
உடலுக்குள் இரத்தம் செல்லும் இடங்களில் எல்லாம் துருவ நட்சத்திரத்தின் சக்தி துரிதமாகப் பரவும்
அம்மா அப்பா அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தியால் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷி ஆகி துருவ நட்சத்திரமாக ஆன அதனின்று வரும் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று நாம் ஏங்கி இப்பொழுது தியானிப்போம்.
கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து… உயிரான ஈசனிடம் வேண்டி… துருவ நட்சத்திரத்தின் பால் நினைவைச் செலுத்தி… அதைப் பெற வேண்டும் என்று “கண்களைத் திறந்தே…” நாம் ஏங்கி தியானிப்போம்.
இப்பொழுது நாம் சுவாசிக்கும் அந்த துருவ நட்சத்திரத்தில் உணர்வுகள் நம் இரத்தங்களிலே ஒரு புது விதமான உணர்ச்சிகளாகத் தோன்றும்.
1.அன்று அகஸ்தியன் பல விதமான மூலிகைகளின் மணங்களை நுகர்ந்து
2.தனக்குள் வரும் விஷத்தன்மைகளை அடக்கி ஒளியாக எவ்வாறு மாற்றினானோ
3.அத்தகைய மூலிகை வாசனைகள் இப்பொழுது உங்கள் சுவாசத்திற்குள் வரும்.
அதை நுகரப்படும் பொழுது உடலுக்குள் ஏற்கனவே உள்ள தீய வினைகளை இது மாற்றும்… நல்ல உணர்வினை உருவாக்கும் அந்தச் சக்தியும் பெறுவீர்கள்.
துருவ நட்சத்திரத்தை எண்ணி அதைப் பெற வேண்டும் என்று நுகரப்படும் பொழுது மகிழ்ச்சியூட்டும் உணர்வுகள் இரத்தநாளங்களில் தோன்றும்.
அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக ஆவதற்கு முன் அவன் உடலில் விளைந்த நஞ்சினை வென்றிடும் உணர்வுகள் இந்தப் பூமி முழுவதுமே பரவி உள்ளது. அதை நாம் எளிதில் கவரலாம்.
இப்பொழுது நினைவனைத்தையும் மேல் நோக்கிச் செலுத்துங்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.
1.இப்பொழுது சுவைமிக்க உமிழ் நீர் வரும்… அறுசுவையாக அது வரும்
2.அகஸ்தியன் பெற்ற அந்த நறுமணங்கள் அனைத்தும் உங்கள் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து அதை நீங்கள் சுவாசிக்க நேரும்.
3.நல்ல நறுமணங்களை நுகர்வீர்கள்.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உடலுக்குள் நினைவைச் செலுத்துங்கள்.
நண்பர்களாகப் பழகிய பின் அந்த நண்பனை எண்ணிய பின் அவனுடன் இணைந்து கொண்ட உணர்வு விக்கலாக எப்படி மாறுகின்றதோ அதைப் போன்று
1.எம்முடைய அருள் உபதேசங்களைப் பதிவாக்கி… அதை நுகர்ந்த உணர்வுகள் உங்களுக்குள் இருப்பதனால்
2.கண்ணின் நினைவு கொண்டு உடலில் உள்ள அணுக்களுக்கு துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று
3.உள்முகமாகச் செலுத்தப்படும் பொழுது துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியைப் பெறும் தகுதி எளிதில் கிடைக்கின்றது.
4.இப்பொழுது புது விதமான ஒளி… ஒரு வெளிச்சம் உங்கள் உடலிலே வரும்… அதை உணரலாம்.
உயிர் வழி நாம் ஏங்கித் தியானிக்கும் போது
1.மின்சாரம் பாய்வது போன்று
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வு இரத்தத்திற்குள் “வீரிய உணர்வாக” வட்டமிட்டுக் கொண்டிருக்கும்.
விஞ்ஞான அறிவு கொண்டு ஒரு டாக்டர் ஊசி மூலம் மருந்தை உடலுக்குள் செலுத்தப்படும் பொழுது அது இரத்தத்தில் கலந்து உடல் முழுவதும் சுழன்று விஷத்தன்மையான அணுக்களை வலுவிழக்கச் செய்கின்றது.
அதைப் போன்று துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்து இரத்தநாளங்களில் சேர்க்கப்படும் பொழுது உடலில் இருக்கக்கூடிய உறுப்புகள் அனைத்தும் அந்த வீரிய சக்தியைப் பெறும் தகுதி இப்பொழுது பெறுகின்றது. இரத்தத்தில் உள்ள தீமைகள் இப்போது வலு இழக்கின்றது.
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் இரத்தங்களில் துரிதமாக உடல் முழுவதும் பரவும்.
2.இரத்தம் எங்கெல்லாம் செல்கின்றதோ அங்கெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வு வேகமாகப் பரவும்.
அத்தகைய உணர்வை உங்கள் இந்த உடலிலே உணரலாம். உடலுக்குள் அந்த இயக்கம் எப்படி இயங்குகிறது…? என்பதையும் நீங்கள் உணரலாம்
துருவ நட்சத்திரத்தினுடைய உணர்வுகள்
1.புருவ மத்தியின் வழியாக உடலுக்குள் ஊடுருவிச் செல்வதை
2.அந்த ஒளிமயமான உணர்வுகளைக் காணலாம்.
பேரானந்த நிலை பெறுவீர்கள்…!
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.