March 2024 உபதேசம்

உங்கள் எண்ணங்கள் தன்னிச்சையாக விண்ணை எட்டும்

 

நீங்கள் எத்தகைய துயர் பட்டுக் கொண்டிருந்தாலும்… அல்லது சாபவினைகளோ பாவ வினைகளோ தீய வினைகளோ உங்களுக்குள் சேர்ந்திருந்தாலும்… அதை எல்லாம் நீக்க
1.யாம் உபதேச வாயிலாக… அருள் வாக்கின் தன்மையாக
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் தகுதியை ஏற்படுத்தி உள்ளேன்.

ஆனால் வாக்கினைக் கொடுத்த பின்பும் அதை நீங்கள் விரயம் செய்தால் அது உங்களுடைய அதிர்ஷ்டம் தான்.

நீங்கள் எல்லோரும் அருள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று சதா உங்கள் உயிரை ஈசனாகவும் ஆண்டவனாகவும் குருவாகவும் மதித்து நான் தியானிக்கின்றேன் (ஞானகுரு).

நீங்களும் அதே போன்று மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் தொடர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று தியானிக்க வேண்டும்.

காலையில் எழுந்தபின் இவ்வாறு செய்யுங்கள். உங்கள் நோயை மறந்து விடுங்கள்… நோயின் தன்மை அது செயலிழந்து விடும்.

1.எந்த அளவுக்கு யாம் கொடுத்த வாக்கினை நீங்கள் கூட்டிக்கொண்டு வருகின்றீர்களோ
2.அது அனைத்தும் உங்களுக்குள் மிகச் சக்தி வாய்ந்ததாக மாறும்.

ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் பட்டால் அதிலே ஆயிரம் குடம் நல்ல பாலை விடும்பொழுது அந்த நஞ்சின் தன்மை வலு இழப்பது போன்று நீங்கள் “ஆயிரம் தரம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற உணர்வினைக் கூட்டினால்” உடலில் உள்ள நோய்கள் தானாகவே போய்விடும் அது செயலிழந்து விடும்.

1.காலையில் படுக்கையில் கண் விழித்த பின் இதைச் செய்யுங்கள்
2.அதற்குப் பின் இடைவெளியில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் செய்யுங்கள்
3.வெளியிலே வாகனங்களில் சென்றால் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணுங்கள்
4.இரவிலே படுக்கையிலே படுக்கும் போதும் அதே மாதிரி எண்ணுங்கள்.

உயர்வான உணர்வுகள் உங்களுக்குள் பெருகத் தொடங்கும்… பின் நினைவின் எண்ணங்கள் உங்களுக்குள் சக்தி வாய்ந்ததாக மாறும்.

எங்கள் குடும்பம் முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் எங்களை அறியாது சேர்ந்து தீய வினைகள் சாப வினைகள் பாவ வினைகள் நீங்க வேண்டும்.

மகரிஷிகள் அருள் சக்தி எங்கள் குடும்பத்தில் படர்ந்து எங்கள் தொழில்களிலும் படர்ந்து குடும்பத்தில் உள்ளோர் மன பலம் மன நலம் உடல் நலம் பெற்று மகிழ்ந்து வாழ வேண்டும்.

எங்களிடம் தொழில் செய்வோரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று… மன பலம் மன நலம் உடல் நலம் பெற வேண்டும். அவர்கள் தொழில்கள் நலம் பெற வேண்டும் சீராக வேண்டும். அவர்கள் குடும்பம் நலம் பெற வேண்டும் என்று இதைப் போல் எண்ணுங்கள்.

இப்படி எண்ணும் போது இங்கள் தொழில் சிறப்பாக நடக்கும். உங்கள் மனமும் உயர்ந்த நிலையில் இருக்கும்.
1.உங்கள் எண்ணங்கள் விண்ணை நோக்கிப் பற்றும்.
2.இதற்கு முன் உங்களை அறியாது சேர்ந்த தீய வினைகள் நசியும்.
3.ஞானிகள் உணர்வுகள் உங்களுக்குள் விளையும்.
4.இந்த உணர்வின் தன்மை எட்டா தூரத்தில் இருக்கும் அருள் ஞானிகள் உணர்வுகளை எட்டும்படி செய்யும்…
5.உங்களுக்குள்ளேயே அந்த இயக்கங்கள் வருவதைப் பார்க்கலாம்.

பின் எந்த சாப வினைகளும் உங்களை அணுகாது. அதே சமயத்தில் உங்கள் சொல்லால் மூச்சால் பேச்சால் பார்வையால் பிறருடைய சாப வினைகளைப் போக்கும் சக்தியும் பெறுவீர்கள்.

இதை நீங்கள் செய்து பாருங்கள்.

ஒவ்வொரு குடும்பத்திலும் இதே போன்று நோய்களைப் பற்றி எண்ணாது மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் ஜீவான்மா பெற வேண்டும் என்று திரும்பத் திரும்ப எண்ணி அதை வளர்த்துக் கொள்ளுங்கள்.

“நாவின் சுவைக்கு…” அடிபணிந்திடாத பக்குவத்திற்கு வர வேண்டும்

 

நாம் எடுத்த வினைக்கு நாயகன் இந்தச் சரீரம் என்றால் முழுமையின் பொருள் விளங்கிடுமா…? உருவத்தில் மனித உடலையும் யானையின் தலையையும் சித்தர்கள் காட்டியதன் சூட்சமப் பொருள் என்ன…?

மனித மனம் தீய குணத்தின் வசம் ஆட்படும் பொழுது எடுக்கும் எண்ணச் செயல் சோர்விற்குப் பின் உணர்வுகளின் உந்துதல் காமத்தின் வழி மோகமாகின்றது. அந்தச் சூட்சமப் பொருளைப் புரிந்து கொள்ள வேண்டும்.

1.விநாயகருக்குப் பெரிய வயிற்றினைக் காட்டி
2.சகல உலகமும் அதனுள்…! என்று தத்துவம் கூறினால் புதிர் விடுபடுமா…?

உணவாக உட்கொள்ளும் உணவின் அந்த அமில குணங்கள்
1.சலிப்பின் செயலுக்கு மனித மனத்தின் உணவின் மாறுபாட்டால்
2.பத்துத் தலைகள் கொண்ட உருவம் உதித்தது… என்பதுவே
3.”உணவினால் உண்டாக்கப்பட்ட மோக குணங்கள் தான்…”

அந்த மோகத்தின் செயலைச் சித்தரிக்கவே எலியை வாகனமாகக் காட்டினார்கள். பூமிக்குள் மறைந்து வாழும் எலியைப் போல்
1.மனித மனத்தில் புதைந்து கிடக்கும் காமமும்
2.உணவின் செயலால் உணர்வுகள் கிளர்ந்தெழுந்த மோகமும் உள்ளது என்ற வகையில் உண்மையை உணர வேண்டும்.

வினையின் நாயகனே விநாயகர் என்று சொன்னதன் உட்பொருள் என்ன…?

எண்ணம் கொண்டு எடுத்துக் கொண்ட உணர்வுகளுக்கொப்ப உருவான இந்தச் சரீரமான நாயகனைக் கொண்டு தன் உயிராத்ம சக்தியை வலுக் கூட்டிக் கொள்ள வேண்டும் என்பதே…!

பூமியின் ஈர்ப்பில் வாசனை கொண்டு எடுத்துக் கொண்ட எண்ணம் கொண்டு தன்னை அறியும் பக்குவ கதிக்காக வேண்டி
1.அன்று சித்தனால் வழியமைத்துக் காட்டிய
2.சூட்சம உருவகப்படுத்திக் காட்டப்பட்டதே விநாயக உருவம்.

இந்தச் சரீர பிம்பத்தில் இருக்கும் கோடானுகோடி உயிரணுக்களும் வினையின் நாயகன் செயலுக்கு தியான ஈர்ப்பின் தொடரில் ஆட்கொள்ளப்பட்டுச் சக்தி ஈர்த்துச் சக்தி அளித்திடும் செயல் வழியின் உண்மையை ஒவ்வொருவரும் உணர்ந்திடல் வேண்டும்.

அதை உணர்ந்தால் உலகோதய வாசனைப் பிடிப்பில் வாழும் நாம் ஒலி கொண்டு ஒளி பெற்றிடும் நிலையில்
1.உயிர் குரு (நம் உயிராத்மா) தன் தனித்துவச் சக்தியைப் பெற்றுக் கொள்ள
2.கணங்களாகிய இந்தச் சரீரத்தில் உள்ள உயிரணுக்களுக்கு ஒளி சக்தியை ஊட்டி
3.அந்தக் கணங்களின் கூட்டத்தில் “பதியாக” ஓர் சிறப்பிடத்தை உயிராத்ம சக்தி பெற்று
4.தன் வலு ஈர்ப்பின் சக்தி கொண்டு வலுவின் வலு வீரியமாகத் தன்னை வளர்ச்சிப்படுத்திட முடியும்.

இப்படி ஒவ்வொரு உயிரும் ஆத்ம சக்தியின் கலப்பில் தன்னைத் தானே வளர்ச்சிப்படுத்திக் கொண்டிட முடிந்திடுமே அல்லாது “பிறிதொருவர் அளிப்பது அல்ல எந்த ஜெப சக்தியையுமே…!”

மகரிஷிகளால் சூட்சமம் கொண்டு உணர்த்திட வருவதெல்லாம்…
1.தங்களின் வழித் தோன்றல்கள் வாழையடி வாழையாக வரும் உயிராத்மாக்கள்
2.”நன் நிலை பெற வேண்டும்…” என்ற பாச உணர்வினால் தானப்பா…!

இந்தச் சரீரத்தின் செயலில் அகத்தியர் அன்று காட்டினார் “வாதாபி ஜீரணம்…” என்று. வாதாபி ஜீரணம் என்றால் என்னப்பா…?

அறிந்து கொண்டிருக்கும்… அனைத்தையும் உணர்ந்து கொண்டிருக்கும் நிலையில்… அறியாத நிலையில் அசுர குணங்கள் மனிதனின் எண்ணத்தில் ஆட்கொள்ளும் பொழுது உடலில் சோர்வும் ஜீரண அவஸ்தையும் ஏற்படுகின்றது.

அதன் பின் அந்த அசுர குணங்களினால் இந்தச் சரீரம் கொண்டு செயல்படுத்திட முற்படும் மோக உணர்வுகளையும்… அந்த மோக உணர்வுகளைத் தூண்டிடும் உயிரணுக்களையும்… “ஞானாக்கினியான எண்ணம் கொண்டு சுட்டெரித்ததே வாதாபி ஜீரணம்…!”

பத்துத் தலைகள் என்று காட்டியதெல்லாம் மோகத்தின் கிளைகளே…!

“உணவின் மாறுபாடும்…” மோக உணர்வுகளைக் கூட்டும். அதைச் சுட்டிக் காட்டுவதே விநாயக உருவத்தில் சிவப்புத் திலகமிட்டுக் காட்டப்பட்டது.

எடுக்கும் எண்ண வலுவில் ஈர்த்து ஒளியைக் கூட்டிக் கொள்ளும் ஜெப நிலை பெற்றவன் மனிதச் சரீரம் கொண்டே உயிராத்ம சக்தியை உயர்த்திடல் வேண்டும் என்றால் “நாவின் சுவைக்கு…” அடிபணிந்திடாத பக்குவத்திற்கு வர வேண்டும்.

1.உணர்வுகள் கிளர்ந்திடும் மூலமே “வயிறு…” என்றும்
2.மோகத்தின் கிளர்தலின் மூலமும் அங்கு தான் என்றும்
3.அந்த மோகத்தின் கிளைகள் வலுப் பெற்றுவிட்டால் அறிவின் ஆற்றல் சிதைந்து விடும் என்ற
4.அந்த உண்மையின் கருப்பொருளை உணர்த்திடவே ஞானக்கண் என்றும் செந்தூரத் திலகம் என்று காட்டினார்கள் சித்தர்கள்.

நாம் கொள்ள வேண்டிய உயர் ஞான வலுவைப் பெற்று விட்டால் உரப்புயலாக எழுந்த அந்த மோக குணங்கள் அனைத்தும் ஞான அக்கினியில் பொசுங்கிவிடும்.

“எண்ண வலு கொண்ட ஜெப சக்தி பெற்றவனால்…” உணவின் உயிரணுக்களையும் அதனின் மோக குணங்களையும் மாய்க்க முடியும்.
1.அவைகளையும் தன் சரீர ஒளி உயிரணுக்களுடன் ஒன்றச் செய்து
2.அவைகளுக்கும் சக்தி அளித்திட முடியும் என்பதன் பொருளை
3.ஆய்ந்து தெளிந்து செயல்பட வேண்டும் என்பதே இந்தப் பாடத்தின் சிறப்பு.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கர்ப்பிணியாகி தலைப் பிரசவம் என்றாலே மறு பிறப்பு என்று சொல்வார்கள். ஒரு அதிர்ச்சி நிலையானால் பிறக்கப் போகும் குழந்தை தலை கீழாக மாறாது.

குழந்தையின் சிறு நீர் எல்லாம் பனி நீராக மாறி இருக்கும். அப்பொழுது அந்தப் பருவம் வந்து பனிக் குடம் உடைந்த பின் குழந்தை முழித்துக் கொள்ளும். உணர்வின் துடிப்பு வரப்படும் பொழுது காற்றின் தன்மை வாயுவாக உற்பத்தியாகி வெளித் தள்ளும் நிலை வருகிறது.

நெகடிவ்… பாசிடிவ்…! என்ற நிலை வரும் பொழுது தாயின் எலும்பின் தன்மை இலகுவாக்கிக் குழந்தையை வெளிக் கொண்டு வரும் தன்மை வருகிறது.

ஆனால் எலும்பின் தன்மை வலுவாகி விட்டால் குழந்தை சுகப்பிரசவம் ஆவதில்லை.

குழந்தை வெளியில் வர முடியவில்லை என்றால் அக்காலங்களில் மாம்பழத்தில் கொட்டையை நசுக்கி எடுக்கிற மாதிரி தாயின் வயிற்றை நசுக்கி முயற்சி செய்து எடுத்துப் பார்ப்பார்கள். குருநாதர் இதை எல்லாம் காட்டுகின்றார்.
1.அன்றைய வைத்திய முறைக்கும்
2.இன்றைய நவீன விஞ்ஞான மருத்துவ முறைக்கும் உண்டான வித்தியாச நிலைகளைக் காட்டுகின்றார்.

இன்றைக்கும் ஒரு சில நிலைகளில் அக்கால வழக்கத்தைப் பின்பற்றுகின்றார்கள். அப்பொழுது கர்ப்பிணியான அந்தத் தாய் எத்தனை வேதனைப்படுகின்றது என்று பார்க்கலாம்…! ஆனால் குழந்தை பிறந்த பின் தாய் அதைக் கொஞ்சிக் குலாவுகிறது… மகிழ்ச்சி அடைகிறது.

சுகப்பிரசவம் அடையவில்லை என்றால் இன்றைய நவீன முறையில் ஆபரேஷன் செய்து குழந்தையை வெளியில் எடுக்கின்றார்கள்.

சாதாரணமாக உடலில் அடிபட்டால் காயமாகிறது… இரத்தம் கொட்டுகிறது. அது போல் கர்ப்பிணியின் உடலில் ஆபரேசன் செய்யும் போது இரத்தம் வெளியேறாதபடி தடைப்படுத்துகின்றனர்.

குழந்தையை எடுத்த பிற்பாடு அறுத்த தசைகளை இணைப்பு கொடுத்து இஞ்ஜெக்சன் செய்து ரொம்பச் சீக்கிரமே அதை ஒட்ட வைத்து விடுகின்றனர். குழந்தையும் பாதுகாப்பாக எடுத்துக் கொடுக்கின்றனர்.

1.ஆனாலும் இன்று ஜாதகம் பார்த்துக் குழந்தையை எடுக்கும் பழக்கம் கூட வந்து விட்டது.
2.பிறக்கும் குழந்தைகள் இன்ன நேரத்தில் பிறந்தால் ஜாதகப் பிரகாரம் தோஷம் இருக்கிறது என்று சொல்கிறார்கள்.
3.அதற்காக வேண்டி பண வசதி உள்ள வீடுகளில் எல்லாம் இந்த நேரம் நல்ல நேரமாக இருக்கிறது என்று
4.அதற்கு முன்னாடியே எடுத்து விடுகின்றார்கள்.

ஏனென்றால் மூல நட்சத்திரத்தில் பிறந்தால் அது போன வீடுகள் எல்லாம் தோஷமாகப் போய்விடும் என்று சொல்லி அந்த மூல நட்சத்திர நேரம் வருவதற்கு முன்னாடியே ஆபரேசன் செய்து குழந்தையை எடுத்து விடுகின்றார்கள்.

டாக்டரும் கூடச் சொல்லி விடுகிறார்கள். ஏனென்றால் ஒரு சிசேரியன் செய்தால் இவ்வளவு காசு வருகிறது என்று கணக்குப் பார்த்து படித்துக் கொண்டு வந்த டாக்டர்களும் இப்படிச் செயல்படுத்துகின்றனர்.

அதே போல் சில குடும்பங்களில் நாள் நட்சத்திரங்களைப் பார்த்து எங்களுக்கு ஞானக் குழந்தையாக வர வேண்டும் என்று அந்தக் குறித்த நேரத்தைச் சொல்லி ஆபரேசன் செய்து குழந்தையை எடுக்கின்றார்கள்.

1.ஆனால் இவர்கள் எப்படி அவசரப்பட்டு அந்தக் குழந்தையை எடுத்தார்களோ
2.அந்தக் குழந்தை உணர்வும் இவர்களின் எண்ணங்களும் ஒன்றான நிலையில்
3.குழந்தை பிறந்த பிற்பாடு எந்தக் காரியத்தையும் அவசரப்பட்டுச் செயல்படுத்துவார்கள்.
4.அந்தக் குழந்தையும் அதே மாதிரித்தான் வரும்.

ஏனென்றால் இந்த உணர்வு எதுவோ அந்தக் கருவில் வளரும் உணர்வுகள் மேக்னட் இதனுடைய உணர்வுகளை அது கவரப்படும்.

பெரும்பகுதியான குடும்பங்களில் குழந்தை பிறப்பே ஆபரேசன் செய்து தான் எடுக்கின்றார்கள். ஆனால் ஒரு சிலருக்கு ரொம்ப நேரம் ஆனது என்றால் குழந்தைக்கு மூச்சுத் திணறல் வந்தது என்றால் குழந்தையைக் காப்பாற்றத் துடிப்பின் தன்மை குறையப்படும் பொழுது அடுத்த கணமே ஆபரேசன் செய்து குழந்தையைக் காப்பாற்றுகின்றார்கள்… தாயையும் காப்பாற்றுகின்றார்கள்.

உதாரணமாக நல்ல மனம் கொண்டு ஒரு வேதனைப்படுவோர் உணர்வை நுகர்ந்தால் நம் மனதும் சோர்வடைகிறது. இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் விடுபட வேண்டும்.

1.ஆகவே இயற்கையை வென்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வை நமக்குள் சேர்த்துப் பழக வேண்டும்
2.தீமை என்ற உணர்வை மாற்றி தீமையை நீக்கிய அருள் உணர்வை நமக்குள் எடுத்து வளர்க்க வேண்டும்.

நான் (ஞானகுரு) படிக்காதவன் தான்…! அந்த இயற்கையின் உண்மை நிலைகளைப் பார்க்க முடிகிறது. ஸ்கேன் வைத்துப் பார்ப்பது போல் நானும் பார்க்கின்றேன்.

ஆரம்பத்தில் எல்லாம்… ஸ்கேனில் ஓடுவது போல் கண் கொண்டு பாருங்கள்… எப்படி எல்லாம் இயங்குகிறது…? என்று மற்றவர்களும் பார்க்கும்படி செய்தேன். ஏனென்றால் நான் காணுவது போல் “பிறரும் பார்க்க முடியும்…” என்று தெரிவதற்காகக் காண்பித்தேன்.

பார்த்துச் சொல்லும்படி சொன்னவுடன்… அதை எடுத்துத் தவறான வழிகளில் தான் பயன்படுத்தத் தொடங்கினார்கள். பருவம் இல்லாதபடி பிறருக்குக் கொடுத்தால் தீமையின் விளைவே அவர்களுக்குள் விளைகிறது.

நல்லது செய்பவர்களுக்கு (அவர்களை) அறியாமல் வரும் துன்பங்கள்

 

உதாரணமாக இரண்டு பேர் குடும்பத்தில் சண்டை இடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். ஒருவனை இன்னொருவன் ஏசுவதைக் கண்டு (சமரசத்திற்காக) சரி… விட்டு விடு போகட்டும் என்று நாம் சொல்வோம்.

ஆனால் பார்… அவன் எப்படிப் பேசுகின்றான் பார்….! என்பான்.

இவன் பேசிவிடுவான். ஆனால் அது அவனுக்குள் பட்ட உடனே உணர்ச்சிகள் பொங்கி
1.இவன் ஒரு சொல்லைச் சொன்னால் அவன் பல சொல்களைச் சொல்வான்.
2.அந்த உணர்வின் வேகத் துடிப்பு வரும் போது
3.தர்மத்தையோ நியாயத்தையோ மற்ற நல்ல வழிகளைச் சொன்னாலும் இருவருமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

ஒரு மிளகாய்ச் செடி தனக்குள் கார உணர்வை எடுத்துத்தான் மிளகாயை உருவாக்கும்… மிளகாயை வித்துக்களாக. எதிலிருந்து மிளகாயாக விளைந்ததோ அந்த வித்தின் தன்மை தாய்ச் செடியின் சத்தைக் கவர்ந்து தன் இனத்தைத் தான் அது விருத்தி செய்யும்.

இதைப் போல்
1.ஒருவருக்கொருவர் ஏசிப் பேசிய உணர்வுகள் வித்தாகும் பொழுது
2.எவ்வளவு சாபமிட்டுப் பேசினானோ… அடுத்தவனும் அதே உணர்வைச் சுவாசித்துச் சாபமிட்டுக் கொண்டே இருப்பான்.
3.இவர்கள் சாபமிடுவதைக் கேட்டுணர்ந்தவரும் இதைப் போன்று சாபத்தை விட்டுக் கொண்டே இருப்பார்கள்.
4.இந்த அலைகள் படர்ந்து படர்ந்து… நல்ல குணங்கள் இயங்காது தடைபடுத்தி விடும்.

சாப அலைகள் இவருக்குள் விளைந்து எதையெல்லாம் இவர்கள் சொன்னார்களோ அது அனைத்தும் அங்கே படர்ந்து… இருவருடைய குடும்பங்களிலும் வீரியமாகப் பேசுவார்கள்.

இந்த வீரிய உணர்வுகள் குடும்பத்தில் பாசத்தையும் பற்றையும் அறுத்துவிடும். பாசத்துடன் இருப்போரும் ஒருவருக்கொருவர் வெறுப்பான நிலைகள் ஆகிவிடும். ஆனால் ஏசியவன் தப்பி விடுவான்.

குடும்பத்தில் பாசத்துடன் உள்ளோர் நிலைகளில் இது படப்பட்டு இந்த உணர்வு துரிதமாக விளைந்து நோயாக மாற்றி அவனை முதலிலே வீழ்த்தி விடும்.

ஆக அண்ணன் இப்படிப் பேசுகின்றானே…! என்று தம்பியோ… தம்பி தான் சொன்னபடி கேட்கவில்லை என்று அண்ணன் “இப்படிச் செய்கின்றானே…” என்று தம்பியைக் கோபித்தாலும்… ஒருவருக்கொருவர் இடும் சாப அலைகளை உற்று நோக்கினால் அவர்களுக்குள் தீயவினைகள் வளர்ந்து நோயாக மாறி… அவர் குடும்பத்திலே வெறுப்பின் தன்மை வந்துவிடும்.

அவர்களுடைய தாய் தந்தையரோ சரி விட்டு விடுடா…! என்று சொன்னாலும் “நீ பேசாமல் இரு” என்று வேகமான சொல் பாய்ந்து அங்கேயும் வெறுப்பைத் தூண்டும்… சாப அலைகள் அங்கேயும் படர்ந்து விடும்.

அதே சமயம் குடும்பத்தில் பெண்கள் கர்ப்பமாக இருந்தார்கள் என்றால் இதே சாப அலைகள் அந்தக் கருவிலும் பதிந்து… பிறக்கும் குழந்தையையும் சாப அலைகள் தொடர்ந்து… இயக்கத் தொடங்கி விடுகிறது.

இது அவர்களோடு போனாலும் பரவாயில்லை…!
1.மற்றவர்கள் வேடிக்கையாகப் பார்த்தாலும் அவர்களுக்குள்ளும் பாய்ந்து அவர் குடும்பத்திலே கர்ப்பமுற்றிருந்தால் இது பதிவாகி விடும்.
2.உன் கால் முடமாகும் உன் கண்கள் குருடாகிவிடும் என்று ஏசிப் பேசிச் சாபமிட்டிருந்தால்
3.கர்ப்பமற்ற தாய் அதைக் கேட்டிருந்தால் (வேடிக்கை பார்த்திருந்தாலும்) இந்த உணர்வுகள் கருவிலே இணைந்துவிடும்.
4.பிறக்கும் குழந்தையின் கால் மூடமாகிவிடும்… கண்கள் குருடாகிவிடும்
5.எதைச் சொல்லிச் சாபமிட்டார்களோ அதே உணவின் தன்மை வளர்ச்சி அடைந்து அந்தந்த உறுப்புகளைச் செயலற்றதாக ஆக்கிவிடும்.

பரிணாம வளர்ச்சியில் உயர்ந்த நிலையாக மனிதன் வளர்ச்சி பெற்று வந்திருந்தாலும் இந்த உணர்வின் இயக்கங்கள் இப்படி இயங்கத் தொடங்கி விடுகின்றது.

அது நமக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களை இயக்க விடாதபடி தீய செயல்களாகி… தீய உணர்வுகள் உடலில் நோயாக மாறி
1.நம் சொல் பிறருக்கு தீமையை விளைவிப்பதாகவும்
2.சாப வினைகள் நம் ஆன்மாவாக ஆகும் பொழுது தொழில்களிலும் இந்த உணர்வு படரப்பட்டு
3.நண்பர்களையும் எதிரி ஆக்கி நம் தொழிலையும் கெடுத்துவிடும்.

ஒரு விஷச் செடியைக் கண்டால் நாம் எப்படி விலகிச் செல்கின்றோமோ அது போல் ஒருவன் சாபம் விடுவதாக இருப்பினும்… நாம் பலருக்கு நன்மை செய்பவராக இருப்பினும்… நாம் தவறு செய்யாமலேயே சாப நிலைகளே முன் நின்று “நமக்கு எதிரிகளை உருவாக்கிக் கொண்டிருக்கும்…”

விஷச் செடியை நுகர்ந்த பின் அதைக் கண்டு வெறுத்து ஓடுவது போன்று சாப வினைகள் முன் நிற்கும் பொழுது… நாம் எடுக்கும் வெறுப்பான உணர்வுகள் பிறர் நம்மைப் பார்க்கும் பொழுது அவர்களுக்கும் இந்த நிலை ஆகிவிடுகிறது.

ஆகையினால் தான் ஒவ்வொரு நிமிடத்திலும் உங்களை யாம் அடிக்கடி ஆத்ம சுத்தி செய்யச் சொல்வது. எத்தகைய நிலையைச் சந்தித்தாலும்
1.அடுத்த கணம் மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து அதை நமக்குள் கலந்து வலுவாக்கிக் கொள்ள வேண்டும்
2.நாம் நுகர்ந்த பிறிதொரு உணர்வு நமக்குள் இயக்கக் கூடாது… தீய வினையாக மாற விடக் கூடாது.

சிலவற்றை மறைத்தே உரைத்திட வேண்டியதுள்ளது

 

சரீரத்தில் தாக்கப்படும் நோயை நீக்க மருத்துவ அறிவின் எண்ணமானது நோயின் குணத் தன்மைகளை நாடி அளவறிந்து “மருந்து கொடுப்பது…” என்பது அணுபோக முறைப்படி செயல்படுத்த வேண்டும்.

சரீரத்தில் செயல்படும் தன்மைகளை நாடிகளின் துடிப்பலையால் காலம் அறிந்து அந்த நோயின் தன்மைகளை அறிந்து கொண்டு நோய் கடிந்திடும் செயலின் மூலம் மருத்துவப் பொருள்களைச் “சூரணம்…” செய்து கொடுத்து நற்பயன் விளைவித்தனர் அக்காலங்களில்.

அப்படிக் கொடுக்கப்பட்ட வைத்திய முறையில் மனப்பக்குவம் பெற்றிடும் வழி முறைகளுக்கு
1.“நாவின் அதி சுவை குணங்களை…” நீக்கிடும் எண்ணத்திற்கே
2.மருத்துவத்தின் தன்மைக்கொப்ப விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டன.

ஆனால் இன்றைய விஞ்ஞான மருத்துவத்தில் நோயின் குணங்களைச் சரீரத்தில் கண்டவுடன் அந்த நோயை நீக்கிடும் செயலுக்கு அதி தீவிர செயல் புரிந்திடும் மருந்துகளைச் சரீரத்தினுள் செலுத்தி நோயைக் கண்டவுடனேயே மருத்துவத்தால் குணமாக்கினாலும்… “பல்கிப் பெருகிடும் புதிய புதிய நோய்கள் ஏற்படக் காரணம் என்ன…?”

1.மாறு கொண்ட எண்ணங்களால் நற்குணங்களையே சூரணம் செய்து
2.தீமையான குணங்களுக்கு அவைகளையே உரமாக்கிக் கொள்ளும் எண்ணம் செயல்படுவதால்
3.ஜீவாத்மா பிறவி என்ற நோயில் அகப்பட்டு வதைப்படுகிறது.
4.இத்தகைய செயலுக்கு மூல காரணம் யார்…?

ஆனால் ஆத்ம பலத்தில் பரிபூரணம் பெற்றிட வேண்டும் என்றால் உலக வாழ்க்கைச் சூழலில் நம்மை மோதிடும் எதிர் நிலைகளுக்கு நம் எண்ணத்தைச் செலுத்திடலாகாது… அதற்கு அடிமையாகிவிடக் கூடாது.

1.இந்த உண்மையின் முழுமையைக் கொண்டு ஆக்கம் பெற்றிடவும்
2.எண்ணத்தில் பீடித்துள்ள பிணிகளை நீக்கிச் செயல் கொள்ளவும்
3.நற்சுவாசப் பரிசுத்தம் கொள்ள வேண்டும் என்றே உரைக்கின்றேன்.
4.ஞானச் செல்வம் பெற்றிட வேண்டும் என்றே கூறுகின்றேன்.

பேரருள் சக்தியாகத் தன்னுள் “மெய் ஞான விழிப்பு…” கண்டால் எண்ணத்தின் பரிசுத்தத்தால் ஈஸ்வரரின் ஆசி கொண்டு மகரிஷிகளின் அருளாசி பெற்றிடலாம்.

சிலவற்றை மறைத்தே உரைத்திட வேண்டியதுள்ளது. பேரருள் உலகோதயச் செல்வத்தை அளித்திடும் நிலையில் இன்று இல்லை.

இன்றைய மனிதனின் எண்ணத்தின் மாறுபாடே காரணம் என்றால் சூட்சமங்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.
1.எண்ணத் தூய்மை கொண்ட இந்தத் தியானத்தின் வழியிலேயே பேரருள் ஆசி பெற்று
2.வாழ்க்கை நிலையும் கூட உயர்வு பெற முடியும்.

காசு வாங்காமல் யாம் பயிற்சி கொடுத்தால் அதைச் சாதாரணமாக எண்ணிவிடுகின்றார்கள்

 

உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டலம் போக வேண்டும் என்று தனிப்பட்ட நிலையிலிருந்து சொல்லாதீர்கள். குடும்பத்தில் உள்ள பத்து பேர் சேர்ந்து இணைந்து அதைச் செயல்படுத்துங்கள். காரணம்…
1.சிலர் துர்மரணம் அடைந்திருக்கலாம் அல்லது மிகவும் கடினமான நோய்வாய்ப்பட்டு உடலை விட்டு வெளியே சென்றிருப்பார்கள்.
2.அவருடைய உணர்வின் தன்மை நம்முடைய உடல்களில் உண்டு.
3.அவர் மேல் உள்ள பாசத்தால் சப்தரிஷி மண்டலம் செல்ல வேண்டும் என்று எண்ணினால்
4.பாலிலே நஞ்சினை விட்டு அதிலே பாதாமைப் போட்டாலும் அது செயலற்றதாக மாறுவது போல்
5.அந்த ஆன்மாக்கள் நம் உடலுக்குள் வந்துவிடும்….!

அதைப் போன்று இல்லாதபடி குடும்பத்தில் கூட்டாக அமர்ந்து சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அனைவரும் ஒருங்கிணைந்த நிலையில் எண்ணி “சப்தரிஷி மண்டல உணர்வுகளை வலுவாக்கிக் கொள்ள வேண்டும்…”

அதற்குப் பின் எங்களுடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் ஒருங்கிணைந்து சொல்லுங்கள்.

அப்படிச் செய்ய முடியவில்லை என்றால் தியானம் செய்யக்கூடியவர்கள் ஒரு இருபது பேரை அழைத்துக் கூட்டுத் தியானம் இருந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களை பிறவா நிலை பெறச் செய்யுங்கள்.

இவ்வாறு செய்யப்படும் பொழுது அவர்கள் விண் சென்று விடுகிறார்கள். உடல் பெறும் உணர்வுகள் சப்தரிஷி மண்டல ஒளிக் கடலிலே (கங்கை) பட்ட பின் அது கருகி விடுகின்றது. உயிருடன் ஒன்றிய அறிவாக ஒளியாக நிலைத்து விடுகின்றது.

குருநாதர் காட்டிய வழியில் இவ்வாறு தான் செயல்படுத்த வேண்டும்.

அவர்களை விண் செலுத்திய பின் உங்கள் வாழ்க்கையில் எத்தகைய இடையூறுகள் வந்தாலும் அந்த நேரங்களில் எல்லாம் சப்தரிஷி மண்டலங்களின் சக்தியைப் பெற முடியும்…. அந்த நினைவாற்றலை நாம் பெருக்க முடியும். இடையூறுகளை அகற்றிட முடியும்.

சப்தரிஷி மண்டலங்களின் நினைவாற்றல் பெருகப் பெருக… இந்த உடலை விட்டு எப்போது பிரிந்தாலும் நாமும் அங்கே செல்ல முடியும்.

ஏனென்றால் முன்னோர்களின் ஆன்மாக்கள் ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று அங்கே உந்தித் தள்ளுகின்றோம்… உடல் பெறும் உணர்வுகள் அங்கே கறுக்கப்படுகின்றது.

அதன் துணை கொண்டு அந்தச் சப்தரிஷி மண்டலங்களை எண்ணும் பொழுது அந்த ஆற்றலை நாம் எளிதில் பெற முடியும். அனைவருமே இந்தத் தகுதி பெற முடியும்.

இதை எல்லாம் உங்களுக்குப் பயிற்சியாகத் தான் கொடுக்கின்றோம்… யாரும் செய்வதில்லை.

காசைக் கொடுத்துப் பணத்தை செலவழித்து பயிற்சி பெற்றுக் கொள்ளுங்கள் என்றால்… எவ்வளவு நேரம் ஆனாலும் அங்கே காத்திருந்து அதைப் பெறுகின்றார்கள்.

1.நீங்கள் எல்லோரும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று குரு அருளைப் பாய்ச்சி
2.உங்கள் முன்னோர்கள் அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று பயிற்சியாகக் கொடுத்தால்
3.எங்களுக்கு நேரமில்லை இதைச் செய்வதற்கு எங்களால் முடியவில்லை என்று சொல்லி விடுகின்றார்கள்.

மணிக்கணக்கில் காத்திருந்து இப்படித்தான் செய்ய வேண்டும் என்று சொன்னால் காசையும் கொடுத்து விட்டு காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் எளிமையாக யாம் (ஞானகுரு) சொன்னாலும் அதைக் கேட்பதில்லை. இது போன்ற நிலை இல்லாதபடி உங்களை நீங்கள் நம்பி இதைச் செய்து பழக வேண்டும்.

முன்னோர்களை விண் செலுத்துவது மிகவும் முக்கியமானது.

ஞானத்தில் உயர்வடைய… “தான் எடுக்கும் எண்ண ஓட்ட சுவாச கதியை உயர்வாக்க வேண்டும்…”

 

மனித குலம் உண்மையை உணர்ந்து வாழவும்… அந்த வாழ்வில் உயர் ஞானச் செயலின் சிறந்த பேறு பெறும் வழியாகவும்… மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய குணங்களின் விசேஷத் தன்மைகளைச் சிலை வடிவில் சித்தர்கள் அன்று உணர்த்தினார்கள்.

அந்தச் சித்தர்கள் மனித குல உயர்விற்கு வழி காட்டிய தெய்வச் சிலைகளின் தத்துவத்தையே கேடுறச் செய்து… ஆர்ப்பரித்துப் பகட்டைக் காட்டிடும் நிலைக்கு இன்று வந்து விட்டார்கள்.

சித்தன் படைத்த செயலையே மனிதன் பகட்டிற்காகவும் கௌரவ வாழ்விற்கும் பயன்படுத்திச் சீர்குலைத்து விட்டனர். அப்படிச் சீர்குலைக்கப்பட்டதால்
1.வாழையடி வாழையாக வழி வரும் மெய் ஞான உயர் சக்தி பெற விழைந்த ஆத்ம ஞானிகளால்
2.உட்பொருள் வெளிப்படுத்தும் எண்ணமின்றி மறைக்கப்பட்டு விட்டது.

விநாயகர் உருவத்தைக் காட்டி ஆற்றங்கரையில் வைத்த நிலை எல்லாம் இன்று கேலிக்குரிய நகைச்சுவைப்படுத்தி ரசித்து மகிழும் நிலைக்குச் சென்று விட்டது.

இன்றைய மனித மனங்கள் உட்பொருளை நாடி அறிந்து கொள்ளத் தயங்குதுவும்… பயம் என்ற போர்வை கொண்டு பக்தி என்ற குளிர் போக்கத் தானும் நடுநடுங்கி… அறிவொழிந்து…! அதிலிருந்து விடுபட முடியாத நிலை ஆகிவிட்டது.
1.ஜோதி என்ற தன் உயிர்க்கனலின் நெருப்பே
2.பக்தி என்ற குளிரை விரட்டும்…! என்று அறியாமல் போனதென்ன…?
3.அந்தக் குளிரை நீக்க வந்தவனும் உட்பொருளை அறிந்ததில்லை…!

ஆவியான நீர் அமிலங்கள் எல்லாம் தன் செயலில் தான் நெருங்கி… ஒன்றோடொன்று கண பரிமாணம் கொண்டு… பிறிதொன்றின் சேர்க்கையில் நீர்த் திவலையாகும் நிலையில் “அதுவே சிவமாகின்றது” (திடமாகி உருவமாகின்றது).

அது பூமிக்குள் வரும் காரிய நிலை கொண்டு சுழலும் தன்மையிலே சக்தியாகவும்… பூமியில் படிந்து பின் எழும் செயலின் தொடர்பில் மீண்டும் நீராகவும்… அதுவே எழும் தொடரில் ஆவி நீர் அமிலமாகவும் செயலுறும் தொடர்புகளை அறிந்து கொள்தலே “பிரம்மம்…!”

அத்தகைய பேருண்மைகளை அறிந்து கொண்டவர் தான் “அகத்தியர்…!”

அவர் உயிரணுவின் செயல் சுழலும் சக்தியாகப் பரிணமித்துப் பூமிக்கு வந்த காரியத்தில் வினையான தன்மைக்கு நாயகனாக இந்தச் சரீரம் பெற்றார்.

வினையின் நாயகனே விநாயகர் என்று தன் உயிர் ஆன்ம சக்தியையே உயர்த்திக் கொள்ளும் வழியாக
1.எல்லா உயிர்த் தொகைகளுக்கும் உயிரணுக்கள் பொதுவாகவும்
2.அது பெறும் வீரியத்தில் வித்தியாசமும்… அதுவே பின் எண்ணத் தொடரில் சரீரமாகவும்
3.தன் அமில குண நிலைக்கொப்பத் தனக்குகந்த… தான் பெற்ற தன்மை கொண்டு… ஞான வழியில் “ஒவ்வொரு சரீரமும் பெறுகிறது…” என்றார் அகத்தியர்.

அத்தகைய உயிரணுக்களுக்குள் வீரிய சக்தி கொண்டது “யானை…” என்றும் அது பெற்ற சக்திக்கு அதன் “சுவாசமே…” காரணம் என்று தெளிவாக உணர்த்தினார்.

மனித குலம் ஞானத்தில் உயர்வடைய வேண்டும் என்றால் “தான் எடுக்கும் எண்ண ஓட்ட சுவாச கதியை உயர்வாக்க வேண்டும்…” என்பதற்காக விநாயகரை உருவகப்படுத்திக் காட்டினார் அந்த அகத்தியர்.

நீர்ச் சக்தியைத் தன் எண்ண ஓட்ட கதியுடன் ஒன்றுபடுத்திக் கண்ட அந்த அகத்திய மாமகரிஷி “சுவாச வழியில் வீரியம் பெறும் நிலையைப் புகட்டினார்…!”
1.வினைக்கு நாயகனே விநாயகன் என்று
2.தன் உயிர் குருவைக் கண்டு கொண்ட பின்
3.அவர் சென்ற வழியின் உயர்வே “கணபதி…”

கணங்களை ஆளக்கூடிய தலைவன் “கணநாதன் என்ற உயிர்ச் சக்தியானது” தன்னுள் உள்ள கணம் என்ற கூட்டமாகிய அனைத்து உயிரணுக்களுக்கும் நாயகனாக வினையின் நாயகனாகச் செயல்படுகிறது.

1.கணங்களுக்கெல்லாம் (உயிரணுக்களுக்கெல்லாம்) அதிபதியாக ஒரு வழிகாட்டியாக
2.உயிர் ஆத்ம சக்தி… தான் சக்தி பெறும் மார்க்கமாகச் சக்தி பெற்று
3.தான் பெறும் சக்தியையே சரீர உயிரணுக்களுக்கும் ஊட்டிடும் நிலையே கணங்களின் பதியான கணபதி ஆவான் என்று
4.உயிர் பெறும் உயரிய தன்மைக்குச் சித்தனால் காட்டப்பட்டதே விநாயகர் என்பதை அறிந்துணர்தல் வேண்டும்.

மூதாதையரின் ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டலத்தில் இணைய வேண்டும் என்று “ஒரு நாளைக்கு ஆயிரம் முறை எண்ணுங்கள்”

 

இந்திய மண்ணிலே தோன்றிய ஞானிகளால் வளர்க்கப்பட்ட ஆன்மீகத்தின் நிலைகளை எவரும் பழித்திடும் நிலை வராது… வரக்கூடாது என்பதை குருநாதர் அன்றே சொன்னார். அவர் காட்டிய வழியினைத்தான் நானும் (ஞானகுரு) இப்பொழுது சொல்கின்றேன்.

விநாயகரை வணங்கும் பொழுதெல்லாம்
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.எங்கள் மூதாதையர்கள் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

மேலும்…
1.ஒரு நாளைக்கு ஆயிரம் தடவையாவது
2.எங்கள் மூதாதையர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து
3.பிறவா நிலை என்னும் பெரு நிலை அடைய வேண்டும் என்று எண்ணுங்கள்.
4.சப்தரிஷி மண்டல ஈர்ப்பு வட்டத்திற்குள் அவர்களை உந்தித் தள்ளுங்கள்… அந்த உணர்வின் ஆற்றல் உங்களுக்குள்ளும் சேரும்.
5.அந்த மாமகரிஷிகளின் அருள் சக்தி இந்த உலகம் முழுவதும் படர வேண்டும்…
6.தீமைகளை விளைய வைக்கும் “தீய உணர்வுகள் அகல வேண்டும்” என்ற உணர்வுகளைப் பாய்ச்சுங்கள்.

தத்துவ ஞானிகள் வளர்ந்து தீமைகளை அகற்றிய நாடு இது. முதல் நிலையாக உலகெங்கிற்கும் மெய் ஞானத்தை உணர்த்திய பூமி இது. தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று நிலைகளை இங்கிருந்து தான் உலகிற்குத் தெளிவுற எடுத்துரைத்தது.
1.விண்ணுலகின் ஆற்றலை ஒளியின் சரீரமாகச் சிவமாக்கியவன் அகஸ்தியன்.
2.எந்த நாட்டவரும் அகஸ்தியன் பெற்ற ஆற்றலைப் பெற முடியும்.

சீவலிங்கமாக இன்று இருக்கின்றோம். அகஸ்தியன் உணர்வை எடுத்து அதனின் துணை கொண்டு “உயிருடன் ஒன்றிய இராமலிங்கமாக” எண்ணத்தின் வழிகளிலே எண்ணத்தால் உருவாக்கப்பட்ட தன்மை கொண்டு… என்றும் ஒளிச் சரீரமாக இருக்க முடியும்.

இந்த உலகில் தீய சக்திகள் பரவிக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் யாம் இதை வெளிப்படுத்த வேண்டி இருக்கின்றது.

தீமைகள் பரவாது தடுக்கச் செயுயும் அந்த ஞானிகள் உணர்வுகள் இங்கே அனைவரையும் காக்கக்கூடிய சக்தியாக வளர வேண்டும் எல்லோருக்கும் பேரானந்த அமுதாக இது கிடைக்க வேண்டும் என்று தான் குருநாதர் கூறினார்.

அதன் வழியில் தான் நான் இதைச் செயல்படுத்துகின்றேன் சாமி வேகமாகப் பேசுகிறார் என்று யாரும் எண்ண வேண்டியதில்லை.

உலகில் நல்லது என்று சிந்தித்துச் செயல்படுத்தும் மக்களை வீழ்த்திடும் நிலைகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. எளிமையானவர்களிடமிருந்து பொருள்களைத் தட்டிப் பறிக்கும் நிலையே உருவாகிக் கொண்டுள்ளது

வளர்ச்சி அடைந்த நாடுகள் மற்ற நாடுகளை அடிமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் (அங்கிருந்து) ஆணையிடுவதை சிரம் மேல் ஏற்று நடப்பவர்கள் அசுர உணர்வு கொண்டோர் இங்கே நம் நாட்டிலும் உண்டு. அதிலிருந்து மக்கள் காக்கப்பட வேண்டும் என்பதற்குத் தான் இதைச் சொல்கின்றேன்.

மண்ணுலகில் நஞ்சினை வென்று விண்ணுலகம் சென்ற மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா எங்கள் உடல் முழுவதும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று எண்ண வேண்டும்.

சாஸ்திரப் பிரகாரம் நரசிம்ம அவதாரமாக தீமைகளை அகற்றிய அந்த மகரிஷிகளை நினைவுக்குக் கொண்டு வந்து… உயிருடன் ஒன்றி… விண்ணை நோக்கி ஏகி அந்த மகரிஷிகளின் சக்தி பெற வேண்டும் என்ற வேட்கையைக் கூட்டி ஒருங்கிணைந்து செயல்பட்டு தீமைகளை அகற்றுங்கள்.

அதே போன்று
1.மூதாதையர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிராத்மாக்களை விண் செலுத்தும் உணர்வுகளை அடிக்கடி கூட்டிக் கொண்டே வாருங்கள்.
2.அது உங்களுக்கு நல்ல பயனைத் தரும்
3.அவர்கள் முன் சென்றால்… அடுத்து நாமும் நிச்சயம் பிறவா நிலை பெற முடியும்.

“தனக்குத் தானே உபதேசத்தை ஏற்றுக் கொண்டவன் தான்” பிறருக்கு உபதேசிக்கத் தகுந்தவன்

 

பரவெளியில் படர்ந்துள்ள ஒளியான மின் அணுக்கள் காந்தத்தின் உள் நிகழ்வாக அசையும் நிலை சூட்சமமாக அதற்குள் இருந்தாலும் சஞ்சலமில்லாத மனத்திறன் கொண்டு வைராக்கியப் பற்று கொண்டோன் நல் ஆக்கத்தின் செயலுக்காகத் தன்னைத் தான் உணர்கின்றான்.

உணர்ந்து தெளிந்த வழியின் ஈர்ப்பினால் சகலத்தையும் தன்னுள் சக்தியாகக் கூட்டும் செயலாகப் “பேரருள்…” என்ற மூலத்தில் கலக்கின்றான்.

சகலத்தையும் அறிந்து கொள்வது என்பது நடைமுறைச் சாத்தியம் இயலாது என்றாலும்
1.தனக்குள் தானே நல் வழி ஆக்கத்திற்காகச் செயல்படும் விதம்
2.ஒவ்வொருவரும் தன் ஆத்மாண்டவனை உயர்த்தும் செயலே கடமை விதி.

அதே போல் சரீரத்துடன் கலந்து எண்ணிடும் செயல் அனைத்திற்கும் ஓர் வரைமுறைக்கு உட்படுத்தப்பட்ட செயலைக் காட்டும் கடமை விதியும் உண்டு.

உலகோதய நடைமுறை வாழ்க்கை நெறியில் தன் சிந்தனையைத் தெளிவாக்குவதற்காகக் குருவை நாடுகின்றான். குரு என்றால் என்னப்பா…?

குரு என்றாலே “ஒளி நிலை…” என்பது பொருள்…!

1.தனக்குத் தானே உபதேசத்தை ஏற்றுக் கொண்டவன் தான்
2.பிறருக்கு உபதேசிக்கத் தகுந்தவன்.

அவ்வகையில் கூறும் குரு எண்ணம் சொல் செயல் அனைத்தும் நேர்கோடாகப் பரிணமிக்கத் தன் செயல் நடைமுறைகளால் குருவாகின்றார்.

கடமை விதி சிஷ்யர்களாகிய அனைவருக்கும் உண்டு என்றாலும் குருவிற்கும் உண்டு.
1.கடமை விதி… உலகோதய நிலை விடுத்துப் பேரருள் தெய்வத் தன்மை நிலை அடைவதற்கு
2.ஓர் வழி காட்டும் அமைப்பே குரு.

பேரருள் சூட்சமம் அறிந்த கோடானு கோடி உயிராத்மாக்கள் நல்லாக்கச் செயல் நிகழ்வுகளில் மூலத்தில் கலந்து வாழ்கின்றனர்.
1.ஆனால் சிலரே அனைத்து உயிர்களும்
2.அந்தப் பேரானந்த லயத்தில் இன்புறுதல் வேண்டும் என்று கண்டுணர்த்தினர்.

அவர்கள் காட்டிய அன்பு நெறிகளில் “நான்…!” என்ற நிலை இல்லையப்பா…!
1.நான் என்ற சொல்லும்
2.நான் தான் பெற்றுத் தருவேன்…! என்ற சொல்லும் எதற்கப்பா…?

“தனித்துவமான சக்தி…” பெறும் நிலையன்றோ நாம் புகட்டியது.

ஒவ்வொரு உயிராத்மாக்களும் நல் நிலை பெற வேண்டும் என்று எமக்குள்ள ஆசையால் தானே எல்லாமுள் எல்லாமாக விளங்கும் பேரருள் சக்தியுடன்… மாமகரிஷிகளின் ஆசியுடன்… “மறைக்கப்பட்ட இந்த உண்மை நிலைகளை…” இங்கே எடுத்து இயம்பிக் கொண்டிருக்கின்றோம்.

1.இதில் நான் என்ற நிலை எங்கே உள்ளது…?
2.பரப்பிரம்ம நிலைதனில் சகல உயிர்களையுமே
3.அந்த ஈஸ்வரனாக எண்ணிச் செயல் கொள்ளும் அன்பு வழியைத்தானே இங்கே காட்டுகின்றோம்.

குருவே உன் உயிராக ஆத்மாவில் இயக்கும் செயலில்… சரீரம் கொண்டு செயல்படும் நிலையில் எல்லாம்… கடமை விதி என்பது பக்தி நிலை தானே தவிர “நீ உன்னை உயர்த்தும் சிங்கார அழகு எங்கே…?”

1.குருதேவர் (ஈஸ்வரபட்டர்) ஊட்டுவார்…! குருதேவரே ஊட்டட்டும் என்று
2.உன் முயற்சியின் வழியை விலக்கினால்
3.உன் உயிராத்மா உயர்ந்த சக்தி பெறும் அந்த ஒளியின் அழகு சுயப்பிரகாசமாக வளர்வது எங்கே…?
4.யாம் விரும்புவதே ஒவ்வொரு ஆத்மாக்களின் சுய முயற்சிதான்.
5.அதுவே நல்லாக்கத்தின் வழி.
6.வினைக்கு நாயகன் விநாயகன்..! என்று தன்னைத்தானே அறிந்து கொள்வதே குரு காட்டிய கடமை விதி.

உன்னை நீ உணர்ந்து சித்தன் காட்டிய விநாயகரின் உருவத்தில் மனித உடலும் யானையின் தலையும்…? எதற்காக என்ற வினாவிற்குரிய தெளிவை அறிவின் துணை கொண்டு தெளிதலே நல்லாக்கத்தின் வழி.

தெளிந்த பின் தன் உயிராத்ம சக்தியை வலுக் கூட்டிக் கொள்ளும் செயலும் வேண்டும்.

வினைகளை நீக்கும் மகரிஷிகளின் அருள் ஞானம்

 

அன்றாட வாழ்க்கையில் காலையிலிருந்து இரவு வரையிலும் எத்தனையோ குற்றம் குறைகளைப் பார்க்கின்றோம்… எத்தனையோ தீமைகளைக் கேட்டுணர்கின்றோம். அவை எல்லாம் தீய வினைகளாக நமக்குள் வந்து விடுகின்றது.

அதே சமயத்தில் பிறர் செய்யும் தவறான உணர்வுகள்… சாப வினைகளாக வருவதை… நாம் உற்று நோக்கப்படும் பொழுது நம்மை அறியாமலே நமக்குள் அது புகுந்து விடுகிறது.

அதே சமயத்தில் ஒருவன் செய்யும் பாவச் செயல்களை உற்று நோக்கும் போது அந்தப் பாவ வினை நமக்குள் வந்துவிடுகிறது. சாப வினையும் பாவ வினையும் மிகவும் கடினமானது

காரணம் எத்தகைய தொழில் செய்தாலும்
1.பிறரை நாம் பார்க்காமல் இருக்க முடியாது பழகாமல் இருக்க முடியாது ரோட்டிலே நாம் செல்லாமல் இருக்க முடியாது.
2.பிறர்படும் துயரத்தையும் சாபமிடும் நிலைகளையும் வேடிக்கையாகப் பார்த்தாலும்
3.அது நமக்குள் புகுந்து சாப வினைகளாக விளையத் தொடங்கி விடுகின்றது.

நாம் விஷமான பொருளைக் கையில் எடுத்து வேலை செய்த பின் உடனே தூய்மைப்படுத்த வேண்டும். தூய்மைப்படுத்தவில்லை என்றால் விஷம் நமக்குள் வந்து உடலைச் செயலற்றதாக்கிவிடும்.

அதே போல் ஒரு விஷ வித்தாக இருந்தாலும் மண்ணிலே விழுந்து விட்டால் அது முளைக்கத்தான் செய்யும். விஷ வித்து என்று அதைப் பிடுங்கி எறிந்தாலும் மறு பக்கம் விழுந்தால் அது அதனின் நஞ்சின் தன்மை இயக்கத்தான் செய்யும்.

ஆகவே நம்மை அறியாது சேரும் தீய வினைகளை சாப வினைகளை பாவ வினைகளை அகற்ற வேண்டும். நமது குருநாதர் இத்தகைய வினைகளை எல்லாம் நீக்கும் ஆற்றல்களை…
1.மகரிஷிகள் எவ்வாறு தனக்குள் கற்றுணர்ந்தார்கள்…?
2.தீய வினைகளை எப்படி அகற்றினார்கள்…?
3.சாப வினைகளை எப்படி அகற்றினார்கள்…?
4.பாவ வினைகளை எப்படி அகற்றினார்கள்…?
5.தீமைகளை நீக்கும் உணர்வுகளை எவ்வாறு சேர்த்துக் கொண்டார்கள்…?
6.அது எவ்வாறு அவருக்குள் விளைந்தது…?
7.அதன் துணை கொண்டு உயிருடன் ஒன்றிய ஒளியாக இன்றும் எவ்வாறு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்…? என்ற உண்மையை எனக்கு உணர்த்தினார்.

அதை நீங்களும் பெற முடியும் அவர் காட்டிய மார்க்கத்தினைத் தான் உங்களுக்கும் இப்போது உபதேசிக்கின்றோம். இந்த உணர்வின் ஆற்றலை நல்வினையாகப் பதிவு செய்கின்றேன் (ஞானகுரு)

பதிவு செய்ததை ஓங்கி எண்ணும் பொழுது தீய வினைகளை அகற்றுவதும் பாவினைகளைப் போக்குவதும் உங்களால் முடியும்.

ஆகவே மகரிஷிகளின் அருள் சக்தியை நான் பெறுவேன்… என்னை அறியாத வந்த தீயவினைகள் சாப வினைகள் பாவ வினைகளை நீக்குவேன்…! என்ற உறுதி கொள்ளுங்கள்.

இதைச் செயல்படுத்தினால் அந்த உண்மைகளை நீங்கள் காணலாம்.

ஆத்மாவின் முழுமை புலப்படும் வழி

 

ஒவ்வொரு உயிராத்மாவும் தன்னைப் பற்றிய உண்மையை உணரச் சிந்திக்கும் தொடரில் “நான் என்பது யார்..?” என்கிற வினா எழும் பொழுது தன் சுயத்தின் வளர்ப்பாகத் தியானத்தின் வழியாக உணர்ந்து கொள்ளும் பொழுது “ஆத்மாவின் முழுமை” புலப்படும்.

உடலுக்கு உயிர் குரு. உயிரின் குரு சூரியன் என்ற விளக்கத்தின் பொருளில் ஆத்மா என்பதே மறை பொருளாக்கப்பட்டு விட்டது.

எண்ணத்தின் செயல்பாட்டில் செயல்பாட்டின் வினைப் பொருள் எதுவோ அதுவே விளை பொருளாக ஆக்கம் பெறுகிறது
1.எண்ணத்தின் செயல்பாட்டில் “நான்…” என்பது வினையானால்
2.அந்த வினையின் விளை பொருள் விளைப் பொருளாக ஆக்கும் “சக்தி”
3.வலுக் கொண்டு ஒன்றுவது எங்கே..? என்ற வினாவின் மூலத்தை ஊன்றிப் பார்க்க வேண்டும்.

ஆத்ம பலம் பெற வேண்டும் என்று சொல்வது எதற்கப்பா…?

எண்ணத்தின் செயல்பாடு நான் என்பது புகழ் தேடும் வழியாக உபதேசித்தல் என்பது… விளை பொருள் ஆக்கும் செயல் கொண்ட எண்ணத்தின் “மாறுபாடே…!”

அஞ்ஞானத்தின் செயல்பாட்டில் வினைபொருள் செயல் கொள்ளும் எண்ணமாக எதை எண்ணி வலுக்கூட்டும் செயல் நிகழ்வோ அதுவும் ஆத்மாவில் பதிவு நிலை பெறுகின்றது.

1.செயல்பாட்டில் நான் என்பதில் உரைத்திட்ட
2.வேறுபாட்டின் பொருளில் செயல்பாட்டில் கொள்ள வேண்டிய நான்
3.ஆத்மாவின் மூலச் சக்தியாக நான் என்பதற்கு வலுக்கூட்டும் நானாக அமைவு பெற்றால் இரண்டும் ஒன்றே.

ஒன்றில்லாமல் ஒன்றில்லை உரைத்த உரையில்… இயற்கையின் கதியில் சூரியனை மையம் கொண்டே சுழன்றோடும் கோளங்களும்… ஒன்றுடன் ஒன்று ஒளி காந்த ஈர்ப்பில் சக்தி பெற்றுப் பரிணாம வளர்ச்சி கொண்டு வளர்ந்திடும் செயலை ஒவ்வொரு உயிராத்மாவும் தன் வளர்ப்பின் சக்தியில் முழுமை பெற்றிட
1.அந்த இயற்கையின் கதியில் ஒன்றி
2.சுய சக்தி வளர்ப்பாக்கும் நிலைக்கு வளர வேண்டும்.

அவ்வாறு இல்லாமல் ஒரு உயிராத்மா மற்றொரு உயிராத்மாவை எண்ணியே சக்தி பெறும் பாஷாண்டகம் – பிற ஆத்மாக்களை அடிமை கொண்டு தன் உயிராத்மாவின் சக்தியை வலுக் கூட்டிக் கொள்ளும் செயலுக்குச் சென்றால் இறந்த ஆவி ஆத்மாக்கள் செயல் கொள்ளும் நிலைக்கே செல்ல வேண்டி வரும்.

1.உண்மையின் சக்தி…
2.என்றும் நிலை பெறும் பரிபூரணத்துவ…
3.அகண்ட… பிரகாச… பேரின்ப ஜோதியாக…
4.ஆத்மாவாக – உயிராத்மாவாகச் செயல் கொள்ளும் செயலுக்கு
5.ஆத்மாவிலிருந்து பெற்றிடும் ஒளியே அறிவின் செயல்பாட்டின் காரணமாக
6.அந்தக் காரணத்தின் உண்மையை உணர்ந்து கொண்டிடும் செயலில் ஆனந்தமும்
7.இவைகளின் செயல்பாட்டில் எண்ணத்தின் வலுவாக வினையின் பொருள் நான் என்பதே ஆத்மா என்று உணர்ந்திடும் பக்குவத்தில்
8.அறிவு… காரணம்… ஆனந்தம்…! அனைத்துச் செயல்பாட்டின் நிகழ்வில் ஒன்றுடன் ஒன்று ஒன்றி
9.ஆத்மாவிலிருந்து ஒளி பெற்று வளர்ச்சியின் வலுவை எப்படிக் கொண்டதோ…
10.அந்த வலுவே ஒளியாக மீண்டும் ஆத்மாவின் வலுவை வலுவாக்கும் சூட்சமமே மூல சக்தி…!

ஆக மொத்தம் பேரானந்தப் பேரருளின் ஒளியின் ஒளிக் கதிர்களில் “ஒரு ஒளிக் கதிர் தானப்பா ஓர் ஆத்மா என்பது…!”

சக்தி பெற்றால் இறுமாப்பு தான் வருகிறது…!

 

பல வித்தைகளையும் பல சக்திகளையும் குருநாதர் காட்டினாலும் அந்தச் சக்திகளின் துணை கொண்டு எனக்குள் (ஞானகுரு) இறுமாப்பு அதிகமாக விளைகின்றது.

எதையெதையோ எப்படி எப்படியோ செய்யலாம் என்ற பல சக்திகளையும் உணர்த்துகின்றார் அது வந்த உடனே எனக்குள் இறுமாப்பும் வருகின்றது

இறுமாப்பு வரப்படும் பொழுது சில மந்திரவாதிகளைப் போய் அணுகுவது… அவர்களைச் செயலற்றதாக ஆக்குவது. அப்போது அவர்கள் பதிலுக்கு வன்மம் கொண்டு சில நிலைகளைச் செயல்படுத்துவார்கள்

மந்திரவாதிகளுக்குள் ஒருவருக்கொருவர் இந்த மாதிரிப் பழக்கம் உண்டு.

தனக்குள் மந்திரம் இருக்கிறது என்றால் அடுத்தவனை என்னவென்று சுண்டிப் பார்ப்பது… அதே மாதிரித் தான் என் புத்தியும் செயல்பட்டது. ஏனென்றால்
1.மனித வாழ்க்கையில் வந்ததால் குருநாதர்ர் சக்தி கொடுத்திருக்கிறார் என்றாலும்
2.இவன் என்ன பெரியவனா…? என்ற நிலைகள் அகந்தை கொண்டு செயல்படும் உணர்வே எனக்குள் தோற்றுவித்தது.

ஆனால் மாமகரிஷிகள் உணர்த்தியதோ… நமக்குள் செயல்படும் உணர்வின் இயக்கங்களைக் கண்டறிவதற்காகத் தான். அதாவது எத்தகைய வலு இருந்தாலும்… எண்ணத்தின் வலு கொண்டு வரப்படும் பொழுது நம் எண்ணம் தீமைக்கு எப்படி அழைத்துச் செல்கின்றது…? என்பது தான்…!

குருநாதர் எனக்கு உயர்ந்த சக்தியைக் கொடுத்திருந்தாலும்
1.அகந்தை ஓங்கப்படும் பொழுது மற்றவரை எளிமைப்படுத்திப் பார்ப்பது.
2.தான் தான் நான் தான் என்று நான் என்ற அகந்தை கூடும் பொழுது அங்கே நல்ல உணர்வைக் காக்க முடியாதபடி
3.ஆறாவது அறிவின் தன்மையைச் சீராகச் செயல்படுத்த முடியாதபடி
4.குரு காட்டிய அருள் வழியில் வலுவாகத் தீமையை அகற்றும் நிலைக்கு வருவதற்கு மாறாக
5.தீமையையே தூண்டச் செய்து “இரு நான் பார்க்கின்றேன்…” என்று அவனின் நிலைகளுக்கே என் உணர்வுகள் சென்றது.
6.அந்த உணர்வுகள் உனக்குள் எவ்வாறு செயல்படுகின்றது என்று பார்…! என்று குருநாதர் உணர்த்துகின்றனர்.

இப்படி உணர்த்திக் கொண்டிருக்கும் பொழுது திடீரென்று என்னை அறியாதபடி ஒரு மலை மீது என் இரண்டு கால் பாதங்கள் மட்டும் வைக்கக்கூடிய இடத்திற்கு வந்துவிட்டேன். அங்கே உட்காருவதற்கோ… சரியானபடி நிற்பதற்கோ வழியில்லை. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது அந்த மலை.

இந்த இடத்திற்கு நான் எப்படிச் சென்றேன்…? எதனால் இங்கே வந்தேன்…? இப்போது என்ன செய்வது…? என்று தெரியாதபடி திகைத்துக் கொண்டு இருக்கின்றேன்.

எந்த மந்திரவாதி நம்மை இப்படிச் செய்தானோ…? என்று நினைக்கின்றேன். மந்திரவாதிகளைத் தொட்டு நாம் பரிசீலனை செய்ததினால்… யாரோ மிக சக்தி வாய்ந்தவர் என்ன இப்படி அழைத்து வந்து விட்டார்…! என்ற எண்ணம் வருகின்றது.

எந்தப் பக்கமும் என்னால் திரும்ப முடியவில்லை. காரணம் மலை உச்சி அது…! எந்தப் பக்கம் பார்த்தாலும் பாதாளமாகத் தெரிகிறது… தலை சுற்றுகின்றது பின்னாடி… சுத்தமாகவே திரும்பிப் பார்க்க முடியவில்லை.

அந்த அளவுக்கு மோசமான இடத்தில் இருக்கின்றேன். அப்போது திகைத்து…
1.எவ்வளவு பெரிய சக்தியை குரு நமக்குக் கொடுத்திருந்தாலும் அந்தக் குருவின் துணை நமக்கு இல்லையே
2.நான் அகந்தை கொண்டு அல்லவா எண்ணிவிட்டேன்
3.யாரோ ஒரு மந்திரவாதி தான் நம்மை இப்படிச் செய்து விட்டான் என்ற எண்ணமே வருகிறது.
4.குருவின் வலுவை நான் எண்ணவில்லை.

அகந்தை கொண்டு நாம் செய்த செயலுக்கு மற்றவர்கள் இவ்வாறு செய்து விட்டார்கள் என்ற உணர்வுகள் தான் தோற்றுவிக்கின்றது இதிலிருந்து எப்படி மீள்வது…? என்ற நிலை இல்லாதபடி நான் தவித்துக் கொண்டிருக்கிறேன்.

அரை மணி நேரம்… ஒரு மணி நேரம் ஆகிவிட்டது. நேரம் ஆக ஆக என் உடல் எல்லாம் வேர்க்கின்றது சறுக்குப் பாறை போல் இருக்கின்றது உடலில் வேர்வை அதிகமாக்க் கால்கள் தன்னிச்சையாக நகரும் தன்மை வருகிறது

பாதுகாப்பாக எதையாவது எட்டிப் பிடிக்க வேண்டும் என்றாலும் ஒன்றும் முடியவில்லை. முன் பக்கம் போனாலும் மரணம் தான் உயரமான இடமாக இருப்பதால் பின் பக்கம் போனாலும் மரணம் தான்… உடல் சுக்கு நூறாகிவிடும்.
1.இப்படிப்பட்ட எண்ணங்கள் தான் வந்து கொண்டிருக்கிறது
2.குருநாதர் கொடுத்த சக்தியை எண்ணிப் பார்க்கக்கூட முடியவில்லை.

சிறிது நேரம் ஆனால் மரணம் ஆகி விடுவோம் என்ற இந்த பய உணர்வு அதிகமாக அதிகமாக உடலில் வெப்பத்தின் தன்மை அதிகரிக்க உடலில் இருந்து வேர்வைகள் கொட்டத் தொடங்கி விடுகின்றது.

ஆக வலு இழந்த நிலையில் இருக்கின்றேன்.

அந்த நேரத்தில் “மனமே இனியாகிலும் நீ மயங்காதே…!” என்ற குரல் வருகின்றது. குருவின் குரலாக அது எனக்குத் தென்பட்ட பின் கொஞ்சம் ஜீவன் வருகிறது.

மனமே இனியாயாகிலும் மயங்காதே
பொல்லா மானிட வாழ்க்கையில் நீ தயங்காதே…!
பொன்னடி பொருளும் பூமியில் சுகமோ
மின்னலைப் போல மறைவதைப் பாராய்…!

சிறிது நேரத்தில் நீ விழுந்து விடுகின்றாய் என்றால்… உன் குடும்பம் உன் பெண்டு பிள்ளைகள் என்று நீ மனக்கோட்டை கட்டினாய் அல்லவா…! கொஞ்ச நேரத்தில் எல்லாம் மறையப் போகின்றது பார்…!

அதைத் தொடர்ந்து சில உண்மைகளை அங்கே காட்டுகின்றார் குருநாதர்.

ஒவ்வொரு மனிதனும் செல்வங்களைக் குவித்து வைத்து அதைக் காத்திடும் நிலையாகத் தன் பந்துக்களும் தன் இனங்களும் என்ற நிலையில் மற்றவர்களை இம்சித்து… அவர்களைக் காத்துக் கொள்ளும் நிலை இருந்தாலும் “கடைசி நிலையில்” பொருளைக் காக்காத நிலையில் எப்படி வேதனைப்படுகின்றனர்…?

சம்பாதித்து வைத்த பணம் இருந்தாலும் அண்த நேரத்தில் வேதனையைத் தான் வளர்க்க முடிகின்றதே தவிர செல்வத்தைக் காத்திடும் நிலை இல்லாதபடி
1.வேதனையான நஞ்சு உருப்பெறும் நிலையாக
2.நல்ல குணங்கள் அழிந்திடும் நிலையாக சீர் கெட்டு இருக்கும் நிலையை
3.சினிமா படங்களில் காட்டுவது போன்று ஒவ்வொன்றாக அங்கே அந்த இட்த்தில் வைத்துக் காட்டுகின்றனர்.

பலருடைய நிலைகளைக் காட்டுகின்றார்.

மனமே இனியாகிலும் மயங்காதே
பொல்லா மானிட வாழ்க்கையில் நீ தயங்காதே
பொன்னடி பொருளும் பூமியில் சுகமோ
மின்னலைப் போல மறைவதைப் பாராய் என்று பாடிக் காட்டுகின்றார்.

நேற்று இருந்தவர்கள் எல்லாம் இன்று இருக்கின்றார்களா…? நிலை இல்லாத இந்த உலகம் உனக்குச் சதமா…? மனமே இனி ஆகிலும் நீ மயங்காதே…! என்று தெளிவாக்குகின்றார்.

குறைந்தது ஒரு இரண்டு மணி நேரம் இருக்கும். இந்த உலகத்தில் உள்ள நான் முன் பின் பார்த்திராத ஒவ்வொரு குடும்பங்களையும் காட்டுகின்றார்.

1.அவர்கள் வாழ்க்கையில் செல்வத்தை எவ்வாறு சம்பாரித்தனர்…?
2.செல்வத்தைக் காப்பதற்காக எத்தனை வேதனைகள் படுகின்றார்கள்…?
3.அதனைத் தொடர்ந்து அந்தக் குடும்பங்களில் சாபங்கள் எப்படித் தொடர்ந்தது…?
4.சாபத்தினால் நலிந்த உடலாக நிம்மதியற்ற நிலைகளில் எவ்வாறு வாழுகின்றனர்…? என்பதைத் தெளிவுர எடுத்துக் காட்டுகின்றார்.

அதன் பின் அந்த மலையிலிருந்து என்னைக் கீழே இறக்கி விடுகின்றார். இனி நீ வலம் வரலாம்… இந்த உலகை அறியலாம்… நான் காட்டிய அனைவரைப் பற்றியும் நீ செல்லும் பாதையில் உனக்கு அந்த உணர்வுகள் வரும்

1.அதன்படி நீ அங்கே சென்று பார்…!
2.அந்தக் குடும்பத்தின் நிலையை ஊன்றிப் பார்
3.அவருடைய செயலைப் பார்… அதிலிருந்து அவர்கள் விடுபட என்னவென்று நீ சிந்தித்துப் பார்…! என்று
4.பல நிலைகளை உணர்த்துகின்றார் குரு.

அதன் வழியில் தான் இன்று வரையிலும் யாரையெல்லாம் காட்டினாரோ அவர்கள் அனைவருக்கும் கன்னியாகுமரியில் இருந்து இமயம் வரையிலும் கால்நடையாகப் பெரும்பகுதி நடந்து அவர் காட்டிய இடங்களுக்கு எல்லாம் அந்த உணர்வுகள் தோன்றி ஆங்காங்கு சென்று அந்தக் குடும்பங்களில் எவ்வாறு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்…? அவருடைய நிலைகள் என்ன…? என்று அறியும் வண்ணம் அறியச் செய்தார்.

அறிந்த நிலைகளை தான் இன்னும் அறிந்து கொண்டே இருக்கின்றேன்.

உருவை எண்ணி ஜெபிப்பதா…? உணர்வை (சக்தியை) எடுத்து வளர்ப்பதா…?

 

மனிதன் தன்னாலே சிந்திக்கத் தலைப்பட்டுத் தன்னுள் எழுந்த வினாவாக “நான் என்பது யார்…?” என்றே தன்னைத் தான் அறிந்து கொண்டிடும் முயற்சியாகத் தான் கண்டுணர்ந்த வழி வகைகளை மெய் உணர்வுகளை மறை பொருளாக்குபவர்களும் உண்டு.

ஏனென்றால் மேன்மேலும் தன்னை வளர்ச்சிப்படுத்திக் கொள்ள மனித எண்ணத்தின் செயல்பாட்டில் “விதி முறைகள்…!” என்றே சூட்சமப்படுத்தி அப்படி இருக்கக்கூடாது… இப்படிச் செய்யக் கூடாது… அது தீட்டு… இது தோஷம்… இது பாவம்…! என்பார்கள்.

இப்படி உணர்த்திக் கொண்டு அவ்வாறு உபதேசிப்பவனையே (தன்னையே) எண்ணும்படியும்… தன்னையே ஜெபித்திடும் நிலைகளுக்கும்… ஏற்படுத்திக் கொண்டு
1.குரு என்ற பெயரில் குருவின் சரீரத்தையே எண்ணி ஜெபித்திடும்
2.பிற ஆத்மாக்களின் எண்ணத்தின் செயல்பாட்டின் வலுவைத் தான் ஒருவனே பெற்று
3.தன்னை உயர்த்திக் கொள்ளச் செயல்படும் அனைத்துப் புறச் செயல்களில் “உருவ வழிபாடும் ஒன்று…”

“நான் என்பது எண்ணத்தின் செயல்பாடு..” என்றால் அந்தச் செயல்பாட்டின் உந்துதல் கொண்டு எதை வளர்ச்சிப்படுத்துதல் வேண்டும்…?

பழி தீர்க்கும் உணர்வு கொண்டு மற்ற ஆன்மாக்களைத் தன்னுடன் இணைக்கும் செயலாகத் (மாந்திரீகமும் தாந்திரீகமும் செய்யும் சில சாமியார்கள்) தன் எண்ணத்தின் ஆசைகளை நிறைவேற்றும் பொருட்டு உலவிடும் ஆவி ஆத்மாக்களின் தன்மைகளையும் இறப்பின் பின் அதன் தன்மைகளையும் பல முறை விளக்கி வந்துள்ளேன்.

உடலுடன் உள்ள பொழுதே சரீர பக்தியெனும் போர்வையில் தான் கொண்ட எண்ணத்தையே ஊட்டி
1.தன் சரீர பிம்பத்தையே… தன் உருவத்தை எண்ணி ஜெபிப்போரிடம் பதிவு நிலைப்படுத்திக் கொண்டு
2.தன் ஆன்மாவிற்குப் பிற ஆன்மாக்களையும் அடிமையாக்கிக் கொண்டு
3.உபதேசிகன் ஒருவன் தன்னை உயர்த்திடும் செயல்…
4.அன்றைய “பாஷாண்டகம்..!” எண்ணத்தின் செயல்பாட்டில் இரு விதம் உண்டு.

பிறிதொன்றின் ஈர்ப்பில் ஒன்றுவது ஒன்று… மற்றொன்று தன் உயிராத்ம சக்தியை வலுக்கூட்டும் “தன் நல வளர்ப்பு…”

நான் என்பது எண்ணத்தின் செயல்பாட்டில் பிறிதொருவன் சக்தியை ஈர்த்துக் கொண்டு தனக்களித்துத் தான் வளர்வது என்ற தன் எண்ணம் தன்னுள் வளர்ந்து விட்டால் அந்த எண்ண வளர்ச்சியின் முதிர்வே சூட்சமப் பொருள் பதிந்த பாஷாண்டகமாம்.

1.தன் ஆன்மாவைத் தான் வளர்க்க…
2.உயிர் கொண்ட உடலே கருவிகளாக..
3.உணர்வு கொண்ட தியானத்தின் வழியாக…
4.எண்ணத்தின் செயல்பாடே நான் என்று உணரும் பொழுது…
5.இரு விதச் செயல் நிலைகளை ஆங்கு தெளிந்து கொண்டால்
6.நான் என்பது உடலா…?
7.நான் என்பது உயிரா…?
8.நான் என்பது உணர்வா…?
9.நான் என்பது எண்ணமா…? ஆத்மாவா…? என்ற வினாக்களுக்கும்
10.தன்னுள் தெளிந்த தெளிவைப் பெற்றிடலாம்…!

ஆத்ம முலாமின் வலுவை வலுவாக்கிக் கொண்டு
1.“தான்..” என்பதே ஆத்மாவாக உயிருடன் ஒன்றியே.. உயர் நிலை பெற்றே…
2.எண்ணத்தின் செயல்பாட்டில் நானும் வேண்டுமப்பா…!
3.ஒவ்வொரு உயிராத்மாவும்… ஒன்றுடன் ஒன்று ஒன்றி…!
4.ஒன்றில்லாமல் ஒன்றில்லை… ஒன்றுடன் ஒன்றியே பல வளர்ந்து… சக்தி ஈர்த்தல்…! என்று கூறியதிலும்
5.அதற்குள் இருக்கும் உண்மைகளை அறிந்து… உணர்ந்து கொண்டால்
6.தன் உயிராத்மாவின் சுய வளர்ச்சி நிலை “மிக மிகத் தெளிவு பெறும்…!”

பல கஷ்டங்களைக் கொடுத்துத் தான்… அதிலிருந்து விடுபடும் சக்திகளைக் கொடுத்தார் குருநாதர்

 

என் (ஞானகுரு) காலிலே பல ஆணிகள் உண்டு. காலில் ஆணி உள்ளவரிடம் கேட்டால் தெரியும். ஒரு சிறிய கல் காலிலே குத்தினால் தலையில் இருக்கக்கூடிய… உச்சி மயிர் நட்டமாக நிற்கும்.

கால் ஆணி உள்ளவர்களைத் தண்டிக்க வேண்டும் என்றால் ஒரு குச்சியை வைத்துக் காலிலே பத்து அடி அடித்தாலே போதும் ஜீவனே பிரிந்து விடும். அப்போது அந்த வேதனை எப்படி இருக்கும்…? என்று தெரிந்து கொள்ளலாம்.

இரண்டு காலிலும் சேர்த்து 26 ஆணிகள் உண்டு…! ஒரு காலடி நான் எடுத்து வைக்க வேண்டும் என்றால் முள்ளிலே கால் வைப்பது போன்று தான் இருக்கும்.

சிலம்பு விளையாடுபவர்கள் எப்படிக் காலடி எடுத்து வைத்துச் செயல்படுகின்றார்களோ அது போன்று பாவ்லா போட்டுத் தான் நடக்க முடியும். ஒவ்வொரு நிமிடத்திலும் வேதனைகளைத் தோற்றுவித்துக் கொண்டே இருக்கும்.

ஆனால் ஊரைச் சுற்றி உலகைச் சுற்றி நான் அனுபவம் பெறுவதற்காகப் போகும் போது… குருநாதர் எம்மை “நீ செருப்பு போட்டு நடக்கக் கூடாது…” என்று சொல்லிவிட்டார்.
1.செருப்பு போட்டு நடந்தால் கஷ்டத்தை நீ உணர முடியாது
2.எத்தனையோ பேர் இந்த உலகிலே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்
3.அந்த உணர்வுகள் எப்படி வேலை செய்கிறது…? என்று நீ உணர வேண்டும்.
4.அதை உணர்ந்தால் தான் மற்றவர்களுக்கு நீ உதவி செய்ய முடியும்… அதை நீக்கவும் முடியும்.

ஆகவே… உனக்கு வேதனை வரும் பொழுது அதை நீக்கக்கூடிய உணர்வுகள்… அந்த உபாயங்கள்… அது எப்படி…? என்பதை நீ அறிந்து கொள்ளவே இதைச் சொல்கிறேன் என்றார் குருநாதர்.

காலிலே ஆணி என்றாலும் நடக்கும் பொழுது உன் மனது என்ன ஆகிறது…? நீ சுவாசிக்கும் உணர்வு உடலுக்குள் சென்று என்ன ஆகின்றது…?

ஆணி வந்தவர்கள் கால்கள் எப்படி முடமாகின்றது…? நன்றாகத் தான் இருப்பார்கள் இந்த ஆணிகள் வந்துவிட்டால் உடல் குறுகி நலிந்த நிலை ஆகி விடுகின்றார்கள்… அவரின் மனதும் வேதனைப்படும் உணர்வாகவ ஆகி விடுகிறது.

இப்படி… தன்னை அறியாமலே எந்தெந்த நிலைகள் கொண்டு மனிதர்கள் வேதனைப்படுகின்றனர்…? அந்த வேதனை உருவாகவே எப்படி மாறி விடுகின்றார்கள்…?

இது போன்ற நிலைகளை நீ அனுபவபூர்வமாக அறிந்தால் தான் அதை நீக்க முடியும்…
1.அந்த அருள் ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி
2.அகஸ்தியன் காட்டிய அருள் வழிப்படி
3.வியாசகர் காட்டிய அருள் நெறிப்படி
4.வான்மீகி காட்டி அருள் நெறிப்படி
5.நாம் எதை எண்ண வேண்டும்… எதனை நாம் பருக வேண்டும்…?
6.எதனை நாம் வலுவாகச் சேர்க்க வேண்டும்…?
7.எதனை வினையாகச் சேர்க்க வேண்டும்…?
8.ஞானிகள் உணர்வினை வினைக்கு நாயகனாக எவ்வாறு ஆக்க வேண்டும் என்ற நிலையை
9.என் காலில் ஆணி இருக்கின்ற வரையிலும் நடந்து பல நிலைகளைச் செயல்படுத்தினார் குருநாதர்.

மகரிஷிகள் மனித வாழ்க்கையில் தீமைகளை அகற்றி விண்ணுலகில் இன்று சுழன்று கொண்டிருக்கிறார்கள். தீமையை அகற்றிய நிலைகள் அவர் உடலில் விளைய வைத்த சக்திகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து பூமியில் சுழன்று கொண்டிருக்கின்றது.

அதை நீ எவ்வாறு பருக வேண்டும்…? என்று உபதேசித்தார். இப்படித்தான் அனுபவங்களைக் கொடுத்து உண்மைகளை உணரும்படி செய்து ஞானிகளின் அருளாற்றல்களைப் பெறும்படி செய்தார்.

வழக்கத்தில் நாம் செய்வது ஒன்று… ஆனால் அதையே “நல்லதை உருவாக்கும் பழக்கமாக மாற்ற வேண்டும்”

 

புற உலகில் என்னென்ன வழி (மார்க்கம்) இருக்கிறதோ அது அத்தனையும் இன்று நம்புகின்றோம்… நம்மை நாம் நம்புகிறோமா…?

ஆக… ஒவ்வொரு மனிதனுக்கும்
1.அவனுக்குள் இருக்கும் சக்தி இன்னது தான் என்று யாம் (ஞானகுரு) தெளிவாகச் சொல்லி
2.உங்கள் எண்ணத்திற்கு வலுவையும் கொடுத்து… எண்ணத்தால் ஞானிகள் சக்தியைப் பெறச் செய்து
3.உங்கள் எண்ணத்தாலே உங்களை அறியாது வரும் தீமைகளை அகற்றிட உங்களுக்கு அந்த சக்தியையும் கொடுக்கின்றோம்.
4.ஆனால் இதை நீங்கள் வளர்ப்பதற்கு உங்களுக்கு மனம் வரவில்லையே…!
5.யாரோ செய்வார் எவரோ செய்வார் என்ற எண்ணத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

எனக்கென்று தனித்து நான் வரவில்லை குரு சொன்ன வழியில் நான் கண்டேன்… அருள் ஞானத்தினை அவர் காட்டிய வழியில் பெற்றேன்…! அதனின் உணர்வின் துணை கொண்டு
1.நீங்கள் அனைவரும் பெற முடியும் என்ற எண்ணத்தை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றேன்
2.இந்தப் பதிவை மீண்டும் நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்தால் அந்தச் சக்தி உங்களுக்குள் செயல்படும்.

ஒரு திட்டுகின்றார்… நீ கெட்டுப் போ…! என்று நம்மைச் சொல்லிவிட்டால் என்னைக் கெட்டுப் போக வேண்டும் என்று சொன்னான்… கெட்டுப் போக வேண்டும் என்று சொன்னான்…. அவன் உருப்படுவானா…? உருப்படுவானா…! என்று பதிலுக்கு நாம் சொல்வோம்.

அப்படிச் சொல்லும் போது அவன் சொன்ன உணர்வுகள் எல்லாமே உங்களுக்குள் புகுந்து… அவர் சொன்ன அந்தக் கெட்டுப் போகும் உணர்வை உங்களுக்குள் அதிகமாக வளர்த்து நல்ல குணங்களைப் பூராம் சீர் கெடச் செய்து கெட்டுப் போகும் உணர்வே உடலில் விளைகின்றது.

திட்டியவர்களைத் திரும்பத் திரும்ப இவ்வாறு எண்ணி அவர்கள் சொன்னதை நமக்குள் உருவாக்கிக் கொள்கின்ற மாதிரி…
1.மகரிஷிகளின் அருள் சக்தியை நான் பெறுவேன்
2.என்னை அறியாது வந்த இருளைப் போக்குவேன்
3.மெய் உணர்வை எனக்குள் வளர்ப்பேன்
4.என் பார்வையால் எல்லோரையும் நலம் பெறச் செய்வேன்
5.என் பார்வையால் என் குடும்பத்தினரை நலம் பெறச் செய்வேன்
6.என் பார்வையால் என் தொழிலை வளரச் செய்வேன்
7.என் வாடிக்கையாளர்கள் நலம் பெறச் செய்வேன் என்று இப்படி எண்ணிப் பாருங்கள்.

இது தான் கீதையிலே நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய் என்று சொல்லப்பட்டது. அந்தக் கீதையைச் சொன்னது யார்…? கண்ணன். அந்தக் கண்ணன் யார்…? நம் கண்கள்…!

ஆகவே… “நல்லது செய்ய வேண்டும்…” என்று நாம் திரும்பத் திரும்ப எண்ணினால்
1.அதைப் பார்வையாக ஏற்று நமக்குள் சாரதியாக (கண்கள்) நின்று நல்வழியைக் காட்டுகின்றான்.
2.அந்தப் பாதையில் எந்த இடையூறு இருந்தாலும் விலக்கிச் செல்கின்றான்.
4.நம்மை நல்ல பாதையில் அழைத்துச் செல்கின்றான்
5.தீமையிலிருந்து அகற்றி நம்மைக் காக்கவும் செய்கின்றது

இதை நாம் செய்து பழகிக் கொள்ளலாம் அல்லவா…!

நான்…! (என்பது) யார் என்று புரிந்ததா…?

 

1.மொழி அமைப்பின் கோர்வையில் பொருள்களின் நுட்பங்களைக் கற்பவரும்
2.கற்றறிந்து… பொருள் புரிந்து… அறிந்து… தெளியும் வகைகள் புலப்பட எழுத்தில் வடிக்கும் ஆசானும்
3.தன்னுடைய அறிவியல் தொடர்பில் தான் பெற்ற அனுபவ ஞானத்தையும் இணைத்தே
4.ஏட்டின் வாயிலாக வெளிக் கொணர்ந்து அளித்த தன்மைகளில்
5.கற்றுக் கொண்ட அறிவு… கற்றவர் அளித்திட்ட பிற பட்டங்கள் (GRADUATION) இவை எல்லாம் எதற்குத் துணை போயின…?

கற்ற கல்வியைப் பறைசாற்ற பெரும் விவாத மேடையன்றோ அமைக்கின்றான் மனிதன்…! ஆய்ந்து அறிதல் என்பது எண்ணத்தின் செயல்பாட்டில் எந்த நிலை பெற்றுள்ளது..?

எண்ணத்தின் செயல்பாடு தான் “நான்…” என்றால் வெறும் உலகோதய நடைமுறைகளின் புகழ் தேடிச் செல்லும் நிலைக்கன்றோ சென்று விட்டது “அறிவு…”

எண்ணத்தின் செயல்பாடு அனைத்தும் ஆத்மாவின் சிந்தனை வசமானால்
1.ஆத்மாவா…. நான் என்பது…?
2.எண்ணத்தின் அலையே சுவாசமாகி…
3.சுவாசத்தின் உணர்வே ஆத்மாவாகி…! என்று பாடுகின்றோம்.

ஜீவ பிம்ப சரீரம் கொண்ட பிறகு நான் என்பது யார்…? என்ற முயற்சியாக வினா எழுந்துள்ளது. எண்ணத்தின் செயல்பாட்டிலும் பொருள் உள்ளது. அது மாத்திரம் “நான்” ஆகிவிடாது.

சரீரம் பெற்ற நிலையில் அன்றாடம் செயல் கொள்ளும் காரண காரியங்களில் பஞ்சேந்திரியங்கள் செயல்படும் தொழிலுக்கு “நொடிக்கும் குறைவான நேரத்தில்…” மனிதர்கள் எத்தனை எத்தனை செயல்கள் புரிகின்றார்கள்…?

இந்த ஜீவ பிம்ப சரீரத்தைக் கொண்டு உண்ணுவதும்… உறங்குவதும்… புறத் தொழில் புரிவதும்… கழிவுகளை நீக்குவதும்… பார்த்தல்… கேட்டல்… நுகர்தல்… சுவைத்தல்… ஸ்பரிசித்தல்… அனைத்துக் காரியங்களும் தொழிற்படு வினையாக
1.எண்ணத்தில் கொண்டு செயல்படுத்தப்பட்ட அந்தக் காரியங்கள்
2.எண்ணாமல் என்பதே… இயல்பாக… “இயற்கையாகச் சரீரத்தின் நடைமுறைச் செயல் அனைத்திலும்…”
3.ஆத்மாவின் தொடர்பின்றி நடந்தனவா…?

சரீரத்தின் உட்பொருளாகச் செயல்படும் நாடிகளின் சுவாச அலைகளில் எண்ணம் கொண்டு செயல்பட்டது எது…?

எண்ணத்தின் அலையே சுவாசமாக சுவாசத்தின் உணர்வே ஆத்மாவாகி என்ற அந்த எண்ணச் செயல்பாட்டின் மூலத்தையே அறிந்து கொள்ள வேண்டும்.

சுவாசத்தின் நல்வினைச் செயல்பாடே ஒளி தான். “நான்…” என்பதே எண்ணத்தின் செயல்பாடு என்றால் அதைத் தெரிந்து கொண்ட பின் அங்கு ஆத்மாவைக் கைக்கொள்ள வேண்டும்.
1.நாம் ஆத்ம பலம் பெற வேண்டும்..!” என்று
2.உரைத்த சொல்லின் உண்மையை உணர்ந்து பார்க்க வேண்டும்.

ஆத்மா பலம் பெற்று விட்டால் உள் நிறைந்த சக்தி எந்த மூலச் சக்தியுடன் கலந்து செயல்பட… மூல சக்தியாகச் சக்தி பெற்ற ஆத்மா
1.தான் கொண்ட உயிருடன் இணைந்து
2.பேரின்ப லயத்தில் திளைத்துக் கலந்துவிடும் சூட்சமம் தான் “நான்…!”

இப்பொழுது நான்…! என்பது யார் என்று புரிந்ததா…?

உயிருடன் நாம் உரையாடுகின்றோமா…?

 

யாம் கூறி வரும் தியானத்தின் வழியாக “மௌனம் கொண்டே சக்தி பெற்று வளர்த்திடுங்கள்…!” என்று உணர்த்தி வருவதெல்லாம் உயிராத்மாவின் சக்தி வலுவைக் கூட்டிட வேண்டும் என்பதற்காகத்தான்.

ஒவ்வொரு உயிராத்மாவும் பெற்ற தனித்துவத் தன்மையில் மேலும் வளர்ச்சி கொள்ளத் தான் கடைப்பிடிக்கும் தியானமாக உயிராத்மாவை எண்ணி
1.ஆத்ம பலம் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்ற சிந்தனையின் வசமாக
2.ஒளிப் பிரவாகத்தினுடைய தொடர் நிலை பெற்றிடவே மௌனம்.

மௌனம் என்றால் என்னப்பா…?

1.ஆத்மாவை எண்ணியே… சக்தி வலுக் கூட்டும் சம்பாஷணையே (உரையாடல்) மௌனம்…!
2.மௌனம் என்றால் பேச்சு என்ற வாய்ச் சொல் உரை அல்ல.

கல்லாவின் பால் என்று கூறுவதெல்லாம் ஆத்மா பெற்றிடும் சக்தியின் பரிபூரணத்தைத்தான்…!
1.ஏடறிவின் வழி கற்றவர் அன்றி படிப்பறிவில்லாத எவரும்…
2.தன்னை எண்ணிடும் சிந்தனையின் வசமானால் கலலா அறிவு சித்திக்கும்.

கல்லா அறிவின் தொடரில் அண்ட சராசரங்களையும் அறிந்து கொண்டே “தன்னை வளர்ச்சிப்படுத்திக் கொள்ளும்…” எண்ணத்தின் செயல்பாட்டிற்கு வர வேண்டும்.

அதற்குச் சக்தி ஊட்டிடும் செயலாக அந்தச் சக்தியின் வளர்ப்பாகத் தன்னை வளர்த்து ஆதி சக்தியின் சக்திக்கே சக்தியூட்டி அதனுடன் ஒன்றிடும் செயல்பாட்டின் நிகழ்வாக ஆக்கம் பெற வேண்டும்.

உயிரணு குழந்தையாகப் பிறப்பிற்கு வந்த பின் தன் முன் தொடர் அறியாத் தன்மையில் அதே உயிரணு எண்ணம் கொண்டு ஆத்மாவாகும் சூட்சமங்களை யார் விளக்கிடுவார்…?

சகலத்திலும் சகலமாகக் கலந்துள்ள அண்டம்… பால்வெளி எங்கும் வியாபித்துள்ள… ஒளி காந்த சக்தியாக நிறைவு பெற்றுள்ள “மூல சக்தி…!” அதை அறியத்தானே சப்தரிஷிகளும் முயலுகின்றனர்.

1.ஆதி சக்தியின் சக்தியாக ஒன்றிச் செயல் கொண்டிடும் சப்தரிஷிகளின்
2.ஒலி ஒளியாகச் செயல் கொள்ளும் சூட்சமங்களை எல்லாம்
3.மெய் ஞான விழிப்பறியும் “ஞானச் செல்வங்கள்” அறிந்து கொண்டு
4.என் நிலைக்கு உயர்ந்து வாருங்கள்…! என்றே அழைக்கின்றேன்.

ஆத்மாவாக உதித்திடும் ஆதி சக்தியின் மூல சக்தி உயிரணுவின் எண்ணத்தின் ஈர்ப்பில் வலு வீரியத்தின் தின்மைக்கொப்ப ஒளி காந்தமாக ஒன்றி உயிராத்மாவாகப் பிறப்பிற்கு வந்திட… எண்ணமே வலுவாகப் பிறந்த பின்… தன்னை உணர்ந்து “நான் என்பது யார்..?” என்ற வினாவில்
1.கற்ற கல்வி உரைக்கின்றதே எண்ணத்தின் செயல்பாடு என்றால்…
2.அந்த எண்ணத்தில் எது செயல்பட வேண்டும்…?

ஆத்மாவின் பலம் பெற வேண்டும் என்ற எண்ணத்தின் செயல்பாட்டில் ஆத்மா என்பது யார்…? என்ற நிலையில் உயிர் மீண்டும் பிறப்பிற்கு வராத் தன்மை செயல் கொள்ள வேண்டும்.

மூலச் சக்தியின் பிம்பமாம் ஆத்மா வலுக் கொண்டு உயிரணுவில் ஒன்று கலந்து சூழ்ந்தே “பிரகாசிக்கும் ஜோதியாக ஆக வேண்டுமப்பா…!”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் தன்னைக் காட்டிலும் வலுக் கொண்ட உணர்வுகளை நுகர்ந்து நுகர்ந்து நம்மை மனிதனாக உருவாக்கியது நம் உயிர்.

இதை உணர்த்துவதற்காகத்தான் சிவ ரூபத்தைக் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.

சிவனுக்குப் போட்டிருக்கும் ஆடைகளைப் பார்த்தால் யானைத் தொலி (தோல்) புலித் தொலி மான் தொலி என்று காட்டியிருப்பார்கள். நாம் அந்தந்தச் சரீரத்தை எல்லாம் பெற்றுத் தான் இந்த மனித உடலாக வந்தோம்.

சிவன் கையிலே திரிசூலம் இருக்கும்… அதிலே உடுக்கையும் இருக்கும்.
1.சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்பம் காந்தம் விஷம் என்ற இதனின் இயக்கத்தில் தான்
2.நாம் நுகர்ந்த உணர்வுகள் எது எது இணைகின்றதோ அது “ஒலியாகின்றது…” (திரிசூலத்தில் உடுக்கையை வைத்தது இதற்குத் தான்)
3.முதலில் மோதும் இசைகள் அதனுடன் ஒடுங்கி விடுகிறது
4.மீண்டும் மற்றொன்றின் ஒலிகள் இணைந்த பின் மறுபடியும் சுருதிகள் மாறுகின்றது.
5.சிவன் உலகை ஆட்டிப் படைக்கின்றான் என்று காட்டுகின்றார்கள்.

ஆக சிவ உருவத்தைக் கண்ணுற்றுப் பார்த்தாலே உண்மையின் இயக்கங்களை நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே இதைக் காட்டுகின்றார்கள்.

சிரசில் பட்டைகள் மூன்று இருக்கும். விபூதியால் பூசப்பட்டிருப்பினும் சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்பம் காந்தம் விஷம் இந்த மூன்றும்
1.தனக்குள் கவர்ந்து கொண்ட உணர்வின் தன்மையை
2.அது தனக்குள் அங்கீகரித்துக் கொள்கிறது… தன் நிலையை மாற்றிக் கொள்கிறது என்ற நிலையை
3.நாம் அறிவதற்காக இவ்வாறு வைத்துள்ளார்கள்.

சிவனின் சிரசில் கங்கையும்… சிவன் பாதி சக்தி பாதி என்றும் காட்டுகின்றனர். ஒவ்வொரு அணுவிலும் வெப்பம் கலந்தே இருக்கும். அந்த வெப்பத்தின் இயக்கத்தால் தான் அனைத்தும் இயங்குகிறது என்று பராசக்தியாகக் காட்டி “இந்த வெப்பம் சர்வத்தையும் உருவாக்கும்…” என்ற நிலையை இங்கே தெளிவாக்குகின்றார்கள்.

சிவன் உடல் முழுவதிலும் பாம்பைப் போட்டுக் காண்பித்துள்ளார்கள். ஜடா முடியிலும் இந்த விஷப் பாம்பு இருக்கும்.
1.ஒவ்வொரு அணுக்களிலும் உள்ள இந்த விஷமே
2.இயங்குவதற்கு மூல காரணம் என்ற நிலையைத் தெளிவாக்குகின்றனர்.

இப்படி ஒரு உருவத்தைக் காட்டி அருவ நிலையின் செயலாக்கமும்… சேர்ந்த பின் இந்த உருவத்தின் நிலைகள் எவ்வாறு…? (உருப் பெறுகிறது) என்று தெளிவாக்குகின்றது நம் வேதங்கள்.

வேதங்களின் மூலத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் ரிக் சாம அதர்வண யஜூர் என்று முழுமையாக யாம் (ஞானகுரு) சொன்ன முறைப்படி அறிந்து கொண்டால்
1.எப்படி எல்லாம் உருவாகி இன்று மனிதனாக வந்துள்ளோம்…! என்று தன்னை அறிந்திட முடியும்.
2.தன்னைத் தான் அறிந்தவன் (ஞானிகள்) வெளிப்படுத்திய உணர்வு தான்
3.சூட்சமத்தில் நடப்பதை உருவமாக எப்படி வருகிறது…? என்பதனை உருவத்தை அமைத்துத் தெளிவாக்கினார்கள் ஞானிகள்.

ஜடாமுடியில் கங்கை… சிவன் பாதி சக்தி பாதி… என்று உடலில் சரி பகுதி வைத்துள்ளார்கள்… அர்த்தநாரீஸ்வரர். சிரசிலே பிறைச் சந்திரன்.

காரணம் ஒரு பொருளுடன் ஒரு பொருள் இரண்டறக் கலந்து விட்டால் அதுவும் இதுவும் கலக்கப்படும் போது சரி பகுதியாக மாறுகின்றது. இதன் ஒளியும் மங்குகிறது… அதன் ஒளியும் மங்குகிறது.

இப்படி மாறுவதைக் காட்டுவதற்குத்தான் சிவனின் சிரசிலேயும் பிறைச் சந்திரனைப் போட்டுள்ளார்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒவ்வொரு நாளும் நமக்குள் எத்தனையோ உணர்வுகளைக் கவர்ந்திருந்தாலும் தினமும் அதிகாலை துருவ தியான நேரத்தில் “ஈஸ்வரா…” என்று உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று தியானிக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலக்க வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மாக்கள் ஜீவ அணுக்கள் பெற வேண்டும் ஈஸ்வரா… என்று இரத்ததில் அந்த அரும் பெரும் சக்திகளைக் கலக்கச் செய்ய வேண்டும்.

ஜீவ அணு:
ஜீவ அணு என்றால் உதாரணமாக ஒரு பாம்பை நாம் அடிக்கின்றோம் என்றால் அந்த அணுக்கள் (பாம்பு வேதனைப்பட்ட) நம் உடலில் ஜீவ அணுக்களாக இரத்தத்திலே வளரும். உடலில் உள்ள உறுப்புகளில் போய் இணையும்.

அதற்குச் சாப்பாடு தேவை. வேதனைப்பட்ட அலைகளை எடுத்துத் தான் அது சாப்பிடும். நமக்கு வேதனையைக் கொடுக்கும்.

ஜீவ ஆன்மா
அந்தப் பாம்போ (பாம்பின் உயிராத்மா) மனிதனை உருவாக்கிய இந்திரீகத்தில் அது கருவாகப் போய்ச் சேர்ந்துவிடும் அடுத்த உருவைப் பெறுவதற்கு…!

அந்த உருவைச் சேர்த்த பின் அந்தப் பாம்பின் தன்மை கொண்டு அந்த அணுவாக நமக்குள் உருவாகும். அதற்கு மாற்றத் தெரியாது. அதே உணர்ச்சிகளைத் தான் தூண்டிக் கொண்டிருக்கும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலக்க வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவான்மாக்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்றால்
1.அந்த அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகள்
2.அதற்குள்ளும் சேர்கின்றது (பாம்பின் ஆன்மா ஜீவான்மாவாக உள்ளதுக்கு).
3.மனிதனாகும் அந்த உணர்வுகள் கருக்களிலும் இந்த உணர்வை மாற்றும் வல்லமை பெறுகின்றது.
4.அந்த அணுக்கள் இந்தச் சக்தியைப் பெறும் போது இதுவும் நமக்குள் ஒத்தாசையாக வருகின்றது.

ஏனென்றால் நமக்குள் வந்து மனிதனாக உருப்பெறும் உணர்வை அங்கே வளர்த்திருக்கின்றது. ஆனால் அருள் ஒளியின் தன்மையை நாம் கூட்டும் போது இதுவும் அந்த ஒளியின் சுடராக மாறுகின்றது.

இந்த உணர்வின் தன்மை வளர்த்துக் கொண்ட பின் இந்த உடலை விட்டு நாம் சென்றாலும் அது வளர்த்துக் கொண்ட உணர்வுகள் நாம் எண்ணிய உணர்வுகள் அனைத்தும் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக மாறுகின்றது.

அதற்குத்தான் அதிகாலை துருவ தியான நேரத்தில் நாம் பார்த்தவர்களுக்கெல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று எண்ணச் சொல்வது..!

வைரத்தைப் போன்று எங்கள் வாழ்க்கை ஜொலிக்க வேண்டும் எங்கள் செயல் எல்லாம் ஜொலிக்க வேண்டும் எங்கள் சொல் ஜொலிக்க வேண்டும் நாங்கள் பார்த்தோர் குடும்பமெல்லாம் வைரத்தைப் போன்று ஜொலிக்க வேண்டும் அவர்கள் வாழ்க்கை ஜொலிக்க வேண்டும் அவர்கள் தொழில்கள் ஜொலிக்க வேண்டும் அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும்
1.என்று எத்தனை தடவை சொல்கிறீர்களோ
2.அது வரை உங்களுக்கு நன்மை தரும்.

இராமாயணத்தில் காட்டுகின்றனர்… ஜனகச் சக்கரவர்த்தி தன் வளர்ப்பு மகளான சீதாவைத் திருமணம் செய்ய சுயம்வரத்தை ஏற்படுத்துகின்றார். அங்கே வருவோர் அவரவர்கள் திறமைகளைக் காட்டும்படி சொல்கின்றனர்.

வந்தவர்கள் அனைவரும் அங்கிருக்கும் வில்லை எடுத்து அதில் அம்பை ஏற்றிக் குறி வைத்துத் தாக்குகின்றனர்… அவரவர்களுக்குத் தகுந்த மாதிரி..!

ஆனால் இராமன் வந்தவுடன்… அவன் உணர்வுப்படி தீமை செய்யும் அந்த வில்லையே ஒடித்து விடுகின்றான். ஏனென்றால்…
1.தீமை செய்யும் எண்ணத்தை நீக்கிய பின்
2.சீதா அந்த மகிழ்ச்சி பெறும் குணத்தைத் தன் உடலுடன் அரவணைத்துக் கொண்டான்.
3.அதைத்தான் கல்யாணராமா என்பது…!

மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் எமக்கு (ஞானகுரு) உபதேசித்து உணர்த்தியது…!

 

எல்லா உயிரையும் ஈசனாக மதி…! அந்த உடல்களை ஆலயமாக மதி… அந்த ஆலயத்திற்குள் வீற்றிருக்கும் உயர்ந்த குணங்களை மனிதனாக உருவாக்க உதவிய நற்குணங்களை எல்லாம் தெய்வமாக மதி.

ஒவ்வொரு மனிதனும்… அவன் தீமையிலிருந்து அகன்றிடவும் மனிதன் என்ற புனிதத் தன்மை பெறவும்… என்றுமே ஒளியின் சரீரமாக நிலைத்திருக்கும் அருள் ஞானிகள் உணர்வுகள் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்றும்… “நீ பிரார்த்தனை செய்…”

1.உனக்குக் கிடைக்க வேண்டும் என்று நான் எதைப் பிரார்த்தித்தேனோ… எதை உபதேசித்தேனோ
2.எவ்வாறு அதையெல்லாம் நீ கூர்ந்து கவனித்தாயோ அந்த உணர்வுகள் அனைத்தும் உனக்குள் பதிவாகி
3.அந்தப் பதிவை மீண்டும் நீ நினைவாக்கப்படும் பொழுது
4.நான் கூறிய உணர்வையும் நான் உணர்த்திய உணர்வையும் நீ பெறும் தகுதி பெறுகின்றாய்.

கீதையின் சாரத்தை” அன்று வியாசகர் உணர்த்தியது போன்று… நான் உனக்கு உபதேசித்ததை நீ எடுக்கப்படும் போது “நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்…!”

ஆகவே… பிறருடைய தீமைகளை அகற்றி அதிலிருந்து அவர்கள் மெய் வழி பெற வேண்டும் என்று ஏங்கி ஒவ்வொரு உயிரையும் ஈசனாக மதித்து நீ செயல்படு.

நான் உனக்கு உபதேசித்து உணர்த்திய ஆற்றல்மிக்க சக்தியின் துணை கொண்டு
1.விண்ணின் ஆற்றலைப் பருக வேண்டும் என்று நீ எண்ணு.
2.எல்லோருக்கும் அது கிடைக்க வேண்டும் என்ற ஏக்க உணர்வுடன் நீ அதைப் பெறுவாய் என்றால்
3.எல்லோருடைய வலுவும் உனக்குக் கிடைக்கின்றது… அவர்களின் துணை கொண்டு மெய் ஒளியை நீ பெறுகின்றாய்.

மெய் ஞானிகள் உணர்வை நீ பெறும் பொழுது அது உனக்குள் விளைந்து சொல்லாக வெளிப்படும் போது அதைக் கேட்பவர் உணர்வுளிலும் ஆழமாகப் பதிகின்றது.

ஆழமாகப் பதிந்த பின் அவர்களை மீண்டும் அதை நினைவு கொள்ளும்படி செய். அவர்கள் எப்போது நினைவு கொள்கின்றனரோ அந்தத் தீமையிலிருந்து விடுபடுகின்றனர்.

அவர்களை அறியாது சேர்ந்த தீமையிலிருந்து விடுபட
1.நீ கண்டறிந்த உபாயத்தை
2.உனக்கு நான் உணர்த்திய உணர்வை
3.அதன் துணை கொண்டு நீ கண்டறிந்த அறிவிந் ஞானத்தை எல்லா மக்களுக்கும் உபதேசி.
4.அவர்களுக்குள் அது பதிய வேண்டும் என்று நீ செயல்படுத்து
5.அருள் ஞானிகள் உணர்வை அவர்கள் பெறும் தகுதியாக அந்த உணர்ச்சிகளை அவர்களுக்குத் தூண்டு.

அதன் வழியில் அவர்கள் அதைப் பெற்றார்கள் என்றால் அவரை அறியாது உள் புகுந்த தீமைகளை அகற்ற இது உதவும்.

காரணம்… அவர்களுடைய நல்ல குணத்தால் உயர்ந்த பண்பால் பரிவால் பிறரைக் காத்திடும் நிலைகள் கொண்டு… பிறரைக் காத்திடும் செயலாகச் செயல்பட்டாலும் பிறர் படும் துயரத்தின் உணர்வுகள் நுகர்ந்தறிந்தே அவர்களால் செயல்பட முடிகின்றது. அந்தத் துயரங்களை நுகர்ந்தறிந்த பின்
1.அதிலிருந்து பிறரை மீட்டிட வேண்டும் என்று செயல்படுத்தும் அந்த நல்ல மனிதர்களுக்குள்
2.அவரை அறியாது அந்த தீமைகள் புகுந்து விடுகின்றது.

பாலிலே ஒரு துளி விஷம் பட்டது போன்று… நல்லவையாக இருக்கும் இந்த உணர்வுக்குள் விஷம் கலந்த பின் அவர்கள் செயலற்றதாக ஆகிவிடுகின்றனர்.

1.பிறரைக் காக்கின்றனர்… ஆனால் அவர்களுக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்கள் மறைந்து விடுகின்றன.
2. நான் கொடுக்கும் உபதேசத்தினை அத்தகைய நல்லோரைக் காத்திடும் தன்மைக்கு நீ பயன்படுத்த வேண்டும்
3.தீமையை அகற்றிடும் செயலாக “எனது வாக்கு” உனக்குள் இருந்து வேலை செய்யும்.

ஆகவே ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதித்து அவன் அமைத்த ஆலயம் என்று அந்த உடல்களை நினைத்து அந்த உடலில் இருக்கும் உயர்ந்த குணங்களைக் காத்திடும் நிலையாக…
1.நான் சொன்ன உபாயத்தின்படி விண்ணை நோக்கி நீ ஏகி அந்த உணர்வின் தன்மை பருகி
2.அதனை நீ சொல்லாக வெளிப்படுத்தி கேட்பவர் உணர்வுக்குள் அருள் ஞானிகளின் வித்துக்களை ஆழமாகப் பதியச் செய்.

யாரெல்லாம் நீ சொல்வதைப் பின்பற்றித் தொடர்ந்து செய்து வருகின்றார்களோ… தீமை அகற்றிடும் சக்தி அவர்கள் பெறுகின்றனர்.

அவர்கள் பெற வேண்டும் என்று நீ அவர்களை நினைத்துத் தியானித்தாய் என்றால் அவர் எண்ணும் பொழுது அவர்களுக்கும் தீமை அகற்றும் சக்தி கிடைக்கின்றது.

ஒரு நெலைச் சமைத்து யாரும் அதை உணவாக உட்கொள்ள முடியாது நீ ஒருவனாக இருப்பினும் ஒரு நெல் மற்றவர்கள் பசியைப் போக்க உதவாது.

மற்றவர்கள் உணர்வுகள் எண்ணங்களை ஒருக்கிணைத்து…
1.உயர்ந்த எண்ணங்களை எல்லோரையும் வளர்க்கச் செய்து
2.அந்த அருள் ஆற்றல் மிக்க நிலைகளை “பெரும் குவியலாக” நாம் சேர்க்க வேண்டும்.

அனைவரும் தெரிந்து தெளிந்து தெளிவான நிலைகள் கொண்டு வளர வேண்டும் என்று எண்ணி ஏங்கி…
1.நான் உனக்குக் கொடுத்த உபதேசத்தின் சக்தியை
2.அதன் மூலம் நீ பெற்ற அந்தத் தகுதியினை…
3.எல்லோர் உள்ளங்களிலும் ஆழமாகப் பதிவு செய்து
4.அந்த உணர்வின் துணை கொண்டு அவர்கள் அனைவரையும் நீ ஒருங்கிணைத்து வலுப்பெறச் செய்.

அவர்கள் எல்லோரும் வலு பெற வேண்டும் என்று நீ எண்ணும் பொழுது நீ அதைப் பெறுகின்றாய். எல்லோரும் அருள் ஞானிகளின் உணர்வுகளைப் பெற வேண்டும் என்று எப்பொழுதெல்லாம் ஏங்கி எண்ணுகின்றாயோ அது அனைத்தையும் பெறும் தகுதியை நீ பெற்று… உனக்குள் விளைந்து… அது சொல்லாக வெளிப்படும் பொழுது கேட்பார் உணர்வுகளிலும் அது பதிவாகி அவர்கள் அறியாத வந்த தீமைகளை நீக்கிடும் செயலாக ஆகின்றது.

குருநாதர் எனக்குக் கொடுத்த அனைத்தையும்… அப்படியே உங்களுக்கும் கிடைக்கும்படி செய்கிறேன் (ஞானகுரு).

“கல்லா அறிவு” பெற்ற மகான்களின் ஆசி நமக்கு வேண்டும்

 

மனிதன் கொண்ட அறிவின் ஞானம் மொழி அறிவால் கற்றறிந்து உணர்கின்ற வகையில் உள்ளது.

மொழி அறிவென்பது மருத்துவம் மனோதத்துவம் உயிரியல் புவியியல் வானியியல் சித்தாந்தம் வேதாந்தம் வாழ்வியல் பொருளாதாரம் என்ற ஒவ்வொரு வகையின் தன்மைகளிலும் மனிதன் தான் கொண்ட அனுபவ ஞானத்தால் சமுதாய அமைப்பு முறை பெற்றுள்ளது.

அதிலே மேன்மேலும் கற்ற அறிவின் வளர்ச்சி உயர வழி வகை காட்டியது எந்த நிலையப்பா..?

அன்று ஆண்ட அரசர்கள் காலம் தொட்டே உண்மை நிலை அறியாத் தன்மையில் சமுதாய அமைப்பில் குறிப்பிட்ட ஓர் பிரிவினர் மட்டும் “தங்களைக் கடவுளின் குழந்தைகள்…” என்றே பறைசாற்றி வந்தனர்.

மக்கள் என்றுமே மாக்களாக இருந்திட்டால் தங்கள் குலம் வாழ வழியுண்டு…! என்ற கருத்தாய்வாகக் கொண்டு அரசனுக்கு அரசியல் சாசனங்களை வழியமைத்துத் தந்தனர். சித்தர்களும் மகரிஷிகளும் கொடுத்த உண்மைகளை அறியவிடாது அதைச் சீர் கெடுத்துவிட்டனர்.

மொழியறிவின் வளர்ச்சிக்கு ஏற்படுத்தப்பட்ட அசை நூல் (இலக்கண நூல்) வகையினைப் பின்பற்றுகின்றார்கள்.

ஆனால் அசை நூலாலும் விளங்கிக் கொள்ளா தன்மையாகக் காரணப் பெயர் காட்டிப் பொருள்களுக்கெல்லாம் மறைபொருளாகச் சித்தர்களால் இடுகுறிப் பெயர்கள் இடப்பட்டு மனித குலத்திற்கு மிக மிகத் தேவையான மருத்துவ முறைகள் கூறப்பட்டது.

ஆனால் மனிதர்களால் அந்தப் பொருள்களின் குணங்களை உலகோதய எண்ணத்தினால் அறிந்து கொள்ள வகையின்றி அவை அனைத்தும் மறைந்து விட்டன என்றே எண்ணுகின்றார்கள்.

1.அசை நூல் கொண்டே உரையும் உரை நடையும் மற்றும் கவிப் பாடல்கள் பலவற்றை அறிந்திட்டாலும்
2.கற்ற கல்வியின் செருக்கால் இலக்கண நூல் கொண்டு ஆயிரம் விளக்கங்களைக் கூறினாலும்
3.மறை பொருள் தன்மையின் காரணங்களை அறியாதது இவன் கொண்ட செருக்கினாலயே ஆகும்.
4.அந்தச் செருக்கு என்பது உண்மை ஞானத் தொடருக்குப் பகையப்பா…!
5.செருக்கின் தொடரில் எழுந்திடும் கோபம் உண்மை ஞானத்தை உணர்ந்து கொள்ள வழி காட்டாது.
6.உணர்வில் கோப குணத்தை வளர்ச்சிப்படுத்திக் கொண்டால் உணர்விலேயே கோபமுள்ளவன் உண்மையை உணர்வது எதுவப்பா..?

மெய்யறிவே வாலறிவாக்கும் செயலுக்குக் கற்ற கல்வியும்… அந்தக் கல்வியினால் பெற்ற அனுபவமும்… ஆத்திரம் கொண்டு புறப் பொருள் குணத் தன்மைகளை அதைச் சரீரத்தினுள் ஏற்றுக் கொண்டால் மாத்திரம் “உயர் ஞானம் சித்திக்குமா…?”

ஒரு மருத்துவன் நோயின் குணத்தை அறிந்து அதற்குண்டான மருத்துவத்தைச் செய்தாலும்
1.நோய்வாய்ப்பட்டவன் தான் பிழைத்தெழ வேண்டும்…! என்ற எண்ணத்திற்கு உணர்வுகள் கூட்டிக் கொள்ள வேண்டும் அல்லவா..?
2.அதற்கு எது முக்கியம்..?
3.நோய்வாய்ப்பட்டவன் அவனுக்குள் இருக்கும் பயத்தையும் விரக்தியையும் விலக்கிக் கொள்ள மன உறுதி தேவை.
4.ஏனென்றால் அனைத்திற்கும் மூலம் கோபமே.

கல்வி அறிவு என்பது பல நூல்களைக் கற்று அந்த நூல்களில் உள்ள கருத்துக்களின் உட்பொருளை அறிந்து… தெளிந்து… கற்ற கல்வியின் நீதி போதனைகளைத் தன்னுள் ஏற்று அந்த வழி நல் வழியாக இருந்தால் அதைக் கைக் கொள்ளுதல் (கடைப்பிடித்தல்) என்ற வகையில் தான் கொண்ட குணங்களுக்கொப்ப கற்ற கல்வி அறிவின் செயல் கொண்டிடும்.

ஏட்டின் வாயிலாகக் கற்ற கல்வியின் தொடரில் சிந்தனையின் தெளிவில் பெற்றிடும் ஞானம் நற்பண்புகளைக் காட்டுமேயானால்
1.ஏட்டின் வழி அறிந்து கொண்டிடா…
2.கல்லா அறிவின் வாயில் திறந்தே… சிந்திக்க வேண்டியது என்பது வள்ளுவ நாயனாரின் வாக்கு.

செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்…! என்பதில்
1.செவிக்குணவு என்பதே இன்றைய கால கட்டத்தில்
2.உண்மையின் பொருளை ஆராய்ந்து ஆய்வின் வழி உண்மையை உரைத்தல் என்பதெல்லாம் மாறு கொண்டு
3.”பட்டிமன்றங்கள்…” என்ற பெயரில் கற்ற கல்வியின் செருக்கைத் தான் கொண்ட புலமையையும் சொல்லின் ஆற்றலையும் வெளிப்படுத்தி
4.பெரும் ஆரவாரப் புகழ் தேடிடும் வழியாக்கிக் கொண்டதே வெறும் ஏட்டுக் கல்வியினால் கற்ற ஞானம்.

செவிக்கு உணவு வயிற்றுக்கு உணவு என்பது போன்றே
1.உயிருக்கு ஊட்ட வேண்டிய உணவை அறிந்து கொள்ள
2.கற்ற கல்வியின் ஞானம் செயல் கொள்ள வேண்டும்.

கல்லா அறிவை ஏடறிவின் அளவுகோலால் அளந்திட முடியாது. ஆனால் கல்லா அறிவை ஆய்வதற்கு ஏடறியும் ஒரு நிலைக்களன் என்பதிலும் பண்பு வேண்டும் என்பதற்காகக் கல்வியின் செருக்கால் ஏற்பட்ட “நான்” என்பதை நீக்கி விட்டால் பகை இல்லையே…!

பகை என்பது என்ன..? தான் கொண்ட எண்ணமே பகையாகும்.

வாய்மொழியால் யாரையும் தூசித்திடல் ஆகாது. வாய்மை மொழியே… தான் கொண்ட எண்ணத்தின் பண்பு நிலையால்
1.கல்லா அறிவு என்னும் மெய் ஞானம் பெற்ற மகான்களை எண்ணி
2.அவர்களிடம் ஆசி பெற வேண்டும்.

குரு நாடி

 

மனிதனின் அன்றாட சமுதாய வாழ்க்கையில் காட்சிப் புலனறிவு… செவிப் புலனறிவு… உணர்வுப் புலனறிவு… நுகர்தல் புலனறிவு… சுவைத்தல் புலனறிவு… என்று ஜீவ சரீரம் கொண்டு அறிந்து தெளிந்து கொண்டே உள்ளோம்.

இருந்தாலும்… புலனறிவால் கவரப்பட்ட அந்த நிலைகள் ஏற்கனவே நமக்குள் பதிவான நிலைகளுடன் கலக்கப்படும் பொழுது தோன்றும் எண்ணங்களும் உணர்வுகளும் இரு வினைச் செயல்களாகச் செல்கிறது.

ஐம்புலனறிவு என்ற அந்தக் கருவிகளின் செயலில்
1.சரீரத்தில் உணர்வுகளின் வழியாக மோதிடும் இரு வகைச் செயல்பாட்டின் முறைகளை
2.அறிவின் ஆற்றல் தொடர் கொண்டு தெள்ளத் தெளிந்த மகரிஷிகளும் ஞானிகளும்
3.இந்த மனித சமுதாயம் உயர் நிலை பெறுவதற்காக உணர்த்திய மருத்துவம் மனோத்துவம் என்ற வகைகளில்
4.அவர்களால் புகட்டப்பட்ட அந்த நல்லாக்கப் பணிகளை இன்றைய சமுதாய அமைப்பு முழுமையாக ஏற்றுக் கொண்டு நற்பயன் பெற்றதா…?

சக்தி சிவன் என்ற மூச்சையே வகைப்படுத்தி அதிலுள்ள உண்மைகளைக் கூறினாலும் நடைமுறை வேறாகி விடுகிறதப்பா. உட்பொருளைக் கூறுவதிலும் தயக்கம் தான்.

எண்ணம் கொண்டு நல் சுவாசத்தினால்
1.ஆத்ம பரிசுத்தமும் ஆத்ம பலமும் பேரின்பப் பெரு வாழ்வும் பெற்றிட
2.இங்கே உணர்த்தப்பட்டுக் கொண்டு வரும் தியான வழி மூலம்
3.உடல் என்ற கூட்டில் “சிவனின் சித்திரம் தீட்டிட…!” சரீரம் காக்கப்பட வேண்டுமப்பா…!

“ஈஸ்வரா…!” என்று ஒலி நாதம் கூட்டுகின்ற சுவாச ஓட்டம் கண்டத்தில் (தொண்டை) செயல்படும் பொழுது அங்குள்ள நாடிகளின் சுவாசமே கதியாகும் விதம் உணர்வின் உந்துதல் கூட்டிச் செயல்படும் நிலைக்கு ஒலிக் காற்று என்று பெயர். அது சாப்பிடும் ஆகாரத்தை உள்ளிழுத்து விழுங்கவும் செயல்படுகின்றது.

விழி (கண்கள்) படம் எடுத்துச் செயல்படும் நிகழ்வுக்குச் சுவாச ஓட்ட நாடிகள் அங்கு செயல்படுவதை விழிக் காற்று என்று பெயர். இரு விழிகளையும் செயல்படுத்தும் அந்த நாடியானது மூலாதாரம் வரை செல்கிறது.

விழிப் பார்வையின் செயலில் காட்சிகள் மட்டுமா காண்கின்றாய்…?

சோம்பல் ஏற்படுத்துவதும் வேதனையின் பால் முக்கல் முனகல் முதலிய சரீரம் கொண்டு உணர்ந்திடும் அனைத்துச் செயல்களும்
1.சுவாசத்தில் சுதியும்… விழிக் காற்றும்…
2.எண்ணம் கொண்டே செயல்படுத்தும் நாடிகளும் செயல்படுகின்றன.

விழிகளைக் காத்திடும் ரப்பைகள் (இமைகள்) செயலுக்கும் ஓர் நாடி செயல்படுகிறது. காற்றின் செயலாக ரப்பைகள் இமைத்தலும் மற்றும் உணர்வுகளின் வழியாக மனிதன் சிரிக்கின்ற சிரிப்பும் அந்தச் சிரிப்புக்கும் அழகு உணர்வுகளுக்கும் செயல்பட்டே மூலாதாரத்துடன் இணைந்து செயல்படுகிறது,

1.கண்ணில் நீர் பெருக்கமும்
2.உடலையே கலகலத்துக் குறு குறுக்கும் உணர்வால் “தும்முதல்…!” என்று செயல்படுத்தும் காற்றும்
3.நாசி வழிப் பாதையில் ஓரிட அமைவு பெற்ற நாடியாகச் செயல்படுகின்றது.

எண்ணம் கொண்டு தான் அனைத்துமே…! என்றாலும் பிணிகள் இந்தச் சரீரத்தில் தோற்றம் காட்டுவதெல்லாம்
1.ஆங்காங்கு அமையப் பெற்ற சுவாச நாடிகளின் வழியும்
2.ஆங்காங்கு சுதியுறும் காற்றின் செயல் கொண்டே உபாதைகளை (வலிகளை) உணர்த்தும்.

நாம் எடுக்கும் எண்ணத்தின் வழியாக உணர்வுகளின் சம நிலை மாற்றப்படும் பொழுது சுவாசம் கனமாகின்றது. கனமான சுவாசத்தால் ஓட்ட நிகழ்வாக அகக்கருவிகளில் (ஐம்புலன்களில்) செயல்படுத்தும் நாடிகளின் இயக்கம் மாறுகின்றது.

எண்ணத்தின் உணர்வுக்கொப்ப ஆங்காங்கு ஓடிடும் காற்றின் சுதியே நாடிகளாகச் செயலுக்கு வரும் பொழுது துடிப்பின் நிலைகள் மாறுகின்றது.

உதாரணமாக நாம் எடுக்கும் எண்ணம் “பயம்..” கொண்ட செயலாக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது விழி படம் எடுத்து நாசி சுவாசம் எடுத்து செயல்படும் பொழுது
1.விழிகளைக் காத்திடும் ரப்பைகள் (இமைகள்) படபடத்து
2.சரீரம் முழுவதையும் சிலிர்க்கச் செய்திடும் செயலாகச் செயல்பட்டு
3.நாடியின் இயக்கம் மூலாதாரம் தொடங்கி விழிப் பார்வையில் அமையப் பெற்று
4.எண்ணம் கொண்டு எடுக்கும் சுவாசத்தின் வழி விழிக் காற்றாகச் செயல்படுகின்றது.

மார்பு தொடங்கி நாபியின் வழியோடி மூலாதாரத்தில் இணையும் ஓர் நாடி இதே தொடரில் எண்ண உணர்வுகளுக்கொப்ப விக்கலையும் சலிப்பு சோர்வு கொண்ட கொட்டாவியையும் சரீரத்தில் உருவாக்கிக் காட்டுகின்றது.

1.“குரு…!” என்று அழைக்கப்படுகின்ற ஓர் நாடி சரீரத்திலும் உண்டு.
2.அது செயல்படும் விதங்களின் உண்மையை உணர்ந்து கொண்டால்
3.விந்துவே நாத விந்து எனும் “பிந்து” (உருவாக்கும் சக்தி – CREATOR) என்ற செயல்பாட்டைத் தெளிந்து கொள்ளலாம்.

அந்த நாடி மூலக்காற்றுடன் செயல்படும்முன் மேலும் இரு நாடிகளை இணைத்துக் கொண்டு
1.உணவுகளின் கழிவுகளையும் சிறு நீரையும் வெளியேற்றுவதோடு
2.ஆண்களின் குறி ஸ்தானத்தில் விந்துவையும் உணர்வுக்கொப்ப வெளியேற்றிச் செயல் புரிகின்றது.

சரீரத்தில் கால் எலும்புப் பகுதிகளும் இடுப்பு எலும்புப் பகுதிகளும் சேரும் இடத்தில் “ஓர் மறைமுக நாடி” இயங்குகிறது.

அது சீதம் கபம் என்ற நிலைகளை உருவாக்கி நோயின் அறிகுறியைக் காட்டுகின்றது. அதாவது இருதய நாடிகளின் தொடர்பு கொண்டு காற்றின் செயலாகச் செயல்பட்டு அந்த உபாதைகளை வெளியே காட்டிடும் காற்றாகச் செயல்படுத்துகின்றது.

அதே காற்று உயிராத்மா பிரிந்த பிறகு உடலை மாற்றம் கொள்ளச் செய்து சரீரம் முழுவதும் (நீராக) வியாபித்தே
1.சரீர பிம்பத்தையே பெருக்கச் செய்து
2.வெடிக்கும் விதமாகச் செயலாக்குகின்றது.

பெண்களின் தாய்மைப் பேறு காலத்தில் சிசுவை வெளியேற்றத் தாய் தன் உணர்வு கொண்டு உந்தித் தள்ளும் நிலைக்கும் இந்த மறைமுகக் காற்றே உதவுகிறது.

இதே போல் சுவாசத்தின் ஓட்ட கதியில் சரீரத்தையே வழி நடத்திடும் செயல்களில் செவிகளில் செயல்படும் நிலைகளும் மற்றும் பல நிலைகளும் உண்டு.

மனித உடலுக்குள் நுண்ணிய நிலைகளில் செயல்படும் நாடிகளையும் அதற்குக் காரணமான காற்றின் இயக்கங்களையும் சிறுகச் சிறுகக் கோடிட்டுக் காட்டியுள்ளோம்.

புருவ மத்தியில் “ஈஸ்வரா…” என்று எண்ணி ஏங்கித் தியானித்தால் புருவத்தின் (ஈசன்) வழியாகச் சுவாசித்தால் முழுமையும் உங்களால் அறிய முடியும்… உணரவும் முடியும்.

“போகும் பாதை எது…?” என்று அறியாது தவித்துக் கொண்டிருக்கும் நிலையிலிருந்து விடுபடுங்கள்

 

நமது வாழ்க்கையில் எத்தகைய வேதனை வந்தாலும் அதைத் துடைக்க… துடைத்திட்ட அருள் ஞானிகள் உணர்வுகளை நாம் பருக வேண்டும் என்ற இந்த நிலையைத் தான் அன்றைய ஞானிகள் தெளிவாகக் காட்டி உள்ளார்கள்.

1.என்னை அறியாது வந்த பிழைகளை நீக்கிட அந்த மெய் ஞானிகளின் உணர்வைப் பெற வேண்டும் என்று
2.எந்த உயிர் மனிதனாகச் சிருஷ்டித்ததோ அந்த உயிரிடமே “ஈஸ்வரா…” என்று வேண்டி
3.எந்த மனிதன் இவ்வாறு ஏங்குகின்றானோம் தன்னை அறியாது வந்த தீமைகளை அகற்ற முடியும்.

நாம் எண்ணியது அனைத்தையும் உயிர் தான் சிருஷ்டித்துக் கொண்டிருக்கின்றது என்பதை உணர்த்துவதற்குத் தான் இராமயாணம் மகாபாரதம் கந்தபுராணம் போன்ற காவியங்களை ஞானிகள் தீட்டிச் சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும்படி செய்தனர்.

அதாவது
1.சூட்சுமத்தில் நமக்கு முன் இருக்கும் காற்றலைகளில் படர்ந்துள்ள நிலையையும்
2.நாம் எண்ணிய உணர்வுக்குள் சூட்சுமமாக மறைந்த நிலையினையும்
3.நம் உயிருக்குள் பட்டு ஓ… என்று ஜீவனாகி அந்த உணர்வின் சத்து ம்… என்று நாம் சரீரமாகும் நிலையையும் காவியத்தின் மூலம் காட்டினார்கள்.

எந்தெந்தக் குணங்களை எண்ணுகின்றோமோ அதனின் சக்தியாக நமக்குள் இயங்கி அதே உணர்வு நமக்குள் இயக்கப்பட்டு… நாம் உயர்ந்த குணங்களை எடுத்தால் உடல் ஆரோக்கிய நிலையும் ஆனால் வேதனை என்று விஷமான உணர்வை ஒரு துளி எடுத்தாலும் உடல் சோர்வடைந்து நல்ல குணங்கள் எவ்வாறு மறைந்து விடுகின்றது…? என்பதையும் அறிந்து கொள்வதற்காகப் பல காவியங்களை ஞானிகள் கொடுத்துள்ளார்கள்.

அத்தகையை தீமைகளை அடக்க வேண்டும் என்றால் ஆறாவது அறிவின் துணை கொண்டு தான் அதைச் செயல்படுத்த முடியும். நம்முடைய ஆறாவது அறிவைத் தான் பிரம்மாவைச் சிறை பிடித்தான் முருகன் என்றும் காட்டியுள்ளார்கள்.

முருகு என்பது மாற்றி அமைக்கும் சக்தி… முருகன் என்பது அழகுபடுத்தும் நிலை…! என்று
2.இப்படி நமது ஆறாவது அறிவு கொண்டு நம்மை அறியாது புகுந்த தீமைகளை அகற்றிட முடியும் என்றும் ஞானிகள் கொடுத்துள்ளார்கள்.

பித்தரைப் போன்று நமது குருநாதர் சாக்கடையிலும் அருவருப்பான இடங்களிலும் அமர்ந்து தான் எனக்கு (ஞானகுரு) இந்த உண்மைகளை எல்லாம் உணர்த்தினார்.

அந்தச் சாக்கடையை அவர் சாக்கடை என்று எண்ணவில்லை உலகையே சாக்கடையாகக் கருதினார்…
1.அந்தச் சாக்கடையிலிருந்து விலகி நிற்க வேண்டும் என்ற நிலையில்
2.அருள் ஞானிகளின் உணர்வைச் சத்தாக நுகர்ந்து கொண்டிருந்தார்.

தீமையிலிருந்து விடுபடும் உணர்வின் தன்மையை உலகிற்கு எவ்வாறு காட்ட வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக என்னையும் சாக்கடையில் அமரச் செய்து உபதேசம் கொடுத்தார்.

“எனக்குக் கல்வி அறிவே இல்லை என்றாலும்” அவர் உணர்த்திய உபதேசத்தின் அருள் வழிப்படி… காட்டிய நெறிப்படி… ஆற்றல் மிக்க சக்திகளை நான் கவர்ந்தேன். எனக்குள் அதை வளர்த்துத் தீமைகள் வராதபடி காத்துக் கொண்டேன்.

உங்கள் அனைவருக்கும் அது கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் உபதேசிக்கின்றேன். ஆகவே மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளிய அருள் வழியைப் பின்பற்றுங்கள்.

இந்த மனித உடலிலேயே முழுமை பெறுவோம் என்று இந்த வாழ்க்கைப் பயணத்தை இவ்வாறு தொடருங்கள்.

கடலிலே செல்லும் பொழுது ஒரு எல்லையைக் குறிக்கோளாக வைத்துத் தான் செல்கின்றோம். ஒரு தீவுக்குச் செல்ல வேண்டுமென்றால் படகைச் செலுத்துகின்றோம்.
1.இடைவெளியில் வரும் அலைகளைப் பிளந்து விட்டு
2.”அந்தத் தீவை அடைய வேண்டும்” என்ற எண்ண வலு கொண்டு தான் அங்கே செல்கின்றோம்.

மீன் பிடிக்கச் சென்றாலும் மீன் இருக்கும் இடமாகத் தேடிச் செல்கின்றோம். கடலில் வரும் அலைகளைப் பிளந்து அந்த இடத்தை அடைந்து மீன்களைப் பிடிக்கின்றோம்.

இதைப் போன்று தான் மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடத்திலும் பல அலைகள் மோதிக் கொண்டே இருக்கின்றன
1.பழி தீர்க்கும் அலைகள் மோதுகின்றன
2.இடையூறு செய்யும் எண்ண அலைகள் மோதுகின்றன
3.தீமை செய்யும் உணர்வுகள் மோதுகின்றது
4.தொழில்களில் எத்தனையோ சங்கட அலைகள் மோதுகின்றன
5.குடும்பத்தில் ஒருவருக்கொருவர் பகைமையாகி வெறுப்பான அலைகள் மோதுகின்றன.

இதைப் போன்ற பல அலைகள் மோதி “நாம் போகும் பாதை எது…?” என்று அறியாது இன்று தவித்துக் கொண்டிருக்கின்றோம். ஒவ்வொரு குடும்பத்திலும் இதே நிலை தான்.

ஆகவே மகரிஷிகள் காட்டிய வழியினை நாம் பின்பற்றி… அவர்கள் வாழும் எல்லையை அடைய வேண்டும் என்பதைக் குறிக்கோளாக வைத்து…
1.துருவ நட்சத்திரத்தின் சக்தியைத் துடுப்பாக வைத்து வாழ்க்கையில் வரும் அலைகளைப் பிளந்து
2.மன உறுதி கொண்டு இதைச் செயல்படுத்துங்கள்.

தியானத்தின் மூலம் உயர்ந்த சக்தி பெறுவேன்…! என்ற “தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள்”

 

சாமியை நம்புகின்றீர்கள் சாமியாரை நம்புகின்றீர்கள் ஜோசியத்தை நம்புகின்றீர்கள் மந்திரத்தை நம்புகின்றீர்கள்… ஆனால் உங்களுக்குள் அனைத்தையும் பெறக்கூடிய தகுதி உண்டு….!
1.நீங்கள் ஏன் உங்களை நம்ப மாட்டேன் என்கிறீர்கள்…?
2.நான் (ஞானகுரு) என்னை நம்பியதால் தான் குரு காட்டிய வழியில் அனைத்து சக்திகளையும் பெற முடிந்தது
3.என்னைப் போல் நீங்களும் பெற முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள்.

விஞ்ஞான உலகத்தால் ஏற்படும் நஞ்சான சூழ்நிலையில் இருந்து மீட்டிக் கொள்ளும் எண்ணங்கள் உங்களுக்குள் வர வேண்டும். தீமைகளிலிருந்து அகற்றிடும் சக்தி உங்களுக்கு வேண்டும்.

அதை நீங்கள் எப்படியும் பெற வேண்டும் என்பதற்குத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில்… மெய் ஞானிகள் உணர்வைப் பதிவு செய்து உங்களுக்குள் உணர்ச்சிகளைத் தூண்டிக் கொண்டிருக்கின்றோம்.

ஒவ்வொருவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் உங்களை அறியாது வந்து இருளை மாய்க்க வேண்டும்… பொருள் கண்டுணர்ந்து செயல்படும் ஆற்றல் பெற வேண்டும். இந்த மனித உடலிலிருந்தே ஒளியின் சரீரமாகும் ஆற்றல் பெற வேண்டும்.
1.அந்த அருள் ஞானிகள் எல்லையை நீங்கள் கைப்பற்றி அதை அடைய வேண்டும் என்று உங்களைப் பிரார்த்திக்கிறேன்
2.உங்களை நம்புங்கள்… உங்கள் உயிரைக் கடவுளாக மதியுங்கள்… உடலை ஆலயமாக மதியுங்கள்

ஆகவே… உங்களை மனிதனாக வளர்த்திட்ட உயர்ந்த குணங்களைத் தெய்வ நிலைகளாக எண்ணுங்கள்.

அனைத்தையும் அறிந்திடும் நிலையாக
1.உங்களுக்குள் அமைந்திருக்கும் “கலைவாணி” என்று சர்வத்தையும் அறிந்திடும் ஞானம் உங்களுக்குள் உண்டு.
2.சர்வத்தையும் உங்களுக்குள் வளர்த்திடும் “இலட்சுமி” உண்டு… சர்வத்தையும் உருவக்கிடும் “பராசக்தி” உண்டு
3.அனைத்தையும் அறிந்திடும் “சர்வ சக்தி” உங்கள் ஒவ்வொருவருக்கும் உண்டு.

ஆகவே… உங்களை முழுமையாக நீங்கள் நம்புங்கள்.

இந்த உணர்வினை அறிந்திடச் செய்திடும்… இந்த உபதேசத்தை இப்பொழுது கேட்டிடும் உணர்வும் உங்கள் உயிரின் நிலையே.

ஆகவே அந்த உணர்வின் தன்மையை நீங்கள் பருகும் நிலையாக ஏங்கினால்… உங்களை ஆண்டு கொண்டிருக்கும் ஈசனுக்கு நீங்கள் செய்யும் காணிக்கையாக இது அமையும்.

மகரிஷிகள் சென்ற எல்லையை அடைய உங்களுக்குள் ஆண்டு கொண்டிருக்கும் உயிரான ஈசன் நிச்சயம் அதற்கு வழிகாட்டுவான்.
1.எண்ணி எடுக்கும் போது அதையே அவன் விளைய வைக்கின்றான்…
2.மகரிஷிகள் வாழும் எல்லையை அடையச் செய்கின்றான்.

அந்த நிலையை நீங்கள் நிச்சயம் அடைய முடியும்…! ஆகவே இதைக் கேட்டுணர்ந்த நீங்கள் இதன் வழி தியானித்து உயர்ந்த சக்திகளைப் பெறுங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்திகளை குருநாதர் காட்டிய வழியில் தியானத்தின் மூலம் பெற முடியும்… நிச்சயம் பெறுவேன்…! என்ற தன்னம்பிக்கை கொண்டு செயல்படுங்கள்.

1.நீங்கள் எங்கே சென்றாலும் அருள் ஞானிகளை எண்ணினால் அந்தச் சக்தியை பெற முடியும்
2.எங்கே எந்த இடத்தில் எத்தகைய தீமைகள் வந்தாலும் அதிலிருந்து விடுபட முடியும்
3.அத்தகைய சக்தி நீங்கள் பெற வேண்டும் என்று எல்லா மகரிஷிகளையும் வேண்டுகின்றேன் (ஞானகுரு).

தியானத்தில் சக்தி பெறும் போது சிரசின் பின்புறம் வலி ஏற்படுவது ஏன்…?

 

மனிதனின் ஜீவ பிம்ப சரீரத்தில் உள்ள உட்கருவிகள் செயல்படும் விதங்களை உண்ர்ந்து கொண்டால் பல கிளையாக மூச்சலைகளின் செயல்பாடுகளை அறிந்து கொள்ள முடியும். நல் ஆக்கத்தின் செயலுக்கு அனைத்துச் சக்திகளையும் அளிப்போம்.

சூரிய கலை என்ற சிவ நாடியும் சந்திரகலை என்ற சக்தி நாடியும் சரீரத்தில் செயல்படுகிறது. இந்த இரு நாடிகளுக்கும் பொதுவான அக்கினி நாடி சரீரத்தின் மையப் பகுதியில் நேர்கோடாகச் செயல் கொள்கிறது.

அக்கினி நாடியானது மூலாதாரத்தில் மூல அக்கினியுடன் ஆங்குள்ள நான்கு தலை போல அமையப் பெற்ற நாடியுடன் இணைவதற்கு முன் கண்ட நாடி மார்பு நாடி நாபி நாடி குய்ய நாடி ஆகியவைகளுடன் இணைந்தே செயல்படுகிறது.

மூலாதாரத்தில் செயல்படும் இந்த மறைமுக நாடியை அனுசரித்தே சிவ சக்தி நாடிகள் (சூரிய சந்திர நாடிகள்) செயல்படுகின்றன.
1.இந்த மூன்று நாடிகளும் சந்திக்கும் “நெற்றிப் பொட்டே…”
2.”திரிவேணி சங்கமம்…!” என்று சூட்சமப் பொருளாகக் கூறப்படுகின்றது.

சிரசின் உச்சிப் பகுதியில் ஆயிரம் தலையுள்ள நாடிகள் வட்ட வடிவில் கிளைத்து அதனுள் மறைமுகமாக எட்டு நாடிகள் செயல்படுவதைத்தான் “ஆயிரத்தி எட்டு இதழ் கொண்ட தாமரை…” என்று கூறுவதின் மறை பொருளை உணர்ந்து கொள்ளலாம்.

சிற் சில காலகட்டங்களில் சிரசினுள் சிறு மூளைப் பகுதி இருக்கும் இடத்திற்குக் கீழ் பிடரி என்று சொல்லும் இடத்தில் வெப்பம் அலைகளாக வெளிப்படுவதை உணரலாம்.

இந்த வெப்ப அமில குணங்களை மீண்டும் சுவாசத்தில் ஈர்த்துக் கொள்ளும் செயலும் உண்டு.

எட்டு சூட்சம நாடிகள் சிறு மூளைப் பகுதியிலிருந்து வெளித் தள்ளும் வெப்பமில குணங்களை நல் நிலைப்படுத்திடவே வாசனை மலர்களைச் சூடிக் கொள்ள அன்று வழி காட்டினார்கள் ஞானிகள்.

ஒவ்வொரு மலரிலும் அதற்கென்று வாசனை இருந்தாலும் இயற்கை அளித்திட்ட அந்த நறுமணங்களில் ஒன்றுக்கொன்று எதிர் மோதல் செயல்பாடுகள் உண்டு.

1.சிறு மூளை வெளித்தள்ளும் வெப்ப அமில குணங்களை நல் நிலைப்படுத்திக் கொள்ள
2.அன்றைய காலங்களில் நறுமண மலர்களைச் சூடிக் கொள்ளும் வழக்கம் பெண்களுக்கு மட்டுமல்லாது ஆண்களுக்கும் இருந்தது. ஆனால் இன்றைய கால நடைமுறைகளுக்கு அது பொருத்தமற்றதாக மாறு கொண்டு விட்டது.

1.நாம் காட்டும் தியான வழித் தொடரில்
2.எண்ணத்தின் உந்தும் செயல் கொண்டு
3.சிரசின் பின்புறம் சிறுமூளைப் பகுதியில் ஓர் காற்று மண்டலத்தையே ஏற்படுத்தி
4.ஆத்ம சக்தியை வலுக் கூட்டிக் கொள்ளும் சூட்சமும் உள்ளது.

சரீரத்தில் உள்ள உள் கருவிகளுக்கு ஜீவ ஆக்கமளித்திடும் காற்று நாடிகளை முழுமைப்படுத்தி அளித்திடவே இதை எல்லாம் சிறுகச் சிறுக உணர்த்துகின்றேன்.

எல்லோருக்கும் நான் உதவி செய்தேன் என்று சொன்னாலும்… அதிலே பலன் அடைகிறோமா…?

 

உதாரணமாக நாம் எண்ணிய காரியம் நடக்கவில்லை என்ற காரணத்தால் கோபத்தால் கொதிப்பும்… வேதனை என்ற உணர்வும் எடுத்துக் கொண்டால் அதை நாம் சுவாசிக்கப்படும் பொழுது “உயிரிலே பட்டு” அது கொதித்தெழும் உணர்வாக உடல் முழுவதும் படரச் செய்கின்றது.

ஆனால் உடலை இயக்கப்படும் பொழுது
1.கொதித்தெழும் உணர்வுகளையே அதிகமாக சுவாசிக்கச் செய்து இந்த உணர்வின் சத்தினை உமிழ் நீராக வடித்து விடுகின்றது.
2.ஆகாரத்துடன் இது கலந்து கை கால் குடைச்சல் சோர்வு போன்ற நிலைகள் வந்து விடுகின்றது

கோபம் என்பது கார உணர்ச்சிகள்… வேதனை என்பது விஷத்தின் தன்மை கொண்டது. இது இரண்டறக் கலந்து ஆகாரத்துடன் கலக்கப்படும் பொழுது நமது உடல் அதை இரத்தமாக மாற்றுகிறது.

உதாரணமாக ஒரு இன்ஜினில் ஒரு பக்கம் பெட்ரோலை ஊற்றினால் அதிலிருக்கும் பிஸ்டன் அந்தப் பெட்ரோலை உறிஞ்சி ஆற்றலாக மாற்றி… அந்த இயந்திரத்தினைச் சுழலச் செய்து இயக்கச் செய்கின்றது.

இதே போன்றுதான் நாம் உணவாக எடுத்துக் கொள்வது வயிற்றுக்குள் சென்ற பின் கொதிகலனாகி ஆவியாக மாற்றி அதில் வருவதை இரத்தமாக மாற்றுகின்றது.

இஞ்சினில் உள்ள பிஸ்டன் பெட்ரோலை எப்படி இழுக்கின்றதோ அதே போன்று நாம் இருதய வால்வுகள் இரத்தத்தை இழுத்து… பின் சுத்திகரிக்கும் சிறுநீரகங்களுக்கு அனுப்புகின்றது.

ஆனால்
1.இரத்தத்தை இந்தப் பிஸ்டன் அதாவது இருதய வால்வு இழுக்கப்படும் போது…
2.அந்த வேதனையும் கொதிப்படைந்த உணர்வுகளும் இரத்தத்தின் வழியாகச் சென்று தாக்கப்படும் பொழுது
3.அந்த வால்வுகள் வீக்கம் அடைய ஆரம்பித்து விடுகின்றது.
4.அவ்வாறு வீக்கம் அடைந்து விட்டால் இருதயம் இயக்கப்படும் பொழுது எரிச்சலும் வலியும் ஏற்படுகின்றது
5.அதாவது அப்போது நெஞ்சு வலி ஏற்படுகின்றது என்று சொல்லலாம்.

உடல் முழுவதும் பரவும் பொழுது உடலிலும் எரிச்சல் ஒரு விதமான கொதிப்பு… மனதிலும் கொதிப்பு… அடுத்து நாம் செம்மையாக எந்த வேலையும் செய்ய முடியாத நிலை உருவாகி விடுகிறது.

நல்லதைச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பாசத்தால் எடுத்துக் கொண்டாலும் உடலுக்குள் இத்தனை வேதனைகளை உருவாக்கிவிடுகிறது. எ
1.எவ்வளவு அழகான உடலாக இருப்பினும் அதை நலியச் செய்துவிடுகிறது. நம் எண்ணங்களையும் நலிவடையச் செய்து விடுகின்றது.
2.அடுத்து நம் சொல்லைக் கேட்பவர்களையும் நம் மீது வெறுப்படைய வைத்து விடுகின்றது.

இப்படித்தான் பாசத்தால் பண்பால் பரிவால் நம்மை அறியாமலேயே சில தீமைகள் உள் புகுந்து விடுகின்றது.

குடும்பத்திற்குள் சிறிது குறை காணும் போது வேதனைப்படுகின்றோம். வெளியிலே பழகுபவர்களிடம் பண்பாக நடந்து கொண்டாலும் நாம் எதிர்பார்த்த நிலைக்கு வரவில்லை என்றால் அங்கேயும் வேதனைப்படுகின்றோம்.

காரணம்… அவர்களுக்கு நாம் உயர்ந்த நிலைகள் கொண்டு உதவி செய்திருப்பினும்… சந்தர்ப்ப பேதத்தால் அவர்கள் நினைவில் அது வராதபடி சிறு குறைகள் செய்து விட்டால்
1.தக்க சமயத்தில் நாம் அவர்களுக்குச் செய்த உதவியை மறந்துவிட்டு
2.எனக்கு இப்படித் தீங்கு செய்கின்றார்களே…! என்று வேதனைப்படுகின்றோம்.

ஆக… நன்மைகள் பல செய்திருப்பினும் நம்மை அறியாமலே தீமைகள் நுழைந்து நம் நல்ல குணங்களை நல்ல உடலை நல்ல மனதைச் செயலற்றதாக ஆக்கி நோயாக மாற்றி விடுகின்றது.

பல கோடிச் சரீரங்களில் புழுவிலிருந்து மனிதனாக நாம் வளர்ச்சி அடைந்து எத்தனையோ தீமையிலிருந்து விடுபட்டு மீண்டு வந்த நிலையில் இன்று சகலத்தையும் அறியக்கூடிய சக்தி பெற்றிருக்கின்றோம்.

ஆனாலும்… பாசத்தால் பண்பால் பரிவால் நல்லதைச் செய்யும் போது நம்மை அறியாது வேதனை வெறுப்பு கோபம் ஆத்திரம் சலிப்பு சஞ்சலம் போன்ற உணர்வுகளும் ஊடுருவி நமக்குள் வந்து விடுகின்றது.

பௌர்ணமிக்குப் பின் நிலா சிறுகச் சிறுக தேய்ந்து மறைவது போல் நம் நல்ல குணங்கள் மறையத் தொடங்கி விடுகிறது.

அதை மாற்ற வேண்டுமா இல்லையா…?

மூச்சை அடைப்பதற்குப் பதில் நற்சுவாசம் எடுத்து சுவாசத்தின் கனத்தைக் குறைக்க வேண்டும்

 

பிண்டத்தைக் கொண்டே அண்டத்தையும் கால அடிப்படையில் ஞானமாக அறிந்து கொண்ட செயலுக்கு அறுபது நாழிகைகளில் அன்றைய நடைமுறை வாழ்க்கையில் சற்றேறக்குறைய அறுபத்தி ஓராயிரத்தி இருநூற்றி ஐம்பது மூச்சலைகளைக் கணக்கிட்டனர் ஞானிகள்.

ஆனால் ஆத்ம வலுவைப் பெற்று விட்டால் இயற்கையின் சுவாச கதியில் சரீரத்தில் இன்னும் சுவாச சுதி குறைவுபடும் என்றனர்.
1.குறைவுபடும் என்பது கனமற்ற பேரானந்த சுவாசத்தைச் சுட்டிக் காட்டி
2.அந்தச் சுவாச கனத்தை நீக்கி நற்சுவாசம் எடுத்திடவே குறிப்பு காட்டப்பட்டது.

நாடிகளின் வழி ஓடிடும் சுவாசக் காற்று
1.அதிகாலையில் மூலப்பகுதியில் அறுநூறு முறைகள் ஓடுகின்றன என்றும்
2.ஆண் பெண் குறியில் உச்சிப் பொழுதுக்கு முன்பாகவே ஆறாயிரம் சுவாச ஓட்டங்களும்
3.உச்சிப் பகுதியிலிருந்து நாபிப் பகுதியின் சுவாச ஓட்டம் ஆறாயிரம் முறைகளும்
4.இருதயப் பகுதியின் சுவாச ஓட்டம் நடு ஜாமம் வரை ஆறாயிரம் முறைகளும்
5.அதிகாலைப் பொழுதிற்குள் கண்டப் பகுதியில் ஆயிரம் முறைகளும்
6.நெற்றிப் பொட்டில் காற்றின் நரம்போட்டச் செயலில் ஆயிரம் முறைகளும்
7.சிரசின் உச்சியில் ஆயிரம் முறைகளும்
8.ஆக இருபத்தி ஓராயிரத்தி அறுநூறு சுவாச ஓட்டங்களே நடைபெறும்.

“சுவாச ஓட்டம் குறைகிறது…!” என்று விபரக் கணக்கிட்டுக் காட்டினால் மூச்சை அடக்கிவிடும் செயலுக்கு வந்துவிடக் கூடாது.

நற்குணங்களாக நல்லெண்ணம் கொண்டாலே சுவாசத்தின் கனம் குறைந்துவிடும். இயற்கையாக ஓடும் சுவாசத்தில் “எண்ணத்தின் வலுவே முக்கியம்…!”

இந்த உண்மைகளை எல்லாம் கூறுவது என்பது… அறிந்து கொள்வதற்காகவே தவிர மூச்சலைகளை எண்ணச் சொல்லவில்லை. அன்று ஞானத்தால் ஞானிகள் தெளிவுபடுத்தியதையே எளிமையாக உணர்த்திட்டேன்.

என்று உரைத்தது…? என்ற வினா எழும்பலாம். பரிணாம வளர்ச்சி பற்றிப் பல பாடங்களில் கூறி வந்துள்ளேன்.

இன்று பக்குவப்படுத்திச் சமைத்திடும் அறுசுவை உணவு வகைகள் அன்றைய மனித ஞானத்தில் உதித்ததுவா…? உணவின் முறைகளே எத்தனை பக்குவம் பெற்றுவிட்டது…?

ஆரம்ப உயிரணு முதல் கோடி கோடியாகப் பல்கிப் பெருகிவிட்ட உயிர்ச் சக்திகள் மனிதன் என்ற வளர்ச்சியின் நிலைப் பக்குவம் பெற்றிட… பரிணாம முதிர்வு எத்தனை எத்தனை காலங்கள் கொண்டே ஞான வளர்ப்பு பெற்றிருக்கின்றது…?

கரும்பின் சாறு சிதறிடாமல் காக்கின்ற கணுவுகள் போல் உயர் ஞான சக்தியின் வளர்ப்பை மகரிஷிகள் அன்பு கொண்டே காத்து வந்துள்ளனர்.
1.கரும்பின் சாறை எடுத்து உண்ணுவதற்கே எளிதாகத் தருகின்றோம்.
2.பெற்று வளர்ச்சி நிலை பெற ஆசிகள்.

உயிர்க் காற்று

 

பஞ்ச பூதங்கள் என்ற ஆகாயம் காற்று நீர் நெருப்பு மண் இவைகள் சரீரத்தில் செயல்படும் செயலுக்குப் பிராணன் என்றிட்ட உயிர் காற்று நாடிகள் வழியோடி அந்தந்த இடங்களில் சுவாச அலையைக் கூட்டி இயக்குகின்றது.

அதாவது மனிதச் சரீரத்தில் இயற்கையாக நடைபெறும் சுவாசத்தின் கதியே சரீரத்தின் உட்கருவிகள் செயல்பட நாடிகளின் வழி ஓடி அங்கங்கு பஞ்சேந்திரிங்களின் தொழிலுக்குச் செயல்பட “இந்தச் சுவாசக் காற்றே பற்பல செயல்களுக்கு வழி வகுக்கின்றது…!”

உயிர்க் காற்று என்று கூறப்படும் பிராணக் காற்று என்பது
1.இருதயப் பகுதி நாடிகளிலிருந்து மேலெழுந்து சென்று வெளிச் சுவாசங்கள் மோதிடும் நெற்றிப் பொட்டில் கலந்து
2.அங்கு செயல்படும் சூரிய அக்கினி சந்திரன் என்ற முத்தலை நாடிகளுள் சந்திர நாடியின் வழி கீழே ஒடி
3.மூலத்தைச் சுற்றி மேலெழுந்து நாபிப் பகுதியில் பத்துத் தலையுள்ள பச்சை வண்ண நாடியில் சுற்றி ஓடும் பெரிய சுவாச நாடியில் கலந்து
4.மீண்டும் மேலெழுந்து சிரசின் மூளைப் பகுதியில் சுவாச நாடிகளின் வழி இரண்டு சுற்றுகளாகச் சுற்றி
5.மீண்டும் வெளிச் சுவாச அலைகள் மோதிடும் நெற்றிப் பொட்டில் கலந்து ஈர்த்து அதே மோதலில் செயல்படுகின்றது.

சரீரத்தில் சுவாசம் நாசியின் வழியாக உட்செல்லும் பொழுது உடலினுள் இயங்கும் இந்த உயிர்க் காற்று என்பது நொடிக்கும் குறைவான நேரத்தில் நாடிகளின் வழியாக ஓடிச் செயல்படுகிறது… செயல்படுத்துகின்றது. பசி தாகம் ஏற்படுவதெல்லாம் இந்த உயிர்க் காற்றின் மூலம் தான்.

சரீரச் செயல் அனைத்தையும் ஒரு கட்டுக்குள் வைத்து பஞ்சேந்திரியங்கள் புற வாழ்க்கைச் செயலில் இயங்கும் இயக்கத்தை நிலை நிறுத்தி
1.ஒருமையும் ஐந்தடக்கி தியானத் தொடரில் நிலை பெற்று விட்டால்
2.காற்றிலிருந்தே ஆகாரம் பெற்றிடும் அமைப்பு ஏற்பட்டுவிடும்.

சரீரத்தின் குறி ஸ்தானம் என்றிட்ட மர்ம ஸ்தானத்திலும் மலம் கழியும் இடமாகிய மூல இடத்திலும் வட்ட வடிவில் சுழன்றோடும் காற்று அங்குள்ள நாடிகளின் வழியே செயல்படும் பொழுது உணர்வின் உந்துதலாக மலம் நீர் இவற்றை வெளியேற்றும் செயலுக்கும் ஆண் குறியின் சுக்கிலத்தைக் கிளர்ந்து வெளித் தள்ளும் செயலுக்கும் இயக்குகிறது. அதை மூலத்தின் காற்று என்பர்.

சுவாசக் காற்றின் செயல் நாபிப் பகுதியில் உள்ளிட்ட நாடிகளில் ஓடிடும் பொழுது இரைப்பையில் உணவை ஜீரணித்துச் சாறு என்றும் சக்கை என்றும் பிரித்திடும் செயலுக்கு உதவுகின்றது,

அதே சமயத்தில் உணவின் சத்துக்களை நரம்புகளின் வழி கொண்டு சென்று சரீரத்தின் அனைத்து உறுப்புகளுக்கும் பகிர்ந்தளிக்கும் சுவாசக் காற்றாகவும் சுவாசத்தின் கதியில் காற்று நூலாகச் செயல்கள் நிகழ்கின்றன.

மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறும் தகுதி

 

நஞ்சு கொண்ட உணர்வுகள் எதுவாக இருந்தாலும் மகரிஷிகள் அனைவரும் அதனை அடக்கித் தன் உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக இன்றும் நிலைத்துள்ளார்கள்.

இன்னொரு மனித உடலின் ஈர்ப்புக்குள் செல்லாதபடி
1.உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகள்
2.அவர்கள் உடலிலிருந்து வெளிப்பட்ட உணர்வின் சத்தை நாம் கவர வேண்டும் என்றால் “நமக்கு வலு வேண்டும்…”

சாதாரண ஒரு நூலினைக் கொண்டு கடினமான பொருளைத் தூக்குவோம் என்றால் அந்த நூல் அறுந்து விடுகின்றது.

இது போன்று தான் சாதாரண மக்களாக இருக்கக்கூடிய நாம்
1.அந்த ஞானிகள் மகரிஷிகளின் மிக சக்தி வாய்ந்த ஆற்றல்களை அவருடைய உணர்வுகளை
2.நம் எண்ணத்தால் கவர வேண்டும் என்றால் அது முடியாத காரியம்.
3.நம்முடைய எண்ணத்திற்கு வலு இல்லை… செயலற்றதாக ஆகிவிடுகின்றது.

ஆக… அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் எப்படிப் பெறுவது…?

சிறு கல்லாக இருந்தால் ஒரு மனிதன் அதைத் தூக்கி விடலாம். அதுவே பெரிய கல்லாக இருந்தால் பலரும் சேர்ந்தால் தான் அதைத் தூக்க முடியும். அதே போன்று ஒரு நூல் அது வலு குறைவாக இருப்பினும்… பல நூல்களை ஒருங்கிணைத்துக் கயிறாகத் திரிக்கும் பொழுது… எடை கூடிய பொருளையும் அதை வைத்துத் தூக்க முடிகின்றது.

அதைப் போன்று தான் “கூட்டுத் தியானங்களின் மூலம்”
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வை அனைவருக்குள்ளும் தூண்டச் செய்து
2.அந்த உணர்வால் உந்தித் தியானிக்கும் போது
3.காற்றிலே படர்ந்திருக்கும் அருள் ஞானியின் உணர்வை நம் உடலின் அருகே (நம்மிடம்) கொண்டு வர முடியும்.

ஆலயங்களிலே தேரை வடம் பிடித்து இழுக்கப்படும் பொழுது பலரும் ஒருங்கிணைந்த நினைவுடன் இழுத்தால் தான் அந்தத் தேர் எல்லை வந்து சேரும்.

ஒருவர் தெற்கே… ஒருவர் கிழக்கே… ஒருவர் மேற்கே… ஒருவர் வடக்கு… என்று அந்த வடத்தினைப் பிடித்து இழுத்தால் தேர் எல்லை வந்து சேராது

ஆகையினால்… அந்த மகரிஷிகளின் நினைவலைகளை நீங்கள் முன் வைத்து… அனைவரையும் ஒருங்கிணைத்த நிலைகள் கொண்டு… அந்தச் சக்தியை நாங்கள் பெற வேண்டும் என்று உங்களை எண்ணும்படி சொல்கிறோம்.

குருநாதர் காட்டிய அருள் வழிப்படி உங்கள் உயிரை ஈசனாக மதித்து… ஈசன் வீற்றிருக்கும் அந்த ஆலயத்தில் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்… அந்த ஆலயம் புனிதமாக வேண்டும்… அதற்குள் இருக்கும் நல்ல குணங்கள் தெளிந்திட வேண்டும்… தெய்வ குணங்கள் அங்கே வளம் பெற வேண்டும் என்று உங்களை நான் (ஞானகுரு) தியானிக்கின்றேன்.

உங்களுக்குள் இந்த உணர்ச்சிகளை தூண்டச் செய்து…
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று உங்களை நான் எண்ணும் பொழுது
2.அந்த சக்தியின் துணை கொண்டு நீங்கள் பெற முடிகின்றது… அதைக் கவர முடிகிறது.

டி.வி..க்களுக்கு “ஆண்டனாவும்” அதற்கென்று சக்தி வாய்ந்த சில நுண்ணியக் கருவிகளையும் பொருத்தி இருப்பார்கள். ஆண்டனா அதனின் துணை கொண்டு தனக்கு முன் இருக்கும் மிக சக்தி வாய்ந்த அலைவரிசைகளைக் கவர்கின்றது.

கவர்ந்து… நிசப்தமான நிலைகள் சீராகத் திரைப்படங்களைக் காட்டுவதும்… ஒருமித்த நிலை கொண்டு இசையோ மற்ற எதுவாக இருந்தாலும் நாம் பார்க்கவும் கேட்கவும் முடிகின்றது.

அது போன்று மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குச் சீராக எப்போதும் கிடைக்க வேண்டும் என்று நான் தியானிக்கிறேன். அப்போது நீங்களும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று தியானித்தால் அந்தச் சக்தியை எளிதில் பெற முடிகின்றது.

குருநாதர் காட்டிய வழியில்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும்
2.உங்களை அறியாது வரும் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும்
3.பொருளறிந்து செயல்படும் திறன் நீங்கள் பெற வேண்டும்
4.உங்கள் உயிரான ஈசனுக்கு மகிழ்ச்சியூட்டும் உணர்வாக வளர வேண்டும்
5.அத்தகைய சக்தி உங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று இப்படித்தான் நான் (ஞானகுரு) எண்ணுகின்றேன்.

அதைப் போன்று தான் நீங்களும் எண்ணிப் பழகுதல் வேண்டும்.

ஒரு வழிப்பாதை

 

விஞ்ஞானிகள் ஒரு இராக்கெட்டை பூமியின் பிடிப்பிலிருந்து விடுபட்டு விண்ணிலே வீசுவதற்கு “மிகவும் சக்தி வாய்ந்த நிலைகள் கொண்டு தான்” அதைச் செயல்படுத்துகின்றார்கள்.

விண்ணின் ஆற்றலை இங்கிருந்து அறிந்துணர்வதற்காக “ரேடர்” என்ற சாதனமும் “எக்ஸ்ரே” போன்ற சில செயலாக்கங்களையும் அதனுடன் பொருத்துகின்றார்கள்.

ரேடர் என்ற நிலையும் எக்ஸ்ரே என்ற நிலையும் வைத்துத் தான் பல பல உணர்வின் தன்மையைக் கண்டறிகின்றனர் விஞ்ஞானிகள்.

இதைப் போன்று தான்
1.மனிதனாக இருக்கும் நாமும் “ஞானிகள் உணர்வின் சக்தியை” நமக்குள் செலுத்தி விண்ணின் ஆற்றலைப் பெற முடியும்.
2.கண்ணை ரேடராக வைத்து… கண்ணின் நினைவலைகளை எக்ஸ்ரேவாக வைத்து…
3.மற்ற காந்த அலைகளுடன் தொடர்பு கொள்ளும் போது விண்ணின் சக்தியைப் பெறக்கூடிய தகுதி பெறுகின்றோம்.

ஆனால் நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் ஒலி ஒளி என்ற… “காந்தப்புலனின் ஆற்றல் மிக்க நிலைகளை…” அது எந்த அளவிற்கு இணைக்கின்றோமோ அதன் வழி கிடைக்கின்றது.

அதாவது பல காந்தங்கள் (மேக்னட்) கொண்டு சுழற்றப்படும் போது (ஜெனரேட்டர்) எந்த அளவிற்கு மின்சாரம் அதிகமாக அதிலே உற்பத்தி ஆகின்றதோ… அதைப் போன்று நாமும் ஆற்றலைப் பெற முடியும்.

இதைப் போன்று தான்
1.விண்ணிலிருந்து வெளிப்படும் காந்த அலையின் தன்மை அது படர்ந்து பரவி வருவதை… பூமியின் செயல்கள் அது இழக்கச் செய்தாலும்
2.அதே உணர்வின் தன்மையை காந்த அலைகளாக நாம் மோதும் பொழுது
3.ஒரு சீரான நிலைகள் கொண்டு… ஒரு வழிப் பாதையில் நம்முடைய எண்ணங்களை ஒருங்கிணைக்கச் செய்யப்படும் பொழுது
4.உடலை விட்டு உயிராத்மாக்கள் பிரிந்து வெளியே சென்றால் அந்த உணர்வுடன் நாம் தொடர் கொண்டு…
5.அனைவரும் சேர்ந்து ஏக குரலில் நாம் உணர்வின் ஒலியை எழுப்பி உந்தித் தள்ளப்படும் போது
6.அந்த உயிராத்மாக்களை விண் செலுத்த முடிகிறது… விண்ணிலிருந்து வரும் சக்திகளைப் பெறவும் முடிகிறது
7.எந்தக் குடும்பத்தில் யார் இதைச் செயல்படுத்தினார்களோ அந்த குடும்பத்தார் ஈர்ப்புக்கு சப்தரிஷி மண்டல ஒளி அலைகள் கிடைக்கின்றது.

ஆகவே… குடும்பத்தைச் சார்ந்தோர் அனைவருமே உடலை விட்டுப் பிரிந்தவர்களை விண் செலுத்தி… குலதெய்வங்களாக அவர்களை எண்ணி… அந்தச் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வரும் சக்தி பெற வேண்டும் என்று அந்த உணர்வுடன் தொடர்பு கொள்ளும் பொழுது… அந்த ஞானியர்கள் நம் பூமியிலே வாழ்ந்த காலத்தில் அவர்கள் வெளிப்படுத்திய ஆற்றல்மிக்க சக்திகளை சுலபத்தில் நாம் எடுத்துச் சுவாசிக்க முடியும்.

அந்த மெய் ஞானிகள் தங்கள் வாழ்க்கையில் வந்த இன்னல்களை நீக்கி…
1.மெய் ஒளியின் சுடராக எப்படி ஆனார்களோ…
2.எந்த விண்ணின் நிலை அடைந்தார்களோ…
3.அவர்கள் சென்ற பாதையில் நாமும் சென்று அதை எட்டிப் பிடிக்கும் ஆற்றல் நமக்குக் கிடைக்கின்றது.

இது தான் ஞானிகள் கண்ட வழி…!

இந்த உடலில் நல்ல நினைவுடன் இருக்கும் பொழுதே நாம் இதைப் பழகிக் கொள்ள வேண்டும்.

காரணம்… காற்று மண்டலம் நச்சாக இருக்கும் இந்த வேளையில் வராகன் எப்படிக் கெட்டதை எண்ணாது… அந்த நாற்றத்தைப் பிளந்து நல்லதை நுகர்ந்து எடுத்ததோ இதைப் போன்று தியானம் எடுத்துக் கொண்ட அனைவருமே தனது வாழ்க்கையில் வரக்கூடிய
1.சலிப்போ சஞ்சலமோ சங்கடமோ சோர்வோ வெறுப்போ பயமோ ஆத்திரமோ அதை எல்லாம் பலவீனப்படுத்தும் நிலையாக
2.ஒவ்வொரு நிமிடத்திலும் ஈஸ்வரா என்று உயிருடன் தொடர்பு கொண்டு
2.மகரிஷிகளின் உணர்வுகளைத் தனக்குள் உருவாக்கும் ஆற்றலைப் பெற வேண்டும்.

நாம் எண்ணி எடுக்கும் உணர்வுகளைப் பிரம்மமாக இருந்து நம் உயிர் தான் சிருஷ்டிக்கின்றது. ஆகவே உயிரை நாம் ஈசனாக மதிப்போம். அந்த உயிரின் துணை கொண்டு தான் உயர்ந்த சக்திகளை நாம் பெற முடியும். அந்தப் பக்குவத்தைத்தான் இப்பொழுது உங்களுக்கு ஏற்படுத்துகின்றோம்.

விஞ்ஞானிகள் ரேடார் என்ற சாதனத்தைக் கம்ப்யூட்டருடன் இணைத்து விண்ணின் ஆற்றலைச் சுலப நிலைகள் கொண்டு எப்படி அறிந்து கொள்கின்றார்களோ இதைப் போன்று தான்
1.மூதாதையரின் ஆன்மாக்களை நாம் உந்தி விண்ணிலே செலுத்தி ஒளிச் சரீரம் பெறச் செய்யும் போது
2.சப்தரிஷி மண்டலத்தின் ஆற்றல் நமக்குள் பெருகுகின்றது… எண்ணும் பொழுதெல்லாம் அது கிடைக்கிறது.

அந்த உணர்வின் தன்மையைச் சுவாசித்து உடலுக்குள் ஒவ்வொரு நிலையிலும் சேர்க்கப்படும் போது மெய் ஒளியின் சுடராக நாம் எடுக்க முடியும்.

ஆகவே… வாழ்க்கையில் வரும் தீமைகளை மறந்து… மெய் ஒளி பெற வேண்டும் என்ற எண்ணங்களை உங்கள் எல்லோருடைய உள்ளங்களிலும் ஒருங்கிணைத்து… இதைப் பதிவு செய்கிறோம்.

ஞானிகளின் ஆற்றல் மிக்க சக்தியைப் பெறுவதற்கு உங்கள் ஒவ்வொருவருக்கும் இந்தத் தகுதி ஏற்படுத்துகின்றோம்
1.மகரிஷிகளும் இதைத்தான் செய்தார்கள்
2.என் குருநாதரும் அதைத் தான் செய்தார்.
3.குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களுக்கும் அதைத் தான் யாம் செய்கின்றோம் (ஞானகுரு).

“காற்று நூல்” தருவது எதற்கப்பா…?

 

ஜீவ பிம்பச் சரீரத்தின் அகக்கருவிகளான மனம் அறிவு நினைவாற்றல் செயல்படுதலின் முனைப்பு கொண்டு அண்டசராசரங்களையும் பஞ்ச பூதத் தத்துவமாகச் சரீரத்தில் கண்டுணர்ந்த செயலுக்குத் தெய்வீக உருவ அமைப்புகளை ஞானிகள் காட்டியதே “உயர் ஞானத் தெளிவிற்கே…!”

அதனை எல்லாம் இன்று இந்த மனித குலம் எடுத்துக் கொண்ட விதங்களை என்ன என்று சொல்வது…?

பக்தியாகப் பஜனைகள் பாடுகின்றார்கள்
1.ஆனால் நாத விந்து தான் நாராயணன் என்பதை உணர்ந்தானா…?
2.நாராயணன் நீருக்குள் சர்ப்பப் பஞ்சணை மேல் பள்ளி கொண்டுள்ளான்…! என்று சித்தர்களால் சூட்சமமாகக் காட்டப்பட்டது.

“பச்சை வண்ணப் பரந்தாமன்…” என்று கூறிய நாராயணன் வயிற்றுப் பகுதியுள் நாபியுள்ள இடத்தில் சர்ப்பம் போல் வட்டமிட்டு ஓடும் பஞ்ச பூதத் தத்துவ நாடிகளைச் செயல்படுத்திடும் பத்துத் தலைகள் போன்ற பச்சை வண்ண நாடி நீரமிலம் என்று கூறப்பட்ட தொப்புள் இடத்தில் (நாபி) சுதியுற்றுச் செயல்படும் விதமே
1.குளிர்ந்த நீருக்குள் நாராயணன்…
2.அதாவது சரீர உஷ்ணத்தைக் குதம் என்றிட்ட மலவாய்ப் பகுதியில் சிறிது தூரத்தில் மேலே உள்ள
3.வெப்பமிலம் செயல்படும் அதி உஷ்ணத்தைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திடும் செயலே “உஷ்ண நாதம் – காத்திடும் விஷ்ணு…!” என்பது.

மூலத்தைக் கணபதி என்றும்…
குறிப்பகுதி பிரம்மன் என்றும்…
நாபிப் பகுதி விஷ்ணு என்றும்…
இருதயப் பகுதியை உருத்திரன் என்றும்…
கண்டப் பகுதியை மஹேஸ்வரன் என்றும்…
நெற்றிப் பகுதியை சதாசிவன் என்றும்…
சிரசின் உச்சிப் பகுதியை ஆயிரம் இதழ் மலர்ந்த தாமரையினுள் ஆகாய ஜோதி என்றும்… ஈஸ்வரர் என்றும்…
மறை பொருளாக நற்சுவாசம் கொண்டு உண்மையை உணர்த்த வந்த ஞானிகளின் செயல் இன்று மாறு கொண்டு விட்டது.

இந்தக் காற்று நூல் தருவதெல்லாம் எதற்கப்பா…?

எந்தப் பொருளிலும் உண்மையை அறிதலே ஞானம். காற்று நூல் காட்டி உண்மையை உணர்த்தியது மூச்சைப் பிரித்தறியும் எண்ணச் செயலுக்கு அல்லவப்பா…! அந்த எண்ணம் கூடச் சுவாசத்தை மாற்றிவிடும்.

ஈஸ்வரபட்டனாகிய யான் சுட்டிக் காட்டும் இந்தப் பேரின்பத் தியான வழிதனில் நல்லெண்ணம் கொண்டு ஆத்ம வலுவைக் கூட்டி உயர்ந்த நிலை பெறவே “எல்லோரையும் அன்புடனே அழைக்கின்றேன்…!”

எண்ண வலு பெற்றிடும் நம் தியானத்தில்
1.சுவாசத்தின் செயலை உணராது செயல்படாமல்
2.உணர்வுடன் கூடிய சுவாசம் எடுத்திட்டாலே அனைத்து நற்பயன்களும் சித்திக்கும்…!
3.ஆத்மாவும் சுயப் பிரகாசத்தைப் பெற்றிடும்…!

தொழில் வளம்

 

தொழிலுக்காக ரோட்டிலே செல்லும் பொழுது நாம் பார்க்கக்கூடிய நிகழ்ச்சிகள் எத்தனையோ உண்டு.

ஒருவன் நடந்து போகும் போது கீழே விழுவான்… சைக்கிளில் இருந்து விழுவான்… ஒருவன் பராக் பார்த்துக் கொண்டு செல்வான்… ஒருவன் பஸ்ஸை வேகமாக ஓட்டிக் கொண்டு வருவான்… அதற்குள் ஒருவன் குறுக்கே நடப்பான்… வண்டிக்காரன் தொந்தரவு கொடுப்பான்… வேண்டுமென்றே பஸ்ஸுக்கு பஸ் இடைஞ்சல் செய்து கொண்டிருப்பார்கள்.

இதையெல்லாம் பார்க்கக்கூடிய நம் மனம் என்ன செய்கின்றது…?

1.அந்த உணர்வுகளை எல்லாம் சுவாசித்து வெறுப்பும் ஆத்திரமும் கோபமும் விரக்தியும் பயம் இது போன்ற எல்லா உணர்வுகளுமே உருவாகின்றது
2.இப்படி நமது வாழ்க்கையில் காலையிலிருந்து இரவு வரை நாம் எண்ணுவது அனைத்தையும் சதாசிவமாகிக் (உடலாக) கொண்டே உள்ளது.
3.நாம் எண்ணிய இந்த உணர்வின் சக்திகள் உமிழ் நீராகச் சேர்ந்து… உடலுக்குள் கெட்ட சக்தியாக உருவாகின்றது (சதா சிவமாக)
4.அதாவது நல்ல குணங்களுக்குள் இவைகள் ஊடுருவி அசுத்தங்களாகச் சேர்ந்து விடுகிறது.

வராக மூர்த்தியாக (பன்றியாக) இருக்கும் பொழுது கெட்டதை நினைக்காதபடி இருந்தது.

ஆனால் மனிதனாகும் பொழுது இப்பொழுது என்ன செய்கின்றோம்…? கெட்டதை எல்லாம் அதிகமாக நினைக்க வேண்டி வந்துவிடுகிறது.

மனிதனின் உடல் விஷத்தை நீக்கக்கூடிய சக்தி பெற்றதுதான். நல்ல வாசனையான உணவுப் பொருளைச் சாப்பிட்டாலும் அதில் இருக்கக்கூடிய மறைந்துள்ள நஞ்சை நம் உடல் நீக்குகின்றது.

இதைப் போன்று அதிலிருந்து தோன்றிய உணர்வின் எண்ணங்கள் கொண்டு நாம் இருந்தாலும்… நாம் கடைக்குச் செல்லும் பொழுது மேலே சொன்ன அத்தனை சம்பவங்களையும் பார்க்க நேர்ந்தது.

இத்தனை எண்ணங்களுடன் கடையைத் திறந்தால் வியாபாரம் சரியாக இருக்குமா…! ஆகவே… கடையில் சேர்ந்து அமர்ந்த உடனே ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்.

வியாபாரத்திற்காக வாங்கி வைத்த சரக்குகளை எல்லாம் “உற்றுப் பார்த்து”
1.மகரிஷிகளின் அருள் சக்தி இந்தப் பொருள்கள் அனைத்திலும் படர வேண்டும்
2.இதை உபயோகப்படுத்துவோர் அனைவரும் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும்
3.அவர் வாழ்க்கையில் நலமும் வளமும் பெற வேண்டும்
4.என் சொல் அவர்களுக்கு இனிமையாக வேண்டும்
5.என் பார்வை அவர்களுக்கு உயர்ந்த நிலை பெறச் செய்ய வேண்டும்
6.நாங்கள் பார்ப்பதெல்லாம் நலம் பெற வேண்டும்
7.என்னுடைய வாடிக்கையாளர் அனைவருமே வாழ்வில் நலமும் வளமும் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்

இந்த எண்ணங்களுடன் தான் கடையில் இருக்கும் சரக்குகளை நாம் உற்றுப் பார்க்க வேண்டும். எனக்கு வியாபாரமாகவில்லை நஷ்டம் ஆகின்றது என்று எண்ணக் கூடாது.

செய்யும் தொழிலே தெய்வம்…!

அங்கே நீங்கள் தெய்வமாக இருந்து வருவோரின் பசிக்கோ மற்ற நிலைகளுக்கோ பொருளைக் கொடுத்தாலும்… அவர்கள் அதற்காகக் காசு கொடுத்தாலும்… நம் பார்வையால் சொல்லால் உயர்ந்த உள்ளத்தை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். நம்மிடம் வாங்கிச் சென்ற பொருளைப் பயன்படுத்தும் போது அவர்களுக்குள் அது மகிழ்ச்சியூட்டும் நிலையாக வரும்.

ஆனால் சங்கட உணர்வுகளை எண்ணிக் கொண்டு கடையில் அமர்ந்து… வரும் வாடிக்கையாளர் இரண்டு தரம் கேட்டால்… பதிலுக்கு நாம் அழுத்தமாகச் சொல்லிவிட்டால் அந்தச் சங்கடத்தால் வெறுப்பாகி வியாபாரம் குறைவாகிவிடும்… நம் நல்ல சரக்கையே மட்டமாக்கி விடும்.
1.நம்முடைய சொல்லே நம்மிடம் அணுக விடாதபடி
2.மற்றவர்களை விலகிச் செல்ல செய்துவிடும்.

அது போன்ற நிலை உருவாகாதபடி தொழிலிலும் நம் சொல்லுக்குள் நல்லதை உருவாக்கும் நற்சக்திகளாக… நல்ல தெய்வங்களாகச் செயல்படுத்த வேண்டும்.

நமக்குள் இருக்கக்கூடிய 1008 சக்திகள் கொண்டு நாம் இடும் மூச்சலைகள் பிறருக்கு நன்மையாகும் பொழுது… தொழிலில் நாம் எடுத்துக் கொண்டது நல் உணர்வை ஊட்டும் சக்தியாக நமக்குள் வளர்கின்றது.

இதைத்தான் “ஓம் நமச்சிவாய…” என்று சொல்வது.

நாம் எடுத்துக் கொண்ட சக்தி சிவமாக சக்தியாகி… சிவாய நம ஓம்… நம் உணர்வுகள் உடலுக்குள் நல் சக்திகளாக விளைந்து அந்தச் சக்தியின் சொல்லின் உணர்வின் நிலையை தான் மற்றவர்களை இயக்கச் செய்கின்றது.

இது தான் “சிவாய நம ஓம்” நமச்சிவாய என்ற தத்துவத்திற்குள் இருக்கக்கூடிய உள் பொருள் இதுதான்.

ஆகவே எங்கே சென்றாலும் அங்கே அமர்ந்து இது போன்று செய்து பழகுங்கள்.

கடைக்குச் சென்று வீட்டுக்கு வந்தாலும்… வீட்டிற்குள் வந்தவுடன் ஆத்ம சுத்தி செய்து…
1.நம் வீடு முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்
2.என் சொல் என் வீட்டில் உள்ள அனைவருக்கும் இனிமை ஊட்ட வேண்டும்
3.என் பார்வை என் வீட்டில் உள்ளவரை நலம் பெற உதவ வேண்டும்
4.குடும்பத்தில் ஒற்றுமை வர வேண்டும் வீட்டிற்கு வருவோர் அனைவரும் நலமும் வளமும் பெற வேண்டும் என்று
5.இது போன்று சிறிது நேரம் எடுக்க வேண்டும்.

ஏனென்றால் வராகனாக இருக்கும் பொழுது அந்தச் சரீரத்திலே இதைத்தான் செய்தது. அப்படிச் செய்து தான் மனிதனாக இன்று வந்திருக்கின்றோம் கெட்டதை நீக்கும் ஆற்றலைப் பெற்று வந்துள்ளோம்.

அந்த ஆற்றலை நாம் செம்மையாகப் பயன்படுத்த யாம் (ஞானகுரு) சொல்லும் இந்த முறையைத்தான் கையாள வேண்டும்.

இயற்கையின் மூலாதாரம்

 

“உஷ்ண நாதமே காக்கும் விஷ்ணுவாக…!” என்ற சொல் சூட்சமத்தில் மனித சரீரத்தில் செயல் கொள்ளும் உஷ்ண நாதம் உடலினுள் ஓடிடும் 72000 நாடி நரம்புகளில் செயல்படுகிறது.

அவைகள் செயல்படும் கதியை… எண்ணம் கொண்டு செயல்படுத்தும் பஞ்சேந்திரியங்களும்… அவைகளின் தொழில் நிகழ்வுக்குப் பஞ்ச பூதங்களில் காற்றின் அமிலக்கூறு “மின்காந்தச் செயலாக” நடைபெறுகின்றது.

அதி தீவிரச் செயல்பாடு கொண்ட நாடிகள் ஆயிரத்து எட்டும் சரீரத்தில் தொப்புள் பகுதியில் அமைந்துள்ள பத்துத் தளைகள் கிளைத்துள்ள சுவாசத்தின் முக்கியக் கேந்திரத்தில் செயல்படும் நாடி ஒன்றும் கிளைத்துச் செல்லும் அந்த இடத்தில் வட்டமிட்டுச் சுழன்றே செல்கின்றன.

பச்சை வண்ண ஒளி காட்டும் பத்துத் தளைகள் கிளைத்தது போல் காணப்படும் தொப்புள் கொடி பஞ்ச பூத சரீரத் தத்துவத்தில் நீரமில சக்தி கொண்டது.

அண்டத்தையே பிண்டத்தில் கண்ட ஆத்ம ஞானிகள் நல்லெண்ணச் சுவாசம் கொண்டு இந்தச் சரீர கதியின் செயல்பாட்டைக் கொண்டே பரவெளியில் படர்ந்துள்ள பரமாத்மாவை உணர்ந்து தெளிந்தனர்.

பஞ்ச பூதத் தத்துவபடி (ஆகாயம் நீர் காற்று அக்கினி மண்)
1.”ஆகாயம்…” என்பதே கண்டம் என்றிட்ட சரீரத்தில் உள்ள தொண்டைப் பகுதியும்
2.அங்கு செயல்படும் நாடிகள் தொண்டையின் குழிப்பகுதியில் பதினாறு தலையுள்ள கிளைகள் போல் ஓடுவதும்
3.ஆகாயத்தின் மேகத்தின் வண்ணம் போலத் தோன்றி மிகுந்த ஒளி போல் விளங்குவதையும்
3.அந்த நாடிகளே ஜீவ பிம்பச் சரீரத்தில் சுவாசத்தின் தன்மைக்குச் செயல்படும் நாடிகள் என்றும்
4.பதினாறு தலையுள்ள அந்த நாடிகள் ஒன்றாக இணைந்து சர்ப்பத்தின் அசைவைப் போல் தெளிவாக உருவம் காட்டி
5.”பஞ்ச பூதத் தத்துவத்தில் நீரமில சக்தி…” செயல்படும் தொப்புள் பகுதியில் அமைந்துள்ள பத்துத் தலை அமைப்பாக உள்ள பச்சை வண்ண நாடியை
6.சர்ப்பம் வட்டமிட்டுச் சுருண்டு கிடக்கும் அமைப்பாக அமைத்துக் கொண்டுள்ளன.

உடலில் இருதயம் அமைந்துள்ள இடத்திலுள்ள மற்றொரு நாடி “பஞ்சபூதத் தத்துவத்தில் காற்றமிலச் செயல்பாடாக…” இயற்கை கதிச் செயலாக தலை சாய்த்த மலராகத் தோற்றம் காட்டுகிறது.

பன்னிரெண்டு தலைகளாக நிலைத்திட்ட அந்த நாடி வயிற்றில் தொப்புள் பகுதி நாடியைச் சுற்றி இரைப்பையில் போடப்படும் உணவுகளைச் செரிக்கச் செய்யும் கருவியாகச் செயல்படுகின்றது.

தொப்புள் பகுதியைச் சுற்றி வட்டமிடும் மற்றொரு நாடி
1.“பஞ்ச பூதத் தத்துவத்தில் அக்கினிக் கேந்திரமாக…”
2.ஆண் பெண் குறி என்ற மர்ம ஸ்தானத்தில் ஆறு தலை போல் கிளைத்து
3.உயிர் உற்பத்தி ஸ்தானமாகச் சரீரத்தில் செயல்படுகின்றது.

“பஞ்ச பூதத் தத்துவத்தில் மண்ணமிலத் தன்மையாக…” மற்றொரு நாடி நான்கு தலைகளுடன் கூடி மலவாயில் என்ற மூலத்தில் தொடங்கி தொப்புள் பகுதியில் அமைந்துள்ள பச்சை வண்ண நாடியைச் சுற்றிச் செல்கின்றன.

இந்தப் பஞ்ச பூத அமைப்புகள் அனைத்தையும் செயல் நடத்திடும் “கட்டளைக் கேந்திரம்…” (உயிர்) சிரசின் நெற்றிப் பகுதியில் உள்ளது.

சூரிய சந்திர அக்கினி என்ற மூன்று நாடியாகத் தொடங்கி… ஆகாயம் என்ற கண்டப் பகுதி… காற்று என்ற இருதயப் பகுதி… நீர் என்ற வயிற்றுப் பகுதி… அக்கினி என்ற குறிப் பகுதி… மண் என்ற மூலப் பகுதி… இவை அனைத்தையும் இணைத்துக் கொண்டு அந்தக் கட்டளைக் கேந்திரம் செயல்படுகிறது.

அதே சமயத்தில் சிரசின் உச்சிப் பகுதியில்
1.ஆயிரம் தலையுள்ள நாடிகள் ஒன்றாக இணைந்த அந்த இடத்தை
2.நீல வண்ண ஆத்மாவின் ஜோதி தத்துவமாகக் காட்டினான் அன்றைய ஞானி.

அதை எல்லாம் காட்டியிருந்தாலும் இன்றைய உலகோதய நடைமுறை வாழ்க்கைச் செயலில் பரபரப்பான எண்ணச் செயலில் மனிதர்களின் சுவாசத்தின் கதி என்பது…
1.ஒரு நாளில் இலட்சக்கணக்கான மூச்சலைகளாகச் சுவாசத்தின் கனமாகச் சுவாசத்தில் ஓடும் பொழுது
2.பல வகையான எண்ணங்கள் மோதிடும் செயல்பாட்டில்
3.சக்தி வலுவிழந்து விடுகின்ற நிலையே இன்று அதிகம் உள்ளது.

மூச்சையும் காற்றையும் பற்றிச் சிந்திப்பாரும் இல்லை. அதைப் பற்றி அறிய விரும்புவாரும் இல்லை… அதனின் இரகசியத்தை அறிய முயற்சிப்போரும் இல்லை…!

காற்று நூல்…! என்ற வழி வகையில் பஞ்ச பூதங்களாக அமைவு காட்டிய இடங்களில் செயல்படும் நாடிகளில் “சுவாசகதி…” ஓடுவதைத் தியான வழி கொண்டு கண்டு அன்றே தெளிந்தார்கள் சித்தர்களூம் ஞானிகளும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு சிரமமான நேரங்களில் ஒருவருக்கு உதவி செய்கிறீர்கள் என்றால்…
1.இந்த அருள் உணர்வுகளை எடுத்துச் சொல்லி…
2.இதன் வழிகளில் மகரிஷிகளின் அருள் சக்தி பெறுவீர்கள்… உங்கள் உடல் நலம் பெறும்…
3.குடும்பத்தில் கஷ்டம் நீங்கும்… உங்கள் தொழில்கள் வளம் பெறும் என்ற வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.

இந்த வாக்கினை ஏற்றுக் கொண்டோர் உணர்வுகளில் அந்த உணர்வுகள் பதிவாகி அவர்கள் நினைவாற்றல் அவர்களைக் காக்க உதவும். நோய்களை அகற்றவும் இது உதவும்.

உதாரணமாக ஒருவர் மிகவும் வேதனைப்படுகின்றார் என்றால் ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் நினைவைச் செலுத்தி உங்கள் உயிரை வேண்டுங்கள்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று ஒரு பத்து நிமிடமாவது ஏங்கித் தியானித்துக் கொள்ளுங்கள்.

யார் நோய் என்று சொன்னார்களோ அவர்களிடம்… மகரிஷிகளின் அருள் சக்தி உங்கள் உடல் முழுவதும் படரும்… உங்கள் உடல் வலி குறையும்…! என்று நீங்கள் சொல்லிப் பாருங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் உடல் முழுவதும் படர வேண்டும் நோயின் வலிமை குறைய வேண்டும் அருள் ஒளி அங்கே படர வேண்டும் என்று இப்படி எண்ணிப் பாருங்கள்.

சொன்ன வாக்கின்படி அவர்களும் மகரிஷிகளின் அருள் சக்தியால் “என் நோய் குறைய வேண்டும்…” என்று எண்ணினால் அவர்கள் உடலில் அந்த வலி குறைவதையும் நோய் நீங்கும் சக்தியும் பெறுகிறார்கள்.

ஏனென்றால் உங்களுக்கு இந்தச் சக்தி இருக்கிறதா… இல்லையா…! என்று இப்படிப் பரீட்சித்துப் பாருங்கள். உங்களுக்குண்டான ஆற்றலை நீங்கள் பார்க்கலாம்.

அதே போல் யாம் கொடுக்கும் பிரசாதத்தில் உள்ள காசை உங்கள் வீட்டில் பூஜை அறையில் விநாயகருக்கு அருகில் வைத்துக் கொள்ளுங்கள். பாலும் தீர்த்தமும் வைத்து யாம் சொன்ன முறைப்படி தியானித்து விட்டு முடிந்த பின் பாலையும் தீர்த்தத்தையும் எடுத்துப் பாருங்கள்.

1.நீங்கள் தியானத்தில் கவர்ந்து கொண்ட அலைகள் அதிலே படரப்படும் போது
2.அந்தப் பாலிலேயும் இந்தச் சக்தி படர்ந்திருக்கும்
3.அது நீங்கள் வைத்த பாலாக இருக்காது. அது சுவை கொண்ட பாலாக மாறும்.
4.தீர்த்தமும் நீங்கள் வைத்த தண்ணீராக இருக்காது… சுவை கொண்ட தீர்த்தமாக மாறும்.
5.ஏனென்றால் நாம் எடுத்த அந்த மகரிஷிகளின் அலைகள் அங்கே படர்கிறது.

இதைப் போல் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுக்க எடுக்க நம் வீட்டுக்குள் இருக்கும் தரைகளிலும் சுவர்களிலும் மற்ற உடமைகளிலும் இந்த அலைகள் படரும். அப்பொழுது தீமைகள் அகற்றும் சக்திகள் கிடைக்கின்றது.

நாம் அனைவரும் இதைப் போல் ஒருக்கிணைந்து அந்த அருள் உணர்வுகளைப் பெற முற்பட்டால்
1.இந்த வாழ்க்கையில் அனைவரும் நலம் பெற உதவுகின்றோம்.
2.நமக்குள் இருக்கும் அனைத்துக் குணங்களிலும் நலம் பெறும் சக்தியாக மாற்றிடும் நிலை வருகின்றது.

ஆகவே ஒவ்வொருவரும் உங்களை நீங்கள் நம்புங்கள். உங்கள் உயிரை ஈசனாக மதியுங்கள். உங்கள் உடலைச் சிவமாக மதியுங்கள்.. ஈசன் வீற்றிருக்கும் ஆலயமாக அதை மதித்துப் பழகுங்கள்.

மகரிஷிகளின் அருள் வட்டத்தில் என்றுமே ஒன்றி வாழ்ந்திடும் அருள் சக்தி பெறுவீர்கள்.

மனிதனின் கீழ் நோக்கிய ஈர்ப்பு நிலையும்… “ஞானிகளின் மேல் நோக்கிய ஈர்ப்பு நிலையும்…”

 

பிண்டத்தைக் (உடல்) கொண்டே அண்டத்தையும் வான இயல் தொடர்பில் எல்லாம் அண்ட சராசரங்களையும் தன் ஞான விழிப் பார்வை கொண்டு அறிந்து உலகினுக்கு ஈந்த மகா மகான்களும் மகா மகரிஷிகளும் எத்தனையோ பேர் உண்டு.

எதைக் கொண்டு அதை எல்லாம் அவர்கள் உணர்ந்தார்கள்…?

இந்த ஜீவ பிம்ப சரீரத்தில் ஒலி ஒளி மணம் சுவை உணர்வு ஸ்பரிசச் செயல் மூலமாக
1.ஓசை கொண்டு கேட்டல்
2.ஒளி கொண்டு பார்த்தல்
3.சுவை கொண்டு சுவைத்தல்
4.மணம் கொண்டு நுகர்தல்
5.தேகமாகப் ஸ்பரிசித்தல் என்ற நிலைகளில்
6.ஐம்புலனின் இயக்கமாகச் செயல்படும் தன்மைகள் அனைத்தையும்
7.அறிவின் ஆற்றலால் அறிந்துணர்ந்து… தெளிந்ததை… ஆக்கபூர்வமான செயலாக
8.ஞான வழியின் தொடர்பில் பஞ்சேந்திரியங்கள் ஒளிபடும் செயலுக்கு வரைமுறை ஏற்படுத்தி
9.மனக்கட்டுப்பாடாக அவர்கள் வழி வகுத்துத் தந்ததே “சுவாச நாடிகள் பற்றிய காற்று நூல்…!”

எண்ணம் கொண்டு எடுக்கும் சுவாச அலையில் காமத்தின் அடியாக எழும் மோகமாக கீழான ஈர்ப்புச் செயலாகச் சரீரத்தின் அடிப்பகுதி இனிப்பு என்று காமச் சுவையைக் காட்டியது உலகோதய நடைமுறை வாழ்க்கையில் கீழாம் ஈர்ப்பாக உடல் தொடர்பாக இன்பம் பெறுதல் ஆகும்.

ஆனால்
1.இந்த மோகத்தை வென்ற ஞானி.. உயர் ஞான சித்திகளைப் பெற்று விட்டால்
2.அந்தக் காமச்சுவை கொண்ட மோகம் என்பது
3.“மேல் கரும்பாக… அவர்களுக்குச் சுவையற்றதாகத் தோன்றும்…!”

மண்ணினுள் வாசம் செய்யும் அந்தப் பிராணியைக் காட்டியதே… மனத்தினுள்ள அந்த மோகத்தைக் காட்டவே..!

ஆண் பெண் என்ற உடல் கலப்பில் மூலாதாரத்தில் குதம் என்று பெயர் நாமப்படுத்திக் காட்டிய அந்த இடத்தில் நான்காகக் கிளைத்த அந்த நாடியானது… கால் கட்டை விரலிலிருந்து மேல் எழுந்து குறி ஸ்தானத்தில் பின்னிப் பிணையும் சூரிய சந்திர நாடிகளுடன்
1.உடல் தொடர்பால் இரண்டும் இணைந்து செயல்படும் பொழுது
2.விந்தின் செயலில் அக்கினி ஜுவாலையாகச் சூரியன் போல் பிரகாசித்து
3.அது சிற்றின்ப அறிவிற்குச் செயல்பட்டு விடுகின்றது.

ஆனால் ஒளி என்ற விந்து… சிரசின் உச்சிக்கு “நாத விந்துவாக.. மேலான அறிவாக…”
1.ஆத்ம ஞானி அதைச் சூரியப் பிரகாசமாக ஆக்கும் செயலில்
2.தன் ஆத்மாவே சிவலிங்க வடிவில் ஜோதியாகத் தெளிவுறும்.
3.இதுவே பாம்பு உள்ள இடத்தில் எலி இல்லை என்பது…!

நல்லெண்ணம் கொண்டு நல் சுவாசம் எடுத்திட வேண்டும் என்று கூறியவற்றில் தியானத்தின் வழித் தொடர்பில் தன்னை உணர்ந்து அறியும் பக்குவம் பெற்றிட வேண்டும் என்ற ஆரம்ப வழித் தொடர்பிலும்… ஆத்ம வலுவைப் பெற்றிட வேண்டும் என்ற எண்ணச் செயலிலும்… வைராக்கியச் சிந்தனையின் எண்ண வலு கொண்டே
1.உண்மையின் பாதையில் செல்லும் ஞானச் செல்வங்களே…!
2.நீங்கள் அனைவரும் இன்னும் உயரிய நிலை பெற வேண்டும் என்று
3.பேரன்பு கொண்டே ஈஸ்வரபட்டன் வாழ்த்துகின்றேன்…!

குருவை உடலோடும் ஏற்றுக் கொள்ளலாம். சூட்சம ஒளிச் சரீரம் பெற்றவர்களையும் குருவாக ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் குரு என்பவன் சிஷ்யனின் உண்மை ஞானம் அறியும் உயர் ஞான அறிவிற்கு “ஞானப் பால் ஊட்டுபவனாக இருக்க வேண்டும்…!”

1.அன்பு சித்தர்களும்… அன்பு மகரிஷிகளும்… அன்பு சப்தரிஷிகளும்.. பாசம் கொண்டே தேடி வந்தது
2.இந்தக் கலியில் உண்மையான ஞான வித்துக்களைத் தான்…!

அதில் ஏன் நீங்களும் ஒருவராக இருக்கக்கூடாது…?

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

வாழ்க்கையில் குடும்பம் என்ற நிலையில் எவ்வளவோ அன்புடன் பண்புடன் வளர்ந்தாலும் சந்தர்ப்பத்த பேதத்தால் ஒருவர் ஒரு தவறைச் செய்து விடுகின்றார். உடனே சுர்.. என்று கோபம் வருகிறது.
1.ஒரு தடவை இப்படிக் கோபம் என்று நமக்குள் பதிவாக்கி விட்டால்
2.அடுத்த தரமும் அதே தவறைச் செய்தால் கோபம் எல்லை கடந்து விடுகிறது.

வேதனைப்படும் நிலைகள் ஆகி… நாசமாகப் போகிறவனே… ஏண்டா இந்த மாதிரிச் செய்கிறாய்…? என்று நம்மை அறியாமலே சாபமிடும் நிலை வந்துவிடுகின்றது. அவனைக் கெடுக்கும் உணர்வுகள் நமக்குள் வளர்ந்து விடுகின்றது.

இதைப் போன்று நம்மை அறியாது நம் குடும்பத்தில் வளர்ந்து விடுகிறது. இதிலிருந்து நாம் மீள்வது எப்படி…?

அதே போல்… தொழிலின் நிமித்தம் நாம் ஒருவருக்கு உதவி செய்கிறோம். கடனாகக் கேட்கிறார் என்று பணத்தைக் கொடுத்து உதவி செய்கிறோம்.

இத்தனை நாள்களுக்குள் திரும்பக் கொடுக்கின்றேன் என்று சொல்கிறார். ஆனால் மாதக் கணக்காகி விடுகின்றது. அப்பொழுது நம் மனதில் பணத்தைக் கொடுப்பானா… கொடுக்க மாட்டானா…? என்று எண்ணத் தொடங்குகிறோம்.

நம்முடைய இந்தச் சந்தேக உணர்வு அங்கே அவனுக்குள் இயக்கப்பட்டு நண்பரின் தொழில் வளர்ச்சியையும் தடைப்படுத்தும்.
1.அவனுடைய சந்தர்ப்பம் வருவாய் வருவதைத் தடுக்கும்.
2.பணத்தைக் கொடுக்க வேண்டுமே என்ற வேதனையும் வரும்.

கொடுக்க முடியவில்லை என்று ஏங்கிக் கொண்டிருக்கும் போது நாம் என்ன செய்கிறோம்.

இத்தனை நாளைக்குள் தருகிறேன் என்று பணத்தை வாங்கிச் சென்றாயே…! ஏம்ப்பா…! இன்னும் பணத்தைக் கொடுக்கவில்லை..? என்று வேகத்துடன் கேட்போம்.

சொல்லி வாங்கிச் சென்றாயே…! ஏன் இன்னும் உன்னால் கொடுக்க முடியவில்லை…? என்ற எண்ணத்துடன் கேட்போம். இந்த வெறுப்பின் தன்மை அடையப்படும் பொழுது
1.பணத்தைத் திரும்பக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு இருந்தாலும் வேதனையை வளர்த்துக் கொள்கிறான்.
2.அதை நுகரப்படும் பொழுது நமக்குள்ளும் வேதனை உணர்வே வளர்ந்துவிடுகிறது.
3.அப்போது நண்பனக இருந்தாலும் பகைமையாகி விடுகின்றது.
4.பகைமை உணர்வுகள் நமக்குள் வளர்ந்த பின் நம் நல்ல குணங்களைச் செயலற்றதாக மாற்றிவிடுகின்றது.

இதைத் தான் இந்திரலோகத்திற்குள் இரண்யன் புகுந்து இத்தகைய நிலைகளைச் செயலாக்குகின்றான் என்று காவியத்தில் காட்டுகின்றார்கள்.

அதை மாற்ற அதோ வருகிறான் நாரதன்…! என்று கண்ணன் (கண்கள்) காட்டிய வழிப்படி “ஈஸ்வரா…” என்று உயிரிடம் வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று ஏங்கித் தியானிக்க வேண்டும்.

பின் நம்மிடம் கடன் வாங்கிச் சென்றவரை எண்ணி…
1.மகரிஷிகளின் அருள் சக்தி அவர் உடல் முழுவதும் படர வேண்டும்.
2.அவருடைய தொழில்கள் வளம் பெறவேண்டும்
3.அவருக்கு நல்ல வருமானம் வர வேண்டும்
4.பணத்தைத் திரும்பக் கொடுக்கும் எளிதான நிலைகள் வர வேண்டும் என்று நாம் எண்ணுதல் வேண்டும்.

இப்படி எண்ணினால் நம் எண்ணம் அவனைக் காக்கின்றது. அதே சமயத்தில் அவனின் உணர்வும் வலுவாகின்றது. பணத்தைத் திரும்பச் செலுத்தும் நிலை வருகின்றது.

இது போன்ற நிலைகளைக் கூட்டுத் தியானத்தில் கூட்டமைப்பாக நாம் எண்ணித் தியானித்து வலு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பின் அதிகாலை துருவ தியானத்தில் “ஈஸ்வரா…” என்று உயிரை எண்ணி அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்தநாளங்களில் கலந்து உடல் உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களும் பெற வேண்டும் என்று வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அடுத்து நம் வாழ்க்கையில் யாரை எல்லாம் பார்த்தோமோ அவர்கள் குடும்பங்களில் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் வைரத்தைப் போல் அவர்கள் குடும்பம் ஜொலிக்க வேண்டும் அவர்கள் தொழில்கள் ஜொலிக்க வேண்டும். அவர்கள் குடும்பங்கள் நலம் பெறவேண்டும் என்று அவர்களை நாம் எண்ணுதல் வேண்டும்.

ஏனென்றால் அவர்கள் உணர்வெல்லாம் நம் உடலில் இருக்கின்றது. நமக்குள் அந்த உனர்வின் தன்மை விளையப்படும் போது அவர் பணம் திரும்பக் கொடுக்கவில்லை என்ற நிலையில் நம் உடலில் உருவான வேதனை அணுக்களுக்கு ஆகாரம் கிடைப்பதில்லை.

இதைப் போன்று ஒவ்வொரு நிமிடத்திலும் அந்த மகரிஷிகளின் ஆற்றலை நமக்குள் சேர்க்கப்படும் பொழுது நம் ஆன்மாவைத் தூய்மையாக்குகின்றோம்.

மனிதனானவன் பிரம்மாவைச் சிறை பிடித்தான் என்ற நிலையில் இது போன்ற தீமைகளை அகற்றிவிட்டு தீமைகளை அகற்றிய அருள் ஞானியின் உணர்வை நமக்குள் நுகர்ந்து நமக்குள் உருவாக்குதல் வேண்டும்.

இதனைக் காட்டுவதற்குத்தான் விநாயகர் கையில் அங்குசத்தைக் கொடுத்தனர்… அங்குசபாசவா…! கார்த்திகேயா மனிதனான பின் ஆறாவது அறிவு கொண்டு இதை அடக்க முடியும். இதன்படி நம் ஆன்மாவைச் சுத்தப்படுத்த வேண்டும்.

ஆகவே
1.எல்லோருடைய நிலைகளையும் மகரிஷிகளின் ஒளி கொண்டு நமக்குள் சமப்படுத்தும் போது
2.நம் எண்ணங்கள் ஒன்றாகின்றது. தீமைகளை நீக்கிவிடுகின்றது…!

சாதாரண ஆன்மாக்களின் இயக்கமும்… குருநாதர் ஆன்மாவின் இயக்கமும்…!

 

சந்தர்ப்பத்தில் திடுக்… என்று நாம் பயந்துவிட்டோம் என்றால் பய உணர்வு கொண்டு இறந்த ஆன்மாக்கள் நமக்குள் வந்துவிடும். அடுத்து அதனுடைய எண்ணத்தை (பயத்தை) நமக்குள் தூண்டும்.

பயமான எண்ணங்களுடன் இருந்தோம் என்றால் அந்த ஆத்மா நமக்கு ஒத்துழைக்கும். ஆனால்…
1.நல்லதை நாம் எண்ணிக் கொண்டிருந்தோம் என்றால் அந்த நேரத்தில் பய உணர்வுகளை அந்த ஆன்மா ஊட்டும்
2.நாம் நல்ல காரியங்கள் செய்வதை அப்போது தடைப்படுத்தும்.

காரணம்… அந்த ஆன்மா கடைசி நேரத்தில் எந்த பயத்தால் உடலை விட்டு உயிர் பிரிந்ததோ அதே நிலையில் இருந்து தான் நமக்குள் அது செயல்படும்.

ஆனால் நாம் நல்லதை நினைக்கும் பொழுது அதற்கு எதிர் நிலையாகும் நல்ல உணர்வுகளுடன் நம்முடைய நினைவை செலுத்திச் சுவாசிக்கும் பொழுது நம்மை அறியாமலே பயத்தை ஊட்டிக் கொண்டிருக்கும்

தியானத்தில் நாம் எடுக்கும் சக்தி கொண்டு உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் (உயிரான்மாக்கள்) மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று
1.நாம் இந்த உணர்வின் நினைவைச் செலுத்தப்படும் பொழுது அந்த உயிரான்மா நமக்குள் அடங்கி
2.நல்ல சக்திகளைப் பெறும் பொழுது “நம் எண்ணத்தை ஓங்கிச் செயல்படுத்த” இது உதவும்.

பேய் என்கின்றோம்… அருள் என்கின்றோம்…! பல ஆன்மாக்கள் இப்படி நமக்குள் வந்து இயங்கி விடுகின்றது. அவைகள் நம்முடன் இணைந்து செயல்படுவதற்கு நம் உடலுக்குள் இருக்கும் பொழுது அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறச் செய்ய வேண்டும்.

உதாரணமாக பஸ்ஸிலே நாம் செல்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம். அன்புடன் பண்புடன் நாம் இருக்கின்றோம். அந்தச் சமயம் எதிர்பாராதபடி ஒரு மனிதன் பஸ்ஸின் குறுக்கே ஓடுகின்றான்… நாம் பார்த்து விடுகின்றோம்.

1.அடிபட்டு விடுவானே…! என்ற பயத்தை ஓங்கி ஆ… என்று ஏக்கத்தில் நாம் பார்க்கின்றோம். ஆனால் அவன் தப்பி விடுவான்
2.அடிபட்டு விட்டால் என்ன ஆகும்…! என்று அவன் மேல் உள்ள ஏக்கத்தினால் பயத்தின் உச்சகட்டம் அடையும் பொழுது
3.பய உணர்வாலே இதற்கு முன் அடிபட்டு இறந்த ஆன்மாக்கள் நம் உடலுக்குள் வந்து விடும்.

அப்படி வந்துவிட்டால் அது எப்படிப் பயமான எண்ணங்கள் கொண்டு செயல்பட்டதோ… அந்த உடலில் “கடைசி நிமிடம் பட்ட அவஸ்தைகள் அனைத்தும்” நமக்குள் வந்து இயங்கத் தொடங்கும்.

ஆகவே என் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் அனைத்தும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… என்னுடன் இணைந்து ஒத்துழைக்க வேண்டும் என்று நாம் எண்ணினோம் என்றால் “அந்த ஆன்மாக்களுக்கும் ஒரு புண்ணியம் கிடைக்கும்…”

உடலை விட்டு நாம் எப்போது பிரிந்தாலும் நம் உடலில் இருந்த ஆன்மாக்களும் வெளியில் வந்து… நல்ல ஆத்மாவாக… மனித உடலைப் பெறக்கூடிய தகுதி பெறும்.

நமது குருநாதர் காட்டிய அருள் வழிப்படி இதை உபதேசிக்கின்றோம்.

1.உடலை விட்டு குருநாதர் பிரிந்து சென்ற பின் அவரின் உயிராத்மா அது எந்தெந்த நிலைகளைச் செயல்படுத்தியது…? என்றும்
2.வெளியிலே செல்லும் பொழுது “மற்ற ஆத்மாக்கள் கவராத வண்ணம்” இவரின் ஆன்மா எந்தெந்த வழிகளில் எல்லாம் செயல்பட்டது…? என்பதையும்
3.உடலை விட்டுப் பிரிந்து செல்லும் பொழுது “அதனுடைய இயக்கச் சக்தியை” எமக்கு உணர்த்திக் காட்டினார்
4.அவருடைய ஆன்மா எவ்வாறு விண்ணுலகம் செல்கின்றது…? அது எந்தெந்த நிலைகள் செயல்பட்டது…? என்பதையும் எனக்கு உணர்த்தினார்.
5.எனக்குள்ளும் (ஞானகுரு) அந்தச் சக்திகள் உணரப்பட்டது… உணர்ந்து கொண்டேன்.

ஆனால்… சாதாரண மனிதர்களின் உயிரான்மா… உடலை விட்டுச் செல்லும் பொழுது இந்தக் காற்று மண்டலத்தில் தான் சுழல முடிகின்றது..

அவர்கள் சம்பந்தப்பட்டவர்கள் (உடலுடன் உள்ளவர்கள்) ஆத்ம சக்தியின் வலுவைக் கூட்டச் செய்து… எண்ணத்தை ஓங்கச் செய்து… அவர்களைச் சப்தரிஷி மண்டலங்களுடன் இணைக்க முடியும். அந்த ஆன்மாக்கள் தவமோ தியானமோ செய்யவில்லை என்றாலும் அவர்களை உந்தித் தள்ளி அங்கே இணைக்க முடியும்.

ஏனென்றால் உடலுடன் உள்ளவர்களிடம்… அவரின் உணர்வுகள் உண்டு.
1.சப்தரிஷி மண்டல ஆற்றலை எடுத்து வளர்த்துக் கொண்ட பின்
2.எண்ணத்தால் உந்தி சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கப்படும் பொழுது
3.அந்த உணர்வுகளை எடுத்து வளர்கின்றார்கள்… ஒளியின் சரீரம் பெறுகிறார்கள்.

அதற்குப் பின் சப்தரிஷி மண்டலங்களை எண்ணும் பொழுதெல்லாம் அந்த உயர்ந்த சக்திகளை நாம் எளிதில் பெற முடியும். அதைப் பெறக்கூடிய தகுதியைத் தான் குருநாதர் வழியில் உங்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கின்றோம்.

மரம் செடி கொடிகளுக்கு உரம் கொடுப்பது போன்று…
1.துவண்ட நிலையில் இருக்கும் உங்கள் நல்ல குணங்களுக்குள்
2.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற ஏக்க உணர்ச்சிகளைத் தூண்டச் செய்து
3.அந்தத் தூண்டுதலின் உணர்வு உண்டு செவிப் புலனால் ஈர்க்கச் செய்து
4.மகரிஷிகளின் உணர்வு கொண்டு ஒவ்வொன்றையும் இயங்கச் செய்வதனால்
5.சப்தரிஷி மண்டலங்களை எண்ணும் பொழுது விண்ணை நோக்கி உங்களால் ஏக முடியும்
6.மேல் நோக்கி நீங்கள் எண்ணும் பொழுது உங்கள் சுவாசத்திற்குள் அது ஈர்க்கப்படும்.

ஆக… அரும் பெரும் சக்திகளைப் பெறும் சந்தர்ப்பத்தை இப்போது ஏற்படுத்துகின்றோம்… பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

காலை துருவ தியானத்தில் எடுக்கும் “துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளே…”
1.நமக்குப் பெரும் சொத்து… அழியாச் சொத்து…
2.என்றும் நிலையான சொத்து…
3.பேரின்பப் பெருவாழ்வு என்று பிறவி இல்லா நிலை அடையச் செய்யும் சக்தி (சொத்து) ஆகும்.

ஏனென்றால் மனிதனாகப் பிறந்த பின் நமது எல்லை பிறவி இல்லா நிலை அடைவது தான்.

பிறவி இல்லா நிலைகள் அடைந்து அகண்ட அண்டத்தில் வருவதையும் தனக்குள் ஒளியின் சுடராக மாற்றிக் கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் சென்று ஆறாவது அறிவை ஏழாவது நிலையாகdh தனக்குள் சிருஷ்டிக்கும் வளர்ச்சியின் பாதையில் சப்தரிஷி மண்டலங்களுடன் இணைந்து வாழ்வதே நம் கடைசி எல்லை.

காரணம்… இந்தச் சூரியக் குடும்பம் செயலிழக்கும் தருணம் வந்து விட்டது. அதனால் இதன் ஈர்ப்பு வட்டத்தில் உள்ள கோள்களும் மறைந்துவிடும்.

சூரியனுக்கு உணவாக எடுத்துக் கொடுக்கும் 27 நட்சத்திரங்கள் அது ஒவ்வொன்றும் சூரியனைப் போன்றே தனி ஒரு பிரபஞ்சமாக மாறி விலகிச் செல்லும் நிலை வந்துவிட்டது.

கார்த்திகை நட்சத்திரம் ரேவதி நட்சத்திரம் போன்றவைகள் சூரியக் குடும்பங்களாக மாறுவதனால் நம் சூரியக் குடும்பத்திற்கு வரும் சக்திகள் இழக்கப்படுகின்றது.

அதாவது நமக்குக் குழந்தைகள் பிறந்து வளர்ந்து அவர்களுக்குத் திருமணமான பின் தனிக் குடும்பங்களாகப் பிரிந்து செல்வது போன்று தான்.

அவர்கள் பிரிந்து சென்றால் இங்கே இந்தக் குடும்பம் பலவீனம் அடைகிறது. பலவீனம் அடையப்படும் பொழுது குழந்தைகளிடமிருந்து எதுவும் எதிர்பார்க்க முடிவதில்லை.

அதைப் போன்றுதான் இந்தச் சூரியனும் அழியலாம்…!
1.ஆனால் இந்தப் பிரபஞ்சத்தில் உருவான உயிர்
2.அந்த மகரிஷிகள் கண்டுணர்ந்த வழியில் நாம் செல்வோம் என்றால் என்றுமே வேகா நிலை அடையலாம்.

நெருப்பில் விழுந்தால் நம் உயிர் வேகுவதில்லை. உணர்வின் அணுக்கள் வெந்து விடுகின்றது. ஆகவே…
1.அந்த உயிரைப் போன்றே நம் உணர்வுகளை எல்லாம் வேகா நிலை என்று உருவாக்கி
2.அகண்ட அண்டத்திலும் அழியா நிலை என்ற நிலை பெறுதல் வேண்டும்.

அது தான் பிறவி இல்லா நிலை என்பது…!

சப்தரிஷிகளுடன் ஒன்றிணைந்து நீங்கள் வாழுங்கள்

 

விஞ்ஞானிகளால் பரீட்சித்துப் பார்க்கப்பட்ட அணுகுண்டுகளும் விஷக்கதிரியக்கங்களும் நம் பூமிக்குள் தான் சுழன்று கொண்டுள்ளது. அவர்கள் பூமிக்குள் வெடித்ததும் சரி… பிரபஞ்சத்திற்குள் வெடித்ததும் சரி… சூரியனுடைய ஈர்ப்பு வட்டத்திற்குள் தான் “நஞ்சின் தன்மையாகப் படர்கின்றது…”

வான மண்டலமும் மற்றதும் மாறுபடப்படும் பொழுது…
1.மனிதனுடைய சிந்தனைகள் பூண்டோடு அழிக்கப்பட்டு
2.ஆரம்ப காலங்களில் எப்படி மனிதர்கள் வாழ்ந்தார்களோ… அதாவது மிருகங்களைப் போன்று வாழும் நிலை உலகம் பூராம் மாறப் போகின்றது.

ஆனால் இந்த பூமி மீண்டும் பரிசுத்தமாக வேண்டும் என்றால் பல நூறு ஆண்டுகள் ஆகலாம். அப்படி ஆநாலும்… காட்டு மனிதர்கள் அவர்களுக்குள் சிறுகச் சிறுக சிந்தனைகள் உருவாகி… மீண்டும் மனிதனுடைய நிலைகள் இப்போது எப்படி வளர்ச்சி ஆகி வந்ததோ… அதைப் போல் பல சுற்றுகளில் நாம் வந்து… இந்தப் பூமி பல முறைகள் மாறி… மனிதனாக வரும் நிலை பின்னாடி தான் உருவாகும்.

ஆகையினால் நம் பூமி கூடிய சீக்கிரம் வியாழன் கோள் போன்று பரிமணம் பெறும் தகுதி பெறுகின்றது

விஞ்ஞான அறிவால் ஏற்படுத்தப்பட்ட நச்சுத்தன்மைகள் அனைத்தும் பிரபஞ்சத்தில் சேர்க்கப்பட்டு… சூரியனுடைய ஒளிக்கதிர்கள் கிடைக்காது தடைப்படுத்தும் நிலை வரப்போகின்றது. அப்படித் தடைப்படுத்தும் நிலை வரும் பொழுது…
1.நீர் நிலைகள் பூமியிலே அதிகமாகப் பெருகி எடை கூடி… அதனால் சுழற்சியின் வேகம் அதிமாகி
2.சூரியனுடைய ஈர்ப்பை விட்டு விலகிச் செல்லும் நிலை வருகின்றது.
3.அப்படி இறங்கும் நிலை வந்து விட்டால் ஐஸ் பாறைகளாகக் குளிர்ந்து விடும்
4.எந்த நேரத்தில் இது ஏற்படும்…! என்று சொல்ல முடியாது.
5.ஒரு நொடிக்குள் இந்த பூமியினுடைய சுழற்சி வட்டத்தில் இருக்கும் நீர்கள் அனைத்தும் உறைந்து பனிப் பாறைகளாகிவிடும்.

நன்றாகத்தான் இப்பொழுது பேசிக் கொண்டிருந்தார்… திடீரென்று மயக்கம் ஆனார். பரிசோதித்துப் பார்க்கும் பொழுது இரத்தமே இல்லை என்பார்கள். ஏனென்றால் சில் விஷத்தின் தன்மை பாய்ந்த உடனே இரத்தத்தில் இருக்கும் செவ்வணுக்கள் பூராம் மாறி… வெள்ளை அணுக்களின் இயக்கம் அதிகமாகி… அதனுடைய சத்துக்களை இது உறிஞ்சிவிடும்.

இதைப் போன்று தான் பூமியின் தன்மையும் ஒரு நொடியில் பெரும் கோளாக மாறி வியாழன் கோளைப் போன்று வெகு வேகமாகத் தானே பிரிந்து செல்லும் நிலை வரும்.

இதனுடன் வந்த சந்திரனும் இதன் அருகில் இருக்கக்கூடிய செவ்வாய் மற்ற கோள்களும் பிரிக்கப்படுகின்றது ஏனென்றால் சூரியனுடைய ஆற்றலைக் காட்டிலும் தடைப்படுத்தும் நிலை வரும் பொழுது இடைப்பட்ட நிலைகள் கொண்ட சில நிலைகள் சூரியனை விட்டு விலகிச் செல்லும்.

விஞ்ஞானிகள் இதைக் கண்டு கொள்ள வேண்டும் என்றால் வெகு காலமாகும். குருநாதர் காட்டிய உணர்வின் தன்மை கொண்டு இந்த உண்மையை இயக்கங்களை அது எவ்வாறு…? என்பதை அவர் காட்டினார். அவர் சொன்ன வழிப்படி தான் இதை வெளிப்படுத்துகின்றோம்… ஆகவே
1.இனி கூடுமானவரையிலும் நம் நினைவலைகளை
2.ஞானிகள் காட்டிய வழியில் மாற்றிக் கொள்வது மிகவும் நல்லது.

இல்லை என்றால் கூடிய விரைவில் மனிதனுடைய சிந்தனைகள் அது மாறப் போகின்றது. நாம் அதிலே சிக்கக் கூடாது.

மனிதனாகப் பிறப்பது மிகவும் அபூர்வம். இப்போது யாம் உபதேசிக்கும் இதைப் போன்ற ஞானத்தின் வழித் தொடர்பைப் பெறும் சந்தர்ப்பமும் அபூர்வம்…!

என் (ஞானகுரு) மனைவி உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருக்கும் பொழுது குருநாதரைச் சந்திக்க நேர்ந்த்து. மனைவியை அவர் குணப்படுத்திணார். அதன் மூலம் எனக்குக் கிடைத்த சந்தர்ப்பம் தான் இந்த ௷ய் ஞானத்தைப் பெறும் வாய்ப்பு கிடைத்தது.

எனக்குக் கல்வியறிவு இல்லா விட்டாலும்…
1.குருநாதர் காட்டிய வழியில் அவர் பதிவு செய்த ஞான வித்துக்களைக் கூட்டி வளர்த்துக் கொண்டேன்.
2.அப்படி வளரத்ததிலிருந்து பல வித்துக்களை உருவாக்கும் தன்மையை குருநாதர் உருப்பெறச் செய்தார்.

அதைக் கேட்டறியச் செய்து ஆற்றல் மிக்க நிலைகளை உங்கள் உடலில் உள்ள 1008 நல்ல குணங்களுக்குள் பதிவு செய்து… உரமாக… ஊட்டம் கொடுத்துக் கொண்டு வருகின்றேன்.

அதனின் துணை கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை வளர்த்து எதிர்காலத்தில் வரும் தீமைகளிலிருந்து உங்களை நீங்கள் மீட்டிக் கொள்ள இது உதவும்.

அதற்குத்தான் இதை உணர்த்துகின்றேன்.

யாம் உபதேசிப்பதை அடிக்கடி அடிக்கடி நீங்கள் கேட்கப்படும் பொழுது
1.சூரியனின் காந்தப்புலனால் அது கவரப்பட்டு இங்கே நாம் வாழும் இடங்களில் சுழன்று கொண்டே இருக்கும்.
2.யாரெல்லாம் உயர்ந்த சக்திகளைப் பெற வேண்டும் என்று ஏங்குகின்றார்களோ
3.அவர்கள் எல்லோருக்கும் இது கிடைக்கக்கூடிய வாய்ப்பாக அமையும்.

தன்னை அறியாமல் ஆட்டிப் படைக்கும் தீமையிலிருந்தும் நோய்களிலிருந்தும் நீங்கள் விடுபட முடியும். மனிதன் என்ற முழுமை அடைய முடியும்.
1.சப்தரிஷிகள் அவர்கள் குடி கொண்டிருக்கும் இடங்களுக்கு
2.அவர் உணர்வுடன் கலந்து… அவர்களுடன் ஒன்றிணைந்து வாழ முடியும்.

அந்தத் தகுதியை நீங்கள் எல்லோரும் பெற வேண்டும் என்பதற்குத்தான் இந்த உபதேசத்தை உங்களுக்குக் கொடுப்பது.

தியானத்தின் மூலம் தான் எதையுமே அறியவும் உணரவும் முடியும்

 

பஞ்ச பூதங்களை ஆகாயம் காற்று நீர் நெருப்பு நிலம் என்று கூறுகின்றோம். ஆகாயம் என்ற பால்வெளிச் சூட்சமத்தில் பரவிப் படர்ந்துள்ள மற்ற நான்கும் ஒன்றுடன் ஒன்று கூடி
1.காந்தத்துடன் நீரமிலம்
2.காந்தத்துடன் காற்றமிலம்
3.காந்தத்துடன் வெப்பமிலம் என்று
4.இப்படிக் காந்தத்துடன் பிரிதிவியாகும் அமிலங்களின் கலப்பால் பல பல உருவாகின்றன.

கோடானு கோடி நிறங்களாகவும் மணங்களாகவும் அதிலிருந்து உயிரணுக்கள் ஒன்றுடன் ஒன்று ஈர்ப்பின் குணத் தொடரில் இணைந்து உயிராத்மாவாக பஞ்சபூதத் தத்துவமாக உருவாகின்றது.

மனம்… அறிவு… நினைவின் ஆற்றல்… செயலாக்கத்தின் உந்துதல்… என்று இவை அனைத்துமே எண்ணமாகக் காந்தத்தின் நிறைவாக ஆத்மா என்றிட்ட ஜீவனாகத் தான் ஈர்த்துக் கொண்ட அமில வீரியமாகப் பூமியில் பிறப்பிற்கு வருகின்றது.

ஒவ்வொரு நிமிடமும் புதிய புதிய உயிரணுக்கள் வானத்தில் உதித்துக் கொண்டே தான் உள்ளன.

இருந்தாலும் இந்தப் பூமியுடன் தொடர்பு கொண்டுள்ள “இருபத்தியேழு நட்சத்திர அமிலங்களின்…” நிலைத் தொடர்பு கொண்டு தான் உடல் பெற்றுப் பிறப்பிற்கு வந்திட முடியும்.

1.அண்ட வித்து முட்டையாகப் பிறப்பிற்கு வருகின்ற கரு நிலை உயிரணுக்களும்
2.நீருக்குள் தோன்றிடும் கரு நிலை உயிரணுக்களும்
3.வேர் பகுதியில் தோன்றி கிளைத்தெழும் உயிர் கருக்களும்
4.இந்தப் புவியில் சரீர வியர்வை கொண்டு வாசனைத் தொடர்புடன்
5.இதே தன்மையாக சூரிய வெப்பம் பட்டு உதிக்கும் உயிரணுக்கள் என்றும்
6.பல செயல் நிலைகள் இயற்கையின் கதியில் நடைமுறையில் உள்ளன.
7.உயிரணுக்கள் செயல்படும் தன்மைகளில் உள்ள அனைத்து இரகசிய நிலைகளையும் வகைப்படுத்தியே அளிக்கின்றோம்.

ஜீவ பிம்ப சரீரத்தைக் கொண்டு உயர் ஞான வளர்ச்சிக்குண்டான வழி முறைகளைச் செயல்படுத்திட உடலுக்குள் செயல்படும் உண்மையின் சாரங்களை
1.அந்த மறைக்கப்பட்ட மறை பொருளை
2.அறியச் செய்யும் நிலைக்குத்தான் இதை உணர்த்துகின்றேன்.
3.ஆனால் பாடத்தின் கடினத் தன்மையை விண்டு தருவதில் தான் தாமதம்.

அனைத்தையும் தியானத்தின் வலுவைக் கூட்டியே அறிந்து கொள்ளலாம். ஞானத்தை அறிதலும் அதன் தன்மைகளை உணர்தலும் சிந்தனையில் தெளிதலும் என்ற நிலைக்கு வளர்தல் வேண்டும்.

நாம் எடுக்கும் எண்ணம் நல் எண்ணமாக நல் சுவாசம் கொண்டு தியான வழிதனில் உணர்வுகள் பக்குவப்படுத்தப்பட
1.அதுவே மனத்தின் பக்குவமாக
2.சிந்திக்கும் ஆற்றலை நாம் ஒருமுகப்படுத்திப் பெற வேண்டிய
3.நல் நிலை என்று உணர்தல் வேண்டும்…!

நரசிம்ம அவதாரத்தில் நாம் இப்போது இருக்க வேண்டும்

 

பல கோடிச் சரீரங்களில் பரிணாம வளர்ச்சியாகிக் கண்கள் தோன்றிய பின்… ஒவ்வொன்றிலும் “தான் நல்லது என்று நினைத்து…”
1.தன்னைப் பாதுகாக்கும் உணர்வைப் பார்த்துப் பார்த்துத் தான் சுவாசித்த உணர்வின் தன்மை
2.”பாதுகாக்கும் உணர்வை விளைய வைத்து… அந்த வித்தின் சத்தைத் தொடர்ந்து தனக்குள் கூட்டிக் கொள்கிறது…”

அவ்வாறு ஒவ்வொரு உடலிலும் எடுத்துக் கொண்ட விளைவின் தன்மை அனைத்தும்… உயிருடன் ஒன்றித் தனதாகின்றது. இதனால் தான் மனித உடல் பெறுவதற்கு முன்
1.முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தியது இந்த உயிர் என்று
2.அதைப் பத்து அவதாரம் என்று காட்டுகின்றார்கள் ஞானிகள்.
3.மனித உடலுக்குள் உயிரின் தன்மை கொண்டு வந்தபின் நரசிம்ம அவதாரம் ஆகின்றது.

அன்று ஒரு அசுரன் (விஷம்) எனக்கு எதிலுமே அழிவில்லை என்று விஷ்ணுவிடம் கேட்கின்றான். வானத்திலும் அழிவில்லை… மூன்று உலகிலும் எந்த விதமான அழிவும் இருக்கக்கூடாது… மிருகத்தாலும் நான் சாகக்கூடாது… மனிதனாலும் நான் சாகக்கூடாது என்ற வரத்தை வாங்கிக் கொண்டு வருகின்றான்.

எதிலுமே ஊடுருவக்கூடிய சக்தி தான் விஷம் (தீய சக்தி எதிலுமே ஊடுருவும்). பால் தூய்மையாக இருக்கிறது என்றாலும் அது சத்து உள்ளது தான் ஆனால் அதிலே ஒரு துளி விஷம் பட்டு விட்டால்… பாலின் சத்து அனைத்துமே இழக்கச் செய்து… விஷம் தனது கவர்ச்சிக்குள் வைத்துவிடும்.

இதே போன்றுதான் விண்ணிலே தோன்றிய விஷத்தின் ஆற்றல் மிக்க சக்திகள்… சூரியன் ஆனாலும் “இயக்கச் சக்தியாக” தனக்குள் அடக்கி வரும் பொழுது அது செயல்படுத்துகிறது.

ஒருவர் தவறு செய்கின்றார் அல்லது ஒரு குழந்தை தவறி கீழே விழுகிறது என்றால் அதை நாம் நேர்முகமாகப் பார்க்கப்படும் பொழுது ஊடனே வேதனைப்படுகின்றோம்.

அந்த வேதனை என்ற விஷம் உடலுக்குள் சென்றபின் நம் நல்ல குணங்களை அழித்து விடுகின்றது. அசுரன் நமக்குள் புகுந்து நல்லதை அவனுக்குள் அடிமையாக்கச் செய்கின்றான். இந்த உட்பொருளைத் தான் அங்கே காட்டுகின்றார்கள்.

நாராயணன் நரசிம்ம அவதாரம் எடுப்பதாக காண்பிக்கப்பட்டு மிருகத்திலும் சேர்ப்பில்லாதபடி மனித உடலிலும் சேர்ப்பில்லாதபடி ஆகாயத்திலும் இல்லாத படி பரந்த வெளிகளிலும் இல்லாத படி வாசல்படியில் வைத்துக் கொல்கின்றான்.
1.நாம் சுவாசிக்கும் நிலைகள் கொண்டு
2.இந்த உயிரிலே மோதும் நிலைகள் நமக்கு வாசல்படி மூக்கு

நாராயணன் சர்வத்தையும் உருவாக்கக்கூடிய சக்தி பெற்றவனாக இருக்கின்றான். இந்த உடலுக்குள் சர்வத்தையும் உருவாக்கக்கூடிய சக்தியாக நமது உயிர் இருக்கின்றது.

ஆகையினால் நர நாராயணன்…! இந்த வாசல்படியில் அமர்ந்து அசுர உணர்வின் வேட்கைகளை உள்ளே நுழையாத வண்ணம் தீய உணர்வின் தன்மையை மாய்த்து விடுகின்றான்.

அதாவது
1.உயிரின் பால் (புருவ மத்தியில்) கண்ணின் நினைவினைச் செலுத்தி
2.ஆற்றல் மிக்க மகரிஷிகளின் துணை கொண்டு வாசல்படியில் வைத்து அசுர உணர்வுகளை மாய்த்து விட்டால்
3.நல்லதைக் காத்துக் கொள்ள நம்மால் முடிகிறது.

மனிதனாகப் பிறந்த நாம் மெய் ஒளியின் சக்தியைத் தனக்குள் கூட்டி ஆற்றல் மிக்க நெருப்பாகக் கூட்டி… அந்த நெருப்புக்குள் தீய விஷத்தின் தன்மை மாய்த்தால் அது தான் நரசிம்ம அவதாரம் என்பது. பத்து அவதாரத்தில் இது முக்கியமானது. மனிதன் ஒருவன் தான் இதைச் செய்ய முடியும்.

1.இந்த ஆற்றல்மிக்க சக்திகளை எவர் ஒருவர் பெறுகின்றனரோ
2.அவரே நாராயணன் தொடர் கொண்ட ஒளியின் சிகரமாகப் பெற முடியும்.

மகாபாரதத்திற்குள் அன்று வியாசக பகவான் இவ்வளவு தெளிவாக நமக்குக் கொடுத்துள்ளார் நரசிம்ம அவதாரம் என்றால்… கடவுள் எங்கோ இருக்கின்றான்… தூணிலும் இருக்கின்றான் துரும்பிலும் இருக்கின்றான்… என்று நாம் எங்கேயோ கொண்டு போகின்றோம்.

சுவாச நாடிகளைக் காட்டுவதே நாகர் உருவம்

 

சரீரத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நாடிகள் எழுபத்தி இரண்டாயிரத்திலும் சகலத்தையும் ஆட்டுவிக்கும் நாடிகளான
1.பொன் போல் நிறம் காட்டிய சூரியன் என்ற வலது நாசித் துவாரமும்
2.சந்திரகலை என்ற இடது நாசித் துவாரமும்
3.அக்கினி என்ற மறைமுக நாடியையும் அறிந்து கொண்ட ஞானிகள்
4.அண்ட சராசரங்களின் செயலை அதாவது அந்த ஆதிசக்தியின் சூட்சமத்தையே
5.மனித உடலான ஜீவ பிரம்ம சரீரத்திலேயே கண்டனர் ஞானிகள்.

உயிராத்மா பிறவி எடுத்து எடுத்துத் தான் எடுத்துக் கொண்ட சரீரம் கடைசியில் மரணத்தின் பிடியில் ஆட்படுவதையே அன்றைய சித்தன் “காளியின் உருவமாக…!” அமைத்துக் காட்டினான்.

1.ஆத்ம சக்தியை வலுக்கூட்டிக் கொள்ளாத ஜீவன்கள்
2.சரீரத்தில் மறைந்துள்ள சக்தியைத் தன் உயிராத்ம வலுவிற்கு ஈர்த்துச் செயல் கொள்ளாத ஜீவன்கள்
3.உலகோதயப் பிடிப்பில் நாத விந்துச் சக்தியின் வலுவை இழந்து
4.எண்ணிறந்த பிறவிகள் எடுத்து மீண்டும் மீண்டும் அவஸ்தைப்படுவதையே
5.காளி என்ற உருவில் பயமுறுத்தும் தன்மைக்குச் சித்தர்களால் காட்டப்பட்டது.

அதே சமயத்தில் வினைக்கு நாயகன் விநாயகா என்று உயிரை முதன்மைப்படுத்தி உருவகமாகவும் காட்டியுள்ளார்கள். பின்னிப் பிணைந்த நிலையில்
1.இரு நாகர்கள் எழுந்து நின்று ஒன்றை ஒன்று பார்ப்பது போல் உருவமும்
2.இரண்டிற்கும் நடு மையத்தில் சிவலிங்கமும்
3.விநாயக உருவத்திற்கு எதிர்புறம் மூஷிகமும் காட்டினார்கள்.

மனித உடல் பெற்ற பின் தன்னைத் தான் உணர்ந்து மேலான நிலை பெற வேண்டி கீழான நிலையை விலக்கித் தன் உயிராத்மாவை ஜோதி நிலை பெறச் செய்ய ஜோதித் தத்துவமாக உயிரும் ஆத்மாவும் ஒன்றாகக் கலந்து உயர் நிலை பெறவே அனைத்துமே போதனை ஆக்கப்பட்டன.

இந்த மனித சமுதாயம் நல் நிலை பெற வேண்டும் என்று புகட்டப்பட்ட பாட நிலைகளில் எத்தனை உயிராத்மாக்கள் உண்மையின் பொருளை உணர்ந்து கொண்டனர்…?
1.எண்ணத்தைத் தெளிந்து ஒவ்வொரு உயிராத்மாவும்
2.சுயப்பிரகாசமாகச் (ஒளிச் சரீரம்) சக்தி பெற்றிடவே இந்தப் பாடங்கள்…!

மூவுலகம் என்ற சுவாசத்தின் தன்மைகளை அறிந்து வான இயலாகக் காலத்தைக் கணித்த ஞானி சரீர பிம்பத்தைக் கொண்டே உயர் ஞானம் சித்திக்கும் வழியையும் காட்டினான்.

1.வலது சுவாச நாடி வலது கால் பெருவிரல் தொடங்கி மேல் எழுவதைப் போல்
2.இடது சுவாச நாடி இடது கால் பெருவிரலிலிருந்து மேல் கிளம்பி
3.கபாலத்தை நோக்கிச் சிரசின் உச்சிக்குச் செல்லும் பொழுது
4.அந்த இரண்டு நாடிகளும் உடலின் குதம் என்ற மூலத்தில் எழும் அக்கினி மண்டலத்தில் பின்னிப் பிணைந்து பிரிந்து
5.மேலெழுந்து அதற்கும் மேல் உள்ள மர்ம ஸ்தானத்தில் சந்தித்து இரண்டு நாடிகளும் பின்னிப் பிணைந்து
6.மேலெழுந்து இரண்டாகப் பிரிந்து இடுப்பின் பகுதியை வட்டமிட்டு சரீரத்தின் வயிற்றுப் பகுதியில் நாபி என்ற இடத்தில் மீண்டும் பின்னிப் பிணைந்து
7.மேல் எழுந்து பிரிந்து மார்புப் பகுதியை வட்டமிட்டு
8.மீண்டும் சிரசின் உச்சிப் பகுதிக்கும் உள் நாக்கின் மேல் பகுதிக்கும் நடு மையத்தில் நெற்றிப் பொட்டின் உள்ளிடத்தில் பின்னிப் பிணைந்து
9.சிரசின் உச்சியில் அந்த இரண்டு நாடிகளும் எதிர் எதிராகச் சந்தித்துக் கொள்வதைக் காட்டுவதற்கே
10.விநாயகர் அருகே நாகர்களைக் காட்டியது…!

ஒவ்வொருவரும் ஆத்ம லிங்க ஜோதித் தத்துவத்தை உணர்ந்து வலுப் பெற்றிடுங்கள்…!

குரு துணை அவசியம் வேண்டும்

மெய் வழியைப் பெற வேண்டும் என்று ஏக்கத்துடன் வருவோருக்கு அந்த உணர்ச்சிகளை உந்தச் செய்து ஞானிகள் உணர்வான சத்தை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம் (ஞானகுரு).
1.இதைப் பெறும் தகுதியை குருநாதர் எனக்கு எவ்வாறு ஏற்படுத்தினாரோ அதே போல் உங்களுக்கும் ஏற்படுத்துகின்றோம்.
2.மெய் உணர்வுகளை அவர் எப்படித் தனக்குள் படைத்தாரோ… அதைப் போன்று ஒவ்வொரு நொடியிலும் நான் அதை எடுத்துக் கொள்கின்றேன்.

உங்களுக்கு யாம் உபதேசிக்கும் பொழுது நட்சத்திரங்களின் சக்தியையும்… சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வரும் சக்திகளையும் நீங்கள் பெற வேண்டும் என்று எண்ணி… அந்த உணர்வின் தன்மைகளை ஈர்த்து எடுத்துக் கொண்டுதான் உங்களுக்கு உபதேசிப்பது.
1.உங்கள் உடலுக்குள் இருக்கும் பல கோடி உணர்வுக்குள்ளும் அதை இணைத்து மாற்றி
2.நல்ல உணர்வாகப் பெறக்கூடிய தகுதியை எற்படுத்துகின்றோம்.

காரணம்… மகரிஷிகள் வெளிப்படுத்திய சக்திகளை சாதாரண மக்கள் கவர முடியாது. அதற்குண்டான வலுவான காந்த சக்தி தேவை.

சக்தி வாய்ந்த மகரிஷிகளின் உணர்வுகளை நீங்கள் கவர வேண்டும் என்பதற்கே யாம் இப்போது உபதேசிப்பது. உபதேசத்தின் வாயிலாகத் தான் அதை நீங்கள் பெற முடியும்.

புத்தகங்களில் படிப்பதைப் போன்று அந்த ஞானிகள் உணர்வைப் படித்தாலும்… படித்த நிலைகள் கொண்டு அந்த ஞானிகள் அருளைப் பெறும் தகுதி இல்லை.
1.காரணம் அதற்குண்டான ஆற்றல் இருந்தால் தான் அதனை நீங்கள் பெற முடியும்.
2.அதற்குண்டான ஈர்க்கும் சக்தி தேவை.
3.அந்த சக்திக்குண்டான வித்து தேவை…
4.அதற்குத்தான் “குரு வேண்டும்…” என்று சொல்வது… அவரின் துணை இருந்தால் தான் அதை எடுக்க முடியும்.

என்னுடைய (ஞானகுரு) முயற்சி எது…? என்றால் மகரிஷியின் அருள் சக்திகளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்து கொண்டு வருவதும்… துன்பம் வரும் போது அதை உங்களுக்குக் கிடைக்கச் செய்வதும் தான்…!

யாம் பதிவு செய்த வித்திற்கு ஒரு அரை மணி நேரா௳அவது நீங்கள் மகரிஷிகளின் அருள் சக்தியை எண்ணி எடுத்து… உங்களுக்குள் அதை விளைய வைக்க வேண்டும்.

பின்… உங்களுக்கு எப்பொழுதெல்லாம் துன்பம் வருகின்றதோ அப்போதெல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ண வேண்டும்.

அவ்வாறு எண்ணினால் யாம் பாய்ச்சிய உணர்வின் சக்தி உரமாகக் கிடைத்து
1.உங்களுக்குள் மன கலக்கமோ குழப்பமோ அவைகளை அகற்றி
2.உடல்களில் வலியோ வேதனையோ இருந்தால் அதை நிவர்த்தி செய்வதற்கு உதவும்.

அப்படி உதவுவதற்குத் தான் தியானமும் ஆத்ம சுத்தியும் பயிற்சியாகக் கொடுப்பது.

ஞானிகள் இங்கே அவர்கள் வாழ்ந்த காலத்தில் உயிருடன் ஒன்றிய உணர்வை ஒளியாக மாற்றி இன்றும் சப்தரிஷி மண்டலங்களில் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அதை எல்லாம் கவரப் பழகிக் கொள்ள வேண்டும்.
1.ஒரு செயின் தொடர்பு போன்று அந்த ஞானிகள் உணர்வை எடுக்கப் பழகிக் கொண்டால்
2.ஆத்ம சுத்தி செய்யும் போது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணினால்
3.உடனே அந்த உயர்ந்த சக்திகளை நீங்கள் பெற முடியும்… துன்பங்களைத் துடைக்க முடியும்.

நீல வண்ண ஆத்மா

பரப்பிரம்ம சூத்திரத்தையே அறிந்து கொள்ளும் முயற்சிக்கு அறிவின் உயர் ஞானம் கொண்டு செயல்படுத்தப்படும் முயற்சியாகத் தன்னைத்தான் உணர்ந்து கொண்டு
1.”ஆதி அந்த மூலமாம் ஆதிசக்தியுடன் கலந்திடவே…!”
2.காற்று நூல் கொண்டு தானே சக்தி ஈர்த்து ஆத்ம வலுவைக் கூட்டிக் கொண்டு
3.உயிராத்ம சக்தியை ஜோதியாக்கி ஆதிசக்தியின் மூலத்தில் ஒவ்வொருவரும் கலக்க வேண்டும்.

சுவாசம் செயல்படுவதைச் சூரியன்… சந்திரன்… அக்கினி… என்று பெயர் நாமப்படுத்தி அவற்றின் குணங்களை எண்ணம் கொண்டு எடுத்த உயர் ஞானத்தால்
1.தியானத்தால் அறிந்து கொள்ளும் முயற்சியில்
2.முதலில் காட்சியாக மூலத்தில் எழுந்த நிறங்களைக் காண முடியும்.
3.(சீராகத் தியானிப்பவர்கள் பல வண்ண ஒளி அலைகளைக் காண முடியும்)

செயல்பாட்டைத்தான் மனித ஞானத்தால் அறிந்து கொண்டிட இயலுமே அல்லாது அந்த ஆதிசக்தியின் மூலத்தை அறிந்தவர் யார்…?

எந்த நிலையிலும் பேரானந்தத்தையே அனுபவிக்க முடிகின்றதே தவிர அந்தப் பேரானந்ததத்தை எப்படிச் சொல்லால் விளக்குவது என்றே தெரியவில்லை.

பிரம்மம் என்றும் “பிரம்ம அட்சரன்…!” (எங்கும் நிறைந்தது) என்றும் சூட்சமமாகக் காட்டப்பட்டதின் பொருளைத் தெளிந்து கொண்டால் உயிரணுக்களின் செயல்பாட்டில் வான இயல் தத்துவம் விளங்கும்.

சுவாசத்தைக் கொண்டு மூலத்தில் எழுந்த முத்தொடரை அறிவதில் வலது நாசி துவார காற்றோட்டத்தில் வெண்மை நிறமும் அதன் குணம் மாயை என்றும்
1.சூரிய சக்தியில் செயல்படும் ஈஸ்வர சக்தியை உயிர்ச் சக்தி என்றும் அறிந்து கொண்டால்
2.பரவெளியில் அட்சரன் என்று மறைபொருளாகக் காட்டப்பட்டதன் உண்மையை உணரலாம்.

பிரம்மம் என்றால் சகல அணுக்களும் அவற்றிலிருந்து உண்டான சகல பொருள்களும் தான். மனிதனும் ஒரு பொருள் தான், ஆனாலும்
1.பிரம்ம அட்சரன் என்று சொல்லால் வேறுபடுத்திக் காட்டியது
2.உயிராத்மாவின் கலப்பாக எண்ணமும்
3.அதனுள் இட்ட மாயை அஞ்ஞானம் ஆணவம் என்ற ஆதிசக்தியின் முத்தொடர் விளையாட்டை அறிந்து கொள்ள இயலுமோ…?

ஒவ்வொரு உயிராத்மாவும் மனிதன் என்ற பிறப்பில் இந்த முத்தொடரைத் தெளிதல் வேண்டும்.
1.மாயையிலிருந்து அஞ்ஞானமும்
2.அஞ்ஞானத்திலிருந்து ஆணவமும் உணர்ந்து தெளிந்து
3.தன் உயிரான்மாவிற்கு வலுக் கூட்டும் செயலாக
4.நீல வண்ண உயிராத்மாவாக ஆவதே ஆக்கம்.

வலது நாசித் துவாரத்தில் ஓடுகின்ற கால் ஞானத்தால் வெண்ணிறத்தைக் காட்டியது.

இடது நாசித் துவாரம் சந்திரகலை என்றும் அதனுள் செல்லும் கால் கரிய நிறத்தைக் காட்டியது ஆணவம்.

இரண்டிற்கும் சமமான சுவாச ஓட்டம் சுழுமுனை என்ற அக்கினியாகச் சிவப்பு நிறத்தைக் காட்டியது அஞ்ஞானம்.

மனித சரீரத்தில் செயல்படும் சுவாசத்தையே சூரிய சந்திர அக்கினி என்றும் மும்மலங்கள் என்றும்… முக்குணங்கள் என்றும்… உயிராத்மா பிறப்பபிற்கு வரும் தொடர்பில் “மும்மல நீக்கம் பெற வேண்டியதன்…” முக்கியத்துவத்தையும் காட்டினார்கள் ஞானிகள்.

உலகோதய வாழ்க்கை நடைமுறையில் மும்மலங்களின் செயல்பாடே கீழாம் அறிவு என்றும் இந்த முக்குணங்களை அறிந்து தெளிந்து
1.தியான வழித் தொடர்பில் நற்சுவாசம் கொண்டு
2.நல் எண்ணத்தால் தன் உயிராத்ம சக்தியின் வலுவைக் கூட்டிக் கொள்ள
3.நீல வண்ண ஆத்மாவாக ஆதி சக்தியுடன் கலக்கும் செயலே மெய் ஞானம்.

ஆகவே… நீல வண்ண ஆத்மாவாகச் சக்தி பெற்றுப் பேரானந்தப் பெரு வாழ்வு பெற வேண்டும் என்று உணர்த்தினார்கள் ஞானிகள்.

உயிர் வழி சுவாசம்

 

எண்ணம் கொண்டே பிறப்பிற்கு வரும் உயிரணுக்கள் சரீர வளர்ச்சி பெற்று உயிராத்மாவாக மனிதன் என்ற அமில காந்தத் தொடரைப் பெற்றுத் தன்னைத்தான் வளர்ச்சிப்படுத்திடும் நிலைக்கு வருகின்றது.

அதனின் தொடரில் பஞ்ச பூதங்களின் கூட்டமைப்பாகச் செயல்படும் கால கட்டங்களில் அணுக்களாக மேன்மேலும் ஈர்த்தே தோல் தசை நரம்புகள் இரத்தம் எலும்புகள் மயிர் முதலிய அவயங்கள் வளர்கின்றது.

இவைகளுக்கு ஜீவன் கொடுக்க “ஐந்து கேந்திர நாடிகள்…” உடலிலே செயல் கொண்டாலும் இவைகளுக்கும் வழி நடத்திடும் கட்டளைக் கேந்திரம் என்று அழைக்கப்படும் “சிரசின் சூத்திர நாடியாக…!” (உயிர்) அனைத்தும் செயல் கொள்கிறது.

இத்தகைய பிறப்பின் செயலில் தன்னை உணர்ந்திடும் பக்குவத்திற்கு எதை முக்கியமாக்கிடல் வேண்டும்…?

காலம் குறுகியது…! நேரத்தைக் கடமையின் தொடரில் பெற்றே பயன் கொண்டிடும் ஒவ்வொரு செயலின் நிகழ்வுக்கும் யாம் உரைத்த உரையின் உட்பொருளை சித்தத்தில் ஊன்றிப்பார்.

பஞ்சலிங்கம் என்பதே மனித சரீரம் தான்…!

தன்னை உணர்ந்திடும் பக்குவத்தில் உயிர் ஆத்ம முலாம் வலுக் கொள்ளும் செயலுக்கு உடலினுள் அமைந்துள்ள மூலம் மூலாதாரம் நாபி இருதயம் கண்டம் என்றிட்ட ஐந்து கேந்திர நாடிகள் உண்டு.

அதிலே நாபி நாடியை ஞானிகள் நீரமிலச் சக்தியுடன் தொடர்பு படுத்திக் காட்டிய தொடரில் எண்ணம் கொண்டு உயிர் ஆக்கத்தினை வளர்ச்சி கொள்ளும் பக்குவத்திற்கு தியானத்தை வழிமுறையாகப் பெற வேண்டும்.

காலச்சக்கரம் சுழல்கின்ற இயற்கைத் தன்மையில் எண்ணம் கொண்டு ஜீவ பிம்ப சரீரம் பெற்ற மனிதன் அறிவின் ஞானத்தால் முதன்மையாகத் தன்னை உணர்ந்து கொண்டு
1.பின் மெய்யின் மூலத்தை உண்மை ஞானமாக்கும் உயர் ஞான வளர்ச்சிக்குச் செயல் கொள்ள
2.”சுய முயற்சி…” என்ற ஊக்கத்தால் தான் நல்லாக்கம் பெறுகின்றான்.

வானை நோக்கி ஏகி உயர் ஞானத்தினால் வான இயலின் கருத்தை அறிய வேண்டிய செயலில் நம் பிரபஞ்சத்தில் உள்ள நவக் கோள்களும் சூரியனை மையப்படுத்திச் சுழன்றே ஓடிடும் ஓட்ட கதியில் நவஜோதித் தத்துவமாக ஈர்த்தெடுத்து உயிராத்ம சக்தியையே நீல வண்ண இராமனாகக் காட்டியதுவும் அதற்குத்தான்.

சுவாசத்தையே சூரியன் என்றும் சந்திரன் என்றும் அக்கினி என்றும் வகைப்படுத்தி அதன் செயல்பாட்டைக் “கலைகள்…” என்றும் காட்டினான்.

1.நாசியின் இடது துவாரத்தைச் சந்திரனாகிய இடகலை என்றும்
2.நாசியின் வலது துவாரத்தைச் சூரியன் பிங்கலை என்றும்
3.இந்த வகைகளில் ஓடிடும் சுவாசத்தின் வேகத்தை உஷ்ண அலை கொண்டு மறைமுகமான அந்தச் சுவாசத்தையே
4.மறைமுகமான அக்கினி – சுழுமுனை என்றும் பெயர் வைத்தான்.

சுவாசங்களின் ஓட்டத்தைக் கொண்டே அனுபவ ஞான அறிவினால் தெளிந்து உலகோதய நடைமுறைச் செயல்களுக்கும் மெய் ஞானத்தைப் பெறும் வழிகளுக்கும் அதனின் சூட்சமங்களை உணர்த்திக் காட்டினான்.
1.சமமாக ஓடும் சுழுமுனைச் சுவாசமே (உயிர் வழிச் சுவாசம்)
2.”யோக சுவாசம்…” என்று சொன்ன சொல்லிலும் உண்மை உண்டு.

சூரிய கலையில் ஓடும் சுவாசத்தையும் சந்திர கலையில் ஓடும் சுவாசத்தையும் கொண்டு உட் சென்று வெளி வரும் சுவாசங்களில் முழுமையை மாத்திரம் கணக்கிட்டு அக்கினி என்ற சுழுமுனை சுவாசத்தை விலக்கி உலக வாழ்க்கையில் நன்மை தீமை என்ற காரியார்த்த நடைமுறைகளுக்குப் பயனுறும் விதமாக மூச்சலைகளின் எண்ணிக்கை கொண்டு காலத்தைக் கணித்து அறுபது நாழிகை ஒரு நாள் என்று காட்டினான்.

“சத்ரு மித்ரு… பாசிடிவ் நெகடிவ்” – உயிருக்குள் நடக்கும் (உணர்வின்) இயக்கங்கள்

 

ஒருவர் மீது நாம் பாசமாக இருக்கின்றோம். ஆனால் அவருடன் வேறு ஒருவர் சண்டையிடுகின்றார்… அதனால் இவர் சோர்வடைகின்றார். நாம் உற்றுப் பார்க்கின்றோம்.

பாசத்தால் சோர்வான எண்ணமும்… சண்டையிட்டவர் மீது வெறுப்பும் நாம் அடைகின்றோம். நல்ல குணங்களுடன் நாம் இருந்தாலும்
1.அந்த நேரத்தில் இந்த இரண்டையும் கலந்து சேர்த்துச் சுவாசிக்க நேர்கின்றது.
2.அவ்வாறு சுவாசித்தவுடனே போர்…! சுவாசித்தது உயிரிலே பட்டவுடனே இங்கே எரிச்சல்
3.இந்தத் துடிப்பின் உணர்வலைகள்… உந்தி நம்மை இயக்குகிறது.

உதாரணமாக ஒரு கம்ப்யூட்டரில் நாம் ஆணைகள் இட்டவுடனே அது எலெக்ட்ரானிக்காக மாறி… நம கொடுத்த அழுத்தத்தின் (COMMAND) தன்மை கொண்டு அது எந்த உணர்வின் செயலோ அதற்குத் தக்கவாறு அந்தக் கம்ப்யூட்டர் இயங்குகிறது.

அதே போல் நாம் சுவாசித்த உணர்வுகள் (வெறுப்பும் சோர்வும்) உயிரிலே பட்டவுடனே அந்த உணர்வுக்கொப்ப உயிருக்குள் கடினமான எண்ணங்கள் தோன்றுகிறது.
1.அந்த உணர்வு நம் உடல் முழுவதற்கும் பரவிக் கிடக்கும் செல்களில் இயக்கியவுடனே
2.அதற்குத் தக்கவாறு நம் உடலின் இயக்கங்கள் ஆகின்றது.

உதாரணமாக தறியிலே துணியை நெய்யப்படும் பொழுது ஒரு நெறிக்கட்டையை வைத்து எம்பிராய்டரி பூ வேலைகளைச் செய்வார்கள். அந்த இயந்திரத்தில் ஒன்றை (PEDAL) மிதித்தால் போதும்.

அதனின் காலகட்டப் பிரகாரம்… ஒவ்வொரு நிமிடத்திற்குத் தக்கவாறு அந்தப் பின்களை (PIN) மாற்றி மாற்றி அழுத்திப் போடும் பொழுது அந்தத் துணியில் அழகான பூ வேலையாகச் செயல்படுத்தும்.

அதைப் போன்று
1.நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை எதுவோ அந்த உணர்வுகள் இயக்கப்பட்டு உணர்வின் செயலாக
2.ஒவ்வொரு குணத்திற்குத் தக்கவாறு நம்முடைய அங்கங்களை இயக்குவதும்
3.பேசிய உணர்வலைகள் கொண்டு திருப்பிப் பேசுவதும்
4.கண்ணிலே எதிர்நிலையான அலைகள் பாய்வதும் அதைக் கொண்டு ஒரு பொருளைப் பார்ப்பதும் போன்ற இயக்கத்தின் நிலைகள் அமைகின்றது.

நாம் தவறு செய்யவில்லை. இருந்தாலும்… கண் கொண்டு தவறு செய்வோரை நாம் பார்க்காமல் இருக்க முடியாது. பார்த்தாலோ… அவர் செய்யும் தவறின் உணர்வுகள் நம் உயிரிலே பட்டு… உணர்ச்சிகள் பொங்கி எழுகின்றது.

இந்த உணர்வலைகள் சீறிப்பாய்ந்து உடல் முழுவதும் படரப் படும்பொழுது போர்… நெகடிவ் பாசிடிவ்…! அதாவது நம்முடைய உயிருக்குள் வெப்பமாகும் பொழுது… அதே சமயத்தில் கதிரியக்கச் சக்தி அந்த இரண்டின் நிலைகள் மோதும் போது போர்.

அந்தப் போரின் நிலைகள் கொண்டு… எதிர் சக்தியான வியாழன் கோளின் சத்தும் அதனுடைய கதிரியக்கங்கள் இரண்டும் சேர்க்கப்படும் பொழுது
1.சுழற்சியாகிக் (திருகிக்) கொண்டிருக்கும் இந்த உணர்வின் தன்மையை
2.எதிர்நிலையான நிலையில் தாக்குதலாகும் பொழுது அது சீர்பட்டு நேர் துடிப்பாகின்றது,
3.இப்படி… போர் முறைகளில் தான் இந்த உலகமே இயங்கிக் கொண்டுள்ளது.
4.சத்ரு மித்ரு என்ற இயக்கச் சக்தி இல்லை என்றால் ஒன்றும் செய்ய முடியாது.

உதாரணமாக… ரோட்டிலே நாம் செல்கிறோம் என்றால் அந்த நேரம் ஒரு பஸ் வேகமாக வருகின்றது என்று வைத்துக் கொள்வோம்.

இந்த உணர்வின் வேகத் துடிப்பு நமக்குள் ஈர்க்கப்பட்டு… அது நல்ல உணர்வுகளுடன் மோதும் போது தான்… “நமக்கு ஆபத்து…” என்று அறிந்து கொள்கின்றோம்.

ஆக… வேகமாக இயக்கப்படும் பொழுது
1.பஸ்ஸின் வேகத்திற்குத் தக்கவாறு இந்த உணர்வின் இயக்கம்
2.நம்மைக் காத்துக் கொள்ளும் உணர்வாக நம்மை உந்தித் தள்ளுகின்றது.

ஓவ்வொரு உணர்வும் இப்படித்தான் நம்மை இயக்குகிறது. ஆகவே அருள் ஞானிகள் உணர்வை அடிக்கடி நாம் எண்ணி எடுத்தால் அந்த உணர்வுகள் நம்மை இயக்கும்… நம்மை அருள் வழியில் அது அழைத்துச் செல்லும்.

“எப்பொழுது… எந்த நிலையில் ஆன்மா பிரிந்தாலும்…” மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நாம் இணைய வேண்டும்

 

விண்ணின் ஆற்றலும்… மனிதனுக்குப் பின் அடுத்த நிலை என்ன…? என்ற நிலையும்… நமது குருநாதர் காட்டிய வழியில் உபதேசித்து அதனை வலுக் கொள்ளச் செய்து கொண்டே வருகின்றோம்.

அவர் உணர்த்திய வழியில் உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்கள் மூதாதையரின் உயிரான்மாக்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணைச் செய்யும் சக்திகளை நாம் அனைவரும் பெறுகின்றோம்.

அந்தந்தக் குடும்பத்தைச் சார்ந்தோர் அனைவரும் அதிகாலை நான்கிலிருந்து ஆறரை மணி வரையில் ஒரு பத்து நிமிடமாவது துருவ தியானத்தில் இருந்து… துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியைத் தனக்குள் வலுவாக்கி… எங்களுடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற எங்கள் குலதெய்வங்களான உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலந்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்து பெருவீடு பெருநிலை என்ற நிலைகள் அடைந்து…
1.அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று “உந்தித் தள்ளினால்” ஒளிச் சரீரம் பெறுகின்றனர்…
2.உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக விண்ணிலே வாழத் தொடங்குகின்றார்கள்.
3.”ரிஷிகளுடன் ரிஷிகளாக” அவர்கள் ஒன்றி வாழும் தகுதி பெறுகிறார்கள்.
4.அவர்கள் ஒளிச் சரீரம் பெற்ற பின் நம்முடைய நினைவாற்றல் மகரிஷிகளுடன் எளிதில் இணைகின்றது.

பின் ஒவ்வொரு நாளும் துருவ தியான நேரங்களில் துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியை எடுக்கும் பொழுது… நாம் விண் செலுத்திய குலதெய்வங்களின் உணர்வுகள் நமக்குள் இருப்பதால் அதனின் துணை கொண்டு சப்தரிஷி மண்டலங்களில் இருந்து வரும் சக்தியையும் துருவ நட்சத்திரத்தின் சக்தியையும் பெறும் தகுதியைப் பெறுகின்றோம்.

அவர்கள் முன் சென்றால் பின் அவர்கள் உணர்வின் துணை கொண்டு நாமும் அங்கே செல்கின்றோம்.

முதலில் மனித உடலை நம் முன்னோர்கள் பெற்றனர். அவர் உணர்வுடன் ஒன்றி அவரைப் போல நாமும் மனிதராக உருப்பெற்றோம்.

மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் உடலை விட்டுச் சென்ற ஆன்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்தால்… அந்த உணர்வுடன் ஒன்றி நாமும் பிறவியில்லா நிலை அடைகின்றோம்.

1.வழி வழி செய்து கொண்ட இந்த நிலைகள் காலத்தால் மறைந்தே போய்விட்டது
2.ஆகவே ஞானிகள் காட்டிய அருள் வழியில் முன்னோர்களை விண் செலுத்துவோம்.

விஞ்ஞானத்தினால் பேரழிவு வந்து கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் நமது நுகரும் சக்தியை… என்றுமே துருவ நட்சத்திரத்துடன் ஒன்றி வாழும் நிலையாக மாற்றி அமைத்தல் வேண்டும்.

எப்பொழுது எந்த நிலையில் இந்த ஆன்மா பிரிந்தாலும் அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்திலே இணையும் பருவமாக ஏற்படுத்தினால் ஒழிய மீளும் மார்க்கம் வேறு இல்லை.

காரணம்…
1.மீண்டும் மனித உடல் பெறும் காலம் எப்பொழுது…” என்று சொல்ல முடியாது… வெகு காலம் ஆகிவிடும்
2.நஞ்சு கலந்த உலகமாக மாறும்போது நஞ்சு கலந்த உணர்வைச் சேர்த்து விட்டால் அடுத்து மனிதனல்லாத உடலைத்தான் நாம் பெற முடியும்.

பின் அதிலிருந்து நாம் மீண்டு வர வேண்டும் என்றால் அதற்குள் “இந்த உலகம் இருக்குமா…?” என்று சந்தேகத்தைத் தோற்றுவித்துவிடும். ஆகவே
1.இன்று இப்போது நல்ல நினைவிருக்கும் பொழுது அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ நாம் பழகிக் கொள்ள வேண்டும்.
2.துருவ நட்சத்திரத்தின் வலுவைச் சேர்த்து அதன் வழிகளில் நாம் வாழ்வோம்… வளர்வோம்…! என்று இதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

இந்த உலகமோ இந்த உடலோ நமக்குச் சொந்தம் அல்ல… ண்ஹாம் சொந்தமாக்க வேண்டியது அருள் உணர்வுகளைத் தான். இன்றைய செயல் நாளைய சரீரம்…!

சிவ சக்தி – ஆதி சக்தி

 

ஆக்கல் காத்தல் அழித்தல் என்ற முத்தொழிலின் செயல்களை அகண்ட அண்டத்திலும் சரி… பூமிக்குள்ளும் சரி… ஒரு உயிரணுவிற்குள்ளும் சரி… படைப்பின் இயக்கங்களைப் பற்றிப் பகர்ந்திட வேண்டும் என்றால் சொல் நாமப்படுத்தித்தான் கூறிட முடியும்.

அந்தச் சொல் நாமப் பொருளின் சூட்சமத்தை அறிந்து தெளிந்திட தியான வளர்ப்பில் மனம் ஒருமைப்படும் செயலில் ஒவ்வொரு உயிராத்மாவும் உணர்ந்து அறிந்து கொள்ள முடியும்.

மூல சக்தியான ஒளி காந்தத்திற்குள் நீர் அமில சக்தியையும்
1.அதனுள் கோடானு கோடி வண்ணமிலம்
2.கோடானுகோடி குண அமிலம்
3.கோடானு கோடி மண அமிலம் என
4.முத்தொடரையும் தன்னுள் ஐக்கியம் கொண்டு “விஸ்வரூப சக்தியாகக் காட்டப்பட்டதே ஆதிசக்தி…!”

பால்வெளி சூட்சமத்தில் எங்கும் நிறைந்திருக்கும் ஆதிசக்தியின் செயல் நிகழ்வுகள் கோடானு கோடியாக குணங்களும்… மணங்களும்… நிறங்களுடன்.. ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு செயல்படும் செயலாக உள்ளது.

அதன் மூலம்
1.பிறிதொன்றை உருவாக்கியும்
2.ஈர்ப்பின் தொடர்பில் தன்னை வளர்ச்சிப்படுத்தியும்
3.அதே தொடர்பில் பிறிதொன்றை வளர்த்துக் கொண்டும் பரந்து செயல்படும் அந்தச் செயலை
4.மூவுலகம் என்ற சூட்சமப்படுத்திக் காட்டியதை முழுமையாக யாராலும் விளக்க முடியாது.

உதாரணமாக ஒரு உயிரணு மூன்று நட்சத்திரத்தின் சக்திகளைக் கொண்டதாக இருந்தாலும் அதில் எது வீரியமோ அதுவே உயிரின் சக்தியாகவும் மற்ற இரண்டும் குண வளர்ப்பிற்குத் துணையாகவும் இயங்குகிறது. உயிரணு தனக்குள் ஈர்த்திடும் செயல் நிலைக்கொப்ப பிறப்பிற்கும் (சரீரமாக) வருகிறது.

அதனின் இயக்கங்களையும் செயல்களையும் சித்தர்களால் பெயர் நாமப்படுத்தி விளக்கப்பட்டுள்ளது. தன்னைத்தான் உணரும் பக்குவத்தில் தன் உயிருக்குள் இயங்கும் மூல சக்திகளை தியானத்தின் மூலம் உணரலாம். உயிரை அறிந்திட மனதில் உள்ள சஞ்சலங்களை எல்லாம் அகற்றிடும் வைராக்கிய சிந்தனை வேண்டும்.

“ஆட்டுவிக்கும் சக்தி…!” என்பது கண்ணுக்குப் புலப்படாத நிலையில் வளர்ச்சி கொண்டிடும் பரவெளியின் செயலைத்தான் மூவுலகம் என்று சொன்னார்கள் மகா ஞானிகள்.
1.ஒவ்வொரு உயிரணுவும் தன்னை வளர்ச்சிப்படுத்திக் கொள்ளும் செயலுக்கும்
2.அதே தொழில் புரியும் மற்ற மற்ற நிலைகளுக்கும் நாமத்தில் வேறுபாடே தவிர செயல் அனைத்தும் ஒன்றே…!

மூவுலகம் என்பது எவை…?
1.கோடானு கோடி நிறங்கள் ஓர் உலகமாக
2.கோடானு கோடி மணங்கள் ஓர் உலகமாக
3.கோடானு கோடி மணங்கள் ஓர் உலகமாக
4.நிறம் மணம் குணம் என்றிட்ட அமிலத் தன்மைகளுடன் கலந்து வியாபித்துச் செயல்படும் நிலையில்
5.உயிரணுக்கள் சரீரம் கொண்ட பிறகு முத்தொழிலின் செயல்பாடு ஒவ்வொரு சரீரத்திலும் உண்டு.

மூவுலகம் என்றால் அதல.. சுதள… பாதாளம்…! என்ற எண்ணமா…?

இவைகள் எல்லாம் உலகிற்கு நீதியைப் புகட்டி… நற்பண்பின் வளர்ப்பில் தன்னைப் பக்குவப்படுத்திக் கொள்ள… மனதின் திறனை வலுக் கொள்ளச் சொல்லப்பட்ட தத்துவங்களாக விளங்கிடல் வேண்டும்.

சிவ சக்தி என்பது ஆண் பெண் சரீரத்திற்குள்ளும் சிவ சக்தியின் தொடர்பை அறிந்து கொள்பவன்
1.தாய்க்குகந்த சக்தி அனைத்தையும்
2.இந்த மனித சரீரப் பிண்டத்திற்குள்ளேயே (தனக்குள்) அறிந்திட முடியும்.

“உலகைக் காத்திடும் கடவுள்களாக” நாம் வளர்ச்சி பெற வேண்டும்

 

பிறவியில்லா நிலை அடையும் தகுதியை இப்போது இருக்கும் இந்த உடலில் இருந்து நாம் உருவாக்கத் தவறினால் இனி அடுத்த சந்தர்ப்பம் எப்பொழுது…? என்று நமக்குத் தெரியாது…!

புழுவாகப் பூச்சியாக இருந்து மனிதனாக உருவாக்கிய நம் உயிரைக் கடவுள் என்று அறிந்து கொண்ட பின் அறிந்த உணர்வுகள் கொண்டு ஒளியாக மாறிய அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை நமக்குள் சேர்த்து அவர்கள் பாதையில் நாம் சென்றோம் என்றால் அதன் எல்லையில் நாம் என்றும் நாம் நிலையாக வாழலாம். பிறவி இல்லா நிலை அடையலாம்.

இந்தப் பிரபஞ்சம் அழிந்தாலும்…
1.எதனின் சேர்க்கையில் இந்தத் துருவ நட்சத்திரம் இருக்கின்றதோ
2.அதன் ஈர்ப்பு வட்டத்தில் நாமும் இணைந்து
3.அகண்ட அண்டத்தில் சுழன்று சென்று வரும் உணர்வுகளை ஒளியாக மாற்றிடும் திறன் பெறுவோம்.

அகண்ட அண்டத்தில் என்றும் பதினாறாகச் சிறிதாகவே நாம் இருப்போம். அந்த நிலையிலேயே வளர்ச்சியின் பருவத்திலே “பல கோடி ஆண்டுகள்” வாழும் நிலை வரும்.

இந்த அண்டமே முழுமையாக ஒளியின் சரீரமாக அடையும் பருவம் என்பது… அது எத்தனையோ கோடி ஆண்டுகள் ஆகலாம்.

1.எத்தனையோ கோடிச் சூரியன்களும் உண்டு
2.எத்தனையோ கோடிக் கோள்களும் உண்டு
3.இப்படி எண்ணிலடங்காத நிலைகள் அகண்ட அண்டத்தில் இருக்கப்படும் பொழுது அதனின் உணர்வை நாம் நுகர்ந்து
4.நம் உயிரின் துணை கொண்டு என்றுமே ஒளியின் சரீரமாக மாறுதல் வேண்டும்.

நமக்குள் உருவாகும் அந்த ஒளியான உணர்வினை வெளிப்படுத்தும் போது மற்ற சூரியன்கள் இதைக் கவரும் நிலை கவர்கிறது.
1.அந்தச் சூரியக் குடும்பங்களில் மனித இனங்களும் உண்டு.
2.அவர்களுக்கும் இந்த உணர்வுகள் பயன்படும்.
3.அவர்கள் தீமைகளை வென்றிடவும் இது உதவும்.

ஆகவே நாம் உலகைக் காத்திடும் கடவுள்களாக வளர்ச்சி பெற வேண்டும்… “இந்த மனித உடலிலிருந்தே…!”

அதற்குத்தான் மீண்டும் மீண்டும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை உங்களுக்குள் பதிவு செய்கின்றேன் (ஞானகுரு).

அந்த அருள் சக்தி நம் உடலுக்குள் சென்ற பின் தீமையை வென்றிடும் அரும் பெரும் சக்தியான கடவுளாக வருகின்றது. நாம் எண்ணியதை அந்த ஒளியின் சரீரமாக உருவாக்கும் ஈசனாக நம் உயிர் அமைகின்றது.

நம் உயிர் அமைந்தது போல் நுகர்ந்த உணர்வின் அணுக்கள் அதன் வழியில் என்றும் ஒளியின் சரீரமாக… உருவாக்கும் கடவுளாக… ஈசனாக நமக்குள் உருப்பெறச் செய்யும்…!

ஒருவனே தேவன் ஒருவனே கடவுள் என்றால் இது அறியாமை தான். ஒன்று என்ற நிலை அகண்ட நிலையில் எங்குமே இல்லை.
1.பலவும் சேர்த்து ஒருமை ஆகின்றது
2.ஒன்று சேர்த்துப் பலவாகின்றது
3.பலவும் சேர்த்து ஒன்றாகினறது.

இப்படித்தான் இயற்கையின் நிலைகள் அது மாறிக் கொண்டே வருகின்றது. இருந்தாலும்… “மாறாத நிலைகள் கொண்டது உயிர் தோன்றிய பின் ஒளியாக மாறுவது தான்…!”

ஒளியின் சரீரம் பெற்றாலும்… ஒளி நிலை பெற்றவர்கள் ஒருவருக்கொருவர் விளைந்த நிலையில்… ஒன்றுடன் ஒன்று அது ஒன்றி வாழ்ந்தால் தான் அது வாழ முடியும்.

அப்படி வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் தான் துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலமும்… அவர்கள் தனித்து வாழவில்லை.

அங்கே சென்று ஐக்கியமாவது தான் நம் பிறவியின் பயன்..!

நாம் “சுத்த சைவமாக” இருக்க வேண்டும்…!

 

ஒன்றை ஒன்று அழித்துத்தான் ஒன்று வளர்கின்றது. சைவத்திற்கு எதிர்ப்பதம் ஒன்றுண்டு. ஏனென்றால் அழியும் மாறு கொண்ட நிலை இல்லாவிட்டால் “வளர்ப்பிற்கே வழியில்லை…!”

ஜீவ ஆத்ம உடலும் ஒவ்வொரு அணு வளர்ப்பு முறையும் இரண்டும் ஒன்றாகி வளரும் தன்மையில் உடல் பிம்பங்கள் அனைத்துமே அசைவம் தான்.

1.இந்த உடல் என்ற கோளத்தில் நாம் உட்கொள்ளும் உணவும்
2.எண்ணத்தால் எடுக்கும் உணர்வும் இரண்டும் சமைக்கப்படும் பொழுது அணுத் தன்மையாக மாறுகிறது
3.அது அனைத்தும் சைவத்திற்கு எதிர் நிலை அசைவமாகின்றது.

ஆதி சக்தியின் படைப்புகள் அனைத்தும்
1.அமிலம் ஆண் சக்தியாகவும்
2.திடம் கொண்டு செயல்படும் ஜீவ சக்தி பெறுவது பெண் சக்தியாகவும்
3.சிவ சக்தி வளர்ப்பான ஆதிமூலம் (விநாயகர்) முதல் உணர்வு நிலை கொண்டு வழித் தொடர் வளர்கின்றது.

அண்ட கோளங்கள் அனைத்திலுமே – தான் எடுக்கும் அல்லது தனக்குள் சேரும் நிலைக்கொப்ப தொடரின் செயல் நிலை வளர்கின்றது. வளர்ப்பின் வளர் தன்மையில் எடுக்கக்கூடிய ஒலிக்கொப்ப ஒளித் தன்மை பெறுகின்றது.

ஒளியின் வளர்ப்பில் ஒலி ஒளி சுழற்சியில்… ஒன்றின் தொடர் கொண்டு ஒவ்வொன்றின் மோதலில் பலவாகி… தான் எடுக்கும் எண்ணத்திற்கொப்ப வழிப்படுத்தும் வளர்ச்சியில் “உயர்வு நிலை கொண்டவன் தான் மனிதன்…!”

மனித உடலுக்குள் “சைவமான எண்ணத்தை… அந்தச் சித்தத்தை வளர்க்கும் ஞானமாக… அதை வளர்க்கும் நிலைக்குச் “சைவ சித்தம்” வளர வேண்டும்.
1.சைவம் என்றால் வளர்ப்பு
2.சித்தம் என்றால் உண்மையின் உயர்வு நிலை

ஆகவே உயர்வை வளர்க்கும் சைவ சித்தமாக எண்ணத்தைப் பகுத்தறியும் வழி முறைக்கு வளர்த்துக் கொள்ள வேண்டும்.

உடல் என்ற கோளத்தில்
1.எண்ணத்தில் எடுக்கும் உணர்வை நற்குணச் சமைப்பாக்கி
2.உடல் கோளத்தில் உயிர் குருவைச் சைவ சித்தமாக்கி
3,மெய் ஒளியைப் பெறும் நிலையாகத் தன் ஆத்ம ஜோதியை ஒளியாக்க வேண்டும்.

சலிப்பு சோர்வு கோபம் அதி காமம் வெறி குரோதம் இந்த இச்சையில் உணர்வுகளும் எண்ணங்களும் கூடும் பொழுது உடலின் ஒவ்வொரு அங்க அவையங்களும் உடல் அணுக்கள் ஒவ்வொன்றும்
1.தன் சைவ சித்தத்தை வளர்க்காமல் அசைவத்தின் அழிவு நிலைக்குச் செல்கிறது.
2.ஆகவே சரீர உணர்வில் எடுக்கும் தீய குணத்தால் தன் சித்தத்தை அழிக்கும் தன்மைக்குச் செல்லக் கூடாது.

அன்பு பாசம் பரிவு வீரம் ஞானம் சாந்தம் என்ற நற்குணங்கள் கொண்டு வளரும் வழித் தொடரில் சித்தமாகி மகரிஷிகள் ஞானிகள் வெளிப்படுத்தும் ஒளி சக்திகளை ஆத்ம குருவை வளர்க்கும் தொடருடன் செயல்படுத்தினால்
1.ஒளி நிலைக்குச் சென்று வளர்க்கும் வழித் தொடரில்
2.சைவ சித்த சத்திய உண்மையை
3.ஆதி சக்தியின் சிவ சக்தியாக
4.ஆத்ம ஒளி உயரும் வழிக்கு உயர்வு கொள்ள முடியும்.

இந்த உலகிற்கும் நமக்கும் இனி எது தேவை…?

மனிதனுக்கு மனிதன் இரக்கமற்றுக் கொன்று அதை ரசித்துக் கொண்டிருக்கும் உணர்வுகளே அதிகமாக இன்று வளர்ந்து கொண்டுள்ளது.

விஷத்தன்மை கொண்ட அணுக்களாக மாற்றம் அடைந்து… விஷக் கிருமிகளும் அதிகமாக உருவாகிக் கொண்டே உள்ளது… கொடூர நோய்களும் உருவாகின்றது கொடூரச் செயலைச் செயல்படுத்தும் தன்மைகளும் மனித உடலுக்குள் ஊடுருவிக் கொண்டுள்ளது.

அதே சமயத்தில் வான் வீதியில் விஞ்ஞானிகள் பரீட்சித்துப் பார்த்த விஷத்தன்மைகளும் (குண்டு வெடிப்புகள்) அதிக அளவில் பரப்பப்பட்டதனால்
1.பிரபஞ்சத்தில் உள்ள கோள்களும் நச்சுத்தன்மை அடைந்து விட்டது.
2.அது உமிழ்த்தும் உணர்வுகளை சூரியன் கவர்ந்து ஜீரணிக்கும் சக்தியை இழந்து விட்டது.

அதே போன்று நமது உயிர் நம்மை மனிதனாக உருவாக்கிய நிலையில் நஞ்சினை வென்றிடும் ஆறாவது அறிவைப் பெற்றிருந்தாலும்… மாறுபடும் தன்மை வரும் பொழுது மனித உடலையே சீர்குலையைச் செய்யும் நிலை ஆகிவிடுகின்றது… சிந்தனையை இழக்கச் செய்கின்றது. உடலை விட்டுச் சென்றால் அடுத்து மனிதனல்லாத உருவாகத் தான் உயிர் உருவாக்கும்.

நமது உயிரின் துடிப்பு நிலைகள் சீராக இயக்கிக் கொண்டிருக்கும் போதும் அது அதற்குத் தக்கவாறு உடலில் உள்ள எல்லா அணுக்களை இயக்குகின்றது. அதே சமயம் ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு உடலிலும் இதைப் போல அது சீராக இயங்கிக் கொண்டுள்ளது.

அதாவது…
1.ஒவ்வொரு உயிரும் எலக்ட்ரிக் என்ற நிலையில் இயக்கத் துடிப்புகளை உருவாக்குகின்றது
2.அதன் உணர்வின் துணை கொண்டு தனக்குள் கவர்ந்து கொண்ட உணர்வின் தன்மையை
3.அது எது எதுவோ அதனின் உணர்வாக எலக்ட்ரானிக்காக மாற்றி அமைக்கின்றது.

இருப்பினும் வான் வீதியில் வீசிய கதிரியக்கப் பொறிகள் சூரியனை அணுகி விட்டது. இந்தப் பூமியிலிருந்து வெடிக்கப்பட்ட அணுக்கதிரியக்கங்களால் துருவப் பகுதியில் ஓசோன் திரையும் கிழிந்து விட்டது. ஆகையினால் துருவத்தின் வழியாக வடிகட்டப்படாத விஷத்தன்மைகளே பூமிக்குள் வந்து கொண்டிருக்கிறது.

விஷங்கள் பூமிக்குள் வரப்படும் பொழுது மனிதனுடைய செயலும் விஷத்தன்மையாகின்றது
1.கதிரியக்கப் பொறிகள் தாவர இனங்களிலும் பரவப்பட்டு அவைகளின் குணங்களும் மாறத் தொடங்கி விட்டது
2.அதை உணவாக உட்கொள்ளும் மனிதனுடைய குணாதிசயங்களும் மாறுபடுகின்றது.
3.விஷத்தன்மை கொண்ட அணுக்களாக மாறி ஒவ்வொரு உடல்களிலும் மாற்றங்கள் ஆகின்றது.

சூரியன் தனக்குள் கவரும் சக்திகளில் விஷத்தின் தன்மை அதிகரிக்கும் பொழுது “எலக்ட்ரிக்கின் இயக்கச் சக்தி” அதிகமாக வளரத் தொடங்கி விட்டது.

உதாரணமாக ஒரு எலக்ட்ரிக் வயரிலே இரு மடங்கு மின்சாரம் அதிகரித்தால் அதனுடன் இணைக்கப்பட்ட பல்புகளோ மற்ற இயந்திரங்களோ அது பியூஸ் (எரிந்து) ஆகிவிடும். அப்போது ஒலி அதிர்வுகள் அதிகமாகின்றது. நாம் இயக்கக்கூடிய சாதனங்களும் வேகமாக இயங்கி… பழுதடைந்து விடுகின்றது.

அது போல் தான் ஒவ்வொரு உயிரினங்களின் துடிப்பும் இரு மடங்கு ஆகும் போது
1.மனித உணர்வின் எண்ணங்கள் துரித கதியில் இயங்கி
2.சிந்திக்கும் திறனை இழக்கச் செய்து விடுகின்றது.

மனிதனுக்குள் சிறு மூளை பாகங்களில் விஷத் தன்மை பரவினால் “உணர்ச்சியின் வேகங்கள் அதிகரிக்கும்…!” பித்து பிடித்த உடலில் பார்த்தால் நரம்புகளில் பல மடங்கு வீரிய சக்தி உண்டு

இதைப் போன்று தான் மற்ற உயிரினங்களில்… காட்டு விலங்குகளில் உயிரின் இயக்க ஓட்டம் அதிகரிக்கப்படும் பொழுது அதுவும் மாற்றம் அடைந்து காடுகளிலிருந்து அகன்று “அசுரத்தனமான தாக்குதலில் இறங்கவும் கூடும்…”

இத்தகைய நிலைகள் நம் பிரபஞ்சத்தில் உருவாகிக் கொண்டுள்ளது.
1.கதிரியக்கப் பொறிகளால் சூரியனுக்குள் மின் உற்பத்தி அதிகமாகி… மின் அணுக்களின் வேகத் தொடர் அதிகரிக்கப் போகிறது.
2.அதனால் இந்தப் பிரபஞ்சமே சீர் கெடும் நிலையும்… அதனின் செயலாக்கம் தணியும் நிலையும் வந்து கொண்டிருக்கின்றது.

ஆதியிலே… சந்தர்ப்பத்தால் நஞ்சை வென்றிடும் சக்தி பெற்று வளர்ந்த அகஸ்தியன்… அவன் வளர்ச்சியில் துருவத்தின் ஆற்றலைக் கண்டுணர்ந்து துருவத்தின் ஆற்றலைப் பெற்று கணவன் மனைவி இருவருமே உயிருடன் ஒன்றும் உணர்வினை ஒளியாக்கி நஞ்சினை வென்றிடும் உணர்வு பெற்றுத் துருவ நட்சத்திரமாக… அகண்ட அண்டத்தில் வருவதையும் ஒளியாக மாற்றிக் கொண்டுள்ளார்கள்.

அதிலிருந்து வந்து கொண்டிருக்கும் உணர்வலைகள்
1.நமக்கு முன் இந்தக் காற்றுக்குள் இருப்பதை நுகர்ந்து பழகுவதற்குத் தான்
2.கூட்டுத் தியானங்களை உங்களுக்கு அமைத்துக் கொடுத்திருக்கின்றோம்.

அதே சமயத்தில்…
1.நாம் தியானத்தில் எடுக்கும் மகரிஷிகளின் உணர்வுகள் தணியத் தொடங்கினால் விஷத்தன்மைகள் ஆட்கொண்டு விடும்
2.பல கோடிச் சரீரங்களில் சம்பாதித்த சக்தியை வலிமை பெற்றதை அழித்துவிடும்.

ஆகவே… இந்த உலகமே விஷத்தன்மையாக மாறிக் கொண்டிருக்கும் நிலையில்… வராகன் நாற்றத்தைப் பிளந்து நல்ல உணர்வைக் கவரும் சக்தியாக நஞ்சினைப் பிரித்திடும் மனித உடலை உருவாக்கிய “பரசுராம்” என்ற நிலையில்… அதன் வழி வளர்ச்சி பெற்றவன் தான் அழியாத நிலைகள் கொண்டு “ஒளிச் சரீரமாக விண்ணிலே உள்ளார்கள்…!”

ஆனால் உடலில் இச்சைக்குச் சென்றோர் அரசராக ஆனார்கள். மற்றவர்களை வீழ்த்தி அதிலே மகிழ்ச்சி பெற்று… பல மதங்களாக பல இனங்களாகப் பிரிக்கப்பட்டு அழித்திடும் நிலையாக வளர்ந்து விட்டது.

ஆனால் அத்தகைய அரசர்கள் வீழ்ச்சி அடைந்தாலும் இன்று மக்களாட்சி என்று வந்துள்ளது. மக்களாட்சி என்றாலும்…
1.அரசியலிலும் அதே நிலைகள் இன்று வளர்ந்து விட்டது
2.அதிலும் எத்தனையோ பிரிவுகள்… ஒருவருக்கொருவர் பகைமை.

நன்மையை எதிர்பார்த்திருக்கும் மக்களோ கலக்க உணர்வு கொண்டு சிந்திக்கும் தன்மை குறைந்து எப்படி வாழ்வது…? என்ற நிலையிலேயே உள்ளார்கள்.

ஆகவே சிதறுண்டு போகும் இந்த நிலையில் இருந்து மீட்டிட
1.நீங்கள் ஒவ்வொருவரும் காலை துருவ தியானத்தில் உலக மக்கள் அனைவருக்கும் அந்த துருவ நட்சத்திரத்தின் சக்தி கிடைக்க வேண்டும் என்று
2.தனக்குள் அந்த ஆற்றலை விளைய வைத்து மக்களுக்கு இந்த அலைகளை அனுப்ப அனுப்ப
3.நல்லதை எண்ணி ஏங்கிக் கொண்டிருக்கும் மக்களுக்கு இது உதவியாக அமையும்.

துருவ தியானத்தில் எத்தனை ஆயிரம் பேர் இப்படி எண்ணி எடுக்கின்றோமோ… பரவச் செய்கின்றோமோ… தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்று யாரெல்லாம் எண்ணுகின்றார்கள் அவர்களுக்கு இது கிடைக்கும்.

இரு மடங்கு அதிகரிக்கப் போகும் மின் அணுக்களின் தன்மைகளிலிருந்து நாம் அனைவரும் மீள்தல் வேண்டும்.

அதற்காக அகஸ்தியன் சென்ற வழியில் அவன் உணர்வை மட்டும் அவனுடைய வளர்ச்சியில் இருந்து நாம் பிரித்து எடுத்து வளர்த்துப் பழக வேண்டும்.

கடந்த காலங்களில் பிரபஞ்சத்தின் இயக்கமும்… மற்ற நிலைகள் எவ்வாறு…? என்று உபதேசித்த உணர்வுகளிலிருந்து அதை மாற்றி
1.அகஸ்தியன் வழியில் அவன் சென்ற பாதையில் அவன் உணர்வையே தொடர்ந்து வளர்த்து
2.துருவ நட்சத்திரமான நிலையை வரிசைப்படுத்தி… நம் உடலில் உள்ள அணுக்களை அதன் வழி மாற்றி
3.இனி இந்த உடலில் இருந்து எப்பொழுது நாம் அகன்றாலும்… பகைமை உணர்வு தாக்கப்பட்டாலும்
4.நம்முடைய நினைவாற்றல் துருவ நட்சத்திரத்துடன் தொடர்பு கொண்ட நிலையிலேயே இருத்தல் வேண்டும்.

இது நமக்குள் வளர்ச்சியாக வளர்ச்சியாக… பிரபஞ்சத்திலிருந்து வரும் தீமைகளிலிருந்து நாம் விடுபட உதவும்.

ஆகவே நமது குரு காட்டிய வழியில் ஒவ்வொரு நிமிடமும் துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியைப் பெற மறவாதீர்கள்…! தீமைகளை அகற்றும் அந்த வல்லமையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

சுண்ணம்

 

1.தன்னையே தான் அறிந்து உணரும் செயல்பாட்டில்
2,அண்டத்தையே அறிந்து கொண்டிடும் அந்தத் திறனில்
3.இந்தப் பிண்டத்தையும் அறிந்து கொள்ள மனித மன ஞான எண்ண வழிச் செயல் முறையின் முயற்சியே
4.மகரிஷிகள் அருள் உணர்வுடன் ஒன்றி சக்தியளித்துச் சக்தி பெற்றிடும் சூட்சமத்தில்
5.தன் ஆன்மா வீரிய வளர்ச்சி பெற்று உயர் ஞானம் கொண்டிடும் பக்குவத்திற்கு
6.இந்தச் சரீரத்தின் (எலும்புகள்) மூலம் சேமிக்கும் சேமிப்பு அவசியமாகும்.

மகரிஷிகளின் ஆற்றலை ஈர்த்துச் செயல் கொள்ளும் உடல் உறுப்புகளில் “எலும்புகளின் அமில குண சக்தி வளர்ச்சியின் முதிர்வு…!” ஒரு பாதுகாப்புக் கவசமாகச் செயல்படுகின்றது.

பிராணிகளில் ஊர்வனவாக இருக்கும் நத்தை, ஆமை, சிப்பி, சங்கு இத்தகைய உயிர்த் தொகைகள் தனது உயிர்ச் சக்தி வளர்ச்சிக்கு ஆயுட்காலம் எப்படி உள்ளது…?

உருவின் செயல் சிறு வடிவில் இருக்கும் சங்கு
1.ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நீரின் சக்தியில் வளர்கிறது.
2.தன் வளர்ச்சிக்குகந்த சுவாச அமில குணத் தன்மைகளை ஆகாரமாக ஈர்த்திடும் நிலையில்
3.”பரணி நட்சத்திரத்தின்…” சக்தியையும் சேமித்து வளர்ச்சிப்படுத்திக் கொள்கின்றன.

மனித உடல் வளர்ச்சி தாயின் கருவிலே உருக் கொள்ளும் நிலையில் சரீரமாகி வெளியில் வந்து தன் வாழ்க்கையில் உலகோதய நடை முறைக்கு ஆற்றல் கொண்டிடும் பக்குவமே தாயின் கருவில் சிசுவாக இருக்கும் பொழுது பெறும் “பரணி நட்சத்திரத்தின்…” ஆதிக்க வலுவின் மூலம் கிடைக்கும் எலும்புகளின் வளர்ச்சி தான்.

ஆகவே உயிர் சக்தியின் வலுவுக்கு வலுக் கொண்டிடும் சேமிப்பாகப் பரணி நட்சத்திரத்தின் அமில குண ஆதிக்க எலும்புகளில் சத்தாகப் பேராற்றல் கொண்டிடும் பக்குவத்தை உணர்ந்து கொள்ள வேண்டும்.

1.நான் (ஈஸ்வரபட்டர்) சுட்டிக் காட்டும் இந்தத் தியான வளர்ப்பின் மூலம்
2.எலும்பின் வீரிய குண விரியத்தை உணர்ந்து
3.சுண்ணம் என்றிட்ட அமில குணங்கள் அடர்வு கொண்டு
4.தன் வளர்ச்சியின் சிறப்பிடத்தைப் பெறும் பொழுது
5.இருபத்தியேழு நட்சத்திரங்களின் ஒளியையும் சேமிக்கும் சக்தியாக அந்த எலும்புகள் செயல்படும்.

சரீரம் தன் வினைப்பயனை அனுபவிக்கும் பொழுது உடல் நலம் குன்றி… உயிர்ச் சக்தி இந்தக் கூட்டினை விட்டுப் பறக்கும் பொழுது… “சரீரம் அனுபவிக்கும் துன்பங்களுக்கு யார் மூல காரணம்…?” வேதனைப்படாமல் எப்படி உடலை விட்டுப் பிரிவது…?

1.நம்மை நாம் உணர்ந்து கொண்டு
2.நல்வினைப் பயனாக ஆக்கச் செயலுக்குண்டான எண்ணம் கொண்டு செயல்படும் பொழுது
3.உடலில் உள்ள எலும்புகள் மகரிஷிகள் பெற்ற ஒளி காந்த சேமிப்பைப் பெற்றிருக்கும் பொழுது
4.மூலாதாரம் தொடங்கி எழும் வீரியச் சக்தி முதுகுத் தண்டுவடம் வழிப்போந்து நெற்றிப் பொட்டை அணுகித் தாக்கி
5.உயிர் பறிக்கும் அந்தச் செயலை சரீர அவஸ்தை இன்றி எந்தவிதத் தடங்கலும் இன்றி உயிரை வெளியேற்றலாம்.
6.ஞானிகள் கபாலம் மூலம் தன் உயிர் சக்தியை வெளியேற்றுவர்.

மனித உடலை அவஸ்தையிலிருந்து காப்பவைகள் எலும்புகளின் தொடர்பே…!

இருந்தாலும் அந்த எலும்புகளில் முற்றிய நோய் இருந்தால் சரீரத்தில் குறைவுபட்டிருக்கும் பரணியின் அமில குணத்தை கொங்கணவ மாமகரிஷியை எண்ணி ஈர்த்துத் தியானிப்பதன் மூலம் அதைச் சொஸ்தப்படுத்த முடியும்.

1.பரணி நட்சத்திரத்தை எண்ணி ஈர்த்திடும் பொழுதே
2.இந்தத் தொடரினை வழி காட்டிய கொங்கணவ மாமகரிஷியையும் எண்ணி
3.சரீரக் கட்டளைக் கேந்திரத்தில் செயல் கொண்டிடும் கார்த்திகை நட்சத்திரத்தையும் எண்ணி
4.ரச மூல அமிலச் சுக்கிரனையும் (வியாழன்) எண்ணி
5.இந்த முத்தொடரையும் சூரியச் சமைப்புடன் பெற்றிட்டால் எலும்புகளின் வலுக் கூடும்.

எதையுமே தன் எண்ணத்தால் உருவாக்கும் ஆற்றல் கொண்டவன் தான் மனிதன்

 

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியன்… தான் பெற்ற கலைகள் அனைத்தையும் தன் மனைவிக்கு உபதேசிக்கின்றான். நுகர்ந்த உணர்வுகள் மனைவி உடலில் விளைகிறது.

ஆண் பெண் என்ற நிலையில் இணைந்து தன் இனத்தை விருத்தி செய்யும் நிலையாகக் குழந்தைகள் இன்று எப்படி உருவாகின்றதோ இதைப் போன்று தான்
1.அகஸ்தியரும் அவர் மனைவியும் ஒன்றி வாழ்ந்து… இரு உயிரும் ஒன்றாக்கப்பட்டு…
2.நஞ்சினை வென்றிடும் உணர்வாக இருவரும் விளைவித்துக் கொள்கின்றனர்.
3.ஒளிக்கதிர்களை உருவாக்கும் சக்தி பெறுகின்றனர்.

அதாவது… அவர்கள் இருவரும் வசிஷ்டரும் அருந்ததி போன்று வாழ்ந்து நளாயினி போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடந்து… கணவன் உயர வேண்டும் என்று மனைவி எண்ணுவதும் மனைவி உயர வேண்டும் என்று கணவன் எண்ணுவதும்… தனது வாழ்க்கையில் கண்டறிந்த உணர்வுகள் அனைத்தும்
1.கணவன் உயர்ந்த சக்தி பெற வேண்டும்… அந்த அருள் எனக்குள் வளர வேண்டும் என்றும்…
2.மனைவி உயர்ந்த சக்தி பெற வேண்டும்… என்று அந்த அருள் ஒளி எனக்குள் கூட வேண்டும் என்றும்
3.இருவருமே இந்த உணர்வுகளை எண்ணி ஏங்கப்படும் பொழுது
4.இரு உயிரையும் ஒன்றாக இணைத்திடும்… ஈர்த்திடும் உணர்வுகள் ஒன்றிடும் பருவத்தை அடையச் செய்கின்றது.

இப்படி அடைந்த உணர்வுகள் தான் உடலை விட்டுச் சென்ற பின் சத்தியவான் சாவித்திரி…! இன்னொரு உடலுக்குள் அழைத்துச் செல்லாது “ஏகாந்த வாழ்க்கை” வாழும் நிலை பெற்றனர்.

ஆகவே உயிருடன் ஒன்றி உணர்வின் தன்மை ஒன்றி வாழும் பொழுது “சாவித்திரி எமனிடமிருந்து தன் கணவனை மீட்டினாள்…”

நம் பூமிக்குள் வரும் அந்த உணர்வினைக் கூர்மையாக உற்றுப் பார்த்து இருவருமே ஒன்றாக அந்த உணர்வை ஒருவருக்கொருவர் பெற வேண்டும் என்ற உணர்வினை அவர்களுக்குள் விளைய வைத்து அந்த உணர்வின் அணுவாக வளர்த்துக் கொண்டார்கள்.

அவ்வாறு வளர்த்து உடலை விட்டுச் சென்ற பின் இரு உயிரும் ஒன்றாகி…
1.தான் நுகரும் உணர்வுகள் ஒளியின் சரீரமாகத் துருவ நட்சத்திரமாக…
2.“இந்தப் பிரபஞ்சத்தில் உருவாகும் அனைத்தையும் ஒளிக்கதிராக மாற்றிக் கொண்டுள்ளார்கள்…”

அணுக்களாகி… வளர்ச்சியில் கோளாகி… கோள் நட்சத்திரங்களாகி… நட்சத்திரம் சூரியனாக எப்படி ஆனதோ இதைப் போன்று தான் உயிரணுவாகி… பல கோடிச் சரீரங்கள் பெற்று… பரிணாம வளர்ச்சியில் மனித உடலை உருவாக்கி… மனிதனான பின் “தன் எண்ணத்தால்” உருவாக்கும் ஆற்றல் பெறுகின்றது.

சூரியன் ஆனபின் தான் மற்றொன்றைத் தனக்குள் வளர்த்து தீமைகள் அகற்றி ஒளியின் சுடராக மாற்றுவது போன்று உயிரணு மனிதனாகத் தோன்றிய பின்… அனைத்தையும் ஒளியாக்கும் தகுதி பெற்றது தான் அது.

சந்தர்ப்பத்தால் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது தான் ஒவ்வொரு பொருளும் உருவாகின்றது. ஆனால் மனிதனான பின் ஒன்றைக் கவர்ந்து உருவாக்கும் திறன் பெற்றவன்.

அத்தகைய திறன் பெற்ற நாம்… அதைச் சீராகப் பயன்படுத்த வேண்டும்.

அதற்காக வேண்டித் தான் அருள் ஒளியின் உணர்வுகளை உங்களுக்குள் பாய்ச்சி அருள் ஞானிகள் பெற்ற உணர்வினைப் பெறும்படி செய்கிறேன் (ஞானகுரு).

அதே சமயத்தில்
1.இந்த உபதேசத்தின் வாயிலாக உங்களை அந்தத் துருவ நட்சத்திரத்திற்கே அழைத்துச் சென்று
2.அதனின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலமாக அமைந்திருக்கும் அதனுடன் உங்கள் நினைவினை இணைக்கச் செய்து
3.கூர்மையாக நினைவாக்கி அதைக் கவரும் பருவம் உங்களுக்குள் ஆக்கப்படும் பொழுது
4.உங்களை அறியாது தீமையை விளைவிக்கும் அணுக்களுக்கு அந்த அருள் ஞானிகள் உணர்வுகள் இரையாகி
5.உங்கள் உடலுக்குள் இருக்கும் பகைமை உணர்வுகள் அகன்று “ஞானத்தின் வழியில் வளர்ச்சி பெறும் தகுதி பெறுவீர்கள்…”

ஆத்மாவைச் சுகமாக்க வேண்டும்

 

கண்டெடுத்த இரசாயணத்தைக் கண்ணாடியில் பூசித் தன் பிம்பத்தைத் தானே காணும் நிலையை அறிந்துள்ளீர்கள்.

மாயக் கலியில் அவதரித்த செயற்கை யுகம் கொண்ட மனிதர்கள் எல்லாம்
1.தன் எதிரில் உள்ள பிம்பத்தைத்தான் அந்தக் கண்ணாடியில் காண்கின்றார்கள்.
2.ஆனால் எல்லாவற்றையும் அன்றே கண்ணால் (எந்தக் கருவியும் இல்லாது) கண்டான் சித்தன்.

உலக நிலையையும்… மற்ற மண்டலங்களின் நிலையையும் அறிந்து வாழ்க்கைக்கு என்ன பயன்..? என்றும் சிலர் எண்ணிடலாம்.
1.ஆத்ம நிலையைத் தன் வழிக்கு ஏற்க வந்தவர்களுக்கு அறிந்திடத் தான்
2.இந்தப் பாட நிலையையே கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.
3.மனிதச் சக்தியில் எந்த நிலையில் சக்தி நிலை கலந்துள்ளது…? என்று அறிந்து கொள்ளுங்கள்.

இந்தப் பூமி எப்படிச் சூரியனிலிருந்து வரும் அணுக் கதிர்களைத் தன் சக்தியில் ஈர்த்துப் பல நிலைகளை நமக்களிக்கின்றாளோ… பூமித் தாயின் அந்த நிலையான சக்தி எல்லாமுமே இந்தப் பூமியில் வாழ்ந்திடும் நமக்கும் “அந்த ஈர்க்கும் தன்மை எல்லாமே உள்ளன…!”

1.சூரியனிலிருந்து வெளிப்படும் தன்மை எல்லாவற்றையுமே நாம் நேராகவே நம் நிலைக்கு ஈர்த்திடலாம்.
2.நம் உடலில் வரும் நோய்களை நீக்கவும் அந்தச் சூரியனிலிருந்தே
3.பல வகை மூலிகைகள் கொண்ட மருந்தின் நிலையை நம் உடலுக்கு நாம் ஈர்த்திடலாம்.
4.நம்மைச் சுற்றியுள்ள ஒலிகள் நம் செவியில் பட்டுக் கேட்பதைப் போல் நாம் காணாத இடத்திலுள்ள ஒலிகளையும் ஈர்த்திடலாம்.

நாம் எடுக்கும் சுவாசத்தில் அந்த ஒலியுடன் கலந்துள்ள ஒளியை நாம் ஈர்க்கும் பொழுது எங்கெங்கும் நடக்கும் நிலையையும் நாம் ஈர்க்கும் தன்மை கொண்டு
1.அந்த ஒளியின் பிம்பம் படும் நிலையில் உள்ள எல்லாவற்றையுமே
2.இருந்த இடத்திலிருந்தே நாம் கண்டிடலாம்.

இந்த மனித சக்திக்குக் கால நிலை… பூகம்பம் வரும் நிலை… பெரும் மழை வரக்கூடிய நிலை…! இது எலலாவற்றையுமே உணரும் தன்மை நம் உடலில் இருக்கின்றது. நம் நினைவை மாற்றி விடுவதால் இதை எல்லாம் அறிந்திடாமல் தவற விடுகின்றோம்.

பூமிக்கு எப்படி ஈர்ப்பு நிலை என்னும் காந்த சக்தி உள்ளதுவோ அதைப் போல் இந்தப் பூமியில் உதித்த உயிர் அணுக்கள் எல்லாவற்றுக்குமே உள்ளன என்றாலும்
1.மனித உடல் பெற்ற ஆத்மாக்களுக்கு அனைத்தையுமே அறிந்திடும் சக்தி உள்ளது.
2.செயல்படுத்தும் தன்மை வாய்ந்த உறுப்புகளும் உள்ளன.

இந்த மனிதன் உண்டு… உடுத்தி… உறங்குவது தான் வாழ்க்கை…! என்ற சுகத்தை எண்ணுகின்றான்.

இந்தச் சுகம் எத்தனை நாளைக்கு…?
1.தன் எண்ண சுகத்தைக் கொண்டே ஆத்மாவைச் சுகமாக்கிடாமல்
2.இந்த உடல் சுகத்தைத்தான் பெரிதாக எண்ணி வாழ்கின்றான்.

ஆகவே இந்த உடல் என்னும் கூட்டிற்கு அனைத்துச் சக்திகளையும் அறிந்து வாழும் சக்தி உள்ளது என்பதை உணர்ந்து நமக்கு முன் வாழ்ந்த பெரியவர்கள் சித்தர்கள் ஞானிகள் மகரிஷிகள் அடைந்த பேரானந்த நிலையை அடைய முற்படுங்கள்…!

குலதெய்வ வழிபாடு

 

இன்று மனிதனாக இருந்தாலும் இதற்கு முன்… நாம் தேளாகவோ பாம்பாகவோ இருந்திருப்போம் அதனிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்ள நம் தாய் தந்தையர் அடித்திருப்பார்கள் அந்த உணர்வின் தன்மை கொண்டு நமது உயிர் அவர் உடலில் புகுந்து விடுகின்றது.

ஆகவே…
1.நம்மை மனிதனாக உருவாக்கிக் கொடுத்தவர்கள் தாய் தந்தையரே… அவர்களே “கடவுள்”
2.நம்மைக் காத்தருளிய நம் தாய் தந்தையரே “தெய்வம்”
3.நல்வழி நமக்குக் காட்டிய தாய் தந்தையரே “குரு”
4.என்னை உருவாக்கிச் சீராட்டித் தாலாட்டி வளர்த்து ஆளாக்கி நல்வழி புகட்டியது என் அன்னை தந்தையரே என்று எண்ணி
5.என் தாய் தந்தையர் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
6.மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் பெற வேண்டும்
7.எங்கள் வாழ்க்கையில் மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும்
8.அன்னை தந்தையரின் அருளாசி என்றும் எங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று தான் ஆலயத்தில் எண்ணும்படி செய்தார்கள் ஞானிகள்.

ஆலயத்திற்குச் சென்று இப்படி யாராவது வணங்குகின்றோமா…? இல்லை…! நம் உயிரை மதிப்பது இல்லை… அம்மா அப்பாவிற்கு உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும் என்றும் எண்ணுவதில்லை…!

ஆனால் கந்த புராணத்திலே இதைத் தெளிவாகக் காட்டியுள்ளார்கள்

நாரதன் ஞானக்கனி கொண்டு வந்து கொடுப்பதாகவும்… “உலகை முதலில் வலம் வருபவருக்கே இதைக் கொடுக்கலாம்…” என்றும் உணர்த்துகின்றார்கள்.

விநாயகர் என்ன செய்கின்றார்…?
1.அம்மா அப்பாவைச் சுற்றி வந்து உடனே கனியை வாங்கிக் கொள்கின்றார்.
2.சாதாரண மனிதனுக்கும் புரியும்படியாகச் சுட்டிக் காட்டி உள்ளார்கள்.

அதையாவது நாம் புரிந்து கொள்ள வேண்டும் அல்லவா…!

ஆனால் முருகன் என்ன செய்கின்றான்…? விரிவடைந்த உணர்வின் தன்மை கொண்டு அலைந்து நான் பெறுவேன் என்று செல்கின்றான். ஆனால் விநாயகன் முந்திக் கொண்டான்
1.உடலான சிவனில் ஒன்றிக் கொண்டான்
2.உடலுக்குள் இருந்த சக்தியின் சொரூபத்தில் இவன் ஒன்றிக் கொண்டான் என்ற நிலையைக் காட்டுகின்றார்கள்.

விரிவடைந்த எண்ணத்தின் நிலைகள் அனைத்திலும் எண்ணி எடுத்து இந்த உணர்வின் தன்மை ஒளியாக்க முடியும் என்றவன் முருகன். ஆனால் பின் வந்தவர்கள் அந்த்த் தெளிவுரைகளை மறைத்தே விட்டார்கள்… அந்த உண்மைகளை நாம் புரிந்து கொள்ள முடியவில்லை.

கொசு நம்மைக் கடிக்கிறது… இரத்தத்தைக் குடிக்கிறது. அது மடிந்த பின் நம் உடலுக்குள் வந்துவிடுகிறது… மனிதனாக உருப்பெறும் கருவாகின்றது. ஒன்றைக் கொன்றால் உடனே தாக்கும் நிலை கொண்டு நம் உடலுக்குள் புகுந்து விடுகின்றது.

உணர்வை எடுத்து மனிதனாகப் பிறக்கும் தகுதி பெறுகின்றது.

இயற்கையின் செயலாக்கங்களை நீ எப்படிப் பெறுகின்றாய்…? என்பதை எனக்கு இப்படித் தான் தெளிவாக்கினார் ஈஸ்வரபட்டர்.
1.நீ மனிதனாக ஆனாய்…! எதன் வழி கொண்டு…?
2.உனக்குக் கடவுள் யார்…? உன் அன்னை தந்தையர் தான்
3.உனக்குத் தெய்வம் யார்…? உன் அன்னை தந்தையர் தான்
4.உனக்கு குரு யார்…? வாழ வழி வகுத்துக் கொடுத்து நல்வழி காட்டியது யார்…? உன் அன்னை தந்தை தான்
5.உன் அன்னை தந்தையரை உருவாக்கியது யார்…? அவருடைய அன்னை தந்தையர்
6.ஆகவே அந்தக் குல வழியில் தான் நீ மனிதனாக ஆனாய்… என்று தெளிய வைத்தார் குருநாதர்.

அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் என்ன…?

எங்களுடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற எங்கள் குலதெய்வமான அந்த உயிரான்மாக்கள்… ஒளியின் சரீரமாக இன்றும் திகழ்ந்து கொண்டிருக்கும் அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் (சப்தரிஷி மண்டலம்) இணைய வேண்டும்.
1.உடல் பெறும் உணர்வுகள் கரைய வேண்டும்
2.என்றென்றும் அறிவின் ஒளியாக இருக்க வேண்டும்
3.உணர்வின் அறிவாக நாங்கள் அதைப் பெற வேண்டும்
4.எங்களை அறியாது வந்த இருளை அகற்ற வேண்டும் அந்தத் திறன் பெற வேண்டும் ஈஸ்வரா என்று
5.குலதெய்வங்கள் மூதாதையர்களை விண் செலுத்தும்படி சொன்னார் ஈஸ்வரபட்டர்..

அதைத் தான் உங்களுக்கும் சொல்கிறோம் (ஞானகுரு).

நொடிக்குள் பெற வேண்டிய உன்னத சக்தி

 

ஒவ்வொரு உயிர் அணுக்களின் (உயிரினங்கள்) உயர் அமில வீரிய குணச் செயலின் தொடர் என்பது சுழல் சக்தி எண்ணமாக… பிரம்மத்தின் பிம்பமாக… சரீரச் செயல் வாழ்க்கையாகப் பூமியின் ஈர்ப்பில் செயல்படுகிறது.

அந்த உயிரினங்கள் தன் வாசனை குணத்திற்கொப்ப ஈர்ப்பின் பக்குவமாக வளர்ச்சிப்படுத்திக் கொண்டு செயல்படும் அனைத்திலுமே
1.இரு குண அமிலங்கள் சந்திக்கும் நேர் தொடரில் கலந்து
2.சத்ரு…மித்ரு… என்ற செயல் நடக்கிறது.

அதனால் அந்த இரு குண அமிலங்களில் எது வீரியத் தன்மையோ அதன் குணத்திற்கொப்ப மற்றொன்று அதனுள் கலந்து மற்றொன்றாக உருவாக்கிடும் செயல் நடக்கின்றது.

இப்படிப்பட்ட எதிர் மோதல்களை எல்லாம் தன் வாழ்க்கை நடை முறையில் சந்திக்கும் பொழுது
1.அந்த நேரத்தில் அந்த எண்ண மோதல்களை
2.அறிந்து உணர்ந்து செயல் கொண்டிடும் அவகாசக் காலம் ஒரு நொடிப் (நொடிக்குள்) பொழுதின் காலம் தான்.

அந்த நொடிப் பொழுதில் அறிந்ததை உடனே தெளிதலும் தெளிந்ததின் பொருள் விளங்கி எதிர் மோதல் குணங்களை தன்னைப் (ஆன்மா) பாதித்திட வண்ணம் காத்துக் கொள்ளும் நிலைக்கு வருகின்றது.

அது மட்டுமல்ல…!
1.அந்த எதிர் மோதல் குணங்களையே மாற்றியமைத்து நற்குண நீர் பாய்ச்சி
2.தன்னுள் எதிர் மோதல் குணங்களையே அமுதமாக உட்கொண்டுவிடும் வல்லமை பொருந்தியவர்கள் தான்
3.”சித்சத்துவ பரமார்த்த புருஷர்கள்…!”

பிராணிகளில் மான் தன் குட்டிக்குப் பாலைப் புகட்டும் பொழுது அது எடுக்கும் உணர்வின் தன்மை எப்படிப்பட்டது…?

பாலை ஊட்டும் பொழுதே இயற்கையாகச் செயல் கொள்ளும் தொடரில் தன்னைப் புசிக்க வரும் கொடிய விலங்குகளின் உணர்வுகள் காற்றிலே அலைகளாக வரும் பொழுது தன் மீது வந்து மோதியவுடன் அந்த வாசனையை அறிந்து கொள்கிறது.
1.உடனே தன் சுவாசத்தின் ஈர்ப்பினால் எதிர் மோதல் குணங்களை அறிந்து
2.தான் சுரந்திடும் பாலைத் தடைப்படுத்தி நிறுத்தி விடுகிறது.
3.தன் குட்டிக்கும் அதே உணர்வை ஊட்டி ஒரு நொடிக்குள் நடைபெறும் இயற்கையின் சூட்சம உணர்வில்
4.அது எடுக்கும் அச்ச உணர்வு கொண்டு விரைந்து தப்பி ஓடிவிடும்.

ஏனென்றால் அதற்குள் இருக்கும் குண அமிலச் சுரப்பிகள் இயற்கையின் வழி வரும் (மற்ற கொடிய மிருகங்கள்) அந்த வாசனைக்கொப்ப உணர்வு கொண்டு அந்தச் (மானின்) சரீரத்தைச் செயல்படுத்தச் செய்கிறது.

அதாவது ஒரு கட்டளைக் கேந்திரமாகச் (CONTROLLING STATION) செயல்படும் எண்ணத்தின் பிடர்தல் உந்து விசை கொண்டு எந்த உணர்வுகள் அச்சத்தை ஊட்டியதோ (ஈர்த்ததோ)
1.அதே உணர்வுகளில் நொடிக்குள் மாறு கொண்ட விநோத செயல்பாட்டை அறிந்து
2.தன்னைத் தற்காத்துக் கொள்ளும் செயல்கள் துரித கதியில் செயல்படுகிறது.

இதே செயல் முறை தான் கௌதம புத்தருக்கும் அன்று ஏற்பட்டது.

புத்தர் தான் பெற்ற அனுபவ ஞானத் தொடரில் சரீர அவஸ்தைகளிலிருந்து மனிதன் விடுபட்டு இந்தச் சரீரத்தைக் காத்திட வேண்டும் என்றால் மனிதன் விடுபட வேண்டிய குணங்களில் “அதி ஆசையை முதன்மையாகக் காட்டினார்…!”

ஆக பிறவித் துன்பங்களுக்குக் காரணமே “ஆசை” என்ற சொல் நாமப்படுத்தி… சூட்சமங்களை உள் மறைத்து உயிரான்ம சக்தியை வலு கொண்டதாக ஆக்கிடும் செயலில் புத்தருக்குப் பரிபூரணத்துவம் உண்டு.

நம் உயிரான்ம சக்தியைக் காத்திடும் பஞ்ச உறுப்புகளில் எதிர் மோதல் தன்மைகளைப் பக்குவமாக விலக்கிடும் உணர்வுகள் கொண்டு அறிந்து செயல்படும் பிடர்தல் செயல்பாட்டின் பொழுது
1.உயிரான்ம சக்தியில் ஏற்கனவே பதிவு செய்த செயலை வீரியமாக்கிடாமல்
2.ஆன்மாவில் பதிந்த பின் சுவாசத்தின் வழி கொண்ட சரீர உணர்வுகளில் செயலாக்கத்திற்கு
3.ஞான விழிப்பார்வை கொண்டு “நொடி நேர செயல்பாடாக…”
4.அருள் உணர்வுகளைத் தன் ஒளிகாந்த சக்தியால் வலுக் கூட்டிக் கொண்டு அதனைப் பார்வை வழியாச் செயல்படுத்துதல் வேண்டும்
5.ஆனால் அப்பொழுது செயல்படும் செயலின் ஈர்ப்பில் அச்ச உணர்வுகளைக் கூட்டிக் கொள்ளக் கூடாது.

காத்திடும் பக்குவமும்… எதிர் மோதல் குணங்களையே தன் ஒளி காந்தத்தால் வசமாக்கி.. அன்பு கொண்டு ஈர்த்திடும் செயலாக… தன் எண்ண அசைவு கொண்டு செயலாற்றிடல் வேண்டும்.

புத்தரைக் கொல்ல வந்த காட்டுக் கள்வன் எடுத்த விரக்தியின் உச்சகட்ட ஆவேச உணர்வுகள் “சாது என்றோ… சம்சாரி என்றோ…” அறிந்து கொள்ளாத செயல்பாடாக இருந்தது.

அவனின் அறிவின் மௌடீகம் எவ்வளவு கொடுமையாக வீரியமாக அவனுக்குச் செயல்பட்டாலும் அதை ஒரு நொடிக்குள் மாற்றியமைத்துச் சமப்படுத்திய
1.அந்தப் புத்தனின் செயலாற்றும் திறன்
2.எல்லா ஞானச் செல்வங்களும் (மனிதர்கள்) பெற்றிட வேண்டும்.

அகஸ்தியன் தாய் கருவிலே பெற்ற பூர்வ புண்ணியத்தை நாமும் பெற வேண்டும்

 

அகஸ்தியனின் தாய் தந்தையர் கொடூர மிருகங்களிடமிருந்தும் விஷ ஜந்துக்களிடமிருந்தும் தங்களைக் காத்துக் கொள்ள இயற்கையில் விளைந்த விஷத்தை முறிக்கும் ஆற்றல் கொண்ட மூலிகைகளை அரைத்துத் தங்கள் உடலிலே பூசிக்கொண்டார்கள்.

பூசிய பின்… உடலின் வெப்பத்தால் வெளி வரக்கூடிய அந்த மணங்களை மற்ற மிருகங்கள் நுகரப்படும் போது அவைகளுக்கு எதிர்நிலையாகி… அதனின் வலுவை இழந்து விடுகின்றது… மிருகங்கள் விலகி ஓடி விடுகின்றது.

புலியானாலும் யானையானாலும் தேளானாலும் பாம்பானாலும் அஞ்சி ஓடி விடுகின்றது. அவைகள் எல்லாம் விஷத்தின் இயக்கம் கொண்டது தான். ஆனாலும்
1.விஷத்தை முறிக்கும் பச்சிலைகளை உடலில் முலாமாகப் பூசியபின்
2.அந்த மணத்தை அந்த விஷம் கொண்ட உயிரினங்கள் நுகரப்படும் பொழுது இவர்கள் அருகிலே வருவதில்லை.

அகஸ்தியன் என்று சொல்லும் அவர்கள் தாய் தந்தையர்கள் அத்தகைய பாதுகாப்பு கொண்டு தான் வாழ்ந்தார்கள். அதே சமயத்தில் கணவன் மனைவி இணைந்து கர்ப்பமான பின் இந்த மணத்தைக் கருவில் இருக்கும் குழந்தையும் நுகர்கின்றது.

நஞ்சை வென்றிடும் சக்தியாக அந்தக் குழந்தை உருவாகிறது. பத்து மாதமும் அந்த உணர்வுகளை நுகர்ந்து குழந்தை பிறக்கிறது. அப்படி உருவானவன் தான் அகஸ்தியன்.

ஏனென்றால் இதை நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த உபதேசத்தை நீங்கள் கூர்மையாகக் கேட்டுப் பதிவாக்கி…
1.நினைவு கொண்டு அதை நுகரப்படும் பொழுது
2.உயிர் உங்களுக்குள் நஞ்சை வென்றிடும் அணுவாக மாற்றுகின்றது.

அன்று அகஸ்தியன் பெற்ற சக்தியும்… அவனின்று வெளிப்பட்ட சக்திகளும் இன்றும் நம் பூமியில் உண்டு. அகஸ்தியன் கண்டுணர்ந்த…
1.விண்ணில் தோன்றிய உணர்வுகள் அது எவ்வாறு…? என்பதை இணைத்து
2.ஆதி முதல் இந்த உணர்வுகள் மாற்றம் அடைந்ததை இணைக்கப்படும் பொழுது
3.அண்ட சராசரத்திலே விளைந்த உணர்வுகளையும் உங்களால் நுகர முடியும்
4.அகஸ்தியன் நஞ்சை வென்று உணர்வை ஒளியாக மாற்றித் துருவ நட்சத்திரமாக அமைந்த நிலையும் உங்களுக்குள் கலக்க நேரும்.

அத்தகைய அணுக்களாக உங்களுக்குள் விளைந்து விட்டால்… அது தன்னுடைய இரைக்காக உணர்ச்சிகளை உந்தப்படும் போது… அகஸ்தியன் பெற்ற சக்திகள் அனைத்தையும் பெறக்கூடிய தகுதி நீங்கள் பெறுகின்றீர்கள். தீமைகளை அகற்றும் சக்தியும் நீங்கள் பெற முடிகின்றது.

அகஸ்தியன் தனக்குள் நஞ்சினை முறித்திடும் உணர்வுகளை தாய் கருவிலேயே பெற்றதனால்… சிறுகச் சிறுக வளர்ந்து எத்தகைய விஷத்தையும் அடக்கும் தன்மையும் அந்த விஷத்தை முறித்திடும் ஆற்றலும் அவனுக்குள் விளைகின்றது.

ஆனால் சாதாரண மக்களாக இருப்போர்… நோயுடன் வேதனைப்படுவோரை ஒரு கருவுற்ற தாய் நுகர்ந்து விட்டால் அந்தச் சிசுவிற்குள்ளும் அது இணைந்து விடுகிறது.

அதாவது… இன்னொரு மனித உடலில் விளைந்த ஆஸ்துமாவோ கேன்சரோ கடுமையான நோய்வாய்ப் பட்டதை… ஒன்றிலிருந்து தொண்ணூறு நாட்களுக்குள் கருவுற்ற தாய் உற்றுப் பார்த்து நுகர்ந்தால்
1.அந்தக் கஷ்டங்களை தாய் அறிய முடியும்… தாய் உடலுக்குள் அணுக்களாக விளைகின்றது
2.கருவிலிருக்கும் குழந்தைக்கோ இந்த உணர்வுகள் பட்டு விஷ அணுக்களாக உருவாகும் தன்மை வருகின்றது.

பிறந்த பின்… ஆரம்பத்தில் குழந்தைப் பருவமாக இருக்கும் பொழுது தெரியவில்லை என்றாலும்
1.எந்தப் பருவத்தில் எந்த மனித உடலில் அந்த உணர்வுகள் வந்ததோ
2.அந்தப் பருவம் வரும் பொழுது… அந்த உடலில் உருவான அதே நோய் இங்கேயும் வரும் பார்க்கலாம்.

இதெல்லாம் தாய் கருவிலே விளையும் உணர்வுகள்.

இதற்குத் தப்பியவர்கள் நல்ல உடலாக நாம் இன்று பெற்றிருக்கின்றோம். ஆனாலும் கஷ்டங்களையும் துன்பங்களையும் சாப வினைகளையும் தாய் கேட்டு அறிந்திருந்தால்… கருவிலே அது பதிவாகி இருந்தால்… நம்முடைய திறமைகள் எத்தனை இருந்தாலும் குடும்பத்தில் அந்தச் சாப அலைகள் தொல்லைகளாக வரும்.

எனென்றால் உயிர் நுகர்ந்த பின் அந்த உணர்வின் இயக்கமாக மாற்றி விடுகின்றது. இப்போது (பிறந்ததிலிருந்து) அல்ல… தாய் கருவிலேயே இந்த வித்துக்கள் ஊன்றப்படுகின்றது. அதனுடைய காலப் பருவம் வரும் பொழுது அதனுடைய விளைவுகளை விளைய வைத்துவிடும்

ஒரு தென்னை மரம் வளர்ச்சியானாலும் அதனுடைய காலப்பரும் வரும் பொழுது தான் காய்க்கின்றது. செடியோ தாவரமோ எதுவாக இருந்தாலும் அதனுடைய காலப்பருவம் வரும் பொழுது தான் அதனுடைய விளைச்சல்கள் வருகின்றது.

நெல் போன்ற தானியங்களை எடுத்துக் கொண்டாலும் அதே போன்று தான் நான்கு மாதம் அல்லது ஆறு மாதம் அது விளைந்து வருகின்றது.

மூன்று மாதத்தில் விளையக்கூடிய நெல் வகைகளையும் கண்டுபிடித்து உருவாக்கியிருக்கிறார்கள் இணை சேர்த்த நிலைகள் கொண்டு துரித காலத்தில் விளைவதும் உண்டு.

அது போன்று தான்
1.கர்ப்பமுற்ற தாய் உற்றுப் பார்த்த உணர்வுகள் பிறக்கும் குழந்தையை மாற்றி விடுகின்றது
2.இது தான் “பூர்வ புண்ணியம்” என்று சொல்வது.

தீமை செய்வோரையோ திருடுவோரையோ அல்லது குற்றங்கள் செய்வோரையோ கருவுற்ற தாய் உற்றுப் பார்த்து… இப்படிச் செய்கின்றார்களே…! என்று கூர்ந்து அதை நுகர்ந்தால் கருவிலேயும் இந்த உணர்வின் சக்தி இணைந்து விடுகிறது.

குழந்தையாகப் பிறந்த பின் அவன் வளர வளர தவறு செய்பவனாகவே அவன் மாறுகின்றான். என்னதான் அவனைத் திருத்த முயற்சி செய்தாலும் முடியாது.

சாமிக்குத் தீபாராதனை காட்டியோ… சாமியாருக்கு பணம் கொடுத்தோ… ஜோசியக்காரனிடம் சென்றாலும் அதை எல்லாம் மாற்ற முடியாது.

ஏனென்றால் இயற்கையின் நிலைகள்…
1.நமது உயிர் நாம் நுகர்ந்த உணர்வை ஓ… என்று இயக்கி
2.ம்… என்று உடலாக மாற்றிக் கொண்டே உள்ளது.

ஆனால் அதே தாய் மகரிஷிகளின் அருள் சக்தி என் குழந்தை பெற வேண்டும் என்று ஏங்கி… இந்த உணர்வைப் பல முறை பாய்ச்சினால் தான் அவனைத் திருத்த முடியும்.

இரகசியங்களை யாம் வெளிப்படுத்துவதன் உண்மையான நோக்கம்

 

1.எண்ணிலடங்காத பிறவிகள் எடுத்து எடுத்து இளைக்கலுற்றேன் இறைவா…! என்று கவி புனைந்தவனும்
2.ஏழு பிறப்பின் வினைகளும் அகல வேண்டும் என்றே உரைத்த வகையிலும்
3.எண்ணிலடங்காத பிறவிகளைப் பற்றியும் ஏழு பிறவிகளைப் பற்றியும் அந்த உண்மை நிலைகளை யாரப்பா அறிந்து கொண்டார்கள்…?

ஏனென்றால் இது விவாதம் கொண்டு உரையாட வேண்டிய விஷயம் அல்ல…! சிந்தனையில் கொள்ள வேண்டிய தனித்துவ நிலையப்பா இது.

உயிராத்மா தன் எண்ணம் கொண்டு பிறப்பிற்கு வரும் செயலில் தனக்குள் சேர்த்துக் கொண்ட அமிலத் தன்மைகளில் குணங்களால் அதனுள் எழுந்திட்ட வீரிய நிலைக்கொப்ப சுவாசம் கொண்டே தனக்கொத்த தன்மைகளில் பிறப்பிற்கு வருகின்றது.

மனிதனாகப் பிறப்பிற்கு வரும் உயிராத்மா பிறவி என்ற மாயையில் தன் உண்மை நிலை மறக்கப்பட்டே பிறந்து வருகின்றது.

பூமி சமைத்து வெளிப்படுத்தும் சக்திகளைச் சுவாசமாக்கி அதன் வழி அறிவின் ஞானம் பெற்று அனுபவமாகப் பெறும் செயல்களில் மனித எண்ணத்தின் செயல்பாடே…
1.தனக்குத் தேவையான காரியங்களைச் செயல்படுத்தும் அனைத்திலும்
2.“நான்…!” என்ற உணர்வைக் கூட்டிக் கொண்டே வினை செயல் புரிகின்றது.
3.எந்த எண்ணம் வலுவோ அந்த எண்ணத்தின் வட்டச் சுழற்சியில் முதிர்வு நிலை பெற்று
4.புவி ஈர்ப்பின் பிடிப்பில் தான் வலுக் கொண்டிட்ட குணங்களுக்கொப்ப “மீண்டும்…மீண்டும்…” பிறப்பிற்கு வருகின்றது.

பிறவி எடுத்திட்டதனின் பயன் என்ன..? என்ற வினா எழும்பினால்… தியான வழியில் அறிவின் ஞானம் உயர் ஞானமாக்கும் சிந்தனை கொண்டு… தெளிவு கொண்டிட முயற்சிக்கும் பக்குவத்தில் “அனைத்துமே சித்திக்குமப்பா…!”

ஞானத்திற்குத் தேவை ஒன்று உண்டு. அதுவே உயர் ஞானம் பெற்றிட முயலும் “முயற்சி…!”

1.தன் உயிராத்ம வலுவின் முலாமைக் கூட்டிக் கொண்டு
2.எண்ணத்தின் செயலுக்கு எது தேவையோ அதையே முயற்சித்து… அந்தப் பேரருளைக் கூட்டி
3.இதற்கு முன் எடுத்துக் கொண்ட வினைப் பயனை மாற்றிடும் நல்லாக்கத்தின் செயலே
4.மனிதன் தெய்வத் தன்மை பெற முயற்சித்தால் அது திருவினையாக்கும்.

தெய்வத் தன்மை பெறுவதுவும் ஒரு பிறவியப்பா…!

1.என் (ஈஸ்வரபட்டர்) நிலைக்கு ஞானச் செல்வங்கள் (மனிதர்கள்) உயர்ந்திட வேண்டும் என்பதற்காக
2.சூட்சம இரகசியங்கள் அனைத்தையும் கூறி வருகின்றேன்.
3.அது அனைத்தையும் நீங்கள் பெற்று “என்னையும் முந்திச் செல்லவே ஆசி கூறுகின்றேன்…!”

மனிதன் என்ற பிறப்பில் தன்னைத் தான் உணரும் பக்குவத்திற்கு தன்னுள் உள்ள இறைச் சக்தியை வலுக் கூட்டும் முயற்சிக்குச் சங்கட அலைகளை வாழும் வாழ்க்கை மோதலிலிருந்து அறவே விலக்கிடல் வேண்டும்.

எண்ணத்தில் கடுமையும் சொல்லில் உபதேசமும் உரைத்திடும் எத்தகைய சக்தி பெற்ற ஞானவான்கள் யாராக இருந்தாலும்
1.சத்தியம் என்ற நேர் பாதை காட்டிடும் உண்மை நிலைக்கு
2.தனக்குள் இருக்கும் எண்ணத்தின் கடுமையை மாற்றிக் கொண்டால்
3.அவர்களும் நல் நிலை பெற்றிட முடிந்திடும்.

ஆகவே எல்லா உயிர்களையும் சமமாக… கடவுளாக மதிக்கும் உயர் ஞானத் தன்மையின் வலுவைக் கூட்டிக் கொண்டால் இந்த மனிதப் பிறவியிலேயே தெய்வப் பிறவி நிலை பெற்று விடலாமப்பா…! எனது ஆசி உங்களுக்கு உறுதுணையாக இருக்குமப்பா…!

நம்முடைய கூர்மை (இலக்கு) எதன் மீது இருக்க வேண்டும்…?

 

உயிர் தோன்றி அணு தோன்றி சூரியனாக வளர்ச்சி பெற்றது வரையிலும்… சூரியனின் வளர்ச்சியில் உயிரணுக்களை உருவாக்கி மனிதனான பின் மனிதனின் நிலைகளில் பிறவி இல்லா நிலை அடைந்த மகரிஷிகளின் உணர்வுகளை குருநாதர் காட்டிய அருள் வழிப்படி உபதேசிக்கின்றோம்… உங்களுக்குள் பதிவு செய்கிறோம்.

தியானத்தின் மூலம் அந்த மகரிஷிகள் உணர்வுகளைப் பெருக்கி அதனின் வலுக் கொண்டு நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த உயிரான்மாக்களை நாம் அனைவரும்
1.அந்தச் சப்தரிஷி மண்டல ஈர்ப்பின் துணை கொண்டு அங்கே உந்தித் தள்ள வேண்டும்.
2.அதே சமயம் அந்த ஒளிக் கதிர்கள் இந்த உயிரான்மாக்களின் மீது படப்படும் பொழுது உடல் பெறும் உணர்வுகள் கரைக்கப்படுகின்றன.
3.உயிருடன் ஒன்றிய ஒளியின் அறிவு நிலைத்து என்றும் அழியா ஒளிச் சரீரமாக வளர்ச்சி பெறத் தொடங்கி விடுகின்றது.

அந்தக் காலங்களில் இவ்வாறு விண் சென்றவர்கள் தான் சப்தரிஷி மண்டலங்களாக… முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் என்று வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

எண்ணிலடங்காதவர்கள் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நிலை கொண்டு பிறவியில்லா நிலை அடைந்துள்ளார்கள்.
1.ஏனோ காலத்தால் பக்தி என்ற நிலையாக அது மாற்றப்பட்டு மனித உடலின் இச்சைக்கு என்றே மாற்றிவிட்டார்கள்.
2.உண்மையின் உணர்வுகள் மறைந்தே போய் விட்டது… மெய்யின் உணர்வுகளை நாம் அறிய முடியாதபடி தடைப்படுத்தப்பட்டது.

இதைக் கேட்டறிந்த அனைவரும் உங்கள் குடும்பத்தைச் சார்ந்த மூதாதையர்கள் உடலை விட்டுப் பிரிந்து சென்றிருந்தால் இனியாவது இதன் வழி தியானியுங்கள்.

அருள் வழியை உங்களுக்குள் பெருக்குங்கள். இதன் துணை கொண்டு அந்த ஆன்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்யுங்கள். உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்து விடுங்கள். ஒளி பெறும் அறிவின் தன்மையை நிலைக்கச் செய்யுங்கள்.

அருள் மகரிஷிகளின் உணர்வைத் துணை கொண்டு என்றும் பேரின்பப் பெரு வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் அருள் மகரிஷியின் அருள் வட்டத்தில் முன்னோர்களைப் பிறவியில்லா நிலை அடையச் செய்யுங்கள்.

அவர்கள் முன் சென்றால் பின் நாமும் அங்கே செல்கிறோம். அந்தப் பேரின்பப் பெரு வாழ்வை அடைவது தான் மனிதனின் கடைசி எல்லை.
1.அகண்ட அண்டத்தில் எங்கும் செல்லலாம்
2.இருப்பிடத்தில் இருந்து கொண்டே எதையும் நுகரலாம்… அருள் ஒளியின் தன்மையைப் பெறலாம்.

இந்த மனித உடலில் இப்போது நினைவிருக்கும் பொழுதே அருள் மகரிஷிகள் உணர்வைப் பெருக்கி ஒளியின் சரீரமாக உருவாக்குங்கள்

குருநாதர் காட்டிய அருள் வழியில் இங்கே உபதேசிக்கின்றோம். உணர்வைப் பதிவு செய்கின்றோம்.
1.உங்கள் நினைவின் ஆற்றலை விண்ணுக்குச் செலுத்தச் செய்கின்றோம். அந்த உணர்வைப் பெறத் தகுதி ஏற்படுத்தினோம்.
2.அதை நீங்கள் வளர்த்துக் கொண்டால் நீங்கள் எண்ணியதை உயிர் உருவாக்குகின்றது…
3.உணர்வின் ஆற்றலைப் பெருக்குகின்றது… நினைவின் எண்ணம் கூர்மையாகின்றது.

அதன் வலிமை கொண்டு எதன் மீது நினைவைக் கூர்மையாகச் செலுத்துகின்றீர்களோ அங்கே அழைத்துச் செல்கின்றது இந்த உயிர்.

ஆகவே… நம்முடைய கூர்மை துருவ நட்சத்திரத்தின் மீதும் சப்தரிஷி மண்டலங்களின் மீதும் இருத்தல் வேண்டும். கூர்மை அங்கே இருந்தால் நாம் எந்த நேரத்தில் உடலை விட்டுச் சென்றாலும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து உடல் பெறும் உணர்வுகளை மாற்றி ஒளி பெறும் உணர்வாக விளைந்து பேரின்பப் பெருவாழ்வு அடைவோம்.

ஆகவே… இதை நீங்கள் பின்பற்ற வேண்டும். உங்களிடமிருந்து வெளிப்படும் உணர்வுகள் மற்றவருடைய தீமைகளை அகற்றிடும் சக்தியாக வளர வேண்டும்.

உயிர் + ஆன்மா – கற்பு நிலை

 

உயிரையும் ஆன்மாவையும் இரண்டையும் ஒன்றாகக் கலக்கும் சக்தியின் வீரியத்தைக் காட்ட வந்த காவிய மகரிஷியே வான்மீகி ஆவார்.

தன்னுடைய காவியத்தில் அந்த உயிர் ஆன்ம சக்தியின் தொடருக்கு இராமன் சீதை என்று காட்டினாலும் வாழ்க்கைத் தத்துவத்திலும் கூட “ஒருவனுக்கு ஒருத்தி…!” என்றபடி வாழும் வாழ்க்கை நியதியைக் காட்டினார்.

அந்த வழியில் நடந்திடும் பரிபக்குவத்தை மனிதர்கள் தங்களுக்கு ஏற்படும் அனுபவ ஞான நிலைகளும் கூட
1.தங்களுக்குத் தாங்களே விதித்துக் கொள்ளும் வாழ்க்கை நெறி முறையின் கோட்பாடு என்று காட்டி
2.அது சக்திச் சுடரால் காக்கப் பெறும் என்ற சூட்சமத்தையும் காட்டினார்.

அப்படிப்பட்ட வாழ்க்கை நெறி “கற்பு…” என்னும் சுடரால் ஒளி பெற்று விளங்குவதால் அந்தக் “கற்பு நெறி…” என்பது ஒழுக்கம் என்கிற தொடரில் பெறப்படும் உயர்ந்த பண்பு நிலை தான்.

நாம் கைக்கொள்ள வேண்டிய சாராம்சமாக அதையே வழிகாட்டியாக அமைத்து நடை முறைச் செயலாக அதனின் இயக்கம் கொண்டால் அது நல் வினைப் பயனாகப் பெற்று
1.நம் உயிர் ஆன்ம சக்தி என்றும் பிரகாசித்து
2.ஜோதித் தத்துவத்தில் நிலையாக விளங்கும்.

அப்படிக் காக்கப் பெறாத வாழ்க்கைத் தொடர் என்பது காமத்தின் அடியாக எழும் மோகமாகி வாழ்க்கை நெறியை அழித்து உயிர் ஆன்ம சக்தித் தொடரில் குலத்தையும் பூண்டோடு அழித்து மறைத்துவிடும்.

சாந்த குணம் பெற்ற உயிர் சக்தியான இராமன் அகன்றாலும்.. தைரிய குண சக்தியான லட்சுமணனால் காக்கப்படும் நிலை இருந்திருந்தாலும்…
1.சீதை என்ற ஆன்மாவில் பதியப் பெறும்
2.ஆசை என்னும் குண உந்துதல் சரீரத்துடன் ஊட்டப் பெற்றால் என்ன ஆகும்…?

நம் ஆன்மாவில் எதைப் பதிவு செய்து வழி நடத்துகின்றோமோ அதுவே ஆன்ம சக்தியாக சரீரத்தையும்
1.ஊட்டப் பெற்ற சக்தியின் தொடரில்
2.ஊட்டப் பெற்ற சக்தியின் வாசனை சமைக்கப்பட்டு சரீர கதியில் வெளி வந்து
3.அந்தச் சமைப்பின் தொடரிலே உடலில் உள்ள எல்லா உயிரணுக்களையும் தன் செயலுக்கு (ஆசைக்கு) வழி நடத்துகின்றது.

ஆசை என்ற சிறு தொடரில் இப்படி அறியாது அகப்படும் ஆத்ம சக்தியானது மோகம் என்னும் படு குழியில் வீழ்த்தப்படுவதைக் காட்டிடவே
1.இராவணனிடம் அகப்பட்டுத் தத்தளிக்கின்றது என்பதாக
2.இராவணேஸ்வரன் சீதையைக் கவர்ந்து சென்றான் என்பதில்
3.அவன் பூமியோடு பெயர்த்து எடுத்துத்தான் சீதையைக் கவர்ந்தான் என்று காட்டப்பட்டிருக்கும்.

ஏனென்றால்
1.ஆன்ம சக்தியை வலுவானப் பெற்றிருந்தால்
2.எத்தகைய தீய குண சக்தியின் வீரியமும் ஆன்ம சக்தியை நெருங்க முடியாது…! என்பதே அதனின் சூட்சமப் பொருள்.

அந்தத் தொடரில் சிந்திக்கத் தலைப்படும் ஞானி அறிய வேண்டிய உண்மையின் சாரம் ஒன்று உண்டு.

நம் ஆத்மாவைக் காக்கும்… காத்துக் கொண்டிருக்கும்.. ஜெப ஆகார அமில குண சூட்சமத்தைக் காட்டவே சீதையைக் காக்க வந்த “பக்ஷிராஜன்…! (ஜடாயு) என்ற ஓர் பாத்திரப் படைப்பில் விளக்கம் தந்தார் வான்மீகி.

ஒரு தந்தை தன் குழந்தையைப் பேணுவது போல் அது நம் ஆன்மாவை எப்பொழுதும் வட்டமிட்டுக் காக்கும் என்றெல்லாம் தொடர்புபடுத்திக் காட்டியுள்ளார். ஆனாலும்
1.நம் ஆன்ம சக்திக்குச் சக்தியூட்டும் உயிர்ச் சக்தி (இராமன்) இல்லாததால்
2.அசுர குணத் தன்மை வீரிய குணச் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டது என்று தெளிவாக்குகின்றார் வான்மீகி.

அந்த ஜடாயு தன் சிறகை இழந்துவிட்டது என்பதே நம் சூட்சமச் சரீரத் தொடரில் சிறகு இழந்து விட்டால் உயிர்ச் சக்தி தன் பறக்கும் தன்மை இழந்து விடுகிறது.

மீண்டும் ஆன்ம சக்தியான சீதையை உயிர்ச் சக்தியான இராமன் அடைய எத்தனை கடும் சோதனைகளுக்கு ஆட்படுகிறான்.

பல உயர்ந்தோரின் ஞானத் தொடர்பு பெற்ற பின் உயர் சக்திகளைப் பெற்றுத் தன் எண்ணம் கொண்டு வழி வகுத்த பாதையில் உயர்வில் தான் சீதையை அடைய முடியும்.
1.அதைத் தவிர வேறு மார்க்கம் எதுவும் இல்லை என்ற சூசகப்படுத்தி
2.நம் உயிர் ஆன்ம சக்தி காக்கப் பெறும் தொடர்பை வலியுறுத்துகிறார் காவிய ரிஷியான வான்மீகி.

குனிந்து (விலகிச்) செல்ல வேண்டிய பக்குவம்

 

“வாலியின் வீரிய குணத்தின் தன்மையின் ஆணவம்” எந்த எதிர் மோதல்களையும் தன் வசமாக்கித் தன் சக்தியுடன் ஒன்றச் செய்யும் சூட்சமம் பெற்றது.

அதிலே நல்வினைப் பயனை எண்ணியிருந்தால் ஆச்சா மரம் வெட்டப்படத் தேவை இருந்திடாது. அது தான் மனித குல மனத்தின் வீரிய சக்தி…!

வாலி வதம் என்ற சம்பவம் சபரிமலைத் தொடர் அருகே ஒதுக்குப்புற வட பகுதியில் வாழ்ந்த ஓர் இன மக்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவம்.

தவத்தின் சக்தி பெற்றவன் பிற ஆன்மத் தொடருக்கு அனைவரும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்டு ஜடாக்கினியின் செயல் இருந்திருந்தால் அவன் நிலை உயர்ந்திருக்கும். வான்மீகி பதம் பார்த்தான். அந்த ஆச்சா மரம் வீழ்ந்தது.

ஜடாக்கினி மனதிறத்தால் மற்றவர்கள் பெறும் சக்தித் தொடருக்கு எண்ணத் தடை ஏற்படுத்தித் தீவினையால் விளையாடி விட்டான். அதன் பயன் இராமபாணம் வான்மீகியால் பாய்ச்சப்பட்டது.

ஜடாக்கினி உயர் எண்ண வீரிய சக்தி தீவினைப் பயனை விளைவிக்கும் மந்திர சக்தியுடன் மோதுண்ட பொழுது எந்தப் பிரம்மாஸ்திரம் வென்றிருக்கும் என்பதனை விளக்கிடவும் வேண்டுமோ…?

இராமன் மறைந்திருந்து அம்பெய்தான் என்பதன் சூட்சமம் என்ன…? அதிலே நீங்கள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய காரியம் ஒன்றுண்டு.

தியானத்தின் மூலம் ஞானச் செல்வங்கள் (மனிதர்கள்) இன்று பெற்றுக் கொண்டிருக்கும் உன்னத நிலைகளும் மற்ற செயல்களும் எதைக் காட்டும்…?

நீங்கள் பெற்றுக் கொண்டிருக்கும் ஞான சக்திகளைப் பலர் பல எண்ணம் கொண்டு நோக்கிடும் செயலுக்கு
1.உங்களை உற்றுப் பார்க்க ஆரம்பித்தால் – அவர்களின் பார்வை அலையை
2.உங்களின் பார்வை அலையை நேர் கொண்டு மோதிடாமல் தவிர்த்திடவும் வேண்டும்.

மற்றவர்கள் மத்தியிலே உலகோதய வாழ்க்கையைப் பற்றிப் பேச வேண்டிய நிலையில்
1.பிறரின் பார்வையைக் கூடுதலான நேரம் நம் பார்வையோடு சந்திக்காமல்
2.சிறிது தவிர்த்திடவும் வேண்டும்.

தன் தவ சக்தியைக் குறைத்துக் கொண்டு வாலியின் தொடர் மீண்டும் பிறருக்குத் தீங்கிழைக்காதவண்ணம் தடுத்து ஆட்கொண்ட செயல் தான் வான்மீகியார் பெற்ற அனுபவ நிலை என்பது

அந்தக் காப்பிய ரிஷி மீண்டும் தன் ஈர்ப்பின் தொடரில் வெகு வேகமாகச் சக்தியைக் கூட்டிக் கொள்ளும் செயலில் பற்பல ரிஷிகளுடன் தொடர்பு கொண்டார். அதில் பரசுராமர் தொடரும் உண்டு.

ஜடாக்கினி அனுபவம் ஞானம் என்பதே உயர் சக்தி வலுக்கூடும் வலுவின் வலுவாகும்,
1.தன்னுடைய அனுபவமே போதனையாகி
2.உயர் சக்தியை ஆட்கொள்ளும் நாத வித்தின் மூலம் பரிமளிக்கும் செயல் நிலைக்கு
3.மீண்டும் எண்ண வலுவின் திட வைராக்கிய சிந்தனையால்
4.எந்த மண்டலமோ அந்த மண்டலத்தின் சூட்சமும்
5.எந்தெந்த நட்சத்திரங்களோ அவைகளின் அமில குண ஈர்ப்பின் சேமிப்புமாக
6.இந்தச் சரீரத்தை வைத்து ஈர்க்கும் காந்த அமிலத் தொடர்பும்
7.பேரொளியாகச் சுடர்விட்டுப் பிரகாசித்திடும் நிலையாக
8.தன் உயிர் அமில மூல முலாமைத் தெளிந்து
9.அந்தச் சக்தியின் தொடரில் எண்ண வலுவை உயர்வாக்கிப் பெறும் ஜடாக்கினி ஒளி சக்தி கொண்டு
10.குறைவுபடா சேமிப்பாக்கிச் செயல் கொள்வதே பக்குவமான செயல் ஆகும்.

காப்பிய ரிஷி வான்மீகி ஆச்சா மரத்தை வாலியின் தொடர்பில் பதம் பார்த்து… ஆத்ம சக்தி பெறும் சக்தி அலைத் தொடர்பில் குறைவுபடும் காரண மூலம்… ஜடாக்கினி மந்திர விழி பிதுங்கும் செயல்படுத்தி எண்ணத் தடையாகும் இராமபாணத்தை எய்ததின் தொடர் ஜடாக்கினி அனுபவ ஞானம்,

எடையிடும் பொருள் எடை காட்டும் கல் ஆனதில் எடையிடும் எண்ண அளவீட்டில் தராசின் முனை முள் அளவீடு ஆவதைப் போல் அந்த அனுபவ ஞானம் தன் நிறை காண சபரியிடம் பதம் பார்த்தான்.

மனைவியைப் பிரிந்த இராமன் சபரிக்கு மோட்சத்தை அளித்திட இயலவில்லை என்ற கதையின் தொடர்பிற்குச் சூட்சம விளக்கம் உள்ளது. இராம ஜெப ஏக்கமாக ஜெபத்தில் ஏங்கினாள் சபரி.

இந்த ஏக்கத்தில் பூர்த்தி செய்ய எப்படிச் சங்கடத்தின் அலைகளை ஈர்த்துக் கொண்டிட்ட வழி காட்டும் குரு பூரணத்துவம் நிறைவு பெறாத் தொடர் நிலையில் தன்னை உணர்ந்து மீண்டும் வழியமைத்தான்.

தெளிவின் தொடர்பில் மகரிஷிகளின் தொடர்புபடுத்திப் பெறும் ஜடாக்கினி சக்தி ஈர்ப்பிற்குச் செயல் கொண்டிட மனித மனங்களின் ஜீவ ஏக்கம் சிஷ்யர்கள் என்ற தொடர்பில் சங்கடமற்று சமமான பாவனையில் நிலை கொண்டிட்டுச் செயலுறும் பொழுது அந்த உண்மைச் சீடர்களின் ஏக்கம் குருவிற்கே எற்பட்டு உண்மையை உணர்ந்து தெளிந்து சூரிய குலம் என்று குறிப்பிடும் வீரிய அமில முலாம் ஈர்ப்பில் தொடர்புகளில் தொடர்பு கொண்டு ஈர்த்து வலுக் கொண்டிட்டால் இராமபாணம் பாயும்… இலட்சியத்தை எய்தும்…!

இராமபாணம் திரும்புவதைப் போல்… செயல் கொண்டிட்ட சக்தியும் எண்ண ஈர்ப்பின் வலுவால் வலுத்துத் தன் சக்தியை மீண்டும் வலுக் கூட்டிக் கொள்ள முடியும்.

சபரி மோட்சம் என்று சொல்கின்ற சூட்சமத்தில் சபரி பெற்ற சக்தியின் வலு ஐயப்ப மாமுனியின் தொடர்பால் தன் எண்ண இலட்சியத்தை அடைந்தது.

இந்தச் சக்தியின் தொடர்பால் அந்த ஐயப்ப மகான் எப்படித் தன் சக்தியின் குறைவுபடாத் தன்மையில் அந்தச் சபரியின் மூலத்தையே தாய் சக்தியாக ஆக்கிக் கொண்டு தன் அனுபவத்தில் பெற்றுக் கொண்ட எத்தனையோ சக்தித் தொடரில் சபரி சக்தியும் ஒன்று.

தியானம் செய்கிறோம்…! இருந்தாலும் தீய எண்ணங்கள் வருகிறதே… என்று நினைக்கலாம்

 

மழை பெய்யாத காலங்களில் “கட்டாந்தரை” போன்று இருப்பினும் மழைக் காலம் வந்து மழை பெய்தபின் மண்ணிற்குள் மறைந்துள்ள வித்துகள் அனைத்தும் தழைத்துப் புல் பூண்டுகளாக எழுந்து வளரத் தொடங்குகிறது.

1.இதைப் போன்று தான் நம் உடலில் ஏற்கனவே பதிவான அணுக்களின் இயக்கங்களும்
2.இப்பொழுது செய்யக்கூடிய தியானத்தால் அவைகளை மாற்றி அமைத்தாலும்…
3.அவைகளுக்கு வேண்டிய சத்து கிடைத்தால் மீண்டும் கிளர்ந்தெழத் தான் செய்யும்.

காரணம்… சோர்வு சஞ்சலம் சலிப்பு குரோதம் வெறுப்பு பயம் போன்ற உணர்வுகளை பதிவு செய்திருக்கும் பொழுது ஊழ்வினை என்ற வித்துக்களாக நமக்குள் இருக்கும்.

சந்தர்ப்பத்தில் ஒரு சோர்வுடன் இருப்பவரை உற்று நோக்கினோம் என்றால்…
1.ஊழ்வினையாக உள் இருப்பதற்கு நம் கண் மீண்டும் உஷாராக்கி அந்த உணர்வுகளை ஜீவன் கொடுத்துவிடும்.
2.அதை நுகரும் பொழுது நம்மை அறியாமலே அந்தச் சோர்வு வரத் தொடங்கும்.

அத்தகைய நேரங்களில்… மீண்டும் வளர விடாது அவைகளைத் தடுப்பதற்குத் தான் இதை உபதேசிக்கின்றோம்.

ஏனென்றால் எப்பொழுதோ நடந்த நிகழ்ச்சிகள்… மற்றொருவர் திட்டியது நாம் வெறுப்படைந்தது… இது எல்லாமே ஒருவரைப் பார்த்த்தும் நம் நினைவுக்கு வரும்.

“எவ்வளவு தியானம் எடுத்தாலும் கூட…” ஒருவர் மீது நாம் வெறுப்படைந்த உடன் அந்த உணர்வை நுகர்ந்த பின் கண்ணின் கருவிழி பதிவாக்கப்படும் பொழுது உள்ளே பதிவான வித்திற்கு அது உஷாராக்கி விடுகிறது.
1.அப்போது அதற்குண்டான ஆகாரமாக அதை எடுத்து வளரத் தொடங்குகிறது.
2.உணர்வை இழுத்த பின் (சுவாசித்ததும்) உயிரிலே பட்டபின் அந்த உணர்வின் எண்ணங்கள் தொடர்ச்சியாக வரத் தொடங்கும்.

இவ்வளவு நாள் தியானம் செய்கின்றோம்… இப்படிப்பட்ட எண்ணங்கள் வருகின்றதே…! என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அது வரும் பொழுது அதை இப்போது நாம் மாற்றி அமைக்க வேண்டும்.

ஒருவர் மீது வெறுப்படைவதோ சலிப்படைவதோ கோபப்படுவதோ அத்தகைய உணர்வுகள் வருகிறது என்றால்… உடனே அடுத்த கணம் “ஈஸ்வரா…” என்று உயிரை நினைவுக்குக் கொண்டு வாருங்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்ற இந்த நினைவினைக் கண்ணுக்குக் கொண்டு வந்து உயிருடன் இணைத்து விடுங்கள். துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் அது மிகச் சக்தி வாய்ந்தது.

உள்ளுக்கே ஏற்கனவே பதிவு செய்த பகைமை உணர்வோ வெறுப்பு உணர்வோ அதனுடன் இதைக் கலக்கப்படும் பொழுது
1.பிறருடைய உணர்வுகள் ஈர்க்கப்படுவதை இது தடைப்படுத்துகின்றது.
2.வந்தாலும் அதை அடக்கித் தீமை இல்லாத அணுக்களாக அது விளையச் செய்யும்.

அத்தகைய அணுக்களாக நாம் மாற்றிக் கொண்டே வந்தால் நம்முடைய எண்ணங்கள் கூர்மையாகத் துருவ நட்சத்திரத்தின் பால் செல்கின்றது.

இந்த வாழ்க்கையில் பல தீமைகள் வந்தாலும் அதை இடைமறித்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இந்த உணர்வை நமக்குள் சேர்க்கச் சேர்க்க அந்த அணுக்களும் வளர்ச்சி பெறும். ஆகையினால் நாம் இடைவிடாது அதைச் செயல்படுத்த வேண்டும்.

நம் தொழிலில் எல்லாம் நலமாக இருப்பினும் ஒருவர் என் வியாபாரம் நஷ்டமாகி விட்டது… ஒரே கஷ்டமாக இருக்கின்றது என்று சொன்னால் போதும்.

கண் அவரைப் படம் எடுத்த பின் அந்த உணர்வின் சக்தியை நுகர்ந்து கஷ்டம் நஷ்டம் என்று உணர்கின்றோம். இருப்பினும் அந்த உணர்வுகளை நமது உயிர் அணுவாக மாற்றி விடுகின்றது.

ஏற்கனவே கஷ்டம் நஷ்டம் என்று சொன்ன உணர்வுகள் ஊழ்வினை என்ற வித்துக்களாக இருக்கும்.
1.அதற்கு இடம் கொடுக்காது இருந்தால் ஈர்க்கும் சக்தி குறைகின்றது.
2.இடம் கிடைத்துவிட்டால் வேதனை என்ற உணர்வு நுகரப்படும் பொழுது அதை ஈர்க்கும் சக்தியாக நமக்குள் வந்து விடுகிறது.

புதிதாகப் பார்க்கப்படும் பொழுது ஊழ் வினையாக முளைத்து விடுகின்றது பின் அந்த உணர்வின் தன்மை நுகரப்படும் பொழுது அணுவின் தன்மையாக விளைகின்றது.

அணுவின் தன்மை விளையப்படும் பொழுது நாம் நுகர்ந்தது இரண்டாவது அதே உணர்வுகள் உயிரிலே உராயப்படும்போது இந்த உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது… அந்த எண்ணங்கள் வருகின்றது.

ஆகையினால் அத்தகைய எண்ணங்கள் நமக்கு வராதபடி ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று கண்ணின் நினைவைப் “புருவ மத்தியில் மையம் கொண்டு நிலை நிறுத்தி விட வேண்டும்…”

துருவ நட்சத்திரத்தின் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று இதை இடைமறிக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை இப்படி இணைக்கப்படும் பொழுது தீமை செய்யும் அணுக்கள் வலு இழக்கின்றது… அருள் உணர்வுகள் வலு கூடுகின்றது
1.இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடிப்பொழுதும் உயர்ந்த சக்திகளை
2.புதுப் புது அணுக்களாக நாம் உருவாக்கிக் கொண்டே வர வேண்டும்.

தியானம் செய்பவர்கள் அவசியம் இதைத் தெரிந்து கொள்ள வேண்டும்

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கஷ்டம்… துன்பம்… என்று எதுவுமே சொல்லாதீர்கள் என்று நான் (ஞானகுரு) அடிக்கடி சொன்னாலும் பெரும்பகுதியானோர் கேட்பதில்லை,
1.சீக்கிரம் நன்றாகிவிடும்…! என்று நல்ல வாக்கினை யாம் சொன்னால்
2.இரண்டாவது தரம்… குடும்பத்தில் ஒரே தொல்லையாக இருக்கிறது என்றும்
3.குழந்தைக்கு இப்படி இருக்கிறது என்று திருப்பி இப்படிக் கேட்டு
4.யாம் சொன்னதைத் தூக்கி எறிந்து விடுகின்றார்கள்.

வாக்கின் மூலமாகத் தான் ஞான வித்தை உங்களுக்குக் கொடுக்கின்றேன். அதை வளர்த்துக் கொண்டால் தான் உங்களுக்குள் அருள் ஞானத்தை வளர்க்க முடியும்.

ஆனால் தன்னம்பிக்கை இல்லாமல் தான் மீண்டும் மீண்டும் அப்படிக் கேட்கிறார்கள். ஏனென்றால்
1.உங்களுக்குள் ஏற்கனவே எது பதிவானதோ அந்த உணர்வுதான் அப்படி இயக்குகிறது
2.அதை மாற்றும் வல்லமை இல்லாது இருக்கின்றது.
3.அதன் உணர்வுக்கொப்ப அந்த அணுக்கள் தான் வளர்கிறது.

ஆக… அதை மாற்றும் வல்லமை உங்களுக்கு வேண்டும் என்பதற்குத்தான் மணிக்கணக்கில் பேசுகின்றேன்.

இங்கே உபதேசிக்கும் உணர்வைப் பதிவாக்கிக் கொண்டு அந்த வலுவான நிலைகள் கொண்டு என் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும்… குடும்பத்தில் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும்…. எங்கள் தொழில் நன்றாக வளர வேண்டும்.. எங்கள் வாடிக்கையாளர்கள் பெருக வேண்டும். எங்கள் பார்வை அனைவரையும் நல்லதாக்க வேண்டும் என்று அதற்குண்டான சக்தி வேண்டும் என்று கேட்டால் அந்தச் சக்தியைப் பெற்று நீங்கள் வளரலாம் அல்லவா…!

நீங்கள் இதைக் கேட்டு… அதன்படி நடக்கும்…! என்று நான் சொன்னால் அந்த அருள் சக்தியைப் பெற்று உங்களுக்குள் தீமை வளராது தடுக்க முடியும். உங்கள் சொல் செயல் மற்றவரையும் நல்லதாக்கும்…!

ஏனென்றால்… விரும்பிக் கேட்பது தான் கிடைக்கும்…!

காரணம்… நம்மை ஆள்பவன் உயிர் தான்…!
1.ஆண்டவனாக இருப்பதும் நாம் எண்ணியதை உருவாக்குவதும் நம்மை ஆண்டு கொண்டிருப்பதும் உயிர்.
2.அவனிடம் நீங்கள் வேண்டுங்கள்…
3.மகரிஷிகளின் அருள் ஒளி எங்கள் உடலில் படர வேண்டும்
4.எங்களுக்குள் அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும்
5.மெய்ப் பொருள் காணும் சக்தி பெற வேண்டும்
6,எங்கள் பார்வை அனைவரையும் புனிதமாக்க வேண்டும்
7.எங்கள் சொல்லைக் கேட்போர் அனைவரும் நலம் பெற வேண்டும்
8.கனியைப் போன்ற இனிமையான நிலை எங்கள் வாழ்க்கையில் பெற வேண்டும்
9.எங்கள் சொல்லைக் கேட்போரும் அந்த நிலை பெற வேண்டும்
10.வைரத்தைப் போன்று எங்கள் வாழ்க்கை ஜொலிக்க வேண்டும்
11.நாங்கள் பார்ப்போர் வாழ்க்கையும் ஜொலிக்க வேண்டும்
12.எங்கள் சொல்லைக் கேட்போர் வாழ்க்கையும் ஜொலிக்க வேண்டும் என்று உங்கள் உயிரிடம் கேட்டுப் பாருங்கள்.

கீதையில் நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்பது போல் மேலே சொன்ன உணர்வுகளை அதிகமாகக் கூட்டிப் பழகுங்கள்.

மற்றவர்களுடைய துயரத்தையும் துன்பத்தையும் கேட்டறிந்தாலும் பத்திரிக்கை வாயிலாகவும் டி.வி. வாயிலாகவும் வேதனையான உணர்வுகளை அதிகமாக நுகர்ந்தாலும் அடுத்த கணம் அந்த அருள் ஒளியை நீங்கள் எடுத்துப் பழகுங்கள்.

ஒளியான உணர்வுகள் வரும் போது தீமைகள் வராது தடுக்கும்.. பேரருள் உணர்வுகள் கூடும்… அதன் வழி நாம் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழலாம். வாழ்க்கையில் வரும் துன்பத்தை அகற்றலாம்.

1.அருள் ஒளி பெறுங்கள்… அருள் ஞானம் பெறுங்கள்…! அருள் வழியில் பேரின்பம் பெறுங்கள்.
2.பிறவி இல்லா நிலையை அடையும் பருவம் பெறுங்கள்.

“நம் பாசம்” மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைவதாக… இணையச் செய்வதாக இருக்க வேண்டும்

 

உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த எவராக இருந்தாலும்… சந்தர்ப்பம் அவர் உடலை விட்டுப் பிரிய நேர்ந்தால் அடுத்த கணமே “அழுது… அவருடைய ஆன்மாவைக் கவர்ந்து இழுத்து விடாதீர்கள்….!”
1.அந்த ஆன்மாவை அருள் ஒளி பெறச் செய்யுங்கள்
2.உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த ஆன்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்யுங்கள்.
3.அங்கே உடல் பெறும் உணர்வுகளைக் கரையச் செய்யுங்கள்
4.ஒளி பெற்ற அறிவின் தன்மையை நிலைக்கச் செய்யுங்கள்.
5.அவர்களைப் பேரின்பப் பெரு வாழ்வாக வாழச் செய்யுங்கள்.

பாசத்தால்… பண்பால்… எங்களுக்கு உதவி செய்தாயே…! எனக்கு நன்மை செய்தாயே…! என்று நன்மை செய்தவர்களை இப்படி எண்ணக்கூடாது.

எனக்கு நன்மை செய்தார் துன்பத்தைப் பெற்றார்…! “இனியாவது” அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து அங்கே உடல் பெறும் உணர்வு கரைந்து பேரின்ப பெரு வாழ்வு பெற வேண்டும்.

நாங்கள் அடைந்த துன்பத்தை கேட்டாய் அதை உனக்குள் வளர்த்தாய். ஆகவே அந்தத் துன்பத்தின் நிலைகள்… இத்துடன் கரைத்து விட்டு அருள் ஒளியின் சுடராக நீ என்றுமே நிலைத்திருக்க வேண்டும்… இனி பிறவியில்லா நிலைகள் பெற வேண்டும் என்று இவ்வாறு இந்த உணர்வுகளை நீங்கள் பாய்ச்சுங்கள்.

1.உதவி செய்தவர்களை உங்கள் பாசத்தால் எண்ணி “இழுத்தால்…” அந்த ஆன்மா உங்கள் உடலுக்குள் தான் வருகின்றது.
2.மீண்டும் துன்பத்தைத் தான் இங்கே விளைய வைக்க முடியும்.
3.பாசத்தால் நமக்குள்ளும் அந்த நோயை வளர்த்து விடுகின்றோம்.
4.அவரும் அடுத்து இழி நிலையான சரீரமாகத் தான் பிறக்கச் செய்ய முடியும்.

அத்தகைய நிலையில் இருந்து உடலை விட்டு பிரிந்த ஆன்மாக்களை மீட்டுங்கள். உங்களுக்கு இன்பத்தை ஊட்டிய அந்த ஆன்மாக்களை அழுது யாரும் இழுக்காதீர்கள்… பாசத்தால் கவர்ந்து விடாதீர்கள்.

“பாசத்தை”
1.எல்லை கடந்த நிலைகள் கொண்டு அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்திலே இணையச் செய்யுங்கள்
2.உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்து விடுங்கள்… ஒளிச் சரீரமாக அவர்களை மாற்றுங்கள்.
3.அது தான் உங்களுக்கு நன்மை செய்தவர்களுக்கு செய்யக்கூடிய கடமைகள்.

இதை நீங்கள் செய்யத் தவறாதீர்கள்.

அந்த அருள் ஒளியை நீங்கள் பெற எமது குரு அருளும் எனது அருளும் உறுதுணையாக உங்களுக்கு இருந்து இந்த சக்திகளை எண்ணி ஏங்கிப் பெற்றால் அதன் உணர்வை நீங்கள் வளர்த்துக் கொள்ள முடியும்.

இந்த உடலை விட்டுச் சென்றால் அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்திற்குள் சென்று உடல் பெறும் உணர்வை மாற்றி ஒளி பெறும் உணர்வாக உங்களுக்குள் விளையச் செய்யுங்கள்.

என்றும் பேரின்பப் பெருவாழ்வு என்ற நிலையை அடைவோம். மனிதனின் கடைசி எல்லை அது தான். இதை நீங்கள் பின்பற்ற வேண்டும். உங்கள் மூச்சு பிறருடைய துன்பங்களை நீக்கும் அருள் சக்தியாகப் பெறுதல் வேண்டும்.

ஊசி முனைத் துவாரத்தில் நீர் குறைந்துவிடும்

 

“ஜடாக்கினி மன திறன்…!” என்னும் மூலச் சக்தி நாத விந்துவாக… இரசமணியாகச் செயல்படும் அந்த வீரிய குண அமிலம் “இராமபாணம்…” என்று காட்டப்பட்டது.

எந்த இலட்சியம் தன் கருத்தோ அந்த இலட்சியத்தை எய்தும் பாக்கிய நிலை பெறுவது அதுவே தான்…! ஆனால் அந்தப் பாக்கிய நிலை பெற்றுவிட்டால் மட்டும் போதாது. அதை வளர்க்கவும் வேண்டும்.

இராமபாணத்தை எய்தினால் அது அப்படியே திரும்பி வரும்…! என்கின்ற பொருள் எல்லாம் என்ன…?
1.எண்ணம் கொண்டு செலுத்தப்படும் ஜடாக்கினி மூல சக்தியை
2.வான இயலை இலக்காகக் கொண்டு செலுத்தப்பட்டால்
3.அதை நம் வாழ்வின் இலட்சியமாகக் கொண்டால்
4.அந்தச் சக்தி குறைவுபடாது மேன்மேலும் வளரும் என்பதே இராமபாணம் திரும்பும் தொடர்.

ஜடாக்கினி அனுபவத்தில் வான்மீகிமாமகரிஷி மாத்திரம் தப்பித்துக் கொண்டாரா… என்ன…? அவர் பெற்ற அனுபவப் பாட நிலை என்ன…?
1.ஜடாக்கினி செயல் சக்தியைச் செலுத்திக் கண்ட “ஓர் அனுபவமாக..”
2.“வாலி வதம்…! என்ற பாங்கில் இராமன் தலை குனிந்தான்…! என்கின்ற பொருள் என்ன…?

ஆச்சா மரத்தை வெட்டுபவன் அந்த வலுவான மரத்தை முறித்திட வலுவான சக்தி மாத்திரம் போதாது. அந்த ஆயுதம் கூர்படத் தீட்டப்பட்டிருக்க வேண்டும்.

“தான் பெற்ற தவ சக்தியை” வான்மீகி கூர்பார்த்த விதம் ஆச்சா மரத்தை வெட்டும் செயல் போல் அவர் செயல் நிலை இருந்தாலும் சபரி அன்று அவரைக் கேட்டாள் “என்னையும் வானத்தில் இருத்த முடியுமா…? என்று…!”

அங்கே அந்த உபதேசத் தத்துவம் மழுங்கி விட்ட ஆயுதத்தால் ஆச்சா மரத்தை வெட்ட முடியுமா…?

உலகோதயம் என்னும் பிடிப்பில் “ஆச்சா மரம்…” என்பதெல்லாம் சொல் நாமம் பெயர் விளக்கத்திற்காகச் சூட்சமமாகக் கொடுக்கப்பட்டது தான். ஏனென்றால் நம் கவனம் ஞானத்தை வளர்த்திடும் எண்ணத்தில் நிலை பெற்றிருக்க வேண்டும்.

இது சொல் ஈர்க்கும் செயல் மாத்திரமல்ல…! இதிலே வலியுறுத்தும் காரியார்த்தம் (நுட்பம்) எது என்றால் “ஊசி முனைத் துவாரத்தில் நீர் குறைந்துவிடும்…” என்கின்ற பொருளின் விளக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அதைப் புரிந்து கொண்டால் ஞானத்தை வளர்க்க உதவாத… நம் ஆத்ம பலத்தை வீரியப்படுத்த உதவாத எந்தச் செயலையும்
1.உற்றுறுந்து கேட்கவும் வேண்டாம்…
2.அதிசயித்து நோக்கவும் வேண்டாம்….
3.”பெருமாள் படியளந்தான்…” என்பது போல் இருக்க வேண்டுமே தவிர
4.எடுக்கும் வீரிய ஜடாக்கினி முல சக்தி நம்முடைய முக்கியமான சேமிப்பாக இருக்க வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அடிக்கடி நான் (ஞானகுரு) உங்களுக்கு வற்புறுத்துவது எல்லாம் இது தான்…!
1.அழியாப் பேரின்பச் செல்வத்தை நாம் தேடுவதற்குத் தான்
2.மகரிஷிகளின் உணர்வுகளை இங்கே உபதேசிக்கின்றோம்.

ஒவ்வொரு நிமிடமும் எத்தகைய கஷ்டங்கள் வந்தால் அதை மாற்றும் தன்மைக்கு நாம் வரவேண்டும். ஏனென்றால் நாம் நுகர்ந்த உணர்வே அந்த உணர்ச்சியை ஊட்டி அதைச் செயலாக்குகின்றது. அது தான் அரங்கநாதன்.

1.நாம் நுகரும் உணர்வு எதுவோ இந்த உயிரிலே பட்டு அந்த உணர்வுகள் வருகிறது.
2.நாம் பேரருள் பெற வேண்டும் என்ற உணர்வினை நாம் நுகர்ந்தால் அந்த உணர்வுகள் அரங்கநாதங்களாகி
3.தீமைகள் அகற்றும் உணர்வின் தன்மை நம்மை ஆளும்… ஆண்டாள்.
4.தீமைகள் புகாது தடுக்கும் அந்தச் சக்தி பெறுகின்றது.

இதை நீங்கள் மனதில் வைத்து ஒவ்வொரு நிமிடமும் காலை துருவ தியானத்தின் மூலம் எடுத்துக் கொண்ட துருவ நட்சத்திரத்தின் சக்தி கொண்டு உங்கள் வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றிடும் அந்த வலுவைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

என்னுடைய (ஞானகுரு) உபதேசத்தை கேட்டுப் பதிவாக்கிக் கொண்டீர்கள். இந்தப் பதிவின் துணை கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என் உடல் நலமாக வேண்டும் என்று இதை எண்ணி எடுத்துக் கொண்டாலே போதும்.

1.இந்த உணர்வுகள் உங்கள் உடல் என்ற அரங்கத்தில் நாதங்களாகின்றது
2.ஏங்கிப் பெறும் போது அந்த உணர்வுகள் உணர்ச்சிகளாக இயக்குகிறது.
3.இந்த உணர்ச்சிகள் வரும் பொழுது உங்கள் உடலில் எந்த நோய் இருந்தாலும் அது குறையும்.

ஆனால் இதை விடுத்து விட்டு எனக்கு வேதனையாக இருக்கின்றது… என்னால் முடியவில்லை…! என்ற எண்ணத்திற்குப் போக வேண்டியதில்லை.

நோயாக இருக்கிறது என்று வேதனைப்பட்டுச் சொன்னால் அதைக் கேட்டு அதற்கு மருந்து கொடுக்கும் நிலைக்கு இல்லை. “மருந்து கொடுத்து நோயை நீக்கும் வழியைச் சொல்ல வரவில்லை…”

மருந்துக்கு முன்னாடியே…
1.யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது போல்
2.அருள் ஞானிகளின் உணர்வைப் பதிவாக்கப்படும் பொழுது
3.அந்த உணர்வைக் கிரகித்து இழுக்கும் வலிமை கிடைக்கின்றது.
4.அந்த வலிமை கொண்டு பல தீமைகளைப் போக்கும் சக்திகளை நீங்கள் பெறுகின்றீர்கள்.

அதைப் பெறச் செய்வதற்குத்தான் உங்களுக்கு இத்தனை உபாயங்களும் சொல்லிக் கொண்டு வருகின்றேன். ஏனென்றால் யாரோ செய்வார்… எவரோ செய்து கொடுப்பார்…! என்று தான் எண்ணுகின்றோம்.

உதாரணமாக ரோட்டில் நடந்து செல்கிறோம். ஒரு மாட்டைப் பார்க்கிறோம். அழகாக இருக்கிறது என்று இரசிக்கவும் செய்கின்றோம். ஆனால் சாதாரணமாக இருக்கும் அந்த மாடு திடீரென்று நம் பக்கம் வெகுண்டு திரும்பினால் உடனே “ஆ…” என்று அலறுகிறோம்.

அந்த உணர்வின் தன்மை ஆன பிற்பாடு அந்தப் பயம் என்ன செய்கிறது…? நம்மை ஒதுங்கி ஓடச் செய்கிறது. அந்தப் பயத்தால் நம் உடல் நடுக்கமாகி அது அடங்கச் சிறிது நேரம் ஆகிறது.

ஆகவே நம்மை அங்கே எது இயக்குகிறது…? நாம் நுகர்ந்த உணர்வு தான் நம்மை ஆட்டிப் படைக்கின்றது.

இதைப் போல் நாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும்… இருளை அகற்றும் அந்தப் பேரருள் பெற வேண்டும்… என்று ஏங்கினால்
1.அந்த உணர்வு உங்களுக்குள் அருளைப் பெருக்கி இருளைப் போக்கும் உணர்ச்சிகளாக உங்களை இயக்கும்.
2.நல்ல சிந்தனையும் நற் செயலும் வரும்.

இதை எளிதில் பெறச் செய்வதற்குத்தான் உங்களுக்குச் சொல்கிறேன். ஆனால் சாமி செய்து தருவார் என்று என்னைத் தான் நம்புகிறீர்களே தவிர உங்களை நீங்கள் நம்புவதில்லை.

உங்களால் அந்த அருளைப் பெருக்கிக் கொள்ள முடியும். இந்தக் காற்றிலே அந்த ஞானிகளின் உணர்வுகள் பரவி உள்ளது. அதை எடுக்ககூடிய எண்ணத்தைத்தான் உங்களுக்குள் பதிவு செய்கிறேன்.

திட்டியவனை எண்ணியவுடன் உங்களுக்குக் கோபம் வருகிறதல்லவா. திட்டியவுடன் அந்தச் சந்தர்ப்பத்தில் சோர்வடைந்து உங்கள் காரியங்கள் தடையாகிறது அல்லவா.

அதற்கு முன்னாடி நம் குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருந்திருப்போம். ஆனால் ஒருவன் திட்டி அதனால் நாம் சோர்வடைந்த பின் குழந்தையை இரண்டு சாத்து சாத்துவோம்.

முதலில் குழந்தையை அனுசரிப்போம். சோர்வடைந்த நேரத்தில் குழந்தை ஒரு பேப்பரைக் கிழித்துப் போட்டால் போதும்…! போங்கடா… உங்களுக்கு இது தான் வேலையா…? என்று இந்தக் கோபம் நிச்சயம் வரும்.
1.எந்தக் குழந்தை மேல் மிகுந்த பாசமாக செல்லமாக இருந்தோமோ அந்தக் குழந்தை மீதே இந்த வெறுப்பு வரும்.
2.அந்த நேரத்தில் கோபிப்பது யார்..? சற்று சிந்தித்துப் பாருங்கள்…!

அந்தச் சோர்வான உணர்வு இயக்கப்படும் பொழுது தன் குழந்தை மீது இருக்கும் பாசத்தைக் கூட மறந்து குழந்தையைத் தாக்கும்படி செய்கிறது.

இதைப் போல் தான் ஒரு தீமை செய்யும் உணர்வை ஏங்கிப் பெற்றால் அந்த உணர்வின் இயக்கம் வளர்ந்து நம்மை நல்ல வழிக்கே விடுவதில்லை

1.ஆனால் நல் வழி வளர்க்கும் அருள் ஞானிகளின் உணர்வை நுகர்ந்தால்
2.அந்த உணர்வின் தன்மை நம்மை நல்வழி நடத்தும்.

“ஒளி கொண்டு… ஒலியை ஊர்ஜிதப்படுத்திடும்” மெய் ஞானம்

 

யானை நீர் மொள்ளும் ஓசையைக் கேட்டே அம்பெய்து சிரவணனைக் கொன்ற தசரதனின் செயலை வான்மீகியார் சுட்டிக் காட்டிய நிலைகளில் “சூட்சமப் பொருள் உள்ளது…!”

அது என்ன..?

பார்வை ஒளியற்ற பெற்றோரைச் சுமந்து செல்பவன் சிரவணன். ஒரு சமயம் அவனுடைய தாய் தந்தையர் தாகம் என்று தண்ணீர் கேட்டதும் அதற்காக நீரைத் தேடி அலைந்தான். ஆனாலும்
1.நீர் கிடைக்கும் வரை அவன் எடுத்த எண்ணம் என்ன…?
2.கடமை என்ற சொல்லும் உண்டு.
3.கடமையின் பால் உணர்வுதனை மாற்றிக் கொண்ட செயலும் உண்டு.

விலங்கினங்கள் நீர் அருந்தும் ஓசையைக் கொண்டே அந்த மிருகங்களைப் பார்க்காமலேயே மறைந்திருந்து குறி தவறாது அம்பெய்யும் ஆற்றல் பெற்றவன் தான் தசரதன்.
1.அதை வீரத்தில் சேர்ப்பதா…?
2.கற்ற வித்தையின் ஞானத்தில் சேர்ப்பதா…?
3.அல்லது உணர்வுகள் கூட்டிக் கொண்ட மோகம் அறிவுக் கண்ணை மறைத்ததாகச் சொல்வதா..?

ஏனென்றால் தசரதன் அவன் இளமையின் ஆற்றலால் கற்றுக் கொண்டதுதான் அந்தக் கலை. அவனுடைய செவிப் புலன் அறிவாக ஓசையைக் கொண்டு குறிப்பறியும் ஆற்றலைக் காட்டியது ஞானம் தான்.

ஆகவே வான்மீகியார் கூற வந்த தெளிந்த பொருள் என்ன…?

காமத்தின் விளைவால் மோகத்தில் கிளர்ந்தெழுந்த உணர்வுகளின் செயல்பாடு… சரீர உணர்வின் இயக்கத்தால்… “கருத்தறிய முடியாத அலட்சிய மனோபாவனையக் காட்டியது தான்…” தசரதனின் அந்தச் செயல்.

தண்ணீருக்காகத் தேடிய சிரவணன் அவன் எடுத்த சஞ்சல உணர்வலைகள் பாசத்தின் அடியாக பதைபதைப்பாக அவன் அறிவின் பொறி கலக்கமுற்றது.

அதனால் குறிப்பறியாத ஈர்க்கும் செயலில்… எதிர் மோதல் குணங்கள் உணர்வுகளின் உந்துதலால்… குறிப்பறியாச் செயலுக்கு அறிவின் மயக்கமே ஒன்றை ஒன்று பற்றிக் கொண்டு… “வினைச் செயலின் விளையாட்டாக சிரவணன் நீர் மொள்ளும் சப்தம் அமைந்தது…!”

1.அப்படிப்பட்ட “சிரவணனின் அறிவின் மயக்கமும்”
2.ஒலி கொண்டு அறியும் ஆற்றலின் அலட்சியத்தால் விளைந்த “தசரதனின் அறிவின் மயக்கமும்”
3.சந்தர்ப்பத்த்கால் சந்தித்த சந்திப்பு… அம்பாகச் சிரவணன் உடலில் பட்டுத் தைத்து அவன் உயிரைக் குடிக்க முனைந்தது.

ஆனால் ஞான வழிச் செயல் ஆக்கத்திற்குத் தனித் தன்மையான பொருளும் உண்டு. எப்படி…?

செவிப்புலனால் ஒலி ஈர்க்கும் அறிவு செயல்பட்ட அந்தக் காலத்தில்
1.ஒளி கொண்ட ஒலி நாதத்தைத் தனக்குள் நிறைத்துக் கொண்டால்
2.புற உலகின்கண் எழும் சப்தங்களை உணர்ந்திட முடியாத செயலுக்கு
3.நமக்குள் சேக்கும் மெய் ஒலியின் அந்த ஓங்கார நாதமே அதிர்வுகளாக ஓசையைப் பெருக்கச் செய்து
4.அதே தொடரில் ஆத்ம வலுவைக் வலுக் கூட்டிக் கொள்ளும் உயிர் கலப்பால்
5.மெய்யை அறியும் உயர் ஞானமாக அது அமைந்து தெளிவான ஆக்கபூர்வமான செயல்களைச் செய்விக்கச் செய்யும்.

ஆகவே ஒலி கொண்டு புலன்களால் அறிந்தாலும் ஒளி கொண்டு ஒலியை ஊர்ஜிதப்படுத்திடும் மெய் ஞானம் பெற்றால் தான் நம் செயல்கள் என்றுமே வளர்ப்பின் வளர்ப்பை வளர்க்கும் செயலாக நன்மை பயக்கும்.

நம் கண்களுக்குண்டான ஆற்றல்

 

1.அருள் ஞானிகள் உணர்வுகளை… அருள் ஒளி பெறும் சக்திகளை…
2.துருவ நட்சத்திரம்… சப்தரிஷி மண்டலங்கள்… என்று வரிசைப்படுத்தி யாம் உபதேசிக்கும் போது
3.கூர்ந்து கவனித்தால் உங்கள் நினைவாற்றல் “அங்கேயே” அழைத்துச் செல்கின்றது.

ஒளியாக உருப் பெற்ற அந்த உணர்வின் தன்மையை… அகஸ்தியன் துருவனாகி நஞ்சினை முறித்த உணர்வுகளை நினைவாக்கப்படும் பொழுது அந்தச் சக்தியைப் பெறும் தகுதி நீங்கள் பெறுகின்றீர்கள்.

உதாரணமாக… ஒரு டிவி ஸ்டேஷனை அமைத்தப் பின் எந்தெந்த அலை வரிசைகளில் அதை ஒளிபரப்ப வேண்டும் என்று
1.அதில் இருக்கக்கூடிய மேக்னட் ஒன்றுடன் ஒன்று கலந்து
2.அதனுடைய இணைப்பின் ஆற்றல் வரப்படும் பொழுது ட்ரான்சாக்சன் ஆக மாற்றுகின்றது.

இந்த உணர்வின் ஒளி அலைகளை இது மாற்றிய பின் “டிவி ஒரே பெட்டியாக இருப்பினும்…” எங்கிருந்தோ ஒளிபரப்பாகும் அலைகளை சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றி எல்லாப் பக்கமும் பரவச் செய்தாலும்…
1.அதே அலைவரிசையில் இந்தப் பெட்டியைத் திருப்பி வைத்து
2.ஆண்டென்னா என்ற ஒரு சாதனத்தை வைக்கப்படும் பொழுது
3.அந்தந்த அலைகளைக் கவர்ந்து டிவி பெட்டிக்குள் ஈர்க்கும் சக்தி வருகின்றது.

இதைப் போன்று தான் எல்லாவற்றையும் உணர்ந்து நுகர்ந்து இந்த மனித உடலை உருவாக்கிய “கண்” நமது உடலுக்கு ஆண்டன்னாவாகச் செயல்படுகின்றது.

எந்த உணர்வின் தன்மை ஒளி அலைகளாகத் தாக்கப்படுகின்றதோ… அந்தந்த உணர்வின் தன்மை கண்களில் உந்தப்பட்டு…
1.எது என்று அதை அறியும் ஆற்றலும்
2.நுகர்ந்து உயிருடன் உணர்வின் ஒலிகளைப் பரப்பி
3.அதற்குத்தக்க (அலை வரிசைக்குத்தக்க) குணங்களின் அடிப்படையில் உடலை இயக்கச் செய்கின்றது.

ஆனால் எதனின் உணர்வின் தன்மை தனக்குள் எடுக்கின்றோமோ இந்த உணர்வின் அலைகள் கூடும் பொழுது மனிதனின் உருக்களும் மாறுகின்றது… நினைவுகளும்… செயல்களும் மாறுகின்றது.

மனித உடலிலிருந்து வெளிப்படும் உணர்வுகள் அலைகளாக மாற்றி வரும் பொழுது அதைக் கூர்ந்து நாம் கவனித்தோம் என்றால்… இதன் வழி நமக்குள் பதிவானது அதன் வழியே தனக்குள் கொண்டு வருகின்றது.

ஆண்டென்னாவாக இருப்பதும்…
1.ஒரு காந்தப்புலனறிவு பிற நிலைகள் இயக்குவதை இணை சேர்த்து ட்ரான்சாக்சன் ஆக இயக்கப்பட்டு
2.இந்த உணர்வின் தன்மை இரண்டும் கலக்கப்பட்டு இங்கே பதிவாக்கும் நிலைகள் கொண்டு (அது பதிவானால்தான்) ஈர்க்கும் சக்தி வருகின்றது.
3.இணைத்து நாடாக்களில் பதிவாக்கவில்லை என்றால் அது பதிவாகாது…. அலைகளை ஈர்க்காது (ஆண்டென்னாவைத் திருப்பி வைப்பது)

இது எல்லாம் இந்த இயற்கையின் நிலைகளை மனிதன் கண்டுணர்ந்து விஞ்ஞான அறிவால் இதை மாற்றுகின்றான்.

சூரியன் எலக்ட்ரிக்கை உருவாக்குகின்றது… ஒரு செடியின் சத்தை நுகர்ந்து கொண்டால் அதனின் மணத்தை எலக்ட்ரானிக்காக மாற்றுகின்றது.

எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்று உணர்வின் தசைகளாகும் பொழுது (உடலாக) மின் அணுவின் தன்மையை நாம் எந்தத் தாவர இனத்தை உணவாக உட்கொண்டோமோ இந்த உணர்வின் எதிர் அலைகளைப் பாய்ச்சும் பொழுது… தாவர இனத்தின் உண்மையின் உணர்வுகளைக் கவர்வதையும் பார்க்கலாம்.

இதெல்லாம் மனிதனுக்குண்டான ஆற்றல்…
1.மனிதனான பின் எதனையும் கவர்ந்து… அதனைப் பதிவாக்கி நுகர்ந்து விடலாம்
2.இதனின் தன்மை கொண்டு… நாம் இனி பிறவி இல்லா நிலை அடைய வேண்டும்

“விஷத்தையே உணவாக எடுத்து” ஒளியின் கதிராக அதை மாற்றியவன் தான் அகஸ்தியன்

 

பல கோடிச் சரீரங்களில் வளர்ச்சி பெற்று… மற்றொன்றுக்கு இரையாகி வேதனைப்பட்டு… நரகலோகத்தை அனுபவித்துத் தான் நாம் மனிதனாக வளர்ந்து வந்திருக்கின்றோம்.
1.சொர்க்கபூமியாக மனித உடலை வளர்த்து… சொர்க்கலோகமாக உருவாக்கி உள்ளது உயிர்
2.சொர்க்கவாசலாக அமைந்திருக்கும் உயிரின் துணை கொண்டு தான் நாம் “என்றும் சொர்க்கலோகமாக வாழ முடியும்…!”

துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலங்களும் சொர்க்கலோகத்தை அடைந்தது. ஆகவே இந்தச் சொர்க்க பூமியை நாம் சொர்க்கலோகமாக மாற்ற வேண்டும்.

நம் உடலுக்குள் இருக்கும் அணுக்களை மாற்றி அமைத்தலே… (அடுத்து) “பிறவி இல்லாத நிலை அடைதல்” என்பது. நமது சாஸ்திரங்களும் வேதங்களும் இதைத் தான் தெளிவாகக் கூறுகின்றது.
1.இப்பொழுது யாம் (ஞானகுரு) சொன்னால் உங்களுக்கு இது விளையாட்டாகத் தெரியலாம்.
2.ஆனால் எமது உபதேசங்களைக் கூர்ந்து கவனித்தால் உங்களுக்குள் ஆழமாகப் பதிவாகிவிடும்.
3.அது உங்களை ஞானிகளாக உருவாக்கச் செய்யும் ஆற்றல் கொண்டது.

தாய் கருவிலே இருக்கப்படும் பொழுது “நஞ்சை முறித்திடும் உணர்வுகள்” அகஸ்தியன் உடலிலே விளைந்தது.
1.அவன் பார்வையிலே படும் ஒவ்வொன்றும்… அது எத்தகைய நஞ்சாக இருந்தாலும் ஒடுங்கி
2.நஞ்சை முறித்திடும் அணுக்களாக அவனுக்குள் விளைகின்றது.

சூரியனை அவன் உற்றுப் பார்த்தாலும்… அதில் நஞ்சின் கடுமை இருப்பினும் எதிர்மறையான நிலைகள் அது உமிழ்த்தும் அல்ட்ரா வயலட் என்று விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட
1.அந்தக் கடும் நஞ்சினை இவன் நுகர்ந்தாலும் அந்த விஷத்தின் தன்மை இவன் உடல் உறுப்புக்களைப் பாதிப்பதில்லை.
2.ஆனால் “உணர்வின் ஒளிச் சுடர்கள்” கதிரியக்கப் பொறியாக நட்சத்திரங்கள் உமிழ்த்துவது போன்று இவனில் விளைகின்றது.

இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கங்களை கண் கொண்டு அவன் உற்றுப் பார்க்கப்படும் பொழுது… இவன் உடலுக்குள் இருக்கும் உணர்வுகள்
1.அந்த விஷத்தை ஒடுக்கி… விஷத்தை ஏற்று… தனக்குள் அதையே உணவாக எடுத்துக் கொள்ளும் நிலையும்
2.அதன் அறிவாக இந்த உணர்வின் தன்மை அவனுக்குள் ஒளியாக மாற்றிடும் திறனும் பெறுகின்றான் அகஸ்தியன்.
3.அவனுக்குள் ஒளியான அணுக்களாக விளைந்து கொண்டே வருகிறது.

பிரபஞ்சத்தின் சக்தி துருவத்தின் வழியில் பூமிக்குள் வந்து தாவரங்களாக எப்படி உருவாகின்றது…? என்று… அந்தத் துருவத்தைக் கூர்மையாக உற்று நோக்கி அதனின் உண்மையின் உணர்வை அறிந்து கொண்டவன் அகஸ்தியன்.

இப்படி அறிந்து கொண்ட பின்… அதன் வழி வரும் நஞ்சினை முறித்திடும் உணர்வும்… தனக்குள் ஒளிக்கதிர்களாக மாற்றிடும் தன்மையும் அவனுக்குள் வருகின்றது.

அவனின்று விளைந்த உணர்வுகள் வெளிப்பட்டதைச் சூரியனுடைய காந்தப் புலனறிவு கவர்ந்து அலைகளாகப் பரப்பி வைத்துள்ளது.
1.அதனை யாம் நுகர்ந்து உங்களுக்கு இப்போது வெளிப்படுத்த முடிகின்றது.
2.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குக் காட்டிய உணர்வுகள் (அவர் கற்றுணர்ந்த உணர்வுகள்) அவர் அதை வெளியிடும் பொழுது
3.அவரின் துணை கொண்டு அவர் ஊட்டிய உணர்வு கொண்டு அதை நுகர்ந்து… அதனின் உணர்வின் செயலாக்கங்களை அறிய முடிகின்றது.
4.அதுவே எனக்குள் அணுக்களாக விளைகின்றது.

நீங்கள் அதை இப்போது நுகரப்படும் பொழுது… நுகர்ந்த உணர்வுகளை உங்கள் உயிர் அணுவாக மாற்றும். அந்த உணர்வின் சக்தியை “உணவாக” ஏற்றுக் கொள்ளும் நிலை வரும் பொழுது
1.அந்த உணர்வுக்கொப்பச் சிந்தித்து செயல்படும் திறனும்
2.தீமைகளை அகற்றிடும் ஆற்றலும் நீங்கள் பெறுவீர்கள்.

அதற்கே அடிக்கடி உங்களுக்குள் இதைப் பதிவு செய்வது

நீங்கள் வளர நான் வளர முடிகின்றது. நீங்கள் வளர வேண்டும் என்ற நோக்கத்துடன் அந்த உண்மையின் உணர்வை நுகரப்படும் பொழுது எனக்குள்ளும் அது விளைகின்றது.

உணர்வின் ஒளி அலைகள் வெளிப்படும் பொழுது சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது. நீங்கள் நுகர்ந்தறியும் பொழுது உங்கள் உயிர் அதை அணுவாக மாற்றுகின்றது.
1.அணுக்களாக ஆன பின் தன் இரைக்காக உணர்ச்சிகளை உந்துகின்றது.
2.அதை நுகரும் பருவம் வரும் பொழுது “அந்த ஞானத்தின் தன்மை இயக்கும் சக்தியைப் பெறுகின்றீர்கள்…”

இதை நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஓம் ஈஸ்வரா…! – “ஒளியான உயிரணுக்களின் சங்கமம்…”

“சமமான நிலை நிலைக்கச் சாந்த நிலை தந்திடுவாய் ஈஸ்வரா…” என்று தியானத்தில் வேண்டுகிறோம். அதனின் உண்மைப் பொருள் என்ன..?

சாந்த குணம் பெற வேண்டும் என்ற எண்ணம் கொள்கிறோம்… முயற்சியும் செய்கிறோம். ஆனால் நம் முயற்சி செயலுக்கு வரும் பொழுது
1.நமக்குள் வந்து மோதும் உணர்வுகளின் மோதல்களை
2.தன் எண்ணம் கொண்டு தனக்குத் தானே சமப்படுத்தும் செயலுக்கு
3.அதை… யார்… எப்படிச் செயலாக்கம் செய்வது…?

இதன் பொருள் புரிந்ததா,.?

1.ஒரு சுரக்குடுவை நீரில் அமிழ்த்தப்பட்டால் “பொட…பொட…!” என்று சப்தமிட்டுத் தான் நீரை நிறைத்துக் கொள்கிறது.
2.ஆனால் அதே குடுவைக்குள் நீர் மொள்ளும் பொழுது “சப்தமே வராமல்…!” பக்குவமாக நிறைத்துக் கொள்ளும் முறையும் உண்டு.
3.இந்த இரண்டு செயல்களுக்கும் பொதுவானதே – நமக்குள் வந்து மோதும் உணர்வுகள்.

உதாரணமாக ஒரு சஞ்சலமான உணர்வை ஊட்டி விட்டால் பரபரப்பாகின்றோம்.. பதட்டமாகின்றோம்…! அதன் பின் உணர்ச்சிவசப்பட்ட இயக்கமாகத் தான் வரும். அப்பொழுது அந்தச் செயலால் சாந்த குணத்தைக் கூட்ட முடியுமா…?

ஒரு ஞானவான் சுரக் குடுவைக்குள் (சப்தமில்லாது) பக்குவமாக நீரை நிறைத்துக் கொள்வது போல் சமமான உணர்வுகள் கொண்டு செயல்படும் செயலில் “நிதானம் என்ற பொறுமை குணம்…” அவசியம் தேவை.

உணர்வுகளை மாற்றிட முயலும் பொழுது
1.அந்த மாற்று அலைத் தாக்குதலால் நாம் எடுத்த உணர்வுகளின் ஈர்ப்பில்
2.வேகம் கொண்டு தாக்கிடும் செயலில்… நாம் “ஆத்ம சுத்தி” பாதிக்கப்படுவது நிச்சயம்.

பரபரப்பான இந்த உலக வாழ்க்கை நடை முறையில் வாழும் மனிதர்கள் ஒவ்வொரு நிமிடமும் தான் எடுக்கும் உணர்வுகள் கொண்டு
1.அந்த உணர்வுகளுக்கு ஒத்த தீமையான அணுக்கள் தன் ஈர்ப்பில் ஒட்டிக் கொள்ளும் பொழுது
2.அதை நல்லதாக்கிச் செயல்படுத்த வேண்டிய நடை முறைச் செயல் என்ன…?

நாம் எடுக்கும் உயரிய ஜெப எண்ணத்தில்
1.அவ்வப்பொழுது வந்து மோதும் மாற்று அலைகளைத் தவிர்த்து
2.தான் இருக்கும் வழியிலேயே தன்னைத் தான் தற்காத்துக் கொள்ளவே “ஆத்ம சுத்தி என்ற ஆயுதம்…!”

ஆத்மாவைப் புனிதப்படுத்திக் கொள்வது என்பது என்ன…? எப்படி…?

வாழ்க்கை நடை முறையில் மாற்றமான எதிர் நிலையான உணர்வுகள் நமக்குள் மோதி அதனால் கிளர்ந்தெழும் செயலைத் தவிர்த்து
1.ஓ…ம் ஈஸ்வரா…! என்ற ஒலி நாதத்தைக் கூட்டி
2.அவ்வாறு சொல்லும் பொழுது புருவ மத்தியில் உயிரைப் பரிபூரணமாக எண்ணி
3.அந்த ஒலி நாத உள் நிறைவால்
4.தன் ஆத்மாவிற்குப் பாதுகாப்பான வளையமிட்டுக் கொள்வதே ஆத்ம சுத்தியின் சூட்சமம்.

தீமையான உணர்வுகள் வரும் பொழுது இப்படி ஆத்ம சுத்தி செய்து அதன் மூலமாக உயர்ந்த உணர்வுகளைக் கூட்டிக் கொள்ளும் செயலினால் மனித ஞானம் அடையப் பெறும் நிலை என்ன…?

இன்றைய மனித வாழ்க்கையில் விஞ்ஞானம் கண்டுபிடித்துள்ள வாகனங்கள் இயந்திரங்கள் உண்டாக்கிடும் ஓசைகளினாலும் இன்றுள்ள இசையின் சுவைக்கொப்ப மனதில் கூட்டிக் கொள்ளும் விகாரங்களினாலும் எழுந்திடும் ஓசைகளைத்தான் நாம் ஒவ்வொரு நாளும் கேட்கின்றோம்.

அவை எல்லாம் நம் செவிப்புலனில் பட்டு நமக்குள் எத்தனையோ மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

விநாயகன் உருவத்திற்கு “அகண்ட காதுகளையும்..” ஓ…ம் என்று போட்டு விநாயகரைப் “பிரணவத்திற்கு உரியவன்” என்றும் ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

ஓங்கார ஒலி நாதத்தைச் செவிமடுத்திடும் சூட்சமத்தைப் புரிந்து அதன் வழியில் செயல் அருள் உணர்வுகளை நமக்குள் கூட்டிக் கொண்டே வந்தால் அருள் உணர்வுகள் நமக்குள் ஜீவன் பெற்று அந்த நல்வினைகளாக நமக்குள் சேரும்.

இதனால் நடைமுறை வாழ்க்கையில் பரபரப்பான பதட்டமடையச் செய்யும் ஓசைகள் எத்தனை எத்தனையோ வந்து நம் மீது மோதினாலும் அதனை ஈர்க்காது மெய் ஒலியைக் கூட்டி மெய் ஒளியாக மாற்றிடும் செயலாக அமைந்துவிடும்.
1.இவை எல்லாம் மகரிஷிகளால் “கலைகள்…” என்று காட்டப்பட்ட
2.ஒளியான “உயிரணுக்களின் சங்கமம்” என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

சமமான நிலை நிலைக்க வேண்டும் என்ற செயலில் செயல்பட வேண்டிய முறை இது தான்…!


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply