கூட்டமைப்பின் மூலம் நாம் உருவாக்க வேண்டிய பேரருள் பேரோளி

கூட்டமைப்பின் மூலம் நாம் உருவாக்க வேண்டிய பேரருள் பேரோளி

 

கூட்டுத் தியானத்தின் மூலம் “அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்” என்ற உணர்வினைக் கூட்டமைப்பாக நாம் வெளிப்படுத்தும் போது
1.அனைவரது செவிகளிலும் அது பட்டு இந்த உணர்வுகள் உயிருக்கு எட்டிக் கண்ணுக்குப் பாய்ச்சப்பட்டு
2.கண்ணின் துணை கொண்டு இந்தப் பூமியில் பரவி இருப்பதையும்… சொல்லும் உணர்வையும் கவர்ந்து
3.அத்தகைய வலுக் கொண்ட அணுவாக உடலுக்குள் உருவாக்குவது தான் கூட்டுத் தியானத்தின் அமைப்பு.

பல பொருள்களைப் போட்டுச் சுவைமிக்க குழம்பாக உருவாக்குவது போன்று பலரும் ஒன்றாகச் சேர்த்து அனைவரும் நலம் பெற வேண்டும்… இருளில் இருந்து மீள வேண்டும்… நஞ்சில் இருந்து விடுபட வேண்டும்… பேரருள் பெற வேண்டும்… மகிழ்ந்து வாழ வேண்டும் என்ற உணர்வைச் சொல்லப்படும் பொழுது இந்தக் கூட்டமைப்பின் உணர்வின் சக்தி நமக்குள் “பேரருள் சக்தியாக மாறுகின்றது…”

இப்படி…
1.ஒவ்வொரு மனித உடலிலும் விளையும் அந்த அருள் உணர்வுகளை ஒன்றாக இணைத்துக் கூட்டுத் தியானத்தினை வளர்ப்போம் என்றால்
2.கடும் தீமைகளை வெல்லும் ஆற்றலை நாம் அனைவருமே பெறுகின்றோம்.

ஆகவே இந்தக் கூட்டமைப்பை நாம் ஒழுங்குப்படுத்தி அதைப் பற்றுடன் செயல்படுத்தி பேரருளை நமக்குள் கூட்டுதல் வேண்டும்.

அந்தப் பேரருள் என்ற உணர்வே துருவ நட்சத்திரத்திலிருந்து பெற்றது தான். அதன் உணர்வை நமக்குள் கவர்ந்து பேரருள் என்ற இயக்கச் சக்தியை… தீமைகளை அகற்றும் வல்லமை பெற வேண்டும் என்பது தான் நமது நோக்கம்.

ஒவ்வொரு உயிரும் ஈசனாக இருந்து… ஒவ்வொரு உடலும் கோயிலாக இருந்து… அந்தக் கோவிலுக்குள் மனிதனாக இருக்கும் நற்பண்புகளையும் நற்செயல்களையும் நல்ல உணர்வுகளையும் தீமையை அகற்றும் உணர்வாக விளையச் செய்துள்ளது.

ஆகவே…
1.நஞ்சினை வென்று உணர்வைப் பேரருளாக மாற்றும் இந்த மனித உடலுக்குள் இருக்கும் பேருண்மைகளை நாம் உணர்ந்து
2.பகைமை உருவாகாது அருள் ஒளியைப் புகுத்தி… அருள் ஞானத்தைப் பெருக்கிப் பேரருளாக மாற்றி
3.நமது சொல்லும் செயலும் கேட்போர் உணர்வுகளில் மகிழ்ச்சி பெறச் செய்வதும்
4.அவர்கள் பேரானந்த நிலைகளில் வாழும் பொழுது அதை நுகர்ந்து அரும்பெரும் சக்தியாக நமக்குள் மாற்றி அமைப்பது தான் கூட்டுத் தியானத்தின் நோக்கம்.

இதை எல்லாம் அனைவரும் பெற்று மகிழ்ந்து வாழ வேண்டும். பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும். பேரானந்த நிலை பெற வேண்டும்.1.
1.அந்தப் பேரருளைப் பெற்று அனைவரும் பேரொளியாக வாழ வேண்டும்
2.அனைவரும் பேரருளைப் பெற்று பேரொளியின் இயக்கமாக இருக்க வேண்டும் என்ற
3.இந்த உயர்ந்த நோக்கத்துடனே நாம் அனைவரும் செயல்படுவோம்… கூட்டமைப்பின் மூலமாக நாம் இதை உருவாக்குவோம்.

அவரவர்கள் பெற்ற உண்மைகளைத் தெளிவாக்கி அனைவரையும் தெளிவாக்குவோம்… மற்றவர்கள் இருளைப் போக்கிடும் சக்தியாக இது வளரட்டும்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply