December உபதேசம் 2025

விண்ணுலகில் “ஒளிச் சரீரமாக வாழும் நிலை” எப்படிப்பட்டது…?

 

நமது பிரபஞ்சத்தில் 27 நட்சத்திரங்கள் உண்டு. ரேவதி நட்சத்திரத்திலிருந்தும் கார்த்திகை நட்சத்திரத்திலிருந்தும் துகள்கள் வரப்படும் பொழுது சூரியன் தன் உணவுக்காக அவைகளை எடுத்துக் கொள்கிறது. இடைமறித்து மற்ற கோள்கள் கவர்ந்து அதனின் மாற்றங்கள் ஆகின்றது.

கார்த்திகை நட்சத்திரத்தின் சக்தி அதிக வலிமை பெற்றது… ஆண்பால். ஆணைக் கண்டு பெண் எப்படி ஒதுங்கிச் செல்கின்றதோ அதைப்போல ஒதுங்கிச் செல்லும் நிலைகள் பெற்றது ரேவதி நட்சத்திரத்தின் நிலைகள்.

இருப்பினும்… இதன் உணர்வின் அழுத்தம் அதிகமான பின் ரேவதி நட்சத்திரத்தின் உணர்வலைகள் விலகிச் செல்கிறது. விலகிச் செல்லும் மார்க்கத்தில் வியாழன் கோளிலிருந்து வெளிப்படக்கூடிய ஆவியின் தன்மை ஊடுருவி விட்டால் சுழற்சியாகி… வேகம் அதிகமாகின்றது.

சுழற்சியின் வேகம் அதிகமாகும் பொழுது இதன் அருகிலே வந்த அந்தக் கார்த்திகை நட்சத்திரத்தின் சக்தியை இழுத்து இரண்டும் மோதி விடுகின்றது.

இப்படி மோதி விட்டால்
1.ஆண் பெண் என்ற உணர்வுகளில் ரேவதி நட்சத்திரத்தின் உண்ர்வுகள் அதிகமானால் பெண்பாலை உருவாக்கும் சக்தி வருகின்றது.
2.கார்த்திகை நட்சத்திரத்தின் சக்தி அதிகமானால் ஆண்பாலை உருவாக்கும் சக்தி பெறுகின்றது.
3.ஆகவே… ஆண் பெண் என்ற நிலைகள் கொண்டு தான் உயிரிலே இயக்குகின்றது.

அதைப் போல் இந்த அருள் வழியில் கணவன் மனைவி இருவரும் ஒத்த உணர்வு கொண்டு இயக்கினால் “எதனையும் வெல்லக்கூடிய சக்தி பெறுகின்றது…”
1.இங்கிருந்து நாம் சப்தரிஷி மண்டலத்தில் இணைந்த பின்
2.ஒவ்வொரு நட்சத்திரமும் ஒவ்வொன்று தான்…!

இதிலே தெளிவாக்கி உணர்வின் தன்மை இருளை நீக்கி உணர்வினை ஒளியாக மாற்றும் சக்தி மனித உடலில் பெற்ற பின் ஆறாவது அறிவு ஏழாவது ஒளியாக மாறுகின்றது. அது தான் சிருஷ்டித்துக் கொண்டது என்று சொல்வது.

தீமைகளை… பகைமைகளை… நஞ்சினைத் தனக்குள் வராதபடி மாற்றியமைக்கும் திறன் மனித உடலில் பெற்றதனால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற்ற பின் அதன் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலத்திற்குச் செல்கின்றோம்.
1.ஆனால் துருவ நட்சத்திரத்தின் இணைப்புடன் வாழ்ந்தால்
2.பூமியில் நண்பர்கள்… உறவினர்கள்… என்று இருந்தாலும் அதை அறிந்து கொள்ளும் நிலை இல்லை.
3.ஆனால் ஒன்று சேர்ந்து வாழும் இயக்கச் சக்தியாக மாறும்.
4.ஒன்றுடன் ஒன்று இணைந்து துருவ நட்சத்திரத்தில் உணர்வைக் கவர்ந்து வாழும் தன்மை வருகிறது.

நமது பிரபஞ்சம் பிற நிலைகளிலிருந்து எடுத்தாலும் சூரியன் எப்படி வளர்கின்றதோ இதைப் போலத் தான் சப்தரிஷி மண்டலங்களில் நாம் இருக்கப்படும் பொழுது “மனிதனுக்கு மனிதன்…” அறிந்திடும் நிலை வராது.

இருளை அகற்றிடும் வலிமை பெறும்… ஏழாவது ஒளி நிலை பெறும். அதை நாம் நுகர்ந்து உடலுக்குள் சேர்த்துக் கொண்டால் பகைமைகளை அகற்றிச் சிந்திக்கும் தன்மை பெறச் செய்யும்.

அதைத்தான் ரிஷியின் மகன் நாரதன் நாராயணனின் அபிமான புத்திரன் நாரதன் என்று சொல்வது. தான் சிருஷ்டித்து கொண்டது தான் ரிஷி.

கணவனும் மனைவியும் இருளை நீக்கி உணர்வினை ஒளியாக மாற்றியது துருவ நட்சத்திரம். அதைப் பின்பற்றிய அனைவரும் ஆறாவது அறிவு ஏழாவது ஒளி… சப்தரிஷிகள் சிருஷ்டித்துக் கொண்டவர்கள்…! என்று பொருள்… உணர்வின் ஒளி அலைகள் கொண்டு.

வேப்ப மரத்தின் கசப்பை நாம் நுகர்ந்தால் ஓய்… வெளியே வருகின்றது. ரோஜாப் பூவின் மணத்தை நுகர்ந்தால் ஆகா..கா… என்று இணைந்து செயல்படும் உணர்வுகள் வருகின்றது.

அதைப் போல் நாம் ஒளிச் சரீரம் பெற்று விண்ணிலே வாழும் நிலைகளில்
1.அதற்கு மாறான உணர்வுகள் அங்கே சென்றால் இந்த உணர்வைப் பிரித்து விட்டுத் தன் உணர்வினை ஒளி என்று தான் உருவாக்கும்.
2.அங்கே பண்பும் அன்பும் ஒன்று சேர்த்து வாழும் தன்மை வரும்.
3.துருவ நட்சத்திரத்துடன் இணைத்து வாழும் உணர்வுகள் வரும் போது அதைப் பங்கிட்டு ஒளியின் தன்மை பெறும்.
4.விண் சென்ற பின் தன் நண்பன் என்று அறியாது.

ஆக அப்படி அறியக்கூடிய பருவம் வந்தால் மனித நிலைக்குத்தான் வரவேண்டும்.

விண் சென்ற நிலையில்… என்றுமே இருளை நீக்கி ஒளி என்ற உணர்வை ஊட்டி ஒன்றுபட்டு வாழும் தன்மை வரும். ஒளிக்குள் ஒளியாகும் பொழுது அகத்தின் ஒளியாகும் பொழுது இருளை வெல்லும் தன்மையும் நஞ்சை வெல்லும் தன்மையும் பெறுமே தவிர “அதற்குப் பின் இங்கே (பூமிக்குள்) வர முடியாது…”

என்றும் ஏகாந்த நிலையாக… எதுவுமே பகைமை இல்லாத நிலையும் பகைமையை மாற்றி அமைக்கும் சக்தியை இந்த மனித உடலில் பெற்றுத்தான் நாம் அங்கே செல்ல முடியும். இது தான் ஆறாவது அறிவு ஏழாவது ஒளி சப்தரிஷி – சிருஷ்டித்துக் கொண்டது.

கணவன் உயிராக இருந்தாலும் அதற்குள்ளும் பெண்பால் உணர்வுகள் உண்டு. மனைவி என்ற நிலையில் இருந்தாலும் அந்த உயிரில் ஆண்பால் என்ற உணர்வு உண்டு.

செடி கொடி கல்லானாலும் மலையானாலும் இதைப் போன்று நட்சத்திரத்தின் உணர்வுகள் எது கலவையானதோ அதற்குத்தக்க வளர்ச்சி இருக்கும்.

பெண்பால் உணர்வுகள் அதிகமானால் மலைகளில் வளர்ச்சி அதிகமாக இருப்பதும் ஆண்பால் உணர்வுகள் இருந்தால் வளர்ச்சி கம்மியாக இருப்பதும் உண்டு.

வெறும் ஆண்பால் என்ற உணர்வு வரப்படும் போது தன் இனத்தை விருத்தி செய்து வளர்க்க முடியாது.

அதே போல் பப்பாளி மரத்தில் ஆண்பால் என்ற உணர்வுகள் செல்லும் பொழுது தான் பெண் பப்பாளி தன் இனத்தை விருத்தி செய்யும் வித்துக்களை உருவாக்குகின்றது. ஆண்பால் என்ற அந்த பப்பாளி மரம் இல்லை என்றால் அந்த அமிலம் படவில்லை என்றால் பப்பாளி மரத்தின் வளர்ச்சி குன்றும்.

இது எல்லாம் இயற்கையின் நியதிகள்.

இதன் உணர்வு கொண்டு சப்தரிஷி மண்டலங்களாக மாற்றப்படும் பொழுது நம் உயிர் அங்கே பகைமை என்ற நிலை இல்லாது ஒருக்கிணைந்த நிலைகளில் வாழ முடியும்.

1.பகைமையற்ற நிலைகள் கொண்டு என்றும் ஒளியாக வாழ…
2.ஒன்று சேர்த்த இயக்கத்தை நமக்குள் உயிர் என்ற நிலை இருக்கும் போது
3.உடலுக்குள் இருக்கும் அணுக்களில் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்க்கப்படும் பொழுது தனுசுகோடி.

புழுவில் இருந்து மனிதனாக வரும் வரையிலும் தீமைகளை நீக்கி நீக்கி வந்தது… கோடிக்கரை. ஆகவே அந்த உடல் பெறும் உணர்வுகள் சிவ தனுசு.

ஆனால் அதே சமயத்தில் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரம் பெற்ற அந்த உணர்வினை நமக்குள் பெருக்கி விட்டால் தனுசுகோடி. தீமைகளை வென்று உணர்வின் தன்மை ஒன்றாக்கி
1.உயிரைப் போன்ற உணர்வு ஒன்றாக்கப்படும் பொழுது
2.”ஒன்றென்ற நிலைகள் இயக்குவது தான்… தனுசுகோடி…” என்று கூறப்படுகின்றது.

பகைமைகளை அகற்றி அருள் உணர்வைக் கூட்டி உயிருடன் ஒன்றி நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அனைத்தும் ஒன்றாகச் சேர்க்கப்படும் பொழுது… கணவன் மனைவியாக அதை உருவாக்கப்படும் போது சப்தரிஷி.

இருளை அகற்றி நல்ல உணர்வினைச் சேர்க்கும் தன்மை… அதாவது “விஷத்தை ஒளியாக மாற்றும் சக்தி பெற்றது…” என்பதனை நாம் எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும்.

ஆன்மீகத்தில்… ஒன்றுபட்ட கூட்டமைப்பைக் எப்படிக் கொண்டு வர முடியும்…?

 

மற்றவர்கள் செயலை நேருக்கு நேர் பார்த்து “நீ தவறு செய்கின்றாய்…” என்று சொல்லிக் கொண்டே இருந்தால் என்ன ஆகும்…? கேட்க மாட்டார்கள்…!
1.சொல்லால் சொல்லி யாரையும் திருத்த முடியாது.
2.மனதிற்குள் வைத்து அவர்கள் திருந்தி வாழ வேண்டும்… அருள் ஞானம் பெற வேண்டும் என்ற எண்ணத்தைக் கூட்டி…
3.”நீங்கள் பார்த்துச் செய்யுங்கள்…” என்று கூறினால் சரியாகும்.

டேய் என்னடா செய்கின்றாய்…? இப்படியே நீ தவறைத் தான் செய்து கொண்டிருக்கிறாய் என்று சொல்லும் போது அதனின் அர்த்தம் என்ன ஆகிறது…?இத்தனை பேர் இருக்கின்றார்கள்… இப்படியே செய்து கொண்டிருக்கிறீர்கள்… சாமி என்ன சொல்கின்றார்…? என்று இதையும் கலந்து கொண்டே தான் வருவோம்.

இதனால் என்ன ஆகின்றது…? நன்மை விளைவதில்லை.

அறியாத நிலைகள் அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருந்தாலும்
1.நாம் அருளைப் பாய்ச்சி அவர்கள் அறியும் தன்மை வரவேண்டும் என்ற இந்த உயர்ந்த உணர்வை நாம் எடுத்துச் செயல்பட வேண்டும்.
2.நிச்சயம் உணர்வார்கள்… வருவார்கள்… என்று இந்த எண்ணத்துடன் தியானித்துப் பாருங்கள். தேடி வருவார்கள்.

சொல்வது அர்த்தம் ஆகிறது அல்லவா.

இதைத்தான் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர… நாம் சொல்லும் “நல்லதைக் கேட்க யாரும் வரவில்லை…” என்ற எண்ணத்திற்கு நாம் செல்ல வேண்டியதில்லை.

ஆனால் இத்தனை பேர் இந்தத் தியான வழியில் வந்தார்கள் ஆனால் இப்பொழுது போய்விட்டார்களே…! என்று வேதனையோடு சொல்லப்படும் பொழுது… உங்கள் மேல் “இவர் என்ன…? சும்மா எப்பொழுது பார்த்தாலும் நச் நச் என்று நச்சுப் பிடித்துவராக இருக்கின்றார் என்று வரும்…!

பாலிலே விஷத்தைப் போட்டு அதைச் சாப்பிட்டால் மயக்கம் தான் வரும். இதைக் கேட்டால் என்ன பதில் சொல்வார்கள்…? சிந்தனை அங்கே சரியாக வராது.

இதைப் போன்று நாம் எடுக்கும் உணர்வுகள் விஷத்தன்மை ஆகும்பொழுது நம்மை அறியாமலே வேதனைப்படும் நிலையும் நாம் செல்ல வேண்டிய மார்க்கத்தைத் தவற விட்டு மற்றவர்களையும் பெற விடாதபடி தடைப்படுத்தும் நிலையாகத் தான் வரும்.

இவர் என்ன எப்பொழுது பார்த்தாலும் சும்மா வந்து சொல்லிக் கொண்டிருக்கிறார் என்று உங்கள் மீது குறை கூறும் உணர்வுகள் வந்துவிடும்.

ஆனால் உயர்ந்த பண்புகளுடன் வேதனை உணர்வு கலந்து சொல்லும் பொழுது உடலும் பலவீனமாகும். உயர்ந்த மார்க்கமாக இருக்கின்றது… இப்படி இருக்கின்றார்களே அல்லது இப்படிச் செய்கின்றார்களே…! என்று வந்துவிடும்

கண்ணாடி நன்றாகத் தான் இருக்கிறது ஆனால் அழுக்குப் படிந்து விட்டால் முகம் தெரியுமா துடைக்க வேண்டும் அல்லவா.

ஆன்மீகம் என்பது
1.வலிமை கொண்ட உணர்வைப் பாய்ச்சி…
2.மற்றவர்கள் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும்…! என்று எண்ணினால் நிச்சயம் ஒன்றுபட்டு வாழும் தன்மை வரும்.

ஆகவே அருள் உணர்வுகள் அனைவரும் பெற வேண்டும்… ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்ற உணர்வுகளை நாம் எடுத்தால் அது சீராக வரும்.

அதைத்தான் நாம் செய்ய வேண்டும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் தீமையை நீக்கும் அருள் சக்தியைப் பெறுங்கள்

 

பாலில் பாதாமைப் போட்டால் சத்துள்ளது தான். ஆனால் அறியாதபடி ஒரு துளி விஷம் அதிலே பட்டு விட்டால் பாலுக்குச் சக்தி இல்லை.

இதைப் போல்தான் நாம் உயர்ந்த உணர்வு கொண்டு இருந்தாலும்
1.பிறர் செய்யும் தவறுகளையும் பிறர்படும் வேதனைகளையும் இப்படிச் செய்கின்றார்களே என்று அறிந்து கொண்டாலும்
2.நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் தெய்வ ஆணை ஆகி அந்த உணர்ச்சிகள் நம் உடலில் சேர்க்கப்பட்டு
3.நம் சொல்லும் செயலும் அதன் வழி அமைந்து “அந்த உணர்வு அமிலமாகி” உணவுடன் கலக்கப்படும் பொழுது உணவுகள் பாழ்படுகிறது.
4.நல்ல உணர்ச்சிகளைச் செயலற்றதாக மாற்றி விடுகின்றது.

நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் பகைமை உணர்வு கொண்டு எதிர்நிலையால் தாக்கப்படும் பொழுது சீராக உணவு உட்கொள்ள முடிவதில்லை. ஆனால் பசி எடுக்கும்… உணவை உட்கொள்ள முடியாது.

பசியின் தன்மையால் “பித்தம் அதிகமானால்” உமட்டல் அதிகரிக்கும்.

மனிதனின் சகஜ வாழ்க்கையில் பிறர் செய்யும் தீமைகளையோ குடும்பத்தில் ஏற்படக்கூடிய சில வேதனையான நிலைகளாலோ வேதனை அதிகமானால் உடலுக்குள் அஜீரணக் கோளாறு ஆகிவிடும்.

வயிறு உப்புசமாகும்… வாயு அதிகமாக உருவாகும்… ஜீரண சக்தி குறையும்…! அதனால் புளிப்பின் தன்மை ஏற்படும் போது ஜீரண உறுப்புகளில் பாதுகாப்பாக இருக்கும் அமிலங்களைச் செயலற்றதாக ஆக்கி அதனால் எரிச்சலாகி உணவை உட்கொள்ள மறுக்கச் செய்வதும் இது எல்லாம் சந்தர்ப்பத்தால் ஏற்படக்கூடிய நிலைகள் தான்.

இதை போன்ற நிலைகளிலிருந்து நாம் விடுபட வேண்டுமல்லவா.

தவறு செய்கிறார்கள் என்று மற்றவர்கள் உணர்வுகளை எப்படி நுகர்கின்றோமோ அதைப் போல் அதை நீக்க ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைக் கொடுக்கின்றோம். அதை அவ்வப்பொழுது நினைவுக்குக் கொண்டு வாருங்கள்.

துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியைப் பெறுங்கள். அகஸ்தியன் வாழ்ந்த காலத்தில் நஞ்சினை அவன் வென்றவன். நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அவன் அருளைப் பெறும் தகுதியை ஏற்படுத்துகின்றோம்.

1.மாமமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளால் அந்த அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தியைப் பெற வேண்டும்.
2.அகஸ்தியன் இருளை அகற்றி நஞ்சினை வென்று துருவ நட்சத்திரமான அந்தப் பேரருளைப் பெற வேண்டும் என்று
3.சிறிது நேரம் இந்தச் சக்தியை உடலுக்குள் கூட்டினால் அந்த உணர்வுகள் நமக்குள் வலுப்பெறுகின்றது.

துணியில் பட்ட அழுக்கை நாம் சோப்பைப் போட்டு நுரையேற்றி அந்த அழுக்கினை எப்படி நீக்குகின்றமோ இதைப் போன்று அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் அதிகரித்து அதை வலுவாக்கி
1.தீமை என்ற உணர்வுகள் சுவாசத்திற்குள் நுழையாதபடி
2.முன் பகுதியில் நம் ஆன்மாவைத் தூய்மை செய்து கொண்டால்
3.நாம் எடுக்கக்கூடிய உயர்ந்த உணர்வுகளால் சிந்திக்கும் தன்மையும்
4.உடலுக்குள் தொக்கி உள்ள விஷத்தின் தன்மையைத் தணித்து உடல் நலம் பெறச் செய்யும்.

அதற்குத்தான் உங்களுக்குள் அருள் உணர்வைப் பெறச் செய்கின்றோம். எப்போதெல்லாம் குறைகளைச் சந்திக்கின்றீர்களோ அப்பொழுதெல்லாம் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறுங்கள்.

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான இந்த உணர்வினை நினைவுக்குக் கொண்டு வாருங்கள். சிறிது நேரம் அதைச் சுவாசியுங்கள். அந்தத் தீமைகளை அகற்றிடும் சக்திகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் அதைப் பெற வேண்டும் என்ற வலுவைக் கூட்டி இதை நீங்கள் பெருக்கிப் பாருங்கள்.
1.உங்களுக்குள் அமைதி கிடைக்கும்… சிந்திக்கும் தன்மை வரும்
2.கோபத்தைக்த் தணிக்கும்… படபடப்பை நீக்கும்.
3.அருள் உணர்வுகள் பெருகும் அருள் ஞானத்தைப் பெருக்க முடியும்.

ஆகவே… இந்தத் தியானத்தைக் கடைப்பிடிக்கும்படி வேண்டிக் கொள்கின்றேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு கருடன் தன் இரைக்காகப் பாம்பை எடுத்துத் தூக்கிச் செல்கின்றது. ஏற்கனவே அது விஷம். இருந்தாலும் இந்தக் கருடன் அந்தப் பாம்பைத் தூக்கிக் கொஞ்சம் கொஞ்சமாக வேதனைப்படும்படி செய்து அதை உணவாக எடுத்துச் சாப்பிடுகின்றது.

ஆனால் பாம்போ கூர்மையாக அந்தத் கருடனையே உற்றுப் பார்த்து வேதனை உணர்வைக் கவர்ந்து தன் உடலில் உள்ள அணுக்களுக்குள் அதிகமாகச் சேர்கின்றது.
1.மரணம் அடையும்போது இந்தப் பாம்பின் உயிரான்மா கருடனுக்குள் சென்று
2.அதன் உணர்வைக் கவர்ந்து அதற்குத் தக்கவாறு கருடனாக மாறுகிறது.

அதனால் தான் இந்த மாதிரி விஷத் தன்மையான உணர்வுகளைக் கருடன் சாப்பிட்டாலும்
1.இந்தக் கருடனாக உடல் மாறும் பொழுது
2.விஷம் கொண்ட பாம்புகள் அதைத் தீண்டினாலும் கருடன் மடிவதில்லை.

அதே சமயத்தில் அது உடலில் இருந்து எடுத்துக் கொண்ட உணர்வுகள் உதாரணமாக… ஒரு பாம்பு கீழே போகிறது என்றால் கருடன் பறக்கும் போது அதனுடைய இறக்கையின் காற்றலைகள் பட்டாலே அந்தப் பாம்பிற்கு ஒரு மாதிரி மயக்கம் வரும். இதைக் குருநாதர் காட்டியுள்ளார்.

இதைப் போன்று தான் நம் உடலில் எத்தனையோ பல உணர்வுகள் உண்டு. அதிலே வேதனையான உணர்வுகளை உடலில் உள்ள அணுக்கள் அதிகமாகச் சேர்த்துக் கொண்டு இருக்கும் போது அடுத்து நாம் நல்ல உணர்வின் தன்மை பெற்றாலும் கூட நம்மால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது.

அதாவது ஒருவர் மிகவும் வேதனைப்படுகிறார்… சங்கடப்படுகிறார் சலிப்பான நிலைகளில் இருக்கிறார்…! என்றால் அவர்களிடமிருந்து வெளிப்படும் அந்த உணர்வுகளை நாம் நுகர்ந்தோம் என்றால் நம் உடலில் உள்ள நல்ல அணுக்களுக்கு நிச்சயம் மயக்கம் வரும்.
1.ஏனென்றால் நாம் சுவாசித்த உணர்வுகள் உடலுக்குள் சென்று அது வாயுவாக மாறுகின்றது.
2.அந்த உணர்ச்சிகள் நம் உடல் முழுவதும் பரவுகின்றது.

அது பரவப்படும் பொழுது நம் உடலில் உள்ள நல்ல அணுக்களில் இந்த விஷத்தின் தன்மை அதிகமாகும் போது விஷத்தின் இயக்கமாக இருப்பினும் அதிகமான விஷத்தின் தன்மை வரப்படும் போது நல்ல அணுக்கள் மயங்கத் தொடங்கி விடுகின்றது.

ஆக கருடனுடைய உணர்வுகள் பரவப்படும் போது பாம்பினம் கீழே செல்லப்படும் போது அதனுடைய காற்றலைகள் பட்டவுடன் பாம்புக்கு மயக்கம் வருவது போல நமக்கும் அந்த நிலைகள் ஏற்படுகின்றது.

நம் உடலில் உள்ள உணர்வுகள் வேதனைப்படுவோரைக் கூர்மையாகப் பார்த்து அந்த விஷத்தின் தன்மையைக் கவர்ந்த பின்
1.அது நம் உடலில் முட்டையாகின்றது… வேதனை என்ற உணர்வுகள் அந்தக் கருத்தன்மை வளர ஆரம்பிக்கிறது.
2.வேதனைப்படும் உணர்வுகளை அதிகமான ஆகாரமாக அந்தக் கருக்கள் எடுக்கும் பொழுது
3.அது வேதனையான அணுக்களின் பெருக்கங்களாக ஏற்படுகிறது.

அதைக் குறைப்பதற்காக வேண்டித்தான் அந்த மகரிஷிகளின் உணர்வின் சக்தியை உடலுக்குள் சேர்த்துச் சிறுகச் சிறுகக் கலக்கும்படி செய்கின்றோம்.

உதாரணமாக வர்ணங்கள் கொடுக்கும் இடங்களில் ஒரு கலருடன் பல விதமான கலரைச் சேர்க்கின்றோம். அதிலே எந்தக் கலரை அதிகமாகச் சேர்க்கின்றோமோ அந்தக் கலரின் ரூபங்களாக மாற்றுகின்றது.

நீலமும் மஞ்சளும் சேர்க்கப்படும் போது அது ஒரு விதமான பச்சைக் கலராக வரும். நீலமும் ஆரஞ்சும் சேர்த்தால் காப்பிக் கலராக வரும். அதனுடன் வெள்ளையைச் சேர்க்கும் பொழுது வித்தியாசமாக வரும்.
1.இதைப் போன்று தான் நமது சுவாசங்களில் கலர்களின் ஓட்டங்கள்
2.வித்தியாசமாகக் கலந்து பல பல நிலைகள் மாறும்.

அப்படிக் கலக்கப்படும் பொழுது நம் உடலில் உள்ள அணுக்களுக்கு எதிர் நிலையான மாற்றமாகி
1.நம் அணுக்களும் வித்தியாசமாக மாறும்.
2.நம் குணங்களும் வித்தியாசமாக மாறும்.

எந்தெந்த குணங்கள் அதிகமாகின்றதோ அதெல்லாம் நம் ஆன்மாவில் சேர்ந்து விடுகின்றது. மொத்தமாகச் சேர்த்துச் சுவாசிக்கும் பொழுது எதன் வலு அதிகமாக இருக்கிறதோ அதன் வழி நம் உடல்களில் வித்தியாசங்கள் வந்து கொண்டே இருக்கும். அப்பொழுது நம் குணங்களும் வித்தியாசமாக மாறும்.

இதையெல்லாம் மாற்றுவதற்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் எடுத்துப் பழக வேண்டும்.
1.உபதேச வாயிலாகக் கொடுத்த சக்தியை வைத்து
2.அவ்வப்பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உடலில் சேர்த்துச் சேர்த்து
3.உடலுக்குள் வரும் உணர்வுகளை மாற்றப்படும் போது
4.தீமையான அணுக்களை அதிகமாக வளர விடாது தடுக்க முடியும்.

நம் குணங்களும் எண்ணங்களும் மாறாது எப்பொழுதும் நல்ல உணர்வாக ஒரே நிலையாகக் கொண்டு செல்ல முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இருபத்தியேழு நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துத்தான் பாதரசமாக மாற்றி இந்த உலகையே ஒளிமயமாக ஆக்குகின்றது சூரியன்.

அதே போல இருபத்தியேழு நட்சத்திரத்தின் உணர்வுகளால் விளையப்பட்ட தாவர இனங்களின் உணர்வையெல்லாம் எடுத்து இந்த உயிர் என்ன செய்கிறது…? உணர்வின் ஒளியாக மாறுகின்றது.

இருபத்தியேழு நட்சத்திரத்தின் உணர்வால் விளைந்த தாவர இனத்தின் உணர்வை உயிர் உணர்ச்சியின் எண்ணங்களாக ஆக்கப்பட்டு உணர்ச்சிக்கொப்ப நாம் இயங்குகின்றோம். (மனிதனாக்கப்பட்ட நிலை)

1.இருபத்தியேழு நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து ஒளியின் உணர்வாக மாற்றியவன் அகஸ்தியன்.
2.விஷத்தின் தன்மையை முறித்தவன்,
3.உணர்வின் தன்மையை ஒளியாக்கி ஒளி உடலாகத் துருவ நட்சத்திரமாக ஆனவன் அகஸ்தியன்.

மனிதனாகப் பிறந்த ஞானிகள் அகஸ்தியன் வழியில் இருபத்தியேழு நட்சத்திரங்களின் கதிரியக்கங்களைத் தங்கள் உடலிலே சேர்த்துக் கொண்டனர். ஒளி உடல் பெற்றனர்.

இருபத்தியேழு நட்சத்திரத்தின் உணர்வுகளை எடுத்து ஒளியின் உடலான அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாமும் எடுத்து நமக்குள் இருக்கும் தீமைகளை நீக்கிக் கொள்ள வேண்டும்.

இருபத்தியேழு நட்சத்திரங்களின் உறுதுணை கொண்டது வியாழன் கோள். அதே இருபத்தியேழு நட்சத்திரத்தின் சக்திகளையும் முழுமையாகப் பெற்றது சூரியன்.

இந்த இருபத்தியேழு நட்சத்திரங்களின் சக்தி பெற்று அதனின் உணர்வை இணைத்துத் தான் நம் பிரபஞ்சத்தில் இருக்கும் எல்லாம் ஒன்றுடன் ஒன்று இணைந்து வாழச் செய்யும் சக்தி பெற்றது.

இருபத்தியேழு நட்சத்திரத்தின் சத்தை முழுமையாக எடுத்துப் பாதரசமாக சூரியன் மாற்றி உலகை உருவாக்குவது போன்றுதான் இதே உயிர் பல விதமான உணர்வுகளை எடுத்து மனிதனாகும் பொழுது அது முழுமை அடையும் பருவத்திற்கு வருகின்றது.

ஆனால் மனிதனின் நிலைகள் வேதனை என்ற விஷத்தின் தன்மை அதிகரித்து விட்டால் மனித நிலையிலிருந்து இழி நிலையான சரீரமாக உயிர் மாற்றிவிடும்.

ஆகவே அதைப் போன்று ஆகாதபடி
1.இருபத்தியேழு நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று
2.ஒளியின் உடலாக இருக்கும் அதனை நாம் சிறுகச் சிறுக நுகர்ந்து
3.நம் உடலில் உள்ள அனைத்து அணுக்களுக்கும் செலுத்திப் பழகுதல் வேண்டும்.
4.அவ்வாறு செய்தால் ஒளியின் உடலாக உயிரின் துணை கொண்டு உணர்வை ஒளியாக மாற்றிக் கொள்ள முடியும்.
5.மகரிஷிகளைப் போன்று நாமும் ஒளி உடல் பெற முடியும்.

எதைப் பற்றியும் “இப்படி ஆகிவிட்டதே…!” என்ற அந்த சிந்தனை வேண்டாம்

 

நான் சம்பாதித்தேன்… பிள்ளையை வளர்த்தேன்… நாளை அவன் என்ன செய்வானோ…! இப்பொழுதே என்னை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றான்…! என்று உணர்வுகளைச் சேர்த்து விட்டால் அவன் உடலில் விளைந்த “ஏமாற்றும் உணர்வுகள்…” இந்த உடலிலே நோயாக மாறும்.

நோய் முற்றி இறந்த பின் பிள்ளையின் உடலுக்குள் தான் செல்வோம். ஆக… மீண்டும் இன்னொரு உடலுக்குள் தான் செல்ல வேண்டி வருகின்றது. விண் செல்லும் உணர்வை இழந்து விடுகின்றோம்.

அது போன்று ஆகாதபடி
1.இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு நொடிப் பொழுதும் எத்தகைய சிரமங்கள் வந்தாலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்துப் பாருங்கள்.
2.அதை உங்களால் மாற்றிக் கொள்ள முடியும்.
3.எதைப் பற்றியும் “இப்படி ஆகிவிட்டதே…!” என்ற அந்த சிந்தனை வேண்டாம்.
4.அருளைப் பெறுவேன் இருளை நீக்குவேன் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெறுவேன் என் இரத்த நாளங்களிலே அதைக் கலக்கச் செய்வேன்.
5.உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறச் செய்வேன் என்று எண்ணுங்கள்.

அகஸ்தியன் தன் வாழ் நாளில் பல பல விஷத்தன்மைகளை முறித்து வலுப்பெற்றவன். அவன் உடலில் இருந்து வெளிப்பட்ட அந்தச் சக்திகள் நமக்கு முன் பரவி உள்ளது. உங்களுக்குள் அதைத்தான் இப்பொழுது பதிவு செய்கின்றேன்.

அதை உங்கள் எண்ணத்தால் மீண்டும் கவர முடியும்.

அகஸ்தியன் பெற்ற “மூலிகை மணங்களையும் அவன் பெற்ற நஞ்சினை வென்றிட்ட அந்த அருள் சக்தியும்…” நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்தே ஏங்குங்கள்.

உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டுங்கள். அந்த ஏக்கத்துடன் கண்களை மூடுங்கள்.
1.அப்படி மூடும் பொழுது அந்த அகஸ்தியன் பெற்ற மூலிகைகள் உங்கள் வாயிலே உமிழ் நீராகச் சுரப்பதைக் காணலாம்.
2.உடலுக்குள் செல்லப்படும் பொழுது ஆகாரத்தில் கலந்து இரத்தத்தில் கலந்து விடுகின்றது.
3.விஷத்தன்மைகளை மாற்றும் சக்திகளை நீங்களே பெறுகின்றீர்கள். காற்றிலே உண்டு… நீங்கள் அதை நுகர்கின்றீர்கள்.

ஒருவன் வேதனைப்படுத்துகின்றான். அந்த உணர்வுகள் நமக்குள் வந்து இரத்தங்களிலே கலந்து விஷத்தன்மை ஆகி நம் நல்ல அணுக்கள் செயலிழக்கின்றது. அப்பொழுது வெறுப்பும் வேதனையும் வருகின்றது.

இதைப் போலத் தான் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அந்தப் பேரருளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றேன். அதை உபதேசமாகக் கொடுத்துக் கொண்டு வருகின்றேன்.
1.இதை நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்து மீண்டும் மீண்டும் எண்ணிச் சுவாசித்தால் போதுமானது.
2.எத்தகைய தீமையையும் நீங்கள் நீக்க முடியும்… துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற முடியும்.
3.தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள்… உங்களால் நிச்சயம் முடியும்…!

கணவன் மனைவியாக இணைந்தால் தான் ரிஷித் தன்மை பெற முடியும்

 

27 நட்சத்திரங்களும் பிற மண்டலங்களில் இருந்து வரக்கூடிய விஷமான சக்திகளைத் தனக்கு உணவாக எடுத்து அதை மாற்றி அமைத்துத் துகள்களாக அனுப்பப்படும் பொழுது ஒன்றுக்கொன்று எதிர்மறையானால் பூமிக்குள் வரும் போது மின்னல்களாகப் பாய்கின்றது.

கடலிலே தாக்கப்பட்டால் மணலாக மாறுகின்றது. அதே விஷத்தின் தன்மை மற்ற தாவரங்களில் எதிர்நிலையாகும் பொழுது அது கருகுகின்றது. இதன் உணர்வுகள் பூமியின் ஈர்ப்புக்குள் நடு மையம் சென்றால் அந்த உணர்வின் வேகத்தால் பாறைகள் உருகுகின்றது. பின் நிலநடுக்கம் ஆகின்றது. இது எல்லாம் மின்னலால் ஏற்படக்கூடிய நிலைகள்.

1.ஆனால் இத்தகைய நஞ்சையும் தாய் கருவிலே பெற்ற பச்சிலை மூலிகைகளின் சக்திகளால் அடக்கியவன் அகஸ்தியன்.
2.அவன் கண்ட உண்மையின் உணர்வின் தன்மை மின்னல்களில் இருந்து வரக்கூடிய ஆற்றல்கள் அவனுக்குள் தணிகின்றது.

மின்னல்கள் பிரபஞ்சத்தில் பாயும் பொழுது அதை வெள்ளிக் கோள் கவர்ந்து கொள்கின்றது.
1.அந்த உணர்வின் தன்மையை அகஸ்தியன் நுகர்ந்து உடலுக்குள் பெருக்கி
2.உயிரைப் போன்றே உணர்வின் அறிவை வளர்த்துக் கொள்கின்றான்.

மின்னல் கடலிலே தாக்கப்பட்டால் மணலாக மாறுகிறது. ஆனாலும் அந்த மின்னலின் வீரிய உணர்வுகள் பாயும் பொழுது… சந்தர்ப்பம் மீன்கள் அதன் அருகில் சென்றால் அந்த ஒளிக்கற்றைகள் அதற்குள் பாயப்பட்டு அது எலக்ட்ரிக் மீனாக மாறுகின்றது.

மின்னல் தாக்கும் பொழுது எப்படி ஒளிக்கற்றைகள் பரவுகின்றதோ மீன் இனங்களுக்குள் இது பட்டபின் அது நீருக்குள் உராய்ந்து செல்லும் பொழுது எலக்ட்ரிக் மீனாக மாறுகின்றது.
1.இயற்கையின் நிலைகள் இப்படி மாறுவது போல
2.அந்த அகஸ்தியன் பெற்ற அருளை நாம் நுகர்ந்தால் “நாமும் ஒளியாக முடியும்…”

அவன் துருவனானான். பின் பதினாறாவது வயதில் திருமணம் ஆகின்றது. தான் கண்ட உண்மைகளை எல்லாம் தன் மனைவிக்கு எடுத்துச் சொல்கின்றான். மனைவியும் அதையெல்லாம் தனக்குள் பதிவாக்குகின்றது.

பதிவான நிலைகள் கணவன் மேலும் உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று எண்ணுகின்றது. அகஸ்தியன் தான் கண்ட உண்மைகளை எல்லாம் தன் மனைவி பெற வேண்டும் என்று… இப்படி அந்த இரண்டு பேருமே இந்த உணர்வை வளர்த்து ஒரே உணர்வாக எண்ணப்படும் பொழுது ரிஷித்தன்மை பெறுகின்றார்கள்… துருவ மகரிஷியாகின்றார்கள்.

அந்த ரிஷி என்ற நிலை வரவேண்டும் என்றால் “கணவன் மனைவியாக இருந்தால் தான் முடியும்…”

செடி கொடிகளில் ஆண் பெண் என்ற நிலையில் இணைந்தால் தான் தன் இன வித்துக்களை உருவாக்க முடியும். உயிரினங்களிலும் ஆண் பெண் என்ற நிலைகள் இணைந்தால் தான் இனத்தின் தன்மை விருத்தி செய்ய முடியும்.

தீமைகளை எல்லாம் வென்றது துருவ நட்சத்திரம். அகஸ்தியன் எப்படித் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமானானோ கணவன் மனைவி ஒன்றி ஒளி நிலை பெற்றார்களோ அதிலிருந்து வெளிப்படும் சக்திகளை சூரியனுடைய காந்த சக்தி கவர்கின்றது.

உங்களுக்குள் அதைத்தான் ஆழமாகப் பதிவு செய்கின்றேன். அதை எண்ணி நீங்கள் பெற்று உங்களுக்குள் வளர்த்துக் கொள்ள முடியும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று
1.கண்களை மூடிப் புருவ மத்தியில் எண்ணி உயிரான ஈசனிடம் வேண்டித் தியானியுங்கள்.
2.உங்கள் புருவ மத்தியில் “மின் அணுக்கள் உருவாகும்…”
3.நுகர்ந்து உடலுக்குள் செலுத்தப்படும் பொழுது உடலுக்குள்ளும் ஒளியான உணர்வுகள் தோன்றும்.
4.உடலிலிருந்து வெளிச்சங்கள் வெளி வரும்… சிலருக்கு இது தெரியும்.
5.சிலருக்கு மகிழ்ச்சியான உணர்வுகளை ஊட்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம் வீட்டிற்குள் எதிர்பாராதவிதமாக ஒரு பாம்பு வந்துவிடுகின்றது என்று வைத்துக் கொள்வோம்.
1.அந்தச் சந்தர்ப்பத்தில் பாம்பை அடித்தால்
2.பாம்பின் உயிர் அடித்தவர் உடலுக்குள் வந்து மனிதனாகப் பிறக்கும் சந்தர்ப்பம் வருகின்றது,

அதே சமயத்தில் பாம்பு மனிதனைத் தீண்டிவிட்டால் அந்தச் சந்தர்ப்பம் விஷம் உடல் முழுவதற்கும் பரவி விடுகின்றது. எத்தனையோ கோடி உடல்களைக் கடந்து இன்று மனிதனாக வந்த நிலையில் பாம்பின் விஷத் தன்மை மனிதனுக்குள் கலந்து விடுகின்றது.

உடல் முழுவதற்கும் விஷம் படர்ந்த பின் இந்தச் சந்தர்ப்பம் மனித நினைவே இழந்து பாம்பின் நினைவே ஆக்கிரமிக்கின்றது.
1.மனித உடலை உருவாக்கிய இந்த உயிரில் விஷம் கலந்ததனால் நினைவு இழந்து
2.பாம்பின் ஈர்ப்புக்குள் சென்று மனிதன் பாம்பாகப் பிறக்கும் சந்தர்ப்பமாக வருகின்றது.

இதே போல மனிதனின் வாழ்க்கையில் கடும் வேதனையால் ஒருவருக்குக் கேன்சர் நோய் வந்துவிடுகின்றது. மற்றவர்கள் அவருடன் நெருங்கிப் பழகப்படும் பொழுது அந்தச் சந்தர்ப்பம் வேதனை என்ற விஷங்கள் அது தொடர்ந்து இந்த உடலில் படரப்படும் பொழுது நாளடைவில் இந்தக் குடும்பத்திலும் பரம்பரை என்ற நிலையில் கேன்சர் நோய் வளரத் தொடங்குகின்றது.

ஒரு இரத்தக் கொதிப்பு நோய் உள்ளவரின் உணர்வுகளை அதிகமாக உற்றுப் பார்த்துக் கவர நேர்ந்தால் அந்தப் பரம்பரை என்ற இரத்தக் கொதிப்பு வந்து விடுகின்றது.

ஆஸ்த்மா போன்ற நோய்கள் வந்தால் அது தொடர்ந்து வரப்படும் பொழுது பரம்பரை என்ற நிலைகள் கொண்டு ஆஸ்த்மா நோய் வந்து விடுகின்றது.

அதே சமயத்தில் ஒரு குடும்பத்தில் சர்க்கரைச் சத்து அதிகமானால் இது பரம்பரையாக வந்து அந்தக் குடும்பத்தில் சர்க்கரைச் சத்துகள் தொடர்ந்து விடுகின்றது.
1.இதுகள் எல்லாம் தொடர் வரிசைகளில்…
2.இப்படி வருவது எல்லாமே சந்தர்ப்பம் தான்.

காரணம்… நமது சந்தர்ப்பம் சொந்த பந்தம்… நண்பர்கள்.. மற்ற பந்துக்கள் என்ற நிலையில் பழகப்படும் பொழுது பாசத்தால் அவர்கள் சிரமப்படும் உணர்வை நாம் நுகர்கின்றோம்… உதவியும் செய்கின்றோம். ஆனால் இத்தகைய உணர்வுகள் நமக்குள் வந்து விடுகின்றது.

பந்துக்களானாலும் சரி… நண்பர்களானாலும் சரி.. சந்தர்ப்பம் சந்திக்கும் பொழுது இதைப் போன்ற உணர்வுகளை நமக்குள் நுகர்ந்து விட்டால் நம்மை அறியாமலேயே பல நோய்களுக்கும் அது காரணமாகின்றது.

ஆனால் உடலை விட்டுப் பிரிந்து சென்ற நம்முடைய முன்னோர்கள் மூதாதையர்களின் உயிரான்மாக்களை நம் குருநாதர் காட்டிய தியான வழியின் முறைப்படி விண்ணிலிருக்கும் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்தால் அவர்கள் எல்லோரும் ஒளி உடல் பெறுகின்றார்கள்.

எப்படித் தான் இருந்தாலும் பழக்க தோஷத்தில் நாம் எல்லோருடனும் நாம் பழகித் தான் ஆகின்றோம். உடலை விட்டுப் பிரிந்தவர்களின் குடும்பத்தைச் சார்ந்தோரும் அவருடன் பழகியிருப்பவர்களும் முறைப்படி தியானித்து அந்த அருள் உணர்வுகளை எண்ணி எடுக்கும் பொழுது தீமைகள் வராதபடி பாதுகாத்துக் கொள்ள முடியும். பரம்பரை நோயிலிருந்து விடுபட முடியும்.

1.அதே சமயத்தில் நம் முன்னோர்கள் சப்தரிஷி மண்டலத்தில் ஒளியின் உடலாக இருப்பதனால்
2.அங்கிருந்து வரும் உணர்வை நமக்குள்ளும் பெருக்கி உயிருடன் ஒன்றிடும் நிலையாக
3.நம் உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாறும் திறனாக மாற்றும் இதுவும் ஒரு சந்தர்ப்பம் தான்.
4.இதன் வழி குடும்பத்தில் அனைவரும் சென்றால் அந்த அகஸ்தியனைப் போன்று
5.என்றுமே ஏகாந்தமாக ஒளியாக வாழ முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

வேதனை கோபம் ஆத்திரம் என்ற அணுக்கள் நம் உடலுக்குள் அதிகமான வளர்ச்சி அடைந்தால் கடுமையான நோய்கள் வரும்.

தேடிய செல்வம் எது இருப்பினும் வைத்தியத்திற்குச் செலவழித்து உடலைப் பாதுகாத்தாலும்
1.உங்கள் உடலில் அந்தக் கடைசி நிமிடம் எது உணர்வோ
2.அதன் வழி இந்த உயிர் அழைத்துச் சென்று வேறொரு உடலை அதாவது கீழான பிறவியாக மாற்றிவிடும்.

ஆகவே இந்த உடலில் இருக்கும் பொழுதே துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை வளர்த்து வளர்த்துப் பிறவியில்லா நிலை அடைவதே நம்முடைய கடைசி எல்லையாக இருக்க வேண்டும்.

ஒவ்வொரு நாளும் வாழ்க்கையில் வரும் கஷ்டங்களையோ நஷ்டங்களையோ எண்ணி வளர்க்கக் கூடாது.
1.பிள்ளை சொன்னபடி கேட்கவில்லை என்று வேதனைப்படுவதோ
2.தொழிலில் சிறிது குறைபாடுகள் இருந்தாலோ
3.குடும்பத்தில் ஒற்றுமை இல்லாதிருந்தாலோ
4.அதைப் போன்ற மற்ற உணர்வுகளை நுகர நேர்ந்தாலோ உடனே அதை எல்லாம் மாற்றிப் பழக வேண்டும்.

எதை வைத்து…? – நம் ஆறாவது அறிவை வைத்து.

ஆறாவது அறிவு “கார்த்திகேயா…!” என்றாலும் அது சேனாதிபதி. இந்த ஆறாவது அறிவின் துணை கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நுகர வேண்டும்.
1.புருவ மத்தியில் உயிரின் நிலைகளில்
2.அதை இணைக்கப் பழகிக் கொள்ள வேண்டும்

வாழ்க்கையில் வரும் மற்ற உணர்வுகளைக் கண் வழி கவர்ந்தாலும்
1.கண்ணின் நினைவை உயிரிலே இணைக்கப்படும் பொழுது
2.உயிர் வழி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஈர்க்கும் திறன் வரப்படும் பொழுது
3.மூக்கு வழி செல்லும் (சுவாசத்தின் மூலம்) தீமையான உணர்வுகளைத் தடைப்படுத்துகின்றது.

பின் நம்முடைய நினைவாற்றலை உடலுக்குள் செலுத்தி துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எல்லா அணுக்களுக்கும் செலுத்தப்படும் பொழுது அதுவும் வலுப் பெற்றுவிடுகின்றது.
1.நம் உடலுக்கு முன் முகப்பில் உள்ள விஷத் தன்மைகளைத் தூர ஒதுங்கிச் செல்லும்படித் தள்ளிவிடுகின்றது.
2.நம் ஆன்மா தூய்மையாகி விடுகின்றது.

அதே சமயத்தில் நம் உடலுக்குள் இருக்கும் ஜீவ அணுக்கள் ஒவ்வொன்றுக்கும்
1.ஒரு ஆன்மா உண்டு.
2.ஒரு வட்டம் உண்டு
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வால் அப்பொழுது அந்த ஜீவான்மாக்களும் சுத்தமாகின்றது.
4.அந்த அணுக்கள் எல்லாம் உயிரைப் போலவே ஒளியின் அறிவாக ஒளியான அணுக்களாக வளர்ச்சி பெறும் சக்தி பெறுகின்றது.
5.அப்பொழுது அந்த உணர்வுகள் முழுவதும் ஒளியாக்கப்படும் பொழுது உயிருடன் இணைந்து பேரொளியாக மாறுகின்றது.

இப்படி நம் உடலில் இருக்கும் எள்லா அணுக்களையும் சிறுகச் சிறுக மாற்றி இந்த உடலுக்குப் பின் நாம் ஒளியின் உடலாக மாறுவதே கடைசி நிலை.

நாம் எந்தத் துருவத்தின் வழி துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்தோமோ அதன் ஈர்ப்புக்கே நம்மை அழைத்துச் செல்லும் நம் உயிர்.

அகஸ்தியன் அமர்ந்த இடங்களுக்கெல்லாம் குருநாதர் எம்மை அழைத்துச் சென்று காட்டினார்

 

சில மலைப் பகுதிகளுக்கெல்லாம் குருநாதர் எம்மை அழைத்துச் சென்று “அக்காலங்களில் அகஸ்தியன் அமர்ந்த பாறைகளை…”
1.பாபநாசத்தில் பெரும்பகுதி சுழன்ற இடங்களையும்
2.தலைக்காவிரியில் அகஸ்தியன் சுழற்சி வட்டம் ஜாஸ்தி… அந்த இடங்களையும்
3.இமயமலையில் அவன் சுழன்ற இடங்களையும் அகஸ்தியன் வந்து சென்ற இடங்களையும் குருநாதர் காட்டுகின்றார்.
4.வேகாக்கலை என்ற நிலைகள் கொண்டு அழிந்திடாத நிலைகளாக அவன் வெளிப்படுத்தியது இன்றும் அங்கே உண்டு.

ஆனால் சாகாக்கலை என்று மந்திர ஒலிகளால் செயல்பட்டவர்கள் உணர்வுகள் பூமிக்குள் படர்ந்திருந்தாலும் அது எல்லாம் அழிந்து விடுகின்றது. அதே சமயத்தில் சாகாக்கலையில் விஷத்தன்மையே படர்கின்றது என்று தெளிவாகக் காட்டுகின்றார்.

வேகாநிலை அடைந்த மகரிஷிகள்… உயிர் ஒளியின் துடிப்பாக எப்படி இருக்கின்றதோ…? அதைப் போல தன் உணர்வினை உயிரின் உணர்வின் தன்மைகள் கொண்டு இணைக்கும் சக்தியாக… நஞ்சினை அடக்கி ஒளியாக்குகின்றார்கள்.

வைரம் நஞ்சினை அடக்கி ஒளிச்சுடராக இருப்பது போன்று
1.உடலில் இருக்கும் உணர்வுகள் அனைத்தையும்
2.வாழ்க்கையில் வரும் நஞ்சான உணவுகள் நல்ல உணர்வுக்குள் கலந்தாலும்
3.அந்த ஞானி விண்ணுலக ஆற்றலை எடுத்து அதன் மேல் “அடுக்கடுக்காகப் பரப்பி…” நஞ்சினை ஒடுக்கி
4.இந்த உணர்வின் தன்மையை மேலோங்கச் செய்து இந்த உணர்வின் ஒளி அலையாகத் தன் உயிருடன் ஒன்றி
5.துருவத்தைக் கண்டுணர்ந்து… துருவம் நுகரும் நஞ்சினைத் தனக்குள் உணவாக உட்கொண்டு
6.அந்த உணர்வின் சக்தியைத் தனக்குள் பரப்பி… அதனின் துணை கொண்டு ஒளியின் சிகரமாகி
7.அகஸ்தியன் துருவத்தை நுகர்ந்து… அந்தத் துருவத்தில் வரும் உணர்வையே ஒளியாக மாற்றி
8.எந்த துருவத்தின் வழியில் ஈர்ப்பாகச் சக்திகளை எடுத்தானோ பூமிக்குள் வரும்… அந்த நஞ்சினை மற்றது விளையாது
9.அதையே தனக்குள் ஒளியின் சிகரமாக மாற்றி அமைத்து இன்றும் சுழன்று கொண்டிருக்கின்றான்…
10.அகஸ்தியன் துருவ மகரிஷியாக… துருவ நட்சத்திரமாக என்று…! இதையெல்லாம் குருநாதர் உணர்த்திக் காட்டுகின்றார்.

அவனைப் பின்பற்றிவர்கள் விண்ணுலகில் சப்தரிஷி மண்டலங்களாகத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் ஒளியாக எவ்வாறு சுழன்று கொண்டிருக்கிறார்கள்…? என்பதையும் காட்டுகின்றார்.

மனிதனின் நிலைகளில் முழுமை பெற்று “உயிருடன் ஒன்றி ஒளிச் சரீரமாக எவ்வாறு அங்கே சென்றடைந்தார்கள்…?” என்று உணர்த்திவிட்டு அவர்கள் சென்ற எல்லையை நாம் அனைவரும் அடைய வேண்டும் என்பதையும் குருநாதர் காட்டுகின்றார்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம் வாழ்க்கையில் “நமக்கு இப்படியெல்லாம் ஒருவன் துரோகம் செய்தான்… அவனை விடுவதா…?” என்று இறுக்கப் பிடித்துக் கொண்டால் இந்த உடலுக்குப் பின் அவன் உடலுக்குள் தான் நாம் செல்வோம்.
1.அந்த உடலுக்குள் சென்று நோயைத்தான் உருவாக்குவோம்.
2.பின் அந்த உடலை விட்டுச் சென்ற பின் மனிதனல்லாத உடலை நம் உயிர் உருவாக்கிவிடும்.

அதே போல் நம் பையன் மேல் அதிகப் பற்றும் பாசமாக இருந்தால் அவன் வழியில் அவன் உடலுக்குள் சென்றுவிடும். ஏனென்றால் தன்னுடைய குழந்தைகளின் மீது மிகுந்த ஆசையாக இருக்கும் பொழுது சந்தர்பப்பத்தால் ஏற்பட்ட இன்னல்களால் “தன்னால் முடியவில்லை” என்ற நிலையில்… தாங்காதபடி தற்கொலை செய்து கொண்டால்…” அந்த நிலை ஆகிவிடும்.

எந்தக் குழந்தை மீது பாசமாக இருக்கின்றதோ அந்தக் குழந்தையின் உடலுக்குள் சென்று தற்கொலை செய்யும் பொழுது “எத்தனை வேதனை இருந்ததோ” அதை எல்லாம் அந்தக் குழந்தை உடலிலும் உருவாக்கும்.
1.குழந்தைகளைக் காக்க வேண்டும் என்று உருவான அந்த நல்ல உணர்வுகள்
2.கடைசியில் குழந்தையைக் காக்க முடியாது போய்விடுகின்றது.
3.இதை எல்லாம் நம் வாழ்க்கையில் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

ஏனென்றால் இன்று தீவிரவாதம் என்ற நிலையில் உலகம் முழுமைக்குமே விஷத் தன்மை பரவியிருக்கும் நேரத்தில் வெறித் தன்மையாகப் பிறரைத் தாக்கிக் கொல்லும் உணர்ச்சிகளே அதிகமாகின்றது.

அந்தக் கொல்லும் உணர்ச்சிகள் உடலிலே சேர்க்கப்படும் பொழுது மனித நிலையையே இழக்க நேர்கின்றது. மிருகங்கள் மற்றதை அசுரத்தனமாகத் தாக்கிக் கொல்வது போல் இந்த அசுர உணர்வுகளை உடலில் சேர்த்தவுடனே அசுர உணர்வின் அணுக்கள் நமக்குள் அதிகரித்துவிடுகின்றது.
1.மனிதனுடைய சிந்தனை இழக்கப்பட்டு
2.மனிதனும் மிருகச் செயல்களைச் செயல்படும் தன்மைக்கே இன்று மாறிவிட்டான்.

இன்றைய விஞ்ஞான அறிவால் ஏற்பட்ட உணர்வுகள் அனைத்தும் அதே சமயத்தில் மதம் இனம் மொழி என்ற நிலைகளால் தீவிரவாதம் என்று ஏற்பட்ட விளைவுகளாலும் உடலுக்குப் பின் நாம் மிருகங்களாகப் பிறக்கும் தன்மையே வருகின்றது.
1.இன்று நாம் மனிதனாக இருந்தாலும் மனிதனின் உணர்வுகள் இழக்கப்பட்டு
2.மிருகத்தின் உணர்வுகளாக மனிதன் இப்பொழுது இயக்கும் காலமாக மாறி விட்டது.

இதைப் போன்ற நிலைகளை நமக்குள் வளராது தடுக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் நான்கிலிருந்து ஆறு மணி வரையிலும் துருவ நட்சத்திரம் வெளிப்படுத்தும் உணர்வினை முறைப்படி துருவ தியானத்தின் மூலம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் உணர்வுகளை எடுத்து வாழ்க்கையில் அவ்வப்பொழுது வேதனை என்ற உணர்வினை நுகர்ந்தால் அது நமக்குள் உட்புகாது தடுத்துப் பழக வேண்டும். அதுவே துருவ தியானத்தின் நோக்கம்.

ஆகையினால் ஒவ்வொருவரும் இந்த வாழ்க்கையில் கஷ்டங்களைக் கேட்டறிந்தால் அறிந்தபின் உடனே
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் செலுத்திவிட்டு
2.அடுத்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து
3.எங்கள் உடலில் உள்ள உறுப்புக்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற அருள்வாய் ஈஸ்வரா..! என்று ஏங்கி ஒரு நிமிடம் உடலுக்குள் செலுத்தித் தியானித்தால்
4.நம் உடலில் உள்ள அணுக்கள் மற்றவர் சொல்லும் கஷ்டமான உணர்வுகளை நம் உடலில் சேராது அது நீக்கிவிடும்… சுத்தப்படுத்திவிடும்…!

அதற்குப் பின் யார் கஷ்டம் என்று சொன்னார்களோ அவர் உடலிலே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பாய்ந்து அவர் உடலில் உள்ள கஷ்டங்கள் நீங்கி அவர் உடல் நலம் பெற வேண்டும் அவர் குடும்பம் நலமாக வேண்டும் என்று சொல்லிவிட வேண்டும்.

1.இதை நாம் வைராக்கியமாகச் செயல்படுத்துதல் வேண்டும்.
2.இப்படிச் செய்தால் அவர்களுக்கும் நல்லதாகின்றது.
3.அதே சமயத்தில் நமக்கும் நல்லதாகின்றது.
4.நாம் என்றுமே அந்தத் துருவ நட்சத்திரத்தைப் பற்றுடன் பற்றும் பழக்கம் வந்து விடுகின்றது.
5.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழும் நிலை பெறுகின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தசரதச் சக்கரவர்த்தி தினமும் ஒரு கல்யாணம் செய்து கொள்கிறார் என்றும் கங்கணமே கழட்டவில்லை என்றும் காவியத்தில் சொல்வார்கள். அதாவது
1.விண்ணிலிருந்து வந்த ஒரு உயிரணு
2.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சக்தியைத் தனக்குள் கவர்ந்து
3.தன்னுடன் சேர்த்துக் கொண்டே உள்ளது என்பதை அவ்வாறு காட்டுகின்றார்கள்.

தசரதச் சக்கரவர்த்தி என்றால் நாம் புழுவிலிருந்து மனிதனாகத் தோன்றி மனிதன் ஆனபின் “பத்தாவது நிலை (கல்கி – ஒளி நிலை) அடையக்கூடிய பருவம் பெற்றவர்…” என்று பொருள்.

நாம் எண்ணக்கூடியது அனைத்தையும் நம் உயிர் ஜீவ அணுவாக மாற்றி அந்தச் சக்தியைத் தன்னுடன் இணைத்து தன்னுடன் இயங்கச் செய்கின்றது.

அதனால் தான் பத்தாவது நிலை அடையக்கூடிய தருணத்தில் அவர் என்ன ஆனார் என்ற நிலைகளைக் காட்டுகின்றார்கள்.
1.ஏனென்றால் அவருக்குள் எத்தனையோ விதமான குணங்கள் இருக்கின்றது
2.அது எல்லாம் அவருடன் சேர்ந்து இயக்கும் சக்தி (மனைவி) என்று பொருள்.

இராமனின் தாயோ எல்லாவற்றையும் அது பரிவுடன் பண்புடன் அரவணைக்கும் சக்தி கொண்டது. அதனால் அந்தச் சக்தியின் துணை கொண்டு அதனின்று உருவாகும் இந்த உணர்வின் அணுக்கள் மற்றவர்களை அரவணைக்கும் சக்தி கொண்டது என்று உணர்த்துவதற்காக
1.இராமனுக்குப் பட்டாபிஷேகம் செய்து
2.அவனிடம் இந்தச் சாம்ராஜ்யத்தை ஒப்படைக்கலாம்…! என்பது தசரதச் சக்கரவர்த்தியின் எண்ணம்.

தனக்குள் எடுக்கும் நல்ல குணம் கொண்டு அந்த நல்ல குணத்தைக் கொண்டே இந்த உடலை ஆட்சி புரிய வேண்டும் என்ற எண்ணங்கள் கொள்கின்றார் தசரதன்.

அந்த நல்ல குணங்கள் கொண்டு வாழ்க்கையை நடத்த வேண்டும் என்று எண்ணுகின்றார். இருப்பினும்
1.பரதனின் தாயாரோ தனக்குள் ஆசை கொண்டது.
2.தன் பையனுக்கே பட்டத்தைச் சூட்ட வேண்டும் என்று அது பிடிவாதம் பிடிக்கின்றது.

(உயிர் – தசரதன்; உயிரால் நுகரப்பட்ட உணர்வுகள் – மனைவியாக இணைகிறது; அதனால் தான் தசரதனுக்கு எண்ணிலடங்காத மனைவிகள் என்று சொல்வது.)

அப்படிப்பட்ட அந்த உயிரின் இயக்கத்தில்
1.எந்த உணர்வின் தன்மை வலிமை பெறுகின்றதோ
2.அந்தக் குணத்தின் தன்மை – தன் மகனுக்கே பட்டம் சூட்ட வேண்டும் என்று விரும்புகின்றது.
3.அதனால் உடலுக்குள் உருவான மற்ற நல்ல அணுக்களுக்கெல்லாம் கலக்கங்கள் ஏற்படுகின்றது என்பதைக் காட்டுகின்றனர்.

இருந்தாலும் உடலுக்குள் சகோதரத்துவமாக வளர்ந்த பரதனோ அண்ணனே (இராமனே) ஆட்சி புரிய வேண்டும் என்று விரும்பினாலும் “தன் குழந்தைக்கே பட்டம் சூட்ட வேண்டும்…” என்ற இந்தப் பிடிவாத குணங்கள் அங்கே கைகேயிக்கு எப்படி உருவாகின்றது என்பதைக் காட்டுகின்றார்கள்.

நல்லதைக் காக்க வேண்டும் என்ற நிலையில் சந்தர்ப்பத்தால் நாம் நுகரும் தீமையான உணர்வுகள் நம் உடலுக்குள் வந்த பின் அது விளைந்து
1.அதனுடைய பருவ காலம் வந்த பின்
2.நல்லதையே இயக்கவிடாது எப்படித் தடுக்கிறது…? என்பதையே அங்கே தெளிவாக்குகின்றார் வான்மீகி.

தீமை என்று அறிந்த கணமே அதை நமக்குள் சேராது அது நம் உடலுக்குள் விளையாது தடுக்க வேண்டும். அதற்குத்தான் அடிக்கடி ஆத்ம சுத்தி செய்யச் சொல்கிறோம்.

மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடலிலுள்ள உறுப்புகள் முழுவதும் படர்ந்து அந்த உடல் உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களும் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று உடலுக்குள் இப்படிச் செலுத்தினால் இதற்குப் பெயர் ஆத்ம சுத்தி.

நஞ்சை வென்ற மகரிஷிகளின் அருள் சக்திகள் நம் உடலுக்குள் சென்று அது அணுவாக விளைந்து அதிலிருந்து வெளிப்படும் மணம் தீமைகளை வேக வைத்து அதை ஒளியாக மாற்றிவிடும். தீமைகள் அனைத்தும் செயலற்றதாகின்றது.

தெய்வீக அன்பைத் தான் நாம் வளர்க்க வேண்டும்

 

பாசத்தால் நாம் அதிகமாக வேதனையைத் தான் நுகர்கின்றோம்… எதை…? விஷத்தை…!
1.எவர் மேல் பாசம் அதிகம் ஆகின்றதோ
2.அப்போது வேதனை என்ற நஞ்சையும் அதனுடன் இணைத்துக் கூடவே சாப்பிடும்.

நம் பையன் மீது பாசம் அதிகமாக வைக்கின்றோம். மற்ற நண்பர்களுடன் அவன் சேர்ந்து சரியாகப் படிக்கவில்லை என்றால் உடனே வேதனை என்ற விஷம் நமக்குள் கலந்துவிடும்.

அவனை எண்ணி எண்ணி இந்த உடலே கரைந்து விடும். விஷத்தைச் சாப்பிட்டால் எப்படியோ இந்த உணர்வுகள் நோயாக மாறுகின்றது. அந்த நோயின் தன்மை பேயாகவே மாறுகிறது.

1.இப்படிச் செய்கின்றானே… இப்படிச் செய்கின்றானே…! என்ற இந்த உணர்வுகளை வளர்த்துக் கொண்ட பின்
2.உடலை விட்டு ஆன்மா பிரிந்த பின் ஒரு உடலுக்குள் பேயாகப் போய் நோயாகவே உருவாக்கிவிடும்.

இதைப் போன்ற நிலைகளில் இருந்து நாம் விடுபட வேண்டும்.

1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று
2.உங்கள் உயிருடன் எப்பொழுதெல்லாம் ஒன்றுகின்றீர்களோ
3.அந்தச் சக்தியை அப்பொழுது நீங்கள் பெறக்கூடிய தகுதியை ஏற்படுத்துகின்றோம்.
4.அதற்குத்தான் இந்த உபதேச வாயிலாக ஆழமாக ஞான வித்தாகப் பதிவு செய்கின்றோம்.

விரயமில்லாதபடி எந்த நிமிடமும் நீங்கள் மகரிஷிகளின் அருள் சக்தியை எடுக்கலாம்.

யாம் கொடுக்கக்கூடிய சக்தியை நீங்கள் அனைவரும் பெற்று நீங்கள் பார்ப்பவர்களுக்கெல்லாம் அதைக் கிடைக்கச் செய்ய வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தியை உங்களுக்குள் வளர்த்துக் கொண்ட நிலையில்
1.உங்கள் பார்வை உங்கள் சொல் உங்கள் மூச்சு காற்றலையில் பரவினாலும்
2.யாரைப் பார்த்து அவர்கள் நன்மை பெற வேண்டும் என்று எண்ணினால் அதை அவர்களும் பெற முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக வேதனைப்படும் ஒருவரைப் பார்த்தால் அந்த உணர்வு நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளிலும் அந்த விஷத்தின் வேதனை என்ற உணர்ச்சியைத் தூண்டுகின்றது.

பின் நம் உடலில் உள்ள உணர்வுகள் எந்த மனித உடலில் வேதனை என்ற உணர்வுகள் வெளி வந்ததோ அதை அனைத்தையும் நம் கண்ணின் காந்தப் புலனறிவு கவர்ந்து நம் உயிரிலே மோதச் செய்கின்றது.

அப்படி மோதச் செய்யும் பொழுது அந்த வேதனையான உணர்ச்சியின் இயக்கமாக… எண்ணம் சொல் செயல் என்ற நிலைகளில் நமக்குள் இயங்கத் தொடங்குகின்றது. எப்படி…?

சிறு குடல் பெரும் குடல்:-
1.அந்த வேதனை என்ற உணர்ச்சிகள் உமிழ் நீராக மாறும் பொழுது
2.சிறுகுடல் பெரும் குடலில் உள்ள அணுக்களை மயக்கமடையச் செய்கின்றது
3.நாம் சாப்பிட்ட ஆகாரத்தில் நஞ்சாகக் கலந்து அங்கே நஞ்சான அமிலங்களாக மாறி விடுகின்றது.
4.அப்பொழுது நமக்குக் குடல் உபாதைகள் எல்லாம் வந்துவிடுகின்றது.

கணையங்கள்:-
இதைக் கடந்து இந்த அமிலங்கள் அடுத்த உறுப்புக்குள் சென்றால் நம் கணையங்களை உருவாக்கிய அணுக்களில் அங்கேயும் சிறு வேதனை வரும்.

கல்லீரல் மண்ணீரல்:-
கணையங்களைச் சீர்படுத்தும் நிலை இல்லை என்கிற பொழுது அந்த அமிலங்கள் நம் கல்லீரலிலும் மண்ணீரலிலும் கலக்கின்றது. அப்பொழுது அங்கிருக்கும் அணுக்களும் இந்த விஷத்தால் சரியாக இயங்காதபடி வரும். கல்லீரலிலும் மண்ணீரலிலும் வேதனைகள் வரும்.

நுரையீரல்:-
நுரையீரலில் இது கலந்தால் அந்த நுரையீரலில் உள்ள அணுக்கள் அனைத்தும் இதைச் சீராகப் பயன்படுத்தவில்லை என்றால் சளி உருவாகின்றது.

நெஞ்சுச் சளி போன்ற நிலைகளும் ஆஸ்த்மா போன்ற நோய்களும் வேதனை அதிகமானால் டி.பி. போன்ற நோய்களும் உருவாகிவிடுகின்றது.

கிட்னி – சிறுநீரகங்கள்:-
1.அந்த வேதனை என்ற அமிலம் கலந்த உணர்வுகள் கிட்னிக்கு வந்தால்
2.அது இரத்தத்திலிருக்கும் நீரைப் பிரிக்கும் சக்தி இழந்து
3.இரத்தத்துடன் நீர் கலந்து சென்று உடல் முழுவதும் புஸ்… என்று உப்பிப் போகும்.
4.நாம் உடல் உப்பி இருக்கிறோம் என்று நினைப்போம்.
5.ஆனால் நமக்குள் சென்ற பின் இரத்தத்தில் கலந்து ஓர் நீர் சத்துள்ள இரத்தமாக மாற்றிவிடும்.
6.அதனால் பல உபாதைகளும் வருகின்றது… சோக நீர் போன்று ஆகி சோக நோய் உடலில் உருவாகிவிடுகின்றது.
7.சர்க்கரை உப்பு போன்றவற்றைச் சரியாகப் பிரிக்க முடியாதபடி அந்த குறைபாடுகளும் ஆகின்றது.

இருதயம்:-
அடுத்து அந்த உணர்வுகள் நம் இருதயத்தில் கலக்கப்படும் பொழுது இருதயம் பலவீனமாகி விடுகின்றது. நம் எண்ணம் சொல் செயலைச் சீராக இயக்காதபடி ஆகிவிடுகின்றது.

இதைப் போன்று நம் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் ஏற்படும் இந்த நிகழ்ச்சிகள் நம் உடலுக்குள் இருக்கும் உறுப்புகளை எல்லாம் பாழாக்குகின்றது.

கண்களின் கருமணிகள்:-
அதே சமயத்தில் நம் கண்ணில் கவர்ந்த விஷத் தன்மை கருமணிகளில் தோய்ந்து விடுகின்றது.

வேதனப்படுவோரைப் பார்த்துவிட்டு
1.ஒரு நல்ல கணக்கை எழுத வேண்டும் என்றாலும்
2.ஒரு நல்ல தொழிலைச் செய்ய வேண்டும் என்றாலும்
3.அந்த கருமணிக்குள் வேதனை என்ற விஷம் கலந்த பின்
4.அந்த நல்ல எண்ணங்களை எண்ணும் பொழுது சிந்திக்கும் வலு இழக்கப்படுகின்றது… சிந்தனையும் குறைகின்றது.

நரம்பு மண்டலம்:-
கண்களின் வழி அந்த வேதனை என்ற விஷம் நரம்பு மண்டலங்களில் அதிகரிக்கும் பொழுது விஷத் தன்மை தோய்ந்து கை கால் குடைச்சல் என்ற நிலை வருகின்றது.

எலும்பு மண்டலம்:-
அதே உணர்வுகள் எலும்பு மண்டலங்களில் இது படரப்படும் பொழுது அந்த எழும்புகளுக்குள்ளும் இனம் தெரியாது வேதனைகள் வருகின்றது. எலும்புகள் தேய்மானம் போன்ற நிலை ஏற்படக் காரணம் ஆகின்றது.

தசை மண்டலம் தோல் மண்டலம்:-
அதே சமயத்தில் நம் தசை மண்டலங்களிலும் விஷத் தன்மை ஆகி தசை வலிகள் வருகின்றது. தோல் மண்டலங்களில் வரும் பொழுது இனம் புரியாத அரிப்புகளும் தோல் வியாதிகள் போன்ற நிலையும் வந்துவிடுகின்றது.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை.

ஏனென்றால் சந்தர்ப்பத்தால் கூர்ந்து கவனித்த உணர்வுகள்
1.நம் நெஞ்சு எலும்புக்குள் ஊழ் வினை என்ற வித்தாகிவிட்டால்
2.எந்தக் கண்ணால் வேதனைப்படுவோரைப் பார்த்தோமோ அவர்களைப் பார்க்கும் பொழுது நினைவும்
3.அந்த நினைவானால் காற்றிலிருந்து சுவாசித்து நம் இரத்தங்களில் மாசுபடும் உணர்வே வருகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் தப்புவதற்குத்தான் இந்தத் தியானம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நம் உடலில் உள்ள உறுப்புகளை உருவாக்கிய அனைத்து அணுக்களும் பெறக்கூடிய சந்தர்ப்பத்தை இந்தத் தியானத்தின் மூலம் உருவாக்குகின்றோம்.

1.நாம் கண் வழி எண்ணி ஏங்கித் தியானிக்கும் பொழுது
2.கண்ணிலிருந்து நரம்பு மண்டலம் வழியாக எல்லா உறுப்புகளுக்கும் உள்ள தொடர்பால்
3.உடலில் உள்ள எல்லா உறுப்புகளுக்கும் அணுக்களுக்கும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறச் செய்ய முடியும்.
4.மாசுபடும் இரத்தங்களை மாற்றிப் பரிசுத்தமாக்கி ஒவ்வொரு உறுப்பையும் சீராக இயக்க முடியும்.
5.நோய் வராதபடியும் சிந்தித்துச் செயல்படும் சக்தியும் நாம் நிச்சயம் பெற முடியும்.

எதுவும் கெட்டது அல்ல…! எப்படி…?

 

குருக்ஷேத்திரப் போர்…! ஓ…ம் ஈஸ்வரா என்று உயிரை எண்ணுங்கள் அது உடலுக்கு குரு. ஓ…ம் என்பது பிரணவம்…. அதாவது நாம் எண்ணுவது ஜீவன் பெறுகின்றது.

ஆகவே… உயிரை எண்ணி
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று
2.குருக்ஷேத்திரத்தில்… உயிரிடம் கண்ணின் நினைவைச் செலுத்தி அந்தச் சக்தி பெற வேண்டும் என்று ஏக்கத்துடன் இருங்கள்.

நீங்கள் அந்த சக்தி பெற வேண்டும் என்று நான் கொடுக்கும் வாக்குகள் உங்களுக்குள் அந்த உயர்வின் தன்மையைப் பெறக்கூடிய தகுதியாகப் பெற்று யாம் உபதேசித்த ஆற்றல்மிக்க சக்தியை… “நீங்கள் எண்ணிய போது… எண்ணிய நிலைகள் கொண்டு…” உங்களுக்குள் கிடைக்கச் செய்கின்றேன்.

உங்களுக்குள் துன்பத்தை ஊட்டிக் கொண்டிருக்கும் அந்தத் துன்ப உணர்வுகள் அனைத்தும் உங்களுக்குள் தான் பணியச் செய்வதே எமது ஆசி.

ஆகவே அந்த உணர்வுடன் நீங்கள் அதைப் பெறக்கூடிய தகுதி கொண்டு மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று மேல் நோக்கி விண்ணிலே நினைவைச் செலுத்தி உயிரிடம் வேண்டுங்கள்.

அந்த மகரிஷிகள் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் பெற வேண்டும் எங்கள் சொல்லுக்குள் இனிமை பெற வேண்டும் எங்கள் செயல் புனிதம் பெற வேண்டும் நாங்கள் பார்ப்பது அனைத்தும் நலம் பெற வேண்டும் பார்ப்போர் அனைவரும் நல்லதாக இருக்க வேண்டும் என்று இதை மட்டும் எண்ணி ஆசி பெறுங்கள்.

உங்களுக்குள் துன்பத்தை ஊட்டும் சக்திகள் அனைத்தும் தாள் பணிந்து…
1.உங்களுக்குள் ஒத்துழைத்து உங்கள் உயர்வான எண்ணங்களுக்கு வழிகாட்டியாக அது அமையட்டும்.
2.எது…?
3.எதுவும் கெட்டது அல்ல…! உங்களுக்குள் வலுவூட்டவும் வழிகாட்டியாகவும் அது இருக்கும்.

கெட்டது என்று அது தான் நமக்குக் காட்டுகின்றது. அதை நாம் நீக்கிவிட்டுச் செல்ல விரும்புகின்றோம். கெட்டது என்று அது வழி காட்டினாலும் அந்த உணர்வு எனக்குள் சேர்ந்து விடுகின்றது.
1.ஆனால் வழிகாட்டிய நிலைகளும் எனக்குள் அது பணிந்து நல் வழிகாட்டியாக இருக்க வேண்டும்.
2.ஆக… வழிகாட்டிய அந்த விஷமே என்னை ஆட்கொண்டு விடக்கூடாது.
3.ஆகையினால் தான் அத்தகைய நிலைகளை “ஆசீர்வாதம்…” என்பது
4.உயர்ந்த சக்தியாக… ஞானத்துடன் கூடிய… “மெய் வழி பெறும் அந்தத் தகுதியை நீங்கள் பெற வேண்டும்…” என்று ஆசி கொடுக்கிறேன்.

அந்த வழியில் ஆசி வாங்கிப் பழகுங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் வாழும் இந்தப் பிரபஞ்சமே.. அண்டமே… அகண்ட நிலைகள் கொண்டிருப்பினும் அது “இருண்ட நிலைகள் கொண்டது தான்…!”

1.ஒரு வீட்டைத் தொடர்ந்து சில நாள்கள் அடைத்து வைத்திருந்தால்
2.அதற்குள் தன்னிச்சையாக வெப்பமாகி அதில் ஓர் ஆவி போல் உருவாகும்.
3.அந்த ஆவி நாளடைவில் ஒரு நெடி கலந்த… “விஷத் தன்மை” அடைகின்றது.

இதைப் போல் தான் பேரண்டம் அகண்ட நிலைகளில் இருக்கப்படும் பொழுது வெப்பமாகின்றது. அந்த வெப்பத்தின் தணலால் அது ஆவியாக மாறி “அடர்த்தி ஆகி விஷத்தின் தன்மை” அடைகின்றது.

அடுத்தடுத்து இந்த விஷத்தின் தன்மை ஆகி அதனால் ஆவியின் தன்மைகள் வரப்படும் பொழுது
1.இந்த விஷத்தின் தன்மை மீண்டும் தாக்கப்படும் பொழுது வெப்பமாகின்றது.
2.வெப்பத்தின் தன்மை அடையும் பொழுது நகர்ந்து ஓடுகின்றது.
3.ஓடும் பொழுது ஈர்க்கும் காந்தம் என்ற நிலை வருகின்றது.

முதலில் வெப்பம்… பின் ஆவியின் நிலை நாளடைவில் விஷமாகி… மீண்டும் சாந்த நிலைகள் கொண்டு வரப்படும் பொழுது இது அணுக்களாகப் பிரிந்து சென்ற பின்
1.வெப்பம் காந்தம் விஷம் என்ற இந்த மூன்று நிலை பெறுகின்றது.
2.இதைத் தான் மும்மலம் என்று சொல்வது.
3.ஆதிபராசக்தி என்பது வெப்பம்… ஆதிலட்சுமி என்பது காந்தம்… ஆதிசக்தி என்பது விஷம்.
4.விஷத்தின் தன்மை கொண்டு இப்படி மூன்று சக்திகளாக இயங்குகின்றது.

இருப்பினும் அணுத் தன்மை பெற்ற பின் இதைப் போன்று ஒரு உணர்வின் சத்து உருவாகிறது என்றால் காந்தம் தன்னுடன் அதை இழுத்த பின் மோதுகின்றது.

மோதிய நிலைகள் கொண்டு அது தன்னுடன் இணைத்த பின் அந்தச் சத்தின் தன்மை இரண்டறக் கலந்து விடுகின்றது.
1.அந்தச் சத்திற்குப் பெயர் சீதா என்றும்
2.அந்த மணத்திற்குப் பெயர் ஞானம் என்றும்
3,.இந்தச் சத்து தன்னுடன் இணைத்து இரண்டறக் கலந்து கொண்டால் பரப்பிரம்மம் என்றும்
4.”பிரம்மா உருவாக்குகின்றான்…!” என்றும் சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றது.

வெப்பம் காந்தம் விஷம் சத்து ஞானம் என்று இப்படி ஐந்து நிலைகள் கொண்டு அது இயங்குகின்றது. எந்த மணத்தை இதனுடன் இணைத்ததோ “புலனறிவு ஐந்து…!” என்று ஆகின்றது.

எதற்குள் சென்றாலும் அதன் வலு கொண்டு தனக்குள் இருக்கும் அந்த மணத்தை இயக்கும் என்று பொருள்படும்படியாக நம் சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றது. இப்படி உருவானது தான்… எல்லாமே…!

ஏனென்றால் கடவுள் எப்படி இருக்கிறான்…? என்ற நிலையில் நாம் தெரிந்து கொள்வதற்குத்தான்…
1.கடவுள் எங்கேயோ இருக்கின்றார்…
2.அவரே தான் நம்மைக் காக்கின்றார்…! என்ற நம்பிக்கை தான் மனிதர்களிடத்தில் இருக்கின்றது.

ஆனால்
1.உணர்வின் தன்மை ஒன்றுக்குள் ஒன்று “உள் நின்று இயக்கும்” நிலை தான் கடவுள் என்றும்
2.ஒன்றினுள் ஒன்று இணைக்கப்படும் பொழுது உருவாவது ஈசன் என்றும்
3.ஒன்றுடன் ஒன்று இணைத்திடும் பொருள் பரப்பிரம்மம் என்றும்
4.இப்படி இயற்கையின் நிலைகள் எப்படி உருவாகிறது…? என்ற நிலையைத் தெளிவாக்கியது ஆதியிலே தோன்றிய அகஸ்தியன் தான்.
5.அந்த அகஸ்தியன் உணர்வைக் கவர்ந்து தான் இப்பொழுது அதை நான் (ஞானகுரு) பேசுகிறேன்.

அகஸ்தியன் தனக்குள் கண்டறிந்து அவனுக்குள் விளைந்து வெளிப்பட்ட அந்த உணர்வுகள் அனைத்தும் நமக்கு முன்னாடி இங்கே படர்ந்திருக்கின்றது.

அதைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்திருக்கின்றது. நீங்களும் அதை நுகரலாம்.
1.இந்த உலகில் மனிதராகப் பிறந்த அனைவரும் அந்த உணர்வின் எண்ணத்தை ஏங்கிப் பதிவு செய்து
2.அதனை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வரும் பொழுது பெற முடியும்.
3.அதைத்தான் “தென்னாட்டுடைய சிவனே போற்றி… எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி…? என்று சொல்வது.
4.தென்னாட்டிலே தோன்றிய அந்த அகஸ்தியன் கண்ட பேருண்மைகளை எல்லோராலும் பெற முடியும் என்பதே அதனின் தத்துவம்.

இப்பொழுது ஒருவர் திட்டிவிட்டார் என்றால் “என்னைத் திட்டுகிறான்…! என்ற எண்ணத்தைப் பதிவு செய்துவிட்டால் மீண்டும் என்ன செய்கிறீர்கள்…?

என்னைத் திட்டினான்.. திட்டினான்… திட்டினான்…! என்றால் அந்த உணர்வுகள் வளர்ச்சியாகி அவன் மேல் வெறுப்பாகி நம் உடலுக்குள் இருக்கும் நல்ல அணுக்களுக்குள்ளும் வெறுப்பின் தன்மை கலந்து இரத்தக் கொதிப்பு போன்ற பலவிதமான நோய்கள் வரக் காரணமாகின்றது.

ஆகவே ஒரு திட்டியவனின் உணர்வைக் கவர்ந்து பதிவாக்கி அதை நினைவாக்கும் பொழுது நோயாக உருவாவது போல்
1.ஆதியிலே அகஸ்தியன் கண்ட பேரண்டத்தின் உண்மைகளையும்
2.இயற்கை எப்படி விளைகின்றது…? என்ற உண்மைகளையும் பதிவாக்கிக் கொண்டு
3.மீண்டும் அதை நாம் நினைவுக்குக் கொண்டு வந்தால்
4.நாமும் அந்த அகஸ்தியனைப் போன்ற மெய் ஞானியாக உருவாக முடியும்.

அதற்காக வேண்டித்தான் இதை உபதேசிக்கின்றோம்.

ஆயிரெத்தெட்டு… நூற்றியெட்டு… என்றெல்லாம் நாமாவளி சொல்கிறோம்… ஏன்…?

 

கௌரவர்கள் 100 பேர் என்று மகாபாரதத்தில் காட்டுவார்கள். 100 விதமான கௌரவர்கள் நமக்குள் உண்டு. ஒன்றுடன் ஒன்று என்ன செய்யும்…?
1.நாம் நமக்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை எதுவோ அதைத்தான் அது இயக்கும்… கௌரவர்கள்.
2.தான் எடுத்துக் கொண்ட உணர்வு… தனக்குள் ஏற்கனவே இருப்பதற்கு மாறாக வந்தால் அது விடாது.

மந்திரத்தைக் கற்றுக் கொண்டவர்களிடம் நல்லதைச் சொன்னால் மந்திரக்காரன் ஏற்றுக் கொள்வானா…? கௌரவம் என்ற நிலை வருகின்றது.

நல்ல சத்தின் தன்மை எடுத்துக் கொண்டால் நல்லது என்று வராதபடி கௌரவர்கள் அதனதன் வளர்ச்சிக்குத் தான் இயக்கும்.

இப்படி ஒரு மனித உடலில் வளர்த்துக் கொண்ட உணர்வுகள் அவனில் அந்த உடலில் எப்படி 100 குணங்கள் எப்படி இயக்குகின்றது…?

கோவில்களில் நாமாவளி சொல்வார்கள். கடவுளின் அவதாரம் 10 என்றால் தெய்வத்தின் அவதாரம் 10 என்ற நிலை வருகிறது. அது எதனதன் நிலைகள் வளர்ந்தது என்று நிலையும் வரும்.

அன்ன வாகனம் யானை வாகனம் சர்ப்ப வாகனம் மயில்வாகனம் என்று ஒவ்வொரு தெய்வத்திற்கும் வைப்பார்கள் 10 வாகனங்களை. அந்த வாகனங்கள் எதற்கு…?

பாம்பு விஷத்தைப் பாய்ச்சி மற்ற உயிரினங்களை உட்கொள்கின்றது. மயிலும் தனக்குள் மற்றதை உட்கொண்டு விஷத்தை மாற்றுகின்றது. இப்படி
1.பரிணாம வளர்ச்சியில் ஒன்றை ஒன்று கொன்று ஒன்றை ஒன்று தின்று
2.பத்தும் சேர்த்து ஒன்றாக ஒரு குணமாக மாறுகின்றது.

அதனால் தான் ஒவ்வொரு தெய்வங்களுக்கும் வாகனங்களை வைத்து எதனதன் நிலையில் வளர்ச்சி அடைந்தது…? என்று ஒவ்வொரு சாமிக்கும் இவ்வாறு வைத்திருப்பார்கள்.

இப்படி நூறு விதமான குணங்களுக்கும் ஒவ்வொன்றுக்கும் பத்து. இந்த நூறும் சேர்த்தால் ஆயிரம் ஆகும். அஷ்டதிக்கும் அறியும் உணர்வு வரப்படும் போது எட்டு…! அதாவது
1.ஆயிரெத்தெட்டு என்ற நிலைக்குக் கொண்டு வருவார்கள்… அதே போல நூற்றியெட்டு…
2.எதன் உணர்வின் தன்மையோ இதன் உணர்வுக்கொப்ப அஷ்டதிக்கும் அது உணர்வின் தன்மை எப்படி எடுக்கிறது…? என்று
3.இந்த உணர்வின் குணங்கள் மாறுவது எப்படி…? இந்த உணர்ச்சியின் செயல்கள் எப்படி மாறுகின்றது…?
4.இதையெல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

உடலில் எந்தக் குணத்தின் தன்மையை நாம் எடுக்கின்றோமா… உதாரணமாக சர்க்கரைச் சத்து என்ற குணத்தை வைத்துக் கொண்டு சர்க்கரையைச் சாப்பிட்டால் எதிர்நிலையாகின்றது.

சர்க்கரை அதிகமாகி விட்டால் அனைத்தையும் வெள்ளணுக்களாக மாற்றி விடுகின்றது. கோப உணர்வு அதிகமாகி கார உணர்வானால் அந்த உணர்ச்சிகளை அதிகமாகத் தூண்டுகின்றது… பின்னாடி இரத்தக் கொதிப்பால் வாத நோயாகி கை கால்களைச் சுண்டி விடுகிறது.

1.இப்படி ஒரு உணர்வுக்கு ஒரு உணர்வு எதிர் நிலையாகும் பொழுது உடலுக்குள் எப்படிப் போர்கள் நடக்கின்றது…?
2.மனிதனுடைய நிலை எப்படி இருக்கின்றது…? எதன் வழியில் அது வருகிறது…? என்பதைக் குருநாதர் காட்டுகின்றார்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் கோயில்களில் யாகங்கள் செய்வதைப் பார்ப்போம். தெய்வத்திற்கு யாகங்கள் செய்து கும்பாபிஷேகம் செய்து சக்தி ஊட்டுவார்கள்.

1.அங்கே சொல்லும் மந்திரம்… வாசிக்கும் இசை…
2.நெருப்பில் போடும் புகை… அதில் என்னென்ன மணங்கள் வருகிறதோ…
3.அதை எல்லாம் யாகத்தில் உட்கார்ந்து இருப்போர் நுகர நேர்கிறது.

கோயில்களில் இருக்கும் இந்தத் தெய்வத்திற்கு இன்ன சக்தி இருக்கின்றது என்று இப்படி மக்கள் மத்தியிலே அதன் உணர்வுகளை உருவாக்குகின்றனர்.

அடுத்து அந்தத் தெய்வத்திற்கு இன்னென்ன அர்ச்சனைகள் செய்தால் நம்முடைய குறைகளை எல்லாம் நீக்கி நலமாக இருப்போம் என்று அதையும் ஆழமாகப் பதிவு செய்து கொள்கிறோம். அந்த உணர்வுகளை அங்கே ஊட்டுவார்கள்.

ஆனால் அத்தகைய யாகத்தில் உட்கார்ந்து நாம் கேட்டு நமக்குள் அங்கே செய்வதை எல்லாம் பதிவாக்கினால் இதற்குப் பெயர் “வசியம்…” சில கோயில்களில் பனிரண்டு வருடம் ஆகிவிட்டால் மீண்டும் இத்தகைய யாகத்தைச் செய்து மனித உடலிலே பதிவு செய்து அந்தக் கோயிலுக்குக் கூட்டமாக வருவார்கள்.

அக்காலங்களில் இதைப் போன்ற நிலைகள் நிறைய உண்டு.

ஏனென்றால் அந்த மந்திரங்களை எல்லாம் பதிவு செய்து பக்தி கொண்ட நிலையில் தெய்வத்தை எண்ணி வாழ்ந்து இறந்தபின் அரசர்கள் இந்த மாதிரி ஆன்மாக்களைக் கைவல்யப்படுத்திக் கவர்ந்து கொள்வார்கள்.

1.ஆக மொத்தம் உடலுடன் இருக்கும்போது அரசனுக்குச் சேவை செய்கின்றோம்.
2.உடலை விட்டுப் பிரிந்து சென்றபின் அவன் செய்யும் வேலைகளுக்குப் பயன்படுவோம்.

ஆலயத்தில் அரசன் வழிப்படுத்திய முறைப்படி மந்திரங்களை நாம் பதிவு செய்து கொள்கின்றோம். (பெரும் பகுதி இன்று மந்திரம் சொல்லாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்)

மந்திரங்களைப் பதிவு செய்து கொண்ட ஆன்மாக்களை வசியம் செய்து அடுத்து அவர்கள் இறக்கப்படும் போது இந்தக் குறிப்பை எடுத்துக் கொள்வார்கள். அதற்குத்தான் குடுகுடுப்புக்காரன் வருகின்றான்.

இவர்கள் எல்லாம் அக்காலங்களில் அரசருக்கு “ஐந்தாம்படை…” என்று சொல்வார்கள். காடு ஆறு மாதம் நாடு ஆறு மாதம் என்று தனித் தனிக் கூட்டமாக (BATCH) வருவார்கள்.

ஒரு கூட்டம் இந்த வருடம் காடுகளில் வளர்ந்து மந்திரங்களை செய்வதும் அடுத்து அதே மந்திரத்தைக் கொண்டு வந்து நாட்டுக்குள் வந்து இரவிலே வீடு வீடாக வந்து நல்ல நேரம் வருகின்றது.. கெட்ட நேரம் வருகின்றது… அது வருகிறது… இது நடக்கப் போகிறது…! என்று சொல்வார்கள்.

அப்படி வரும் பொழுது நம் வீட்டு வாசல் படியில் இருக்கின்ற மண்ணை எடுத்துக் கொள்வான். ஏதாவது ஜோசியத்தைச் சொல்லி துணி மணிகள் கொடுங்கள்…! என்று கேட்பான்.

அந்தக் குடுகுடுப்புக்காரன் கேட்டவுடனே புதுத் துணியை எடுத்துக் கொடுப்பீர்கள்.

அவன்… வேண்டாங்க..! பழைய துணி கொடுங்கள்…! என்பான். அப்புறம் ஏதாவது சொல்லி நம்முடைய தலைமுடியை எடுத்துக் கொள்வான். கேட்டால்… தோஷத்தை நீக்க வேண்டும் என்பான்.

இதை எல்லாம் எடுத்துக் கொண்டு போய் அதற்கென்ற அரசனிடம் ஒப்படைப்பான். இந்தத் தேதியில் இத்தனை மணிக்கு இந்த நிலைகளில் இறந்தார்கள்…! என்று எல்லாவற்றையும் கூறுவான்.

அந்த அதர்வண வேதத்தைக் கற்றுணரந்தவர்கள் இதை அடிப்படை ஆதாரமாக வைத்து மந்திரங்களை ஜெபித்து இந்த ஆன்மாவை எல்லாம் அங்கே கைவல்யப்படுத்திக் கொள்வார்கள்.

ஆக உடலோடு இருக்கும் போதும் அரசனுக்கு அடிமை. உடலை விட்டுப் பிரிந்து சென்ற பின்னும் அந்த ஆன்மாவை அவன் கைவல்யப்படுத்தி அடிமையாக்கி… அடுத்த நாட்டின் மேல் ஏவல் செய்வார்கள்.
1.ஒவ்வொரு அரசனும் அவனுக்கு வேண்டிய குலதெய்வம் என்ற நிலையை உருவாக்கி
2.அவன் நாட்டு மக்களுக்குள் இதை பதிவு செய்வான்.

நம்மை ஆட்சிப் புரிந்து வந்த கடந்த கால அரசர்கள் குலதெய்வம் என்று வைத்து அதன் வழியில் குடிமக்கள் இப்படிச் செய்வார்கள்…! என்று பதிவாக்கிக் காலம் காலமாக வைத்துள்ளார்கள்.

குலதெய்வம் என்ற நிலைகள் கொண்டு அந்த மக்கள் இறந்த பின் அந்த ஆன்மாக்களைக் கைவல்யப்படுத்திக் கொள்வார்கள். எதிரிகள் போர் முறை என்று வரப்படும்போது கைவல்யப்படுத்திய ஆன்மாக்களைப் பில்லி சூனியம் ஏவல் என்ற நிலைகளுக்கு எதிரிகளை வீழ்த்திடவும் அவர்களைப் புத்தி பேதமாக்கவும் பயன்படுத்துவார்கள்.

இன்றைய கால கட்டத்தில் விஞ்ஞான அறிவை எடுத்துக் கொண்டாலும் கூட
1.ஒரு நாட்டில் உளவாளிகளாக (SPY) வைத்து
2.அங்குள்ளவர்கள் என்ன செய்கிறார்கள்..? என்ற நிலையை
3.எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலைகளில் அறிந்து இயக்கி
4.அதை வைத்து உலகம் முழுவதற்கும் பல வகைகளிலும் தீமைகளைப் பரப்புகின்றனர்

அதே சமயத்தில் விஞ்ஞானத்தில் முதிர்ந்திருந்தாலும் கர்த்தர் தான் தன் கடவுள் என்று சொல்பவர்களும் அந்த அதர்வண வேதத்தைக் கற்றிருப்பார்கள்.

மற்ற மதத்தில் உள்ளவர்களும் அங்கிருக்கும் உணர்வுகளை அந்த ஆன்மாக்களைச் சேர்த்துப் பக்தி கொண்ட நிலையில் மற்றவர்களை இயக்குவார்கள்.

அத்தகைய ஆன்மாக்களைத் தேர்ந்தெடுத்துத் “தன் மதம் தான் பெரிது…!” என்று இயக்குவார்கள். உலகம் முழுவதுமே இன்று பார்க்கலாம். இனப்போர் மொழிப்போர் மதப்போர் என்று இரக்கமற்றுத் தாக்கும் நிலை வருகின்றது.

இதுகள் எல்லாம்
1.மனித உடலில் ஒரு ஆவி புகுந்து கொண்டால் அதன் நிலையையே செயல்படுத்துகின்றது.
2.அந்த ஆவி எந்தெந்த நிலைகளில் அந்த உடலில் இருக்கும் போது இடைஞ்சல் செய்ததோ
3.இன்னொரு உடலுக்குள் புகுந்தாலும் அதே தீயவினைகளைச் செய்கின்றது
4.அதற்கு நாம் மருத்துவம் பார்த்தாலும் எந்த வேலையும் ஆவதில்லை.

ஆனால் மந்திரங்களைச் செய்து… யாகங்கள் செய்து… சக்கரங்கள் வைத்து நீக்கி விடுவோம்…! என்ற நிலையில் செய்கின்றனர். அது நீங்காது.

1.அந்த உடல் இறக்கும் பொழுது தான் “அந்த ஆன்மாக்களும் வெளியில் வரும்…”
2.வந்த பின் அடுத்து மனிதனல்லாத மிருக உடலோ ஊர்ந்து செல்லும் உயிரினமாகவோ தான் அது பிறக்கும்.
3.அல்லது இன்னொரு மனிதன் பற்று கொண்டான் என்றால் மீண்டும் அங்கே செல்லும்.

ஆக எப்படிப் பார்த்தாலும் அமாவாசை அன்று சாங்கியங்களையும் யாகங்களையும் செய்து மறுபடியும் மனிதனில்லாத பிறப்பிற்குதான் நாம் கொண்டு வருகின்றோம்.

1.இந்த உடலைச் விட்டு சென்ற பின்
2.”பிறவியில்லா நிலை அடையும் மார்க்கங்கள்…”
3.இன்று.. இது வரையிலும்… மத அடிப்படையில் இல்லை.

கூட்டமைப்பாக இருந்து… ஒவ்வொரு குடும்பத்திற்கும் “நாம் செய்ய வேண்டிய அருள் சேவை…”

 

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் மேகங்களில் படர்ந்து மேகங்கள் அனைத்தும் ஒன்று கூடி நல்ல மழை பெய்து ஏரி குளங்கள் நிரம்பி தாவர இனங்கள் செழித்து வளர்ந்து ஊரும் உலகமும் உலக மக்களும் நலமும் வளமும் பெற அருள்வாய் ஈஸ்வரா.

மனிதர்களாக வாழக்கூடிய நாம்…
1.பல கோடித் தாவர இனங்களை உணவாக உட்கொண்டு உடலை வளர்த்த உணர்வுகள்
2.அந்த நினைவின் ஆற்றல் கொண்டு மேலே சொன்ன உணர்வின் ஒலி அலைகளைப் பரப்பப்படும் போது இது அனைத்திலும் கலந்து
3.எந்தெந்தத் தாவர இனங்களை உணவாக உட்கொண்டோமோ அதற்குள் மகரிஷிகளின் உணர்வைக் கவர்ந்து சர்வ தீமைகளையும் அகற்ற உதவும்.

தீமைகள் வரப்படும் பொழுது… அது எப்படி நமக்குள் கலக்கின்றதோ… அந்தத் தீமை எப்படி இயக்குகின்றதோ… இதைப் போன்றே
1.அந்தத் தீமை செய்யும் உணர்வுகளுக்குள் அருள் ஞானிகளின் உணர்வுகளைக் கலக்கப்படும் பொழுது
2.மழை மேகங்களுக்குள் அருள் சக்திகளைப் பரப்பப்படும் போது அந்தத் தீமைகள் அகற்றப்படுகின்றன.

அதே சமயத்தில் ஆங்காங்கு கூட்டுத் தியானங்கள் இருக்கப்படும் பொழுது நாம் செய்ய வேண்டியது என்ன…?

ஒருவர் நோயினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தாலும் தியானமிருப்போர் அனைவரும் ஒன்று சேர்த்து மகரிஷிகளின் அருள் உணர்வுகள் அவர் உடலில் படர்ந்து… அவரை அறியாது தீயவினைகளால் விளைந்த நோய்கள் நீங்கி… அவர் உடல் நலம் பெற்று மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று மகிழ்ந்து வாழ வேண்டும் என்று “பல முறை சொல்லுங்கள்…”

1.இந்த உணர்வின் ஒலிகளைப் பரப்பப்படும் பொழுது இந்த உணர்வு எல்லோருடைய செவிகளிலும் பட்டு…
2.இந்த உணர்வை அவரும் நுகரப்படும் பொழுது அவர் நோயின் கடுமை குறைவதைப் பார்க்கலாம்.

இதை மீண்டும் மீண்டும் அவர் எண்ணத் தொடங்கினால்… அனைவரும் சேர்ந்து அவர் உடல் நலம் பெற செய்ய வெளிப்படுத்திய அருள் உணர்வுகள் அவருக்குள் ஓங்கி வளர்ந்து அந்த கடுமையான நோயைத் தணிக்க இது உதவும்.

இதையெல்லாம் நாம் அவசியம் செயல்படுத்த வேண்டும்.

தியானம் செய்து கொண்டிருந்தாலும்… ஒவ்வொரு குடும்பத்திலும் எத்தனையோ சாப அலைகள் உண்டு. நாம் தியானத்திற்குச் செல்லும் போது
1.அங்குள்ள சாப அலைகள் நீங்கி தீய வினைகள் நீங்கி அந்தக் குடும்பம் நலம் பெற வேண்டும் என்ற உணர்வைப் பதிவாக்க வேண்டும்.
2.நாம் இப்படி வலுவான நிலைகள் கொண்டு பதிவாக்கும் இந்த உணர்வலைகளை வீடுகளில் உள்ள காந்தப்புலனறிவு கவர்ந்து கொள்ளும்.
3.இந்த உணர்வுகள் அந்த வீட்டில் உள்ளோருக்கு மீண்டும் நினைவூட்ட உதவும்….
4.தீமை அகற்றும் எண்ணங்கள் அங்கே தோன்றுகின்றது.

அந்தக் குடும்பத்தைச் சார்ந்தவர்களும் இந்த உணர்வுகளைப் பதிவாக்கப்படும் பொழுது “ஒவ்வொரு நிமிடத்திலும் நன்மை பயக்கும் சக்தியாக மாறுகின்றது…”

ஒரு குடும்பத்தில் அதிகமான சிரமம் என்று கேள்விப்பட்டால் தியானம் செய்யும் இருபது பேர் அங்கே சென்று அமர்ந்து தியானித்து மகரிஷிகளின் உணர்வுகளைப் பாய்ச்ச வேண்டும்.

அப்போது அவர்கள் தொழில் வளம் பெறவும் கடும் பிணிகளில் இருந்து மீளவும் அருள் ஞானம் பெருகவும் ஞானத்தின் வழியில் அவர்கள் வழி நடக்கவும் இது உதவும்.

அந்த வலிமையான உணர்வுகளை நாம் அவர்களுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும். “குடும்பம் நலம் பெற வேண்டும்…” என்ற உணர்வின் ஏக்கம் கொண்டு ஆங்காங்கு கூட்டமைப்பாகச் செயல்படுத்துங்கள்… நன்மை பயக்கும்.

ஒவ்வொரு குடும்பத்திலும் இதைச் செயல்படுத்தி… அவர்கள் மகிழ்ந்து வாழ்வதைக் கண்டு “மகிழ்ச்சியான உணர்வுகளை நமக்குள் வளர்க்க வேண்டும்…”

1.இதை அனைவரும் செயல்படுத்துங்கள்
2.அருள் ஞானம் பெறுங்கள்… அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணையுங்கள்.
3.அருள் வழிகளிலே இந்த வாழ்க்கையை வழிநடத்துங்கள்.
4.அருள் ஞானிகளுடன் ஒன்றி வாழ்வோம்
5.அருள் ஞான உணர்வுடன் ஒன்றி வாழ்ந்து அந்த மகரிஷிகள் சென்ற அந்த இடத்திற்கு நாமும் செல்வோம்.

அனைவரும் பிறவி இல்லா நிலைகள் அடைய வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.

கண்ணன் வெண்ணையைத் திருடுகின்றான்

 

வீட்டை அழகாகக் கட்டுகின்றோம்… தூசி பட்டால் தூய்மைப்படுத்துகின்றோம். ஆடைகளை அழகாக அணிகின்றோம்… அழுக்குப் பட்டால் துவைத்து விடுகின்றோம். நம் உடலில் அழுக்குப்பட்டாலும் குளித்து விடுகின்றோம்.

அப்போது நம் ஆன்மாவில் அழுக்குப்பட்டால் தூய்மைப்படுத்த வேண்டும் அல்லவா…! அதற்குத்தான் இந்த உபதேசமே கொடுக்கின்றோம். உபதேசத்தைப் பதிவாக்கிக் கொள்ளுங்கள்.

ஒருவர் வேதனைப்படுவதைப் பார்க்கின்றோம் உபகாரமும் செய்கின்றோம் அவர் வேதனைப்படுவதை நம் கண்கள் பதிவாக்குகின்றது மீண்டும் நினைவாக்கும் பொழுது கண் வழி அந்த உணர்வுகள் நமக்குள் வருகின்றது.

ரேடியோ டிவி இவைகளுக்கு ஏரியல் ஆண்டன்னா இருப்பது போன்று
1.நமது கண்கள் இந்த உடலுக்கு ஆண்டென்னாவாகச் செயல்படுகின்றது.
2.பதிவு செய்ததை மீண்டும் எண்ணும் பொழுது காற்றிலிருந்து கவருகின்றது.
3.அதனால் தான் அதைப் பரமாத்மா என்று காரணப் பெயர் வைக்கின்றார்கள்.
4.கண்களைக் கண்ணன் என்று பெயர் வைத்தாலும் “கண்ணன் – திருடன்…” என்று விளக்க உரை கொடுக்கின்றார்கள்.

ஒருவன் நல்லதைச் செய்கின்றான். நாம் உற்றுப் பார்த்தால் நல்லது செய்யும் உணர்வினைக் கருவிழி ருக்மணி அதைப் பதிவாக்குகின்றது. கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலனோ அவன் உடலிலிருந்து வெளிப்படும் அந்த நல்ல உணர்வை நுகர்ந்து உயிரிலே மோதச் செய்கின்றது.

மோதிய உணர்வுகள் அந்த நல்லது நம் ரத்தத்தில் கலக்கின்றது. நல்லது செய்யும் உணர்வுகளை இதே கண்கள் தான் கவர்கின்றது… திருடுகின்றது. அதே உணர்ச்சிகள் மீண்டும் இயக்கப்பட்டு “நல்லது செய்ய வேண்டும்…” என்று எண்ணம் வருகின்றது.

ஒருவன் கோபமாகப் பேசுகின்றான். கருவிழி ருக்மணி அந்த கோபக்காரனைப் பதிவாகிய பின் அந்தக் கோபத்தின் உணர்வுகளை நுகரப்படும் பொழுது உயிரிலே பட்டு இரத்தத்தில் கலக்கப்படும் பொழுது இதே கண்கள் தான் அந்த காரமான உணர்வினைத் திருடுகின்றது.

அதனால் தான் கண்ணன் வெண்ணையைத் திருடுகிறான் என்று காட்டுகின்றார்கள். இப்படிப் பிறருடைய தீமைகளை எடுக்கப்படும் பொழுது அதை கவர்ந்து நம் உடலுக்குள் சேர்த்து விடுகின்றது.

நாம் எத்தகைய மனிதனாக இருப்பினும் கண் கொண்டு ஒருவரை உற்றுப் பார்த்தால்
1.அந்த உயர்ந்த குணங்கள் வரும் பொழுது உணர்வின் தன்மை பதிவாக்கி நாமும் உயர வேண்டும் என்ற ஆசையைத் தூண்டுகின்றது.
2.ஆனால் தவறு செய்கிறான் என்ற உணர்வினை நுகர்ந்து கொண்ட பின் அதே உணர்வு நமக்குள் வந்து நம்மைத் தவறு செய்பவனாக மாற்றுகின்றது.

அந்த வெண்ணையைத் திருடிய பின் அதன் உணர்ச்சிகள் நம்மை இயக்குகின்றது. இது எல்லாம் கண்களுக்குள் நடக்கக்கூடிய இயக்கங்கள்.

அது தான் பரமாத்மா…!
1.நமக்கு முன் பரவிக் கிடக்கக்கூடிய நிலையினைக் கண்கள் இழுத்துக் கவர்ந்து
2.நமக்குள் ஒவ்வொன்றையும் தெரியப்படுத்திக் கொண்டிருக்கின்றான் என்பதைக் கண்களுக்குக் காரணப் பெயர் வைத்துத் தெளிவாக்கி உள்ளார்கள்.

அடிக்கடி வேதனைப்படுவோரை உற்றுப் பார்த்து அதை நுகர நேர்ந்தால் என்ன ஆகும்…? வேதனை என்ற அந்த விஷத்தின் தன்மையால் நரம்புகள் வழி கூடி நல்லதைச் சிந்திக்கும் தன்மைகள் இழக்கப்பட்டு கண்கள் இருண்டு விடுகின்றது… குருடாகி விடுகின்றது.

வேதனைகளை அதிகமாகச் சுவாசித்தால் உயிரிலே பட்டு நம் ரத்தத்தில் கலந்து உடலில் விஷத்தின் தன்மை பாய்ந்து விடுகின்றது. இது தான் கண்ணன் வெண்ணையைத் திருடுகின்றான் என்று இதே உணர்வுகள் வரப்படும் பொழுது அதற்குத் தக்க இயக்கச் சக்தியாக மாற்றுகின்றது.

கண்கள் இருண்டு விட்டால் நாம் எதைப் பார்க்க முடியும்…? பார்க்க முடியாது. இது எல்லாம் எதனால் வருவது…? நாம் சுவாசித்ததனால் வருவது. சுவாசித்ததை உயிர் தான் உருவாக்குகின்றது.

அதை மாற்ற வேண்டுமென்றால் நாம் என்ன செய்ய வேண்டும்…?

நம் உடல் நஞ்சை எப்படி மலமாக மாற்றியதோ… ஆறாவது அறிவு வாழ்க்கையில் வந்த நஞ்சினைப் பிரிக்கும் சக்தி பெற்றது.
1.விண்ணிலிருந்து வரும் எத்தகைய நஞ்சையும் வென்று ஒளியாக மாற்றிக் கொண்டிருக்கும்
2.அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளியை நாம் நுகர்தல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்திலிருந்து வருவதைச் சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது… அலைகளாக மாற்றுகின்றது. துருவத்தின் வழி பூமி கவருகின்றது.

அதைப் பெறச் செய்வதற்கு தான் இத்தனை உபதேசங்களையும் கொடுக்கின்றோம். அதை ஆழமாகப் பதிவு செய்த பின் நீங்கள் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து அதை எடுக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

உங்கள் உடலுக்குள் இருக்கும் எல்லா அணுக்களுக்கும் அதைப் பெறச் செய்யக்கூடிய பயிற்சியாக அமைத்துக் கொள்ள வேண்டும். எத்தகைய வேதனையாக இருந்தாலும் தீமையான உணர்வாக இருந்தாலும் அதை ஒடுக்கி தீமை புகாது நீங்கள் தடுத்துக் கொள்ள முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்று விஞ்ஞான உலகில் தான் இருக்கின்றோம். விஞ்ஞானத்தின் மூலம் அண்டத்தையும் கம்ப்யூட்டர் என்ற சாதனைத்தின் மூலம் அளந்தறிகின்றனர்.
1.உலக இயக்கத்தையும் அறிகின்றனர்.
2.எங்கேயோ (COSMOS) காணாத இடத்திலிருப்பதையும் அந்த உணர்வுகளை நுகர்கின்றார்கள்.
3.அதை எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்ற நிலைகளில் இங்கே பதிவாக்கிப் பல ஆயிரம் மடங்கு பெருக்குகின்றார்கள்
4.அந்தக் கோள் எங்கே இருக்கின்றதோ அதே உணர்வை இங்கே பதிவாக்கி உந்து விசையால் இராக்கெட் மூலம் செயற்கைக் கோளை ஏவுகின்றனர்
5.விண்ணிலே பாய்ச்சப்படும் பொழுது அதிலே பதிவான உணர்வு… தன் இனத்தைக் கண்டதும் செயற்கைக் கோளை அதன் வழி அழைத்துச் செல்கிறது.
6.அங்கே இருக்கக்கூடிய நிலைகளை எல்லாம் தரையிலே இங்கே அறிய முடிகின்றது.

இதைப் போன்ற நிலையில் விஞ்ஞான அறிவு இன்று இருக்கும் இக்காலத்தில் நாம் பக்தி மார்க்கத்தில் எப்படி இருக்கின்றோம்…?

யாரோ செய்வார்… சாமியார் செய்வார்… சாமி செய்யும்… ஜாதகம் செய்யும்… மந்திரம் செய்யும்… யாகம் செய்யும்… வேள்விகள் செய்யும்…! என்ற நிலைகளில் அஞ்ஞான வாழ்க்கை தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

ஆனால் மெய் ஞானிகள் காட்டிய பேருண்மை என்ன…?

தீமை என்ற நிலைகள் நமக்குள் இருப்பினும் அருள் மகரிஷிகளின் அருள் உணர்வை நாம் நுகர்ந்தால் நம் உயிர் அதை “ஓ…” என்ற ஜீவ அணுவாக உருவாக்கி “ம்…” என்று நம் உடலாக மாற்றும்.

அதே வழியில் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளைத் திரும்ப எண்ணும் பொழுது
1.அது நமக்குள் நன்மை பயக்கும்..
2.நம் உடலுக்குள் நலம் பெறும் சக்தியாக மாறும்…
3.நம் சொல் கேட்போருக்கும் நலம் பெறும் சக்தியாக மாறும் என்பதைத்.தெளிவாகக் கூறியிருப்பினும்
4.அதை நாம் யாரும் இது வரை பின்பற்றவில்லை.

சாமி (ஞானகுரு) வந்தார் என்றால் அவரிடம் பெரிய சக்தி இருக்கின்றது… “அவர் தான் நமக்குச் செய்வார்…!” என்ற இந்த ஆசை தான் வருகின்றது.

சாமி உபதேச வாயிலாகக் கொடுக்கும் அந்த அருள் உணர்வின் சக்தியை நமக்குள் பதிவு செய்து மீண்டும் அதை நினைவுக்குக் கொண்டு வந்தால்
1.அந்த உயர்ந்த குணத்தை நாமும் பெற முடியும்
2.நமக்குள் தாழ்மைப்படுத்தும் உணர்வை.. தீமை செய்யும் உணர்வை மாற்ற முடியும்
3.நாம் சொல்லாகச் சொல்லி வெளிப்படுத்தும் உணர்வுகள் பிறரைப் புனிதமாக்கவும் உதவும்
5.நமக்குள்ளும் புனிதமாக்கும் உணர்வுகள் விளையும்…! என்ற இந்தத் தன்னம்பிக்கை வருதல் வேண்டும்.

இதைத்தான் கீதையில் நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய் என்று தெளிவாக்கப்பட்டுள்ளது.

மனிதனுக்கு அடுத்த அந்தத் தெய்வ நிலையை அடையும் மார்க்கங்களைத் தான் நம்முடைய ஆலயங்கள் அனைத்திலும் ஞானிகள் கொடுத்துள்ளார்கள்.

மெய் ஞானிகள் காட்டிய வழியில் நாம் செல்தல் வேண்டும்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

குருநாதர் (ஈஸ்வரபட்டர்) காட்டிய வழியில் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கும் பொழுது ஒரு சமயம் நான் (ஞானகுரு) பத்ரிநாத் போய் விட்டு வந்து கொண்டிருந்தேன்.

எனது நண்பர் என்ன செய்தார்…! சென்னைக்குப் போகலாம்…! என்று சொல்லி என்னைக் கூட்டிக் கொண்டு போகிறார். என் கையில் பணம் இல்லை.

டெல்லியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்து கொண்டிருந்தேன். விமானம் டெல்லியை விட்டுப் புறப்பட்டு மேலே பறந்து சென்று சிறிது நேரம் தான் இருக்கும்.

அந்த விமானிக்கும் தெரியவில்லை. அந்த நேரத்தில் எப்படி… என்ன ஆனது…? என்று தெரியாதபடி “கிர்…ர்ர்…” என்று எவ்வளவு உயரத்தில் மேலே போனதோ அதே வேகத்தில் “கிர்…ர்ர்…” என்று விமானம் கீழே இறங்குகிறது.

அப்பொழுது குருநாதர் அங்கே அதனுடைய இயக்கங்களைச் சொல்கிறார். இயற்கையின் நியதிகளில் நம் பிரபஞ்சத்தைச் சேர்ந்த இருபத்தியே ஏழு நட்சத்திரங்களும் இருபத்தியேழு விதமான உணர்வுகளை எடுத்துக் கொள்கிறது.

ஒரு நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் துகளும் இன்னொரு நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் அது பிரபஞ்சத்தில் பூமிக்கு வெளியே மோதினால் அது ஆவிகளாக மாறப்படும்போது எந்தெந்தக் கோள் அந்தப் பாதையில் வருகின்றதோ அதனின் சத்தை அது எடுத்துக் கொள்கின்றது

ஆனால் எதிர்நிலையான நட்சத்திரங்களின் துகள்கள் வரப்படும்போது அது ஒன்றோடு ஒன்று மோதினால் என்ன ஆகின்றது…?

நம் பூமியில சூறாவளி என்று சொல்கிறோம் அல்லவா…! இதே போல் நம் பிரபஞ்சத்திற்குள்ளும் சூறாவளி உண்டு. அதைத்தான் அங்கே காட்சியாக உணர்த்துகின்றார் குருநாதர்.

பூமியின் ஈர்ப்பு வட்டத்தில் மேலே செல்லப்படும் பொழுது அங்கே அனுபவரீதியிலே காட்டுகின்றார்.
1.அங்கே எதிர்மறையான நட்சத்திரங்களின் உணர்வலைகள் அதிகமாகப் பரவி இருக்கும்போது
2.ஈர்க்கும் காந்தம் அங்கே குவிந்திருக்கின்றது.
3.விமானம் அந்த இடத்தின் அருகிலே சென்றதும் குவிந்த நட்சத்திரத்தின் அலைகள் கிர்…ர்ர்..! என்று கீழே இழுத்துக் கொண்டு போகிறது. (அந்த நேரத்தில் காட்டுகின்றார் குருநாதர்)

அந்த விமானத்தில் உள்ள பயணிகள் அத்தனை பேரும் அப்படியே கதிகலங்கிப் போனார்கள்.
1.எல்லோரும் சத்தம் போட்டார்கள்…!
2.நான் அசையாமல் உட்கார்ந்து கொண்டு இருக்கின்றேன்.

ஏதாவது அசம்பாவிதங்கள் ஆனால் விமானத்தை ஓட்டுகிறவர்கள் பயணிகளுக்குத் தைரியத்தைச் சொல்வார்கள். ஆனால் திடீரென்று இப்படி ஆனவுடனே விமானி (PILOT) முதல் எல்லோரும் கதிகலங்கிப் போனார்கள்.

வானியலை முன் கூட்டியே அறிந்து தான் விமானத்தை ஓட்டுகின்றனர். ஆனாலும்
1.சில பகுதிகளில் மற்ற நட்சத்திரத்தின் உணர்வுகள் அதிகரித்து
2.அதாவது… எதிர்மறையான நட்சத்திரத்தின் துகள்கள் நம் பூமியின் உணர்வுக்குள் ஈர்க்கப்பட்டால்
3.அது மின் கதிர்களாக மாற்றப்படும் போது இது எதிர் நிலை ஆகிச் சுழல் காற்றாக மாறுகின்றது.
4.அப்படிப்பட்ட சுழல் காற்றுக்குள் நேராக விமானம் போகும் போது
5.ஒரு நொடியில் கீழே இறக்குகின்றது…! என்பதை அனுபவமாகக் காட்டுகின்றார் குருநாதர்.

நம் குருநாதர் சாதாரணமானவர் அல்ல…!
1.பைத்தியக்கான் தான்…!
2.கிழிந்த வேஷ்டியைத் தான் கட்டி இருந்தார்.
3.ஒவ்வொரு நொடியிலும் இந்த நிலையைக் காட்சி கொடுத்து உபதேசித்துக் கொண்டே வந்தார்
4.அந்தச் சந்தர்ப்பம் நான் தெளிவாகிக் கொண்டேன்… அதனால் சிரித்துக் கொண்டே இருந்தேன்.

கடைசியில் விமானம் வர வேண்டிய இடத்திற்குப் பாதுகாப்பாக வந்து இறங்கியது. அங்கே இறங்கியவுடன் எல்லாரும் சேர்ந்து என்னிடம் வந்து
1.நீங்கள் ஏன் சிரித்துக் கொண்டிருந்தீர்கள்…? என்று கேட்டனர்.
2.நீங்கள் சிரித்துக் கொண்டு உட்கார்ந்ததைப் பார்த்தால்
3.நீங்கள் எங்கள் கூட வந்ததால் தான் நாங்கள் தப்பித்தோம்…! என்றனர்.

விமானத்தில் வந்த எல்லோரும் என்னிடம் ஆசீர்வாதம் வாங்கினார்கள். விமானத்திலிருந்து நான் கீழே இறங்கி வர முடியவில்லை.

ஐயா…! எனக்கு ஒன்றும் தெரியாது…! என்று நான் சொன்னேன்.

இல்லை இல்லை…! விமானம் கிர்… என்று கீழே இறங்குகிறது. நீங்கள் மட்டும் சிரிக்கிறீர்கள்.. உங்களிடம் ஏதோ சக்தி இருக்கிறது…! என்று என்னைப் பிடித்து கொண்டார்கள்

ஆனால் எனக்குத் தெரியாமல் குருநாதர் என்னை அப்படி அங்கே இயக்கினார். அனுபவரீதியில இதை அந்தச் சந்தர்ப்பத்தில் உணர்த்திக் காட்டினார்.

விமானத்தில் விஞ்ஞான அறிவு கொண்டு நுட்பமாகச் செயல்பட்டாலும் சந்தர்ப்பத்தில் இதைப் போன்ற விபத்துக்கள் நிறைய ஏற்பட்டு விடுகிறது.

குருநாதர் காட்டிய வழியில்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் பாதுகாப்புக் கவசமாக்கிக் கொண்டால்
2.”நாம் எடுத்துக் கொண்ட அந்தச் சக்திகள்…” நம்மை நிச்சயம் காக்கும்…!

நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே இந்த அனுபவத்தை உணர்த்துகின்றேன் (ஞானகுரு).

அகஸ்தியன் தாய் கருவிலே பெற்ற சக்திகள்

 

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாகி இன்றும் ஒளியின் சரீரமாகவே இருக்கின்றான். அவன் ஆரம்பத்திலே எடுத்துக் கொண்ட உணர்வு எது…?

அகஸ்தியனின் தாய்
1.கொடூர மிருகங்களிடம் இருந்தும் விஷ ஜெந்துக்களிடமிருந்தும் தன்னைப் பாதுகாக்க வேண்டும் என்று எண்ணி
2.பல பச்சிலைகளையும் மூலிகைகளையும் குகைகளில் பரப்பி வைத்துக் கொள்கின்றார்கள்.

அன்று வீடு வாசல் கிடையாது… குகைகளில் தான் வாழ்ந்து வந்தார்கள். யானைகள் போன்ற கொடூர மிருகங்கள் வந்து விடும்… தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகக் குகைகளில் படுத்துத் தூங்கியவர்கள்.

இப்பொழுதும் நாம் காணுகின்றோம் பாம்பாட்டி கையிலே ஒரு வேரை வைத்துக் கொள்கின்றான். படமெடுக்கும் பாம்பு அப்படியே நின்று விடுகின்றது.

தேனை எடுத்துப் பழகியவர்கள் கையிலே ஒரு பச்சிலையைத் தடவிக் கொண்டு செல்கின்றார்கள். சும்மா கையை விட்டுத் தாராளமாகத் தேனை எடுக்கின்றார்கள்.

ஆனால் நாம் கையை வைத்தால் “கொட்டு… கொட்டு…” என்று கொட்டி நம்மைக் கொன்றுவிடும்.

அந்தப் பச்சிலை மணம் கண்ட பின் தேனீக்கள் ஒடுங்குகின்றது. தேனை லேசாக எடுத்துக் கொண்டு வருகின்றார்கள். இந்தப் பச்சிலைகளுக்குச் சில கடுமையான விஷங்கள் ஒடுங்குகின்றது.

யானை மிரட்டி என்று ஒரு பச்சிலை இருக்கின்றது. அதைக் கையிலே தேய்த்துக் கொண்டு நாம் சென்றால் இந்த மணத்தை கண்டால் யானை பிளிறிக் கொண்டு ஓடும்.

காடுகளில் புலையர்கள் பச்சிலையின் நுணுக்கத்தைத் தெரிந்தவர்கள் கையிலே கசக்கிக் கொண்டு யானைக் கூட்டத்திற்குள் செல்வார்கள். இவர்களைக் கண்டாலே அது ஒதுங்கிவிடும்… அருகில் வராது.

புலி போன்ற மிருகங்களுக்கும் அதற்கென்று பச்சிலைகளை உபயோகித்தார்கள் என்றால் அதுவும் ஒன்றும் செய்வதில்லை… விலகிச் சென்று விடுகின்றது.

அகஸ்தியனின் தாய் தந்தையர் கணவன் மனைவியாக வாழ்ந்து வரும் காலங்களில் கர்ப்பமுறுகின்றார்கள்.
1.விஷத்தை முறிக்கும் மணங்களை இவர்கள் உடலில் பூசியது குகைகளில் பரப்பியது இவர்கள் சுவாசத்திலே நுகரப்பட்டு
2.கருவிலிருக்கக்கூடிய அகஸ்தியனுக்குள்ளும் இது பதிவாகின்றது.
3.விஷத்தை முறிக்கக் கூடிய சக்தி அந்தக் குழந்தைக்குத் தாய் கருவிலே வளரும் பொழுதே கிடைக்கின்றது.
4.அந்தப் பச்சிலைகளின் சக்தி அதற்குக் கிடைக்கின்றது.

அந்தச் சக்திகள் எல்லாம் விளைந்து தான் அகஸ்தியன் குழந்தையாகப் பிறக்கின்றான். அவன் பிறந்த பின் ஈயோ கொசுவோ தேளோ பாம்போ புலியோ நரியோ யானையோ இவன் மணத்தைக் கண்டால் அப்படியே பதும்பி விடுகின்றது. ஒன்றும் செய்வதில்லை.

இன்று விஞ்ஞான அறிவில் கூட சில நிலைகளைச் செயல்படுத்துகிறார்கள். காட்டு விலங்குகளுக்கு எதிர்மறையான இன்ஜெக்ஷனைத் தன் உடலில் போட்டுக் கொள்கின்றார்கள். போட்டுக் கொண்டு இவர்கள் காட்டிற்குள் தாராளமாகச் செல்கின்றார்கள்.

புலியோ யானையோ இவர்கள் அருகில் வருவதில்லை. ஏனென்றால் அதற்கு எதிர்மறையான மருந்தை உடலில் செலுத்திக் கொள்கின்றார்கள்.

சிலர் இது போன்ற அதிசயமான செயல்களைச் செய்வதாக டிவியில் காண்பிப்பார்கள். காட்டிற்குள் சென்று விஷப் பாம்புகளைக் கையில் சாதாரணமாக எடுத்துக் கொண்டு காண்பிப்பார்கள்.
1.நமக்குப் பார்த்தால் பயமாக இருக்கும்.
2.ஆனால் அந்த இன்ஜெக்ஷனைப் போட்டுக் கொண்டுதான் அதைக் கையில் எடுக்கின்றார்கள்.
3.இந்த வாசனையைக் கண்டு அது ஒன்றும் செய்வதில்லை.

விஞ்ஞான அறிவில் இன்று இதைச் செயல்படுத்துகின்றார்கள்.

நல்ல பாம்பு அல்லது அதைக் காட்டிலும் கடுமையான விஷம் கொண்ட பாம்புகளைக் கூடப் பிடித்து அதனுடைய விஷங்களைச் சேமித்து எடுக்கின்றார்கள்.

ஒரு விஷத்திற்கு ஒரு விஷம் ஆகாது அதை எடுத்து மற்ற மருந்துகளுடன் சேர்த்து நோயை நீக்கும் மருந்தாகப் பயன்படுத்துகின்றார்.

பாம்புகளிலேயே ஒரு பாம்புக்கு இன்னொரு பாம்புக்கும் ஆகாது… ஒன்று மற்றொன்று விழுங்கி விடும். ஆனால் இந்த விஷம் அதை ஒன்றும் செய்வதில்லை.

ஆனால் நல்ல பாம்பு தன் உடலில் தானே கொத்திக் கொண்டால் விஷம் பாய்ந்து அது மரணம் அடைந்து விடும். உடலின் உணர்வுகள் வேறு… உடலில் இருக்கக்கூடிய விஷங்கள் வேறு.

பாம்பினுடைய பற்களிலே இருக்கக்கூடிய விஷம் தனித் தன்மையாகி எதை உணவாக உட்கொள்ள வேண்டும் என்று அது விரும்புகிறதோ அந்த உயிரினத்தில் இந்த விஷத்தைப் பாய்ச்சுகின்றது.
1.அதைச் சாப்பிட்ட பின் அதற்குச் சீக்கிரம் ஜீரணம் ஆகின்றது.
2.அந்த விஷமே அதற்குப் பாதுகாப்பாகின்றது.
3.ஆனால் அந்தப் பாம்பு தன் உடலில் தானே கடித்துக் கொண்டால் மரணம் அடைந்து விடும்.

உடலுக்கும் விஷத்திற்கும் சம்பந்தமில்லை… உற்பத்தியாகும் விஷத்தை உணவாக உட்கொண்டால் ஒன்றும் செய்வதில்லை.

பாம்பின் விஷத்தை மனிதர்கள் சாப்பிடலாம். ஆனால் சாப்பிட்ட பின் யாரையாவது நகத்தால் கிள்ளினால் போதும். இந்த விஷம் அங்கே பாய்ந்து அவர் இறந்து விடுவார்.

பாம்பு விஷத்தைக் குடிக்கும் பொழுது உடலுக்குள் புண் இருக்குமானால் நாமும் இறந்து விடுவோம். ஏனென்றால்
1.ஜீரணிக்கக் கூடிய பாதையில் செல்லும் நிலைகள் வேறு…
2.நேரடியாக ரத்தத்தில் கலக்கும் நிலைகள் வேறு…!

நல்ல பாம்பு கடித்து விட்டது என்றால் டக்… என்று வாயிலே உறிஞ்சுவார்கள். உடலுக்குள் மேலே ஏறாதபடி உறிஞ்சித் துப்பி விடுவார்கள். ஆனால் வாயிலே அவர்களுக்குப் புண் இருந்தால் அவர்கள் மரணமடைந்து விடுவார்கள்.

ஆனால் விஷத்தை விழுங்கினாலும் ஒன்றும் செய்யாது. அதை ஜீரணிக்கக் கூடிய நிலையாக வந்து விடும். இயற்கையின் நிலைகள் இப்படி எத்தனையோ வித்தியாசமான நிலைகள் வருகின்றது.

1.இதை எல்லாம் எதற்குச் சொல்கிறோம் என்றால்
2.கருவிலேயே விஷத்தை முறித்திடும் சக்தியாக வந்தவன் தான் அந்த அகஸ்தியன்.

ஒரு தாய் இங்கே வந்திருந்தார். அந்த அம்மாவிற்கு இரண்டு குழந்தைகள். அவர் குடும்பத்திலே யாருக்கும் சர்க்கரை வியாதி கிடையாது. ஆனால் அவரின் சொந்தக்காரருக்குச் சர்க்கரை நோய் இருந்தது,

இரண்டாவது குழந்தை அதன் கருவில் இருக்கப்படும் பொழுது அந்தச் சர்க்கரை நோயாளிக்கு வேண்டிய உதவிகளை எல்லாம் அந்தத் தாய் செய்கின்றது.
1.பரிதாபப்பட்டு அந்த நோயாளியின் உணர்வுகளை இது நுகர்கின்றது.
2.நுகர்ந்த பின்… கருவிலிருக்கும் குழந்தைக்கு அந்த உணர்வுகள் இணைந்து
3.பிறந்த பின்பு பார்த்தால் சர்க்கரை நோய் வந்து விட்டது.

மூன்று வயதிலேயே சர்க்கரை நோயால் மிகவும் அவதிப்படுகின்றது. இரண்டு நேரம் இன்சுலின் ஊசி போட வேண்டும். போடவில்லை என்றால் ஒன்றும் ஆவதில்லை. திடீரென்று அந்தக் குழந்தைக்குப் பசி எடுக்கும்.

குழந்தை தவறு செய்ததா…? இல்லை. சர்க்கரைச் சத்து உள்ள நோயாளியைத் தாய் உற்றுப் பார்த்து நுகர்ந்தது. கருவிலே பூர்வ புண்ணியமாகக் குழந்தைக்கு அது சேர்கின்றது.

தாய்க்கு ஊழ்வினை என்ற பதிவாகிறது. என் பிள்ளைக்கு இப்படி ஆகிவிட்டதே இப்படி ஆகிவிட்டதே என்று அது வேதனைப்படுகின்றது. பின் அதற்கும் அந்தச் சர்க்கரை நோய் வரும்.

தாய்க்கு முதலில் வரவில்லை… குழந்தைக்குத் தான் வந்தது. ஆனால் நாளடைவில் பையனுக்கு இப்படி இருக்கிறது என்று தனக்குள் எண்ணி அது வளர்ச்சியாகும் போது தாய்க்கும் அந்த நோய் வருகிறது.

சில குடும்பங்களில் இயற்கையில் இப்படி நடக்கும் பொழுது இது “பரம்பரை நோய்…” என்று சொல்வார்கள். வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் அதே எண்ணினால் எல்லோருக்கும் சாடத் தொடங்கி விடுகிறது.

இங்கே யார் தவறு செய்தது…?

1.கர்ப்பமாக இருக்கக்கூடிய தாய் எந்தெந்த உணர்வுகளை ஒன்றிலிருந்து தொண்ணூறு நாட்கள் உற்று நோக்கி
2.தனக்குள் கூர்மையாகப் பதிவு செய்கின்றதோ அதற்கொப்பத்தான் குழந்தையினுடைய குணாதிசயங்களும் உடல் நலமும் மற்ற எல்லாமே…!
3.அதைத் தான் பூர்வ புண்ணியம் என்று சொல்வார்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

“எலெக்ட்ரானிக்…” என்ற நிலைகள் சீராக இயங்கிக் கொண்டிருந்தாலும்
1.அதற்குள் மாறுபட்ட உணர்வுகள் (அழுத்தம்) கலந்து விட்டால்
2.அந்த எலெக்ட்ரானிக் கருவியே முழுவதும் செயலிழந்து விடுகின்றது.

அதைப் போன்று தான் இன்றைய நிலைகளில் சூரியனின் மாற்றம் எலெக்ட்ரிக்கை அதிகமாக உருவாகும் சக்தியாக வளர்ந்து விட்டது.

காரணம்… மனிதன் அணுக்கதிரியக்கங்களை உருவாக்கி வான் வீதியில் பரீட்சித்துப் பார்த்த இந்த உணர்வுகள் மற்ற கோள்களுக்குள்ளும் சென்று அதிலிருந்து உமிழ்த்தியது சூரியனுக்கு அருகே வரும் நிலைகள் வந்துவிட்டது.

அதிலே மோதல் ஏற்பட்டால் என்ன ஆகும்…?

உதாரணமாக மின்சாரம் இரு மடங்காக வந்தால் பல்புகள் ஃப்யூசாகிவிடும் (FUSE)… மோட்டார்கள் எல்லாம் எரிந்துவிடும். அதைப் போல சூரியனுள் உருவாகும் அதீத மின்சாரம் இரு மடங்காகப்படும் பொழுது (SUN FLARE EMISSION)
1.நம் உயிரின் தன்மை துடிப்பு அதிகமாகும்.
2.நம் உடலுக்குள் இருக்கும் அணுக்களும் அதே நிலையாகும்.

அதே சமயத்தில் விஞ்ஞான அறிவால் கண்டுணர்ந்த கம்ப்யூட்டர் பாதுகாப்பாக இருந்தாலும் எதிர் நிலையின் மோதல்கல் ஆகும் போது கம்ப்யூட்டர் செயல் இழந்துவிடும்… கன்ட்ரோல் (CONTROL) இல்லாது போகும்.

அப்படிப்பட்ட நிலையானால் விஞ்ஞானத்தால் உலகம் முழுவதற்கும் நஞ்சின் தன்மை பரவும் நிலை இருக்கின்றது. விஞ்ஞான உலகில் அஞ்ஞான வாழ்க்கை வாழ்ந்து கண்டுபிடித்த உணர்வுகள் உடலுக்கு நல்லது என்றாலும்
1.அடுத்த நாட்டை அழிக்க விஷத் தன்மைகளை உருவாக்கித் தன்னைப் பாதுகாக்கச் செய்த நிலையில் பரவச் செய்த அலைகள்
2.சூரியனால் அந்த விஷத் தன்மைகள் பூமிக்குள் பரவிப் பிரபஞ்சத்திலும் பரவி
3.மீண்டும் சூரியனின் ஈர்ப்பு வட்டத்தில் செல்லப்படும் பொழுது “இரு மடங்கு மின்சாரம்…” அதிகமாக உருவாக்கும் தன்மை வந்து விடுகின்றது.

அப்பொழுது காடுகளில் இருக்கும் விலங்குகள் போல் மனிதனின் சிந்தனைகள் தவறிவிடும்.
1.உயிரின் துடிப்பு அதிகமாகும் பொழுது ஈர்க்கும் சக்தி அதிகமாகி
2.நரம்பு மண்டலங்கள் எல்லாம் இயக்கங்கள் மாறி
3.பித்துப் பிடித்தவன் போல்… சிந்திக்கும் தன்மை இல்லாது பைத்தியம் பிடிக்கும்.

இதைப் போன்ற இந்த உணர்வின் வலுவாகி விட்டால் மனிதனுக்கு மனிதன் தாக்கும் நிலைகளும் சிந்தனையற்ற நிலைகளும் வருகின்றது.

பூமிக்குள் வங்கிட்டுக் குடி கொண்டுள்ள மற்ற உயிரினங்கள் நில நடுக்கம் வரும் பொழுது அதை அறிந்து கொள்கிறது. உடனே வெளியேறுகின்றது. (மனிதனுக்கு அது தெரிவதில்லை).

இதைப் போன்ற இயற்கையின் உண்மைகளை அறிந்து இயக்கம் பரிணாம வளர்ச்சியில் வருவதை உணர்வின் அதிர்வுகளைக் கண்டு மற்ற உயிரினங்கள் தன்னைத் தான் பாதுகாத்துக் கொள்கின்றது.
1.மனிதனுக்கு அப்படி இல்லை…!
2.வந்து தாக்கும் பொழுது தான் தெரிந்து கொள்கின்றான்.

இதை எதற்காகச் சொல்கிறோம்…? என்றால் 2004ல் ஆரம்பித்து அதற்கு மேல் சென்றால் மிகக் கடினமான காலங்களாக வருகின்றது.

இப்பொழுது பத்திரிக்கை டி.வி.யில் பார்க்கின்றோம். மதம் இனம் என்று மனிதனுக்கு மனிதன் வெறி கொண்டு தாக்குவதைப் பார்க்கின்றோம். இவன் அவனைத் தாக்க… அவன் இவனைத் தாக்க… என்ற இந்த நிலைகள் தான் வருகின்றது.

மனித இனமே அழித்திடும் உணர்வுகளாக இன்று விளைந்து அஞ்ஞான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு
1.மதத்தின் அடிப்படையிலும் சரி
2.இனத்தின் அடிப்படையிலும் சரி
3.தெய்வ பக்தியின் அடிப்படையாக இருந்தாலும் சரி
4.விஞ்ஞான அறிவிலும் சரி
5.இதுகள் எல்லாம் சிந்திக்கும் திறனை இழக்கச் செய்து
6.மனிதனை மனிதன் கொன்று குவிக்கும் நிலைகளாக விஷத் தன்மைகள் கூடி
7.அதற்குள்ளேயே நாம் வாழும் தருணமாக இன்று வந்துவிட்டது.

இதிலிருந்தெல்லாம் நாம் மீள்தல் வேண்டும் என்பதற்குத்தான் அந்த மெய் ஞானிகளின் ஆற்றல் மிக்க சக்திகளை உங்களுக்குள் மீண்டும் மீண்டும் தெளிவாகக் கூறி ஆழமாகப் பதிவாக்குகின்றோம்.
1.அதை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தால்
2.அதை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்தால்
3.”உங்கள் எண்ணம் நிச்சயம் உங்களைக் காக்கும்…!”

“தீமையை அகற்றக் கூடிய ஃபிட்டரை…” நமக்குள் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும்

 

ஒரு வித்து முளைத்து அதனுடைய நுனி வெளி வந்தபின் அதன் துணை கொண்டு காற்றிலிருந்து தன் இனமான சக்தியை எடுத்து வளரும். ஆனால் முளையிலேயே அதைக் கிள்ளி எறிந்து விட்டால் அதனுடைய சத்தையும் எடுக்காது… தொடரையும் எடுக்காது.

இதைப் போன்று தான் பிறருடைய உணர்வுகள் நமக்குள் அணுவின் தன்மையாக வளர்ந்து விட்டால் தீமையின் இயக்கமாக இயக்கிவிடும். ஆனால் அவ்வாறு உடலுக்குள் அணுவாக உருவாவதற்கு முன்பே அதைத் தடைப்படுத்த முடியும்.

ஏனென்றால்
1.வாழ்க்கையில் இடைமறித்து நல்ல உணர்வுகளைத் தடைப்படுத்தும் நல்ல உணர்ச்சிகளைச் செயலற்றதாக ஆக்கும்
2.அது போன்ற நிலைகளை வராதபடி தடைப்படுத்த வேண்டும்.
3.அதாவது… தீமை என்று வந்தால் அதை எப்படித் தடுக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

தொழிற்சாலைகளில் ஃபிட்டர்களை (FITTER) வைத்திருப்பார்கள்.

தொழிற்சாலையில் பொருள்களை உருவாக்குவார்கள். ஆனால் அந்த இயந்திரங்களில் ஏதாவது குறைபாடு ஏற்பட்டால் ஃபிட்டர் வந்து அதை சரி செய்து தருவார்… இயந்திரத்தை உற்பத்தி செய்பவரிடம் நாம் செல்வதில்லை…!

அதைப் போன்று தான் அந்த ஃபிட்டரை நமக்குள் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும்.
1.தீமையை நீக்கக்கூடிய சக்தியாக துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற வேண்டும்.
2.அதற்குண்டான உபாயத்தை அது சொல்லும்.
3.துருவ நட்சத்திரத்தின் சக்தியைத் தான் உங்களுக்குள் இந்த உபதேசத்தின் வாயிலாகப் பதிவு செய்கின்றேன்.

அதை வளர்த்துக் கொண்டால் உங்களுக்குள் தெளிந்து தெளிவான வாழ்க்கை வாழும் உணர்ச்சிகளை ஊட்டும்.

நம்மை உருவாக்கக்கூடிய சக்தியாக உயிர் இருந்தாலும் அவனிடம் நாம் போவதில்லை. தீமைகளை மாற்றி அமைத்த துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்கப்படும் பொழுது அதற்குண்டான உபாயங்கள் வரும்.

தொழிற்சாலைகளில் ஓடும் இயந்திரங்களை உற்பத்தி செய்தவன் எங்கேயோ இருப்பான். ஆனால் அந்த இயந்திரத்தில் ரிப்பேர் ஆகிவிட்டால் அதைச் சரி செய்பவன் இங்கேயே இருப்பான். உற்பத்தி செய்பவரைத் தேடிச் செல்வதில்லை.

அதற்குத்தான் உங்களுக்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வை மீண்டும் மீண்டும் பதிவு செய்கின்றேன். நமக்குள் அந்தச் சக்தி இருக்கின்றது

குறைகள் என்று வந்துவிட்டால்
1.“சாமி சொன்னாரே…!” என்று எண்ணி இதை எடுத்தால் அதைச் சீர்படுத்தும் உணர்வுகள் உங்களுக்குள் வரும்.
2.அதற்குத்தான் மணிக் கணக்கிலே உபதேசங்களைக் கொடுப்பது… நினைவுபடுத்துவது… நினைவின் ஆற்றலை உங்களுக்குள் பெருக்கச் செய்வது.

அருள் ஞானிகளின் உணர்வுகளை எடுத்து அதைச் சீர்படுத்த வேண்டும் என்று நீங்கள் எண்ணினீர்கள் என்றால் அந்த ஞானிகள் உணர்வுகள் அதைச் சீர்படுத்தும் சக்தியாக வரும்.

அதை நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.

இயந்திரம் கோளாறாகிய பின் ஃபிட்டரைத் தேடவில்லை என்றால் என்ன ஆகும்…? நாமாக அதைச் சரி செய்ய முடியாது. நாம் எதையாவது செய்யப் போனால் இன்னும் கொஞ்சம் ரிப்பேராகிவிடும். ஆனால் ஃபிட்டரைக் கூப்பிட்டால் உடனே அதைச் சரி செய்து விடுவார்.

ஆகவே உங்களுக்குள் அந்தச் சீர்படுத்தும் உணர்வு கொண்ட அந்த அறிவை பதிவாக்குகின்றேன்.

அதை நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்தால் தீமையை நீக்கும்.
1.அந்த உணர்வு உங்களுக்குள் ஞானமாக இயக்கும் ஞானத்தைப் பெறும் தகுதியும் வரும்.
2.உங்களை அறியாது வரும் இருளைப் போக்க வழி வகுக்கும்.

அதற்குத்தான் இதைச் சொல்வது. நமக்கு முன் எல்லா உயர்ந்த சக்திகளும் உண்டு. அதை நாம் நுகர்ந்தறிய வேண்டும்.

அது தான் கடவுளின் அவதாரம் கூர்மை அவதாரம்…! ஒன்றைப் பார்த்துத் தனக்குள் பதிவாக்குகின்றது. அதனுடைய வலிமை அதிகமாகும் பொழுது வராகன்.
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை நீங்கள் கூர்மையாகப் பதிவு செய்து விட்டால்
2.தீமையை அகற்றக்கூடிய சக்தி வாய்ந்த உணர்வாக உங்களுக்குள் அது வளர்கின்றது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உயிரணுவாகத் தோன்றி பல உடல்கள் பெற்று மனித உடல் பெறுவதை முதல் காண்டமாக ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

மனிதனாகப் பிறந்த பின் அடுத்துப் பல உணர்வுகள் எடுத்து அறுபது வயது ஆகும் பொழுது அது இரண்டாவது காண்டம்.

1.இரண்டாவது காண்டத்திற்குள் நாம் எடுத்து நுகர்ந்து கொண்ட உணர்வுகள் மாற்றம்…!
2.ஆக இரண்டு காண்டங்கள் கவர்வதே மனிதனுக்கு மிகவும் சிரமம்.
3.இடைப்பட்ட நேரங்களில் (அறுபது வருடத்தில்) நுகர்ந்த உணர்வுகள் எவ்வாறு மாறுகிறது..? என்ற இந்த நிலையைக் காவியங்களில் உணர்த்துகின்றனர்.

இராமாயணத்தில் பத்தாவது நிலை அடையும் தகுதி பெற்ற தசரதன்
1.தனக்குள் எடுத்துக் கொண்ட ஆசை தன் மகனுக்குக் பட்டாபிஷேகம் செய்ய வேண்டும் என்று விரும்பினாலும்
2.அந்த நல்லவனுக்குச் (இராமனுக்கு) செயல்படுத்த முடியவில்லை என்று வேதனை உணர்வுகள் ஆன பின் அவன் மடிகின்றான்.

இதை எல்லாம் மனிதன் தெளிந்து… அறிந்துணர்ந்து எப்படி வாழ வேண்டும்…? என்பதற்காகத்தான் காவியப் படைப்புகளை இப்படிக் கொடுத்துள்ளார்கள்.

ஏனென்றால் விஞ்ஞான உலகில் மாற்றங்கள் ஏற்படும் அஞ்ஞான வாழ்க்கையிலிருந்து விடுபட நம் குருநாதர் காட்டிய வழியில் அருள் வாழ்க்கை வாழ்ந்திட வேண்டும்.

அகஸ்தியனும் அவன் மனைவியும் இரண்டறக் கலந்து மனதைக் குவித்து இரு மனமும் ஒரு மனமாகி இரு உயிரும் ஒன்றென இணைந்து (இராமலிங்கமாக) அகண்ட அண்டத்தில் வரும் நஞ்சினை வென்று உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றித் துருவ நட்சத்திரமாக ஆனார்கள்.

நம் சூரியனே அழிந்தாலும் துருவ நட்சத்திரம் அகண்ட அண்டத்தில் என்றுமே அழியாது வாழும் சக்தி பெறுகின்றது

இயற்கையின் உண்மையின் இயக்கங்கள் எவ்வாறு உருவானது…? என்ற நிலையை உணர்ந்து… தீமைகளை வென்று உணர்வை ஒளியாக மாற்றி… ஒளியின் சரீமாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக இருக்கும் அதனின்று வெளிப்படும் உணர்வை நாம் நுகர்ந்து நமக்குள் உருவாக்குதல் வேண்டும்.

அதாவது மூன்றாவது காண்டமாக…
1.அந்த அருள் மகரிஷிகளின் அருளுணர்வைத் தனக்குள் சேர்த்து
2.உடலை விட்டு உயிரான்மா பிரிந்தால் அடுத்துப் பிறவியில்லா நிலையை அடைய வேண்டும் என்று
3.ஞானிகள் தெளிவாக மூன்று காண்டங்களையும் காண்பித்துள்ளார்கள்.

மலை மீது ஆலயங்களை ஞானிகள் ஏன் வைத்தார்கள்…?

 

போகன் கண்டறிந்த தத்துவங்களை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். பழனியில்… மலை மீது நாம் ஏறுகின்றோம். ஏறும் போது மேல் நோக்கி எப்படி எண்ண வேண்டும் என்ற நிலையை சற்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும்

1.படியின் கீழ் இருந்து நாம் மேல் நோக்கிச் செல்லும் நிலையில்
2.அந்த போக மாமகரிஷியை எண்ணி “அவன் அருளைப் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வுகள்… மேல் நோக்கி வருகின்றது…”

கீழிருந்து மேலே முருகனைப் பார்க்கின்றோம். ஏனென்றால் குன்று தோறும் அமர்ந்திருக்கும் முருகா…! என்று நாம் பாடலைப் பாடுகின்றோம். உயரமான குன்றில் சிலையை வைத்த நிலையில்… அவன் அருளைப் பெற வேண்டும் என்று ஏங்குகிறோம்.
1.சூரியனின் காந்த சக்தி ஞானிகள் உணர்வைப் புவியில் (தரையில்) படரச் செய்யாது மேலே மிதக்கச் செய்கின்றது.
2.நாம் மேல் நோக்கி எண்ணும் பொழுது அந்த மலை முகட்டில் இருக்கக்கூடிய காந்தப்புலனறிவு
3.நம் உயிருடன் ஒன்றி இயக்கத் தொடங்கி விடுகின்றது.
4.இந்த உணர்வுகள் மூன்றும் சேர்த்து அதைப் பெற வேண்டும் என்று எண்ணும் பொழுது
5.தன்னிச்சையாகவே அந்த உணர்வை (நாம் எதை எண்ணுகின்றோமோ) உயிரின் வழி உள்ளுக்கே நுகரும் தன்மை வருகின்றது.

சாதாரண மனிதனும் எளிதில் அந்த உயர்ந்த சக்திகளைப் பெறும்படி வைத்துள்ளார்கள்.

நினைவை நாம் மேல் நோக்கி அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று கூட்டப்படும் பொழுது அந்த வலிமை பெற்ற உணர்வுகள் நமக்குள் இணைந்து “நம் உடலில் நோய் இருந்தாலும்… அதை மறக்கச் செய்கின்றது…”

மலை மீது ஏறும் போது இந்த உணர்வின் வலிமை எல்லாம் அதற்குள் சென்று விடுகின்றது. நினைவின் ஆற்றலை விண்ணை நோக்கி அதனின் உணர்வைத் தனக்குள் சிறுகச் சிறுகச் சேர்க்கும் போது
1.உடலில் இருக்கும் எதிர்ப்புணர்வுகள்… அதாவது பகைமை கொண்ட உணர்வின் அணுக்களுக்கு
2.ஞானிகளின் உணர்வை ஈர்க்கப்படும் பொழுது பகைமை உணர்வுகள் தணிகின்றது.

அந்த அணுக்களின் வீரிய சக்தி ஒடுக்கப்படும் பொழுது இங்கே வலுக்கூட்டி மலை மீது ஏறும் தன்மை வருகின்றது.

சில பேர் தரையில் கூட நடக்க முடியாமல் இருப்பார்கள். ஆனால் மலை மீது போகும் பொழுது முருகா…! என்று அவன் காட்டிய நிலைகள் கொண்டு விண்ணை நோக்கி ஏகும் பொழுது அந்த உணர்வுகள் உள்ளே புகுந்த பின் நான்கு அடி எடுத்து வைக்கும் பொழுது ஒரு மாதிரியாக இருக்கும்.

இந்த உணர்வுகள் உள்ளே சென்ற பின் மனித உடலில் பகைமை ஊட்டக்கூடிய உணர்வுகளைத் தணியச் செய்கின்றது. பின் தாராளமாக ஏற முடியும். இதைப் பார்க்கலாம்.

1.ஏறும் போது மேலே நோக்கி மட்டும் எண்ணிப் பாருங்கள்.
2.மூட்டு வலி… என்னால் ஏற முடியவில்லை என்பதெல்லாம் மாறும்.

இதே மாதிரி அங்கு மட்டுமல்ல…! உங்கள் வீட்டின் மாடிப்படிகளிலோ மற்ற உயரமான இடங்களில் ஏற முடியவில்லை என்றாலும் ஈஸ்வரா…! என்று மேல் நோக்கி ஞானிகளை எண்ணி அந்த உணர்வை எடுத்தால் இரண்டு படி ஏறுவது சிரமமாக இருக்கும் மூணாவது படி நாலாவது படி தாராளமாக ஏற வரும்.

விண்ணிலிருந்து வரக்கூடிய ஆற்றல் மிக்க சக்திகளைப் பெற்று மனிதன் உயர்ந்த நிலை அடைவதற்குத் தான் இத்தனை நிலைகளை ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.
1.நாம் எடுக்கக்கூடிய அந்த விண்ணினுடைய ஆற்றல்
2.நம் உடல் உறுப்புகளில் சேர்ந்து அதைச் சீராக இயங்கும்படி செய்கின்றது.

மலை மீது ஆலயங்களை ஞானிகள் ஏன் வைத்தார்கள்…? என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அடிக்கடி ஒருவரைக் குறை கூறிக் கொண்டே இருந்தோம் என்றால் அதே குறையான செயல்களைச் செயல்படும் நிலையாக (குறையானவர்களாக) நாமும் மாறுகின்றோம்.

ஒருவர் மற்றொருவரை அடிக்கடி வேதனைப்படும்படி சொல்லிக் கொண்டு இருந்தார் என்றால் அவரின் வேதனைப்படும் உணர்வுகள் வேதனைப்படுத்தியவரின் உடலுக்குள் விளைந்து “ஜயோ எனக்கு மேல் வலிக்கிறதே…! கால் வலிக்கிறதே…!” என்பார்

ஆனால் அவர் என்ன நினைப்பார்…? எல்லோருக்கும் நான் நல்லது செய்தேன். அவன் தப்பு செய்தான்… அதைத் தானே நான் சொன்னேன்…! என்பார்.

அதாவது தன்னை நியாயப்படுத்தி வேதனைப்படும்படியாகப் புண்படும்படியாக ஒரு சொல்லைச் சொல்வார். அந்த உணர்வின் தன்மை இவர் உடலுக்குள் விளைந்த பின்
1.ஐயோ… மேல் வலிக்கிறதே கை வலிக்கிறதே…!
2.நான் எல்லோருக்கும் நல்லது தான் செய்தேன்… ஆண்டவன் என்னை ஏன் இப்படிச் சோதிக்கின்றான்…? என்று தெரியவில்லையே…! என்பார்.

ஆனால் தெய்வத்திற்குப் பூ மாலைகளைச் சூட்டுவதும் அபிஷேகம் செய்வதும் ஆராதனை செய்வதும் இப்படி எல்லாமே செய்தாலும் பெரும் பகுதி இப்படிப் பிறரைக் குறை கூறிப் பேசும் உணர்வுகள் கொண்டு
1.(முதலிலே) தன்னைத் தான் எண்ணாது
2.அவர் தவறுகளைச் செய்து கொண்டே இருப்பார்.

ஏனென்றால் நுகர்ந்தது எதுவோ அதை உயிர் அணுவாக மாற்றி… அதை உடலாக மாற்றி.. அந்த உணர்வின் சக்தியாகத்தான் “நமக்குள் இயக்கும்….!’ என்பதை மறந்து விட்டனர்.

ஆகவே இதை எதற்குச் சொல்கிறோம் என்றால்
1.இயற்கை எப்படி விளைந்தது…?
2.கடவுள் எப்படி இருக்கின்றான்…? என்பதைத் தெரிந்து கொள்ளத்தான்..!

தனித்து ஒருவன் கடவுள் இல்லை. ஐந்து நிலைகள் சேர்த்துத் தான் கடவுள் ஆகின்றது. வெப்பம்.. காந்தம்.. விஷம்… மணம்… அந்த சத்து… என்ற இந்த ஐந்தும் சேர்ந்த இயக்கத்தின் நிலைகளில் உருவாக்குகின்றது.

கடவுள் ஒருவன் (ஒன்று தான்) என்றால் அது எப்படி நியாயமாகும்…? ஒரு செடியானாலும் கல்லானாலும் உயிரினங்களாக ஆனாலும் அதே தான்.

ஐந்து புலனறிவு கொண்டு தான் எதைக் கவர்ந்து கொண்டதோ அதன் நிலைகளில்
1.ஒன்றுக்குள் சென்று உள் நின்று இயக்குவது தான் கடவுள் என்றும்
2.ஒரு உயிரணு இதை நுகர்ந்த பின் அதை உருவாக்குவது ஈசன் என்றும்
3.உருவான பிறகு பிரம்மம் என்றும் விஷ்ணுவின் மகன் பிரம்மா உருவாக்குகிறான் என்றும் ஞானிகள் தெளிவாக்குகின்றனர்.

உயிரின் துடிப்பு ஈசன் என்றாலும்… இயக்கத்திற்குள் இயக்கும் வெப்பம் விஷணு என்றும்… இதற்குள் இணைந்து நுகர்ந்ததை அணுவாக மாற்றுவதை விஷ்ணுவின் மகன் பிரம்மா என்றும் பிரம்மாவின் மனைவி சரஸ்வதி என்றும் காரணப் பெயர் வைத்து இயற்கையின் உண்மையின் இயக்கங்களை உணர்த்துகின்றனர்.

நாம் எந்த குணத்தை நுகர்கின்றோமோ அந்த குணத்தின் சக்தியாக உருபெறும் நிலை ஆகி அதே குணத்தின் சக்தியாக அது இயக்கும். அது தன் உடலாக மாறும் போது பார்வதி…!
1.நம் பார்வையில் எதைப் பார்த்தோமோ அதன் உணர்வுகள் எல்லாம் உடலாக இணைந்து கொள்கின்றது.
2.சிவனின் மனைவி பார்வதி – நம் பார்வையில் பார்த்து நுகர்ந்த உணர்வுகளை எல்லாம் ஓ… என்று ஜீவ அணுவாக மாற்றி
3.தன்னுடன் (உடலுடன்) இணைத்துக் கொள்ளும் என்பதற்கு “பார்வதி” என்று காரணப் பெயர் வைத்து
4.நம்மை அறிந்து செயல்படும் சக்தியாக நாம் செயல்பட வேண்டும் என்று நமது காவியங்கள் தெளிவாக்குகின்றது.

தில்லை அம்பலத்தாண்டவா

 

அன்று திருமூலர் பதஞ்சலியாக இருந்து கூடு விட்டுக் கூடு பாய்ந்து மாடு மேய்ப்பவன் உடல் மூலமாக அவன் வீட்டிற்குச் செல்லும் பொழுது
1.அவன் மனைவி கணவனை எப்படி வரவேற்கிறது…?
2.மரியாதை கொடுத்து எப்படிஉபசரிக்கிறது…! என்பதைப் பார்த்த பின் சிந்திக்கத் தொடங்குகின்றார்.

ஆனால் பதஞ்சலியாக… அரசனாக இருக்கப்படும் பொழுது
1.தன்னுடைய சேனாதிபதிக்குப் பயப்பட வேண்டும்
2.தன்னுடைய மனைவி இன்னொரு நாட்டு அரசனுடைய மகள் அவளுக்குப் பயப்பட வேண்டும்
3.தான் சட்டங்களை இயற்றினாலும் மக்களுக்குப் பயப்பட வேண்டும்
4.பின் எதிரிகளுக்குப் பயப்பட வேண்டும் என்று
5.இப்படிப் பயந்த உணர்வுகளே கொண்டு வாழும் நிலைகளே தனக்குள் வந்தது.

இதிலிருந்து தப்பிக்க உயர்ந்த சக்திகள் கொண்டு கூடுவிட்டுக் கூடு பாயும் சக்திகள் பெற்றிருந்தாலும்… அப்படிச் சென்ற பின் தன் உடலை வீழ்த்தி விட்டால் தான் எவ்வாறு மீள்வது…? வழியில்லையே…!

பாம்பினத்திற்குள் சென்ற பின் அங்கங்கள் கொண்டு செயல்படும் வழியில்லை… அப்பொழுது தான் எப்படிச் செயல்படுத்துவது…? என்று இந்த உணர்வின் நினைவு வருகின்றது.

பாம்புக் கூட்டுக்குள் இருந்து விஷத்தைப் பாய்ச்சி இன்னொரு உடலுக்குள் போகும் திறன் தான் உண்டு. எந்த உடலைத் தேர்ந்தெடுக்கின்றோமோ மனித உடலாக இருந்தால் அறிவின் தன்மை இயக்க முடியும்.

இதை உணர்ந்த அந்தப் பதஞ்சலி
1.தான் கற்றுணர்ந்த நிலைகள் கொண்டு அந்த மாடு மேய்ப்பவன் உடலைத் தீண்டி அதற்குள் புகுந்து
2.அறிவு வளர்ச்சி இல்லாததாக இருந்தாலும்… “இவன் உணர்வால்” அங்கே வலிமை பெற்று அந்த உடலை இயக்குகின்றான்.

தில்லை நடராஜா…! இந்தப் பூமி அதனுடைய இயக்கத்தில் நிற்காமல் ஓடுகின்றது. அது எவ்வாறு இயக்குகிறது…? என்றும் அதிலே விளைந்தது தில்லை அம்பலதாண்டவா.
1.இந்த உடலான எல்லையில் உயிராக நின்று
2.என்னை ஆண்டு கொண்டு இருக்கும் நிலைகள் தில்லை அம்பலத்தண்டவா…!
3.நான் சுவாசிக்கும் உணர்வு எதுவோ அதை நீ ஆளுகின்றாய்.
4.நான் எதன் உணர்வை எடுக்கின்றேனோ அந்த உணர்வுக்குத் தக்க என்னைக் குறுக்குகின்றாய்
5.என்னை ஆட வைக்கின்றாய்… ஆட்டங்களை ஆட வைக்கிறாய்…!
6.அந்த உணர்வின் இசைக்கொப்ப என்னை இயக்குகின்றாய் என்று தெளிவாகக் காட்டுகின்றார்.

அது தான் தில்லை நடராஜா…! என்று நடனக் கலையிலே சிறந்தவன் என்று கூறுவார்கள். நுகர்ந்த உணர்வின் தன்மை சக்தியாகி உணர்வின் தன்மை உடலை எப்படி ஆட்டிப் படைக்கின்றது…? இன்று ஆடுகின்றோம்…! (நம் செயல்கள்)

இந்த உணர்வை வளர்த்த பின் அதற்குத் தக்க அடுத்த உடலை உருவாக்கி விடுகின்றது என்ற நிலையை… உணர்வின் இயக்கங்கள் தன் உடலில் வரப்படும் பொழுது எவ்வாறு என்று நடனக் கலையாகக் காட்டினார் அன்று திருமூலர்.

தில்லை நடராஜா என்று நிற்காமல் ஓடும் பூமியின் செயலும்… அதற்குள் உராயும் உணர்வுகள் தனக்குள் விளையும் அணுக்களின் மாற்றங்களும்… எதனின் உணர்வு மாறுகின்றதோ அதன் உணர்வின் செயலாகத் தாவர இனங்களும்…
1.நுகர்ந்த உணர்வுகள் தனக்குள் எண்ணங்களாக எப்படி ஆகின்றது…?
2.அந்த உணர்ச்சியின் தன்மை கொண்டு உருவங்கள் எப்படிப் பெறுகின்றது…?
3.அதனுடைய கலைகள் எப்படி இருக்கின்றது…? என்று தெளிவாக “அவர் பாடல்கள் மூலமாக…” உண்மைகளை வெளிப்படுத்தி உள்ளர்.

தில்லை நடராஜா… தில்லை அம்பலத்தாண்டவா…!
1.நான் எண்ணும் உணர்வின் தன்மையை
2.அதாவது… என்னை நீ (உயிரான ஈசன்) எப்படி இயக்குகின்றாய்…? என்ற நிலையை அவன் உணர்த்தினாலும்
3.பின் வந்தவர்கள் “திருமூல மந்திரம்…” என்று திரித்து விட்டார்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக ஆமையை ஒரு நரி விழுங்க வருகின்றது. அப்பொழுது ஆமையின் கருவிழி ருக்மணி அந்த நரியை உற்றுப் பார்த்துத் தனக்குள் பதிவாக்குகின்றது.

அதே சமயத்தில் இந்த ஆமையை நரி விழுங்க எண்ணும் உணர்வுகள் நரியிடமிருந்து வெளிப்படும் பொழுது சூரியனின் காந்த சக்தி அதை கவர்ந்து எடுத்து வைத்துக் கொள்கிறது. இது சீதா – சுவை.

ஆமை நரியை உற்றுப் பார்க்கும் பொழுது கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலன் சத்தியபாமா… சூரியன் எடுத்து வைத்துக் கொண்ட அந்த நரியின் உணர்வை நுகரும் பொழுது ஆமையின் உயிரிலே உராயச் செய்கின்றது. உயிரிலே பட்ட பின் “நரி உன்னை விழுங்கப் போகின்றது…” என்ற உண்மையை (சத்தியத்தை) உணர்த்துகின்றது.

ஏனென்றால்
1.உயிரிலே உராயும் பொழுது சீதா…! அந்த உணர்வின் எண்ணங்களாக வருகின்றது.
2.ஹரி கிருஷ்ணா…! ஹரி இராமா…! ஹரி என்றால் சூரியன்.
3.நமக்குள் பதிவாக்கும் உணர்வு “ஹரி ராமா” – அந்தச் சூரியனின் நிலைகள் கொண்டு எண்ணங்களாக அது எப்படித் தோன்றுகிறது…? என்ற
4.உண்மையின் நிலையைத் தெளிவாகக் கூறுகிறது நமது சாஸ்திரங்கள்.
5.இதில் எதுவும் தப்பில்லை.

ஆமை கூர்மையாக நரியை உற்றுப் பார்த்த பின் நரியின் உணர்வைத் தனக்குள் பதிவாக்குகின்றது. கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலன் சத்தியபாமா அதை இழுத்து
1.“நரி உன்னை விழுங்க எண்ணுகிறது…!” என்ற நிலையை உணர்த்திய பின்
2.அந்த உணர்வைக் கண்ட பின் பார்த்தசாரதி…! ஆமை அங்கிருந்து நகர்ந்து செல்கிறது.
3.,நரியிடம் சிக்காதபடி ஆமை தன் தலையை உள்ளுக்குள் இழுத்துக் கொள்கிறது.

இருந்தாலும் நரி… இது தன் இரைக்கு உகந்தது…! என்று பார்க்கின்றது. “பார்த்தசாரதி…! ஆமையை விடுவேனா என்று துரத்துகிறது… நரியின் கண்கள்.

இது உன் உணவுக்கு உகந்தது… என்று காட்டுகின்றது நரியின் கண்களின் காந்தப் புலன் சத்தியபாமா. ஆக கருவிழி பதிவாக்கிய பின் அதன் செயலாக்கங்களாக இயங்குகின்றது. இது பார்த்தசாரதி.

இவ்வாறு இயக்கினாலும் அதன் வரிசையில் எப்படி இயங்குகிறது…? என்ற நிலையைத் தெளிவாக்குகின்றார்கள் ஞானிகள்.

நரி போய்விட்டதா இல்லையா…! என்று அடிக்கடி ஆமை அந்த நரியைப் பார்த்துப் பார்த்து எண்ணங்களை எடுக்கும் போது… தன் உடலுக்குள் அந்த நரியின் உணர்வுகள் வலுவாகின்றது.

அப்பொழுது அர்ச்சுனனுக்குக் கண்ணன் உபதேசிக்கின்றான்.

நரியைப் பார்த்து நுகர்ந்த உணர்வுகள் ஆமைக்குள் வரும் பொழுது அதனின்று தப்பிக்கும் உணர்ச்சிகளை ஊட்டுகின்றது. அந்த எண்ணங்களைத் தோற்றுவிக்கின்றது.

இந்த உணர்வுகள் அதற்குள் வளர வளர சிரசை உள்ளுக்குள் இழுத்துக் கொள்கிறது. இருந்தாலும் ஆமை தான் இரை தேடப் போக முடியாத நிலை ஆகின்றது. ஆமைக்கு உணவு இல்லை.

அப்பொழுது அந்த நரியையே எண்ணி இது மரணமடையப்படும் பொழுது
1.எதைக் கூர்மையாகப் பார்த்ததோ அந்த உணர்வின் தன்மை வந்த பின்
2.ஆமையின் உயிரும் அதனுடன் சேர்த்த அணுக்களும் எந்த நரியின் உணர்வை இதற்குள் சேர்த்ததோ இந்த உடலின் தன்மை வலு பெறுகின்றது
3.நரியின் உடலுக்குள் ஆமையின் உயிரான்மா செல்கிறது.

அது தான் அர்ச்சுனனுக்குக் கண்ணன் சாரதியாகச் சென்றான்…!

இந்தக் கண் எதைக் கூர்மையாகப் பார்த்ததோ இந்தக் கண்ணின் தன்மை கொண்டு அது பதிவானது. அந்த உணர்வின் தன்மை கொண்டு நரியின் உடலுக்குள் செல்கிறது.

அது தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய். அதனின் உணர்வை வலுவாக்கப்படும் பொழுது அதன் நிலைக்கே அது அழைத்துச் செல்கிறது என்பதனைக் காட்டி எதைக் கூர்மையாகப் பார்த்ததோ அர்ச்சுனனுக்குக் கண்ணன் சாரதியாகச் செல்கின்றான்…! என்று உணர்த்துகின்றனர்.

அப்பொழுது கண்ணன் சொல்கிறான்.
1.அந்த வியூகத்தைத் தகர்த்து (நரியின் வியூகம்) அதனுள் சென்று நீ அதுவாகு
2.ஆக இந்த உடலை (ஆமையின் உடல்) இழக்கின்றாய். அதன் உணர்வை இதற்குள் வளர்க்கின்றாய்.
3.அதனுள் (நரிக்குள்) சென்று நீ அதுவாகும் பொழுது அது உன்னை அரவணைக்கும்.
4.ஆகவே ஒளியும் இடத்தைக் கண்ணன் இப்படிக் காட்டுகின்றான்…! என்று மிக மிகத் தெளிவாகக் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.

காரணம்… கண்ணன் துகிலை உறிகின்றான்…! கண்ணனின் செயலாக்கங்களை உயிரிலே கண்ட பின் நன்மை தீமை என்ற உணர்வுகளைப் பிளந்து காட்டுகின்றது நமக்குள்.

அதனால் தான் கண்ணன் துகிலை உறிகின்றான்…! என்று இப்படி ஒவ்வொன்றுக்கும் காரணப் பெயர்களை வைத்துத் தெளிவாக்குகின்றார்கள் ஞானியர்கள்.

நாம் என்ன நினைக்கின்றோம்…! கண்ணன் பெண்கள் குளிக்கும் பொழுது அவர்கள் உடைகளைத் தூக்கிக் கொண்டு சென்றான்…! வேடிக்கை பார்த்தான்…! என்று இப்படித்தான் சொல்கிறோம்.

ஏனென்றால் இதெல்லாம் ஒரு உணர்வுக்குள் மறைந்த உட்பொருளைப் பிளந்து
1.அந்த உணர்வின் சக்தி எதுவாக இயக்குகிறது…? என்றும்
2.தான் நுகர்ந்த உணர்வுகள் உயிரிலே பட்ட பின்
3.அந்த இரண்டு உணர்வுகளையும் சேர்ந்த பின் உண்மையின் இயக்கத்தை அது எப்படிப் பிரித்துக் காட்டுகிறது…? என்று
4.காரணப் பெயரை வைத்து அழைக்கின்றனர் சாஸ்திரங்களில்…!

ஆமையின் உயிர் நரியின் உடலுக்குள் சென்று நரியின் ரூபமாக மாறுகின்றது. கண் கூர்மையாகப் பார்த்து இந்த உணர்வின் தன்மை கொண்டு உடலை மாற்றுகின்றது. அது தான் கூர்மை அவதாரம்…! என்பது.

எதிர்த்துத் தாக்கும் உணர்வு கொண்டால் நம்மைக் காக்கும் நல்ல உணர்வுகளை இழந்துவிடுவோம்

 

நாம் எந்தத் தவறும் செய்ய வேண்டியதில்லை. ஒரு குழந்தை தவறிக் கீழே விழுந்து விட்டால் பாசத்தாலே அதை உற்றுப் பார்க்கின்றோம். அவன் அடிபட்டு வேதனைப்பட்டு வெளிப்படுத்தும் மூச்சலைகளைக் கண் கொண்டு பார்க்கும் பொழுது
1.அந்த உணர்வுகளை நம் சுவாசத்தின் வழி இழுத்துக் கொள்ள நேர்கின்றது.
2.அவன் பட்ட வேதனை நமக்குள் வந்தபின் அவன் அடிபட்ட உணர்ச்சி நம்மை இயக்கி நம்மையும் வேதனைப்படச் செய்கின்றது.

காரணம் அவன் வெளிப்படுத்தும் மூச்சலைகளைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்கின்றது. நினைவு கொண்டு அதைப் பார்க்கப்படும் பொழுது அந்த உணர்வு எனக்குள் ஊடுருவி வேதனையைத் தூண்டச் செய்து அதைக் காட்டி அவனைக் காக்கும்படிச் செய்கின்றது.

அதே சமயத்தில் அங்கே ஒரு போக்கிரி வருகின்றான் என்று வைத்துக் கொள்வோம்… அவன் அசுர குணங்கள் கொண்டு இந்தக் குழந்தை அடிபட்டதைப் பார்த்தபின் மகிழ்ச்சி அடைகின்றான். இவனுக்கு இப்படித்தான் வேண்டும் என்று சொல்கின்றான். நல்லதைக் காக்கும் எண்ணம் அவனுக்கு இல்லை.

ஆனால் அதைப் போல எண்ணம் கொண்டவன் ரோட்டிலே நடந்து செல்கின்றான் என்று வைத்துக் கொள்வோம். எதிர்பாராது திடீரென்று ஒரு பஸ் வேகமாக வருகின்றது. இவனை மோதி விடும் என்ற நிலை வரும் பொழுது
1.இவனுக்குள் இருக்கும் அசுர சக்தி என்ன செய்கின்றது…?
2.அவன் என்னை ஏற்றி விடுவானா…? என்று முரட்டுத்தனமாகப் பார்ப்பான்.
3.ஆனால் அந்த பஸ் இவன் மீது மோதி அடித்த பிற்பாடு தான் இவன் உணர்வான்.
4.ஏனென்றால் எதிர்த்து நிற்கும் சக்தி தான் இது… தன்னைக் காக்கும் சக்தி அங்கே இருக்காது.

முரட்டு குணத்தின் தன்மை கொண்டு இரக்கமற்ற நிலைகளைச் செய்யும் பொழுது “அந்த இரக்கமற்ற உணர்வு… இவனைக் காக்க அவன் எண்ணமே உதவாது…!”

ஆனால் பாசத்தால் குழந்தையில் பால் இரக்கப்பட்டு அவன் வேதனையைச் சுவாசித்து உதவி செய்தாலோ… வேதனையான சத்து இங்கே உடலுக்குள் வந்து விடுகின்றது.

இந்த உடல் நாம் உணவாக உட்கொள்ளும் உணவிற்குள் மறைந்து வரும் விஷத்தை மலமாக மாற்றுகின்றது. கெட்டதை நீக்கி நல்லதை உருவாக்கும் சக்தி பெற்றது தான் ஆறாவது அறிவு.

அதைச் செம்மையான நிலைகள் பயன்படுத்துவதற்குத் தான் யாம் சொல்லும் இந்தத் தியானம். மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று ஏங்கி அதை உடலுக்குள் கண்ணின் நினைவு கொண்டு நாம் செலுத்தக்கூடிய நிலைதான் ஆத்ம சுத்தி என்பது.

தியானம் என்பது ஒரு நாளைக்கு பத்து நிமிடம் இருந்தால் கூடப் போதுமானது. ஆனால்
1.எப்பொழுது துன்பம் நேருகின்றதோ அந்தத் துன்பம் உடலுக்குள் புகாதபடி
2.அதை நாம் இந்த வாழ் நாள் முழுவதும் சுத்தி செய்து மகரிஷிகள் உணர்வு கொண்டு அதைத் தடுத்துப் பழக வேண்டும்

நரசிம்ம அவதாரம் என்பது இதுதான்.

துன்பம் வரும் பொழுது அந்தச் சுவாசம் உடலுக்குள் சென்று அது உடலுக்குள் அந்த உணர்ச்சிகளைத் தூண்டும் நிலையைக் குறைப்பதற்கு ஒவ்வொரு நிமிடமும் ஆத்ம சுத்தியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதை உங்களுக்கு வாக்குடன் கூடித்தான் ஆயுதமாகக் கொடுக்கின்றோம். எத்தகைய துன்பம் வந்தாலும் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கும் பொழுது அந்த உணர்ச்சியைத் தூண்டச் செய்து அதை நீங்கள் சுவாசிக்க நேர்கின்றது.

சுவாசிக்க நேரும் பொழுது சங்கடமான எண்ணம் உடலுக்குள் தொல்லை கொடுத்துக் கொண்டிருப்பதை இது ஊடுருவி அதை அமிழ்த்துகின்றது.

அதற்கு இந்த ஆத்ம சுத்தி அவசியம் தேவை.

செடி கொடிகள் அனைத்தும் சூரியனின் காந்த சக்திகளை எடுத்துக் கொள்கின்றது. பாக்கி நாள் முழுவதும் காற்றில் இருக்கக்கூடிய தன் இனமான சக்திகளை எடுத்துத் தன் இனமாகப் பெருக்கிக் கொள்கின்றது.

இதைப் போல் தான்
1.அந்த மெய் ஞானிகள் அருள் சக்திகளை ஒவ்வொரு நொடியிலும் பெறுவதற்கு நமக்கு அந்த ஆற்றல் தேவை
2.அந்த ஆற்றலைப் பெறுவதற்குத்தான் இந்த உபதேச வாயிலாகப் பதிவு செய்கின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இராமனைக் கும்பிட்டால் நமக்கு ஒன்றும் கொடுக்க மாட்டான்…. விஷ்ணுவைக் கும்பிட்டால் நமக்கு ஒன்றும் கொடுக்க மாட்டான்…! என்று சிவ தத்துவத்தில் சொல்வதும் சிவனைக் கும்பிட்டால் உனக்குச் சோறு கிடைக்காது..! என்று பதிலுக்கு விஷ்ணு தத்துவத்தைச் சார்ந்தவர்கள் சொல்வதும் இப்படி நமக்குள் இயற்கையின் நிலைகளைத் திருத்தித் தான் வாழ்கின்றோமே தவிர உண்மையின் தன்மையை அறிந்து வாழவில்லை.

ஏனென்றால் காசுக்காக வேண்டிப் பக்தி என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு
1.இந்தத் தெய்வத்தை வணங்கினால்தான் உனக்கு எல்லாம் கிடைக்கும் என்று சொல்லிக் கொண்டு
2.தூதுவனாக இருந்து காசு வாங்கி அவன் அவன் பிழைப்பதற்குத்தான் ஆகின்றது.
3.ஆண்டவனிடமிருந்து இவன் வரம் வாங்கித் தரப் போகின்றான்…! என்று தவறான பாதையில் சென்று
4.உண்மையின் இயற்கையின் உணர்வுகளை நாம் அறியவிடாது தடைபடுத்தி விட்டனர்… இன்றும் தடைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

மதங்கள் என்ற போர்வையில் மதத்தின் நிலைகளில் அரசன் என்றும் அரசனுக்குக் கீழ் பக்தி என்றும் பக்தி என்ற நிலைகளில் அவன் உருவாக்கியதை நாம் உடலுக்குள் சேர்த்து விட்டால் “அதுவே தெய்வம்” என்றும் உருவாக்கப்பட்டு விட்டது.

1.அப்படி உருவாக்கிய நிலைகள் கொண்டு அந்த உணர்வின் தன்மையை நாம் மீண்டும் எண்ணும் போது “தெய்வம் காக்கின்றது” என்றும்
2.ஆனால் அவர்கள் காட்டிய உணர்வுக்கு மாறாக எடுத்தால் “தெய்வ தண்டனை கிடைக்கும்….!” என்று இப்படி மக்களை அச்சுறுத்திவிட்டனர்.
3.மக்களுக்கு உண்மை தெரியாது… அறியவிடாது… அன்றைய அரசர்கள் செய்த பிழை இது.

இப்படி மதம் என்ற நிலையில் போர் என்ற நிலைகள் வரப்பட்டு உலகம் முழுவதற்குமே மனிதனுக்கு மனிதன் கொன்று குவிக்கும் நிலை தான் வந்தது.

என் மதத்தை காக்க… என் மதத்தைக் காக்க…! என்று போர் முறைகள் தான் வருகிறது. இன்றும் பார்க்கிறோம்.
1.மதத்தின் அடிப்படையில் மக்களை அழிக்கும் உணர்வுகள் தான் விளைகின்றதே தவிர
2.மக்களைக் காக்கும் மதம் எதுவும் இல்லை…!

விஷ்ணு மதம் சிவ மதம் இராமன் மதம் முருகன் மதம் ஜயப்பன் என்று பக்தியின் நிலைகள் வரப்படும் போது ஜயப்பன் கோவிலுக்குப் போகிறவர்களும் முருகன் கோவிலுக்குப் போகிறவர்களும் இரண்டு பேரும் சண்டை போட்டுக் கொள்கிறார்கள்.
1.பக்தி என்ற நிலையில் நாம் அஞ்ஞான வாழ்கை வாழ்கின்றோம்.
2.மெய் ஞான உணர்வை நாம் பெறவில்லை.

இதைப் போல ஒரு சாமியைக் கும்பிடுகிறவர்களும் இது என் சாமி.. இது உன் சாமி…! என்று இனங்களை வைத்து கோயிலில் இருக்கக்கூடிய மாரியம்மனைக் கும்பிட்டாலும் என்னுடைய இடத்தின் பக்கம் அந்தச் சாமி வந்துவிடுமா… பார்க்கலாம்…! என்ற நிலையில் ஒருவருக்கொருவர் தாக்குவதும்
1.அந்த நல்ல உணர்வுகளை எடுக்க முடியாது தடைப்பட்டு
2.மனிதனுக்கு மனிதன் மடியும் நிலையே வருகின்றது.
3.தெய்வம் நம்மைக் காக்கின்றதா… தெய்வத்தை நாம் காக்கின்றோமோ…? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

நாம் நுகர்ந்தறிந்த உணர்வின் தன்மை அது உணர்ச்சியாகச் செயலாக்கப்படும் போது தெய்வம். அந்த உணர்வின் சக்தி நமக்குள் எடுக்கும் போது அது வித்து… “வினை…”

அந்த உணர்வின் சக்தி நமக்குள் வரும் போது உணர்ச்சிகளாக எண்ணமாகத் தோன்றுகிறது. எந்தச் சுவையின் தன்மை வருகிறதோ – சீதா ராமா…!

1.அந்தந்தச் சுவைக்கு ஒப்ப நம் எண்ணத்தின் உணர்ச்சிகள் இயக்குகிறது என்றும்…
2.இயற்கை நம்மை எப்படி இயக்குகிறது…? என்ற நிலையையும்…
3.தன்னை அறிந்து கொள்வதற்குத் தான் அத்தனை தத்துவங்களையும் ஞானிகள் நமக்குக் கொடுத்தார்கள்.

இன்று மனிதன் கண்டுபிடிக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் பெயர் வைக்கிறார்கள் அல்லவா…! மோட்டாருக்கு ஒரு பெயர்.. T.V.க்கு ஒரு பெயர்.. கம்ப்யூட்டருக்கு ஒரு பெயர்.. பின் அதனுடைய உபபொருட்களுக்கு என்று ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயரை வைத்து அதை எல்லாம் இணைத்தால் அது இணங்கி இயக்கும்…! என்று தெளிவாக்குகின்றார்கள் அல்லவா…!

இதைப் போன்று மனிதனின் வாழ்கையில் எதை எப்படி இணைக்க வேண்டும் என்ற நிலைகளுக்கு ஒவ்வொன்றுக்கும் காரணப் பெயர்களை வைத்து மனித உடலுக்குப் பின்… விண் செல்லும் மார்க்கங்களைக் காட்டினார்கள்…! அன்றைய மகரிஷிகள்.

விண் சென்ற ஞானிகள் மூச்சலைகளை நாம் நுகர்ந்து இனி வரும் சந்ததியினருக்கும் அதைக் கிடைக்கச் செய்ய வேண்டும்

 

இந்த மனித உடல் நமக்கு நிலையானது அல்ல. நம் உணர்வுகளை ஒளியாக மாற்றி விண் செல்வதே மனிதனின் கடைசி எல்லை. நீங்கள் இந்த உண்மையை முதலில் உணர்ந்து கொள்ளுங்கள். இந்த நச்சுத்தன்மையான உலகத்தில் இருந்து விடுபட வேண்டும்.

இன்றைய விஞ்ஞான உலகில்… மனிதன் சீர்குலைந்த நிலையில் செயல்படக்கூடிய நிலைகளும் மனித உருவையே குறைக்கக் கூடிய நிலைகளாகவும் விஷத்தன்மைகள் பரவிக் கொண்டு வருகின்றது.

இனி எந்த நேரம் எது நடக்கும்…? என்று சொல்ல முடியாது. அதற்குள் நம் குருநாதர் காட்டிய அருள் வழிப்படி நிலையான ஒளிச் சரீரமாகப் பெற வேண்டும்.

1.மெய் ஒளியினைப் பெருக்கி அந்த மெய் ஆற்றல்களை உங்களுக்குள் விளைய வைத்து
2.நீங்கள் இடும் மூச்சலைகள் ஒவ்வொன்றும் சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு விஞ்ஞானத்தால் வரக்கூடிய விஷத்தினை அது மாய்த்து
3.நல்லதை எண்ணி ஏங்கி வருவோர் உள்ளங்களுக்குள்ளும் ஞானத்தின் உணர்வுகளை விதைத்து
4.அடுத்து வரும் சந்ததியினர் மெய் ஒளியின் தன்மை கொண்டு நிலையான சக்திகளைப் பெறச் செய்வதற்கு உங்கள் மூச்சலைகளே உதவும்.

அதாவது… மெய் ஞானிகள் இட்ட மூச்சலைகள் இன்று நமக்கு எப்படி உதவுகின்றதோ அதே போல வரும் சந்ததியினருக்கு அதைக் கிடைக்கச் செய்ய முடியும்.

ஏனென்றால் இந்த உலகம் மாறப் போவது நிச்சயம். அதாவது மனித உலகம் நினைவிழக்கப் போகின்றது.

ஆதிகாலத்தில் காட்டுமிராண்டிகளாக மனிதன் எப்படி வாழ்ந்தானோ அதைப் போன்று உருப்பெறும் நிலைகளாகி… மனிதனுக்கு மனிதன் தர்மம் என்று ஒன்றை வைத்துக் கொண்டு… ஆனால் மற்றவரை வீழ்த்தும் நிலையே வளர்ந்து கொண்டிருக்கின்றது.

அதனால் நச்சுத்தன்மைகள் அதிகமாகி விஷத்தன்மைகளாகப் பரவிக் கொண்டுள்ளது. அணுகுண்டுகள் ஹைட்ரஜன் குண்டுகள் எல்லாம் சாதாரணமாகப் போய்விட்டது… அவை மற்றவர்களைச் சுட்டுப் பொசுக்கும்.

ஆனால் அதைக் காட்டிலும்
1.தாவர இனங்களுக்குப் பூச்சிக்கொல்லி மருந்துகளைப் போட்டு
2.அந்தப் பூச்சிகளைக் கொன்று விட்டு நாம் வாழ வேண்டும் என்று எப்படி விரும்பினோமோ இதைப் போல
3.இந்த உலகத்தில் உள்ள கோடான கோடி நிலைகளையும் மாய்த்துக் கொல்லக்கூடிய
4.விஷமான சக்திகளை ஒவ்வொரு நாட்டிலும் சேமித்து வைத்திருக்கின்றார்கள்.

ஆக… பூச்சிகளைக் கொன்று தாவர இனங்களை வளர்த்து நாம் வாழ்வதற்காக என்று அதைச் செய்திருந்தாலும்
1.இன்று அதை எல்லாவற்றையுமே போர் ஆயுதங்களாக உருவாக்கி விட்டார்கள்.
2.எந்த நிமிடத்திலும் அத்தகைய ஆயுதங்கள் வெடிக்கலாம்.

அப்படி வெடித்தால் மனிதனுடைய உணர்வுகள் நஞ்சின் தன்மை ஆகி மனிதனுடைய நினைவலைகள் பூரணமாக அழிகின்றது. மனித உரு இருக்கும். ஆனால் மனிதனின் சிந்தனைகள் அனைத்தும் அழிக்கப்பட்டு புத்தி இல்லாத நிலைகளாகத் தான் செயல்பட வேண்டி வரும்.

குரங்குகளுக்கு மனிதனைப் போன்ற அங்கங்கள் கை கால் உண்டு. மனிதனைக் காட்டிலும் எங்கும் எதிலும் தாவிச் சென்று ஏறக்கூடிய வலிமை இருந்தாலும் மனிதனை ஒத்த… சொல்களைச் சொல்லி மற்றவர்களுக்குப் புரியக்கூடிய நிலையில்… அதை வைத்துத் தன் நிலைகளைப் பெருக்கிக் கொள்ளும் நிலைகள் கிடையாது.

மனிதனோ சிந்தித்துச் செயல்படும் ஆற்றல் பெற்றவன். ஆக மனிதனை ஒத்த குரங்குக்கே அந்த நிலை இல்லை. ஆக மற்ற உயிரினங்கள் எப்படி…? என்று பார்த்துக் கொள்ளலாம்.

மிருகங்கள் எப்படிக் காட்டுமிராண்டித்தனமாகச் செயல்படுகின்றதோ அது போன்று மனிதனுடைய சிந்தனைகள் பூண்டோடு அழித்திடும் நிலையாகச் சென்று கொண்டு இருக்கின்றது.

குரங்கிற்கு ஒரு ஆகாரத்தைப் போட்டாலும்… தன் வாய் நிறைய அதை வைத்திருந்தாலும்… மற்ற குரங்குகளை அது அடித்து விரட்டிக் கொண்டுதான் இருக்கும்.

அதைப் போன்று மனிதர்களுக்குள்ளும் மற்றவர்கள் எதையும் பெற விடாதபடி தானே அனுபவிக்க வேண்டும் என்று ஈவு இரக்கமற்றுச் செயல்படும் நிலைகளாக வந்து கொண்டிருக்கின்றது.

ஆகவே இது போன்ற நிலைகளை உணர்ந்து மெய் வழியைப் பெறும் தகுதியை நீங்கள் வளர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. அதற்குத்தான் இந்த உபதேசமே கொடுக்கின்றோம்.
1.இப்பொழுது நாம் சொல்வது உங்களுக்கு லேசாகத் தெரியலாம்.
2.போகப் போகத்தான் யாம் சொல்லக்கூடிய உண்மை நிலைகளைத் தெரிந்து கொள்ள முடியும்.

எப்படிச் செடி கொடிகளுக்கு விஞ்ஞான அறிவு கொண்டு உரத்தைப் போட்டவுடன் மரத்திற்குள் அது ஐக்கியமாகி… காற்றிலிருந்து தன் இனமான சக்திகளை எடுத்து அது நல்ல மணிமுத்துகளைக் கொடுக்கின்றது.

அது போல்… அந்த மெய் ஞானிகள் அருள் சக்திகளை உரத்தைப் போன்று நீங்கள் பெற வேண்டும் என்று உபதேசிக்கின்றோம். உங்கள் நல்ல குணங்களுக்குள் அதை ஆழமாகப் பதிவு செய்கின்றோம்.

அதற்கு யாம் சொன்ன முறைப்படி அந்த்த் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நீங்கள் தியானித்துப் பழகிக் கொள்ளுங்கள்.

பழகிய பின்…
1.அடுத்து எப்பொழுது கஷ்டம் வருகின்றதோ அந்தக் கஷ்டம் நிலைத்திருக்காதபடி
2.துன்பமான விஷமான குணங்களை எல்லாம் துருவ நட்சத்திரத்தின் உணர்வு உண்டு பொசுக்கி விடலாம்.

ஓம் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் அந்த சக்தி எங்கள் உடல் முழுவதும் வளர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா பெற வேண்டும் என்று இப்படி ஒவ்வொரு நொடிப் பொழுதும் எடுத்துச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ரேடியோ டிவியில் ஸ்விட்சைப் போட்டவுடன் அந்த அலைவரிசையை எடுத்து அதைச் செயல்படுகின்றதோ அதே போல ஞானிகள் அருளாற்றல் மிக்க அருள் சக்தியை நீங்கள் பெறக்கூடிய தகுதிக்கே இதைச் செயல்படுத்துகின்றோம்.
1.அதற்கு ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் பத்து நிமிடமாவவது தியானிக்க வேண்டும்.
2.தியானமிருந்தால் தான் அந்தச் சக்தியைக் கூட்ட முடியும்… உங்களைக் காத்துக் கொள்ள முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்று இருக்கக்கூடிய உலகம் விஷ உலகமாக இருக்கின்றது. அதிலிருந்து மீட்டுக் கொள்வதற்கு
1.ஒரு கம்ப்யூட்டரில் பதிவு செய்கின்ற மாதிரி மெய் ஞானிகளின் அருள் உணர்வை உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.
2.அதை மீண்டும் நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்தால் காற்றிலிருந்து அந்த அரும்பெரும் சக்திகளை எடுக்கலாம்.
3.உங்கள் எண்ணம் தான் உங்களைக் காக்கும்.
4.சாமி (ஞானகுரு) வந்து நம்மைக் காப்பாற்றுவார் என்று எண்ணினால் இதெல்லலாம் தவறு.

ஆகவே உங்களை நீங்கள் நம்ப வேண்டும்…!

ஏனென்றால் உயிர் எண்ணியதைத்தான் உருவாக்குகின்றது. எண்ணிய சக்திகளை உங்களைப் பெறச் செய்வதற்காகத்தான் ஞானிகளின் உணர்வை உபதேசமாகக் கொடுக்கின்றோம்.

அந்த ஞானிகளின் உணர்வுகள் உங்களுக்குள் பதிவானால் என்ன நடக்கின்றது…?

உதாரணமாக பள்ளிக்குச் சென்று படிக்கின்றோம் என்றால் ஆசிரியர் இது இன்னது… இன்னது தான்…! என்று சொல்கிறார். அவர் சொன்னபடி நாம் எடுத்துக் கொண்டால்
1.அந்தக் கணக்குப் பிரகாரம் இயந்திரத்தைச் செய்யலாம்… இயக்கலாம்
2.கணக்கீடுகளைச் (CALCULATION) செய்யலாம்
3.இந்தந்தப் பொருள் இப்படி இயங்குகிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

ஆனால் அதற்குப் பதில் ஆசிரியரே வந்து எனக்கு எல்லாம் செய்து கொடுப்பார் என்றால்… எப்படி…? நீங்கள் வீட்டுக்குப் போன பின் ஆசிரியர் வந்து எப்படிச் சொல்லிக் கொடுப்பார்…?

சொல்லிக் கொடுப்பார்… எழுதிக் கொடுத்து அதையும் செய்து கொடுத்துக் கொண்டே இருந்தால் ஆசிரியர் வேலை அன்ன ஆவது…?

ஆகையினால் நாம் எல்லோரும் என்ன செய்கிறோம்…? என்றால் சாமியார் செய்து தருவார்… சாமி செய்யும்.. ஜாதகம் செய்யும்… மந்திரம் செய்யும்… யாகம் செய்யும்…! என்று இப்படித்தான் சுற்றிக் கொண்டிருக்கின்றோமே தவிர
1.மனிதனான பின் தனக்குள் நாம் எண்ணியதைச் செயலாக்கும் சக்தி
2,“நம் உயிர் தான்…!” என்பதை மறந்தே இருக்கின்றோம்.

கோபத்தையும் வெறுப்பையும் வேதனையையும் மட்டும் அதிகமாக வளர்த்துக் கொள்கின்றோம். நல்லதை மட்டும் எண்ணவே முடியவில்லை…!

காரணம்… ஒரு விஷம் கொண்ட பொருளுக்குள் நல்ல பொருளைப் போட்டால் அந்த நல்ல பொருளும் ஒடுங்கி விடுகின்றது.

விஷம் கொண்ட உலகமாக இருக்கும் பொழுது… விஷம் கொண்ட இயக்கமாக இருக்கும் பொழுது… இன்றைய மனிதனின் வாழ்க்கையில் அந்த உணர்வின் செயலாக்கமே நம் நல்ல உணர்வை அறிய விடாது தடைப்படுத்துகின்றது.

நல்ல உணர்வுகளை அறிய வேண்டும் என்றால் நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் யாம் கூறும் உபாயத்தைக் கடைப்பிடித்து
1.மகரிஷிகளின் அருள் உணர்வுகளை ஒவ்வொரு நிமிடமும் எடுத்துக் கொண்டால்
2.உங்கள் எண்ணம் உங்களைக் காக்கும்.
3.அடுத்து பிறவியில்லா நிலையை நிச்சயம் அடைய முடியும்.
4.இந்த விஞ்ஞான உலகின் பேரழிவிலிருந்து உங்களைக் காத்துக் கொள்ள இது உதவும்.

ஈரேழு லோகத்தையும் வென்றவன் விண் சென்றான்

 

அகஸ்தியர் தன் தாய் கருவிலேயே நஞ்சினை வென்றிடும் ஆற்றல் பெற்று அகண்ட அண்டத்தையும் தன்னுள் நுகர்ந்து ஒளியாக மாற்றித் துருவ நட்சத்திரமாக இன்றும் இருக்கின்றார். அதன் அறிவைத்தான் செவி வழி ஓதி உங்கள் நினைவினை அங்கே அழைத்துச் செல்வது.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை வரிசைப்படுத்தி
1.அதனுடன் சுழன்று உங்கள் உணர்வுகளைச் சேர்க்கப்படும் பொழுது
2.அகண்ட அண்டத்தில் வருவதையும் உங்கள் உணர்வுக்குள் அது பெறும் உணர்ச்சியின் நிலையை
3.அணுவாக மாற்றும் நிலையாக உருப்பெற்று விட்டால் தன்னிச்சையாக அது நுகரும் சக்தி பெறுகின்றது.
4.உங்களால் நினைத்த நேரத்தில் அகண்ட அண்டத்தினையும் அதன் செயலாக்கங்களையும் காண முடியும்.
5.அருள் ஞானியின் உணர்வைச் சேர்த்துப் பகைமை உணர்வு வராது “பேரின்ப உணர்வினை” உங்களுக்குள் உருவாக்க முடிகின்றது.

எமது அருள் குரு அருளால் கிடைத்தது. குரு அருள் பேரருளைக் கவர்ந்து அவர் உணர்வு என்னைப் பக்குவப்படுத்தியது போல் உங்களைப் பக்குவப்படுத்துகின்றேன்.

இதில் எவர் ஒருவர் தொடர்ந்து வருகின்றாரோ அவர் இவ்வாழ்க்கையைச் சீர்படுத்தி வாழவும்… அடுத்து என்றும் பிறவியில்லா நிலைகளை அடையவும் இது உதவுகின்றது.

1.குறுகிய காலமே இருக்கும் இந்த உடலுக்கு வலுவைச் சேர்ப்பதைக் காட்டிலும்
2.உயிருக்கு அருள் ஒளி என்ற வலுவை உருவாக்குதல் வேண்டும்.

இது தான் வாழ்வின் கடைசி எல்லை.

ஒளியின் உணர்வாக உருவாக்கப்பட்டது உயிர். ஆறாவது அறிவின் துணை கொண்டு “நம் அணுக்களை ஒளியின் உணர்வாக உருவாக்கக் கற்றுக் கொள்வதுதான்” பிரம்மாவைச் சிறை பிடித்தான் என்பது.

உயிர் நுகர்ந்ததை உருவாக்குகின்றது… அதே சமயத்தில்
1.அந்த உணர்வுகள் உடலுக்குள் அணுவாகும் பொழுது
2.உயிரைப் போன்றே ஆக்கப்படும் பொழுது நல்ல ஒளியின் உணர்வை உருவாக்குகின்றது.
3.இவையனைத்தையும் ஒன்றாகச் சேர்த்தால் ஒளியின் தன்மை கூடுகின்றது.

சற்றுச் சிந்தனை செய்து பாருங்கள். வாழ்க்கையில் எல்லாவற்றையும் கடந்து இது தவறு இது கெட்டது என்று உணர்வினை நுகர்ந்து நுகர்ந்து இதனைக் கலந்து கலந்து இந்த உடலினை உருவாக்கியது உயிர்.

1.அவனே நம்மை உருவாக்கினான்… ஈசனாக இருந்து உள் நின்று இயக்கிக் கொண்டு உள்ளான்,
2.கடவுள் என்ற நிலையில் நாம் எதனை நுகர்ந்தோமோ அவை நம்முள் நின்று அதனின் துணை கொண்டு அங்கே இயக்குகின்றது.
3.அவனல்லாது உணர்வுகள் இயங்குவதில்லை… அவன் தான் உருவாக்குகின்றான்.
4.ஆகவே அமைதி கொண்டிருக்கும் நேரத்தில் உணர்வின் தன்மையை ஒளியாக்க வேண்டும்.

நம் குருநாதர் என்னை அகண்ட அண்டத்திற்கே அழைத்துச் சென்றார். அவர் காட்டிய அருளின் நினைவைப் பதித்து
1.உங்கள் கண்ணின் நினைவை என்னிடத்தில் செலுத்தினாலும் நீங்களும் அண்டத்தில் மிதக்கின்றீர்கள்.
2.அதனின் உணர்வை நினைவை கொள்ளும் பொழுது அதன் அருளை நீங்களும் பெற முடியும்.

அண்டத்திலுள்ளது இந்த பிண்டத்திலும் உண்டு. அகண்ட அண்டத்தைத் தெளிவு படுத்தியவன் அகஸ்தியன்.

அவன் துருவனாகி துருவ நட்சத்திரமானான். அகண்ட அண்டத்தில் வருவதை ஒளியாக மாற்றுகின்றான். அதன் உணர்வின் தன்மை இந்தப் பிண்டத்திற்குள் (நமக்குள்) சேர்க்கப்படும் பொழுது அகண்ட அண்டத்தில் வருவதையும் ஒளியாக மாற்றிடும் திறன் பெற முடியும்.

நீங்கள் சிறிதளவே இருப்பினும் இந்த உணர்வின் தன்மை உங்களுக்குள்ளும் பரவுகின்றது. இந்தப் பூமியிலும் பரவுகின்றது. அதன் உணர்வின் நினைவு கொண்டு கவருங்கள்.

சூரியனில் இருந்து வரக்கூடிய நிறங்கள் ஆறு… ஏழாவது ஒளி. இதைத்தான் சூரிய பகவான் வருகின்றான் என்று வேக ஓட்டத்தைக் காட்டி, ரதத்தைக் காட்டியது.

அந்த ஏழு கலர் ஓட்டத்தை நமக்குள் எடுத்தால் நம்மை அந்த உலகத்திற்கு இட்டுச் செல்லும். ஆகவே
1.மனிதனான ஆறாவது அறிவின் நிலைகள் வரும் போது ஏழாவது ஒளியின் நிலைகள் அடைதல் வேண்டும்.
2.இதுதான் “ஈரேழு லோகத்தை வென்றவன் விண் சென்றான்” என்பது.
3.அவன் தனி உலகமாக ஒளியின் உணர்வாக மாற்றுகின்றான். அவன் ஏகாந்த நிலைகள் பெறுகின்றான்.

சூரியனில் இருந்து வரக்கூடிய கலர்கள் ஆறு. ஒளி ஏழு. மனிதனின் அறிவு ஆறு. மற்றதைத் தெளிந்து உணர்ந்து ஒளியாக மாற்றுவது ஏழு.

காவியங்களில் ஈரேழு லோகத்தையும் தேடிப் பார்த்தேன் என்று சொல்கின்றனர். மனிதனுக்குள் உணர்வுக்குள் இந்த ஏழு லோகத்திற்குள் தேடி நாம் காணுதல் வேண்டும். மேலே ஏழு என்ற உணர்வுகள் மனிதனுக்குள் உண்டு. ஆக நமக்குள் தேடினால் உண்டு.

அகண்ட அண்டத்தின் நிலைகள் இந்தப் பிண்டத்தில் உண்டு. ஆகவே நாம் விண்ணின் ஒளியாக மாற்றும் உணர்வு பெற்று உயிர் என்ற நிலை பெற்று உணர்வின் ஏழாவது ஒளியாக மாற்றும் திறன் பெற்று இருப்பினும் இருள் சூழும் நிலைகளிலிருந்து மீள்தல் வேண்டும்.

ஒளியாக ஒன்றாக இருக்கின்றது. பல வர்ணங்கள் ஒளியின் நிலையை மறைத்திடும் பொழுது அந்த வர்ணத்தைத்தான் காட்டுகின்றது.
1.நமக்குள் எந்த குணத்தின் தன்மை வருகின்றதோ அந்த வர்ணத்தின் செயலாகத்தான்
2.இருள் சூழ்வதும் சிந்திப்பதும் சிந்தனையற்ற நிலைகளும் வருகின்றது.
3.ஆகவே பேரருள் என்ற உணர்வினை எடுத்து நமக்குள் பேரொளியாக மாற்ற வேண்டும்.

அந்த உணர்வின் தன்மையை உங்களில் உருவாக்கத்தான் இந்த நிலை.

யாரும் குற்றவாளியல்ல. குற்றத்தைச் செய்பவரும் அல்ல. சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வே நம்மை அந்த வழிக்கு அழைத்துச் செல்கின்றது. நுகர்ந்தது நமக்குள் விளையாது அருள் ஒளி என்ற உணர்வைக் கொண்டு இருளை நீக்கப் பழக வேண்டும்.

இதற்குத்தான்
1.அதிகாலை நேரத்தில் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வலைகளை நீங்கள் நுகர்ந்து
2.இருளை மாய்த்து ஒளி என்ற உணர்வைப் பெற வேண்டும் என்று தியான நிலைகளிலேயே உபதேசத்தைக் கொடுத்து
3.உங்களை அகண்ட அண்டத்திற்கே அழைத்துச் சென்றது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு சமயம் குருநாதர் (ஈஸ்வரபட்டர்) இமயமலையில் வைத்து எனக்கு (ஞானகுரு) அனுபவங்களைக் கொடுத்தார். பனிப்பாறைகளுக்கு மத்தியில் நடந்து செல்லும் பொழுது நான் வந்த பாதையில் உள்ள பாறைகள் திடீரென்று இடிந்து விழுந்தது.

இடிந்ததும் நான் எப்படித் திரும்பப் போவது…? என்ற பயம் வந்து விட்டது. என் மனைவி குழந்தைகளின் மீது எண்ணம் வந்து விட்டது.

அப்பொழுது குருநாதர் சொல்கிறார். இன்று நீ பத்ரிநாத் கேதார்நாத் எல்லாம் போய்விட்டு வந்தாய். பல நிலைகளை அங்கே நீ தெரிந்து கொண்டாய்.

ஆனால் அந்தத் தெரிந்த உணர்வு கொண்டு வந்தாலும் இங்கே இந்தப் பாறையை கடந்து செல்லப்படும் பொழுது பனிப் பாறைகள் நொறுங்கி விழுந்துவிட்டது.

1.நொறுங்கிய பின் நீ எப்படித் திரும்பப் போவது என்று பயப்படுகின்றாய்.
2.அதனால் உனக்குள் ஒரு புயலே வந்துவிட்டது.
3.தலை சுற்ற ஆரம்பித்து விட்டது.
4.உன் மனைவியையும் உன் மக்களையும் நீ எண்ணத் தொடங்கி விட்டாய்.
5.பாசத்தால் அப்படி எண்ணும் போது இந்தக் குளிரிலிருந்து உன்னால் தப்ப முடியவில்லை.
6.(ஏனென்றால் குருநாதர் அந்தக் குளிர் பாதிக்காமல் இருப்பதற்காக நட்சத்திர உணர்வுகளை என்ன எண்ணச் சொல்லியிருந்தார். அதனால் குளிர் பாதிக்கவில்லை – பாச உணர்வால் மனைவி மக்களை எண்ணியதும் குரு சொன்னதை நான் எண்ண முடியவில்லை)
7.நீயே தப்ப முடியவில்லை என்றால் நீ போய் யாரைக் காப்பாற்றப் போகிறாய் என்று கேட்டார்…!

ஆகவே
“மனமே இனியாகிலும் மயங்காதே…
பொல்லா மானிட வாழ்க்கையில் தயங்காதே…
நேற்றிருந்தார் இன்றிருப்பது நிஜமோ
நிலையில்லா இந்த உலகம் உனக்குச் சதமாமோ…? என்ற பாடலைப் பாடினார்.

நீ இந்த உடல் ஆசையை வைக்காதே. எது நடக்க வேண்டுமோ… அது நடக்கும். ஆனால் தீமைகள் நடக்காது தடுப்பதற்கு… உனக்கு நான் கொடுத்த சக்தி… “அந்தத் துருவ நட்சத்திரத்தை பற்றிச் சொல்லி உள்ளேன்…”

ஒரு சந்தர்ப்பம் நீ விமானத்தில் செல்லப்படும் போது அந்த விமானம் கவிழும் தருணத்தில் துருவ நட்சத்திரத்தின் உணர்வை அப்பொழுது ஒரு நொடிக்குள் அங்கே நீ செலுத்தினாய்.
1.நீ விமானத்தில் உள்ளோரையும் காத்தாய்… உன்னையும் காத்துக் கொண்டாய்.
2.இது உனக்குள் இருக்கக்கூடிய எண்ண வலு…!

அதே சமயத்தில் எல்லோருமே ஒரு நாள் இந்த உடலை விட்டுச் செல்வோர் தான். அதிலிருந்து யாரும் தப்புவது இல்லை.

1.நாட்டுக்கே அரசனாக இருந்தாலும் சரி…
2.பெரிய மகான் என்று மக்கள் அனைவரும் போற்றிக் கொண்டு இருந்தாலும் சரி…
3.இந்த உடலின் விதி முடிந்து விட்டால்… ஏனென்றால் எதனுடைய அழுத்தம் அதிகமாகிறதோ அப்பொழுது உயிர் இந்த உடலை விட்டுப் பிரியத் தான் செய்யும்.

இந்த உடல் இச்சையை நீ பட்டு “என் மனைவி… என் குழந்தை…!” என்று நீ எண்ணினால் இந்த உடலை விட்டு நீ கீழே வந்து விடுகின்றாய். இப்பொழுது உன் உயிரான்மா பிரிந்தால்
1.உன் குழந்தையின் ஈர்ப்புக்குள் போவாய்… அல்லது உன் மனைவியின் ஈர்ப்புக்குள் தான் போக முடியும்.
2.அங்கே சென்ற பின் அந்த குழந்தையையும் மனைவியையும் நிம்மதியாக இருக்க விடுவாயா..?

நீ இங்கு இறந்து விடுகின்றாய் என்று வைத்துக் கொள்வோம். தன்னைக் காத்தவர் என்று ஆசையோடு இருக்கப்படும் போது இதே உணர்வுகள் அவர் உடலுக்குள் எளிதில் புகுந்து அவர்களையும் திருந்தி வாழ முடியாத நிலைகள் கொண்டு அனாதையாக ஆக்கி அவர்களையும் நோயாக்கி விடுகின்றாய்.

உன்னை நம்பிய அனைவருக்கும் இதே வேதனைகள் உருவாக்கபட்டு அவர்களையும் துரித நிலையில் மடியும் தன்மையை உருவாக்குகின்றாய். ஆகவே…
1.அந்த வேதனையைத் தான் உன்னால் அங்கே உருவாக்க முடியும்.
2.நீ அவர்களைக் காக்க முடியாது.
3.பாசத்தால் நீ எண்ணிய உணர்வுகள் கொண்டு அந்த உணர்வுடன் மடிந்தாலும் அவர்கள் உடலுக்குள் தான் செல்கின்றாய்
4.அவர்களையும் அழித்து விடுகின்றாய்…!

உடலுக்குப் பின் எந்த வேதனையையும் துயரத்தையும் நீ பட்டாயோ உன் உயிர் அதற்குத்தக்க உடலுக்குள் அழைத்துச் சென்றுவிடும்.
1.இன்று நீ மனிதனாய் இருக்கின்றாய்.
2.அடுத்து நீ எங்கே போகின்றாய் தெரியுமா..? என்று கேட்கின்றார் குருநாதர்.

உன் உடலில் எந்த வேதனைகளை அதிகமாக எடுத்தாயோ அந்த விஷம் (வேதனை என்றாலே விஷம்) என்ற நிலையைத் தனக்குள் ஜீரணித்துத் தன் உடலைப் பாதுகாத்துக் கொள்ளும் அத்தகைய உயிரினங்களுக்குள் உன்னை உன் உயிர் அழைத்துச் செல்லும்.

பாம்பாகவோ மற்ற விஷமான ஜெந்துக்களாகவோ உன்னை அதற்குத் அங்கே உருவாக்கி விடும் என்று இமயமலையில் வைத்து அனுபவபூர்வமாகக் காட்சியாகவே தருகின்றார் குருநாதர்.

ஆனால்…
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை அதிகரித்து விட்டால்
2.இந்த மனித உடல் என்ற இச்சையில் இருந்து விடுபட்டு
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உடலிலே ஒளியான அணுக்ககளாக விளைந்து
4.உயிருடன் ஒன்றிய ஒளியாக மாறுகின்றது.
5.உடலை விட்டு எந்த நேரம் உயிர் பிரிந்தாலும் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலத்திற்கு உயிர் அழைத்துச் சென்று
6.உன்னைப் பிறவியில்லா நிலை அடையச் செய்யும்… நீ அழியா ஒளியின் சரீரம் பெறலாம்…! என்று தெளிவாக எனக்கு உணர்த்தினார்.

விஷம் முக்கியத்துவம் வாய்ந்தது…!

 

அன்றாட வாழ்க்கையில் நாம் எப்படித்தான் இருந்தாலும் பிறருடைய துன்பங்களைப் பார்க்கவோ கேட்கவோ நேர்கின்றது. சுவாசத்தின் வழி அந்த உணர்வுகள் நமக்குள் வந்து விடுகிறது. அதை நீக்குவது யார்…?

1.எதிலே எடுத்துக் கொண்டாலும் “விஷம்…” எல்லாவற்றிலுமே ஊடுருவி இயக்கும்.
2.நல்ல குணங்களாக இருந்தாலும் ராமா லட்சுமணா என்று தான் ஞானிகள் காட்டியுள்ளார்கள்.
3.லட்சுமணா…! என்றால் விஷத்தின் இயக்கச் சக்தி.

மனித உடலுக்குள் விஷத்தை நீக்கி விட்டு இந்த உணர்வின் சத்தான நிலைகள் சீதா ராமனாக நல்ல குணங்கள் இங்கே படைத்திருந்தாலும் அதே குணத்தைச் சுவாசிக்கும் பொழுது காற்றிற்குள் இருக்கக்கூடிய
1.அதாவது இந்த விஷம் கலந்திருந்தால்தான்
2.நாம் சுவாசித்து அந்த உணர்ச்சிகளைத் தூண்டும் நிலையாக வருகின்றது.

வேதனை என்ற உணர்வு லட்சுமணா என்ற இயக்கமாக வருகின்றது. இதைப் போல நமக்குள் அது இருக்கின்றது.

பேரண்டம் பெரும் நிலைகள் கொண்டு உருவானாலும்
1.இந்த அசுர சக்திகளால் தான் மற்றொன்றை இயக்க முடிகிறது.
2.பூமிக்குள் இருக்கக்கூடிய விஷத்தினுடைய ஆற்றல் தான் இந்தப் பூமியையே சுழலச் செய்கின்றது.

அதே போல சூரியன் இவ்வளவு பிரகாசமாக ஆக வேண்டுமென்றால்
1.விஷத்தின் தாக்குதல் கொண்டு தான் சூரியன் வேகமாக இயங்கி
2.ஒளிப் பிளம்பாக மற்றொன்றை “ஊடுருவிச் செல்லும்…” அதாவது அந்த வேகம் துடித்து எழுகின்றது.
3.ஆகவே இந்த விஷம் முக்கியத்துவம் வாய்ந்தது…!

அதற்குத்தான் அன்று ஒரு சிறு கதையை எழுதிக் காட்டினார்கள் அசுரன் என்பவன் ஈரேழு பதினாலு லோகத்திலும் “எனக்கு யாரிடத்திலும் இறப்பு வரக்கூடாது…” என்று வரம் கேட்கின்றார்.

ஈரேழு பதினாலு லோகம் என்றால் சூரியனிலிருந்து வரக்கூடிய ஆற்றல் ஏழு… மனித உடலுக்குள் ஏற்படும் உணர்வின் நிலைகள் ஏழு.

ஈரேழு பதினாலு லோகம் சூரியனால் உற்பத்தியாகும் எந்த நிலைகளிலிருந்தும் எனக்கு எந்த இடைஞ்சலும் வரக்கூடாது. மனிதனுக்குள் வரக்கூடிய விஷத்தின் தன்மை எதுவும் என்னை அழித்துவிடக் கூடாது என்று வரத்தைக் கேட்டு வாங்கிக் கொள்கின்றான்.

விஷ்ணுவும் சரி என்று கொடுத்து விடுகின்றார்.

மிருகத்தாலும் மனிதனாலும் பரந்த வெளியிலும் பேரண்டத்தில் எது இருந்தாலும் இந்த ஈரேழு பதினாலு லோகத்தில் எங்கேயுமே எனக்கு இறப்பு வரக்கூடாது என்ற வரத்தை வாங்குகிறான்.

1.நாம் சுவாசிக்கும் சுவாசத்திற்குள்ளும் இந்த அரக்க குணம் உண்டு.
2.அந்த உணர்வின் வேகம் இல்லை என்றால் துடிப்பு இல்லை.
3.எந்த இடத்திலும் விஷத்தின் தன்மை படரவில்லை என்றால் இயக்க முடியாது.
4.அப்படிப்பட்ட ஆட்சி புரியக்கூடிய நிலைகள் தான் அது.

நரசிம்ம அவதாரம்… என்று வாசல்படியில் வைத்து அசுரனைக் கொல்வதாகக் காட்டுகின்றார்கள். சிங்க முகத்தையும் மனித உடலையும் வைத்து நரசிம்ம அவதாரம் என்று காட்டுகின்றார்கள்.

உதாரணமாக ஒருவர் கெடுதல் செய்கின்றனர்… என்னைத் திட்டுகின்றார். அதை நாம் சுவாசித்தால் என்ன செய்கிறது…?

என் உடலுக்குள் அந்த அசுர சக்திகள் சேர்ந்து… அந்த வேகத்தைக் கூட்டி… அவருடைய கெட்ட குணத்தை எனக்குள் உண்டாக்கி.. என்னை அதன் வழிக்கு இழுத்துச் செல்கிறது.

இதைத் தடுப்பதற்கு…
1.ஈஸ்வரா என்று உயிர் வழியாக மெய் உணர்வுகளைச் சேர்க்கப்படும் பொழுது அது வாசல்படி ஆகிறது.
2.முன்னாடி இருக்கும் அந்தக் கெட்ட சக்தி உள்ளே புகாதபடி தடுக்கும் ஆற்றல் வருகிறது.

இதைத்தான் நரசிம்ம அவதாரம் என்பது.

வராகன் கெட்டதை எண்ணாது நல்லதை எப்படி எடுத்துக் கொண்டதோ அதைப் போல் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கொண்டு கெட்டதை நீக்கிவிட்டு நல்லதை உருவாக்க வேண்டும்.

கெட்டது தனக்குள் வராதபடி எவர் ஒருவர் இப்படித் தடுக்கின்றார்களோ அது நரசிம்ம அவதாரம். கேட்டது அழிக்கப்பட வேண்டும் என்று வாசல்படியில் வைத்து அழித்து விடுகின்றார்கள்.

பிறர் யார் எப்படித் திட்டினாலும் கேவலமாகப் பேசினாலும் அந்த உணர்வு அப்படியே இயக்கினால் “இனி என்ன வாழ்க்கை…!” என்று நம்மை அது அழித்து விடுகிறது. அந்த அசுரனிடம் சிக்கிவிடுகின்றோம்.

அதே சமயத்தில் திட்டுகிறார் என்று கோபம் நமக்கு வந்தால் “இரு நான் உன்னைப் பார்க்கிறேன்…!” என்று அவரை அங்கே அழிக்கச் செல்வோம். ஆனால் அழிக்க வேண்டும் என்ற உணர்வை எடுத்தால் நல்ல குணங்களை அழித்து உடலில் நோயாக மாற்றுகின்றது.

ஆகவே…
1.அந்த அசுர சக்தி இப்படித் தான் எல்லா வகைகளிலும் ஊடுருவும் என்று
2.அவன் எங்கேயும் எனக்கு சாவு வரக்கூடாது என்ற வரத்தை வாங்கி அந்த அசுர சக்தி மற்றதைக் கொல்வதாகச் சாஸ்திரம் காட்டுகின்றது.

ஆனால்
1.நம் கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து
2.அந்தத் துருவ நட்சத்திரத்தினை எண்ணி அந்தச் சுவாசத்தை எடுக்கப்படும் பொழுது அசுர சக்திகள் செயலிழக்கப்படுகின்றது.

நமக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களைக் காப்பதற்குத் தான் நரசிம்ம அவதாரத்தை அன்று காட்டினார்கள் ஞானிகள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

சூரியன் தன் பாதரசத்தால் தான் கவர்ந்தாலும் மற்ற உணர்வலைகள் வரப்படும்போது மோதி இது நெருப்பாகி கவர்ந்தவற்றில் உள்ள விஷத்தைப் பிரித்து விடுகின்றது. அதனுடைய சந்தர்ப்பத்தால் அது செயல்படுத்துகின்றது

அதே போல் நம்முடைய சந்தர்ப்பம் தீமை என்ற உணர்வுகளை கண்ணால் கவர்ந்து அந்த உணர்வின் தன்மை நாம் நுகர்ந்துதான் இந்த மனித வாழ்க்கையை நடத்துகின்றோம். அப்படி வரக்கூடிய தீமையான உணர்வுகளை நாம் தடுத்துப் பழக வேண்டும்.

1.அந்தத் துருவ நட்சதிரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் எண்ணி
2.எங்கள் உடல் முழுவதும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர வேண்டும் என்ற உணர்வை
3.உள்முகமாக உடல் முழுவதற்கும் கண்ணின் நினைவு கொண்டு செலுத்த வேண்டும்,

அப்படி எடுத்துக் கொண்டால் நம்மைப் பயமுறுத்தும்… அச்சுறுத்தும்… கோப்படுத்தும்… வேதனைபடுத்தும்… இதைப் போன்ற உணர்வுகளை எல்லாம் நமக்குள் புகாது தடுத்துக் கொள்ளலாம்…! என்று அனுபவபூர்வமாக மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குக் (ஞானகுரு) காட்டுகின்றார்.

எங்கே வைத்து..?

டெல்லியிலிருந்து விமானத்தில் வந்து கொண்டிருக்கும் பொழுது திடீரென்று எதிர்மறையான காற்று மண்டலத்திற்குள் செல்லும் போது விமானம் கவிழும் சந்தர்ப்பத்தில் இந்த உபதேசத்தைக் கொடுக்கின்றார்.

“கவிழப் போகிறது…!” என்ற நிலை ஆன பின் விமானத்தில் உள்ள பிரயாணிகள் எல்லோரும் பயந்தார்கள். ஆனால் நீ ஏன் பயப்படவில்லை..?
1.நீ இந்த உடலின் இச்சைப்படவில்லை
2.நீ உயிரின் இச்சைப்பட்டாய்…!
3.ஏனென்றால் உயிர் ஒளியானது… அறியும் தன்மை ஆனது…!
4.அதே அறியும் தன்மையை நீ அச்சம் இல்லாமல் எடுப்பதனால் உனது காக்கும் சக்தியும் அதிலே சேரலாம்…! என்று சொன்னார்.

அத்தனை பேர் பயந்தாலும் “நீ ஒருவன் இந்த உயர்ந்த உணர்வுடன் வலிமையாக இருந்ததால்… விமானம் கவிழாது காக்கப்பட்டது..!” என்று காட்டுகின்றார்.

ஆக இப்படிக் காக்கப்பட்ட விமானங்கள் எத்தனையோ…! என்று அங்கு காட்டுகின்றார்.

ஏனென்றால் இயற்கையின் நியதிகள் எப்படி இயங்குகின்றது…? என்பதை குருநாதர் இப்படி எமக்குப் பல வழிகளிலும் காட்டினார்.
1.எல்லாவற்றிலும் தப்பும் உணர்வுகள் மனிதனுக்கு உண்டு.
2.எல்லாவற்றிலும் தப்பிய மனிதன்தான் அகத்தியன்.

அவன் துருவத்தின் ஆற்றலைத் தனக்குள் பெற்றான்… துருவ நட்சத்திரமானான். அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரக்கூடிய உணர்வை நமக்குள் அதிகமாக்கினால்… நம் ஆன்மாவில் பெருக்கிக் கொண்டால்… “தீமையான உணர்வுகள் எது வந்தாலும் அதை விலக்கித் தள்ளிவிடும்…!”

துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஆழமாகப் பதிவாக்கிக் கொண்டால் உங்கள் எண்ணத்தால் உங்களைக் காத்துக் கொள்ள முடியும். அதற்குத்தான் இதைச் சொல்கிறோம்.

பிரம்மா – உருப்பெறச் செய்யும் சக்தி

 

சூரியனிலிருந்து தோன்றிய அதீத வெப்பத்தை உண்டாக்கும் ஒரு அணுவும் நட்சத்திரத்திலிருந்து வரக்கூடிய கதிரியக்கமும் இரண்டும் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது
1.இயற்கையின் நிலைகள் ஒன்றாக இணைந்து உயிரின் துடிப்பாகும் பொழுது ஈஸ்வரா.
2.அந்த இயக்கத்திற்குள் இருக்கக்கூடிய வெப்பம் விஷ்ணு.
3.நாராயணன் விண்ணிலே சர்வேஸ்வரனாக உருப்பெறும் பொழுது ஒற்றைப்படையில் இங்கே ஈஸ்வரா என்று உருவாகின்றார்.

அதாவது நாராயணன் மறு அவதாரமாக விஷ்ணுவாகத் தோன்றுகின்றது.

பிரபஞ்சத்திற்குள் தோன்றிய இந்த உயிரணு தான் பூமிக்குள் வந்தபின் தாவர இனச் சத்தை இது சுவாசிக்கின்றது.

உயிரான ஒளி இதுவும் சக்தி தான்… ஆனால் உற்பத்தி செய்யக்கூடிய சக்தி…! தாவர இனச் சத்தை இழுத்த உடனே அது உறைந்து சிவமாகிறது… “சிவசக்தி” ஆகிறது.

இந்த உயிர் தாவர இனச்சத்தைச் சேர்த்து புழுவாகும் பொழுது அந்தப் புழுவிற்குள் அந்த உணர்வின் சக்தியாக வினையாகச் சேருகிறது. வினையாகச் சேர்த்த நிலையில் தான் எடுத்துக் கொண்ட வினைக்கு நாயகனாகப் புழுவாகத் தோன்றுகின்றது… “விநாயகா…”

தாவர இனத்தைத் தனக்குள் சேர்க்கும் பொழுது சக்தி சிவம் ஆகின்றது… சிவத்திற்குள் சக்தி இயங்குகின்றது.

உதாரணமாக வேப்ப மரத்தின் சத்து இதற்குள் இணைந்து புழுவாகும் பொழுது சேர்த்துக் கொண்ட வினைக்கு நாயகனாக இந்த உடல் பெறுகிறது.

வினைக்கு நாயகனாக உடல் பெற்றாலும் வேப்ப மரத்தின் தன்மை கசப்பு. இந்த உயிரின் தன்மை தான் ஈர்த்து எடுத்துக் கொண்ட இந்தச் சக்தியோ லட்சுமி.

காந்தம்… “லட்சுமி நாராயணா” என்று அங்கே சூரியனை வளர்த்தது. உயிருக்குள் இருக்கக்கூடிய இந்த இயக்கம் ஈஸ்வரன். இயக்கத்துக்குள் ஏற்படும் வெப்பம் விஷ்ணு. ஈர்ப்பு சக்தி லட்சுமி.

ஒரு பொருளின் தன்மை இதனுடன் இணைந்து உருப்பெறப்படும் பொழுது “பராசக்தி…” எந்த மணத்தை அதனுடன் இணைக்கின்றதோ அந்த மணத்தை வெளிப்படுத்தும் போது ஞானம் “சரஸ்வதி…”

இணையக்கூடிய சந்தர்ப்பம் “பிரம்மா…” ஆனால் அந்த மணம் பிரணவம் ஜீவன்…! அந்தக் குணத்திற்குத் தக்கவாறு இயக்கம். இந்த உணர்வின் தன்மை ஊட்டுவதற்கு அந்த உயிர் தனக்குள் சேர்த்து உருப் பெறும் சக்தியாக மாறுகின்றது.

உயிரில் இருக்கக்கூடிய காந்தம் தாவர இனச் சத்தை இழுக்கின்றது. லட்சுமி. இந்த வெப்பத்திற்குள் ஆனபின் உடலாக உருப் பெறச் செய்கின்றது பராசக்தி.

ஆனால் வேப்ப மரத்தின் கசப்பான சத்து வரப்படும் பொழுது மணம் ஞானம். இது பிரணவம். அந்த மணத்தின் நிலை கொண்டு இது ஜீவன் பெறுகின்றது.

1.தனக்குள் எடுத்துக் கொண்ட இந்த உணர்வின் நிலைகள் பிரணவம் என்கிற பொழுது ஓ…
2.அந்த வாசனையை எடுத்து ம்… என்று தனக்குள் சேர்க்கப்படும் பொழுது “சிவம்… ஓம் நமச்சிவாய…!”

அந்த உயிர் தனக்குள் அதனுடைய சக்தியாச் சேர்க்கின்றது. ஆனாலும் இதில் இருக்கக்கூடிய இந்த காந்தம் வேப்ப மரத்தின் சத்தை இழுத்து தனக்குள் இணைந்து வளர செய்யக்கூடிய சக்திக்குப் பெயர் “சீதா ராமா…”

சீதா என்பது சுவை. லட்சுமிதான் தனக்குள் எடுத்துக் கொண்ட அந்த சுவையின் சத்தைத் தனக்குள் சேர்த்த வினையாக அந்த உடலுக்குள் விளைந்து உயிருடன் சேர்க்கப்படும் பொழுது சீதா ராமன் ஆகின்றது.

நாராயணன் மறு அவதாரம் விஷ்ணுவாகத் தோன்றி நான் ராமனாகப் பிறக்கப் போகின்றேன் என்ற நிலை வரப்படும் பொழுது இந்த ராமன் யார்…? சீதா ராமா.

தான் கவர்ந்து கொண்ட இந்தச் சக்தி… தன் உடலாகி உடலுக்குள் விளைந்து அந்த உணர்வின் சத்து உயிருடன் சேர்க்கப்படும் பொழுது சீதா ராமா. அந்தச் சுவையால் எடுத்துக் கொண்டு விளைந்த அந்த வித்து.

அத்வைதம் துவைதம் காயத்ரி என்று சொல்வார்கள். காயத்ரி என்றால் என்ன…?

இந்த பூமியான பரத்திற்குள் சகல சக்திகளும் இருக்கின்றது. ஒரு வேப்ப மரத்திலிருந்து வரக்கூடிய கசப்பான மணத்தைச் சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்ப காந்த அலைகள் தனக்குள் கவர்ந்து கொள்கின்றது.

கவர்ந்து கொண்ட இந்த சக்தியை இதே வேப்ப மரத்திலிருந்து எடுத்துக் கொண்ட அந்தப் புழு இதைச் சுவாசித்து இந்த உணர்வின் தன்மை மோதி.. தான் அறியும் சக்தியாகப் பெறுகின்றது. புழுவிற்கு அது ஞானம்.

1.வேப்ப மரத்தின் கசப்பு சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டுப் பூமியின் பரத்திலே பரவச் செய்கிறது… இது “பரமாத்மா…”
2.அதை இந்தப் புழு இழுத்துத் தன் உடலுக்கு அருகில் வரும் பொழுது அதனின் “ஆத்மா…”
3.பரமாத்மாவிலிருந்து சுவாசித்து அதனின் ஆன்மாவாக்கி உடலுக்குள் சென்ற உடனே “ஜீவாத்மா…”
4.உடலுடன் சேர்த்து விளைந்தது உயிருடன் இணையும் போது “உயிரான்மா…!”
5.பிரம்மாவிற்கு நான்கு தலையைப் போட்டிருப்பார்கள்… நான்காக உருப்பெறச் செய்வது.
6.எடுத்துக் கொண்ட சக்தி அது முழுமையாகின்றது – காயத்ரி.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மிளகாய் காரமாக இருக்கின்றது. ஆனால் குழம்பு வைக்கிறோம் என்றால் அந்தக் காரத்தைச் சேர்த்தவுடன் ருசியாக இருக்கிறது. உப்பு கைப்பாக இருக்கிறது. அதைக் குழம்பில் அளவோடு சேர்க்கப்படும் போது ருசியாக இருக்கிறது.

விஷமோ மனிதனைக் கொன்று விடுகிறது, ஆனால் எந்த வைத்தியமாக இருந்தாலும் சரி
1.நல்ல மருந்துடன் அந்த அளவு கோல்படி விஷத்தைச் சேர்த்த பின்
2.அது அந்த மருந்துக்கே வீரிய சக்தியாகின்றது.

ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் பட்டால் அதைக் குடித்தால் மனிதனைக் கொல்கின்றது. ஆனால் அதிலே ஆயிரம் குடம் நல்ல பாலை விட்டால் விஷம் தணிந்து அந்தப் பாலுக்கே அது வீரிய சக்தி கொடுக்கின்றது.

இதே போல் தான் நல்ல மருந்துக்குள் விஷத்தைக் கலந்தால் வேகமாக ஊடுருவிச் செல்லும். அந்த விஷத்தின் தன்மை சேர்த்தபின் அந்த மருந்தும் வலுவாகிறது.

மருந்தை நாம் உட்கொண்டால் நம் உடலில் விஷத்தன்மை கொண்ட அணுக்களுக்கு இது எதிர்மறையாகி மறைவிடமாகும்போது அதற்கு உணவு போகாதபடி தடுக்கின்றது.

கெட்ட அணுக்களுக்குச் சிறிது காலம் உணவு கிடைக்கவில்லை என்றால் அது ஆகாரம் இல்லாமல் மடிகின்றது. இதைப் போன்ற நிலையில் மனிதன் தனக்குள் உண்மையின் உணர்வை அறிந்து செயல்டும் ஆற்றல் பெற்றவன்.

சந்தர்ப்பத்தால் நமக்குள் சேரும் விஷத்தின் தன்மைகளை மாற்ற அருள் ஞானியின் உணர்வை உடலுக்குள் சேர்க்கப்படும் போது அது விஷத்தை அடக்கி தன் உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றுகின்றது.

நாகப்பாம்பு போன்ற பாம்பினங்கள் தன் உடலிலே இருக்கக்கூடிய விஷத்தை மற்ற உயிரினங்களின் மீது பாய்ச்சுகின்றது. அதையே உணவாக எடுக்கின்றது. இருந்தாலும் தன் உடலில் விஷத்தின் தன்மையைச் சேமிப்பாக்குகின்றது.

ஏனென்றால் ஒவ்வொரு உடலிலும் விஷத் தன்மை உண்டு.
1.பாம்பு அதனைத் தனக்குள் ஜீரணித்து
2.அந்த உணர்வின் தன்மை ஒன்றுடன் ஒன்று மோதும் போது “நாகரத்தினமாக…!” மாறுகின்றது.

அத்தகைய பாம்பினங்கள் சுமார் நூறு வருடம் வாழ்ந்தால் அதன் உணர்வின் தன்மை ஒளியாக மாற்றும் திறன் பெறுகிறது. ஒளித் தன்மை அடைகின்றது. ஆனாலும் அதற்கு வளர்ச்சி இல்லை.

ஆனால் மனிதனாகத் தோன்றிய நிலையில் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக ஆனவன்.
1.உயிருடன் ஒன்றி உணர்வின் தன்மைகள் மோதலாகும்போது
2.ஜீவணுக்களாக மாற்றி ஒளியின் சரீரமாக மாற்றுகின்றது துருவ நட்சத்திரம்
3.நம் பிரபஞ்சத்தில் வரும் விஷத்தைத் துருவப் பகுதி வழியாக நம் பூமி நுகரப்படும் போது
4.அதனைக் கவர்ந்து ஒளியாக மாற்றுகின்றார் துருவ மகரிஷி துருவ நட்சதிரத்திரமாக…!

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

பலராம்… பலருடைய எண்ணங்கள் இருந்தாலும் கோபப்படுவதோ வேதனைப்படுவதோ சலிப்பு அடைவதோ இது எல்லாம் வாலி. அதை எல்லாம் எடுத்துக் கொண்டால் இருள் சூழ்ந்துவிடுகின்றது.

1.இருளாக இருக்கும் நிலையில் அங்கே என்ன சாமான் இருக்கின்றது…? அறியாதபடி தத்தளிக்கின்றோம்
2.ஆனால் வெளிச்சத்தைக் கண்டபின் இன்ன பொருள் அங்கே இருக்கின்றது என்று அறிகின்றோம்
3.ஆக நமக்குள் மகிழ்ச்சி பெறச் செய்வதும் ஒரு பொருளை அறியச் செய்வதும் ஒளி (வெளிச்சம்).

அந்தத் துருவ மகரிஷிகளின் உணர்வுகளை நாம் எடுத்து “ஈஸ்வரா…” என்று அவனிடம் வேண்டி… அது எங்கள் உடல் முழுதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா பெறவேண்டும் என்று இந்த உணர்வை உடலுக்குள் செலுத்தும் போது இதன் உணர்வின் வலிமை பெறுகிறது. ஒளியாக மாற்றுகின்றது.

அப்பொழுது மற்றவர்கள் தவறு செய்கிறார்கள் என்ற உணர்வை உணர்ந்தாலும் நமக்குள் அந்த நினைவு வருவதில்லை.

இதைத்தான் கடவுளின் அவதாரத்தில் ஒன்பதாவது “நரசிம்ம அவதாரம்…” என்று காட்டப்படுகின்றது.
1.இந்த மனிதனின் வாழ்க்கையில் தீமைகளைத் தனக்குள் புகாது எவர் தடுக்கின்றனரோ
2.அவரே உயிருடன் ஒன்றி கல்கியின் தன்மை பிறவியில்லா நிலை அடைகின்றனர்.

ஞான வித்தை உங்களுக்குள் ஊன்றுகின்றேன்… அதை நீங்கள் வளர்க்க வேண்டும்

 

சாப்பாடு போடுகிறார்கள்… நன்றாகத் தான் இருக்கிறது என்று மட்டும் சொல்லி விட்டால் போதுமா…?
1.அந்தச் சுவையான உணவை உட்கொண்டால் தானே நல்லது.
2.ஆகவே போடக்கூடிய உணவை நல்ல முறையில் சாப்பிட வேண்டும்.
3.அப்பொழுது அந்த ருசியின் தன்மை தெரியும்.

இன்னொருவர் சாப்பிட்டுவிட்டு “நன்றாகத் தான் இருக்கின்றது…!” என்று சொல்கிறார். எப்படி இருந்தது…? நன்றாக இருந்தது…!

நன்றாக இருந்தது என்றே சொல்லிக் கொண்டிருந்தால் எப்படி நன்றாக இருக்கிறது…? என்று சொல்லத் தெரியாமல் இருக்கின்றோம்.

ஏனென்றால் யாம் அடிக்கடி உபதேசித்த உணர்வுகளில் உள்ள உட்பொருளை உணர்ந்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக உடலிலே ஒரு புண் வந்துவிட்டது என்று வைத்துக் கொள்வோம். வேதனையாக இருந்தாலும் மருந்தைப் போடுகின்றோம். முதலில் மருந்தைப் போட்டாலும் சிறிது வேதனையாகத் தான் இருக்கும்.

புண் ஆற வேண்டும் என்று ஆசையுடன் அந்த மருந்தைப் போடுகின்றோம்.
1.ஆனால் மருந்தைப் போட்ட பின் கடுகடுப்பாகிவிட்டால் என்ன இப்படி வேதனை வருகின்றது…? என்று
2.மருந்தைத் தூக்கி எறிந்து விட்டால் புண் ஆறுமோ…?

அது போல் தான் இந்த மனிதனின் வாழ்க்கையில் எத்தனையோ விதமான வேதனைகள் தோற்றுவிக்கின்றது. அது எத்தனை தோன்றினாலும் அதை மாற்றி அமைத்த அருள் ஞானிகள் உணர்வுகளை அடிக்கடி எடுத்து நுகர்தல் வேண்டும். அப்பொழுது அந்த வேதனையைப் போக்கும் சக்தி கிடைக்கின்றது.

நான் “என்ன தான் இப்பொழுது உங்களுக்குச் சக்தியை கொடுத்தாலும்…”
1.அதை நீங்கள் “எடுத்துக் கொள்ளக்கூடிய முறைகளில் தான் இருக்கிறதே தவிர…”
2.நான் கொடுத்தவுடனே நீங்கள் அதைப் பெறுவது என்பது அல்ல.
3.ஆனால் எவ்வளவு பெரிய சக்தியை உங்களுக்குக் கொடுக்கின்றேன் என்பது உங்களுக்குத் தெரியாது. அவ்வளவு பெரிய சக்தியைக் கொடுக்கின்றேன்.

ஆனால் அந்தச் சக்தியைப் பற்றி… அதன் வலிமையைப் பற்றி நான் சொல்ல ஆரம்பித்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்…? ஜீபூம்பா வேலை எல்லாம் செய்ய ஆரம்பித்து விடுவீர்கள்.

ஏனென்றால் ஆரம்பத்தில் நான் கொடுத்த நிலைகள் இப்படித்தான் ஆகிவிட்டது.
1.எனக்கே சக்தி இருக்கின்றது… சாமியினுடைய தயவு என்ன வேண்டி இருக்கின்றது…? என்று
2.பெரும்பகுதியானவர்கள் பிய்த்துக் கொண்டு சென்று விட்டார்கள்.

எல்லோருக்கும் இதைத் தெரிய வைக்க வேண்டும் என்பதற்காக இந்த அற்புதங்களை எல்லாம் அவர்களைச் செய்யும்படி செயல்படுத்தினேன்… அது உலகுக்கு எவ்வளவோ நன்மை பயக்கும்…! என்று நினைத்தேன்.

கடைசியில் எல்லோரும் ஆசையை வளர்க்கும் நிலையாகவே சென்று விட்டது. ஆக மொத்தம்…
1.ஒருவருக்குப் புரியக்கூடிய சக்தியைக் கொடுத்தாலும்
2.அதை அடுத்தவர்கள் புரிந்துவிடக் கூடாது என்று மடக்கிக் கொண்டு வந்து விட்டார்கள்.

ஆரம்பத்தில் பவானியில் இப்படித்தான் ஒரு அம்மாவிற்குக் காட்சிகளை எல்லாம் காண்பித்தேன். பெற வேண்டும் என்ற ஆசை அந்த அம்மாவிடம் இருந்தது.

அந்த அம்மா மூலமாகவே மற்றொருவருக்கு நோய்களைப் போக்கும்படிச் செயல்படுத்தியது. அங்கு ஆசையை ஏற்படுத்தியது. ஆசை ஏற்பட்ட பின் அதன் வழி தியானத்திற்கு வருகின்றது.

தோஷங்களை எப்படி நீக்குவது…? என்று தான் ஆரம்பத்தில் சொல்லிக் கொடுத்தது. அடுத்து என்னைக் கேட்காமலே பல வேலைகளைச் செய்யத் தொடங்குகிறது.
ஆனால் கடைசியில் தன்னிச்சையாக அதைச் செயல்படுத்திய பின் அணிந்திருக்கும் சேலை எல்லாம் ஓட்டை ஓட்டையாக விழுந்து விட்டது… உடலில் காயமாகவில்லை.

அதற்குப் பின் அந்த அம்மாவிடம் சொன்னேன். ஆரம்பத்தில் உனக்கு எல்லாம் தெரிய வைத்தேன். அதை வைத்துத் தோஷங்களை நீக்க வேண்டும் என்று எண்ணுகின்றாய்.
1.ஆனால் அது எப்படி உன் வழியில் திரும்ப வருகின்றது பார்…
2.அதிலிருந்தெல்லாம் காக்கக்கூடிய குருவினுடைய சக்தி உனக்கு வேண்டும் அல்லவா என்று தெளிவாக்கினேன்.

உதாரணமாக… ஒருவருடைய நோயைப் பற்றிக் கேட்டு விசாரிக்கின்றோம். நமக்குள் பதிவாகி விட்டால் நம்மையும் அந்த நோயின் உணர்வு இயக்குகின்றது.

அதே போன்று
1.யாம் உபதேசிக்கும் அருள் உணர்வுகளைக் கூர்மையாக நீங்கள் கேட்டுப் பதிவாக்கிய பின் அதைப் பெறும் தகுதி உங்களுக்கு தகுதி வருகிறது.
2.அந்த தகுதி உங்களுக்கு வரவேண்டும் என்பதற்குத் தான் உபதேசிப்பது.

எல்லோருக்கும் அந்த மகிழ்ச்சி கிடைக்க வேண்டும் என்று எண்ணும் பொழுது அது எனக்குள் மகிழ்ச்சி வளர்கின்றது. அதே போன்று நீங்களும் செய்தீர்கள் என்றால் அந்த மகிழ்ச்சி உங்களுக்கும் தோன்றும்.

கடும் தவமிருந்த அந்த மகா ஞானிகளுடைய ஆற்றல்மிக்க சக்திகளைப் பெற வேண்டும்… பேரின்பத்தைப் பெற வேண்டும்…! என்பதற்குத்தான் இதைச் செய்கின்றேன். அதை நீங்கள் எளிதில் பெற முடியும்.

1.ஒன்று பதிவு
2.மீண்டும் நினைவு…!
3.அந்த நினைவு கொண்டு நீங்கள் அதை வளர்க்க முடியும்.
4.ஞான வித்தை உங்களுக்குள் ஊன்றுகின்றேன்… அதை நீங்கள் வளர்க்க வேண்டும்.

ஆக வாழ்க்கையில் எது வந்தாலும் அதை நான் சீர்படுத்துவேன் என்று வலுப் பெறுங்கள்… அதைச் செம்மைப்படுத்த முடியும். ஆசை ஒரு பக்கம் எண்ணம் ஒரு பக்கமாக சென்று கொண்டிருந்தால் முழுமை பெறுவது கஷ்டம்.

ஆகவே கொடுத்த ஞான வித்தை வளர்க்கும் நிலைக்கு… அந்த வளர்ச்சிக்கு நீங்கள் கொண்டு வர வேண்டும். இருளைப் போக்கும் அருள் சக்தியைப் பெருக்க வேண்டும்.
1.அந்த அருள் வழியிலேயே வாழ வேண்டும் என்று
2.நாம் என்றைக்குச் செயல்படுத்துகின்றோமோ… அதை நிச்சயம் பெற முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இரண்டு நட்சத்திரங்களிலிருந்து வெளி வரும் சக்திகள் (துகள்கள்) சந்தர்ப்பத்தால் ஒன்றுடன் ஒன்று மோதினால் “மின்னலாக” மாறுகின்றது.

அந்த மின்னல் புவியின் ஈர்ப்புக்குள் வரும் பொழுது ஒரு மரத்தில் விழுகின்றது என்று வைத்துக் கொள்வோம். எந்த நட்சத்திரமோ அதனைச் சேர்ந்த இனமாக அந்த மரம் இருந்தால் விழுந்தால் இந்த மரத்தை அப்படியே பொசுக்கிவிடும். ஆனால் பக்கத்தில் இருக்கும் மரத்தை (வேறு இனம்) ஒன்றும் செய்யாது.

ஏனென்றால் தன் இனத்தை எடுத்துப் பூமிக்குள் ஊடுருவுகின்றது. அது பூமிக்குள் சென்ற பின் வெப்பங்கள் அதிகமாகி அது கொதிகலனாகிறது.

நாளடைவில் சேமித்துச் சேமித்து உஷ்ணம் அதிகமான பின் நிலநடுக்கமாகி ஆவித் தன்மை (GAS) உண்டாகி அந்த வாயுக்கள் அனைத்தும் அப்படியே வெடிக்கின்றது.

வெடித்த பகுதி அப்படியே கீழே இறங்குகிறது. அந்தப் பகுதியில் மட்டும் தான் நிலநடுக்கம் வருகின்றது. உள்ளே சென்ற பின் அடங்கி விடுகின்றது.

ஆனால் நட்சத்திரத்தின் மின்னணுக்களின் நிலைகள் அதாவது மின்னல் கடலில் படும் பொழுது என்ன ஆகின்றது…?
1.அது உப்பு நீர்…!
2.மின்னல் பூமிக்குள் ஊடுருவாதபடி கடலில் பட்டபின் மணலாக மாறுகின்றது
3.நட்சத்திரங்களின் உணர்வின் சக்தி பட்ட பின் அது யுரேனியமாக மாறுகின்றது.

எந்தெந்தப் பகுதி எந்தெந்த நட்சத்திரங்களின் சக்திகள் படர்கின்றதோ அதனின் வலுவிற்குத் தகுந்த மாதிரி யுரேனியங்கள் எத்தனையோ விதமான நிலைகள் உருவாகின்றது. விஞ்ஞானத்தில் அதற்குப் பல பெயர்களை வைத்து அழைக்கின்றார்கள்.

அப்படி மாறியதை விஞ்ஞானி பிரித்து எடுத்து என்ன செய்கின்றான்…? அணுவைப் பிளக்கின்றான். அந்தக் கதிரியக்கப் பொறிகளை அடக்குகின்றான்.
1.கடல் நீரில் உள்ள ஹைட்ரஜனின் துணை கொண்டு
2.அதனின் அழுத்தத்தைக் கொண்டு வெடிக்காதபடி பாதுகாக்கின்றான்.

ஹைட்ரஜன் என்று இருந்தாலும் அதனின் அடர்த்தியின் தன்மைகள் ஒளிக் கதிர்களைச் சேர்த்து மீண்டும் அந்த ஹைட்ரஜனை வெடிக்கச் செய்வார்கள்.

ஏனென்றால் சனிக்கோளிலிருந்து வரக்கூடிய நிலைகள் ஒவ்வொரு அணுக்களிலும் (எல்லாவற்றிலும்) கலந்திருக்கும். அதே சனிக் கோளிலிருந்து தான் வடிக்கப்பட்டுக் கடலாக (நீராக) மாறுகின்றது.

இந்த உணர்வின் தன்மை கொண்டு ஹைட்ரஜன் வரப்படும் பொழுது இதனின் நிலைகள் வான்வீதியில் வெடித்த பின் தன் இனத்தின் தன்மை ஜீவ சக்தியை இழக்கச் செய்கிறது.

இங்கே வரும் மற்ற தாவர இனச் சக்திகளுக்குச் செல்வதும் அதற்குள் இருக்கும் கதிரியக்கப் பொறிகளும் வெகு தொலைவில் பரவப்பட்டு அந்த ஜீவ சக்தியையே எடுக்கச் செய்வது அந்த ஹைட்ரஜனின் வேலைகள். விஞ்ஞான அறிவால் இதை எல்லாம் கண்டு கொண்டுள்ளார்கள்.
1.நான் (ஞானகுரு) மூன்றாம் வகுப்பு முழுமையாகப் படிக்காதவன் இதைச் சொல்கிறேன்.
2.இதை நீங்களும் பார்க்க முடியும்… தன்னம்பிக்கை வேண்டும்.

இந்த இயற்கையின் உணர்வுகளை ஒரு கம்ப்யூட்டர் மூலமாக மனிதன் (விஞ்ஞானி) தனக்குள் கண்டுணர்ந்து பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் உள்ள அதிர்வின் ஒலிகளைக் கண்டு அதனின் இயக்கப் பொறிகளைப் படமாக வரைகின்றான் – அந்த உருவத்தையே…!

1.ஏனென்றால் எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்ற உணர்வுகள் பாயப்படும் பொழுது
2.உணர்வுகள் எப்படி இயங்குகிறது..? என்ற நிலையைத் தெளிவாகக் காணுகின்றான் விஞ்ஞானி.

அதைப் போல் தான் அன்று மெய் ஞானியான அகஸ்தியன் உணர்வின் இயக்கத்தின் தன்மையை அணுவின் ஆற்றலைப் பிளந்து அதனின் தூண்டுதலைப் பார்த்தான்.

எண்ணத்தின் தன்மை கொண்டு அது எப்படி உருவாகிறது…? என்ற நிலையை அவனால் கண்டுணர்ந்தது தான் வான இயல் புவியியல் உயிரியல் எல்லாமே…!

1.அவனுக்குப் பின் வான்மீகி கண்டான்.. பின் வியாசகன் கண்டான்.
2.அகஸ்தியனால் உருவாக்கப்பட்ட நிலைகளை அந்த உண்மையின் உண்ர்வை எடுத்து அவர்கள் வளர்த்துக் கொண்டனர்.
3.இருபத்தியேழு நட்சத்திரங்களின் சக்தியை எடுத்துத் துருவ நட்சத்திரமாக ஆன அந்த உணர்வுகளைத் தான்
4.இப்பொழுது உங்களுக்குள் சிறுகச் சிறுக ஊட்டிக் கொண்டு வருகின்றோம்.

அதை நீங்கள் வளர்த்துக் கொண்டால் அகஸ்தியனைப் போன்ற மெய் ஞானியாக உருவாக முடியும். உங்களை நீங்கள் நம்புங்கள்…!

இராமனின் பக்தன் ஆஞ்சநேயன்

 

ஒருவர் வேதனைப்படுகிறார் என்றால் அந்த வேதனையான உணர்வு தனக்குள் புகாது தடுத்தல் வேண்டும். தடுப்பதற்கு என்ன செய்வது…?

1.தீமைகளை நீக்கியது துருவ நட்சத்திரம்.
2.அதை நுகர்ந்தால் உயிரிலே பட்டு இயக்கச் சக்தியாக மாறுகின்றது.
3.ஈஸ்வரா…! என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைக்கப்படும் பொழுது
4.அந்த உணர்ச்சிகள் இயக்கப்பட்டுத் தீமையிலிருந்து நம்மை விடுபடச் செய்கின்றது… தீமை வராதபடி தடுக்கும் சக்தி பெறுகின்றது.

மற்றவர்கள் துயரப்படுவதை நாம் பாசத்தால் பார்க்கப்படும் பொழுது கண்ணின் கரு விழி அவர்களைக் கவர்ந்து படமாக்குகின்றது. பதிவான பின் கண்ணோடு சேர்ந்த காந்தப்புலன் அந்த உடலிலிருந்து வரக்கூடிய உணர்வினை உயிரிலே மோதச் செய்கிறது. அப்போது நாம் வேதனையை அறிகின்றோம்.

அதனால் தான் கண்களை… அதாவது “கண்ணனைத் திருடன்…” என்று சொல்வது. எதை எடுத்தாலும் அவன் திருடிக் கொள்வான்.

ஒருவர் நோயால் அவதிப்படுகிறார் என்று வரும் பொழுது கண்ணிலே பதிவாக்கிய பின் அந்த உணர்வின் தன்மை தனக்குள் வடிக்கப்பட்டு உயிருடன் மோதப்படும் பொழுது அந்த வலிமை நம் உடலுக்குள் சென்று விடுகின்றது.

அவர் வேதனைப்படுகிறார் என்று தெரிந்து கொள்கின்றோம். ஆறாவது அறிவு கார்த்திகேயா…! தனக்குள் அது தீமையை விளைவிக்கும் என்று தெரிந்து கொண்டபின்
1.தீமையை நீக்கும் சக்தியை… துருவ நட்சத்திரத்தின் சக்தியை நம் ஆறாவது அறிவால் எடுத்து அதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
2.அப்போது உள்ளே செல்லாதபடி அதைத் தடைப்படுத்துகின்றது.

கண்ணின் நினைவுகளை உயிருடன் ஒன்றச் செய்யப்படும் பொழுது
1.கண்களிலும் காந்தம் உண்டு… உயிரிலும் காந்தம் உண்டு…! கவரும் சக்தி கொண்டதுதான்.
2.கண்ணின் நினைவை உயிரிலே மாற்றி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று
3.உயிருடன் உராயப்படும்போது இந்த உணர்வுகள் உள்முகமாகச் செல்கின்றது.
4.துருவ நட்சத்திரத்தின் சக்திகள் உள்ளே சென்று அது அழுத்தமாகி
5.வெளியிலிருந்து வரக்கூடிய தீமை உள்ளே போகாதபடி அந்தத் தீமையைத் தள்ளி விடுகின்றது.

உடலில் உள்ள அணுக்களைத் தனித்தன்மை கொண்டு “இங்கே அடைத்து வைத்த பின்…” தீமையை ஈர்க்கும் சக்தி குறைகின்றது. பின் அதைத் தள்ளி விட்டு விடுகின்றது.

இப்படித் தள்ளிவிட்டால் நம் ஆன்மாவிலிருந்து “அதனுடைய வேகமான இயக்கத்தைத் தடைப்படுத்துகின்றது…!”

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும்… எங்கள் ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று இந்த வலிமையை நாம் சேர்த்துக் கொண்டே வர வேண்டும்.

வலிமையான பின்… யாரையெல்லாம் நாம் பார்த்தோமோ துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அவர்கள் பெற வேண்டும்… அங்கே உடல் நோய் நீங்க வேண்டும் என்று இப்படி நாம் பாய்ச்சிப் பழகுதல் வேண்டும்.

தீமை என்று அறிந்து கொண்ட பின் இப்படி மாற்றி… தனக்குள் அதை உருவாக்கி உயர்ந்த உணர்வின் சொல்லாக நாம் வெளிப்படுத்த வேண்டும்.

1.அதைத்தான் ராமனின் பக்தன் ஆஞ்சநேயன் என்று சொல்வது.
2.இந்த உணர்வுகள் வாயுவாகச் சென்று மற்றவர்களுக்குள்ளும் பாய்ந்து நன்மை பயக்கும் சக்தியாக மாறுகின்றது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்துள்ள நஞ்சினை நம் உடல் கழிவாகப் பிரித்து விட்டு நல்லதை…
1.நறுமணம் கொண்ட உணர்வாகவும்
2.நறுமணத்தை அறியும் அறிவாகவும்
3.நறுமணத்தை நுகரும் தன்மையாகவும்
4.நறுமணத்தின் உணர்வு கொண்டு நற்செயலைச் செயல்படுத்தும் உணர்வாகவும் உடல் மாற்றுகின்றது.
5.உடலின் மணங்கள் இவ்வாறு இயக்குகின்றது

ஆனால் மற்ற உயிரினங்கள் விஷத்தின் தன்மையைத் தனக்குள் சேர்த்துக் கொண்டு தன் உடலில் வலிமை பெறுகின்றது நல்ல உணர்வின் தன்மைகளை நஞ்சாக (கழிவாக) மாற்றுகின்றது.

உடல் வலிமை கொண்டு சிந்திக்கும் செயல் இழந்து ஒன்றோடு ஒன்று போர் முறை கொண்டு அது மற்றொன்றைத் தாக்கி மற்றவைகளின் உணவைப் பரிமாறிக் கொள்கின்றது.
1.இது மிருக உணர்வுகளின் இயக்கங்கள்.
2.ஆக நஞ்சின் வலிமை கொண்டு வரும் பொழுது சிந்திக்கும் தன்மை அவைகளுக்கு இல்லை.

ஆனால் மனிதனோ சிந்தித்துச் செயல்படும் தன்மை பெற்றவன். அந்த நஞ்சினை அடக்கும் உணர்வு கொள்ளும் பொழுது
1.அண்டத்தில் எட்டாத உயரத்தில் இருக்கும் உணர்வின் தன்மையையும் எட்டிப் பிடித்து
2.அகண்ட அண்டத்தில் அந்த அருள் ஒளியின் சுடராக அறியும் வல்லமை பெற்றது “மனிதனின் ஆறாவது அறிவு…”

அகண்ட அண்டத்தின் உணர்வுகளை நம் பிரபஞ்சம் கவர்ந்து சூரியன் ஒளிச் சுடராக மாற்றுகிறது. அதைப் போல
1.நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி
2.ஒளியின் சரீரம் பெறும் அறிவின் தன்மையைத்தான் கார்த்திகேயா என்று ஞானிகள் காட்டியுள்ளார்கள்.
3.கார்த்தி என்றால் வெளிச்சம்.

அகண்ட அண்டத்தையும் அறியும் தன்மையும்… அண்டத்தில் உருவான நம் பிண்டத்திற்கு (உடலுக்கு) உண்டு. அகண்ட அண்டத்தின் ஆற்றலை நமக்குள் பெறும் தகுதியும் உண்டு.

ஆகவே எத்தகைய நஞ்சின் தன்மை வந்தாலும் அதை வென்றிடும் உணர்வு பெற்ற அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் நுகர்ந்து என்றுமே நமக்குள் பேரின்பம் என்ற நிலையை உருவாக்கிடல் வேண்டும்.

அத்தகைய அருள் ஞானத்தை கணவன் மனைவி இருவருமே பெற்றுப் பழக வேண்டும். ஒவ்வொரு குடும்பத்திலும் கணவன் மனைவி இருவரும் வசிஷ்டரும் அருந்ததியும் போல் இரு மனமும் ஒன்றாகி இரண்டறக் கலந்து உணர்வின் ஒளியாக மாற்ற வேண்டும்.

கணவனும் மனைவியும் அருள் ஞான சக்தி பெற்று… நளாயினியைப் போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடந்து… சாவித்திரியைப் போன்று இரு உயிரும் ஒன்றி… வாழ்க்கையில் வந்த தீமைகளை அகற்றி ஒளியின் உணர்வாக உருவாக்கும் தன்மை பெற வேண்டும். உலக ஞானம் பெற்று இந்த உலகைக் காத்திட வேண்டும்.

உலகில் தான் நாம் வாழ்கின்றோம். நம் உடலுக்குள் உலக உணர்வுகள் அனைத்தும் உண்டு. ஆகவே அந்த உலக உணர்வைப் பகைமையற்ற நிலையாக்கிப் நம்மிடம் பகைமை வளராது தடுக்க வேண்டும்.

ஒளியின் சுடரான அருள் மகரிஷிகளின் உணர்வுகள் நமக்குள் வளர்ந்தால்
1.உலக ஞானம் பெறலாம்… பகைமைகளை அகற்றிடலாம்.
2.அருள் ஒளியின் சுடராகப் பேரருள் வாழ்க்கை வாழ்ந்து
3.மலரைப் போல மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் பெற்று
4.நம் பேச்சும் மூச்சும் பிறரை மகிழச் செய்யும் உணர்வாக வளரும்.
5.இந்த உடலுக்குப் பின் அகண்ட அண்டத்தில் என்றுமே அழியாத வாழ்க்கை வாழலாம்.

வியாழன் கோளுக்குண்டான சிறப்பு

 

27 நட்சத்திரங்கள் பிற மண்டலங்களிலிருந்து கவரக்கூடிய சக்திகள் ஒன்றுடன் ஒன்று மோதி மின்னலாகி ஒளிக் கற்றைகளாக வரும் பொழுது வியாழன் கோள் அதைக் கவர்கின்றது.

சூரியன் எப்படி 27 நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துக் கொண்டதோ அதே போல…
1.வியாழன் கோளும் தனக்குள் அந்த உணர்வின் தன்மையை எடுத்து எடுத்து எடுத்து வளர்ச்சி அதிகமாகி
2.தன் சுழற்சியின் ஈர்ப்பு வட்டத்தில் உபகோள்களை வளர்த்துக் கொள்கின்றது. வியாழன் கோளுக்கு 27 உபகோள்கள் உண்டு.
3.அதை வைத்து 27 நட்சத்திரங்களின் சக்திகளை ஒன்றாகச் சமைத்து ஆவியாக மாற்றி உறைபனியாக தனக்குள் மாற்றுகின்றது.

அது கவர்ந்து கொண்ட உணர்வுகள் வெளிவரப்படும் பொழுது…
1.வியாழனின் சுழற்சி வேகம் அதிகமாக இருப்பதால் எல்லாவற்றையும் தனக்குள் இணைத்து
2.புது விதமான அணுக்களாக… “இணைத்துக் கொள்ளும் பாலமாக…” அமைகின்றது.

நமது உயிர் உடலுக்குள் இயங்கிக் கொண்டிருந்தாலும் எந்த உணர்வின் தன்மை நுகர்கின்றோமோ… (உதாரணமாக) வேதனை என்று வந்தால் அந்த உணர்வுகள் உயிருடன் சேர்க்கப்படும் பொழுது… அது வலுவானால் அதன் வழி இங்கே வேதனையின் இயக்கமாக மாற்றுகின்றது.

ஆகவே… இந்த உடலான கோளுக்கு… “உயிர்” குருவாக இருக்கின்றது.

ஆனால் அதே சமயத்தில் பிரபஞ்சத்திற்குச் சூரியன் இயக்கச் சக்தியாக ஆனாலும் வியாழன் கோள் இந்தப் பிரபஞ்சத்திற்கு குருவாக இருக்கின்றது. அதனால் தான் வியாழனை “குரு…” என்று அழைப்பார்கள்.

வரும் சக்திகளைத் தனக்குள் இணைக்கப்பட்டு மோதப்படும் பொழுது இரண்டும் இணைந்து புது விதமான அணுக்களாக மாறுகின்றது. இதற்குள் ஊடுருவும் மின்னலின் கதிர்கள் ஆண் பெண் என்ற நிலையில் உருவாக்கப்படும் பொழுது அத்தகைய அணுக்கள் வளர்ச்சி அடைகின்றது.

வளர்ச்சியடைந்து செல்வதைத் தான் சூரியன் கவரும் தன்மை வருகின்றது. கவரும் பாதையில் மற்ற கோள்கள் கவர்ந்து தனக்குள் அதை எடுத்துக் கொள்கிறது.

27 நட்சத்திரத்தின் சக்தியை வியாழன் தனக்குள் எடுத்துத் தனது சுழற்சி வேகத்தில் வெப்பத்தின் தணல் கூடி ஆவியாக மாற்றி மேல் பகுதியில் பாறையாக உறையும் தன்மை வருகின்றது.

மின்சாரத்தை உபயோகித்து ஐஸ் பெட்டியாகவும் (FRIDGE) உருவாக்குகின்றோம் அதே மின்சாரத்தை உபயோகித்து சூடாகவும் (HEATER) உருவாக்கிக் கொள்கின்றோம் அல்லவா…!

இதைப் போன்று தான் வியாழன் கோள்…
1.பல விதமான உணர்வின் தன்மை கொண்டு அமைதிப்படுத்தி
2.போர்முறை இல்லாதபடி அந்த உணர்வின் தன்மை வேக வைத்து
3.அமைதித் தன்மையாக எதிர்ப்பு இல்லாத நிலையாக உருவாக்குகின்றது.

27 நட்சத்திரத்தின் சக்தியைத் தனக்குள் சேர்த்துக் கொள்கின்றது இது ஜாதகங்களில் எல்லாம் வரும் ஆனால் இந்த உண்மை எதிலிருந்து வருகிறது…? என்று தெரியாது.

கோள்களைப் பிரித்து எழுதிக் கொள்ள முடியும். சூரியனுக்கு நேராக வரும் பொழுது ஒரு கோளின் தன்மை இணைந்து சுழல் வட்டத்தில் வரும் பொழுது அதைத் தான் தனித்தனியாகப் பிரித்துக் காட்ட முடியும்.

இயற்கையின் உண்மையின் உணர்வுகளைச் சொல்ல முடியாது…!

இவர்களுக்குகந்த நிலையில் மனிதனுக்கு ஜாதகக் குறிப்புகளை… “மதத்திற்குத் தக்கவாறு குறித்து…” இந்த நேரத்தில் இதைச் செய்தால் ஆண்டவனுக்கு ஆகாது என்று சொல்லி… ஆண்டவன் தான் இதை மாற்றி அமைக்கும் சக்தி பெற்றவன் என்பார்கள்.

ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு இடத்திலும் அவரவர்களுக்குத் தக்கவாறு ஜாதகத்தை எடுத்துச் சொல்லப்படும் போது
1.எது ஆழமாகப் பதிவாகிறதோ அந்தப் பதிவு தான் மனிதனை இயக்குகிறது.
2.ஆக… கோள்களின் இயக்கத்தில் மனிதன் இல்லை.

கோள்கள் இயக்கத்தால் காற்றலைகள் வரப்படும் பொழுது அது தாவர இனங்களுக்கு அந்தச் சக்திகள் தேவை.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பூமிக்குள்ளும் வெளியிலும் அணுகுண்டை வெடித்ததால் வெளிப்பட்ட கதிர்வீச்சுகள் வான்வீதியிலே சிதறப்பட்டு நம் பிரபஞ்சத்தில் உள்ள மற்ற கோள்களில் இணைக்கப்பட்டு சூரியனுக்குள்ளும் சென்று விட்டது.

அணுகுண்டை வெடித்த பின் கதிரியக்கங்கள் பரவி எல்லாவற்றையும் புகை மண்டலங்களாக மாற்றி அதன் இனத்தைப் பிரித்து விடுகின்றது. அந்தக் கதிரியக்கங்கள் பிரபஞ்சத்தில் உள்ள எல்லாக் கோள்களும் கவர்ந்து வைத்துள்ளது.

1.எல்லாக் கோள்களிலும் கலந்த அந்த உணர்வுகள் வரப்படும் பொழுது
2.சூரியனிலே இது மோதலானால் எலெக்ட்ரிக் உற்பத்தி செய்வதை இரு மடங்காக உருவாக்கிவிடும்.
(3.மின்சாரம் வரும் வயர்களை ஒன்றாக இணைத்தால் மின் ஆற்றல் அதிகமாகி எல்லாவற்றையும் கருக்குவது போன்று சூரியனிலே உண்டாகும்)

ஆக இரு மடங்காக அந்த எலெக்ட்ரிக்கின் தன்மை உருவாக்கப்படும் பொழுது அதனின் விளைவுகள் எப்படி இருக்கும்…?

சாதாரண நிலைகளில் கம்ப்யூட்டரோ மற்ற எலெக்ட்ரானிக் சாதனங்களோ இயக்கப்படும் பொழுது அதில் உள்ள எலெக்ட்ரிக் ஒரு சம நிலையில் இருக்கின்றது.

நம் உயிரின் துடிப்பும் மின் இயக்கம் கொண்டது. மின் ஆற்றல் கொண்டு தான் இயக்கி உடலை உருவாக்குகின்றது. அந்த உணர்வுக்கொப்பதான் உணர்ச்சியின் வேகத் துடிப்பும்… மற்ற நம் உடலை இயக்குவதும் எல்லாமே…!

ஆனால் அங்கே சூரியனுக்குள் மோதல் ஏற்பட்டு இரு மடங்கு காந்தப் புலன் அதிகமாக்கப்படும் பொழுது
1.நம் உயிரின் துடிப்பும் அதிகமாகும்
2.உணர்வின் துடிப்பும் அதிமாகும்.
3.மற்ற உயிரினங்களின் உயிரின் துடிப்பும் அதிகமாக்கப்படும் பொழுது அதனுடைய நிலைகளும் மாறுகின்றது.

விஞ்ஞான அறிவால் உருவாக்கப்பட்ட இந்த நிலை “ஹைட்ரஜன்” அதிகமாக விரிவாக்கப்படும் பொழுது அதனுடைய உணர்வின் தன்மையை அது இழக்கச் செய்கின்றது.

ஆகவே இந்தப் பிரபஞ்சம் சீக்கிரம் மாறப் போகின்றது…!

கம்ப்யூட்டரின் துணை கொண்டு தான் இராகெட்டுகளும் செயற்கைக் கோள்களும் மற்றவைகளும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. பாதுகாப்பாக வைத்திருக்கக்கூடிய அந்தக் கம்ப்யூட்டர்களும் செயல் இழக்கப் போகின்றது,

அதே போல் விஷத் தன்மையை இயக்கும் இயந்திரங்களையும் இரசாயணங்களையும் அந்தக் கம்ப்யூட்டரின் துணை கொண்டு பாதுகாப்பாக வைத்திருக்கின்றனர்.

மின் உற்பத்தி இரு மடங்காக ஆக்கப்படும் பொழுது கம்ப்யூட்டர்கள் தாறுமாறாக இயங்கிப் பாதுகாப்பு இழந்து அது அது வெடிக்கப் போகின்றது. காற்று மண்டலம் முழுவதுமே நச்சுத் தன்மையாகின்றது.
1.நம் சொத்தெல்லாம் நிலைக்குமா…?
2.ஆக மொத்தம் இந்த உடலே இருக்கப் போவதில்லை.

விஞ்ஞான அறிவால் அஞ்ஞான வாழ்க்கை வாழும் மனிதனின் ரூபத்தை அழித்திடும் இந்தக் காலத்தில் தொழில்… அது… இது…! என்று இருந்தாலும் நமக்குள் எதைச் சேர்க்க வேண்டும்…? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

தொழில் வளம் பெற வேண்டும் என்றாலும் அந்த அருள் ஞானம் தேவை. அந்த அருள் உணர்வின் தன்மை நமக்குள் எடுத்தால் நஞ்சின் தன்மையை நீக்கிவிடும்.

கடவுளின் அவதாரத்தில் எப்படி வராகன் சாக்கடைக்குள் இருக்கும் நஞ்சினை நீக்கி விட்டு நல்ல உணர்வின் தன்மையை அது எடுத்ததோ அதைப் போல்
1.இந்தக் காற்று மண்டலமே நஞ்சாக மாறினாலும்
2.நஞ்சை வென்று உணர்வை ஒளியாக மாற்றி வாழ்ந்து கொண்டிருக்கும் துருவ நட்சத்திரத்தின் சக்தியையும் சப்தரிஷி மண்டலத்தின் சக்தியையும்
3.அடிக்கடி எண்ணி எடுத்து உங்கள் உடலில் பெருக்கிக் கொண்டே வந்தால்
4.விஷத் தன்மைகள் வந்தாலும் அதைக் கட்டுப்படுத்தும் ஆற்றல்கள் உங்களுக்குள் வரும்.

ஆகவே அனைவருமே ஏகோபித்த நிலைகளில் “துரித நிலைகள் கொண்டு” அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து வளர்த்துப் பெருக்கிக் கொள்ளுங்கள். அப்படிப் பெருக்கினால் உங்களை காத்துக் கொள்ளலாம்.

பாதுகாத்தாலும்… எந்த அருள் ஒளியை நமக்குள் வலுவாக்கிக் கொண்டோமோ இந்த உடலை விட்டுச் சென்ற பின் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் உள்ள சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து பிறவியில்லா நிலை அடையலாம்.

சூனிய மண்டலம் – சூனியக் காலம்

 

அண்ட சராசரங்களைக் கடவுள் எப்படி உருவாக்கினார்…? கடவுள் யார்…? என்ற இந்த உண்மைகளை எல்லாம் பல முறை சொல்லி உள்ளேன். எதன் வழி உலகம் உருவாகின்றது…? என்று வேத நூல்களில் இது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

அதனை அறிந்து கொள்ளும் பொழுது
1.நாம் யார்…? எப்படி மனிதனானோம்…?
2.மனிதரான பின் உயிரின் உணர்வுகள் எப்படி ஒளியாகின்றது…? என்ற உண்மையையும் நாம் தெரிந்து கொள்ளலாம்.

ஒளியாகும் தன்மை பெற்றது தான் ஆறாவது அறிவு கார்த்திகேயா. நம் ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்தினோம் என்றால்… நாம் அறிந்து கொள்ளும் உணர்வுகளில் அடுத்து இந்த உடலுக்குப் பின் உயிரைப் போன்றே உணர்வின் அணுக்கள் ஒன்றாகின்றது.

இவை அனைத்தும்… அகஸ்தியனால் கூறப்பட்டு அவனுக்குப் பின் வந்த வரிசைத் தொடரில் ஞானிகளால் வெளியிடப்பட்ட பல உண்மைகள் இந்த உலகெங்கிலும் பரவி உள்ளது.

அகண்ட அண்டம் என்பது சூனியம் நிலைகள் கொண்டது. இது சூனியக்காலம் என்று சொல்வார்கள். குண்டலினி யோகா ராஜ யோகம் செய்பவர்கள்
1.சூனியக் காலத்திற்குப் போகிறோம் என்பார்கள்.
2.சூனியக்காலம் என்பது இருண்ட உலகம்.
3.இருண்ட உலகில் தான் சிவன் இருக்கின்றார் என்று அவர்கள் உணர்வைச் செலுத்துகின்றார்கள்.

சூனியக் காலம் என்றால் என்ன…? என்பதைப் பற்றி அகஸ்தியன் தெளிவாகக் கூறியுள்ளார்.

இப்பொழுது நாம் காணும் அனைத்து நிலைகளும் “சூனியத்திலிருந்து உருவானது…” அது இருண்ட நிலைகள் பெற்றது.
1.நாளடைவில் அது ஆவித்தன்மை அடைந்து அந்த ஆவித் தன்மை அடைவதற்கே முதலில் வெப்பம் என்ற நிலை வருகின்றது.
2.வெப்பம் என்ற நிலை வரும் பொழுது அசையும் நிலை அதாவது இயக்கும் தன்மை வருகின்றது.
3.வெப்பத்தன்மை வருவதற்கே சூனியம் தான் காரணம்… சூனியம் உருவாவதற்கு விஷம் தான் காரணம்.

அகண்ட அண்டம் இருண்ட உலகமாக இருந்ததால் அதைச் சூனிய உலகம் என்று சொல்வார்கள். வேதங்களில் இதைத்தான் சூனிய உலகம் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

நாளுக்கு நாள்… நாளுக்கு நாள்… அது விஷமாக மாறி
1.விஷம் அடர்த்தி அடையப் படும்பொழுது விஷமற்றதைத் தாக்கி மோதலாகி வெப்பம் உருவாகின்றது.
2.வெப்பம் என்ற நிலை வரும் போது… வெப்பமான பின் விரிந்து ஓடும் சக்தி பெறுகின்றது.
3.விரிந்து ஓடும் சக்தி வரும் பொழுது அதிலே ஈர்க்கும் காந்தமே வருகின்றது.

இதை உங்களிடம் பதிவு செய்கிறேன். பதிவு செய்ததை அடுத்து எண்ணி நீங்கள் தியானிக்கும் பொழுது
1.அந்த நேரத்தில் உங்கள் உணர்வுகள் எல்லாம் வான்வீதியில் அகண்ட காலத்திற்கு சூனியக் காலத்திற்குச் சென்று
2.சூனியம் எப்படி உருவானது…? என்பதை நீங்கள் அறிதல் வேண்டும்.

சூனியத்திலிருந்து எப்படி வெப்பமானது…? வெப்பத்திலிருந்து அணுக்கள் எப்படி சுக்கு நூறாகச் சிதறி ஓடுவதும் அதிலே ஈர்க்கும் காந்தம் எப்படி உருவானது என்ற நிலையை நீங்கள் அறியலாம்.

குருநாதர் எமக்குக் கொடுத்த உண்மையின் உணர்வினை உங்களுக்குள் பதிவாக்கி அந்த நினைவினை நீங்கள் கூட்டிச் செல்லும் பொழுது இந்த முயற்சி உங்களுக்கு வெற்றியைத் தரும்.

ஏனென்றால்
1.ஆதி… அந்த ஆரம்ப நிலையை நீங்கள் அறிந்து கொள்கிறீர்கள்.
2.உலக இயக்கத்தின் உண்மைகளை நீங்கள் அறியும் சந்தர்ப்பம் வருகின்றது.
3.அதே சமயத்தில் அந்தச் சூனியம் எப்படி ஒளிமயமாகின்றது…? என்பதையெல்லாம் நீங்கள் அறிய வேண்டும்.

இயற்கையின் உண்மை நிலைகளை நீங்கள் அறிய வேண்டும் என்பதற்கே இதைப் பதிவு செய்கின்றேன்.

காரணம் வாழ்க்கையின் நிலைகளை மட்டும் தான் அடிக்கடி பேசுகின்றோம்.

சூனியத்தைப் பற்றிப் பேசினாலும் அவ்வளவாக எடுத்துக் கொள்வதில்லை…! என்னமோ சாமி சொல்கின்றார்…! என்று சிலர் எண்ணத்தால் இதை மறுக்கின்றார்கள். மனத்தால் மறுத்து… சீக்கிரம் எதாவது சொன்னால் நாம் தெரிந்து கொள்ளலாம் அந்தச் சக்தியைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம் அந்தச் சக்தியைப் பெறலாம் என்று தான் மனதை ஓட்டுகின்றார்கள்.

ஆகவே… சூனியத்திலிருந்து தோன்றப்பட்டது தான் “இயற்கையின் சக்திகள் அனைத்துமே…” என்பதை நாம் முதலில் உணர வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் நல்ல நிலையில் இருக்கின்றோம். நல்ல உணவைத்தான் உட்கொள்கின்றோம். ஆனாலும் ஒரு மனிதன் வேதனைப்படுகின்றான் என்ற உணர்வை உற்றுப் பார்த்து அடிக்கடி அவன் உணர்வை எடுத்தால் அது விஷமான அணுக்களை நம் உடலுக்குள் உருவாக்கும் நிலை வந்து விடுகின்றது.

நமக்குள் இருக்கும் எலும்புகள் மேக்னட் (காந்த சக்தி கொண்டது). அதே சமயத்தில் எலும்புக்குள் இருப்பது ஊண். வேதனைப்படுவோரைப் பார்க்கும் பொழுது
1.நம் கண்ணில் உள்ள கரு விழி
2.எலும்புக்குள் உள்ள ஊணில் முதலில் அதைப் பதிவாக்கி விடுகின்றது.

அந்த வேதனப்படும் உணர்வை நம் ஆன்மாவாக (நம்முடைய ஈர்ப்பு வட்டம்) மாற்றுகின்றது. அதிலிருந்து நாம் இழுத்துச் சுவாசித்த உடனே இந்த உணர்வை எலும்பில் ஒட்ட வைக்கின்றது.

வேதனை உணர்வு எங்கே எப்படி அணுவாக ஆனதோ நமக்குள் உருவாக்கி மனித உடலில் எலும்பை உருவாக்கியது அல்லவா… அதை அது சாப்பிடத் தொடங்கும். அதாவது அந்த அசைவத்தை அது சாப்பிடும்.

ஏனென்றால் அது வளரும் தன்மை வளர்ச்சி பெற்றது. எலும்பை உருவாக்கிய அணுக்கள் அது மடிகிறது. அப்பொழுது எலும்புகள் எல்லாம் வளர்ச்சி குன்றத் தொடங்கும். அதை டி.பி. என்று சொல்கிறோம்.

அதை மாற்ற மருத்துவத்தில் என்ன செய்கிறார்கள்…?
1.விஞ்ஞான அறிவு கொண்டு கிருமிப் போர் என்ற நிலையில் மருந்தை இஞ்செக்சன் (INJECTION) செய்கிறார்கள்.
2.எதிர்மறையான அணுக்களை உடலுக்குள் உருவாக்குகின்றார்கள்.
3.அந்த உருவை உருவாக்கப்படும் பொழுது அது டி.பி. அணுக்களை உணவாக உட்கொண்டாலும்
4.அதிகமாகச் சாப்பாடு கொடுத்து நல்ல அணுக்களை உருவாக்கி
5.டி.பி. அணுக்களைக் கொன்று டி,பி. நோயையும் இன்று சுலபத்தில் குணப்படுத்துகின்றார்கள்.

ஆனால் கேன்சர் நோய் வந்தது என்றால் அதை மாற்றுவது அவ்வளவு சுலபமானது அல்ல…! வேதனை… வேதனை… என்ற உணர்வு ஆன பின் நம் உடலில் விஷத் தன்மையான அணுக்களின் பெருக்கமாகின்றது.

இந்த விஷமான அணுக்களானால்
1.“மரத்தில் விழுதுகள் பாய்ச்சுவது போல்…” கேன்சரை உருவாக்கும் அந்த அணு
2.உடல் முழுவதும் அதனின் விழுதுகளைப் பாய்ச்சும்.
3.மற்ற நல்ல அணுக்களை இயக்கும் விஷத் தன்மைகளை எல்லாம் அது எடுத்துக் கொண்டு ஒரு பக்கம் குவியும்.
4.கேன்சர் அணுக்களைக் கொல்வதற்கு மருந்து கொடுத்தாலும் கூட நல்ல அணுக்களும் மடிந்திடும்.
5.ஆகவே கேன்சருக்கு மருந்து கொடுத்து அதைக் கொல்வது என்பது சாதாரணமாக முடியாது.

அதனால் தான் விஞ்ஞான அறிவில் என்ன செய்கிறார்கள்…? கேன்சர் உருவான அந்தப் பாகத்தில் எலெக்ட்ரிக் (மின்சாரத்தை) வைத்துக் கருக்குகின்றார்கள்.

கருக்கினாலும் கூட அது நொந்து போனால் அழுகிய உணர்வு கொண்ட அணுக்கள் டி.பி. போன்று உருவாகும். மீண்டும் நல்ல அணுக்களை உணவாக உட்கொள்ளும் நிலைகள் வரும். அந்தப் பாகம் அவஸ்தைப்பட்டது தான் மிச்சம்.

ஆக கேன்சர் நோயை நீக்க முடிகின்றதா…? என்றால் இல்லை.

ஆனால் அதை தியானத்தால் போக்க முடியும். எப்படி…?
1.மஞ்சள் விஷத் தன்மையை அடக்கக்கூடியது.
2.வேப்பிலையையும் மஞ்சளையும் இரண்டையும் சமமாக வைத்து அரைத்துத் தண்ணீர் போல் கரைத்துக் கொடுக்க வேண்டும்.

கேன்சர் என்று தெரிந்து விட்டாலே துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…! அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மாக்கள் அனைத்தும் பெறவேண்டும் ஈஸ்வரா..! என்று ஒரு நாளைக்கு “ஐம்பது முறையாவது…” எண்ணி வலுவாகத் தியானிக்க வேண்டும்.

தியானித்த பின் மனைவியும் இதே உணர்வை எடுத்து
1.“என் கணவனுக்கு உடல் நலம் சரியாக வேண்டும்” என்று எண்ணத்தில்
2.அந்த மருந்தைக் (மஞ்சள் வேப்பிலை) கொடுத்தால் இந்தக் கேன்சர் நோயை நீக்க முடியும்.

உங்களுக்குள் அந்தச் சக்தி இருக்கின்றது. இந்த முறைப்படி தியானம் எடுத்துக் கொண்டவர்கள் உங்கள் எண்ணத்தினால் கேன்சர் நோயைப் போக்க முடியும்.

“எல்லோரும் உயர வேண்டும்…” என்ற எண்ணத்திற்கு நாம் வந்தால் தான் நாமும் உயர முடியும்

 

தும்கூர் அருகே ஒரு மலைக் காடு இருக்கின்றது… கரடி இருக்கின்றது. ஆரம்பத்தில் நான் உலக அனுபவம் பெறுவதற்காகச் சுற்றுப்பயணம் சுற்றிக் கொண்டு வந்த இடத்தை எல்லாம் காட்டி
1.இந்த உணர்வுகள் எப்படி இருக்கின்றது…?
2.அந்த உணர்வை நுகந்தால் நீங்களும் எப்படி உலகை அறிய முடியும்…? என்ற காட்சிகளைக் கொடுத்தேன்.

ஆரம்பத்தில் குரு வழியில் இந்த உண்மைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு (சத்தியத்தின் சக்தி நிலை) அதைக் காட்டித்தான் செயல்படுத்தியது. அதே போன்று
1.ஐவர் மலையில் பழைய காலக் குகைகள் எப்படி இருக்கின்றது…?
2.அங்கிருக்கக்கூடிய சில உண்மைகளையும் பிரார்த்தனை பண்ணித் தெரியும்படி செய்தேன்.
3.அந்த இடத்தில் மின்கதிர்கள் பாயப்படும் பொழுது அது எப்படி…? என்றும்
4.மின் ஒளிகள் எப்படியெல்லாம் அங்கே வருகின்றது…? என்றும்
5.அங்கே ஒளி வட்டங்களை எல்லாம் சுற்றும்படி செய்தேன்.

இத்தனை வேலைகளையும் செய்தேன். ஆரம்பத்தில் இதை எல்லாம் செய்து காட்டினாலும்… ஒன்றுக்கும் பயனில்லாது போய்விட்டது. இதெல்லாம் மனித உடல் இச்சைக்குத்தான் சென்றது.

பல அற்புதங்களைக் காட்டினாலும் உடல் ஆசை வந்து விடுகின்றது. “நான் தெரிந்து கொண்டேன்…!” என்ற நிலை வந்து விடுகின்றது,

அதை எல்லாம் விடுத்து விட்டு இப்பொழுது உங்களை அனைவரையும் அருள் வழியில் அழைத்துச் செல்கின்றேன்.
1.சிறிது பேராவது நீங்கள் தயாராகி விட்டால்
2.கோடிக்கணக்கான மக்களை நல் வழியில் நீங்கள் வளர்க்க முடியும்.

அருள் உணர்வு கொண்டு நீங்கள் அதைப் பெற வேண்டும் என்பதற்குத் தான் ஞாபகப்படுத்துகின்றேன். காரணம் குறுகிய காலமே நாம் வாழ்கின்றோம் இந்த உடலுக்குப் பின் நாம் எந்த நிலை அடையப் போகின்றோம்…? என்பதைச் சற்று சிந்திக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளை நமக்குள் பெருக்கிப் பழக வேண்டும். அந்த நிலை அனைவரும் பெற வேண்டும்.

செல்வம் எவ்வளவு தேடி வைத்திருந்தாலும் அதைத் தட்டிப் பறிக்கக் கூடிய காலம் வந்துவிட்டது. கடைசியில் தேடிய சொத்தெல்லாம் போய்விட்டதே என்று வேதனையைத் தான் வளர்க்க முடியும்.

இதிலிருந்தெல்லாம் மீள வேண்டும்… பேரருளை எப்படியும் நாம் பெற வேண்டும். நீங்கள் அனைவரும் தயாராகி விட்டால் எனக்கு கொஞ்சம் சிரமம் குறைவாக இருக்கும். இல்லையென்றால் நான் இன்னும் சிரமம்தான் பட வேண்டி வரும்.

அந்தச் சிரமத்திலிருந்து நான் மீள்வதற்கு
1.ஒவ்வொருவரும் உங்கள் பார்வையில் சர்வ பிணிகளும் போக வேண்டும்
2.உங்கள் பேச்சு மூச்சும் பிறருக்கு நல்ல வழிகாட்டியாக அமைய வேண்டும்.
3.மற்றவர் குடும்பத்திலே சிக்கலை நீக்கக் கூடிய சக்தியாக வளர்ச்சிக்கு வர வேண்டும்.

மற்றவர்களால் முடியவில்லை என்கிற பொழுது… தியானம் செய்யக்கூடியவர்கள் செயல்படுத்தி உங்கள் பார்வையால் மூச்சால் எல்லா வகைகளிலும் மற்றவருக்கு வழிகாட்டியாக அமைய வேண்டும்.

அந்த நிலையத்தான் நாம் ஒவ்வொருவரும் பெற வேண்டும்…!

இதில் “நான் பெரிது… நீ பெரிது…” என்ற நிலை இல்லாதபடி
1.எல்லோரையும் பெரியவராக்க வேண்டும் என்று உணர்வுக்கு வரவேண்டும்… அதன்படி நாமும் அந்த உயர் நிலை பெற முடியும்.
2.எல்லோரும் உயர வேண்டும் என்ற எண்ணத்திற்கு வந்துவிட்டால் நாமும் உயர்கின்றோம்.

இதிலே சிறு குறை கூட வராதபடி குரு காட்டிய அருள் வழியில் நாம் வளர்ந்து காட்ட வேண்டும். அதைத்தான் நாம் செய்து கொண்டு வருகின்றோம்.

பல அற்புதங்களையும் நிகழ்ச்சிகளையும் காட்டத் தொடங்கினால் இந்த ஞானத்தையே கடைசியில் பேச முடியாதபடி அது தடையாகிவிடும்.

எமது அருள் உபதேசங்கள் ஒலி நாடாக்களில் வெளி வருகின்றது.
1.கூடுமான வரையிலும் ஒவ்வொருவரும் அதை எழுதுவதற்கு முயற்சி செய்யுங்கள்.
2.இந்த உணர்வின் ஞானம் உங்களுக்குள் வரட்டும்.
3.உணர்வின் தன்மை ஆழமாகப் பதிவாகும்… உங்களுக்குள் மெய் ஞானம் வளரும்.

காலங்கள் மிகக் குறுகியதாக இருக்கின்றது அதற்குள் நாம் அனைவரும் வளர்த்து தயாராக வேண்டும். அழியாச் செல்வமான ஒளிச் சரீரம் பெறும் ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

அதற்குத் தான் திரும்பத் திரும்ப உங்களுக்கு ஞாபகப்படுத்துவது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

குருநாதர் காட்டிய வழியில் நான் (ஞானகுரு) சுற்றுப்பயணம் செய்யப்படும் போது பம்பாயில் ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. அவர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர். தாயின் முக்கியத்துவத்தைப் பற்றி அவரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்.

அப்பொழுது அவர் தாயாவது… கத்தரிக்காயாவது…? என் தாய் எனக்குத் துரோகம் செய்கிறது.. அது செய்கிறது… இது செய்கிறது…! என்று சொன்னார். இன்ஜினியரிங் படித்திருக்கின்றார். ஆனால் நான் சொல்வதை எதிர்த்து அப்படிச் சொல்லிக் கொண்டிருந்தார்.

தன் மனைவியின் சொல்லை ஓங்கி வளர்த்துக் கொண்டார். அவருடைய அம்மா தன் மனைவிக்கு மிகவும் தொல்லை கொடுத்தது என்று சொன்னார். ஆகையினால் நான் சொல்வதை அவர் எடுத்துக் கொள்ளவில்லை.

பெரிய வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அன்றைக்கே (சுமார் 40-45) ஆண்டுகளுக்கு முன்) முப்பது ஆயிரம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார். நான் அவரிடம் பேசிக் கொண்டிருந்த பொழுது அவருடைய மனைவியும் குழந்தைகளும் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

அவரிடம் சொல்லி விட்டு நான் கல்கத்தா பக்கம் சென்றுவிட்டேன். அவருடைய சந்தர்ப்பம் ஒரு நாள் காட்டுக்குள் போய்க் கொண்டிருந்தார். தன் மனைவியையும் பிள்ளைகளையும் கூட அழைத்துச் சென்றிருந்தார்.

கேமரா வைத்து ஃபோட்டோ எடுத்துக் கொண்டிருந்தார். அதிலேயே கவனமாக இருந்து முன்னாடி பார்த்துக் கொண்டிருந்ததில் பின்னாடி யானை வந்ததைக் கவனிக்கவில்லை.

யானை அவரை “லபக்…” என்று தூக்கி விட்டது. தூக்கிய உடனே அதைப் பார்த்த அவருடைய குழந்தையும் அவர் மனைவியும் “அம்மா…….!” என்று சப்தம் போட்டார்கள்.

தன் மனைவியும் குழந்தையும் அம்மா…! என்று சப்தமிட்டதைக் கேட்டு இவரும் “அம்மா…” என்று சப்தம் போட்டிருக்கின்றார். அந்தச் சப்தங்களைக் கேட்டதும் யானை அவரை அப்படியே வைத்திருக்கிறது.

கொஞ்ச நேரம் வைத்திருந்துவிட்டு அப்படியே அவரைக் கீழே இறக்கிவிட்டுச் சென்று விட்டது. அவரை அடிக்கவில்லை. “தாய்க்கு எவ்வளவு பெரிய சக்தி இருக்கிறது…!” என்று நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்,

இந்தச் சக்தியின் உண்மையின் நிலையை அவர் உணர்ந்த பிற்பாடு அவர் என்னைத் தேடி வந்தார். காசியில் நான் சுற்றுப் பயணம் செய்து கொண்டிருக்கும் பொழுது அவர் என்னைத் தேடி வந்து… என் தாய்க்குண்டான சக்தியை யானையிடமிருந்து தப்பிய அன்றைக்குத் தான் உணர்ந்தேன்… என்று சொன்னார்.
1.இதை எல்லாம் ஏன் சொல்கிறேன்…? என்றால்
2.இந்த மனித வாழ்க்கையில் “தாயை மறந்தால் மனிதன் இல்லை…!”

ஒரு நாய் நம்மைக் கடிக்க வருகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அம்மா……! என்று சப்தம் போடுங்கள். அப்படியே அந்த நாய் நிற்கும். உங்களைக் கடிக்காது.

ஆனால் அடி…! என்று சொன்னாலும் கடிக்கும்… முருகா…! என்றாலும் கடிக்கும். அப்பொழுது தாய்க்கு எவ்வளவு சக்தி இருக்கிறது…! என்று தெரிந்து கொள்ளலாம்.

ஆனால் தாயை நாம் எத்தனை பேர் மதிக்கிறோம்…? தாயை மதிப்பது இல்லை.
1.அதே சமயத்தில் நம் பிள்ளையும் தாயை மதிப்பதில்லை தந்தையையும் மதிப்பதில்லை.
2.இப்படித்தான் நம் பிள்ளைகளையும் வளர்த்துள்ளோம்…!

நாம் சிறிய குழந்தையாக இருக்கும் பொழுது பல சேட்டை செய்கின்றோம். குறும்புத்தனம் எல்லாமே செய்கின்றோம். தாய் என்ன செய்கிறது..?

நம்மைத் வெளியிலே தூக்கி போட்டுவிடுகிறதா… இல்லையே…!” எதையோ சொல்லி அரவணைத்துப் பிள்ளை எத்தனை சேட்டை செய்தாலும் “இந்தாடா கண்ணு… அதைச் சாப்பிடுடா இதைச் சாப்பிடுடா… ஏன்டா இப்படி இருக்கிறாய்…? என்று தான் கெஞ்சிக் கேட்கும்.

ஆனால் வளர்ந்த பின் தாய் ஒரு சொல்லைச் சொன்னது என்றால் “நீ அறிவு கெட்டதனமாகப் பேசுகிறாய்…!” என்று தாயைப் பேசுகிறவர்கள் தான் நாம் இருக்கிறோம். தாயை மறுக்கும் நிலையே வருகிறது.

ஒரு பித்துப் பிடித்த தாயாக இருந்தாலும் சரி… உன் குழந்தையை அடித்துவிட்டார்கள்..! என்று யாராவது சொல்லட்டும். பிள்ளை மேல் கவனம் இல்லை என்றாலும் “அடித்து விட்டார்கள்” என்றால் உடனே பதறி அழும்.

ஆனால் அதே பித்துப் பிடித்த தாயை இன்னொருவர் அடித்தார் என்றால் “கிரகம்…! அதற்கு அப்படித்தான் வேண்டும்…” என்று பிள்ளையின் உணர்வுகள் அந்த வழிக்குத்தான் செல்கின்றது. தாயை இணைக்கும் நிலை இல்லை.

1.தாயை இணைக்கும் நிலை வந்து
2.அன்று ஞானிகள் காட்டிய அருள் வழியில் தாயை எந்த அளவிற்குப் போற்றித் துதிக்கின்றோமோ
3.அந்த உணர்வின் தன்மை என்றுமே நமக்கு உறுதுணையாக இருக்கும்

தாயின் உணர்வே நம் உடல். நாம் அம்மா…. என்று எண்ணி ஏங்கினால் நம்மை அந்தத் தாயின் உணர்வுகள் பாதுகாக்கும். ஒரு காரியம் நடக்கவில்லை என்றால்
1.“அம்மா…!” என்று சொல்லி அம்மாவின் அருளைப் பெறுங்கள்
2.மகரிஷிகளின் உணர்வைப் பெற வேண்டும் என்று ஏங்கிப் பெறுங்கள்
3.உடனடியாக அது நடக்கும்… இதைச் செயல்படுத்திப் பழகுங்கள்

விநாயகரைக் காட்டும் பொழுது ஞானிகள் அதைத்தான் காட்டுகின்றார்கள். தன் தாய் தந்தையை நினைவுபடுத்தி அங்கே வணங்கும்படிச் செய்கின்றார்கள்…?
1.நீ இதை உனக்குள் வினையாக்க வேண்டும்
2.அருள் ஒளியைக் கணங்களுக்கு அதிபதியாக்க வேண்டும்…! என்று தெளிவாக்குகின்றார்கள்.

உலகம் சூனியத்திற்குப் போகும் நேரத்தில் தான்… “மகான்கள் தோன்றுவார்கள்…!

 

விஞ்ஞான உலகத்தால் வரக்கூடிய பேரழிவும்… மனிதன் ஆசையின் நிலைகள் கொண்டு வரும் பொழுது ஒன்றைக் காக்க என்று தீவிரவாதமும் மதத்திற்குள் மதம் தீவிரவாதமும்… இனத்திற்குள் இனம் தீவிரவாதம்… வீட்டிற்குள்ளேயே தீவிரவாதம்… தெருவிற்குள்ளும் தீவிரவாதம்… வளர்ந்து விட்டது.

என்னமோ பெரிய இவன் மாதிரிப் பேசுகின்றான் என்று இது போன்ற தீவிரவாத உணர்வுகள் எல்லோருக்குள்ளும் பெருகி வரப்படும் பொழுது
1.நல்லதைக் காப்பது யார்…? நல்லதை காக்கும் ஆள் இல்லை…!
2.ஆக… இந்த உலகமே சூனியத்திற்குப் போகும் நேரத்தில் தான் இது போன்ற சந்தர்ப்பங்களில் தான்… “மகான்கள் தோன்றுவார்கள்…!
3.நம் குருநாதர் கொடுத்த அருள் உணர்வு கொண்டு ஒவ்வொரு திசையிலும் மகான்களை நாம் தோற்றுவிக்க வேண்டும்.

ஒரு சமயம் நபிகள் நாயகம் தோன்றினார் அரக்க உணர்வுகளிலிருந்து மீள வேண்டும் என்று இயேசு கிறிஸ்து தோன்றினார்.

இங்கே தீமையின் நிலைகள் அதிகரிக்கப்படும் பொழுது அதை மாற்ற வியாசகர் வந்தார்… அதே போல் வான்மீகி மகரிஷி வந்தார். மகாத்மா காந்தி வந்தார். தீமையிலிருந்து விடுபட இராமலிங்க அடிகளும் தோன்றினார்.

இராமகிருஷ்ண பரமகம்சரும்… பக்தி மார்க்கங்களில் எத்தனை அதர்மங்கள் நடக்கின்றது…? அதிலிருந்து மக்கள் மீள வேண்டும்…! என்று அவர் உணர்த்திச் சென்றார்.

1.இப்படிப்பட்ட மகான்கள் தோன்றி வளர்ச்சி பெற்றாலும் அது நிலைத்திருக்கிறதா…?
2.அது தோன்றி உருப்பெற்ற இடங்களில் இன்று பார்த்தால் “நான் பெரியவன்… நீ பெரியவனா…?” என்று தான் செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள்.
3.இராமகிருஷ்ணருக்குச் சீடராக வந்த விவேகானந்தருடைய தத்துவங்களையும் மாற்றி விட்டார்கள்.

கடவுளைக் காட்டுகின்றாயா…? என்று விவேகானந்தர் கேட்கின்றார். கடவுளைக் காட்ட முடியாது… ஆனால் உணர முடியும் என்று இராமகிருஷ்ணர் உணர்த்துகின்றனர்.

உனக்குள் உள் நின்று இயக்கும் உணர்வு எதுவோ… எதை நீ நுகர்கின்றாயோ அந்த உணர்வின் இயக்கமாக உடல் இயங்குகின்றது.
1.உள் நின்று இயக்குவதே கடவுளாகின்றது.
2.எதன் உணர்வு வலுவோ அதுவே உன் உடலில் இருந்து இயக்குகின்றது என்று தெளிவாக்குகின்றார் இராமகிருஷ்ணர்.

இதைத்தான் ஒவ்வொரு மனிதனும் எப்படி இயக்க வேண்டும் என்று… ஒரு மனிதனை நல்லவனாக்க வேண்டும் என்றால் “அந்த நல்ல உணர்வை நுகரப்படும் போது என்னை நல்லதாக்குகின்றது…” ஒவ்வொரு மனிதனுடைய எண்ணங்களையும் ஒன்றாக இணைக்கப்படும் பொழுது அது எந்த வகையில் ஒன்று சேர்த்து இணைகின்றது என்று விவேகானந்தர் தெளிவாகக் கூறியுள்ளார்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

1.தாவர இனம் சைவம்.
2.நாம் உணவாக உண்பது அணுவாக ஆவது அசைவம்.
3.செடி இருந்த இடத்தில் இருந்து தன் சக்தியை எடுத்துக் கவர்வது சைவம்.
4.ஆனால் அந்தச் செடியின் சத்தை நுகர்ந்து அந்தச் செடி இருக்கும் பக்கம் நகர்ந்து சென்று அதை உணவாக எடுத்து செல்லும் உயிரினங்கள் அசைவம்
5.இருந்த இடத்தில் உணவாக உட்கொண்டால் சைவம்.
6.நகர்ந்து சென்று அதை உணவாக உட்கொண்டால் அசைவம் என்று சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றது.

ஆனால் நம் உணவுக்காக மற்ற அசைவத்தைச் சாப்பிடுகிறோம். ஆட்டைச் சாப்பிடுகிறோம். ஆடு விஷத்தின் தன்மை கொண்டு உடலாக ஆனது.

அதை நாம் சாப்பிட்டு உடலில் சேர்ந்தால் என்ன செய்யும்…? என்று நினைக்கிறீர்கள்…! அந்த அணுக்கள் எல்லாம் நம் உடலாக உருவாகிறது. அப்போது ஆட்டுக் கறியையே தான் மீண்டும் கேட்கத் தோன்றும்.

அந்த ஆட்டுக் கறி மேல் ஞாபகம் அதிகமான பின் அதனின் விஷத் தன்மை நமக்குள் கூடி மனித உணர்வுகள் இங்கே குறைய ஆரம்பிக்கின்றது.
1.குறைந்த பின் சாகப் போகும் போது ஆட்டுக் கறி மீது தான் ஞாபகம் வரும்.
2.ஆக எதை விரும்பிச் சாப்பிட்டோமோ அந்த ஞாபகம் வரும்.

உயிர் பிரியச் சிரமப்படுகிறது என்றால் பெரியவர்கள் என்ன சொல்வார்கள்…? கறியை நிறையச் சாப்பிட்டிருக்கின்றார். இரண்டை வேக வைத்துக் கொடுங்கள். சீக்கிரமே உயிர் போகும்…! என்று சொல்வார்கள்.

அந்த நினைவுடன் உயிர் வெளியில் போனால் அப்புறம் நேராக ஆட்டின் உடலுக்குள் தான் போகும். அந்த உடலுக்குள் போய் நம்மை ஆடாகப் பிறக்கச் செய்யும்.

இன்றைக்கு மனிதனாக இருந்து ஆட்டை ருசித்துச் சாப்பிட்டால் நாளைக்கு ஆடாகி மே…மே…! என்று கத்த வேண்டியது தான்.

ஆனால் உங்களை நான் சாப்பிட வேண்டாம் என்று சொல்லவில்லை. சாப்பிட்டால் உயிர் உங்களை இப்படித் தான் மாற்றும். ஒன்றை விழுங்கி வருவது தான் அசைவம்.

1.ஆக மொத்தம் நமக்குள் சைவமாக இருக்கக்கூடியதை
2.நாம் உணவாக அணுவாக உருவாக்குதல் வேண்டும்.
3.சைவத்துக்கு போய்விடுவோமா… செடி கொடிக்குப் போவோம் என்று நினைக்காதீர்கள். அப்படிப் போக முடியாது.

சில சாமியார்கள் என்ன சொல்வார்கள். நான் வேக வைத்ததைச் சாப்பிட மாட்டேன். நான் செடிகளில் விளைந்ததையும் காய் கனிகளையும் பச்சையாகத்தான் சாப்பிடுகிறேன்.

இந்த நிலைகளில் நான் பரிசுத்தமாக இருக்கின்றேன்…! என்று பச்சையாகச் சாப்பிட்டால் என்ன செய்யும்…? அந்தச் செடி கொடியில் இருக்கின்ற மணமே (வாசனை) இவர்கள் உடலிலும் ஆன்மாவிலும் உயிரிலும் சேரும்.

அதில் உள்ள உணர்வின் தன்மை பெற்ற பின் இந்த உயிர் வெளியிலே சென்ற பின் அந்தச் செடி கொடிகளுக்குத் தான் செல்லும்.
1.நான் வேக வைத்ததைச் சாப்பிட மாட்டேன் என்று சொன்னால்
2.செடி கொடிகளுக்குள் சென்று புழுவாகவோ பூச்சியாகவோ தான் பிறக்க வேண்டும்.

மாமிசத்தை வேக வைத்து எடுத்தாலும் அந்த உணர்வின் தன்மை நமக்குள் அணுவாகும் போது அசைவத்தை உணவாக உட்கொள்ளும். மீண்டும் மிருக இனங்களுக்குள் தான் செல்வோம்.

ஆகையால் இத்தகைய நிலையில் இருந்து நாம் விடுபட வேண்டும். மனிதனான பின் வேக வைத்து மாற்றி அருள் ஒளியை நீங்கள் கூட்டிக் கொண்டால் வேகா நிலை பெறலாம்.

அருள் ஒளியின் உணர்வாகச் சுடராக நமக்குள் மாற்றப்படும் போது நாம் வேகா நிலை பெறுகின்றோம்.
1.அதாவது போகாப்புனல்
2.இன்னொரு சரீரத்திற்குள் போவதில்லை…!

கருவுற்ற காலத்தில்… சந்தர்ப்பத்தில் நுகர்ந்த உணர்வால் நடக்கும் சில விசித்திர நிகழ்வுகள்

 

உயிரினங்களில் மாற்றங்கள் எவ்வாறு ஆகின்றது…? என்ற நிலையும் கர்ப்பமாக இருக்கும் உயிரினங்களில் மற்ற உயிரினம் துரத்தி வரப்படும் பொழுது அந்த உணர்வினை நுகரும் பொழுது
1.கருவுக்குள் இருக்கும் அந்தச் சிசுவுக்குள் இந்த உயிரினத்தின் உணர்வுகள் ஒட்டிய பின்
2.கருவிலேயே எப்படி எல்லாம் மாற்றமாகிறது…? என்பதையும் குருநாதர் காட்டுகின்றார்.

குரங்கை எடுத்துக் கொண்டால் அதில் எத்தனையோ மாற்றங்கள் உண்டு, மற்ற மிருக இனங்கள் இதைத் துரத்தி வரும் நிலையில் உற்றுப் பார்க்கும் பொழுது கர்ப்ப நிலைகளில் அந்த உணர்வுகள் படப்பட்டுப் பரிணாம வளர்ச்சியிலும் அதனுடைய வளர்ச்சி தொடர்கள் எவ்வாறு வருகிறது…? என்று உருமாற்றங்கள் எப்படி ஆகிறது…? என்று காட்டுகின்றார் குருநாதர்.

மனிதர்களாக நாம் வாழுகின்றோம். கர்ப்பமாக இருக்கும் தாய் ஒரு ஊனமுற்ற குழந்தையை உற்றுக் கூர்மையாகப் பார்த்து அதனுடைய க்ஷேமத்தை விசாரித்து…
1.பரிவு கொண்டு அந்த குழந்தையைப் பற்றி அறியும் நிலையில் ஊனமுற்ற உணர்வினை நுகர்ந்து விட்டால்
2.தன் கருவில் இருக்கும் குழந்தையும் ஊனமான குழந்தையாக மாறும்.

இதைப் போலக் கருவிலே வளரும் உயிரினம் தன் தாய் கவரும் உணர்வுகள் கொண்டு எவ்வாறு விளைகிறது…? என்று கீதையிலே தெளிவாகக் காட்டியுள்ளார்கள்.

அதாவது கண்ணன் கருவிலிருக்கும் குழந்தைக்கு உபதேசித்தான்…!

கண்கள் மற்ற உணர்வினை நுகர்ந்து அந்தத் தாய்க்கு இந்த உணர்வைக் கொண்டு இயக்கினாலும் கருவில் வளரக்கூடிய சிசுவிற்கும் இந்த உணர்வுகள் பதிவாகி அந்த உணர்வு பதிவான பின்
1.கண்ணால் பதிந்த நிலைகள்… அந்த உணர்வின் இயக்கமாகத் தொடரப்படும் பொழுது
2.அந்த அறிவின் தன்மை அங்கே வருகிறது என்பதைத் தெரியப்படுத்துவதற்கு
3.வியாசகர் கண்ணின் இயக்க நிலைகளை அப்படித் தெளிவாகக் காட்டியுள்ளார்.

பல கோடிச் சரீரங்களில் உயிர் பரிணாம வளர்ச்சியில் வளர்ந்து வந்த நிலைகளையும்… அதிலே வளர்ச்சி பெற்று வந்த மனித நிலைகளையும்… ஊனமுற்ற குழந்தைகள் அது எவ்வாறு உருவாகிறது…? என்ற நிலையையும் குருநாதர் காட்டுகின்றார்.

உதாரணமாக காட்டில் ஒரு புலி கர்ப்பமாக இருக்கின்றது. ஆனால் அடிபட்டு நோய்வாய்ப்பட்டு இருக்கின்றது. அதே சமயத்தில் தன் இரைக்காக ஒரு மானை அந்தப் புலி உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கின்றது.

ஏனென்றால் அடிபட்டு நகர முடியாத நிலையில் இருக்கிறது. ஆனால் கர்ப்பமாக இருக்கின்றது. தன் இரைக்காக எண்ணிப் பார்க்கின்றது.

அந்த மானையே எண்ணி எண்ணிக் கண்களால் பார்க்கப்படும் பொழுது அந்த உணர்வுகள் அந்தப் புலியின் கருவிலே விளையத் தொடங்குகிறது.

அந்தப் புலிக்கும் மானுக்கும் உண்டான வித்தியாசங்கள் இருந்தாலும்…. அந்தப் புலி ஏக்கத்தால் மானையே எண்ணி ஏங்குகின்றது.
1.இந்த உணர்வின் சத்து கருவில் இருக்கக்கூடிய உயிரணுக்களில் இது இணைக்கப்பட்டு
2.அதற்குள் எவ்வாறு விளைகிறது…? என்பதை குருநாதர் காட்டுகின்றார்.

இதை உங்களிடம் லேசாகச் சொல்கிறேன். ஆனால் என்னைக் குருநாதர் பட்டினியாக இருந்து அதைக் காணும்படி செய்தார். எந்தப் பக்கமும் நகர விடவில்லை.

உயிரினங்களில் தான் நுகர்ந்தறிந்த உணர்வுகள்… கண்ணால் பார்த்து உணர்வை நுகர்ந்த உயிர் தனக்குள் உணர்வாக அமையப் பெற்று அந்த உணர்வின் அறிவாக இயக்கப்பட்டு உடலுக்குள் உணர்வுகள் பதிந்த பின் “கருவில் வளரும் சிசுக்களுக்கு எவ்வாறு அது ஒட்டுண்ணி போன்று உணர்வுகள் இயக்கப்படுகிறது…?” என்ற நிலைகளைத் தெளிவாகக் காட்டுகின்றார்.

இரைக்காகத் தேடினாலும் புலியின் உணர்வுக்குள் மானையே எண்ணி ஏங்குகிறது. ஏனென்றால் உடலில் அடிபட்டிருப்பதால் தன் இரையைப் பிடிக்க முடியவில்லை.

கண் கொண்டு மானையே பார்த்து ஏக்கத்தின் உணர்வுகள் கருவில் இருக்கக்கூடிய புலிக் குட்டிக்குள் இது படப்பட்டு இந்த உணர்வுகள் அதனுடைய ரூபம் எப்படி மாறுகின்றது…? என்பதை குருநாதர் காட்டுகின்றார்.

அந்தப் புலி குட்டி போடும் வரையிலும் இந்த இடத்தை விட்டு நகர விடவில்லை. அதனின் உணர்வும் வளர்ச்சியும் அறிவதற்காக அங்கேயே அமர்ந்து தியானிக்கும்படி செய்தார்.

ஜோசியம் பார்ப்பவர்கள் மற்றொருவர் உணர்வினை நுகர்ந்து “அவர்கள் என்னென்ன நினைத்தார்கள்…?” என்று சொல்கின்றார்கள் அல்லவா…!

இதைப் போலத் தான் அந்த உணர்வின் இயக்கமும் அதனின் அலைகள் எவ்வாறு தொடர்ந்திருக்கின்றது…? என்ற நிலையைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளும்படி இந்த உணர்வின் அறிவை எனக்கு ஊட்டினார்.

அந்தக் கருவிலிருக்கக்கூடிய குட்டிக்கு மானின் உணர்வுகள் அதிகமாகப் பட்டபின்… மானின் உடலில் இருந்து வெளிப்படும் உணர்வலைகள் இந்த புலி உடலுக்குள் எப்படி அடைகின்றது…?

அதைப் புலி சுவாசித்த பின் இரத்தத்தில் கலந்து வரும் பொழுது
1.கருவிலே விளையக்கூடிய சிசு புலியின் ரூபம் மாறி மானின் நிலைகள் எவ்வாறு இணைகின்றது…?
2.இரண்டும் கெட்டானாக அது விளைகின்றது… இதை நேரடியாகவே தெரியப்படுத்துகின்றார் குருநாதர்.

நீங்கள் பத்திரிகையில் பார்த்திருக்கலாம். உலகத்தில் சில இடங்களில் ஆட்டுத் தலையுடன் குழந்தை பிறந்தது. ஆனால் மனித உடல் இருந்தது… மனிதனின் தலையும் மிருக உடலும் இருந்தது என்றால்லாம் பார்த்திருப்பீர்கள்.

காரணம்… ஏக்க உணர்வு கொண்டு பிறிதொன்றை உற்றுப் பார்த்து நுகரப்படும் பொழுது கருவுக்குள் அப்படி எல்லாம் மாறி விளைகின்றது.

ஆகவே… விஞ்ஞான அறிவால் இன்று எத்தனையோ உண்மைகளை நாம் அறிகின்றோம். ஆனால் மெய் ஞானிகள் ஆரம்பத்திலேயே எல்லாவற்றையும் கண்டுணர்ந்து புலனறிவாலேயே தனக்குள் விண்ணின் ஆற்றலைப் பருகி அவர்கள் ஆற்றல்மிக்க சக்திகளைப் பெற்றுக் கொண்டார்கள் என்பதை குருநாதர் காட்டினார்.
1.என் கண் புலனறிவிற்கு அந்த ஊட்டச்சத்தை ஊட்டி அந்தப் புலனின் நிலையைக் கொண்டு உற்றுப் பார்த்து
2.அதனின் செயலாக்கங்கள் எவ்வாறு…? என்று அறியம்படிச் செய்தார்.

அந்த அனுபவத்தைத் தான் இப்பொழுது சொல்கின்றேன்.

நான் கல்வியறிவு அற்றவன். குருநாதர் உணர்வின் வலுப் பெற்று அந்த உணர்வின் துணையால் கண்டுணர்ந்த உணர்வின் தன்மையை
1.நீங்கள் அனைவரும் இதை அறிந்து கொண்டால்
2.நமது சாஸ்திரம் எத்தகைய நிலைகள் மெய் உணர்வை நமக்கு உணர்த்தி உள்ளது…? என்று அறியலாம்.

மகாபாரதமோ இராமாயணமோ கந்த புராணமோ சிவபுராணமோ இவை அனைத்திலும்… அதிலே கொடுக்கப்பட்ட உண்மைகள் சாஸ்திரப்படி மெய்.

இந்த உண்மைகளை மனிதன் உணர்ந்தால் அந்த ஞானிகள் சென்ற பாதையில் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நிலை பெறுவது திண்ணம். நாம் பிறவியில்லா நிலையை அடைய முடியும் என்பதை குருநாதர் தெளிவாக்கினார்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

“பிரதோஷம்…” என்பது
1.பிறருடைய உணர்வுகள் வராதபடி
2.பிறருடைய சங்கடங்கள் வராதபடி
3.பிறருடைய ஆவிகள் வராதபடி
4.பிறருடைய பற்று வராதபடி இருப்பது தான் பிரதோஷம்….!

ஆனால் இன்றைய மனித வாழ்க்கையில் ஏதாவது சாங்கியங்களைச் செய்தால் பிரதோஷம் நீங்கிவிடும் என்று செய்வார்கள். இதனால் பலன் ஏதும் இல்லை.

1.பிறருடைய உணர்வுகள் நமக்குச் சாராதபடி இருக்க வேண்டும் என்று சொன்னால்
2.”அவர்களுடைய உணர்வுகளை நமக்குள் சேர்த்துப் பிரதோஷம் ஆக்குகின்றோம்…”

பிரதோஷம் அன்றைக்குப் பழங்கள் எல்லாம் வைத்துச் சாமி கும்பிட்டு அர்ச்சனை செய்து அபிஷேகம் செய்து தோஷம் வராமல் தடுக்க வேண்டும் என்றால் இது முடியாது.

ஆக மொத்தம் பிறருடைய உணர்வுகளை நமக்குள் இயக்கவிடாது “பிறருடைய அந்தத் தோஷத்தைத் தடுக்க வேண்டும்…!” என்ற எண்ணமே வருவதில்லை. பிரதோஷம் என்றால் அன்றைக்கு மந்திரங்களைச் சொல்லி இன்னொரு தோஷத்தைத்தான் சேர்த்துக் கொள்கிறோம்.

ஏனென்றால்
1.எந்த மந்திரத்தைச் சொல்லிப் பதிவு செய்து உள்ளீர்களோ
2.பிரதோஷம் அன்றைக்கு எவ்வளவு மந்திரத்தைக் காதில் கேட்டீர்களோ
3.இந்த உணர்வின் தன்மை இங்கே வந்தபின் கடைசியில் இறந்தபின்
4.அதே மந்திரத்தைச் சொன்னால் நம் ஆன்மாவை இன்னொருவர் கைவல்யம் செய்து கொள்வதற்குப் பயன்படும்.

உதாரணமாக ஒரு நோயைப் போக்குவதற்காக என்று சொல்லி அந்த மந்திரத்தைப் பதிவு செய்து கொண்டு போனால் அதே உணர்வை எடுக்கும் போது
1.இறந்த பின் இந்த ஆன்மாவைக் கைவல்யம் செய்து கொண்டு
2.இன்னொரு உடலுக்குள் நோய் தீருவதற்காக
3.இந்த ஆவியை ஏவல் செய்வார்கள்… அதற்குத் தான் பயன்படும்.

மனிதன் உடலுக்குள் விளைவதை இத்தனை மந்திர ஜாலம் செய்து பல வேலைகளைச் செய்யப் பயன்படுத்திக் கொள்வார்கள். இப்படி ஒரு மனிதனுக்குள் விளைந்தது தான் எத்தனையோ உணர்வுகள். அதைத்தான் கரையான் மந்திரம் என்பது.

கரையான் என்ன செய்கிறது…? கட்டைக்குள் கரையான் சென்ற பின் அதிலே அதன் மலம் பட்டபின் கட்டையே மண்ணாகப் போய்விடும். அந்த மாதிரி கட்டையைச் சீக்கிரம் நம்மால் கரைக்க முடியுமா..! என்றால் முடியாது.

இதைப் போன்ற உணர்வின் தன்மை வரும் போது வேதங்களில் (அதர்வண) மூலத்தின் மூல நிலைகள் உண்டு.
1.இந்த உணர்வின் தன்மை இரண்டும் உராயப்படும் போது
2.இறந்தபின் அதைப் பிரித்து இன்னொரு மனிதனுக்குள் பாய்ச்சிச் செலுத்தியபின்
3.அந்த உடலுக்குள் இருக்க வேண்டும் என்றால் இந்த உணர்வைக் கரைத்துவிடும்.
4.பின் ஆவியுடன் (காற்றுடன்) கலக்கும்.

மீண்டும் அதற்குண்டான எதிர்மறையான நிலை ஆனபின் பொருளாக வந்துவிடும். ஒரு டப்பாவுக்குள் சிறு துவாரம் (ஊசி அளவு) வைத்தால் அதன் வழியாக அதற்குள் வந்துவிடும். மீண்டும் மாற்றினால் அது ஆவியின் நிலையாக மாறும்.

இது எல்லாம் மனிதனுக்குள் உருவான நிலைகள்…!

இதே போல பல உயிரினங்களும் உண்டு. மந்திரங்களை எடுத்து அந்த உயிரினங்களைக் கேட்க வைத்துப் பின் அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் எடுத்தபின் அதை வைத்துப பல தீமைகளைச் செய்பவரும் உண்டு.

“ஒடியர்கள்…!” என்று இருக்கின்றார்கள். இந்த அசுர உணர்வு கொண்டு பறந்து போகும் காக்காயை அவர்களின் ஒடிய மொழியில் சொன்னால் அதனின் இறக்கை பிய்ந்து துண்டாக விழும்.
1.அந்த ஒலி அதிர்வுகள் (ஒடியன் மந்திரம் என்பது) அங்கே அவ்வாறு மாற்றும்
2.எப்படி ஒரு மின்னல் தாக்குகின்றதோ அதைப் போல உணர்வின் இயக்கங்கள் கொண்டு செய்வார்கள்… இது எல்லாம் உண்டு…!
3.செய்வினை தோஷம் என்பதெல்லாம் உண்மை தான்..!
4.ஒருவருக்கொருவர் குடும்பத்தைக் கெடுக்க வேண்டும் என்ற நிலையில் செய்வினை தோஷங்கள் செய்திருப்பார்கள்.

அதிலிருந்து முழுமையாக விடுபட வேண்டும் என்றால்… “அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைத் தியானத்தின் மூலமாக எடுத்து…எடுத்து….எடுத்து….” இந்தத் தோஷங்கள் உங்களுக்கு வராதபடி காக்க முடியும்.

1.துருவ நட்சத்திரத்தின் வலுவை உங்கள் ஆன்மாவில் பெருக்கி விட்டால்
2.எந்தத் தோஷங்களும் உங்களைத் தாக்காது
3,நீங்கள் எடுக்கும் அருள் உணர்வுகள் உங்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை வளர்த்துக் கொண்டால் தீமையை நீக்கும் சக்தியை நீங்களே பெறுகின்றீர்கள். நீங்கள் தீமையை நீக்கிப் பழகி விட்டால் அடுத்து என்ன செய்யலாம்…?

யாராவது சங்கடத்தில் வருகின்றார்கள் என்றால்…
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்தால் நல்லதாகிப் போகும்.
2.“உங்கள் குடும்பம் நல்லாகும்…!” என்று நீங்கள் இதைச் சொன்னால்
3.உங்கள் சொல் அவர்களையும் நல்லதாக்கும்.

3,நீங்கள் எடுக்கும் அருள் உணர்வுகள் உங்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும்.

லேசர் இயக்கம்

 

கண்ணின் நினைவுகளை நாம் எப்படிப் பயன்படுத்துகின்றோம்…? வெகு தொலைவில் இருப்பான் எதிரி. அவனைக் கோபமாக நினைத்தவுடன் என்ன நடக்கின்றது…?

இந்தத் தீமையின் உணர்வுகள் அங்கே பாய்ச்சப்பட்டு அவன் செயலற்றவனாக ஆகின்றான், அவன் உணர்வு நமக்குள் இருப்பதால் கண் வழி நம் உணர்வைச் செலுத்தும் பொழுது இந்த லேசர் இயக்க ஒளிகள் அங்கே தாக்குகின்றது.

அன்று ஈராக்கில் யுத்த நேரத்தில் பாதாளத்தில் அவர்கள் மறைந்திருந்து பல வேலைகளைச் செய்தார்கள். ஆனாலும் அதைக் கண்டு கொள்வதற்காக லேசரைச் செயல்படுத்தினார்கள்.

மின் கதிர்களால் இயக்கப்பட்டது தான் சில நிலைகள். கதிரியக்கப் பொறிகளை அந்த இடத்திலே பாய்ச்சப்படும் பொழுது அங்கே உள்ளே இருக்கக்கூடிய நிலைகளைப் படங்களாக எடுத்துக் காட்டுகின்றது.
1.எக்ஸ்ரே எப்படி உடலுக்குள் ஊடுருவி படமாகக் காட்டுகின்றதோ இதே போன்று
2.லேசர் இயக்கங்களை பயன்படுத்தி அங்கே ஈராக்கில் மறைந்திருந்த நிலைகளைக் காணுகின்றார்கள்.

குண்டுகளைப் போட்டாலும் எதிர்த்துத் தாக்கும் தன்மையும் அதைத் தாங்கக்கூடிய கான்கிரீட்டுகளாகவும் அவர்கள் போட்டு வைத்திருந்தார்கள்.

எதிர்நிலை எக்கோ… பதிவு செய்யக்கூடிய நிலை இருந்தாலும் அதையும் அறிந்து லேசர் மூலம் வலுவாக இயக்குகின்றார்கள். அந்த லேசரைப் பாய்ச்சி அதன் துணை கொண்டு ஊடுருவி… கதிரியக்கங்களை உள்ளே பாய்ச்சி… அந்த கம்பிகளை உருவாக்கும் சக்தி கொண்டு வருகின்றான்.
1.பின்பு தான் குண்டுகளைப் போட்டு பாதாளத்தில் இருக்கும் அந்தச் சுரங்கங்களைக் கண்டறிகின்றார்கள்
2.ஏனென்றால் இப்படித்தான் அன்று யுத்தம் செய்தார்கள்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் இதையெல்லாம் யாம் கண்டது தான், தெரிந்து கொண்டோம் என்றால் உங்களைப் பாதுகாப்பதற்கு வேண்டுமல்லவா…!

எத்தனையோ அடுக்குகளை வைத்துத் தான் எதிலும் நொறுங்கிவிடாதபடி அவர்கள் பாதுகாப்பாக இருந்தார்கள். அதற்காக வேண்டி ஒவ்வொரு அடுக்கிலும் எதிர்ப்புணர்வை வைத்திருந்தார்கள்.

லேசர்… எதிர் நிலையை மாற்றி அந்த தாக்குதலை நிறுத்தக்கூடிய நிலைகளையும் கண்டுபிடித்துச் செயல்படுத்தினார்கள். ஆனால் லேசர் மூலம் ஒளி அலைகளைப் பாய்ச்சி அங்கிருக்கும் படத்தைப் பதிவாக்குகின்றார்கள்.

பூமிக்கு அடியில் இருப்பதை எப்படிக் காணுகின்றார்கள்…?

1.மேலே விமானத்தில் பறந்து கொண்டே உணர்வலைகளைப் பாய்ச்சி மோதப்படும் பொழுது
2.அது அப்படியே கோடு போட்டுக் கொண்டே செல்கின்றது.

அதை வைத்து இந்த இடத்தில் நீர் இருக்கின்றது இன்ன இடத்தில் எண்ணெய் இருக்கின்றது இன்ன இடத்தில் பழைய காலத்து உலோகங்கள் இருக்கின்றது இங்கே பல மிருகங்கள் இருக்கின்றது என்பதை விமானத்தில் பறந்து செல்லும் பொழுதே எதிர் நிலைகளை வைத்து லேசர் இயக்கத்தின் மூலம் தான் கண்டுபிடிக்கின்றார்கள்.

விஞ்ஞானி இப்படித்தான் கண்டு கொள்கிறான். ஆனால் மெய்ஞானி “தன் எண்ணத்தால்… அகண்ட அண்டத்தையும் அளந்தறிந்தான்…”

நாம் இந்தச் சூரிய குடும்பத்தில் தான் வாழ்கின்றோம் என்று நினைக்கின்றோம் ஆனால் இதைத் தாண்டி வெளியே செல்ல வேண்டும் என்றால் ராக்கெட்டில் எவ்வளவு காலம் பிடிக்கிறது…?

நம் குருநாதர் என்ன செய்தார்…?
1.எண்ணத்தின் மனோநிலை ஆனாலும் நாம் எண்ணும்போது உடனடியாக அங்கே டச் ஆகின்றது (இணைக்கின்றது).
2.2000 சூரியக் குடும்பத்திற்கும் மனதைப் பாய்ச்சும்படிச் செய்கின்றார்.
3.ஒவ்வொரு சூரியக் குடும்பமும் என்ன செய்கிறது…? அதிலே ஒதுங்கிய தூசிகள் என்ன செய்கின்றது…?
4.ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு ஒன்றுடன் ஒன்று ஒத்துழைத்து எப்படி வாழ்கின்றது…? என்பதை எல்லாம் குருநாதர் காட்டுகின்றார்.

மரம் செடி கொடியாக இருந்தாலும் தனித்து வாழ முடியாது. ஒரு செடி உருவானாலும் “அதைத் தொடர்ந்த தாவர இனங்கள் மடிந்தால்…” இதற்குச் சத்து குறையும் இதுவும் வீழ்ச்சி அடையும்.

சில தாவர இனங்கள் கலந்து புதுப் புதுச் செடிகளாக உருவாகி இருக்கும். ஆனால் கலந்த செடிகள் மடிந்து விட்டால் சிறிது நாளைக்குத் தான் இந்தப் புதியதாக உருவான செடிகள் வளரும். கடைசியில் அதுவும் மடிந்துவிடும்.

இது எல்லாம் குருநாதர் தெளிவாக எமக்குக் காட்டிய நிலைகள்.
1.காடுகளுக்கு மேடுகளுக்கும் எம்மை அனுப்பி இந்த உண்மைகளை உணரும்படிச் செய்து
2.ஞானிகள் காட்டிய வழியில் மனிதன் எப்படி வாழ வேண்டும்…? என்ற வழியைக் காட்டுகின்றார்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

வாழ்க்கையில் கஷ்டங்கள் வந்தால் நாம் சாங்கிய சாஸ்திரங்களுக்குப் போக வேண்டியது இல்லை. விநாயகர் தத்துவத்தில் சொல்லப்பட்டது போல
1.நாம் எதை வினையாக்க வேண்டும்…?
2.நாம் எதைக் கணங்களுக்கு அதிபதியாக்க வேண்டும்…? என்பதை
3.அந்த அருள் ஞானிகள் காட்டிய வழியில் சென்றால் இன்றைய விஞ்ஞான உலகில் வரும் தீமைகளிலிருந்து மீளலாம்.

வாஸ்து என்றால் என்ன செய்கிறார்கள்…? வீட்டில் ஏதாவது கஷ்டங்கள் வந்துவிட்டது என்றால் வீட்டில் உள்ள சில நிலைகளை (வாசலையோ சுவரையோ) மாற்ற வேண்டும் என்று சொல்வார்கள்.

ஆனால் முதலில் அதே வீட்டில் நன்றாகத் தான் வாழ்ந்திருக்கின்றார்கள். இப்பொழுது தான் கஷ்டம் வந்திருக்கிறது.

வீட்டில் இருக்கும் பழைய வாசல்படியை எடுத்து விட்டு அதை வேறு பக்கம் வைத்தால் அந்த வாஸ்து சாஸ்திரப்படி உனக்கு நல்லதாகும்…! என்று இப்படிக் கொண்டு போகின்றார்கள்.

“வாஸ்து சாஸ்திரம் என்பது உண்மை…!” என்ற நினைவில் அதை ஆழமாகப் பதிவாக்கிய பின்… “வீட்டு வாசலை மாற்றி விட்டால் நமக்கு நல்ல காலம் வரும்..!” என்ற இந்த உணர்வைப் பதிவு செய்கிறார்கள்.

அதன்படி வாசலை மாற்றி வைக்கின்றோம்.

அப்படி வளர்ந்து வரப்படும் போது சந்தர்ப்பத்தில் தன் பையன் வெளியிலே ஏதாவது சேட்டை செய்கிறான் அல்லது பக்கத்து வீட்டுக்காரன் நமக்கோ மற்றவர்களுக்கோ ஏதாவது தொல்லை கொடுக்கிறான் என்று வைத்து கொள்வோம்

அதை உற்றுப் பார்த்து… கேட்டு அந்த உணர்வின் தன்மைகளை எடுத்துக் கொண்ட பின்
1.நமக்குத் தொந்தரவு கொடுக்கிறான்…
2.இன்னொருத்தருக்கும் தொல்லை கொடுக்கிறான்…
3.பாவி இப்படிச் செய்கின்றானே.. இப்படி இருக்கின்றானே..! என்ற உணர்வை எடுத்துக் கொள்வோம்.

நாம் நுகர்ந்த உணர்வுகள் அனைத்தும்
1.நம் உடலிலும் பட்டு… “நம் வீட்டிலும்” பதிவாகி விடுகின்றது.
2.இந்த உணர்வின் தன்மை பதிவான பின் அதே நினைவாகி அதைக் மீண்டும் மீண்டும் கூட்டிக் கொள்கிறோம்.
3.ஒருத்தருக்கு ஒருத்தர் அந்தப் பகைமை உணர்வுகள் வளரத் தொடங்குகிறது.

வாஸ்து சாஸ்திரப்படி வாசலை மாற்றினாலும் கொஞ்ச நாள் நன்றாக இருக்கும். அப்புறம் நாம் எடுக்கும் உணர்வுகள் மாறும் போது அந்தச் சாஸ்திரம் செல்லுமா…?

வாஸ்து சாஸ்திரத்திப்படி வீட்டையோ வாசலையோ சுவரையோ மாற்றி வைக்கின்றார்கள் அல்லவா…! அந்தக் குடும்பங்கள் எல்லாம் பின்னாடி என்ன ஆகிறது என்று பாருங்கள். பணத்தைச் செலவழித்தது தான் மிச்சம்…!

ஏனென்றால் இது எல்லாம் மனிதனுக்குள் எண்ணும் எண்ணத்தைக் கொண்டு அதைப் பதிவாக்கி அதன் வழி இயக்குவது.

ஆனால் வேதங்கள் கூறியது ரிக்… சாம… அதர்வண… யஜூர்.. மீண்டும் சாம. உடல் ரிக். அதிலிருந்து வரக்கூடிய உணர்வு சாம.

ஆகவே அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் எடுத்து
1.கஷ்டம் என்ற நிலை போய்…
2.இவர் ஏதோ உயர்ந்ததைச் சொல்கிறார்… என்ற நிலையில்
3.அந்தக் கஷ்டமான உணர்வின் தன்மையை அடக்குகின்றது அதர்வண
4.அப்பொழுது அந்த உணர்வின் எண்ணம் கொண்டு கொஞ்சம் துயரத்தை மறக்கின்றார். அவர் சொல்லும் உணர்வு யஜூர் (யஜூர் என்றால் வித்து) ஆகிறது.
5.பின் மீண்டும் சாம…! அதாவது வாஸ்து சாஸ்திரப்படி சரி செய்து விட்டோம்…! என்று அவரை எண்ணும் போதெல்லாம் சிறிது நாளைக்கு நல்லது வருகிறது.

ஆனால் முதலில் சொன்ன மாதிரி பக்கத்து வீட்டுக்காரன் தொல்லை கொடுக்கின்றான்… பிள்ளை சொன்னபடி கேட்கவில்லை… என்ற உணர்வுகளை எடுத்து வேதனைப்பட்டால் அந்த வேதனை என்ன செய்கிறது…?

மீண்டும் இந்த நல்லதை அடக்குகிறது அதர்வண.. பின் மீண்டும் யஜூர்…! கஷ்டப்படும் நிலைக்கே அழைத்துச் செல்கிறது. மீண்டும் தீமைதான் நடக்கும்.

ஆகவே அத்தகைய தீமைகள் நடக்காது நிலைகள் வரவேண்டும் என்றால்
1.அருள் ஞானிகள் காட்டிய அருள் வழியில் கோவிலுக்குச் சென்று
2.அங்கே உணர்த்தப்பட்டுள்ள அந்தத் தெய்வ குணத்தையும் அதை அருளிய மகரிஷிகளின் அருள் உணர்வுகளையும் எடுத்து
3.எந்தப் பகைமை உணர்வுகளும் நமக்குள் உட்புகாது தடுத்துக் கொண்டால் அதற்குப் பெயர் கல்யாண ராமா…!
4.தீமைகள் நம்மை இயக்காது மகிழ்ச்சி (சீதா) என்ற உணர்வை அரவணைக்கும் தன்மையாக நமக்குள் வரும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வை நாம் எடுத்தால் வேகா நிலை. இந்த உலகில் துருவ நட்சத்திரத்தை எதுவுமே வேக வைக்க முடியாது.

நீங்கள் அனைவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளைப் பெற்று வேகா நிலை பெற வேண்டும் என்பதற்குத் தான் இதை உங்களுக்குச் சொல்கிறேன் (ஞானகுரு).

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

புதிதாகத் திருமணமான கணவன் மனைவி உங்கள் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் சிறு குறைகள் ஏற்பட்டாலும் அடுத்த நிமிடம் ஈஸ்வரா…! என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ண வேண்டும்.

திருமண நாளில் உங்களுக்கு ஆசீர்வதித்தார்கள் அல்லவா…!
1.அந்த அனைவரின் ஆசீர்வாதமும் பெற வேண்டும் என்று ஏங்கிவிட்டு
2.கணவனுக்கோ மனைவிக்கோ இந்தக் குறைபாடுகள் வந்தாலும் அந்தக் குறைகளை எண்ணாதபடி
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவர் பெற வேண்டும்… நாங்கள் தெளிந்த மணம் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானிக்க வேண்டும்.

மனைவி பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும் அந்த அருள் ஞானம் பெற வேண்டும் என்று மனைவி பால் உள்ள குறைகளை கணவன் இப்படி எண்ணுதல் வேண்டும்.

அதே போல் கணவன் பால் இத்தகைய குறைகள் வந்தாலும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று கணவன் பொருளறிந்து செயல்படும் சக்தியும் மலரைப் போல் மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் பெற வேண்டும் என்று மனைவி எண்ணுதல் வேண்டும்.

என்னை அரவணைக்கும் அந்த அருள் ஞானம் என் கணவர் பெற வேண்டும்… அந்த அருளாசி எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று மனைவி எண்ணிப் பழகுதல் வேண்டும்.

1.ஏனென்றால் மனிதன் என்ற வாழ்க்கையில் எந்தச் சந்தர்ப்பத்திலேயும் சிறு குறைகள் வரத்தான் செய்யும்
2.அந்தக் குறைகளை உடனடியாக நீக்கிப் பழக வேண்டும்.

கணவன் மனைவி இருவருமே எந்தக் குறைகளைக் கண்டாலும் முதலில் தன் தாய் தந்தையரை எண்ணி “உங்கள் திருமண நாளை எண்ணி…” அந்த மகரிஷிகளின் அருள் சக்தியால் என் கணவர்/மனைவி பொருளறிந்து செயல்படும் அருள் சக்தியும் மலரைப் போல் மணம் பெறும் சக்தி பெற்று அருள் ஞானம் பெறும் அந்த அருளாசி எனக்குக் கொடுக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

வெளியிலே எங்கே சென்றாலும் அம்மா அப்பா அருளால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும்… “எங்கள் காரியங்கள் எல்லாம் வெற்றி பெற வேண்டும்…” என்று எண்ணித் தியானிக்க வேண்டும்.

கணவன் வெளியிலே எங்கே சென்றாலும் மனைவியிடம் சொல்லி
1.உன்னுடைய அருளாசி எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்
2.எல்லோரும் என்னை மதிக்க வேண்டும்
3.அந்த அருள் சக்தி உன்னிடம் தான் இருக்கின்றது…
4.எனக்கு அந்த அருளாசி கொடு…! என்று எண்ணிவிட்டு வெளியிலே செல்ல வேண்டும்.

அதே போல மனைவியும் கணவனை எண்ணி என் அன்னை தந்தையரின் அருளால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கணவர் பெற வேண்டும் அவர் சொல்லும் செயலும் புனிதம் பெற வேண்டும் அவர் பார்ப்பதெல்லாம் நலம் பெற வேண்டும் அவர் பார்ப்போருக்கெல்லாம் நல்ல நிலை கிடைக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

விவசாய நிலங்களுக்குச் செல்லும் பொழுதும் மனைவி தன் கணவனுக்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்றும் அவர் பார்வையில் அந்தப் பயிரினங்கள் செழித்து வளர வேண்டும் அந்தச் சக்தி என் கணவருக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ணிச் சொல்லுதல் வேண்டும்.

எங்கே வெளியில் சென்றாலும் கணவன் மனைவியிடம் சொல்லி
1.என் காரியம் சித்தியாக வேண்டும்
2.உன் அருள் வேண்டும் என்று மனைவியிடம் கேட்டுச் செல்ல வேண்டும்.
3.ஏனென்றால் இருவரும் வேறல்ல… சக்தி இல்லையேல் சிவமில்லை… சிவம் இல்லையேல் சக்தியில்லை….!

ஆகவே இந்த வாழ்க்கையில் எப்பொழுதுமே அன்னை தந்தையரின் அருளும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கி வாழ்ந்தால் வாழ்க்கையில் என்றுமே பேரின்பம் கிடைக்கும்.

1.சாதாரணமாக… “மனைவி தான்” என்று எண்ணிவிடக் கூடாது.
2.”அருள் தெய்வம்…!” என்ற எண்ணத்திலேயே நாம் வருதல் வேண்டும்.
3.மகாலட்சுமி…! என்று கூட நீங்கள் எண்ணலாம் – சர்வத்தையும் உருவாக்கும் சக்தி பெற்றது.

பெண்களுடைய வாக்கை என்றுமே ஆண்கள் தொடர்ந்தால் எதை வாழ்த்தி அனுப்புகின்றார்களோ அந்த வாக்கின் பிரகாரம் அந்தக் காரியங்கள் நல்லதாகும்.

கணவன் மனைவி திருமணமாகும் பொழுது இரு மனமும் ஒன்றாக ஆனது போல
1.என்றுமே இந்த வாழ்க்கையில் எண்ணினால்
2.என்றுமே பிரியாத நிலைகள் கொண்டு உங்களுக்கு இனிப் பிறப்பே இல்லை.

இரு உயிரும் ஒன்றி வாழ்ந்து இந்த வாழ்க்கையில் எப்பொழுது நீங்கள் பேரின்பம் பெறுகின்றீர்களோ அந்த அருள் வாழ்வு என்றுமே இருக்கும். அடுத்து உடல் இல்லை. இதே உடலின் உணர்வுகள் ஒளியாகிப் பேரின்பமாக வாழ முடியும்.

உடலை வளர்க்க… கௌரவத்தை வளர்க்க… தன்னையே தான் மெச்சிக் கொள்ள… யாம் சக்தி கொடுக்கவில்லை

 

துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற வேண்டும் என்று ஒவ்வொரு நொடிப் பொழுதும் இணைத்து விட்டால்
1.அது இந்த மனித வாழ்க்கையின் நிலைகளைத் தணித்து
2.அருள் உணர்வு என்ற நிலையை நமக்குள் பெருக்குகின்றது.

அது தான் வாழ்க்கையே தியானம் என்பது.

நான் இதையெல்லாம் உங்களிடம் சும்மா கொடுக்கவில்லை.
1.ஈஸ்வரபட்டர் எனக்குச் சும்மா கொடுக்கவில்லை.
2.அவர் உணர்வின் தன்மையைப் பதிவாக்கினார்.
3.அந்த நினைவின் தன்மை தான் நாம் எடுக்கின்றோம்.

இந்த உடலில் இச்சைக்காக வாழ கற்றுக் கொண்டோம் என்றால்
1.உடலை வளர்க்கவும்… அதிலே கௌரவத்தை வளர்க்கவும்
1அதை வைத்து என்னை மெச்சிக் கொள்ளவும் என்று நான் இருந்தேன் என்றால் “உடலின் இச்சைக்குத் தான் வாழ முடியும்…”

உடலுக்குப் பின் குருநாதர் கொடுத்த சக்தி பயனற்றதாகப் போய்விடுகின்றது.

ஆகவே உடலில் இருக்கக்கூடிய உணர்வுகள் “உடலின் இச்சைக்கு என்று இல்லாதபடி…” எல்லோரும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இந்த ஆசையைத் தூண்டுதல் வேண்டும்.

நீங்கள் பெற வேண்டும் என்று எண்ணினால் அதை நான் பெறுகின்றேன். உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்றால் நான் அதைப் பெறுகின்றேன்.

இதைத்தான் குருநாதர் எனக்குள் உருவாக்கினார்.

ஆகவே இந்தப் பேருண்மையின் உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்கி அந்தப் பதிவை நீங்கள் வளர்ப்பதற்குத் தான் “தொடர்ந்து உங்களுக்கு ஞாபகப்படுத்திக் கொண்டு வருகின்றேன்…”

ஒவ்வொரு நொடியிலும் உங்கள் வாழ்க்கையே தியானமாக அமைக்க வேண்டும் என்று சொல்வது அதுதான்.

இறைவனை அடைய வேண்டும் என்று “ஒரே நிலையில் மந்திரத்தைச் சொல்லிக் கொண்டுள்ளவர்கள் நிலை…”

 

ஆண்டவனின் நாமத்தையே மீண்டும் மீண்டும் ஜெபித்துக் கொண்டிருந்தால் “இறைவனை அடையலாம்…” என்று பலர் அக்காலத்தில் முயற்சி செய்துள்ளார்கள்.

சிவ தத்துவத்தில் எடுத்துக் கொண்டால் ஓ…ம் நமச்சிவாய…! ஓ…ம் நமச்சிவாய…! என்று தொடர்ந்து அந்த ஒலிகளை எழுப்புகின்றார்கள். இந்த உணர்வின் இயக்கத்தின் தொடர் கொண்டு
1.தன் உடலில் உள்ள அணுக்களை தன்னுடன் இணைந்து இயங்கக் கற்றுக் கொள்கின்றார்கள்.
2.அந்த உணர்வின் ஒளி கற்றைகளாக ஆன நிலையில் சரீரத்தை மூடிவிட்டாலும்
3.அதே உணர்வுகள் நுகரப்பட்டு வெப்பத்தின் துணை கொண்டு உடலில் அது இயங்கிக் கொண்டே இருக்கும்.
4.அந்த உணர்வுகள் கடைசி நிமிடத்தில் எதுவோ எல்லாவற்றிலும் இந்த உயிரைப் போலவே இந்த உணர்வுகள் அடங்கி விடுகின்றது.
5.ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய என்ற இந்த ஒலி மீண்டும் அது வந்து கொண்டே இருக்கும்… அதன் இயக்கமாக அது மாற்றி விடுகின்றது.
6.இந்த உணர்வின் ஒலி அதிர்வுகள் தன் உடலில் உள்ள அணுக்களுக்கு ஆன பின்
7.உடல் இருக்கும் ரசங்கள் குன்றும்… உடல் நலியும்… உயிர் உள்ளேயே இருக்கும்.

இதை நேரடியாக எனக்குக் காட்டுவதற்காக இமயமலைச் சாரலில் இரண்டு மூன்று இடங்களுக்கு அழைத்துச் சென்றார் குருநாதர்.

முதலிலேயே ஹரித்வார் அருகில் மரத்துக்கடியிலே ஜெபித்துக் கொண்டிருந்தவரைக் காட்டினார். பெரிய வெள்ளத்தை வரவழைத்து கரைக்கச் செய்தார். கரைந்த பின் ஓ…ம் நமச்சிவாய…! என்று அங்கே சப்தம் வருகின்றது

அதை ஜெபித்தாலும் இந்த உடலுக்குள் தான் சிறைப்பிடித்து இருக்கின்றார். அதற்கு மேல் அவர் விண் செல்லவில்லை. உடலின் உணர்வுக்கே செல்கின்றார்.

ஆனால் கரைத்த பின் வேறு வழி இல்லை அடைப்பட்ட நிலையில் இருந்து எதிரொலி… உணர்வின் ஒலி வரப்பப்படும் பொழுது அவருக்கு மிகக் கஷ்டமாகி விட்டது.

அப்பொழுது குருநாதர் நேரடியாக நீ அவரைப் பார்க்கக் கூடாது என்றார். ஏனென்றால் அவர்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள். நீ அவரை எண்ணி அந்த சப்தரிஷி மண்டல உணர்வை எடுத்தாய் என்றால் இது அவருக்குள் சேரும் என்றார்

காலை நான்கு மணிக்கு “துருவ நட்சத்திரத்தின் உணர்வை அவர் பெற வேண்டும்…” என்று இந்த உணர்வின் ஒலிகளை அங்கே பரப்பப்படும் பொழுது
1.அதன் ஈர்ப்பால் அந்த ஆன்மா வெளி வருகின்றது.
2.ஒளியின் சரீரமாக இருளுக்குள் அடைப்பட்டிருந்த நிலை ஒளியாக மாறி விண் செல்லும் சந்தர்ப்பம் உருவாகின்றது.
3.அதன்படி அந்த ஆன்மாவை நீ விண் செலுத்து என்றார் குருநாதர்.

இதே மாதிரி இன்னொரு இடத்திலே ஜோஸ்மெட்டுக்கு மேலே ஒருவர் புதையுண்டு இருக்கின்றார். அங்கே இராணுவப் பாதுகாப்பு இருக்கின்றது.

ஒரு பெரிய ஓடை வருகின்றது. அந்த ஓடைக்குள் திட்டுகள் இருக்கின்றது. மழை பெய்தால் தண்ணீராக வரும். ஆனால் கரையின் ஓரத்தில் திட்டுக்குள் அடங்கி இருக்கின்றார்.

ஹரி ஓ…ம் நமோ நாராயணா…! ஹரி ஓ…ம் நமோ நாராயணா…! என்று இதையே சொல்லிக் கொண்டிருக்கின்றார். அதாவது ஹரி ஓம் நமோ நாராயணா என்றால் “சூரியனின் இயக்க நிலை…”

அந்த உணர்வின் தன்மையை எடுத்து ஒளியின் உணர்வாக அவரும் இந்த உடலுக்குள் தான் அடங்கி இருக்கின்றார்.

அதை எல்லாம் நேரடியாகவே எமக்குக் காட்டுகின்றார். உடலுக்குள் அடங்கியிருக்கின்றது… செவி கொண்டு அந்தச் சப்தத்தை நீ கேள் என்றார் குருநாதர்.

இராணுவ வீரர் ஒருவர் என்னிடம் வந்து என்ன செய்கின்றீர்கள்…? என்ன பார்க்கின்றீர்கள்…? என்று கேட்கின்றார்.

அங்கே நான் காதை வைத்து அந்தச் சப்தத்தைக் கேட்டுக் கொண்டிருக்கின்றேன் அல்லவா. ஆனால் இதையெல்லாம் அவரிடம் சொல்ல வேண்டாம் என்று குருநாதர் சொல்லி விட்டார்.

நான் ஊரைச் சுற்றி பார்க்க வந்தேன். இங்கே மலைப்பிரதேசமாக இருக்கின்றது நிலநடுக்கம் ஏதும் வருகின்றதா…? என்று சும்மா பார்க்கின்றேன் என்று சொன்னேன்.

அதிலே தமிழர் ஒருவர் இருந்தார். அப்படிங்களா…! என்றார்.

ஆனால் அங்கே குளிர் அதிகமாக இருக்கின்றது அவர்களெல்லாம் சட்டை போட்டிருக்கிறார்கள். நான் வெறும் கோவணத் துணியைத் தான் கட்டி இருக்கின்றேன்.

என்னுடைய நிலையைப் பார்த்து அந்த மிலிட்டரிக்காரர்கள் எல்லாம் ஆசீர்வாதம் கேட்கின்றார்கள். என்னிடம் விபூதி எதுவும் இல்லை. அங்கிருக்கும் மண்ணை எடுத்துப் பிரார்த்தனை செய்து அதைத் தான் அவர்களுக்குக் கொடுத்தேன். நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள்… உங்களுக்குத் தக்க உபாயமாகும் என்று சொன்னேன்.

ஏனென்றால் பேரீச்சம் பழம் பிஸ்கட் மட்டும்தான் அங்கு கொண்டு சென்றேன். விபூதியைக் கொண்டு செல்லவில்லை. ஆனால் நான் கொடுத்ததை அவர்கள் சந்தோஷமாக வாங்கிச் செல்கின்றார்கள்.

அங்கே ஜெபித்துக் கொண்டிருப்பவர்கள் சூரியனுடைய இயக்கமாக இருந்தாலும் கூட்டை விட்டு வெளியே வந்தால் இதே சூரியனால் கவரப்பட்டுத் தான் சுழல முடியும்.

அப்படிக் கவரப்படும் போது அவர் எந்த ஒலியினைத் தனக்குள் ஓங்கி வளர்த்தாரோ எப்படி இங்கே கூட்டுக்குள் ஒடுங்கினாரோ இன்னொரு உடலுக்குள் சென்றாலும் அவரையும் இது போன்றுதான் உட்கார வைக்கும்.

நாராயணன் செயல் என்ன…? என்று அங்கே தியானமிருக்கும்படி சொன்னார் குருநாதர்.
1.அதன்பின் சில உணர்வின் ஒலிகளை எடுத்து அங்கே பரப்பும்படி செய்தார் குருநாதர்.
2.அந்த உணர்வுகளை அவர்கள் எடுத்தார்கள் என்றால் அதைச் சுவாசித்து அவர்களும் விண் செல்ல உதவும் என்று
3.உணர்வின் எக்கோவாக (ECHO) அங்கே அதைப் பரப்பச் சொன்னார்.
4.அவர் சொன்ன முறைப்படி செயல்படுத்தினேன்.

ஏனென்றால் அந்த இமயமலைச் சாரலில் இது போன்று ஏராளமானோர் உண்டு. இன்னும் அந்தக் கூட்டுக்குள் தான் இருக்கின்றார்கள்.

இதையெல்லாம் நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

சாதாரணமாக நாம் எல்லோருமே மந்திரங்களைச் சொல்லி பழக்கப்பட்டவர்கள் தான். இறந்த பிற்பாடு என்ன செய்கிறோம்…? சுட்ட சாம்பலை எடுத்துப் பாவத்தைப் போக்குவதற்காகக் வேண்டிக் கொண்டு போகிறோம்.

எங்கே…?

கங்கையில் கொண்டு பாவத்தைக் கரைத்து விட்டால் போய்விடும் என்று கரைப்போம். அடுத்து அந்த மந்திரத்தைச் சொல்லி மோட்சத்துக்கு அனுப்பிவிட்டதாக அங்கே சொல்வார்கள்.

வீட்டுக்கு வந்தவுடனே நாம் என்ன செய்கிறோம்…? எல்லோரும் எண்ணெய் தேய்த்துத் தலை முழுகி அப்புறம் புத்தாடைகளை உடுத்தி விநாயகர் கோவிலில் கொண்டு போய் மாவிளக்கு வைத்து நெய் தீபம் இட்டு தீபாரதனை காட்டுவோம். அப்படிக் காட்டினால் மோட்ச தீபம்.

அங்கே அப்படிச் செய்த பின் அமாவாசை அன்றைக்கு என்ன செய்கிறோம்…? அம்மா அப்பா உணர்வுகள் எல்லாம் நம் உடலில் இருக்கும். அவர்களை நாம் எண்ணுவோம். எப்படி…?

அவர்கள் பிரியமாகச் சாப்பிட்ட உணவுகளை எல்லாம் வைத்து நாம் கூப்பிடுவோம். எங்களுடன் இருந்தீர்கள். இதை எல்லாம் சாப்பிடுவீர்கள். உங்களுக்குப் பிடித்த துணிமணிகளை எலலம் வைத்திருக்கின்றோம் என்று சொல்லுவோம்.

இந்தச் சாப்பாடு வைத்த உடனே அவர்கள் உணர்வு நம்மிடம் இருப்பதால் இந்த உணர்வு ஆன்மா (மணம்) ஆனபின்.. அது இங்கே வரும். நாம் இங்கே இதைச் செய்வோம்.

ஆனால் குடுகுடுப்புக்காரன் என்ன செய்வான்…?

நம் வீட்டு வாசல் படியில் இருந்து மண் எடுத்துக் கொண்டு போவான். தலை முடியையும் எடுத்துக் கொள்வான்.

நமக்கு ஆகியவர்கள் ஆகாதவர்கள் என்று எந்தத் தெய்வத்தை எண்ணி மந்திரங்கள எல்லாம் சொன்னோமோ அதை எடுத்துக் கொள்வான்.

இது எல்லாவற்றையும் சேகரித்துக் கொண்டு சுடுகாட்டிற்குச் செல்வார்கள். எந்த இடத்தில் அவர்களைப் (நம் முன்னோர்களை) புதைத்தார்களோ அல்லது எரித்தார்களோ அந்த இடத்திற்குக் கொண்டு போவார்கள்.

நம் பாதம் பட்ட மண்… தலை முடி… துணி… (இதில் எல்லாம் நம் உணர்வின் எண்ணங்கள் உண்டு) இந்த மூன்றையும் வைத்து அந்த இடத்தில் சில மந்திரத்தைச் சொல்வார்கள்.

மந்திரங்களை ஜெபித்த பின் அந்த மண்ணை எடுத்துக் கெடுதலான நிலைகளுக்கு அதைத் தூவி விடுவார்கள். ஆனால் நமக்குத் தெரியாது. மண்ணிலே பாதம் பட்ட பின் இந்த உணர்வின் தன்மை எந்த ஆவியோ அது இங்கே வந்து குவியும்.

அடுத்தாற்போல் என்ன செய்வான்…? நல்ல காலம் வருகிறது…! என்று குடுகுடுப்புக்காரன் சொல்லுவான்.
1.இந்த உணர்வின் ஒலி/ஒளி கொண்டு நம் உணர்வின் அறிவை எடுத்து
2.நம் குடும்பத்திலே உள்ள நிலைகள் எல்லாம் எப்படி எப்படி இருக்கிறது…? என்று கட…கட… என்று சொல்லிக் கொண்டே வருவான்.
3.இது ஒரு வகை.

இது எல்லாம் அன்றைய அரசர்களுக்குத் தூது சென்ற நிலைகள். ஒரு குடும்பத்திலே இன்னென்ன நடக்கிறது என்ற உணர்வின் செயலாக்கங்களை இருந்த இடத்தில் இருந்து அரசனுக்குத் தூது செல்லும் முறை. அரசனால் உருவாக்கபட்ட “ஐந்தாம்படை” என்று அக்காலங்களில் வந்த நிலை.

நாடி சாஸ்திரமும் இதே நிலை தான். ஒரு அரசன் ஆன பின் மந்திரங்களை உருவாக்கித் தன் குடிமக்களுக்குத் தெய்வ பக்தி என்ற நிலையில் பதிவாக்கி விடுவார்கள்.

அத்தகைய மந்திரங்களை மக்கள் தங்களுக்குள் கவர நேர்கின்றது. இப்படிப் பல மந்திரங்களைத் தனக்குள் சேர்த்த பின் அந்தக் குடிமகன் அரச பக்தி என்ற நிலையில் இருப்பான்.

அரசன் சாகாக்கலையாக நாடி சாஸ்திரம் என்ற பெயரில் செயல்பட்டு மந்திரத்தைச் சொன்னான் என்றால் இந்த ஆன்மா அவனுக்குள் போகும். குடிமகனுக்குச் சொன்ன நிலையெல்லாம் சொல்லும். உருவாக்கும் சக்தியை எல்லாம் சொல்லும்.

அந்த நாடி சாஸ்திரத்தை வாசித்த பின் இவன் இன்னொரு கூட்டுக்குள் போவான். ஆசைப் பட்டு விடுவான் என்று அந்த நாடியில் எழுதி இருக்கும்.

இந்த உணர்வின் தொடர்பு கொண்டவன் இதை எத்தனை காலம் வைத்திருக்கலாம் என்ற இந்த நிலை எல்லாம் அதிலே வரும். அடுத்து இன்னாரிடம் கொடுத்து விடு…! என்று போட்டிருக்கும். ஆனால் அந்த மாதிரிக் கொடுக்க இன்று யாரும் இல்லை.

எனக்கு… அது தெரியும் இது தெரியும்..! என்று குடும்பச் சொத்தாக வைத்துக் கொள்கிறார்கள். இப்படிப்பட்ட இவனுடைய ஆசை நிலை கலக்கப்படும் பொழுது அந்த அரசனும் வீழ்ச்சி அடைகின்றான்.

கூடு விட்டுக் கூடு பாயும் தன்மை இவனுக்குள் எடுத்துக் கடும் பேயாக மாறுகின்றான். ஆக மொத்தம் இந்த நாடி நாஸ்திரம் பார்த்த குடும்பம் எல்லாம் பாருங்கள். தொலைந்து போய்விடும். சொல்வது அர்த்தம் ஆகிறதா…?

1.அந்த அரசனுடைய நிலையில் அவன் சொன்ன மாதிரி மந்திர ஒலிகளைச் செலுத்தப்படும் போது
2.அரசனுக்கு வந்த ஆசைகள் எல்லாம் நம் உடலுக்குள்ளும் வரும்.. தப்ப முடியாது…!

ஆகவே இது சாகாக்கலை.

ஆனால் அந்தத் துருவ நட்சத்ததிரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் எடுத்து வளர்த்துக் கொண்டால் அது வேகா நிலை. இந்த அண்டத்தில் உள்ள எதுவுமே நம்மை வேக வைக்க முடியாது.

அந்த நிலையைப் பெறச் செய்வதற்கு தான் துருவ நட்சத்திரத்தைப் பற்றியும் சப்தரிஷி மண்டலங்களைப் பற்றியும் அந்த மாமகரிஷிகளைப் பற்றியும் திரும்பத் திரும்ப உபதேசிக்கின்றோம்.
1.எந்தக் காரணம் கொண்டு நாம் சாங்கிய சாஸ்திரங்களுக்குப் போக வேண்டியதே இல்லை.
2.இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்…!


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply