றவர்களுக்கும் சிந்திக்கும் ஆற்றல் வரும்.
4.உங்கள் வாழ்க்கையை உயர்த்தவும் முடியும்.
5.இருளை அகற்றும் நிலையும் பண்படும் உணர்வுகளும் நமக்குள் ஒன்றுபட்டு வாழும் அணுக்களும் நம் உடலில் வளரும்.
ஆகவே… இந்த உடலுக்குப் பின் அந்தத் துருவ நடசத்திரத்துடன் இணைந்து வாழ முடியும் என்ற இந்த நம்பிக்கையுடன் உங்கள் வாழ்க்கையை வாழுங்கள்.
1.எந்த நிமிடம்… எந்த நிலைகள்… எதுவாக இருந்தாலும்… உடலை விட்டு உயிர் சென்றால்
2.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குத் தான் நாம் செல்ல வேண்டும்.
மனிதனின் ஈர்ப்பு வட்டத்திற்குள் சென்றால் மீண்டும் பிறவிக்குத் தான் வர வேண்டியிருக்கும்.
ஆகவே அதிலிருந்து விடுபட்டு அருள் உணர்வைப் பெருக்கி அருள் வாழ்க்கை வாழ்ந்து பேரின்பப் பெரு வாழ்வு பெற்று என்றுமே ஏகாந்த நிலையை அடைந்திட “எம்முடைய அருளாசிகள் (ஞானகுரு) உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்….”

ஞான வழியிலும் ஆண் பெண் இணைப்பு சீராக இருந்தால் தான் உயர் ஞானம் பெற முடியும் – ஈஸ்வரபட்டர்
தாய் தந்தை குரு என்று வழிபடும் முறைகளில் மனிதனின் சிந்தனை சீர்பட.. மனம் ஒருமுகப்படுத்தப்பட… தீமையான எண்ணச் செயலுக்குச் சென்றிடாதபடி ஆரம்ப ஞான வளர்ச்சியின் ஆக்கத்திற்குச் சக்தி ஈர்த்துத் தன் வளர்ச்சியைப் பக்குவப்படுத்திக் கொள்ள பரப்பிரம்ம சூத்திரத்தில் அனைத்துமே தியானத்தின் வழியாகத்தான் செயல்படுத்த முடியும்.
அன்பென்னும் வசமாக… பரிவு என்ற இரக்க குணம் காட்டி…
1.பாசம் கொண்ட செயல் மூலம்… உயிரை நேசிக்கும் பக்குவத்திற்கு வருவோர்கள்
2.தன் தாய் சக்தியைத் தன்னுள்ளே வளர்ச்சிப் படுத்திக் கொள்ளும் வழி வகைகளை அறிந்து
3.அதன் வழியில் செயல்பட்டால் “அற வழியில் ஜெப நிலையை உணரலாம்…!”
தாய் சக்தி என்றும் ரிஷிபத்தினி (மனைவி) சக்தி என்றும் பெண்மையின் அமில குணங்கள் பாசமுடன் செயல்படுவது என்பது அன்பு கொண்டு தான்.
அன்பு பரிவு பாசம் இந்த மூன்று குணங்களும் கருவின் திருவாக சிசு வளர்ச்சியுறும் பொழுது தாய்ச் சக்தியால் ஊட்டப்பட்டுப் பிறப்பின் செயலில் மனிதனாக வளர்ச்சி பெற்று வாழும் வாழ்க்கையில் ஒவ்வொருவரும் பல பல அனுபவங்களைப் பெறுகின்றார்கள்.
அந்த அனுபவங்கள் மூலம் கிடைக்கும் சிந்தனைத் திறனால் அறிவின் ஞானம் வளர்ச்சியுற்றாலும் அதுவே தியான வழிதனில் பரிணாம வளர்ச்சியின் முதிர்வாக்கி
1.மனிதனுக்கு அடுத்த ஞானி என்ற உயர் நிலை பெறுவதற்கு
2.ஆத்ம பலம் கொண்ட எண்ணமே மிகவும் முக்கியம்.
ஆணின் தன்மையில் பெண்மை குணமும் பெண்ணின் தன்மையில் ஆணின் குணமும் இயற்கை கதியில் சரீரத்தில் மின் காந்தப் புலத்தின் செயல் நிகழ்வாக அறிவின் எண்ணம் கொண்டு வழி கண்டிடும் பக்குவத்தில் மாற்றம் கொண்டாலே செயல் வேறாகுமப்பா..!
அதாவது
1.POSITIVE NEGATIVE என்ற இணைப்பில் மின்சாரத்தின் இயக்கம் செயலுக்கு வருவது போல்
2.ஆண் பெண் என்ற அந்த இணைப்பு இல்லை என்றால் இயக்கமே இருக்காது
3.எல்லாம் சூனியமாகிவிடும்…!
பெண்மை குணங்களை அகற்றிடும் சிந்தனைக்கு வலுக் கூட்டினால் என்ன ஆகும்…?
தன்னுள் திணித்துக் கொண்ட ஆபாச எண்ணங்களின் வலுவால் போற்றப்பட வேண்டியதன் “உயிரான்ம வளர்ச்சிக்கு ஊட்டமளிக்கக்கூடிய பெண்மையின் சக்தியை…” மோகம் என்ற குணத்தையே மேன்மேலும் வளர்ச்சிப்படுத்தும் செயலாக ஆகிவிடும்.
அத்தகைய செயலால் அகங்காரம் ஆணவம் முதலிய தீய குணங்கள் தனக்குள் வளர்ச்சி ஆகித் தன்னுள் தான் வளர்க்க வேண்டிய வளர்ச்சிக்கு வளர்ப்பாக்கும் தாய் சக்தியையும் இழந்து அவசரம் ஆத்திரம் என்ற தொடரில் அறிவின் விவேகத்தையே இழந்து விடுகின்றான். இந்த உண்மையை உணர்ந்து கொள்வது மிகவும் நலம்.
ஆகவே உயர் ஞான வளர்ப்புக்குச் செயல் கொள்ளும் பொழுது தன்னுள் வளர்ச்சிப்படுத்திக் கொண்டுள்ள அசுர குணங்களை விலக்கிடும் நற்செயலுக்குச் சிந்தனையைச் செலுத்தி நல் நிலை பெறவேண்டும் என்ற வைராக்கியத்துடன் இருத்தல் வேண்டும்.
ஆனால் உயர் நிலை பெறவேண்டும் என்ற வைராக்கிய சிந்தனையில்
1.பெற்றே தீருவேன்…! என்ற கடுமை காட்டிடலாகாது.
2.சாந்த குணம் கொண்டே சம நிலை பெறவேண்டும்.
3.அன்றைய சித்தர்களால் காட்டப்பட்ட அர்த்தநாரீஸ்வரர் வடிவத்தில் இந்தப் பொருள் தான் உண்டு.
பெண்மையின் குணங்களை மட்டும் வளர்ச்சிப்படுத்திக் கொள்வோர் சிறுகச் சிறுக ஆணின் குணத் தன்மைகளை இழந்து இறை சக்தியைப் போற்றி பக்தி நெறி வளர்ச்சி கொள்ளும் பொழுது தன்னையே பெண்ணாகப் பாவனைப்படுத்திட்டு இறைச் சக்தியுடன் ஒன்றிட வேண்டும் என்ற எண்ணமாக கவிமாலைகள் புனைந்ததுவும் அதுவும் ஒரு வகை தான்.
சிவ சக்தி என்ற குணங்களால் தான்… நல்லெண்ணம் கொண்ட… நற்சுவாசத் தியானத்தின் ஈர்ப்பு வழிகளில் மண்டலங்களாகப் படைக்க முடியும்.
ஆணவம் அகங்காரம் என்ற குணங்களைக் களைந்திடும் (ஆசை) முயற்சி இருந்தால்
1.மௌனம் கொண்டு… ஞானம் வீரம் சாந்தம் ஆகிய நற்குணங்களை வளர்ச்சிப்படுத்திடும் பெண்மையின் சக்தியைக் கொண்டு
2.அசுர குணங்களை நீக்கி ஒளி கண்டு இருள் விலகுவதைப் போல் உயர் நிலை பெற்று
3.உயர் ஞானத்தின் முதிர்வு நிலையை எய்திடலாம்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
அகஸ்தியன் துருவனான பின் நமது பிரபஞ்சத்தையும் நமது பிரபஞ்சம் 2000 சூரியக் குடும்பங்களுடன் ஒன்றுடன் ஒன்று துணை கொண்டு எப்படி வாழ்கின்றது…? என்பதனையும் உணர்ந்தான்.
இன்று நமது பிரபஞ்சத்தில் மனிதர்கள் இருப்பது போன்று இந்த 2000 சூரியக் குடும்பப் பிரபஞ்சத்திலும் நம்மைப் போன்று மனிதர்கள் உண்டு. மனிதனாக உருவாகியது உண்டு…! என்பதனை உணர்கின்றான்.
ஏனென்றால்
1.மின்னலின் ஒளிக்கற்றைகளை அவன் சுவாசித்து தனக்குள் வளர்த்திருந்ததால்
2.அந்த (மின்னலின்) மின் கதிர்கள் வெகு தூரம் எட்டிச் செல்வது போன்று
3..அவனின் நினைவாற்றல் எங்கேயும் செலுத்தும் திறன் பெற்றான்
4.அகண்ட அண்டத்தையும் அறிந்தான்.
5.அண்டத்திற்குள் அண்டங்களாக 2000 சூரியக் குடும்பங்கள் – 3000 சூரியக் குடும்பங்கள் என்று சுழன்று கொண்டிருப்பதை அறிகின்றான்.
ஒவ்வொரு சூரியக் குடும்பத்திலும் உயிரணுக்கள் வளர்ச்சி உண்டு. இந்தப் பூமியில் நாம் எதைச் செய்கின்றோமோ மற்ற சூரியக் குடும்பத்தில் நம்மைக் காட்டிலும் பன் மடங்கு சக்தி வாய்ந்த நிலைகளை மனிதர்களாக உருவான நிலையில் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
நமது சூரியக் குடும்பத்தில் செயற்கைக் கோள்களை உருவாக்கி ஒவ்வொரு கோளும் எப்படி இயங்குகிறது என்று நமது விஞ்ஞானிகள் இந்தப் பிரபஞ்சத்தில் எது இருக்கிறது…? என்ற நிலைகளை அவர்கள் அறிகின்றார்கள்.
நம் பூமியில் என்னென்ன பாஷைகள் கொண்ட மனிதர்கள் உண்டோ… எப்படி இந்த பாஷைகளை உருவாக்கினார்களோ… அதை ஒலி நாடாக்களில் பரவச் செய்து… அந்த ஒலிகள் (பாஷை) எந்தெந்தப் பிரபஞ்சத்திலிருந்து வருகிறது…? என்பதனைச் செலுத்தி தமிழா… ஹிந்தியா… என்று பார்க்கின்றான்.
அப்படி இருந்தால் அங்கு எத்தகைய மனிதன் வாழ்கிறான்…? என்கிற நிலையில் ஒலி நாடாக்களின் வழியாக இன்று விஞ்ஞானிகள் ஒவ்வொரு கோளையும் அறிகின்றார்கள்.
நமது சூரிய குடும்பத்திற்குள் உயிர் அணுக்கள் உண்டு. ஆனால் மனிதனைப் போன்ற உருவம் பெற்றவர்கள் பூமியைத் தவிர்த்து மற்ற கோள்களில் இல்லை.
ஏற்கனவே 25 வருடங்களுக்கு முன் நான் சொல்லியுள்ளேன். இவர்கள் எதைக் கண்டாலும் அங்கே மனித உருவைப் பார்க்க முடியாது. அந்தந்த உணர்வுக்கொப்ப அங்கங்கே அந்த உயிரணுக்கள் உருவாகும்.
சாக்கடைக்குள் சில நிலைகளை எடுத்துக் கொண்டால் அந்த விஷத்தை உணவாக எடுத்துக் கொள்ளும் உயிரினங்கள் அங்கே வாழுகின்றது. அதன் உணர்வும் பெருகுகின்றது.
வியாழனுக்கு 27 உபகோள்கள் என்றால் செவ்வாய்க்கு 8 துணைக் கோள்களும் மற்ற கோள்களுக்கும் இதைப் போல உப கோள்கள் உண்டு.
அந்த உப கோள்களிலும் இத்தகைய உயிரினங்கள் உண்டு. அதனின்று வெளிப்படும் உணர்வுகள் ஒரு கோளுக்குக் கோள் மாறிக் கொண்டே உள்ளது.
உயிரணுக்கள் புழு பூச்சியைப் போல் தான் உண்டு. ஆனால் அந்தக் கோள்களில் மனித வளர்ச்சி இல்லை. செவ்வாய்க் கோளில் உயிரணுக்கள் உண்டு. நாதகாரகன் என்று சொல்வார்கள்.
கார்த்திகை நட்சத்திரமும் ரேவதி நட்சத்திரமும் இரண்டும் மோதலாகும் போது மின்னலாகிறது.
1.அந்த மின் கதிர்கள் வியாழன் கோள் ஈர்ப்பு வட்டத்தில் சென்றால்
2.இரண்டும் இணைந்து வாழும் ஒரு இயக்கச் சக்தி அணுவாகின்றது.
ஆண்பால் பெண்பால் என்ற உணர்வுகள் இணைந்தால் தான் அந்த அணுவும் ஒன்றைக் கவர்ந்து அதன் உணர்வில் வளர்க்கும் தன்மை பெறுகின்றது.
இந்த அணுக்களில் கார்த்திகை நட்சத்திரம் அதிகமானால் ஆண் செடிகளை உருவாக்கும். ஆண் பாறைகளைத் தான் உருவாக்கும்.
ரேவதி நட்சத்திரத்தின் உணர்வு கலந்தால் அது பெண்பால் என்ற நிலைகளில் மற்ற தாவர இனங்களை வளர்க்கும் சக்தி பெறுகின்றது என்பதனை உணர்ந்தான் அகஸ்தியன்.
நம் பிரபஞ்சத்தில் என்ன இருக்கிறதென்று இன்று விஞ்ஞானிகள் கருவிகள் மூலம் கண்டாலும் அன்று தனது மெய்ஞான அறிவின் தன்மை கொண்டு இந்தப் பிரபஞ்சத்தில் எவை எவை வாழுகின்றது…? என்பதை உணர்ந்து கொண்டவன் அகஸ்தியன்.
1.நமது பிரபஞ்சத்தில் வெளிப்படும் உணர்வினை மற்ற பிரபஞ்சங்கள் உணவாக எடுக்கின்றது
2.மற்ற பிரபஞ்சத்தின் உணர்வுகளை நமது பிரபஞ்சம் கவருகின்றது.
இன்று ஒரு மனிதனின் உடலில் விளைந்த உணர்வுகள் அவருடன் சேர்ந்து பழகும் போது அந்த உணர்வை நுகர்ந்தால் இவன் உடலில் விளையும் நோய் அங்கேயும் விளைகின்றது.
ஒரு மனிதன் ஞானத்தைப் பற்றி பேசுகிறானென்றால் அதைக் கேட்டால் அந்த ஞானத்தின் உணர்வுகள் இன்னொரு மனிதனுக்கு வருகின்றது.
1.நேற்று வரை ஞான சூன்யமாக இருப்பினும்
2.ஒரு ஞானவானிடம் சேர்க்கப்படும்போது அவன் உணர்வுகளும் மாறுகின்றது.
ஆகவே இப்படி இந்த இயற்கையின் நிலைகளில் எப்படி மாறுகின்றது என்பதனைத் தெளிவாகத் தெரிந்து கொண்டவன் அகஸ்தியன்.
இக்ஷ்வாகு வம்சம் என்று கவர்ந்து கொண்ட உணர்வுகளை இந்த உயிர் அந்த உணர்வுக்கு ஒப்ப பல கோடி இன்னல்களை மறந்து நம்மை மனிதனாக உருவாக்கியது என்று அறிகின்றான்.
1.நாம் நுகர்ந்த உணர்வுகள்
2.எதன் சுவையோ அந்த உணர்வின் எண்ணங்களாகி
3..எண்ணங்களால் நம்மை எப்படி இயக்குகிறது என்றும் அறிந்தவன் அகஸ்தியன்.
அகண்ட அண்டத்தின் உணர்வினை அகஸ்தியன் கண்ட உண்மையின் உணர்வினை நமது குரு என்னிடம் பதிவு செய்தார்.
இந்த உணர்வின் ஆற்றல் கொண்டு இந்தப் பிரபஞ்சம் எப்படி இயங்குகிறது…? என்று உணர்ந்து கொண்டேன்.
அதே உணர்வின் தன்மையுடன் யாம் சொல்லும் உணர்வுகளைப் பெற வேண்டும் என்று நீங்கள் இச்சைப்பட்டால் இந்த உணர்வின் தன்மை நீங்கள் நுகரப்படும் போது குரு கண்ட உணர்வுகள் உங்கள் உடலில் பதிவாகின்றது.
அகஸ்தியன் எத்தனையோ பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் அவன் வாழ்ந்தவன். அவன் உணர்வைப் பின் வந்தவர்கள் எடுத்தார்கள். சப்தரிஷி மண்டலமாக இன்றும் உள்ளார்கள்.
நமது குருநாதரும் அதன் வழியில் இந்த உடலை ஒளியாக மாற்றிச் சென்றவர்.
1.குரு எப்படி இந்த உணர்வின் வழிகளில் இச்சைப்பட்டு
2.நஞ்சினை வென்று ஒளியின் உடலாக ஆனாரோ
3.அவர் பதிந்த உணர்வு இந்த உடலில் பதிந்தபின் அதை உங்களிலே பதியச் செய்கின்றேன்.
அதே வழிப்படி நீங்களும் இச்சைப் பட்டு இந்த வாழ்க்கையில் இருளை அகற்றி அந்தப் பேரருளைப் பெற வேண்டுமென்ற உணர்வை நீங்கள் வளர்த்துக் கொள்ளுங்கள்.


புருவ மத்தியில் ஓடும் நாடியின் மூலம் தீமைகளை மாற்றிக் கொள்ள முடியும் – ஈஸ்வரபட்டர்
ஒலி ஒளியால் விண்ணிலே உதித்த ஒரு உயிரணு பூமிக்குள் வந்து ஜீவன் என்ற உயிராத்மாவாக மனிதன் என்ற ஜீவ பிம்பச் சரீரம் பெற்றிட்டதின் உண்மை நிலை என்ன…?
1.ஞானம் கொண்ட தியானத்தின் வழி முறைகளைக் கடைப்பிடித்து
2.ஞானியாக உருவாக உயர் ஞான வளர்ப்பில் ஓ…ம் என்ற நாதத்தைக் கூட்டி
3.ஒலி நாதமே ஒளி சக்தியாக்கும் சூட்சமத் தொடர்பின் நிலை ஒவ்வொருவரும் பெறவேண்டும்.
சந்தர்ப்பத்தால் வாழ்க்கையில் எண்ணத்தின் வழியாக வரும் விஷ வித்துக்களை நீக்கிடவே “மூகம்” என்ற செயலாக அனுபவ ஞானம் கொண்டு
1.கோலமாமகரிஷி காட்டிய மூகாம்பிகையின் பொருளறிந்து செயல் கொள்ள வேண்டும்.
2.“தெய்வம் நின்று கொல்லும்…!” என்று கூறப்பட்டதன் உண்மையை உணர்தல் வேண்டும்.
நம் உயிராத்மா தெய்வ சக்தியாக வளர்ச்சி கொள்ள அறிவின் ஆற்றல் விவேகம் கொண்டு செயல்பட்டு ஜீவகாருண்யம்… ஒழுக்கம்.. என்ற நற்பண்புகளால் உண்மைப் பொருளை ஈர்த்துக் கொள்வதே “தியானத்தின் மூலமாகும்…!”
1.அறிவின் தெளிவே ஆக்கம்.
2.மற்ற செயல்கள் அனைத்தும் தேக்கம் தான்…!
மனிதனின் எண்ணத்தில் “தனக்குள் இயக்கும் குணங்களை அறிந்து கொள்ளும் பிரித்து அறியும் செயல் கொண்டான்…” என்றால் மனிதன் ஞானத்தை உணர்கின்றான்…! என்று அர்த்தமாகும்.
அவ்வாறு தன்னை உணர்ந்து கொள்ளும் நிலையில் குணங்களின் எதிர் மோதல்களைத் தெளிந்து ஞானி ஒருவன் கருத்தில் நற்குணங்களைத் தனக்குள் மேலும் உரமாக்கிக் கொள்ள வேண்டும் என்பதன் முக்கியத்துவத்துவதைக் காட்டுவதற்காகத்தான்
1.தீமையான குணங்களின் கேடுகளை உலகினுக்கு உணர்த்தி
2.உண்மைப் பொருளாக… மெய்ப் பொருளாகத் தானே (மெய் ஞானி) நிலை நின்றான்.
தீமை செய்யும் குணங்கள் மனிதச் சரீரத்தில் அறியாத நிலைகள் ஈர்க்கப்பட்டு அது பதிவு நிலை பெற்று விட்டால் அந்தப் பதிவின் தொடரில் அதே எண்ணம் கொண்டு மீண்டும் மீண்டும் ஈர்த்திடும் சுவாச ஓட்டச் செயல் நிலையால் உடலில் என்ன நடக்கின்றது…?
1.தீமையான எண்ணத்தின் பதிவு வலுவாகி..
2.அது வீரியமாக நம் உடலுக்குள் உரமே(ற்)றிக் கொண்டு
3.அதனின் எதிர் மோதலாக நம் சரீரத்தையே பிணிக்குள் சிக்கச் செய்து விடுகின்றது.
இதையே தத்துவப் பொருளாக… அந்த அசுர சக்தியின் எண்ண வலு வீரியத்தை அடக்கிட மூகம்… என்ற மூகாம்பிகைச் சக்தி என்பதே சூட்சமப் பொருளப்பா…!
1.மனிதச் சரீரத்தில் வாய்ப் பகுதியில் அடி நாக்குத் தொடங்கி
2.மூலாதார நாடியுடன் (புருவ மத்தியில்) இணையும் ஓர் நாடி செயல்படும் விதம் உண்டு “ஃ”
3.அந்த நாடியின் செயலால் நமக்குள் வரும் அத்தனை அசுர சக்திகளையும் அடக்கிட முடியும்…! என்பதே
4.கோலமாமகரிஷி ஆதிசங்கரர் உடலில் செயல்பட்டு மூகாம்பிகையாக (மூலச்சக்கரம்) உருவாக்கியதன் உண்மைத் தத்துவம் ஆகும்
பஞ்சேந்திரியங்களால் உருவானது தான் “மனிதச் சரீரம்” என்று உணர்த்தி இந்த ஜீவ பிம்ப உடல் செயல்படும் விதத்தை அறிவின் உயர் ஞான வளர்ப்பாக உணர்ந்து தெளிந்திட்டவர்கள் நம்முடைய சித்தர்கள்.
உலக ஜீவன்களில் பகுத்தறியும் திறன் கொண்ட… “மனித குலம்…”
1.தன்னைத் தான் உணர்ந்து
2.தன் தெய்வீகத் தன்மை நிலை அறிந்து கொண்டிட
3.வளர்ச்சியின் வளர்ப்பாக உயர்ந்திட
4.உலகினுக்கு எடுத்துக் காட்டாகத் தாங்களே நிலை நின்று போதனைப்படுத்திக் காட்டிட்ட வழி முறைகளில்
5.தங்களை உணர்ந்து கொண்ட அக்கணமே தான் யார்..? தன் செயற்பாடு என்ன..?
6.இறைச் சக்தியின் கூத்தாட்டும் செயல் என்ன…? என்று சிந்தித்துத் தெளிந்து
7.தான் உணர்ந்ததை எல்லாம் வெளிக் கொணர்ந்து அறிவின் கருவூலமாக ஞானப் பொக்கிஷமாக அதையே உலகினுக்கு ஈந்து
8.மறை பொருளாக மனித குல சிந்தனையை சுய வளர்ப்பாக வளர்ச்சி கொள்ளச் சூசகப்படுத்தியவர்கள் தான் “சித்தர்களும் ஞானிகளும் ரிஷிகளும்…!”
அவர்களின் அருளாசி பெற்று அறிவின் ஞானம் கொண்டு நாம் தெளிந்து வாழ்தலே மிகவும் சிறப்பு…!

அண்ணாமலையான் தீபம்
கார்த்திகை தீபம் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. மனிதனின் ஆறாவது அறிவைத்தான் கார்த்திகேயா என்று காட்டினார்கள் ஞானிகள். அனைத்தையும் தெரிந்து கொள்ளக்கூடிய நிலைகள் மனிதனின் ஆறாவது அறிவு.
ஒரு விளக்கை ஏற்றினால் அந்த விளக்கின் ஒளி கொண்டு மற்ற பொருள்களைப் பார்க்க நேர்கின்றது… தெரிய முடிகின்றது. அதைப்போல ஆறாவது அறிவால் நாம் தெரிந்து கொள்ளும் சக்தி பெற்றவர்கள் என்று காட்டுகின்றார்கள்.
இதை அண்ணாமலை தீபம் என்று சொல்வார்கள்…! அண்ணாமலை தீபம் என்றால்…
1.நமது உடல் மலையாக இருக்கின்றது
2.நம் உயிர் இருக்கும் இடம் ஒளியாக இருக்கின்றது
3.இந்தச் சுடரின் ஒளியைப் போல நம் உணர்வுகள் அனைத்தையும் ஒன்றாக்கி ஒளியாக சுடராக மாற்றிடும்
4.அதை நினைவுபடுத்தும் நாள் தான் இந்த கார்த்திகை ஜோதியின் தன்மைகள்.
அன்றைய தினம் நம் வீட்டு முச்சந்தியில் விளக்குகளைக் கொளுத்தி வைப்போம். எல்லா நாளும் அல்லாது வீட்டு முகப்பில் ஏன் விளக்குகளை வைக்கின்றோம்…?
முகப்பில் ஒளி என்ற உணர்வை வைத்து இருளை அகற்றிடும் தன்மையாக மெய் என்ற உணர்வை நமக்குள் அறிந்துணர்ந்து… எது மெய்…? எது பொய்…? என்று வெளிச்சத்தின் மூலமாக நாம் காண முடிகின்றது.
நமக்குள் எந்தத் தீமைகளும் புகாது அருள் ஒளி என்ற உணர்வை நமக்குள் சேர்க்க வேண்டும் என்று காட்டுவதற்குத்தான் வீட்டு வாசலின் முகப்பில் விளக்கை வைப்பது.
அந்த சாஸ்திர வழக்கப்படி மனிதர்களுக்கு நினைவுபடுத்தும் நாள் தான் இது. நாம் சுவாசிக்கும் உணர்வு (மூக்கிற்கு நேராக உயிர்) முகப்பில் இருக்கின்றது. தெளிவான உணர்வின் தன்மையை அருள் ஒளி என்ற உணர்வை நாம் சுவாசித்து இந்த உணர்வின் தன்மை நம் உடலுக்குள் சேர்த்து இருளை அகற்றும் தனக்குள் தெளிந்த உணர்வு கொண்டு உணர்வை ஒளியாக மாற்றும் திறன் பெற வேண்டும்.
இந்த மனிதன் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும்…
1.நாம் சுவாசிக்கும் முகப்பிலே உயிரிலே பட்டுத்தான் உண்மையின் உணர்வை நாம் அறிகின்றோம்.
2.அங்கே ஒளி என்ற உணர்வுகள் வரப்படும் பொழுது பொருளைக் காணும் தன்மைகள் வருகின்றது.
ஆகவே தான் இதை நினைவுபடுத்தும் நாளாக “அண்ணாமலை தீபம்” என்று காட்டுகின்றனர். அண்ணாமலையான் என்றால் நம் உயிர் உடலின் உச்சியிலிருந்து கொண்டு அந்த ஒளியின் தன்மையாக நம்மை இயக்குகிறான்.
உடல் சிவம் என்றாலும் சிவனின் ரூபத்தைக் காட்டி அண்ணாமலையான் என்று உயிரான ஈசனைக் காட்டி… உடலை (சிவத்தை) இயக்குகிறது என்று காட்டுகின்றனர்.
ஆனாலும் நாம் சுவாசிக்கும் போது உயிரிலே பட்டு எதன் உணர்வைத் தெரிகின்றோமோ அதன் ஒளியின் தன்மை கொண்டு தான் நாம் இயங்குகின்றோம்.
1.கார்த்திகேயா என்ற ஆறாவது அறிவின் தன்மை கொண்டு
2.தெளிந்த மனம் கொண்டு உயிருடன் ஒன்றும் போது ஒளியின் உணர்வாக நம் உடலே ஒளியாகின்றது
3.நம் சொல்லும் ஒளியாகின்றது… செயலும் ஒளியாகின்றது.
இதை நினைவுபடுத்தும் நாள் தான் அண்ணாமலையான் தீபம்.
ஆறாவது அறிவு கொண்டு தெரிந்து… தெளிந்து… நாம் வாழும் இந்த மனித உடலில் வேதனை என்ற விஷத்தின் தன்மை எடுத்து நம் ஆன்மாவை அது மறைத்திடாது அருள் ஒளியைப் பெருக்க வேண்டும்.
உதாரணமாக… தான் சேமிக்கும் நஞ்சினை ஒளியாக மாற்றி வைரங்களாக மாற்றுகின்றது நாகம். விஷத்தின் தன்மையை ஒடுக்கப்படும் பொழுது அது நாகரத்தினமாக மாறுகின்றது.
அதைப் போன்று தான்…
1.மனிதனின் உணர்வின் தன்மைகளை அணுக்களாக்கப்படும் பொழுது உணர்வின் ஒளியாக மாறுகின்றது.
2.மற்றொன்றில் இருக்கும் இருளை மாய்த்து அந்த உணர்ச்சிகளை மாற்றி ஒளி என்ற நிலைகளாகப் பிரகாசிக்கச் செய்யும்.
ஒரு பொருளுடன் ஒரு பொருள் மோதப்படும் பொழுது “ஒளி” என்ற நிலைகள் வருகின்றது. ஒரு உணர்வுடன் ஒரு உணர்வு மோதும் பொழுது “வெப்பமாகி” உணர்வுகள் மாற்றம் அடைகின்றது.
எதன் வழி கொண்டு வருகின்றதோ அதற்குத்தக்க இந்த மாற்றங்கள் ஏற்படுகின்றது. இப்படித்தான் உயிர் நம்மை இயக்குகின்றது. நாம் நுகரும் உணர்வை வைத்துத்தான் நம் உயிர் ஆட்சி புரிகின்றது.
ஆகவே இருளை அகற்றி நஞ்சினை வென்று ஒளியாக மாற்றிச் சென்ற அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருளை ஏங்கிப் பெறுவோம்.
1.நாம் தெளிந்த மனம் பெறுவோம்… தெளிவான வாழ்க்கை வாழ்வோம்.
2.உயிருடன் ஒன்றும் உணர்வுகள் அனைத்தையும் ஒளிச் சுடராக மாற்றிக் கொண்டே இருப்போம்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
“ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…” ஒவ்வொரு நிமிடமும் நம் குருவான உயிரிடம் வேண்டுகின்றோம். நம் குருநாதர் பெயரும் அதுவாகும்.
அவர் தனக்குள் அந்த உயிரின் நிலைகள் ஒன்றி இந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் உருவாக்கி குருவின் நினைவைக் கொண்டு உணர்வின் ஆற்றலைப் பெற்றார். ஆகையினால்
1.ஈஸ்வரா குருதேவா என்றால் அவர் பெயரும் “ஈஸ்வரா…” என்று வருகின்றது.
2.எனக்கு (ஞானகுரு) அந்த உணர்வின் தன்மையைக் கொடுத்ததனால்
3.”ஈஸ்வரா குருதேவா…” என்று என் உயிரை எண்ணினாலும் குருவை எண்ணியது போன்று தான்.
4.எனக்குள் (அவர்) இருந்து குருவாக இருந்தும் அந்த உணர்வின் தன்மை படைக்கப்படும் போது அந்த (உயிர்) குருவாகின்றது.
“ஈஸ்வரா குருதேவா” என்பது உயிர் ஈசனாக இருந்து இயக்கி உருவாக்கிக் கொண்டிருக்கின்றது.
1.உருவாக்கும் அந்த ஈசனுடன் ஒன்றி
2.இந்த உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி விண் சென்று
3.நாம் குருவாக… உலகத்திற்கு வழிகாட்டியாக… வளர வேண்டும்.
நாம் இடும் மூச்சலைகள் பிறருடைய துன்பத்தை மாய்க்கக்கூடிய நிலைகளாக வரவேண்டும்.
நாம் சொல்லும் நிலைகள் பிறரை இன்பத்தில் ஆழ்த்தி இன்பமான நிலைகளை உருவாக்கி மகிழ்ச்சி அடையச் செய்ய வேண்டும்.
1.அவருக்குள் இருள் சூழச் செய்யும் விஷத்தை மாய்த்து
2.உணர்வின் ஒளிச் சுடராகப் பெறும் அந்த தகுதியை
3.நாம் பெறச் செய்ய வேண்டும் என்று குருநாதர் காட்டினார்.
ஏனென்றால் எனக்குள் பல இன்னல்களோ அல்லல்களோ வந்தாலும் அது எனக்குள் சேராதவண்ணம் தடுக்க மெய் ஒளியின் தன்மையை உனக்குள் எவ்வாறு சேர்த்துக் கொள்ள வேண்டும்…? என்று உபதேசித்து உணர்த்தினார்.
அந்த உணர்வின் எண்ண அலைகளை எனக்குள் ஆழமாகப் பதியச் செய்தார். அவரைப் பின் தொடர்ந்து பதிவான உணர்வுகளை நான் நினைக்கப்படும் போது அந்த உணர்வின் ஆற்றல் எனக்குள் விளைகின்றது.
அவர் எனக்குள் படைத்த அந்த அருள் உணர்வின் ஆற்றல்களை உங்களுக்குள் வித்தாகப் பதிவாக்கவே இதை உபதேசிக்கின்றேன்.
வயலைப் பண்படுத்தி அதற்குள் விதைகளை விதைத்த பின் அந்த விதையின் தன்மை காற்றிலிருந்து தன் இனமான சத்தை எடுத்துத் தன்னை வளர்த்துக் கொள்கின்றது.
அதைப் போல யாம் பதிவாக்கும் ஞான வித்துக்களை வளர்த்து அந்த மெய் ஒளியைப் பெறும் தகுதியை நீங்கள் எல்லோரும் பெற வேண்டும்.
நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளிய அந்த அருள் ஞான வித்தால் நாம் எல்லோரும் அந்த நிலைகள் பெறுவோமேயானால் விஞ்ஞான அறிவின் அழிவிலிருந்து நாம் மீண்டு மெய் ஞானியின் நிலைகளுக்கு நாம் செல்வோம்.
எதுவாக இருந்தாலும் இயற்கையினுடைய நிலைகள் இனம் இனத்துடன் தான் சேரும்.
1.மெய் ஞானியின் அருள் ஒளியை நாம் பெற வேண்டும் என்று எண்ணும்போது
2.அந்த இனத்துடன் இணைந்து அந்த ஆற்றலைப் பெற்று வளர்ந்து
3.அவர்கள் எங்கே விண் சென்றார்களோ அங்கே செல்ல முடியும்.
4.அந்த நிலையில் செல்வதற்குத்தான் இதை உணர்த்துகின்றோம்.
குருநாதர் அருளிய ஆற்றல் மிக்க அந்த சக்தி எனக்கு மட்டும் சொந்தமல்ல. “நம் அனைவருக்குமே சொந்தம்…” ஒன்றில்லாமல் ஒன்று இல்லை. ஒன்றுடன் ஒன்று ஒன்றித்தான் இணைந்து செயல்படுகின்றது.
சிறு துளியாக மழை பெய்தால் பூமிக்குள் அது ஈர்க்கப்படுகின்றது. மறைந்துவிடுகின்றது.
ஆனால் பெருந்துளியாக மழை பெய்யும்போது என்ன செய்கின்றது…? அங்கு இருக்கக்கூடிய நிலைகள் பெரும் வெள்ளமாகப் பெருகி வலுக் கொண்டதாகி எல்லாவற்றையும் இழுத்துத் தன்னுடன் அழைத்துச் செல்கின்றது.
இதைப் போல நாம் அனைவரும் மெய் வழியில் ஒரே உணர்வாக ஆற்றல் மிக்க மெய் ஞானியின் உணர்வை “ஓ…ம் ஈஸ்வரா…” என்று எண்ணி நமக்குள் எடுக்கும்போது பெரும் வெள்ளமாகத் திகழ்கின்றது.
நம்மை அறியாமல் ஆட்டிப்படைக்கும் துன்பங்களையும் இருள் சூழச் செய்யும் உணர்வுகளையும் மாய்த்து மெய் ஞானியின் அருள் ஒளியில் அருள் வெள்ளமாக நாம் சென்றடைய முடியும்.


உணர்வுடன் கூடிய… “எண்ணத்தால் எண்ணி எடுக்கும் தியானத்தால் தான்” நாம் எண்ணுகின்ற இலக்கை அடைய முடியும் – ஈஸ்வரபட்டர்
மனித எண்ணத்தின் ஆற்றல் தியானத்தின் வழியாக எண்ணுகின்ற எண்ணமே ஒன்றை எண்ணிப் பெற்றிட வேண்டும் என்ற தீவிர வைராக்கிய சிந்தனைகே முதலிடம் தந்து ஈர்த்திடும் பக்குவத்தில் செயல்படுகிறது.
சரீரத்தில் மறைந்து கிடக்கும் சக்திகளை ஒழுங்குபடுத்திக் கொள்ள யாம் (ஈஸ்வரபட்டர்) கூறும்
1.“உணர்வுடன் கூடிய எண்ணத்தால் எண்ணி எடுக்கும் தியானத்தைப் பயிற்சியாகக் கொண்டு
2.அதன் மூலம் ஒருமுகப்படுத்தப்படும் சக்தியின் குவிப்பால்
2.விண்ணிலிருந்து வரும் ஒளி காந்த நுண் அணுக்களின் (மகரிஷிகளின்) ஒளி அமில சக்திகளை ஈர்த்து
3.வளர்ப்பின் வளர்ப்பாக… வளர்ப்பவனின் செயலில்… நாம் பேரருளை வளர்க்க முடியும்.
இன்று உடல் பயிற்சி முறைகளுக்கும் தற்காப்புக் கலைகளுக்கும் இதே போல் பல தொடர்களுக்கும் தியானம் (YOGA, KUNDALINI) கற்பிப்பதாகக் கூறுகின்றார்கள்.
அப்படிக் கற்பித்தாலும்… அவர்கள் குடும்ப வாழ்க்கையில் தங்கள் எண்ணத்தில் அறியாமல் திணித்துக் கொண்ட மாற்று எண்ணச் செயல்கள் (கோபம் சலிப்பு சங்கடம் வேதனை) வீரியமாக இருந்திட்டால் தியானத்தில் பெறும் சக்திகள் அனைத்தும் அவ்வெண்ண வலுவிற்கே செயல்படுமப்பா…! நல்லதைத் தடைப்படுத்தும் செயலாக வந்துவிடும்.
வெறும் தியானம் மாத்திரம் நல்ல நிலை அளித்திடாது…! (இது மிகவும் முக்கியமானது)
சந்தர்ப்பத்தால் தனக்குள் ஊட்டப்பட்ட சங்கடமான உணர்வின் வித்துக்களின் காந்த ஈர்ப்பின் செயல் தொடர்பால்
1.எந்தக் காழ்ப்பு (வெறுப்பு) உணர்வு கொண்டு ஊட்டப்பட்டதோ
2.அதைச் செவிமடுப்போர் கொள்ளும் எண்ணம் அனுதாப நீர் (உமிழ் நீர்) பாய்ச்சி
3.விஷ விருட்சமாகச் செயல் கொண்டால் அதை உடலிலிருந்து களைந்திடும் செயல் மிகவும் கடினமப்பா…!
“இராமபாணம்…” உரமேறிய ஆச்சா மரங்களைத் துளைத்தது… என்ற தத்துவ உண்மை உண்டு…!
அதைப் போல் சமமான உணர்வாக… நல்லெண்ணச் சுவாசமாக… உயிரான ஈசனுடன் ஒன்றி… ஞானிகள் காட்டிய நல் நெறியைச் சீராகக் கடைப்பிடித்து மகிழ்ந்து வாழும் சக்தி பெற்று பிறவாமை என்ற நிலை பெற வேண்டும்.
1.இந்த எண்ண உறுதியே
2.சங்கட அலைகளைத் தகர்த்திடும் “அருமருந்து…”
(ஏனென்றால் நடக்காத… முடியாத… நடைபெறாத ஆசைகளை… முன்னாடி வைத்துக் கொண்டு “அதை எப்படியும் அடைந்தே தீர வேண்டும்…!” என்று முயற்சி செய்து… முயற்சி செய்து… அதனால் தோல்வியாகும் பொழுது சங்கடமும் சலிப்பும் விரக்தியும் ஏற்படுகிறது. அதனால் எந்த நன்மையையும் நாம் அடைய முடியாது. நடக்காததை மறந்து விட்டு நடக்கக்கூடியதை… நடக்க வேண்டியதை… எண்ணிச் சீர்படுத்திக் கொள்வதே தியானத்தைப் பயன்படுத்தும் முறையாகும்)
நல்லெண்ணம் கொண்டு பெற்றிடும் உண்மை ஞான வளர்ப்பால் நல்லாக்கம் பெற்றிடுவோம் என்ற எண்ணத்தின் உத்வேகச் செயலுக்கு “விவேகம் தான் தேவை…!”
(வேகமும் வலிமையும் மட்டும் இருந்தால் இலக்கை அடைய முடியாது)
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
இந்த அகண்ட அண்டத்தில் நம்மைப் போன்ற பிரபஞ்சங்கள் ஏராளம் உண்டு. ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் உணர்வுக்கொப்ப அங்கே மனித உருக்களில் மாற்றங்களும் உண்டு.
நமது பிரபஞ்சத்தில் எப்படி விஞ்ஞானப் பெருக்கங்கள் இருக்கின்றதோ இதைப் போல மெய்ஞானப் பெருக்கம் உள்ள பிரபஞ்சங்களும் உண்டு. அதையெல்லாம் நீங்களும் நுகரலாம். அறியலாம்… பார்க்கலாம்… என்னால் காண முடிகின்றது.
வெள்ளக்கோவில் டாக்டர் கிருஷ்ணனுக்கு சில உண்மைகளைக் காணும்படி பரீட்சார்ந்தமாகக் கொடுத்தேன்.
அவர் என்ன பார்த்தார்…?
1.நம் பிரபஞ்சத்திலுள்ள கோள்கள் எதிலும் மனிதர்கள் இல்லை.
2.இந்தெந்தக் கோள்களில் இந்த அளவு நீர் இருக்கின்றது.
3.சில கோள்களில் உறை பனியாக இருக்கின்றது. அதெல்லாம் சிறிது காலத்தில் அழிந்துவிடுகின்றது.
இதையெல்லாம் அவருக்குத் தெளிவாகத் தெரியும்படி செய்தேன். எனக்கு மட்டும் தெரிந்தால் பத்தாது என்று அவருக்கும் காட்டினேன்.
ஆனால் அந்த மாதிரி எல்லாம் காட்டிய பின் என்ன ஆனது…?
சுயநலத்தின் சொரூபங்கள் வந்துவிடுகின்றது. “நான் இருந்த இடத்திலே தேடுகிறேன்… நான் இருந்த இடத்திலிருந்தே பெற முடியும்…” என்று இருந்துவிட்டார்.
ஆனால் குருவை மட்டும் தேடி வரமாட்டார்.
ஞானகுரு என்னை இருந்த இடத்திலே பெறச் செய்துவிட்டார். அதனால் “நான் குருவைத் தேடி எங்கேயும் செல்ல வேண்டியதில்லை…” குரு தான் சொல்லியிருக்கின்றார் அல்லவா…! நாம் இருந்த இடத்தில் தொடர்பு கொள்ள முடியும் என்று.
இப்படியும் சில பேர் உண்டு.
ஒரு பேட்டரியில் சார்ஜ் தீர்ந்து விட்டால் என்ன ஆகும்…? வேலை செய்யுமோ…?
சார்ஜ் ஏற்றிக் கொள்வதற்கு மின்சாரம் எங்கே இருக்கின்றது…? என்று தேடி அதை ஏற்றுகின்றோம் அல்லவா.
சேகரிக்கப்பட்ட மின்சாரத்தை எல்லாம் செலவழித்தால் பேட்டரி பலவீனமாகும். அதை உபயோகப்படுத்த மீண்டும் பேட்டரியைச் சார்ஜ் செய்துதான் ஆகவேண்டும்.
அதைப் போன்று அந்த அருள் உணர்வைத் தனக்குள் பெருக்குவதற்கு குருவைச் சந்தித்து உணர்வை உறவாடி அதிலுள்ள உண்மைகளைத் தெளிந்து கொள்ள வேண்டும்.
ஆனால் அப்படி இல்லாமல்
1.குருவிடமிருந்து “எல்லாமே தெரிந்து கொண்டேன்…!”
2.அவரை எதற்காகப் பார்ப்பது…?
3.குருவிடம் சொல்ல என்ன இருக்கிறது…? என்று சொன்னால் என்ன ஆகும்..?
குரு கொடுத்த அந்த மெய் உணர்வுகள் அவருக்குள் இயக்கிய தன்மை
1.தனக்குள் அதை மீண்டும் வலு பெறச் செய்யவில்லை என்றால்… ஆக மொத்தம் பலவீனமடையத்தான் செய்யும்.
2.போகும் பாதையில் வளர்ச்சியின் தன்மைகள் குன்றத்தான் செய்யும்.
3.இதை எல்லாம் நாம் தெரிந்துணர்ந்து செயல்படுதல் வேண்டும்.


வள்ளுவனும் வாசுகியும் போல் வாழ வேண்டும் – ஈஸ்வரபட்டர்
“வள்ளுவர் வாக்கு…! (திருக்குறள்) என்னும் உலக வேதத்தைத் தொகுத்தளித்த வாசுகி அம்மை அதைத் தன் பெயர் கொண்டு வெளி உலகிற்கு வெளியிட விரும்பாமல் “வள்ளுவன் வேதம்…” என்று உலகுக்குக் கொடுத்ததற்குப் பலமான பின்னணிக் காரணமும் உண்டு.
அது என்ன…?
தன் கணவர் (திருவள்ளுவர்) ஓர் சாதாரண ஆடை நெய்பவர் மட்டுமல்ல. அளவிடற்கரிய சித்து நிலை பெற்ற ஓர் சித்தன் என்று அறிந்து கொண்டதற்கு மூலமும் அங்கிருந்த வறுமைதான் காரணம்.
பல காலம் வறுமைப் பிடிப்பில் சிக்கி ஆகாரச் செலவுக்குத் தக்க பொருள் இல்லாமல் சிறிதளவு பொருள் கிடைத்தாலும் நிறைவாக வாழலாம் என்ற எண்ண ஓட்டம் கொண்டவர்கள் தான் அவர்கள் இருவருமே…!
1.இருந்தாலும் காற்றிலிருந்து ஆகாரம் உட்கொள்ளும் பக்குவச் செயல்பாட்டுக்கு
2.முழுமையாக வந்துவிட்டால் அப்புறம் திட ஆகாரம் எதற்கு..?
ஏனென்றால் இல்லறத் தொடரிலோ சரீர கதிச் செயல்பாட்டிற்குச் சிறிதளவு திட ஆகாரமும் தேவை தான்.
காற்றின் ஆகாரத் தொடருக்கு முழுப் பக்குவச் செயல் கொண்டிடக்கூடிய பக்குவமும் கூடி வரும் வரை சிறிதளவு திட ஆகாரமும் உட்கொள்ளுதல் வேண்டும். அதற்குரிய பொருளும் வேண்டும் என்ற தொடரையே சூசகப்படுத்தி வள்ளுவப் பெருமானிடம் வாசுகி கூறுகின்றார்கள்.
எத்தனையோ புலவர் பெருமக்கள் புரவலர் (அரசர்கள்) பெருமக்களை நாடிப் பொருள் பெற்றுச் சிறப்படைந்து வாழ்கின்றார்கள். வள்ளல் தன்மை இன்னும் நம் ஞான பூமியிலே குறைவுபட்டு விடவில்லை என்று அமைதியாகவும் சூசகமாகவும் வாசுகி வள்ளுவரிடம் தெரியப்படுத்துகின்றார்.
1.“பரிசு பெறும் எண்ணம் புலவர்களுக்குத் தான் உண்டு…!
2.அது வாசுகிக்கும் வந்தது விந்தை…!” என்று உணர்ந்து கொண்டு
3.வள்ளுவப் பெருமான் அம்மையின் மனத்தின் எண்ணச் செயல்கள் விபரீத வழி செல்லும் செயலை மாற்றி
4.நல்லதைச் செயலாக்க வைக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்ததார்.
தன் மனைவியை வீட்டின் பின்புறம் அழைத்துப் போய் அங்குள்ள சிறு கல்லின் மீது அம்மையைச் சிறுநீர் பெய்யச் செய்தார்.
வெறும் உடலின் கழிவு நீரைக் கொண்டே தமது சித்தின் திறத்தால் அக்கல்லையே சொக்கத் தங்கமாக மாற்றி அமைத்தார், “தான் ஒரு சித்தன்…! என்ற சூட்சமத்தை அம்மையிடம் காண்பித்தார் வள்ளுவர்.
“கல்லைக் கூடத் தங்கமாக மாற்றும் செயல் திறன்…” நம்மிடமே உள்ள பொழுது
1.வெறும் உலக ஆசையைத் தூண்டி அந்தச் செயல் வீரியத்தை நாம் பெற எண்ணினால்
2.நமது எண்ணச் செயலிலும் மாற்றுக் கலந்தால் தங்கம் மாசுபடுவது போல் ஆகிவிடும்.
3.நல் வழி செல்வதே நமக்கு நன்மை பயக்கும்… தியான வழி அதிலேயே ஆகாரம் பெறுவோம்.
4.சரீர நலத் தொடருக்கும் நம்மிடம் கை வசம் நெசவுத் தொழில் உள்ளது.
5.எந்த அவதார நிலை சூட்சமமோ அது தொடங்கப் போகின்றது…!
6.ஆகவே அனைத்தும் நல்லதாகவே நடக்கும்…! என்று கண்டிப்பது போல் தன் மனைவிக்கு எடுத்துரைத்தான் வள்ளுவச் சித்தன்.
இந்தச் சம்பவம் வாசுகியம்மைக்கு… வள்ளுவன் வேதத்தை உலகினுக்கு அவர் பெயரிலேயே வெளியிடக் காரணமாக அமைந்த சம்பவம் ஆகும்…!
இதை எல்லாம் தவத்தில் ஆழ்ந்திருந்த கொங்கணர் உணர்கின்றார். வள்ளுவச் சித்தரின் இந்தச் செயல் ஒரு படிப்பினையாக வெளிப்பட்டதன் கருத்தின் பயனை ஞான திருஷ்டியால் முழுமையாக அறிந்து கொண்டார் கொங்கணர்.
வாசுகி தனக்கு உணர்த்தியதையும் வள்ளுவரின் ஆற்றலையும் அவர் உணர்ந்த பின் அதனால் தனது வைராக்கியத்தை வளர்த்து சக்தி நிலை பெறக் காரணமாக அமையப் பெற்றுச் சிந்தனையின் வசமாக ஆனார்.
வெளி உலகின் நிகழ் செயல் தன்மையின் முழுப்பயனையும் வீட்டினுள் இருந்து கொண்டு இல்லற ஒழுக்கவியலில் செயல்பட்டுத் தவத்தின் சிறப்பை நல்லறமாக நடத்தி ஒழுகி வரும் “வள்ளுவன் வாசுகி அம்மை பெறுகின்ற ஞானப்பால்…” உலகினுக்கு ஓர் நீதி போதனையாக வெளிப்பட வேண்டும்…!
வாசுகி அம்மை வீட்டில் இருந்து ஞானத்தைப் போதித்தாள். ஆனால் இந்த வள்ளுவரோ உலகம் அறிந்து கொள்ள முடியாத தன்மையில் “தான் ஒரு சித்தன் செயல் நிலைக்கும் மேற்பட்ட சக்தி பெற்றவன்…!” என்பதை வாசுகி அம்மையை வைத்துத் தங்கம் செய்வித்துக் காட்டினார்.
வறுமைப் பிணி விரட்டும் சக்தி மனித எண்ண ஞான வளர்ச்சியின் செயல்பாட்டில் உள்ளது என்ற போதனையையும் காட்டி உண்மையின் சூட்சமத்தைத் தெளிவுபடுத்தி விட்டார்.
ஆக…
1.வாசுகி சொல்லால் போதனைப்படுத்தினார்.
2.ஆனால் சொல்லாமல் செய்வித்து வாசுகி அம்மையாரின் ஞானம் வளர் ஞானமாக்கும் தொடருக்கு வள்ளுவர் வித்திட்டு விட்டார்.
3.என்னே இவர்கள் பெற்ற தவத்தின் பயன்…! என்று வியந்தார் கொங்கணர்.
இது போன்ற வறுமைப் பிடிப்பைப் போக்கச் செல்வ நாயகன் ஆவேன். என்னை எண்ணும் அலைத் தொடருக்கு சக்தியளிக்கும் செல்வச் சக்தி பெறுவேன்.
இத்தகைய “ஞானச் செல்வங்கள்…” வறுமையில் வாடும் கொடுமையை வெல்வேன். செல்வ நாயக சூட்சமம் பெற்று உலகுய்ய வழி காட்டிடுவேன்…! என்ற உறுதி கொண்டார் கொங்கணர்.
வீட்டில் உள்ளதோ வறுமை… வீட்டில் உள்ளதுவும் ஒன்றில்லை…!
1.தன் சூட்சம சரீரம் செயல்படும் இரகசியம்
2.இந்தத் தூலத்தில் உள்ளதடா அத்தனை செல்வங்களும்…! என்று எனக்கே போதனை தந்துவிட்டார்…
3.சொல்லாமல் உபதேசிக்கும் வள்ளுவன் வாக்கு…!

கூட்டுத் தியானத்தின் மிக முக்கியமான பலன்
நாம் எடுக்கும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று கூட்டுத் தியானத்தின் மூலம் ஒன்று சேர்த்த உணர்வு கொண்டு வெளிப்படுத்துகின்றோம்.
1.எல்லோருடைய செவிகளிலும் இந்த உணர்வின் ஒலிகள் படுகின்றது
2.அந்த உணர்வுகள் கண்களால் கவரப்படுகின்றது… அதே சமயத்தில் உயிரிலே மோதுகின்றது.
3.துருவ நட்சத்திரத்தின் உணர்ச்சிகள் இரத்தநாளங்களில் கலக்கின்றது.
அந்த அருள் சக்தியைப் பெற்று “எல்லோரும் பெற வேண்டும்…” என்று அதைப் பாய்ச்சப்படும் பொழுது அவர்கள் உடலில் அறியாது சேர்ந்த தீய வினைகளை மாற்றும் சக்தி உங்களுக்குக் கிடைக்கின்றது.
கூட்டுத் தியானத்தின் மூலம் இந்த உணர்வுகளை நாம் வெளிப்படுத்தும் பொழுது பூமியில் உள்ள காற்று மண்டலத்திலிம் இது அடர்த்தியாகப் பரவுகின்றது.
உதாரணமாக ஒரு நோயாளியை நீங்கள் பார்க்க நேர்ந்தாலும் அடுத்தகணம் ஆத்ம சுத்தி செய்து விட்டு மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் உடல் முழுவதும் படர்ந்து… நோயிலிருந்து விடுபட்டு அவர்கள் குடும்பமும் தொழிலும் நலமாக வேண்டும்…! என்று சொல்லுங்கள்.
இப்படிச் சொல்லப்படும் பொழுது அவர்கள் நோய்களை மாற்றியமைக்கக் கூடிய திறனும் உங்களுக்குக் கிடைக்கின்றது. அவர்கள் நோய் உங்களுக்குள் வராது தடுக்கும் சக்தியாகவும் உங்களுக்குள் இது வருகின்றது.
ஏனென்றால் பிறர் படும் துயரங்கள் வேதனைகளை எல்லாம் நாம் கேட்டறிந்தால் அதே உணர்வுகள் இயக்கப்பட்டு அதே வேதனைப்படும் அணுக்களை நமக்குள்ளும் வளர்த்து விடுகின்றது. அதனால் நம் உடலிலும் நோய்கள் உருவாகக் காரணமாகின்றது.
கோபப்படுவோரை அடிக்கடி உற்று நோக்கினால் அந்த உணர்வுகள் நமக்குள் இரத்தக் கொதிப்பாக மாற்றி விடுகின்றது. ஆஸ்த்மா நோயால் அவதிப்படுவோர் சொல்வதைக் கேட்டு உணர்ந்தால் நமக்குள்ளும் அந்த ஆஸ்மா நோய் வந்துவிடுகின்றது.
சர்க்கரைச் சத்து உள்ளோர் நிலைகளைக் கேட்டறிந்தால் அவர்களிடம் பேச நேர்ந்தால் அதே சர்க்கரை நோய் உங்களுக்குள் மாறி வந்து விடுகின்றது.
வாத நோய் முடக்குவாதம் போன்றவர் உணர்வுகளைக் கேட்டறிந்தால் அதே உணர்வுகள் உங்கள் உடலில் உள்ள இரத்தத்தில் கலக்கப்பட்டு அதே தீமை இங்கேயும் வந்து விடுகின்றது.
அதைப் போன்ற தீமைகள் நமக்குள் வராது தடுக்க வேண்டும் என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை நாம் அவசியம் பெற்றுப் பழகுதல் வேண்டும்.
பின்…
1.நாம் மொத்தமாக ஒரே உணர்வுடன்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எல்லோரும் பெற வேண்டும் என்று சேர்ந்து சொல்லும் பொழுது
3.எல்லோர் செவிகளில் பட்டு இந்த உணர்வலைகள் எல்லோர் உயிர்களிலும் மோதப்பட்டு
4.உடலில் உள்ள இரத்தத்தில் கலக்கப்படும் பொழுது தீமைகளைப் போக்கிடும் சக்திகளாக நாம் பரப்ப முடிகின்றது.
இப்படிப் பரப்பபடும் இந்த உணர்வலைகள் காற்று மண்டலத்தில் பரவும் போது அந்த உணர்வுகளை எப்போது வேண்டுமென்றாலும் நீங்கள் பெறலாம்.
அந்த வலுக் கொண்ட உணர்வுகள் மூலம்
1.பிறருடைய தீமைகளை போக்கும் வல்லமையும் நீங்கள் பெறலாம்.
2.பிறருடைய தீமைகள் உங்களுக்குள் வராதபடி தடுக்கும் அந்த ஆற்றலையும் நீங்கள் பெறலாம்.
ஆகவே இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்பவர்கள் யாருடைய நோய்களையும் நீங்கள் கவர்ந்து விடாதீர்கள். அவர்கள் நோயைப் போக்கிடும் சக்தியாகவே நீங்கள் செயல்படுங்கள்.
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று அந்த உணர்வின் துணை கொண்டு அவர்கள் உடலில் உள்ள தீமைகள் நீங்க வேண்டும்… அவர்கள் உடல் நலம் பெற வேண்டும்… அவர்கள் குடும்பங்கள் ஒன்றுபட்டு வாழும் அந்த அருள் சக்தி பெற வேண்டும்… குடும்பத்தில் பற்றுடன் பாசத்துடன் பண்புடன் வளர வேண்டும்… அவர்கள் உணர்வுகள் அந்தக் குடும்பத்தில் மகிழ்ச்சியூட்டும் உணர்வாக வளர வேண்டும்… தொழில்கள் வளம் பெற வேண்டும்…! என்று நாம் இப்படித்தான் எண்ணிச் செயல்படுதல் வேண்டும்
மாறாக… பிறரைப் பழித்துப் பேசுவதோ தவறு செய்வோரை உற்று நோக்கித் தவறு செய்கிறான்… தவறு செய்கிறான் என்ற உணர்வுகளை அடிக்கடி எடுத்துக் கொண்டாலோ… நாமும் தவறு செய்வோராக மாறி விடுகின்றோம்.
அந்தத் தவறு செய்வோர் உணர்வுகள் நமக்குள் வராது அருள் உணர்வு கொண்டு நாம் தூய்மைப்படுத்தி அவர்களும் தவறிலிருந்து விடுபட்டு மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்திட வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
1.ஆண்டவன் வீற்றிருக்கும் அந்த ஆலயம் பரிசுத்தமாக வேண்டும் என்று எண்ணி விட்டால்
2.அந்த மனிதனை நாம் எண்ணுவதில்லை…. அந்த உயிரை ஆண்டவனாக எண்ணுகின்றோம்.
3.அவனால் உருவாக்கப்பட்ட நல்ல குணங்களைத் தெய்வமாக எண்ணுகின்றோம்.
நல்லது எண்ணும் பொழுது நல்லது செய்கின்றோம். தக்க சமயத்தில் நண்பன் நமக்கு நன்மை செய்தான் என்றால் அவனைத் தெய்வமாகக் கருதுகின்றோம்.
ஆனால் தொழிலிலோ மற்ற நிலைகளிலோ நண்பருக்குள் குறையானால் துரோகி என்று பழித்துப் பேசி ஒருவருக்கொருவர் பகைமையாகி விடுகின்றது.
இருவருடைய உணர்வும் இங்கே தான் உள்ளது…!
நல்லது செய்கிறான் என்று எண்ணினால் நல்லவனாக மாற்றுகின்றது. தீமை செய்கிறான் என்ற உணர்வாக மாற்றினால் இருவருடைய உணர்விலும் பகையாகி விடுகின்றது.
நண்பன் எதிரியாக மாறுகின்றான். எதிரியான உணர்வே வளர்க்கின்றது. நமக்குள் இருக்கும் நல்ல குணங்களை மாற்றி விடுகின்றது. இதைப் போன்ற பகைமையை அகற்றிட ஒவ்வொரு நொடியிலும் அருள் உணர்வைச் சேர்த்து பழக வேண்டும்.
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்தால் அது விஷ்ணு தனுசு. எல்லாவற்றிலும் முழுமையாக அந்த அருள் உணர்வுகளைச் சேர்த்துக் கொண்டே வந்தால் வேகா நிலை அடைகின்றோம். இதைத் தான் தனுசுகோடி என்று சொல்வது.
1.நம் உடலில் எல்லா குணங்களிலும் மற்ற எல்லாருடைய உணர்வுகளிலும்
2.அருள் உணர்வை வளர்க்கும் சந்தர்ப்பமாக மாற்றிடும் போது எல்லா குணங்களையும் மாற்றி
3.உயிருடன் ஒன்றிடச் செய்யும் போது ஒன்று என்ற நிலையை அடைகின்றது.
அதை நீங்கள் ஒவ்வொருவரும் பெற வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் (ஞானகுரு). அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைத் தான் உங்களிலே தொடர்ந்து பாய்ச்சுகின்றேன்.
ஆகவே நீங்கள் ஒவ்வொருவரும் தீமையிலிருந்து விடுபட்டுப் பிறவியில்லா நிலை அடைய வேண்டும். இருளை அகற்றும் வல்லமை பெற வேண்டும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
உங்களுக்குள் இருக்கும் நல்ல குணங்களை மறைத்திருக்கும் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும். அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நீங்கள் செல்ல வேண்டும் என்பதற்கே இதைப் பதிவு செய்கின்றேன்.
இந்த விஞ்ஞான உலகில் இனி வரும் பெரும் தீமைகளிலிருந்து விடுபடவேண்டும்.
குருநாதர் எமக்குக் கற்றுக் கொடுத்த நிலைகளை எல்லாம் என்னுடன் வைத்துக் கொண்டு உங்களிடம் சொல்லாமல் மறைத்துக் கொண்டிருந்தால் என்னாகும்…?
எனக்குள் மறைந்துவிடும்.
ஆனால், உங்களுக்குள் இதை உணர்த்தப்படும் பொழுது உங்களுடைய பார்வையால் சொல்லால் பேச்சால் மூச்சால் பலருடைய தீமைகளை மீட்டிடும் சக்தி உங்களுக்குள்ளும் வளர வேண்டும் என்ற “ஆசையில் தான்” சொல்கிறேன்.
சிந்தனையை மறைக்கச் செய்யும் நிலைகளை மாற்றியமைத்துத் தெளிந்த மனம் கொண்டு உயிருடன் ஒன்றிய ஒளியின் உணர்வாக அந்த ஞானத்தின் வழிகளில் ஒவ்வொருவரும் வாழ்ந்திட வேண்டும்.
நாம் நல்ல குணம் கொண்டு இருந்தாலும் நம் சந்தர்ப்பம் ஒரு அச்சுறுத்தும் உணர்வை நுகர்ந்து விட்டால் நல்ல குணத்துடன் சேர்ந்து அது பதிந்து விடுகின்றது.
அந்த அச்சுறும் உணர்வுகள் நமக்குள் விளைந்துவிட்டால் நல்ல குணங்களைக் காக்கும் செயலை இழந்து விடுகின்றது.
ஆகவே, அந்த அச்சுறுத்தும் உணர்வின் தன்மையை மாற்றிடும் உணர்வைச் சொல்லாக இங்கே உபதேசிக்கின்றேன்
சொல்லாகச் சொல்கிறேன் என்றால் அந்த அருள் ஞானிகள் நுகர்ந்த அந்த எல்லையில் என்னுடைய நினைவாற்றல் சென்றது. அதை நான் பெற முடிந்தது. பெற்று அதை வளர்த்துக் கொண்டேன்.
1.யாம் பெற்ற நிலையில் அந்த ஞானிகள் பெற்றதை யாம் இங்கே நினைவு கொண்டு சொல்லும்போது
2.உங்கள் நினைவாற்றல் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அந்த எல்லைகளுக்கே சென்று
3.அங்கே உருவான அந்த அருளாற்றல்களை நீங்களும் நுகர முடியும்.
உதாரணமாக ரோட்டில் இன்ன இடத்தில் ஆக்சிடென்ட் ஆனது என்று கேள்விப்பட்ட உடனே “ஆ…” என்று பதிவாகி விடுகின்றது. பின் அதை யாராவது சொன்னால் மீண்டும் நினைவு வந்து அந்த இடமே தெரிய (படம் போல்) ஆரம்பித்துவிடும். இதைப் போல
1.குருநாதர் கொடுத்த அந்த அருள் வழியில் யாம் உபதேசிப்பதை
2.நீங்கள் நினைவுக்குக் கொண்டு வரும் பொழுதெல்லாம்
3.அவர் கண்டுணர்ந்த பல தீமைகளை வென்ற அந்த அருள் உணர்வுகள் உங்களுக்குள் வரும்.
4.அப்பொழுது உங்களுக்குள் சித்திரை – சிறு திரையாக நல்லதை மறைத்து கொண்டிருக்கும்
5.அந்த நல்லதை அறிய விடாது செய்யும் நிலைகளை மாற்றி
6.உயிருடன் ஒன்றிய ஒளியின் உணர்வின் அணுவாக மாற்றிடல் வேண்டும் என்பதற்கே இதை நினைவுபடுத்துகின்றேன்.
பள்ளியில் படித்த பின் படித்தை நினைவு கொண்டார்களா என்பதை தேர்வில் பரீட்சித்துப் பார்க்கின்றனர்.
படித்தது நினைவு வந்தால் தேர்வில் எழுதிவிடுகின்றார்கள். நினைவுக்கு வந்தால் சிந்திக்கும் தன்மை வருகின்றது. சிந்தித்துச் செயல்படும் அந்தச் செயலாக்கத்தின் படி தேர்வில் தேர்ச்சி பெறுகின்றார்கள்.
அதைப் போன்று தான் யாம் உபதேசிப்பதை நினைவுக்குக் கொண்டு வந்து தீமைகளை எப்படி மாற்றுவது என்ற சிந்தனை கொண்டால் சிந்தித்துச் செயல்படும் அந்த அருள் ஞானம் உங்களுக்குள் வருகின்றது.


“மானிடராகப் பிறப்பது மிகவும் அரிது…! என்று அக்காலத்தில் சொன்னதன் உட்பொருள் என்ன…?
நாம் இந்த வாழ்க்கைக்குப் பின் உடலை விட்டுச் சென்றால் இன்னொரு மனிதப் பிறவி எடுப்பது என்றால் இன்னொரு உடலுக்குள் சென்றால் தான் அது வர முடியும்.
ஆனால் பாம்பு தீண்டினால் உடலுக்குள் விஷமான பின் பாம்பின் நினைவு கொண்டு அதனின் ஈர்ப்புக்குள் சென்று பாம்பாகப் பிறப்போம். பாம்பாகப் பிறந்தாலும்…
1.அந்தப் பாம்பை ஒரு காகமோ கழுகோ கொத்தினால் அது காகமாகவோ அல்லது கழுகாகவோ அடுத்து மாறுகின்றது.
2.மனிதன் அடித்தால் தான் மனிதனாகின்றது.
ஆக… அதனின் சந்தர்ப்பத்திற்கொப்பத்தான் மனிதனாக ஆவதும்… காகமாவதும்… கழுகாக ஆவதும்… நரியாவதும் நாயாவதும்…
1.ஒன்றைக் கொன்று புசிக்க எண்ணும் உணர்வுகள்
2.அது கொன்று புசிக்கும் போது அதனின் நினைவு கொண்டு தான் இப்படி உடல்கள் மாறுகின்றது.
அதே சமயத்தில் மனிதனுக்குள் வந்து மனித உருப் பெறும் கருவானாலும் இப்பொழுது எல்லாம் குடும்பக் கட்டுப்பாடு என்று இருக்கிறதல்லவா…!
எத்தனை உயிரினங்களைக் கொல்கிறோமோ அத்தனையும் நமக்குள் இருக்கின்றது. அதில் எது முந்திக் கருப்பைக்கு வருகின்றதோ அது தான் மனிதனாகப் பிறக்கின்றது.
கருப்பைக்கு வரவில்லை என்றால் அதிலே விந்துகள் கசிந்து வீணாகி விட்டால் அந்த விந்துக்குள் கலந்த அந்த உயிரணுக்கள் மனித உடலுக்குள் சென்றாலும்
1.சாக்கடைக்குள் வந்தால் சாக்கடையில் உருவாகும் புழுவாக மாறுகின்றது.
2.மற்ற தாவர இனங்களிலோ செடிகளிலோ பட்டால் தாவர இனத்தின் சத்தை நுகர்ந்து அங்கே கருவாகி புழு பூச்சியாக மாறுகின்றது.
3.கடலில் விழுந்தால் அங்கே கருவாகி அந்த விந்துகளை மீன் விழுங்கினால் அந்த மீனின் ரூபமாக உருவாகின்றது.
மனித உடலுக்குள் கசியும் விந்துகள் வீணானால் அந்த உணர்வின் தன்மை கொண்டு அதிலே வரும் கரு முட்டைகள் இப்படி மாற்றிக் கொண்டே உள்ளது.
மனிதனாகும் தகுதி இருந்தாலும் மனிதனல்லாத பிறவிக்குப் போகும் நிலை வந்து விடுகின்றது. எல்லாமே சந்தர்ப்பம் தான். இயற்கையின் நிலைகள் இப்படி எல்லாம் மாறுகின்றது.
ஆககே நாம் எதுவாக ஆக வேண்டும்…? என்று ஒவ்வொருவரும் சற்று சிந்தியுங்கள்.
இந்த உடலுக்குப் பின் உணர்வை ஒளியாக மாற்றி… உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக நாம் பெறுதல் வேண்டும். அது தான் மனிதனின் கடைசி எல்லை.
எத்தனையோ கோடி உணர்வுகள் நமக்குள் உண்டு. அதிலே உயிரைப் போன்ற உணர்வின் தன்மை ஒன்றென இணைந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் கவர்ந்து நாம் ஒளியாக மாறுதல் வேண்டும்.
வேகா நிலை பெற்ற ஞானிகளின் அருள் உணர்வை நாம் தியானித்து அதை நம் உடலில் பெருக்கி நாமும் வேகா நிலையாகி இன்னொரு பிறவிக்குப் போகாதபடி “போகாப்புனல்…” நாம் இந்த உடலிலேயே உணர்வை ஒளியாக மாற்றுதல் வேண்டும்.
நமது குரு மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவருடைய உடலுக்குப்பின் உயிர் என்ற உணர்வு கொண்டு அவர் ஒளியானார். துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் ஏகாந்தமாக வாழ்கின்றார்.
அக்காலத்தில் வாழ்ந்த ஞானிகளும் வானுலக ஆற்றலை எடுத்துத் தன் குடும்பத்தைச் சார்ந்தவர்களின் உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களை சப்தரிஷி மண்டலங்களின் துணை கொண்டு அங்கே இணைத்தனர்.
அதே வழிப்படி நாமும் நம்மைச் சார்ந்தவர்களை விண் செலுத்தப்படும்போது அந்த உணர்வை நாம் கவர்ந்தால் நாமும் அங்கே அழைத்துச் செல்லப்படுகின்றோம். இந்த முறைப்படி நாம் வரலாம்.
1.மீண்டும் மீண்டும் மனிதன் என்ற நிலைகள் வரப்படும் பொழுது
2,மனிதனின் ஈர்ப்புக்குள் வந்தால் நாம் இங்கே பிறவிக்கு வந்து விடுகின்றோம்.
ஆனால் அருள் உணர்வுகளைப் பெற்றால் நம்மை அங்கே மிதக்கச் செய்யும். அதன் வழி நாம் செல்ல
1.நம் குரு காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற ஏங்கித் தியானிப்போம்.
2.வேகா நிலை என்ற உணர்வை இந்த உடலிலேயே உருவாக்குவோம்…!
ஏனென்றால் உயிர் வேகுவதில்லை… உயிருடன் ஒன்றி ஒளியாக்கினால் நம் உணர்வுகளும் வேகுவதில்லை என்ற நிலைக்கு நாம் அனவைரும் செல்வோம் என்று பிரார்த்தித்துக் கொள்கின்றேன் (ஞானகுரு).

கர்வத்தை அகற்றினால் தான் ஞானம் பிறக்கும் – ஈஸ்வரபட்டர்
கொங்கணர் தன் ஞான வளர்ச்சிக்கு வித்தாக அன்று தேர்ந்தெடுத்துப் பிட்சை கேட்ட இல்லம் “உலகுக்குப் போதனை தந்த வள்ளுவனார் வாசுகி வாழ்ந்து வந்த இல்லம் தான்…!”
பிச்சாந்தேஹி..! என்று பல முறை கேட்டும் (ஒரு முறை தான் கூப்பிட வேண்டும் என்பது நியதி) அன்னமிட வராத காரணமும் பசியின் ஆதிக்கம் அன்று அதிகரித்து விட்டது.
அதே சமயத்தில் எச்சமிட்ட கொக்கை எரித்த தன் வல்லமையை நினைத்துக் கர்வம் மீண்டும் தலைக்கேற அதன் வழி கோபத்தின் வசமாக ஆவேசத்துடன் படபடத்துப் போன அந்த மகான் விழி சிவந்து நாசி புகை கிளம்ப கோபக் கனலாகத் தகித்து நின்றார்.
தனக்கு அன்னமிட வராத காரணம் அறியாமல் இங்கிருந்து போகக் கூடாது என்ற எண்ணம் கொண்டு விறைத்து நின்றார்.
வெளி வந்த வாசுகி அம்மையும் கோபக்கனலாக ஜடாக்கினி மந்திர விழி பிதுங்கும் செயலாக நிற்கும் முனிவரின் நிலை கண்டு “எதனால் இந்த நிலை வந்தது…?” என்று சிந்திக்கத் தலைப்பட்டார்.
1.பின் தன் அறிவின் ஞானத்தால் தெளிந்து
2.முனிவரின் கோபத்தின் மூல காரணத்தையும் அறிந்து…
3.அவரின் “நான்” என்ற நிலை கண்டு அமைதியாகச் சிரித்தார்.
வெகுண்டெழுந்த கோபத்தால் முனிவன் வாசுகி அம்மையிடம் “ஆஹா… ஓர் தபசியைக் காக்கச் செய்த பின்னும்.. பல முறை குரல் கொடுத்தும்.. வெறும் கையோடு வந்ததன் காரணம் என்ன..? மமதை கொண்டு தாமதமாக வந்ததன் காரணம் கூறு..! என்றார் கொங்கணர்.
வாசுகி அம்மையோ அந்த முனிவரின் கர்வத்தை அடக்கும் விதமாக… முனிவரின் கோபத்தின் மூல காரணத்தை நொடியில் கூறி அவர் தம் கர்வத்தை நீக்கினார்.
“என்னையும் கொக்கென்று நினைத்தீரோ கொங்கணரே…!” என்றார் வாசுகி.
அந்தச் சொல்ல்லால் திகைத்துப் போன கொங்கணரும் தன் கோப நிலையை மாற்றிக் கொண்டு வீட்டிற்குள் இருக்கும் இந்தப் பெண் பிள்ளை கூறியதைக் கேட்டு அமைதியாகச் சிந்தனையின் வசமானார்…!
ஆற்றோரம் அமைதி பெறவேண்டி எடுத்த தவம் முற்றுப் பெற்று சக்தியின் பரிபூரணத்துத்தை முழுமை பெற விடாமல் என் கோபமே எனக்குத் தடையாகிப் போனது என்று உணரத் தொடங்கினார்.
காரணம்… அன்று நான் அமர்ந்திருந்த மரக்கிளை மேல் அமர்ந்த கொக்கு தன் எச்சத்தை இட அது என் தலை மேல் விழுந்தது. பகுத்தறிவற்ற ஓர் பறவை அறியாமல் செய்துவிட்ட செயலை என்னால் பொறுக்க முடியவில்லை.
பொறுக்காமல் நான் பெற்ற சக்தியின் செயல் கொண்டு சுட்டெரித்து விட்டேன்.
1.எச்சமிட்ட அந்தக் கொக்கை நான் சுட்டெரித்தேன்.
2.இன்றோ இந்தப் பெண்மணி என் கோபக்கனலையே சுட்டெரித்து விட்டாள்.
3.எம் அகத்தினைக் குளிரச் செய்து எனது “நான்…” என்ற அகங்காரத்தைப் பொடிப் பொடியாக்கி விட்டாள்.
4.வீட்டினுள் இருந்து கொண்டு இல்லறப் பயன் ஒழுகும் இந்தப் பெண்மணி பெற்ற தவத்தின் பேறு தான் என்னே…?
5.நான் காட்டில் தவம் கிடந்து என்ன பயன்…? இவள் அறிவின் ஞானக் கண் திறந்தாள் என்றெல்லாம் சிந்தித்தார் கொங்கணர்.
வாசுகி அம்மையைக் கும்பிட்டு “அம்மா ஞானம்பிகே..!” என் கர்வம் ஒழியப் பெற்றது. புத்துணர்ச்சி பெற்றேன். ஆனால் திரும்பும் முன் ஓர் காரணத்தைப் பணிவோடு கேட்கின்றேன்…. பதில் கூற வேண்டும்…! என்று பணிவோடு பகர்ந்து… அன்னமிடக் காலதாமதமாக வந்த காரணத்தைக் கூற வேண்டும்…! என்று வேண்டினார்.
வாசுகி அம்மை கூறுகின்றார்கள்…!
1.மண் சட்டியில் உணவில்லை (காரணம் வறுமை)
2.ஆதலால் விண் சட்டியில் உணவு உட்கொண்டிருந்தோம்…! (விண்ணின் ஆற்றலை எடுத்துக் கொண்டிருந்தோம்)
3.உமது குரல் எட்டா நிலையான அந்தப் பரவசத்தில் ஆழ்ந்திருந்ததாலேயே காலதாமதம் ஆனது…! என்று சொல்கிறார்.
அம்மா..! இவ்வளவு ஞானத்தையும் உமக்குப் போதித்த குரு யாரம்மா…? என்றார் கொங்கணர்.
அவன் ஒரு “கசாப்புக் கடைக்காரன்…!” என்றார் கொல்லாமை போற்றிய வாசுகி அம்மை.
என்ன…! கசாப்புக் கடைக்காரன் ஞானம் போதித்தானா..? என்று ஆச்சரிய மேலிட்டால் கொங்கணவர் திகைத்து விட்டார்.
ஆம் கொங்கணரே..! கசாப்புக் கடைக்காரன் தான் என் குரு…! உண்மையைக் கூறுவது என்றால் என் உயிர் தான் அந்தக் கசாப்புக் கடைக்காரன்.
பேரண்ட இரகசியம் தெரியுமா…? என்றார் வாசுகி.
ஓர் உயிர் சக்தி சரீர கதி வளர்ச்சிக்கு உயிரணுக்களை உண்டு… உண்டுதான் வளர்ச்சியின் வலுவாகின்றது. ஆனால் அதுவே உணர்வுகளின் அதி ஆவேச செயலுடைய சரீரம் தொட்டுச் செயல்படும் “அணு செல்களின் மாமிசம்… என எண்ண வேண்டாம்….!”
1.உயரிய உயிர் சக்திக்கு வலு ஊட்டும்
2.காற்றின் ஆகார அமில அணுக்களைக் கொன்று சமைத்து உண்ணும் கசாப்புக் கடைக்காரன்… “என் உயிர் சக்தி தான்…”
3.அதுவே என் குரு…! என்று கொங்கணருக்கு சூட்சமப் பொருள் விளங்கக் கூறுகின்றார் அந்த வாசுகி அம்மை.
உட்கொள்ளத் திட ஆகாரம் இல்லை என்றால்… வல்லமை கொண்ட உயரிய சக்தி பெற்ற முனிபுங்கவன் காற்றில் ஆகாரம் உண்ணும் ஞானப்பால் உட்கொண்டே தன் வளர்ச்சிக்கு வித்தாக்க வேண்டும் என்ற இந்தச் சூட்சமத்தை வாசுகி கூறியருள “கொங்கணர் வைராக்கியம் பெற்றார்…! கோபத்தை அகற்றித் தன் ஞானக்கண் திறந்தார்…!”
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
எத்தனையோ ஆயிரம் பேர் என்னை (ஞானகுரு) எண்ணிக் கொண்டு வருகின்றீர்கள். சாமி…! எனக்குக் கஷ்டமாக இருக்கின்றது… தலை வலிக்கின்றது… மேல் வலிக்கின்றது… என்று இதையெல்லாம் பாய்ச்சுவீர்கள். இது உங்கள் உணர்வு.
1.என் உணர்வு உங்களிடம் இருக்கின்றதனால்
2.நீங்கள் எந்த வகையில் என்னை (ஞானகுரு) எண்ணிப் பதிவுப் செய்கின்றீர்களோ
3.அந்த உணர்வு தான் உங்களிடம் வருகின்றது.
சாமி (ஞானகுரு) தான் கஷ்டத்தை எல்லாம் தீர்க்க வேண்டும்…! என்று எண்ணிப் பதிவு செய்திருந்தீர்கள் என்றால்
1.அது தான் உங்கள் நினைவிற்கு வரும்.
2.அந்த நினைவுடனே என்னிடம் வருவீர்கள்.
3.இப்படி எண்ணினீர்கள் என்றால் “என்னிடமிருந்து நல்ல சக்திகளைப் பெற முடியாது…!”
இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
1.சாமி…! அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
2.அந்த உயர்ந்த நிலையை நாங்கள் பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணிணீர்கள் என்றால்
3.என்னிடமிருந்து உங்களுக்கு அந்த உயர்ந்த சக்தி கிடைக்கின்றது.
4.அது உங்களுக்குள் வலுவான நிலைகள் கொண்டு வளரும்.
என் கஷ்டமெல்லாம் நீங்கவில்லை…! ஒரே தலைவலியாக இருக்கின்றது…! எனக்கு இப்படித் தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கின்றது…! என்று இப்படிச் சொன்னால் இதைத்தான் வளர்த்துக் கொண்டே இருப்பீர்கள்.
அதே சமயத்தில் என்னிடம் பேசும் போது இதே உணர்வை பதிவு செய்து விட்டீர்கள் என்றால் என்னை நீங்கள் எண்ணும்போதெல்லாம் இங்கே என் ஆன்மாவில் வந்து மோதும்.
இதை எல்லாம் தடுப்பதற்கு அந்த மகரிஷிகளின் உணர்வை எனக்குள் நான் வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும். கொஞ்சம் ஏமாந்தேன் என்றால் உங்களை மாதிரி என்னையும் கீழே கொண்டு வந்துவிடும்.
ஆகவே அந்த உணர்வுகளை மாற்றி அமைப்பதற்கு அந்த இருபத்தி நான்கு மணி நேரமும் அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்திலேயே என் நினைவுகளைச் செலுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
அதிலே சில நிலைகள் எல்லாம் அதிகமாகிப் போனதென்றால் அதைக் கழிப்பதற்கு நான் படுகின்ற சிரமம் எனக்குத்தான் தெரியும்.
குருநாதர் கூட காட்டிற்குள்ளே போகும் போது இத்தனை சிரமம் எனக்குத் தெரியவில்லை.
முதலில் ஏதேதோ சொல்வார். அப்போது அந்த உணர்வின் தன்மை தனக்குள் வளர்த்துக் கொண்ட பின்
1.தீமையின் நிலைகளில் இருந்து விடுபடும் சந்தோஷம் வரும்.
2.கொஞ்ச நேரத்திற்குக் கஷ்டமாகத் தெரியும்… அப்புறம் சந்தோஷமாக இருக்கும்.
3.எவ்வளவு நேரம் வருத்தப்பட்டமோ அந்த அளவுக்குச் சந்தோஷத்தை உருவாக்கச் செய்யும்.
அப்படித்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் என்னை வளர்த்தார். உங்களுக்கும் அப்படித்தான் கொடுத்துக் கொண்டுள்ளோம்.
அந்த அருள் ஞானத்தின் உணர்வை உங்களுக்குள் எடுத்தால் தீமை விளைவிக்கும் நிலைகளை இது அடக்கி உங்களைத் தூய்மைப்படுத்தும்.


எல்லோருக்கும் நல்லது கிடைக்க வேண்டும் என்று உள்ளன்புடன் செய்தால் தான் “எந்தக் காரியமும் உயர்வடையும்…!”
நம் உடலில் உள்ள கல்லீரல் இருக்கிறது என்றால் அது உப நிலைகளை வைத்து அது மற்ற உறுப்புகளுக்கு இரத்தத்தை வடிகட்டிக் கொடுக்கின்றது.
அதே போல் பித்தப்பை என்றால் அதன் உணர்வுகள் தனக்குள் எடுத்து பித்தத்தை வடிகட்டி மீண்டும் நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவுடன் கலந்து எடுக்கும் போது ஜீரணிக்கும் சக்தியாகக் கொண்டு வருகின்றது.
1.பித்தத்தின் சுரப்பு மாறினால் அஜீரணமாகும்
2.அதிகமானாலும் குறைவானாலும் அஜீரணமாகும்
3.சம அளவு கிடைத்தால் தான் ஜீரண சக்தி சீராகும்.
வேதனை என்ற உணர்வு நமக்குள் அதிகரித்தால் அதனால் விஷத்தின் தன்மை அதிகமாக அந்தப் பித்தப்பை உமிழ்த்தினால் அந்த உறுப்பின் தன்மை பாழாகும்.
பொதுவாக… நாம் உணவை உட்கொள்ளும் போது அதற்குத்தக்க பித்த சுரப்பிகள் சுரந்து உணவைச் சீக்கிரம் கரைத்து விடுகின்றது.
ஆனால் விஷத்தை அதிகமாகக் கூட்டும் போது பித்தம் அதிகமாக உற்பத்தியாகும் நிலை வருகின்றது. அதனால் பித்தப்பை சுருங்கி விடுகின்றது.
1.தனக்கு வேண்டியதைக் கவரும் நிலையோ அல்லது அதிகமானதை வடிகட்டும் நிலையோ
2.அந்தச் சமப்படுத்தும் நிலை இல்லை என்றால்
2.அதன் மூலம் விஷத் தன்மை உடலில் சேமிப்பு அதிகரிக்கத் தொடங்குகின்றது.
பயில்வான்கள் எடுத்துக் கொண்டால் பத்துக் கோழி பத்து முட்டை என்று இப்படி எத்தனையோ சாப்பிட்டுப் பழகுவார்கள். அவர்களின் கடைசி நிலை என்ன ஆகும்…?
இவ்வளவு கடினமான உணவை உட்கொள்ளும் நிலை வரும் போது அதற்குத்தக்க விஷம் இல்லை என்றால் ஜீரணிக்கும் சக்தி இழந்து அவன் சீக்கிரமே துர்மரணம் அடைந்து விடுவான்.
ஆனால் சமமாக இருக்கும் வரை உற்பத்தியின் நிலைகள் சீராக வருகின்றது.
1.அதிகமாகப் பித்தங்கள் சுரக்கும் தன்மை ஆகிவிட்டால்
2.சிந்தனையற்ற நிலையாகி முரட்டுத்தனமான புத்தியிலே வளர்வான்.
இத்தகைய முரட்டுத்தனமானால் விஷத் தன்மைகள் வளர்ந்து பித்த சுரப்பிகளில் அது அதிகமாகின்றது.
ஒரு யானை தன் உணவுக்காக வேண்டி கடினமான தட்டைகளை எடுத்து அதைத் தன் வாயினால் மென்று உட்கொள்கிறது. அதே சமயத்தில்
1.அதற்குள் ஊறும் உமிழ் நீரின் விஷத் தன்மைகள் பட்ட பின்
2.அந்தத் தட்டைகளில் உள்ள சத்தை ஆவியின் தன்மையாக மாற்றி அதை மிருதுவாக மாற்றுகின்றது. (பிஸ்கட் போல் கரைகிறது)
அதே போல் அந்த மிருகத்தின் நிலைக்கொப்ப விஷத்தின் தன்மை கொண்டு… மனிதன் விஷமான உணவுப் பொருள்களை அதிகமாக உட்கொள்ளும் போது அந்த உடலில் உள்ள அணுக்களை மாற்றிவிடுகின்றது.
1.இன்று “பயில்வான்” என்று சொல்லலாம்
2.ஆனால் நாளடைவில் அவர்களுடைய உறுப்புகள் பாழடைந்து விடுகின்றது…
3.ஜீரணிக்கும் சக்தி இழந்து விடுகின்றது… சீக்கிரம் மரணம் அடைந்து விடுகின்றனர்.
ஆகவே இந்த உடலின் தன்மை எந்த நிலையில் இருந்தாலும் நாம் நீடித்திருக்கின்றோமா…? இந்த உடலில் இருக்கும் பொழுது எல்லாம் சேமிக்கின்றோம்… வளர்கின்றோம்…! ஆனாலும் எத்தனை காலம் வாழ்கின்றோம்…? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்…!
என்னை (ஞானகுரு) எடுத்துக் கொண்டால் நான் ஒன்றுமில்லாதவன். இங்கே வந்தேன். இந்தத் தபோவனம் என்ற கட்டிடத்தைக் கட்டி வைத்தாகிவிட்டது.
1.இருந்தாலும் இதை “எனது…” என்று சொந்தம் கொண்டாட முடியுமா…?
2.எல்லோருக்கும் நல்லது கிடைக்க வேண்டும் என்ற உயர்ந்த பண்புடன் நீங்கள் செய்கின்றீர்கள்… செயல்படுத்துகின்றீர்கள்.
3.இதை எனது (ஞானகுரு) என்று சொந்தம் கொண்டாடினால் என்ன ஆகும்…?
நீங்கள் எதற்காக இதைச் செய்தீர்கள்…?
தபோவனம் வரும் அனைவருக்கும் நல் உணர்வு பெறவேண்டும் என்ற அந்த அன்பு கலந்த உணர்வுடன் செய்தீர்கள். ஆனால் ஒரு சிலர் என்ன செய்கின்றார்கள்…?
என்னிடம் (ஞானகுரு) சக்தி இருக்கின்றது என்று சொன்னால் ஏமாற்றி எதையாவது முன்னாடி கொண்டு வந்து தர்மத்தைச் செய்வது போல் சொல்லி “நான் சொல்வதைச் செய்…” என்பார்கள்.
இதனின் செயல்கள் என்ன செய்கின்றது…? இது எல்லாம் சுயநலனுக்காகச் செய்வது…! அவர்களின் ஆசையில் நான் சிக்கினேன் என்றால் எனது ஆசையும் இங்கே கூடும். அப்படி ஆகக் கூடாது என்பதற்குத்தான் இதைச் சொல்கிறேன்.
ஆகவே… நான் உபதேசித்த அருள் ஞானிகள் உணர்வு கொண்டு… என்னால் உங்களுக்கு என்ன நன்மை ஏற்பட்டது…? என்ற உண்மையை உணர்ந்து நீங்கள் நன்மைகளைப் பெற்றீர்கள்.
1.அதன் வழியில் நன்மையைச் செயலபடுத்த நீங்கள் இயல்பாகச் செய்யுங்கள்.
2.அந்த உயர்ந்த பண்புடன் செய்தால் தான் அது எல்லோருக்கும் நல்லதாகும்.
ஒரு சிலர் பொருள்களை அதிகமாகச் செலவழித்து விட்டால் அவருடைய உணர்வு “நான் தபோவனத்திற்குச் செய்தேன்…” என்ற உணர்வுகள் வரும்.
இப்படிப்பட்ட உணர்வுகள் கொண்டு செயல்படுத்தும் பொழுது “நான் செய்தேன்…” என்ற உணர்வுகள் வரும்.
1.நான் செய்தேன் என்றால்…
2.அவர் செய்த அன்பின் தன்மையைப் பெருக்க விடாத நிலை ஆகி
3.நல்லதைச் செய்யத் தடைப்படுத்தும் நிலையாகி விடுகின்றது.
ஆகவே மனம் கனிந்த நிலைகளில் இந்த ஸ்தாபனத்திற்கு எது கொடுத்தாலும் “அந்த உள்ளன்புடன் வரும் நிலைகள் தான்” இந்தக் கட்டிடமோ மற்ற பொருளானாலும் அதைச் செயல்படுத்த முடியும்.
உதாரணமாக ஒருவருக்கு நீங்கள் பணம் கொடுக்கின்றீர்கள். வட்டிக்கு வரவு செலவுக்குக் கொடுக்கின்றீர்கள் என்றால் வாங்கிய பணத்தைத் திரும்பக் கொடுக்கவில்லை என்றால் என்ன சொல்வீர்கள்…?
அதை வாங்கும் தைரியம் உண்டு… பணத்தை எப்படித் திரும்ப வாங்க வேண்டும்…? என்று தெரியும்… என்பார்கள்.
இத்தகைய உணர்வின் வலிமை கொடுக்கும் பொழுது வாங்கியவருடைய நிலைகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாக நேர்கின்றது. ஆக இதைப் போன்ற நிலைகள் நாம் நுகர்ந்த உணர்வுக்கொப்பத் தான் பல நிலைகள் வருகின்றது.
கடினமான உணர்வின் தன்மை கொண்டு செயல்படுத்தினால் வேதனையும் பகைமையும் பழி தீர்க்கும் உணர்வும் தான் வளரும். அதை எல்லாம் மாற்றிப் பழக வேண்டும். ஏனென்றால் நம் உடலோ இந்தக் கட்டிடமோ எதுவும் நம்முடன் வரப் போவதில்லை.
ஆகவே… நம் குருநாதர் காட்டிய வழியில் நாம் வாழும் இந்தக் குறுகிய காலத்திற்குள் அருள் உணர்வைச் சேமித்து அதை வளர்த்து விளைய வைத்து உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரம் பெற வேண்டும். அது தான் முக்கியம்…!

இடும்பவனம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது
1.கரங்களைச் சேர்த்து
2.சரீரத்தில் தலை உச்சி முதல் உள்ளங்கால்கள் வரை
3.மேலிருந்து கீழும் கீழிருந்து மேலும் ஓடுகின்ற உயிர்ச் சக்தியின் ஒளி வட்டத்தில்
4.ஈஸ்வர வேதி மூலிகையை அமிலமாக உள் நுழைத்துச் செயல் கொண்டிட்ட செயல் என்ன…?
இடும்பன் என்றால் யார்…?
1.நல்வினைகளுக்கு எதிர்மறையாக தீவினைச் செயல்படுத்தும் குணங்கள் என்று எண்ணும் பொழுதே
2.முருக குணம் என்று போகப் பெருமான் நல் வினைப் பயன் காட்டியதைப் போல்
3.தீவினைப் பயன் என்ற தொடரில் உலகிற்குக் காட்டியவனப்பா இடும்பச் சித்தன்.
4.இடும்பன் சுட்டிக் காட்டிய அந்தக் குணங்கள் போகப் பெருமானுக்குப் போதனையைத் தந்திட்ட
5.அந்த இடும்பச் சித்தன் அகஸ்தியரின் சீடனப்பா…!
இன்றைய பழனியின் அன்றைய பெயர் இடும்பவனம். போகப் பெருமானால் அது கடம்பவனமாகி பூஜித்த தொடருக்குத் திரு ஆவினன் குடி என்று சித்தர்களால் பெயர் நாமம் சூட்சமாகச் சூட்டப்பட்டது.
1.போகமாமகரிஷியின் சப்த அலைகள் பதியப் பெற்றுள்ள அந்த மலையில் இடும்பச் சித்தரின் சப்த அலையும் உள்ளது.
2.அதை எடுக்கும் பக்குவத்திற்கு வர வேண்டும்.
இடும்பனால் காட்டப்பட்ட தீவினை குணங்களைப் பற்றி போகர் அறிந்திட்ட வழியில் மும்மலம் (கோபம். ஆணவம். காமம் – சபல குணங்கள்) நீக்கிய தன்மையில் முருகா…! என்ற ஆறு குணம் கொண்ட செயல் சூட்சமம் உள்ளது.
போகர் பெற்றது போல் நாமும் அந்த இடும்பச் சித்தரின் தொடர்பைப் பெற வேண்டும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
நீங்கள் எல்லோருமே அரும் பெரும் ஞானியாக வேண்டும். தெய்வீகக் குணங்களை எடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு நீங்கள் அந்த அருள் ஞானத்தை ஊட்டுங்கள்.
ஒரு தெளிவான நிலையை உருவாக்குங்கள். இந்த நாடு நலம் பெறவேண்டும் என்று உறுதிப்படுத்துங்கள்.
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தியை பெறவேண்டும் என்று ஏங்குங்கள். குருவின் அருளால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறவேண்டும் என்ற ஆசையை ஊட்டுங்கள்.
1.அனைவரையும் அந்தச் சக்திகளைப் பெறச் செய்யுங்கள்.
2.அவர்கள் இச்சைப்படட்டும்.
3.அருள் உணர்வுகளை அவர்கள் நுகரட்டும்.
4.அது இச்சா சக்தி.. கிரியா சக்தி…! என்று அந்த ஞான வழியில் வளரட்டும்.
ஆனால், “என்னைத் திட்டினானே… அவனை விடுவதா…?” என்று இச்சைப்பட்டால் அந்த உணர்வான பிற்பாடு அந்த ஞானத்தின் வழி கொண்டு அவனுக்குத் தொல்லைகளைத்தான் கொடுக்கச் செய்யும்.
ஒருவர் நல்லதாக வேண்டும் என்று துருவ நட்சத்திரத்தை இச்சைப்பட்டு எடுத்துக் கொண்டால் “நல்லதாக வேண்டும்..,” என்று அந்த ஞானத்தின் வழி நம்முடைய உணர்வுகள்.., “உணர்ச்சிகள் அங்கே இயக்கும்”.
நம்மையும் நல்லதாக்கும். அவர்களையும் நல்லதாக்கும்.
இன்று குடும்பத்தில் எடுத்துக் கொண்டோம் என்றால் எல்லா நியாயத்தையும் பேசுவார்கள். கடைசியில் பார்த்தோம் என்றால் அவரவர்கள் சுயநலத்திற்கு வந்துவிடுவார்கள்.
ஆகவே பொது நலத்தில் சுயநலம் வேண்டும்.
எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நான் எண்ணினால் நீங்களும் நான் நன்றாக இருக்க வேண்டும் என்று மரியாதை செலுத்துகின்றீர்க்ள்.
ஆனால்… என்னை நீங்கள் எல்லோரும் மதிக்கின்றீர்கள் என்று சொல்லிக் கொண்டு “நான் பெரியவன்…” என்று அதிகாரம் செய்தால்… எப்படி இருக்கும்…?
ஏனென்றால் எல்லோரும் ஒன்றாகச் சேர்த்து நாம் வலுவாக இயக்குகின்றோம். நீங்கள் மதிப்பதால் தான் எல்லோரும் மதிக்கும் நிலை வருகின்றது.
என்னை எல்லோரும் மதிக்கின்றார்கள் என்று எண்ணித் தலை கீழாக நின்று கொண்டு “என்னிடம் தான் சக்தி இருக்கின்றது… என்று சொன்னால்… சரியாகுமா..,? ஆகாது.
இந்தச் சக்திகளை உங்களிடமிருந்து தான் நான் பெறுகின்றேன். மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்குக் காட்டியது அதுதான்.
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மெய் ஞானிகளின் அருள் ஞான வித்தை ஊன்றினால் அதை அவர்கள் பருகும் பொழுது நமக்கு அந்தச் சக்தி கிடைக்கும்.


சொர்க்க வாசல்… சொர்க்கலோகம்…!
சூரியன் ஒரு காலம் அழிந்தாலும்… இந்த அகண்ட அண்டத்தில் பல விஷத் தன்மைகள் தாக்கினாலும்.. அதை எல்லாம் ஒளியாக மாற்றும் திறன் பெற்றது துருவ நட்சத்திரம். அதன் ஈர்ப்பு வட்டத்தில் இருக்கும் சப்தரிஷி மண்டலமும் அதன் வழி வாழ்கின்றது… வளர்கின்றது.
ஆகவே இருண்ட உலகமானது… மனிதனான பின் ஒளியின் உணர்வாகப் பரவுகின்றது. அந்த ஒளியின் உணர்வாகப் பரவும்போது அகண்ட அண்டமே ஒளியின் சிகரமாகிறது.
எத்தனையோ கோடி ஆண்டுகள் ஒளியுடன் ஒன்றாக இருக்கும் பொழுது… அதற்குப் பின் இந்த அகண்ட அண்டமும் ஒளியின் உணர்வாக ஆகும் பொழுது என்றும் நிலையான நிலை பெறுகின்றது
எத்தனையோ கோடி ஆண்டுகள் மனிதனாக வளர்ச்சி அடைந்து…
1.உணர்வுகள் ஒன்றாக்கப்படும் பொழுது… ஒளிக்கற்றைகளாக மாற்றி
2.விஷத்தை மாற்றிடும் தன்மை ஆங்காங்கு ஏற்பட்டால்
3.இந்த அகண்டமே முழுமையான ஒளியாக மாறுகின்றது.
இப்பொழுது இருண்ட நிலையாக இருக்கும் உணர்வுகளில் (உடலில்) ஒளியாக அறிந்து கொள்ளும் மனிதன் என்ற நிலைகளில்… எப்பொழுதுமே நாம் இதனை வளர்த்துக் கொண்டால் இனி பிறவி இல்லை என்ற நிலையை அடைய முடியும்.
ஆடு சாந்தமானது… ஆனால் நரியோ வலிமையானது. அந்த வலிமையான உணர்வை நுகர்ந்தால் அந்த ஆடு சிவ தனுசால் தாக்கப்பட்டு அதன் உணர்வுகள் மாற்றப்படுகின்றது… ஆடு நரியின் ரூபமாகின்றது…!
ஆகவே மீண்டும் மீண்டும் உடல் பெறும் சிவ தனுசு என்ற அசுர குணங்களை நாம் மாற்றி… நரகலோகத்திற்குச் செல்வதைத் தடுத்து… விஷ்ணு தனுசு என்ற உணர்வின் தன்மையை நாம் எடுத்து… அருள் உணர்வின் தன்மை கொண்டு சொர்க்க பூமியாக ஆக்கி… மகிழ்ந்து வாழும் தன்மை பெற்று…
1.உயிரான சொர்க்கவாசல் வழி சென்றால்
2.என்றுமே பிறவியில்லா நிலை அடைய முடிகின்றது.
ஆகவே மனிதனின் வாழ்க்கையில் நாம் இந்த உடலுக்குப்பின் பிறவி இல்லை. அதனால்தான் இராமாயணத்தில் “நேரமாகிவிட்டது…” என்று மணலைக் குவித்துச் சிவலிங்கமாக்கி இராமன் பூஜிக்கத் தொடங்கினார் என்று காட்டுகின்றனர்.
அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ பேரை நாம் பார்க்கின்றோம்… சந்திக்கின்றோம்… பழகுகின்றோம். அவர்கள் உணர்வுகள் நமக்குள் பதிவாகின்றது.
அப்படி நம்முடன் பழகிய அந்த உணர்வுகள் அனைத்தும்… அதாவது நாம் பழகியோர் அனைவரும்
1.அவர்கள் அருள் ஒளி பெற வேண்டும் என்று பூஜிக்கத் தொடங்கினால்
2.ஒவ்வொரு நிலையிலும் இதன் உணர்வுகள் ஒன்றாக்கப்படும் பொழுது “இராமலிங்கம்…!”
3.ஆக… எண்ணத்தைக் கொண்டு உணர்வின் தன்மை உயிரை ஒளியாக மாற்றுவது தான் அது..!
4.உடலில் உள்ள உணர்வுகள் அனைத்தும் உயிரைப் போல ஒளியாக மாற்றப்படும் போது தனுசுகோடி.
கோடிக்கரை… பல கோடி உணர்வுகள் கொண்டு இன்றைய மனித உடல் பெற்றது கரையாக (கடைசி நிலை) இருக்கின்றது. தனுசுகோடி என்று ஆகும் பொழுது உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரம் ஆகின்றது
விஷ்ணு தனுசைப் பயன்படுத்தினால் என்றுமே நம்முடைய உணர்ச்சிகள் ஒளிமயமாகும்…! என்ற நிலை தான் ஞானிகளால் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே நாம் எப்பொழுதுமே உயிர் வழி மகரிஷிகளின் அருள் சக்திகளைக் கவர்ந்து பழகுதல் வேண்டும். அது தான் விஷ்ணு தனுசு.
1.அடிக்கடி இதை நினைவுபடுத்துகிறேன்… (ஞானகுரு)
2.மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுங்கள்… இருளை அகற்றுங்கள்.
3.எந்தச் சந்தர்ப்பம் மனித வாழ்க்கையிலிருந்து வெளியே வந்தாலும் இந்த உயிருடன் ஒன்றிய ஒளியாக மாறுகின்றது
உடலை விட்டு அகன்றால் நாம் என்றும் பிறவியில்லா நிலை அடைதல் வேண்டும். ஆகவே…
1.சொர்க்க வாசல் எது…? நம் உயிர் இருக்கும் இடமே…!
2.சொர்க்க உடல் எது…? நமக்குள் இருக்கும் உணர்வுகள் அனைத்தும் ஒளியின் தன்மை பெற்றால் சொர்க்கலோகமாகின்றது.
அந்தச் சொர்க்கவாசல் (உயிர்) கூடி என்றும் நிலையான சொர்க்கத்தை அடையும் தன்மையாக உடலை விட்டுப் பிரிந்து செல்கிறது. உயிர் உணர்வின் ஒளியாக மாறுகின்றது… வேகா நிலை ஆகின்றது…!

“பிடர்தல்…” என்னும் பிளந்து அறியும் சக்தி பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது
தியானத்தின் மூலம் மகரிஷிகளின் பேரருள் பேரொளியை ஈர்த்திடும் செயல் முறையில் “விழிப்பார்வை கொண்டு…” கண்களின் வீரிய சக்தியைக் கொண்டு செயல்படுத்தும் விதத்தை அறிந்து கொள்ள வேண்டும்.
நமக்கு முன்னே மறைந்துள்ள திரையை (அறியாமை) நீக்கும் பொருட்டு
1.வேகம் என்ற சொல்லில் – அறிந்து கொள்ளும் மன எண்ண வீரிய சக்தியாலும்
2.முயற்சி என்ற ஞான சூத்திரம் கொண்டு – உள் மனத் தெளிவின் ஆற்றல் கொண்டு அறிந்திட வேண்டும்.
“பிடர்தல்…” (பிளந்து அறிதல்) என்ற எண்ண உந்து சக்தியின் துணையால்… நாம் பயணமாகும் இந்த மெய் ஞானப் பாதையில் மகரிஷிகளின் அருள் உணர்வுகளைச் சுவாசிக்கும் பொழுது… அதை நம் அறிவின் ஞான எண்ணம் கொண்டு சமைத்து… அந்தப் பேரின்பப் பொருளின் சத்தைப் பிரித்தெடுத்து… ஆக்கம் கொண்ட செயல் முறைகளில் அதைச் செயல்படுத்துதல் வேண்டும்.
சிலர் தங்கள் சரீரத்தில் இயற்கையின் ஈர்ப்பு அமிலச் சேமிப்பைப் பெற்றிருக்கும் பொழுது
1.எண்ணத்தின் பிடர்தல் சக்தி கொண்டு அறிந்திடும் வழி முறையெல்லாம்
2.பூமிக்கு அடியில் செல்லும் நீரோட்ட வீரியத்தை
3.தன் சரீர அமில வீரியம் உடல் சமைப்பில் எழும் எண்ணத்தைக் கொண்டு மூச்சலைகளாக வெளிப்படுத்தும் பொழுது
4.அதில் செலுத்தப்படும் எண்ணம் பூமியின் சுவாச சமைப்பில் வெளிக் கக்கும் அமில அலைத் தொடர்புகளில் மோதுகிறது.
சரீரத்தின் எண்ண ஈர்ப்பில் காந்த வலுவின் வீரியம் கொண்டு சுவாச அலைகளால் தன்னுள் ஈர்க்கப்படும் பொழுது சமைக்கும் சமைப்பெண்ணமும்
1.எந்த இடத்தில் நீரோட்டம் உள்ளதோ அந்த இடத்தில் நிற்கும் பொழுது
2.நாம் செலுத்திய உணர்வின் துடிப்பலைகளின் செயல் நிகழ்வாக
3.சரீரத்தைச் சுற்றி ஓடும் சப்த அலைகளின் காந்த வீரிய சுழல் தன்மைகளை அறிந்து கொள்ள முடிகின்றது.
இதைப் போல் மகரிஷிகளின் அருள் ஒளிகளுக்குள் இருக்கும் நிலைகளை ஒலி ஒளி என்ற நிலையில் பிரித்துப் பார்க்கும் பக்குவமாக வழி அமைத்து விட்டால் “அனைத்துப் பேருண்மைகளை அறியவும் உணரவும் முடியும்…”
1.சிறு குழந்தைகள் படங்களைப் பார்த்துப் பதிவாக்கிய பின் அந்தப் படத்தின் கருத்தை உணர்ந்து கொள்வதைப் போல்
2.நாம் சுவாசிக்கும் அந்த மகரிஷிகளின் அருள் ஒளிக்குள் இருக்கும்
3.கருத்தாற்றலை உணர்ந்திடும் சூட்சம சக்தியின் ஆற்றலும் பெற முடியும்.
அந்தச் சூட்சமச் செயலின் வீரியமாக அந்த மகரிஷிகளின் அருள் ஆற்றலை ஈர்த்தெடுத்துத் தன்னுள் சமைக்கும் பக்குவத்தையும் பெற்றிடலாம்.
இந்த வலு வீரியத்தைக் கூட்டிடும் சக்தியின் தொடராகத் தன்னுள் வலுக் கொள்ள வேண்டும் என்றால்…
1.காந்த அமில குண வீரிய தாய் சக்தியும்… ரிஷிபத்தினி (மனைவி) சக்தியும் சேர்த்து
2.சிவ சக்தியாக உயிரான்மாக்களின் கலப்பாக கணவன் மனைவி இரு உயிரும் ஒன்றிடும் பக்குவம் பெற வேண்டும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
நீங்கள் எல்லோருமே அரும் பெரும் ஞானியாக வேண்டும். தெய்வீகக் குணங்களை எடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு நீங்கள் அந்த அருள் ஞானத்தை ஊட்டுங்கள்.
ஒரு தெளிவான நிலையை உருவாக்குங்கள். இந்த நாடு நலம் பெறவேண்டும் என்று உறுதிப்படுத்துங்கள்.
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தியை பெறவேண்டும் என்று ஏங்குங்கள். குருவின் அருளால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறவேண்டும் என்ற ஆசையை ஊட்டுங்கள்.
1.அனைவரையும் அந்தச் சக்திகளைப் பெறச் செய்யுங்கள்.
2.அவர்கள் இச்சைப்படட்டும்.
3.அருள் உணர்வுகளை அவர்கள் நுகரட்டும்.
4.அது இச்சா சக்தி.., கிரியா சக்தி.., என்று அந்த ஞான வழியில் வளரட்டும்.
ஆனால், “என்னைத் திட்டினானே… அவனை விடுவதா..,?” என்று இச்சைப்பட்டால் அந்த உணர்வான பிற்பாடு அந்த ஞானத்தின் வழி கொண்டு அவனுக்குத் தொல்லைகளைத்தான் கொடுக்கச் செய்யும்.
ஒருவர் நல்லதாக வேண்டும் என்று துருவ நட்சத்திரத்தை இச்சைப்பட்டு எடுத்துக் கொண்டால் “நல்லதாக வேண்டும்..,” என்று அந்த ஞானத்தின் வழி நம்முடைய உணர்வுகள்.., “உணர்ச்சிகள் அங்கே இயக்கும்”.
நம்மையும் நல்லதாக்கும். அவர்களையும் நல்லதாக்கும்.
இன்று குடும்பத்தில் எடுத்துக் கொண்டோம் என்றால் எல்லா நியாயத்தையும் பேசுவார்கள். கடைசியில் பார்த்தோம் என்றால் அவரவர்கள் சுயநலத்திற்கு வந்துவிடுவார்கள்.
ஆகவே, பொது நலத்தில் சுயநலம் வேண்டும்.
எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நான் எண்ணினால் நீங்களும் நான் நன்றாக இருக்க வேண்டும் என்று மரியாதை செலுத்துகின்றீர்க்ள்.
ஆனால், என்னை நீங்கள் எல்லோரும் மதிக்கின்றீர்கள் என்று சொல்லிக் கொண்டு “நான் பெரியவன்…” என்று அதிகாரம் செய்தால்… எப்படி இருக்கும்?
ஏனென்றால், எல்லோரும் ஒன்றாகச் சேர்த்து நாம் வலுவாக இயக்குகின்றோம். நீங்கள் மதிப்பதால் தான் எல்லோரும் மதிக்கும் நிலை வருகின்றது.
என்னை எல்லோரும் மதிக்கின்றார்கள் என்று எண்ணித் தலை கீழாக நின்று கொண்டு “என்னிடம் தான் சக்தி இருக்கின்றது.., என்று சொன்னால்.., சரியாகுமா..,? ஆகாது.
இந்தச் சக்திகளை உங்களிடமிருந்து தான் நான் பெறுகின்றேன். மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்குக் காட்டியது அதுதான்.
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மெய் ஞானிகளின் அருள் ஞான வித்தை ஊன்றினால் அதை அவர்கள் பருகும் பொழுது நமக்கு அந்தச் சக்தி கிடைக்கும்.


கடவுள் எங்குள்ளான்…? கடவுள் என்பது யார்…? – ஈஸ்வரபட்டர்
1.கோயில் கட்டுபவன் பிழைத்திருப்பதில்லை…
2.கோயில் வேலைக்குச் சென்றிட்டால் பலி வாங்கிவிடும் என்று
3.கதை கட்டியவர்கள் எல்லாம் இக்கலியில் வந்தவர்கள் தான்.
இக்கலியில் வந்த சாமியார்களெல்லாம் மடாலயம், மடம் என்றதன் நிலையை உயர்த்தத் தன் புகழை உயர்த்தத் தான் பெற்ற சிறு அருளையும் சிதறடித்து விட்டார்கள்.
ஆதியில் திருப்பதி மலையில் கோயில் கட்டிய கொங்கணவர் உயிருடன் ஒன்றிய ஒளிச் சரீரமாகி ஏழுமலையான் என்ற நாமத்தில் வரும் பக்தர்களின் எண்ணத்திற்கு அச்சக்தியின் அருளினால் பெற்ற அருள் செல்வத்தை அள்ளி அள்ளி அளிக்கின்றான்.
அவன் நிலைக்கும் பல கோடிச் செல்வங்கள் வந்து குவிகின்றன. அவ் ஏழுமலையானை நினைத்திட்டால் ஏழை என்ற எண்ணமே எந்த மனிதனுக்கும் வந்திடாத வண்ணம் எழுந்தருளச் செய்துள்ளான் அந்தக் கொங்கணவ மாமகரிஷி.
ஏழு ஜென்மங்கள் பெற்றவனும் அவ் ஏழுமலையானை எண்ணி வேண்டிட்டால் தான் பெற்ற சக்தியின் அருளினால் பல ஆற்றல்களை அளிக்கின்றான் அந்தக் கொங்கணவ மகாதேவன்.
இக்கலியில் வந்த மனிதர்கள் அவ் ஏழுமலையானின் கதையையே பல உருவில் பல வழியில் மனிதர்களுக்குப் புரியாத வண்ணத்தில் மாற்றி விட்டார்களப்பா.
நீ எந்த ஊரில் எந்த நிலையில் இருந்து அவ் ஏழுமலையானை எண்ணி ஒரு நிலையில் வேண்டிக் கொண்டாலும்
1.அவனுக்கு தெரிந்துவிடும் எல்லாமே.
2.அவன் பெற்ற சக்தியின் அருளினால் வந்து குவிகின்றது உன் வேண்டுதலுக்கு உகந்த தன்மை.
இந்நிலையில் வந்தது தான் நம் பழனி மலையும் பர்வத மலையும் வள்ளி மலையும் பெரும் அண்ணாமலையும் திருச்செங்கோடு மலையும் இன்னும் பல சித்தர்கள் ஏற்படுத்திய சில மலைகளும்.
அந்தந்த இடத்தில் அவர்கள் கட்டிய கோவிலில் இன்றும் ஜெப நிலையில் உள்ளார்கள் பல கோடிச் சித்தர்கள். கோவில் கட்டித் தான் அக்காலத்தில் அவர்களால் அந்த நிலையில் இருந்திட முடிந்தது.
1.கோவில் கொண்டு அந்த நிலையில் அடக்கமானவர்களும்
2.வேறு பல நிலையில் அடக்கமான ரிஷிகளும் யோகிகளும்
3.இவ்வுலக ஆரம்ப நிலையில் இருந்து மனித உடல் எய்தி இத்தன்மை பெற்ற பல கோடி ரிஷிகளும்
4.இன்னும் இக்கலியின் காலம் வரை காற்றுடனும் மழையுடனும் ஒளியுடனும் தான் பெற்ற சக்தியின் நிலையைக் கொண்டு
5.இவ்வுலக மக்களின் நன்மைக்காகப் பல முறையில் பல வழியில் உணர்த்துகிறார்கள்.
அதை உணர்ந்தார்களா இக்கலியில் உள்ள மனிதர்கள்…? பெரும் பேராசை பிடித்தவர்களப்பா இக்கலியில் உள்ள மனிதர்கள்…!
ஒவ்வொரு மனிதனின் எண்ணம் எந்த நிலையில் உள்ளதோ அந்நிலையிலே தான் அக்கடவுளும் உள்ளான்.
1.கல்லென்று திட்டுகிறான்… கண்ணில்லையா…? என்கின்றான். கல்லும் கண்ணுமல்ல கடவுள்.
2.உன்னுள் இருக்கும் அக்கடவுளையே உன் வாயால் நீ திட்டுகிறாய்.
கடவுள் எங்குள்ளான் என்று இப்பொழுது புரிந்ததா…? கால தேவனே தான் கடவுள். காற்றே தான் கடவுள். ஒளியே தான் கடவுள். மழையே தான் கடவுள். உன் மனமே தான் கடவுள். நீ விடும் சுவாசமே தான் கடவுள். நீயே தான் உனக்குக் கடவுள்.
கடவுள் என்பது யார் என்று புரிந்ததா…?

பரம்பரை நோயும் பரம்பரைக் குணமும் நமக்கு வரக்கூடாது
நாம் ஒவ்வொருவருமே கூட்டுத் தியானத்தின் மூலம் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற்று அதை வலுவாக்கிக் கொள்ள வேண்டும்.
அதற்குப் பின் தான் நம் மூதாதையர்களின் ஆன்மாக்களை விண் செலுத்த வேண்டும். அந்தந்தக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் இந்தத் தியானத்தில் கலந்து கொண்டு..
1.எங்களுடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற
2.முன்னோர்களின் உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்தில் இணைய வேண்டும் என்று ஏககாலத்தில் இதைச் சொல்லும் பொழுது
3.உடனடியாக அவர்களை அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் விண் செலுத்த முடிகின்றது.
காரணம்…
1.அவர்கள் (முன்னோர்கள்) துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நுகர்ந்து அறியவில்லை என்றாலும்
2.அவர்கள் சார்புடையோர் அந்தக் குடும்பத்தில் உள்ளோர்கள் நுகர்ந்து அறிந்துள்ளார்கள்.
3.அந்த உணர்வின் வலிமை கொண்டு வரும்பொழுது
4.மேலே சொன்னது போல் எல்லோரும் சேர்த்துச் சொல்லும் போது
5.அந்த உணர்வுகள் அவரவர் செவிகளில் பட்டு… கண் வழி கவர்ந்து… மூக்கு வழி நுகர்ந்து… உணர்வின் தன்மை உடலில் பெருகி…
6.அதனின் வலு கொண்டு நாம் விண்ணில் செலுத்தும் பொழுது எளிதில் அந்த ஆன்மா சப்தரிஷி மண்டலம் சென்றடைகிறது.
முன்னோர்களின் உடலில் கடுமையான நோய் இருந்திருந்தாலும்… அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் படரப்படும் பொழுது அந்த நோயின் உணர்வுகளைக் கரைத்து விடுகிறது. உயிருடன் ஒன்றிய உணர்வுகள் அங்கே ஒளியாக நிலைக்கின்றது.
ஆக… குடும்பத்தை சார்ந்தவர் அனைவரும் காலை துருவ தியானத்தில் அந்தச் சக்தி எடுக்கும்பொழுது அடிக்கடி முன்னோர் மூதாதையரின் உயிரான்மாக்கள் அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும்… பிறவியில்லா நிலை அடைய வேண்டும்… பேரின்பப் பெரு வாழ்வு பெற வேண்டும்… என்று இந்த உணர்வுகளை எடுத்துக் கொண்டே வர வேண்டும்.
ஏனென்றால் அவர்களுடன் பழகி உணர்வுகள் என்றும் நமக்குள் உண்டு. காலை துருவ தியானத்தில் அடிக்கடி எண்ணி அவர்களை விண் செலுத்தும் பொழுது
1.நம் உடலில் பரம்பரை நோய் வராது மாற்றப்படுகின்றது
2.பரம்பரை குணம் என்ற நிலைகள் மாற்றப்படுகின்றது.
முன்னோர்கள் அவர்கள் ஒருவருக்கொருவர் வெறுப்பு கொண்டு சாபமிட்டு தீய உணர்வுகளை எடுத்திருந்தாலும் அந்தச் சாப வினைகள் நமக்குள் மறையத் தொடங்குகின்றது.
இதைப் போன்றுதான் நாம் ஒவ்வொருவரும் காலை துருவ தியானத்தில் இதைப் போன்று எடுத்து அந்த ஆன்மாக்களை சப்தரிஷி மண்டலத்துடன் அடையச் செய்தால் நம் மூதாதையர்கள்
இதற்கு முன் இதை நாம் செய்யத் தவறி இருந்தாலும் கூட நம் மூதாதையர்களின் உயிர் ஆன்மாக்கள் அந்தச் சப்தரிஷி மண்டலத்தில் இணைந்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்து பிறவியில்லா நிலை அடைய வேண்டுமென்று நாம் அவசியம் தியானிக்க வேண்டும்.
1.அவர்கள் ஆன்மாக்களை நாம் விண்ணுக்குச் செலுத்தச் செலுத்த
2.நம்முடைய உணர்வுகள் வலுப்பெற இந்த உணர்வின் ஒளிக்கற்றைகள் பரவப் பரவ
3.முன்னோரின் ஆன்மாக்கள் இன்னொரு உடலுக்குள் புகுந்திருந்தாலும்
4.அந்த உடலிலும் தீய சக்திகளை வளர்த்திருந்தாலும்… அந்த உடல் மடிந்து வெளி வந்தபின்
5.நாம் பாய்ச்சும் இந்த அருள் உணர்வுகள் பட்டபின் அங்கே உந்தித் தள்ளினால் இந்த உணர்வு வலுப்பெறுகின்றது
6.ஒவ்வொரு நாளும் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று
7,காலை துருவ தியானத்தில் செய்தால் அவர்கள் எளிதில் சப்தரிஷி மண்டலம் அடைகின்றனர்.
அங்கே உடல் பெரும் உணர்வுகளைக் கரைத்து விட்டால் பரம்பரை நோய்கள் நமக்குள் மறைகின்றது. அதே சமயத்தில் அவர்களை நாம் பிறவியில்லா நிலை அடையச் செய்கிறோம்.
ஞானிகள் காட்டிய அருள் வழியில்… மகரிஷிகளின் அருள் வட்டத்தில் என்றும் வாழ்ந்து பிறவியில்லா நிலை அடைதலே நம்முடைய தியானத்தின் நோக்கம்.
ஆக.. இந்த பேரருளைப் பெருக்க… அருள் ஞானத்தைப் பெருக்க… இந்த உடல் வாழ்க்கையில் வரும் இருளை அகற்றி நாம் பிறவியில்லா நிலை அடைய முடியும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
இந்தப் பூவுலகில் அகஸ்தியன் சர்வ தீமைகளையும் அகற்றி சர்வ தீமைகளையும் அகற்றிடும் பேரருளைப் பெற்று நமது பூமியின் “துருவ நிலையின் நேராக நின்று.., துருவ நட்சத்திரமாக.., வடகிழக்காக அமைந்துள்ளான்”.
துருவ நட்சத்திரம் எத்தகையை விஷத் தன்மைகளானாலும் தீமைகளானாலும் அதையெல்லாம் ஒளியின் சுடராக மாற்றிக் கொண்டயுள்ளது.
அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளியைக் கவரும்படி செய்தார் நமது குருநாதர். துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் அருள் உணர்வுகளை நுகரச் செய்து.., என் உடலுக்குள் வந்த.., “தீமைகளை மாற்றியமைக்கும்” முறையினைச் சொன்னார்.
அதன் வழி என் வாழ்க்கையில் வந்த தீமைகளை நீக்கினேன். அவர் எனக்குக் காட்டிய அதே வழியில் குரு கொடுத்த அருள் உணர்வுகளை உங்களிடம் பதிவு செய்துவிட்டேன்.
71ல் வைகுண்ட ஏகாதசி அன்றுதான் நம் குரு ஒளி உடல் பெற்ற நாள். தீமைகளை வென்று சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்தார்.
அவரைப் போலவே நீங்களும் தீமைகளை அகற்றுங்கள். இந்த உடலுக்குப் பின் ஒளியாக மாற்றுங்கள். உங்களால் முடியும்.
நான் (ஞானகுரு) ஒன்றும் உங்களை மாற்ற முடியாது. “சாமி மாற்றுவார்.., சாமியார்..,” என்று நான் சொன்னால் உங்களை ஏமாற்றுவதாகத் தான் அர்த்தம்.
ஏனென்றால்.., நீங்கள் எண்ணியதை உங்கள் உயிர் தான் அதை அணுவாக மாற்றுகின்றது.
“நீங்கள் எல்லோரும் அருள்ஞானம் பெறவேண்டும்” என்று எண்ணும் பொழுது தான் நானும் அதைப் பெறுகின்றேன்.
இதைப் போல நீங்களும் “உலக மக்கள் அனைவரும்” அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறவேண்டும் என்று ஏங்கினால் நீங்களும் பெறலாம்.
ஆகவே, குருநாதர் காட்டிய அருள் வழியை நாம் பின்பற்றுவோம். குருநாதர் காட்டிய அருள் வழியைப் பின்பற்றி நடக்கும்போது நாம் எதைச் செயல்படுத்த வேண்டும்?
1.நான் ஒருவரைப் பார்த்தேன்…, அவரின் தீமைகளைக் கேட்டேன்.
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்றேன்
3.அவர் நன்றாக ஆக வேண்டும் என்று சொன்னேன்.
4.”அவர்கள் நன்றாக ஆனார்கள்…,” என்று இந்த சந்தோஷம் உங்களுக்கு வரவேண்டும்.., “வரும்”.
இதைத்தான் நாம் செய்ய வேண்டும்.
அதை விட்டுவிட்டு “என்னைத் திட்டிக் கொண்டேயிருக்கின்றான்.., இரு.., நான் அவனைப் பார்க்கிறேன்.., அவனைத் தொலைத்து விடுகிறேன்” என்ற நிலை வரக்கூடாது.
அதற்குப் பதிலாக அந்த அருள் உணர்வை நான் பெற்றேன். “என்னைத் திட்டியவர்கள் தீமையிலிருந்து விடுபட்டனர்…, அவர்கள் நல்லவர்களாக ஆனார்கள்” என்று இப்படிப்பட்ட அனுபவமாக இருக்க வேண்டும்.
அதைப் போல நோயுற்றவர்களாக இருந்தால்.., “என் பார்வையால் சொல்லால் மூச்சால் அவர்கள் நோய் விலகியது” என்ற நிலைக்கு நீங்கள் வளர வேண்டும்.
இதை நீங்கள் ஒரு பழக்கத்திற்கு கொண்டு வரவேண்டும்.
குரு எனக்கு இதைத்தான் காட்டினார். அதைத்தான் நான் உங்களுக்கு உணர்த்துகின்றேன்… பதிவாக்குகின்றேன். “இதைச் செயல் வடிவுக்குக் கொண்டு வருவது” உங்களுடைய பொறுப்பு.


ஆக்கல் காத்தல் அழித்தல் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது
சக்தியின் குணங்கள் மூன்று வகைப்பட்டது.
1.ஆக்குபவளும் அவளே… காப்பவளும் அவளே… அழிப்பவளும் அவளே…!
2.காற்றாகவும் நீராகவும் ஒளியாகவும் உள்ளவளும் அவளே.
3.மூன்று குணங்கள் உள்ள சக்தி தான் இவ்வுலகையே ஆக்கி காத்து அழிக்கிறது.
4.”அச்சக்தியின் சொரூபம்.. சக்தியின் வடிவம்… சக்தியின் சுயநிலை… அறிந்தவர்கள் எல்லாம் “பெரும் பாக்கியம் படைத்தவர்கள்…!”
அந்நாளில் வாழ்ந்த தவயோகிகள் இவ்வுலகைக் காப்பதற்காக அச்சக்தியின் சொரூபத்தைத் தன் நிலையில் ஈர்த்துக் கொள்ளவே பெரும் தவமிருந்தார்கள்.
அவ்வழியின் அருளைப் பெற பல நாள் தவமிருந்து பல ஜெபங்கள் இருந்து அச்சக்தியின் சொரூப நிலையை அதாவது ஆக்கி… காத்து.. அழிக்கும்… நிலையைத் தன் நிலையில் ஈர்த்துக் கொண்டார்கள்.
சக்தியின் நிலை என்னப்பா…?
1.எதற்காக அவர்கள் கடும் தவமிருந்து அந்த நிலையைப் பெற்றார்கள்…?
2.தான் வாழ தன் புகழ் ஓங்க தன் சுற்றத்தாரை வாழ வைக்கவா அந்த நிலையைப் பெற்றார்கள்…?
இல்லையப்பா…!
அவர்கள் பெற்ற அருள் எல்லாம் தன் நிலையைக் காத்து… தன் ஆசையை அழித்து.. தன்னுள் சக்தியின் ஜீவனை வளர்த்துக் கொண்டார்கள். அந்த நிலை பெறுவதற்காக மிகவும் கடும் தவம் ஜெபம் எல்லாம் இருந்தார்கள்.
ஆனால் இந்தக் கலியில் வந்த சாமியார்கள் – சாமியார்கள் என்ற பெயரில் வந்தவர்கள் தன் பெயர் நிலைக்கத் தன் வழியில் உபதேசம் செய்ததைப் பலர் அறியப் பணம் காசுகள் சேர்த்துத் தன் வழியில் வந்தவர்களுக்கு வாழ வழி செய்து விட்டுத் தன் பெயரை நிலைநாட்டி விட்டுச் சென்றார்கள்.
1.இக்கலியில் வந்த சாமியார்களுக்கே இந்த நிலை என்றால்
2.இக்கலியில் தோன்றிய மனிதர்கள் நிலை எப்படியப்பா இருக்கும்…?
இக்கலியில் மாமனிதனாகலாம் என்பதெல்லாம் பல கோடிப் பணம் சேர்த்துப் பலர் அறியப் புகழ் எய்தி வாழ்வது தான் மாமனிதன் என்ற எண்ணம்.
அந்த நிலையில் அவனைப் பார்ப்பவனுக்கு என்னப்பா தோன்றும்…?
1.அவன் மேல் பொறாமை எண்ணம் தான் ஏற்படும்.
2.அந்த நிலையில் மாமனிதனாகி என்னப்பா பயன்…?
ஆதியில் வந்த சித்தர்கள் பெற்ற சக்தியின் அருள் எப்படியப்பா…? தன் உயிர் அணுவின் தொடர்பில் உடலில் உள்ள ஒவ்வொரு அணுவையும் தன் நிலைக்கு இயங்கும்படி அச்சக்தியின் அருளைப் பெற்றார்கள்.
கோபம் வருவதும் மகிழ்ச்சி வருவதும் சம நிலை எய்துவதும் என்ற பாகுபாடு தன் உடலில் இல்லாமல் மன எண்ணத்தில் எந்த நிலையைப் பார்த்தாலும் தன் நிலையை ஒரே நிலையில் வைத்துக் கொள்ள தன் உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களையும் ஒரு நிலைப்படுத்தி விட்டார்கள்.
அந்த நிலையில், அவர்கள் ஜெபித்த ஜெபமெல்லாம் அவர்கள் பெற்ற அருள் எல்லாம் ஒரு சிறு அணுவளவு எந்த எண்ணத்தில் ஒருவர் மேல் பாய்ச்சுகின்றார்களோ அவர்களும் அந்த ஆற்றலைப் பெறுகிறார்கள்.
இத்தகையை ஆற்றல் பெற்றவர்கள் பெரும் மழைக்கும் சுழல் காற்றுக்கும் தன்னைச் சுற்றி எந்த நிலை வந்து தாக்கினாலும் அவர்களின் நிலைக்கு எந்த நிலையும் தெரிந்திடாது.
அவர்கள் எண்ண நிலை ஜெப நிலை எல்லாம் ஒரே நிலையில் இருக்கும் பொழுது அவர்கள் உடலுக்கு உணவும் உணர்வும் சுவாசமும் எந்த நிலையும் வேண்டுவதில்லை.
அவர்கள் நிலை எல்லாம் “அச்சக்தியின் நினைவே தான்…!” அச்சக்தியின் நிலையை உணர்ந்து அச்சக்தியின் அருளில் உள்ள பல கோடானு கோடி அணுக்களில் தன் உணர்வுக்கு வேண்டிய அணுவை மட்டும் ஈர்க்கிறார் இச்சித்தாதி சித்தன்.
அந்த நிலையில் உள்ள சித்தன் இவ்வுலக உயர்வுக்காக இவ்வுலகில் உள்ள மனிதர்களுக்கு எந்த வழியில் கற்பித்தால் புரிந்து விடும் என்ற நிலையில் தான் பெற்ற அருளினால் தன் உடல் அழிந்திடாமல் ஒரு நிலையில் அமர்ந்து
1.இவ்வுலக மக்களுக்குப் புரியும் வண்ணம்
2.அச்சக்தியின் உருவ அமைப்பைக் கல்லினாலோ பல உலோகத்தினாலோ செய்து
3.அந்த நிலையில் அச்சித்தன் உடலுடன் அமர்ந்து பல காலம் ஜெபம் செய்கின்றான்.
4.அந்த ஜெபத்தின் பலனைத்தான் நீ அக்கோயிலுக்குச் செல்லும் பொழுது அச்சித்தனின் அருளினால் பெற்று வருகிறாய்.
அக்கால ஆதிகாலச் சித்தாதி சித்தர்களும் பல கோடி ஞானிகளும் ரிஷிகளும் அமர்ந்து அச்சக்தியின் அருளைப் பெற்று எய்திய கோயில்கள் தான் இப்பொழுது நீ சென்று பூஜிக்கும் பல கோயில்களும்.
மனிதன் வாழக்கூடிய பூமியாக மாற்றி மெய் ஞானத்தையும் மனிதனுக்குள் விளையச் செய்தவர்கள் “பண்டைய கால மகரிஷிகள்…!”
பண்டைய கால மாமகரிஷிகள் தங்களுடைய புலனறிவு கொண்டு விண்ணை நோக்கி ஏகி பல சக்தி வாய்ந்த ஆற்றல்களைக் கவர்ந்து தன் உடலிலே விளைய வைத்துக் கொண்டார்கள்.
அப்படி விளைய வைத்துக் கொண்ட சக்தியின் துணை கொண்டு தனக்குகந்த நிலையில் பூமிக்குள் கால சூழ்நிலைகளை மாற்றி மனிதனை இங்கே வாழ வைத்தார்கள். இந்தப் பூமிக்குள் மெய் ஞானத்தையும் பெருக்கினார்கள்.
அன்றைய மகரிஷிகள் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் தனக்குகந்ததாக இந்தப் பூமியின் நிலைகளை மாற்றி அமைத்தார்கள்.
1.ஒவ்வொரு கால நிலைகளில் அது மாறினாலும் அதைத் திசை திருப்பி
2.மனிதனுக்குகந்த நிலைகளில் பூமியின் சுழற்சி நிலைகளைச் சீராக்கி அமைத்தார்கள்.
அதாவது சூரியனின் காந்த சக்தி இதைக் கவர்ந்திடாத நிலையில் ஒரு பகுதி அதை மறைக்கப்பட்டு மறு பகுதியில் பூமியைத் திருப்பினான் தனிப்பட்ட மனிதன் – “மகரிஷி…!”
அப்படி அமைக்கப்பட்ட இந்தப் பூமியிலே உருவான மனிதருக்குள் ஞானத்தின் உணர்வுகள் விளைந்தது. அதிலே மெய் ஞானியாக ஆன முதல் மனிதன் தான் அகஸ்தியன். அவன் இன்றும் துருவ நட்சத்திரமாக உள்ளான்.
அவனைப் பின்பற்றிச் சென்ற மகா ஞானிகள் அனைத்தும் சப்தரிஷி மண்டலங்களாக இன்றும் ஒளி சரீரமாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களை முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் என்று சொல்வார்கள்.
அத்தகைய மகரிஷிகள் வெளிப்படுத்திய வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் அந்த உயர்ந்த சக்திகள் அனைத்தும் நாம் சூரியனால் கவரப்பட்டு அந்த உணர்வலைகள் இன்றும் நமக்கு முன் காற்றிலே இருக்கின்றது.
சாதாரணமாக வாழும் மனிதர்கள் நாம் வெளிப்படுத்தும் விருப்பு வெறுப்பு உணர்வுகள் அதிகமானாலும் அதைக் காட்டிலும் வீரிய நிலைகளில் வந்தால் அது எல்லாம் அழிந்துவிடும்.
ஆனால் அந்த மகரிஷிகள் உடலிலிருந்து பெருக்கிய அந்த உணர்வுகள் அனைத்தும் அழியாத் தன்மைகள் பெற்றது.
உதாரணமாக விஞ்ஞான அறிவு கொண்டு நாடாக்களில் பதிவு செய்த படங்களை இயந்திரத்தின் மூலமாகவும் செயற்கைக் கோள் மூலமாகவும் ஒலி/ஒளி பரப்பு செய்கின்றார்கள்.
எந்த டி.வி. ஸ்டேஷனிலிருந்து ஒலி/ஒளிபரப்பு செய்யப்படுகின்றதோ அதே ஸ்டேஷனை வீட்டிலுள்ள டி.வி. யில் பட்டனை அழுத்தித் திருப்பி வைக்கப்படும் போது காற்றிலே மறைந்துள்ள அந்த அலைகளைக் கவர்ந்து நாம் அறியும் வண்ணம் செய்கின்றது.
அதே போல பிறவா நிலைகள் பெற்ற அந்த மகரிஷிகளின் உணர்வலைகளை நாம் கவர வேண்டும் என்றால்
1.அவர்களை ஒத்த சம நிலைகள் கொண்டு
2.அதாவது அவர்களின் உணர்வின் எண்ணங்கள் கொண்டு எடுத்தால் தான் கவர முடியும்.
அப்படி இல்லையென்றால் நம்முடைய எண்ணம் அதன் அருகிலே செல்லாது. மகரிஷிகளின் ஆக்கமான சக்தி நம் எண்ண அலைகளைத் ஒதுக்கித் தள்ளி அதனுடைய ஆற்றலாகப் பெருக்கும். நம்முடைய நினைவலைகளால் மகரிஷிகளின் உணர்வுகளை ஈர்க்கும் நிலை இல்லாது போய்விடும்.
அந்த மகரிஷிகளின் பேராற்றல்களை ஈர்க்கும் நிலை பெறச் செய்வதற்கே உங்களுக்கு உபதேச வாயிலாக ஞானிகளின் உணர்வுகளைப் பதியச் செய்கின்றோம்.
ஞானிகளைப் பற்றிய பதிவுகள் உங்களுக்குள் அதிகமாக அதிகமாக அவர்களை ஒத்த உணர்வின் எண்ணங்கள் உடலுக்குள் வளர்ச்சியாகி அதை எளிதில் கவர முடியும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
எத்தனையோ கோடி சரீரங்களைப் பெற்ற பின் மனிதனாக நாம் உருவானாலும் நாம் சந்தர்ப்பத்தால் நுகரும் தீமையான உணர்வுகள்
1.மனித உடலை எப்படி அழிக்கின்றது..?
2.நம் நினைவாற்றலை எப்படி மாற்றுகின்றது…?
3.மீண்டும் பரிணாம வளர்ச்சியில் தேய் பிறையாகி
4.மனிதனல்லாத உடலுக்குள் எப்படிச் செல்லுகின்றோம்? என்று
5.இதையெல்லாம் நாம் யாருமே சிந்திப்பதில்லை…!
அந்தத் தேய் பிறையான நிலைகளுக்குச் செல்வதை நிறுத்த வேண்டும் என்றால் அருள் ஞானியின் உணர்வை நமக்குள் விளைய வைக்க வேண்டும்.
தீமையின் நிலைகளுக்குச் செல்லாது அருள் ஞானியின் உணர்வை எடுத்து ஒளியாக மாற்றி என்றும் பேரின்பப் பெரு வாழ்வு என்ற நிலைகளுக்கு உங்களை அழைத்துச் செல்ல வேண்டும் என்பதே குருநாதர் எமக்கு (ஞானகுரு) இட்ட அருள் பணியாகும்.
உங்களுடைய நினைவாற்றல் மகரிஷிகளின் பால் இருக்கச் செய்வதே இந்த உபதேசத்தின் நோக்கம். உங்கள் உடலுக்குள் மகரிஷிகளின் உணர்வுகள் ஊடுருவும் போது தீமையின் நிலைகளைக் கரைத்துவிடும்.
நான் வெறும் சொல்லாகச் சொல்வதாக நீங்கள் எண்ணலாம்.
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் (குருநாதர்) என்னிடம் சொல்லும்போது
1.அவன் சொல்லுகின்றான்… நான் எதைப் பெற முடியும்..?
2.அவன் காட்டுகின்றான்… நான் எதைப் பெற முடியும்…! என்று இப்படித்தான் முதலில் எண்ணினேன்.
அவன் (குருநாதர்) சொன்னதை
1.அந்த வலுவின் தன்மை எனக்குள் வரப்படும் பொழுது
2.பின்னாடி தான் அவர் சொன்ன உணர்வுகள் அனைத்தையும்
3.காட்சிகளாக நான் காண முடிந்தது… உணரவும் முடிந்தது…!
மெய் ஞான அறிவின் தன்மை அது எப்படி…? என்றும் ஒவ்வொரு உயிரிலும் உணர்வுகள் எப்படி விளைகின்றது…? என்ற நிலையும் பின் தான் நான் உணர முடிந்தது.
அதைப் போல இன்றைய நிலைகள் நான் சொல்வதை “ஏதோ…” என்று இலேசாக விட்டுவிடாதீர்கள்.
உங்கள் வாழ்க்கையில் அறியாது வந்த தீமையின் நிலைகளை நிறுத்த அருள் மகரிஷிகளின் உணர்வை ஒவ்வொரு நிமிடமும் எடுத்துப் பழகிக் கொள்ளுங்கள்.
தீய வினைகளைக் கரைத்து மெய் ஞானிகளின் அருள் ஒளியைப் பெருக்கிக் கொள்ளுங்கள்.


கஷ்டத்தைச் சொன்னால் தான் கஷ்டம் நீங்குமா…?
நாம் சொல்லும் போது சில நேரங்களில் சிலருக்கு என்ன ஆகின்றது…? சாமி (ஞானகுரு) என்னமோ சொல்கின்றார் என்று இலேசாக நினைத்துக் கொள்கின்றார்கள்.
“இந்த மாதிரிச் செய்யுங்கள்…!” என்று வாக்கைக் கொடுத்து நல்லதாகிப் போய்விடும்… என்று சொல்கிறோம். அதை விட்டு விடுகின்றார்கள்.
அதை விட்டு விட்டு மற்றவர்களுக்கெல்லாம் நல்லது செய்கின்றார். எனக்குச் சாமி செய்ய மாட்டேன் என்கிறார் என்று இப்படி எண்ணுகின்றார்கள்.
ஏனெனில் உங்களுக்குள் கடினமான நிலைகள் இருக்கின்றது. அதை நீக்குவதற்காக வேண்டிக் கடினமான வாக்குகளைக் கொடுக்கின்றோம். அது தான் “ஆயுதம்…”
ஒருவர் திட்டுவதை மட்டும் வேகமாக நீங்கள் எடுத்துக் கொள்கின்றீர்கள். குறையாகச் சொன்னாலும் உடனே எடுத்துக் கொள்கின்றீர்கள்.
அந்தக் குறைகளை நீக்குவதற்குண்டான கடுமையான வாக்குகளைத்தான் யாம் கொடுக்கின்றோம்.
1.போங்கள்…, போங்கள்…” எல்லாமே சரியாகப் போகும்…!
2.அந்த மகரிஷிகளின் அருளால் உங்கள் தீமைகள் அகலும்
3.ஆத்ம சுத்தி செய்யுங்கள்…, போங்கள்…! என்று சொல்கிறோம்.
இப்படிச் சொன்னாலும் கூட எங்கெங்க…! என்று ஏற்றுக் கொள்ளாமல் விடுகின்றார்கள்.
நோயுடன் வருவார்கள்…! என்னிடம் வந்து மிகவும் கஷ்டமாகச் சொல்லிக் கொண்டேயிருப்பார்கள்.
அப்பொழுது அவர்கள் உணர்வுகளை நான் ஏற்றுக் கொள்வதில்லை… என்ன செய்கின்றோம்…?
அவர்கள் உடலிலிருந்து நோய்களை நீக்குவதற்காக வேண்டிக் கோபமாக…, “போங்கள்..! கஷ்டங்கள் எல்லாம் நீங்க வேண்டும் நோய் நீங்க வேண்டும் என்று கேளுங்கள் போங்கள்…!” என்று சொல்வோம்.
ஏனென்றால் தன் கஷ்டத்தை விடாப்பிடியாகக் பிடித்துக் கொண்டிருப்பவர்களை
1.அதன் மேல் பற்று வராமல் இருப்பதற்காகவும்
2.கஷ்டத்தை நீக்கிய அருள் ஞானிகளின் உணர்வைப் பற்றுடன் பற்றுவதற்காகவும் அவ்வாறு யாம் சொல்கிறோம்.
கஷ்டத்தைப் போகச் சொன்னாலும் கூட “என் கஷ்டம் என்னை விட்டு எங்கெங்க போகிறது…!” என்று சொல்லி அதை இறுக்கிப் பிடித்துக் கொள்கின்றார்கள்.
“போங்கள்…” என்று சொன்னால் “நம்மைத் தான் சாமி போகச் சொல்கின்றார்…!” என்று கோபித்துக் கொண்டு போய் விடுகின்றார்கள்.
ஏனென்றால் அவர்கள் உடலில் இருக்கும் அந்தச் சக்தி அவர்களைத் தீமையான நிலைகளுக்கு அழைத்துச் செல்கின்றது.
திருப்பி நீங்கள் நலம் பெறுவீர்கள்…, நல்லதாகிப் போய்விடும் என்று சொன்னால் அதைக் கேட்க மாட்டேன் என்கிறார்கள்.
காலையில் இருந்து இரவு வரை ஒரே கஷ்டமாக இருக்கின்றது… இராத்திரி எல்லாம் தூக்கம் வரமாட்டேன் என்கிறது… என் பையன் இப்படிப் பேசுகின்றான்… வியாபாரத்தில் நஷ்டம்… என்று மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள்.
ஐயோ என் குடும்பத்தில் என் பையன் சொன்னபடி கேட்க மாட்டேன் என்கிறான். என் பெண்ணுக்கு மாப்பிள்ளை வந்து விட்டு வந்து விட்டு போகின்றது. என்ன செய்வது என்றே புரியவில்லை…? இப்படித்தான் கேட்கின்றார்கள்…!
இதையெல்லாம் நீக்க வேண்டும் என்று கேளுங்கள்…! என்று யாம் சொன்னால் அதற்குத் தான் வந்தேன் என்று சொல்கிறார்கள்.
1.கஷ்டத்தை எல்லாம் சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும் என்று தான் நினைத்துக் கொண்டு வருகின்றார்கள்
2.கஷ்டத்தை நீக்க வேண்டும் என்ற எண்ணம் வருவது இல்லை.
3.கஷ்டத்தைச் சொன்னால் தான் கஷ்டம் நீங்கும் என்று நினைத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.
ஏனென்றால் வளர்த்துக் கொண்ட அந்த உணர்வு அவ்வாறு பேசச்
செய்கின்றது. வினைக்கு நாயகனாக அது இயங்குகின்றது. இதை நிறுத்திப் பழக வேண்டும்.
இந்த உணர்வு மற்றவர்கள் சொல்வதை இந்த விஷமான சொல்லைச் சொல்லும் பொழுது
1.அது எனக்குள் வரக்கூடாது என்று அதை நான் நிறுத்தி என்னைச் சுத்தப்படுத்திக் கொள்கின்றேன்
2.மகரிஷிகளின் அருள் உணர்வை நான் எடுத்து…
3.“அட போங்கள்… உங்களுக்கு ஒன்றுமில்லை…!” என்று சொல்கிறோம்.
என் கஷ்டத்தைச் சொன்னால் “சாமி கேட்கக் கூட மாட்டேன் என்கிறார்… என்னைக் கோபிக்கின்றார்…!” என்று இந்த மாதிரி எண்ண ஆரம்பித்து விடுகின்றார்கள்.
நான் ஏற்கனவே சொல்லியிருக்கின்றேன். என்னிடம் வந்தவுடனே
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
2.உடலில் உள்ள நோய்கள் நீங்க வேண்டும்.
3.என் உடல் நன்றாக இருக்க வேண்டும்
4.வாழ்க்கையில் வந்த கஷ்டம் எல்லாம் நீங்க வேண்டும்
5.எங்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று
6.இப்படி நீங்கள் எண்ணி வந்தால் என்னிடம் கேட்கும் பொழுது அதையே கேட்கும் எண்ணம் வரும்.
7.அப்பொழுது .நான் கொடுக்கும் ஞான வித்துகள் விளைந்து உங்கள் தீமைகள் அகலும் என்று சொல்கிறோம்.
நான் சொன்னதை மறந்து விடுகிறார்கள். நோயைப் பற்றியே எண்ணிக் கொண்டிருப்பதால் அந்த உணர்வுதான் வரும். அதே வார்த்தை தான் வரும்.
சாமியிடம் உபதேசம் கேட்கும் பொழுதும் படிக்கும் பொழுதும் உடல் நோயோ வலியோ இருந்ததா…? வலி விட்டுவிட்டதா…! என்று கேட்டால் “இப்பொழுது இல்லை…!” என்பார்கள்.
1.நேற்று வலித்தது… இப்போது இல்லைங்க…! என்பார்கள்.
2.ஆனால் இங்கிருந்து வெளியில் போய் விட்டால் மீண்டும் வந்துவிடும் என்பார்கள்.
தீமைகளை நீக்கிடும் ஞானிகளின் சக்தி வாய்ந்த அருள் வாக்குகளை ஞான வித்துக்களாகக் கொடுத்தாலும் இப்படித்தான் சொல்கின்றார்கள்.
அவர்களிடமிருந்து திரும்பத் திரும்ப வரும் தீய சொல்களைத் திட்டி யாம் விரட்டினோம் என்றால் “தீமைகள் அகலட்டும்…” என்று யாரும் அதை நினைக்க மாட்டேன் என்கின்றார்கள்.
காரணம் தன்னால் மீள முடியவில்லை என்ற நிலையில் நுகர்ந்த அந்த உணர்வு தான் அங்கே வேலை செய்கின்றது. இதையெல்லாம் மாற்றிப் பழக வேண்டும்.
ஏனென்றால் எதை நீங்கள் ஆழமாகவும் அழுத்தமாகவும் எண்ணுகின்றீர்களோ உங்கள் உயிர் அதைத்தான் படைக்கும்.. அதைத்தான் இயக்கும்…! என்று மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்துகின்றேன்.
உங்களைக் காத்துக் கொள்ளும் சக்தியை நீங்கள் தான் வளர்த்துக் கொள்ள வேண்டும்…!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
எம்மிடம் நல்ல வாக்குகளை வாங்க வருகிறார்கள்.
அதை யாம் இலேசாகக் கொடுத்தாலும் உங்களுக்கு அதை எளிதில் பெறச் செய்தாலும் கூட உங்களால் அது முடியவில்லை.
அங்கிருந்து வந்து சாமியிடம் உபதேசம் கேட்பதற்காக வருகிறோம். உபதேசம் கேட்டு முடிந்த பிறகு சாமியிடம் ஆசி கேட்போம் என்று இல்லை.
ஏனென்றால் வந்தவுடன் ஒரு முறை ஆசி வாங்க வேண்டும். இரண்டாவது முறை இங்கு வந்து ஆசி வாங்க வேண்டும். ஆசீர்வாதம் வாங்கிவிட்டால் சரியாகப் போகும் என்று தான் நினைக்கிறார்கள்.
அந்த ஆசீர்வாதத்தைக் காட்டிலும் நாம் முழுமையாக உபதேசம் செய்வதைக் கேட்டுணர்ந்து அடுத்து வரிசையில் நின்று கேட்கும் போது
1.மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற வேண்டும்.
2.எங்கள் உடல் முழுவதும் பரவ வேண்டும்
3.எங்கள் உடலில் உள்ள நோய்கள் நீங்க வேண்டும்
4.எங்கள் குடும்பத்தில் உள்ள கஷ்டங்கள் நீங்க வேண்டும்
5.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் குடும்பத்தின் மீது படர வேண்டும்
6.நாங்கள் எல்லோரும் மன பலம் பெற வேண்டும்
7.எங்கள் விவசாயம் நன்றாக இருக்க வேண்டும்
8.நாங்கள் ஆரம்பித்த தொழில் நன்றாக இருக்க வேண்டும்
9.என் பிள்ளைகளுக்குச் சீக்கிரம் திருமணம் நடக்க வேண்டும் என்று வேண்டி வந்தீர்களானால்
10.இந்த வாக்குகளை உங்களுக்குள் ஆழமாகப் பதியச் செய்ய முடியும்.
பிள்ளைகளுக்குக் கல்யாணம் ஆக வேண்டும் என்று எண்ணிக் கேட்கலாம். அதற்குள்ளேயே நான்கு ஐந்து கோரிக்கைகளுடன் வரக் கூடாது. நான்கு ஐந்து வாக்குக் கொண்டு வந்தால் அத்தனையும் fail தான்.
காரணம் பெண்ணிற்கு நல்ல வரன் வர வேண்டும், சீக்கிரம் திருமணம் நடைபெற வேண்டும் என்று கேட்டால் அந்த பெண்ணிற்கு சீக்கிரம் திருமணம் நடக்கும்.
“பத்திரிக்கையைக் கொண்டு வாருங்கள்…” என்று வாக்கைப் பதிவு செய்கிறோம்.
பதிவு செய்தபடி நீங்கள் எண்ணி எடுத்தால் அதை நீங்கள் திருப்பிக் கொண்டு வந்தால் சீக்கிரமாகவே அந்தத் திருமணம் நடக்கும். ஏனென்றால் யாம் ஜெபித்த இந்த உணர்வின் ஆழமான சத்தான நிலைகளை “ஒருமுகமாகப் பதிவு செய்கிறோம்.”
அப்பொழுது நீங்கள்.., சரி…! என்ற நிலையில் அதே மகிழ்ச்சியோடு போக வேண்டும்.
இந்த வாக்கை முதலில் வாங்கிக் கொள்வார்கள்.
ஆனால் அடுத்தாற்போல் வீட்டில் கஷ்டமாக இருக்கிறது பணத்திற்கே கஷ்டமாக இருக்கிறது…! என்பார்கள்.
சரி… “அதுவும் நடக்கும்” என்று யாம் சொல்வோம்.
பிறகு என் பையன் எப்பொழுது பாத்தாலும் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறான். பக்கத்து வீட்டுக்காரர்கள் சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறார்கள் என்று வரிசையாக “அடுக்கிக் கொண்டே இருப்பார்கள்”.
1.நாம் எதன் அடிப்படையில் வருகிறோமோ…, “ஒன்று தான்”.
2.வாக்கிற்கு வன்மை.
அங்கிருந்து வருகிறீர்கள் என்றால் அதில் முக்கியமான ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
குடும்பத்தில் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும், எங்கள் குடும்பத்தில் உள்ள கஷ்டம் எல்லாம் நீங்க வேண்டும். மகரிஷிகளின் சக்தியால் தொழில் வளமும் செல்வமும் பெற வேண்டும் என்று எண்ணினால் “இந்த ஒரு வாக்கில் எல்லாமே நடக்கும்”.
செல்வம் வந்தால் உங்கள் கஷ்டத்தை நிவர்த்தி செய்துவிடலாம்.
ஆனால் அதற்கு இப்படி நல்ல வாக்குகளைப் பெறக்கூடிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தாலும் கூட அதை ஏற்றுக் கொள்ள சமுதாயத்தில் இடம் இல்லை.
எதைச் சொன்னாலும் சாமியிடம் ஒரு ஐந்து முறையாவது ஆசிர்வாதம் வாங்கினால் தான் அது நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறார்கள்.
1.சாமி வாக்கை ஏற்று அந்த ஒரு வாக்கு இருந்தாலும் போதும்.
2.இரண்டாவது ஒரு முறை பதிவு செய்துவிட்டால் தியான மண்டபத்திற்குள் வந்து
3.சாமி சொன்ன வாக்கு நிறைவேற வேண்டும்.
4.எங்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும்
5.என் குழந்தைக்குச் சீக்கிரம் திருமணம் நடக்க வேண்டும் என்று எண்ணினால் போதும்.
“திருமணம் நடக்கும்” என்று சொல்லி வாக்கினைக் கொடுக்கிறேன்.
அடுத்துப் பணத்திற்குக் கஷ்டம் என்பார்கள். திருமணம் நடக்க வேண்டும் என்று கேட்பார்கள். ஆனால் அவர்களே இரண்டாவது “பணம் இல்லையே…” என்பார்கள்.
இதெல்லாம் அவர்களே இதற்குத் தடை விதிப்பதாகும்.
இது போன்ற நிலைகளை விடுத்து திருமணம் நடக்கும்…, பத்திரிக்கை கொண்டு வாருங்கள் என்று சொன்னால் அதற்கு வேண்டிய வழிகள் நடக்கும்.
1.வாக்கு சாதாரணமானது அல்ல.
2.பல லட்சம் கொடுத்தாலும் இந்த மாதிரியான வாக்குகள் உங்களுக்கு அமைவது கடினம்.
அந்த வாக்கை நீங்கள் பதிவு செய்து கொண்டீர்களானால் அது உங்களுக்கு நன்மை செய்யும்.
ஒருவர் திட்டுவதையும் வேதனைப்படுவதையும் பதிவு செய்கிறீர்கள். அவர்களை நினைக்கும் போதெல்லாம் உங்களுக்குக் கோபம் வருகிறது. வேதனை உங்களுக்குள் பதிவாகிறது. அது உங்களுக்குள் விளைகிறது.
இதைப் போலத்தான் சாமி அன்று என் பிள்ளைக்குத் திருமணம் நடக்கும் நல்ல வரன் கிடைக்கும் என்று சொன்னார்கள்.
மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும் என் குடும்பத்தில் அது படர வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தியால் என் மகளுக்கு நல்ல வரன் வர வேண்டும், அந்த குடும்பம் நன்றாக இருக்க வேண்டும். அது குடிபுகும் இடத்தில் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எடுத்துப் பாருங்கள்.
அது எவ்வளவு பெரிய உண்மை…! என்று நீங்கள் பார்க்கலாம்.
யாம் கொடுத்த வாக்கும் உங்கள் எண்ணமும் உங்கள் நினைவும்
1.உங்களை எப்படிக் காக்கிறது…?
2.உங்களுக்கு நல்ல வழியை எப்படிக் கொண்டு வருகிறது…? என்பதை
3.நீங்கள் சிந்தித்துப் பார்த்தால் தெரியும்.
ஏனென்றால் நாம் பல முறை சொல்கிறோம். உங்கள் வாழ்க்கையிலே எப்பொழுதும் “சாமி சொன்ன வாக்கு நிறைவேறும்…!” என்று எண்ணினீர்கள் என்றால் அது நிறைவேற்றிக் கொண்டே இருக்கும்.
அதைப் பதிவு செய்த பிற்பாடு… சாமி அன்றைக்கு வாக்குக் கொடுத்தார். அது எங்கிட்டு…? என்று விட்டீர்கள் என்றால் போய்விட்டது.
ஒரு விதையை ஊன்றி விட்டோம் என்றால் அதற்குத் தகுந்த தண்ணீர் ஊற்ற வேண்டும். அந்தந்தக் காலத்திற்குத் தகுந்தாற் போல் உரத்தையும் போட வேண்டும்.
அது போலத் தான் சாமி சொன்ணார்கள். எப்படியும் பெண்ணிற்குத் திருமணம் நடக்கும். நல்ல வரன் வரும் என்ற உணர்வை மட்டும் வைத்திருந்தால் போதும்.
1.ரொம்பச் சீக்கிரமும் நடக்கும்.
2.காலம் தாமதமானாலும் ஒரு நல்ல வரனாகவும் கிடைக்கும்.
ஏனென்றால் உங்கள் உணர்வுகளில் மிகவும் கடுமையான நிலைகளைப் பதிவு செய்து வைத்திருப்பதால் உங்கள் பதிவே உங்களுக்கு எதிரியாகும். நீங்கள் எந்தெந்த அளவிற்கு வேதனையையும் கஷ்டத்தையும் வைத்திருக்கிறீர்களோ உங்கள் ஆன்மாவில் அது அதிகமாகப் பரவியிருக்கும்.
எந்த நல்ல சமாச்சாரத்தைப் பேசினாலும்
1.உங்களை அறியாமலேயே உங்கள் கஷ்டத்தைச் சொல்லி விடுவீர்கள்.
2.உங்களை அறியாமலேயே என் கஷ்டம் என்னை விட்டுப் போக மாட்டேன் என்கிறது என்றே சொல்வீர்கள்.
இதைப் போன்ற நிலைகளிலிருந்து நீங்கள் விடுபட வேண்டும்.
யாம் கொடுத்த வாக்குகளின் துணை கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கொண்டு அதைச் செயலாக்கி உங்கள் காரியங்களைச் சித்தியாக்கி நிரூபிக்க வேண்டும்.


இந்தத் தியானத்தின் மூலம் முன் கூட்டியே அறிய முடியும்
ஒரு கம்ப்யூட்டரில் மணிக்கணக்குகளைக் காட்டுகின்றார்கள். உணர்வின் தன்மை எலெக்ட்ரானிக்காக அது இயங்கி… அதிலே குறித்த நிலைகள் வரும் பொழுது மணிகளை மாற்றி மாற்றிக் காட்டுகின்றது.
ஆனால்…
1.அதிலே சிறிது தண்ணீர் பட்டு விட்டால் முழுவதும் மறைந்துவிடும்.
2.எதிர்மறையான உணர்வுகளைப் பதியச் செய்யும் போது அது தாறுமாறாக வேலை செய்துவிடும்.
3.அந்தக் கரண்டின் இயக்கம் அதில் உள்ள பேட்டரியின் சார்ஜ் குறைந்தாலும் தப்பான கணக்கைத் தான் காட்டும்.
அதைப் போன்று தான் நம் உயிரின் இயக்கம் சீராக இருக்கப்படும் பொழுது நம் எண்ணம் சொல் செயல் எல்லாம் நன்றாக இருக்கும்.
1.சோர்வு வேதனை போன்ற மற்ற நஞ்சான உணர்வுகள் வந்தால்
2.அத்தகைய எண்ண அலைகளை நமக்குள் அதிகமாகச் சேர்த்த பின்
3.நம் உயிர் அந்த உணர்வின் தன்மையை இயக்கப்படும் பொழுது இயக்கத்தின் துடிப்பு குறைந்து விடும்.
அப்படிக் குறையும் பொழுது நம் உடலின் இயல்பான இயக்கங்களும் குறையத் தொடங்குகின்றது. நம் எண்ணும் நிலைகள் சீராக வராது ஒரு கணக்குப் பார்த்தாலும் சரியாக வராது. நம் சொல்லும் சரியாக இருக்காது.
ஏனென்றால் நம் உயிர் எலெக்ட்ரானிக்காக (உணர்ச்சிகள்) அதை உற்பத்தி செய்து கொண்டே இருக்கும்.
1.அதிலே எந்த உணர்வின் தன்மை அதிகரிக்கின்றதோ அந்தந்த உணர்வுகளை மாற்றி மாற்றிக் கொண்டே இருக்கும்.
2.அந்த மாற்றம் எதுவோ கண்களில் அந்த நிறங்கள் மாறும்.
3,சொல்லுக்குள்ளும் உணர்ச்சிகள் மாறும். அந்த உணர்ச்சிக்கொப்ப உடலின் நிறமும் மாறும்.
இந்த மாதிரி ஒருவரைப் பார்த்தவுடனே அவருடைய நிலைகளைச் சொல்லிவிடலாம். யாம் சொல்லும் தியானத்தைச் சீராகக் கடைப்பிடிப்போருக்கு இது தெளிவாகத் தெரிய வரும். தெரிந்தாலும் இதை ஜோதிடம் போன்று சொல்லி விடக்கூடாது.
சில நேரங்களில் உங்களிடம் சில கேள்விகள் கேட்பேன் (ஞானகுரு). அப்பொழுது அந்தச் சமயத்தில் உங்களிடமிருந்து என்னென்ன வருகிறது என்று பார்ப்பேன். பார்த்த பின் அதிலே என்ன நல்ல மாற்றம் கொடுப்பது என்று நான் இணைத்துக் கொடுப்பேன்.
நான் வேறு விதமாக மாற்றிச் சொல்லும் பொழுது உங்களிடமிருந்து எல்லாம் வெளியே வந்துவிடும். அப்பொழுது இந்த அலைகளைத் தொடர்ந்தவுடன் “எந்த உயர்ந்த உணர்வை உங்களிடம் கலக்க வேண்டும்…?” என்று சொல்லி உங்களிடம் கலக்கச் செய்வேன்.
1.அந்தச் சமயத்தில் நான் சொல்வதில் விஷயம் அதிகமாக இருக்கும்.
2.ஏனென்றால் குரு வழியில் அதை எதை இணைக்க வேண்டும் என்று இணைத்துத்தான்
3.உங்களுக்கு எந்த அறிவைக் கொடுக்க வேண்டும் என்று அந்த நல்ல மாற்றத்தைக் கொண்டு வருவது.
உதாரணமாக பள்ளியில் ஆசிரியருக்கு ஒரு மாணவன் மீது வெறுப்பாகி விட்டால் பாடத்தைக் கொஞ்சம் அழுத்தமாகத் தான் சொல்லிக் கொண்டு வருவார். மாணவனுக்குள் பயம் வந்து விட்டால் ஆசிரியர் என்ன சொன்னாலும் இவனுக்குள் இது பதிவாகாது. இது எல்லாம் அந்த உணர்வின் நிலை.
பார்வை அங்கே இருட்டாகும். எதிரில் எது இருந்தாலும் அதைச் சரியாகக் காண முடியாது. அந்த உணர்வுக்குள் நஞ்சாகும்.
ஆக… விஷத்தில் எந்த நல்ல பொருளைப் போட்டாலும் சிந்தனை வராது. விஷத்தின் தன்மையின் உணர்வாகவே மாறிவிடும். அந்த நேரத்தில் என்ன பதிவு செய்தாலும் அது பதிவாகாது.
அது போல் ஆகாது… குருநாதர் கொடுத்த கோடி கோடி என்ற நிலைகள் கொண்டு அந்த உண்மையின் தன்மை வளர்ந்தாலும்… கோடி கோடி என்ற ஒளியான உணர்வின் தன்மையாக உங்களுக்குள் இணைத்தே கொண்டு வருகின்றேன்.
1.இணைத்துக் கொண்ட பின்
2.அது தெளிந்த அறிவை உங்களுக்கு ஊட்டும்.
ஆக… அடுத்தவர்களை நீங்கள் பார்த்த பின் கேட்டறிந்து அதைச் சொல்வதல்ல. கேட்டறிந்து நீங்கள் சொல்ல வேண்டும் என்றால் நானே அப்படிச் சொல்ல முடியாது.
ஆனால் திருப்பிச் சொல்லும் நிலை வந்தால் அது வெறும் பாட நிலையாகத் தான் ஆகும். ஆகவே நாம் ஒருவரைப் பார்க்கப்படும் பொழுது அந்த உண்மைகளை நமக்குள் உணர்த்தும். அங்கிருக்கும் தீமையும் தெரியும்.
அப்பொழுதெல்லாம்…
1.அந்தத் தீமையை நீக்குவதற்குண்டான வழி எது… என்று நாம் எடுக்க வேண்டும்.
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்ற உணர்வை எடுத்தால் நமக்குள் தீமை சேராது.
3.அவர்களின் தீமைகளை நீக்கும் சொல்லாக நம்மிடமிருந்து வரும்.
அந்தச் சொல்லினை அவர்கள் பதிவு செய்து விட்டால்… அவர்கள் கேட்டுணர்ந்தால்… திருப்பி அதை அவர்கள் எண்ணினார்கள் என்றால் அவர்கள் தீமையை அவர்களே போக்க முடியும்….!
ஒருவர் வாய் திறந்து சொன்னால் போதும்… இப்படித்தான் என்று நமக்கு அது தெரிய வரும். நமக்குத் தெரிய வந்தாலும் உடனே நாம் ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்.
தெரிந்து கொண்டேன் என்று உடனே அவர்களிடம் சொல்லக்கூடாது.
1.அவர்களுக்கு நல்ல உணர்வை எப்படிக் கொடுக்க வேண்டும் என்ற நிலையில்
2.அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெறவேண்டும் என்ற இந்த உணர்வுடன்
3.அவர்கள் கண்களை உற்றுப் பார்க்க வேண்டும்… நாம் எதையும் சொல்ல வேண்டியதில்லை.
ஆனால் அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கும் நிலையில் பிறிதொன்றை அவர் சொல்லும் போது நமக்குக் கோபம் வரும். ஆனால் இங்கே சொன்ன உபாயத்தின்படி எண்ணிப் பாருங்கள்.
சரி… அப்படியா…! என்று அந்த அருள் உணர்வுகளைக் கண்ணிலே பாய்ச்சிப் பாருங்கள். யாராவது குற்றமாகச் சொல்ல வரும் பொழுது இந்த முறையைக் கையாண்டு பாருங்கள்.
1.அவர்களுக்குள் ப்ரேக் ஆகும்… நாம் பாய்ச்சும் அருள் உணர்வுகள் அவர்களை இடைமறிக்கும்.
2.குறைகளையே சிந்தித்துக் கொண்டிருந்தால் இது போய் அங்கே தடையாகும்.
3.ஆனால் அவர்கள் உணர்வுகள் நமக்குள் வராது… நாம் பாய்ச்சும் அருள் உணர்வுகள் அவர்கள் தீமைகளை அடக்கச் செய்யும்.
ஏனென்றால் யாரும் தவறு செய்யவில்லை. நுகர்ந்த உணர்வு அவர்களை இயக்குகிறது. அந்தக் குறை வளரக்கூடாது என்ற நிலையில் மகரிஷிகளின் அருள் ஒளி அங்கே படர வேண்டும்… மெய்ப் பொருள் காணும் திறன் பெறவேண்டும் என்று இதை மட்டும் நீங்கள் எண்ணிப் பாருங்கள்.
இப்படிச் செய்வதற்கு மாறாக நாம் அவர் உணர்வை அப்படியே எடுத்துக் கொண்டால் இரண்டு பங்கு நமக்குக் கோபம் வரும். நீ பெரியவனா… நான் பெரியவனா…! என்று சண்டை வரும்.
இந்தத் தியான வழியில் உள்ளவர்கள் இதை எல்லாம் கொஞ்சம் பழகிக் கொள்ள வேண்டும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
தையல் வேலை பார்ப்பவர்களும் சில வகையான பின்னல் ஆடைகளை நெய்பவர்களும் இருக்கின்றார்கள்.
நம்மிடம் பேசிக் கொண்டுதான் இருப்பார்கள். ஆனால் பழக்கப்படுத்தி வைத்திருப்பதால் அவர்கள் கைகள் தன்னாலேயே வேலை பார்த்துக் கொண்டிருக்கும்.
நேர்த்தியாகத் தைப்பார்கள், பின்னுவார்கள். அவர்கள் தைத்த ஆடைகள் சீராக இருக்கும். பின்னல் ஆடைகளும் நன்றாக இருக்கும்.
ஆனால் பழக்கமில்லாதவர்கள் பார்த்துப் பார்த்துத் தைத்தாலும் பின்னினாலும் நேராக வராது. கோணல் மாணலாகப் போய்க் கொண்டிருக்கும்.
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியை நான் (ஞானகுரு) கடைப்பிடித்தேன். நான் படித்தது மூன்றாம் வகுப்புதான். அதையும் கூட முழுமையாகப் படிக்கவில்லை.
குருநாதர் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எனக்குள் பதிவாக்கினார். அவர் சொன்ன முறைப்படி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எனக்குள் வளர்த்துக் கொண்டேன்.
எப்படிப்பட்ட தீமைகள் வந்தாலும் அதை மாற்றி அமைக்க முடிகின்றது. எளிதில் தீமைகளை அகற்றும் நிலைகளைப் பெற்றேன். ஆகவே
1.எனக்குள் தீமைகள் புகாது தடுத்துக் கொள்வதும்
2.உங்களுக்குள் தீமைகள் புகாது தடுக்கும் சக்தியாக அந்த அருள் உணர்வுகளை ஊட்டுவதும் என்னால் முடிகின்றது.
அதைப் போல் நீங்களும் பழகிக் கொண்டால் நிச்சயம் உங்களாலும் அது முடியும்.
உங்கள் வாழ்க்கையில் பல தீமைகள் வந்தாலும் தீமைகளைப் பற்றித் தெரிந்து கொண்டாலும் அவர்களுக்கு உதவி செய்தாலும் அந்தத் தீமை என்ற உணர்வுகள் உங்களுக்குள் வளராது தடுக்கும் “உபாயத்தைத்தான்..” இப்பொழுது கொடுக்கின்றோம்.
இதை நீங்கள் பதிவாக்கிக் கொண்டால் இந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் செயலாக்குகின்றது.
ஒரு கம்ப்யூட்டர் மூலம் ஒரு இயந்திர மனிதனை உருவாக்குகின்றார்கள். இயந்திர மனிதனை உருவாக்கியபின் அதை வைத்துப் பல வகையான வேலைகளைச் செய்ய வைக்கின்றார்கள்.
உதாரணமாக இங்கே குப்பைகள் விழுந்துவிட்டால் அதைக் கண்டபின்… “எலெக்ட்ரானிக் ஆகி” உடனே அந்தக் குப்பையை உறிஞ்சி எடுத்துக் கொள்கின்றது.
குப்பை இல்லை என்றால் பேசாமல் போய்விடுகின்றது.
அதே சமயத்தில் “தனக்கு ஆகாதவன் வருகிறான்..,” என்றால் பணப் பெட்டியையோ மற்றதையோ திருடும் நோக்கத்துடன் வருகின்றான் என்றால் “அது எலெக்ட்ரானிக் ஆக மாற்றி” எதிரி வருகின்றான்… இதை உடைக்கப் போகின்றான்… என்று “அறிவிப்பு” கொடுக்கின்றது.
ஏனென்றால் மனிதனால் செய்யப்பட்ட இயந்திரம் எலெக்ட்ரானிக் மூலம் இத்தகையை உணர்வுகளைச் செயல்படுத்துகின்றது. இதை போன்று தான்
1.உங்கள் உயிர் “எலெக்ட்ரிக்”.
2.நுகரும் உணர்வுகள் “எலெக்ட்ரானிக்” (உணர்ச்சிகளாக மாற்றுகின்றது உயிர்)
இருளை நீக்கி ஒளியான உணர்வாக மாற்றிக் கொண்டவர்கள் மகரிஷிகள். அப்படிப்பட்ட உயர்ந்த அழுத்தத்தைக் கொண்ட மகரிஷிகளின் அருள் உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்.
அப்பொழுது உங்கள் நினைவினைச் சிறிது கூட்டினால் (எலெக்ட்ரானிக் அழுத்தத்தைக் கூட்டி) மகரிஷிகளின் உணர்வின் அழுத்தம் பிறருடைய பகைமை உணர்வுகளை உங்களுக்குள் வராதபடி தடுத்துக் கொள்ள முடியும்.
அந்தச் சக்தி நீங்கள் பெறவேண்டும்.
உங்களை இயக்குவது உயிர் ஈசன். நுகர்ந்த உணர்வின் தன்மை உருவாக்குவது ஈசன்.
உருவாக்குவது ஈசன் என்று தெரிந்து கொண்ட பின் வேதனையான உணர்வுகள் உயிரிலே பட்டால் நாம் எதைச் சேர்த்தோமோ அதன் வழியில் தான் அழைத்துச் செல்லும்.
ஆனால் அந்தத் தீமைகளை நீக்க வேண்டும் என்று எண்ணினால் அதன் வழியில் நம்மை அழைத்துச் செல்லும்.


“ஜோதி நிலை…” அடைய வேண்டும் – ஈஸ்வரபட்டர்
ஏற்கனவே எடுத்த பிறவியில் எல்லாம் விட்ட குறையினால் தான் இப்பிறவியில் வந்துள்ளோம்.
இப்பிறவியின் தன்மையில் தியான நிலையில் வந்திடும் (பெற்றிடும்) ஜோதி நிலை என்னப்பா…? பல கோடிச் சித்தர்களும் ஞானிகளும் ரிஷிகளும் பெற்றிட்ட ஜோதி நிலை என்னப்பா…?
ஜோதி நிலை என்றதன் பொருள் என்னப்பா…? ஜோதி நிலை பெறுவது எப்படியப்பா…? (தியானத்தில் வெறுமனே காட்சியாகத் தெரிந்து மறைவது ஜோதி நிலை அல்ல)
குடும்ப நிலையில் உள்ள ஒவ்வொருவரும் அவர் விடும் சுவாச நிலையினாலேயே ஜோதி நிலையைப் பெற்றிடலாம். இவ்வுலக வாழ்க்கையில் உள்ள பொழுதிலேயே பெற்றிடலாம் அந்த “ஜோதி நிலை…!”
சித்தர்களும் ஞானிகளும் பெற்றிட்ட ஜோதி நிலையை எல்லோரும் பெற்றிடலாம். அதற்காக நம் வழியில் சிறிது மாற்றம் வேண்டும்.
மன நிலையில் உள்ள சோர்வை நம் நினைவில் மறக்கச் செய்து நம் சுவாச நிலையில் நல் சுவாசத்தை எடுத்திடப் பழக வேண்டும். மன அமைதியும் சுவாச நிலையும் ஒன்றுபட்டு ஒரு நிலை எய்திட வேண்டும். (ஏனென்றால் சுவாச நிலையில் சிறு மாற்றம் வந்தாலும் அந்த நிலை மாறுபடுகிறது)
1.மனதில் சோர்வும் கோபமும் வந்திடாமல் எடுக்கும் சுவாச நிலையில்
2.தியான முறையில் உள்ள பொழுது ஈர்ப்பதே நம் கண்ணில் தெரிந்திடும் ஒளிகள் எல்லாம்…!
அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை உயிர் வழியாக நுகர்ந்து உயிரிலே ஜோதிச் சுடராக ஏற்ற வேண்டும். இதை ஒவ்வொரு நிமிடமும் ஏற்ற வேண்டும்.
1.மேல் நோக்கிப் (விண்ணிலே) பார்க்கும் உணர்வின் தன்மையை
2.அந்த ஜோதிச் சுடர் போல் நம் உணர்வின் தன்மையை ஒளியாக மாற்ற வேண்டும்.
இருள் அகற்றும் நிலைகளை ஒற்றுமையாக இருந்து தியானித்து அனைவரும் நலம் பெற வேண்டும். வளம் பெறவேண்டும் அவர்கள் உடலில் அறியாது சேர்ந்த இருள் நீங்க வேண்டும் அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும் என்று எண்ணத்தினை எல்லோரும் சேர்ந்து எடுத்துப் பேரொளியாக ஜோதியாக உருவாக்கும் நிலைகளுக்குச் செய்தார்கள் அன்றைய ஞானிகள்.
மகரிஷிகளின் அருள் ஒளி கொண்டு அனைவருடைய உணர்வுகளும் ஒளி பெறவேண்டும் என்று நாம் எண்ணும் போது
1.நமக்குள் ஒளி பெருகி ஜோதியாகின்றது.
2.ஒளியின் உணர்வின் அணுக்களாக மாற்றுகின்றது.
3.இருளை அகற்றிப் பொருளைக் காட்டுகின்றது.
4.வாழ்க்கையில் அறியாது சேர்ந்த தீமைகளை மாற்றியமைக்கும் திறனும் பெறுகின்றோம்.
மகரிஷிகளின் உணர்வுகளை ஒவ்வொரு நிமிடமும் ஜோதியாக உயிரிலே ஏற்றிக் கொண்டால்
1.“நம் ஆன்மா மெய் ஞான விழிப்பு நிலை பெறும்…!”
2.நீல நிற சமைப்பின் ஜோதி நிலையை நம் உயிராத்மா அடையும்.
அதன் மூலம் நாம் மற்றவர்களிடம் பேசும் பொழுதும் மற்றவர்கள் நம்மிடம் பேசும் பொழுதும் அந்த அருள் உணர்வுகளைப் பாய்ச்சி வாழ்க்கையில்… நாம் பொருளறிந்து செயல்படும் ஞானத்தின் சக்தியாக நம்முடைய செயல்களை எல்லாமே மெய் வழியில் அமைத்துக் கொள்ள முடியும்.

அரவணைத்து வாழும்… இணைந்து வாழும்… அருள் சக்திகளை நமக்குள் வளர்த்திட வேண்டும்
பல கோடிச் சரீரங்களின் வளர்ச்சியில் மனிதனாக உருவாக்கிய நிலைகள் வரப்படும் பொழுது நாம் எண்ணியது எதுவோ அது “பிரம்மகுருவாக” மாற்றுகின்றது.
அகஸ்தியன் தன் உணர்வின் தன்மை கொண்டு விண்ணுலக ஆற்றலை நுகர்ந்து நஞ்சினை வென்றிடும் உணர்வினைத் தனக்குள் கவர்ந்து கொண்டதனால்… அவன் எந்த உண்மையின் உணர்வைக் கவர்ந்து கொண்டானோ அது பிரம்மகுருவாக இருந்து ஒளியின் சரீரமாக அவனை உருவாக்கியது.
அவன் தனக்குள் எடுத்துக் கொண்ட தீமைகளை அகற்றிடும் அருள் சக்திகளைத் தன் மனைவிக்கும் பெறச் செய்து தனக்குள் இணைத்துக் கொண்டான்.
1.அவர்கள் இருவரும் வசிஷ்டரும் அருந்ததியும் போல் வாழ்ந்து…
2.நளாயினி போன்று கணவன் மனைவியை மதிப்பதும் மனைவி கணவனை மதிப்பதும்
3.சாவித்திரி தன் கணவனை எமனிடமிருந்து மீட்டினாள் என்ற நிலையாக இரு உணர்வும் ஒன்றி வாழ்ந்த பின்
4.இரு உயிரும் ஒன்றி வாழும் தன்மை வருகின்றது…
5.துருவ மகரிஷியாகி… துருவ நட்சத்திரமாக இன்றும் வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளனர்.
கணவனும் மனைவியும் இப்படி இரண்டறக் கலந்து… இன்னொரு பிறவிக்குப் போகாது… தன்னுடன் இணைத்துக் கொண்டு… உயிர் எப்படியோ அதைப் போல் உணர்வின் அணுக்களை உருவாக்கிப் “பிறவி இல்லா நிலைகள் அடைவது தான் கடைசி நிலை…!” என்று இராமாயணக் காவியங்கள் தெளிவாகக் கூறுகின்றது.
நுகரும் உணர்வுகள் எவ்வாறு எண்ணமாகின்றது…? என்றும் உணர்வின் இயக்கங்கள் எவ்வாறு உருவாக்குகிறது… உருவாகிறது…? என்றும் உருவத்தை அமைத்து
1.நாம் கவரும் நிலைகளும் நாம் நுகர்ந்த உணர்வுகளும் உடலுக்குள் சென்ற பின்
2.அதனால் உடலுக்குள் மாற்றங்களும் போர் முறைகளும் அது எவ்வாறு வருகிறது என்றும்
3.நம் உடலுக்குள் எவ்வாறு போர் முறைகள் நடக்கிறது என்றும்
4.அந்த உணர்வுகளால் நமக்குள் எப்படித் தீமைகள் விளைவிக்கிறது…? என்றும்
5.இதிலிருந்து நாம் எவ்வாறு விடுபட வேண்டும்…? என்ற நிலையையும் இராமாயணத்தில் சித்தரித்துக் காட்டினார்கள்.
சீதா… துருவ நட்சத்திரத்திலிருந்து மகிழ்ச்சி பெறும் உணர்வை (அந்தச் சத்தினை) நாம் நுகர்ந்தால் நமக்குள் பகைமை உணர்வை மாற்றிக் கல்யாணராமனாக மகிழ்ந்து வாழும் நிலைகளையும் நமக்குள் ஒன்று சேர்த்து வாழும் தன்மைகளும் வருகிறது.
1.அந்த மகிழ்ச்சி பெறும் உணர்வினைத் தனக்குள் கவர்ந்து (வசிஷ்டர்) கொண்டால்
2.அதனின் சுவை சீதா (சத்து) தனக்குள் அருந்ததியாக இருந்து
3.நம்மை என்றுமே பிறவி இல்லா நிலை என்ற நிலையை அடையச் செய்யும் அந்த அருள் சக்திகளை நாம் பெற முடியும்.
அத்தகைய தகுதியை உங்களுக்குள் ஏற்படுத்தும் நிலையாகத் தான் அன்று அகஸ்தியன் கண்ட உணர்வின் உண்மைகளையும் அவனில் இருந்து வெளிப்பட்ட நஞ்சை வென்றிடும் உணர்வுகளையும் நீங்கள் பெற இந்த உபதேசம் கொடுக்கின்றோம் (ஞானகுரு).
அதன் மூலம் இந்த உலகையும் உலக இயக்கத்தையும் உங்கள் உயிரின் இயக்கத்தையும் உடலுக்குள் அது எப்படி இயக்குகிறது என்ற நிலையும் நீங்கள் அறிய முடியும்.
அகண்ட அண்டத்தையும் பேரண்டத்தையும் உணர்ந்த அகஸ்தியன் அவனில் கண்டுணர்ந்த உண்மையின் உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்கப்படும் பொழுது
1.அகண்ட அண்டத்தில் விளையும் உணர்வை உங்களுக்குள் விளையச் செய்ய முடியும்
2.அகண்ட அண்டத்தில் வரும் நஞ்சான நிலைகளை வென்றிடும் உணர்வுகளையும் பெற முடியும்.
இந்நேரம் வரை உங்களுக்குள் பதிவாக்கிய அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நீங்கள் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து
1.அந்த உணர்வை எடுத்தால்… அது சீதாராமனாக உங்களுக்குள் மகிழ்ச்சி பெறும் நிலையாக
2.இணைந்து வாழும் சக்தியாக (அரவணைக்கும் சக்தி)
3.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து ஆறாவது அறிவை ஏழாவது ஒளியாகப் பெற முடியும்.
அதை நீங்கள் ஒவ்வொருவரும் பெறவேண்டும்… உங்களுக்குள் அந்த அரும் பெரும் சக்திகள் விளைந்திட வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன் (ஞானகுரு).
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
ஞானிகள் கண்டுணர்ந்த பேருண்மைகளை உங்களுக்குத் திரும்பத் திரும்ப பல கோணங்களில் சொல்லிக் கொண்டே வருகின்றோம். ஆனால் உபதேசத்தைக் கேட்கும் சிலர்
1.சாமி (ஞானகுரு) சொன்னார்… கேட்டோம்
2.நல்ல விஷயங்களைச் சொன்னார்…! என்று அந்த அளவில் நிறுத்தி விடுகிறார்கள்.
நெற் பயிரை விவசாயம் செய்ய வேண்டும் என்றால் அதற்கு இந்த இந்த உரங்கள் இட வேண்டும். பயிர் வளர்ந்து வரும் வேளையில் இந்தெந்தக் காலங்களில் இதை இதைச் செய்ய வேண்டும் என்று சொன்ன பிற்பாடு…
1.“ஆஹா… பிரமாதமாகச் சொல்லி விட்டார்…!” என்று
2.அதைப் புகழ்ந்து பேசினால் எப்படி இருக்கும்…?
நெல் விளைவதற்கு இன்னென்ன உரம் இட்டால் அது நலமாக இருக்கும் என்று விளக்கிச் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு
1.“ஆஹா…! எப்படிச் சொன்னார் தெரியுமா…?” என்று மனதில் மட்டும் வைத்து விட்டு…
2.நெல்லுக்கு வேண்டிய உரத்தை இடாது…
3.அந்தந்தக் காலத்திற்கு நீரை விடாது…
4.அந்தந்தக் காலத்தில் களையை நீக்காது விட்டு விட்டால்…
5.நெல் எப்படி வரும்…?
தியானத்தைக் கடைப்பிடிக்கிறோம் என்று சொல்வோர் பலருடைய நிலைகள் இதில் தான் உள்ளது. என்னைப் புகழ்ந்து பேச வேண்டும் என்ற நிலையில்
1.ஆஹா… எங்கள் சாமி அற்புதமாகச் சொல்லுகின்றார்…!
2.அவர் சொல்வதை நான் என்னவென்று சொல்வேன்…!
3.என்ன அழகாகச் சொல்கிறார்…! என்று போற்றுவார்கள்… புகழ் பாடுவார்கள்…!
சாமியை யாராவது தவறாகச் சொன்னால் அவர்களுக்குக் கோபமும் வரும்…! சாமி இப்படித்தான் சொன்னார்… உனக்கென்ன தெரியும்…! என்று சண்டையும் போடுவார்கள்…!
ஆனால் யாம் கொடுக்கும் உபதேசத்திற்குள் இருக்கும் மெய்ப் பொருளைக் காணாத நிலையில் நமக்கு நாமே நல்ல உணர்வின் தன்மையை மறைத்து விடுகின்றோம்.
இது தான் உண்மை…!
மனித வாழ்க்கையில் தீமைகளை அகற்றும் பேரானந்த நிலை பெறும் ஆற்றல் மிக்க சக்திகளை நீங்கள் பெற வேண்டும் என்று குருநாதர் காட்டிய வழியில் 20 வருடம் தவம் இருந்து அந்த உண்மையை உணர்ந்து கொண்டோம்.
மகரிஷிகள் கண்டுணர்ந்த அந்த மெய்ப் பொருளை நீங்கள் காணும் வண்ணம் அதனை விளைவித்து அருள் ஞான வித்தாக ஒவ்வொரு கால கட்டத்திலும் விதைத்துக் கொண்டே இருக்கின்றோம்.
அந்தக் காலமறிந்து பருவமறிந்து வரும் தீமைகளை அகற்றி எப்படி வளர வேண்டும் என்ற நிலைகளை உங்களுக்குள் உபதேசித்துக் கொண்டே இருந்தாலும் நீங்கள் எத்தனை பேர் அதைப் பெற்று வளர்த்துக் கொண்டுள்ளீர்கள் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்…!
நமக்குள் கடவுளாக வீற்றிருந்து உள் நின்று இயக்கிக் கொண்டிருக்கும் புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசன்
1.நாம் எண்ணியதை எல்லாம் இறையாக்கி
2.நாம் எண்ணியதை நமக்குள் உருப் பெறச் செய்து
3.எதை இறையாக்கினோமோ அதனின் செயல் தெய்வமாகச் செயலாக்குகின்றது.
எனவே நாம் எதை எண்ண வேண்டும்…? எதனின் உணர்வின் தன்மையை நமக்குள் செயலாக்க வேண்டும்…? என்பதைத் தெளிவுற எடுத்துக் கொள்ளுங்கள்.
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளை அனுபவ ரீதியாகப் யாம் பெற்றுணர்ந்ததை உங்களுக்குள் அருள் ஞான வித்தாக விளைய வைத்து அதைப் பெறும் தகுதியை நீங்கள் பெற வேண்டும் என்பதற்கே இந்த உபதேசம்.
உங்களை ஆண்டு கொண்டிருக்கும் அந்த ஈசனுக்கு மகிழ்ச்சி பெறும் நிலைகளாக மகரிஷிகளின் அருள் சக்தி உங்கள் எண்ணத்தால் உங்களுக்குள் உருப் பெற வேண்டும் என்று வேண்டிக் கொள்கின்றேன்.


பிறப்பு… இறப்பு… மீண்டும் பிறப்பு…! என்ற சுழலிலிருந்து தப்ப வேண்டும் – ஈஸ்வரபட்டர்
இவ்வுலகின் தன்மையிலே மனிதனின் எண்ணத்திற்கும் ஆவி உலகின் எண்ணத்திற்கும் பல கோடிப் பாடங்களைப் பகர்ந்திடலாம். விதி வந்து விட்டது… அதனால் மடிந்து விட்டான்…! என்கிறோம்.
1.விதி வந்து அந்த உடல்களை மடியச் செய்வதில்லை
2.ஆயுளை ஆண்டவன் அளிப்பதல்ல…!
பிறப்பும் இறப்பும் இறைவன் இட்ட பிச்சை என்கிறார்கள். பிறப்பும் இறப்பும் இறைவன் இட்ட பிச்சை அல்ல. காலம் தோன்றியவுடன் வந்த அணுக்கள் தான் காலமுடன் கலந்து வந்துள்ளது பல பிறப்புகளில்.
எந்த அணுவும் எக்காலத்திலும் மடிவதில்லை.
கலி முடிந்து கல்கி வருகிறது…! என்று சொன்னேன். கலியில் முடியும் இவ்வுயிர் அணுக்கள் எல்லாமே கல்கியில் அவ்வொளியின் கதிர்கள் பட்டவுடன் பல நிலை கொண்ட பிறப்பாக உயிர் பெறுகின்றது. அந்த நிலையில் சுழல்கிறது அந்த உலகத்திலேயே.
உலகத்தன்மை தான் மாறுபடுகிறது. உயிரணுவின் தன்மையும் மாறுபடுகிறது. எல்லாமே என்றென்றும் அழிவதில்லை… மாறுபட்டு மாறுபட்டுத் தான் உலகில் சுற்றிக் கொண்டே வருகிறது.
மனிதன் மனிதனாகவும் பிறப்பதில்லை. மற்ற ஜீவராசிகள் அந்தந்த உடலிலேயும் பிறப்பதில்லை. அவ்வுலக ஆரம்பத்தில் உலக நிலையில் இக்காற்றுடன் கலந்துள்ள அணுக்கள் எல்லாம் அதனதன் மன நிலையில் விடும் சுவாசத்தின் தன்மையிலே ஆரம்ப நிலையில் வந்து உதிக்கின்றது புழுவாக… பூச்சியாக… மீனாக… நண்டாக…!
ஆதியில் மனிதன் கல்கியின் ஆரம்பத்தில் முதல் அவதாரத்தில் தோன்றிய உயிரணுக்கள் எல்லாம் ஒன்று போல் தான் இருந்தன. அந்நிலையில் விட்ட சுவாசத் தன்மையிலே உருவங்கள் மாறுபட்டு மாறுபட்டுப் புழுவாகி அடுத்த நிலையில் கொசுவாகிக் கொசுவின் நிலை மீனாகி அந்நிலையில் இருந்து மனித உடல் பெறுகின்றன.
மனித உடலின் எண்ணத்திலே மாறுபட்டு மாறுபட்டு ஏழு ஜென்மங்கள் எடுத்து…
1.ஏழு ஜென்மங்கள் எடுப்பவனும் மனித உடலில் சில காலங்கள் தான் சஞ்சரிக்கின்றான்.
2.மனித உடலில் மாறுபட்டுத் தான் மிருகமாகின்றான்.
3.மனிதனில் இருந்து மிருகமாகி… மிருகத்தில் இருந்து பறவையாகி நீரில் வாழும் ஜீவராசிகளாகி கொசுவாகிப் புழுவாகி
4.உலக ஆரம்பத்தில் உள்ள நிலைக்கே கலியின் கடைசியில் வருகின்றான்.
5.கல்கியின் முதலுக்கும் அந்நிலையில் தான் வருகின்றான். அந்த நிலையில் தான் பிறகும் ஜென்மம் எடுக்கின்றான்.
இந்த ஜென்மச் சுற்றிலிருந்து விடுபடுவதற்குத் தான் இத்தியான நிலை. தியானத்தின் மூலம் உங்கள் சுவாச நிலையை ஒரு நிலைப்படுத்திடுங்கள் என்று சொல்கிறேன்.
இப்பொழுது இந்த உடலில் உள்ள ஜென்மம் மட்டுமல்ல உங்கள் ஜென்மம். இந்த உலக ஆரம்பத்திலேயே வந்து விட்டது உங்கள் ஜென்மம்.
ஜென்மப் பயனை எடுத்திடுங்கள்… ஈசன் அருளைப் பெற்றிடலாம்…! என்பதெல்லாம் இதுவே தான். இறைவன் என்பவன் யாருமில்லை. “அவனவன் உள்ளத்தில் தான் இறைவன் உள்ளான்…!” என்று பல முறை உணர்த்தினேன்.
இறப்பும் பிறப்பும் இறைவன் செய்ததல்ல. வந்தது எல்லாம் அவரவர் (உங்கள்) வழியில் தான். “வினை விதைத்தவன் வினை அறுப்பான் விதை விதைத்தவன் விதை அறுப்பான்…” என்ற பொருளும் இதுவேதான்.
உன்னுள் இருக்கும் ஈசனின் சக்தியில்
1.பிறப்பு எடுத்ததும் நீயே தான்
2.பிறவியை இழப்பதும் நீயே தான்.
இறைவனின் படைப்பல்ல பிறப்பும் இறப்பும். உன்னுள்ளே தான் எல்லாமே உள்ளதப்பா… எண்ணத்தின் கற்றலிலே…! சுவாசத்தில் வருவது தான் பிறப்பும் இறப்புமே…
புரிந்ததா…?

கணவன் மனைவி இரு உயிரும் ஒன்றிட வேண்டும்
குடும்பத்தில் கஷ்டமோ நஷ்டமோ இதைப் போன்ற தொல்லைகள் இருந்தால்… “கஷ்டம்…” என்ற அந்த வார்த்தைகளை விடுத்து விடுங்கள்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் குடும்பம் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா… என்று புருவ மத்தியில் எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல்கள் முழுவதும் படர்ந்து அங்களை அறியாது சேர்ந்த சாப வினைகள் நீங்கி நாங்கள் உடல் நலத்துடன் வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று தியானியுங்கள்.
சாப அலைகள் என்றால்…
1.நம் குடும்பத்தில் உள்ளோர் யாரும் நேரடியாக சாபம் இட வேண்டியதில்லை
2.ரோட்டிலோ அல்லது அக்கம் பக்கம் உள்ள வீடுகளில் வேறு யாரோ அவர்களுக்குள் பகைமையாகி சாபமிட்டுக் கொண்டிருந்தால்
3.இப்படிச் செய்கின்றார்களே என்று அதனை உற்றுப் பார்த்தால் அந்த உணர்வுகளை நாம் நுகர்ந்து விடுகின்றோம்.
அவர்கள் இட்ட அந்தச் சாப அலைகள் நமக்குள் பதிந்து இரத்தத்திலே அணுக்களாக விளையத் தொடங்கும்.
1.விளைந்த பின் நமக்குள் பகைமை உணர்வை ஊட்டி
2.நம் வாழ்க்கையே சீர்கெடச் செய்யும் நிலையாக நம் நல்ல எண்ணங்களை இடைமறித்து
3.நம் சொல்லைப் பலவீனப்படுத்தித் துன்பங்களை ஊட்டும் நிலையாக வரும்.
இதைப் போன்ற நிலைகளில் இருந்தெல்லாம் விடுபட இந்த அதிகாலை துருவ தியானத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
காலை துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து வலுப்படுத்திக் கொண்ட பின் என் மனைவிக்கு அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும் என் கணவருக்கு அந்த உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும் எங்கள் பார்வை அனைவரையும் நலமாக்கும் சக்தியாக வளர வேண்டும் என்று கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் எண்ணி அந்த வலுவான நிலைகள் கொண்டு அந்த நினைவினை உங்கள் குடும்பத்திலும் தொழிலும் செலுத்திப் பழகுங்கள்.
இவ்வாறு இரு மனமும் ஒன்றாகி விட்டால் உங்கள் உடலில் உள்ள பகைமை உணர்வுகளால் விளைந்த அணுக்களின் வீரியம் தணியத் தொடங்கும்.
அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை உங்களுக்குள் உருவாக்கும் உணர்வும் அதிகரிக்கும். அடுத்துப் பிறவி இல்லா நிலைகள் அடையவும் இது உதவும். ஆகவே இதை மறவாதீர்கள்…!
1.தியானம் என்பது “ஒரே நினைவில் இருக்க வேண்டும்” என்ற நிலை இல்லாது…
அந்த அருள் சக்திகளை எடுத்து அதை மனைவிக்குக் கிடைக்க வேண்டும் என்று கணவனும்…
3.தன் கணவனுக்குக் கிடைக்க வேண்டும் என்று மனைவியும்
4.இருவரும் இப்படி எண்ண வேண்டியது மிகவும் அவசியமாகும்.
ஏனென்றால் ஆண் பெண் என்ற நிலைகள் கொண்டு தான் அந்த உணர்வு தன் இனத்தை உருவாக்குகின்றது.
ஆக… உயிருடன் ஒன்றும் உணர்வின் தன்மையை ஒளியாக (ஒளியான இனமாக) உருவாக்க வேண்டும் என்றால் மனிதனான நிலையில் மனைவியின் உயிருக்குள்ளும் கணவனின் உயிருக்குள்ளும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி இணைந்திட வேண்டும் அந்த உடல் முழுவதும் படர வேண்டும் என்று இரு உயிரும் ஒன்றாகக் கலக்கப்படும் பொழுது தான் இரு உயிரும் ஒன்றி வாழும் தன்மை வருகின்றது.
1.இப்படி ஒன்றிணைந்த நிலைகள் கொண்டு
2.27 நட்சத்திரத்தின் ஒளிக் கற்றைகளைத் தனக்குள் பெருக்கி
3.அண்டத்தில் வரும் அனைத்து நஞ்சினையும் வென்றது தான் துருவ நட்சத்திரம்… துருவ மகரிஷி…!
அந்தத் துருவ மகரிஷியைப் போல் நீங்கள் கணவன் மனைவி இருவரும் இந்த உணர்வின் தன்மையைப் பெற்றால் அகண்ட அண்டத்தில் வரும் நஞ்சினை அது எவ்வளவு கடுமையாக இருந்தாலும்
1.அதை வென்றிடும் சக்தி வருகின்றது.
2.ஒளியாக மாற்றிடும் திறன் வருகின்றது
3.அந்த ஒளியின் உணர்வாகக் கருவாக உருவாக்கும் தன்மை வருகின்றது.
இந்த மனித வாழ்க்கையில் இதைச் சீராகச் செய்து வருவோர் அனைவரும் நிச்சயம் பிறவி இல்லா நிலை அடைய முடியும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
பித்தரைப் போன்று இருந்த குருநாதர் பித்தரைப் போன்று இயங்கும் (இந்த உலக) நிலைகளிகலிருந்து மீண்டிட எமக்குத் தெளிவாக உபதேசித்தார்.
1.ஒவ்வொரு மனிதரின் உயிரையும் கடவுளாக எண்ணு…
2.அவன் கட்டிய கோட்டை அந்த உடல் என்ற நிலைகளில் ஆலயமாக மதி…
3.அவருக்குள் இருக்கும் நல்ல குணங்களைத் தெய்வங்களாக நீ மதி…
4.அவருக்குள் இருக்கும் நல்ல உணர்வை ஈர்க்கும் நிலையை (காந்த சக்தி) “மகாலட்சுமி” என்று மதி…
5.மகாலட்சுமி என்றாலும் அது கவர்ந்தாலும் அந்த உடலுக்குள் சேர்த்து ஞானங்களாக வளர்ந்தது “மகா சரஸ்வதி” சர்வத்தையும் அறிந்து கொள்ளும் மனித உடலுக்குள் இருக்கும் இந்த நிலையை அதை நீ மதி…
6.தீமைகளை அகற்றி விண்ணுலகம் சென்ற அந்த அருள் ஞானியின் உணர்வுகளை ஒவ்வொரு மனிதனுக்குள் சேர்க்க வேண்டும்.
7.அந்த உணர்வுகள் அங்கே தீமையற்றதாக வளர வேண்டும்… இந்த உணர்வின் தன்மை ஓங்கி வளர்ந்திட வேண்டும் என்று உன் எண்ணத்திற்குள் நீ சேர்த்துவிடு….
8.உயிரைக் கடவுளாக மதித்து அந்த ஈசன் வீற்றிருக்கும் ஒவ்வொரு ஆலயமும் புனிதமாக வேண்டும் என்று எண்ணி அதை நீ பிரார்த்தனை செய்…
9.அதனை நீ தியானி…! என்றார்.
அந்த அருள் ஞானிகளின் உணர்வுகளை உங்களுக்குள் சேர்ப்பித்து உங்களுக்குள் வீற்றிருக்கும் ஈசனுக்குத் துன்பமற்ற நிலைகள் கொண்டு மகிழ்ந்து இயக்கும் உணர்வாக நீங்கள் எண்ணும் எண்ணம் அந்த மகிழ்ச்சியான உணர்வின் அபிஷேகமாக நடக்க வேண்டும்.
நீங்கள் எண்ணிய எண்ணங்கள் எல்லாம் இனிமை கொண்டதாகவும் மலரைப் போன்ற மகிழ்ச்சி கொண்ட நல்ல நறுமணம் கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.
இந்த எண்ணத்தின் நிலைகள் உங்களுக்குள் பதிவாக வேண்டும். அப்பொழுது இந்த எண்ணமே
1.உங்கள் உயிரான ஈசனுக்கு நல்லது செய்விக்கும் நிலையும்
2.அவன் அருள் நீங்கள் பெறும் நிலையாகவும் அமையும்.
மனிதர்களான அனைவருக்கும் அருள் ஞானிகளின் உணர்வுகளைச் சேர்ப்பிக்கும் வண்ணமாக எல்லா மனிதர்களுடைய உணர்வுகளிலேயும் இயக்கும் உயிரைக் கடவுள் என நீ மதித்து நட…! என்றார் குருநாதர்
அவர் காட்டிய அருள் வழியில் அந்த அருளாற்றல்களை நீங்கள் பெறவேண்டும் அருள் ஞானிகளின் ஆற்றலை நீங்கள் பெறவேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.
அதனின் துணை கொண்டு உங்கள் குலதெய்வங்களான முன்னோர்களை விண் செலுத்த வேண்டும்.
ஏனென்றால் மூதாதையர்கள் உங்களை வளர்க்க எத்தனையோ வேதனைப்பட்டிருப்பார்கள். அதன் வழியில் வேதனையான உணர்வு கொண்டு அந்த உடலை இழந்திருப்பார்கள்.
அந்த உடலுக்குள் விளைய வைத்த வேதனையான உணர்வுகள் உயிருடன் ஒன்றி உயிருடன் வேதனையாக விளைந்து கொண்டிருக்கும் அந்த உயிரான்மாக்களை நீங்கள் விண்ணுலகம் செலுத்த வேண்டும்.
இது தலையாகக் கடமையாகும்.


அகஸ்தியன் பெற்ற பேரின்பத்தை நாமும் பெற வேண்டும்
ஆதியிலே பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த… இந்த மனித உடலில் விஷத்தை வென்றிடும் உணர்வின் ஆற்றல் பெற்ற அகஸ்தியன் சிறு குழந்தைப் பருவத்திலேயே வானுலகை உற்று நோக்கினான்.
1.இந்தப் பிரபஞ்சம் எப்படி இயக்குகின்றது…? என்றும்
2.பிற மண்டலங்களில் இருந்து எவ்வாறு பல சக்திகள் வருகிறது…? என்றும்
3.அது பால்வெளி மண்டலங்களாக… தூசிகளாக எப்படி மாறுகிறது…? என்றும் கண்டுணர்ந்தான்
4.அவனால் அதை உணர முடிகின்றது… அவன் அறிவாக இயக்குகின்றது
5.அந்த வயதில் சொல்லாலோ செயலாலோ அவனால் வெளிப்படுத்த முடியவில்லை.
இருந்தாலும் அவன் நுகர்ந்தறிந்த உணர்வுகள் அவனுக்குள் விளைந்து அந்த மூச்சலைகள் வெளிப்படுகின்றது.
நம்முடைய கைக் குழந்தைக்கு அது பேசத் தெரியவில்லை என்றாலும் அது அழுகும் போது அந்த உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதை நாம் பார்க்கின்றோம்.
நுகர்ந்த உணர்வுக்கொப்ப அதனுடைய முகங்கள் மாறுகின்றது. மகிழ்ச்சி என்ற உணர்வுகளை நுகரப்படும் போது அந்தக் குழந்தை சிரிப்பதையும் (வாய் அசைவுகளை) நாம் காண முடிகின்றது.
இதைப்போன்று தான் இந்த இயற்கையின் இயக்கங்களை உணர்ந்த அகஸ்தியன்
1.வானுலக உணர்வின் ஆற்றலை எல்லாம் உணர்ந்தான்
2.அவனுக்குள் அது விளைந்தது… அந்த உணர்வுகள் மூச்சலைகளாக வெளிப்படுத்தப்பட்டது.
அவன் உடலில் விளைந்த அந்த உணர்வு கொண்டு மற்ற தாவர இனங்களை இவன் கண்ணுற்றுப் பார்த்தால் அதனுடைய மணத்தை நுகர்ந்து அது எவ்வாறு விளைந்தது… என்றும் எதனெதன் இயக்கத்தில் இது கலந்து வளர்ந்தது…? என்றும் அவனால் முழுமையாக உணர முடிகின்றது.
தன் இளம் வயதில் தரையில் மல்லாந்து படுத்திருக்கும் பொழுது வானை உற்றுப் பார்த்து 27 நட்சத்திரங்கள் உமிழ்த்தும் எதிர்ப் பொறிகள் (கதிரியக்கங்கள்) மின்னலாக மாறி அது எவை எவை என்னென்ன செய்கிறது…? என்ற நிலையை உணர்ந்தவன் அகஸ்தியன்.
அது ஒன்றுடன் ஒன்று மோதி வெடித்து அந்த அதிர்வுகளாக வெளி வருவதை கேது ராகு என்ற கோள்கள் அந்த உணர்வின் தன்மையை நுகர்ந்து விடுகின்றது…. “விஷத் தன்மை கொண்ட கோள்களாக” மாறுகின்றது.
நுகர்ந்ததை ஜீரணித்து தனக்குள் விஷப் பாறைகளாக மாற்றினாலும் அது வெளிப்படுத்தும் தூசி.. (அந்த மூச்சு) அது வெளி வரும்போது சூரியன் கவர்ந்து கொள்கின்றது.
சூரியன் தன் அருகிலே அதைக் கொண்டு வரும் பொழுது தனக்குள் விளைந்த பாதரசத்தால் அதைத் தாக்கிப் பிரித்து
1.ஒளிக் கதிர்களாக (ELECTRIC) நம் பிரபஞ்சத்தையே ஒளிமயமாக்குகின்றது.
2.வெப்பம் காந்தம் விஷம் என்ற மூன்றும் (ELECTRON) கலந்த நிலையில் காந்தம் தனக்குள் மற்றொன்றைக் கவர்ந்திடும் சக்தியாக
3.எந்த ஆவியின் தன்மை (கோளின் சத்தோ நட்சத்திரத்தின் சத்தோ) இங்கே இருக்கின்றதோ அதைக் கவர்ந்து தன்னுடன் இணைத்துக் கொண்டால் அந்த உணவின் சத்தாக (NEUTRON) இயக்கும் அணுவாக மாறுகின்றது
4.முழுமை அடைந்தால் தன் இனமாக விளையத் தொடங்குகிறது (PROTON).
உதாரணமாக ஒரு விஷத்தின் தன்மை அது அடர்த்தியின் தன்மையாக வரும் பொழுது நாம் நுகர்ந்தால் அந்த விஷத்தின் தன்மை உடலுக்குள் ஊடுருவி நாம் மயங்கி விடுகின்றோம்.
ஆகவே அதைப் போலத் தான் இந்த விஷத்தின் தன்மை (ELECTRON) எதை எதை நுகர்கின்றதோ அதன் அணுக்கதிர்களாக மாறுகின்றது. இப்படித்தான் நம் பிரபஞ்சம் இயக்குகிறது என்ற நிலையை முதன் முதலில் கண்டுணர்ந்தவன் அகஸ்தியன்.
1.அவன் நுகர்ந்தறிந்த உணர்வுகளையும் அவனுக்குள் விளைந்த உணர்வுகளையும் நாம் நுகர்ந்தால்
2.அவனின் உணர்ச்சியின் இயக்கமாக நமக்குள் வருவதும்
3.நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் அகஸ்தியனைப் போன்றே எண்ணங்களாக வருவதும்
4.அந்த உணர்ச்சிக்கொப்பப இந்த உடலை இயக்கவும் நம்மைப் பாதுகாக்கும் தன்மையும் வருகின்றது.
அகஸ்தியன் கண்டுணர்ந்த பேரின்பத்தை… அவன் எவ்வாறு இந்த உலகில் அந்தப் பேரின்பத்தைப் பெற்றானோ அதைப் போல நாமும் பெற முடியும்.

அரசன் அன்று கொல்வான்… தெய்வம் நின்று கொல்லும் – ஈஸ்வரபட்டர்
விதியை மதியால் வென்றிடலாம். வினை விதைத்தவன் வினை அறுப்பான்… விதை விதைத்தவன் விதையறுப்பான்…! என்ற பெரியோர்களின் வாக்கிலேயே கலந்துள்ளது… மனிதனின் விதி முறை…!
வினையின் எண்ண\த்திலே விளைவதெல்லாம் வினையேதான். பிறரைக் கவிழ்க்க வினை செய்கின்றான். ஆனால் அந்த வினை அவனைக் கவிழ்ப்பதற்காகச் செய்த வினை இவனைத் தான் வந்து சுற்றும்.
இருந்தாலும்…
1.வினை செய்த காலத்தில் வருவது அல்ல அந்த வினை.
2.இவன் எண்ணத்திலே ஊன்றியுள்ள வினையினால் இவனையே அந்த வினை சுற்றுகிறது பெரும் பயத்தினால்.
அந்த நிலையில் உள்ளவனின் ஆவி பிரியும் பொழுது வினையின் எண்ணத்திலேயே ஆவி உலகத்திலும் தன் வினையை முடித்துக் கொள்ள ஒரு உடலை எடுக்கின்றான்.
வினைப் பயனை முடித்திடுவது தான் அவ்வாவிகளின் எண்ணமெல்லாம். வினையின் எண்ணத்தை மனதினுள் சிறு அளவு ஊன்றச் செய்தாலும் அந்த வினையின் பயன் பல கோடி ஆண்டுகளுக்கு முடிவுறுவதில்லை.
ஒவ்வொரு பிறவியிலும் அவனுடனே தான் சுற்றிக் கொண்டு வருகிறது. அந்த எண்ணம் உடையவனை எந்தச் சொல்லும் சொல்லி மாற்றிட முடியாதப்பா.
1.கர்ம பயன் என்பதெல்லாம் இதுவேதான்.
2.அவன் செய்த கர்மம் அவனை அழிக்கின்றது என்பதும் இதுவே தான்.
3.எந்தப் பிறவி எடுத்தாலும் இக்கர்ம பயன் முடிவதில்லை… புழுவாகப் பூச்சியாக உருவெடுக்கின்றான்.
எந்த நற்சொற்களும் அந்த வினையுள்ள எண்ணத்திலே பதிந்திடாதப்பா. அவன் எடுத்த தீய வினை தான் அவனைச் சுற்றும். பாவ புண்ணியம் எண்ண மாட்டான். ஆகவே நரக லோகம் செல்கின்றான்
நரகலோகம் என்பதுவே கர்ம பயன் செய்தவன்… வினையின் நெஞ்சம் உள்ளவன்…! எல்லாம் செல்லுமிடம் நரகலோகம்தான்.
விதி என்பது எதப்பா…?
விதியையும் மதியினால் வெல்லலாம் என்பது வினையின் எண்ணம் உள்ளவனை நல்லெண்ணம் கொண்டவன் வென்றிட முடியுமப்பா.
வினையில் உள்ளவன் அவனைத் தாக்கும் பொழுது நல்லெண்ணம் கொண்டவன் உயிரான “ஈசனை…” நினைத்திட்டால் அவ்வினையின் எண்ணத்தை ஈசனே பார்த்துக் கொள்வான்.
எந்த வடிவில் ஈசன் பார்த்திடுவான் என்றிடுவாய்…!
வழக்கின் வழியைப் புரியும்படிச் சொல்கின்றேன்.
வினையெண்ணம் உள்ளவனும் நல்லெண்ணம் படைத்தவனும் ஒரு இடத்தில் இருவரும் சேர்ந்து செய்யும் தொழிலில் அந்நிலையில் உள்ள பணத்தை எல்லாம் வினைப்பயன் உள்ளவன் எடுத்துக் கொள்கின்றான். அந்தப் பழியை நல்லவனின் மேல் சுமத்துகின்றான்.
நல்லவனுக்குப் பக்கபலமும் இல்லை. அந்த நிலையில் வழக்காடும் இடத்திற்குச் சென்றால் அந்த நிலையிலும் தன்னுடைய செல்வத்தை வைத்து ஜெயித்து விடுகின்றான் இவ்வினையுள்ளவன்.
பெரும் வழக்கறிஞர்கள் வைத்து வழக்காட நல்லெண்ணம் உள்ளவனுக்கு நாதியில்லை என்பார்கள். ஏனப்பா இல்லை…?
சில காலம் உள்ள இந்த ஜென்மத்தில் நாதி இருந்தாலும் இல்லாவிட்டாலும்
1.அவன் எண்ணத்திலே ஒரு நிலையில்
2.ஒரு உயர்வின் தன்மையிலே சுற்றிக் கொண்டு உள்ளது… “நல்லொழுக்கங்கள் நற்சொற்கள் எல்லாமே…!”
அப்படி இருக்கும் நிலையில்
1.அவன் மனதில் சோர்வை எண்ணிடாமல்
2.உயிரான ஆண்டவனை நினைத்துச் சத்திய நியாயத்தை வேண்டிட்டால்
3.அவன் ஜென்மப் பயன் எல்லாமே… அவன் எண்ணத்தில்… அவன் விடும் சுவாசத்தில்…
4.உயர்ந்த தன்மையிலேயே ஜென்மங்கள் மாறும் பொழுது வந்தடைகிறது.
கடைசியில் ஜெயிப்பது நல்லெண்ணம் கொண்டவன்தான் என்பது இம்மானிடர்களுக்குப் புரிவது இல்லை…!
வினை விதைத்தவன் இவன் காலத்தில் வழக்கில் ஜெயித்தாலும் அவன் எண்ணத்தில் சுற்றிக் கொண்டு இருக்கும் அவன் செய்த வினையின் பயன் அவன் காலம் முடிந்து அவன் எந்த நிலைக்குச் சென்றாலும் அவனைச் சுற்றிக் கொண்டே தான் வருகிறது.
1.வினைப்பயன் செய்தவன் நரகலோகத்திற்கே செல்கின்றான்.
2.இந்த நல்லோரின் இதயம் செல்லும் இடம் தான் சொர்க்க லோகம் என்பது.
தீவினையின் விதியை நல் உணர்வு கொண்ட மதியால் வெல்லலாம்… என்பது இதுவே…!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
சாமி (ஞானகுரு) உபதேசம் சொல்லும் போது உற்றுக் கேட்கின்றோம். கேட்டதைப் பதிவும் செய்கின்றோம்.
ஆனாலும் கேட்பவர்களில் சிலர் “ஞானிகள் உணர்வுகளைச் சாமி அவ்வளவு நேரம் உபதேசித்தார். இங்கே இவர்களைப் பாருங்கள்…! எல்லாம் கேட்டுவிட்டு இப்படித் தவறு செய்கிறார்களே…!” என்று சாமி சொன்னதை விட்டு விடுகிறார்கள்.
சாமி சொன்னதைப் பெற வேண்டும் என்ற எண்ணத்தை விட்டு விடுகிறோம்.
1.மற்றவர்கள் குறைகளையே செய்து கொண்டிருக்கின்றார்கள் என்று
2.அந்த அடுத்தவரின் குறைகளைத் தான் வளர்த்துக் கொள்கிறோம்.
3.இதைப் போன்ற நிலைகளை நாம் தவிர்த்தல் வேண்டும்.
குறைகளைக் காணும் போதெல்லாம் மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் அருளிய அருள் வழிப்படி அந்த மகரிஷிகளின் ஆற்றலை நாங்கள் பெற வேண்டும்.
1.தெரிந்து தெளிந்து நடக்கும் ஆற்றலையும்
2.பிறருக்கு நன்மை செய்யும் உணர்வையும் நாங்கள் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
நம்மை அறியாது நமக்குள் தீமை வந்து விட்டால்
1.நாம் தவறு செய்கிறோம் என்று (நமக்கே) தெரியும்
2.இருந்தாலும் நாம் எதற்குத் தவறை ஒப்புக் கொள்ள வேண்டும்…! என்ற எண்ணத்தில்
3.அங்கிருந்து விலகிச் செல்கிறோமே… தவிர செய்த தவறை நீக்குவதில்லை.
தனக்குத் தானே தவறின் தன்மை வந்தாலும் அதை நாம் உடனே நீக்கப் பழக வேண்டும். ஏனென்றால் நம்மை அறியாத இயக்கம் தான் அந்தக் குறைகள்.
நாம் நல்லதைச் செய்யும் போது தான் பிறர் குறைகளைப் பார்க்கின்றோம். அந்த உணர்வுகள் நமக்குள் பதிவாகி நம்மை அறியாது அந்தக் குறைகளைச் செய்யும் உணர்வுகளைத் தூண்டுகிறது.
பாலிலே சுவை கொண்ட பாதாமையும் நறுமணம் கொண்ட பொருள்களைச் சேர்த்தாலும் சிறிது காரம் பட்டு விட்டால் அந்த சுவையின் தன்மையை மாற்றி காரத்தின் தன்மையே வருகிறது.
நல்ல சுவை கொண்ட உணவை உட்கொள்ளும் பொழுது உடலில் நல்ல அணுக்களை உருவாக்குகிறது. ஆனால் உணவிலே ஒரு துளி விஷம் சேர்ந்து விட்டால் உணவை நஞ்சாக மாற்றி நல்ல அணுக்களை அது அழித்து விடுகிறது.
இது போன்று தான் நம் வாழ்க்கையிலும் நம்மை அறியாமலே இயக்கக் கூடிய நிலைகள் தான் அது. அப்படி இயக்கினாலும் அது தவறென்று நமக்குள் உணர்த்தும். அந்த நேரத்திலாவது சுதாரித்து.. நாம் தூய்மைப்படுத்தும் எண்ணத்திற்கு வர வேண்டும்.


தாய் சக்தியையும் மனைவியின் சக்தியையும் இணைத்துச் செயல்பட்டவர்கள் தான் மாமகரிஷிகள் – ஈஸ்வரபட்டர்
அன்றைய கால கட்டங்களில் ஞானி சித்தனாகி… சித்தன் முனிவனாகி… பின் ரிஷியாகும் தொடர்பில் அனைத்தையும் அனுபவ ஞான வளர்ச்சி என்னும் தொடர்பில் பெற்றவர்கள் தான்.
தனது அறிவின் ஞான வளர்ப்பை மீண்டும் மீண்டும் வளர்ப்பாக வளர்த்திடவும் இந்த உலக மக்கள் உய்வு (பிறவியில்லா நிலை) எய்திடவும் ஏற்படுத்தப்பட்டது தான் “ஜெப நிலையும்… தியான நிலையும்….”
அந்த மகரிஷிகள் வெளிப்படுத்திய… வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் மூச்சலைகளையே ஒவ்வொரு உயிரும் உண்ணும்படியாக தியானத் வழித் தொடரை ஏற்படுத்தினார்கள்.
எந்தெந்த உயிராத்மாக்கள் எண்ணி ஏங்குகின்றதோ…
1.அவர்களுக்கெல்லாம் தாங்களே (மகரிஷிகளே) உணவும் ஆகி
2.உணவாக்கிட விறகாகவும் எரிந்து
3.ஆகாரமாகப் புசிக்கும் பக்குவ கதியில்
4.அதாவது உயிரான்மாக்கள் ஆன்ம சக்தியைக் கூட்டிடும் ஆகார கதிக்கு – தானே ஆகாரமாகி
5.பேரருள் பேரொளி சக்தியையே அளித்திட்ட வள்ளல் பெருமக்களே மகரிஷிகள் ஆவர்.
உலகெங்கிலும் உள்ள அனைத்து உயிராத்மாக்களும் தன் வளர்ப்பில் வளர்ச்சி கொள்வதற்காக வித்திட்டவர்கள் மகரிஷிகளே…!
நம்முடைய வளர்ச்சிக்கு வழி காட்ட உறுதுணையாக இருந்து… நாம் பெறும் சக்திக்கே சக்தி அளித்திட்ட..
1.அந்தச் சக்தியின் செல்வங்கள் (மகரிஷிகள்) பெற்ற நற்சக்திக்கு வலு சேர்க்கும் விதமாக
2.நம்முடைய ஞான சக்தியை வளர்த்திடும் நிலையாக நாம் அனைத்தையும் அறிந்து உணர்ந்திட வேண்டும்.
கோபம் குரோதம் காமம் ஆசை விருப்பு வெறுப்பு என்னும் தொடரிலே அவசரம் ஆத்திரம் பழி பாவம் என்று வரும் நிலையில் அவை அனைத்தையும் நாம் நீக்கிடும் உயர் ஞான சக்திக்கு அந்தக் கொங்கணவர் பெற்ற… பெற்று அளித்துக் கொண்டிருக்கும் அனுபவப் பாடம் நமக்குப் பேருதவியாக இருக்கும்.
ஏனென்றால் கொங்கணவர் தன் தாய் சக்தியின் தொடர்பு மூலமாகவும் தன் மனையாளின் சக்தி (பத்தினி) மூலமாகவும் தான் துர்க்கதியை அகற்றி நற்கதியை அடைந்தார்.
தாய் சக்தி.. மனைவி சக்தி… என்ற ரிஷி பத்தினி சக்தியின் கலப்பு பெற்ற அந்த மாமகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் ஏங்கிப் பெற்றால் அவர்களின் வளர்ச்சியின் அருள் ஒளி வட்டத்தில் நாம் அனைவரும் கலந்திடலாம். அதற்குத்தான் இதைச் சொல்கிறோம்…!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
கல்வி கற்கும் ஒரு மாணவன் தன் பாட நிலையைப் பொறுமையாகப் படித்தான் என்றால் அந்த உணர்வின் நினைவாற்றல் அவனுக்குள் பதிவாகின்றது.
பதிவான பின் அதே உணர்வின் சத்தைக் கவரும் ஆற்றல் கொண்ட அணுவாக அவனுக்குள் விளைகின்றது.
அணுவாக விளைந்தாலும் அவன் எண்ணத்தில் அவனுக்குள் விளைய வைத்த உணர்வின் ஞானம் அதனின் உணர்வுகளை இந்தச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாகப் பரவச் செய்கின்றது.
அப்படிப் பரவச் செய்தாலும் தன் இணை சேர்க்கும் உணர்வாகத் அந்தப் பையனின் ஆன்மாவில் இங்கே வந்துவிடும்.
அதே போன்று தான் ஒருவன் வேதனைப்படும் உணர்வின் தன்மையை நுகர்ந்துவிட்டால் அதே வேதனையின் உணர்வுகள் இங்கே ஆன்மாவில் அதிகரிக்கின்றது.
இது அதிகரித்து விட்டால் அதே வேதனையின் உணர்வுகள் சுவாசிக்கப்பட்டு அந்த வேதனைப்படும் நிலையையே உருவாக்குகின்றது.
படிக்கும் அந்த மாணவனின் குடும்பத்தில் தொல்லையோ அல்லது தாய் தந்தையை வெறுப்புடன் பேசியிருந்தாலோ தன் சகோதரன் கோபத்துடன் பேசியிருந்தாலோ அந்த வேதனையின் உணர்வுகள் இவனுக்குள் பட்டுவிட்டால் என்ன ஆகும்?
அடுத்து இவன் பள்ளிக்குச் சென்றாலும் இந்த வேதனையின் உணர்வுகள் அதிகரிக்கப்படும் பொழுது அவன் பாட நிலையைச் சிந்தித்தாலும் இந்த வேதனை உணர்வுகள் அது கலக்கப்பட்டு அவனுக்குள் சிந்தனையற்ற நிலையை உருவாக்கிவிடுகின்றது.
அதனால் அவனுடைய கல்வித் திறன் இழக்கப்படுகின்றது.
ஆனால் சிந்தனையில்லாத நிலையாக அவன் வெளியிட்ட உணர்வுகள் இது அதிகரிக்க அவனைச் சார்ந்தோர்கள் இவன் இப்படி மக்காக.. இருக்கின்றான்… சரியாகப் படிக்க மாட்டேன் என்கிறான்…! என்பார்கள்.
சரியான பாட நிலை இல்லை என்று அவனின் தாய் தந்தையர்கள் இதைச் சுவாசித்தாலும் அடுத்தவர்கள் இதை உற்றுப் பார்த்து இதனின் உணர்வைச் சுவாசித்தாலும் அடுத்து என்ன ஆகின்றது…?
அந்த விஷத்தன்மை (முதலில் அவன் சுவாசித்த வேதனை) இவன் நினைவாற்றலை மாற்றியது போன்று மற்றவர்களும் அதை நுகர்ந்தறிந்து அவனைக் குற்றவாளியாகச் சொல்லத் தொடங்குவார்கள்.
அப்படிச் சொன்னாலும் இது அவர்கள் உடலில் கூடக் கூட… கடைசியில் அவர்களைக் குற்றவாளியாக்கிவிடும்.
உதாரணமாக.. ஆசிரியர்கள் பள்ளிகளிலே பாடநிலைகளைச் சொல்லிக் கொடுக்கும்போது முதலில் கருத்துடன் சொல்வார்கள். தன்னிடம் படிப்பவன் நன்றாகத் தேற வேண்டும் என்று அந்த உணர்வினைப் பாய்ச்சுவார்கள்.
ஆனால் அவன் செய்யும் செயல்களை உற்றுப் பார்த்து “படிக்க வந்தவன் சரியாக வரமாட்டேன் என்கிறான்…” என்ற உணர்வினைச் சுவாசித்து விட்டால் சுவாசித்த உணர்வுகள் இவரை அறியாமலே ஞானத்தைப் போதிப்பதற்குப் பதில் அவனை உதைக்கத் தொடங்கிவிடுவார்கள்…!
இப்படிச் சிந்தனையற்ற உணர்வுகள் வரும் பொழுது இந்த விஷத்தின் தன்மை கொண்டு அந்தப் பையனும் குறும்புத்தனம் செய்யும் நிலையாக வந்துவிடுவான்.
குறும்புத்தனம் செய்வதை ஆசிரியர் பார்த்து விட்டால் அவனின் உணர்வை இவர் நுகர்ந்து அவனை உதைக்கும் தன்மையே வரும்.
உதைக்கும் தன்மை இங்கே வரும் பொழுது ஆசிரியர் உடலிலுள்ள நல்ல குணங்களையும் அவர் உடலிலுள்ள நல்ல அணுக்களையும் இது மாற்றிவிடுகின்றது.
இதைப் போன்ற நிலைகள் சந்தர்ப்பத்தால் ஏற்படுகின்றது. மனிதனின் வாழ்க்கையில் உடலுக்குள் அணுக்களின் மாற்றம் எவ்வாறு அடைகின்றது என்ற நிலையில் நீங்கள் தெரிந்து கொண்டால் போதும்.
நாம் தவறு செய்கின்றோமா..,? அல்லது நாம் சுவாசிக்கும் உணர்வுகள் நம்மைத் தவறு செய்ய வைக்கின்றதா என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
சந்தர்ப்பவசத்தால் நம் ஆன்மாவிற்குள் நுழைந்த தீமையான உணர்வலைகளை நாம் சுத்தப்படுத்தியே ஆகவேண்டும்.


இன்றைய காலத்திற்கேற்ப சுலபமாகச் சக்தி பெறும் வழியைத் தான் உணர்த்துகின்றேன் – ஈஸ்வரபட்டர்
1.நோயாளிக்கு மூன்று வேளை உணவு
2.சம்சாரிக்கு இரண்டு வேளை உணவு
3.ஞானிக்கு ஒரு வேளை உணவு என்ற உணவின் நியமனக் கட்டுப்பாடு
4.உலக வாழ்க்கையில் எல்லோரும் உடல் நலத்துடன் வாழ்வதற்காக அன்றைய சித்தர்கள் வகுத்த வழி…!
குருவிடம் சிஷ்யன் முதலில் கற்றுக் கொள்ள வேண்டியது… நாவின் சுவையை அடக்கி…!” ஆகாரக் கட்டுப்பாட்டின் வழியில் புலனடக்கம் பெற்று…
1.தனக்குள் இயக்கும் எல்லா உணர்வுகளையும்
2.தன் மனக்கட்டுப்பாட்டில் அடங்கச் செய்வதாகும்.
ஞானிக்கு ஓர் வேளை தான் உணவு என்றால் அதையும் அவன் எப்படி ஏற்கின்றான்…?
ஓர் நாளைக்கு ஓர் முறை தான் என்ற நிலையில் தான் தேர்வு செய்த ஓர் வீட்டிற்குச் சென்று “பிச்சாந்தேஹி…!” என்று கேட்பான். ஆனால் அந்தச் சொல் வழக்கில் இருந்து விடுபட்டு இன்று அதனுடைய புனிதத் தன்மையே திரிந்து போய்விட்டது.
ஞானிகள் வீடு வீடாகச் சென்று பிட்சை கேட்பதில்லை.
ஓர் ஞானியோ… முனிவனோ…
1.இன்று தனது வீட்டிற்குப் போஜனத்திற்காக வரமாட்டாரா…?
2.அவருடைய ஆசியைப் பெற மாட்டோமா…? என்று
3.வாசலில் காத்திருக்கும் இல்லறத்தோர் ஏங்கியது அந்தக் காலம்.
4.அக்கால வழக்கம் எல்லாம் இன்று கேடுற்று விட்டது.
ஏதாவது ஓர் வீட்டைத் தேர்ந்தெடுத்து ஓர் வேளை பகல் பொழுதோ அல்லது அந்திமப் பொழுதோ சென்று சிறிது நேரம் நின்று “பிட்சை” என்ற ஒரு சொல் கேட்டு அன்புடன் வந்து அளித்திட்ட அமுதை அமுதமாக எண்ணி உண்பார்கள்.
ஒரு வேளைப் பொழுதுதான் உண்ணும் வழக்கமாக இருந்தாலும் “பிச்சாந்தேஹி…!” என்று கேட்டுக் குறித்த அவகாச காலத்தில் உணவு வராவிட்டால் என்ன செய்வார்கள்…?
அங்கு நிற்காமல் திரும்பி வந்து வெறும் நீரைக் குடித்து விட்டு மகிழ்ச்சியுடன் அமைதியாக அமர்ந்து “ஈஸ்வர தியானத்தில்” ஈடுபடுவார்கள்.
அக்காலத்தில் மூலிகை ஔஷதங்களைத் குருவின் மூலம் அறிந்து பெற்று அதை உண்டு வந்த அந்த வழக்கம் இன்று நடைமுறையில் சாத்தியப்படவில்லை.
1.இன்று உண்ணும் உணவிலும் ஊட்டச் சத்துக்கள் குறைவு
2.அது போக உடல் சோர்வும் மன நலிவும் உற்றுப் பிணிகளுக்கு ஆளாகுவது தான் இன்றைய நிலை.
ஆனால்…
1.அக்கால ஞானிகள் பெற்ற ஞானம் என்பது மிகவும் எளிதல்ல…!
2.கடுமையின் கடுமையை எதிர் நோக்கி வென்று வந்தார்கள் அவர்கள்.
அன்று மக்கள் தொகை பெருக்கம் இல்லாததால் குறைந்த கால அளவில் தான் பெறவேண்டிய நற்சக்தியை வளர்ச்சிப்படுத்தும் செயல் முறைக்குத் “தியானம் என்பதே… மிகக் கடுமையான பரிசோதனை முறைகளாக இருந்தது…!”
தான் பெற்ற சக்தியையே அது எந்த வழித் தொடர் என்பதை அறிந்து அதைப் பெற்று தனது நிலையை மென்மேலும் உயர்த்திடவே அனுபவப் பாட நிலைகள் கொண்டு வளர்ந்தவர்கள் தான் “அக்கால ஞானிகள்…!”
ஒரு வேளை உணவும் கிடைத்திடா விட்டாலும் வெறும் நீரை அருந்தி சந்தோஷமாகத் துயில் கொள்ளும்
1.தியானத் துயிலில் மனப் பக்குவ நிலை பெறும் சத்திய சோதனையையே
2.சத்திய நிலை நிலைக்கப் பெறும் தொடரில் வென்று
3.தனது நிலையை அன்று வளர்த்துக் கொண்டார்கள்.
அதே போல இந்த உலகில் வாழையடி வாழை என வாழ்ந்து கொண்டிருக்கும் ஞான சக்திச் செல்வங்களும் (மக்கள்) பெறவேண்டும் என்ற ஆசையின் நிலையில் தான்
1.இன்று கடுமையை விடுத்து
2.எளிய முறையாகத் தியானத்தின் மூலம் நற்சக்தி பெறுதல் என்று உணர்த்தி வருகின்றேன் (ஈஸ்வரபட்டர்).
எண்ணத்தால் எண்ணி ஏங்கினாலே கிடைக்கும் வழிக்கு…
1.மிகச் சுலபமான நிலைகளில் இந்தத் தியான முறையை உணர்த்துவது என்பதே
2.வளர்ச்சியின் வளர்ப்பாக்கி “ஆதி சக்தியின் மூலத்தில் எல்லோரையும் கலக்கச் செய்வதற்குத்தான்..!”

கண்ணனுக்கு மூத்தவன் பலராமன் என்றால் அதனின் விளக்கம் என்ன…?
ஒருவர் வேதனைப்படுவார்.. ஒருவர் சங்கடப்படுவார்… ஒருவர் நோயுடன் அவதிப்படுவார்… ஒருவர் கோபக்காரராக இருப்பார்…! இவர்களின் உணர்வை எல்லாம் அன்றாட வாழ்க்கையில் நாம் உற்றுப் பார்க்க நேர்ந்து அதை நுகர்ந்தறிந்தால் இந்த உணர்வுகள் நமக்குள் பதிவாகின்றது.
சீதா என்றால்… சத்து சுவை என்றும்.. ராமா என்றால் எண்ணங்கள் என்றும்… சீதாராமா என்றால்.. மனிதனுக்குள் நுகர்ந்தால் (சுவாச நிலை) சுவைக்கொப்ப எண்ணங்கள் வருகின்றது என்றும்… நமக்குள் பலவிதமான நிலைகளை (மேலே சொன்னதை) நுகர்ந்தால் அந்த உணர்வின் எண்ணங்கள் “பல ராமனாக (பலராமன்) இயக்குகின்றது…” என்றும் சாஸ்திரங்களில் காட்டப்பட்டது.
பலராமனாக வருவதற்குக் காரணம்… நம் கண் ஒன்றை உற்றுப் பார்க்கின்றது. கண்களால் கவரப்பட்ட உணர்வை நுகரச் செய்கின்றது. அதன் உணர்வின் எண்ணங்களாக வருகின்றது.
உயிரோ அந்த உணர்வை ஈசனாக இருந்து இயக்குகின்றது. உடலுக்குள் அது பதிவாகின்றது. இவ்வாறு பதிவாக்கிய உணர்வுகளை
1.கண்களால் அந்தந்த உணர்வை அறிய முடிகின்றது
2.நுகர்ந்த பின் அந்தந்த உணர்ச்சி கொண்டு உயிர் நன்மை தீமை என்று அறிவிக்கின்றது.
நன்மை தீமை என்று அறிவதற்குக் கண்ணே கவர்ந்து அந்த உணர்வைப் பதிவாக்கி அந்த உணர்வை நுகரச் செய்கிறது.
1.உயிர் அந்த உணர்ச்சியை ஊட்டி உடல் முழுவதும் அது சக்கரம் போன்று சுழன்று படரச் செய்கின்றது.
2.உடலுக்குள் சென்ற பின் உடல் அதை அரவணைத்துக் கொள்கின்றது.
நாம் எத்தனையோ கோடிச் சரீரங்களைக் கடந்து மனிதனாக வந்தாலும் மனிதனான பின் இந்த உணர்வுகள் அனைத்தும் நமக்குள் மறைந்துள்ளது. பல விதமான எண்ணங்கள் நமக்குள் உண்டு,
இந்த உயிர் இங்கே பூமிக்குள் முதலில் வந்த பின் தாவர இனத்தில் விழுந்து உடல் பெற்றாலும் “கண்கள் உருவாவதற்கு முன் எண்ணங்களே இருந்தது…!” அனைத்தையும் (தாவரங்களின் மணங்களை) உணர்ந்து நுகர்ந்து உணர்வுகள் அது எண்ணங்களாக வளர்ந்தது.
ஒரு செடியின் சத்தைச் சூரியன் கவர்ந்து கொண்டால் அது சீதாலட்சுமியாக மாறுகின்றது. ஆனால் அதே சமயம் இந்த உயிரணு சூரியன் கவர்ந்த அந்த மணத்தை நுகர்ந்தால் சீதாராமனாக வருகின்றது. உயிரணு நுகர்ந்து உடலாக்கப்படும் பொழுது சிவமாகின்றது.
உயிரோ ஈசனாகின்றது. உயிரின் இயக்கம் விஷ்ணுவாகின்றது. நாராயணன் மறு அவதாரம் விஷ்ணு. உயிரின் துடிப்புகள் வெப்பமாக வரப்படும் பொழுது விஷ்ணு என்றும் காட்டுகின்றார்கள்.
நாராயணன் என்றால் சூரியன். தான் எடுத்துக் கொண்ட உணர்வு சீதாலட்சுமியாக மாறினாலும் இந்த உயிரணு நுகர்ந்தபின் சீதாராமனாக அந்த எண்ண்ங்கள் தோன்றுகிறது. நாராயணன் திரேதா யுகத்தில் சீதாராமனாகத் தோன்றுகின்றான். திரேதா என்றால் உடல்.
1.இதை எல்லாம் ஒவ்வொன்றுக்கும் காரணப் பெயர் வைத்து
2.நாம் அறியும் தன்மைக்குக் கொண்டு வருகின்றனர் ஞானிகள்.
இப்படி வந்த இந்த உயிர் தான்… நுகர்ந்த பின் இந்த சீதா என்ற அந்தச் சுவை உடலாகும் போது சிவம்..
உடலுக்குள் அந்த உணர்ச்சியின் எண்ணங்களைத் தோற்றுவிப்பதும் நாராயணன் அந்த உடலுக்குள் சீதாரமனாக அந்தச் சுவை எதுவோ அந்த எண்ணத்தின் உணர்ச்சியாக அது இயக்குகின்றது என்பதனைத் தெளிவாகக் காட்டுகின்றது நம் சாஸ்திரங்கள்.
கடவுளின் அவதாரத்தில் இது தெளிவாக்கப்படுகின்றது.
இவ்வாறு உருவான அந்த எண்ணங்கள் சீதாராமன் என்று வந்தாலும் அதற்கப்புறம் கண் இல்லை என்கிற போது பார்க்க வேண்டும் என்ற உணர்வு வருகின்றது.
1.பல தீமையான உணர்வுகளை நுகரும் போது அதனால் வேதனைப்படுவதனால்
2.அந்த வேதனையிலிருந்து மீள வேண்டும் என்ற உணர்ச்சிகள் உந்துகின்றது.
3.அதன் அறிவாக மாற்றம் அடைகின்றது… தப்பிக்கும் உணர்வுகள் அங்கே வருகின்றது.
பார்க்க வேண்டும்… பார்க்க வேண்டும்… என்ற உணர்வுகள் பார்த்துத் தெரிந்து உணர வேண்டும் என்ற நிலையில் அதற்குள் அந்த நினைவாற்றல்கள் கூடி அந்த உணர்வின் எண்ணங்களைத் தோற்றுவிக்கின்றது.
1.அவ்வாறு தோற்றுவித்த உணர்வுகள் ஒவ்வொரு உடலிலும் சேர்த்துச் சேர்த்து
2.பல உடல்களில் பார்க்க வேண்டும் என்ற உணர்வுகள் வளர்ச்சி அடைகிறது,
3.அதைத் தான் “துவாரகா…” என்று காட்டுகின்றனர்.
ஒரு சுவையின் சத்தை நுகரப்படும் போது திரேதா யுகத்தில் உணர்வுகள் எண்ணங்களாகிக் கிரேதா உடல் என்று ஆனாலும் அதே சமயத்தில் இங்கே துவாரகா இந்த உடலுக்குள் தான் தன் தேவைக்குகந்ததை (தேவகி) நுகர்ந்த உணர்வுகள் வாசு தேவனாக சுவாசித்த உயிர் அதை உருவாக்குகின்றது.
அதாவது “தேவகி” என்ற உணர்வின் சத்தை
1.தன் தேவைக்கு என்று எண்ணிய அந்த உணர்வுகள் இரண்டும் சேர்ந்து
2.இந்தத் துவாரகா யுகத்தில் வாசுதேவனுக்கும் தேவகிக்கும் இந்த உடலான சிறைச்சாலைக்குள் கண்ணன் பிறந்தான்… கம்சனை வெல்ல..!
கம்சன் என்றால் இருள். இருளை நீக்க அவன் பிறந்தான். இப்படிப் பல ஆயிரம் ஆண்டுகள் பல சரீரங்களீல் பார்க்க வேண்டும் என்ற உணர்ச்சிகள் தோன்றித் தோன்றி அந்த எண்ணங்களால் தான் கண்கள் தோன்றியது என்று நம் சாஸ்திரங்கள் தெளிவாக்குகிறது.
இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்காக மகாபாரதத்தில் பலராமன் கண்ணனுக்கு மூத்தவன் என்று காட்டுவார்கள்.
பல உணர்வின் எண்ணங்கள் (பல ராமன்) அங்கே தோன்றித் தான் பார்க்க வேண்டும் என்ற கண்கள் தோன்றியது.
ஆக…
1.இந்த இயக்கத்தின் நிலைகளை மனிதன் புரிந்து கொள்ளும் நிலைக்கே
2.பல உண்மையின் உணர்வுகளை இயக்கத்தைக் காட்டியிருந்தாலும்
3.காலத்தால் அந்த உண்மைகள் மறைந்து விட்டது.
மனிதனாக உருவாகக் காரணமான… “நாம் நுகர்ந்த உணர்வுகள்…” எவ்வாறு சந்தர்ப்பங்களில் ஒவ்வொன்றயும் நுகரச் செய்தது..? சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உயிர் நம்மை எப்படி மனிதனாக உருவாக்கியது…? என்று இதை எல்லாம் நம் சாஸ்திரங்களில் மிக மிகத் தெளிவாக்கப்பட்டுள்ளது.
அதைச் சொன்னாலும் இன்று தெரிந்து கொள்ளும் நிலை இல்லை…! ஏற்கும் நிலையும் குறைவாகவே உள்ளது…!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
ஒரு பொருளுக்குள் ஒரு விஷம் பட்டால் அனைத்தையுமே நாசமாக்குகின்றது. இதைப் போன்று
1.நம் உணர்வுக்குள் சிறிதளவு வேதனையாகிவிட்டால்
2.நமக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும் சேர்கிறது.
ஒரு குழந்தை தவறு செய்தால் “இப்படி ஆகிவிட்டதே” என்று வேதனையை எடுத்தீர்கள் என்றால் இது விஷம்.
இந்த விஷமான உணர்வு கொண்டு குழந்தையைப் பார்க்கப்படும் பொழுது விஷம் அதிகமாகக் கூடி அவன் புத்தியையே மட்டமாக்கும்.
இப்படிப் பண்ணிவிட்டாயே…? பாவி…! என்று சொல்லி இந்த விஷத்தின் தன்மை கொண்டு ஆக்கப்படும் பொழுது அவனிடம் இருக்கக்கூடிய அந்த வளர்ச்சியின் தன்மையை மட்டமாக்கி அங்கே விஷமாகி அவன் சிந்திக்கும் செயலையும் இழந்து விடுகின்றான்.
நமக்குள் என்ன சக்தி இருக்கின்றது…? என்று நினைத்துப் பார்த்தால் சிந்தித்துப் பார்த்தால் இந்தச் சொல் எதிலிருந்து வருகின்றது…? என்பது தெரியும்.
நாம் சுவாசித்த உணர்வின் தன்மைகள் உயிரில் பட்டு உணர்ச்சிகளாகின்றது.
1.நாம் பேசும் பொழுது அந்த உணர்வின் ஒலியாக மாறி
2.இந்த உணர்வுகள் மற்றொன்றுடன் கலக்கப்படும் பொழுது
3.அந்த உணர்ச்சிகளைத் தூண்டிச் சுவாசிக்கச் செய்து அங்கே விளைந்து விடுகின்றது.
இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் நாம் மீள்வதற்கு மெய் ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி ஆத்ம சுத்தி செய்து நமக்குள் துனபங்கள் தாக்கும் துன்பங்களை உருவாக்கும் நிலையை மாற்ற வேண்டும்.
கருணைக் கிழங்கை வேகவைத்து விஷத்தின் தன்மையை நீக்குகின்றோம். எத்தனையோ விஷத்தன்மை கொண்ட எத்தனையோ உணர்வு கொண்ட காய்கறிகளை வேக வைத்து அதிலிருக்கக்கூடிய காரல்களை நீக்கிச் சுவை கொண்டதாக மாற்றிக் கொள்கின்றோம்.
இதைப் போன்று நம் மனித வாழ்க்கையில் எத்தகைய துன்பமான நிலைகள் வந்தாலும் அதைத் நமக்குச் சாதகப்படுத்துவதற்கு வேக வைத்துச் சுவையாக்கும் நிலையாக ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்.
அப்படிச் செய்தால் அது சுவைமிக்க சொல்லாக நமக்குள் சென்று சுவையான செயல்களைச் செய்யக் கூடிய உணர்வுகளாகத் திருப்பிப் பேசும்படி செய்யும்.
அப்பொழுது நம் சொல்லைக் கேட்பவர்களுக்கும் மகிழ்ச்சியுட்டும் நிலைகளாக மாற்றும் சக்தி கிடைக்கின்றது.
நம் உணர்வைச் சுவையற்றதாக ஆக்காதபடி சுவையான தன்மையாக நமக்குள் வளர்த்துக் கொள்ள முடியும்.
சிறிது காலம் யாம் சொல்வதைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பக்குவப்படுத்திக் கொண்டால் “அது தானாகவே பேசும்…”
கோபம் வந்துவிட்டால் அடங்காத பையனை அடிக்கடி நினைத்தவுடன் கோபம் வருகின்றது. அதே மாதிரி அந்தப் பையன் நன்றாக ஆகவேண்டும் என்று தியானத்தில் எடுத்துக் கொண்டு
1.“நன்றாக ஆகவேண்டும் நன்றாக ஆகவேண்டும்” என்று
2.அடிக்கடி எண்ணினால் பையன் நல்லவனாக ஆகிவிடுகின்றான்.
3.தன்னாலே தன்னிச்சையாக வரும்.
இப்படிச் சொல்லிப் பழகிவிட்டால் அதே நிலைகள் வரும்.
ஒரு குழந்தை படிப்பிலே மட்டமாக இருக்கிறது. “படிப்பிலே இப்படி இருக்கிறானே…” என்று நாம் எண்ணும் பொழுதெல்லாம் மற்றவர்களிடத்தில் எல்லாம் சொல்வோம். நினைக்கும் பொழுதெல்லாம் இந்த வேதனைப்பட்டே நினைப்போம்.
இவ்வாறு நினைக்கும் பொழுது இந்த வேதனைகள் அவன் உடலிலே சேர்ந்து இதையேதான் உருவாக்கும்.
ஆகையினாலே இதையெல்லாம் நீங்கள் மனதிலே பக்குவப்படுத்தி இந்த நிலைகளெல்லாம் நீங்கவேண்டும் என்று ஆத்ம சுத்தியைச் செய்து வரும் தீமைகளைப் போக்கிக் கொள்ளுங்கள்.
“ஓ…ம் ஈஸ்வரா…” என்று புருவ மத்தியில் உங்கள் உயிரிடம் நினைவைச் செலுத்துங்கள். ஓம் ஈஸ்வரா குருதேவா…, உங்கள் அருளால் மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெறவேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.


உண்மையான சீடர்கள் கிடைப்பது அரிதிலும் அரிது…! – ஈஸ்வரபட்டர்
குரு என்பவர் “தியானம் என்ற நற்பாதைகளைக் காட்டி அதன் வழியில் தெளிவு நிலை பெறுவதற்காகச் “சீடர்களைச் சோதனைக்கும் ஆட்படுத்துவதுண்டு…!”
தன்னிடம் வரும் சீடர்களுக்குப் போதனையுடன் தன் செயலை நிறுத்திக் கொள்வதுமில்லை. “தனக்கு மேல்…!” சிஷ்யன் சக்தி பெறச் செய்யும் செயலுக்கு… மருத்துவம் மனோதத்துவம் மனோவசியம் வீரக்கலைகளுக்கும் போதனைப்படுத்தி அந்த ஒவ்வொரு சீடரின் செயலையும் கண்காணித்து அவரவர் வழித் தொடர்புக்கும் வளர்ச்சிக்கும் செயல்களை நிகழ்த்தி அந்த வழியின் ஊக்கத்தையும் மேன்மைப்படுத்துவார் அந்தக் குரு.
அனைத்திலும் சூட்சமம் கொண்டே அன்றைய சித்தர்கள் புவியியல் உயிரியல் வானியல் என்ற செயலுக்கும் செயற்பட அந்தக் கலைகளையே மூலதனமாகப் புகட்டி ஆரம்ப வழி வகைகளை ஆராயப் புகத் தனது சீடர்களைத் தயார்படுத்தினார்கள்
காரணம்… உண்மையான சீடர்கள் கிடைக்க மாட்டார்கள்…!
குரு எனப்படுபவர் ஆயிரம் ஆயிரம் உருவாகலாம்…! நாற்பத்தி எட்டாயிரம் மகரிஷிகள் என்று கூறும் பொழுதே ஞானிகள் சித்தர்கள் மகரிஷிகள் என எண்ணிலடங்கா தொகையில் தொடர்ந்தாலும் “ஆரம்பச் சித்து நிலை பெற வரும் சீடர்கள்… மிகவும் குறைவே…!”
உண்மையான சீடர்களைக் காண்பது “அரிதிலும் அரிது…!” என்ற உண்மையின் சூட்சமம் அன்று கண்டு கொண்ட அன்றையச் சித்தர்களும்
1.தங்களுக்கு ஏற்பட்ட அனுபவ முறைகளினாலும் அதை உணர்ந்தே
2.தனக்கு உண்மையான சீடரைத் தேர்ந்தெடுக்கப் பல செயல் முறைகளைச் செய்வித்தனர்.
மருத்துவம் படிப்போர் அரைகுறை வைத்திய ஞானம் பெற்று விட்டால் “தன் வாழ்விற்கு வழி ஏற்பட்டு விட்டது…!” என்ற உலக ஆசைக்குத் தங்களை உட்படுத்தி அதன் வழி ஓடி விடும் சீடர்களூம் உண்டு.
மனோதத்துவ சாஸ்திர கலைகளில் நாட்டம் கொண்ட சீடனும் சொல்லாமல் கொள்ளாமல் நழுவிவிடுவார். அடுத்துப் பெறும் யாக நிலைகளில் மாந்திரீக ஏவல் செயலுக்கு நாட்டம் கொள்வோர் அந்த வழியில் சென்றுவிடுவர்.
இதில் எல்லாம் தெளிந்தவர்கள்…
1.நாம் குருவிடம் அறிந்து கொள்ள வந்தது இது அல்ல….!
2.உலக ஆசை நிலைப்படுத்தும் நிலைகள் தான் அவைகள் என்று உணர்ந்து
3.”உண்மைப் பொருளை நாடும் உண்மையான சீடர்கள் தான்…!” நிலையாகத் தங்கிச் செயல் கொள்வர்.
அவர்களே உண்மை ஞானம் உணரும் குருவிற்கு ஏற்ற உண்மையுள்ள சீடர்கள். அவர்களைத் தேர்ந்தெடுக்க குருவிற்கும் ஒரு சூட்சமம் உள்ளது…!
தன் நிலைக்குத் தன் சீடனை உயர்த்திவிடும் குருவிற்கு ஏற்படும் சில குறை நிலைகளை அந்தச் சீடர்களால் ஏற்படும் சில சக்தி குறைவுகளிலிருந்து குரு மீண்டெழ அந்தச் சீடர்களால் குரு பாதுகாக்கப்படுகின்றார்.
1.தனக்குச் சக்தி வேண்டியே…! தன் வழித் தோன்றல்களாகிய சிஷ்யர்களைக் குரு தேர்ந்தெடுக்கின்றார்.
2.தன் நிலையைத் தான் உயர்த்திக் கொள்ளவே “குருவைத் தேடி அலைகிறான் சீடனுமே…!”
2.அப்படிப்பட்ட ஆத்மார்த்த குருவும் உண்மைச் சீடனும் என்றுமே மாசுபடப் போவதில்லை.
அத்தகைய சீடர்களுக்குக் குரு போதிக்கும் போதனைகளைத் தங்களை உணர வேண்டிதற்காகக் குரு அளிக்கும் சந்தர்ப்பங்களில்
1.வெறும் சங்கட அலைகளைச் சிஷ்யர்கள் மனதில் பதிய வைத்துக் கொண்டால்
2.அதுவே மரமாக மீண்டும் வெட்டப்பட வேண்டிய செயலுக்குக் கொண்டு போய்விட்டுவிடும்.
சீடர்களைப் பாதுகாப்பது குருவின் தலையாயக் கடமையாகிவிடுகின்றது.
வாழ்க்கைச் சூழலில் சங்கட அலைகளில் அறியாமல் அகப்பட்டுக் கொள்ளும் குருவையும்… அறிந்தே அகப்பட்டுக் கொள்ளும் குருவையும்… காப்பது “உண்மையான சீடர்களின் பொறுப்பும் ஆகிவிடுகின்றது…!”
உண்மை உணரும் ஞானச் சீடர்களும் குரு காட்டிய வழியில் தன் சக்திகளை வலுக் கூட்டிக் கொள்ளத் தான் எண்ணி எடுக்கும் தியானத்தின் மூலம் ஒளி நிலையைக் கண்டாலும்
1.நாம் தேடிக் கொண்டிருப்பது இது அல்ல…!
2.இதற்கும் அடுத்த உயரிய நிலை எது…? என்று கண்ட காட்சிகளை எல்லாம் அறிந்துணர்ந்து
3.பின் விலக்கி விலக்கி… எந்த உண்மை ஜோதி தத்துவத்தில் மூழ்க நினைத்தானோ
4.தன் நல்லாக்கத்திற்குப் பயன்படும்படியாக ஊக்கம் கொண்டு மேலும் செயல்படச் செயல்பட
5.எந்த ஜோதித் தத்துவத்தை நாடிக் கலக்க மனம் கொண்டனோ அதையே ஈர்த்து ஈர்த்து…
6.தன் ஈர்ப்பினால் தானே ஜோதியாகி அந்த ஜோதி தத்துவத்தில் கலந்து விடுகின்றான்.
ஆகவே குரு சிஷ்ய மனோபாவனை என்பது மிகவும் உயரியது. அதை வெறும் உலக ஆசை நிலைகளுக்கு யாரும் அடகு வைத்துவிடக் கூடாது.
1.குருவும் உணர வேண்டும்…
2.அதே நேரத்தில் சீடர்களும் உண்மையை உணர்ந்து செயல்பட வேண்டும்.

நட்சத்திரங்களின் ஒளிக் கற்றைகளைத் தியானத்தில் நுகர வேண்டியதன் முக்கியத்துவம்
கார்த்திகை நட்சத்திரமும் ரேவதி நட்சத்திரமும் ஆண்பால் பெண் பால் நிலைகள் கொண்டது. அவைகளிலிருந்து வெளி வரும் தூசிகள் ஒன்றுடன் ஒன்று கவரும் போது பெரிதளவாக மோதும் போது… “மின்னலாகப் பாய்கிறது…” அந்த உணர்வின் “ஒளிக்கற்றைகளாக” விரிந்து செல்கிறது.
ஆனால் அதுவே சிறிதளவு மோதலாக வரும் போது நுண்ணிய அணுக்கள் ஒன்றுடன் ஒன்று மோதும் போது
1.இதே கதிரியக்கப் பொறியை உருவாக்கும் வியாழன் கோளிலிருந்து வரக்கூடிய இந்த உணர்வைச் சூரியன் கவர்வதும்
2.நட்சத்திரத்தின் கவர்ந்த அலைகள் இதை எதிர்பாராது சந்திக்கும் சந்தர்ப்பம் வரும் போது
3.இந்தக் கதிரியக்கத்தைக் கண்டு ரேவதி நட்சத்திரம் என்ற நிலைகள் அஞ்சி ஓடுவதும்
4.ஆண்பால் என்ற கார்த்திகை நட்சத்திரத்தின் சக்தியுடன் இது மோதி அந்த உணர்வின் தன்மை சுழலும் போது
5.இந்த வியாழன் கோளின் கதிரியக்கப் பொறியும் சேர்ந்து மூன்றும் இரண்டற இணைந்து விடுகின்றது.
அதனால் இது துடிப்பின் நிலை ஆகி எர்த்..! என்று (அந்த நிலை ஆக்கப்படும்போது) ஈர்க்கும் சக்தி சிறிதளவே வரப்படும் போது தன் அருகிலே மற்ற கோள்கள் வெளிப்படுத்தும் தூசிகளைக் கவர்ந்து அது அடைபட்ட பின் “ஓர் உயிர்” என்ற நிலை வருகின்றது.
இந்த உயிரணு எந்தெந்த உணர்வின் சக்தியை எடுக்கின்றதோ… அதே உயிர் எப்படித் துடிக்கின்றதோ… அதன் உணர்வாகத் தன் உடலாக… உடலில் உருவாக்குகின்றது.
இப்படித்தான் பல பல உடல்கள் மாற்றமானது என்ற நிலையை இந்த உண்மையின் உணர்வை அகஸ்தியன் நுகர்ந்தான். மின்னல் அது எப்படி ஒளிக்கற்றைகளாக மாறுகின்றதோ அதே உணர்வின் தன்மை போல் உயிரும் அதே நட்சத்திரங்களிலிருந்து வந்தது தான்…!
அதே உணர்வைச் சிறுகச் சிறுகச் சேர்த்துத்தான் தாவர இனங்கள் வந்தாலும் அதன் உணர்வின் அடர்த்தியாக வரும்போது… உயிரின் துடிப்பால் இந்த உணர்வின் தன்மைகளை (தாவர இனத்தின் மணங்களை) ஜீவ அணுவாக மாற்றி எதனின் மணத்தைக் கவர்ந்து கொண்டதோ அந்த உணர்வுக்கொப்ப உடலில் அணுக்களாக உருவாகின்றது.
1.இதைத் தான் வேதங்கள் “சாம…” மணம் என்றும் அதனின் இசை என்றும் கூறுகிறது
2.அதாவது உயிர் நுகர்ந்த அந்தந்த உணர்வுக்கொப்ப எண்ணங்களும்
3.அந்த உணர்ச்சிக்கொப்ப உடலின் அமைப்பும் அதனுடைய குணங்களும்
4.அதனின் செயலாக்கங்களும்…! என்ற நிலையைத் தெளிவாகக் கூறுகின்றது.
ஏனென்றால் இதற்கு விளக்கம் கூற வேண்டும் என்றால் இரண்டு வருடத்திற்காகவது சொல்ல வேண்டும். ஆனால் உங்களிடத்தில் சுருங்கச் சொல்கிறேன்,
இதனுடைய உணர்வுகள் உங்களுக்குள் விளைந்தால்… அகஸ்தியன் கண்ட வழிகளில் நீங்களும் நுகர்ந்தால் இந்த உண்மையின் உணர்வை உணர்ந்து இந்த மனிதனுக்குப் பின் எங்கே… என்ற நிலையில் பிறவி இல்லா நிலை அடையலாம்.
அந்த அகஸ்தியன் தன்னில் உணர்ந்த உணர்வினை ஒளியாக மாற்றினான். அதே உணர்வின் தன்மையை நாம் எடுத்துக் கொண்டால் அந்த ஒளியின் சரீரமாக நாமும் பெற முடியும்.
வானில் வரும் உணர்வின் தன்மையை விஷத்தை ஒளியாக மாற்றி இன்று அகஸ்தியன் தன் வாழ்க்கையில் பெற்றான். இதற்கெல்லாம் எங்கிருந்து உணவு வருகிறது..? என்று கண்டுணர்ந்தான்.
அவன் உற்றுப் பார்த்த நிலைகள்…
1.அந்த மின் கதிர்கள் வலு கொண்ட நிலைகளில் எவ்வளவு தூரம் எட்டுகின்றதோ
2.அதைப் போல் இவனின் நினைவாற்றலும் அங்கே படர்கிறது
ஏனென்றால் மின்னல் என்ற நிலை வந்தாலும் நம் பிரபஞ்சத்தைத் தாண்டிக் கூட இந்த ஒளிக் கற்றைகள் செல்கிறது.
ஒளிக் கற்றைகள் அப்படி ஊடுருவிச் சென்றாலும்… அதே சமயத்தில் அவைகளைக் கவரும் தன்மை கொண்டு நம் பிரபஞ்சத்திற்குள் வருகிறது… பூமிக்குள்ளும் வருகின்றது…! என்பதனை அகஸ்தியன் உணர்ந்தான் இயற்கையின் உண்மையை உணர்ந்தான்.
அவனில் விளைந்த உணர்வுகள் இங்கே பரவியிருப்பதை நான் (ஞானகுரு) நுகரப்படும் போது அதை அறிந்து.. அவன் கண்டுணர்ந்த உணர்வின் தன்மைகளை நீங்களும் பெற முடியும்…! என்ற உணர்வின் சொல்லாக.. வாக்காக யாம் வெளிப்படுத்துகின்றோம்.
1.இதை உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்
2.பதிவாக்கியதை நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்தால் அந்த உணர்வின் சத்தை நீங்கள் பெற்று
3.உங்கள் உடலில் அறியாது வரும் தீமைகளை வெல்ல முடியும்.
4.உங்கள் உணர்வை எல்லாம் ஒளியாக மாற்ற முடியும்….!
ஒளியாக மாற்ற முடியும் என்பதற்குத்தான் மின்னலைப் பாருடா…! என்று எம்மிடம் குருநாதர் முதன் முதலில் சொன்னார்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
எம்முடைய (ஞானகுரு) உபதேசத்தை எல்லோரும் ஆர்வமாகக் கேட்கின்றனர்.
உங்களுக்கு “நோயில்லை… துன்பம் இல்லை…” என்று நான் வாக்காகக் கொடுக்கின்றேன்.
நல்ல வாக்கைக் கொடுத்தாலும் நான் படும் அவஸ்தை “எனக்குத்தான் தெரியும்” என்கிறார்கள்.
சரி இனிமேல் நோய் நீங்கிப் போகும் என்று யாம் சொல்கிறோம்.
“இல்லைங்க..,!” என் தொல்லை என்னை விட்டுப் போகவே மாட்டேன் என்கிறது என்று சொல்கிறார்கள்…!
ஒரு அம்மாவிடம் நான் நல்ல உணர்வை வாக்காகச் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன். அந்த அம்மா எல்லாவற்றையும் கேட்டுவிட்டு என்ன சொல்கிறது…?
நான் இங்கே வந்தால் நன்றாக இருக்கின்றது. வீட்டிற்குச் சென்றால் சுத்தமாக எல்லாம் மாறிப் போகின்றது…. என்னென்னவோ நடக்கிறது…! என்று சொல்கிறது.
வீட்டிற்குப் போனாலும் என்ன அம்மா…? எங்கே போனாலும் இதே மாதிரி நல்லதை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று எண்ணுங்கள்…! என்று சொல்கின்றேன்.
“அதற்கு இல்லைங்க….!” வீட்டிற்குப் போனாலே என் தொல்லை என்னை விட்டுப் போகவே மாட்டேன்… என்கிறது என்று அதை “இறுகப் பிடித்துக் கொள்கிறார்கள்”.
இனி நோய் இல்லை போங்கள்… இதைப் பின்பற்றுங்கள்… நீங்கள் நன்றாக ஆகிவிடுவீர்கள்…! என்று நல்ல வாக்கைக் கொடுக்கின்றோம்.
ஆனால் இதைக் கேட்பார் யாரும் இல்லை.
1.சாமிக்கு என்ன தெரியும்…?
2.நான் படுகிற அவஸ்தை எனக்குத் தானே தெரியும்…! என்கிறார்கள்.
ஆனால் தன்னைத் “திட்டுபவர்களை” மட்டும் மனதில் எண்ணி “என்னை இப்படிப் பேசினாய் அல்லவா…, இரு நான் பார்க்கிறேன்… உன் குடும்பத்தை நான் தொலைத்துக் காட்டுகிறேன்…” என்று மட்டும் இறுக்கிப் பிடித்துக் கொள்கிறார்கள்.
இந்த உணர்வு அவர்களை இவர்கள் தொலைத்துக் கட்டுவதற்கு முன்னால் இவர்கள் உடலுக்குள் புகுந்து இந்த உடலைத் தொலைத்துக் கட்டும் என்பதை மறந்து போகின்றார்கள்.
சில வீட்டில் பார்க்கலாம். கொஞ்சம் “சுருக்…” என்று சொன்னால் போதும். ஆ… நீ என்னை என்ன சொன்னாய்…! உன்னை விடுவதா…? இருக்கட்டும்… நான் உன்னை என்ன செய்கிறேன் பார்…! என்று சொல்லிவிட்டு வாயில் வந்ததையெல்லாம் பேசுவார்கள்.
நீ அப்படிப் போவாய்… இப்படிப் போவாய்… இந்த மாதிரியெல்லாம் உனக்கு ஆகும்…! என்றெல்லாம் பேசுவார்கள்.
ஆனால் இப்படிப் பேசுபவர்கள் எல்லோரையும் பாருங்கள். உடலில் கை கால் குடைச்சல் கண் எரிச்சல் தலை வலி இடுப்பு வலி கால் வலி மூட்டு வலி எல்லாம் இருக்கும். “இது பேசியவர்களுக்கு”.
சிலர் பேசாமல் இதைப் பொழுது போக்காக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
1.இப்படிப் பேசுகின்றார்களே பாவிகள்…. அந்த அம்மா நல்ல அம்மா.
2.இப்படிப் பேசுகின்றார்களே பாவிகள்…. அந்த அம்மா நல்ல அம்மா என்று
3.இப்படியே திரும்பத் திரும்ப எண்ணி
4.அந்தச் சண்டை போடுபவர்களை உற்றுப் பார்த்துத் தனக்குள் பதிவாக்கிக் கொள்வார்கள்.
ஒரு பொல்லாதவரை எண்ணுவது…. நல்லவரைப் பார்த்து இங்கே “இப்படி ஆகிறதே…” என்று இதை வளர்த்துக் கொள்வது.
1.நல்லவர் மேல் இரக்கமும்
2.பொல்லாதவர் மேல் ஆத்திரமும் இந்த இரண்டும் இங்கே வரும்.
இப்படி வந்தவுடனே “அம்மம்மா…ஆ…” வயிறெல்லாம் வலிக்கிறதே… குடலெல்லாம் முட்டுகிறதே… அவர்களுக்கு இந்த நோய் வரும்.
ஆனால் நல்லவர்கள் தான்.
இந்த மாதிரிச் சண்டை நடக்கும் இடங்களில் என்ன நடக்கிறது என்று பார்க்கும் பொழுது என்ன ஆகிறது…?
1.எனக்கு எப்படியோ வருகிறது என்னென்னமோ செய்கிறது…
2.நான் யாருக்கும் தீங்கு செய்யவில்லையே…
3.தெய்வம் என்னை இப்படிச் சோதிக்கிறதே…
3.நான் அடிக்கடி வணங்கும் தெய்வமும் இப்படிப் பண்ணுகிறதே…! என்று
4.இப்படித்தான் எண்ணி இதைத்தான் கூட்டிக் கொள்ள முடிகின்றது.
தெய்வம் எங்கே இருக்கின்றது…? எந்த ரூபத்தில் இருக்கின்றது…? என்பதை வியாசகர் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார்.
நம் உயிரே கடவுள் நம் உடலே கோவில். எண்ணும் எண்ணமே இறைவன். இறையின் செயலே தெய்வமாக அமைகின்றது.
நாம் எண்ணியதை உயிர் “ஓ…” என்று இயக்கி “ம்…” என்று உடலாக ஒவ்வொரு நொடிப்பொழுதும் உருவாக்கிக் கொண்டேயுள்ளது.
நாம் யார்…? நாம் எண்ண வேண்டியது எது…? நமக்குள் சேர்க்க வேண்டியது எது…? நாம் அடைய வேண்டிய எல்லை எது…? இந்த உடலுக்குப் பின் எங்கே செல்ல வேண்டும்…?
இத்தகைய நிலைகளை எல்லோருக்கும் அறிவிப்பதற்காகத்தான் தன்னை அறிந்து கொள்ளும் நிலைக்காகத்தான் ஆலயங்களை அமைத்தார்கள் ஞானிகள்.
இதை அறியாதபடி நாம் வாழ்ந்தால்… எந்த உணர்வைச் சுவாசிக்கின்றோமோ அதனின் இயக்கமாக இயங்கி… அதன் வழியில் தான் செல்ல வேண்டியதிருக்கும்.
அத்தகைய நிலைகளிலிருந்து விடுபடும் நிலைக்குத்தான் உங்களுக்கு அந்த ஞானிகளைப் பற்றிய உணர்வுகளைப் பதிவாக்கிக் கொண்டே வருகிறோம்.


நல்ல (மெய் ஞான) வழியைத் தேடுவோருக்கு குரு காத்துக் கொண்டிருக்கின்றார்…!
உலக வாழ்க்கையின் சூழலில் சிக்கிக் கரை காணாது மன மயக்கமுறும் “மனித மனம்” கரையத் தொட்டு விட… எட்டி விட நினைக்கின்றது.
ஆனாலும் அதனுடைய செயல் முறைக்கு வழி வகை அறிய முடியாது எல்லை கடந்த நிலையில் மயக்கமாகி
1.பின் கைக்குக் கிடைத்த பொருள் போதும்… கரை சேரலாம்…! என்ற நினைப்பும் வருகின்றது.
2.இந்த வாழ்க்கையின் நிகழ்வில் தன் கைக்குக் கிடைத்த ஒரு மிதவையின் துணையினால் தன் முயற்சி கொண்டு கரை காண்பதும் உண்டு.
அதாவது கரை காணாத வாழ்க்கைச் சாகரத்தில் திமிங்கலங்களும் பல பல விஷ ஜெந்துக்களும் உண்டு என்ற போதும்… தானே கண்ட வழியாக ஓர் படகைச் செய்வித்து… அதில் அமர்ந்து எதிர் திசைக்குத் துடுப்பிட்டு எண்ண கதி ஓட்ட வாழ்வில் செல்லும் பல வழிப் பாதைகளில் இடம் சேரும் மனிதன்
2.வாழையடி வாழையாக வாழ்க்கை தன் நிலையே தனக்கு இத்தகையது தான்
3.தன் வாழ்க்கையில் வரும் துன்பங்களும்… உடல் நலக் குறைபாடுகளும்… மூப்பும் சாக்காடும் (இறப்பு) கண்டு சிந்திக்கத் தொடங்கினால்
4.தன் நிலை உணர்ந்து… பிறவித் துன்பம் நீக்கவும்.. தன் செயலில் தனக்குகந்த எண்ணப் புதிர்களை விடுவிக்கவும்…!
5.தன்னைப் பேரானந்தப்படுத்த ஓர் குருவைத் தேடத் தொடங்கினால்
6.அவனுடைய உண்மையான மனம் அதுவாக இருந்து அத்தகைய தேடுதலும் சிந்தித்தலும் சித்தித்தால்
7.இவன் தேடும் குருவும் இவனைத் தேடித் தானே வந்தடைகின்றார்… அல்லது இவன் வழியில் காத்துக் கொண்டிருக்கின்றார்…!
8.குருவின் அருட் பார்வையில் நனைகின்றான். நனைந்த பின் பிறவித் துன்பம் களையப்படுவதாக உணர்கின்றான்.
உலக வாழ்க்கையிலும் தனக்கு ஒரு பாதை கிடைத்து விட்ட எண்ணமும் அந்த எண்ணத்தின் வலுக் கொண்டு தனக்குப் போதிக்கும் குருவின் வழியைக் கடைப்பிடித்து நடக்கத் தன்னையே அந்தப் போதனைக்கு உட்படுத்தி
1.குறைவிலும் நிறை கண்டு
2.தன் ஞானச் செயலுக்கு வித்திட்டுக் கொள்கின்றான்.
இந்த வழித் தொடரில் குருவை அடையும் சிஷ்யர்கள் “அதிக அளவில் பெருகி…!” குருவை நெருங்கித் தனக்கு வேண்டிய தேவைகளுக்காகவும் தனக்கு ஏற்படும் சிக்கல்ளுக்கு மாற்று வழியைக் கண்டு உண்மையை உணர வேண்டும் என்றும் அந்த ஆர்வத் துடிப்பைக் காட்டுவதும் உண்டு.
1.ஆனால் வருகின்றவன் உலக ஆசைக்கெல்லாம்… குரு சென்றால்
2.குருவின் செயலுக்கே களங்கம் ஆகிவிடும் அல்லவா…!
அந்த மெய் குருவோ அந்தச் செயலைக் கண்டித்துரைத்து இவன் அதி ஆசையை வேரறுக்கத் தனக்குகந்த சீடர்களைத் தேர்ந்தெடுக்க பல கலைகளும் பயிற்றுவித்து அதிலே மயக்குறும் சிஷ்யர்களை விலக்குகின்றார்.
தனக்குகந்த சீடர்களைத் தயார்படுத்த சீடனுக்கும் சக்திகள் அனைத்தையும் ஊட்டி வாழ்க்கையின் வழியில் வரும் மோதல்களிலிருந்து தன் நிலை மாற்ற மனப் பக்குவத்தையும் ஏற்படுத்துகின்றார்.

விரும்பிக் கேட்பது தான் கிடைக்கும்… நாம் எதைக் கேட்க வேண்டும்…?
கஷ்டம்… துன்பம்… என்று எதுவுமே சொல்லாதீர்கள் என்று நான் (ஞானகுரு) அடிக்கடி சொன்னாலும் பெரும்பகுதியானோர் கேட்பதில்லை,
1.சீக்கிரம் நன்றாகிவிடும்…! என்று நல்ல வாக்கினை யாம் சொன்னால்
2.இரண்டாவது தரம்… குடும்பத்தில் ஒரே தொல்லையாக இருக்கிறது என்றும்
3.குழந்தைக்கு இப்படி இருக்கிறது என்று திருப்பி இப்படிக் கேட்டு
4.யாம் சொன்னதைத் தூக்கி எறிந்து விடுகின்றார்கள்.
வாக்கின் மூலமாகத் தான் ஞான வித்தை உங்களுக்குக் கொடுக்கின்றேன். அதை வளர்த்துக் கொண்டால் தான் உங்களுக்குள் அருள் ஞானத்தை வளர்க்க முடியும்.
ஆனால் என்று தன்னம்பிக்கை இல்லாமல் தான் மீண்டும் மீண்டும் அப்படிக் கேட்கிறார்கள். ஏனென்றால்
1.உங்களுக்குள் ஏற்கனவே எது பதிவானதோ அந்த உணர்வுதான் அப்படி இயக்குகிறது
2.அதை மாற்றும் வல்லமை இல்லாது இருக்கின்றது.
3.அதன் உணர்வுக்கொப்ப அந்த அணுக்கள் தான் வளர்கிறது.
ஆக… அதை மாற்றும் வல்லமை உங்களுக்கு வேண்டும் என்பதற்குத்தான் மணிக்கணக்கில் பேசுகின்றேன்.
இங்கே உபதேசிக்கும் உணர்வைப் பதிவாக்கிக் கொண்டு அந்த வலுவான நிலைகள் கொண்டு என் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும்… குடும்பத்தில் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும்…. எங்கள் தொழில் நன்றாக வளர வேண்டும்.. எங்கள் வாடிக்கையாளர்கள் பெருக வேண்டும். எங்கள் பார்வை அனைவரையும் நல்லதாக்க வேண்டும் என்று அதற்குண்டான சக்தி வேண்டும் என்று கேட்டால் அந்தச் சக்தியைப் பெற்று நீங்கள் வளரலாம் அல்லவா…!
நீங்கள் இதைக் கேட்டு… அதன்படி நடக்கும்…! என்று நான் சொன்னால் அந்த அருள் சக்தியைப் பெற்று உங்களுக்குள் தீமை வளராது தடுக்க முடியும். உங்கள் சொல் செயல் மற்றவரையும் நல்லதாக்கும்…!
ஏனென்றால்… விரும்பிக் கேட்பது தான் கிடைக்கும்…!
நல்லதை விரும்பிக் கேட்காது… எனக்குக் கஷ்டமாக இருக்கிறது… தொல்லை என்னை விட்டே போக மாட்டேன் என்கிறது தொழிலே சரியாக நடக்கவில்லை மிகவும் கஷ்டமாக இருக்கின்றது என்று இதைத்தான் கேட்கிறார்கள்.
சாமியார் செய்வார்… சாமி செய்யும்… ஜோதிடம் செய்யும்…! என்று காசைக் கொடுத்துவிட்டு மோட்ச லோகத்திற்குப் போவதும் காசைக் கொடுத்து ஆண்டவனிடம் வரம் வாங்கும் நிலையில் தான் நாம் இருக்கின்றோம்.
ஆனால் நம்மை ஆள்பவன் உயிர் தான்…!
1.ஆண்டவனாக இருப்பதும் நாம் எண்ணியதை உருவாக்குவதும் நம்மை ஆண்டு கொண்டிருப்பதும் உயிர்.
2.அவனிடம் நீங்கள் வேண்டுங்கள்…
3.மகரிஷிகளின் அருள் ஒளி எங்கள் உடலில் படர வேண்டும்
4.எங்களுக்குள் அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும்
5.மெய்ப் பொருள் காணும் சக்தி பெற வேண்டும்
6,எங்கள் பார்வை அனைவரையும் புனிதமாக்க வேண்டும்
7.எங்கள் சொல்லைக் கேட்போர் அனைவரும் நலம் பெறவேண்டும்
8.கனியைப் போன்ற இனிமையான நிலை எங்கள் வாழ்க்கையில் பெற வேண்டும்
9.எங்கள் சொல்லைக் கேட்போரும் அந்த நிலை பெற வேண்டும்
10.வைரத்தைப் போன்று எங்கள் வாழ்க்கை ஜொலிக்க வேண்டும்
11.நாங்கள் பார்ப்போர் வாழ்க்கையும் ஜொலிக்க வேண்டும்
12.எங்கள் சொல்லைக் கேட்போர் வாழ்க்கையும் ஜொலிக்க வேண்டும் என்று உங்கள் உயிரிடம் கேட்டுப் பாருங்கள்.
கீதையில் நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்பது போல் மேலே சொன்ன உணர்வுகளை அதிகமாகக் கூட்டிப் பழகுங்கள்.
மற்றவர்களுடைய துயரத்தையும் துன்பத்தையும் கேட்டறிந்தாலும் பத்திரிக்கை வாயிலாகவும் டி.வி. வாயிலாகவும் வேதனையான உணர்வுகளை அதிகமாக நுகர்ந்தாலும் அடுத்த கணம் அந்த அருள் ஒளியை நீங்கள் எடுத்துப் பழகுங்கள்.
ஒளியான உணர்வுகள் வரும் போது தீமைகள் வராது தடுக்கும்.. பேரருள் உணர்வுகள் கூடும்… அதன் வழி நாம் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழலாம். வாழ்க்கையில் வரும் துன்பத்தை அகற்றலாம்.
1.அருள் ஒளி பெறுங்கள்… அருள் ஞானம் பெறுங்கள்…! அருள் வழியில் பேரின்பம் பெறுங்கள்.
2.பிறவி இல்லா நிலையை அடையும் பருவம் பெறுங்கள்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
மகரிஷிகளின் உடல்களில் விளைந்த உணர்வுகள் விளைய வைத்த உணர்வின் வித்துக்கள் இன்றும் நமக்கு முன் பரவிப் படர்ந்து கொண்டுள்ளது.
அதனை நாம் எல்லோரும் எளிதில் பெற முடியும்.
ஆனால் உங்களுக்குக் கதையாக ஏதோ வேடிக்கையாகச் சொல்லி “சாமி பெரியவர்…!” என்று என்னைப் புகழ்ந்து விட்டுப் போவதற்கு இல்லை.
சாமிக்கு என்ன…?
1.அவருக்கு அவர் குருநாதர் (ஈஸ்வரபட்டர்) கொடுத்தார்
2.அந்தச் சக்தி நமக்கு யார் கொடுப்பார்கள்…? என்று எண்ண வேண்டாம்.
எனக்குள் குரு உபதேசித்தார்.
1.அவரை உற்றுப் பார்த்தேன்.
2.அவரின் உணர்வை ஆழமாகப் பதிவாக்கினேன்.
3.அவர் உணர்வின் தன்மை எனக்குள் பதிவு செய்தேன்.
4.மீண்டும் நான் குருவை நினைவு கொண்டேன்.
எதை…?
குருநாதர் பதிய வைத்த உணர்வை மீண்டும் எண்ணும் போதுதான் அவர் கற்றுணர்ந்த உணர்வின் சத்தும் அவருக்குள் விளைய வைத்த நிலையும் அவர் அறியாது தீமைகளை நீக்கிய நிலையும் எனக்குள் வருகின்றது.
அவரை நினைக்கும்போது அந்த உணர்வுகள் எனக்குள் அது கவரும் நிலை வருகின்றது.
அந்தப் பாதை தெரியவேண்டும் அல்லவா…!
1.மின் அணுவின் – உயிரணுவின் தோற்றமும்
2.உணர்வின் இயக்கங்களும் எவ்வாறு…? என்ற நிலையை
3.அவர் உபதேச வாயிலாக எனக்குத் தெளிவுற உணர்த்தினார்.
உபதேசத்தின் உணர்வின் அருளை அவர் காட்டிய உணர்வினை இன்று யாம் பேசுவதை ஒன்றும் அறியாத “MIC…” காந்தப் புலனில் பூசிய முலாம்கள் இந்த உணர்வின் தன்மைகளைப் பதிவாக்கி
1.மீண்டும் காந்த ஊசியை இணைத்த பின்
2.திருப்பி நமக்குப் பதில் சொல்கின்றது விஞ்ஞான அறிவு.
நாம் இதைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் மீண்டும் நினைவில் கொண்டு வர வேண்டும் என்றும் விஞ்ஞான அறிவால் கண்டுணர்த்தப்பட்ட நிலைகள்தான் இப்போது பதிவு.
MIC மூலமாக யாம் பேசுவதை பல மடங்கு (AMPLIFIER) பெருக்கி ஆயிரம் பேர் இருந்தாலும் தெளிந்த நிலைகள் கேட்கும் நிலைகளுக்கு விஞ்ஞான அறிவு வளர்ந்துள்ளது.
இதைப் போலத் தான் அகண்ட அண்டத்தின் நிலைகளுக்குள் நுண்ணிய அலைகளாக மறைந்த நிலைகள் இருந்தாலும் அதனின் உணர்வின் அதிர்வின் இயக்கத்தைக் கண்டுணர்ந்தவர்கள் மெய்ஞானிகள்.
கண்டுணர்ந்து அதற்குள் மறைந்த நஞ்சினை ஒடுக்கி நஞ்சினை ஒடுக்கும் உணர்வாக ஒளியின் சுடராகத் தனக்குள் விளைய வைத்தது மெய் ஞானிகள்.
அவர்கள் கண்டுணர்ந்த உணர்வின் தன்மையை உங்களுக்குள் பதிவு செய்யும் போது மீண்டும் நினைவு கொள்ளுங்கள்.
1.நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம்.
2.பதிவு செய்து கொண்டால் மட்டும் போதும்.
(அது என்ன கேட்டுக் கொண்டா இருக்கிறது…?)
மரம் செடி கொடி தன் உணர்வுக்குள் பதிவு செய்த பின் தன் மணத்தின் தன்மை கொண்டு காற்றில் இருப்பதைத் தன் மணத்தால் எடுத்துத் தன்னைப் பாதுகாத்து கொள்கிறது.
தன் இனமான உணர்வின் தன்மையைக் காற்றில் இருந்து தன் உணவாக நுகர்ந்து அதை உட் கொள்கின்றது.
அதற்கு அறிவில்லையா…? அதனில் தோன்றிய உணர்வின் அறிவுதான் நமக்குள் எண்ணங்களாக வருகின்றது.
எந்தக் குணத்தின் தன்மையை நாம் எடுக்கின்றமோ அதில் உருவான உணர்வுகள் அதனின் அறிவின் ஞானமாக நமக்குள் வருகின்றது.


ககனமணி பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது
மனிதன் ஞானியாக… தன் அறிவின் ஞானம் கொண்டு ஞானப் பாதையின் வளர்ச்சியில் உயர் ஞான எண்ணச் செயல்களைச் செயல்படுத்த வேண்டும் என்றால் அவன் கடைப்பிடிக்க வேண்டிய “சத்தியத்தின் சக்தி” என்பது எதுவப்பா…?
உயர் ஞானத் தத்துவப்படிச் செயல்படும் அனைத்திலுமே எண்ணம் சொல் செயல் செயலில் ஒரே நேர்கோடாகச் சத்தியத்தின் செயலாகப் பரிணமிக்க ஞானி தன் ஆக்கத்தின் ஆக்கமாகிய ஊக்கத்தில் செயல்படும் பொழுது சிவத்தைப் பெறுகின்றான். அந்தச் சிவம் என்பதே அன்பு தான்.
சத்தியத்தையும் சிவத்தையும் (அன்பையும்) கடைப்பிடிக்கும் செயலில் தன் உயிர் ஆன்ம ஜோதியை வளர்த்துக் கொள்ளும் மனப் பக்குவம் கொண்டிட்டால் அத்தகைய அழகு தான் சுந்தரம் என்பது.
சத்தியம் சிவம் சுந்தரம் பெறுதல் என்பதெல்லாம்… தான் கடைப்பிடித்து வரும் வழியில் “உயர்விற்கு வழி காட்டிடும் மார்க்கம் இது தான்…” என எண்ணத் தெளிவு கொண்டிடல் வேண்டும்.
உயிரான்மத் தத்துவத்தில் சரீரத்துடன் ஒட்டித் தன்னுள் சுற்றி ஓடும் ஒளி வட்டத்தின் பரிணாமம் தான்
1.“உயிர் சக்தியின் சக்தி ஓட்ட முறை…” என்பதை அறிந்து
2.உச்சி முதல் உள்ளங்கால் வரையிலும் மேலிருந்து கீழுமாக கீழிருந்து மேலுமாக
3.ஒரே சீரான ஒளி வட்ட அணுவின் சிவ பிம்பமாகச் சரீரத்தின் சுற்று வட்டக் குறுக்கோட்டத்தில் செயல்படும் மெய் ஒலி நாதத் தொடர்பில்
4.உள்ளிருந்து காந்த அமிலம் சக்தியாகச் சுழன்றிடும் ஓட்டச் செயல் உயிர் ஆன்ம ஒளி சக்தி – சுற்றி ஓடும் அந்த ஒளிக் காந்தத்தின் தொடரை அறிந்து
5.தன்னுடைய ஈர்ப்பின் வலுவால் எண்ணத்தின் வீரியம் கொண்டு புவி ஈர்ப்பை விடுத்து
6.காற்றில் எழும் சக்தியின் தொடர் கொண்டு இந்தச் சரீரத்தையே மிதக்க வைக்கும் தன்மை தான் “வாயு ஸ்தம்பம்…!”
சித்தர்களால் கண்டு பிடிக்கப்பட்ட அந்த நிலையில் இந்தப் புவி ஈர்ப்பின் பிடிப்பை விடுத்துச் சூட்சமம் கொண்டு விண்ணுக்குச் செல்லும் செயல் முறைக்குக் ககனமணி உள்ளதப்பா…!
இந்தச் செயல் முறையில் வானத்தில் ஒரு மண்டலமாக தனித் தன்மை வாய்ந்த… பிரகாசமான சக்தி கொண்டு… ஒளி பெற்று ஈர்த்து வளர்த்து சுழன்று ஓடி… “ஆதி சக்தியின் சக்தியாகச் செயல் கொண்டிடலாம்…!”
அலை வீசாத கடல் என்ற பால் வெளி மண்டல சூட்சமத்தில் வாழையடி வாழை என உயிரினங்களை வளர்க்கச் செயும் பூமிகள் உருவாகி அவை தன் ஈர்ப்பின் செயலுக்கு ஞானச் செல்வங்களை (மனிதர்களை) வளர்ச்சிப்படுத்துகின்றது.
தன்னையும் வளர்த்துக் கொண்டு உயர் ஞான ஆன்மாக்களை வளர்ச்சியுறச் செய்வதன் தொடர் நிலை எல்லாம் மூலத்தின் மூலத்தில் கலப்பதற்கே ஆகும்.
உடலில் உள்ள ஒளி காந்த சக்தியின் ஈர்ப்பின் வலுவால் விண் கோள்கள் விண்மீன்கள் அனைத்தையும் நேரடியாகத் தொடர்பு கொண்டு ஒலி கொண்டு ஒளி பாய்ச்சி ஒளி ஈர்த்திடும் அந்தச் செயல் முறைக்கும் சூட்சமம் உள்ளது.
1.சரீரம் ஈர்த்துச் சமைத்து வெளித் தள்ளும் சுழல் ஓட்ட வட்டச் செயலில்
2.தன் சரீரத்தைச் சுற்றிலும் ஒரு கவசமாக வீரிய காந்த வலுவை உள் நிறைத்து
3.வெளியிலிருந்து வரும் காற்று நம் சுவாசத்திற்குள் வந்து
4.அத்தகைய எண்ண அலைகள் தன் சரீரத்தின் ஈர்ப்பில் மோதிடாது ஒரு பக்குவத்தை ஏற்படுத்தி
5.வெற்றிடமாம் பூதியை (ஆவியாக) உருவாக்கிடும் செயலில் நம் உடலையே அது மிதக்கச் செய்திடுமப்பா.
உடலில் உள்ள கோடானு கோடி அணுக்களின் செயல் தன்மையால் பூமியின் ஈர்ப்பின் தொடர்புடன் இருக்கும் நிலையையே புவி ஈர்ப்பிலிருந்து விடுபட்டு மிதக்கும் தன்மையாக்க வான இயலின் சூட்சமப் பாடம் உள்ளது.
விண்ணிலே விஞ்ஞானத்தின் செயலில் (ISS) சுற்றி வரும் மனிதன் தன் உடலைப் பாதுகாத்திட தனக்கென்று ஒரு பாதுகாப்பை ஏற்படுத்திச் செல்கிறான் அல்லவா…! அந்தப் பாதுகாப்பு இல்லாமல் அங்கே இருக்க முடியுமா…?
அதே போல் கடலுக்குள் ஆழப்பகுதியில் செல்லும் மனிதன் தக்க பாதுகாப்புக் கவசத்தின் உதவி இல்லாமல் சென்றால் என்ன நடக்குமப்பா..?
நீரின் மேல் உள்ள காற்றழுத்தமும் நீரின் உள் அழுத்தக் கன பரிமாணமும் பூமியின் ஈர்ப்பு சக்தியும் இவன் உடலிலே மோதிவிட்டால் சரீரமே வெடித்துச் சிதறிவிடுமப்பா..! எவ்வளவு பாதுகாப்பு…? என்று பார்த்தாயா…!
அதைப் போன்று தான் வாயு ஸ்தம்பம் கொள்ளுதல் என்பது ஒரு பாதுகாப்புக் கவசமப்பா..! நம் உடலில் உள்ள உயிரணுக்களை ஒலி நாதம் கொண்டு தன் வசப்படுத்திடும் பக்குவ நிலைப்படுத்த வேண்டும்.
அவ்வாறு பெற்று விட்டால் நாம் செயல்படுத்தும் ஞானச் சித்துக்கள் தான் எத்தனை எத்தனை…? எல்லாவற்றையும் கடந்து ஒலியின் ஒளியாகப் பேரொளியாக மாறலாம்.

என்றுமே மாறாத நிலைகள் கொண்டது உயிர் தோன்றிய பின் ஒளியாக மாறுவது தான்…!
காலை துருவ தியானத்தில் எடுக்கும் “துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளே…”
1.நமக்குப் பெரும் சொத்து… அழியாச் சொத்து…
2.என்றும் நிலையான சொத்து…
3.பேரின்பப் பெருவாழ்வு என்று பிறவி இல்லா நிலை அடையச் செய்யும் சக்தி (சொத்து) ஆகும்.
ஏனென்றால் மனிதனாகப் பிறந்த பின் நமது எல்லை பிறவி இல்லா நிலை அடைவது தான்.
பிறவி இல்லா நிலைகள் அடைந்து அகண்ட அண்டத்தில் வருவதையும் தனக்குள் ஒளியின் சுடராக மாற்றிக் கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் சென்று ஆறாவது அறிவை ஏழாவது நிலையாகdh தனக்குள் சிருஷ்டிக்கும் வளர்ச்சியின் பாதையில் சப்தரிஷி மண்டலங்களுடன் இணைந்து வாழ்வதே நம் கடைசி எல்லை.
காரணம்… இந்தச் சூரியக் குடும்பம் செயலிழக்கும் தருணம் வந்து விட்டது. அதனால் இதன் ஈர்ப்பு வட்டத்தில் உள்ள கோள்களும் மறைந்துவிடும்.
சூரியனுக்கு உணவாக எடுத்துக் கொடுக்கும் 27 நட்சத்திரங்கள் அது ஒவ்வொன்றும் சூரியனைப் போன்றே தனி ஒரு பிரபஞ்சமாக மாறி விலகிச் செல்லும் நிலை வந்துவிட்டது.
கார்த்திகை நட்சத்திரம் ரேவதி நட்சத்திரம் போன்றவைகள் சூரியக் குடும்பங்களாக மாறுவதனால் நம் சூரியக் குடும்பத்திற்கு வரும் சக்திகள் இழக்கப்படுகின்றது.
அதாவது நமக்குக் குழந்தைகள் பிறந்து வளர்ந்து அவர்களுக்குத் திருமணமான பின் தனிக் குடும்பங்களாகப் பிரிந்து செல்வது போன்று தான்.
அவர்கள் பிரிந்து சென்றால் இங்கே இந்தக் குடும்பம் பலவீனம் அடைகிறது. பலவீனம் அடையப்படும் பொழுது குழந்தைகளிடமிருந்து எதுவும் எதிர்பார்க்க முடிவதில்லை.
அதைப் போன்றுதான் இந்தச் சூரியனும் அழியலாம்…!
1.ஆனால் இந்தப் பிரபஞ்சத்தில் உருவான உயிர்
2.அந்த மகரிஷிகள் கண்டுணர்ந்த வழியில் நாம் செல்வோம் என்றால் என்றுமே வேகா நிலை அடையலாம்.
நெருப்பில் விழுந்தால் நம் உயிர் வேகுவதில்லை. உணர்வின் அணுக்கள் வெந்து விடுகின்றது. ஆகவே…
1.அந்த உயிரைப் போன்றே நம் உணர்வுகளை எல்லாம் வேகா நிலை என்று உருவாக்கி
2.அகண்ட அண்டத்திலும் அழியா நிலை என்ற நிலை பெறுதல் வேண்டும்.
அது தான் பிறவி இல்லா நிலை என்பது…!
இப்பொழுது இந்த உடலில் நாம் இதை உருவாக்கத் தவறினால் இனி அடுத்த சந்தர்ப்பம் எப்பொழுது…? என்று நமக்குத் தெரியாது…!
புழுவாகப் பூச்சியாக இருந்து மனிதனாக உருவாக்கிய நம் உயிரைக் கடவுள் என்று அறிந்து கொண்ட பின் அறிந்த உணர்வுகள் கொண்டு ஒளியாக மாறிய அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை நமக்குள் சேர்த்து அவர்கள் பாதையில் நாம் சென்றோம் என்றால் அத்ன் எல்லையில் நாம் என்றும் நாம் நிலையாக வாழலாம். பிறவி இல்லா நிலை அடையலாம்.
இந்தப் பிரபஞ்சம் அழிந்தாலும்…
1.எதனின் சேர்க்கையில் இந்தத் துருவ நட்சத்திரம் இருக்கின்றதோ
2.அதன் ஈர்ப்பு வட்டத்தில் நாமும் இணைந்து
3.அகண்ட அண்டத்தில் சுழன்று சென்று வரும் உணர்வுகளை ஒளியாக மாற்றிடும் திறன் பெறுவோம்.
அகண்ட அண்டத்தில் என்றும் பதினாறாகச் சிறிதாகவே நாம் இருப்போம். அந்த நிலையிலேயே வளர்ச்சியின் பருவத்திலே பல கோடி ஆண்டுகள் வாழும் நிலை வரும்.
இந்த அண்டமே முழுமையாக ஒளியின் சரீரமாக அடையும் பருவம் என்பது அது எத்தனையோ கோடி ஆண்டுகள் ஆகலாம்.
எத்தனையோ கோடிச் சூரியன்களும் உண்டு. எத்தனையோ கோடிக் கோள்களும் உண்டு. இப்படி எண்ணிலடங்காத நிலைகள் அகண்ட அண்டத்தில் இருக்கப்படும் பொழுது அதனின் உணர்வை நாம் நுகர்ந்து நம் உயிரின் துணை கொண்டு என்றுமே ஒளியின் சரீரமாக மாறுதல் வேண்டும்.
நமக்குள் உருவாகும் அந்த ஒளியான உணர்வினை வெளிப்படுத்தும் போது மற்ற சூரியன்கள் கவரும் நிலை கவர்கிறது.
1.அந்தச் சூரியக் குடும்பங்களில் மனித இனங்களும் உண்டு.
2.அவர்களுக்கும் இந்த உணர்வுகள் பயன்படும்.
3.அவர்கள் தீமைகளை வென்றிடவும் இது உதவும்.
ஆகவே நாம் உலகைக் காத்திடும் கடவுள்களாக வளர்ச்சி பெற வேண்டும்… “இந்த மனித உடலிலிருந்தே…!”
அதற்குத்தான் மீண்டும் மீண்டும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை உங்களுக்குள் பதிவு செய்கின்றேன் (ஞானகுரு).
அந்த அருள் சக்தி நம் உடலுக்குள் சென்ற பின் தீமையை வென்றிடும் அரும் பெரும் சக்தியான கடவுளாக வருகின்றது. நாம் எண்ணியதை அந்த ஒளியின் சரீரமாக உருவாக்கும் ஈசனாக நம் உயிர் அமைகின்றது.
நம் உயிர் அமைந்தது போல் நுகர்ந்த உணர்வின் அணுக்கள் அதன் வழியில் என்றும் ஒளியின் சரீரமாக… உருவாக்கும் கடவுளாக… ஈசனாக நமக்குள் உருப்பெறச் செய்யும்…!
ஒருவனே தேவன் ஒருவனே கடவுள் என்றால் இது அறியாமை தான். ஒன்று என்ற நிலை அகண்ட நிலையில் எங்குமே இல்லை.
1.பலவும் சேர்த்து ஒருமை ஆகின்றது
2.ஒன்று சேர்த்துப் பலவாகின்றது
3.பலவும் சேர்த்து ஒன்றாகினறது.
இப்படித்தான் இயற்கையின் நிலைகள் அது மாறிக் கொண்டே வருகின்றது. இருந்தாலும்… “மாறாத நிலைகள் கொண்டது உயிர் தோன்றிய பின் ஒளியாக மாறுவது தான்…!”
ஒளியின் சரீரம் பெற்றாலும் ஒளி நிலை பெற்றவர்கள் ஒருவருக்கொருவர் விளைந்த நிலையில் ஒன்றுடன் ஒன்று அது ஒன்றி வாழ்ந்தால் தான் அது வாழ முடியும்.
அப்படி வாழ்ந்தவர்கள் தான் துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலமும் அவர்கள் தனித்து வாழவில்லை. அங்கே சென்று ஐக்கியமாவது தான் நம் பிறவியின் பயன்..!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
இந்த உபதேசத்தை அடிக்கடி படிப்பவர்களுக்கு இந்த உபதேசத்தின் வாயிலாக உருவான அந்த அணுக்களுக்கு அருள் ஞானிகளின் உணர்வுகள் உணவாகக் கிடைக்கும்.
பல நிலைகளில் பல கோணங்களிலும் அந்த உணர்வின் சத்தை உங்கள் உடலிலே விளைந்த அணுக்களுக்கு ஆகாரமாகக் கொடுப்பதற்குத்தான் உபதேசத்தை வழங்குகின்றோம்.
அதே சமயத்தில் புதிதாகப் படிப்பவர்களுக்கு அருள் ஞான வித்தாகப் ஊன்றப்படுகின்றது.
வித்தாக ஊன்றிய பின் இதை மீண்டும் நீங்கள் தொடர்ந்து நினைவுக்குக் கொண்டு வந்தால் அது கருவாகி உருவாகி அந்த அருள் ஞானத்தைப் பெறும் தகுதியைப் பெறுகின்றது.
சிலர் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள் “ஒன்றும் புரியவில்லை…, அர்த்தமாகவில்லை…” என்று.
உங்களுக்கு அர்த்தமாகாது.
1.ஆனால் படிக்கும் உணர்வுகள் உங்களுக்குள் கருவாகும்.
2.பின் அது உருவாகும்.
3.பின்பு இதனின் உணர்வுகள் உங்களுக்குள் தெளிவாகும்.
அது தான் “கருவாய்… உருவாய்… வருவாய்… முருகா – குருவாய்”.
நாம் எதனை எண்ணுகின்றோமோ அந்த உணர்வின் தன்மை
1.கருவாகி
2.உருவாகி
3.குருவாக வரும்.
இந்த ஆறாவது அறிவின் தன்மை (முருகா) கொண்டு நமக்குள் அது “தெளிவாக உருவாக்கும்… என்பது.
எப்படி ஒரு (ஒலி… ஓளி) நாடாவில் பதிவு செய்துவிட்டால் திருப்பி அதை மீண்டும் போட்டுப் பார்க்கும் பொழுது பதிவானதைக் கேட்கின்றோம்.
இதைப் போன்று தான் உபதேசிக்கும் உணர்வுகள் உங்களுக்குள் பதிவாகிவிடும். அணுவாக உருவாகிவிடும்.
அந்த அணுக்களுக்குச் சிறிது காலம் உணவைக் கொடுத்தால் அது மீண்டும் வளர்ச்சியாகித் “தன்னிச்சையாக” அதனின் உணவை எடுத்துக் கொண்டு வளர்ச்சி பெறும்.
முந்தைய நிலைகளில் உபதேசம் கேட்டவர்களுக்கு அதனால் விளைந்த அணுக்களுக்கு உயர்ந்த ஞான உணர்வாகக் கொடுக்கப்பட்டது. அதனின் வளர்ச்சி பெருக இது உதவும்.
அதே சமயத்தில் புதிதாகப் படிப்போர் உணர்வுகளில் ஊழ்வினை என்ற வித்தாக ஊன்றப்பட்டுள்ள நிலைகளில் அது கருவானதை உங்களுக்குள் உருவாக்க வேண்டும்.
1.உங்கள் நினைவினைக் கூட்டினால் அது உருவாகி
2.வளர்ச்சியின் தன்மை அடையும் பொழுது குருவாக வந்து
3.உங்களுக்கு நல் வழியும் காட்டும்.
அதை உணவாக ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் வரும். அப்பொழுது அந்த அருள் ஞானம் உங்களுக்குள் தன்னிச்சையாக வரும். ஆகவே யாம் சொல்வது புரியவில்லை என்று எண்ண வேண்டம்.


நச்சுத் தன்மையிலிருந்து விடுபடும் ஔஷதங்களை அன்றே கண்டுணர்ந்து வெளிப்படுத்தியவர் போகமாமகரிஷி – ஈஸ்வரபட்டர்
பேரண்ட பூமியின் சுழல் ஓட்டச் சக்தியில் (எண்ணிலடங்காத சூரியக் குடும்பங்கள்) தன்னுடைய ஈர்ப்பின் தொடருக்கு சுவாசத்தின் வலுவால் மேலும் தன்னை வளர்ச்சிப்படுத்திக் கொள்ள… சிருஷ்டியின் தத்துவமாக “ஈஸ்வர அனுபூதி லீலையில்… உயிர் அணுக்கள் தோன்றுகின்றது…!”
உயிரணுக்கள் தோன்றிய பின் அந்தந்தச் சூரியக் குடும்பங்களில் உள்ள பூமிகளில் அது சந்தர்ப்பத்தால் உடல் பெற்ற நிலையில் பரிணாம வளர்ச்சியின் எண்ணம் கொண்டு பல கோடிப் பிறப்புகளாக வளர்கின்றது.
அந்த வளர்ச்சியின் முதிர்வில் பேரானந்த சக்தியில் கலந்துவிடும் அறிவாற்றல் பெற்றிட்ட மனித குல வாழ்வில் சத்சங்கம் என்ற (உயர்ந்த படைப்பு) சரீரம் என்ற பிண்டத்தில்
1.தன்னைத் தான் உணர்தலும்
2.உணர்ந்த அந்த வழியில் தன்னை அறிந்திடும் ஆற்றலும்
3.அண்டத்தையும் (சகலத்தையும்) அறிய முயலும் செயலில் இயற்கையுடன் ஒன்றி
4.அந்த இயற்கையின் சகல சக்திகளையும் தன்னுள் ஈர்த்தே
5.தன்னையே பிரம்ம சக்தி ஸ்வரூபமாக வளர்ச்சிப்படுத்திக் கொண்டு
6.மூல சக்தியின் கருப்பொருளாகவே அது உருவாகின்றது.
ஆக… மனிதப் பிறப்பிற்குத்தான் இந்தத் தகுதி உண்டு…!
அவ்வாறு வளர்ந்ததன் பொருளே… “ஈஸ்வர சிருஷ்டியின் ஆதி சக்தி மூல வலு…” தன்னை வலுவாக ஆக்கிக் கொள்ள நடைபெறும் செயலாகும்.
இந்த அத்தனை செயல் நிகழ்வுகளிலும் தன் ஆறாவது அறிவால் ஏழாவது நிலையாக… “ஒளியாகும் அறிவாற்றல் பெற்ற நிலையில்…”
1.படைப்பின் படைப்பில் செயல்படும் சகல கோடி ஜீவியர்களும் (மகரிஷிகள்) ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டே
2.சக்தியை வலுக்கூட்டும் சூட்சமம் அறிந்துணர்ந்து தெளிந்திட்ட பக்குவமே “அனுபவ விசேஷம்…!” ஆகும்
இயற்கையுடன் ஒன்றி வளரும் தாவர இனங்களின் ஓர்மித்த சுவாச அலை ஈர்ப்பில் அதனதன் அமில குணத் தன்மைகளின் பாகுபாட்டையும் அதனின் சூட்சமங்களையும் அறிந்தவர்கள் தான் அன்றைய ஞானிகள்.
அவர்கள் பெற்ற உயர் ஞான வலுவின் மூலம் இயற்கை மூலிகை ஔஷத இரகசியங்களை அறிந்து கொண்டனர். அதனின் வளர்ச்சியில் வளர்ச்சியுற்ற நிலை தான் “விஷ வைத்திய சாஸ்திரம்…” பிறந்ததன் காரணம்.
இந்த உலகத்தில் உள்ளோர் நல் வாழ்வு வாழ்ந்திட… தீமையானதையும் நல்லவைகளாக மாற்றித் தரும் அத்தகைய மகான்கள் அளித்த வைத்திய பொக்கிஷங்கள் எல்லாம் மறை பொருளாக்கப்பட்டு விட்டது.
காரணம்… நன்மைகளையே எதிர்மறைகளாக உணர்ந்து தீய எண்ணத்தை வலுவாக்கிக் கொண்ட “இன்றைய மனித குலத்தின் நஞ்சான எண்ணத்தால் தான்…!”
போகர் பெற்ற அனுபவ ஞானத்தால் கசாங் என்ற பெயர் நாம சித்தனாக உலகிற்கு நன்மைகள் புரிய முனைந்த பொழுது அன்றைய அரசாங்கமே அதை எல்லாம் மக்களுக்குக் கிடைத்திடாத வண்ணம் தடுத்து கசாங் சித்தரையே அழித்துவிட முனைந்தது.
அவர்கள் எய்த விஷ அம்பு சரீரத்தில் தைத்துவிட்ட கோலத்தில் அடர்ந்த கானகத்துக்குள் தப்பி ஓடினார். காட்டில் பைராகிகள் (துறவிகள்) தொடர்பு ஏற்பட்டு திட வைராக்கிய சிந்தனை கொண்டு எவ்வளவு எதிர்ப்பு நிலை இருந்த போதிலும்
1.உலகு உய்ய மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற உயர்ந்த உள்ளத்தின் பாங்கில்
2.தன்னை மாமகரிஷியாக வளர்ச்சிப்படுத்திக் கொண்டார்.
3.அந்த போகமாமகரிஷியின் அருள் சக்தியை நாம் பெற வேண்டுமப்பா..!
பைராகிகளின் உதவியுடன் விஷ வைத்திய முறைகளைக் கற்றுணர்ந்தார் போகர். அதே தொடரில் விஷ மூலிகைகளைப் பக்குவப்படுத்தும் முறை கொண்டு விண்ணிலே பறந்தும் காட்டினார் போகர்.
அதன் பிறகு தியான ஈர்ப்பின் செயல் மூலம் “இந்தச் சரீரத்தையே மிதக்கச் செய்யும் செயலாகக் காட்டியது…” காளாஞ்சி நாதரின் (காலிங்கநாதர்) தொடர்புக்குப் பின் தான். அதுவே “வாயு ஸ்தம்பம்…!”
மகரிஷிகள் பெற்ற அனுபவ ஞானங்களை வெளியிடுவது கூட அவர்களின் சம்மதம் என்ற அருளாசி பெற்றுத்தான் சொல்லுக்கே கொண்டு வந்திட முடியும். போகர் அளித்திட்ட சம்மதத்துடன் அவருடைய அருளாசியுடன் கூறுவதில் இனி தடை ஏதுமில்லை…!
போகநாதர் பெற்ற ஞான வளர்ச்சியை இதைப் படிப்போர் அனைவரும் பெற எமது அருளாசிகள்…! (ஈஸ்வரபட்டர்)

மகிழ்ச்சியாக இருக்கும் குடும்பத்திலோ அல்லது நண்பர்களிடமோ பகைமை எப்படி வருகிறது…?
வாழ்க்கையில் குடும்பம் என்ற நிலையில் எவ்வளவோ அன்புடன் பண்புடன் வளர்ந்தாலும் சந்தர்ப்பத்த பேதத்தால் ஒருவர் ஒரு தவறைச் செய்து விடுகின்றார். உடனே சுர்.. என்று கோபம் வருகிறது.
1.ஒரு தடவை இப்படிக் கோபம் என்று நமக்குள் பதிவாக்கி விட்டால்
2.அடுத்த தரமும் அதே தவறைச் செய்தால் கோபம் எல்லை கடந்து விடுகிறது.
வேதனைப்படும் நிலைகள் ஆகி… நாசமாகப் போகிறவனே… ஏண்டா இந்த மாதிரிச் செய்கிறாய்…? என்று நம்மை அறியாமலே சாபமிடும் நிலை வந்துவிடுகின்றது. அவனைக் கெடுக்கும் உணர்வுகள் நமக்குள் வளர்ந்து விடுகின்றது.
இதைப் போன்று நம்மை அறியாது நம் குடும்பத்தில் வளர்ந்து விடுகிறது. இதிலிருந்து நாம் மீள்வது எப்படி…?
அதே போல்… தொழிலின் நிமித்தம் நாம் ஒருவருக்கு உதவி செய்கிறோம். கடனாகக் கேட்கிறார் என்று பணத்தைக் கொடுத்து உதவி செய்கிறோம்.
இத்தனை நாள்களுக்குள் திரும்பக் கொடுக்கின்றேன் என்று சொல்கிறார். ஆனால் மாதக் கணக்காகி விடுகின்றது. அப்பொழுது நம் மனதில் பணத்தைக் கொடுப்பானா… கொடுக்க மாட்டானா…? என்று எண்ணத் தொடங்குகிறோம்.
நம்முடைய இந்தச் சந்தேக உணர்வு அங்கே அவனுக்குள் இயக்கப்பட்டு நண்பரின் தொழில் வளர்ச்சியையும் தடைப்படுத்தும்.
1.அவனுடைய சந்தர்ப்பம் வருவாய் வருவதைத் தடுக்கும்.
2.பணத்தைக் கொடுக்க வேண்டுமே என்ற வேதனையும் வரும்.
கொடுக்க முடியவில்லை என்று ஏங்கிக் கொண்டிருக்கும் போது நாம் என்ன செய்கிறோம்.
இத்தனை நாளைக்குள் தருகிறேன் என்று பணத்தை வாங்கிச் சென்றாயே…! ஏம்ப்பா…! இன்னும் பணத்தைக் கொடுக்கவில்லை..? என்று வேகத்துடன் கேட்போம்.
சொல்லி வாங்கிச் சென்றாயே…! ஏன் இன்னும் உன்னால் கொடுக்க முடியவில்லை…? என்ற எண்ணத்துடன் கேட்போம். இந்த வெறுப்பின் தன்மை அடையப்படும் பொழுது பணத்தைத் திரும்பக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் வேதனையை வளர்த்துக் கொள்கிறான்.
அதை நுகரப்படும் பொழுது நமக்குள்ளும் வேதனை உணர்வே வளர்ந்துவிடுகிறது. அப்போது நண்பனக இருந்தாலும் பகைமையாகி விடுகின்றது.
பகைமை உணர்வுகள் நமக்குள் வளர்ந்த பின் நம் நல்ல குணங்களைச் செயலற்றதாக மாற்றிவிடுகின்றது. இதைத் தான் இந்திரலோகத்திற்குள் இரண்யன் புகுந்து இத்தகைய நிலைகளைச் செயலாக்குகின்றான் என்று காவியத்தில் காட்டுகின்றார்கள்.
அதை மாற்ற அதோ வருகிறான் நாரதன்…! என்று கண்ணன் (கண்கள்) காட்டிய வழிப்படி “ஈஸ்வரா…” என்று உயிரிடம் வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று ஏங்கித் தியானிக்க வேண்டும்.
பின் நம்மிடம் கடன் வாங்கிச் சென்றவரை எண்ணி…
1.மகரிஷிகளின் அருள் சக்தி அவர் உடல் முழுவதும் படர வேண்டும்.
2.அவருடைய தொழில்கள் வளம் பெறவேண்டும்
3.அவருக்கு நல்ல வருமானம் வர வேண்டும்
4.பணத்தைத் திரும்பக் கொடுக்கும் எளிதான நிலைகள் வர வேண்டும் என்று நாம் எண்ணுதல் வேண்டும்.
இப்படி எண்ணினால் நம் எண்ணம் அவனைக் காக்கின்றது. அதே சமயத்தில் அவனின் உணர்வும் வலுவாகின்றது. பணத்தைத் திரும்பச் செலுத்தும் நிலை வருகின்றது.
இது போன்ற நிலைகளைக் கூட்டுத் தியானத்தில் கூட்டமைப்பாக நாம் எண்ணித் தியானித்து வலு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின் அதிகாலை துருவ தியானத்தில் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்தநாளங்களில் கலந்து உடல் உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களும் பெற வேண்டும் என்று வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அடுத்து நம் வாழ்க்கையில் யாரை எல்லாம் பார்த்தோமோ அவர்கள் குடும்பங்களில் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் வைரத்தைப் போல் அவர்கள் குடும்பம் ஜொலிக்க வேண்டும் அவர்கள் தொழில்கள் ஜொலிக்க வேண்டும். அவர்கள் குடும்பங்கள் நலம் பெறவேண்டும் என்று அவர்களை நாம் எண்ணுதல் வேண்டும்.
ஏனென்றால் அவர்கள் உணர்வெல்லாம் நம் உடலில் இருக்கின்றது. நமக்குள் அந்த உனர்வின் தன்மை விளையப்படும் போது அவர் பணம் திரும்பக் கொடுக்கவில்லை என்ற நிலையில் நம் உடலில் உருவான வேதனை அணுக்களுக்கு ஆகாரம் கிடைப்பதில்லை.
இதைப் போன்று ஒவ்வொரு நிமிடத்திலும் அந்த மகரிஷிகளின் ஆற்றலை நமக்குள் சேர்க்கப்படும் பொழுது நம் ஆன்மாவைத் தூய்மையாக்குகின்றோம்.
ஒவ்வொரு நாளும் நாம் வெண்மையான (தூய்மையான) உடையைத் தான் உடுத்துகின்றோம். ஆனால் காற்றிலிருக்கும் தூசி அதிலே பட்டபின் அதை இருளடையச் செய்துவிடுகின்றது.
இதைப் போன்று தான்…
1.நாம் நல்ல எண்ணம் கொண்டு வந்தாலும் பிறருடைய தீமையின் உணர்வை அறியத் தான் செய்கின்றோம்.
2.அந்தத் தீமையின் உணர்வுகள் நம் உடலுக்குள் சென்றால் தீமை செய்யும் அணுக்களாக விளைகின்றது.
3.இது இயற்கையின் நியதிகள்…!
ஆனால் மனிதனானவன் பிரம்மாவைச் சிறை பிடித்தான் என்ற நிலையில் இது போன்ற தீமைகளை அகற்றிவிட்டு தீமைகளை அகற்றிய அருள் ஞானியின் உணர்வை நமக்குள் நுகர்ந்து நமக்குள் உருவாக்குதல் வேண்டும்.
இதனைக் காட்டுவதற்குத்தான் விநாயகர் கையில் அங்குசத்தைக் கொடுத்தனர்… அங்குசபாசவா…! கார்த்திகேயா மனிதனான பின் ஆறாவது அறிவு கொண்டு இதை அடக்க முடியும். இதன்படி நம் ஆன்மாவைச் சுத்தப்படுத்த வேண்டும்.
ஆகவே எல்லோருடைய நிலைகளையும் மகரிஷிகளின் ஒளி கொண்டு நமக்குள் சமப்படுத்தும் போது நம் எண்ணங்கள் ஒன்றாகின்றது. தீமைகளை நீக்கிவிடுகின்றது…!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
யாம் அருள் ஞானிகள் கண்ட உண்மைகளை உபதேசிக்கின்றோம். அதையெல்லாம் புரியவில்லை என்று எண்ணினீர்கள் என்றால் அது புரியாத அணுவாகத் தான் உங்களுக்குள் மாறும்.
புரிய வேண்டும்… என்று “ஏங்கிப் பெற்றால்” அது கருவாகி உங்களுக்குள் அணுவாக உருவாகும்.
அந்த அண்டமும் அகண்ட அண்டமும் எப்படி உருவானது என்ற நிலையை அந்த உணர்வுகளை நீங்கள் நுகர்ந்த அறிய முடியும்.
அகஸ்தியன் அணுவின் ஆற்றலை அறிந்து துருவனாகி துருவத்தின் ஆற்றலை அறிந்ததனால் அந்த அறிவின் தன்மையை விளையச் செய்து அவன் உடலை உருவாக்கிய உயிர் ஒளியின் சரீரமாக இன்று துருவ நட்சத்திரமாக இருக்கின்றது.
அதனைப் பின்பற்றிச் சென்றோர் அனைவரும் அவனுடைய ஈர்ப்பு வட்டத்தில் இன்றும் சப்தரிஷி மண்டலங்களாக வாழ்கின்றார்கள்.
1.ஆனால் இடைமறித்து
2.சாமி என்ன சொல்கிறார்…!
3.நமக்கு என்ன அர்த்தமாகின்றது?
4.அவர் “என்னென்னமோ” சொல்கிறார் என்றால் என்ன ஆகும்?
“நான் படிக்காதவன் தான்..,” ஆனால் பேசுகின்றேன்.
படித்தவர்கள் சிந்திக்கும் பொழுது படித்ததை வைத்து இது என்னமோ சொல்கின்றார் என்ற நிலைகளில் “விட்டுவிடுவார்கள்”
1.மிகவும் படிக்காதவர்கள்
2.யாம் சொல்வதை “என்ன சொல்கிறார்…” என்று கூர்ந்து கவனித்தால்
3.அந்த உணர்வின் கருவாகிவிட்டால்
4.தன்னையும் அறிகின்றார் அண்டத்தையும் அறிகின்றார் அகண்ட அண்டத்தையும் அறிகின்றார்.
5.துருவ நட்சத்திரம் தனக்குள் எப்படி ஒளியாக மாற்றுகின்றதோ அந்த நிலையை அடைய முடியும்.
ஆக, நான் சொல்கிறேன் என்றால் எதை வைத்துச் சொல்கின்றேன்? நான் எந்தப் பாட நூல்களையும் படிக்கவில்லை.
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் இதையெல்லாம் கண்டுணர்ந்தார். அந்த உணர்வின் அணுக்களை எனக்குள் பதிவு செய்தார். இந்த உணர்வின் நினைவைப் பாய்ச்சினேன். அறிந்து கொண்டேன்.
இந்த அண்டங்கள் எப்படி உருவானது என்ற நிலையை அகஸ்தியன் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் கண்டான். அவனுக்குள் கண்ட உணர்வுகள் அந்த உணர்ச்சியின் தன்மைகள் இந்தப் பூமியில் உண்டு.
1.அதை நுகரும் ஆற்றல் வரும் பொழுது இந்த உணர்வின் தன்மை
2.உணர்த்தும் தன்மையும்
3.உணரும் தன்மையும் வருகின்றது.
இதையெல்லாம் நீங்களும் பெறவேண்டும் என்ற ஆசையில் தான் இதைச் சொல்கின்றேன்.


கோபத்தை விலக்கலே உயர் ஞானத்தின் முதல் படி – ஈஸ்வரபட்டர்
கோப குணத்திற்குச் சிறிதளவு சக்தியை ஊட்டிவிட்டால் அது நாம் பெற்ற தியான சக்தியின் சேமிப்பைத் தனக்குகந்த ஆகாரமாகச் சாப்பிட்டுத் தன் வலுவை… தன் கோப குணத்தை மீண்டும் வலுக் கொள்ளச் செய்துவிடும்.
கோபத்தை விலக்கலே உயர் ஞானத்தின் முதல் படி…! கோபத் தன்மை இருந்தால் அது தீய வினைகளுக்குத் தான் அடிகோலும்.
ஆணவம்.. மோகம்… உலக மயக்கம் என்னும் மாயை…! இவைகளை ஞானச் செல்வங்களால் வென்று காட்டியதைத்தான்
1.வேலின் வடிவமாக
2.வேல் விண்ணிலே பறந்து சென்றது…! என்று சூட்சமாகக் காட்டப்பட்டது.
முருகன் ஆணவத்தை அடக்கிவிட்டார்… மோக குணத்தை வென்றிட்டார்… உலகோதய மாயை என்னும் விஷ நாகத்தை அடக்கி விட்டார்… என்பதெல்லாம் உலக மக்களுக்குப் படிப்பினையாகச் சொல்லப்பட்டது.
1.அந்த நல் வழியக் கண்டுணர்ந்து செயல் கொண்டால்
2.“வேல் விண்ணிலே பறந்ததின் சூட்சமம் புரிந்துவிடும்…!”
மயிலிற்கும் பாம்பிற்கும் பகை என்ற நிலை போல உலகோதய இன்பம் பெறுபவன் கூட ஆணவம் கொண்டிட்டால் பகை என்ற எதிர் மறை நிலைதான் செயல் கொள்ளும்…! என்ற உண்மையை அறிந்துணர வேண்டும்.
ஆகவே ஆணவத்தை அடக்கிச் செயல் கொண்டாலும் உலகோதயச் செயல் தத்துவத்தில் தேவையை அழித்திடல் ஆகாது. (ஏனென்றால்) “அது தான் உயிர் சக்தி…!”
அதுவும் ஞான வழித் தொடருக்கு வழி காட்ட மயிலிற்கும் பாம்பிற்கும் பகையாக இருந்தாலும் ஆணவத்தை நீக்கி ஞானம் பெற்றுவிட்டால்
1.இரண்டுக்கும் உள்ள பகை நீங்கி
2.மயிலின் காலடியில் பாம்பு எப்படி வாழ்கின்றது…! என்ற உண்மை ஞானம் தெளிவுபடும்.
மோகக் குணத்தைப் பேரின்ப ஞான குணத்திற்கு எப்படி வழி வகுப்பது என்றால் மோக குணத்தை அதன் ஆங்காரக் குணத்தை ஓங்காரமாக்கும் செயலாகச் சேவல் கூவுகிறது என்ற பொருளில்
1.நம்மைக் காக்கும் சக்தியாக மாற்றி
2.அறிவின் ஞானத்தைப் பெருக்கும் வேலாயுதமாகப் பயன்படுத்தினால்
3.”உலகோதயம் நம் காலடியில்…!” என்ற பொருளை உணரலாம்

மற்றவர்களுக்கு நாம் கொடுக்க வேண்டிய நல்ல வாக்குகள்
இன்றைய உலக சிக்கல்களிலிருந்து மீள ஒவ்வொரு மனிதனும் அருள் ஞான சக்தியைக் கூட்டி இருளைத் தனக்குள் சேராத நிலைகள் பாதுகாத்துக் கொள்ள மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளைப் பெற்று அருள் மகரிஷிகளின் அருள் உணர்வு பெற்று அனைவரும் பிறவி இல்லா நிலைகள் அடைய வேண்டும்.
ஆகையினால் இந்த உபதேசத்தைக் கேட்டுணர்ந்தோர் அனைவரும் உபதேசித்த கருத்துக்களை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்து கொள்ளுங்கள். ஒவ்வொரு நிமிடமும் அதை வளர்த்துக் கொள்ள முற்படுங்கள்.
ஒரு சிரமமான நேரங்களில் ஒருவருக்கு உதவி செய்கிறீர்கள் என்றால்…
1.இந்த அருள் உணர்வுகளை எடுத்துச் சொல்லி…
2.இதன் வழிகளில் மகரிஷிகளின் அருள் சக்தி பெறுவீர்கள்… உங்கள் உடல் நலம் பெறும்…
3.குடும்பத்தில் கஷ்டம் நீங்கும்… உங்கள் தொழில்கள் வளம் பெறும் என்ற வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.
இந்த வாக்கினை ஏற்றுக் கொண்டோர் உணர்வுகளில் அந்த உணர்வுகள் பதிவாகி அவர்கள் நினைவாற்றல் அவர்களைக் காக்க உதவும். நோய்களை அகற்றவும் இது உதவும்.
உதாரணமாக ஒருவர் மிகவும் வேதனைப்படுகின்றார் என்றால் ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் நினைவைச் செலுத்தி உங்கள் உயிரை வேண்டுங்கள்.
அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று ஒரு பத்து நிமிடமாவது ஏங்கித் தியானித்துக் கொள்ளுங்கள்.
யார் நோய் என்று சொன்னார்களோ அவர்களிடம்… மகரிஷிகளின் அருள் சக்தி உங்கள் உடல் முழுவதும் படரும்… உங்கள் உடல் வலி குறையும்…! என்று நீங்கள் சொல்லிப் பாருங்கள்.
மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் உடல் முழுவதும் படர வேண்டும் நோயின் வலிமை குறைய வேண்டும் அருள் ஒளி அங்கே படர வேண்டும் என்று இப்படி எண்ணிப் பாருங்கள்.
சொன்ன வாக்கின்படி அவர்களும் மகரிஷிகளின் அருள் சக்தியால் “என் நோய் குறைய வேண்டும்…” என்று எண்ணினால் அவர்கள் உடலில் அந்த வலி குறைவதையும் நோய் நீங்கும் சக்தியும் பெறுகிறார்கள்.
ஏனென்றால் உங்களுக்கு இந்தச் சக்தி இருக்கிறதா… இல்லையா…! என்று இப்படிப் பரீட்சித்துப் பாருங்கள். உங்களுக்குண்டான ஆற்றலை நீங்கள் பார்க்கலாம்.
அதே போல் யாம் கொடுக்கும் பிராசத்தில் உள்ள காசை உங்கள் வீட்டில் பூஜை அறையில் விநாயகருக்கு அருகில் வைத்துக் கொள்ளுங்கள். பாலும் தீர்த்தமும் வைத்து யாம் சொன்ன முறைப்படி தியானித்து விட்டு முடிந்த பின் பாலையும் தீர்த்தத்தையும் எடுத்துப் பாருங்கள்.
1.நீங்கள் தியானத்தில் கவர்ந்து கொண்ட அலைகள் அதிலே படரப்படும் போது
2.அந்தப் பாலிலேயும் இந்தச் சக்தி படர்ந்திருக்கும்
3.அது நீங்கள் வைத்த பாலாக இருக்காது. அது சுவை கொண்ட பாலாக மாறும்.
4.தீர்த்தமும் நீங்கள் வைத்த தண்ணீராக இருக்காது… சுவை கொண்ட தீர்த்தமாக மாறும்.
5.ஏனென்றால் நாம் எடுத்த அந்த மகரிஷிகளின் அலைகள் அங்கே படர்கிறது.
இதைப் போல் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுக்க எடுக்க நம் வீட்டுக்குள் இருக்கும் தரைகளிலும் சுவர்களிலும் மற்ற உடமைகளிலும் இந்த அலைகள் படரும். அப்பொழுது தீமைகள் அகற்றும் சக்திகள் கிடைக்கின்றது.
நாம் அனைவரும் இதைப் போல் ஒருக்கிணைந்து அந்த அருள் உணர்வுகளைப் பெற முற்பட்டால்
1.இந்த வாழ்க்கையில் அனைவரும் நலம் பெற உதவுகின்றோம்.
2.நமக்குள் இருக்கும் அனைத்துக் குணங்களிலும் நலம் பெறும் சக்தியாக மாற்றிடும் நிலை வருகின்றது.
ஆகவே ஒவ்வொருவரும் உங்களை நீங்கள் நம்புங்கள். உங்கள் உயிரை ஈசனாக மதியுங்கள். உங்கள் உடலைச் சிவமாக மதியுங்கள்.. ஈசன் வீற்றிருக்கும் ஆலயமாக அதை மதித்துப் பழகுங்கள்.
மகரிஷிகளின் அருள் வட்டத்தில் என்றுமே ஒன்றி வாழ்ந்திடும் அருள் சக்தி பெறுவீர்கள்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
ஒருவர் நம்மைத் தாக்கிப் பேசினால் பதிலுக்கு அவனைத் தாக்க வேண்டும் என்ற உணர்ச்சிகள் தான் தூண்டுகின்றது. அப்படித் தூண்டும்போது ஆத்திரமான உணர்வுகளை நாம் சுவாசிக்க நேருகின்றது.
ஆத்திரமான உணர்வுகள் நம் உடலுக்குள் சேர்ந்துவிட்டால் இரத்தக் கொதிப்பாக மாறுகின்றது. அல்லது வாத நோய் வருவதற்குண்டான வித்தாக மாறுகின்றது.
அதிலிருந்து தப்ப முடியாத நிலை ஆகின்றது. ஆனாலும் அது சந்தர்ப்பம் தான்.
அதே மாதிரி நாம் தவறே செய்யவில்லை என்றாலும் இரண்டு பேர் ஒருவரை ஒருவர் தாக்கப்படும் பொழுது நாம் பார்க்கின்றோம்.
“சும்மா இருப்பவனைத் தாக்குகின்றானே…” என்று நாம் உணர்ச்சிவசப்படுகின்றோம். அப்படி உணர்ச்சிவசப்படும் பொழுது “இதைக் காட்டிலும் நமக்கு ஆத்திரம் அதிகமாகின்றது”.
அப்பொழுது அவனைப் பார்த்து “ஏனப்பா.., சும்மா இருப்பவனை அடிக்கின்றாய்…?” என்று கேட்டால் அவன் திருப்பிப் பதில் சொன்னால் போதும்.
1.கோபமும் ஆத்திரமும் இரு மடங்காகி
2.அந்த உணர்வை நாம் அழுத்தமாகச் சுவாசிக்க நேருகின்றது.
3.ஆனால் நன்மை செய்வதாகத்தான் நாம் எண்ணுகின்றோம்.
4.அதே சமயம் நமக்குள் ஆத்திர உணர்வுகள் ஈர்க்கப்பட்டு இரத்தக் கொதிப்பாகும் என்று நாம் அறியவில்லை,
அந்த விஷத்தின் தன்மை நமக்குள் அதிகமாகி நம் மனித நினைவை இழக்கச் செய்து அது வியாதியாகி நஞ்சுகள் அதிகமாகி கடைசியில் குறுகிய நிலைகள் கொண்டு இயங்குவது போல் “குறுக்கும் உணர்வுகள்” உடலுக்குள் விளைந்து விடுகின்றது.
உயிராத்மாவில் சேரும் இந்த உணர்வுகள் இந்த உடலைக் குறுக்கி வேறு விஷமான உடலைப் பெறும் தகுதியைத்தான் ஏற்படுத்தும்.
இதை மாற்ற வேண்டும் அல்லவா…!
அந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் அடுத்த நிமிடமே ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று எண்ணி ஏங்குதல் வேண்டும்.
இந்த மனித வாழ்க்கையில் வந்த அந்த இருண்ட சந்தர்ப்பத்தை மாற்றி மெய்ஞானிகளின் அருள் ஒளியைப் பெறுதல் வேண்டும்.
நம்மை ஒருவர் குறைத்துப் பேசிவிட்டால் ஆத்திரம் மூண்டு “இப்படிக் கேவலப்படுத்திவிட்டான்…” என்ற வேட்கையைக் கூட்டி அழிக்கும் உணர்வுகளே அந்தச் சந்தர்ப்பத்தில் தோன்றுகின்றது.
இதைப் போல சந்தர்ப்பங்கள் வந்தாலும் உடனடியாக விண்ணை நோக்கி ஏகி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்றால்
1.வரும் அசுத்தத்தை நீக்குகின்றோம்.
2.அதே சமயத்தில் மெய் ஒளியைப் பெறுகின்றோம்.
3.இப்படித்தான் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் நல்லதாக மாற்ற வேண்டும்.
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலேயும் உயர்வதும் தாழ்வதும் “படித்துணர்ந்து… நான் அதைச் செய்வேன்…” என்றால் விஞ்ஞான அறிவிற்குத்தான் செல்ல முடியும்.
மெய் ஞான அறிவில் படித்து வர முடியாது. அந்த மெய் ஞானிகள் காட்டிய அருள் வழியில் “அனுபவரீதியில் தான்” நாம் அதை வளர்த்துக் கொள்ள முடியும்.


சத்தியம் சிவம் சுந்தரம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது
மனிதனான நமக்குள் பல பல எண்ணங்கள் இருந்தாலும் இந்த உடல் வாழ்க்கையில் மோதும் உலகோதய உணர்வுகளிலிருந்து உயர் ஞான வழியின் வழியை உணர்ந்து செயல்படும் பக்குவம் பெற வேண்டும்.
1.நான் என்ற ஆணவம் ஒரு மலம்
2.காமம் என்ற சபல குண மோகம் ஒரு மலம்
3.உலகோதய ஆசை என்னும் மாயை மூன்றாவது மலம்.
இந்த மூன்றையும் அறிந்து அந்த மும்மலத்தையும் நீக்க வேண்டும் என்றால் சத்தியம் சிவம் சுந்தரம் என்ற கருத்தின் பொருளைக் காண வேண்டும்.
மெய் ஞானிகள் உணர்வுடன் தொடர்பு கொண்டு மனத் தெளிவு பெற்று சத்தியம் என்பதன் உண்மைப் பொருள் விளங்கி நம் எண்ணம் சொல் செயல் மூன்றும் நேர்கோடாகப் பரிணமித்தல் வேண்டும். சத்தியம் என்ற அந்த மெய் ஞானமே உண்மை ஞானமாக அறிந்து செயல்பட வேண்டும்.
சத்திய வழி சிவம் பெறுதல் என்பது என்ன..? சிவத்தை எங்கிருந்து பெறுவாய்…?
1.உன்னிடத்தில் உள்ளதடா சிவம்… என்று
2.சித்தன் காட்டிய வழியில் “உன்னை உணர்ந்து பாரப்பா…!”
காமம் என்பதே உயிர்களுக்கு அன்பு. காமம் சமமான பக்குவத்தில் இருந்தால் அதுவே சிவமாகும். அந்த அன்பு தானப்பா “சிவம்…!”
மனதில் அன்பு கொண்டு விட்டால் உயிரான்மாவின் சக்தியின் வலுவிற்குச் சுலபமான வழி கிட்டிவிடும். அதுவே சுந்தரம்…! சுந்தரத்தைப் பெறுவது என்றால் “அழகு” என்று பொருள் கொள்வாய்.
1.அந்த அழகு என்பது எதுவப்பா..?
2.நீ நினைக்கும் உடல் அழகு அல்ல…!
அழகு என்பது ஆன்ம வலுவின் ஒளி காந்த சக்தி கொண்டு “சுடர் விட்டுப் பிரகாசிக்கும் ஜோதித் தத்துவம் ஆகும்..!” அதைப் பெற வேண்டும் என்றால் மும்மலம் நீக்கப்பட வேண்டும்.
அதை நீக்கிய பிறகு மெய் வழி கண்டு மெய் வழி அறிந்து மெய் ஞானம் மலர்ந்து
1.விரிந்து மணம் வீசும் ஒரு மலர் போல
2.ஆன்ம சக்தியின் சத்தியம்.. சிவம்… சுந்தரம்… என்ற எண்ணத்தில்
3.கடைப்பிடிக்கும் அந்தச் சத்தியத்தை நிலை நிறுத்தி அதை மேன்மைப்படுத்தினால்
4.அன்பு என்ற சிவத்தைப் பெறுகின்றாய்.
அன்பாம் சிவ ஈர்ப்பின் வலுச் செயலினால்… சுந்தரமாம் ஆன்ம அழகின் ஜோதியாக… ஜோதியின் சக்தியே பிரகாசமாக… பிரகாசத்தின் ஒளி நிகழ்வாக… “மூலத்தின் மூலமாகச் செயல் கொண்டிடலாம்…!”
சிற்றின்ப போகத்தையே பேரின்பப் போகமாக்கிய போகநாதர் சத்தியம் சிவம் சுந்தரத்தைப் பெற்றது… மும்மலத்தை மாற்றியமைத்து நற்குண வழிச் செயல் ஆக்கத்தின் ஆக்கம் பெற்றதால்தான்…!
முருகனுக்கு மயிலையும் சேவலையும் காட்டி நாகம் வேல் என்ற தொடரையும் காட்டுகின்றார்கள். அதன் சூட்சமம் அறிந்தோமா…? போகப்பெருமான் வளர்த்துக் கொண்ட அனுபவ ஞானத்தை நாமும் அறிந்து கொண்டால் நம்முடைய வளர்ச்சி நல் வழி ஆகுமப்பா..!
விநாயகர் ஞானக்கனியைப் பெற்றார். இடும்ப குண வசத்தால் முருகனுக்குக் அது கிடைக்கவில்லை என்ற கதையின் தத்துவத்தில் உள்ள உண்மையையும் தெளிந்து கொள்ள வேண்டும்.
வினையின் நாயகன் அந்த விநாயகனே நாம் தானப்பா…! நாம் எப்படி ஞானக்கனி பெறுவது..?
உயிரின் மூலமாகிய “சிவ சக்தி…!” என்று சொரூபப்படுத்திக் காட்டிய
1.சுழற்சியின் வேகமான சிவத்திற்குள்… சக்தி உருக்கொள்ளும் தன் உயிர் சக்தியை
2.தன்னைத் தான் உணர்ந்து தன்னுள் அந்தச் சிவ சக்தியைக் கண்டு
3.வலுக் கொண்ட செயலின் ஆக்கமாகத் தன்னைத் தான் அறிவதே ஞானக்கனி பெறுவது என்பது.
(சூட்சமப்படுத்திக் காட்டிய நிலையில்) தன்னுள்ளே சிவ சக்தியைக் கண்டு அதைச் சுற்றும் வழித் தொடரில் அதை வலம் வந்து அந்த வினையின் நாயகனாக நாம் பெறுவதே “ஞானக்கனி…!”
அகஸ்திய மாமகரிஷியின் தொடர்பு கொண்டு… போகப் பெருமானின் குரு காளஞ்சி நாதர் (காலிங்கநாதர்) சொன்ன முறைப்படி
1.இருந்த இடத்திலேயே (வெளியிலே தேடிக் கொண்டிருக்காமல்) ஞானக்கனி பெறுதல் என்பதில் அந்த ஞானம் கனிந்து விட்டால்
2.அதனின் சுவையைப் பெற்று விட்டால்
2.அந்தச் சுவையின் “மூலம் அறிய…” வழி பிறக்கும்.
இப்படித் தத்துவங்களையெல்லாம் காட்டி… சூட்சமங்களை எல்லாம் உள் புகுத்தி… மும்மல நீக்கத்திற்கு வழி காட்டி… வாழையடி வாழை என வரும் ஞானச் செல்வங்கள் தன் சக்தியை வளர்த்துக் கொள்வது என்பது… “மகரிஷிகள் கண்டுணர்ந்த மெய் வழியாகும்…”

உயிரால் வளர்க்கப்பட்ட பிள்ளையை உனது… எனது… என்று போர் செய்யாதே…!
ஒரு வேதனைப்படுவோர் உணர்வை நுகர்ந்தால் நம் நல்ல குணத்தை அது வங்கிட்டுக் கொள்கிறது. அதைச் செயலற்றதாக மாற்றுகின்றது.
அதை மாற்ற மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நாம் எண்ணினால் அவர்கள் வேதனையை வென்றவர்கள். அந்த வேதனையை அது அடக்கி விடுகின்றது.
இதை நாம் கற்றுக் கொள்வதற்காக ஆற்றங்கரையில் விநாயகரை வைத்துக் காட்டினார்கள் ஞானிகள்.
நம் வாழ்க்கையில் பிறர் வேதனைப்படுவதை உற்றுப் பார்த்து அதை நுகர்ந்தால் அந்த விஷத்தின் தன்மை நம் நல்லதை அடக்கிடாது அடுத்த கணமே
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…
2.எங்கள் இரத்த நாளங்களில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி கலக்க வேண்டும்
3.எங்கள் ஜீவான்மா ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஏனென்றால் வேதனைப்படுவோர் உணர்வை நுகர்ந்தால் அதை நம் உயிர் ஓ… என்று ஜீவ அணுவாக மாற்றி அந்த அணுவாக மாற்றும் கருவாக உருவாக்கி விடுகின்றது நம் இரத்தத்தில்.
ஒரு பத்து நாளைக்கு வேதனைப்படுவோர் உணர்வை நுகர்ந்து பாருங்கள். அடுத்து உங்கள் இரத்தத்தை எடுத்துப் பரிசோதித்துப் பாருங்கள்.
1.விஷத்தை ஊட்டும் விஷ அணுக்கள் இருக்கிறது என்று காண்பிப்பார்கள்
2.நன்றாக இருந்தது… இப்படி மாறி இருக்கிறது என்பார்கள்.
அதே மாதிரி கோபப்படுவோரை நீங்கள் அடிக்கடி பார்த்து அந்தக் காரமான உணர்வைச் சுவாசித்திருந்தால்
1.அந்த உணர்வின் தன்மை இரத்தக் கொதிப்பிற்குண்டான நிலைகளாக உருவாகி இருக்கிறது என்று
2.லேபரட்டரியில் வைத்துப் பரிசோதித்து எந்தெந்த அளவில் இருக்கிறது
3.இதற்கு என்னென்ன மருந்து கொடுக்க வேண்டும் என்றெல்லாம் கண்டுபிடிப்பார்கள்.
இதை எல்லாம் வராது தடுக்க வேதனைப்பட்டால் உடனே அந்தத் துருவ மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று ஏங்கி நம் உடலுக்குள் செலுத்தினால் இதனை அது அடக்குகிறது… இதை மாற்றுகின்றது. அது தான் மகிழ்வாகனா…!
ஆறாவது அறிவின் தன்மை கொண்டு கார்த்திகேயா…! வேதனைப்படுகிறான் என்று தெரிகிறது… வேதனை வென்றவன் துருவ மகரிஷி என்றும் தெரிகிறது…! அந்த உணர்வை நுகர்ந்து இந்த வேதனையை அடக்க வேண்டும்…!
எத்தகைய நிலைகள் நமக்குள் வந்தாலும் ஆறாவது அறிவால் இதை அடக்க முடியும் அங்குசபாசவா என்ற நிலை தெளிவாக்கப்பட்டுள்ளது. இதற்குத் தான் விநாயகர் பக்கம் அரச மரத்தை வைத்துள்ளது. அகஸ்தியன் துருவ நட்சத்திரமான நிலையைக் குறிக்கவே அரச மரத்தைக் காட்டுகின்றனர்.
அதிகாலை நான்கு மணியிலிருந்து ஆறு மணிக்குள் குளித்து விட்டுக் கரையேறி வந்த பின் விநாயாகரை உற்றுப் பார்க்கின்றோம்.
நம் உயிர் பல கோடிச் சரீரங்களைக் கடந்து இன்று நம்மை மனிதனாக உருவாக்கி உள்ளது என்று கணங்களுக்கெல்லாம் ஈசா கணேசா…! என்று உயிரை வணங்க வேண்டும் என்று காட்டுகின்றார்கள்.
பல கோடிச் சரீரங்களில் தழைத் தாம்புகளைத் தின்றோம் புல்லைத் தின்றோம் காய் கனிகளைத் தின்றோம். இன்று மனிதனான பின் சுவைமிக்க உணவைப் படைத்துச் சாப்பிடும் இந்த மனித உடலைப் பெற்றோம் இந்தப் பிள்ளை யார்…? என்று கேள்விக் குறி எழுப்புகின்றார்கள்…!
1.உயிரால் வளர்க்கப்பட்ட பிள்ளை…
2.நீ உனது எனது என்ற நிலைகளில் போர் செய்யாதே…!
3.அவனால் ஒன்றி வாழும் அணுக்கள் இது…!
4.அதை எப்படி வளர்க்க வேண்டும்….? என்பது தெளிவாக்கப்படுகின்றது.
தீமையைக் கண்டுணர்ந்த நிலைகள் கொண்டு உயிரால் வளர்க்கப்பட்ட இந்த மனித உடலைச் சீர்குலைக்கச் செய்து விடாதே…! அருள் ஒளி பெற்ற மகரிஷிகளின் உணர்வை “உனக்குள் செலுத்து…!” என்பதைத் தான் அங்கே எண்ணி எடுக்கும்ப்படி காட்டுகின்றார்கள்.
குளித்து விட்டு வந்து விநாயகரைப் பார்த்த பின் மண்ணுலகில் நஞ்சினை வென்று துருவ நட்சத்திரமாக உருவாகிய துருவ மகரிஷியின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியும் நாங்கள் பெறவேண்டும் என்று ஏங்கி நின்று அந்தச் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று இதை எண்ணி எடுக்கும்படி செய்கிறார்கள்.
இவ்வாறு நமக்குள் எடுத்துப் பழக வேண்டும். சாமி (ஞானகுரு) சொல்கின்ற சக்தியை நான் பெற வேண்டும்… என்று உங்களுக்குள் “இறுக்கிப் பிடித்து வைத்துக் கொண்டால்…” இதை வளர்க்கச் செய்யும்…!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
நம் உயிரணு (உயிர்) கதிரியக்க நட்சத்திரத்திலிருந்து உருவானது தான்.
மனிதன் வரை வளர்ந்து அந்த ஆற்றலான உணர்வின் சத்து கொண்டுதான்
1.உடலான இருளுக்குள் இருப்பதை
2.அந்த மறைந்த நிலையைத் தன் உணர்வின் நிலையால்
ஒலி… ஒளி அலைகளாக எண்ணங்களாக மாற்றுகின்றது.
இதையெல்லாம் அன்று பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் கண்டுணர்ந்தவன் அகஸ்தியன்.
தாய் கருவிலே அவன் இருக்கும் பொழுது தாய் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த விண்ணின் ஆற்றல்கள் அனைத்தும் அதாவது அந்த நஞ்சின் இயக்கமான கதிரியக்கத்தின் உணர்வுகள் அகஸ்தியனுக்குப் பூர்வ புண்ணியமாக அமைந்தது.
பூர்வ புண்ணியத்தால் தான் பெற்ற அந்த உணர்வின் சக்தி கொண்டு விண்ணை நோக்கி ஏகுகின்றான்.
அப்படி ஏகும் போது “உயிராற்றல்…”
1.எதனின் தன்மை கொண்டு அந்த நட்சத்திரத்தின் இயக்கங்கள் இயக்கியதோ
2.அதையே நுகர்ந்து நுகர்ந்து நுகர்ந்து
3.அதனின் உணர்வின் தன்மையே ஒளியாக மாற்றிக் கொள்கின்றான் அகஸ்தியன்.
விண்ணின் ஆற்றலை எடுத்து இந்த உடலுக்குள் இருக்கும் உணர்வுகள் அனைத்தையும் தனக்கென்ற நிலைகள் இதைப் பிரித்துப் பிரித்து அந்த உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றி இன்றும் விண் உலகில் வாழ்ந்து கொண்டுள்ளான் துருவ மகரிஷி.
அதாவது துருவப் பகுதியிலிருந்து நம் பூமி கவரும் உணர்வின் சத்தைத் தான் (அகஸ்தியன்) அங்கேயே நிலை கொண்டு அந்த உணர்வின் சத்தைத் தனக்குள் கவர்ந்தான்.
அவ்வாறு கவர்ந்த சத்திலிருக்கும் நஞ்சினைப் பிரித்து விட்டுத் தன் உயிரான ஒளியின் சிகரத்தை எந்த நட்சத்திரத்தில் பிறந்தானோ அதனின் இனத்தின் தன்மையை இந்த உணர்வின் தன்மையை உணவாக எடுத்துக் கொண்டு இன்றும் துருவ நட்சத்திரமாக மின்னிக் கொண்டுள்ளான் அவன்.
அதைப் போன்று எந்த நட்சத்திரத்தின் தன்மை நம் உயிரணுவின் தன்மையாக இருப்பினும் அகஸ்தியமாமகரிஷியின் அருள் சக்திகளை நாம் கவர்தல் வேண்டும்.
அந்த அகஸ்தியனின் உணர்வின் துணை கொண்டு விண்ணின் ஆற்றலை நம் உயிரான இயக்கத்திற்குள் இணைத்து இந்த வாழ்க்கையில் எதிர் நிலையான இயக்கங்களாக இருப்பினும் ஒருக்கிணைந்த இயக்கமாக நாமும் மாற்ற முடியும்.
இதையெல்லாம் நீங்கள் படிக்கும் பொழுது “என்னடா…! நாம் எல்லாம் அந்த அளவிற்குப் படிக்காதவர்கள். “சாமி என்னென்னமோ… இப்படிச் சொல்கிறார்..!” என்று எண்ணாதீர்கள்.
1.நான் படிக்காதவன் தான்.
2.மூன்றாவது வகுப்பு முழுவதும் படிக்கவில்லை.
என் குருநாதர் அகஸ்தியன் பெற்ற ஆற்றல்களை எல்லாம் எனக்குள் கொடுத்து இயக்கச் சக்தியாகக் கொண்டு வந்திருக்கிறார்.
அதனால் சாமி சொல்வது அர்த்தம் தெரியவில்லை…. எங்கேயோ ஏதோ உலகத்தில் ஏதோ பெரியதாகச் சொல்கிறார்…! என்று இப்படி விட்டு விட்டீர்கள் என்றால் நான் சொல்வதைத் தள்ளிவிட்டுவிடும். அது போல் விட்டு விடாதீர்கள்.


தன்னைத் தான் அறிந்த மெய் ஞானிகள் விண் சென்ற முறை
நிறம், மணம், நீர் அமிலம் என்ற முத்தொடர் மூலத்திலிருந்து ஒன்றுடன் ஒன்று கலந்து கோடானு கோடி உயிரணுக்கள் செயல்படும் அமில குணத் தன்மைகளை பூமியிலிருந்து வானத்தைப் பார்க்கும் பொழுது காண முடிகிறது.
அதாவது இரவிலே இருள் என்ற கரிய வண்ணமும் (பேரண்ட இருள் பால்வெளி சூட்சமம்) சூரிய ஒளி பூமியின் ஈர்ப்பில் படர்ந்திடும் பகல் பொழுதில் நீல வண்ணக் குணத் தொடரிலும் பார்க்கலாம்.
ஆனால் அவைகளுக்கு அருகாமையில் நெருங்கிச் சென்று… உணர்வால் சுவாசத்தால் ஈர்த்தெடுத்து உணர்ந்திடும் பொழுது
1.உயிரணுக்கள் பெற்றிட்ட நீல வண்ண குணத் தன்மை உட்சென்று
2.உணர்ந்து அறியும் செயலில் தூய வெண்ணிற ஒளி தான் புலப்படும்.
ஏனென்றால் மூல சக்தியின் செயலில் நடை பெறும் கிரியைகளை நாம் மனிதர்கள் உணர்ந்து அறிதலே சிறப்பு. அது தான் தனித்துவ சக்தி நிலை பெறும் “உயர் ஞான வளர்ப்பின் ஆக்கம் ஆகும்…!”
சொல் நாம சூட்சமத்தை விளக்கிடும் செயலில் செவிப்புலன் அறிவு என்பதில்
1.அகத்தின் பொருளைச் செவிமடுக்கும் தன்மை கொண்டு செயற்படுதல் உயர்ந்தது தான் என்றாலும்
2.சிந்தனை வசமாகத் தானே தன்னில் அறிந்து உணர்ந்து தெளிதலே அதி மேன்மையாகும்.
வாயு ஸ்தம்பம் என்றிட்ட ஸ்தூல சரீரத்தையே மிதக்க வைத்திடும் செயலுக்கும் பொருள் உண்டு.
பைராகிகளின் தொடர்பில் போகப் பெருமான் வைத்திய சாஸ்திரங்களை தாவரங்களின் ஈர்ப்பில் இயல் தன்மைகளைக் கொண்டு அறிந்தாலும் அதை அறிந்து கொண்டபின் அனுபோக முறை (அனுபவத்தால்) மருத்துவ ஸ்வரூபம் காட்டியது “அவர் பெற்ற உயர் ஞான வளர்ச்சியால் தான்,..”
மூலிகையின் சாறு கொண்டு ஏற்றப்படும் அகல் விளக்கில் வேறு சில மூலிகைகளில் பதப்படுத்தப்பட்டுப் பக்குவமாக விளக்கிற்குத் திரி என்ற அமைப்புச் செயலில் ஏற்றப்படும் ஒளி தீபமும் அதனுள் இருந்து வெளிப்படும் புகை காற்றின் அடர்வை மெலிதாக்கி மேல் நோக்கிக் கிளப்பும் சூட்சமம் உணர்ந்து உலோகக் கூண்டுகளில் அதை உள் நிரப்பி அக்கூண்டுகளை வான்வெளியில் பறக்கச் செய்திட்ட செயலில் அந்தக் கூண்டுகளுடன் இணைக்கப்பட்ட தூளியில் அமர்ந்து காற்றின் போக்கில் வான்வெளியில் சஞ்சரித்தனர் அன்றைய மெய் ஞானிகள்.
1.பூமித் தாய் சக்தியை இன்றைய விஞ்ஞானம் (அணுக்கதிரியக்கம்) கேடாக்கும் செயலைப் போன்று அல்லாமல்
2.அன்றைய மெய் ஞானிகள் இயற்கை முறையில் அதைச் செய்வித்தனர்.
இப்படிப்பட்ட அறிவின் ஞானம் கொண்டு அன்றைய சித்தர்கள் செயல் வெளிப்படுத்திய சூட்சமங்களே இன்றைய விஞ்ஞானத்திற்கு மூலம்.
மெய் ஞானம் கொண்டு உயிரான்மாவின் சக்தியை வலுக் கொண்டு சரீரத்தையே மிதக்க வைத்த… செயல் சிவஸ்வரூபத்தைத் தன்னுள் கண்டு தெளிந்து… சிவஸ்வரூபத்தின் மூலத்தை அறிந்து… அதனுள் அதுவாக ஒன்றி தான் வேறல்ல ஈசன் வேறல்ல என்ற மனப்பக்குவம் மனத் தூய்மை கொண்டு… அகத்தின் பொருள் கண்டறிந்து பரம் பொருளை அறியும் மார்க்கம் தான் மெய் ஞானிகள் கண்டறிந்து உரைத்தது..!
இதை எல்லாம்…
1.சொல்லால் வெளிப்படுத்துவ்தை அறிந்து கொண்டால் மட்டும் போதாது
2.அறிந்ததை உணர்ந்து கொண்டு தானே ஈஸ்வரனுடன் ஒன்றும் நிலையாக
3.பிரம்ம சாயுஜ்யம் (ஈசன் வேறல்ல நாம் வேறல்ல) பெறும் ஆனந்த லயத்தை அனுபவிக்கும் எண்ண வலுவிற்கு வலுக் கூட்ட வேண்டும்.
மிருகங்கள் பறவை முதற் கொண்டு ஐந்தறிவு பெற்ற அனைத்து ஜீவன்களுக்கும் ஞானம் உண்டு. இயற்கையுடன் ஒன்றி அறியும் திறனுண்டு. ஆனால் ஐந்தறிவு படைத்த மனிதன் பகுத்தறியும் அறிவாற்றல் பெற்ற திறன் உடையவன் ஆகின்றான்.
இயற்கை ஞானத்தை வளர் ஞானமாக்கும் பக்குவத்தில் அண்டங்களின் செயல்பாட்டை… மூலச் சக்தியை அறிந்து கொள்ள… மகரிஷிகளால் ஊட்டப்படும் பேரருள் பேரொளியைப் பெற்றிடும் பக்குவத்திற்கு வர வேண்டும்.
மனிதச் சரீரம் என்ற இந்தப் பிண்டத்தைக் கொண்டு
1.உலகோதய ஆசை என்ற மாய வலைக்குள் சிக்காவண்ணம்…
2.அகத்தின் எண்ணச் செயலில் தூய்மையும்…
3.வாக்கு வன்மையும் பெற்று… அன்பின் வழித் தொடரில் கனிவும்…
4.செயலில் பரம்பொருளை அறிந்து கொள்ளும் வைராக்கியமும் பெற்றிடும் பாத்திரமாக
5.தன்னை வளர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.
மூவுலகை ஆட்டுவிக்கும் மூல சக்தியின் செயலை உணர வேண்டும் என்றால் தன்னைத்தான் உணரும் செயலில் தான் அதை அறிந்து கொள்ள முடியும்.

இரத்தத்தில் சுழன்று கொண்டிருக்கும் ஜீவ அணுக்கள் ஜீவ ஆன்மாக்கள் பற்றிய விளக்கம்
ஒவ்வொரு நாளும் நமக்குள் எத்தனையோ உணர்வுகளைக் கவர்ந்திருந்தாலும் தினமும் அதிகாலை துருவ தியான நேரத்தில் ஈஸ்வரா என்று உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று தியானிக்க வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலக்க வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மாக்கள் ஜீவ அணுக்கள் பெற வேண்டும் ஈஸ்வரா… என்று இரத்ததில் அந்த அரும் பெரும் சக்திகளைக் கலக்கச் செய்ய வேண்டும்.
ஜீவ அணு:
ஜீவ அணு என்றால் உதாரணமாக ஒரு பாம்பை நாம் அடிக்கின்றோம் என்றால் அந்த அணுக்கள் (பாம்பு வேதனைப்பட்ட) நம் உடலில் ஜீவ அணுக்களாக இரத்தத்திலே வளரும். உடலில் உள்ள உறுப்புகளில் போய் இணையும்.
அதற்குச் சாப்பாடு தேவை. வேதனைப்பட்ட அலைகளை எடுத்துத் தான் அது சாப்பிடும். நமக்கு வேதனையைக் கொடுக்கும்.
ஜீவ ஆன்மா
அந்தப் பாம்போ (பாம்பின் உயிராத்மா) மனிதனை உருவாக்கிய இந்திரீகத்தில் அது கருவாகப் போய்ச் சேர்ந்து விடும் அடுத்த உருவைப் பெறுவதற்கு…!
அந்த உருவைச் சேர்த்த பின் அந்தப் பாம்பின் தன்மை கொண்டு அந்த அணுவாக நமக்குள் உருவாகும். அதற்கு மாற்றத் தெரியாது. அதே உணர்ச்சிகளைத் தான் தூண்டிக் கொண்டிருக்கும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலக்க வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவான்மாக்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்றால்
1.அந்த அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகள்
2.அதற்குள்ளும் சேர்கின்றது (பாம்பின் ஆன்மா ஜீவான்மாவாக உள்ளதுக்கு).
3.மனிதனாகும் அந்த உணர்வுகள் கருக்களிலும் இந்த உணர்வை மாற்றும் வல்லமை பெறுகின்றது.
4.அந்த அணுக்கள் இந்தச் சக்தியைப் பெறும் போது இதுவும் நமக்குள் ஒத்தாசையாக வருகின்றது.
ஏனென்றால் நமக்குள் வந்து மனிதனாக உருப்பெறும் உணர்வை அங்கே வளர்த்திருக்கின்றது. ஆனால் அருள் ஒளியின் தன்மையை நாம் கூட்டும் போது இதுவும் அந்த ஒளியின் சுடராக மாறுகின்றது.
இந்த உணர்வின் தன்மை வளர்த்துக் கொண்ட பின் இந்த உடலை விட்டு நாம் சென்றாலும் அது வளர்த்துக் கொண்ட உணர்வுகள் நாம் எண்ணிய உணர்வுகள் அனைத்தும் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக மாறுகின்றது.
அதற்குத்தான் அதிகாலை துருவ தியான நேரத்தில் நாம் பார்த்தவர்களுக்கெல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று எண்ணச் சொல்வது..!
வைரத்தைப் போன்று எங்கள் வாழ்க்கை ஜொலிக்க வேண்டும் எங்கள் செயல் எல்லாம் ஜொலிக்க வேண்டும் எங்கள் சொல் ஜொலிக்க வேண்டும் நாங்கள் பார்த்தோர் குடும்பமெல்லாம் வைரத்தைப் போன்று ஜொலிக்க வேண்டும் அவர்கள் வாழ்க்கை ஜொலிக்க வேண்டும் அவர்கள் தொழில்கள் ஜொலிக்க வேண்டும் அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும்
1.என்று எத்தனை தடவை சொல்கிறீர்களோ
2.அது வரை உங்களுக்கு நன்மை தரும்.
இராமாயணத்தில் காட்டுகின்றனர்… ஜனகச் சக்கரவர்த்தி தன் வளர்ப்பு மகளான சீதாவைத் திருமணம் செய்ய சுயம்வரத்தை ஏற்படுத்துகின்றார். அங்கே வருவோர் அவரவர்கள் திறமைகளைக் காட்டும்படி சொல்கின்றனர்.
வந்தவர்கள் அனைவரும் அங்கிருக்கும் வில்லை எடுத்து அதில் அம்பை ஏற்றிக் குறி வைத்துத் தாக்குகின்றனர்… அவரவர்களுக்குத் தகுந்த மாதிரி..!
ஆனால் இராமன் வந்தவுடன்… அவன் உணர்வுப்படி தீமை செய்யும் அந்த வில்லையே ஒடித்து விடுகின்றான். ஏனென்றால்…
1.தீமை செய்யும் எண்ணத்தை நீக்கிய பின்
2.சீதா அந்த மகிழ்ச்சி பெறும் குணத்தைத் தன் உடலுடன் அரவணைத்துக் கொண்டான்.
3.அதைத்தான் கல்யாணராமா என்பது…!
ஒவ்வொரு நாளும் தீமை செய்யும் உணர்வுகளை நீக்கிக் கொண்டே வந்தால் தான் நமக்குள் மகிழ்ச்சி என்ற நிலையை உருவாக்க முடியும். எதிரி என்றும் எதிர்ப்பு என்றும் இல்லாதபடி ஏகாந்தமாக வாழ முடியும்.
இந்த உடலுக்குப் பின் யார் ஈர்ப்பிலும் சிக்காது நம் உயிரான்மா அழியா ஒளிச் சரீரம் பெறும். இதைத்தான் இராமாயணம் தெளிவாக்குகின்றது.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் நான் (ஞானகுரு) அனுபவம் பெறுவதற்காக வேண்டி
1.பல கஷ்டங்களையும் கொடுத்தார்.. கடுமையாகத் திட்டுவார்…!
2.கொச்சையாகப் பேசுவார். பொறுத்துக் கொள்ள முடியாது
3.காதிலேயே கேட்க முடியாது. அவ்வளவு மோசமாகப் பேசுவார்.
4.என்னை ஒவ்வொரு நொடியிலும் உதைப்பார்; இம்சிப்பார்; திட்டுவார்..! இத்தனையும் செய்வார்.
நன்றாக பேசிக் கொண்டே இருப்பார். திடீரென்று என்ன செய்கிறார் என்று எனக்கே தெரியாது. போய்க் கொண்டு இருக்கும் போதே இல்லாத கஷ்டத்தை எல்லாம் எனக்கு ஏற்படுத்தி வைப்பார்.
“இப்படிச் செய்து விட்டார்… பார்…!” என்று நான் திகைத்து நிற்பேன்.
அப்பறம் என்ன செய்வார்…?
இதை எடுத்து நீ பாருடா…! என்று சொல்வார்.
1.உன் உடலில் இப்போது என்ன செய்கின்றது…?
2.நான் இப்போது உன்னை என்ன செய்தேன்…?
3.நீ ஏன் அதைச் சுவாசித்தாய்…?
4.அதை நீ “தடைப்படுத்து…!” என்று சொல்வார்.
எப்படி சாமி தடைபடுத்துவது…? என்றேன் நான்.
இதற்குத் தான் “குரு பலம்…!” வேண்டும் என்பது. ஆகவே “குரு” எது…?
கோபமான எண்ணங்களை நீ பதிவு செய்து வைத்துக் கொள்கிறாய். அதைத் திருப்பி எண்ணும் போது குருவாக வந்து உன்னைக் கோபமாகச் சண்டை போட வைக்கின்றது. இது குரு பலம் தான்.
அதே மாதிரி உன்னைத் திட்டி வேதனைப்படுத்துகின்றார்கள். அதைப் பிடியாக வைத்துக் கொள்கிறாய். திருப்பி எண்ணியவுடனே அது குருவாக வருகின்றது.
உன்னை வேதனைப்படச் செய்து வேதனைப்படும் செயல்களைச் செய்ய வைக்கின்றது. உடலுக்குள்ளும் வேதனையாகின்றது. அது குருவாக நிற்கின்றது.
அப்படியென்றால் “நீ எதைக் குருவாக்க வேண்டும்…?” என்று வினா எழுப்புகிறார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.
இந்த வேதனைகளையெல்லாம் நீக்கியவர்கள் அந்த “மகாமகரிஷிகள்…!”
1.அதை எடுத்து உனக்குள் குருவாக ஆக்கு…
2.அந்தக் குருவை நீ மதி…!
3.அந்தக் குரு உனக்குச் சகல நிலைகளையும் செய்யும்.
நான் இப்போது உன்னைக் கடுமையாகத் திட்டுகின்றேன். அதை நீ குருவாக எடுத்துக் கொண்டால்
1.என்னைப் “போடா சாமி…!” என்பாய்
2.என்னைப் “பைத்தியக்காரப் பயலே…!” என்று சொல்வாய்.
“இப்படியே” குருநாதர் (ஈஸ்வரபட்டர்) சொல்கின்றார்.
நான் உன்னைத் திட்டுகின்றேன் என்கிற போது “நான் திட்டியதைத்தான்” நீ எடுத்துக் கொள்கிறாய்.
ஆனால் உன்னிடம் இருக்கிற “கெட்டதெல்லாம் போக வேண்டும்…!” என்று நான் திட்டுகின்றேன்.
1.அதை நீ எடுத்து கொள்ள மாட்டாய்…!
2.பாவி…! என்னைப் பைத்தியக்காரத்தனமாகத் திட்டுகின்றார்…, “இந்த மனிதன்..” என்று தான் என்னை நீ எண்ணுவாய்.
உனக்குள் மறைந்து சில நிலைகளைச் செய்கிறது… அதை நீ நீக்கத் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா…!
என்னைத் திட்டுகின்றான் என்பதை மட்டும் வெளியில் வருவதை… உன் செவிப்புலன் இயக்குகின்றது. இந்த உணர்வு இயக்குகிறது.
ஆனால் அதே சமயத்தில் என் மீது இருக்கக்கூடிய பிரியத்தின் படி “என்னைப் பைத்தியக்காரன்” என்று நீ திட்டுகிறாய்… அது இயக்குகின்றது. உன் வெறுப்பைக் காட்டுகின்றாய்.
”இவ்வளவையும்…” என் அனுபவத்திற்குக் கொண்டு வருகின்றார்.


சிற்றின்பத்தை விடுத்துப் பேரின்பம் பெற வேண்டியதன் முக்கியத்துவம் – ஈஸ்வரபட்டர்
போகம் என்பது உடலியலில் அனுபவித்தல் என்று பொருள்படும்.
உயிரணுக்கள் உயிரின் செயலுக்கு உணர்வுகளின் வழி அனுபவிக்கும் செயல் போகம் சிற்றின்ப போகம் என்றும்… பேரின்ப போகம் என்றும் வழி அமைத்து
1.சிற்றின்ப போகம் சந்ததியின் வளர்ச்சிக்காக மட்டும் என்றும்
2.அந்த வளர்ப்புப் பெற்று விட்டால் மனிதன் பேரின்பப் போகமாக்கும் தன்மைகளை வகைப்படுத்தி
3.உணர்வுகளின் சஞ்சலம் மாற்றியமைத்துப் பெறும் பேறே பேரின்ப போகம் என்று அறிந்ததே “போகநாதர் சொன்ன போகமாகும்…!”
நாம் எடுக்கும் தியானத்தின் பலத்தால் காயகல்ப நிலைக்கு உட்படுத்தி தெய்வீக சக்திக்கு வழியமைத்து உயிரான்மா உயர்ந்த சக்தி பெறும் மார்க்கத்தைப் போகர் உணர்ந்தார்.
வானிலே சுழன்று கொண்டிருக்கும் விண்மீன்களின் அமில சக்திகளையும் நவக்கோள்கள் என்ற நவபாஷாண சக்திகளையும் நம் உயிராத்மா பெறுவதற்காக முருகன் சிலையை நிர்மாணித்தார்.
வானுலக ஆற்றலை… அந்த அமுதத்தைப் பெற வேண்டும் என்ற ஏக்கத்தில் யார் யார் எல்லாம் முருகா என்ற ஏக்கத்தில் வருகின்றார்களோ அந்த ஆன்மாக்களையும் தன்னுடைய ஈர்ப்பிலே வளர்ச்சிப்படுத்தி
1.புவியியல் தன்மையை வானியல் படுத்தி போகர் “போகமாமகரிஷி” ஆனார்.
2.பேரின்பப் போகமாகிய ஆனந்தப் பரவச பேரானந்தச் சூட்சம நிலை பெற வழி அமைத்தார்.
3.போகமாமகரிஷியின் அருளாசி வேண்டி வணங்குகின்றேன் ஈஸ்வரா…!
உயிரான்மாவின் தத்துவத்தில் உயிர் சக்தியின் தொடர்பு உச்சி முதல் உள்ளங்கால் வரை மேலிருந்து கீழுமாகவும் கீழிருந்து மேலுமாகவும் ஓடிடும் அமைப்பு உள்ளது.
உயிரணுக்கள் சரீரம் பெற்ற பின்பு உயிரோட்ட ஒளி சக்தி மனிதச் சரீரத்தில் மேலிருந்து கீழுமாக ஓடிடும் நிலையில் மகரிஷிகள் ஞானிகள் வெளிப்படுத்தும் ஆற்றல் மிக்க பேரருள் பேரொளி உணர்வுகளை நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்திலும் சுழலச் செய்யும் செயலினால்
1.ஞான விழிப்பார்வை கொண்டு உற்று நோக்கினால்
2.”ஆத்ம லிங்கம்…!” என்ற ஆத்மா புலப்படும். அதுவே “சிவஸ்வரூபம்…!”
விழி படம் எடுத்து நாசியின் சுவாசம் கொண்டு எண்ணத்தின் பிடர்தலில் (மெய் ஞானிகளின் வழியில்) அறிந்திடும் தொடரில் அறியும் செயலுக்கு நாம் வளர வேண்டும்.
ஞானத்தின் வளர்ப்பில் நல்லாக்கம் என்பது எது…?
1.எண்ணம்… சொல்… செயல்…! மூன்றிலும் நேர்கோடாகக் கடைப்பிடிக்கும் தத்துவத்திற்கு வர வேண்டும்.
2.தீவினையான எண்ணங்களை விடுத்துப் பரிசுத்தம் என்ற நிலையில் நல் வினைகளை வளர்க்கும்
3.திடமான – வைராக்கியச் சிந்தனை கொண்டிட்டால் அகத்தின் பொருளை நிச்சயம் அறியலாம்.
அகத்தினை அறிந்திடும் அருள் வழியில் தன்னுடைய சிந்தனையை வீரியமாக்கி…
1.நற்செயலுக்கு வழி அமைத்து…
2.அதைச் சொல்லால் வெளிப்படுத்தும் அன்பிலும்
3.அந்தச் சத்தியத்தைக் கடைப்பிடிக்கும் நடைமுறைப் பண்பிலும்
4.நிகழ்த்தும் செயலை எவன் ஒருவன் கைக் கொள்கின்றானோ
5.அவன் பரம்பொருள் என்ற சூட்சமத்தில் கலந்திடும் தகுதி பெறுகின்றான்.

தன்னைத் தான் அறிந்திடும் நிலையை மக்களுக்கு ஞானிகள் ஊட்டிய வழி முறை
புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் தன்னைக் காட்டிலும் வலுக் கொண்ட உணர்வுகளை நுகர்ந்து நுகர்ந்து நம்மை மனிதனாக உருவாக்கியது நம் உயிர்.
இதை உணர்த்துவதற்காகதான் சிவ ரூபத்தைக் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.
சிவனுக்குப் போட்டிருக்கும் ஆடைகளைப் பார்த்தால் யானைத் தொலி (தோல்) புலித் தொலி மான் தொலி என்று காட்டியிருப்பார்கள். நாம் அந்தந்தச் சரீரத்தை எல்லாம் பெற்றுத் தான் இந்த மனித உடலாக வந்தோம்.
சிவன் கையிலே திரிசுலம் இருக்கும்… அதிலே உடுக்கையும் இருக்கும்.
1.சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்பம் காந்தம் விஷம் என்ற இதனின் இயக்கத்தில் தான்
2.நாம் நுகர்ந்த உணர்வுகள் எது எது இணைகின்றதோ அது “ஒலியாகின்றது…” (திரிசூலத்தில் உடுக்கையை வைத்தது இதற்குத் தான்)
3.முதலில் மோதும் இசைகள் அதனுடன் ஒடுங்கி விடுகிறது
4.மீண்டும் மற்றொன்றின் ஒலிகள் இணைந்த பின் மறுபடியும் சுருதிகள் மாறுகின்றது.
5.சிவன் உலகை ஆட்டிப் படைக்கின்றான் என்று காட்டுகின்றார்கள்.
ஆக சிவ உருவத்தைக் கண்ணுற்றுப் பார்த்தாலே உண்மையின் இயக்கங்களை நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே இதைக் காட்டுகின்றார்கள்.
சிரசில் பட்டைகள் மூன்று இருக்கும். விபூதியால் பூசப்பட்டிருப்பினும் சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்பம் காந்தம் விஷம் இந்த மூன்றும்
1.தனக்குள் கவர்ந்து கொண்ட உணர்வின் தன்மையை
2.அது தனக்குள் அங்கீகரித்துக் கொள்கிறது… தன் நிலையை மாற்றிக் கொள்கிறது என்ற நிலையை
3.நாம் அறிவதற்காக இவ்வாறு வைத்துள்ளார்கள்.
சிவனின் சிரசில் கங்கையும்… சிவன் பாதி சக்தி பாதி என்றும் காட்டுகின்றனர். ஒவ்வொரு அணுவிலும் வெப்பம் கலந்தே இருக்கும். அந்த வெப்பத்தின் இயக்கத்தால் தான் அனைத்தும் இயங்குகிறது என்று பராசக்தியாகக் காட்டி “இந்த வெப்பம் சர்வத்தையும் உருவாக்கும்…” என்ற நிலையை இங்கே தெளிவாக்குகின்றார்கள்.
சிவன் உடல் முழுவதிலும் பாம்பைப் போட்டுக் காண்பித்துள்ளார்கள். ஜடா முடியிலும் இந்த விஷப் பாம்பு இருக்கும்.
1.ஒவ்வொரு அணுக்களிலும் உள்ள இந்த விஷமே
2.இயங்குவதற்கு மூல காரணம் என்ற நிலையைத் தெளிவாக்குகின்றனர்.
இப்படி ஒரு உருவத்தைக் காட்டி அருவ நிலையின் செயலாக்கமும்… சேர்ந்த பின் இந்த உருவத்தின் நிலைகள் எவ்வாறு…? (உருப் பெறுகிறது) என்று தெளிவாக்குகின்றது நம் வேதங்கள்.
வேதங்களின் மூலத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் ரிக் சாம அதர்வண யஜூர் என்று முழுமையாக யாம் (ஞானகுரு) சொன்ன முறைப்படி அறிந்து கொண்டால்
1.எப்படி எல்லாம் உருவாகி இன்று மனிதனாக வந்துள்ளோம் என்று தன்னை அறிந்திட முடியும்.
2.தன்னைத் தான் அறிந்தவன் (ஞானிகள்) வெளிப்படுத்திய உணர்வு தான்
3.சூட்சமத்தில் நடப்பதை உருவமாக எப்படி வருகிறது என்பதனை உருவத்தை அமைத்துத் தெளிவாக்கினார்கள் ஞானிகள்.
ஜடாமுடியில் கங்கை சிவன் பாதி சக்தி பாதி என்று உடலில் சரி பகுதி வைத்துள்ளார்கள்… அர்த்தநாரீஸ்வரர். சிரசிலே பிறைச் சந்திரன்.
காரணம் ஒரு பொருளுடன் ஒரு பொருள் இரண்டறக் கலந்து விட்டால் அதுவும் இதுவும் கலக்கப்படும் போது சரி பகுதியாக மாறுகின்றது. இதன் ஒளியும் மங்குகிறது… அதன் ஒளியும் மங்குகிறது.
இப்படி மாறுவதைக் காட்டுவதற்குத்தான் சிவனின் சிரசிலேயும் பிறைச் சந்திரனைப் போட்டுள்ளார்கள்.
இதை எல்லாம் ஞானிகள் தன் இன மக்களுக்குத் தன்னை அறிந்து செயல்படும் வல்லமை வர வேண்டும் என்பதற்குத் தான் அருவத்தை உருவமாக்கிக் காட்டினார்கள்.
1.நாம் மனிதனாக எப்படிப் பிறந்தோம்…?
2.அணுக்களின் செயலாக்கங்கள் எது…? என்ற நிலையைத் தான்
3.வேதங்களில் நான்கு மறைக்குள் உலகமே அடங்கியுள்ளது என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
குடும்பத்தில் எல்லோரும் நல்லது செய்து கொண்டு வருவோம். சகோதர்களுக்குள் எல்லோரும் ஒன்றுபட்டு வாழ்வோம்.
இருந்தாலும் சிறு பிழையாகி விட்டால்… “தொலைந்து போகிறவன்… இந்தக் குடும்பத்தையே தொலைத்துவிட்டு எல்லாவற்றையும் நாசமாக்கி விட்டான்…!” என்று எண்ணி வேதனைப்பட்டுக் கொண்டிருப்போம்.
ஒருவருக்கொருவர் வேதனைபட்டு நம் வியாபாரம் எல்லாம் மந்தமாகும். கடைசியில் இது தீய வினைகளாக வளர்ந்து ஒருவருக்கொருவர் குறை கூறும் உணர்வுகளாக வந்து விடும்.
ஒரு ஜவுளி வியாபாரம் செய்தாலும் அல்லது வேறு கடை வைத்தாலும் நண்பர்களிடம் பேசினாலும் நன் குறையான உணர்வு வந்து நம்மைக் காட்டிக் கொடுத்துக் கொண்டே இருக்கும்
வரும் வாடிக்கையாளரிடம் நாம் சரக்கை எடுத்துக் கொடுத்தாலும் நம்மை வெறுப்பாகப் பார்க்க வைக்கும். நம் சரக்கையும் மட்டமாகக் காட்டும். அப்படியே வாங்கிச் சென்றாலும் கூடக் குறை கூற வைக்கும். நம் உணர்வு அவர்களுக்குள் சென்று அங்கே குறைகளைக் கூற வைக்கும்.
அப்போது அந்த வேதனைகளை என்ன செய்வது…? அதை யார் நிறுத்துவது…?
1.அவன் அயோக்கியத்தனம் செய்கிறான்
2.இவன் அயோக்கியத்தனம் செய்கிறான்
3.வீட்டில் அயோக்கியத்தனம் செய்கின்றார்கள் என்று சொல்லி
4.கடைசியில் “எல்லோரையும் அயோக்கியர்கள்…!” என்று சொல்ல ஆரம்பித்துவிடுவோம்.
இந்த உணர்வை யார் பேசுவது…? நாம் எதை எண்ணுகின்றோமோ அதைத்தான் காக்கும்.
அதை மாற்ற வேண்டும் அல்லவா…! இந்த மாதிரிக் குறைகளை நீக்குவதற்குத்தான் அந்த ஞானிகள் அன்னை தந்தையரை ஒளிப்படுத்த வேண்டும் என்று சொல்வது.
அதாவது முதலில் அம்மா அப்பாவை உயர்த்த வேண்டும். எங்கள் அம்மா அப்பா மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும். அவர்கள் உடல் முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும். அவர்கள் வாழ்க்கையில் அவர் பார்ப்பதெல்லாம் நலமாக இருக்க வேண்டும்.
நம்மை வளர்த்து ஆளாக்குவதற்காக வேண்டி எத்தனையோ வேதனைகளை அனுபவித்த தாய் தந்தையரின் உயிராத்மாக்கள்
1.இருள் சூழ்ந்த நஞ்சின் தன்மையிலிருந்து மீண்டு
2.இன்னொரு (பிறவிக்கு) உடலுக்குள் செல்லாது மகரிஷிகளின் அருள் வட்டத்திற்குள் சென்று
3.மெய் ஒளி காணும் மெய்ச் சுடராக என்றும் நிலையான ஒளிச் சரீரம் பெறவேண்டும் என்று நாம் தியானிக்க வேண்டும்.
மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் தாய் தந்தையர் பெற்று அவர்கள் பிறவா நிலை பெறவேண்டும் என்று அனு தினமும் எண்ணுதல் வேண்டும்.
1.இப்படி நாம் பழகி நம் எண்ணத்தைக் கொண்டு போனால்
2.தாய் தந்தையர்கள் எப்படி நம்மைக் காப்பாற்றினார்களோ
3.அதே போல நாம் பாய்ச்சும் மகரிஷிகளின் உணர்வுகள்
4.அவர்கள் நமக்காக வேதனை பட்ட நஞ்சான உணர்வுகளை ஒளியாக மாற்றச் செய்யும்.
அப்பொழுது மகரிஷிகளின் அருள் சக்தியால் அவர்கள் முதலில் உயர்ந்த நிலைகள் பெறுகின்றார்கள். அவர்கள் அருள் துணை கொண்டு நாமும் என்றுமே நிலைத்த வாழ்க்கையான அழியா ஒளிச் சரீரம் பெற முடியும்.


காணிக்கை செலுத்த வேண்டிய முறை
1.நமது உயிரான ஈசனுக்குச் சேவை செய்ய வேண்டும் என்றால்
2.நம் உடலான சிவனுக்குச் சேவை செய்ய வேண்டும் என்றால்
3.நம் கண்ணான கண்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்றால்
4.பல கோடிச் சரீரங்களில் சேர்த்துக் கொண்ட வினைக்கு நாயகனாக நம்மை உருவாக்கிய அந்த வினைகளை நாம் போற்றித் துதிக்க வேண்டும் என்றால்
5.நம் ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்த வேண்டும்.
நமக்குள் தெளிந்த மனதாக “கார்த்திகேயா…” என்ற அறிந்திடும் அறிவு கொண்ட இந்த அறிவின் துணை கொண்டு அதைச் சீராகப் பயன்படுத்தும் நிலைக்குத் தான் இதை உபதேசிக்கின்றோம்.
உபதேசத்தின் வாயிலாக மகரிஷிகளின் அருள் உணர்வுகளை உங்களுக்குள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவு செய்து கொள்ளுங்கள்.
1.பின் அந்த ஊழ்வினை என்ற வித்தினை நீங்கள் நினைவு கொண்டு மதியை (மகரிஷிகளின் அருளை) வளர்த்து
2.மதி கொண்டு விதியை வென்று அருள் ஒளிச் சுடராக என்றும் நிலை கொண்டு வாழ்ந்திடும் நிலையாக வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த வாழ்க்கையில் நடக்கும் அன்றாட நிகழ்ச்சிகளில் நாம் குறைகளையோ தவறுகளையோ கோபத்தையோ வேதனையையோ வாழ்க்கை என்ற நிலைக்கு நுகர்ந்தறிய உதவினாலும்
1.அடுத்த கணம் அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை நீங்கள் ஏங்கிப் பெற்று
2.உங்கள் உயிரான ஈசனுக்கு அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளையே காணிக்கையாகச் செலுத்துங்கள்.
3.உடலான சிவனுக்கும் அந்த அருள் சக்தியான அமுதை ஊட்டுங்கள்.
4.உங்களுக்குள் சக்தியாக இயக்கும் ஒவ்வொரு ஞான சக்திகளுக்கும்
5.அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகளை “ஞான விருந்தாக…” கொடுங்கள்.
இப்படி ஒவ்வொரு நிமிடமும் இந்த வாழ்க்கையில் ஆத்ம சுத்தி என்ற நிலைகளை எடுத்துத் தீமைகள் வருவதை எல்லாம் சுத்திகரித்துக் கொண்டால்
1.உங்கள் உயிரான ஈசனுக்கு உதவி செய்கின்றீர்கள்
2.உடலான சிவனுக்கு உதவி செய்கின்றீர்கள்
3.கார்த்திகேயா என்ற அறிவின் தன்மை மங்காது ஒளியின் சுடராக மாற்றிட உதவி செய்கின்றீர்கள்.
முருகா என்றால் மாற்றி அமைக்கும் சக்தி… ஆக நாம் நுகர்வது அனைத்தையும் அருள் ஒளியின் சுடராக நாம் மாற்றிடல் வேண்டும்.
1.இப்படிப்பட்ட உருவாக்கும் திறன் நம்மிடம் இருந்தும்
2.அதைப் பயன்படுத்தாது விட்டுவிடாதீர்கள்…!”
ஒவ்வொரு நாளும் இங்கே உபதேசிக்கும் இந்த உணர்வின் துணை கொண்டு இந்த வாழ்க்கையில் எதைப் பார்த்தாலும் தீமைகளை நுகர்ந்தறிந்தால் அது வளராது அடுத்த கணம் ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள்.
அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்றும் எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெறவேண்டும் என்றும் அருள் ஒளி என்னிலே வளர வேண்டும் என்றும் இதை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்.
நோய் உள்ளவர்களை நாம் சந்தித்தாலும்… மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெறுவீர்கள்… உங்கள் நோய் அகன்றுவிடும்… மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற முயற்சி எடுத்து ஏங்குங்கள்… அது உங்களைக் காக்கும்… உங்கள் உடல் நலம் பெறும்…! என்று இந்த வாக்கினை அவருக்குள் பதிவாக்குங்கள்.
அல்லது நமக்கே ஒரு நோய் வந்தாலும் இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்போர் அனைவரும்
1.எந்த நோய் நம் உடலை வாடச் செய்கின்றதோ
2.அந்த நோய் உடலுக்குள் வளர்ச்சியாகாது தடைப்படுத்த
3.அந்த நோயே நமக்கு அருள் ஞானத்தை ஊட்டும் நிலையாக அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துங்கள்.
இந்தத் தியானத்தின் பலனை ஒவ்வொரு நிமிடமும் நீங்கள் பெற முடியும்.

மார்க்கண்டேய தத்துவத்தைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது
மனிதனின் உடலில் உண்ணும் உணவிற்கொப்ப உடலில் இரத்தம் எப்படி மாறுபாடு கொள்கின்றதோ அதே போன்று நாம் சுவாசிக்கும் உணர்விற்கொப்பவும் உயிரணுக்களின் தோற்றம் உடல் தன்மையில் வளர்கின்றது.
இன்று விஞ்ஞான ரூபத்திலேயே மருத்துவரின் ஆராய்ச்சியில் உணவு உட்கொள்வதற்கு முன்னும்… பின்னும்… மற்றும் இனிப்புப் பதார்த்தங்களைத் தந்தும்.. (SUGAR LEVEL IN BLOOD) ஆராய்ச்சிகள் நடத்துகின்றார்கள்.
அதற்கொத்த விகிதத்தில் இரத்த அணுக்களின் மாற்றத்தைக் காணுகின்றார்கள், அதைப் போன்றே
1.உணர்வின் நிலைக்கொப்ப எடுக்கப்படும் எண்ணத்தால்
2.உயிரணுக்களின் ஆத்ம பதிப்பு உடனே இரத்த அணுக்களில் சேர்வதைக் காட்டிலும்
3.ஆத்மாவின் பதிவு எண்ணத்தின் மோதலாக
4.எண்ணத்தின் செயல்பாடு உணர்வைத் தூண்டக் கூடிய நிலையில்
5.உயிரணுக்களின் விகிதத் தன்மை வீரியம் கொள்கின்றது.
புரியாத புதிராகப் படிப்பவர்களுக்கு இது தோன்றும்…!
உணவை உண்ணும் பொழுது உடலுக்குள் இரத்தத்தில் உடனே அது அணுவாகச் செயல் கொள்கிறது. அதுவே “எண்ணத்தில் எடுக்கும் எதுவாகிலும்…!” நம் ஆத்மாவில் பதிவாகிறது.
பதிவான பின் ஆத்மாவின் உந்துதலினால் உணர்வில் மோதுண்டு ஒன்றையே மீண்டும் மீண்டும் எண்ணத்தில் கொண்டு உடலுக்குள் இருக்கும் (ஜீவ) உயிரணுக்களிலும் அச்சத்துக் கூடக்கூடிய சந்தர்ப்பத்தை எண்ணத்தால் எடுக்கும் உராய்வினால் ஏற்படுத்துகின்றோம்.
அப்படி ஏற்படுத்துவதினால் வாழ்க்கையில் மனித ஆற்றலின் செயல் யாவையும் “எண்ணமே தான் கடவுள்..!” என்ற தத்துவத்தில் எண்ணத்திற்கொப்பத்தான் செயல் திறமையின் ஆற்றலின் பரிமாண சக்தியாக வளர்கின்றது.
1.இந்தப் பிரபஞ்சத்தின் உண்மையை உணர்ந்த ஞான ரிஷிகள் பிருகு முனிவரும் பிருகண்ட ரிஷியும்
2.என்றும் பதினாறு என்ற மார்க்கண்டேயத் தத்துவமாக இந்தப் பூவுலகத்திற்குத் தத்துவரீதியாக உணர்த்தினார்கள்
3.அந்த உண்மைகள் யாவையும் ஆதிசங்கரர் காலத்திற்குப் பிறகு வேதங்களாகப் பிரிக்கப்பட்டு விட்டது
என்றும் பதினாறு என்ற நிலையில் அழியாததாக “உயர்வெய்தும் உயிர் ஆத்மாவின் உயர்வை…”
1.இன்றைய மனித ஆற்றலின் சிந்தனை எல்லாம்
2.சரீர சுகத்தின் செருக்கில்
3.விஞ்ஞானத்தின் இயந்திரக் கதிக்கு அடிமைப்பட்டு விட்டது.
எண்ணத்தைக் கொண்டு எதையும் சிந்தனையில் சீர்படுத்தி உணரக்கூடிய தன்மை ஒவ்வொரு ஜீவ ஆத்மாவுக்கும் உண்டு. செலுத்தும் பக்குவத்தில் தனக்குள் இருக்கும் உயிரான ஈசனைச் சூட்சமத்தின் துணை கொண்டு ரிஷி சக்திகளின் சக்தியைக் காண வேண்டும்.
விதியின் கதிப்படி நடப்பதை எல்லாம் மதி கொண்டு மாற்றியமைப்பது போல் ஒவ்வொரு மனித ஆத்மாவில் சரீர விதியின் கதியை மாற்றியமைக்கக்கூடிய செயலை “நான்” என்ற உண்மை உணர்தலில் பெற முடியும்.
விஞ்ஞானத்தில் எப்படி இயற்கை வளங்களைச் செயற்கை முறையால் மாற்றியமைத்து பல உணமைகளை மாற்றும் நிலைப்படுத்துகின்றனரோ அது போன்ற நிலையை மனித தத்துவத்திலும் மெய் ஞானத் தத்துவத்தால் மாற்ற முடியும்.
1.சரீர எண்ண அறிவின் ஆற்றல் கொண்ட மனிதப் பிறப்பின் தொடரில்
2.உயிரணுவின் தோற்றத்தின் நட்சத்திர ஒளி அலை அமிலத்தின் கூறு கொண்டு
3.பிறப்பின் தொடரில் வாழும் விதியின் கதியின் வாழ்க்கையில்
4.பிறப்பின் தொடரில் வாழும் முறையில் அந்தப் பிறப்பின் முடிவும்
5.நட்சத்திரத் தொடர் கொண்ட பூமியின் கதிக்கு
6.பூமி தொடர்பு கொள்ளக்கூடிய நட்சத்திர ஒளிகளின் செயல் தன்மை
7.ஒவ்வொரு இயற்கையின் செயலிலும் நடக்கும் கதி கொண்டு இயற்கையின் சுழற்சியுடன் சுழல்கின்றது.
அதாவது உயிர் தோன்றி பல பிறவிகள் எடுத்து மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து பிறந்து இறந்து சுழலும் நிலையின் இயல்பு இதுவே.
ஆனால் மதி கொண்ட ஞான ஒளி எடுக்கும் ஆத்ம ஞானிகளின் செயல் எப்படிப்பட்டது…?
உயிர் தோன்றிய அந்த (தன்னுடைய) நட்சத்திரத் தொடரையே தன் எண்ணத்தின் அறிவின் ஆற்றலைக் கொண்டு சரீரத்தில் இயங்கும் உயிராத்மாவின் ஒளித் தன்மையை விழிப்புறச் செய்கின்றார்கள். எப்படி…?
1.மெய் ஞான ஒளி அறிவின் வேரை வளர்க்கக்கூடிய
2.வான் கோள்களின் விண்மீன்களின் தொடர்பு படுத்தும் ஒளிச் சக்தியால்
3.ஆத்மாவின் விழிப்பால் – பேரண்டத்தின் உண்மையின் வளர்ப்பு கொண்ட விண்மீன்களின் விழிப்பு நிலையை
4.தன் சிந்தனையின் அறிவின் ஆற்றலைக் கொண்டு பெற்று
5.என்றும் பதினாறாக ஒளிரும் நட்சத்திரமாக விண்ணிலே பிரகாசிக்கச் செய்கின்றார்கள்.
மனிதனின் முதிர்வு நிலை அதுவே…!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
இன்று பெரும்பகுதியானவர்கள் எதை எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்…?
சாமி (ஞானகுரு) வந்தார்.., சாமியிடம் ஆசீர்வாதம் கேட்டேன். என்னைக் காப்பாற்றுகிறேன் என்று சொன்னார். அப்படி என்றால் “அவர் தானே காப்பாற்ற வேண்டும்” என்று சாமியைத்தான் எண்ணுகின்றார்களே தவிர
1.உங்கள் கஷ்டமெல்லாம் நீங்கிவிடும் என்று சொல்கிறேன்… அதை மட்டும் எண்ணுவதில்லை…!
2.கஷ்டத்தை மட்டும் இறுக்கிப் பிடித்துக் கொள்கின்றார்கள்.
சாமி சொன்ன வழியில் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுங்கள். உங்கள் உடலுக்குள் சென்றவுடன் நோயைப் பிளந்துவிடும். உங்களுக்குள் அந்த நல்லது நடக்கும். ஆகையினால் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறுங்கள் என்று சொல்கிறேன்.
ஆனால், அதை யாரும் எண்ணுவதில்லை. இங்கே வந்தால் உடனே எனக்கு அந்த “விபூதி” வேண்டும். “விபூதி இருந்தால் போதும்…” சாமி தான் காப்பாற்றுவார் இந்த எண்ணம் தான் வருகின்றது.
1.சாமி சொன்னவைகளை நினைத்து
2.அந்த அருள் சக்திகளை எடுத்தால்
3.”அந்த எண்ணம்” நம்மைக் காக்கும் என்ற எண்ணத்திற்கே வருவதில்லை.
4.விபூதி கொடுத்தால் போதும் என்ற எண்ணம் தான் வருகின்றது.
ஆனால் சாமி சொன்னதைப் பதிவு செய்வோம். நமக்கு முன் உள்ள இந்தக் காற்று மண்டலத்தில் மறைந்திருக்கும் அந்த அருள் சக்திகளை எடுப்போம். நல்லதாவோம் என்ற எண்ணம் வர மாட்டேன் என்கிறது.
ஆசீர்வாதம் வாங்கிச் சென்றவுடன் சிறிது நாளைக்குப் பார்ப்பது. அது கிடைக்கவில்லை என்றால் அப்புறம் என்ன சொல்வார்கள்…!
என்ன… இந்தச் சாமி…? என்ற நிலைக்குத்தான் போவார்கள். இதைத்தான் மீண்டும் மீண்டும் கற்றுக் கொண்டு வருகின்றோமே தவிர வேறு ஒன்றும் இல்லை.
அதே மாதிரி கோவிலுக்குச் சென்று…
1.அவனுக்கு இரண்டு தேங்காய் பழத்தை வைத்து உடைத்தோம் என்றால் சரியாகும்…! என்ற நிலையில் செல்வார்கள்.
2.விரதம் இருந்து இது எல்லாம் செய்த பின் “நினைத்தது நடக்கவில்லை” என்றால் என்ன சாமி இது…,?
3.எத்தனை நாள் தான் இந்தச் சாமி என்னைச் சோதிக்கிறது…? என்று பார்க்கிறேன்…!
4.நாம் எத்தனை நாள் விரதமிருந்தேன்… எல்லாம் செய்தேன்…! என்பார்கள்.
முதலில் சாமி கடவுள் என்று கும்பிடுவார்கள். கடைசியில் அதைக் “கல்” என்றே நினைக்க ஆரம்பித்துவிடுவார்கள். கோவிலில் அப்படித்தான் நினைக்கின்றோம்.
“அந்தச் சிலை தான் கடவுள்…” என்றும் தெய்வம்…! என்றும் எண்ணிக் கொண்டிருக்கின்றோமே தவிர அந்த மெய் ஞானிகள் காட்டிய நிலைகளை எண்ணி எடுப்பார் யாரும் இல்லை.
அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் ஒவ்வொரு நிலைகளிலும் நம் வாழ்க்கையில் நல்லதைத் திரை மறைக்கும் “சித்திரை” தீமைகளை அகற்றிப் பழகுதல் வேண்டும்.
பிறர்படும் வேதனைகளைக் கேட்கின்றோம். “நல்ல உணர்வை அது மறைத்து விடுகின்றது…” அந்தத் திரையை நீக்க மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணி இதைப் பிளத்தல் வேண்டும்.
ஒரு அணுவைப் பிளந்து அதை ஒருக்கிணைந்து அணு குண்டாகச் செய்து அதை வெடிக்கச் செய்கின்றனர். கல்லுக்குள்ளும் இரும்புக்குள்ளும் கதிரியக்கம் உண்டு.
தன் இனத்தைச் சேர்த்துச் சேர்த்து அந்த உணர்வின் தன்மை பரவப்படும் பொழுது ஒரு நொடிக்குள் இரும்பானாலும் கரைந்து காணாமல் போய்விடும். கல்லாக இருந்தாலும் உருகிக் காணாமல் போய்விடும்… அதே கதிரியக்கம் தான்.
இதைப் போன்று தான் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைச் சிறுகச் சிறுக நமக்குள் சேர்த்து அதனை நமக்குள் சேமிக்க வேண்டும்.
1.பின் உணர்வால் வளர்ந்த இந்த உடலை
2.இந்த உடல் பெறும் உணர்வைக் காணாது செய்துவிடும்.
3.உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நிலைத்து இருக்கும்.


பிறப்பின் பலனை அடைவது உயிரா…? அல்லது உடலா…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது
நான் என்பது யார்…? உயிரா.. ஆத்மாவா… இந்த உடலா..?
சரீரம் என்பது அழியக்கூடியது தான். ஆனால் இந்தச் சரீரத்தின் உண்மையின் இயக்கத்தில் உண்மையில் எண்ணம் என்பது எது…?
1.ஒரு பம்பரம் சுழல்கிறது என்றால் எந்த வேகத்தை அதற்குத் தருகின்றோமோ அது வரைக்கும் தான் அதனுடைய சுழற்சி இருக்கும். பின் நின்றுவிடும்
2.குழந்தையை ஆட்டுவிக்கும் ஒரு தூளியும் நாம் ஆட்டுவிக்கும் வேகத்திற்கொப்பத்தான் ஆடுகின்றது. பின் ஆட்டம் நின்றுவிடும்.
செயற்கையில் சுழலும் பொருள்கள் (ஜீவன் இல்லாத) அனைத்துமே நாம் செய்விக்கும் திறனைப் பொருத்து அதன் ஓட்டத்தின் கதியை அடைகின்றது. இயந்திரங்களும் அதனுடைய செயல்பாட்டின் நிலைக்கொப்ப ஓடுகின்றது.
ஆனால் கோள்களின் ஓட்டம் இயற்கையின் கதி விகிதத்தைக் கொண்டு ஜீவனுடன் ஓடிக் கொண்டே உள்ளது. இருந்தாலும் மனிதனின் செயல் நிலையில் உண்மையின் தத்துவ உட்பொருளான ”நானின்…” இயக்கத்தை நாம் அறிதல் வேண்டும்.
ஏனென்றால்
1.சுவாசம் எடுத்து விடுவதும்…
2.கண் இமை மூடித் திறப்பதும்…
3.செவி ஒலி கேட்பதும்…
4.சுவை உமிழ் நீர் ஊருவதும்… இவை எல்லாமே
5.நம் எண்ணத்தைச் செலுத்தாமலே தானே நடக்கின்றது.
கோள்கள் இயற்கையின் கதியில் எப்படி அது இயற்கையின் மாற்றத்திற்கொப்ப எல்லாம் செயல்பட்டு வளர்ந்தே ஜீவனுடன் எண்ணம் இல்லாமல் ஓடிக் கொண்டுள்ளதோ அதைப் போன்று தான்
1.நம் சரீரத்தின் இயக்கத்தின் கதியும் எண்ணத்தைச் செலுத்தாமலேயே
2.பசி… தூக்கம்… மற்றும் உடல் உபாதைகளில் ஏற்படும் வேதனைகளும்…
3.தன் தன் கதியில் நாம் எண்ணத்தைச் செலுத்தாமலே ஓடிக் கொண்டுள்ளது.
4.பசியோ தூக்கமோ உடல் வலியோ நாம் எண்ணி வருவதில்லை…!
செயல்படும் நிலையில் ஏற்படும் மாற்றத்தால் அந்த உந்துதல் ஏற்படக் கூடிய தருணத்தில்தான்
1.எண்ணத்தில் அதை அறிந்து
2.சாப்பிடவோ… தூங்கவோ… வலியை நீக்க வேண்டும் என்றோ…
3.எண்ணத்தை அதற்காகச் செயல்படுத்துகின்றது உடல்.
கோள்களுக்கு எண்ணம் இல்லாததினால் அது சந்திக்கும் மற்ற கோள்களின் அமிலத் தொடர்பைக் கொண்டு அதன் ஜீவ ஓட்டம் தன் இச்சையில் ஓடிக் கொண்டுள்ளது.
மனித உடலின் இயற்கையின் செயல்படும் கதியில் ஏற்படக்கூடிய மாற்றத்திற்கு எண்ணத்தைக் கொண்டு பசிக்கு உணவையும்… சோர்வுக்கு உறக்கத்தையும்… செலுத்தக் கூடிய எல்லாவற்றிற்கும் எண்ணத்தைச் செலுத்துகின்றோம்.
அப்பொழுது… இந்த “எண்ணம் தான்…” நானா…?
விதை முளைத்து மரமாகி பலன் தந்து பல நாள் வாழும் மரத்திற்கு எண்ணம் இல்லாவிட்டாலும் உணர்வின் செயல் தன்மை உள்ள மரத்தின் உயிர் தன்மை வலுவாகி வளர்த்துக் கொள்கிறது.
தாவரங்கள் எண்ணமில்லாத இயற்கையின் வலுவானாலும் அதற்கு அடுத்த நிலை என்ற உயர் நிலைக்கு உயிர்ப்பிக்கும் அந்தத் தாவரங்களும் செல்வதில்லை.
ஆனால் மனிதச் செயலுக்கோ தன் எண்ணத்தைக் கொண்டு தெய்வ குணங்களான உயர் தன்மைகளை வளர்த்திட அறு குணங்களை உணரக்கூடிய எண்ணத்தின் பால் வரையறுக்கப்பட்ட குணச் சிறப்பின் விதிக்கொப்ப
1.மனிதனிடம் செயலாகும் எண்ணத்தின் கதி கொண்டே
2.நான் என்பது யார்..? என்ற எண்ணத்தை ஊன்றிப் பார்த்தோமானால்
3.மனித எண்ணத்தில் ஓடக்கூடிய பல குணங்களில்
4.பொறுக்கி எடுத்த நற்குணம் ஆறு… எதிர் நிலையான தீய குணங்கள் ஆறு என்ற அடிப்படையில்
5.மனிதனுக்குள் ஓடக்கூடிய பல ஆயிரக்கணக்கான எண்ண குண நலன்கள்
6.பல விந்தையின் விபரீத நிலையிலும் செயல் கொள்கின்றதப்பா…!
அவனவன் எடுத்துக் கொண்ட எண்ணத்தின் தன்மைக்கொப்ப மெய் ஞானியாகவும் ஆகின்றான்… விஞ்ஞானியாகவும் ஆகின்றான்… அல்லது அஞ்ஞானியாகவும் ஆகின்றான்…!
மற்ற எந்த உயிரினங்களுக்கும் இல்லாத சிறப்பாகத் தன் எண்ணத்தால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் எடுத்துக் கொண்ட நிலைக்கொப்ப மருத்துவம் பொறியியல் தத்துவம் கலைகள் இசை விவசாயம் என்று செயல்படுத்துகிறார்கள் அல்லவா…!
ஆகவே எண்ணத்தின் மூலமே உயிரின் பரிமாணத்தின் பலனாக மனித ஆத்மாவின் வலுவிற்கு வழி தேடும்
1.“நான்…!” என்னும் பலனை
2.நாம் அறிதல் வேண்டும்.

நேரத்தையும்… காலத்தையும்… (ஜாதகத்தை) மனிதன் மாற்ற முடியும் என்பதை விஞ்ஞானம் நிரூபிக்கின்றது
கர்ப்பிணியாகி தலைப் பிரசவம் என்றாலே மறு பிறப்பு என்று சொல்வார்கள். ஒரு அதிர்ச்சி நிலையானால் பிறக்கப் போகும் குழந்தை தலை கீழாக மாறாது.
குழந்தையின் சிறு நீர் எல்லாம் பனி நீராக மாறி இருக்கும். அப்பொழுது அந்தப் பருவம் வந்து பனிக் குடம் உடைந்த பின் குழந்தை முழித்துக் கொள்ளும். உணர்வின் துடிப்பு வரப்படும் பொழுது காற்றின் தன்மை வாயுவாக உற்பத்தியாகி வெளித் தள்ளும் நிலை வருகிறது.
நெகடிவ்… பாசிடிவ்…! என்ற நிலை வரும் பொழுது தாயின் எலும்பின் தன்மை இலகுவாக்கிக் குழந்தையை வெளிக் கொண்டு வரும் தன்மை வருகிறது.
ஆனால் எலும்பின் தன்மை வலுவாகி விட்டால் குழந்தை சுகப்பிரசவம் ஆவதில்லை.
குழந்தை வெளியில் வர முடியவில்லை என்றால் அக்காலங்களில் மாம்பழத்தில் கொட்டையை நசுக்கி எடுக்கிற மாதிரி தாயின் வயிற்றை நசுக்கி முயற்சி செய்து எடுத்துப் பார்ப்பார்கள். குருநாதர் இதை எல்லாம் காட்டுகின்றார்.
1.அன்றைய வைத்திய முறைக்கும்
2.இன்றைய நவீன விஞ்ஞான மருத்துவ முறைக்கும் உண்டான வித்தியாச நிலைகளைக் காட்டுகின்றார்.
இன்றைக்கும் ஒரு சில நிலைகளில் அக்கால வழக்கத்தைப் பின்பற்றுகின்றார்கள். அப்பொழுது கர்ப்பிணியான அந்தத் தாய் எத்தனை வேதனைப்படுகின்றது என்று பார்க்கலாம்…! ஆனால் குழந்தை பிறந்த பின் தாய் அதைக் கொஞ்சிக் குலாவுகிறது… மகிழ்ச்சி அடைகிறது.
சுகப்பிரசவம் அடையவில்லை என்றால் இன்றைய நவீன முறையில் ஆபரேஷன் செய்து குழந்தையை வெளியில் எடுக்கின்றார்கள்.
சாதாரணமாக உடலில் அடிபட்டால் காயமாகிறது… இரத்தம் கொட்டுகிறது. அது போல் கர்ப்பிணியின் உடலில் ஆபரேசன் செய்யும் போது இரத்தம் வெளியேறாதபடி தடைப்படுத்துகின்றனர்.
குழந்தையை எடுத்த பிற்பாடு அறுத்த தசைகளை இணைப்பு கொடுத்து இஞ்ஜெக்சன் செய்து ரொம்பச் சீக்கிரமே அதை ஒட்ட வைத்து விடுகின்றனர். குழந்தையும் பாதுகாப்பாக எடுத்துக் கொடுக்கின்றனர்.
1.ஆனாலும் இன்று ஜாதகம் பார்த்துக் குழந்தையை எடுக்கும் பழக்கம் கூட வந்து விட்டது.
2.பிறக்கும் குழந்தைகள் இன்ன நேரத்தில் பிறந்தால் ஜாதகப் பிரகாரம் தோஷம் இருக்கிறது என்று சொல்கிறார்கள்.
3.அதற்காக வேண்டி பண வசதி உள்ள வீடுகளில் எல்லாம் இந்த நேரம் நல்ல நேரமாக இருக்கிறது என்று
4.அதற்கு முன்னாடியே எடுத்து விடுகின்றார்கள்.
ஏனென்றால் மூல நட்சத்திரத்தில் பிறந்தால் அது போன வீடுகள் எல்லாம் தோஷமாகப் போய்விடும் என்று சொல்லி அந்த மூல நட்சத்திர நேரம் வருவதற்கு முன்னாடியே ஆபரேசன் செய்து குழந்தையை எடுத்து விடுகின்றார்கள்.
டாக்டரும் கூடச் சொல்லி விடுகிறார்கள். ஏனென்றால் ஒரு சிசேரியன் செய்தால் இவ்வளவு காசு வருகிறது என்று கணக்குப் பார்த்து படித்துக் கொண்டு வந்த டாக்டர்களும் இப்படிச் செயல்படுத்துகின்றனர்.
அதே போல் சில குடும்பங்களில் நாள் நட்சத்திரங்களைப் பார்த்து எங்களுக்கு ஞானக் குழந்தையாக வர வேண்டும் என்று அந்தக் குறித்த நேரத்தைச் சொல்லி ஆபரேசன் செய்து குழந்தையை எடுக்கின்றார்கள்.
1.ஆனால் இவர்கள் எப்படி அவசரப்பட்டு அந்தக் குழந்தையை எடுத்தார்களோ
2.அந்தக் குழந்தை உணர்வும் இவர்களின் எண்ணங்களும் ஒன்றான நிலையில்
3.குழந்தை பிறந்த பிற்பாடு எந்தக் காரியத்தையும் அவசரப்பட்டுச் செயல்படுத்துவார்கள்.
4.அந்தக் குழந்தையும் அதே மாதிரித்தான் வரும்.
ஏனென்றால் இந்த உணர்வு எதுவோ அந்தக் கருவில் வளரும் உணர்வுகள் மேக்னட் இதனுடைய உணர்வுகளை அது கவரப்படும்.
பெரும்பகுதியான குடும்பங்களில் குழந்தை பிறப்பே ஆபரேசன் செய்து தான் எடுக்கின்றார்கள். ஆனால் ஒரு சிலருக்கு ரொம்ப நேரம் ஆனது என்றால் குழந்தைக்கு மூச்சுத் திணறல் வந்தது என்றால் குழந்தையைக் காப்பாற்றத் துடிப்பின் தன்மை குறையப்படும் பொழுது அடுத்த கணமே ஆபரேசன் செய்து குழந்தையைக் காப்பாற்றுகின்றார்கள்… தாயையும் காப்பாற்றுகின்றார்கள்.
இத்தகைய விஞ்ஞான உலகில் இருக்கும் போது சாமியாரையும் ஜோதிடத்தையும் பார்த்து… அவன் கொடுக்கும் சக்கரத்தையும் மந்திரத்தையும் வைத்துக் காப்பாற்றலாம்…! என்று சொன்னால் எப்படி இருக்கும்…?
நல்ல மனம் கொண்டு ஒரு வேதனைப்படுவோர் உணர்வை நுகர்ந்தால் நம் மனதும் சோர்வடைகிறது. இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் விடுபட வேண்டும்.
1.ஆகவே இயற்கையை வென்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வை நமக்குள் சேர்த்துப் பழக வேண்டும்
2.தீமை என்ற உணர்வை மாற்றி தீமையை நீக்கிய அருள் உணர்வை நமக்குள் எடுத்து வளர்க்க வேண்டும்.
நான் (ஞானகுரு) படிக்காதவன் தான்…! அந்த இயற்கையின் உண்மை நிலைகளைப் பார்க்க முடிகிறது. ஸ்கேன் வைத்துப் பார்ப்பது போல் நானும் பார்க்கின்றேன்.
ஆரம்பத்தில் எல்லாம்… ஸ்கேனில் ஓடுவது போல் மற்றவர்களும் கண் கொண்டு பாருங்கள்… எப்படி எல்லாம் இயங்குகிறது…? என்று பார்க்கும்படி செய்தேன். ஏனென்றால் நான் காணுவது போல் “பிறரும் பார்க்க முடியும்…” என்று தெரிவதற்காகக் காண்பித்தேன்.
பார்த்துச் சொல்லும்படி சொன்னவுடன்… அதை எடுத்துத் தவறான வழிகளில் தான் பயன்படுத்தத் தொடங்கினார்கள். பருவம் இல்லாதபடி பிறருக்குக் கொடுத்தால் தீமையின் விளைவே அவர்களுக்குள் விளைகிறது.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
என்னமோ… சாமி (ஞானகுரு) லேசாகச் சொல்கிறார்… என்று நீங்கள் எண்ண வேண்டாம்.
1.குண்டலினியைத் தட்டி எழுப்பி…
2.மண்டலத்தையெல்லாம் பார்க்க வேண்டும் என்று சொன்னார்கள்…,
3.தொட்டுக் காண்பித்தார்கள்… பொட்டிலே வைத்துக் காண்பித்தார்கள்…,
4.ஐயோ.., “இவர் ஒன்றுமே அப்படிச் செய்யவில்லையே…” என்று சொல்வதற்கு இல்லை.
உங்களுக்குள் அருள் ஞானிகளின் உணர்வை “அந்த உணர்வின் இயக்கச்சக்தியாக மாற்றத்தான்” என்னால் என் குரு காட்டிய நிலையில் முடியும்.
தொட்டுக் காட்டியோ எல்லை அறியாது எல்லை இல்லாத நிலைகள் போகும் மார்க்கங்களையோ உங்களுக்குள் சொல்லவில்லை.
உதாரணமாக சிறு குழந்தையாக இருந்தாலும் மகரிஷிகளின் அருள் சக்திகளை நிச்சயம் விளைய வைக்க முடியும்.
உங்களுக்குள் அருள் ஞானியின் உணர்வை ஆழப் பதியச் செய்து அதனின் அருள் துணை கொண்டு அனைவரும் ஏங்கி அந்த உணர்வின் சத்தைக் கவரும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்துகின்றோம்.
1.ஆழ் சக்தியுடைய அந்த மகரிஷிகளின் உணர்வுகள்
2.எட்டாத தூரத்தில் இருக்கும் அவர்கள் உணர்வுடன்
3.உங்களை ஒன்றச் செய்து கொண்டிருக்கின்றோம்.
அவர்களுடன் ஒன்றும் நிலை வரும் பொழுது நம் ஆன்மாவில் கலந்த தீமைகளைப் பிளந்து தீமையைப் பிளந்திடும் உணர்வாக அது விளையச் செய்யும். நமக்குள் அதை வலுப்பெறச் செய்யும்.
இந்த வலுவின் துணை கொண்டு தான் உடலை விட்டு அகன்று சென்ற நம் மூதாதையர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கச் செய்ய முடியும்.
அவர்கள் முன் சென்றால் இன்னோரு உடல் பெறும் உணர்வுகள் அங்கே கருக்கப்படுகின்றது, கருகியபின் அது ஒளியின் உணர்வாக சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து அழியா ஒளியின் சரீரம் பெறுகின்றது.


வினை வைத்தவன் (விதைத்தவன்) வினை அறுப்பான் – ஈஸ்வரபட்டர்
1.பல பல பிறவிகளில் நாம் செய்த நிலைகள் அனைத்தும் செய்வினையாகி (PAST)
2.அதனுடைய செயல் தொடராக இந்தப் பிறவியில் செய்கின்ற (தற் சமயம் நிகழ்ந்து கொண்டிருக்கும் – PRESENT) வினைப் பயனாகி
3.மீண்டும் செய்த வினையாகின்ற எண்ணத்தின் வழிச் செயலுக்கு வித்தாகும் (FUTURE) “இவனே…!” (நாம்)
4.ஏற்கனவே செய்யப்பட்ட முன் ஜென்ம வினையான உரத்தை ஈர்த்து
5.வினையினது இரு வழிச் செயலான நல்வினை தீவினை இரண்டின் பயன் வீரியப் பயனுக்கு
6.அந்தத் தொடரில் இவனும் உட்பட்டு இரண்டின் பலன்களையும் அனுபவிக்கும் நிலை வருகின்றது.
தீமையோ நன்மையோ எந்த வினையின் வீரியம் அதிகமாகின்றதோ அதற்குள் மற்றொன்று உள்ளடங்கி விடுகின்றது. அப்படி நடக்கும் செயலைத் “தன் விதி”(தலைவிதி) என்னும் செயல்பாடாக
1.செய்த வினையின் வீட்டில் (முன் பிறவிப் பயனால் உருவான உடலில்)
2.செய்யப்பட்ட வினை வந்து இருந்து தன் அரசைத் தான் ஓச்சி
3.தனது செயலுக்கு இவனின் எண்ண உந்துதல்களுக்குத் துணையாகி
4.இன்ப துன்பங்களை ஒவ்வொரு நாளும் அனுபவிக்கச் செய்கின்றது.
மூலமும் இவனே ஆகின்றான்…! மூலக் காரணமும் இவனே ஆகின்றான்…! என்னும் தத்துவக் கோட்பாட்டின் தொடரில் நல்லது கெட்டதன் காரணத்தை ஆராயப் புகும் இவன்
1.தன் எண்ணச் செயலின் நிகழ்வு வழிக் கொள்கைகளைப் புரிந்து கொண்டான் என்றால்
2.நான் என்பது யார்…? என்ற புதிருக்கும்…
3.உயிரா…? ஆன்மாவா…? எண்ணமா…? என்றெல்லாம் சிந்திக்கச் செய்யும்
4.சுழல்கின்ற அணுவின் (உயிரணு) சுழலோட்ட எண்ணத்தின் வினைப் பயனைக் கண்டுணரலாம்.
5.மதி கொண்டு தெளிவு பெற்று உயர் ஞானம் பெறும் செயலுக்கெல்லாம் வழி உணர்ந்திடலாம்
6.அந்த வழியில் நல்வினைப் பயனுக்குச் சக்தி ஊட்டி… சக்தி பெற்று…
7.ஆதி சக்தியால் (இயற்கை) கலப்பான தீவினையான எண்ணப் பயன் களையத் தலைப்பட்டு
8.அதைத் தொடர்ந்து வரும் செய்யப்பட்ட வினையின் (இப்பொழுது செய்து கொண்டிருக்கும்) நற்செயலின் செயலுக்கே உரமாக்கிடலாம்.
ஆகவே இந்த ஜென்மத் தொடரில்…
1.தொடர்ந்து செய்யப்படுகின்ற வினையின் செயலை நற் செயலாக்கினால்
2.நல் சுவாசத்தால் ஈர்த்துக் கொண்டால்
3.அவ்வாறு அமைக்கும் அதே தொடரில் – செய்த வினைப் பயனை நல் வினையின் வளர்ப்பாக ஆக்க முடியும்.
சந்தர்ப்பத்தால் வரும் தீவினைப் பயன்களை எல்லாம் களைவதற்குத் தியான முறையாக வான இயல் வழியைக் (விண் செல்லும் மார்க்கம்) கண்டு அதன் வழியில் செல்லச் செல்ல அனைத்தும் ஒன்றான நல்வினைப் பயனாக்கிடலாம்.
இத்தகைய விதிகளை எல்லாம் செயல்படுத்துகின்ற காரண காரிய கர்த்தாவான மூலமும் “இவனே ஆவான்…!” (நாம் தான்…!)

எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் போன்று தான் நம் உயிரின் இயக்கமும் உள்ளது
ஒரு காரியமாக நாம் ரோட்டில் நடந்து போகின்றோம் என்று சொன்னால் அப்பொழுது அங்கே எத்தனையோ தவறு செய்வோரைப் பார்க்க நேர்கின்றது.
ஒருவன் நடந்து சென்றால்… நம்மை அறியாது “அவன் நடப்பதைப் பார் என்போம்…!”
அடுத்து ஒரு பஸ்ஸில் ஏறிப் போகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். ஒருவன் குறுக்கே வருவான். “அறிவுகெட்டதனமாக வருகின்றான் பார்…!” என்போம்.
இப்படி எல்லாம் நினைக்கின்றோமா இல்லையா…! நம்மை அறியாமல் இந்த உணர்வுகள் இயக்குகிறது. நுகர்ந்த பின் இந்த உணர்வு வருகிறது.
ஒருவர் நம்மை வரச் சொன்னார் என்ற நிலையில் அந்தக் காரியத்திற்காகச் செல்லும் பொழுது இத்தகைய உணர்வுகளுடன் நாம் சென்றால் எப்படி இருக்கும்…?
1.முதலில் அங்கே அவன் எப்படி அவசரமாகக் குறுக்கே வந்தானோ
2.அதே போல் நாமும் அதே வேகத்துடன் (நாமும் நம்மைச் சந்திக்க வேண்டியவரை எண்ணி) அடுத்தவரைத் தள்ளிக் கொண்டு போவோம்.
ஏனய்யா அறிவு கெட்டதனமாக இப்படித் தள்ளுகிறாய்…? என்று அப்படியே அது திரும்ப வரும்.
இங்கே எம்மிடம் (ஞானகுரு) உபதேசம் கேட்பவர்களும் கடைசியில் பிரசாதம் வாங்கும் போது பார்க்கலாம். “பொறுத்திருந்து வாங்குவோம்…” என்ற எண்ணம் இல்லை.
மூன்று மணி நேரம் உபதேசம் கேட்டிருப்பார்கள். ஒரு ஐந்து நிமிடம் பொறுமையாக இருந்து பிரசாத்தை வாங்குவோம் என்றால் இல்லை. அடுத்தவரைத் தள்ளி விட்டு முன்னாடி வருவார்கள். இந்த உணர்வு எதைச் செய்கிறது…?
நாம் என்ன சொன்னாலும் அப்படியே அடுத்தவரை முந்திக் கொண்டு வருவார்கள். இல்லை என்றால் நைசாக இடையில் அப்படியே புகுந்து கொள்வார்கள்.
ஆனால் ஒரு ஐந்து நிமிடம் பொறுமையாக இருந்தால் நாமும் ஒழுக்க நிலை பெறுகின்றோம். மற்றவர்கள் நலல் மனதையும் கெடுப்பதில்லை… நமக்கும் நல்லதாகிறது.
ஆகவே… எந்தக் காரியத்திற்குச் சென்றாலும் அங்கே போனவுடனே முதலில் நாம் ஆத்ம செய்து கொள்ள வேண்டும்.
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும்… நாங்கள் பார்ப்பதெல்லாம் நலம் பெறவேண்டும்…
1.நாங்கள் பார்க்கப் போகும் அந்த அதிகாரிக்கு நல்ல மனது வர வேண்டும்…
2.எனக்கு உதவி செய்யும் பண்புகள் வர வேண்டும்.. என்று
3.அங்கே உட்கார்ந்து சிறிது நேரம் அமைதிப்படுத்தி விட்டுப் பின்பு செல்ல வேண்டும்.
நாம் பஸ்ஸில் போகும் பொழுது ஏதாவது அசம்பாவிதத்தைப் பார்க்க நேர்தால் “ஈஸ்வரா…” என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் என்று தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
பின் அவர்கள் பொருளறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும் சிந்தித்துச் செயல்படும் அருள் சக்தி அவர்கள் பெறவேண்டும் என்று இப்ப்டிப்பட்ட நல்ல உணர்வுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
1.இப்படி எடுத்தால் அந்த அசம்பாவிதத்தால் பாதிக்கப்பட்டவரின் உணர்வுகள் நமக்குள் வருவதில்லை.
2.அறிவு கெட்டதனமாகச் செயல்படுகின்றார்கள் என்ற வேக உணர்வு வருவதில்லை.
ஏனென்றால் நாம் எந்த உணர்வை எண்ணி எடுக்கின்றோமோ அந்த உணர்ச்சி தான் நம்மை இயக்குகிறது… நம்மை ஆள்கிறது.
அதாவது எலெக்ட்ரிக்… எலெக்ட்ரானிக்…! நாம் எண்ணிய உணர்வுகள் சுவாசித்து நம் உயிரிலே பட்ட பின் அந்த உணர்ச்சிகள் இயக்குகிறது. ஆக அந்த உணர்வு தான் நம்மை இயக்குகிறது… எண்ணம் சொல் செயலாக மாறுகின்றது.
1.உயிர் எலெக்ட்ரிகாக இருக்கின்றது
2.சுவாசித்ததை எலெக்ட்ரானிக்காக மாற்றுகின்றது
நாம் எந்தக் குணத்தின் தன்மை கொண்டு வருகின்றோமோ உயிரிலே பட்டால் எலெக்ட்ரானிக்காக மாற்றுகின்றது. உயிரில் உள்ள காந்தம் தான் (எலெக்ட்ரிக் என்ற உணர்வுகள்) கவர்கிறது. இதை எல்லாம் கம்ப்யூட்டர் நிரூபிக்கின்றது.
ரோட்டிலே சென்றால் அதற்கென்று இயந்திரத்தை (SCANNER) வைத்து எலெக்ட்ரானிக் என்ற முறை கொண்டு நாம் கொண்டு செல்லும் பையிற்குள் (BAG) எதைப் போட்டு வைத்திருந்தாலும் சரி… அதற்குள் தங்கமோ மற்ற வேறு உலோகங்களோ இருந்தால் படத்தில் அதை எல்லாம் காட்டுகின்றது.
பைகள் மூடியிருந்தாலும் எலெக்ட்ரானிக் என்ற முறைப்படி பார்க்கும் பொழுது பைக்குள் இருப்பது ஒவ்வொன்றையும் காட்டுகின்றது. விமான நிலையங்களில் எல்லாம் இதைக் காணலாம். இப்படி எல்லாம் விஞ்ஞான அறிவால் கண்டுள்ளார்கள்.
இதே மாதிரித்தான் நாம் கண்ணுற்றுப் பார்க்கும் பொழுது மற்றவர்கள் செய்யும் தவறுகளைக் காட்டுகின்றது. தவறு செய்கின்றான் என்ற அந்த உணர்வின் மணம் வரும் பொழுது என்ன நடக்கின்றது..?
இங்கே எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்று பொருள்களைக் காணும் பொழுது எப்படிச் செய்கிறார்களோ…
1.தவறான பொருள் அதிலே இருந்தால் திருடன் என்று கண்டுபிடிக்கின்றார்கள் அல்லவா…!
2.அது போல் நாம் பார்ப்போரின் செயல்களை உற்றுப் பார்க்கும் பொழுது “திருடன்…” என்ற உணர்வு வருகிறது
3.இந்த உணர்வின் தன்மை மாறும் பொழுது அங்கே நமக்குள் பிரித்துக் காட்டுகிறது.
பூமிக்குள் ஒரு வெடிகுண்டையே புதைத்து வைத்திருந்தார்கள் என்றால் வெகு தூரத்தில் இருந்து இந்த உணர்வின் தன்மை மோப்பத்தால் கண்டறிகின்றார்கள். அந்த ஒலிகளை எழுப்பிக் காட்டுகின்றது (எலெக்ட்ரானிக் கருவிகள் பீப்.. பீப்… என்று சப்தமிடும்).
இன்ன இடத்தில் தான் இருக்கிறது என்று அது தெளிவாகக் காட்டுகிறது. ஏனென்றால் அந்தப் பொருளின் மீது இதனின் அலைகள் மோதியவுடன் எக்கோ (ECHO) வருகிறது.
இதைக் கண்டவுடன் அதற்குண்டான பாதுகாப்பான நிலைகள் கொண்டு அது வெடிக்காமல் செய்வதற்குண்டான எத்தனையோ வேலைகளைச் செய்து மணல் மூடைகளை அடுக்கி அந்த வெடிகுண்டை வெடிக்க விடாது செய்து செயலிழக்கச் செய்கிறார்கள்.
இப்படி எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்ற நிலைகளில் தான் நாம் இயங்கிக் கொண்டிருக்கின்றோம். இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால்
1.தீமை என்ற உணர்வு வரும் பொழுது அது நமக்குள் வராதபடி
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து அது நமக்குள் அணுவாக உருவாகதபடி
3.நம் உடலில் உள்ள நல்ல அணுக்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
எத்தனை கோடிச் செல்வங்கள் இருந்தாலும் அது நம்மை மகிழச் செய்கிறதா…! என்றால் இல்லை. செல்வந்தர்களை நாம் பார்க்கிறோம். “பணத்தால்” அவர்களால் மகிழ முடிகிறதா என்றால் முடியவில்லை.
தனக்குள் எண்ணத்தால் எடுத்துக் கொண்ட வேதனை மிஞ்சுகின்றது. பணம் அவர்களிடமிருந்தும் வேதனைதான் அவருக்குள் மிச்சமாக இருக்கிறது.
இதைப்போல எத்தகைய செல்வமும் நம்மைக் காக்காது. செல்வம் உறுதுணையாக வேண்டும் என்றால் இருக்கும். ஆனால், காக்காது.
அருள் ஞானியின் உணர்வை நமக்குள் சேர்த்துக் கொண்டால் அது ஒளி பெறும் நிலையிலிருந்து நம்மை என்றென்றும் பிறளாது அந்த மகரிஷிகளுடன் ஒன்றச் செய்து என்றும் நம்மைக் காத்தருளும்.
பிற தீமைகளில் நாம் சிக்காது உயிருடன் ஒன்றி பிறவியில்லா நிலைகளுக்கு நம்மை அழைத்துச்செல்லும்.
ஆகவே, அந்த அருள் ஞானியின் உணர்வின் ஆற்றல் மிக்க சக்திகளை உங்களில் விளைவிப்பதற்குத்தான் இந்த உபதேசம். மகரிஷியின் அருளாற்றல் மிக்க சக்திகளைப் பெறுவதற்குண்டான தகுதியை உருவாக்குவதுதான் இப்போது இந்த உபதேசம்.
ஒரு நூலால் ஒன்றும் செய்ய முடியாது. அதே போல் தனி மனிதன் “ஒருவரால்” அந்த மகரிஷிகளின் உணர்வின் சத்தைப் பெறுவதற்கு முடியாது.
அதைப் பெறுவதற்குண்டான தகுதியை அவர்களைப் பற்றிச் சொல்லி அந்தப் பதிவுகளை உங்களுக்குள் ஏற்படுத்தி உங்கள் எல்லோருடைய எண்ணங்களையும் ஒருங்கிணைக்கச் செய்கின்றோம்.


“ஆன்மாவின் விழிப்பு நிலை…” என்றால் என்ன என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது
1.கண்களால் பார்க்கும் செயல்படம்
2.அகத்திற்குள் தோன்றும் எண்ணத்தின் கற்பனைப் படம்.
3.கனவில் காணும் படம்
4.பிறர் சொல்லும் ஒலி (சொல்லை) கேட்டு அந்த எண்ணத்தில் எடுக்கும் படம்.
5.இப்படி மனித உணர்வில் நாம் நான்கு வகைப் படங்கள் எடுத்துக் கொண்டே உள்ளோம்.
நம்முடைய எதிரில் காண்பவை எல்லாம் நம் கண்கள் படமாக எடுத்துக் கொள்கின்றது.
கற்பனையாக எண்ணும் படத்தை நம் எண்ணத்தின் உணர்வில் ஒரு தடவை எந்த இடத்தை எண்ணிக் கற்பனையில் படம் எடுக்கின்றோமோ அதே தொடர் தான் எப்பொழுது அந்த இடத்தை எண்ணும் பொழுதெல்லாம் நினைவில் வருகின்றது.
அதே படத் தொடர்
1.மற்றவர்கள் ஒலியால் சொல்லக்கூடிய பொருளைப் பற்றி
2.எண்ணத்தின் நினைவு படமாகவே நம் ஆத்மாவில்
3.நாம் பார்க்காமலேயே படமெடுத்து விடுகின்றது – “கற்பனையில்…!”
எண்ணம் உறங்கிய நிலையில் ஆத்மாவில் பதிவான உணர்வின் தொடர் கொண்டு நாம் சுவாசிக்கும் பொழுது “தூக்கத்திலே மோதும் சுவாச ஒலியால்” கனவாக… அந்தப் படமாக… ஆத்மாவில் பதிவு நிலை ஏற்பட்டுவிடுகின்றது.
சரீர வாழ்க்கையில் வாழக்கூடிய செயல் தன்மையில் கண்களால் மட்டுமல்லாமல் ஆத்மாவின் தொடர்பிலும் இப்படம் பதிவாகின்றது. (உதாரணமாக – செவி வழி கேட்கும் ஒலிகள்,,, மூக்கின் வழி சுவாசிக்கும் மணங்கள்… உடலில் உணரும் உணர்வுகள்…)
கண்களால் தான் நாம் அதிகமாகப் படமாக எடுக்கின்றோம். இருந்தாலும் அத்தகைய ஒளி கொண்ட சுவாச கதியில் இயக்கத்தின் தொடர் நம் கண்களின் தொடர்பில்லாமல்
1.கற்பனை… கனவு… வெளியிலிருந்து வரும் ஒலி இந்த மூன்றின் படமும்
2.உணர்வின் பதிவு கொண்டு சுவாசமெடுக்கும் காந்த மின் அலையால் ஆத்மாவின் படமாகப் பதிந்திருக்கின்றது.
3.ஆகவே பார்க்கும் பொருளைப் பற்றிய படங்களும் ஆத்மாவின் பதிவுப் படமே.
இந்தச் சரீரத்தின் செயலால் ஏற்படும் ஆத்மாவின் இயக்கத்தின் கதி தான் மனித வாழ்க்கையின் உயிர் செயல்பாடாக ஆத்மாவின் இயக்கம் ஜீவ காந்த சரீரமுடன் செயல் கொள்கின்றது.
இந்த ஜீவ காந்தமுடன்… ஆத்ம உயிரில்…
1.ஒலி… ஒளி கொண்ட பதிவின் தன்மை உணர்வின் நினைவலைகள் மோதும் செயல்பாட்டில்
2.விழிப்பு நிலை ஏற்படக்கூடிய ஐந்தாம் நிலையான ஞானத்தின் செயல் அறிந்து “தூர திருஷ்டி…!” (TELESCOPE போல்) என்ற காட்சியைக் காணும் நிலையும்
3.அதற்கடுத்த ஆறாம் நிலையில் அண்டத்தில் சுழலும் மண்டலங்களின் உண்மையை நம் ஆத்மா அங்கு சென்று அறியும் நிலையும்
4.ஏழாம் நிலையான படைப்பின் படைப்பாக்கும் செயல் தன்மையும்
5.அடுத்தடுத்த நிலைக்கு இந்த உயிரும் ஆத்மாவும் இணைந்து ஒளிப் படம் எடுக்கும் இந்த ஆத்மாவுக்கே ஏற்படக்கூடிய செயல் நிலைக்கு
6.ஆத்மாவின் விழிப்பு (நம் விழிப்பு நிலை) இந்த கண் ஒளியில் இருந்து பெறுவதற்கு
7.விழிப்படலத்தின் ஒளித் தன்மையை மின் காந்த ஈர்ப்பின் செயலுக்குக் கொண்டு வர வேண்டும்.
அதாவது முதலில் சொன்னபடி நான்கு விதமான படங்களை எடுக்கும் நாம் ஐந்து ஆறு ஏழு என்ற நிலையில் நமக்குச் சொந்தமான நம் உயிர் ஈர்ப்பது போல் அலைகளை இழுத்துக் கவர்ந்து இயக்கும் நிலைக்கு வர வேண்டும்.
1.மூக்கு வழியாகக் காற்றைச் சுவாசிப்பது போல்
2.”ஆன்மாவின் விழிப்பு…” என்ற – கண்கள் வழியாக நுண்ணிய அலைகளைக் கவரும் நிலைக்கு வர வேண்டும்.
3.இன்று விஞ்ஞானக் கருவிகள் கவரும் நுண்ணிய அலைகளைக் காட்டிலும்
4.மிகவும் நுண்ணிய நிலைகளைக் கவர முடியும்… அது தான் ஆன்மாவின் விழிப்பு நிலை என்பது..!

பெரும்பகுதியான தெய்வங்களின் காலடியிலே அசுரனைப் போட்டுக் காட்டியதன் உட்பொருள் என்ன…?
ஒரு வேதனைப்படும் மனிதனின் உணர்வை நுகர்ந்தால் நம் உடலுக்குள் அந்த உணர்வின் தன்மை படரப்பட்டு நல்ல அணுக்களை வீழ்த்தி விடுகிறது.
இதைப் போன்ற நிலையில் இருந்தெல்லாம் நாம் விடுபட வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?
“ஆதி மூலம் என்ற உயிர் தான்…” மிருக நிலையிலிருந்து தீமைகளை நீக்கிட வேண்டும் நீக்கிட வேண்டும் என்ற எண்ணத்தை வலு சேர்த்துச் சேர்த்து பரிணாம வளர்ச்சியாக இன்று நம்மை மனிதனாக உருவாக்கியது
நம் உயிரை ஈசனாகவும் நாம் சேர்த்துக் கொண்ட உணர்வின் தன்மை உடலாக சிவமாகவும் இந்த உடலுக்குள் சேர்த்துக் கொண்ட அந்த உணர்வு வினைக்கு நாயகனாகவும் இயங்குகிறது என்றும் தெளிவாகக் கூறியுள்ளனர் ஞானிகள்.
உடல் சிவம் என்றாலும் அதிலே நாம் சேர்த்துக் கொண்ட பல கோடி வினைகளுக்கொப்ப நாயகனாக இந்த மனித உடலை உருவாக்கியது…
1.இந்த கணங்களை எல்லாம் உருவாக்கியது உயிர் என்று அந்த உயிரை எண்ணி
2.இந்த கணங்களுக்கெல்லாம் ஈசா… “கணேசா…” என்று உயிரை வணங்கும்படி செய்கின்றனர்.
தீமைகளை நீக்கிக் கணங்களுக்கு அதிபதியாக நம் உடல் நஞ்சை மலமாக மாற்றி நல்ல உணர்வை உடலாக மாற்றுகின்றது. கணங்களுக்கு அதிபதி “கணபதி…”
1.நல்ல உணர்வின் தன்மை நமக்குள் சேர்க்கப்படும் பொழுது
2.அது தீமையை அடக்கி ஆட்சி புரியும் சக்தி பெற்றது என்ற நிலையை உணர்த்துவதற்காக
3.அங்குசபாசவா…! என்று விநாயகர் கையிலே கொடுக்கப்பட்டுள்ளது.
உடல் வலு பெற்றுப் பெற்றுத் தான் மிருக நிலையிலிருந்து மனிதனாக வந்தோம் என்று யானையின் சிரசை மனித உடலில் பொருத்திக் காட்டுகின்றனர். ஆனாலும் எண்ணத்தின் வலுக் கொண்டவன் தான் மனிதன்
பல கோடி உடல்களிலே புலிக்கும் வலு அதிகம்… மானுக்கும் வலு அதிகம்… புழுவிற்கும் வலு அதிகம்… ஒரு எறும்புக்கும் வலு அதிகம்…! ஏனென்றால் விஷத்தின் தன்மை அந்த உடலிலே அதிகமாக இருப்பதால் தான் தன் சக்திக்கு மீறிய எடை உள்ள பொருளைத் தூக்கிக் கொண்டு செல்கிறது ஒரு எறும்பு. ஏனென்றால்
1.விஷத்தின் தன்மை எதற்குள் அதிகம் இருக்கின்றதோ
2.அதிலே வலுவின் தன்மையும் அதிகம் இருக்கின்றது.
இப்படி உருவான இந்த நிலை தான் நாம் பல கோடிச் சரீரங்களில் நஞ்சை நீக்கி இந்த மனித உடல் பெற்ற நிலை. இருந்தாலும் மனிதனாக ஆன பின் நஞ்சை நீக்கும் அருள் சக்தி பெற்ற நாம்
1.தீமை என்று தெரிந்து கொண்ட பின்
2.தீமையை நீக்கிய அருள் ஞானிகளின் உணர்வை நம் உடலுக்குள் சேர்க்க வேண்டும்.
துருவ நட்சத்திரம் மனிதாக இருந்து (அகஸ்தியன்) எப்படிப் பேரொளியாக மாறியதோ அந்த உணர்வை நாம் நுகர்ந்து நுகர்ந்து அதனின் உணர்வை நம் உடலில் பெருக்கினால் அதன் உணர்வின் தன்மை கொண்டு இருளை நீக்கி துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் பிறவி இல்லா நிலைகள் அடைவோம்.
இந்தப் பிறவி இல்லா நிலை அடைவதற்குத்தான் விநாயகரை வடமேற்காக வைத்து வடகிழக்காக நம்மை வணங்கும்படிச் செய்தார்கள். வடகிழக்காகத் தான் துருவ நட்சத்திரம் இருக்கின்றது. விநாயகருக்குப் பின்னாடி வேப்ப மரமும் அரச மரமும் வைத்தார்கள்.
மனிதனின் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் வரும் கசந்த உணர்வைக் காட்ட வேப்ப மரத்தைக் காட்டினார்கள். அதே சமயத்தில்
1.இருளை அகற்றிடும் உணர்வின் தன்மையாக (துருவ நட்சத்திரம்)
2.இந்தப் பிரபஞ்சத்தில் நஞ்சினை வென்று ஒளியாக மாற்றும் திறன் பெற்றதை அரசு என்றும்
3.அரச மரத்தை வைத்துக் காட்டினார்கள்.
பரிணாம வளர்ச்சியில் ஒவ்வொரு உணர்வும் எதனின் நிலை கொண்டு செயல்படுகின்றதோ அதைத்தான் அங்கே வைத்துக் காட்டுகின்றார்கள்.
புராணத்தில் காட்டியபடி பார்த்தோம் என்றால் முருகனுக்கும் அசுரனுக்கும் போர் நடந்தது என்று சொல்வார்கள். போர் நடக்கும் பொழுது கடைசியில் அசுரனை முருகன் கொல்கிறான்.
அந்தத் தருணத்தில் அசுரன் முருகனிடம் சொல்கிறான்…
1.நான் தோற்றுவிட்டேன்…
2.உன் காலடியிலே இருக்கின்றேன் என்று வரம் கேட்கிறான்.
ஆகையினால் அந்த அசுரனைப் பாம்பாகச் சபித்துத் தன் காலடியிலே முருகன் வைத்துக் கொண்டான் என்று இப்படிக் கதைகளைச் சொல்கிறார்கள்.
1.விஷம் என்ற நிலைகளை அடக்கும் சக்தி பெற்றதை உணர்த்தாதபடி
2.இப்படிப்பட்ட காரணங்களை இடையிலே இணைத்து விட்டார்கள்.
மயில் விஷத்தை உணவாக உட்கொண்டாலும் நஞ்சை அது அடக்கி ஆட்சி புரிகிறது என்று உணர்த்துவதற்காக மயிலின் காலடியில் விஷப் பாம்பைப் போட்டுக் காட்டினார்கள் ஞானிகள்.
1.மனிதன் தன் ஆறாவது அறிவால் நஞ்சை அடக்கி
2.மகிழ்ச்சியாக இருக்கச் செய்யும் அருள் உணர்வை நாம் தெரிந்து உணர்ந்து
3.அதன் வழியின் நம் வாழ்க்கையை வழி நடத்திச் செல்வதற்கு இவ்வாறு காட்டினார்கள்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நம் பூமியில் வாழ்ந்த அகஸ்தியன் தன் ஐந்தாவது வயதில் இந்தப் பிரபஞ்சத்தை அறியும் ஆற்றல் பெற்று துருவன் ஆனான்.
இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள சூரியன் தனக்குள் மோதும் நிலைகளை அதில் உள்ள விஷத்தை நீக்கிவிட்டு ஒளியாக மாற்றுகின்றது.
இதைப் போன்று துருவன் வான் வீதியில் அவன் உற்றுப் பார்க்கும் உணர்வுகள் அனைத்தையும் விஷத்தை நீக்கும் சக்தியாக அவன் உடலில் விளைகின்றது. எல்லாவற்றையும் அறியும் சக்தி பெறுகின்றான்.
அவ்வாறு தன் வளர்ச்சியில் பதினாறாவது வயதில் திருமணமாகும் பொழுது தன் மனைவிக்கும் தான் கண்டுணர்ந்த பிரபஞ்சத்தின் ஆற்றல்களை எடுத்துச் சொல்கின்றான்.
தான் பெற்ற சக்தியை அகஸ்தியன் தன் மனைவிக்குப் பாய்ச்சினான். அதன் வழி நஞ்சினை வென்றிடும் ஆற்றலை இருவரும் பெற்று உணர்வின் தன்மை ஒளியின் சுடராக ஒளிச் சரீரம் பெற்றார்கள்.
அவர்கள் இரு உயிரும் ஒன்றாகி உணர்வினை ஒளியாக்கி இருவரும் எதை உற்றுப் பார்த்தார்களோ அதே எல்லையாக நிலை கொண்டு நம் பூமிக்குள் வரும் நஞ்சினை ஒடுக்கி ஒளியாக மாற்றிடும் திறன் பெற்று வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.
இந்தப் பூமிக்குள் வரும் அனைத்தையும் ஒளியாக மாற்றிக் கொண்டுள்ளார்கள். ஒளியின் சிகரமாக வளர்க்கும் தன்மை பெற்றார்கள்.
அகஸ்தியனும் அவன் மனைவியும் வசிஷ்டரும் அருந்ததியும் போன்று இரு மனமும் ஒரு மனமாகி நளாயினி போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடந்து சாவித்திரி போன்று இரு உயிரும் ஒன்றென இணைந்து வாழ்கின்றனர்.
இதைத்தான் “துருவ நட்சத்திரம்” என்பது.
அதில் விளைந்த உணர்வுகளைச் சூரியனின் காந்தசக்தி கவர்ந்து பிரபஞ்சத்தில் அலைகளாகப் படரச் செய்து கொண்டுள்ளது. ஆனால், பரவும் பகுதியில் அதன் எல்லைப் பகுதியிலிருந்து நுகர்ந்து ஈர்க்கும் சக்தி பெற்ற நமது பூமி சுழலும் பொழுது துருவப் பகுதியில் கவர்கின்றது.
ஏனென்றால்
1.துருவப் பகுதியின் நேராக துருவ நட்சத்திரம் இருப்பதால் பூமி அதைக் கவர்ந்து
2.புவிக்குள் அதிகமாக அடர்த்தியாகச் செலுத்துகின்றது
துருவ நட்சத்திரம் அந்தத் துருவத்திலேயே தான் இருக்கும்.
1.நாம் அதிகாலையில் அந்தத் துருவத்தை எண்ணி
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணி
3.துருவ நட்சத்திரத்திலிருந்து வந்து கொண்டிருக்கும் பேரருள் பேரொளியை எளிதில் பெற முடியும்.
4.நம் உடலில் இருக்கும் எல்லா அணுக்களுக்குள்ளும் அதைச் சேர்க்க முடியும்.


உள் நின்று இயக்கும் உயிர் கடவுளாக இருந்தாலும் நுகர்ந்த உணர்வே நம்மை ஆள்கிறது இயக்கச் சக்தியாக…!
உதாரணமாக… கோபமான உணர்வுகளை நாம் நுகர்ந்தோமென்றால் அடிக்கடி கோபம் வந்து
1.ஒருவரைத் தாக்க வேண்டும் என்ற உணர்ச்சியே நமக்கும் வருகின்றது.
2.எதைச் சொன்னாலும் தாக்க வேண்டும் என்றுதான் உணர்வு வருகின்றது.
அதே போல் வேதனையை எண்ணினால் “இது என்ன வாழ்க்கை..?” என்று சோர்வடையச் செய்கின்றது.
இதே மாதிரி எந்தெந்த உணர்வுகள் நம் இரத்தங்களில் கலக்கின்றதோ அந்த வேதனையான அணுக்கள் வேதனையை எடுத்து வளரத் தொடங்குகின்றது.
இப்படி எத்தனை வகை குணங்களை நாம் நுகர்ந்து அறிந்தோமோ அத்தனையும் நம் இரத்தத்தில் உண்டு.
நமது பூமியில் காற்றில் உள்ளதை அந்தந்த உணர்வு கொண்ட வித்துக்கள் கவர்ந்து செடி கொடி மரமாக வளர்கின்றது.
இதே மாதிரித்தான் ஒரு மனிதன் கோபப்பட்ட உணர்வுகளை ஈஸ்வரலோகத்தில்… உயிர் இருக்கும் இடத்தில் உருவாக்கி இந்திரலோகத்தில்… நம் உடலில் இரத்தத்தில் கருவாக்கி உருவாக்கி அந்த அணுவின் தன்மை உருவாகும் பொழுது… பிரம்மலோகம்.
அதன் இனத்தை அது பெருக்கும் என்று தெளிவாகக் கூறுகின்றது நமது சாஸ்திரங்கள்.
அந்த அணுவாக உருவாகி விட்டால் உயிர் எப்படி இயக்கமாக இருக்கின்றதோ… ஈசனாக இருக்கின்றதோ அதைப்போன்று அந்த அணுவின் தன்மை துடிப்பு ஆகும்பொழுது விஷ்ணுவாகின்றது. அதன் ஈர்ப்பு காந்தமாகின்றது.
இதைத் தான் விஷ்ணுவின் மறு அவதாரம் சீதாராமன். நமது உயிர் நுகர்ந்த உணர்வை அணுவாக மாற்றும் பொழுது அது உயிரின் மறு அவதாரமாக சீதாராமனாகின்றது.
1.சீதா என்றால் சுவை.
2.காரமும் சுவைதான் விஷமும் சுவைதான்
இப்படி நாம் நுகர்ந்த உணர்வுகள் எதுவோ அந்த உணர்ச்சியின் எண்ணங்களாக நமக்குள் வரவைத்து அந்த எண்ணத்தின் வழிதான் நாம் இயங்குகின்றோம்… வாழுகின்றோம்…!
அதனால்தான் விஷ்ணுவின் மறு அவதாரம் சீதாராமன் என்று சொல்கின்றார்கள் ஞானியர்கள்.
எந்தச் சுவையோ…? அதற்குத்தக்க…
1.உணர்ச்சிகள் எண்ணங்களாக வருவதும்
2.உணர்ச்சிக்கொப்ப அணுக்கள் மாறுவதும்
3.உணர்ச்சிக்கொப்ப செயல்கள் மாறுவதும்
4.உணர்ச்சிக்கொப்ப நம் எண்ணங்களும் மாறுகின்றது.
இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். இப்படி உருவான இந்த நிலைதான் விஷ்ணுவின் மகன் பிரம்மா என்பது.
வேதனை வெறுப்பு கோபம் குரோதம் போன்ற எத்தனை வகையான எண்ணங்களை எண்ணுகின்றோமோ அதன் உணர்வுப்படி உடலாகும் பொழுது பிரம்மம். எந்தக் குணத்தின் தன்மை கொண்டு அணுவாகின்றதோ பிரம்மாவின் மனைவி சரஸ்வதி.
கோபமான உணர்வை எடுத்தால் அதனின் ஞானப்படி (சரஸ்வதி) அந்த அணு அதன் உணர்ச்சிகளை இயக்கி அது அதன் வழியில் செயல்படும்.
இப்படி நமது உடலில் பல விதமான எண்ணங்கள் சேர்ந்து அந்த உணர்ச்சிக்கொப்ப மனிதனை உருவாக்கி
1.நம் உடலில் எந்தெந்த உணர்ச்சிகள் இருக்கின்றதோ
2.அதன் வழி அவ்வப்போது அந்த எண்ணங்களை தோன்றச் செய்கிறது
3.அந்த அணு இரத்தத்தில் அதன் சத்தைக் கலக்கச் செய்து விளைகின்றது.
4.அந்த அணுவின் மலம் தான் நம் உடலாக சிவமாகின்றது.
உடலில் விளைந்த உணர்வின் சத்து உயிருடன் இணைந்து அடுத்த உருவை மாற்றுகிறது…!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
இன்று மனிதனின் வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் அன்புடன் பண்புடன் பழகுகிறோம் எல்லாம் செய்கிறோம். இருந்தாலும்…
1.வெளியிலே தெரியாதபடி நமக்குள் குறைகளை வளர்த்துக் கொண்டால்
2.வெளியிலே நாம் பேசும்போது அல்லது கேட்கும் பொழுது
3.எனக்கும் அவருக்கும் ஒரு குறையும் இல்லை…! என்று நாம் மறைத்துப் பேசினாலும்
4.நம் உயிருக்குள் அதை மறைக்க முடியாது.
அதே சமயத்தில் நாம் ஒரு தவறையே செய்துவிட்டோம் என்றால் அந்தத் தவறின் தன்மை பிறருக்குத் தெரிந்தால்
1.நம்மைக் குற்றவாளியாக்கி விடுவார்களே…! என்று
2.இதற்காக வேண்டி நாம் பலதுகளைப் பொய்யாகச் சொல்லி மறைப்போம்.
ஆனால் மறைத்தால் என்ன ஆகும்…?
இப்படி மறைத்திடும் உணர்வுகளை நமக்குள் வளர்க்க வளர்க்க நமக்குள் வளரும்… வளர்க்க வேண்டிய உண்மையை… மறைத்திடும் நிலை வருகின்றது.
1.அப்படி மறைத்திடும் நிலை வரப்படும் பொழுது இருள் சூழ்ந்த நிலைகளே நமக்குள் வரும்
2.பின் சூனிய நிலைகளாக அது விளையும்… நம் சிந்திக்கும் திறனையே இழக்கச் செய்யும்
3.கடைசியில் இருள் சூழும் தன்மையையே உருவாக்குகின்றது.
நாம் தவறு செய்யவில்லை. நாம் நுகர்ந்த உணர்வுகள் இப்படியெல்லாம் அந்த உணர்ச்சியை ஊட்டுகின்றது… அதன் உணர்வின் செயலாக நம்மை இயக்குகின்றது…!
அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்..?
ஆனால் இதை அடக்கும் ஆறாவது அறிவைக் கொண்டு மாற்றி அமைத்துச் செயல்படுத்த முடியும். விநாயகர் கையில் என்ன வைத்திருக்கின்றது…? அங்குசம்.
1.நாம் நுகர்ந்த உணர்வுகள் அதனின் உணர்ச்சிகளை ஊட்டி
2.தவறான பாதைகளுக்குச் செல்லும் உணர்ச்சிகளை ஊட்டி
3.நம்மை அழைத்துச் செல்லும் அதனின் இயக்க நிலையை மாற்றிட
4.நம் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு அருள் மகரிஷிகளின் உணர்வைப் பெறவேண்டும் என்று ஏங்கி எடுத்து அதை அடக்க வேண்டும்.
அதனால் தான் ஆறாவது அறிவைக் கார்த்திகேயா… சேனாதிபதி…! என்று ஞானிகள் காட்டினார்கள்.


ஏனோ தானோ என்று இல்லாதபடி மகரிஷிகளின் அருள் வட்டத்திற்குள் இணைந்து வாழ்ந்திட நாம் பழகிக் கொள்ள வேண்டும்
உதாரணமாக நாம் மலைப் பக்கம் போக வேண்டியதிருக்கிறது என்றால் அங்கே போகும் பொழுது பல முன்னெச்சரிக்கையுடன் தான் செல்கிறோம்.
இந்தப் பக்கம் போனால் முட்கள் இருக்கின்றது… இந்தப் பக்கம் போனால் மிருகங்கள் இருக்கின்றது… இந்தப் பக்கம் நீர் வீழ்ச்சி இருக்கிறது… ஆகவே
1.மிருகங்கள் இருக்கும் பக்கம் எவ்வாறு செல்ல வேண்டும்…
2.ஒரு பக்கம் நீரோடைகள் போகும்போது அதைக் கடந்து எப்படிச் செல்ல வேண்டும் என்றும்
3.தெளிந்த வழி காட்டுவது போல நமக்குள் எத்தனையோ முன் சிந்தனைகள் போன்ற உணர்வுகள் உண்டு.
அதைப் போல இந்த மனித வாழ்க்கையில் எத்தனையோ வகையான தீமைகளை நாம் சந்திக்கின்றோம். அவைகளைச் சந்திக்கப்படும்போது அந்தத் தீமையின் உணர்வுகளில் நாம் சிக்காது அதிலிருந்து நாம் கடந்து செல்லுதல் வேண்டும்.
உதாரணமாக நாம் கடலிலே செல்கின்றோம்… அலைகள் பல வருகின்றது…! இருந்தாலும் அந்தப் படகோட்டி தான் எந்த எல்லையைக் குறிக்கோளாக வைத்துப் படகை ஓட்டுகின்றானோ படகினைத் திசை திருப்பி அந்த எல்லையை அடையச் செய்கின்றான்.
இதைப்போலத் தான் நாம் இன்று இந்த வாழ்க்கையில் நாம் பல அலைகள் நம்மை மோதிக் கொண்டே உள்ளது.
1.கோப அலைகள் மோதுகிறது… பாச அலைகள் மோதுகின்றது… வேதனை அலைகள் மோதுகின்றது
2.இதைப் போல எத்தனையோ வகையான அலைகள் மோதுகின்றது.
இது எல்லாம் இல்லை என்று யாரும் சொல்ல முடியாது…!
நம்மை வேதனைப்படும்படி ஒரு மனிதன் செய்தால் அந்த எண்ணத்தில் நாம் சிக்கிவிட்டால் அந்த அலைகளில் சிக்கி அந்த வேதனைப்படும் உணர்வுக்கே நம்மை அழைத்து சென்றுவிடும்.
ஒருவர் கோபப்படும் அலைகள் நம் மீது கடுமையாக மோதிவிட்டால் அதிலே வாழ்க்கை என்ற இந்தப் படகு மூழ்கி அதன் வழிகளிலே அழைத்துச் செல்லும். நாம் நல்ல நிலையை அடைய முடியாது.
ஆகவே தான் இந்த வாழ்க்கையில் எத்தனையோ வகையான அலைகள் நம்மை மோதினாலும் அந்த ஒவ்வொரு நிலைகளிலும்
1.மகரிஷிகளின் அருள் சக்திகளை வலு கொண்ட நிலைகள் கொண்டு அதை மூழ்கிடாது
2.நமது எல்லை அந்த மகரிஷிகளின் அருள் வட்டம் தான் என்ற நிலைகளில் நாம் செல்ல வேண்டும்.
அப்படிச் சென்றோம் என்றால் இந்த வாழ்க்கையில் மகரிஷிகளின் அருள் வட்டத்தின் பாதுகாப்புடனே என்றும் நாம் வாழ முடியும்.
“விழித்திரு…!” என்று சொல்வது போல ஒவ்வொரு நாளும் இந்த மனித வாழ்க்கையில் பிறவியில்லா பெரு நிலையை அடைய வேண்டும் என்ற எண்ணத்தை வலுப்படுத்தும் நிலையாக நாம் விழித்திருத்தல் வேண்டும்.
ஏனென்றால் எத்தனையோ வகையான அலைகள் மோதுகின்றது…
1.நாம் விழித்திருந்து அந்த அலைகளில் இருந்து மீளுதல் வேண்டும்.
2.தீமையிலிருந்து விடுபடுதல் வேண்டும்… ஆக நமது எல்லை அந்த மகரிஷிகளின் அருள் வட்டம் தான்.
அதை நாம் அடிக்கடி எண்ணினோம் என்றால்… வரும் அலைகளில் இருந்து நம்மைப் பாதுகாத்து அருள் ஞானிகளின் உணர்வை இங்கே நிகழ் காலத்தில் வளர்த்து… எதிர்காலத்தில் என்றும் பிறவியில்லா நிலை என்ற பெரு நிலை அடையலாம்.
இதைச் செய்யத் தவறினால் கீழே அழைத்துச் சென்று விடுகின்றது இதிலிருந்து நாம் தப்புவோம்
1.மகரிஷிகளின் அருள் சக்திகளை நாம் பெறுவோம்
2.உலக மக்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற நாம் தியானிப்போம்.. தவமிருப்போம்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
1.எந்த ஞானியின் அருள் வித்தை
2.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் பெற்றுத் தனக்குள் வளர்த்துக் கொண்டாரோ
3.அந்த உணர்வின் சத்தை எனக்குள் (ஞானகுரு) வித்தாகக் கொடுத்தார்.
4.அதை வளர்க்க வேண்டிய முறையையும் சொல்லிக் கொடுத்தார்.
எனக்குள் வளர்த்துக் கொண்ட அந்த வித்தை உங்கள் மனதைப் பண்படுத்தி அந்த ஞான வித்தை உங்களுக்குள் ஆழமாக ஊன்றுகின்றேன். அந்த வித்தை எனக்குள் வளர்த்துக் கொள்வதற்கு
1.நான் (ஞானகுரு) எப்படிப் பக்குவப்பட்டனோ
2.அந்தப் பக்குவ நிலையை உங்களிடம் சொல்கின்றேன்.
அந்தப் பக்குவ முறைப்படி நீங்கள் செய்தீர்கள் என்றால் நிச்சயம் மகரிஷிகளின் ஆற்றல்மிக்க அருள் சக்திகள் கிடைக்கும். இதற்காக வேண்டி வேலையை விட்டு விட்டு நான் சதா அருளைப் பெற போகின்றேன் என்று உங்களை வேலையே செய்யாமல் இருக்கச் சொல்லவில்லை.
இந்த வாழ்க்கையில் வரக்கூடிய கடமைகள் அனைத்தையும் செய்ய வேண்டும். அதை விலக்கிவிட்டு இதைச் செய்ய வேண்டியதில்லை.
ஆனால் அந்தந்தச் சந்தர்ப்பங்களில் வரும் உணர்வின் தன்மைகள் நமக்குள் இயக்காத வண்ணம் தடுக்க வேண்டும். அது தான் முக்கியம்.
காய்கறிகளுடன் காரம் புளிப்பு கசப்பு இனிப்பை எடுத்து மற்ற பொருள்களைப் போட்டுச் சமைத்து குழம்பாகச் சேர்க்கின்றோம். சுவையாக உட் கொண்டு மகிழ்ச்சி அடைகின்றோம்.
1.ஒரு குழம்பு வைக்கும் பொழுது பல பொருள்களைச் சேர்த்து ஒரு சுவையாக்குவது போல்
2.நம் வாழ்க்கையில் உடலுக்குள் எத்தனையோ உணர்வுகள்
3.மகாபாரதப் போர் என்ற நிலைகளாக வந்து மோதினாலும்
3.மகரிஷிகளின் உணர்வலைகளை எடுத்து அவைகளைச் சுவை மிக்க நிலைகளாகச் சமப்படுத்த வேண்டும்.
மகரிஷிகளிண் அருள் சக்தி பெறவேண்டும் ஈஸ்வரா என்று அந்த அருள் சக்திகளின் துணை கொண்டு இந்த உடலுக்குள் நடக்கும் மகாபாரதப் போரை வெல்ல வேண்டும். வெல்ல முடியும்…!
இந்த மனிதச் சரீரம் பெற்ற நாம் உடலுக்குள் வரும் தீமைகளை வென்று சர்வத்தையும் ஒளியாக மாற்றக்கூடிய நிலையை நிச்சயம் நாம் செய்ய முடியும்.


பேரண்டத்தின் அகண்ட நிலைகளில் பேரானந்தப் பெரு நிலை கொண்டு வாழும் அகஸ்தியனைப் போன்று நாமும் வாழ வேண்டும்
உயிரணுவாகத் தோன்றிப் பல கோடிச் சரீரங்கள் பெற்று மனிதனான பின் அகஸ்தியன் உணர்வினை ஒளியாக மாற்றி இன்றும் துருவ நட்சத்திரமாக வாழ்ந்தும் வளர்ந்து கொண்டும் உள்ளான்.
அவன் வழியைப் பின்பற்றியோர் அனைவரும் அவன் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலமாக வாழ்ந்தும் வளர்ந்து கொண்டும் வருகின்றனர்.
1.பிறவி இல்லா நிலை அடைந்து என்றும் நிலை கொண்டுள்ளனர்
2.எதிரியே இல்லாத நிலைகள் கொண்டு…!
அதாவது…
1.எந்த விஷத்தின் தன்மை கொண்டு இயக்கும்
2.எந்த உணர்வுடன் கலந்து ஒரு இயக்கமாக அது இயக்குகின்றதோ
3.அதே இயக்கத்தின் மோதலில் (வெப்பம்) ஒளியாக மாற்றி
4.தன் உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றுகின்றான்.
ஒரு நஞ்சு கொண்ட பாம்பினம் மற்ற உயிரினங்களில் தன் விஷத்தைப் பாய்ச்சப்படும் பொழுது அங்கே இருள் சூழச் செய்து அதை உணவாக எடுத்துக் கொள்கிறது.
இப்படி வளரும் நாகப் பாம்பு தனக்குள் அந்த விஷத்தின் தன்மை வளர்க்க வளர்க்க
1.அந்த விஷப் பையே ஒளியின் சுடராக மாறிவிடுகின்றது…
2.”நாகரத்தினமாக” மாறுகின்றது…!
பாம்பினம் விஷத்தின் தன்மையை ஒடுக்கப்படும் பொழுது ஒளியின் தன்மை அடைகின்றது. ஆனால் விஷத்தைப் பாய்ச்சி உணவாக எடுத்துத் தான் அந்த உணர்வின் தன்மை பெறுகின்றது.
நாகம் மட்டுமல்ல… மற்ற பாம்பினங்களும் தனது விஷத்தைப் பாய்ச்சி பிற உயிரினங்களை இரையாக்கினாலும் விஷங்கள் வடிக்கப்பட்டு விஷம் அதிகரித்து உடையும் பொழுது அதனின் ஒளிச் சுடர் வரும்.
இதைப் போல் மனிதனின் நிலைகளிலும்…
1.உயிர் வாழும் (இருக்கும்) இடங்களில் இந்த உணர்வின் தன்மை கொண்டு “முத்தாக” விளையும்
2.முத்தாக விளையும் தன்மை வரப்படும் பொழுது உடல் மடியும்.
3.உடலில் வளர்த்த மற்ற உணர்வுகள் அலைகளாக மாறும்…. முத்தாக ஆன பின் செயலற்றதாக ஆகும்.
மனிதனின் இச்சைக்குள் பல காலம் வாழ்ந்தால்… 120 வருடத்திற்கு மேல் வளர்ந்தால் அந்த உடலிலேயே ஒரு அணுவின் தன்மை முத்தாக விளையும்.
யானைக்கும் அதுவே… மற்ற உயிரினங்களுக்கும் மற்றது சாடாத நிலைகள் வரும் பொழுது விஷத்தின் தன்மை கொண்டு அதிலே விளையும்.
ஆனால் உணர்வின் அணுக்களை ஒளியான ஜீவனுள்ள அணுவாக மாற்றிடும் தன்மை பெற்றவன் அகஸ்தியன்.
1.அவன் ஒளியின் சுடராக உயிருடன் ஒன்றி என்றும் நிலையாக
2.பேரண்டத்தின் அகண்ட நிலைகளில் மகிழ்ச்சியாகப் பேரானந்தப் பெரு நிலையுடன் வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளான்.
அவன் உணர்வைக் கருவாக்கி உருவாக்கி அந்த உணர்வின் தன்மையை ஒளியின் சுடராக மாற்றும் வல்லமை நம் அனைவருக்கும் உண்டு.
நேற்றைய செயல் இன்றைய சரீரம்.. இன்றைய செயல் நாளைய ஒளிச் சரீரமாக மனிதர்கள் ஆக வேண்டும் என்ற அந்தத் தத்துவத்தைத்தான் மூலக் கருத்தாக விநாயகர் தத்துவத்தின் மூலம் காட்டினர் ஞானியர்.

மகானாகும் மகத்துவம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது
இந்தச் சரீர இயக்கத்தின் கதியில் ஓடக் கூடிய உயிரணுக்களின் உணர்வுக்கொப்ப சரீர ஆத்மா அதனுடைய செயலைச் சரீர எண்ணத்தில் மோதக்கூடிய இயக்க நிலைதான் மனித இயக்க நிலை.
அதாவது…
1.வெளியிலிருந்து சுவாசித்து உடலாக உருவான நிலையில் அதனின் இயக்கமாகவும்
2.அதிலே எது எது வந்து மோதுகின்றதோ அதனின் இயக்கமாகவும் தான் நாம் இன்று வாழ்கின்றோம்
இப்படிப்பட்ட மனித இயக்கதில் பிறப்பு இறப்பு கதி ஓட்ட கால சுழற்சியின் வாழ்க்கை என்பது…
1.எந்த உணர்வுக்கொப்ப வாழ் நாள் செல்கிறதோ… வெள்ளத்திலே அடித்துச் செல்லப்படும் பொருள் போல
2.அதன் சுழற்சியில் சிக்கி இந்தப் பூமியின் இயற்கையின் கதியுடன் தான் மீண்டும் மீண்டும் சுழல முடியும்.
இதிலிருந்து மனிதனில் மறைந்துள்ள உண்மை நிலையின்
1.“நான் என்பது யார்…?” என்ற உயிரின் தன்மையை உணர்ந்தால் தான்
2.மனித தத்துவம் “ரிஷித் தன்மை” பெற முடியும்.
இந்தப் பூமியில் சில மகான்களின் தத்துவம் எப்படி வளர்ந்தது…?
நம்முடைய உணர்வின் எண்ணம் எதை எண்ணிச் செயல்படுகின்றதோ அதற்கொப்ப குண அமிலங்கள் உடலுக்குள் வந்து சேர்கின்றது.
அத்தகைய உயிர் அணுக்களுக்குள் எது பதிவாகியுள்ளதோ அந்தப் பதிவின் தொடர் அலை ஜீவித வாழ்க்கை தான் மனிதனின் வாழ்க்கை.
1.அதன் தொடரில் எண்ணும் எண்ணமே தான்
2.நம்முடைய ஆத்மாவில் பதிவாகி
3.நம் ஆத்ம தொடரின் வளர்ப்பும் செழிப்பும் இருக்கும்.
(உடலில் உள்ள உயிரணுக்களின் நிலையும் நமக்குச் சொந்தமான உயிரணுவின் நிலையும் இங்கே பிரித்துக் காட்டப்பட்டுள்ளது)
இந்த நிலையில் இருந்து தான் மனிதனில் சிலருக்கு அபூர்வமான உண்மைத் தன்மைகளை உணரும் நிலை ஏற்பட்டது.
இந்தக் கலியிலேயே பிறப்பால் தாழ்த்தப்பட்ட இனத்தில் பிறந்த ஒரு சிறுவன் தன் வாழ்க்கை நிலையில் ஏற்பட்ட சந்தர்ப்பத்தால் தெய்வ குணத்தின்பால் “கிருஷ்ணர்… இராமர்…!” என்ற தன் எண்ணத்தில் ஈர்க்கப்படுகின்றான்.
அதன் தொடர்பால் அந்தச் சிறுவனின் எண்ணம் சர்வ சதா காலமும் கிருஷ்ணனின் நாமத்தைத் தெய்வ குணமாக எண்ணிக் கொண்டே இருக்கின்றான்.
அப்பொழுது விண்ணிலிருந்து வரும் மகரிஷிகளின் சக்தி ஒளி அந்தச் சிறுவனின் மேல் பட அந்தச் சிறுவனில் இருந்த இருள் அகலுகின்றது.
1.அந்த மகரிஷிகளின் ஒளி சக்தியால்
2.சிறுவனின் ஆத்மா மங்காத நட்சத்திர ஒளியைப் பெற முடிந்தது… பாலயோகீஸ்வரர்…!
எதைத் தொடர்ந்து எண்ணுகின்றோமோ அந்த எண்ணத்தின் உணர்வே தான் ஆன்மா.
1.அந்த ஆத்மாவின் விதி கொண்டு தான் நற்கதியும் துர்க்கதியும்.
2.நற்கதியின் எண்ணத்தை மதி நுட்பமுடன் எண்ணும் பொழுது ஆத்மா நிச்சயம் ஒளித் தன்மையில் பிரகாசிக்கும்.
மனிதன் “நான் என்பது யார்..?” என்பதை உணரக்கூடிய நிலையில் மெய் ஞானத்தில்
1.மகரிஷியாகக் கூடிய உயிர் தான் தன் உயிரும் என்பதை
2.ஒவ்வொருவரும் உணர்ந்தால் அந்த நிலையை எய்தலாம்…!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
ஒரு மனிதனுக்கு நாம் உதவி செய்திருந்தாலும் அந்த உணர்வின் எண்ணம் கொண்டு
1.அந்த மனிதன் நம்மை (உயிரான்மாவை) இழுத்துவிடக் கூடாது
2.அல்லது இன்னொரு மனிதனின் உயிராத்மா நமக்குள் வந்துவிடக் கூடாது.
3.நாம் இந்த உடலை விட்டுச் சென்றபின் யார் ஈர்ப்பிற்குள்ளும் சிக்கக்கூடாது.
குடும்பத்தில் குழந்தைகளின் மேல் பாசமாக இருந்தாலும் ஒருவன் மட்டும் சொன்னபடி கேட்காமல் இருப்பான். அவன் நன்றாக வாழ வேண்டும் என்று நாம் எண்ணியிருப்போம்.
ஆனால் அவன் சொன்னபடி கேட்கவில்லை எனும்போது
1.மற்ற எல்லாக் குழந்தைகளும் பிழைத்துக் கொள்வார்கள்.
2.இவனோ என்ன செய்வான்…! என்ற ஏக்கத்துடன் அவன் மீது எண்ணத்தைச் செலுத்தும் பொழுது
3.அவன் செய்யும் சேஷ்டைகளைக் (தவறான செய்கைகளைக்) கண்டவுடன்
4.நாம் வேதனைப்பட்டு அந்த வேதனை கொண்டே நாம் வாழ்வோம்.
கடைசியில் அந்த வேதனை உணர்வு கொண்டு நாம் இறக்கும் போது அந்தக் குழந்தையின் நினைவே வருகின்றது. அவன் நினைவு கொண்டு வெளி வரும் பொழுது அவன் உடலுக்குள் நாம் சென்றுவிடுகின்றோம்.
சென்ற பின்…, அவன் தீயதைச் செய்தான் அதே உணர்வு கொண்டு தீமையின் நிலைகள் கொண்டே நமக்குள் எடுத்து அவன் உடலிலே மீண்டும் தீமையைச் செய்து அவனையும் அழிக்கும் நிலைக்கே வந்து விடுகின்றது.
இதைப் போன்று தான் அவனுக்குள் சென்று அங்கேயும் வேதனையைக் கூட்டி நமக்குள் மனித சிந்தனைகள் அனைத்தும் அழிந்து உடலை விட்டுச் சென்ற பின் நாம் எங்கே செல்வோம்?
எந்த விஷத்தின் தன்மை கொண்டு மிருகங்கள் இருந்ததோ அதனின் ஈர்ப்புக்குச் சென்று நாம் மிருகத்தின் ஈர்ப்புக்குள் சென்று மிருகமாகத்தான் பிறக்க வேண்டும். இது தான் முடிவு.
எதையும் யாரையும் காக்க முடியாது.
இதைப் போன்று நாம் பாசத்தால் பரிவால் இருந்தாலும் நாம் உடலை விட்டு வெளியில் வந்தபின் எந்த உடலும் நம்மைக் கவர்ந்து விடக் கூடாது.
அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
இந்த உடலில் இருக்கும் பொழுதே மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று இந்த உணர்வை நமக்குள் செலுத்தி இந்த உணர்வின் எண்ண ஓட்டத்தைக் கூட்டினால் “எட்டாவது நிலை”.
நம் உடலில் ஒவ்வொன்றும் சலிப்பு கோபம் வேதனை ஆத்திரம் வெறுப்பு போன்ற உணர்வின் தன்மை வரும் பொழுது இங்கே வெளியில் இருக்கும் இந்த உணர்வுகள் “எந்தத் திக்கிலிருந்தும்” நமக்குள் ஊடுருவி அந்த விஷத்தின் தன்மை நம்மை மாய்த்துவிடுகின்றது.
நம் வாழ்க்கையில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வேதனையான எண்ணங்கள் உணர்ச்சியைத் தூண்டும் பொழுதெல்லாம் அடுத்த நிமிடமே அதை அடக்கிப் பழகுதல் வேண்டும். எதை வைத்து…?
அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் பெறவேண்டும் என்ற உணர்வினைக் கலந்து கலந்து நம் உணர்வின் அறிவுகளை மாற்றப்படும் பொழுது
1.இந்த உணர்வின் ஒளிச் சுடராகத் தனக்குள் வளர்ச்சி பெற்று எட்டாவது நிலை அடைந்து
2.ஒன்பதாவது உயிருடன் ஒளிச் சரீரமாகச் சேர்கின்றது.
இந்த உடலை விட்டு உயிராத்மா வெளி வரும் பொழுது எந்த உடலும் தன்னைக் கவராத வண்ணம் தீமையை நீக்கி ஒளிச் சுடராகி
1.எட்டாவது எந்த விஷத்தன்மை வந்தாலும் அதனின் ஈர்ப்பின் சக்தியை இழக்கச் செய்து
2.உணர்வை ஒளியாக வளர்க்கச் செய்து விண்ணின் தன்மை எட்டுவது விஜய தசமி.
3.ஆக “ஈரெட்டு பதினாறு – என்றும் பதினாறு”.
உடலுக்குள் விஷத்தின் தன்மை எட்டு. உடலை விட்டு வெளியில் சென்ற பின் எட்டு. மற்ற கோள்களின் சக்திகள் எதையும் தன்னை நாடாவண்ணம் இந்த உணர்வின் தன்மை கொண்டு ஒளியாக மாறி விண் செல்வதே கடைசி நிலை.
அதுதான் பத்தாவது நிலை.
மகாபாரதத்தில் பதினெட்டாம் நாள் போர் என்று காண்பித்திருப்பார்கள்.
நம் உடலுக்குள் நின்று பத்தானாலும் வெளியில் வந்து எட்டுக் கோள்களின் எதிர்ப்பு சக்தியான விஷத்தின் தன்மையை முறியடித்து தன் உணர்வின் தன்மை ஒளியாகச் சேர்ந்து என்றும் பதினாறு ஈரெட்டு பதினாறு.
உடலுக்குள் வரும் தீமையை மாய்த்து ஒளியின் உணர்வை வளர்த்து வெளியில் சென்றபின் தீமை தன்னை அணுகாத நிலைகள் கொண்டு அந்த உணர்வின் ஒளியின் சுடராகச் செல்வது பதினெட்டு.
பதினெட்டாம் நாள் போர் என்று மகாபாரதப் போரின் தத்துவத்தில் இந்தப் போரை வென்றவன் தான் விண்ணை அடைகின்றான். பத்து + எட்டு = பதினெட்டு

