
“என்ன நடந்தாலும்” நம்முடைய நப்பாசை உடல் மீது தான் வருகிறது… உயிர் மீது வருகிறதா…?
இன்றைய உலகில் நாளுக்கு நாள்… நாளுக்கு நாள்… யுத்த மேகங்கள் கூடிக்கொண்டே வருகின்றது… பயங்கர விளைவுகள் வருகிறது.
1.நாம் நப்பாசை வைத்து இந்த உடல் இச்சை தான் பெறுகின்றோம்
2.உயிர் இச்சையை யாரும் கொள்ளவே இல்லை.
உடலுக்குப் பின் உயிரோடு சேர்ந்துதான் வாழப் போகின்றோம். மீண்டும் உடல் பெறும் உணர்வுகள் பெறப்படும் பொழுது… எந்த வேதனை கொண்டு நுகர்ந்து… வாழும் இந்த உடலில் நாம் தப்ப வேண்டும் என்று எண்ணினோமோ… வேதனைகள் அதிகரித்து…
1.இந்த உடலில் இருந்து தப்பி… அடுத்து இன்னொரு வேதனைப்படும் உடலுக்குள் தான் போக வேண்டி இருக்கும்
2.உயிர் அதைத்தான் பெறச் செய்யும் என்பதை நாம் மறந்தே இருக்கின்றோம்.
அக்காலங்களில் உலகம் முழுவதற்கும் உள்ள எல்லா இடங்களிலுமே அதிகாலையில் நான்கு மணிக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற வேண்டும் என்ற நிலையில் அந்தந்த மதங்களுக்குத் தக்க வேதங்களை ஓதி… மனித உடலில் பதியச் செய்து… அரசின் பற்றும்… நாட்டின் பற்றும் வந்தது.
இருந்தாலும் அப்படி வளர்த்துக் கொண்ட பின் அந்தந்த நாட்டின் அரசன் இறந்தால் அவன் பிள்ளைகளில் மாற்றம்.
1.பின் அதிலே பல பிரிவுகள் ஆகி ஒருத்தருக்கு ஒருத்தர் பகைமையாகி
2.முதலில் உருவான தத்துவங்களை மாற்றி அவரவருக்குத் தக்கவாறு மாற்றிக் கொண்டனர்.
இன்றைய நம் நாட்டு அரசியலில் எடுத்துக் கொண்டால் காங்கிரசிலிருந்து எத்தனை கட்சிகள் புதிதாக உருவாகி இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு கொள்கைகளை அதிலே சேர்த்து “ஆட்சியைப் பிடிக்க வேண்டும்… தான் அரசாள வேண்டும்” என்று தான் எண்ணினர்.
ஆனால் அன்று காந்திஜியின் சாந்த உணர்வுகள் அதிகரித்ததனால் தான் நம் நாடு விடுதலை அடைந்தது. அவர் வழி நடத்திய தத்துவம்
1.ஒரு மனிதனைக் கோபமாகத் தாக்குவது கோழை
2.ஆனால் நம்மைத் தாக்க வரும்பொழுது மன உறுதி கொண்டு அவருடைய நிலைகளைச் சீர்படுத்திக் காட்டுவது மன பலம்
3.”அமைதி கொண்டு நல் உணர்வை ஊட்டுவது தான் மன வலிமை” என்று தெளிவாகக் காட்டினார்.
அத்தகைய மன வலிமை கொண்டு மக்கள் அனைவரையும் ஊக்குவித்து எல்லோரும் ஒரே நிலையில் சுதந்திரம் பெற வேண்டும் என்ற உணர்ச்சியைத் தட்டியெழுப்பினார்.
இந்த உணர்வின் தன்மை கொண்டு வரும்போது பிரிட்டிஷ் ஆட்சி பணியும் தன்மை வந்தது. இலண்டன் சபையிலே காந்திஜியைப் பேசும்படியும் செய்தது… சுதந்திரத்தைக் கொடுத்தார்கள்.
உலகம் முழுவதும் அன்று பிரிட்டிஷ் ஆட்சியாக இருந்தாலும்… மக்களை அவர்கள் அடிமைப்படுத்தி வைத்திருந்தாலும் காந்திஜியின் சாந்த வீரியமே உலகம் முழுவதற்கும் சுதந்திரத்தைக் கொடுக்கும்படி செய்தது.
ஆனால் அந்தச் சுதந்திரம் இன்று எப்படி இருக்கின்றது…?
அன்று பிரிட்டிஷ்… அரக்க உணர்வுகள் கொண்டு மக்களை அடக்கி ஆட்சி புரிந்தான்.
1.அதே உணர்வு வளர்ந்து ஒவ்வொரு மனிதனும் மற்றதை அடக்கி ஆட்சி புரிய வேண்டும் என்ற தன்மைக்கு
2.இன்று அரசியல் அமைப்புகள் உலகெங்கிலும் வந்துவிட்டது.
நாட்டு மக்களைக் காக்க வேண்டும் என்பதற்கு மாறாக… நல்ல பண்புகளை அறியாதபடி “தான் எடுத்துக் கொண்ட கொள்கைக்கு மாறாக யார் சென்றாலும் அவனைத் தொலைக்க வேண்டும்…” என்று வந்துவிட்டது.
இப்படிக் கொள்கைகள் வித்தியாசமாகி ஒருவருக்கொருவர் உண்மையை அறியும் தன்மைகள் இழக்கப்பட்டு
1.மக்கள் மத்தியில் குழப்பங்கள் உருவாகி
2.தான் எப்படிப் பிழைக்கப் போகின்றோம்… எப்படி வாழ போகிறோம்…? என்று
3.நம் நாடு மட்டுமல்ல… உலக ரீதியிலே இந்த விஷத்தன்மைகள் பரவி
4.மனித இனத்தையே முழுமையாக அழிக்கும் நிலைக்குக் கொண்டு வந்து விட்டது.
ஆகவே உலகம் அழியும் தருணம் வரும் பொழுது இந்தப் பிரபஞ்சத்தில் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷி துருவ நட்சத்திரமான அதன் உணர்வுகளை நாம் பெற்றால் தான் தப்ப முடியும்.
உயிர்ப் பற்றை வளர்த்தவர்கள் தான் உயிருடன் ஒன்றி அழியாத் தன்மை கொண்டு துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலமாகவும் உள்ளார்கள்.
நமது எல்லை அது தான்…!
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.