
ஈசனுக்குச் செய்யும் தொண்டு
இன்றைய உலக சூழ்நிலையில் மனிதனல்லாது வேறு ஒரு சரீரத்தை உருவாக்கும் செயல் நமக்கு வேண்டாம். ஆகையினால் யாம் உபதேசிப்பதையெல்லாம் நீங்கள் மனதில் வைத்து சொர்க்க பூமியான இந்த மனித உடல் கிடைத்த பின் அசுத்த பூமியாக இதை மாற்ற வேண்டாம்.
சொர்க்க பூமியான இந்த மனித சரீரத்தை நாம் சுத்தப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும்… சொர்க்கலோகமாக நாம் மாற்றலாம். உயிருடன் ஒன்றும் உணர்வினை ஒளியாக மாற்றும் பொழுது இந்த உடலை விட்டுச் செல்லும் போது ஒளியின் தன்மை பெறலாம்.
1.தியானம் எடுத்த அனைவருக்கும் இருட்டிலே கண்களை விழித்துப் பார்த்தால்
2.நம் உடலில் இருந்து பளீர்…ர்… பளீர்…ர்… என்று வெளிச்சங்ள் வெளிப்படுவதைப் பார்க்கலாம்.
3.நாம் எந்த அளவிற்குத் தியானம் எடுக்கின்றோமோ அந்த உணர்வின் சக்தி நமக்குள் வளர்கின்றது… ஒவ்வொருவரும் இதை உணர முடியும்
சுலபத்தில் கிடைக்கிறது என்று அலட்சியப்படுத்தி விட வேண்டாம்.
எத்தனையோ கடினத்திற்கு பின் தான் இது வருகின்றது. புதுத் துணிகளை நாம் எடுத்து அதைச் சட்டையாகத் தைக்க தெரியாதபடி “நானும் தைப்பேன்” என்று கத்திரித்து வீணாக்கி விடாதபடி நாம் செயல்பட வேண்டும். அதாவது நாம் பயன்படும் நிலைகளுக்கு நம் உணர்வின் ஆற்றலை நாம் பெருக்கிக் கொள்ள வேண்டும்.
1.நீங்கள் அனைவருமே குருநாதர் காட்டிய அருள் வழிப்படி
2.அவர் அருள் துணை கொண்டு மெய்ஞானிகள் அருள் ஒளியைப் பெற்று
3.நம்மை அறியாது இருள் சூழச் செய்யும் இருளை நீக்கி இந்த ஒளியின் நிலைகள் வழியறிந்து செயல்படும் ஆற்றலை நாம் பெற்று
4.நம் பேச்சு மூச்சும் நம்மைப் பார்ப்போர் அனைவருக்கும் நன்மை பயக்கட்டும்.
5.அவர்கள் நம்மைப் பார்க்கும் பொழுது நமக்குள் நல்ல உணர்வாகச் சென்று ஒளியின் சுடராகச் செல்லட்டும்.
ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நேரமும் வீண் விரயமாக்காதபடி நம்மை அறியாது இருளச் செய்து கொண்டிருக்கும் சில துன்பங்களை ஊட்டும் உணர்வுகளை நமக்குள் புகாதபடி அந்த உணர்வுகளைத் தடைப்படுத்த வேண்டும்.
அவ்வாறு உட்புகந்தாலும் ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைக் கடுமைப்படுத்தி அந்த அசுத்தங்களை நீக்கி உங்கள் உடலுக்குள் புனித சக்தியாக மாற்றுங்கள். ஏனென்றால்
1.நம்மை உருவாக்கிய ஈசனின் வீடு இந்த உடல் அவனுடைய ஆலயம் அது.
2.ஆகையினால் அந்த ஆலயத்தைச் சுத்தப்படுத்த வேண்டும்
3.எந்த அளவிற்கு நாம் சுத்தப்படுத்துகின்றோமோ “அதற்குண்டான கூலி” கிடைக்கும்.
நமக்குள் வீற்றிருந்து நம்மை உருவாக்கி நல்ல நிலைகளை ஊட்டி நம்மை இயக்கச் செய்யும் அந்த ஈசனுக்குச் செய்யும் தொண்டாகக் கருதி நாம் செயல்பட வேண்டும்.
உங்களுக்குள் யாரும் துன்பத்தை ஊட்டும் எண்ணங்களை உருவாக்கினாலும்
1.அது எனக்கல்ல… அது என்னைச் சாராது.
2.அந்த ஈசனின் அருள் ஒளியை நான் பெறுவேன்
3.அவன் எனக்குள் இருக்க… நல்ல உணர்வை அவன் எனக்கு ஊட்டுவான்
4.”அவன் வழிகளிலே நான் செல்வேன்” என்று இந்த எண்ணங்களை நீங்கள் மாற்றிச் செயல்படுத்திப் பாருங்கள்.
உங்களுக்குள் தெளிவான நிலையாக வரும்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.