
ஓசோன் திரை கிழிந்ததை நாம் அடைக்க முடியும்
நாம் அனைவரும் ஒருங்கிணைந்து பூமியில் ஓசோன் திரை கிழிந்ததை… அந்த ஓட்டையை அடைக்க முடியும்.
1.நமது குருநாதர் வழியில் தியானத்தை ஒருங்கிணைத்து ஓசோன் திரை அடைபட வேண்டும்
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அங்கே படர வேண்டும் என்று முறைப்படி தியானித்து ஆணையிடும் பொழுது
3.தொடர்ந்து அதைச் செய்து வந்தால் அடைக்க முடியும்… அந்த நம்பிக்கை உங்களுக்கு வர வேண்டும்
4.நிச்சயம் ஓசோன் திரை அடைபடும்… நம்மால் அடைக்க முடியும்… அந்தத் திறன் உண்டு என்று நம்பிப் பழக வேண்டும்
5.விஞ்ஞானிகளால் முடியாது…! மெய் ஞானிகளின் அருளைப் பெற்று நாம் இதைச் செயல்படுத்த முடியும்.
காரணம் துருவத்தின் வழி விஷக் கதிரியக்கங்கள் புகுந்து தான் பூமியின் ஓசோன் திரை கிழிந்தது.
ஆகவே அருள் மகரிஷிகளின் அருள் சக்தி அங்கே படர்ந்து பூமிக்குள் வரும் தீமைகளை அடக்கிப் பேரருள் பேரொளி என்று பெறும் உணர்வு அனைத்து மக்களுக்கும் பெற வேண்டும் என்று நீங்கள் ஏங்கித் தியானியுங்கள்.
பேரருளைப் பெறலாம்… பேரின்பத்தைப் பெறலாம்… பேரின்பப் பெரு வாழ்வு வாழும் அந்தச் சக்தி உங்களுக்குள் உருவாக்குங்கள்
1.அனைத்து மக்களும் நோயற்ற வாழ்க்கை வாழ உங்களுடைய பிரார்த்தனைகள்… தியானம்… தவம் அமையட்டும்.
2.அனைவருக்கும் மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று தவமிருங்கள்.
அது நல்ல பலனைத் தரும்…!
அந்த அருள் சக்தி உங்களிலே பெருகும்… பேரின்பப் பெரு வாழ்வு வாழ்வீர்கள்… மகிழ்ச்சி பெறும் சக்தியாக உங்களுக்குள் வளரும்… மலரைப் போன்ற மணம் பெறுவீர்கள்… தெளிந்த மனமும் தெரிந்து வாழும் சக்தி நீங்கள் பெறுவீர்கள்.
1.உங்களுக்குள் அந்தச் சக்தி உருவாகி உலகம் அனைத்தும் அந்த அருள் வழியிலே உருவாகும்.
2.நமது பரந்த மனம் “மகிழ்ந்திடும் உணர்வாக நமக்குள் விளைந்து”
3.குரு அருள் உலக மக்களைத் தெளிந்த மனம் கொள்ளச் செய்திட உங்களுக்குள் அருள் ஞானம் பெருகி
4.நீங்கள் என்றென்றும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்திட
5.மகரிஷிகளின் அருள் துணை உங்களுக்கு உறுதுணையாக இருக்கப் பிரார்த்திக்கிறேன் (ஞானகுரு).
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.