
“நம் பாசம்” மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைவதாக… இணையச் செய்வதாக இருக்க வேண்டும்
உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த எவராக இருந்தாலும்… சந்தர்ப்பம் அவர் உடலை விட்டுப் பிரிய நேர்ந்தால் அடுத்த கணமே “அழுது… அவருடைய ஆன்மாவைக் கவர்ந்து இழுத்து விடாதீர்கள்….!”
1.அந்த ஆன்மாவை அருள் ஒளி பெறச் செய்யுங்கள்
2.உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த ஆன்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்யுங்கள்.
3.அங்கே உடல் பெறும் உணர்வுகளைக் கரையச் செய்யுங்கள்
4.ஒளி பெற்ற அறிவின் தன்மையை நிலைக்கச் செய்யுங்கள்.
5.அவர்களைப் பேரின்பப் பெரு வாழ்வாக வாழச் செய்யுங்கள்.
பாசத்தால்… பண்பால்… எங்களுக்கு உதவி செய்தாயே…! எனக்கு நன்மை செய்தாயே…! என்று நன்மை செய்தவர்களை இப்படி எண்ணக்கூடாது.
எனக்கு நன்மை செய்தார் துன்பத்தைப் பெற்றார்…! “இனியாவது” அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து அங்கே உடல் பெறும் உணர்வு கரைந்து பேரின்ப பெரு வாழ்வு பெற வேண்டும்.
நாங்கள் அடைந்த துன்பத்தை கேட்டாய் அதை உனக்குள் வளர்த்தாய். ஆகவே அந்தத் துன்பத்தின் நிலைகள்… இத்துடன் கரைத்து விட்டு அருள் ஒளியின் சுடராக நீ என்றுமே நிலைத்திருக்க வேண்டும்… இனி பிறவியில்லா நிலைகள் பெற வேண்டும் என்று இவ்வாறு இந்த உணர்வுகளை நீங்கள் பாய்ச்சுங்கள்.
1.உதவி செய்தவர்களை உங்கள் பாசத்தால் எண்ணி “இழுத்தால்…” அந்த ஆன்மா உங்கள் உடலுக்குள் தான் வருகின்றது.
2.மீண்டும் துன்பத்தைத் தான் இங்கே விளைய வைக்க முடியும்.
3.பாசத்தால் நமக்குள்ளும் அந்த நோயை வளர்த்து விடுகின்றோம்.
4.அவரும் அடுத்து இழி நிலையான சரீரமாகத் தான் பிறக்கச் செய்ய முடியும்.
அத்தகைய நிலையில் இருந்து உடலை விட்டு பிரிந்த ஆன்மாக்களை மீட்டுங்கள். உங்களுக்கு இன்பத்தை ஊட்டிய அந்த ஆன்மாக்களை அழுது யாரும் இழுக்காதீர்கள்… பாசத்தால் கவர்ந்து விடாதீர்கள்.
“பாசத்தை”
1.எல்லை கடந்த நிலைகள் கொண்டு அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்திலே இணையச் செய்யுங்கள்
2.உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்து விடுங்கள்… ஒளிச் சரீரமாக அவர்களை மாற்றுங்கள்.
3.அது தான் உங்களுக்கு நன்மை செய்தவர்களுக்கு செய்யக்கூடிய கடமைகள்.
இதை நீங்கள் செய்யத் தவறாதீர்கள்.
அந்த அருள் ஒளியை நீங்கள் பெற எமது குரு அருளும் எனது அருளும் உறுதுணையாக உங்களுக்கு இருந்து இந்த சக்திகளை எண்ணி ஏங்கிப் பெற்றால் அதன் உணர்வை நீங்கள் வளர்த்துக் கொள்ள முடியும்.
இந்த உடலை விட்டுச் சென்றால் அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்திற்குள் சென்று உடல் பெறும் உணர்வை மாற்றி ஒளி பெறும் உணர்வாக உங்களுக்குள் விளையச் செய்யுங்கள்.
என்றும் பேரின்பப் பெருவாழ்வு என்ற நிலையை அடைவோம். மனிதனின் கடைசி எல்லை அது தான். இதை நீங்கள் பின்பற்ற வேண்டும். உங்கள் மூச்சு பிறருடைய துன்பங்களை நீக்கும் அருள் சக்தியாகப் பெறுதல் வேண்டும்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.