
ஒரு பிரபஞ்சம் இயங்குவது போல் தான் ஒரு உடலுக்குள்ளும் இயக்கங்களாகிறது
நம் பிரபஞ்சத்தில் உள்ள இருபத்தியேழு நட்சத்திரங்கள் அவை வெளிப்படுத்தும் உணர்வலைகள் சந்தர்ப்பத்தால் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது மின்னல்களாக ஆகின்றது.
உதாரணமாக கார்த்திகை நட்சத்திரம் ரேவதி நட்சத்திரம், பால்வெளி மண்டலங்களாக அது மாற்றி வரப்படும் பொழுது ஒன்றுடன் ஒன்று மோதினால் மின்னலாக மாறுகின்றது.
“வியாழன் கோள்” அந்த 27 நட்சத்திரங்களுடைய சக்திகளையும் கவரும் திறன் பெற்றிருப்பதால் அது எல்லாவற்றையும் சமைத்து தன் ஈர்ப்பு வட்டத்திற்குள் அந்த மின் கதிர்கள் வந்தால் அந்த இரண்டையும் இணைத்து ஒரு அணுவாக மாற்றி விடுகின்றது.
“வெள்ளிக் கோள்” அந்த மின்னலில் இருந்து வெளிப்படும் ஒளிக் கற்றைகளை எடுத்துக் கொள்கின்றது
“செவ்வாய்க் கோள்” மோதலினால் ஏற்படும் நாதத்தின் அந்த ஒலியான உணர்வுகளைப் பிரித்து எடுத்துக் கொள்கின்றது.
“இராகு” மோதலிதனால் வெளி வரும் புகைகளை எடுத்துக் கொள்கின்றது.
“கேது” விஷமான உணர்வலைகளைக் கவர்ந்து கொள்கின்றது.
இதில் பிரிந்த வரும் ஆவித் தன்மைகளை “சனிக் கோள்” எடுத்து நீராக மாற்றிக் கொள்கிறது
“புதன் கோள்” அனைத்தையும் கவர்ந்து உலோகமாக மாற்றிக் கொள்கின்றது.
எல்லாவற்றையும் கலந்து “சூரியன்” ஏகமாக எடுக்கும் பொழுது அது பாதரசமாக மாற்றிக் கொள்கிறது.
இது தான் நம் பிரபஞ்சத்தின் இயக்கம்…!
இதே போன்றுதான் நமது உயிர் அது சூரியனாக இருக்கின்றது எதிர்நிலையான மனிதனுடைய உணர்வுகளை நுகரப்படும் போது அது நமக்குள் மோதலாகிறது (நட்சத்திரத்தின் சக்தி மோதி மின்னலாவது போல்)..
உதாரணமாக ஒரு மனிதன் வேதனைப்படுவதை நாம் பார்க்கின்றோம்… வேதனையை நுகர்கின்றோம்.
1.நம் ஆன்மா இங்கே “நட்சத்திரமாக” இருக்கின்றது
2.ஏனென்றால் மற்றவருடைய உணர்வுகளை அங்கே சேமித்து வைத்திருக்கின்றது
3.பால் வெளி மண்டலமாக அது அமைக்கின்றது.
அந்த வேதனைப்பட்ட உணர்வுகளை ஆன்மாவிலிருந்து நாம் நுகர்ந்து உயிரிலே பட்ட பின் இந்த உணர்ச்சிகள் நம் இரத்த நாளங்களிலே கலந்து இரத்தத்தின் வழி உடலுக்குள் சுழல்கின்றது.
பிரபஞ்சத்தில் உள்ள கேது விஷமான சத்தைக் கவர்வது போன்று
1.நம் உடலில் உள்ள பித்த சுரப்பிகள் விஷத்தை எடுத்துக் கொள்கின்றது
2.கல்லீரல் மண்ணீரல் இவையெல்லாம் இரத்தத்தில் இருந்து வருவதை அதன் உணர்வுகளுக்கொப்ப உணவு எடுத்து அந்த உறுப்புகள் உருவாகின்றது
3.நுரையீரலும் அதே மாதிரித் தான்.
சிறுநீரகங்கள் அந்த இரத்தத்தை வடிகட்டிய பின் அதிலிருந்து இதயத்திற்கு வருகிறது. இரத்தம் அதற்குள் சென்ற பின் எல்லா உறுப்புகளுக்கும் இரத்தத்தை அது பம்ப் செய்கிறது.
இரத்தங்களை நேரடியாக நம் சிறுமூளை பாகங்கள் வரைக்கும் அது கொண்டு செல்கின்றது
1.இந்த மூளையில் சந்திக்கும் இடங்களில் வாயுவாக மாறுகின்றது
2.வாயு நீராக மாறுகின்றது… அமிலமாக மாறுகின்றது…!
அதாவது நாம் எடுத்துக் (சுவாசிப்பது) கொண்ட உணர்வுகள் ஒரு வாயு என்ற நிலையில் இயக்கப்படுகின்றது எதன் உணர்வு இயக்கப்படுகின்றதோ அதிலிருந்து வரக்கூடிய ஆவியாக மாறுகின்றது. ஒரு பொருளை நாம் வேக வைத்த பின் எப்படி ஆவியாக மாறுகிறதோ அது போல்…!
ஆவியாக மாறியதை மேலே நீரை வைத்து குளிர்ச்சி அடையச் செய்தால் அது நீராக வடிகிறது. இதைப் போன்று தான்
1.சுவாசித்த உணர்வின் தன்மை தனக்குள் சேர்த்துக் கொண்ட பின் மேலே போட்டு அது அமிலமாக வடிகின்றது
2.நம் உடலுக்குள் இருக்கும் எல்லாவற்றுக்கும் இது இணையச் செய்கின்றது.
சுவாசித்தது உயிரிலே பட்ட பின் உடலுக்குள் செல்லும் நிலையில் இரத்தத்திலே கலந்து… இந்த இரத்தம் உடல் முழுவதும் சுழன்று வரப்படும் பொழுது எதெனதன் உணர்வோ அது அது எடுத்துத் தன்னை வளர்த்துக் கொள்கின்றது
பிரபஞ்சம் எப்படியோ அப்படித்தான் இந்த உடலான பிரபஞ்சமும்…!
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.