
இயற்கையின் மாற்றங்கள்… “வளர்ச்சிக்கு எப்படிச் செயல்படுகிறது…?”
நம் பூமியில் ஒவ்வொரு மரமும் செடியும் எதை எடுத்து உருவானதோ அதைத்தான் காற்றிலிருந்து எடுத்து வளர்கின்றது.
வேப்பமரம் அதன் சத்தை எடுக்கின்றது. அதிலிருந்து வரக்கூடிய மணத்தைச் சூரியன் எடுத்துக் கொண்டால் அலைகளாகப் படர்கின்றது. இதே போன்று ரோஜாப்பூவின் மணமும் விஷச் செடியிலிருந்து வெளிப்படும் மணமும் சூரியனுடைய காந்த சக்தியால் கவரப்பட்டு அலைகளாகப் படர்கின்றது.
ஆனால் இவைகள் ஒன்றுடன் ஒன்று சந்தித்து மோதும் பொழுது அந்த அளவுகோலுக்குத் தக்கப் புது வித்தாகிறது.
வேப்பமரம் 100% ரோஜாப்பூ 10% விஷச் செடியின் சத்து 1% எல்லாம் சேர்ந்து இரண்டு கலவைகளாகும் போது கருவேப்பிலையாகிறது.
1.அதற்கு நாதங்களைப் பற்றிக் குருநாதர் காட்டுகின்றார்.
2.மரம் ரிக். வேப்பமரத்தின் மணம் சாம இசை. வேப்ப மரத்தின் மணத்தை நாம் நுகர்ந்தால் “ஓய்…” என்று சப்தம் வருகின்றது… வாந்தி வருகின்றது.
3.ரோஜாப் பூவின் மணத்தை நுகர்ந்தால் ஆகா..ஹா… என்று சொல்லி ஆனந்தப்படுகின்றோம்.
4.விஷச் செடியின் மணத்தை நுகர்ந்தால் உச்..உச்..உச்..உச்… என்று சொல்கின்றோம்.
5.அந்த இசைக்குத் தக்க உச்..உச்… என்பது “இழுக்கக்கூடிய சக்தி” அதிகமாகின்றது.
6.ஆனால் வேப்பமரம் “உந்தித் தள்ளும் சக்தி” அதிகமாக இருக்கின்றது.
7.ரோஜாவின் மணம் ஆகா… என்று சொன்னாலும் அதுவும் “இழுக்கும் சக்தி” பெறுகின்றது.
இது இரண்டும் விஷச் செடியின் மணத்தை எடுத்த பின் உச்..உச்… என்கிற பொழுது இந்த மணங்களைச் சேர்த்துச் “சுழலின் தன்மைக்கு” வருகின்றது.
சுழலின் தன்மை வந்த பின் வேம்பின் சத்தைச் சேர்க்கின்றது. மூன்றும் ஒன்றாக இணைகிறது. இணைந்து கொண்ட பின் கருவேப்பிலையாக மாறுகின்றது.
செடி கொடிகளில் இப்படி மாற்றங்கள் ஆகி வளர்ச்சிக்கு வருகின்றது.
அதே போல் உயிரணு தோன்றிய நிலையில் மனிதனாக வரும் வரையிலும் எத்தனையோ விதமான உணர்வை எடுத்து உயிருக்கு தக்க உனர்வுகள் எடுத்து ரூபங்கள் மாறி வந்தது.
முதலில் சொன்ன மாதிரி கருவேப்பிலையாக எப்படி மாறியது…?
1.கசப்பு… நல்ல மணம்… அந்த அரிப்பு… மூன்றும் சேர்ந்து அது உருவாகின்றது.
2.கருவேப்பிலையைத் தேய்த்தால் அரிப்பு வரும்.
3.ஆனால் மற்றொன்றுடன் சேர்த்தபின் ருசி வருகின்றது என்பதை உணர்த்துகின்றார் குருநாதர்.
இதே போல் தான் 27 நட்சத்திரங்கள் பிற மண்டலங்களிலிருந்து கவரும் சத்தினைக் கோள்களும் சூரியனும் கவர்ந்து அதனுடைய கலவைகள் எப்படி எல்லாம் மாறுகிறது என்பதை “நேரடியாகக் காட்டினார் குருநாதர்…”
மலை உச்சிக்கு அழைத்துச் சென்று எத்தகைய மறைப்பில்லாத இடத்தில் வைத்து அதைக் காட்டுகின்றார். யாம் கண்டது அனைத்தும் நீங்களும் காண முடியும்… அறிய முடியும்…! வரிசைப்படுத்தி எடுத்து வளர்த்துக் கொண்டால்…!
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.