பகலவர்

பகலவர்

 

சேகைத் திறந்த வழி என் நிலை அண்டியதோ…?
பேண் அகத்து என்ற நிலை பெற்று
முன் நிலை தவிர்த்து…
ஒளி கொண்ட தலைமை காண வேண்டும்.

1.அரசின் தலைமை கண்டவன் அகத்தின் தலைமை கண்டான்
2.அத்திரி மகரிஷியின் தொடர்பு அன்று அரவணைத்தது… தொடர்ந்து அமுதம் ஊட்டுகின்றது.

மகா புருஷன் என்போரே பகல் (ஒளி) அறிந்தவர்…! சிருஷ்டிக்கும் பாங்கு செயல்படும் நிலையே விழிப்பும்… அறிவின் ஆற்றலும் இணைந்து… உணர்வென்னும் ஊற்று எண்ணத்தின் வழி ஊட்டப் பெறுகின்ற செயல் அதுவாக உள்ள தன்மைகளை பிரம்மன் படைக்கின்றான் என்று சொல்வது. அது பல யுகங்கள் ஒன்று சேர்ந்த ஒரு பகல் காலம்.

இவை அனைத்தும் உலக மாற்றம் செயல் கொண்டிடும் காலம் வரை அனைத்து ஜீவன்களும் இயக்கம் கொண்ட செயலினையே சகல சிருஷ்டிகளும் ஓர் பகல் என்றும்… இரவு காலத்தில் பொருட்கள் கட்டுப்படாத் தன்மை போல் இருக்கின்ற பொருட்கள் அனைத்தும்… இருள் எனும் போர்வைக்குள் அடங்கி இருத்தல் தன்மையாகச் சிருஷ்டியின் ஒடுக்கம் அதன் அதன் அமிலக் கூறாகக் கலத்தல்…! என்று முந்தைய பாட நிலைகளில் உரைத்திருக்கின்றோம்.

1.சிருஷ்டியின் ஒடுக்கமே இரவென்றும் (இருள்)
2.மீண்டும் “உயிர் அணுக்கள்” ஜீவன் கொண்டு பலவெனப் பெருகத் தொடக்கம் பெறும் யுகம்
3.அதுவே பிரம்மனின் விழிப்புக் காலம் என்றும் மறைபொருளாக மாமகான்கள் உரைத்திட்டது… தத்துவ நோக்கின் படிகள்.

சிருஷ்டியின் பாங்கை அறிந்து கொண்ட… சிருஷ்டிக்கும் செயலின் கர்த்தா தியான ஒடுக்கவெனவும்…
1.அந்நிலை செயல் கொள்வதைத் “தூங்காமல் தூங்கிடும்… அரிதுயில்” என்றெல்லாம் விளக்கம் காட்டி
2.ஆற்றல் என்பது புருஷ குணம் சிருஷ்டியின் பாங்கைத் தன்னுள் தெளிந்து சிருஷ்டியின் ஒடுக்கமற்று
3.வியாபித்த பகலாகச் சிருஷ்டிக்கும் தன்மைகளை உணர்ந்து கொண்டிட்டவர்களே மகா புருஷர்கள் எனும் மாமகான்கள்.
4.அவர்கள் அடைந்த ஒளித்தன்மைக் குறிப்பிடவே அவர்களைப் (மகரிஷிகளை) “பகலவர்” என்று சுட்டிக்காட்டிய நிலை.

அகங்காரம் எனப்பட்டது… புவி ஈர்ப்பின் பிடிப்பில் துர்க்குண நிலைகளைக் காட்டி… மேலாம் அறிவு சித்தித்திடும் தன்மைகளைக் கேடுறுத்தி… கீழாம் அறிவு எனும் மோக நிலையில் வசப்படுத்திடும் நிலை தான் அது.

பிரம்மா விஷ்ணு என்று சிருஷ்டியைச் சித்தர்கள் காட்டியதைப் போல் அகங்கார குணம் மோகத்தின் வசம் நம்மை ஆழ்த்தி… வீர குணம் வீழ்த்தி… இந்திரீய நீக்கம் காட்டிச் செயல்படும்.

இதே குணத்தன்மை “மேலாம் அறிவு சித்திக்கும் செயலில்” மோகவலைப்படுத்தும் நிலையைச் சம்ஹரித்தது
1.சிவத்தின் தன்மை காட்டி விந்து நிலை ஒளித்தன்மையாக ஊர்த்துவ சக்தியாக மேலெழுந்து…
2.”வீணையின் நாயகன் எனும் உயிர்சக்தியை” வலுக்கூட்டும் உணர்வுகளின் கவச முலாம் ஆத்மாவாகச் சிருஷ்டிப்பதே
3.மெய்ஞானச் சுடர் எனும் காரண மூலம்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply