
மனிதனுக்குள் விளைந்த உணர்வின் தன்மை
உதாரணமாக…
1.யாகம் நடக்கும் இடங்களில் மந்திரத்தை ஓதுகிறார்கள்… நாம் அதை உற்றுக் கேட்டோம் என்றால் அந்த மந்திரங்கள் நமக்குள் பதிவாகி விடுகின்றது.
2.சோமபானம் என்ற நிலையை இணைத்தால் நம் சிந்திக்கும் தன்மை இழக்கப்படுகின்றது.
எதனை எண்ணினோமோ அதன் வழி செல்கின்றது இதன் வழி நாம் செல்லும் இந்த உடலின் உணர்வுகள் பதிந்த பின் கேட்டறிந்த நிலைகள் பிறிதொரு உணர்வின் இயக்கமாகவே வருகிறது.
ஆலயங்களில் இந்தத் தெய்வம் தான் எல்லாவற்றையும் காக்கும் என்று சொல்லும் பொழுது யாகத் தீயிலே பல பொருள்களைப் போட்டு மணத்துடன் அந்த எண்ணத்தைப் பரப்புகின்றனர்.
நாம் நுகர்ந்தறிந்த நிலையில் தெய்வம் நல்லது செய்யும் நம்பிக்கையில் அதை நுகர்கின்றோம். நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் பட்டபின் இதன் வழி அந்தத் தெய்வத்தைக் கண் கொண்டு உற்றுப் பார்க்கின்றோம்.
அங்கே வைத்திருக்கும் சிலையின் உருவமும் அங்கே அலங்கரித்த நிலைகளும் பதிவாகி நமக்குள் வருகின்றது அதிலிருந்து வரக்கூடிய மணத்தையும் மற்றதையும் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்தது அலைகளாக வருகின்றது.
அந்த அலையை நுகரப்படும் பொழுது உருவத்தைக் காண முடிகின்றது… அங்கே இருக்கக்கூடிய நிறங்களையும் காண முடிகின்றது. அதனின் மணத்தையும் உணர முடிகின்றது.
இப்படி நாம் உணர்ந்த உணர்வின் தன்மை நம் உடலுக்குள் வந்தபின் மடிந்தோம் என்றால் என்ன நடக்கிறது…?
இந்த மந்திரத்தை ஜெபித்தால் நீ முருகனைக் காணலாம் என்று சொல்லியிருப்பார்கள். எந்தெந்த குணங்களின் தன்மையோ அதற்குண்டான பதார்த்தங்களை வைத்து அவர்கள் ஜெபிக்கின்றனரோ
1.மனித உடலுக்குள் இந்த உணர்வுகள் கலந்த பின் இறந்தான் என்றால்
2.சூட்சும சரீரத்தில் முருகனைப் போன்று காட்சி தரும்… காளியைப் போன்று காட்சி தரும்.
3.காளியைப் போன்று அசுர உணர்வு கொண்டு செயல்பட்டால் இவன் குணமும் அதே நிலைகள் மாறும்… அசுர செயல்களையே செயல்படுத்துவான்.
4.கருப்பண்ணசாமியோ மாடசாமியோ போன்ற கொடூர உணர்வுகளை நுகர்ந்தால் அதனுடைய செயல்களே நமக்குள் வரும்… பார்க்கலாம்.
5.அருளாடும் போது அசுரத்தனமாக உணர்வுகள் பாய்ச்சப்பட்டு இயக்கும்.
ஆனால் அந்த உணர்வுகள் அவனுக்குத் தெரியாது. அது வேதனை என்ற நிலையாகி பல துன்புறுத்தும் நிலைகளையும் பார்க்கலாம். அவன் அறிய முடியாது. அவன் உடலுக்குள் இருக்கும் உணர்வுகள் அதைத் தாங்கிக் கொள்ளும்.
1.தீமிதி என்ற நிலை வரும் பொழுது அந்த அக்கினியைத் தனக்குள் நுகர்ந்தால்
2.யாகத் தீயைப் போட்டு அதன் வழி இன்னொரு மனிதன் மடிந்திருந்தால் அந்த உணர்வை நுகர்ந்தால்
3.தீயைப் போட்டு மிதித்து இருப்பான் (இறந்தவன்) என்றால்… இவன் அந்தத் தீமிதியைத் தாங்கும் நிலை வருகின்றது.
தீமிதி விழா என்று நாம் கொண்டாடும் பொழுது இதன் வழி விளைந்து அந்தத் தாய் மீது பற்று கொண்டோர் உணர்வுகளும் அதன் வழி மடிந்தால் இந்த உணர்வை மற்றவர்கள் நுகர்ந்தால்
1.தீமிதி விழா என்று வரும் பொழுது அந்த உணர்வின் தன்மை கொண்டு அவனுக்குத் தீயைத் தாங்கும் வல்லமை உண்டு.
2.இது எல்லாம் மனிதனுக்குள் விளைந்த உணர்வின் தன்மை இங்கே வருகின்றது.
ஒரு ஆவியின் தன்மை உடலில் இணைந்து இயக்கப்பட்டால் நெருப்பிலே மிளகாயைப் போட்டோம் என்றால் அந்த நெடியைச் சுவாசித்து நாம் தான் எழுந்து வர வேண்டுமே தவிர “ஆவி பிடித்த அந்த உடலுக்குத் தும்மலும் வராது எதுவும் செய்யாது…”
இதைப் போன்ற இயற்கையின் நிலைகள் மாறி வரும் இந்நிலையில் நாம் இதையெல்லாம் உணர்ந்தால் நாம் எதனைப் பெற வேண்டும்…? எந்த வழியில் வாழ வேண்டும்…? இந்த உடலுக்குப் பின் என்ன…? என்ற நிலையை நாம் சிந்தித்துச் செயல்படுவது மிகவும் நலம்.
குரு காட்டிய அருள் நெறி கொண்டு அவரிடம் 20 வருடம் பெற்ற அனுபவத்த
1.ஒரு உயிர் தோன்றி மனிதன் வரை எவ்வாறு வளர்ச்சி பெற்று வந்தது…?
2.சூரியன் தோன்றிய பின் உயிரணுக்கள் எவ்வாறு உருவானது…? என்று குரு காட்டிய அருள் வழியில்
3.அவர் கண்ட நிலையில் உயிரணுக்களின் தோற்றங்களும் மாற்றங்களும் என்ற நிலையைத் தெளிவாகக் கூறியதைக் கண்டுணர்ந்த பின்பு தான்
4.நீங்களும் இதைப் பெற முடியும்… அறிய முடியும் என்று உணர்த்துகின்றேன்.
இந்த வாழ்க்கையில் இனி எது வேண்டும்…? பிறவி இல்லா நிலை வேண்டும் பிறவா நிலை வேண்டும். அந்த அருள் பெறுவதற்குத் தான் துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஒவ்வொரு நொடிப் பொழுதும் எடுத்துப் பழக வேண்டும் என்று சொல்வது.
அந்தச் சக்திகளை நாம் ஏங்கிப் பெறுவோம். அதை நமக்குள் கூட்டுவோம். வாழ்க்கையில் தன்னை அறியாது வரும் நஞ்சுகளை மாற்றுவோம்.
1.தீமை வரும் பொழுதெல்லாம் துருவ நட்சத்திரத்தின் உணர்வு கொண்டு அதை இடைமறித்து
2.இருள் சூழச் செய்யும் உணர்வினை மாற்றி நமது வாழ்க்கையில் பேரருளை உருவாக்கும் அழியா ஒளிச் சரீரம் பெறுவோம்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.