
அதிகாலைப் பிரார்த்தனையில் மிகவும் முக்கியமானது…!
ஞானகுருவின் (சாமிகள்) தந்தை தாய் இருவர் உடலை விட்டுப் பிரியும் நேரத்திலும் ஈஸ்வரபட்டர் அவரை *அருகில் விடாது…!* செய்தார்.
இருந்தாலும் ஆன்மாக்கள் வெளி வந்த பின் உடனடியாக சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து அதன் பின்தான் சப்தரிஷி மண்டல ஆற்றலை அதிகமாகப் பெற்றேன்.
1.சில “நுண்ணிய…!” நிலைகளையும் அங்கிருந்து பெற்று
2.உங்களிடம் நான் தைரியமாகச் சொல்ல முடிகிறது என்கிறார் ஞானகுரு.
உடல் மேல் தான் நாம் எல்லோரும் பாசம் வைத்திருக்கின்றோம். ஆனால் அந்த உடலை விட்டுப் பிரியும் ஆன்மாக்களை யார் ஈர்ப்புக்குள்ளும் செல்லாது “அலுங்காது…* விண் செலுத்த வேண்டும் என்று இதன் மூலம் உணர்த்துகிறார்.
1.மனிதனாகப் பிறந்து எவ்வளவோ கஷ்டப்பட்டு வாழ்ந்தாலும்
2.முடிவில் – மீண்டும் இன்னொரு உடலுக்குள் எக்காரணம் கொண்டும் போகவிடக்கூடாது என்பதை
3.மிகத் தெளிவாக அழுத்தம் திருத்தமாக அந்த அனுபவத்தின் மூலம் உணர்த்துகின்றார்.
ஆகவே காலை எழுந்ததும் “என்னுடைய முதல் பிரார்த்தனையே…!” உடலை விட்டுப் பிரிந்த உயிராத்மாக்கள் அனைத்தும் அழியா ஒளிச் சரீரம் பெற்றுப் பிறவியில்லா நிலை அடைய வேண்டும். அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்பது தான்.
1.பேய் பிசாசு ஆவி என்று மற்றவர்கள் சொல்கிற எதுவாக இருந்தாலும்
2.அந்த உயிரான்மாக்களும் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும்.
3.அழியா ஒளியின் சரீரம் பெறவேண்டும்… சப்தரிஷியாக வேண்டும் என்று உந்தி
4.குருநாதர் காட்டிய வழியில் அனுதினமும் செலுத்திக் கொண்டே இருக்கின்றேன்.
இது உடலை விட்டுப் பிரிந்தவர்களுக்குச் செய்யும் பிரார்த்தனை
உலக மக்கள் அனைவருக்கும் சப்தரிஷி மண்டல அலைத் தொடர்பு கிடைக்க வேண்டும். உடலை விட்டு அவர்கள் பிரிந்தால் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்பது உடலுடன் இருப்பவர்களுக்குச் செய்யும் என்னுடைய பிரார்த்தனை.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.