2004ல் ஆரம்பித்து அதற்கு மேல் உலகில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் கடுமையான விஷத் தன்மைகள்

End of the world

2004ல் ஆரம்பித்து அதற்கு மேல் உலகில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் கடுமையான விஷத் தன்மைகள்

 

இன்று நாம் எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்ற நிலைகள் இருக்கும் பொழுது சீராக இயங்குகின்றது.
1.ஆனால் அதற்குள் மாறுபட்ட உணர்வுகள் கலந்து விட்டால்
2.அந்த எலெக்ட்ரானிக் கருவியே முழுவதும் செயலிழந்து விடுகின்றது.

அதைப் போன்று தான் இன்றைய நிலைகளில் சூரியனின் மாற்றம் எலெக்ட்ரிக் அதிகமாக உருவாகும் சக்தியாக வளர்ந்து விட்டது.

காரணம் மனிதன் அணுக்கதிரியக்கங்களை உருவாக்கி வான் வீதியில் பரீட்சித்துப் பார்த்த இந்த உணர்வுகள் மற்ற கோள்களுக்குள்ளும் சென்று அதன் உணர்வுகள் இன்று உமிழ்த்திச் சூரியனுக்கு அருகே வரும் நிலைகள் வந்துவிட்டது.

அதிலே மோதல் ஏற்பட்டால் என்ன ஆகும்…?

உதாரணமாக மின்சாரம் இரு மடங்காக வந்தால் பல்புகள் ப்யூசாகிவிடும் (FUSE)… மோட்டார்கள் எல்லாம் எரிந்து விடும். அதைப் போல சூரியனுள் உருவாகும் அதீத மின்சாரம் இரு மடங்காகப்படும் பொழுது (SUN FLARE EMISSION)
1.நம் உயிரின் தன்மை துடிப்பு அதிகமாகும்.
2.நம் உடலுக்குள் இருக்கும் அணுக்களும் அதே நிலையாகும்.

அதே சமயத்தில் விஞ்ஞான அறிவால் கண்டுணர்ந்த கம்ப்யூட்டர் நிலைகள் பாதுகாப்பாக இருந்தாலும் எதிர் நிலையின் மோதல்களால் கம்ப்யூட்டர் செயல் இழந்துவிடும். கன்ட்ரோல் (CONTROL) இல்லாது போகும்.

அப்படிப்பட்ட நிலையானால் விஞ்ஞானத்தால் உலகம் முழுவதற்கும் நஞ்சின் தன்மை பாய்ந்து பரவும் நிலை இருக்கின்றது. விஞ்ஞான உலகில் அஞ்ஞான வாழ்க்கை வாழ்ந்து கண்டுபிடித்த உணர்வுகள் உடலுக்கு நல்லது என்றாலும்
1.அடுத்த நாட்டை அழிக்க விஷத் தன்மைகளை உருவாக்கித் தன்னைப் பாதுகாக்கச் செய்த நிலையில் பரவச் செய்த அலைகள்
2.சூரியனால் அந்த விஷத் தன்மைகள் பூமிக்குள் பரவி பிரபஞ்சத்திலும் பரவி
3.மீண்டும் சூரியனின் ஈர்ப்பு வட்டத்தில் செல்லப்படும் பொழுது இரு மடங்கு மின்சாரம் அதிகமாக உருவாக்கும் தன்மை வந்து விடுகின்றது.

அப்பொழுது காட்டுகளில் இருக்கும் விலங்குகள் போல் மனிதனின் சிந்தனைகள் தவறிவிடும்.
1.உயிரின் துடிப்பு அதிகமாகும் பொழுது ஈர்க்கும் சக்தி அதிகமாகி
2.நரம்பு மண்டலங்கள் எல்லாம் இயக்கங்கள் மாறி
3.பித்துப் பிடித்தவன் போல் சிந்திக்கும் தன்மை இல்லாது பைத்தியம் பிடிக்கும்.

இதைப் போன்ற இந்த உணர்வின் வலுவாகிவிட்டால் மனிதனுக்கு மனிதன் தாக்கும் நிலைகளும் சிந்தனையற்ற நிலைகளும் வருகின்றது.

மற்ற உயிரினங்கள் எதுவோ பூமிக்குள் வங்கிட்டுக் குடி கொண்டுள்ள மற்ற உயிரினங்கள் நில நடுக்கம் வரும் பொழுது அதை அறிந்து கொள்கிறது. உடனே வெளியேறுகின்றது. (மனிதனுக்கு அது தெரிவதில்லை).

இதைப் போன்ற இயற்கையின் உண்மைகளை அறிந்து இயக்கம் பரிணாம வளர்ச்சியில் வருவதை உணர்வின் அதிர்வுகளைக் கண்டு மற்ற உயிரினங்க தன்னைத் தான் பாதுகாத்துக் கொள்கின்றது.
1.மனிதனுக்கு அப்படி இல்லை…!
2.வந்து தாக்கும் பொழுது தான் தெரிந்து கொள்கின்றான்.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால் 2004ல் ஆரம்பித்து அதற்கு மேல் சென்றால் மிகக் கடினமான காலங்களாக வருகின்றது.

இப்பொழுது பத்திரிக்கை டி.வி.யில் பார்க்கின்றோம். மதம் இனம் என்று மனிதனுக்கு மனிதன் வெறி கொண்டு தாக்குவதைப் பார்க்கின்றோம். இவன் அவனைத் தாக்க… அவன் இவனைத் தாக்க… என்ற இந்த நிலைகள் தான் வருகின்றது.

மனித இனமே அழித்திடும் உணர்வுகளாக இன்று விளைந்து அஞ்ஞான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு
1.மதத்தின் அடிப்படையிலும் சரி
2.இனத்தின் அடிப்படையிலும் சரி
3.தெய்வ பக்தியின் அடிப்படையாக இருந்தாலும் சரி
4.விஞ்ஞான அறிவிலும் சரி
5.இதுகள் எல்லாம் சிந்திக்கும் திறனை இழக்கச் செய்து
6.மனிதனை மனிதன் கொன்று குவிக்கும் நிலைகளாக விஷத் தன்மைகள் கூடி
7.அதற்குள்ளேயே நாம் வாழும் தருணம் வந்துவிட்டது.

இதிலிருந்தெல்லாம் நாம் மீள்தல் வேண்டும் என்பதற்குத்தான் அந்த மெய் ஞானிகளின் ஆற்றல் மிக்க சக்திகளை உங்களுக்குள் மீண்டும் மீண்டும் தெளிவாகக் கூறி ஆழமாகப் பதிவாக்குகின்றோம்.

அதை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தால் அதை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் உங்கள் எண்ணம் நிச்சயம் காக்கும்…!


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply