மந்திர ஒலிகள் உருவாக்கப்பட்டதன் நோக்கம்

மந்திர ஒலிகள் உருவாக்கப்பட்டதன் நோக்கம்

 

அன்றைய அரசர்கள்… ஞானிகள் கொடுத்த வேதங்களைத் திரிபு செய்து விட்டார்கள். எப்படி…?

மழைக்காகக் குடை பிடிப்பது போன்று… “கடவுளுக்கு உரியவன்…” என்றும் உருவாக்கக் கூடியவன் “அவன் பிரம்மன்” என்றும் காரணப் பெயரைச் சூட்டி விட்டனர்.
1.அவன் மந்திரங்களை ஓதி ஒரு மனித உடலில் உருவாக்கத் தெரிந்து கொண்டவன்
2.அப்படி உருவாக்கிய பின் அவனே பிரம்மம் ஆகின்றான்
3.அவன் சொல்லை… அந்த மந்திரத்தை யாரொருவர் கேட்கின்றனரோ அதை அங்கே உருவாக்குகின்றான்.

அது உருவாக்கிய பின் அதே மந்திர ஒலி கொண்டு பல பல வேலைகளைச் செய்கிறான்.

நாம் எப்படி வெயிலுக்கும் மழைக்கும் ஒரு குடையைப் பிடித்து அந்த நேரத்தில் அதைத் தடுக்கின்றோமோ
1.இந்த வாழ்க்கையில் மந்திரத்தின் துணை கொண்டு
2.மற்ற மனித உடலிலிருந்து கட்டாயப்படுத்தி அந்த உணர்வுகளைத் தனக்குள் எடுத்து அதை இன்னொரு உடலில் பாய்ச்சி
3.அவன் உடலில் இருக்கக்கூடிய தீமைகளைச் “சிறிது காலம் அடக்க முடியும்…”
4.மீண்டும் மழை வந்தால்… குடையைப் பிடிப்பது போன்று தீமைகளை நீக்க அதே மந்திரங்களைச் சொல்ல வேண்டும்.

மந்திர ஒலிகள் கொண்டு அரசனால் உருவாக்கப்பட்ட நிலைகள் தான் அது. வாமன அவதாரம்… பிரம்மம் சிருஷ்டிக்க வல்லவன்…! என்று காரணப் பேரைச் சூட்டினார்கள் அரசர்கள்.

வேதங்கள் ஓதப்படும் பொழுது அதன் உணர்வின் ஒலிகளை நமக்குள் பதிவாக்கி விட்டால் “அவர்கள் சொன்னது…” நமக்குள் உருப்பெற்று விடுகின்றது.

அது நமக்குள் பதிவான பின் இறந்து விட்டால் அதே மந்திரத்தைச் சொன்னால் கட்டாயப்படுத்தித் தனக்குள் ஆன்மாவைக் கைவல்யப்படுத்திக் கொள்வார்கள். அவனுக்குத் தேவைப்படும் பொழுது… அரசன் தன் எதிரிகளை அழிக்க ஏவல் செய்கின்றான்.

பகைமை உணர்வு கொண்ட நிலையில் “குண்டர்களைத் தயார் செய்கின்றார்கள்…” இந்த நாடு உனக்குச் சொந்தம்…! என்றும் இந்த உணர்வின் ஒலிகள் உனக்குச் சொந்தம்…! என்று அமரச் செய்து மந்திர ஒலிகளைப் பாய்ச்சுகின்றான்.

இந்த நாட்டை நீ காவல் காக்கக்கூடியவன்… கருத்துக்களை நீ மேற்கொள்ளக் கூடியவன்… உன்னால் முடியும்…! என்ற உணர்வுகளை அவனுக்குள் ஓதி… “விஷத்தைக் கலந்து கொடுத்து…” அவன் வளர்ந்து வரும் போது தன் நாட்டின் பண்புகள் இது தான்…! என்று ஊட்டுகின்றார்கள்.

1.அவன் மரணம் அடையப்படும் பொழுது
2.இவனுக்குள் ஒலித்த மந்திரத்தைக் கொண்டு மீண்டும் அந்த மந்திரத்தால் ஜெபிக்கப்படும் பொழுது…
3.அவன் உடலில் விளைந்த உணர்வின் ஆற்றலை எடுத்து எதிரிகள் வரப்படும் பொழுது இந்த உணர்வுகளை ஏவல் செய்து
4.எப்படி இந்த உடலில் விஷத்தன்மை பாய்ந்ததோ இதைப் போன்று
5.உணர்வின் அலைகளை மற்ற மனிதர்கள் மேல் இந்த ஒலிகளை பாய்ச்சி அவர்களைச் செயலிழக்கச் செய்கின்றனர்.

இந்த வழிப்படி தான் ஆலயங்களில் யாகங்களைச் செய்வதும் மந்திரங்களைப் பதியச் செய்து அந்தப் பதிவின் தன்மையை எடுத்த பின் “தெய்வம் செய்யும்…” என்ற நம்பிக்கையை நமக்குள் ஊட்டும் பொழுது இது வசியம்…!

அவர்கள் சொன்னபடி நமக்குள் பிரம்மமாக உருவாகிறது. அப்படி உருவாக்கிய உணர்வுகள் எதுவோ அதன் செயலாகவே நம் எண்ணங்கள் உருவாகும்.

நாம் எதை எண்ணுகின்றோமோ… அதை நமது உயிர் அந்த உணர்வின் அணுவாக உருவாக்கப்படும் பொழுது… அந்த அணு மீண்டும் தன் இனத்தை உருவாக்கும்.

எதைப் பெருக்கியதோ அந்த உணர்வின் ஆற்றலை நமக்குள் பெருக்கப்படும் பொழுது அதனின் செயலாக பிரம்மமாக உருவாக்குகின்றது.
1.தெய்வத்தின் பெயரால்தான் இதை எல்லாம் செயல்படுத்துகின்றார்கள் நமக்குள் பதிவாகின்றது
2.யாகம் நடக்கும் இடத்தில் உட்காரப்படும் போது நமக்குள் அது பதிந்து விட்டால் அது நமக்குள் உருவாகி விடுகிறது.

அதே எண்ணத்தில் ஏங்கும் பொழுது “தெய்வம் செய்யும்…!” என்று அபிஷேகங்களும் ஆராதனைகளும் செய்யப்படும் பொழுது…
1.நாம் எதைப் பெற வேண்டும்…?
2.நாம் எதை நீக்க வேண்டும்…? என்ற நிலைகளை மறந்து
3.அந்தச் சிலைக்கு நாம் இதை உணவாகக் கொடுத்தால் நமக்கு நன்மை செய்யும் என்ற எண்ணத்தைத் தான் கருத்தில் கொண்டு வந்திருக்கின்றோம்.

சாங்கிய சாஸ்திரங்களாக அரசன் வகுத்த நிலைகளில் குலதெய்வம் என்று அந்த வழிப்படித் தான் நாம் இயங்கிக் கொண்டுள்ளோம்.

ஞானிகள் காட்டிய வழியில் நாம் செல்லவில்லை…!

Leave a Reply