
“பிராணன்…” (சுவாசம்) பற்றி ஞானிகள் சொன்னதன் உண்மை நிலைகள்
பிராணயாமம் என்று சொல்லி மூச்சை எடுத்து உடலுக்குள் அதிகமாகச் செலுத்தப்படும் பொழுது உடலில் எதன் வேக உணர்வுகள் அதிகமாகின்றதோ அதைக் கவர்ந்து விடும்.
சுவாசித்த உணர்வுகள் உயிரிலே ஃபில்டர் பண்ணக்கூடிய சளி அதை வடிகட்டும்… அதிகமானால் வெளியே தள்ளிவிடும். வடிகட்டிய நிலையில் தான் வருகின்றது.
ஆனால் சுவாசித்து உள்ளே செலுத்தும் போது உந்து விசை அதிகரிக்கப்படும் பொழுது சுவாசப் பைகள் மூலம் உடலுக்குள் அதிகமாகச் சென்று விட்டால் ஒரு பக்கம் உணர்த்தச் செய்து… செயல்படும் போது நாளடைவில் இந்த உறுப்புகளில் பலவிதமான இருமல்கள் வரும்.
1.இதே உணர்வு நுரையீரலில் அழுத்தப்பட்டு உடல் முழுவதற்கும் இந்த வாயுவை உந்தப்படும் பொழுது
2.வாயு மண்டலத்தை இழுத்துச் செல்லும் நரம்பு மண்டலங்களுக்குள் சென்றவுடன்
3.இவர்கள் எதை எடுத்தார்களோ அதன் உணர்வின் தன்மை விஷத்தன்மையாக மாறிக் கடு கடு… கிடு கிடு.. என்று ஓடும்.
பிராணயாமம் செய்பவர்களைக் கடைசியில் கேட்டால் இதையெல்லாம் சொல்வார்கள்.
பிராணயாமம் செய்வதை இவர்கள் கற்றுக் கொள்ளலாம். ஆனால் வேதனைப்படும் நேரங்களில் என்ன செய்கிறது…? என்று எடுத்துச் சுவாசித்துப் பார்ப்பார்கள். அந்த உணர்வு உடலுக்குள் வரும் பொழுது வேதனையை உருவாக்கும் உணர்வின் தன்மை வந்து விடும்.
பிராணயாமத்தின்படி இதை எடுத்துப் பிறருடைய உணர்வுகளைச் சுவாசித்துப் பார்ப்பது சரம்.
1.அவர் உணர்வுக்கும் நம் உணர்வுக்கும் என்ன மோதுகின்றது…?
2.அவர் என்ன நினைக்கின்றார்…? அவர் உடலில் என்ன இருக்கின்றது…? என்ற நிலையைச் சுவாசித்துப் பிராணயாமம்
3.உயிரிலே பட்டு உணர்ந்து கொண்டாலும் பிறருடைய எண்ணங்களைக் கவர்கின்றது.
இதைக் கவர்ந்து இந்த உணர்வின் தன்மை உடலுக்குள் சென்றால் வாயு மண்டலங்களில் விஷத்தன்மையாகிக் கை கால் குடைச்சல் என்ற நிலையாகிவிடும்.
இதே உணர்வுகள் வாயுவாக நேரடியாகச் சென்று ரத்த நாளங்களில் கலப்பதற்கு முன் சுவாசப்பை வழி சென்று உடலுக்குள் விஷத்தைப் பரப்புவது தான் இதெல்லாம்.
குருநாதர் இதை எல்லாம் தெளிவாகக் காட்டுகின்றார்.
நேரடியாகச் சுவாசித்து (வழக்கமான வழி) உமிழ் நீராகி அந்த உமிழ் நீர் உணவுடன் கலந்து அந்த உணவுக்குள் உயர்ந்த நிலை ஆன பின் இரத்தமாக மாறி
1.அந்த ரத்தத்தின் தன்மை வரப்படும் பொழுது எந்தக் குணத்தை எண்ணுகின்றோமோ அந்த உணர்வு வழி பிராணயாமம்.
2.அந்த உணர்வுகள் பிராணனை உருவாக்கி அதன் வழி நமக்குள் உருவாக்குதல் வேண்டும் என்பதுதான் முறைகள்.
இவர்கள் சொன்ன மாதிரி வடகிளை தென்கிளை என்று சுவாசித்து வடிகட்டும் திறனை இழந்து சூரிய கலை சந்திர கலை என்று அல்ல.
நுரையீரலில் பம்ப் ஒரு பக்கம் பிஸ்டன் இருக்கின்றது இன்னொரு பகுதியில் அடைக்கின்றது. சுவாசப்பைகளில் ஒன்று இழுத்துத் தள்ளியபின் அடைக்கும். மீண்டும் அது இழுத்து அதைத் தள்ளும்.
ஆகவே நமக்குள் பம்ப் செய்யும் முறைகளைப் பற்றி அந்த ஞானிகள் சொல்லி இருந்தாலும் அடைத்து இழுக்கிறது என்றால் “இவர்கள் மூக்கை அடைத்து இப்படிச் செய்கின்றார்கள்…”
கீதா உபதேசத்தினைக் கண்ணன் கூறுகின்றான் என்பார்கள். கண்களால் பார்க்கும் பொழுது எதன் உணர்வை நுகர்கின்றோமோ உயிரிலே படுகிறது. அப்போது கண்ணன் குருச்சேத்திரப் போரை வழிநடத்துகின்றான்.
உதாரணமாக…
1.ஒரு தீமையான உணர்வை நுகர்ந்தால் நம் கண் கருவிழி ருக்மணி அதைப் பதிவாக்குகின்றது.
2.கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலன் தீமையான உணர்வைக் கவர்கின்றது.
அது கவர்ந்து கொண்ட பின் உயிரிலே பட்ட பின் நமக்குள் இருக்கும் நல்ல குணங்கள் வலு குறைகின்றது. தீமையான உணர்வு உயிரிலே மோதியபின் உடலுக்குள் இருக்கும் உயிரே அதற்குக் குருவாக இருக்கின்றது.
அதைத்தான்
1.கண்கள் தீமை என்ற உணர்வை எடுத்து உயிரிலே பட்டுத் தீமை என்று அறிவிக்கச் செய்கின்றது.
2.கண்ணால் பார்த்தாலும் உணர்வால் உயிரிலே மோதும் பொழுது தான் கண்ணனின் சகோதரி திரௌபதை.
எதைக் கொடுத்தாலும் அதை வழிநடத்திச் செல்லக்கூடிய உயிர்… திரௌபதை என்று ஏனென்றால் கண்ணால் பார்க்கின்றோம் உயிரால் உணர்கின்றோம் என்பதைக் கண்ணனின் சகோதரி… திரௌபதை.
கண்கள் பார்ப்பதால்… அதை உணர்வால் நமக்குள் அறிவிக்கின்றது என்பதை நாம் உணர்வதற்காக இவ்வாறு செய்தனர்.
எல்லாவற்றிற்குமே காரணப் பெயரை வைத்து ஒவ்வொரு நிலைகளிலும் நம் உணர்வுகள் என்ன செய்கின்றது…?
1.உயிரின் இயக்கமும் கண்களின் இயக்கமும் உடலின் இயக்கமும் என்ற நிலைகளில்
2.இந்த உணர்ச்சிகளால் எப்படி இயங்குகின்றது…? என்ற நிலையை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்குச் சாஸ்திரங்கள் பல உண்டு.
ஆனால் அதைத் தவறான வழிகளில் இன்று மனிதனின் வாழ்க்கைக்காக “எத்தனையோ நீடித்த நாள் வாழலாம்…” என்று பிராணயாமம் செய்து தீமையின் நிலைகள் கொண்டு மீண்டும் எதை வளர்த்துக் கொண்டோமோ அதற்குத்தக்க “இன்னொரு உடல் பெறுவது திண்ணம்…”
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.