“கஷ்டமான நேரங்களில் தான்…” யாம் கொடுக்கும் சக்தியை அதிகமாக எண்ணி எடுக்க வேண்டும்

“கஷ்டமான நேரங்களில் தான்…” யாம் கொடுக்கும் சக்தியை அதிகமாக எண்ணி எடுக்க வேண்டும்

 

அதிகாலையில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற வேண்டும் என்று எல்லோரையும் தியானிக்கச் சொல்கிறோம். இது ஒன்றும் புதிது அல்ல… சாஸ்திரங்களில் ஏற்கனவே சொல்லப்பட்டது தான்…!

1.ஆனால் துருவ நட்சத்திரம் என்றால் என்ன…? என்று கேட்கின்றார்கள் அந்த அளவுக்குத் தான் இருக்கின்றது பிழைப்பு…
2.துருவ நட்சத்திரம் என்றால்… “அது என்ன…? புதிதாகச் சொல்கிறீர்கள்…!” என்று கேட்கின்றார்கள்.

இராமாயணத்தில் இருக்கின்றது… மற்ற எல்லாவற்றிலும் இருக்கின்றது. அந்த உண்மைகள் எல்லாவற்றையும் அறுத்துத் துண்டாக்கி விட்டார்கள்… நாம் புரிந்து கொள்ளாதபடி ஆக்கிவிட்டார்கள்.

காலையில் ஒரு அரை மணி நேரமாவது வடகிழக்கிலே விண்ணிலே நினைவைச் செலுத்தித் தியானிக்க வேண்டும்.
1.வடகிழக்கில் தான் விநாயகரை வைத்திருப்பார்கள்…
2.சிவனுடைய நிலைகளும் சில இடங்களில் அப்படித்தான் அதுவும் வடக்கிழக்கில்தான் இருக்கும்.

வடகிழக்கைப் பார்த்து ஈஸ்வரா…! என்று சொல்லி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று புருவ மத்தியில் ஏங்கி… அந்த உணர்வுகளைக் கவர்ந்து நம் உடலுக்குள் சேர்ப்பிக்க வேண்டும். சாஸ்திரப்படி இது உண்மை…!

உங்களுக்கெல்லாம் இதைப் பதிவாக்கி வைத்துவிட்டோம். நீங்கள் வடகிழக்கைத் தேடிக் கொண்டிருக்க வேண்டியதில்லை.
1.எப்பொழுது வேண்டுமென்றாலும்… எந்தத் திசையை நோக்கினாலும்… காற்றிலிருந்து
2.அந்தத் துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியைப் பெற முடியும்.
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் இங்கே மிதந்து கொண்டிருக்கின்றது.

காரணம்… நீங்கள் எண்ணிய உடனே அந்தச் சக்தி கிடைப்பதற்குத் தான் இத்தனையும் செய்து கொண்டிருக்கின்றோம் (ஞானகுரு).

திட்டியவனை எண்ணியவுடன் எப்படி அவனுடைய நினைவுகள் உங்களுக்கு வருகின்றதோ அது போன்றுதான் என்னைச் சந்தித்து “யாம் சொன்ன முறைப்படி எண்ணுபவர்களுக்கெல்லாம்…”
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும் என்றும்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியால் அவர்களுக்குள் அறியாது சேர்ந்த தீமைகள் துன்பங்கள் துயரங்கள் அகல வேண்டும் என்றும்
3.நான் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கின்றேன்.

நீங்கள் சாதாரண நிலையில் பிறரை எண்ணும் போது உங்களுக்கு எத்தனையோ துன்பங்கள் வருகின்றது. ஆனால் நான் பதிவு செய்யும் ஞானிகள் உணர்வுகள்… கஷ்டம் போக வேண்டும் என்று அந்த உணர்ச்சிகளை யாம் உந்தப்படும் பொழுது அதை நீங்கள் எண்ணினால் உங்களுக்கு அது கஷ்ட்த்தை நீக்கக்கூடிய சக்தியாக வருகின்றது.

நான் உங்களுக்கு அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று எண்ணும் பொழுது… அதை விடுத்து விட்டு
1.என் பையன் இப்படி இருக்கின்றான்
2.என் தொழில் இப்படி இருக்கின்றது
3.என் குடும்பம் இப்படி இருக்கின்றது
4.கடன் கொடுத்தவன் திரும்பக் கொடுக்கவில்லையே
5.என் உடலில் ஏதாவது நோய் வந்து கொண்டே இருக்கின்றது என்று இப்படி எண்ணினால் அதைப் பெற முடியாது.

எப்படியும் அந்த உயர்ந்த சக்திகளை கிடைக்கப் பெறச் செய்ய வேண்டும் என்று தான் தொடர்ந்து இதை நான் குரு இட்ட கட்டளைப்படி செயல்படுத்திக் கொண்டிருக்கின்றேன்.

நான் ஆசைப்பட்டு உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று செயல்படுத்துகின்றேன். ஆனால் நீங்கள் ஆசைப்பட வேண்டுமா… இல்லையா…!

சாமி நன்றாகத் தான் சொல்கின்றார்…! என் கஷ்டம் என்னை விட்டுப் போக மாட்டேன் என்கிறது… என்னை ஏமாற்றிக் கொண்டே இருக்கின்றார்கள்… என்னைத் திட்டிக் கொண்டே இருக்கின்றார்கள்… என்று அதன் மீது எண்ணங்களை வலுவாக்கி விட்டால் யாம் சொல்லும் நிலைகளை எண்ணவே வராது.

வேதனை… வேதனை… நோய்…! என்று தான் எண்ண முடியுமே தவிர “அதை நீக்கிப் பழக வேண்டும்…” எண்ணத்திற்கு அது விடுவதில்லை ஆக மொத்தம் தெய்வத்திடம் சென்று முறையிட்டு… என்னை “இப்படிச் சோதிக்கின்றாயே…!” என்று கேட்பது போன்று தான் எண்ணுகிறார்கள்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் துன்பங்களிலிருந்து நாங்கள் விடுபட வேண்டும் என்று யாராவது கேட்கின்றார்களா…? யாம் சொல்லும் முறைப்படி எண்ணுகின்றார்களா…!

ஆனால் எல்லாவற்றையும் பதிவாக்கிக் கொடுக்கின்றோம்.
1.கஷ்டமான நேரங்களில் தான் “இதை எடுக்க வேண்டும்…” என்று சொல்கின்றோம்
2.ஆனால் கஷ்டமான நேரங்களில் தான் இதை விட்டு விடுகின்றார்கள்…!

ஏனென்றால் குருநாதர் எனக்கு இப்படித்தான் அனுபவங்களைக் கொடுத்து மிக மிக உயர்ந்த சக்தியைப் பெறும்படி தகுதி ஏற்படுத்தினார். அதையே தான் உங்களுக்கும் செயல்படுத்துகிறோம்.

Leave a Reply